Unnamed: 0
int64 0
1.34k
| Book
stringclasses 75
values | Chapter
stringlengths 25
48
| Content
stringlengths 252
17.1k
⌀ | Url
stringlengths 47
62
|
---|---|---|---|---|
600 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 123 – திருவிவிலியம்
|
இரக்கத்திற்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 விண்ணுலகில் வீற்றிருப்பவரே!
உம்மை நோக்கியே என்
கண்களை உயர்த்தியுள்ளேன்.
2 பணியாளனின் கண்கள்
தன் தலைவனின் கைதனை
நோக்கியிருப்பதுபோல,
பணிப்பெண்ணின் கண்கள்
தன் தலைவியின் கைதனை
நோக்கியிருப்பதுபோல,
எம் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எமக்கு இரங்கும்வரை,
எம் கண்கள்
உம்மையே நோக்கியிருக்கும்.
3 எங்களுக்கு இரங்கும் ஆண்டவரே!
எங்களுக்கு இரங்கும்;
அளவுக்கு மேலேயே நாங்கள்
இகழ்ச்சி அடைந்துவிட்டோம்.
4 இன்பத்தில் திளைத்திருப்போரின்
வசைமொழி போதும்.
இறுமாந்த மனிதரின்
பழிச்சொல்லும் போதும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-123
|
601 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 124 – திருவிவிலியம்
|
இஸ்ரயேலைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; தாவீதுக்கு உரியது)
1 ஆண்டவர் நம் சார்பாக
இருந்திராவிடில் –
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2 ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,
நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,
3 அவர்களது சினம் நம்மேல் மூண்டபோது,
அவர்கள் நம்மை
உயிரோடு விழுங்கியிருப்பார்கள்.
4 அப்பொழுது, வெள்ளம்
நம்மை மூழ்கடித்திருக்கும்;
பெருவெள்ளம் நம்மீது
புரண்டோடியிருக்கும்;
5 கொந்தளிக்கும் வெள்ளம்
நம்மீது பாய்ந்தோடியிருக்கும்.
6 ஆண்டவர் போற்றி! போற்றி!
எதிரிகளின் பற்களுக்கு
அவர் நம்மை இரையாக்கவில்லை.
7 வேடர் கண்ணியினின்று தப்பிப் பிழைத்த
பறவைபோல் ஆனோம்;
கண்ணி அறுந்தது;
நாம் தப்பிப் பிழைத்தோம்.
8 ஆண்டவரின் பெயரே நமக்குத் துணை!
விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கியவர் அவரே!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-124
|
602 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 125 – திருவிவிலியம்
|
இறைமக்களைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும்
அசையாது இருப்பர்.
2 எருசலேமைச் சுற்றிலும்
மலைகள் இருப்பதுபோல,
ஆண்டவர் இப்போதும் எப்போதும்
தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.
3 நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;
இல்லையெனில் நல்லாரும்
பொல்லாதது செய்ய நேரிடும்.
4 ஆண்டவரே! நல்லவர்களுக்கும்
நேரிய இதயமுள்ளவர்களுக்கும்
நீர் நன்மை செய்தருளும்.
5 கோணல் வழிநோக்கித் திரும்புவோரை
ஆண்டவர் தீயவரோடு சேர்த்து
இழுத்துச் செல்வார்.
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-125
|
603 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 126 – திருவிவிலியம்
|
விடுதலைக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 சீயோனின் அடிமை நிலையை
ஆண்டவர் மாற்றினபோது,
நாம் ஏதோ கனவு
கண்டவர் போல இருந்தோம்.
2 அப்பொழுது, நமது முகத்தில்
மகிழ்ச்சி காணப்பட்டது.
நாவில் களிப்பாரவாரம் எழுந்தது;
‟ஆண்டவர் அவர்களுக்கு
மாபெரும் செயல் புரிந்தார்” என்று
பிற இனத்தார் தங்களுக்குள்
பேசிக்கொண்டனர்.
3 ஆண்டவர் நமக்கு
மாபெரும் செயல் புரிந்துள்ளார்;
அதனால் நாம்
பெருமகிழ்ச்சியுறுகின்றோம்.
4 ஆண்டவரே!
தென்னாட்டின் வறண்ட ஓடையை
நீரோடையாக
வான்மழை மாற்றுவதுபோல,
எங்கள் அடிமை நிலையை
மாற்றியருளும்.
5 கண்ணீரோடு விதைப்பவர்கள்
அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்.
6 விதை எடுத்துச் செல்லும்போது –
செல்லும்போது – அழுகையோடு
செல்கின்றார்கள்;
அரிகளைச் சுமந்து வரும்போது –
வரும்போது –
அக்களிப்போடு வருவார்கள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-126
|
604 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 127 – திருவிவிலியம்
|
கடவுளின் அருளும் நலன்களும்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; சாலமோனுக்கு உரியது)
1 ஆண்டவரே வீட்டைக்
கட்டவில்லையெனில்,
அதைக் கட்டுவோரின்
உழைப்பு வீணாகும்;
ஆண்டவரே நகரைக்
காக்கவில்லையெனில்,
காவலர்கள் விழித்திருப்பதும்
வீணாகும்.
2 வைகறையில் விழித்தெழுந்து
நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை
மானிடர் தம் உணவுக்காக
வருந்தி உழைப்பது வீணே!
உறங்கும்போதும் கடவுளின் அன்பர்
தேவையானதை அவரிடமிருந்து
பெற்றுக்கொள்வர்.
3 பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;
மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.
4 இளமையில் ஒருவருக்குப்
பிறக்கும் மைந்தர்
வீரரின் கையிலுள்ள
அம்புகளுக்கு ஒப்பானவர்.
5 அவற்றால் தம் அம்பறாத் தூணியை
நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;
நீதிமன்றத்தில் எதிரிகளோடு
வழக்காடும்போது
அவர் இகழ்ச்சியடையமாட்டார்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-127
|
605 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 128 – திருவிவிலியம்
|
ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதன் பயன்கள்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ஆண்டவருக்கு அஞ்சி
அவர் வழிகளில் நடப்போர்
பேறுபெற்றோர்!
2 உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர்!
நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்!
3 உம் இல்லத்தில் உம் துணைவியார்
கனிதரும் திராட்சைக் கொடிபோல்
இருப்பார்;
உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள்
ஒலிவக் கன்றுகளைப் போல்
உம்மைச் சூழ்ந்திருப்பர்.
4 ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர்
இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார்.
5 ஆண்டவர் சீயோனிலிருந்து
உமக்கு ஆசி வழங்குவாராக!
உம் வாழ் நாளெல்லாம் நீர்
எருசலேமின் நல்வாழ்வைக்
காணும்படி செய்வாராக!
6 நீர் உம் பிள்ளைகளின்
பிள்ளைகளைக் காண்பீராக!
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-128
|
606 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 129 – திருவிவிலியம்
|
இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ‟என் இளமை முதற்கொண்டே
என்னைப் பெரிதும்
துன்புறுத்தினார்கள்” –
இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!
2 ‟என் இளமை முதற்கொண்டே
என்னைப் பெரிதும்
துன்புறுத்தினார்கள்;
எனினும், அவர்கள்
என்மீது வெற்றி பெறவில்லை.
3 உழவர் என் முதுகின்மீது உழுது
நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”
4 ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,
பொல்லார் கட்டிய கயிறுகளை
அவர் அறுத்தெறிந்தார்.
5 சீயோனைப் பகைக்கும் அனைவரும்
அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!
6 கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு
அவர்கள் ஒப்பாவார்கள்;
வளருமுன் அது உலர்ந்துபோகும்.
7 அதை அறுப்போரின் கைக்கு,
ஒரு பிடி கூடக் கிடைக்காது;
அரிகளைச் சேர்த்தால்
ஒரு சுமைகூடத் தேறாது.
8 வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,
‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி
வழங்குவாராக!’ என்றோ
‛ஆண்டவரின் பெயரால்
ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-129
|
607 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 130 – திருவிவிலியம்
|
உதவிக்காக மன்றாடல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ஆண்டவரே! ஆழ்ந்த
துயரத்தில் இருக்கும் நான்
உம்மை நோக்கி
மன்றாடுகிறேன்;
2 ஆண்டவரே! என் மன்றாட்டுக்குச்
செவிசாய்த்தருளும்;
என் விண்ணப்பக் குரலை
உம்முடைய செவிகள்
கவனத்துடன் கேட்கட்டும்.
3 ஆண்டவரே! நீர் எம் குற்றங்களை
மனத்தில் கொண்டிருந்தால்,
யார்தான் நிலைத்து நிற்க முடியும்?
4 நீரோ மன்னிப்பு அளிப்பவர்;
மனிதரும் உமக்கு அஞ்சி நடப்பர்.
5 ஆண்டவருக்காக ஆவலுடன் நான்
காத்திருக்கின்றேன்;
என் நெஞ்சம் காத்திருக்கின்றது;
அவரது சொற்களுக்காக
ஆவலுடன் காத்திருக்கின்றேன்.
6 விடியலுக்காய்க் காத்திருக்கும்
காவலரைவிட,
ஆம், விடியலுக்காய்க் காத்திருக்கும்
காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய்
ஆவலுடன் காத்திருக்கின்றது.
7 இஸ்ரயேலே!
ஆண்டவரையே நம்பியிரு;
பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது;
மிகுதியான மீட்பு
அவரிடமே உண்டு.
8 எல்லாத் தீவினைகளினின்றும்
இஸ்ரயேலரை மீட்பவர் அவரே!
130:8 மத் 1:21; தீத் 2:14.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-130
|
608 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 131 – திருவிவிலியம்
|
பணிவுமிகு மன்றாட்டு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்: தாவீதுக்கு உரியது)
1 ஆண்டவரே! என் உள்ளத்தில்
இறுமாப்பு இல்லை!
என் பார்வையில் செருக்கு இல்லை;
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,
செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
2 மாறாக, என் நெஞ்சம்
நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;
தாய்மடி தவழும் குழந்தையென
என் நெஞ்சம் என்னகத்தே
அமைதியாயுள்ளது.
3 இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்
ஆண்டவரையே நம்பியிரு!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-131
|
609 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 132 – திருவிவிலியம்
|
திருக்கோவில் வாழ்த்து
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 ஆண்டவரே! தாவீதையும்
அவர் பட்ட
இன்னல்கள் அனைத்தையும்
நினைவு கூர்ந்தருளும்.
2 அவர் ஆண்டவராகிய உமக்கு
ஆணையிட்டுக் கூறியதை,
யாக்கோபின் வல்லவராகிய
உமக்குச் செய்த பொருத்தனையை
நினைவுகூர்ந்தருளும்.
3 “ஆண்டவருக்கு ஓர் இடத்தை,
யாக்கோபின் வல்லவருக்கு
ஒர் உறைவிடத்தை
நான் அமைக்கும் வரையில்,
4 என் இல்லமாகிய கூடாரத்தினுள்
செல்லமாட்டேன்;
படுப்பதற்காக என் மஞ்சத்தில்
ஏறமாட்டேன்;
5 என் கண்களைத் தூங்க விடமாட்டேன்;
என் இமைகளை மூடவிடமாட்டேன்”
என்று அவர் சொன்னாரே.
6 திருப்பேழை எப்ராத்தாவில்
இருப்பதாய்க் கேள்விப்பட்டோம்;
வனவெளியில் அதைக் கண்டுபிடித்தோம்.
7 “அவரது உறைவிடத்திற்குச் செல்வோம்!
வாருங்கள்;
அவரது திருவடிதாங்கி
முன் வீழ்ந்து பணிவோம்!” என்றோம்.
8 ஆண்டவரே! நீர் உமது
வல்லமை விளங்கும் பேழையுடன்
உமது உறைவிடத்திற்கு
எழுந்தருள்வீராக!
9 உம் குருக்கள் நீதியை
ஆடையென அணிவார்களாக!
உம் அன்பர்கள் அக்களிப்பார்களாக!
10 நீர் திருப்பொழிவு செய்த அரசரை,
உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்
புறக்கணியாதேயும்.
11 ஆண்டவர் தாவீதுக்கு
உண்மையாய் ஆணையிட்டுக் கூறினார்;
அவர்தம் வாக்குறுதியினின்று
பின்வாங்கமாட்டார்;
“உனக்குப் பிறந்த ஒருவனை
அரசனாக ஏற்படுத்தி
உன் அரியணையில்
வீற்றிருக்கச் செய்வேன்.
12 உன் மைந்தர்
என் உடன்படிக்கையையும்,
நான் அவர்களுக்குக் கற்பிக்கும்
என் நியமங்களையும் கடைப்பிடித்தால்,
அவர்களுடைய மைந்தரும்
என்றென்றும் உன் அரியணையில்
வீற்றிருப்பர்.”
13 ஆண்டவர் சீயோனைத்
தேர்ந்தெடுத்தார்;
அதையே தம்
உறைவிடமாக்க விரும்பினார்.
14 “இது என்றென்றும்
நான் இளைப்பாறும் இடம்;
இதை நான் விரும்பினதால்
இதையே என் உறைவிடமாக்குவேன்.
15 இங்கே என் ஆசியால்
உணவுப் பொருள்
தாராளமாகக் கிடைக்கச்செய்வேன்;
அதனை ஏழைகள் உண்டு
நிறைவு பெறுமாறு செய்வேன்.
16 இங்குள்ள குருக்களுக்கு
மீட்பெனும் உடையை உடுத்துவேன்;
இங்குள்ள என் அன்பர்கள்
மகிழ்ந்து ஆரவாரிப்பார்கள்.
17 இங்கே தாவீதின் மரபிலிருந்து
ஒரு வல்லவனை எழச்செய்வேன்;
நான் திருப்பொழிவு செய்தவனுக்காக
ஒரு ஒளிவிளக்கை ஏற்பாடு செய்துள்ளேன்.
18 அவனுடைய எதிரிகளுக்கு
இகழ்ச்சியெனும்
உடையை உடுத்துவேன்;
அவன்மீதோ அவனது மணிமுடி
ஒளிவீசும்.”
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-132
|
610 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 133 – திருவிவிலியம்
|
சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)
1 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது
எத்துணை நன்று,
எத்துணை இனியது!
2 அது ஆரோனின் தலையினிலே
ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்
அவருடைய தாடியினின்று வழிந்தோடி
அவர்தம் அங்கியின் விளிம்பை
நனைப்பதற்கு ஒப்பாகும்.
3 அது எர்மோனின் மலைப்பனி
சீயோனின் மலைகள்மேல்
இறங்குவதற்கு ஒப்பாகும்;
ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள
வாழ்வென்னும் ஆசிதனை
ஆண்டவர் பொழிந்தருள்வார்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-133
|
611 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 134 – திருவிவிலியம்
|
ஆண்டவரைப் போற்றுதல்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)
1 இரவு நேரங்களில்
ஆண்டவரின் இல்லத்தில்
பணி செய்யும்
ஆண்டவரின் ஊழியரே!
நீங்கள் அனைவரும்
ஆண்டவரைப் போற்றுங்கள்.
2 தூயகத்தை நோக்கிக் கைகளை உயர்த்தி
ஆண்டவரைப் போற்றுங்கள்.
3 விண்ணையும் மண்ணையும்
உண்டாக்கிய ஆண்டவர்
சீயோனிலிருந்து
உங்களுக்கு ஆசி வழங்குவாராக!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-134
|
612 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 135 – திருவிவிலியம்
|
புகழ்ச்சிப் பாடல்
1 அல்லேலூயா!
ஆண்டவரின் பெயரைப் புகழுங்கள்;
ஆண்டவரின் ஊழியரே!
அவரைப் புகழுங்கள்.
2 ஆண்டவரின் கோவிலுள் நிற்பவர்களே!
நம் கடவுளின்
கோவில் முற்றங்களில் உள்ளவர்களே!
3 ஆண்டவரைப் புகழுங்கள்!
ஏனெனில், அவர் நல்லவர்;
அவரது பெயரைப் போற்றிப் பாடுங்கள்;
ஏனெனில், அவர் இனியவர்.
4 ஆண்டவர் யாக்கோபைத்
தமக்கென்று தேர்ந்துகொண்டார்;
இஸ்ரயேலைத் தமக்குரிய
தனிச்சொத்தாகத் தெரிந்தெடுத்தார்.
5 ஆண்டவர் மேன்மைமிக்கவர்
என்பதை அறிவேன்;
நம் ஆண்டவர் எல்லாத்
தெய்வங்களுக்கும் மேலானவர்
என்பதும் எனக்குத் தெரியும்.
6 விண்ணிலும் மண்ணிலும் கடல்களிலும்
எல்லா ஆழ்பகுதிகளிலும்,
ஆண்டவர் தமக்கு விருப்பமான
யாவற்றையும் செய்கின்றார்.
7 அவர் பூவுலகின்
கடையெல்லைகளிலிருந்து
மேகங்களை எழச்செய்கின்றார்.
மழை பெய்யும்படி
மின்னலை உண்டாக்குகின்றார்;
காற்றைத் தம் கிடங்குகளிலிருந்து
வெளிவரச் செய்கின்றார்.
8 அவர் எகிப்தின்
தலைப்பேறுகளைத் தாக்கினார்;
மனிதர், கால்நடைகளின்
தலைப்பேறுகளை அழித்தார்.
9 எகிப்து நாடே! உன் நடுவில்
பார்வோனையும் அவனுடைய
எல்லா ஊழியர்களையும் தண்டிக்குமாறு,
அடையாளங்களையும்
அருஞ்செயல்களையும்
அவர் நிகழச் செய்தார்.
10 அவர் பல்வேறு இனத்தவரைத்
தாக்கினார்;
வலிமைவாய்ந்த மன்னர்களைக்
கொன்றார்.
11 எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்
பாசானின் மன்னனாகிய ஓகையும்
கானானின் எல்லா அரசுகளையும்
அழித்தார்;
12 அவர்கள் நாட்டைத்
தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கு
உரிமைச்சொத்தாக,
சொந்த உடைமையாகக் கொடுத்தார்.
13 ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;
ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு
தலைமுறை தலைமுறையாக
நீடித்திருக்கும்.
14 ஆண்டவர் தம் மக்களை
நீதியுடன் தீர்ப்பிடுவார்;
தம் அடியாருக்கு இரக்கம் காட்டுவார்.
15 வேற்றினத்தார் வழிபடும் சிலைகள்
வெறும் வெள்ளியும் பொன்னுமே;
அவை மனிதரின் கையால்
செய்யப்பட்டவையே!
16 அவற்றுக்கு வாய்கள் உண்டு;
ஆனால் அவை பேசுவதில்லை;
கண்கள் உண்டு;
ஆனால் அவை காண்பதில்லை;
17 காதுகள் உண்டு;
ஆனால் அவை கேட்பதில்லை;
மூக்குகள் உண்டு;
ஆனால் அவை மூச்சுவிடுவதில்லை.
18 அவற்றைச் செய்து வைப்பவரும்
அவற்றில் நம்பிக்கை வைக்கும் யாவரும்
அவற்றைப் போலவே இருப்பார்கள்.
19 இஸ்ரயேல் குடும்பத்தாரே!
ஆண்டவரைப் போற்றுங்கள்!
ஆரோன் குடும்பத்தாரே!
ஆண்டவரைப் போற்றுங்கள்!
20 லேவி குடும்பத்தாரே!
ஆண்டவரைப் போற்றுங்கள்!
அவருக்கு அஞ்சி நடப்போரே!
அவரைப் போற்றுங்கள்!
21 எருசலேமைத் தம் உறைவிடமாகக்
கொண்டிருக்கும் ஆண்டவர்
போற்றப்படுவாராக;
சீயோனிலிருக்கும் ஆண்டவர்
போற்றப்படுவாராக. அல்லேலூயா!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-135
|
613 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 136 – திருவிவிலியம்
|
என்றுமுள பேரன்பு வாழியவே!
1 ஆண்டவருக்கு நன்றி
செலுத்துங்கள்;
ஏனெனில் அவர் நல்லவர்.
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
2 தெய்வங்களின் இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
3 தலைவர்களின் தலைவருக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
4 தாம் ஒருவராய் மாபெரும்
அருஞ்செயல்களைப் புரிபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
5 வான்வெளியை
மதிநுட்பத்தால் உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
6 கடல்மீது மண்ணகத்தை விரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
7 பெருஞ்சுடர்களை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
8 பகலை ஆள்வதற்கெனக்
கதிரவனை உருவாக்கியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
9 இரவை ஆள்வதற்கென
நிலாவையும் விண்மீன்களையும்
உருவாக்கியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
10 எகிப்தின் தலைப்பேறுகளைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
11 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரயேலை
வெளிக்கொணர்ந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
12 தோளின் வலிமையாலும்
ஓங்கிய புயத்தாலும் அதைச்
செய்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
13 செங்கடலை இரண்டாகப் பிரித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
14 அதன் நடுவே இஸ்ரயேலை
நடத்திச் சென்றவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
15 பார்வோனையும் அவன் படைகளையும்
செங்கடலில் மூழ்கடித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
16 பாலை நிலத்தில் தம் மக்களை
வழிநடத்தியவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
17 மாபெரும் மன்னர்களை வெட்டி
வீழ்த்தியவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
18 வலிமைமிகு மன்னர்களைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
19 எமோரியரின் மன்னன் சீகோனைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
20 பாசானின் மன்னன் ஓகைக்
கொன்றழித்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
21 அவர்களது நாட்டைத் தம் மக்களுக்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
22 அதைத் தம் அடியார்களாகிய
இஸ்ரயேலர்க்கு
உரிமைச் சொத்தாக ஈந்தவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
23 தாழ்வுற்றிருந்த நம்மை நினைவு
கூர்ந்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
24 நம் எதிரிகளினின்று நம்மை
விடுவித்தவர்க்கு நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
25 உடல்கொண்ட அனைத்திற்கும்
உணவூட்டுபவர்க்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
26 விண்ணுலகின் இறைவனுக்கு
நன்றி செலுத்துங்கள்;
என்றும் உள்ளது அவரது பேரன்பு.
136:1 1 குறி 16:34; 2 குறி 5:13; 7:3; எஸ்ரா 3:11; திபா 100:5; 106:1; 118:1; எரே 33:11.
136:5 தொநூ 1:1.
136:6 தொநூ 1:2.
136:7-9 தொநூ 1:16.
136:10 விப 12:29.
136:11 விப 12:51.
136:13-15 விப 14:21-29.
136:19 எண் 21:21-30.
136:20 எண் 21:31-35.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-136
|
614 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 137 – திருவிவிலியம்
|
நாடுகடத்தப்பட்டோரின் புலம்பல்
1 பாபிலோனின் ஆறுகளருகே
அமர்ந்து, நாங்கள்
சீயோனை நினைத்து அழுதோம்.
2 அங்கிருந்த அலரிச் செடிகள் மீது,
எங்கள் யாழ்களை மாட்டி வைத்தோம்.
3 ஏனெனில், அங்கு எங்களைச்
சிறையாக்கினோர்
எங்களைப் பாடும்படி கேட்டனர்;
எங்களைக் கடத்திச் சென்றோர்
எங்களை மகிழ்ச்சிப்பா இசைக்குமாறு
கேட்டனர்.
‛சீயோனின் பாடல்களை
எங்களுக்குப் பாடிக்காட்டுங்கள்’ என்றனர்.
4 ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை
அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?
5 எருசலேமே! நான் உன்னை மறந்தால்
என் வலக்கை சூம்பிப்போவதாக!
6 உன்னை நான் நினையாவிடில்,
எனது மகிழ்ச்சியின் மகுடமாக
நான் எருசலேமைக் கருதாவிடில்,
என் நா மேல்வாயோடு ஒட்டிக்கொள்வதாக!
7 ஆண்டவரே!
ஏதோமின் புதல்வருக்கு எதிராக,
எருசலேம் வீழ்ந்த நாளை
நினைத்துக் கொள்ளும்!
‘அதை இடியுங்கள்; அடியோடு
இடித்துக் தள்ளுங்கள்’ என்று
அவர்கள் எவ்வாறெல்லாம்
சொன்னார்கள்!
8 பாழாக்கும் நகர் பாபிலோனே!
நீ எங்களுக்குச் செய்தவற்றை
உனக்கே திருப்பிச் செய்வோர்
பேறுபெற்றோர்!
9 உன் குழந்தைகளைப் பிடித்து,
பாறையின்மேல் மோதி அடிப்போர்
பேறுபெற்றோர்!
137:8 திவெ 18:6.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-137
|
615 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 138 – திருவிவிலியம்
|
நன்றிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)
1 ஆண்டவரே!
என் முழுமனத்துடன்
உமக்கு நன்றி செலுத்துவேன்;
தெய்வங்கள் முன்னிலையில்
உம்மைப் புகழ்வேன்.
2 உம் திருக்கோவிலை நோக்கித் திரும்பி
உம்மைத் தாள் பணிவேன்;
உம் பேரன்பையும்
உண்மையையும் முன்னிட்டு
உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்;
ஏனெனில், அனைத்திற்கும் மேலாக
உம் பெயரையும் உம் வாக்கையும்
மேன்மையுறச் செய்துள்ளீர்.
3 நான் மன்றாடிய நாளில்
எனக்குச் செவிசாய்த்தீர்;
என் மனத்திற்கு வலிமை அளித்தீர்.
4 ஆண்டவரே! நீர்
திருவாய் மலர்ந்த சொற்களைப்
பூவுலகின் மன்னர் அனைவரும் கேட்டு
உம்மைப் போற்றுவர்.
5 ஆண்டவரே! உம் வழிகளை
அவர்கள் புகழ்ந்து பாடுவர்;
ஏனெனில், உமது மாட்சி மிகப்பெரிது!
6 ஆண்டவரே! நீர் உன்னதத்தில் உறைபவர்;
எனினும் நலிந்தோரைக்
கண்ணோக்குகின்றீர்;
ஆனால், செருக்குற்றோரைத்
தொலையிலிருந்தே அறிந்து கொள்கின்றீர்.
7 நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும்,
என் உயிரைக் காக்கின்றீர்;
என் எதிரிகளின் சினத்துக்கு எதிராக
உமது கையை நீட்டுகின்றீர்;
உமது வலக்கையால்
என்னைக் காப்பாற்றுகின்றீர்.
8 நீர் வாக்களித்த அனைத்தையும்
எனக்கெனச் செய்து முடிப்பீர்;
ஆண்டவரே! என்றும் உள்ளது
உமது பேரன்பு;
உம் கைவினைப் பொருளைக்
கைவிடாதேயும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-138
|
616 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 139 – திருவிவிலியம்
|
முழுமையாய் அறிந்து காக்கும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே!
நீர் என்னை
ஆய்ந்து அறிந்திருக்கின்றீர்!
2 நான் அமர்வதையும் எழுவதையும்
நீர் அறிந்திருக்கின்றீர்;
என் நினைவுகளை எல்லாம்
தொலையிலிருந்தே உய்த்துணர்கின்றீர்.
3 நான் நடப்பதையும் படுப்பதையும்
நீர் அறிந்துள்ளீர்;
என் வழிகள் எல்லாம்
உமக்குத் தெரிந்தவையே.
4 ஆண்டவரே! என் வாயில்
சொல் உருவாகு முன்பே,
அதை முற்றிலும் அறிந்திருக்கின்றீர்.
5 எனக்கு முன்னும் பின்னும்
என்னைச் சூழ்ந்து இருக்கின்றீர்;
உமது கையால் என்னைப்
பற்றிப்பிடிக்கின்றீர்.
6 என்னைப்பற்றிய உம் அறிவு
எனக்கு மிகவும் வியப்பாயுள்ளது;
அது உன்னதமானது;
என் அறிவுக்கு எட்டாதது.
7 உமது ஆற்றலைவிட்டு
நான் எங்கே செல்லக்கூடும்?
உமது திருமுன்னிலிருந்து
நான் எங்கே தப்பியோட முடியும்?
8 நான் வானத்திற்கு
ஏறிச் சென்றாலும்
நீர் அங்கே இருக்கின்றீர்!
பாதாளத்தில் படுக்கையை
அமைத்துக் கொண்டாலும்
நீர் அங்கேயும் இருக்கின்றீர்!
9 நான் *கதிரவனின் இடத்திற்கும்*
பறந்து சென்றாலும்
மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,
10 அங்கேயும் உமது கை
என்னை நடத்திச் செல்லும்;
உமது வலக்கை என்னைப்
பற்றிக் கொள்ளும்.
11 ‘உண்மையில் இருள் என்னை
மூடிக்கொள்ளாதோ?
ஒளி சூழ்வதென இரவும்
என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’
என்று நான் சொன்னாலும்,
12 இருள்கூட உமக்கு இருட்டாய் இல்லை;
இரவும் பகலைப்போல
ஒளியாய் இருக்கின்றது;
இருளும் உமக்கு ஒளிபோல் இருக்கும்.
13 ஏனெனில், என் உள் உறுப்புகளை
உண்டாக்கியவர் நீரே!
என் தாயின் கருவில்
எனக்கு உருதந்தவர் நீரே!
14 அஞ்சத்தகு, வியத்தகு முறையில்
நீர் என்னைப் படைத்ததால்,
நான் உமக்கு நன்றி நவில்கின்றேன்;
உம் செயல்கள்
வியக்கத்தக்கவை என்பதை
என் மனம் முற்றிலும் அறியும்.
15 என் எலும்பு உமக்கு மறைவானதன்று;
மறைவான முறையில்
நான் உருவானதையும்
பூவுலகின் ஆழ்பகுதிகளில்
நான் உருப்பெற்றதையும்
நீர் அறிந்திருந்தீர்.
16 உம் கண்கள் கருமுளையில்
என் உறுப்புகளைக் கண்டன;
நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள
நாள்கள் எல்லாம்
எனக்கு வாழ்நாள் எதுவுமே
இல்லாத காலத்திலேயே
உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.
17 இறைவா! உம்முடைய நினைவுகளை
நான் அறிந்துகொள்வது
எத்துணைக் கடினம்!
அவற்றின் எண்ணிக்கை
எத்துணைப் பெரிது!
18 அவற்றைக் கணக்கிட
நான் முற்பட்டால்,
அவை கடல் மணலிலும்
மிகுதியாய் உள்ளன;
அவற்றை எண்ணி முடிக்க வேண்டுமானால்,
நீர் உள்ளளவும் நான் வாழ வேண்டும்.
19 கடவுளே! நீர் தீயோரைக் கொன்றுவிட்டால்,
எவ்வளவு நலம்! இரத்தப்பழிகாரர்
என்னிடமிருந்து அகன்றால்,
எத்துணை நன்று!
20 ஏனெனில், அவர்கள் தீயமனத்துடன்
உமக்கு எதிராய்ப் பேசுகின்றார்கள்;
அவர்கள் தலைதூக்கி
உமக்கு எதிராய்ச் சதி செய்கின்றார்கள்.
21 ஆண்டவரே! உம்மை வெறுப்போரை
நானும் வெறுக்காதிருப்பேனோ?
உம்மை எதிர்க்க எழுவோரை
நானும் வெறுக்கின்றேன் அன்றோ?
22 நான் அவர்களை
அடியோடு வெறுக்கின்றேன்;
அவர்கள் எனக்கும் எதிரிகள் ஆனார்கள்.
23 இறைவா! நீர் என் உள்ளத்தை
ஆய்ந்து அறியும்;
என் எண்ணங்களை அறியுமாறு
என்னைச் சோதித்துப் பாரும்.
24 உம்மை வருத்தும் வழியில்
நான் செல்கின்றேனோ என்று பாரும்;
என்றுமுள வழியில் என்னை நடத்தியருளும்.
139:9 *…* ‘வைகறையின் இறக்கைகளால்’ என்பது எபிரேய பாடம்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-139
|
617 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 140 – திருவிவிலியம்
|
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே! தீயோரிடமிருந்து
என்னை விடுவியும்;
வன்செயல் செய்வோரிடமிருந்து
என்னைப் பாதுகாத்தருளும்.
2 அவர்கள் தம் மனத்தில்
தீயனவற்றை திட்டமிடுகின்றனர்;
நாள்தோறும் சச்சரவுகளைக்
கிளப்பி விடுகின்றனர்.
3 அவர்கள் பாம்பெனத் தம் நாவைக்
கூர்மையாக்கிக்கொள்கின்றனர்;
அவர்களது உதட்டில் உள்ளது
விரியன் பாம்பின் நஞ்சே! (சேலா)
4 ஆண்டவரே! தீயோரின் கையினின்று
என்னைக் காத்தருளும்;
கொடுமை செய்வோரிடமிருந்து
என்னைப் பாதுகாத்தருளும்;
அவர்கள் என் காலை
வாரிவிடப் பார்க்கின்றார்கள்.
5 செருக்குற்றோர் எனக்கெனக்
கண்ணியை மறைவாக வைக்கின்றனர்;
தம் கயிறுகளால்
எனக்கு சுருக்கு வைக்கின்றனர்; (சேலா)
6 நானோ ஆண்டவரை நோக்கி
இவ்வாறு வேண்டினேன்;
நீரே என் இறைவன்!
ஆண்டவரே! உம் இரக்கத்திற்காக
நான் எழுப்பும் குரலுக்குச் செவிசாயும்.
7 என் தலைவராகிய ஆண்டவரே!
எனக்கு விடுதலை வழங்கும் வல்லவரே!
போர் நடந்த நாளில் என் தலையை
மறைத்துக் காத்தீர்!
8 ஆண்டவரே! தீயோரின் விருப்பங்களை
நிறைவேற்றாதேயும்; அவர்களின்
சூழ்ச்சிகளை வெற்றி பெறவிடாதேயும்.
இல்லையெனில், அவர்கள் ஆணவம்
கொள்வார்கள். (சேலா)
9 என்னைச் சூழ்பவர்கள் செருக்குடன்
நடக்கின்றார்கள்;
அவர்கள் செய்வதாகப் பேசும் தீமை
அவர்கள்மேலே விழுவதாக!
10 நெருப்புத் தழல்
அவர்கள்மேல் விழுவதாக!
மீளவும் எழாதபடி படுகுழியில்
தள்ளப்படுவார்களாக!
11 புறங்கூறும் நாவுடையோர் உலகில்
நிலைத்து வாழாதிருப்பராக!
வன்செயல் செய்வாரைத்
தீமை விரட்டி வேட்டையாடுவதாக!
12 ஏழைகளின் நீதிக்காக
ஆண்டவர் வழக்காடுவார் எனவும்
எளியவர்களுக்கு நீதி வழங்குவார்
எனவும் அறிவேன்.
13 மெய்யாகவே, நீதிமான்கள்
உமது பெயருக்கு
நன்றி செலுத்துவார்கள்;
நேர்மையுள்ளோர் உம் திருமுன் வாழ்வர்.
140:3 உரோ 3:13.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-140
|
618 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 141 – திருவிவிலியம்
|
மாலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே! நான் உம்மை
நோக்கிக் கதறுகின்றேன்;
விரைவாய் எனக்குத் துணைசெய்யும்.
உம்மை நோக்கி நான்
வேண்டுதல் செய்யும்போது
என் குரலுக்குச் செவிசாய்த்தருளும்.
2 தூபம்போல் என் மன்றாட்டு
உம் திருமுன் ஏற்றுக்கொள்ளப்படுவதாக!
மாலைப் பலிபோல் என் கைகள்
உம்மை நோக்கி உயர்வனவாக!
3 ஆண்டவரே! என் நாவுக்குக்
காவல் வைத்தருளும்;
என் இதழ்களின் வாயிலில்
காவலாளியை வைத்தருளும்.
4 என் இதயம் தீயது எதையும்
நாடவிடாதேயும்;
தீச்செயல்களை நான் செய்யவிடாதேயும்;
தீச்செயல் செய்யும் மனிதரோடு
என்னைச் சேரவிடாதேயும்;
அவர்களோடு இனிய விருந்தினை
நான் உண்ணவிடாதேயும்.
5 நீதிமான் என்னைக் கனிவோடு
தண்டிக்கட்டும்; அது என் தலைக்கு
எண்ணெய்போல் ஆகும்;
ஆனால், தீயவரின் எண்ணெய்
என்றுமே என் தலையில்
படாமல் இருக்கட்டும்;
ஏனெனில், அவர்கள் செய்யும்
தீமைகளுக்கு எதிராய்
நான் என்றும் வேண்டுதல் செய்வேன்.
6 அவர்கள் நீதிபதிகளிடம்
தண்டனைக்கென
ஒப்புவிக்கப்படும் பொழுது, நான் சொன்னது
எவ்வளவு உண்மையானது என்று
ஏற்றுக் கொள்வார்கள்;
7 ‛ஒருவரால் பாறை பிளந்து
சிதறடிக்கப்படுவது போல்,
எங்கள் எலும்புகளும்
பாதாளத்தின் வாயிலில்
சிதறடிக்கப்படும்’ என்பார்கள்.
8 ஏனெனில், என் தலைவராகிய
ஆண்டவரே! என் கண்கள்
உம்மை நோக்கியே இருக்கின்றன;
உம்மிடம் அடைக்கலம் புகுகின்றேன்;
என் உயிரை அழியவிடாதேயும்.
9 அவர்கள் எனக்கு வைத்த
கண்ணிகளிலிருந்து
என்னைக் காத்தருளும்;
தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து
என்னைப் பாதுகாத்தருளும்.
10 தீயோர் தாங்கள் வைத்த கண்ணிகளில்
ஒருங்கே வந்து விழுவார்களாக!
நானோ தடையின்றிக்
கடந்து செல்வேனாக!
141:2 திவெ 5:8.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-141
|
619 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 142 – திருவிவிலியம்
|
உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)
1 ஆண்டவரை நோக்கி அபயக்குரல்
எழுப்புகின்றேன்; உரத்த குரலில்
ஆண்டவரின் இரக்கத்திற்காக
வேண்டுகின்றேன்.
2 என் மனக்குறைகளை
அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;
அவர் திருமுன்னே என் இன்னலை
எடுத்துரைக்கின்றேன்;
3 என் மனம் சோர்வுற்றிருந்தது;
நான் செல்லும் வழியை
அவர் அறிந்தேயிருக்கின்றார்;
நான் செல்லும் வழியில் அவர்கள்
எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.
4 வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;
என்னைக் கவனிப்பார் எவருமிலர்;
எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;
என் நலத்தில் அக்கறை கொள்வார்
எவருமிலர்.
5 ஆண்டவரே! உம்மை நோக்கிக்
கதறுகின்றேன்;
‛நீரே என் அடைக்கலம்;
உயிர் வாழ்வோர் நாட்டில்
நீரே என் பங்கு’.
6 என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;
ஏனெனில், நான் மிகவும்
தாழ்த்தப்பட்டுள்ளேன்;
என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து
எனக்கு விடுதலை அளித்தருளும்;
ஏனெனில், அவர்கள் என்னைவிட
வலிமைமிக்கோர்.
7 சிறையினின்று என்னை விடுவித்தருளும்;
உமது பெயருக்கு
நான் நன்றி செலுத்துவேன்;
நீதிமான்கள் என்னைச்
சூழ்ந்து நிற்பார்கள்;
ஏனெனில், நீர் எனக்குப்
பெரும் நன்மை செய்கின்றீர்.
142 தலைப்பு: 1 சாமு 22:1; 24:3.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-142
|
620 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 143 – திருவிவிலியம்
|
உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் புகழ்ப்பா)
1 ஆண்டவரே! என் மன்றாட்டைக்
கேட்டருளும்; நீர் நம்பிக்கைக்கு
உரியவராய் இருப்பதால்,
உமது இரக்கத்திற்காக நான் எழுப்பும்
மன்றாட்டுக்குச் செவிசாய்த்தருளும்;
உமது நீதியின்படி எனக்குப் பதில் தாரும்.
2 தண்டனைத் தீர்ப்புக்கு
உம் அடியானை இழுக்காதேயும்;
ஏனெனில், உயிர் வாழ்வோர் எவரும்
உமது திருமுன் நீதிமான் இல்லை.
3 எதிரி என்னைத் துரத்தினான்;
என்னைத் தரையிலிட்டு நசுக்கினான்;
என்றோ இறந்தொழிந்தவர்களைப்போல்
என்னை இருட்டில் கிடக்கச் செய்தான்.
4 எனவே, என்னுள்ளே என் மனம்
ஒடுங்கிப் போயிற்று;
என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.
5 பண்டைய நாள்களை
நான் நினைத்துக் கொள்கின்றேன்;
உம் செயல்கள் அனைத்தையும் குறித்துச்
சிந்தனை செய்கின்றேன்;
உம் கைவினைகளைப் பற்றி
ஆழ்ந்து சிந்திக்கின்றேன்.
6 உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்துகின்றேன்;
வறண்ட நிலம்
நீருக்காகத் தவிப்பது போல்
என் உயிர் உமக்காகத்
தவிக்கின்றது. (சேலா)
7 ஆண்டவரே! விரைவாக
எனக்குச் செவிசாய்த்தருளும்;
ஏனெனில், என் உள்ளம் உடைந்துவிட்டது;
என்னிடமிருந்து உம் முகத்தை
மறைத்துக் கொள்ளாதேயும்;
இல்லையெனில், படுகுழி செல்வோருள்
ஒருவராகிவிடுவேன்.
8 உமது பேரன்பை நான்
வைகறையில் கண்டடையச் செய்யும்;
ஏனெனில், உம்மீது
நம்பிக்கை வைத்துள்ளேன்;
நான் நடக்க வேண்டிய அந்த வழியை
எனக்குக் காட்டியருளும்;
ஏனெனில், உம்மை நோக்கி
என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.
9 ஆண்டவரே!
என் எதிரிகளிடமிருந்து
என்னை விடுவித்தருளும்;
நான் உம்மிடம் தஞ்சம் புகுந்துள்ளேன்.
10 உம் திருவுளத்தை நிறைவேற்ற
எனக்குக் கற்பித்தருளும்;
ஏனெனில், நீரே என் கடவுள்;
உமது நலமிகு ஆவி என்னைச்
செம்மையான வழியில் நடத்துவதாக!
11 ஆண்டவரே!
உமது பெயரின் பொருட்டு
என் உயிரைக் காத்தருளும்!
உமது நீதியின் பொருட்டு என்னை
நெருக்கடியினின்று விடுவித்தருளும்.
12 உமது பேரன்பை முன்னிட்டு
என் பகைவரை அழித்துவிடும்;
என் பகைவர் அனைவரையும்
ஒழித்துவிடும்;
ஏனெனில், நான் உமக்கே அடிமை!
143:2 உரோ 3:20; கலா 2:16.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-143
|
621 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 144 – திருவிவிலியம்
|
வெற்றிக்கு நன்றி
(தாவீதுக்கு உரியது)
1 என் பாறையாகிய ஆண்டவர்
போற்றி! போற்றி!
போரிட என் கைகளுக்குப்
பயிற்சி அளிப்பவர் அவரே!
போர்புரிய என் விரல்களைப்
பழக்குபவரும் அவரே!
2 என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!
எனக்குப் பாதுகாப்பாளரும்
மீட்பரும் அவரே!
என் கேடயமும் புகலிடமும் அவரே!
மக்களினத்தாரை எனக்குக்
கீழ்ப்படுத்துபவர் அவரே!
3 ஆண்டவரே! மனிதரை நீர் கவனிக்க
அவர்கள் யார்?
மானிடரை நீர் கருத்தில் கொள்ள
அவர்கள் யார்?
4 மனிதர் சிறுமூச்சுக்கு ஒப்பானவர்;
அவர்களின் வாழ்நாள்கள்
மறையும் நிழலுக்கு நிகரானவை.
5 ஆண்டவரே! உம் வான்வெளியை
வளைத்து இறங்கிவாரும்;
மலைகளைத் தொடும்;
அவை புகை கக்கும்.
6 மின்னலை மின்னச் செய்து,
அவர்களைச் சிதறடியும்;
உம் அம்புகளை எய்து,
அவர்களைக் கலங்கடியும்.
7 வானின்று உமது கையை நீட்டி
எனக்கு விடுதலை வழங்கும்;
பெருவெள்ளம் போல் எழும்
வேற்றினத்தார் கையினின்று
என்னை விடுவித்தருளும்.
8 அவர்களது வாய் பேசுவது பொய்!
அவர்களது வலக்கை
வஞ்சமிகு வலக்கை!
9 இறைவா, நான் உமக்குப்
புதியதொரு பாடல் பாடுவேன்;
பதின் நரம்பு வீணையால்
உமக்குப் புகழ் பாடுவேன்.
10 அரசர்களுக்கு வெற்றி அளிப்பவர் நீரே!
உம் ஊழியர் தாவீதைக்
கொடிய வாளினின்று
தப்புவித்தவரும் நீரே!
11 எனக்கு விடுதலை வழங்கும்;
வேற்றினத்தார் கையினின்று
என்னை விடுவித்தருளும்;
அவர்களது வாய் பேசுவது பொய்!
அவர்களது வலக்கை வஞ்சமிகு வலக்கை!
12 எம் புதல்வர்கள்
இளமையில் செழித்து வளரும்
செடிகள்போல் இருப்பார்களாக!
எம் புதல்வியர்
அரண்மனைக்கு அழகூட்டும்
செதுக்கிய சிலைகள்போல்
இருப்பார்களாக!
13 எம் களஞ்சியங்கள் நிறைந்திருப்பனவாக!
வகைவகையான தானியங்களால்
நிறைந்திருப்பனவாக!
எங்கள் வயல்களில் ஆடுகள் ஆயிரம்,
பல்லாயிரம் மடங்கு பலுகட்டும்!
14 எங்கள் மாடுகள் சுமைசுமப்பனவாக!
எவ்விதச் சிதைவோ இழப்போ
இல்லாதிருக்கட்டும்!
எங்கள் தெருக்களில்
அழுகுரல் இல்லாதிருக்கட்டும்.
15 இவற்றை உண்மையாகவே அடையும்
மக்கள் பேறுபெற்றோர்!
ஆண்டவரைத் தம் கடவுளாகக் கொண்ட
மக்கள் பேறுபெற்றோர்.
144:3 யோபு 7:17-18; திபா 8:4.
144:2 ‘பேரன்பும்’ என்றும் பொருள்படும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-144
|
622 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 145 – திருவிவிலியம்
|
அரசராம் கடவுள் போற்றி!
(தாவீதின் திருப்பாடல்)
1 என் கடவுளே, என் அரசே!
உம்மைப் புகழ்ந்து ஏத்துவேன்;
உமது பெயரை என்றும்
எப்பொழுதும் போற்றுவேன்.
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்;
உமது பெயரை என்றும்
எப்பொழுதும் புகழ்வேன்.
3 ஆண்டவர் மாண்புமிக்கவர்;
பெரிதும் போற்றுதலுக்கும் உரியவர்;
அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு
உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்;
வல்லமைமிகு உம் செயல்களை
எடுத்துரைக்கும்.
5 உமது மாண்பின்
மேன்மையையும் மாட்சியையும்
வியத்தகு உம் செயல்களையும்
நான் சிந்திப்பேன்.
6 அச்சந்தரும் உம் செயல்களின்
வல்லமையைப்பற்றி
மக்கள் பேசுவார்கள்;
உமது மாண்பினை நான்
விரித்துரைப்பேன்,
7 அவர்கள் உமது உயர்ந்த நற்பண்பை
நினைந்துக் கொண்டாடுவார்கள்;
உமது நீதியை எண்ணி
ஆர்ப்பரித்துப் பாடுவார்கள்.
8 ஆண்டவர் இரக்கமும் கனிவும் உடையவர்;
எளிதில் சினம் கொள்ளாதவர்;
பேரன்பு கொண்டவர்.
9 ஆண்டவர் எல்லாருக்கும்
நன்மை செய்பவர்;
தாம் உண்டாக்கிய அனைத்தின்மீதும்
இரக்கம் காட்டுபவர்.
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும்
உமக்கு நன்றி செலுத்தும்;
உம்முடைய அன்பர்கள்
உம்மைப் போற்றுவார்கள்.
11 அவர்கள் உமது அரசின் மாட்சியை
அறிவிப்பார்கள்;
உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள்.
12 மானிடர்க்கு
உம் வல்லமைச் செயல்களையும்
உமது அரசுக்குரிய
மாட்சியின் பேரொளியையும்
புலப்படுத்துவார்கள்.
13 உமது அரசு
எல்லாக் காலங்களிலுமுள்ள அரசு;
உமது ஆளுகை
தலைமுறை தலைமுறையாக உள்ளது.
ஆண்டவர் தம் வாக்குகள் அனைத்திலும்
உண்மையானவர்;
தம் செயல்கள் அனைத்திலும்
தூய்மையானவர்.
14 தடுக்கி விழும் யாவரையும்
ஆண்டவர் தாங்குகின்றார்.
தாழ்த்தப்பட்ட யாவரையும்
தூக்கிவிடுகின்றார்.
15 எல்லா உயிரினங்களின் கண்களும்
உம்மையே நோக்குகின்றன;
தக்க வேளையில் நீரே அவற்றிற்கு
உணவளிக்கின்றீர்.
16 நீர் உமது கையைத் திறந்து
எல்லா உயிரினங்களின்
விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.
17 ஆண்டவர் தாம் செய்யும் அனைத்திலும்
நீதியுடையவர்; அவர்தம் செயல்கள் யாவும்
இரக்கச் செயல்களே.
18 தம்மை நோக்கி மன்றாடும் யாவருக்கும்,
உண்மையாய்த் தம்மை நோக்கி
மன்றாடும் யாவருக்கும்,
ஆண்டவர் அண்மையில் இருக்கிறார்.
19 அவர் தமக்கு அஞ்சி நடப்போரின்
விருப்பத்தை நிறைவேற்றுவார்;
அவர்களது மன்றாட்டுக்குச் செவிசாய்த்து
அவர்களைக் காப்பாற்றுவார்.
20 ஆண்டவர் தம்மிடம் பற்றுக் கொள்ளும்
அனைவரையும் பாதுகாக்கின்றார்;
பொல்லார் அனைவரையும் அழிப்பார்.
21 என் வாய் ஆண்டவரின் புகழை
அறிவிப்பதாக!
உடல்கொண்ட அனைத்தும்
அவரது திருப்பெயரை
என்றும் எப்பொழுதும் போற்றுவதாக!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-145
|
623 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 146 – திருவிவிலியம்
|
மீட்பராம் கடவுள் போற்றி!
1 அல்லேலூயா! என் நெஞ்சே!
நீ ஆண்டவரைப் போற்றிடு;
2 நான் உயிரோடு உள்ளளவும்
ஆண்டவரைப் போற்றிடுவேன்;
என் வாழ்நாளெல்லாம் என் கடவுளைப்
புகழ்ந்து பாடிடுவேன்.
3 ஆட்சித் தலைவர்களை நம்பாதீர்கள்;
உன்னை மீட்க இயலாத
மானிட மக்களை நம்ப வேண்டாம்.
4 அவர்களின் ஆவி பிரியும்போது
தாங்கள் தோன்றிய மண்ணுக்கே
அவர்கள் திரும்புவார்கள்;
அந்நாளில் அவர்களின் எண்ணங்கள்
அழிந்துபோம்.
5 யாக்கோபின் இறைவனைத்
தம் துணையாகக் கொண்டிருப்போர்
பேறுபெற்றோர்;
தம் கடவுளாகிய ஆண்டவரையே
நம்பியிருப்போர் பேறுபெற்றோர்.
6 அவரே விண்ணையும் மண்ணையும்
கடலையும் அவற்றிலுள்ள யாவற்றையும்
உருவாக்கியவர்;
என்றென்றும் நம்பிக்கைக்கு
உரியவராய் இருப்பவரும் அவரே!
7 ஆண்டவர் ஒடுக்கப்பட்டோர்க்கான
நீதியை நிலைநாட்டுகின்றார்;
பசித்திருப்போர்க்கு
உணவளிக்கின்றார்;
சிறைப்பட்டோர்க்கு
விடுதலை அளிக்கின்றார்.
8 ஆண்டவர் பார்வையற்றோரின்
கண்களைத் திறக்கின்றார்;
தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்;
நீதிமான்களிடம் அன்பு கொண்டுள்ளார்.
9 ஆண்டவர் அயல் நாட்டினரைப்
பாதுகாக்கின்றார்;
அனாதைப் பிள்ளைகளையும்
கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்;
ஆனால், பொல்லாரின் வழிமுறைகளைக்
கவிழ்த்துவிடுகின்றார்.
10 சீயோனே! உன் கடவுள், என்றென்றும்,
எல்லாத் தலைமுறைகளுக்கும்
ஆட்சி செய்வார். அல்லேலூயா!
146:6 திப 4:24; 14:15.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-146
|
624 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 147 – திருவிவிலியம்
|
எல்லாம் வல்ல இறைவன் போற்றி
1 அல்லேலூயா!
நம்முடைய கடவுளைப்
புகழ்ந்து பாடுவது நல்லது;
அவரைப் புகழ்வது இனிமையானது;
அதுவே ஏற்புடையது.
2 ஆண்டவர் எருசலேமை
மீண்டும் கட்டி எழுப்புகின்றார்;
நாடு கடத்தப்பட்ட இஸ்ரயேலைக்
கூட்டிச் சேர்க்கின்றார்;
3 உடைந்த உள்ளத்தோரைக்
குணப்படுத்துகின்றார்;
அவர்களின் காயங்களைக் கட்டுகின்றார்.
4 விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,
அவை ஒவ்வொன்றையும்
பெயர் சொல்லி அழைக்கின்றார்.
5 நம் தலைவர் மாண்புமிக்கவர்;
மிகுந்த வல்லமையுள்ளவர்;
அவர்தம் நுண்ணறிவு
அளவிடற்கு அரியது.
6 ஆண்டவர் எளியோர்க்கு
ஆதரவளிக்கின்றார்;
பொல்லாரையோ
தரைமட்டும் தாழ்த்துகின்றார்.
7 ஆண்டவருக்கு
நன்றி செலுத்திப் பாடுங்கள்;
நம் கடவுளை
யாழ்கொண்டு புகழ்ந்து பாடுங்கள்.
8 அவர் வானத்தை
மேகங்களால் மறைக்கின்றார்;
பூவுலகின்மீது மழையைப் பொழிகின்றார்;
மலைகளில்
புல்லை முளைக்கச் செய்கின்றார்.
9 கால்நடைகளுக்கும்
கரையும் காக்கைக் குஞ்சுகளுக்கும்,
அவர் இரை கொடுக்கின்றார்.
10 குதிரையின் வலிமையில்
அவர் மகிழ்ச்சி காண்பதில்லை;
வீரனின் கால்வலிமையையும்
அவர் விரும்புவதில்லை.
11 தமக்கு அஞ்சி நடந்து
தம் பேரன்புக்காக
நம்பிக்கையுடன் காத்திருப்போரிடம்
அவர் மகிழ்ச்சி கொள்கின்றார்.
12 எருசலேமே!
ஆண்டவரைப் போற்றுவாயாக!
சீயோனே!
உன் கடவுளைப் புகழ்வாயாக!
13 அவர் உன் வாயில்களின் தாழ்களை
வலுப்படுத்துகின்றார்;
உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு
ஆசி வழங்குகின்றார்.
14 அவர் உன் எல்லைப்புறங்களில்
அமைதி நிலவச் செய்கின்றார்;
உயர்தரக் கோதுமை வழங்கி
உன்னை நிறைவடையச் செய்கின்றார்.
15 அவர் தமது கட்டளையை
உலகினுள் அனுப்புகின்றார்;
அவரது வாக்கு
மிகவும் விரைவாய்ச் செல்கின்றது.
16 அவர் வெண்கம்பளிபோல்
பனியைப் பொழிகின்றார்;
சாம்பலைப்போல்
உறைபனியைத் தூவுகின்றார்;
17 பனிக்கட்டியைத்
துகள்துகளாக விழச் செய்கின்றார்;
அவர் வரவிடும் குளிரைத்
தாங்கக் கூடியவர் யார்?
18 அவர் தம் கட்டளையால்
அவற்றை உருகச் செய்கின்றார்;
தம் காற்றை வீசச் செய்ய,
நீர் ஓடத் தொடங்குகின்றது.
19 யாக்கோபுக்குத் தமது வாக்கையும்
இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும்
நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார்.
20 அவர் வேறெந்த இனத்துக்கும்
இப்படிச் செய்யவில்லை;
அவருடைய நீதிநெறிகள்
அவர்களுக்குத் தெரியாது;
அல்லேலூயா!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-147
|
625 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 148 – திருவிவிலியம்
|
அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு!
1 அல்லேலூயா!
விண்ணுலகில் உள்ளவையே,
ஆண்டவரைப் போற்றுங்கள்;
உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.
2 அவருடைய தூதர்களே,
நீங்கள் யாவரும்
அவரைப் போற்றுங்கள்;
அவருடைய படைகளே,
நீங்கள் யாவரும் அவரைப் போற்றுங்கள்.
3 கதிரவனே, நிலாவே,
அவரைப் போற்றுங்கள்;
ஒளிவீசும் விண்மீன்களே,
அவரைப் போற்றுங்கள்.
4 விண்ணுலக வானங்களே,
அவரைப் போற்றுங்கள்;
வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,
அவரைப் போற்றுங்கள்.
5 அவை ஆண்டவரின் பெயரைப்
போற்றட்டும்;
ஏனெனில், அவரது கட்டளையின்படி
எல்லாம் படைக்கப்பட்டன;
6 அவரே அவற்றை என்றென்றும்
நிலைபெறச் செய்தார்;
மாறாத நியமத்தை
அவற்றிற்கு ஏற்படுத்தினார்.
7 மண்ணுலகில்
ஆண்டவரைப் போற்றுங்கள்;
கடலின் பெரும் நாகங்களே,
ஆழ்கடல் பகுதிகளே,
8 நெருப்பே, கல்மழையே,
வெண்பனியே, மூடுபனியே,
அவரது ஆணையை நிறைவேற்றும்
பெருங்காற்றே,
9 மலைகளே, அனைத்துக் குன்றுகளே,
கனிதரும் மரங்களே,
அனைத்துக் கேதுரு மரங்களே,
10 காட்டு விலங்குகளே,
அனைத்துக் கால்நடைகளே,
ஊர்ந்து செல்லும் உயிரினங்களே,
சிறகுள்ள பறவைகளே,
11 உலகின் அரசர்களே,
எல்லா மக்களினங்களே,
தலைவர்களே, உலகின் ஆட்சியாளர்களே,
12 இளைஞரே, கன்னியரே,
முதியோரே மற்றும் சிறியோரே,
நீங்கள் எல்லாரும்
ஆண்டவரைப் போற்றுங்கள்.
13 அவர்கள் ஆண்டவரின் பெயரைப்
போற்றுவார்களாக;
அவரது பெயர் மட்டுமே உயர்ந்தது;
அவரது மாட்சி
விண்ணையும் மண்ணையும் கடந்தது.
14 அவர் தம் மக்களின் ஆற்றலை
உயர்வுறச் செய்தார்;
அவருடைய அனைத்து அடியாரும்
அவருக்கு நெருங்கிய
அன்பார்ந்த மக்களாகிய
இஸ்ரயேல் மக்களும்
அவரைப் போற்றுவார்கள்.
அல்லேலூயா!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-148
|
626 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 149 – திருவிவிலியம்
|
மக்களில் மகிழ்ச்சியுறும் மாமன்னர் போற்றி!
1 அல்லேலூயா!
ஆண்டவருக்குப் புதியதொரு
பாடலைப் பாடுங்கள்;
அவருடைய அன்பர் சபையில்
அவரது புகழைப் பாடுங்கள்.
2 இஸ்ரயேல் தன்னை உண்டாக்கினவரைக்
குறித்து மகிழ்ச்சி கொள்வதாக!
சீயோனின் மக்கள் தம் அரசரை
முன்னிட்டுக் களிகூர்வார்களாக!
3 நடனம் செய்து அவரது பெயரைப்
போற்றுவார்களாக;
மத்தளம் கொட்டி, யாழிசைத்து
அவரைப் புகழ்ந்து பாடுவார்களாக!
4 ஆண்டவர் தம் மக்கள் மீது
விருப்பம் கொள்கின்றார்;
தாழ்நிலையிலுள்ள அவர்களுக்கு
வெற்றியளித்து மேன்மைப் படுத்துவார்.
5 அவருடைய அன்பர்
மேன்மையடைந்து களிகூர்வராக!
மெத்தைகளில் சாய்ந்து
மகிழ்ந்து கொண்டாடுவராக!
6 அவர்களின் வாய்
இறைவனை ஏத்திப் புகழட்டும்;
அவர்களின் கையில் இருபுறமும்
கூர்மையான வாள் இருக்கட்டும்.
7 அவர்கள் வேற்றினத்தாரிடம்
பழிதீர்த்துக் கொள்வார்கள்;
மக்களினங்களுக்கு
தண்டனைத் தீர்ப்பிடுவார்கள்;
8 வேற்றின மன்னர்களை
விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;
உயர்குடி மக்களை
இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.
9 முன்குறித்து வைத்த தீர்ப்பை
அவர்களிடம் நிறைவேற்றுவார்கள்;
இத்தகைய மேன்மை
ஆண்டவர் தம் அன்பர்
அனைவருக்கும் உரித்தானது.
அல்லேலூயா!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-149
|
627 |
திருப்பாடல்கள்
|
திருப்பாடல்கள் அதிகாரம் – 150 – திருவிவிலியம்
|
தூயகத்தில் இறைவன் போற்றி!
1 அல்லேலூயா! தூயகத்தில்
இறைவனைப் போற்றுங்கள்!
வலிமைமிகு விண்விரிவில்
அவரைப் போற்றுங்கள்!
2 அவர்தம் வல்ல செயல்களுக்காய்
அவரைப் போற்றுங்கள்!
அவர்தம் எல்லையிலா
மாண்பினைக் குறித்து
அவரைப் போற்றுங்கள்!
3 எக்காளம் முழங்கியே
அவரைப் போற்றுங்கள்!
வீணையுடன் யாழிசைத்து
அவரைப் போற்றுங்கள்.
4 மத்தளம் கொட்டி நர்த்தனம் செய்து
அவரைப் போற்றுங்கள்!
யாழினை மீட்டி,
குழலினை ஊதி
அவரைப் போற்றுங்கள்!
5 சிலம்பிடும் சதங்கையுடன்
அவரைப் போற்றுங்கள்!
‛கலீர்’ எனும் தாளத்துடன்
அவரைப் போற்றுங்கள்!
6 அனைத்து உயிர்களே,
ஆண்டவரைப் புகழ்ந்திடுக!
அல்லேலூயா!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-psalms-150
|
628 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
|
இந்நூலின் நோக்கம்
1 தாவீதின் மகனும் இஸ்ரயேலின் அரசனுமாகிய சாலமோனின் நீதிமொழிகள்.
2 இவற்றைப் படிப்பவர் ஞானமும் நற்பயிற்சியும் பெறுவர்; ஆழ்ந்த கருத்தடங்கிய நன்மொழி களை உணர்ந்து கொள்வர்;
3 நீதி, நியாயம், நேர்மை நிறைந்த விவேக வாழ்க்கையில் பயிற்சி பெறுவர்;
4 அறிவற்றோர் கூரறிவு பெறுவர்; இளைஞர் அறிவும் விவேகமும் அடைவர்.
5 ஞானமுள்ளோர் இவற்றைக் கேட்டு அறிவில் இன்னும் தேர்ச்சியடைவர்; விவேகிகள் அறிவுரை கூறும் திறமை பெறுவர்;
6 நீதிமொழிகளையும் உவமைகளையும் ஞானிகளின் நன்மொழிகளையும் புதிர் மொழிகளையும் அவர்கள் உய்த்துணர்வர்.
இளைஞருக்கு நல்லுரை
7 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; ஞானத்தையும் நற்பயிற்சியையும் மூடரே அவமதிப்பர்.
8 பிள்ளாய்! உன் தந்தை தந்த நற்பயிற்சியைக் கடைப்பிடி; உன் தாய் கற்பிப்பதைத் தள்ளி விடாதே.
9 அவை உன் தலைக்கு அணிமுடி; உன் கழுத்துக்கு மணிமாலை.
10 பிள்ளாய்! தீயவர்கள் உன்னைக் கவர்ச்சியூட்டி இழுப்பார்கள்; நீ அவர்களுடன் போக இணங்காதே.
11 அவர்கள் உன்னைப் பார்த்து, “எங்களோடு வா; பதுங்கியிருந்து எவரையாவது கொல்வோம்; யாராவது ஓர் அப்பாவியை ஒளிந்திருந்து தாக்குவோம்;
12 பாதாளத்தைப்போல நாம் அவர்களை உயிரோடு விழுங்குவோம்; படுகுழிக்குச் செல்வோரை அது விழுங்குவதுபோல, நாமும் அவர்களை முழுமையாக விழுங்குவோம்.
13 எல்லா வகையான அரும் பொருள்களும் நமக்குக் கிடைக்கும்; கொள்ளையடித்த செல்வத்தால் நம் வீடுகளை நிரப்புவோம்.
14 நீ எங்களோடு சேர்ந்துகொள்; எல்லாவற்றிலும் உனக்குச் சம பங்கு கிடைக்கும்” என்றெல்லாம் சொல்வார்கள்.
15 பிள்ளாய்! அவர்களோடு சேர்ந்து அவர்கள் வழியில் செல்லாதே; அவர்கள் செல்லும் பாதையில் அடிவைக்காதே.
16 அவர்கள் கால்கள் தீங்கிழைக்கத் துடிக்கின்றன; இரத்தம் சிந்த விரைகின்றன.
17 பறவையைப் பிடிக்க, அதன் கண்முன்னே அன்று, மறைவாகவே கண்ணி வைப்பார்கள்.
18 அவர்கள் பதுங்கியிருப்பது அவர்களுக்கே ஊறுவிளைவிக்கும் கண்ணியாகி விடும்; அவர்கள் ஒளிந்து காத்திருப்பது அவர்களையே அழிக்கும் பொறியாகி விடும்.
19 தீய முறையில் பணம் சேர்க்கும் அனைவரின் முடிவும் இதுவே; அந்தப் பணம் தன்னை வைத்திருப்போரின் உயிரைக் குடித்துவிடும்.
ஞானம் விடுக்கும் அழைப்பு
20 ஞானம் வீதிகளிலிருந்து உரத்துக் கூறுகின்றது; பொதுவிடங்களிலிருந்து குரலெழுப்புகின்றது;
21 பரபரப்பு மிகுந்த தெருக்களிலிருந்து அழைக்கின்றது; நகர வாயிலிருந்து முழங்குகின்றது;
22 “பேதையரே, நீங்கள் இன்னும் எவ்வளவு காலம் உங்கள் பேதைமையில் உழல்வீர்கள்? இகழ்வார் இன்னும் எவ்வளவு காலம் இகழ்ச்சி செய்வதில் மகிழ்ச்சி காண்பர்? முட்டாள்கள் இன்னும் எவ்வளவு காலம் அறிவை வெறுப்புடன் நோக்குவார்கள்?
23 என் எச்சரிக்கையைக் கவனத்தில் கொள்வீர்களானால், நான் என் உள்ளத்திலிருப்பதை உங்களுக்குச் சொல்வேன்; என் செய்தியை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
24 நான் கூப்பிட்டேன், நீங்களோ செவிசாய்க்க மறுத்தீர்கள்; உங்களை அரவணைக்கக் கையை நீட்டினேன்; எவரும் கவனிக்கவில்லை.
25 என் அறிவுரைகளுள் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் புறக்கணித்தீர்கள்.
26 ஆகையால், உங்களுக்கு இடுக்கண் வரும்போது, நான் நகைப்பேன்; உங்களுக்குப் பெருங்கேடு விளையும்போது ஏளனம் செய்வேன்.
27 பேரிடர் உங்களைப் புயல் போலத் தாக்கும்போது, இடுக்கண் உங்களைச் சுழற்காற்றென அலைக்கழிக்கும்போது, துன்பமும் துயரமும் உங்களைச் சூழ்ந்து கொள்ளும்போது, நான் எள்ளி நகையாடுவேன்.
28 அப்பொழுது, நீங்கள் என்னை நோக்கி மன்றாடுவீர்கள்; நான் பதிலளிக்க மாட்டேன்; ஆவலோடு என்னை நாடுவீர்கள்; ஆனால் என்னைக் காணமாட்டீர்கள்.
29 ஏனெனில், நீங்கள் அறிவை வெறுத்தீர்கள்; ஆண்டவரிடம் அச்சம் கொள்வதில் உங்களுக்கு விருப்பமில்லை.
30 நீங்கள் என் அறிவுரையை ஏற்கவில்லை; என் எச்சரிக்கை அனைத்தையும் அவமதித்தீர்கள்.
31 நீங்கள் உங்கள் நடத்தையின் பயனைத் துய்ப்பீர்கள்; சூழ்ச்சி செய்து நீங்களே சலித்துப் போவீர்கள்.
32 பேதையரின் தவறுகள் அவர்களையே கொன்றுவிடும்; சிறுமதியோரின் தற்பெருமை அவர்களை அழித்துவிடும்.
33 எவர் எனக்குச் செவி கொடுக்கின்றாரோ அவர் தீங்கின்றி வாழ்வார்; தீமை வருகையிலும் அச்சமின்றி அவர் மன அமைதியுடன் இருப்பார்.”
1:1 1 அர 4:32.
1:7 யோபு 28:28; திபா 111:10; நீமொ 9:10.
1:20-21 நீமொ 8:1-3.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-1
|
629 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
|
ஞானம் அளிக்கும் பயன்
1 பிள்ளாய்! நீ ஞானத்திற்குச் செவி சாய்த்து, மெய்யறிவில் உன் மனத்தைச் செலுத்தி,
2 என் மொழிகளை ஏற்று, என் கட்டளைகளைச் சிந்தையில் இருத்திக்கொள்.
3 ஆம், நீ உணர்வுக்காக வேண்டுதல் செய்து, மெய்யறிவுக்காக உரக்க மன்றாடு.
4 செல்வத்தை நாடுவதுபோல் ஞானத்தை நாடி, புதையலுக்காகத் தோண்டும் ஆர்வத்தோடு அதைத் தேடு.
5 அப்பொழுது, ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் இன்னதென்பதை உணர்ந்து கொள்வாய். கடவுளை அறியும் அறிவைப் பெறுவாய்.
6 ஏனெனில் ஞானத்தை அளிப்பவர் ஆண்டவரே, அறிவிற்கும் விவேகத்திற்கும் ஊற்றானவர் அவரே.
7 நேர்மையாளருக்கு அவர் துணை செய்யக் காத்திருக்கின்றார்; மாசற்றோருக்குக் கேடயமாய் இருக்கின்றார்.
8 நேர்மையாளரின் பாதைகளை அவர் பாதுகாக்கின்றார்; தம் அடியாரின் வழிகளைக் காவல் செய்கின்றார்.
9 எனவே, நீ நீதியையும் நியாயத்தையும் நேர்மையையும் நலமார்ந்த நெறிகள் அனைத்தையும் தெரிந்துகொள்வாய்.
10 ஞானம் உன் உள்ளத்தில் குடிபுகும்; அறிவு உன் இதயத்திற்கு இன்பம் தரும்.
11 அப்பொழுது, நுண்ணறிவு உனக்குக் காவலாய் இருக்கும்; மெய்யறிவு உன்னைக் காத்துக்கொள்ளும்.
12 நீ தீய வழியில் செல்லாமலும், வஞ்சகம் பேசும் மனிதரிடம் அகப்படாமலும் இருக்கும்படி, அது உன்னைப் பாதுகாக்கும்.
13 நேர்மையான வழியை விட்டு விலகி, இருளான பாதையில் நடப்போரின் கைக்கு உன்னைத் தப்புவிக்கும்.
14 அவர்கள் தீமை செய்து களிக்கின்றவர்கள்.
15 அவர்களுடைய வழிகள் கோணலானவை. அவர்களுடைய பாதைகள் நேர்மையற்றவை.
16 ஞானம் உன்னைக் கற்புநெறி தவறியவளிடமிருந்தும், தேனொழுகப் பேசும் விலைமகளிடமிருந்தும் விலகியிருக்கச் செய்யும்.
17 அவள் இளமைப் பருவத்தில் தான் மணந்த கணவனைக் கைவிட்டவள்; தான் கடவுளோடு செய்த உடன்படிக்கையை மறந்தவள்.
18 அவளது வீடு சாவுக்கு வழிகாட்டிக்கொண்டிருக்கின்றது; அவளின் வழிகள் இறந்தோரிடத்திற்குச் செல்கின்றன.
19 அவளிடம் செல்லும் எவனும் திரும்பி வருவதேயில்லை; வாழ்வெனும் பாதையை அவன் மீண்டும் அடைவதில்லை.
20 எனவே, நீ நல்லாரின் நெறியில் நடப்பாயாக! நேர்மையாளரின் வழியைப் பின்பற்றுவாயாக!
21 நேர்மையாளரே உலகில் வாழ்வர்; மாசற்றாரே அதில் நிலைத்திருப்பர்.
22 பொல்லாரோ உலகினின்று பூண்டோடு அழிவர்; நயவஞ்சகர் அதனின்று வேரோடு களைந்தெறியப்படுவர்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-2
|
630 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
|
ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை
1 பிள்ளாய்! என் அறிவுரையை மறவாதே; என் கட்டளைகளை உன் இதயத்தில் இருத்திக்கொள்:
2 அவை உனக்கு நீண்ட ஆயுளையும் பல்லாண்டு வாழ்வையும் நிலையான நலன்களையும் அளிக்கும்.
3 அன்பும் வாய்மையும் உன்னிடம் குன்றாதிருப்பதாக! அவற்றைக் கழுத்தில் அணிகலனாய்ப் பூண்டுகொள்.
4 அப்பொழுது, நீ கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவனாவாய்; அவர்களது நல்லெண்ணத்தையும் பெறுவாய்.
5 முழு மனத்தோடு ஆண்டவரை நம்பு; உன் சொந்த அறிவாற்றலைச் சார்ந்து நில்லாதே.
6 நீ எதைச் செய்தாலும் ஆண்டவரை மனத்தில் வைத்துச் செய்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செம்மையாக்குவார்.
7 உன்னை நீ ஒரு ஞானி என்று எண்ணிக்கொள்ளாதே; ஆண்டவருக்கு அஞ்சித் தீமையை அறவே விலக்கு.
8 அப்பொழுது உன் உடல், நலம் பெறும்; உன் எலும்புகள் உரம் பெறும்.
9 உன் செல்வத்தைக்கொண்டு அவரைப் போற்று; உன் விளைச்சல்கள் எல்லாவற்றின் முதற்பலனையும் ஆண்டவருக்குக் காணிக்கையாக்கு.
10 அப்பொழுது உன் களஞ்சியங்கள் நிறைந்திருக்கும்; குடங்களில் திராட்சை இரசம் வழிந்தோடும்.
11 பிள்ளாய்! ஆண்டவர் உன்னைக் கண்டித்துத் திருத்துவதை வேண்டாமென்று தள்ளி விடாதே; அவர் கண்டிக்கும்போது அதைத் தொல்லையாக நினையாதே.
12 தந்தை தன் அருமை மகனை கண்டிப்பதுபோல், ஆண்டவர் தாம் யாரிடம் அன்புகொண்டிருக்கின்றாரோ அவர்களைக் கண்டிக்கின்றார்.
ஞானத்தின் மேன்மை
13 ஞானத்தைத் தேடி அடைந்தோர் நற்பேறு பெற்றோர்; மெய்யறிவை அடைந்தோர் நற்பேறு பெற்றோர்;
14 வெள்ளியைவிட ஞானமே மிகுநலன் தருவது; பொன்னைவிட ஞானத்தால் வரும் செல்வம் மேலானது.
15 ஞானம் பவளத்தைவிட விலைமதிப்புள்ளது; உன் அரும்பொருள் எதுவும் அதற்கு நிகராகாது.
16 அதன் வலக்கை நீடித்த ஆயுளை அருள்கின்றது; அதன் இடக்கை செல்வமும் மேன்மையும் கிடைக்கச் செய்கின்றது.
17 அதன் வழிகள் இன்பம் தரும் வழிகள்; அதன் பாதைகள் யாவும் நலம் தருபவை.
18 தன்னை அடைந்தோர்க்கு அது வாழ்வெனும் கனிதரும் மரமாகும்; அதனைப் பற்றிக்கொள்வோர் நற்பேறு பெற்றோர்.
19 ஆண்டவர் ஞானத்தால் பூவுலகிற்கு அடித்தளமிட்டார்; விவேகத்தால் வானங்களை நிலைபெறச் செய்தார்.
20 அவரது அறிவாற்றலால் நிலத்தின் அடியிலிருந்து நீர் பொங்கி எழுகின்றது; வானங்கள் மழையைப் பொழிகின்றன.
21 பிள்ளாய்! விவேகத்தையும் முன்மதியையும் பற்றிக்கொள்; இவற்றை எப்போதும் உன் கண்முன் நிறுத்தி வை.
22 இவை உனக்கு உயிராகவும், உன் கழுத்துக்கு அணிகலனாகவும் இருக்கும்.
23 நீ அச்சமின்றி உன் வழியில் நடப்பாய்; உன் கால் ஒருபோதும் இடறாது.
24 நீ படுக்கப்போகும் போது உன் மனத்தில் அச்சமிராது; உன் படுக்கையில் நீ அயர்ந்து தூங்குவாய்.
25 பொல்லார் திகிலடைவதையும் அவர்களுக்கு அழிவு வருவதையும் காணும்போது நீ அஞ்சாதே.
26 ஆண்டவர் உனக்குப் பக்கத்துணையாய் இருப்பார்; உன் கால் கண்ணியில் சிக்காதபடி உன்னைக் காப்பார்.
27 உன்னால் நன்மை செய்யக் கூடுமாயின், தேவைப்படுபவர்க்கு அந்த நன்மையைச் செய்ய மறுக்காதே.
28 அடுத்திருப்பார் உன்னிடம் கேட்கும் பொருளை நீ வைத்துக் கொண்டே, ‘போய் வா, நாளைக்குத் தருகிறேன்’ என்று சொல்லாதே.
29 அடுத்திருப்பார்க்கு தீங்கிழைக்கத் திட்டம் தீட்டாதே; அவர்கள் உன் அருகில் உன்னை நம்பி வாழ்கின்றவர்கள் அல்லவா?
30 ஒருவர் உனக்கு ஒரு தீங்கும் செய்யாதிருக்கும்போது, அவரை வீண் வாதத்திற்கு இழுக்காதே.
31 வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே.
32 ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்.
33 பொல்லாரது வீட்டின்மேல் ஆண்டவரது சாபம் விழும்; அவருக்கு அஞ்சி நடப்போரின் உறைவிடங்களில் அவரது ஆசி தங்கும்.
34 செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குவார்; தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்;
35 ஞானமுள்ளவர்கள் தங்களுக்குரிய நன்மதிப்பைப் பெறுவார்கள்; அறிவிலிகளோ இகழப்படுவார்கள்.
3:4 லூக் 2:52.
3:7 உரோ 12:16.
3:11 யோபு 5:17; எபி 12:5-6.
3:12 திவெ 3:19.
3:34 யாக் 4:6; 1 பேது 5:5.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-3
|
631 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
|
ஞானத்தினால் வரும் நன்மைகள்
1 பிள்ளைகளே! தந்தையின் போதனைக்குச் செவிசாயுங்கள்; மெய்யுணர்வை அடையும்படி அதில் கவனம் செலுத்துங்கள்.
2 நான் உங்களுக்கு நற்போதனை அளிக்கின்றேன்; நான் கற்பிப்பதைப் புறக்கணியாதீர்கள்;
3 நான் என் தந்தையின் அருமை மைந்தனாய், தாய்க்குச் செல்லப் பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4 அப்பொழுது என் தந்தை எனக்குக் கற்பித்தது இதுவே: “நான் சொல்வதை உன் நினைவில் வை; என் கட்டளைகளை மறவாதே; நீ வாழ்வடைவாய்.
5 ஞானத்தையும் மெய்யுணர்வையும் தேடிப் பெறு; நான் சொல்வதை மறந்துவிடாதே; அதற்கு மாறாக நடவாதே.
6 ஞானத்தைப் புறக்கணியாதே; அது உன்னைப் பாதுகாக்கும்; அதை அடைவதில் நாட்டங்கொள்; அது உன்னைக் காவல் செய்யும்.
7 ஞானத்தைத் தேடிப் பெறுவதே ஞானமுள்ள செயல்; உன் சொத்து எல்லாம் கொடுத்தாயினும் மெய்யுணர்வைத் தேடிப் பெறு.
8 அதை உயர்வாய்க் கொள்; அது உன்னை உயர்த்தும்; அதை நீ தழுவிக்கொள்; அது உன்னை மாண்புறச் செய்யும்.
9 அது உன் தலையில் மலர் முடியைச் சூட்டும்; மணிமுடி ஒன்றை உனக்கு அளிக்கும்.”
10 பிள்ளாய்! கவனி; நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
11 ஞானத்தின் வழிகளை உனக்குக் கற்பித்திருக்கின்றேன்; நேரிய பாதைகளில் உன்னை நடத்தி வந்தேன்.
12 நீ நடக்கும்போது உன் கால் சறுக்காது ; நீ ஓடினாலும் இடறி விழமாட்டாய்.
13 பெற்ற நற்பயிற்சியில் உறுதியாக நிலைத்துநில்; அதை விட்டுவிடாதே; அதைக் கவனமாய்க் காத்துக்கொள்; அதுவே உனக்கு உயிர்.
14 பொல்லார் செல்லும் பாதையில் செல்லாதே; தீயோர் நடக்கும் வழியில் நடவாதே.
15 அதன் அருகில் செல்லாதே; அதில் கால்வைக்காதே; அதை விட்டு விலகி உன் வழியே செல்.
16 தீமை செய்தாலன்றி அவர்களுக்குத் தூக்கம் வராது; யாரையாவது கீழே வீழ்த்தினாலன்றி அவர்களுக்கு உறக்கம் வராது.
17 தீவினையே அவர்கள் உண்ணும் உணவு; கொடுஞ் செயலே அவர்கள் பருகும் பானம்.
18 நேர்மையாளரின் பாதை வைகறை ஒளி போன்றது; அது மேன்மேலும் பெருகி நண்பகலாகின்றது.
19 பொல்லாரின் பாதையோ காரிருள் போன்றது; தாங்கள் எதில் இடறி விழுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது.
20 பிள்ளாய்! என் வார்த்தைகளுக்குச் செவிகொடு; நான் சொல்வதைக் கவனி.
21 உன் கவனத்தினின்று அவை விலகாதிருக்கட்டும்; உன் உள்ளத்தில் அவற்றைப் பதித்துவை.
22 அவற்றைத் தேடிப் பெறுவோருக்கு அவை உயிரளிக்கும்; அவர்களுக்கு உடல் நலமும் தரும்.
23 விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய்; ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்.
24 நாணயமற்ற பேச்சு உன் வாயில் வரக்கூடாது; வஞ்சகச் சொல் உன் வாயில் எழக்கூடாது.
25 உன் கண்கள் நேரே பார்க்கட்டும்; எதிரே இருப்பதில் உன் பார்வையைச் செலுத்து.
26 நேர்மையான பாதையில் நட; அப்பொழுது, உன் போக்கு இடரற்றதாயிருக்கும்.
27 வலப்புறமோ இடப்புறமோ திரும்பாதே; தீமையின் பக்கமே காலெடுத்து வைக்காதே.
4:26 எபி 12:13.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-4
|
632 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
|
கற்புநெறி தவறாமை
1 பிள்ளாய்! என் ஞானத்தில் உன் கவனத்தைச் செலுத்து; என் அறிவுரைக்குச் செவிகொடு.
2 அப்பொழுது விவேகத்துடன் நடந்துகொள்வாய்; அறிவு உன் நாவைக் காவல்செய்யும்.
3 விலைமகளின் பேச்சில் தேன் ஒழுகும்; அவள் உதடுகள் வெண்ணெயினும் மிருதுவானவை.
4 ஆனால் அவள் உறவின் விளைவோ எட்டியினும் கசக்கும்; இருபுறமும் கூரான வாள் வெட்டுதலை ஒக்கும்
5 அவள் கால் சாவை நோக்கிச் செல்லும்; அவள் காலடி பாதாளத்திற்கு இறங்கிச் செல்லும்.
6 வாழ்வுக்குச் செல்லும் பாதையை அவள் கவனத்தில் கொள்வதில்லை; அவளுடைய வழிகள் மாறிகொண்டே இருக்கும்; அதைப்பற்றி அவளுக்குக் கவலையே இல்லை.
7 ஆகையால், பிள்ளாய்!* எனக்குச் செவிகொடு; நான் சொல்வதற்கேற்ப நடக்க மறவாதே.
8 அவளிடமிருந்து நெடுந்தொலையில் இருந்துகொள்; அவள் வீட்டு வாயிற்படியை மிதியாதே.
9 இல்லையேல், பிறர் முன்னிலையில் உன் மானம் பறிபோகும்; கொடியவர் கையில் உன் உயிரை இழப்பாய்.
10 அன்னியர் உன் சொத்தைத் தின்று கொழுப்பார்கள்; நீ பாடுபட்டுச் சம்பாதித்தது வேறொரு குடும்பத்திற்குப் போய்ச் சேரும்.
11 நீ எலும்பும் தோலுமாய் உருக்குலைந்து போவாய்; உன் வாழ்க்கையின் இறுதியில் கலங்கிப் புலம்புவாய்.
12 “ஐயோ, அறிவுரையை நான் வெறுத்தேனே! கண்டிக்கப்படுவதைப் புறக்கணித்தேனே!
13 கற்பித்தவர்களின் சொல்லைக் கேளாமற் போனேனே! போதித்தவர்களுக்குச் செவிகொடாமல் இருந்தேனே!
14 இப்பொழுது நான் மீளாத் துயரத்தில் மூழ்கியவனாய், மக்கள் மன்றத்தில் மானமிழந்து நிற்கிறேனே” என்று அலறுவாய்.
பிறன்மனைவி நயவாமை
15 உன் சொந்த நீர்த்தொட்டியிலுள்ள நீரையே குடி; உன் வீட்டுக் கிணற்றிலுள்ள நல்ல தண்ணீரையே பருகு
16 உன் ஊற்றுநீர் வெளியே பாயவேண்டுமா? உன் வாய்க்காலின் நீர் வீதியில் வழிந்தோடவேண்டுமா?
17 அவை உனக்கே உரியவையாயிருக்கட்டும்; அன்னியரோடு அவற்றைப் பகிர்ந்துகொள்ளாதே.
18 உன் நீருற்று ஆசி பெறுவதாக! இளமைப் பருவத்தில் நீ மணந்த பெண்ணோடு மகிழ்ந்திரு.
19 அவளே உனக்குரிய அழகிய பெண் மான், எழில்மிகு புள்ளிமான்; அவளது மார்பகம் எப்போதும் உனக்கு மகிழ்வூட்டுவதாக! அவளது அன்பு உன்னை எந்நாளும் ஆட்கொண்டிருப்பதாக!
20 மகனே, விலைமகளைப் பார்த்து நீ மயங்குவதேன்? பரத்தையை நீ அணைத்துக்கொள்வதேன்?
21 மனிதரின் வழிகளுள் ஒன்றும் ஆண்டவர் கண்களுக்குத் தப்புவதில்லை; அவர்களுடைய பாதைகளையெல்லாம் அவர் சீர்தூக்கிப் பார்க்கின்றார்.
22 பொல்லார் தம் குற்றச் செயல்களில் தாமே சிக்கிக்கொள்வர்; தம் பாவ வலையில் தாமே அகப்பட்டுக்கொள்வர்.
23 கட்டுப்பாடு இல்லாததால் அவர்கள் மடிந்து போவர்; தம் மதிகேட்டின் மிகுதியால் கெட்டழிவர்.
5:7 “பிள்ளாய்!” என்பது “பிள்ளைகளே!” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-5
|
633 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
|
சில நல்லுரைகள்
1 பிள்ளாய்! உன் அடுத்திருப்பவரின் கடனுக்காக நீ பொறுப்பேற்றிருந்தால், அல்லது அன்னியர் ஒருவருக்காகப் பிணையாய் நின்றால்,
2 அல்லது உன் வார்த்தைகளை முன்னிட்டு ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டால், அல்லது உன் வாய்ச் சொல்லிலேயே நீ பிடிபட நேரிட்டால்,
3 பிள்ளாய்! உன்னை விடுவித்துக் கொள்ள இப்படிச் செய்; நீ அடுத்திருப்பவரின் கையில் அகப்பட்டுக் கொண்டதால், விரைந்தோடிச் சென்று அவரை வருந்தி வேண்டிக்கொள்.
4 அதைச் செய்யும் வரையில் கண்ணயராதே; கண் இமைகளை மூடவிடாதே.
5 நீ *வேடன் கையில்* அகப்பட்ட மான் போலிருப்பாய்; கண்ணியில் சிக்கிய குருவிக்கு ஒப்பாவாய்; உன்னைத் தப்புவித்துக் கொள்ளப்பார்.
சோம்பேறியாயிராதே
6 சோம்பேறிகளே, எறும்பைப் பாருங்கள்; அதன் செயல்களைக் கவனித்து ஞானமுள்ளவராகுங்கள்;
7 அதற்குத் தலைவனுமில்லை, கண்காணியுமில்லை, அதிகாரியுமில்லை.
8 எனினும், அது கோடையில் உணவைச் சேர்த்துவைக்கும்; அறுவடைக் காலத்தில் தானியத்தைச் சேகரிக்கும்.
9 சோம்பேறிகளே, எவ்வளவு நேரம் படுத்திருப்பீர்கள்? தூக்கதிலிருந்து எப்போது எழுந்திருப்பீர்கள்?
10 இன்னும் சிறிது நேரம் தூங்குங்கள், இன்னும் சிறிது நேரம் உறங்குங்கள்; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திருங்கள்.
11 வறுமை உங்கள் மீது வழிப்பறிக் கள்வரைப்போல் பாயும்; ஏழ்மைநிலை உங்களைப் போர்வீரரைப்போல் தாக்கும்.
கயவனின் போக்கு
12 போக்கிரி அல்லது கயவன் தாறுமாறாகப் பேசிக்கொண்டு அலைவான்.
13 அவன் கண் சிமிட்டுவான்; காலால் செய்தி தெரிவிப்பான்; விரலால் சைகை காட்டுவான்.
14 அவன் தன் வஞ்சக உள்ளத்தில் சதித்திட்டம் வகுப்பான்; எங்கும் சண்டை மூட்டிவிடுவான்.
15 ஆகையால் அவனுக்கு எதிர்பாராத நேரத்தில் கேடு வரும்; திடீரென்று அழிந்துபோவான்; மீளமாட்டான்.
கடவுளுக்கு வெறுப்பானவை
16 ஆண்டவர் வெறுப்பவை ஆறு, ஏழாவது ஒன்றும் அவரது வெறுப்புக்கு உரியது.
17 அவை இறுமாப்புள்ள பார்வை, பொய்யுரைக்கும் நாவு, குற்றமில்லாரைக் கொல்லும் கை,
18 சதித்திட்டங்களை வகுக்கும் உள்ளம், தீங்கிழைக்க விரைந்தோடும் கால்,
19 பொய்யுரைக்கும் போலிச்சான்று, நண்பரிடையே சண்டை மூட்டிவிடும் செயல் என்பவையே.
கற்புநெறி வழுவாமை
20 பிள்ளாய்! உன் தந்தையின் கட்டளையைக் கடைப்பிடி; தாயின் அறிவுரையைப் புறக்கணியாதே.
21 அவற்றை எப்போதும் உன் இதயத்தில் இருத்திவை; உன் கழுத்துக்கு மாலையென அணிந்து கொள்.
22 நீ நடந்து செல்லும்போது அவை உனக்கு வழிகாட்டும்; நீ படுத்திருக்கும்போது அவை உன்னைக் காவல் காக்கும்; விழித்திருக்கும்போது உன்னுடன் உரையாடும்.
23 கட்டளை என்பது ஒரு விளக்கு; அறிவுரை என்பது ஒளி; கண்டித்தலும் தண்டித்தலும் நல்வாழ்வுக்கு வழி.
24 அவை உன்னை விலைமகளிடமிருந்து, தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து விலகியிருக்கச் செய்யும்.
25 உன் உள்ளத்தால் அவளது அழகை இச்சியாதே; அவள் கண்ணடித்தால் மயங்கிவிடாதே.
26 விலைமகளின் விலை ஒரு வேளைச் சோறுதான்; ஆனால், பிறன் மனையாளோ உயிரையே வேட்டையாடி விடுவாள்.
27 ஒருவன் தன் மடியில் நெருப்பை வைத்திருந்தால், அவனது ஆடை எரிந்துபோகாமலிருக்குமா?
28 ஒருவன் தழல்மீது நடந்து சென்றால், அவன் கால் வெந்துபோகாமலிருக்குமா?
29 பிறன்மனை நயப்பவன் செயலும் இத்தகையதே; அவளைத் தொடும் எவனும் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
30 திருடன் தன் பசியைத் தீர்க்கத் திருடினால், அவனை மக்கள் பெருங்குற்றவாளியெனக் கருதாதிருக்கலாம்.
31 ஆனால், அவன் பிடிபடும்போது ஏழு மடங்காகத் திருப்பிக்கொடுக்க வேண்டும்; தன் குடும்பச் சொத்து முழுவதையுமே கொடுத்துவிட நேரிடும்.
32 கற்புநெறி தவறுகிறவன் மதிகேடன். அவ்வாறு செய்வோன் தன்னையே அழித்துக்கொள்கின்றான்.
33 அவன் நைய நொறுக்கப்படுவான், பழிக்கப்படுவான்; அவனது இழிவு ஒருபோதும் மறையாது.
34 ஏனெனில், தன் மனைவி தனக்கே உரியவள் என்னும் உணர்ச்சி ஒரு கணவனிடம் சினவெறியை உண்டாக்கும்; பழி தீர்த்துக்கொள்ள வாய்ப்புக் கிடைக்கும் நாளில், அவன் இரக்கம் காட்டமாட்டான்;
35 சரியீடு எதுவும் ஏற்றுக் கொள்ளமாட்டான்; எவ்வளவு பொருள் கொடுத்தாலும் அவன் சினம் தணியாது.
6:10-11 நீமொ 24:33-34.
6:5 ‘கையில்’ என்பது எபிரேய பாடம்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-6
|
634 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
|
1 என் பிள்ளையே, என் வார்த்தைகளை மனத்தில் இருத்து; என் கட்டளைகளைச் செல்வமெனப் போற்று.
2 என் கட்டளைகளைக் கடைப்பிடி, நீ வாழ்வடைவாய்; என் அறிவுரையை உன் கண்மணிபோல் காத்துக்கொள்வாய்.
3 அவற்றை உன் விரல்களில் அணியாகப் பூண்டு கொள்; உன் இதயப் பலகையில் பொறித்துவை.
4 ஞானத்தை உன் சகோதரி என்று சொல்; உணர்வை உன் தோழியாகக் கொள்.
5 அப்பொழுது நீ விலைமகளிடமிருந்து தப்புவாய்; தேனொழுகப் பேசும் பரத்தையிடமிருந்து காப்பாற்றப்படுவாய்.
6 ஒரு நாள் நான் என் வீட்டின் பலகணியருகில் நின்றுகொண்டு, பின்னல் தட்டி வழியாகப் பார்த்தபோது,
7 பேதைகளிடையே ஓர் இளைஞனைக் கண்டேன்; மதிகேடனான அவனை இளைஞரிடையே பார்த்தேன்.
8 அவன் தெரு வழியாக நடந்துபோய், அதன் கோடியில் அவள் வீட்டை நோக்கிச் சென்றான்.
9 அது மாலை நேரம், பொழுது மயங்கும் வேளை; அந்த இரவிலே, இருட்டும் நேரத்திலே,
10 அங்கே ஒரு பெண் அவனைக் காண வந்தாள். அவள் விலைமகளைப் போல உடுத்தி, வஞ்சக நெஞ்சினளாய் வந்தாள்.
11 அவள் வெளிப் பகட்டு மிகுந்தவள்; வெட்கத்தை ஒழித்தவள்; வீட்டில் அவளது கால் தங்காது.
12 அவள் நடுத்தெருவிலும் நிற்பாள்; முச்சந்தியிலும் நிற்பாள்; மூலைமுடுக்குகளிலும் பதுங்கியிருப்பாள்.
13 அவள் அவனைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டு, நாணமிலாத் துணிவுடன் அவனைப் பார்த்து,
14 “நான் பலிகளைப் படைக்க வேண்டியிருந்தது; இன்று நான் என் பொருத்தனைகளை நிறைவேற்றிவிட்டேன்;
15 அதனாலேதான் உன்னைக் காணவந்தேன்; உன்னை ஆவலோடு தேடினேன்; கண்டுகொண்டேன்.
16 என் மஞ்சத்தை மெத்தையிட்டு அழகுசெய்திருக்கின்றேன்; எகிப்து நாட்டு வண்ணக் கம்பளம் விரித்திருக்கின்றேன்.
17 வெள்ளைப்போளம், சந்தனம், இலவங்கக் கலவையிட்டு, என் படுக்கையை மணம் கமழச் செய்திருக்கின்றேன்.
18 நீ வா; விடியற்காலம் வரையில் இன்பத்தில் மூழ்கியிருப்போம்; இரவு முழுவதும் காதலாட்டத்தில் களித்திருப்போம்.
19 என் கணவன் வீட்டில் இல்லை. நெடுந்தொலைப் பயணம் செய்யப் புறப்பட்டுப் போய் விட்டான்.
20 அவன் பை நிறையப் பணம் கொண்டுபோயிருக்கின்றான்; முழுநிலா நாள்வரையில் திரும்பிவர மாட்டான்” என்று சொன்னாள்.
21 இவ்வாறு பல இனிய சொற்களால் அவனை அவள் இணங்கச் செய்தாள்; நயமாகப் பேசி அவனை மயக்கிவிட்டாள்.
22 உடனே அவனும் உணர்வு மழுங்கினவனாய் அவள் பின்னே சென்றான்; வெட்டுவதற்காக இழுத்துச் செல்லப்படும் காளைமாட்டைப் போலவும், வலையில் சிக்கிக் கொள்ளப் போகும் கலைமானைப் போலவும்,
23 கண்ணியில் விழப்போகும் பறவையைப் போலவும் சென்றான். ஓர் அம்பு அவன் நெஞ்சில் ஊடுருவிப் பாயும் வரையில், தன் உயிர் அழிக்கப்படும் என்பதை அறியாமலே சென்றான்.
24 ஆகையால் பிள்ளைகளே! எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைக் கவனியுங்கள்.
25 உங்கள் மனத்தை அவள் வழிகளில் செல்லவிடாதீர்கள்; மயக்கங்கொண்டு அவள் பாதைகளில் நடவாதீர்கள்.
26 அவள் பலரை குத்தி வீழ்த்தியிருக்கின்றாள்; வலிமை வாய்ந்தோரையும் அவள் கொன்றிருக்கின்றாள்.
27 அவள் வீடு பாதாளத்திற்குச் செல்லும் வழி; சாவுக்கு இட்டுச் செல்லும் பாதை.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-7
|
635 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
|
ஞானத்திற்குப் புகழுரை
1 ஞானம் அழைக்கிறதன்றோ? மெய்யறிவு குரல் எழுப்புகிறதன்றோ?
2 வழியருகிலுள்ள உயரமான இடத்திலும், தெருக்கள் கூடும் இடத்திலும் அது நிற்கின்றது.
3 நகருக்குள் நுழையும் வாயிலருகே, நகர வாயிலை நெருங்கும் இடத்திலே, அது நின்று கொண்டு இவ்வாறு உரத்துச் சொல்லுகிறது:
4 மானிடரே! உங்களுக்கே நான் இதை உரைக்கின்றேன்; ஒவ்வொரு மனிதருக்கும் சொல்லுகின்றேன்.
5 முன்மதியற்றோரே! விவேகமாயிருக்க கற்றுக்கொள்ளுங்கள்; மதிகேடரே! உணர்வைப் பெறுங்கள்.
6 நான் சொல்வதைக் கவனியுங்கள்; மிகத் தெளிவாகச் சொல்கின்றேன்; நான் ஒளிவு மறைவின்றிக் கூறுகின்றேன்.
7 ஏனெனில், என் வாய் உண்மையே பேசும்; பொல்லாங்கான பேச்சு என் நாவுக்கு அருவருப்பு.
8 என் வார்த்தைகளெல்லாம் நேர்மையானவை; உருட்டும் புரட்டும் அவற்றில் இல்லை.
9 உணர்வாற்றல் உள்ளோர்க்கு அவையாவும் மிகத் தெளிவு; அறிவை அடைந்தோர்க்கு அவை நேர்மையானவை.
10 வெள்ளியைவிட மேலாக என் அறிவுரையை ஏற்றுக்கொள்ளுங்கள்; பசும் பொன்னைவிட மேலாக அறிவை விரும்புங்கள்.
11 பவளத்திலும் ஞானமே சிறந்தது; நீங்கள் விரும்புவது எதுவும் அதற்கு நிகராகாது.
12 நானே ஞானம்; நான் விவேகத்தோடு வாழ்கின்றேன்; அறிவையும் சிந்திக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளேன்.
13 ஆண்டவருக்கு அஞ்சுவது தீமையைப் பகைக்கச் செய்யும்; ஆணவத்தையும் இறுமாப்பையும் தீமையையும் உருட்டையும் புரட்டையும் நான் வெறுக்கின்றேன்.
14 திட்டம் இடுவதும் நானே; இட்டதைச் செய்வதும் நானே. உணர்வும் நானே; வலிமையும் எனதே.
15 அரசர் ஆட்சி செலுத்துவதும் என்னால்; ஆட்சியாளர் சட்டம் இயற்றுவதும் என்னால்.
16 அதிகாரிகள் ஆளுவதும் என்னாலே; உலக நீதிபதிகள் அனைவரும் உண்மைத் தீர்ப்பு வழங்குவதும் என்னாலே,
17 எனக்கு அன்பு காட்டுவோர்க்கு நானும் அன்புகாட்டுவேன்; என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள்.
18 என்னிடம் செல்வமும் மேன்மையும், அழியாப் பொருளும் அனைத்து நலமும் உண்டு.
19 என்னை அடைந்தவர்கள் பெறும் பயன் பசும்பொன்னைவிடச் சிறந்தது; என்னை அடைந்தவர்களுக்குக் கிடைக்கும் விளைச்சல் தூய வெள்ளியை விட மேலானது.
20 நான் நேர்மையான வழியைப் பின்பற்றுகின்றேன்; என் பாதை முறையான பாதை.
21 என்மீது அன்புகூர்வோருக்குச் செல்வம் வழங்குகின்றேன்; அவர்களுடைய களஞ்சியங்களை நிரப்புகின்றேன்.
22 ஆண்டவர் தம் *படைப்பின் தொடக்கத்திலேயே,* தொல்பழங்காலத்தில் எதையும் படைக்கும் முன்னரே, என்னைப்படைத்தார்.
23 தொடக்கத்தில், பூவுலகு உண்டாகு முன்னே, நானே முதன்முதல் நிலைநிறுத்தப்பெற்றேன்.
24 கடல்களே இல்லாத காலத்தில் நான் பிறந்தேன்; பொங்கி வழியும் ஊற்றுகளும் அப்போது இல்லை.
25 மலைகள் நிலைநாட்டப்படுமுன்னே, குன்றுகள் உண்டாகுமுன்னே நான் பிறந்தேன்.
26 அவர் பூவுலகையும் பரந்த வெளியையும் உண்டாக்குமுன்னே, உலகின் முதல்மண்துகளை உண்டாக்குமுன்னே நான் பிறந்தேன்.
27 வானத்தை அவர் நிலைநிறுத்தினபோது, கடல்மீது அடிவானத்தின் எல்லையைக் குறித்த போது, நான் அங்கே இருந்தேன்.
28 உயரத்தில் மேகங்களை அவர் அமைத்த போது, ஆழ்கடலில் ஊற்றுகளை அவர் தோற்றுவித்தபோது, நான் அங்கே இருந்தேன்.
29 அவர் கடலுக்கு எல்லையை ஏற்படுத்தி, அந்த எல்லையைக் கடல் நீர் கடவாதிருக்கும்படி செய்தபோது, பூவுலகிற்கு அவர் அடித்தளமிட்டபோது,
30 நான் அவர் அருகில் அவருடைய சிற்பியாய்* இருந்தேன்; நாள்தோறும் அவருக்கு மகிழ்ச்சியூட்டினேன்; எப்போதும் அவர் முன்னிலையில் மகிழ்ந்து செயலாற்றினேன்.
31 அவரது பூவுலகில் எங்கும் மகிழ்ந்து செயலாற்றினேன்; மனித இனத்தோடு இருப்பதில் மகிழ்ச்சி கண்டேன்.
32 எனவே, பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வழிகளைப் பின்பற்றுகின்றோர் நற்பேறு பெற்றோர்!
33 நற்பயிற்சி பெற்று ஞானத்தை அடையுங்கள்; அதைப் புறக்கணியாதீர்கள்.
34 என் வாயிற்படியில் நாள்தோறும் விழிப்புள்ளோராய் நின்று, என் கதவு நிலையருகில் காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கின்றோர் நற்பேறு பெற்றோர்!
35 என்னைத் தேடி அடைவோர் வாழ்வடைவர்; ஆண்டவரின் கருணை அவர்களுக்குக் கிடைக்கும்.
36 என்னைத் தேடி அடையாதோர் தமக்குக் கேடு வருவித்துக் கொள்வர்; என்னை வெறுக்கும் அனைவரும் சாவை விரும்புவோர் ஆவர்!
8:1-3 நீமொ 1:20-21.
8:22 திவெ 3:14.
8:22 ‘வழியின் தொடக்கம்’ என்பது எபிரேய பாடம்.
8:30 ‘செல்லப்பிள்ளையாய்’ என்றும் பொருள்படும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-8
|
636 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
|
ஞானமும் மதிகேடும்
1 ஞானம் தனக்கு ஒரு வீட்டைக் கட்டியிருக்கின்றது; அதற்கென ஏழு தூண்களைச் செதுக்கியிருக்கின்றது.
2 அது தன் பலிவிலங்குகளைக் கொன்று, திராட்சை இரசத்தில் இன்சுவை சேர்த்து, விருந்து ஒன்றிற்கு ஏற்பாடு செய்தது;
3 தன தோழிகளை அனுப்பிவைத்தது; நகரின் உயரமான இடங்களில் நின்று,
4 “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்று அறிவிக்கச் செய்தது; மதிகேடருக்கு அழைப்பு விடுத்தது;
5 “வாருங்கள், நான் தரும் உணவை உண்ணுங்கள்; நான் கலந்துவைத்துள்ள திராட்சை இரசத்தைப் பருகுங்கள்;
6 பேதைமையை விட்டுவிடுங்கள்; அப்பொழுது வாழ்வீர்கள்; உணர்வை அடையும் வழியில் செல்லுங்கள்” என்றது.
7 இகழ்வாரைத் திருத்த முயல்வோர் அடைவது ஏளனமே; பொல்லாரைக் கண்டிப்போர் பெறுவது வசைமொழியே.
8 இகழ்வாரைக் கடிந்து கொள்ளாதே; அவர்கள் உன்னைப் பகைப்பார்கள். ஞானிகளை நீ கடிந்து கொண்டால், அவர்கள் உன்னிடம் அன்புகொள்வர்.
9 ஞானிகளுக்கு அறிவுரை கூறு; அவர்களது ஞானம் வளரும்; நேர்மையாளருக்குக் கற்றுக் கொடு; அவர்களது அறிவு பெருகும்.
10 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம்; தூயவராகிய அவரைப்பற்றிய உணர்வே மெய்யுணர்வு.
11 என்னால் உன் வாழ்நாள்கள் மிகும்; உன் ஆயுட்காலம் நீடிக்கும்.
12 நீங்கள் ஞானிகளாய் இருந்தால், அதனால் வரும் பயன் உங்களுக்கே உரியதாகும்; நீங்கள் ஏளனம் செய்வோராய் இருந்தால், அதனால் வரும் விளைவை நீங்களே துய்ப்பீர்கள்.
13 மதிகேடு என்பதை வாயாடியான, அறிவில்லாத, எதற்கும் கவலைப்படாத ஒரு பெண்ணுக்கு ஒப்பிடலாம்.
14 அவள் தன் வீட்டு வாயிற்படியிலோ, நகரின் மேடான இடத்திலோ உட்கார்ந்துகொண்டு,
15 தம் காரியமாக வீதியில் செல்லும் வழிப்போக்கரைப் பார்த்து,
16 “அறியாப் பிள்ளைகளே, இங்கே வாருங்கள்” என்பாள்; மதிகேடரைப் பார்த்து,
17 “திருடின தண்ணீரே இனிமை மிகுந்தது; வஞ்சித்துப் பெற்ற உணவே இன்சுவை தருவது” என்பாள்.
18 அந்த ஆள்களோ, அங்கே செல்வோர் உயிரை இழப்பர் என்பதை அறியார்; அவளுடைய விருந்தினர் பாதாளத்தில் கிடக்கின்றனர் என்பது அவர்களுக்குத் தெரியாது.
9:10 யோபு 28:28; திபா 111:10; நீமொ 1:7.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-9
|
637 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
|
சாலமோனின் நீதிமொழிகள்
1 சாலமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள பிள்ளைகள் தம் தந்தையை மகிழ்விக்கின்றனர்; அறிவற்ற மக்களோ தம் தாய்க்குத் துயரமளிப்பர்.
2 தீய வழியில் ஈட்டிய செல்வம் பயன் தராது; நேர்மையான நடத்தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.
3 நல்லாரை ஆண்டவர் பசியால் வருந்த விடார். ஆனால் பொல்லார் விரும்புவதை அவர்களுக்குக் கொடுக்க மாட்டார்.
4 வேலை செய்யாத கை வறுமையை வருவிக்கும்; விடாமுயற்சியுடையோரின் கையோ செல்வத்தை உண்டாக்கும்.
5 கோடைக் காலத்தில் விளைச்சலைச் சேர்த்துவைப்போர் மதியுள்ளோர்; அறுவடைக் காலத்தில் தூங்குவோர் இகழ்ச்சிக்குரியர்.
6 நேர்மையாளர்மீது ஆசி பொழியும்; பொல்லார் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.
7 நேர்மையாளரைப்பற்றிய நினைவு ஆசி விளைவிக்கும்; பொல்லாரின் பெயரோ அழிவுறும்.
8 ஞானமுள்ளோர் அறிவுரைகளை மனமார ஏற்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
9 நாணயமாக நடந்து கொள்வோர் இடையூறின்றி நடப்பர்; கோணலான வழியைப் பின்பற்றுவோரோ வீழ்த்தப்படுவர்.
10 தீய நோக்குடன் கண்ணடிப்போர் தீங்கு விளைவிப்பர்; பிதற்றும் மூடரோ வீழ்ச்சியுறுவர்.
11 நல்லாரின் சொற்கள் வாழ்வளிக்கும் ஊற்றாகும்; பொல்லாரின் பேச்சிலோ கொடுமை மறைந்திருக்கும்.
12 பகைமை சண்டைகளை எழுப்பிவிடும்; தனக்கிழைத்த தீங்கு அனைத்தையும் அன்பு மன்னித்து மறக்கும்.
13 விவேகமுள்ளவர்களின் சொற்களில் ஞானம் காணப்படும்; மதிகெட்டவர்களின் முதுகிற்குப் பிரம்பே ஏற்றது.
14 ஞானமுள்ளோர் அறிவைத் தம்மகத்தே வைத்திருப்பர்; மூடர் வாய் திறந்தால் அழிவு அடுத்து வரும்.
15 செல்வரின் சொத்து அவருக்கு அரணாயிருக்கும்; ஏழையரின் வறுமை நிலை அவர்களை இன்னும் வறியோராக்கும்.
16 நேர்மையாளர் தம் வருமானத்தை வாழ்வதற்குப் பயன்படுத்துகின்றனர்; பொல்லாதவரோ தம் ஊதியத்தைத் தீய வழியில் செலவழிக்கின்றனர்.
17 நல்லுரையை ஏற்போர் மெய் வாழ்வுக்கான பாதையில் நடப்பர்; கண்டிப்புரையைப் புறக்கணிப்போரோ தவறான வழியில் செல்வர்.
18 உள்ளத்தின் வெறுப்பை மறைப்போர் பொய்யர்; வசைமொழி கூறுவோர் மடையர்.
19 மட்டுக்கு மிஞ்சின பேச்சு அளவற்ற தீமைகளை விளைவிக்கும்; தம் நாவை அடக்குவோர் விவேகமுள்ளோர்.
20 நல்லாரின் சொற்கள் தூய வெள்ளிக்குச் சமம்; பொல்லாரின் எண்ணங்களோ பதருக்குச் சமம்.
21 நல்லாரின் சொற்கள் பிறருக்கு உணவாகும்; செருக்கு நிறைந்தோரின் மதிகேடு அவர்களை அழித்துவிடும்.
22 ஆண்டவரின் ஆசி செல்வம் அளிக்கும்; அச்செல்வம் துன்பம் கலவாது அளிக்கப்படும் செல்வம்.
23 தீங்கிழைப்பது மதிகெட்டோர்க்கு மகிழ்ச்சிதரும் விளையாட்டு; ஞானமே மெய்யறிவு உள்ளோர்க்கு மகிழ்ச்சி தரும்.
24 பொல்லார் எதற்கு அஞ்சுவரோ, அதுவே அவர்களுக்கு வரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போர் எதை விரும்புகின்றனரோ, அது அவர்களுக்குக் கிடைக்கும்.
25 சுழல் காற்றக்குப்பின் பொல்லார் இராமற்போவர்; கடவுளுக்கு அஞ்சி நடப்ப வர்களோ என்றுமுள்ள அடித்தளம் போல நிற்பார்கள்.
26 பல்லுக்குக் காடியும் கண்ணுக்குப் புகையும் எப்படி இருக்குமோ, அப்படியே சோம்பேறிகள் தங்களைத் தூது அனுப்பினோர்க்கு இருப்பர்.
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஆயுளை நீடிக்கச் செய்யும்; பொல்லாரின் ஆயுட்காலம் குறுகிவிடும்.
28 நல்லார் தாம் எதிர்ப்பார்ப்பதைப் பெற்று மகிழ்வர்; பொல்லார் எதிர்பார்ப்பதோ அவர்களுக்குக் கிட்டாமற் போகும்.
29 ஆண்டவரின் வழி நல்லார்க்கு அரணாகும்; தீமை செய்வோர்க்கோ அது அழிவைத் தரும்.
30 கடவுளுக்கு அஞ்சி நடப்போரை ஒருபோதும் அசைக்க இயலாது; பொல்லாரோ நாட்டில் குடியிருக்கமாட்டார்.
31 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் வாயினின்று ஞானம் பொங்கி வழியும்; வஞ்சகம் பேசும் நா துண்டிக்கப்படும்.
32 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் சொல்லில் இனிமை சொட்டும்; பொல்லாரின் சொற்களிலோ வஞ்சகம் பொங்கி வழியும்.
10:12 யாக் 5:20; 1 பேது 4:8.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-10
|
638 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
|
1 கள்ளத் துலாக்கோல் ஆண்டவருக்கு அருவருப்பானது; முத்திரையிட்ட படிக்கல்லே அவர் விரும்புவது.
2 இறுமாப்பு வரும் முன்னே, இகழ்ச்சி வரும் பின்னே; தன்னடக்கம் இருக்குமாயின் ஞானமும் இருக்கும்.
3 நேர்மையானவர்களின் நல்லொழுக்கம் அவர்களை வழிநடத்தும்; நம்பிக்கைத் துரோகி களின் வஞ்சகம் அவர்களைப் பாழ்படுத்தும்.
4 கடவுளின் சினம் வெளிப்படும் நாளில் செல்வம் பயன்படாது; நேர்மையான நடத் தையோ சாவுக்குத் தப்புவிக்கும்.
5 குற்றமில்லாதவர்களின் நேர்மை அவர்களின் வழியை நேராக்கும்; பொல்லார் தம் பொல்லாங்கினால் வீழ்ச்சியுறுவர்.
6 நேர்மையானவர்களின் நீதி அவர்களைப் பாதுகாக்கும்; நம்பிக்கைத் துரோகிகள் தங்கள் சதித்திட்டத்தில் தாங்களே பிடிபடுவார்கள்.
7 பொல்லார் எதிர்நோக்கியிருந்தது அவர்கள் சாகும்போதும் கிட்டாமலே மறைந்துபோகும்; அவர்கள் எதிர் நோக்கியிருந்த செல்வம் கிடைக்காமற்போகும்.
8 கடவுளுக்கு அஞ்சி நடப்போர் துயரினின்று விடுவிக்கப்படுவர்; பொல்லார் அதில் அகப்பட்டு உழல்வர்.
9 இறைப்பற்று இல்லாதோர் தம் பேச்சினால் தமக்கு அடுத்திருப்பாரைக் கெடுப்பர்; நேர்மையாளர் தம் அறிவாற்றலால் விடுவிக்கப் பெறுவர்.
10 நல்லாரின் வாழ்க்கை வளமடைந்தால், ஊரார் மகிழ்ந்து கொண்டாடுவர்; பொல்லார் அழிந்தால் அவர்களிடையே ஆர்ப்பரிப்பு உண்டாகும்.
11 நேர்மையாளரின் ஆசியாலே, நகர் வளர்ந்தோங்கும்; பொல்லாரின் கபடப் பேச்சாலே அது இடிந்தழியும்.
12 அடுத்திருப்போரை இகழ்தல் மதிகெட் டோரின் செயல்; நாவடக்கம் விவேகமுள்ளோரின் பண்பு;
13 வம்பளப்போர் மறைசெய்திகளை வெளிப் படுத்திவிடுவர்; நம்பிக்கைக்குரியோரோ அவற்றை மறைவாக வைத்திருப்பர்.
14 திறமையுள்ள தலைமை இல்லையேல், நாடு வீழ்ச்சியுறும்; அறிவுரை கூறுவார் பலர் இருப்பின், அதற்குப் பாதுகாப்பு உண்டு.
15 அன்னியருக்காகப் பிணை நிற்போர் அல்லற்படுவர்; பிணை நிற்க மறுப்போர்க்கு இன்னல் வராது.
16 கனிவுள்ள பெண்ணுக்குப் புகழ் வந்து சேரும்; முயற்சியுள்ள ஆணுக்குச் செல்வம் வந்து குவியும்.
17 இரக்கமுள்ளோர் தம் செயலால் தாமே நன்மை அடைவர்; இரக்கமற்றோரோ தமக்கே ஊறு விளைவித்துக் கொள்வர்.
18 பொல்லார் பெறும் ஊதியம் ஊதியமல்ல; நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்.
19 நீதியில் கருத்தூன்றியோர் நீடு வாழ்வர்; தீமையை நாடுவோர் சாவை நாடிச் செல்வர்.
20 வஞ்சக நெஞ்சினர் ஆண்டவரின் இகழ்ச்சிகுரியவர்; மாசற்றோர் அவரது மகிழ்ச்சிக்கு உரியவர்.
21 தீயோர் தண்டனைக்குத் தப்பமாட்டார்; இது உறுதி; கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் மரபினருக்கோ தீங்கு வராது.
22 மதிகெட்டு நடக்கும் பெண்ணின் அழகு பன்றிக்குப் போட்ட வைர மூக்குத்தி.
23 கடவுளுக்கு அஞ்சி நடப்போரின் விருப்பங்கள் எப்போதும் நன்மையே பயக்கும்; எதிர்காலம் பற்றிப் பொல்லார் கொள்ளும் நம்பிக்கை தெய்வ சினத்தையே வருவிக்கும்.
24 அளவின்றிச் செலவழிப்போர் செல்வ ராவதும் உண்டு; கஞ்சராய் வாழ்ந்து வறியவ ராவதும் உண்டு.
25 ஈகைக் குணமுள்ளோர் வளம்பட வாழ்வர்; குடிநீர் கொடுப்போர் குடிநீர் பெறுவர்.
26 தானியத்தைப் பதுக்கி வைப்போரை மக்கள் சபிப்பர்; தானியத்தை மக்களுக்கு விற்போரோ ஆசி பெறுவர்.
27 நன்மையானதை நாடுவோர், கடவுளின் தயவை நாடுவோர் ஆவர்; தீமையை நாடுவோரிடம் தீமைதான் வந்தடையும்.
28 தம் செல்வத்தை நம்பி வாழ்வோர் சருகென உதிர்வர்; கடவுளை நம்பி வாழ்வோரோ தளிரெனத் தழைப்பர்.
29 குடும்பச் சொத்தைக் கட்டிக் காக்காத வர்களுக்கு எஞ்சுவது வெறுங்காற்றே; அத் தகைய மூடர்கள் ஞானமுள்ளோர்க்கு அடிமை யாவர்.
30 நேர்மையான நடத்தை வாழ்வளிக்கும் மரத்திற்கு இட்டுச் செல்லும்; ஆனால், வன்செயல்* உயிராற்றலை இழக்கச் செய்யும்.
31 நேர்மையாளர் இவ்வுலகிலேயே கைம்மாறு பெறுவர் எனில், பொல்லாரும் பாவிகளும் தண்டனை பெறுவது திண்ணமன்றோ!
11:31 1 பேது 4:18.
11:30 “வன்செயல்” என்பது “ஞானி” என்று எபிரேய பாடத்தில் உள்ளது.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-11
|
639 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
|
1 அறிவை விரும்புவோர் கண்டித்துத் திருத்தப்படுவதை விரும்புவர்; கண்டிக்கப்படுவதை வெறுப்போர் அறிவற்ற விலங்குகள் ஆவர்.
2 நல்லார் ஆண்டவரது கருணை பெறுவர். தீய சூழ்ச்சி செய்வோரை அவர் கண்டிப்பார்.
3 பொல்லாங்கு செய்து எவரும் நிலைத்த தில்லை; நேர்மையாளரின் வேரை அசைக்க முடியாது.
4 பண்புள்ள மனைவி தன் கணவனுக்கு மணிமுடியாவாள்; இழிவு வருவிப்பவள் அவனுக்கு எலும்புருக்கி போலிருப்பாள்.
5 நேர்மையானவர்களின் கருத்துகள் நியாயமானவை; பொல்லாரின் திட்டங்கள் வஞ்சகமானவை.
6 பொல்லாரின் சொற்கள் சாவுக்கான கண்ணிகளாகும்; நேர்மையாளரின் பேச்சு உயிரைக் காப்பாற்றும்.
7 பொல்லார் வீழ்த்தப்பட்டு வழித் தோன்ற லின்றி அழிவர்; நல்லாரின் குடும்பமோ நிலைத்திருக்கும்.
8 மனிதர் தம் விவேகத்திற்கேற்ற புகழைப் பெறுவர்; சீர்கெட்ட இதயமுடையவரோ இகழ்ச்சியடைவர்.
9 வீட்டில் உணவில்லாதிருந்தும் வெளியில் பகட்டாய்த் திரிவோரைவிட, தம் கையால் உழைத்து எளிய வாழ்க்கை நடத்துவோரே மேல்.
10 நல்லார் தம் கால்நடைகளையும் பரிவுடன் பாதுகாப்பர். பொல்லாரின் உள்ளமோ கொடுமை வாய்ந்தது.
11 உழுது பயிரிடுவோர் மிகுந்த உணவு பெறுவர்; வீணானவற்றைத் தேடியலைவோர் அறிவு அற்றவர்.
12 தீயோரின் கோட்டை களிமண்ணெனத் தூளாகும். நேர்மையாளரின் வேரோ உறுதியாக ஊன்றி நிற்கும்.
13 தீயோர் தம் பொய்யுரையில் தாமே சிக்கிக் கொள்வர்; நேர்மையாளர் நெருக்கடியான நிலையிலிருந்தும் தப்புவர்.
14 ஒருவர் தம் பேச்சினால் நற்பயன் அடைகிறார்; வேறோருவர் தம் கைகளினால் செய்த வேலைக்குரிய பயனைப் பெறுகிறார்.
15 மூடர் செய்வது அவர்களுக்குச் சரியெனத் தோன்றும்; ஞானிகள் பிறருடைய அறிவுரைக்குச் செவி கொடுப்பர்.
16 மூடர் தம் எரிச்சலை உடனடியாக வெளியிடுவர்; விவேகிகளோ பிறரது இகழ்ச் சியைப் பொருட்படுத்தார்.
17 உண்மை பேசுவோர் நீதியை நிலை நாட்டுவோர்; பொய்யுரைப்போரோ வஞ்சகம் நிறைந்தோர்.
18 சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்; ஞானிகளின் சொற்களோ புண்களை ஆற்றும்.
19 ஒருவர் உரைக்கும் உண்மை என்றும் நிலைக்கும்; பொய்யுரையின் வாழ்வோ இமைப்பொழுதே.
20 சதித்திட்டம் வகுப்போர் தம்மையே ஏமாற்றிக்கொள்வர்; பொது நலத்தை நாடுவோர் மகிழ்ச்சியோடிருப்பர்.
21 நல்லாருக்கு ஒரு கேடும் வராது; பொல்லாரின் வாழ்க்கையோ துன்பம் நிறைந்த தாய் இருக்கும்.
22 பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர் அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கின்ற வர்களை அவர் அரவணைக்கிறார்.
23 விவேகமுள்ளோர் தம் அறிவை மறைத்துக் கொள்வர்; மதிகேடரோ தம் மூட எண்ணத்தை விளம்பரப்படுத்துவர்.
24 ஊக்கமுடையோரின் கை ஆட்சி செய்யும்; சோம்பேறிகளோ அடிமை வேலை செய்வர்.
25 மனக்கவலை மனிதரின் இதயத்தை வாட்டும்; இன்சொல் அவர்களை மகிழ்விக்கும்.
26 சான்றோரின் அறிவுரை நண்பர்களுக்கு நன்மை பயக்கும்; பொல்லாரின் பாதை அவர்களைத் தவறிழைக்கச் செய்யும்.
27 சோம்பேறிகள் தாம் வேட்டையாடியதையும் சமைத்துண்ணார்; விடாமுயற்சியுடையவரோ அரும் பொருளையும் ஈட்டுவர்.
28 நேர்மையாளரின் வழி வாழ்வு தரும்; முரணானவரின் வழி சாவில் தள்ளும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-12
|
640 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 13 – திருவிவிலியம்
|
1 ஞானமுள்ள மகன் தந்தையின் நற்பயிற்சியை ஏற்றுக்கொள்வான்; இறுமாப்புள்ளவனோ கண்டிக்கப்படுதலைப் பொருட்படுத்த மாட்டான்.
2 நல்லோர் தம் சொற்களின் பலனான நல்லுணவை உண்கிறார்; வஞ்சகச் செயல்களே வஞ்சகர் உண்ணும் உணவு.
3 நாவைக் காப்பவர் தம் உயிரையே காத்துக் கொள்கிறார்; நாவைக் காவாதவன் கெட்டழிவான்.
4 சோம்பேறிகள் உண்ண விரும்புகிறார்கள், உணவோ இல்லை; ஊக்கமுள்ளவரோ உண்டு கொழுக்கிறார்.
5 நல்லார் பொய்யுரையை வெறுப்பர்; பொல்லாரோ வெட்கக்கேடாகவும் இழிவாகவும் நடந்துகொள்வர்.
6 நேர்மையாக நடப்போரை நீதி பாதுகாக்கும்; பொல்லாரை அவர்களின் பாவம் கீழே வீழ்த்தும்.
7 ஒன்றுமில்லாதிருந்தும் செல்வர் போல நடிப்போருமுண்டு; மிகுந்த செல்வமிருந்தும் ஏழைகள் போல நடிப்போருமுண்டு.
8 அச்சுறுத்தப்படும்போது செல்வர் தம் பொருளைத் தந்து தம் உயிரை மீட்டுக்கொள்வர். ஏழையோ அச்சுறுத்துதலுக்கு அஞ்சான்.
9 சான்றோரின் ஒளி சுடர்வீசிப் பெருகும்; பொல்லாரின் விளக்கோ அணைக்கப்படும்.
10 மூடன் தன் இறுமாப்பினாலே சண்டை மூட்டுவான்; பிறருடைய அறிவுரைகளை ஏற்போரிடம் ஞானம் காணப்படும்.
11 விரைவில் வரும் செல்வம் விரைவில் கரையும்; சிறிது சிறிதாய்ச் சேர்ப்பவனின் செல்வமே பெருகும்.
12 நெடுநாள் எதிர்நோக்கியிருப்பது மனச் சோர்வை உண்டாக்கும்; விரும்பியது கிடைப்பது சாகாவரத்தைப் பெறுவது போலாகும்.
13 அறிவுரையைப் புறக்கணிக்கிறவர் அழிவுறுவார்; போதிக்கிறவரின் சொல்லை மதிக்கிறவர் பயனடைவார்.
14 ஞானமுள்ளவரது அறிவுரை வாழ் வளிக்கும் ஊற்றாகும்; அது ஒருவரைச் சாவை விளைவிக்கும் கண்ணிகளிலிருந்து தப்புவிக்கும்.
15 நல்லறிவு மக்களின் நல்லெண்ணத்தை வருவிக்கும்; நம்பிக்கைத் துரோகமோ கேடு அடையச் செய்யும்.
16 கூர்மதிவாய்ந்த எவரும் நல்லறிவோடு நடந்துகொள்வார்; மூடர் தன் மடமையை விளம்பரப்படுத்துவார்.
17 தீய தூதர் தொல்லையில் ஆழ்த்துவார்; நல்ல தூதரோ அமைதி நிலவச் செய்வார்.
18 நல்லுரையைப் புறக்கணிப்பவர் வறுமையும் இகழ்ச்சியும் அடைவார்; கண்டிப்புரையை ஏற்பவரோ புகழடைவார்.
19 நினைத்தது கிடைப்பின் மனத்திற்கு இன்பம்; மூடர் தம் தீமையை வெறுக்காதிருப்பதும் இதனாலேயே.
20 ஞானமுள்ளவர்களோடு உறவாடுகிறவர் ஞானமுள்ளவராவர்; மூடரோடு நட்புக் கொள்கிறவர் துன்புறுவார்.
21 பாவிகளைத் தீங்கு பின்தொடரும்; கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு நற்பேறு கிட்டும்.
22 நல்லவரது சொத்து அவருடைய மரபினரைச் சேரும்; பாவி சேர்த்த செல்வமோ கடவுளுக்கு அஞ்சி நடப்போரை வந்தடையும்.
23 தரிசு நிலம் ஏழைக்கு ஓரளவு உணவு தரும்; ஆனால் நியாயம் கிடைக்காத இடத்தில் அதுவும் பறிபோகும்.
24 பிரம்பைக் கையாளதவர் தம் மகனை நேசிக்காதவர்; மகனை நேசிப்பவரோ அவனைத் தண்டிக்கத் தயங்கமாட்டார்.
25 கடவுளுக்கு அஞ்சி நடப்போருக்கு வயிறார உணவு கிடைக்கும்; பொல்லாரின் வயிறோ பசியால் வாடும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-13
|
641 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 14 – திருவிவிலியம்
|
1 ஞானமுள்ள பெண்கள் தம் இல் லத்தைக் கட்டியெழுப்புகின்றனர்; அறிவற்றவரோ தம் கைகளைக் கொண்டே அதை அழித்துவிடுகின்றனர் .
2 நேர்மையாக நடப்பவஆண்டவரிடம் அச்சம் கொள்வார்; நெறிதவறி நடப்பவன் அவரைப் பழிப்பான்.
3 மூடனது இறுமாப்பு அவனை மிகுதியாகப் பேசச் செய்யும்; ஞானமுள்ளவருடைய சொற் களோ அவரைப் பாதுகாக்கும்.
4 உழவு மாடுகள் இல்லையேல் விளைச்சலும் இல்லை; வலிமைவாய்ந்த காளைகள் மிகுந்த விளைச்சலை உண்டாக்கும்.
5 வாக்குப் பிறழாத சாட்சி பொய்யுரையான்; பொய்ச்சாட்சியோ மூச்சுக்கு மூச்சு பொய் பேசுவான்.
6 ஒழுங்கீனன் ஞானத்தைப் பெற முயலுவான்; ஆனால் அதை அடையான்; விவேகமுள்ளவரோ அறிவை எளிதில் பெறுவார்.
7 மூடனைவிட்டு விலகிச் செல்; அறிவுடைய பேச்சு அவனிடம் ஏது?
8 விவேகமுள்ளவரது ஞானம் அவரை நேர்வழியில் நடத்தும்; மதிகேடர் மடமை அவனை ஏமாறச் செய்யும்.
9 பாவக்கழுவாய் தேடுவதை மூடர் ஏளனம் செய்வர்; மூடரின் இல்லத்தில் குற்றப்பழி தங்கும்; நேர்மையாளரின் இல்லத்தில் மகிழ்ச்சி தவழும்.
10 ஒருவரது இன்பமோ துன்பமோ, அது அவருடையதே; வேறெவரும் அதைத் துய்க்க இயலாது.
11 பொல்லாரின் குடி வேரோடழியும்; நேர்மையாளரின் குடும்பம் தழைத்தோங்கும்.
12 ஒரு பாதை ஒருவருக்கு நல்வழி போலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.
13 நகைப்பிலும் துயரமுண்டு; மகிழ்ச்சியை அடுத்து வருத்தமும் உண்டு.
14 உண்மையற்றவர் தம் நடத்தையின் விளைவைத் துய்ப்பார்; நல்லவர் தம் செயல் களின் பயனை அடைவார்.
15 பேதை தன் காதில் விழும் எதையும் நம்புவார்; விவேகமுள்ளவரோ நேர்வழி கண்டு அவ்வழி செல்வார்.
16 ஞானமுள்ளவர் விழிப்புடைவர்; தீமையை விட்டு விலகுவர். மதிகேடரோ மடத்துணிச்சலுள்ளவர்; எதிலும் பாய்வார்.
17 எளிதில் சினங்கொள்பவர் மதிகேடா னதைச் செய்வார்; விவேகமுள்ளவரோ பொறுமை யோடிருப்பார்.
18 பேதையர் அறியாமையுடையோர்; விவேகமுள்ளவர்கள் சூடும் மணிமுடி அறிவாகும்.
19 தீயவர் நல்லார்முன் பணிவர்; பொல்லார் சான்றோரின் வாயிற்படியில் காத்து நிற்பர்.
20 ஓர் ஏழையை அடுத்திருப்போர் அவரை அருவருப்பானவர் எனக் கருதுவர்; செல்வ ருக்கோ நண்பர் பலர் இருப்பர்.
21 அடுத்திருப்பாரை இகழ்தல் பாவமாகும்; ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்.
22 தீய சூழ்ச்சி செய்பவர் தவறிழைப்பர் அன்றோ? நலம் தரும் திட்டம் வகுப்போர் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவர்.
23 கடும் உழைப்பு எப்போதும் பயன் தரும்; வெறும் பேச்சினால் வருவது வறுமையே.
24 ஞானிகளுக்கு அவர்களது விவேகமே மணிமுடி; மதிகேடருக்கு அவர்களது மடமை தான் பூமாலை.
25 உண்மைச் சான்று உயிரைக் காப்பாற்றும்; பொய்ச் சான்று ஏமாற்றத்தையே தரும்.
26 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவருக்குத் திடநம்பிக்கை அளிக்கும்; அவர் தம்முடைய பிள்ளைகளுக்கு அடைக்கலமா யிருப்பார்.
27 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் வாழ் வளிக்கும் ஊற்றாகும்; சாவை விளைவிக்கும் கண்ணிகளுக்கு அது மனிதரைத் தப்புவிக்கும்.
28 மக்கள் தொகை உயர, மன்னரின் மாண்பும் உயரும்; குடி மக்கள் குறைய, கோமகனும் வீழ்வான்.
29 பொறுமையுள்ளவர் மெய்யறிவாளர்; எளிதில், சினங்கொள்பவர் தம் மடமையை வெளிப்படுத்துவார்.
30 மன அமைதி உடல் நலம் தரும்; சின வெறியோ எலும்புருக்கியாகும்.
31 ஏழையை ஒடுக்குகிறவர் அவரை உண்டாக்கினவரை இகழ்கிறார்; வறியவருக்கு இரங்குகிறவர் அவரைப் போற்றுகிறார்.
32 பொல்லார் தம் தீவினையால் வீழ்ச்சி யுறுவார்; கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் சாகும் போதும் தம் நேர்மையைப் புகலிடமாகக் கொள்வார்.
33 விவேகமுள்ளவர் மனத்தில் ஞானம் குடிகொள்ளும்; மதிகேடரிடம் அதற்கு இடமே யில்லை.
34 நேர்மையுள்ள நாடு மேன்மை அடையும்; பாவம் நிறைந்த எந்த நாடும் இழிவடையும்.
35 கூர்மதியுள்ள பணியாளனுக்கு அரசர் ஆதரவு காட்டுவார்; தமக்கு இழிவு வருவிப்பவன்மீது சீற்றங்கொள்வார்.
14:12 நீமொ 16:25.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-14
|
642 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 15 – திருவிவிலியம்
|
1 கனிவான மறுமொழி கடுஞ்சினத் தையும் ஆற்றிவிடும்; கடுஞ்சொல்லோ சினத்தை எழுப்பும்..
2 ஞானமுள்ளவர்களின் நா அறிவை வழங்கும்; மதிகேடரின் வாயோ மடமையை வெளியிடும்.
3 ஆண்டவருடைய கண்கள் எங்கும் நோக்கும்; நல்லாரையும் பார்க்கும், பொல்லா ரையும் பார்க்கும்.
4 சாந்தப்படுத்தும் சொல், வாழ்வளிக்கும் மரம் போன்றது; வஞ்சகப் பேச்சாலோ மனமுடைந்துபோகும்.
5 தன் தந்தையின் நல்லுரையைப் புறக்கணிப்பவர் மூடர்; கண்டிப்புரையை ஏற்பவர் விவேகமுள்ளவர்.
6 நல்லாரின் வீட்டில் நிறைசெல்வம் நிலைத்திருக்கும்; பொல்லாரின் வருவாயால் விளைவது தொல்லையே.
7 ஞானிகளின் பேச்சு அறிவை வளர்க்கும் தன்மையது; மதிகேடரின் உள்ளம் அத் தகையதல்ல.
8 பொல்லார் செலுத்தும் பலி ஆண்டவருக்கு அருவருப்பைத் தரும்; நேர்மையானவர்களின் மன்றாட்டு அவருக்கு உகந்ததாயிருக்கும்.
9 பொல்லாரின் செயல்கள் ஆண்டவருக்கு அருவருப்பு; நீதியைப் பின்பற்றுவோரிடம் அவர் அன்புகொள்கிறார்.
10 நெறி தவறிச் செல்பவருக்குத் தண்டனை கடுமையாயிருக்கும்; கண்டிப்பை வெறுப்பவர் மரணம் அடைவார்.
11 பாதாளமும் படுகுழியுமே ஆண்டவர் பார்வையில் இருக்க, மனிதரின் உள்ளம் அவர் பார்வைக்கு மறைவாயிருக்குமா?
12 ஏளனம் செய்வோர் தம்மைக் கடிந்து கொள்பவரை விரும்பார்; ஞானமுள்ளவரிடம் செல்லவும் மாட்டார்;
13 அகமகிழ்ச்சியால் முகம் மலரும்; மனத் துயரால் உள்ளம் உடையும்.
14 விவேகமுள்ளவர் மனம் அறிவை நாடும்; மதிகேடர் வாய்க்கு மடமையே உணவு.
15 ஒடுக்கப்பட்டோருக்கு ஒவ்வொரு நாளும் தொல்லை நாளே; மனமகிழ்ச்சி உள்ளவருக்கோ எல்லா நாள்களும் விருந்து நாள்களே.
16 பெருஞ்செல்வமும் அதனோடு கவ லையும் இருப்பதைவிட, சிறுதொகையும் அதனோடு ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமும் இருப்பதே மேல்.
17 பகை நெஞ்சம் கொண்டோர் படைக்கும் நல்ல இறைச்சி உணவைவிட, அன்புள்ளம் உடையவர் அளிக்கும் மரக்கறி உணவே மேல்.
18 எளிதில் சினங்கொள்பவர் சண்டையை மூட்டுவார்; பொறுமை உடையவர் சண்டையைத் தீர்த்து வைப்பார்.
19 சோம்பேறிக்கு எவ்வழியும் முள் நிறைந்த வழியே; சுறுசுறுப்பானவர்கள் செல்லும் பாதையோ நெடுஞ்சாலையாகும்.
20 ஞானமுள்ள மகன் தன் தந்தையை மகிழ்விப்பான்; அறிவற்ற மகனோ தன் தாயை இகழ்வான்.
21 மூடன் தன் மடமை குறித்து மகிழ்ச்சி யடைகின்றான்; மெய்யறிவுள்ளவன் நேர்மை யானதைச் செய்வான்.
22 எண்ணிப் பாராமல் செய்யும் செயல் தோல்வியடையும்; பலர் திட்டமிட்டுச் செய்யும் செயல் வெற்றியடையும்.
23 தக்க மறுமொழி அளிப்பவன் மிக்க மகிழ்ச்சி அடைவான்; காலமும் வேளையும் அறிந்து சொல்லும் சொல்லால் வரும் மகிழ்ச்சி இன்னும் பெரிது.
24 விவேகமுள்ளவன் செல்லும் பாதை பாதாளத்திற்குச் செல்லும் பாதை அல்ல; அது வாழ்விற்குச் செல்லும் பாதையாகும்.
25 இறுமாப்புள்ளவர் வீட்டை ஆண்டவர் இடித்துத் தள்ளுவார்; கைம்பெண்ணினது நிலத்தின் எல்லைகளைப் பாதுகாப்பார்.
26 தீயோரின் எண்ணங்களை ஆண்டவர் அருவருக்கிறார்; மாசற்றோரின் சொற்களே உவப்பளிப்பவை.
27 வன்முறையில் செல்வம் சேர்ப்பவர் தம் குடும்பத்திற்குத் தொல்லை வருவிப்பார்; கைக்கூலி வாங்க மறுப்பவர் நீடித்து வாழ்வார்.
28 சான்றோர் எண்ணிப் பார்த்து மறுமொழி கூறுவர்; பொல்லாரின் வாய் தீய சொற்களைப் பொழியும்.
29 ஆண்டவர் பொல்லாருக்கு நெடுந் தொலையில் இருக்கிறார்; தமக்கு அஞ்சி நடப்போரின் மன்றாட்டுக்குச் செவிசாய்க்கிறார்.
30 இன்முகம் மனத்திற்கு மகிழ்ச்சி தரும்; நல்ல செய்தி உடம்புக்கு உரமளிக்கும்.
31 நலம் தரும் அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர், ஞானிகளோடு உறவு கொண்டி ருப்பதை விரும்புவார்.
32 கண்டிக்கப்படுவதைப் புறக்கணிக்கிறவர் தமக்கே கேடு வருவித்துக் கொள்கிறார்; அறிவுரையைக் கவனமாகக் கேட்பவர் உணர்வை அடைவார்.
33 ஆண்டவரிடம் அச்சம்கொள்ளுதல் ஞானத்தைத் தரும் பயிற்சி; மேன்மை அடையத் தாழ்மையே வழி.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-15
|
643 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 16 – திருவிவிலியம்
|
1 எண்ணங்களை மனிதர் எண்ணலாம்; ஆனால், எதற்கும் முடிவு கூறுபவர் ஆண்டவர்.
2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் களங்கமற்றதாய்த் தோன்றலாம்; ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
3 உன் செயல்களை ஆண்டவரிடம் ஒப்படை; அவற்றை வெற்றியுடன் நிறைவேற்றுவாய்.
4 ஆண்டவர் படைத்த ஒவ்வொன்றிற்கும் குறிக்கப்பட்ட ஒரு முடிவு உண்டு; பொல்லாத மனிதரை அழிவு நாளுக்கென்று குறித்து வைத்திருக்கிறார்.
5 இறுமாப்புள்ளவர் யாராயிருந்தாலும் அவரை ஆண்டவர் அருவருக்கிறார்; அவர் தண்டனைக்குத் தப்பவேமாட்டார்; இது உறுதி.
6 அன்பும் வாய்மையும் தீவினையைப் போக்கும். ஆண்டவரிடம் கொள்ளும் அச்சம் ஒருவரைத் தீமையினின்று விலகச் செய்யும்.
7 ஒருவருடைய செயல்கள் ஆண்டவருக்கு உகந்தவையாயிருக்குமானால், அவர் அவருடைய எதிரிகளையும் அவருக்கு நண்பராக்குவார்.
8 தீய வழியில் சம்பாதிக்கும் பெரும் பொருளைவிட, நேர்மையோடு ஈட்டும் சிறு தொகையே மேல்.
9 மனிதர் தம் வழியை வகுத்தமைக்கின்றார்; ஆனால் அதில் அவரை வழிநடத்துபவரோ ஆண்டவர்.
10 அரசன் வாயினின்று பிறக்கும் வாக்குப் பொய்க்காது; தீர்ப்பு வழங்கும் போது அவன் தவறு செய்யமாட்டான்.
11 நிறைகோலும் துலாக்கோலும் ஆண்ட வருக்கே உரியன; பையிலுள்ள எடைக்கற்க ளெல்லாம் அவரால் உண்டானவை.
12 தீச்செலை அரசர்கள் அருவருப்பார்கள்; ஏனெனில், நீதியே அரியணையின் உறுதியான அடிப்படையாகும்.
13 நேர்மையான பேச்சே அரசர் வரவேற்பார்; நேரியவற்றைச் சொல்லுகிறவரிடம் அவர் அன்புசெலுத்துவார்.
14 அரசரின் சீற்றம் மரண தூதன் போன்றது; ஆனால் ஞானமுள்ளவர் அதைத் தணித்துவிடுவார்.
15 அரசரின் முகமலர்ச்சி வாழ்வளிக்கும்; அவரது கருணை பருவமழை பொழியும் மேகம் போன்றது.
16 பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்.
17 நேர்மையானவர்கள் செல்லும் பாதை தீமையை விட்டு விலகிச் செல்லும்; தன் நடையைக் குறித்து அவ்வாறு விழிப்புட னிருப்பவன் உயிரைக் காப்பாற்றிக்கொள்வான்.
18 அழிவுக்கு முந்தியது அகந்தை; வீழ்ச்சிக்கு முந்தியது வீண்பெருமை.
19 மேட்டிமையானவர்களோடு கொள்ளை யடித்த பொருளைத் பகிர்ந்து மகிழ்வதைவிட, மனத்தாழ்மையுடன் சிறுமைப்படுகிறவர்களோடு கூடியிருப்பது நலம்.
20 போதனைக்குச் செவிகொடுப்பவன் வாழ்வடைவான்; ஆண்டவரை நம்புகிறவன் நற்பேறு பெற்றவன்.
21 ஞானமுள்ளவர் பகுத்துணரும் ஆற்றல் பெற்றவர் என்று கொள்ளப்படுவார்; இனிமை யாகப் பேசினால் சொல்வதை எவரும் ஏற்பர்.
22 விவேகமுள்ளவர்களுக்கு அவர்களது விவேகமே வாழ்வளிக்கும் ஊற்றாகும்; மூடருக்கு அவரது மடமையே போதிய தண்டனையாகும்.
23 ஞானமுள்ளவரின் மனம் அவரது பேச்சை விவேகமுள்ளதாக்கும்; அவருடைய சொற்களை எவரும் ஏற்பர்.
24 இன்சொற்கள் தேன்கூடு போன்றவை; மனத்திற்கு இனிமையானவை, உடலுக்கு நலம் தருபவை.
25 ஒரு பாதை ஒருவருக்கு நல்ல வழிபோலத் தோன்றலாம்; முடிவிலோ அது சாவுக்கு நடத்தும் பாதையாகிவிடும்.
26 உழைப்பவர் பசி அவரை மேலும் உழைக்கச் செய்கிறது; உண்ண விரும்பும் அவரது வயிற்றுப்பசி அவரை அதற்குத் தூண்டுகிறது.
27 பிறர் குற்றங்களைக் கிண்டிக் கிளறித் தூற்றுபவர் கயவர்; எரிக்கும் நெருப்புப் போன்றது அவரது நாக்கு.
28 கோணல் புத்திக்காரர் சண்டையை மூட்டிவிடுவர்; புறங்கூறுவோர் நண்பரைப் பிரித்துவிடுவர்.
29 வன்முறையாளர் அடுத்தவரை ஏமாற்றி, கெட்ட வழியில் அவரை நடக்கச் செய்வார்.
30 கண்ணை மூடிக்கொண்டிருப்போர் முறைகேடானதைச் சிந்திப்பர்; வாயை மூடிக் கொண்ருப்போர் தீமை செய்யத் திட்டமிடுவர்.
31 நரைமுடி மதிப்பிற்குரிய மணிமுடி; அது நேர்மையான நடத்தையால் வரும் பயன்.
32 வலிமை உடையவரைவிடப் பொறுமை உடையவரே மேலானவர்; நகரை அடக்குகிற வரைவிடத் தன்னை அடக்குகிறவரே சிறந்தவர்.
33 மடியிலுள்ள திருவுளச் சீட்டை ஒருவர் குலுக்கிப் போடலாம்; ஆனால், திருவுளத் தீர்ப்பை வெளிப்படுத்துபவர் ஆண்டவரே.
16:25 நீமொ 14:12.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-16
|
644 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 17 – திருவிவிலியம்
|
1 சண்டை நடக்கும் வீட்டில் விருந் துண்பதைவிட மன அமைதியோடு பழஞ்சோறு சாப்பிடுவதே மேல்..
2 முதலாளியின் மகன் ஒழுக்கங்கெட்ட வனாயிருந்தால், அறிவுள்ள வேலைக்காரன் அவனை அடக்கி ஆள்வான்; ஏனைய சகோதரர் களோடு உரிமைச் சொத்தில் பங்கு பெறுவான்.
3 வெள்ளியை உலைக்கலமும் பொன்னைப் புடக்குகையும் சோதித்துப் பார்க்கும்; உள்ளத் தைச் சோதித்துப் பார்ப்பவர் ஆண்டவர்.
4 தீங்கு விளைவிக்கும் பேச்சைத் தீயவன் விருப்பத்தோடு கேட்பான்; அவதூறான கூற்றினைப் பொய்யன் ஆவலோடு கேட்பான்.
5 ஏழையை ஏளனம் செய்கிறவர் அவரை உண்டாக்கினவரையே இகழுகிறார்; பிறருடைய இக்கட்டைப் பார்த்து மகிழ்கிறவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்.
6 முதியோருக்கு அவர்களுடைய பேரப்பிள் ளைகள் மணிமுடி போன்றவர்கள்; பிள்ளைகளின் பெருமை அவர்கள் தந்தையரே.
7 பயனுள்ள பேச்சுக்கும் மதிகேடனுக்கும் தொடர்பேயில்லை; பொய்யான பேச்சும் அரசனுக்குப் பொருந்தவே பொருந்தாது.
8 கைகூலி கொடுப்பவர் அதை ஒரு மந்திரத் தாயத்தைப் போலப் பயன்படுத்துகிறார்; அதைக் கொண்டு அவர் எடுத்த காரியமனைத் தையும் நிறைவேற்றுவார்.
9 குற்றத்தை மன்னிப்பவர் நட்பை நாடு கிறவர்; குற்றத்தைத் திரும்பத் திரும்ப நினைப்பூட்டுகிறவன் நட்பை முறிப்பான்.
10 சொரணை கெட்டவனுக்கு நூறு அடி கொடுப்பதைவிட உணர்வுள்ளவருக்கு ஒரு சொல் சொல்வது மிகுந்த பயனைத் தரும்.
11 தீயவர் கலகம் செய்வதையே நாடுவர்; அவர்களை அழிக்கக் கொடிய தூதர் அனுப் பப்படுவார்.
12 மடமையில் மூழ்கிக் கிடக்கும் மதிகேட னுக்கு எதிர்ப்படுவது, குட்டியைப் பறிகொடுத்த கரடிக்கு எதிர்ப்படுவதைவிடக் கேடானது.
13 நன்மை செய்தவருக்கு எவர் தீமை செய்கிறாரோ, அவர் வீட்டை விட்டுத் தீமை அகலாது.
14 வாக்குவாதத்தைத் தொடங்குவது மதகைத் திறந்துவிடுவது போலாகும்; வாக்குவாதம் மேலும் வளருமுன் அதை நிறுத்திவிடு.
15 குற்றம் செய்தவரை நேர்மையானவ ரென்றும் நேர்மையானவரைக் குற்றம் செய்தவ ரென்றும் தீர்ப்புக் கூறுகிறவர்களை ஆண்டவர் அருவருக்கிறார்.
16 மதிகேடர் கையில் பணம் இருப்பதால் பயனென்ன? ஞானத்தைப் பெற்றுக்கொள்ளச் செலவிடுவாரா? அவருக்குத் தான் மனமில் லையே!
17 நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்; இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான்.
18 அடுத்தவர் கடனுக்காகப் பொறுப்பேற்று, அவருக்காகப் பிணையாய் நிற்பவன் அறி வில்லாதவனே.
19 வாதத்தை நாடுகிறவன் குற்றப் பழியை நாடுகிறான்; இறுமாப்பான பேச்சு இக்கட்டை வருவிக்கும்.
20 கோணல் மதியுள்ளவர் நன்மையைக் காணார்; வஞ்சக நாவுள்ளவர் தீமையில் சிக்குவார்.
21 மதிகேடனைப் பெற்றவர் கவலைக்குள் ளாவார்; மூடருடைய தகப்பனுக்கு மகிழ்ச்சியே இராது.
22 மகிழ்வார்ந்த உள்ளம் நலமளிக்கும் மருந்து; வாட்டமுற்ற மனநிலை எலும்பையும் உருக்கிவிடும்.
23 கயவர் மறைவாகக் கைக்கூலி வாங்கிக் கொண்டு, நியாயத்தின் போக்கையே மாற்றிவிடுவார்.
24 உணர்வுள்ளவர் ஞானத்திலேயே கண்ணாயிருப்பார்; மதிகேடரின் கவனமோ நாற்புறமும் அலையும்.
25 மதிகெட்ட மகனால் தந்தைக்குக் கவலை; பெற்ற தாய்க்குத் துயரம்.
26 நேர்மையானவருக்கு அபராதம் விதிப்பதும் நன்றல்ல; மேன்மக்களுக்குக் கசையடி கொடுப்பதும் முறையல்ல.
27 தம் நாவைக் காத்துக்கொள்பவரே அறிவாளி; தம் உணர்ச்சிகளை அடக்கிக் கொள்பவரே மெய்யறிவாளர்.
28 பேசாதிருந்தால் மூடனும் ஞானமுள்ளவன் என்று கருதப்படுவான்; தன் வாயை மூடிக்கொள்பவன் அறிவுள்ளவன் எனப்படுவான்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-17
|
645 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 18 – திருவிவிலியம்
|
1 பிறரோடு ஒத்துவாழாதவர் தன்ன லத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்..
2 மதிகேடர் எதையும் அறிந்து கொள்ள விரும்பமாட்டார்; தம் மனத்திலுள்ளதை வெளியிடவே விரும்புவார்.
3 கயமையும் இழிவும் சேர்ந்தே வரும்; மதிப்பை இழப்பவர் இழிசொல்லுக்கு ஆளாவார்.
4 மனிதரின் சொற்கள் ஆழ்கடல் போன் றவை, அவை பாய்ந்தோடும் ஒரு நீரோட்டம், ஞானம் சுரக்கும் ஊற்று.
5 பொல்லாருக்குக் கருணை காட்டுவது முறையல்ல; நேர்மையானவருக்கு நீதி கிடைக் காமல் தடுப்பது நேரியதல்ல.
6 மதிகேடர் பேசத் தொடங்கினால் வாக்கு வாதம் பிறக்கும்; அவரது பேச்சு அவருக்கு அடிவாங்கித் தரும்.
7 மதிகேடர் தம் வாயால் அழிவார்; அவர் பேச்சு அவர் உயிருக்கே கண்ணியாகிவிடும்.
8 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பதுபோலாம்; அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.
9 தன் வேலையில் சோம்பலடைகிறவன் அழிவை உண்டாக்குகிறவருக்கு உடன் பிறந்தவன்.
10 ஆண்டவரது திருப்பெயர் உறுதியான கோட்டை; அவருக்கு அஞ்சி நடப்பவர் அதனுட் சென்று அடைக்கலம் பெறுவார்.
11 செல்வர் தம் செல்வத்தை அரண் என்றும் உரமான மதில் என்றும் எண்ணிக்கொள்கிறார்.
12 முதலில் வருவது இறுமாப்பு; அதனை அடுத்து வருவது அழிவு; மேன்மை அடையத் தாழ்மையே வழி.
13 வினாவைச் செவ்வனே கேட்பதற்குமுன் விடையளிப்பவர்களுக்கு அச்செயலே அவர் களுக்கு மடமையும் இகழ்ச்சியும் ஆகும்.
14 மன வலிமை நோயைத் தாங்கிக் கொள்ளும்; மனம் புண்பட்டால் அதைக் குணப்படுத்த யாரால் இயலும்?
15 உணர்வுள்ளவர் மனம் அறிவைப் பெருக்கிக்கொள்ளும்; ஞானமுள்ளவர் செவி அறிவுபெறுவதில் நாட்டங்கொள்ளும்.
16 ஒருவர் கொடுக்கும் அன்பளிப்பு அவருக்கு நல்வழி பிறக்கச் செய்யும், அவரைப் பெரியோர் முன் கொண்டு போய்ச் சேர்க்கும்.
17 வழக்கில் எதிரி வந்து குறுக்குக் கேள்வி கேட்கும் வரையில் வாதி கூறுவது நியாயமாகத் தோன்றும்.
18 திருவுளச் சீட்டு விவாதத்தை முடிவுறச் செய்யும்; வாதிடும் வலியோரின் வழக்கைத் தீர்க்கும்.
19 *உன் இனத்தானுக்கு உதவி செய், அவன் உனக்கு அரணாயிருப்பான்; அவனோடு நீ சண்டையிட்டால் அவன் கதவைத் தாழிட்டுக் கொள்வான்.*
20 ஒருவர் நாவினால் எதை விதைக்கிறாரோ அதையே உண்பார்; தம் பேச்சின் விளைவையே அவர் துய்த்தாக வேண்டும்.
21 வாழ்வதும் நாவாலே, சாவதும் நாவாலே; வாயாடுவோர் பேச்சின் பயனைத் துய்ப்பர்.
22 மனைவியை அடைகிறவன் நலமடைவான்; அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான்.
23 ஏழை கெஞ்சிக் கேட்பார்; செல்வரோ கடுகடுப்புடன் மறுமொழி கொடுப்பார்.
24 கேடு வருவிக்கும் நண்பர்களுமுண்டு; உடன் பிறந்தாரைவிட மேலாக உள்ளன்பு காட்டும் தோழருமுண்டு.
18:19 ‘அரண்சூழ் நகரைக் கைவசப்படுத்துவதைவிட, சினங்கொண்ட சகோதரனை தன் வசப்படுத்துவது கடினம்; அவனது பகைமை கோட்டைத் தாழ்ப்பாள்களைப் போன்றதாகும்’ என்பது வேறு பாடம்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-18
|
646 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 19 – திருவிவிலியம்
|
1 முறைகேடாய் நடக்கும் செல்வரை விட மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.
2 எண்ணிப் பாராமல் செயலில் இறங்கு வதால் பயனில்லை; பொறுமையின்றி நடப்பவர் இடறிவிழுவார்.
3 மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்வர்; ஆனால் அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர்.
4 பணம் உடையவருக்கு நண்பர் பலர் இருப்பர்; ஏழைக்கு இருக்கும் ஒரே நண்பரும் அவரை விட்டுப் பிரிவார்.
5 பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரையே கூறுபவர் தப்பித்துக் கொள்ளமாட்டார்.
6 வள்ளலின் தயவை நாடி வருவோர் பலர்; நன்கொடையாளருக்கு எல்லாருமே நண்பர்.
7 வறியவரை அவருடைய உடன்பிறந்தாரே வெறுப்பர்; அவருடைய நண்பர் அவரைவிட்டு அகலாதிருப்பரோ? அவர் கெஞ்சி வேண்டினாலும் அவர்கள் ஓடிவிடுவார்கள்.
8 ஞானத்தைப் பெறுதலே உண்மையான தன்னலமாகும்; மெய்யறிவைப் பேணிக்காப்பவர் நன்மை அடைவார்.
9 பொய்ச் சான்று சொல்பவர் தண்ட னைக்குத் தப்பமாட்டார்; பொய்யுரை கூறுபவர் அழிந்து போவார்.
10 அரண்மனை வாழ்வு அறிவிலிக்கு அடுத்ததல்ல; மேலானோரை ஆளும் பதவி அடிமைக்குச் சற்றும் ஏற்றதல்ல.
11 விவேகமுடையோர் எளிதில் சினமடையார்; குற்றம் பாராதிருத்தல் நன்மதிப்பைத் தரும்.
12 அரசரின் சீற்றம் சிங்கத்தின் முழக்கம் போன்றது; அவர் காட்டும் கருணை பயிர்மீது பெய்யும் பருவ மழைக்கு ஒப்பாகும்.
13 மதிகெட்ட மகனால் அவன் தந்தைக்குக் கேடு வரும்; மனைவியின் நச்சரிப்பு ஓட்டைக் கூரையினின்று ஓயாது ஒழுகும் நீர் போன்றது.
14 வீடும் சொத்தும் ஒருவனுக்கு வழிவழிச் சொத்தாய் வரலாம்; ஆனால், விவேகமுள்ள மனைவியோ ஆண்டவர் அளிக்கும் கொடை.
15 சோம்பல் ஒருவரை தூங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்; சோம்பேறி பசியால் வருந்துவார்.
16 திருக்கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறவர் தம்மைப் பாதுகாத்துக் கொள்கிறார்; ஆண்ட வருடைய வழிகளைக் கவனியாது நடப்பவர் அழிந்து போவார்.
17 ஏழைக்கு இரங்கி உதவிசெய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்து விடுவார்.
18 மகன் திருந்துவான் என்கிற நம்பிக்கை இருக்கும்போதே அவனைக் கண்டித்துத் திருத்து; இல்லாவிடில், அவன் கெட்டழிந்து போவதற்கு நீ காரணமாயிருப்பாய்.
19 கடுஞ்சினங்கொள்பவர் அதற்குரிய தண்டனையைப் பெறவேண்டும். இக்கட்டினின்று அவரை விடுவிப்பாயானால், மீண்டும் அவ்வாறே செய்ய வேண்டியிருக்கும்.
20 அறிவுரைக்குச் செவிகொடு, கண்டிப்பை ஏற்றுக்கொள்; பின்வரும் காலமெல்லாம் ஞானமுள்ளவனாய் வாழ்வாய்.
21 மனிதர் மனத்தில் எழும் எண்ணங்கள் ஏராளம்; ஆனால் ஆண்டவரது திட்டமே நிலைத்துநிற்கும்.
22 நற்பண்பாளர் வாக்குப் பிறழாமையை நாடுவர். பொய்யராயிருப்பதைவிட ஏழையா யிருப்பதே மேல்.
23 ஆண்டவருக்கு அஞ்சி நடந்தால் ஆயுள் நீடிக்கும்; அவ்வாறு நடப்பவருக்கு மனநிறைவு கிட்டும்; தீங்கும் அவரை அணுகாது.
24 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.
25 ஏளனம் செய்வோரை அடி; அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவரைக் கடிந்துகொள், அவர் மேலும் அறிவுடையவராவார்.
26 தந்தையைக் கொடுமைப்படுத்தித் தாயைத் துரத்திவிடும் மகன், வெட்கக்கேட்டையும் இழிவையும் வருவித்துக்கொள்வான்.
27 பிள்ளாய், நல்லுரை கேட்பதை நிறுத்தாதே; நிறுத்தினால் அறிவுதரும் நன்மொழிகளைப் புறக்கணிக்கிறவன் ஆவாய்.
28 தீக்குணமுள்ள சாட்சி நியாயத்தை மதிக்காதவர். பொல்லாரின் சான்று குற்றத்தைப் பெருகச் செய்யும்.
29 இகழ்வாருக்குத் தண்டனை காத்திருக் கிறது; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு காத் திருக்கிறது.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-19
|
647 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 20 – திருவிவிலியம்
|
1 திராட்சை இரசம் ஒழுங்கீனத்தைத் தோற்றுவிக்கும்; போதை தரும் குடி அமளியைத் தோற்றுவிக்கும்; அவற்றில் நாட்டங் கொள்பவர் மடையரே.
2 அரசரின் சினம் சிங்கத்தின் முழக்கத் திற்கு நிகர்; அரசருக்குச் சினமூட்டுகிறவர் தம் உயிரை இழப்பார்.
3 விவாதத்தில் ஈடுபடாதிருத்தல் மனித ருக்கு அழகு; ஏனெனில் மூடராயிருக்கும் எவரும் விவாதத்தை விரும்புகின்றனர்.
4 சோம்பேறி பருவத்தில் உழுது பயிர் செய்யமாட்டார்; அவர் அறுவடைக் காலத்தில் விளைவை எதிர்பார்த்து ஏமாறுவார்.
5 மனிதர் மனத்தில் மறைந்திருக்கும் எண்ணம் ஆழமான நீர்நிலை போன்றது; மெய்யறிவுள்ளவரே அதை வெளிவரச் செய்வார்.
6 பலர் தம்மை வாக்குப் பிறழாதவரெனக் கூறிக்கொள்வர்; ஆனால், நம்பிக்கைக்குரிய வரைக் கண்டுபிடிக்க யாரால் இயலும்?
7 எவர் களங்கமற்ற நேர்மையான வாழ்க்கை நடத்துகிறாரோ, அவருடைய பிள்ளைகள் அவரின் காலத்திற்குப்பின் நற்பேறு பெறுவார்கள்.
8 மன்னன் நீதிவழங்கும் இருக்கையில் வீற்றிருக்கும்போது, தன் பார்வையாலேயே தீமையான யாவற்றையும் சலித்துப் பிரித்து விடுவான்.
9 “என் இதயத்தைத் தூயதாக்கி விட்டேன்; நான் பாவம் நீக்கப்பெற்றுத் தூய்மையா யிருப்பவன்” என்று யாரால் சொல்லக்கூடும்?
10 பொய்யான எடைக் கற்களையும் பொய் யான அளவைகளையும் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கின்றார்.
11 சிறுவரையும் அவருடைய செயல்களைக் கொண்டே அறியலாம்; அவர் உண்மையும் நேர்மையானவரா என்று சொல்லிவிடலாம்.
12 கேட்கும் காது, காணும் கண்; இவ் விரண்டையும் ஆண்டவரே படைத்தார்.
13 தூங்கிக்கொண்டேயிருப்பதை நாடாதே; நாடினால் ஏழையாவாய். கண் விழித்திரு; உனக்கு வயிறார உணவு கிடைக்கும்.
14 ஒரு பொருளை வாங்கும் போது, தரம் குறைவு, விலை மிகுதி என்று ஒருவர் சொல்வார்; வாங்கிச் சென்றபின், தாம் திறம்படச் செய்ததாக நினைத்துத் தம்மையே மெச்சிக் கொள்வார்.
15 பொன்னையும் முத்துகளையும் விட, அறிவுள்ள பேச்சே விலையுயர்ந்த அணிகலன்.
16 அன்னியருடைய கடனுக்காகப் பிணை நிற்கிறவருடைய ஆடையை எடுத்துக்கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
17 வஞ்சித்துப் பெறும் உணவு சுவையா யிருக்கும்; ஆனால் பின்னர் அது வாய் நிறைய மணல் கொட்டியது போலாகும்.
18 நல்ல அறிவுரை கேட்டுத் திட்டமிட்டால் வெற்றி பெறுவாய்; சூழ்ச்சி முறையை வகுக்குமுன் போரைத் தொடங்காதே.
19 வம்பளப்போன் மறைசெய்திகளை வெளிப்படுத்திவிடுவான்; வாயாடியோடு உறவாடாதே.
20 தாயையும் தந்தையையும் சபிக்கிறவனின் விளக்கு, காரிருள் வேளையில் அணைந்து போகும்.
21 தொடக்கத்திலே விரைவில் கிடைத்த உரிமைச் சொத்து, இறுதியிலே ஆசி பெற்றதாய் இராது.
22 “தீமைக்குத் தீமை செய்வேன்” என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.
23 பொய்யான எடைக் கற்களைப் பயன் படுத்துகிறவரை ஆண்டவர் அருவருக்கிறார்; போலித் துலாக்கோலைப் பயன்படுத்துவது முறையற்றது.
24 மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை ஆண்டவர் அமைக்கின்றார்; அப்படியிருக்க, தன் வழியை மனிதனால் எப்படி அறிய இயலும்?
25 எண்ணாமல் ஒன்றைக் கடவுளுக்குப் படையல் என நேர்ந்து விட்டு, அப்பொருத் தனையைப்பற்றிப் பிறகு எண்ணுவது கண்ணி யில் கால் வைப்பதாகும்.
26 ஞானமுள்ள அரசன் பொல்லாரைப் பிரித்தெடுப்பான்; அவர்கள் மீது சக்கரத்தை ஏற்றி நசுக்குவான்.
27 ஆண்டவர் மனிதருக்குத் தந்துள்ள ஆவி ஒரு விளக்கு; அது அவர்களின் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் ஆய்ந்தறியும்.
28 அன்பும் உண்மையும் மன்னவனை ஆட்சியில் நீடித்திருக்கச் செய்யும்; அன்பாகிய அடிப்படையிலேதான் அவனது அரியணை நிலைத்து நிற்கும்.
29 இளைஞருக்கு உயர்வளிப்பது அவர்களது வலிமை; முதியோருக்குப் பெருமை தருவது அவர்களது நரைமுடி.
30 நையப் புடைத்தலே மனத்தின் மாசகற்றும்; கசையடி கொடுத்தலே உள்ளத்தைத் தூய்மைப் படுத்தும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-20
|
648 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 21 – திருவிவிலியம்
|
1 மன்னவன் மனம் ஆண்டவரின் கைக்குள் அடங்கியிருக்கிறது; வாய்க்கால் நீரைப்போல அவர் அதைத் தம் விருப்பப்படி திருப்பி விடுகிறார்.
2 மனிதருடைய நடத்தையெல்லாம் அவர் பார்வையில் குற்றமற்றதாய்த் தோன்றலாம். ஆனால், ஆண்டவர் அவர் உள்ளெண்ணத்தைச் சீர்தூக்கிப் பார்க்கிறார்.
3 பலிசெலுத்துவதைவிட நேர்மையாகவும் நியாயமாகவும் நடப்பதே ஆண்டவருக்கு உவப் பளிக்கும்.
4 மேட்டிமையான பார்வை, இறுமாப்புக் கொண்ட உள்ளம் — இவை பொல்லாரிடம் பளிச்சென்று காணப்படும் பாவங்கள்.
5 திட்டமிட்டு ஊக்கத்துடன் உழைப்பவரிடம் செல்வம் சேரும் என்பது திண்ணம்; பதற் றத்துடன் வேலைசெய்பவர் பற்றாக்குறையில் இருப்பார்.
6 ஒருவர் பொய் பேசிச் சேர்க்கும் பொருள், காற்றாய்ப் பறந்துவிடும்; அவரது உயிரையும் அது வாங்கி விடும்.
7 பொல்லார் நேர்மையானதைச் செய்ய மறுப்பதால், அவர்களது கொடுமை அவர்களையே வாரிக் கொண்டுபோகும்.
8 குற்றம் செய்பவர் வழி கோணலானது; குற்றமற்றவர் செய்கை நேர்மையானது.
9 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட, குடிசை வாழ்க்கையே மேல்.
10 பொல்லார் மனம் தீமை செய்வதில் நாட்டங்கொள்ளும்; தமக்கு அடுத்திருப்பாரை அவர்கள் கனிவுடன் பார்ப்பதும் இல்லை.
11 ஏளனம் செய்வோரை அடிக்கும்போது அதைக் காணும் பேதையராவது படிப்பினை பெறுவர்; உணர்வுள்ளவருக்கு அறிவு புகட்டும் போது அவர் மேலும் அறிவுடையவராவார்.
12 நீதிமிகு இறைவன் பொல்லாருடைய வீட்டைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்; அவர்களைத் தீச்செயல் காரணமாகத் தூக்கி எறிந்து அழித்துவிடுகிறார்.
13 ஏழை கூக்குரலிடும்போது எவன் காதைப் பொத்திக்கொள்கிறானோ, அவன் தானே உதவிக் காக மன்றாடும்போது எவரும் அவனுக்குச் செவி கொடுக்கமாட்டார்.
14 மறைவாக நன்கொடை கொடுத்து சினத்தைத் தணிப்பார்கள்; மடியில் கைக்கூலி திணித்துச் சீற்றத்தை ஆற்றுவார்கள்.
15 நீதி நிலைநாட்டுவது நேர்மையானவருக்கு மகிழ்ச்சியளிக்கும்; தீமை செய்வோருக்கோ அது திகிலுண்டாக்கும்.
16 விவேகம் காட்டும் வழியை விட்டு விலகிச் செல்பவர், செத்தாரிடையே தங்க விரைபவர்.
17 ஒய்யாரமான வாழ்க்கையை நாடுகிறவர் ஏழையாவார்; மதுவையும் நறுமணப் பொருள் களையும் விரும்புகிறவர் செல்வராகமாட்டார்.
18 நல்லவருக்குப் பொல்லாங்கு செய்யப் பார்ப்பவர் தாமே அவருக்குப் பதிலாள் ஆகிவிடு வார்; நேர்மையானவரை வஞ்சிக்கப் பார்ப்பவர் அவருக்குப் பதிலாகத் தாமே வஞ்சனைக்கு ஆளாவார்.
19 நச்சரிப்பவளும் சிடுசிடுப்பவளுமான மனைவியுடன் வாழ்வதைவிட, பாலை நிலத்தில் தனியே வாழ்வதே மேல்.
20 ஞானமுள்ளவர் வீட்டில் செல்வமும் அரும்பொருள்களும் இருக்கும்; மதிகேடர் தம் செல்வத்தைக் கரைத்துவிடுவார்.
21 நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்.
22 வீரர் நிறைந்த பட்டணத்தையும் நல்வாழ் வையும் ஞானமுள்ளவர் கைப்பற்றுவார்; அவர்கள் நம்பியிருந்த அரணையும் இடித்துத் தள்ளுவார்.
23 தம் வாயையும் நாவையும் காப்பவர், இடுக்கண் வராமல் தம்மைக் காத்துக்கொள்வார்.
24 ஏளனம் செய்யும் செருக்குடையோரின் பெயர் இறுமாப்பு; அளவு கடந்த பெருமையுடன் நடப்பதே அவர் போக்கு.
25 சோம்பேறியின் அவா அவரைக் கொல் லும்; ஏனெனில், அவர் கைகள் வேலை செய்ய மறுக்கின்றன.
26 அவர் நாள் முழுதும் பிறர் பொருளுக்காக ஏக்கங்கொண்டிருப்பார்; ஆனால் சான்றோர் தம் பொருளை இல்லையென்னாது வழங்குவர்.
27 பொல்லார் செலுத்தும் பலி அருவருக்கத் தக்கது; தீய நோக்கத்தோடு அவர்கள் செலுத்தும் பலி இன்னும் அருவருக்கத்தக்கதன்றோ?
28 பொய்ச்சான்று கூறுபவன் கெட்டழிவான்; உன்னிப்பாய்க் கேட்பவன் பேச்சோ என்றைக் கும் ஏற்புடையதாகும்.
29 பொல்லார் முகத்தில் போலி வீரம் காணப் படும்; நேர்மையானவர் தம் நடத்தை சீரானது என்னும் உறுதியுடனிருப்பார்.
30 ஆண்டவரின் எதிரில் நிற்கக் கூடிய ஞானமுமில்லை, விவேகமுமில்லை, அறிவுரையு மில்லை.
31 போர் நாளுக்கென்று குதிரையை ஆயத்தமாக வைத்திருக்கலாம்; ஆனால் வெற்றி கிடைப்பது ஆண்டவராலேயே.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-21
|
649 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 22 – திருவிவிலியம்
|
1 திரண்ட செல்வத்தைவிட நற் பெயரைத் தெரிந்துகொள்வது மேல்; வெள்ளியையும் பொன்னையும்விடப் புகழைப் பெறுவதே மேல்.
2 செல்வருக்கும் வறியவருக்கும் பொதுவான ஒன்று உண்டு; ஏனெனில், அனைவரையும் உண்டாக்கியவர் ஆண்டவரே.
3 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேக முள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
4 தாழ்மையுள்ளவர்களுக்கும் ஆண்டவரிடம் அச்சம் உடையவர்களுக்கும் கிடைக்கும் பயன் செல்வமும் மேன்மையும் நீடித்த ஆயுளுமாகும்.
5 நேர்மையற்றவர் வழியில் முள்ளும் கண்ணியும் இருக்கும்; விழிப்புடன் இருப்பவர் அவற்றினருகில் செல்லமாட்டார்.
6 நல்வழியில் நடக்கப் பிள்ளையைப் பழக்கு; முதுமையிலும் அவர் அந்தப் பழக்கத்தை விட்டு விடமாட்டார்.
7 செல்வர் ஏழையை அடக்கி ஆளுவார்; கடன்பட்டவர் கடன் கொடுத்தவருக்கு அடிமை.
8 அநீதியை விதைப்பவன் கேட்டை அறுப்பான்; அவனது சீற்றம் அவனையே எரித்துவிடும்.
9 கருணை நிறைந்தவர் தம் உணவை ஏழைகளோடு பகிர்ந்து உண்பார்; அவரே ஆசி பெற்றவர்.
10 ஏளனம் செய்வோனை வெளியே துரத்து, சண்டை நின்றுவிடும்; சச்சரவும் பழிச்சொல்லும் ஒழியும்.
11 ஆண்டவர் தூய உள்ளத்தினரை விரும்புகிறார்; இன்சொல் கூறுவோர் அரசனது நட்பைப் பெறலாம்.
12 அறிவுடையோரைக் காப்பதில் ஆண்டவர் கண்ணாயிருக்கிறார்; கயவனின் வழக்கைத் தள்ளுபடி செய்கிறார்.
13 “வெளியே சிங்கம் நிற்கிறது; வீதியில் கால் வைத்தால் கொல்லப்படுவேன்” என்கிறான் சோம்பேறி.
14 பரத்தையின் வாய் ஓர் ஆழமான படுகுழி; ஆண்டவரின் சினத்திற்காளானவர் அதில் போய் விழுவார்.
15 பிள்ளையின் இதயத்தில் மடமை ஒட்டிக்கொண்டிருக்கும்; கண்டித்துத் திருத்தும் பிரம்பால் அதை அகற்றி விடலாம்.
16 செல்வராகும் பொருட்டு ஏழைகளை ஒடுக்குகிறவனும், செல்வருக்குப் பொருள் கொடுக்கிறவரும் ஏழையாவார்கள்.
முப்பது முதுமொழிகள்
17 ஞானிகள் போதித்ததை நான் உனக்குக்கூறுகின்றேன், செவி கொடுத்துக் கேள்; நான் புகட்டும் அறிவை மனத்தில் ஏற்றுக்கொள்.
18 அவற்றை நீ உள்ளத்தில் பதிய வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது எடுத்துரைக்கக்கூடுமானால் உனக்கு மகிழ்ச்சியுண்டாகும்.
19 நீ ஆண்டவரை நம்ப வேண்டுமென்று அவற்றை நான் உனக்கு இன்று தெரியப்படுத்துகிறேன்.
20 அறிவும் நல்லுரையும் தரக்கூடிய முப்பது முதுமொழிகளை நான் உனக்கென்றே எழுதி வைத்திருக்கிறேன் அல்லவா?
21 அவற்றைக் கொண்டு மெய்ம்மையை உன்னால் விளக்கக் கூடும்.
1 22 ஒருவர் ஏழையாய் இருக்கிறார் என்று அவரை வஞ்சிக்காதே; ஒருவர் ஆதரவின்றி இருக்கிறார் என்று அவரை நீதிமன்றத்தில் சிறுமைப்படுத்தாதே.
23 ஏனெனில், ஆண்டவர் அவர்களுக்காக வாதாடுவார்; அவர்களது உயிரை வாங்கப் பார்க்கிறவர்களின் உயிரை அவர் பறித்துக்கொள்வார்.
2 24 கடுஞ்சினங்கொள்பவனோடு நட்புக்கொள்ளாதே; எரிச்சல்கொள்பவனோடு தோழமை கொள்ளாதே.
25 அப்படிச் செய்தால் அவர்களின் போக்கை நீயும் கற்றுக்கொள்வாய்; உன் உயிர் கண்ணியில் சிக்கிக் கொள்ளும்.
3 26 பிறருக்காக ஒருபோதும் பிணையாய் நில்லாதே; பிறர் கடனுக்காக ஒருநாளும் பிணையாய் நிற்காதே.
27 அந்த கடனை திருப்பிக்கொடுக்க உனக்கு ஒரு வழியும் இல்லாதிருந்தால், நீ படுத்திருக்கையில் உன் படுக்கையும் பறிபோய்விடுமன்றோ?
4 28 வழிவழிச் சொத்துக்கு உன் மூதாதையர் குறித்து வைத்த எல்லையை நீ மாற்றி அமைக்காதே.
5 29 தம் அலுவலில் திறமை காட்டுகின்ற ஒருவரைப் பார்; அவர் பாமர மனிதரிடையே இரார்; அரசு அவையில் இருப்பார்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-22
|
650 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 23 – திருவிவிலியம்
|
6 1 ஆளுநர் வீட்டில் நீ உணவு கொள்ள உட்காரும்போது, உனக்குமுன் இருப்பதை நன்றாய்க் கவனித்துப் பார்.
2 உனக்கு அப்போது அடங்காப் பசி இருந்தாலும், உன் தொண்டையில் கத்தி இருப்பதாக நினைத்துக்கொள்.
3 அவர் தரும் சுவையான உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே; அது உன்னை வஞ்சிக்க விழையும் உணவாயிருக்கலாம்.
7 4 செல்வராக வேண்டுமென்று பாடுபட்டு உருக்குலைந்து போகாதே; அதனால் உனது அறிவை இழந்து விடாதே.
5 இல்லாமற்போகும் பொருள் மேல் நீ கண்ணும் கருத்துமாய் இருப்பானேன்? கழுகுபோல அது தனக்குச் சிறகுகளை வளர்த்துக்கொண்டு வானத்தில் பறந்து போகுமன்றோ?
8 6 கஞ்சர் தரும் உணவை உண்ணாதே; அவரது அறுசுவை உண்டியை உண்ண ஆவல் கொள்ளாதே.
7 அவர் தமக்குள் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார்; “உண்டு பருகு” என்று அவர் சொன்னாலும், அவருக்கு உன்மீது அக்கறை இல்லாதிருக்கலாம்.
8 நீ உண்ட உணவை வாந்தியெடுக்க நேரிடும்; நீ உரைத்த புகழுரை பயனற்றதாகும்.
9 9 மதிகேடர் காதில் விழும்படி எதையும் பேசாதே; உன் அறிவுரைகளை அவர் மதிக்கமாட்டார்.
10 10 வழிவழிச் சொத்தின் எல்லையை மாற்றி அமைக்காதே; உன் நிலத்தின் எல்லையைத் தள்ளித் தள்ளி, திக்கற்றவர்களின் நிலத்தை எடுத்துக்கொள்ள முயலாதே.
11 ஏனெனில் அவர்களின் மீட்பர் வல்லவர். அவர் அவர்கள் சார்பில் உனக்கு எதிராக வழக்காடுவார்.
11 12 நல்லுரை கேட்பதில் சிந்தனையைச் செலுத்து; அறிவூட்டும் மொழிகளுக்குச் செவிகொடு.
12 13 பிள்ளைகளைத் தண்டித்துத் திருத்தத் தயங்காதே; பிரம்பினால் அடித்தால் சாகமாட்டார்கள்.
14 நீ பிரம்பினால் அவர்களை அடித்தால், அவர்களைப் பாதாளத்துக்குத் தப்புவிக்கிறவனாவாய்.
13 15 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாயிருந்தால், நான் மனமகிழ்ச்சி அடைவேன்.
16 உன் நாவு நேர்மையானவற்றைப் பேசினால், என் உள்ளம் களிகூரும்.
14 17 வளமுடன் இருக்கும் பாவிகளைப்போல் நீயும் இருக்கவேண்டுமென்று ஏங்காதே; ஆண்டவரிடம் எப்போதும் அச்சம் உள்ளவனாயிரு.
18 அப்பொழுது உன் வருங்காலம் வளமானதாயிருக்கும்; உன் நம்பிக்கையும் வீண்போகாது.
15 19 பிள்ளாய், இதைக் கவனி; ஞானமுள்ளவனாயிரு; உன் மனத்தை நன்னெறியில் செலுத்து.
20 குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே.
21 குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.
16 22 பெற்ற தந்தைக்குச் செவிகொடு; உன் தாய் முதுமை அடையும்போது அவளை இழிவாக எண்ணாதே.
23 மெய்ம்மையை விலைகொடுத்தாயினும் வாங்கு; ஆனால் அதை விற்பனை செய்யாதே; அவ்வாறே ஞானத்தையும் நல்லுரையையும் உணர்வையும் விலை கொடுத்துப்பெறு.
24 நேர்மையான பிள்ளையின் தந்தை மிகவும் களிகூர்வார்; ஞானமுள்ள பிள்ளையைப் பெற்ற தகப்பன் அவர் பொருட்டு மகிழ்ச்சி அடைவார்.
25 நீ உன் தந்தையையும் உன் தாயையும் மகிழ்விப்பாயாக; உன்னைப் பெற்றவளைக் களிகூரச் செய்வாயாக.
17 26 மகனே, நான் சொல்வதைக் கவனி; என் வழிகளில் உன் கவனத்தைச் செலுத்து.
27 விலைமகள் ஒரு படுகுழி; பரத்தை ஓர் ஆழ்கிணறு.
28 அவள் கள்வனைப்போலப் பதுங்கி இருப்பாள்; அவள் ஏராளமான பேரை வஞ்சிப்பவள்.
18 29 துன்பக் கதறல், துயரக் கண்ணீர், ஓயாத சண்டை, ஒழியாத புலம்பல், காரணம் தெரியாமல் கிடைத்த புண்கள், கலங்கிச் சிவந்திருக்கும் கண்கள் — இவை அனைத்தையும் அனுபவிப்பவர் யார்?
30 திராட்சை இரச மதுவில் நீந்திக் கொண்டிருப்பவர்களே, புதுப்புது மதுக் கலவையைச் சுவைத்துக் களிப்பவர்களே,
31 மதுவைப் பார்த்து, “இந்த இரசத்தின் சிவப்பென்ன! பாத்திரத்தில் அதன் பளபளப்பென்ன!” எனச் சொல்லி மகிழாதீர். அது தொண்டைக்குள் செல்லும்போது இனிமையாயிருக்கும்;
32 பிறகோ அது பாம்புபோலக் கடிக்கும்; விரியனைப் போலத் தீண்டும்.
33 உன் கண் என்னென்னவோ வகையான காட்சிகளைக் காணும்; உன் உள்ளத்திலிருந்து ஏறுமாறான சொற்கள் வெளிப்படும்.
34 கடல் அலைமீது மிதந்து செல்வது போலவும், பாய்மர நுனியில் படுத்துறங்குவது போலவும் உனக்குத் தோன்றும்.
35 “என்னை அடித்தார்கள், எனக்கு நோகவில்லை; என்னை அறைந்தார்கள், நான் அதை உணரவில்லை; நான் எப்போது விழித்தெழுவேன்? அதை இன்னும் கொடுக்கும்படி கேட்பேன்” என்று நீ சொல்வாய்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-23
|
651 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 24 – திருவிவிலியம்
|
19 1 தீயோர் வளமுடன் இருப்பதைக் கண்டு மனம் வெதும்பாதே; அவர்களுடன் உறவு பாராட்டவும் விரும்பாதே. அவர்களுடைய தோழனாயிருக்க விரும்பாதே.
2 அவர்கள் மனம் கொடுமை செய்வதையே நினைத்துக்கொண்டிருக்கும்; அவர்கள் பேச்சு, தீமை விளைவிக்கும் பேச்சு.
20 3 ஞானம் வீட்டைக் கட்டும்; மெய்யறிவு அதை உறுதியாக அமைக்கும்.
4 அருமையும் நேர்த்தியுமான பல பொருள்களால் அறிவு தன் அறைகளை நிரப்பும்.
21 5 வீரரைவிட ஞானமுள்ளவரே வலிமை மிக்கவர்; வலிமை வாய்ந்த வரைவிட அறிவுள்ளவரே மேம்பட்டவர்.
6 ஏனெனில், போரில் வெற்றி பெற ஆழ்ந்த சிந்தனை தேவை; கவனத்துடன் வகுக்கும் திட்டமே வெற்றிக்கு அடிப்படை.
22 7 ஞானம் மூடருடைய அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது; எனவே, அவர் வழக்குமன்றத்தில் வாய் திறக்கமாட்டார்.
23 8 தீமை செய்யத் திட்டமிடுபவன் வஞ்சனையாளன் என்னும் பெயர் பெறுவான்.
9 மூடர்கள் பாவத்தைத் தவிர வேறெதற்காகவும் திட்டமிடுவதில்லை; ஒழுங்கீனரை மக்கள் அருவருப்பார்கள்.
24 10 நிறைவுள்ள காலத்தில் உன் மனம் சோர்வடையுமானால், குறைவுள்ள காலத்தில் உன் ஆற்றல் இன்னும் குன்றிப்போகுமன்றோ?
25 11 கொல்லப்படுவதற்கு இழுத்துச் செல்லப்படுவோரைத் தப்புவிக்கப்பார்; கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவோரைக் காப்பாற்றப்பார்.
12 “அதைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று சொல்வாயானால், இதயத்தில் இருப்பதை அறிபவர் உன் எண்ணத்தையும் அறிவார் அல்லவா? உன் உள்ளத்தைப் பார்க்கிறவர் அதை அறிவார் அல்லவா? ஒவ்வொருடைய செய்கைக்கும் ஏற்றபடி அவர் பயனளிப்பார் அல்லவா?
26 13 பிள்ளாய்! தேன் சாப்பிடு, அது நல்லது; கூட்டினின்று ஒழுகும் தேன் உன் வாய்க்குத் தித்திப்பாய் இருக்கும்.
14 ஞானமும் அறிவும் உனக்கு அவ்வாறே இனிமையாயிருக்கும். அவற்றை நீ அடைந்தால் முடிவில் உனக்குப் பயன் கிடைக்கும்; உன் நம்பிக்கை வீண்போகாது.
27 15 கயவர் போல் பதுங்கியிருந்து நல்லவர் வீட்டைக் கெடுக்கப் பார்க்காதே; அவர் குடியிருப்பைப் பாழாக்கி விடாதே.
16 நல்லவர் ஏழுமுறை விழுந்தாலும் எழுந்து நிற்பார்; பொல்லார் துன்பம் வந்தவுடன் விழுந்துவிடுவர்.
28 17 உன் எதிரி வீழ்ச்சியுறும்போது நீ மகிழாதே; அவர் கால் இடறும் போது களிகூராதே.
18 நீ அப்படிச் செய்வாயானால், ஆண்டவர் அதைக் கண்டு உன் மீது சினம்கொள்வார்; அவருக்கு அவர் மீது இருக்கக்கூடிய சினம் தணிந்து போகும்.
29 19 தீயோரை முன்னிட்டு எரிச்சல் அடையாதே; வளமுடனிருக்கும் பொல்லாரைக் கண்டு மனம் வெதும்பாதே.
20 தீயவருக்கு வருங்காலத்தில் நல்வாழ்வு இராது; ஏனெனில் பொல்லாருடைய விளக்கு அணைந்து போகும்.
30 21 பிள்ளாய்! ஆண்டவருக்கும் அரசனுக்கும் அஞ்சி நட; கிளர்ச்சி செய்வாரோடு உறவுகொள்ளாதே.
22 ஏனெனில், திடீரென்று அவர்களுக்குக் கேடு வரும்; அந்த இருவரும் எத்தகைய கேட்டை வருவிப்பார்களென்பது யாருக்குத் தெரியும்?
பல்வகைப்பட்ட முதுமொழிகள்
23 ஞானிகளின் வேறு சில முதுமொழிகள்: நீதித்தீர்ப்பு வழங்கும்போது ஓர வஞ்சனை காட்டுவது நேரியதல்ல.
24 குற்றம் செய்தவரை நேர்மையானவர் எனத் தீர்ப்பளிக்கும் நீதிபதியை மனிதர் சபிப்பர்; உலகனைத்தும் வெறுக்கும்.
25 ஆனால், குற்றம் செய்தவரைத் தண்டிக்கும் நீதிபதிக்கு நலமுண்டாகும்; நற்பேறும் கிடைக்கும்.
26 நேர்மையான மறுமொழி கூறுபவரே அன்போடு அரவணைக்கும் நண்பராவார்.
27 வாழ்க்கைத் தொழிலுக்கான முன்னேற்பாடுகளைச் செய்; வயலை உழுது பண்படுத்து; பிறகு உன் வீட்டைக் கட்டியெழுப்பத் தொடங்கு.
28 தக்க காரணமில்லாதபோது அடுத்திருப்பாருக்கு எதிராகச் சான்று சொல்லாதே; உன் வாக்குமூலத்தில் அவருக்கு எதிராக உண்மையைத் திரித்துக் கூறாதே.
29 “அவர் எனக்குச் செய்தவாறே நானும் அவருக்குச் செய்வேன்; அவர் செய்ததற்கு நான் பதிலுக்குப் பதில் செய்வேன்” என்று சொல்லாதே.
30 சோம்பேறியின் விளைநிலம் வழியாக நான் நடந்துசென்றேன்; அந்த மதிகேடருடைய திராட்சைத் தோட்டத்தினூடே சென்றேன்.
31 அதில் எங்கும் முட்செடி காணப்பட்டது; நிலம் முழுவதையும் காஞ்சொறிச் செடி மூடியிருந்தது; அதன் கற்சுவர் இடிந்து கிடந்தது.
32 அதை நான் பார்த்ததும் சிந்தனை செய்தேன்; அந்தக் காட்சி எனக்குக் கற்பித்த பாடம் இதுவே;
33 இன்னும் சிறிது நேரம் தூங்கு; இன்னும் சிறிது நேரம் உறங்கு; கையை முடக்கிக்கொண்டு இன்னும் சிறிது நேரம் படுத்திரு.
34 அப்பொழுது வறுமை உன்மீது வழிப்பறிக் கள்வனைப்போலப் பாயும்; ஏழ்மை நிலை உன்னைப் போர் வீரனைப் போலத் தாக்கும்.
24:33-34 நீமொ 6:10-11.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-24
|
652 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 25 – திருவிவிலியம்
|
சாலமோனின் வேறு சில நீதிமொழிகள்
1 இவையும் சாலமோனின் நீதி மொழிகளே. இவை யூதாவின் அரசராகிய எசேக்கியாவின் அவையினர் தொகுத்து எழுதியவை.
2 மறைபொருள் கடவுளுக்கு மாட்சியாம்; ஆய்ந்தறிதல் அரசருக்குப் பெருமையாம்.
3 அரசரின் உள்ளக் கிடக்கையை ஆராய்ந் தறிய மனிதரால் இயலாது; அது வானத்தின் உயரத்தையும் கடலின் ஆழத்தையும் போன்றது.
4 வெள்ளியினின்று மாசை நீக்கி விடு; அப்பொழுது தட்டார் அதிலிருந்து அழகிய பொருளென்றை உருவாக்குவார்.
5 அரசரின் அவையினின்று கெடுமதி உரைக்கும் பொல்லாரை அகற்றி விடு; அப் பொழுது அவரது ஆட்சி நீதிவழுவா நெறியில் நிலைக்கும்.
6 அரசர் முன்னிலையில் உன்னைப் பெரியவரென்று காட்டிக் கொள்ளாதே; பெரியோ ருக்குரிய இடத்தில் நில்லாதே.
7 பெரியவர் ஒருவருக்கு இடமுண்டாகும்படி நீ கீழிடத்திற்கு அனுப்பப்படுவதைவிட, “நீ மேலிடத்திற்கு வா” என்று அழைக்கப்படுவதே உனக்கு மேன்மை.
8 ஏதோ ஒன்றைப் பார்த்தவுடன் உடனே வழக்கு மன்றத்திற்குப் போகாதே; நீ கூறுவது தவறென்று வேறொருவர் காட்டிவிட்டால் அப்பொழுது நீ என்ன செய்வாய்?
9 அடுத்திருப்பாரோடு உனக்குள்ள வழக்கை அவருடனேயே பேசித் தீர்த்துக்கொள்; வேறொருவரைப் பற்றிய மறைசெய்தியை வெளிப்படுத்தாதே.
10 வெளிப்படுத்தினால் அதைக் கேட்பவர் உன்னை இகழுவார்; உனக்கு வரும் மானக்கேடு நீங்காது.
11 தக்க வேளையில் சொன்ன சொல் வெள்ளித் தட்டில் வைத்த பொற்கனிக்குச் சமம்.
12 தங்கச் சங்கிலியும் பொற்கடுக்கனும் ஓர் இணையாக அமைவது போல, எச்சரிக்கை கூறும் ஞானியும் அதை விருப்புடன் கேட்பவரும் ஓர் இணையாக அமைவர்.
13 குளிர்ந்த பானம் கோடைக் காலத்தில் எப்படி இருக்குமோ அப்படியே உண்மையான தூதர் தம்மை அனுப்பினவருக்கு இருப்பார்; அவர் தம் தலைவருக்குப் புத்துயிரளிப்பார்.
14 கருமுகிலும் காற்றும் உண்டு; ஆனால் மழை இல்லை; கொடாமலே தன்னைக் கொடைவள்ளல் என்பவனும் இவ்வாறே.
15 பொறுமை ஆட்சியாளரையும் இணங்கச் செய்யும்; இனிய நா எலும்பையும் நொறுக்கும்.
16 தேன் கிடைத்தால் அளவோடு சாப்பிடு; அளவை மீறினால் தெவிட்டிப்போகும்; நீ வாந்தியெடுப்பாய்.
17 அடுத்திருப்பார் வீட்டுக்கு அடிக்கடி போகாதே; போனால் சலிப்பு ஏற்பட்டு, அவர் உன்னை வெறுப்பார்.
18 அடுத்திருப்பாருக்கு எதிராகப் பொய்ச் சான்று சொல்பவர், குறுந்தடியையும் வாளையும் கூரிய அம்பையும் ஒத்தவர்.
19 இக்கட்டுக் காலத்தில் ஒரு துரோகியை நம்புவது, சொத்தைப் பல்லையும் நொண்டிக் காலையும் நம்புவதற்குச் சமம்.
20 மனத்துயரமுள்ளவரைப் பாட்டுப் பாடச் செய்தல், குளிரில் உடைகளைக் களைவது போலவும், புண்ணில் காடியை வார்ப்பது போலவும் இருக்கும்.
21 உன் எதிரி பசியோடிருந்தால் அவனுக்கு உணவு கொடு; அவன் தாகத்தோடிருந்தால் குடிக்கத் தண்ணீர் கொடு.
22 இவ்வாறு செய்வதால் அவன் தலைமேல் எரிதழலைக் குவிப்பாய்; ஆண்டவரும் உனக்குக் கைம்மாறு அளிப்பார்.
23 வட காற்று மழையைத் தோற்றுவிக்கும்; புறங்கூறுதல் சீற்றப் பார்வையைத் தோற்று விக்கும்.
24 மாடி வீட்டில் நச்சரிக்கும் மனைவியோடு வாழ்வதைவிட குடிசை வாழ்க்கையே மேல்.
25 தொலைவிடத்திலிருந்து வரும் நற்செய்தி, வறண்ட தொண்டைக்குக் கிடைக்கும் குளிர்ந்த நீரை ஒக்கும்.
26 பொல்லாருக்கு இணங்கிவிடும் நேர்மையானவர் கலங்கிய ஊற்றை அல்லது பாழடைந்த கிணற்றை ஒத்திருக்கிறார்.
27 தேனை மிகுதியாகச் சாப்பிடுவது நன்றன்று; புகழ்ச்சியை மிகுதியாக விரும்பவதும் நன்றன்று.
28 தன்னடக்கமில்லா மனிதர் அரண் அழிந்த காவல் இல்லாப் பட்டணம்.
25:6-7 லூக் 14:8-10.
25:21-22 உரோ 12:20.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-25
|
653 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 26 – திருவிவிலியம்
|
1 வேனிற் காலத்தில் பனி இருக்குமா? அறுவடைக் காலத்திற்கு மழை பொருத்துமா? அவ்வாறே மதிகேடருக்குப் புகழ் ஒவ்வாது.
2 சிட்டுக் குருவியும் அடைக்கலான் குருவியும் பறந்து திரிவது போல, காரணமின்றி இட்ட சாபமும் காற்றாய்ப் பறந்துபோகும்.
3 குதிரைக்குச் சவுக்கடி, கழுதைக்குக் கடிவாளம்; முட்டாளின் முதுகுக்குப் பிரம்பு.
4 மடையரின் கேள்விக்கு முட்டாள் தனமாகப் பதிலுரைக்காதே; உரைத்தால் நீயும் அவரை போல ஒரு மடையனே.
5 மடையரின் கேள்விக்கு அவரது மடமையை உணர்த்தும் வகையில் பதிலுரை; இல்லாவிடில், அவர் தம்மை ஞானி என்று எண்ணிக் கொள்வார்;
6 மூடரைத் தூதாக அனுப்புதல், தன் காலையே வெட்டிக் கேடு உண்டாக்கிக் கொள்வதற்குச் சமம்.
7 ஊனக் கால்கள் தடுமாறி நடக்கும்; அவ்வாறே மூடர் வாயில் முதுமொழியும் வரும்.
8 மூடருக்கு உயர் மதிப்புக்கொடுப்பவர் கவணில் கல்லை இறுகக் கட்டி வைத்தவருக்குச் சமம்.
9 மூடன் வாயில் முதுமொழி, குடிகாரன் கையிலுள்ள முட்செடிக்குச் சமம்.
10 மூடனையோ குடிகாரனையோ வேலைக்கு அமர்த்துபவர் வழிப்போக்கர் எவராயிருப்பினும் அவர் மீது அம்பு எய்கிறவரை ஒத்திருக்கிறார்.
11 நாய் தான் கக்கினதைத் தின்னத் திரும்பிவரும்; அதுபோல மூடர் தாம் செய்த மடச் செயலையே மீண்டும் செய்வார்.
12 தம்மை ஞானமுள்ளவரென்று சொல்லிக் கொள்ளும் யாரையாவது நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
13 “வீதியில் சிங்கம் இருக்கிறது; வெளியே சிங்கம் அலைகிறது” என்று சொல்லிக் கொண்டிருப்பவர் சோம்பேறி.
14 கீல்பட்டையில் கதவு ஆடிக்கொண் டிருப்பதுபோல, சோம்பேறி தம் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பார்.
15 சோம்பேறி உண்கலத்தில் கையை இடுவார்; ஆனால் அதை வாய்க்குக் கொண்டு போகச் சோம்பலடைவார்.
16 விவேகமான விடையளிக்கும் ஏழு அறிவாளிகளைவிட, தாம் மிகுந்த ஞான முள்ளவர் என்று நினைக்கிறார் சோம்பேறி.
17 பிறருடைய சச்சரவுகளில் தலையிடு கிறவர், தெருவில் செல்லும் வெறிநாயின் வாலைப் பிடித்து இழுப்பவருக்கு ஒப்பாவார்.
18 கொல்லும் தீக்கொள்ளியையும் அம்பையும் எறியும் பைத்தியக்காரனுக்கு ஒப்பானவர் யாரெனில்,
19 பிறனை வஞ்சித்துவிட்டு “நான் விளையாட்டுக்குச் செய்தேன்” என்று சொல் பவரே.
20 விறகு இல்லாவிடில் நெருப்பு அணையும்; புறங்கூறுபவர் இல்லாவிடில் சண்டை அடங்கும்.
21 கரியால் தழல் உண்டாகும், விறகால் நெருப்பு எரியும்; சண்டை பிடிக்கிறவரால் கலகம் மூளும்.
22 புறணி கேட்பது பலருக்கு அறுசுவை உண்டி உண்பது போலாம். அதை அவர்கள் பேராவலோடு விழுங்குவார்கள்.
23 தீய நெஞ்சத்தை மறைக்க நயமாகப் பேசுவது, மட்பாண்டத்திற்கு மெருகூட்டிப் பளபளக்கச் செய்வது போலாகும்.
24 பகையுணர்ச்சி உள்ளவர் நாவினால் கபடத்தை நயம்படப் பேசுவார்; உள்ளத்திலோ கபடம் மறைந்திருக்கும்.
25 அவர் நயமாகப் பேசினாலும் அவரை நம்பாதே; அவர் உள்ளத்தில் அருவருக்கத் தக்கவை ஏழு இருக்கும்.
26 அவர் தம் பகையை வஞ்சகமாக மறைத்து வைத்திருப்பினும், அவரது தீயகுணம் மக்களிடையே அம்பலமாகிவிடும்.
27 தான் வெட்டின குழியில் தானே விழுவார்; தான் புரட்டின கல் தன் மேலேயே விழும்.
28 பொய் பேசும் நா உண்மையை வெறுக்கும்; இச்சகம் பேசும் வாய் அழிவை உண்டாக்கும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-26
|
654 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 27 – திருவிவிலியம்
|
1 இன்று நடக்கப்போவதே தெரியாது; நாளை நடக்கப் போவதை அறிந்தவன் போலப் பெருமையாகப் பேசாதே.
2 உன்னை உன்னுடைய வாயல்ல; மற்றவர் களுடைய வாய் புகழட்டும்; உன் நாவல்ல, வேறொருவர் நா போற்றட்டும்.
3 கல்லும் மணலும் பளுவானவை; மூடர் தரும் தொல்லையோ இவ்விரண்டையும்விடப் பளுவானது.
4 சினம் கொடியது; சீற்றம் பெருவெள்ளம் போன்றது; ஆனால் பொறாமையின் கொடு மையை எதிர்த்து நிற்க யாரால் இயலும்?
5 வெளிப்படுத்தப்படாத அன்பை விட, குற்றத்தை வெளிப்படையாகக் கண்டிக்கும் கடிந்துரையே மேல்.
6 நண்பர் கொடுக்கும் அடிகள் நல்நோக்கம் கொண்டவை; பகைவர் தரும் முத்தங்களோ வெறும் முத்தப்பொழிவே.
7 வயிறார உண்டவர் தேனையும் உதறித் தள்ளுவார்; பசியுள்ளவருக்கோ கசப்பும் இனிக்கும்.
8 தம் வீட்டை விட்டு வெளியேறி அலைந்து திரிபவர், தன் கூட்டை விட்டு வெளியேறி அலைந்து திரியும் குருவிக்கு ஒப்பானவர்.
9 நறுமணத் தைலம் உள்ளத்தை மகிழ் விக்கும்; கனிவான அறிவுரை மனத்திற்குத் திடமளிக்கும்.
10 உன் நண்பரையும் உன் தந்தையின் நண்பரையும் கைவிடாதே; உனக்கு இடுக்கண் வரும்காலத்தில் உடன்பிறந்தான் வீட்டிற்குச் செல்லாதே; தொலையிலிருக்கும் உடன்பிறந் தாரைவிட அண்மையிலிருக்கும் நன்பரே மேல்.
11 பிள்ளாய், நீ ஞானமுள்ளவனாகி என் மனத்தை மகிழச்செய்; அப்பொழுது நான் என்னைப் பழிக்கிறவருக்குத் தக்க பதிலளிப்பேன்.
12 எதிரில் வரும் இடரைக் கண்டதும் விவேகமுள்ளவர் மறைந்து கொள்வார்; அறிவற்றோர் அதன் எதிரே சென்று கேட்டுக்கு ஆளாவர்.
13 அன்னியருடைய கடனுக்காகப் பிணை யாக நிற்கிறவனுடைய ஆடையை எடுத்துக் கொள்; அதை அந்தக் கடனுக்காகப் பிணையப் பொருளாக வைத்திரு.
14 ஒரு நண்பரிடம் விடியுமுன் போய் உரக்கக் கத்தி அவரை வாழ்த்துவது, அவரைச் சபிப் பதற்குச் சமமெனக் கருதப்படும்.
15 ஓயாது சண்டைபிடிக்கும் மனைவி, அடைமழை நாளில் இடைவிடாத் தூறல் போன்றவள்.
16 அவளை அடக்குவதைவிடக் காற்றை அடக்குவதே எளிது எனலாம்; கையால் எண்ணெயை இறுகப் பிடிப்பதே எளிது எனலாம்.
17 இரும்பை இரும்பு கூர்மையாக்குவது போல, ஒருவர்தம் அறிவால் மற்றவரைக் கூர் மதியாளராக்கலாம்.
18 அத்திமரத்தைக் காத்துப் பேணுகிற வருக்கு அதன் கனி கிடைக்கும்; தம் தலைவரைக் காத்துப் பேணுகிறவருக்கு மேன்மை கிடைக்கும்.
19 நீரில் ஒருவர் தம் முகத்தைக் காண்பார்; அதுபோல, தம் உள்ளத்தில் ஒருவர் தம்மைக் காண்பார்.
20 பாதாளமும் படுகுழியும் நிறைவு பெறுவ தேயில்லை; ஒருவர் கண்களின் விருப்பமும் நிறைவு பெறுவதில்லை.
21 வெள்ளியை உலைக்களமும் பொன்னைப் புடைக்குகையும் சோதித்துப் பார்க்கும்; ஒருவரை அவர் பெறுகின்ற புகழைக்கொண்டு சோதித்துப் பார்க்கலாம்.
22 மூடனை உரலில் போட்டு உலக்கையால் நொய்யோடு நொய்யாகக் குத்தினாலும், அவனது மடமை அவனை விட்டு நீங்காது.
23 உன் ஆடுகளை நன்றாகப் பார்த்துக் கொள்; உன் மந்தையின்மேல் கண்ணும் கருத்து மாயிரு.
24 ஏனெனில், செல்வம் எப்போதும் நிலைத் திராது; சொத்து தலைமுறை தலைமுறையாக நீடித்திருப்பதில்லை.
25 புல்லை அறுத்தபின் இளம்புல் முளைக்கும்; மலையில் முளைத்துள்ள புல்லைச் சேர்த்துவை.
26 ஆடுகள் உனக்கு ஆடை தரும்; வெள்ளாட்டுக் கிடாயை விற்று விளைநிலம் வாங்க இயலும்.
27 எஞ்சிய ஆடுகள் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் தேவைப்படும் பாலைக் கொடுக்கும்; உன் வேலைக்காரருக்கும் பால் கிடைக்கும்.
27:1 யாக் 4:13-16.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-27
|
655 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 28 – திருவிவிலியம்
|
1 பொல்லாங்கு செய்தோரை எவரும் பின்தொடர்ந்து செல்லாதிருந்தும், அவர்கள் ஓடிக்கொண்டே இருப்பார்கள்; நேர்மையானவர்களோ அச்சமின்றிச் சிங்கம் போல் இருப்பார்கள்.
2 ஒரு நாட்டில் அறிவும் விவேகமுமுள்ள தலைவர்கள் இருந்தால், அதன் ஆட்சி வலிமை வாய்ந்ததாய் நிலைத்திருக்கும்; ஆனால் ஒரு நாட்டினர் தீவினை புரிவார்களாயின், ஆளுகை அடுத்தடுத்துக் கைமாறிக் கொண்டே இருக்கும்.
3 ஏழைகளை ஒடுக்கும் கொடிய அதிகாரி, விளைச்சலை அழிக்கும் பெருமழைக்கு ஒப்பானவன்.
4 நீதிபோதனையைப் புறக்கணிப்போரே, பொல்லாரைப் புகழ்வர்; அதைக் கடைப்பிடித்து நடப்போர் அவர்களை எதிர்ப்பர்.
5 தீயோருக்கு நியாயம் என்றால் என்ன என்பதே தெரியாது; ஆண்டவரை வழிபடுபவரோ எல்லாவற்றையும் நன்குணர்பவர்.
6 முறைகேடாய் நடக்கும் செல்வரைவிட, மாசற்றவராய் இருக்கும் ஏழையே மேல்.
7 அறிவுக்கூர்மையுள்ள மகன் நீதிச் சட்டத்தைக் கடைபிடித்து நடப்பான்; ஊதாரி களோடு சேர்ந்துகொண்டு திரிபவன் தன் தந்தைக்கு இழிவு வரச் செய்வான்.
8 அநியாய வட்டி வாங்கிச் செல்வத்தைப் பெருக்குகிறவரது சொத்து, ஏழைகளுக்கு இரங்குகிறவரைச் சென்றடையும்.
9 ஒருவர் திருச்சட்டத்திற்குக் கீழ்ப்படியா திருப்பாரானால், கடவுளும் அவர் வேண்டுதலை அருவருத்துத் தள்ளுவார்.
10 நேர்மையானவர்களைத் தீயவழியில் செல்லத் தூண்டுபவர், தாம் வெட்டின குழியில் தாமே விழுவார்; தீது செய்யாதவர்கள் வளம்பட வாழ்வார்கள்.
11 செல்வர் தம்மை ஞானமுள்ளவர் என்று எண்ணிக்கொள்வார்; உணர்வுள்ள ஏழையோ அவரது உண்மையான தன்மையை நன்கறிவார்.
12 நேர்மையானவர்கள் ஆட்சியுரிமை பெற்றால் மக்கள் பெருமிதம் கொள்வர்; பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்.
13 தம் குற்றப் பழிகளை மூடிமறைப்பவரின் வாழ்க்கை வளம் பெறாது; அவற்றை ஒப்புக் கொண்டு விட்டுவிடுகிறவர் கடவுளின் இரக்கம் பெறுவார்.
14 எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழ்பவர் நற்பேறுபெறுவார்; பிடிவாதமுள்ளவரோ தீங் கிற்கு உள்ளாவார்.
15 கொடுங்கோல் மன்னன் ஏழைக்குடிமக் களுக்கு முழக்கமிடும் சிங்கமும் இரைதேடி அலையும் கரடியும் போலாவான்.
16 அறிவில்லாத ஆட்சியாளர் குடி மக்களை வதைத்துக் கொடுமைப்படுத்துவார்; நேர்மையற்ற முறையில் கிடைக்கும் வருவாயை வெறுப்பவர் நீண்டகாலம் வாழ்வார்.
17 கொலை செய்தவன் தப்பியோடுவதாக எண்ணிப் படுகுழியை நோக்கி விரைகிறான்; அவனை எவரும் தடுக்க வேண்டாம்.
18 நேர்மையாக நடப்பவருக்குத் தீங்கு வராது; தவறான வழியில் நடப்பவர் தீங்கிற்கு உள்ளாவார்.
19 உழுது பயிரிடுகிறவர் நிரம்ப உணவு பெறுவார்; வீணானவற்றில் காலத்தைக் கழிப்பவர் எப்போதும் வறுமை நிறைந்தவராய் இருப்பார்.
20 உண்மையுள்ள மனிதர் நலன்கள் பல பெறுவார்; விரைவிலேயே செல்வராகப் பார்க் கிறவர் தண்டனைக்குத் தப்பமாட்டார்.
21 ஓரவஞ்சனை காட்டுவது நன்றல்ல; ஆனால் ஒரு வாய்ச் சோற்றுக்காகச் சட்டத்தை மீறுவோருமுண்டு.
22 பிறரைப் பொறாமைக் கண்ணோடு பார்ப்பவர் தாமும் செல்வராக வேண்டுமென்று துடிக்கிறார்; ஆனால் தாம் வறியவராகப் போவதை அவர் அறியார்.
23 முகப்புகழ்ச்சி செய்கிறவரைப் பார்க்கிலும் கடிந்துகொள்ளுகிறவரே முடிவில் பெரிதும் பாராட்டப்படுவார்.
24 பெற்றோரின் பொருளைத் திருடிவிட்டு, “அது குற்றமில்லை” என்று சொல்கிறவன், கொள்ளைக்காரரை விடக் கேடுகெட்டவன்.
25 பேராசைக்கொண்டவன் சண்டை மூளச் செய்வான்; ஆண்டவரையே நம்பியிருப்பவர் நலமுடன் வாழ்வார்.
26 தன் சொந்தக் கருத்தையே நம்பி வாழ்பவன் முட்டாள்; ஞானிகளின் நெறியில் நடப்பவரோ தீங்கினின்று விடுவிக்கப்படுவர்.
27 ஏழைகளுக்குக் கொடுப்பவருக்குக் குறைவு எதுவும் ஏற்படாது; அவர்களைக் கண்டும் காணாததுபோல் இருப்பவர் பல சாபங்களுக்கு ஆளாவார்.
28 பொல்லார் தலைமையிடத்திற்கு வந்தால், மற்றவர்கள் மறைவாக இருப்பார்கள்; அவர்கள் வீழ்ச்சியுற்றபின் நேர்மையானவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவார்கள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-28
|
656 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 29 – திருவிவிலியம்
|
1 பன்முறை கண்டிக்கப்பட்டும் ஒருவர் பிடிவாதமுள்ளவராகவே இருந்தால், அவர் ஒருநாள் திடீரென அழிவார்; மீண்டும் தலைதூக்கமாட்டார்.
2 நேர்மையானவர்கள் ஆட்சி செலுத்தினால், குடிமக்கள் மகிழ்ச்சியுடனிருப்பார்கள்; பொல்லார் ஆட்சி செலுத்தினால் அவர்கள் புலம்பிக் கொண்டிருப்பார்கள்.
3 ஞானத்தை விரும்புவோர் தம் தந்தையை மகிழ்விப்பார்; விலைமகளின் உறவை விரும்பு கிறவர் சொத்தை அழித்துவிடுவார்.
4 நியாயம் வழங்குவதில் அரசர் அக்கறை காட்டினால் நாடு செழிக்கும்; அவர் வரி சுமத்துவதில் அக்கறை காட்டினால் நாடு பாழாய்ப் போகும்.
5 தமக்கு அடுத்திருப்போரை அவர்கள் எதிரிலேயே அளவுமீறிப் புகழ்கிறவர் அவரைக் கண்ணியில் சிக்கவைக்கிறார்.
6 தீயவர் தம் தீவினையில் சிக்கிக் கொள்வர்; நேர்மையாளரோ மகிழ்ந்து களிகூர்வர்.
7 ஏழைகளின் உரிமைகளைக் காப்பதில் நேர்மையாளர் அக்கறை கொள்வர்; இவ்வாறு அக்கறைகொள்வது பொல்லருக்குப் புரியாது.
8 வன்முறையாளர் ஊரையே கொளுத்தி விடுவர்; ஞானமுள்ளவர்களோ மக்களின் சினத்தைத் தணிப்பார்கள்.
9 போக்கிரியின்மீது ஞானமுள்ளவர் வழக்குத் தொடுப்பாராயின், அவர் சீறுவார், இகழ்ச்சியோடு சிரிப்பார், எதற்கும் ஒத்துவரமாட்டார்.
10 தீங்கறியாதவனைக் கொலைகாரர் பகைப்பர்; நேர்மையானவர்களோ அவருடைய உயிரைக் காக்க முயல்வார்கள்.
11 அறிவில்லாதவர் தம் சினத்தை அடக்க மாட்டார்; ஞானமுள்ளவரோ பொறுமையோ டிருப்பதால், அவர் சினம் ஆறும்.
12 ஆட்சி செலுத்துகிறவர் பொய்யான செய்திகளுக்குச் செவி கொடுப்பாராயின், அவருடைய ஊழியரெல்லாரும் தீயவராவர்.
13 ஏழைக்கும் அவரை ஒடுக்குவோருக்கும் பொதுவானது ஒன்று உண்டு; இருவருக்கும் உயிரளிப்பவர் ஆண்டவரே.
14 திக்கற்றவர்களின் வழக்கில் அரசர் நியாயமான தீர்ப்பு வழங்குவாராயின், அவரது ஆட்சி பல்லாண்டு நீடித்திருக்கும்.
15 பிரம்பும் கண்டித்துத் திருத்துதலும் ஞானத்தைப் புகட்டும்; தம் விருப்பம் போல் நடக்கவிடப்பட்ட பிள்ளைகள் தாய்க்கு வெட்கக் கேட்டை வருவிப்பர்.
16 பொல்லாரின் ஆட்சி தீவினையைப் பெருக்கும்; அவர்களது வீழ்ச்சியை நல்லார் காண்பர்.
17 உன் பிள்ளையைத் தண்டித்துத் திருத்து; அவர் உனக்கு ஆறுதலளிப்பார், மனத்தை மகிழ்விப்பார்.
18 எங்கே இறைவெளிப்பாடு இல்லையோ, அங்கே குடிமக்கள் கட்டுங்கடங்காமல் திரி வார்கள்; நீதி போதனையின்படி நடப்பவர் நற்பேறு பெற்று மகிழ்வார்.
19 வெறும் வார்த்தைகளினால் வேலைக் காரர் திருந்தமாட்டார்; அவை அவருக்கு விளங்கினாலும் அவற்றைப் பொருட்படுத்த மாட்டார்.
20 பேசத் துடிதுடித்துக்கொண்டிருப்பவரை நீ பார்த்திருக்கிறாயா? மூடராவது ஒருவேளை திருந்துவார்; ஆனால் இவர் திருந்தவேமாட்டார்.
21 அடிமையை இளமைப் பருவமுதல் இளக்காரம் காட்டி வளர்த்தால், அவர் பிற்காலத்தில் நன்றிகெட்டவராவார்.
22 எளிதில் சினம் கொள்பவரால் சண்டை உண்டாகும்; அவர் பல தீங்குகளுக்குக் காரணமாவார்.
23 இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்.
24 திருடனுக்குக் கூட்டாளியாயிருப்பவர் தம்மையே அழித்துக் கொள்கிறார்; அவர் உண்மையைச் சொன்னால் தண்டிக்கப்படுவார்; சொல்லாவிடில், கடவுளின் சாபம் அவர்மீது விழும்.
25 பிறர் என்ன சொல்வார்களோ என்று அஞ்சிக்கொண்டு நடப்பவர் கண்ணியில் சிக்கிக்கொள்வார்; ஆண்டவரை நம்புகிற வருக்கோ அடைக்கலம் கிடைக்கும்.
26 பலர் ஆட்சியாளரின் தயவை நாடுவதுண்டு; ஆனால் எந்த மனிதருக்கும் நியாயம் வழங்குபவர் ஆண்டவர் அன்றோ?
27 நேர்மையற்றவரை நல்லார் அருவருப்பர்; நேரிய வழி நடப்போரை பொல்லார் அருவருப்பர்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-29
|
657 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 30 – திருவிவிலியம்
|
ஆகூரின் மொழிகள்
1 மாசாவைச் சார்ந்த யாக்கோபின் மகன் ஆகூரின் மொழிகள்; அவர் ஈத்தியேல் ஊக்கால் என்பவர்களுக்குக் கூறிய வாக்கு;*
2 மாந்தருள் மதிகேடன் நான்; மனிதருக் குரிய அறிவாற்றல் எனக்கில்லை.
3 ஞானத்தை நான் கற்றுணரவில்லை; கடவுளைப்பற்றிய அறிவு எனக்கில்லை.
4 வானத்திற்கு ஏறிச்சென்று மீண்டவர் யார்? தம் கைப்பிடிக்குள் காற்றை ஒருங்கே கொணர்ந்தவர் யார்? கடல்களை மேலாடையில் அடக்கிவைத்தவர் யார்? மண்ணுலகின் எல்லை களைக் குறித்தவர் யார்? அவர் பெயரென்ன? அவருடைய மகன் பெயரென்ன? நீதான் எல்லா வற்றையும் அறிந்தவனாயிற்றே!
5 கடவுளின் ஒவ்வொரு வாக்கும் பரிசோதிக் கப்பட்டு நம்பத்தக்கதாய் விளங்குகிறது; தம்மை அடைக்கலமாகக் கொண்டவர்களுக்கு அவர் கேடயமாயிருக்கிறார்.
6 அவருடைய வார்த்தைகளோடு ஒன்றையும் கூட்டாதே; கூட்டினால் நீ பொய்யனாவாய்; அவர் உன்னைக் கடிந்துகொள்வார்.
7 வரம் இரண்டு உம்மிடம் கேட்கிறேன், மறுக்காதீர்; நான் சாவதற்குள் அவற்றை எனக்கு அளித்தருளும்.
8 வஞ்சனையும் பொய்யும் என்னை விட்டு அகலச்செய்யும்; எனக்குச் செல்வம் வேண்டாம், வறுமையும் வேண்டாம்; எனக்குத் தேவையான உணவை மட்டும் தந்தருளும்.
9 எனக்கு எல்லாம் இருந்தால், நான், “உம்மை எனக்குத் தெரியாது” என்று மறுதலித்து, “ஆண்டவரைக் கண்டது யார்?” என்று கேட்க நேரிடும். நான் வறுமையுற்றால், திருடனாகி, என் கடவுளின் திருப்பெயருக்கு இழிவு வருவிக்க நேரிடும்.
10 வேலைக்காரரைப் பற்றி அவர் தலைவரிடம் போய்க் கோள் சொல்லாதே; சொன்னால், அவர் உன்மீது பழிசுமத்துவார்; நீயே குற்றவாளியாவாய்.
11 தந்தையைச் சபிக்கிற, தாயை வாழ்த்தாத மக்களும் உண்டு.
12 மாசு நிறைந்தவராயிருந்தும் தம்மைத் தூயோர் எனக் கருதும் மக்களும் உண்டு.
13 கண்களில் இறுமாப்பு, பார்வையில் ஆணவம் — இத்தகைய மக்களும் உண்டு.
14 பற்கள் கூரிய வாள், கீழ்வாய்ப் பற்கள் தீட்டிய கத்தி — இவற்றை உடைய மக்களும் உண்டு; அவர்கள் நாட்டிலுள்ள ஏழைகளை விழுங்கிவிடுவார்கள்; உலகிலுள்ள எளி யோரைத் தின்று விடுவார்கள்.
15 அட்டைப்பூச்சிக்கு, “தா, தா” எனக் கத்தும் இரு புதல்வியர் உண்டு; ஆவல் தணியாத மூன்று உண்டு; “போதும்” என்று சொல்லாத நான்காவது ஒன்றும் உண்டு.
16 அவை; பாதாளம், மலடியின் கருப்பை, நீரை அவாவும் வறண்ட நிலம், “போதும்” என்று சொல்லாத நெருப்பு ஆகியவையே.
17 தகப்பனை ஏளனம் செய்யும் கண் களையும் வயது முதிர்ந்த தாயை இகழும் விழிகளையும் இடுகாட்டுக் காக்கைகள் பிடுங்கட்டும், கழுகுக் குஞ்சுகள் தின்னட்டும்.
18 எனக்கு வியப்பைத் தருவன மூன்று உண்டு; என் அறிவுக்கு எட்டாத நான்காவது ஒன்றும் உண்டு.
19 அவை: வானத்தில் கழுகு மிதத்தல், கற்பாறைமேல் பாம்பு ஏறுதல், நடுக்கடலில் கப்பல் மிதந்து செல்லுதல், ஆண்மகனுக்குப் பெண்மீதுள்ள நாட்டம் ஆகியவையே.
20 விலைமகள் நடந்துகொள்ளும் முறை இதுவே: தவறு செய்தபின்* அவள் குளித்து விட்டு,* “நான் தவறு எதுவும் செய்யவில்லை” என்பாள்.
21 உலகத்தை நிலைகுலைப்பவை மூன்று; அது பொறுக்க இயலாத நான்காவது ஒன்றும் உண்டு:
22 அரசனாகிவிடும் அடிமை, உண்டு திரியும் கயவன்,
23 யாரும் விரும்பாதிருந்தும் இறுதியில் மணம் முடிக்கும் பெண், உரிமை மனைவியின் இடத்தைப் பறித்துக் கொள்ளும் அடிமைப் பெண்.
24 சிறியவையாயினும் ஞானமுள்ள சிற்று யிர்கள் நான்கு உலகில் உண்டு:
25 எறும்புகள்: இவை வலிமையற்ற இனம்; எனினும், கோடைக்காலத்தில் உணவைச் சேமித்து வைத்துக் கொள்கின்றன.
26 குறுமுயல்கள்: இவையும் வலிமையற்ற இனமே; எனினும், இவை கற்பாறைகளுக் கிடையே தம் வளைகளை அமைத்துக் கொள்கின்றன.
27 வெட்டுக்கிளிகள்: இவற்றிற்கு அரசன் இல்லை; எனினும், இவை அணி அணியாகப் புறப்பட்டுச் செல்லும்.
28 பல்லி: இதைக் கைக்குள் அடக்கி விடலாம்; எனினும், இது அரச மாளிகையிலும் காணப்படும்.
29 பீடுநடை போடுபவை மூன்று உண்டு; ஏறுபோல நடக்கின்ற நான்காவது ஒன்றும் உண்டு;
30 விலங்குகளுள் வலிமை வாய்ந்ததும் எதைக் கண்டும் பின்வாங்காததுமான சிங்கம்;
31 பெருமிதத்துடன் நடக்கும் சேவல்; மந்தைக்குமுன் செல்லும் வெள்ளாட்டுக்கடா; படையோடு செல்லும் அரசன்.
32 நீ வீண் பெருமைகொண்டு மூடத் தனமாக நடந்திருந்தாலும், தீமை செய்யத் திட்டம் வகுத்திருந்தாலும், உன் வாயை பொத்திக் கொண்டிரு.
33 ஏனெனில், மோரைக் கடைந்தால் வெண்ணெய் திரண்டுவரும்; மூக்கை நெரித்தால் இரத்தம் வரும்; எரிச்சலூட்டினால் சண்டை வரும்.
30:1 * ‘ஈத்தியேல்’ என்பதை ‘கடவுளே, நான் சோர்ந்துபோனேன்’ எனவும், ‘ஊக்கால்’ என்பதை ‘நான் நொந்துபோனேன்’ எனவும் மொழிபெயர்க்கலாம்..
30:20 *…* ‘அவள் சாப்பிட்டபின் வாயைத் துடைத்துவிட்டு’ எனவும் மொழிபெயர்க்கலாம்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-30
|
658 |
நீதிமொழிகள்
|
நீதிமொழிகள் அதிகாரம் – 31 – திருவிவிலியம்
|
அரசனுக்கு அறிவுரை
1 மாசாவின் அரசனான இலமுவேலின் மொழிகள்: இவை அவனுடைய தாய் தந்த அறிவுரைகள்:
2 பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.
3 உன் வீரியத்தையெல்லாம் பெண்களிடம் செலவழித்துவிடாதே; அரசரை அழிப்பவர்களை அணுகாதே.
4 இலமுவேலே, கேள், அரசருக்குக் குடிப்பழக்கம் இருத்தலாகாது; அது அரசருக்கு அடுத்ததன்று; வெறியூட்டும் மதுவை ஆட்சி யாளர் அருந்தலாகாது.
5 அருந்தினால், சட்டத்தை மறந்து விடு வார்கள்; துன்புறுத்தப்படுவோருக்கு நீதி வழங்கத் தவறுவார்கள்.
6 ஆனால் சாகும் தறுவாயில் இருப்பவருக்கு மதுவைக் கொடு; மனமுடைந்த நிலையில் இருப்பவருக்கும் திராட்சை இரசத்தைக் கொடு.
7 அவர்கள் குடித்துக் தங்கள் வறுமையை மறக்கட்டும்; தங்கள் துன்பத்தை நினையா திருக்கட்டும்.
8 பேசத் தெரியாதவர் சார்பாகப் பேசு; திக்கற்றவர்கள் எல்லாருடைய உரிமைகளுக் காகவும் போராடு.
9 அவர்கள் சார்பாகப் பேசி நியாயமான தீர்ப்பை வழங்கு; எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கு.
நல்ல மனையாள்
10 திறமைவாய்ந்த மனத்திடமுள்ள மனையாளைக் காண்பது மிக மிக அரிது; அவள் பவளத்தைவிடப் பெருமதிப்புள்ளவள்.
11 அவளுடைய கணவன் அவளை மனமார நம்புகிறான்; அவளால் அவனுக்கு நலமும் வளமும் பெருகும்.
12 அவள் தன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு நல்லதையே செய்வாள்; ஒரு நாளும் தீங்கு நினையாள்.
13 கம்பளி, சணல் ஆகிய பொருள்களைத் தானே தேடிக் கொணர்வாள்; தன் வேலையனைத் தையும் விருப்புடன் தானே செய்வாள்.
14 அவளை ஒரு வணிகக் கப்பலுக்கு ஒப்பிட லாம்; அவள் உணவுப் பொருள்களைத் தொலையி லிருந்து வாங்கி வருவாள்.
15 வைகறையில் துயிலெழுவாள்; வீட்டாருக்கு உணவு சமைப்பாள்; வேலைக்காரிகளுக்குரிய வேலைகளைக் குறிப்பாள்.
16 ஒரு நிலத்தை வாங்கும்போது தீர எண்ணிப்பார்த்தே வாங்குவாள்; தன் ஊதி யத்தைகொண்டு அதில் கொடிமுந்திரித் தோட்டம் அமைப்பாள்.
17 சுறுசுறுப்புடன் அவள் வேலை செய்வாள்; அயர்வின்றி நாள் முழுதும் ஊக்கம் குன்றாது உழைப்பாள்.
18 தன் உழைப்பு நற்பலன் தருமென்பது அவளுக்குத் தெரியும்; அவள் தன் வீட்டில் ஏற்றிவைத்த விளக்கு ஒருபோதும் அணையாது.
19 இராட்டினத்தைத் தானே பிடித்து வேலை செய்வாள்; நூல் இழைகளைத் தன் விரல்களால் திரிப்பாள்.
20 எளியவனுக்கு உதவி செய்யத் தன் கையை நீட்டுவாள். வறியவனுக்கு வயிறார உணவளிப்பாள்.
21 குளிர்காலத்தில் அவள் வீட்டாரைப்பற்றிய கவலை அவளுக்கு இராது; ஏனெனில், எல்லார்க்கும் திண்மையான கம்பளிப் போர்வை உண்டு.
22 தனக்கு வேண்டிய போர்வையைத் தானே நெய்வாள்; அவள் உடுத்துவது பட்டாடையும் பல வண்ண உடைகளுமே.
23 அவளை மணந்த கணவன் ஊர்ப் பெரியோருள் ஒருவனாய் இருப்பான்; மக்கள் மன்றத்தில் புகழ் பெற்றவனாயுமிருப்பான்.
24 அவள் பட்டாடைகளை நெய்து விற்பாள்; வணிகரிடம் இடுப்புக் கச்சைகளை விற்பனை செய்வாள்.
25 அவள் ஆற்றலையும் பெருமையையும் அணிகலனாகப் பூண்டவள்; வருங்காலத்தைக் கவலை இன்றி எதிர்நோக்கியிருப்பாள்.
26 அவள் பேசும்போது ஞானத்தோடு பேசுவாள்; அன்போடு அறிவுரை கூறுவாள்.
27 தன் இல்லத்தின் அலுவல்களில் கண்ணும் கருத்துமாய் இருப்பாள்; உணவுக் காகப் பிறர் கையை எதிர்பார்த்துச் சோம்பி யிருக்கமாட்டாள்.
28 அவளுடைய பிள்ளைகள் அவளை நற்பேறு பெற்றவள் என வாழ்த்துவார்கள்; அவளுடைய கணவன் அவளை மனமாரப் புகழ்வான்.
29 “திறமை வாய்ந்த பெண்கள் பலர் உண்டு; அவர்கள் அனைவரிலும் சிறந்தவள் நீயே” என்று அவன் சொல்வான்.
30 எழில் ஏமாற்றும், அழகு அற்றுப் போகும்; ஆண்டவரிடம் அச்சம் கொண்டுள்ள பெண்ணே புகழத்தக்கவள்.
31 அவளுடைய செயல்களின் நற்பயனை எண்ணி அவளை வாழ்த்துங்கள்; அவளது உழைப்பை மக்கள் மன்றம் பாராட்டுவதாக.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-proverbs-31
|
659 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
|
வாழ்க்கை பயனற்றது
1 தாவீதின் மகனும் எருசலேமின் அரசரு
மாகிய சபையுரையாளர் உரைத்தவை:
2 வீண், முற்றிலும் வீண், என்கிறார்
சபையுரையாளர்;
வீண், முற்றிலும் வீண், எல்லாமே வீண்.
3 மனிதர் தம் வாழ்நாள் முழுவதும்
பாடுபட்டு உழைக்கின்றனர்;
ஆனால், அவர்கள் உழைப்பினால்
பெறும் பயன் என்ன?
4 ஒரு தலைமுறை மறைகின்றது;
மறு தலைமுறை தோன்றுகின்றது;
உலகமோ மாறாது
என்றும் நிலைத்திருக்கின்றது.
5 ஞாயிறும் தோன்றுகின்றது;
ஞாயிறும் மறைகின்றது. பிறகு
தன் இடத்திற்கு விரைந்து சென்று
மீண்டும் தோன்றுகின்றது.
6 தெற்கு நோக்கிக் காற்று வீசுகின்றது;
பிறகு வடக்கு நோக்கித் திரும்புகின்றது.
இப்படிச் சுழன்று சுழன்று வீசித்
தன் இடத்திற்குத் திரும்புகின்றது.
7 எல்லா ஆறுகளும் ஓடிக்
கடலோடு கலக்கின்றன; எனினும், அவை
ஒருபோதும் கடலை நிரப்புவதில்லை;
மீண்டும் ஓடுவதற்காக உற்பத்தியான
இடத்திற்கே திரும்புகின்றன.
8 அனைத்தும் சலிப்பையே தருகின்றன;
அதைச் சொற்களால்
எடுத்துரைக்க இயலாது.
எவ்வளவு பார்த்தாலும்
கண்ணின் ஆவல் தீர்வதில்லை;
எவ்வளவு கேட்டாலும்
காதின் வேட்கை தணிவதில்லை.
9 முன்பு இருந்ததே பின்பும் இருக்கும்;
முன்பு நிகழ்ந்ததே பிறகும் நிகழும்.
புதியது என்று உலகில் எதுவுமே இல்லை.
10 ஏதேனும் ஒன்றைப்பற்றி,
‘இதோ, இது புதியது’ என்று
சொல்லக் கூடுமா? இல்லை.
அது ஏற்கனவே,
நமது காலத்திற்கு முன்பே,
பல்லாயிரம் ஆண்டுகளாக இருப்பதாயிற்றே!
11 முற்காலத்தவரைப் பற்றிய நினைவு
இப்போது யாருக்கும் இல்லை;
அவ்வாறே, வரும் காலத்தவருக்கும்
தமக்கு முந்திய காலத்தவரைப்பற்றிய
நினைவு இருக்கப்போவதில்லை.
சபையுரையாளரின் அனுபவம்
12 சபையுரையாளனாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.
13 இவ்வுலகில் நடக்கிற எல்லாவற்றையும் ஞானத்தின் துணை கொண்டு கூர்ந்து ஆராய்வதில் என் சிந்தையைச் செலுத்தினேன். மானிடர் பாடுபட்டுச் செய்வதற்கென்று அவர்களுக்குக் கடவுள் எவ்வளவு தொல்லைமிகு வேலையைக் கொடுத்திருக்கிறார்!
14 இவ்வுலகில் செய்யப்படும் ஒவ்வொரு செயலையும் கவனித்தேன். அனைத்தும் வீணான செயல்களே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானவை.
15 கோணலானதை நேராக்க இயலாது;
இல்லாததை எண்ணிக்கையில்
சேர்க்க முடியாது.
16 எனக்குமுன் எருசலேமில் அரசராய் இருந்தவர்கள் எல்லாரையும் விட நான் ஞானத்தை மிகுதியாகத் தேடிப்பெற்றவன்; மிகுந்த ஞானத்தையும் அறிவையும் அனுபவத்தால் பெற்றவன் என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
17 ஞானத்தையும் அறிவையும்பற்றித் தெரிந்துகொள்வதில் என் சிந்தையைச்செலுத்தினேன்; மடமையையும் மதிகேட்டையும்பற்றி அறிய முயன்றேன். இதுவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பானதே எனக் கண்டேன்.
18 ஞானம் பெருகக் கவலை பெருகும்; அறிவு பெருகத் துயரம் பெருகும்.
1:16 1 அர 4:29-31.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-1
|
660 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
|
1 “இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்; நெஞ்சே! நீ வா!” என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன்.
2 சிரித்துக் களித்தல் மதிகெட்ட செயல் என்றேன்;
3 இன்பம் நன்மை பயக்காது என்றேன். ஞானத்தின் மீதுள்ள ஆவலை விட்டுவிடாமலே, மதுவால் உடலுக்குக் களிப்பூட்டவும் மதிகெட்ட திட்டத்தில் ஈடுபடவும் தலைப்பட்டேன்; மக்கள் தங்கள் குறுகிய உலக வாழ்க்கையில் செய்யக்கூடிய நலமான செயல் எதுவென்று அறிவதற்காக இவ்வாறு செய்யலானேன்;
4 பெரிய காரியங்களைச் செய்து முடித்தேன்; எனக்கென்று வீடுகளைக் கட்டினேன்; திராட்சைத் தோட்டங்களை அமைத்தேன்.
5 எனக்கென்று தோட்டம், பூங்கா பல அமைத்து அவற்றில் எல்லா வகையான பழமரங்களையும் நட்டேன்;
6 தோப்பில் வளரும் மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காகக் குளங்களை வெட்டினேன்;
7 ஆண் பெண் அடிமைகளை விலைக்கு வாங்கினேன்; என் வீட்டிலேயே பிறந்த அடிமைகளும் எனக்கு இருந்தார்கள்; ஏராளமான ஆடுமாடுகளும் எனக்கு இருந்தன. எனக்குமுன் எருசலேமில் இருந்த எவருக்கும் அத்தனை ஆடுமாடுகள் இருந்ததில்லை.
8 வெள்ளி, பொன், மன்னர்களின் செல்வம், மாநிலங்கள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொண்டேன். இசைவல்ல ஆடவரும் பெண்டிரும் என்னைப் பாடி மகிழ்வித்தனர். மகிழ்வூட்டும் மங்கையரையும் வைத்திருந்தேன்.
9 இவ்வாறு என் செல்வம் வளர்ந்தது. எருசலேமில் எனக்குமுன் இருந்த எல்லாரையும்விடப் பெரிய செல்வனானேன். எனினும், எனக்கிருந்த ஞானம் குறைபடவில்லை.
10 என் கண்கள் விரும்பின அனைத்தையும் அவற்றிற்கு அளித்தேன். எந்த மகிழ்ச்சியையும் என் மனத்திற்குக் கொடுக்க நான் தவறவில்லை. என் முயற்சி அனைத்தும் என் உள்ளத்திற்கு மகிழ்ச்சியூட்டியது. இதுவே என் முயற்சிகளுக்கெல்லாம் கிடைத்த பலனாகும்.
11 நான் செய்த செயல்கள் யாவற்றையும் அவற்றைச் செய்வதற்கு நான் எடுத்த முயற்சியையும் நினைத்துப் பார்த்தபோதோ, அவையாவும் வீண் என்பதைக் கண்டேன். அவை அனைத்தும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்; முற்றும் பயனற்ற செயல்களே.
12 நான் ஞானம், மூடத்தனம், மதிகேடு ஆகியவற்றை ஆராயத்தலைப்பட்டேன். ஓர் அரசன் தனக்கு முன்னிருந்த அரசர் செய்ததைத் தவிர வேறென்ன செய்வான்?
13 ஒளி இருளை விட மேலானதாய் இருப்பதுபோல, ஞானமும் மதிகேட்டைவிட மேலானதாய் இருக்கக் கண்டேன்.
14 ஞானிகளின் கண்கள்
ஒளி படைத்தவை;
மூடரோ இருளில் நடப்பவர்.
ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.
15 மூடருக்கு நேரிடுவது போலவே எனக்கும் நேரிடும். அப்படியானால் நான் ஞானத்தில் வளர்ந்தது எதற்காக? அதனால் பயனென்ன என்று சிந்தித்து, அதுவும் வீணே என்ற முடிவுக்கு வந்தேன்.
16 ஞானிகளையோ, மூடரையோ யாரும் நினைவில் வைத்திருப்பதில்லை. வருங்காலத்தில் அனைவரும் மறக்கப்படுவர். மூடர் மடிவதுபோல ஏன் ஞானிகளும் மடியவேண்டும்?
17 எனவே, நான் வாழ்க்கையில் வெறுப்புக் கொண்டேன். மேலும், உலகில் செய்யப்படுபவை யாவும் எனக்குத் தொல்லையையே கொடுத்தன. எல்லாம் வீண்; யாவும் காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
18 நான் இவ்வுலகில் எவற்றையெல்லாம் செய்துமுடிக்க உழைத்தேனோ அவற்றின் மீதெல்லாம் வெறுப்புக் கொண்டேன். ஏனெனில், அவற்றை எனக்குப்பின் வருகிறவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டுமென்பது எனக்குத் தெரியும்.
19 அவர்கள் ஞானமுள்ளவராய் இருக்கலாம் அல்லது மதிகேடராய் இருக்கலாம்; யாருக்குத் தெரியும்? எத்தகையவராய் இருப்பினும், நான் இவ்வுலகில் ஞானத்தோடு உழைத்து அடைந்த பயன்களுக்கெல்லாம் அவர்களே உரிமையாளர் ஆவர்.
20 என் உழைப்பும் வீணே. நான் உலகில் செய்த எல்லா முயற்சிக்காகவும் மனமுடைந்துபோனேன்.
21 ஏனெனில், ஞானத்தோடும் அறிவாற்றலோடும் திறமையோடும் ஒருவர் உழைக்கிறார்; உழைத்துச் சேர்த்த சொத்தை அதற்காக உழைக்காதவருக்கு விட்டுச் செல்கிறார். அவரது உழைப்பும் வீணே.
22 இது பெரிய அநீதி. உலகில் அவர் செய்த எல்லா முயற்சிக்காகவும் வகுத்த செயல் திட்டங்களுக்காகவும் அவருக்குக் கிடைக்கும் பயனென்ன?
23 வாழ்நாளெல்லாம் அவருக்குத் துன்பம்; வேலையில் தொந்தரவு; இரவிலும் அவரது மனத்திற்கு அமைதியில்லை. எல்லாம் வீணே.
24 உண்பதையும் குடிப்பதையும் தம் உழைப்பால் வரும் இன்பத்தைத் துய்ப்பதையும்விட, நலமானது மனிதருக்கு வேறொன்றுமில்லை. இந்த வாய்ப்பும் கடவுள் தந்ததே எனக் கண்டேன்.
25 அவரின்றி ஒருவருக்கு எப்படி உணவு கிடைக்கும்? அவரால் எப்படி இன்பம் துய்க்க இயலும்?
26 கடவுள் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு ஞானத்தையும் அறிவாற்றலையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறார். பாவம் செய்கிறவருக்கோ செல்வத்தைச் சேர்த்து வைக்கும் வேலையைக் கொடுக்கிறார்; ஆனால், அச்செல்வம் தம் விருப்பத்திற்கேற்ப நடப்பவருக்கு விட்டுச் செல்வதற்கே. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
2:4-8 1 அர 10:23-27; 2 குறி 9:22-27.
2:7 1 அர 4:23.
2:8 1 அர 10:10, 14-22.
2:9 1 குறி 29:25.
2:23 யோபு 5:7; 14:1.
2:24 சஉ 3:13; 5:18; 9:7; லூக் 12:19; 1 கொரி 15:32.
2:26 யோபு 32:8; நீமொ 2:6.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-2
|
661 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
|
ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு
1 ஒவ்வொன்றுக்கும் ஒரு நேரமுண்டு.
உலகில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்
சிக்கும் ஒரு காலமுண்டு.
2 பிறப்புக்கு ஒரு காலம்,
இறப்புக்கு ஒரு காலம்;
நடவுக்கு ஒரு காலம்,
அறுவடைக்கு ஒரு காலம்;
3 கொல்லுதலுக்கு ஒரு காலம்,
குணப்படுத்தலுக்கு ஒரு காலம்;
4 இடித்தலுக்கு ஒரு காலம்,
கட்டுதலுக்கு ஒரு காலம்;
அழுகைக்கு ஒரு காலம்,
சிரிப்புக்கு ஒரு காலம்;
துயரப்படுதலுக்கு ஒரு காலம்,
துள்ளி மகிழ்தலுக்கு ஒரு காலம்;
5 கற்களை எறிய ஒரு காலம்,
கற்களைச் சேர்க்க ஒரு காலம்;
அரவணைக்க ஒரு காலம்,
அரவணையாதிருக்க ஒரு காலம்;
6 தேடிச் சேர்ப்பதற்கு ஒரு காலம்,
இழப்பதற்கு ஒரு காலம்;
காக்க ஒரு காலம்,
தூக்கியெறிய ஒரு காலம்;
7 கிழிப்பதற்கு ஒரு காலம்,
தைப்பதற்கு ஒரு காலம்;
பேசுவதற்கு ஒரு காலம்,
பேசாதிருப்பதற்கு ஒரு காலம்;
8 அன்புக்கு ஒரு காலம்,
வெறுப்புக்கு ஒரு காலம்;
போருக்கு ஒரு காலம்,
அமைதிக்கு ஒரு காலம்.
9 வருந்தி உழைப்பவர் தம் உழைப்பினால் அடையும் பயன் என்ன?
10 மனிதர் பாடுபட்டு உழைப்பதற்கெனக் கடவுள் அவர்மீது சுமத்திய வேலை சுமையைக் கண்டேன்.
11 கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்; காலத்தைப் பற்றிய உணர்வை மனிதருக்குத் தந்திருக்கிறார். ஆயினும், கடவுள் தொடக்க முதல் இறுதிவரை செய்துவருவதைக் கண்டறிய மனிதரால் இயலாது.
12 எனவே, மனிதர் தாம் உயிரோடிருக்கும் போது, இன்பம் துய்த்து மகிழ்வதைவிடச் சிறந்தது அவருக்கு வேறொன்றும் இல்லை என அறிந்துகொண்டேன்.
13 உண்டு குடித்து உழைப்பால் வரும் பயனைத் துய்க்கும் இன்பம் எல்லா மனிதருக்கும் கடவுள் அளித்த நன்கொடை.
14 கடவுள் செய்யும் ஒவ்வொன்றும் எப்போதும் நிலைத்திருக்கும் என்பதை நான் அறிவேன். அதனோடு கூட்டுவதற்கோ அதனின்று குறைப்பதற்கோ எதுவுமில்லை. தமக்கு மனிதர் அஞ்சி நடக்க வேண்டுமென்று கடவுள் எல்லாவற்றையும் செய்திருக்கிறார்.
15 இப்போது நடப்பது ஏற்கெனவே நடந்ததாகும். இனி நடக்கப்போவதும் ஏற்கெனவே நடந்ததாகும். நடந்ததையே கடவுள் மீண்டும் மீண்டும் நடைபெறச் செய்கிறார்.
உலகில் காணப்படும் அநீதி
16 வேறொன்றையும் உலகில் கண்டேன். நேர்மையும் நீதியும் இருக்கவேண்டிய இடங்களில் அநீதியே காணப்படுகிறது.
17 ‘கடவுள் நல்லாருக்கும் பொல்லாருக்கும் தீர்ப்புவழங்கப் போகிறார். ஏனெனில், ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு செயலுக்கும் அவற்றிற்குரிய காலத்தை அவர் குறித்திருக்கிறார்’ என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.
18 “மனிதர் விலங்கைப் போன்றவர் என்பதைக் காட்டுவதற்காகவே கடவுள் அவருக்குச் சோதனைகளை அனுப்புகிறார்” என்று எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
19 மனிதருக்கு நேரிடுவதே விலங்குக்கும் நேரிடுகிறது; மனிதரும் மடிகிறார்; விலங்கும் மடிகிறது. எல்லா உயிர்களுக்கும் இருப்பது ஒரு வகையான மூச்சே. விலங்கைவிட மனிதர் மேலானவர் இல்லை; எல்லாம் வீணே.
20 எல்லா உயிர்களும் இறுதியாகச் செல்லும் இடம் ஒன்றே. எல்லாம் மண்ணின்றே தோன்றின; எல்லாம் மண்ணுக்கே மீளும்.
21 மனிதரின் உயிர்மூச்சு மேலே போகிறது என்றும் விலங்குகளின் உயிர் மூச்சு கீழே தரைக்குள் இறங்குகிறது என்றும் யாரால் சொல்ல இயலும்?
22 ஒருவர் தம் வேலையைச் செய்வதில் இன்பம் காண்பதே அவருக்கு நல்லது என்று கண்டேன். ஏனெனில், அவ்வேலை அவருக்கெனக் குறிக்கப்பட்டுள்ளது. அவர் இறந்தபின் நடப்பதைக் காண அவரைத் திரும்ப யாரும் கொண்டு வரப்போவதில்லை.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-3
|
662 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
|
1 பிறகு நான் இவ்வுலகில் நடக்கும் கொடுமைகளையெல்லாம் பார்த்தேன். இதோ! மக்கள் ஒடுக்கப்பட்டுக் கண்ணீர் சிந்துகிறார்கள். அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை. அவர்களை ஒடுக்குவோர் கை ஓங்கி இருந்ததால், அவர்களைத் தேற்றுவார் எவருமில்லை.
2 ஆகையால், இன்று உயிரோடு வாழ்கிறவர்களின் நிலைமையைவிட ஏற்கெனவே மாண்டு மறைந்துபோனவர்களின் நிலைமையே மேலானது என்றேன்.
3 இவ்விரு சாராரின் நிலைமையைவிட இன்னும் பிறவாதவர்களின் நிலைமையே சிறந்தது. ஏனெனில், அவர்கள் இவ்வுலகில் நடக்கும் கொடும் செயல்களைப் பார்க்கும் நிலையில் இல்லை.
4 மனிதர் ஏன் இவ்வளவு பாடுபட்டு உழைக்கின்றனர் என்பதையும் கண்டறிந்தேன். இதற்குக் காரணம் மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மையாகும். இது வீண் செயல்; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
5 தம் கைகளைக் கட்டிக்கொண்டு பட்டினிகிடந்து மடிகிறவர் மடையர் என்று சொல்லப்படுகிறது.
6 காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.
7 உலக வாழ்க்கையில் வேறொரு காரியமும் வீணென்று கண்டேன்.
8 ஒருவர் தனி மனிதராக வாழ்கிறார். அவருக்குப் பிள்ளையுமில்லை, உடன் பிறந்தாருமில்லை; என்றாலும், அவர் ஓயாது உழைக்கிறார். ஆனால், தமக்கிருக்கும் செல்வத்தால் ஒருபோதும் மனநிறைவடைவதுமில்லை; தாம் இவ்வாறு உழைப்பதும் எவ்வகையான இன்பத்தையும் அனுபவியாமல் இருப்பதும் யாருக்காக என்று அவர் எண்ணிப் பார்ப்பதுமில்லை. இது வீணானதும் வருந்தத்தக்கதுமான வாழ்க்கை அன்றோ?
9 தனி மனிதராய் இருப்பதை விட இருவராய் இருப்பது மேல். ஏனெனில், அவர்கள் சேர்ந்து உழைப்பதால், அவர்களுக்கு மிகுந்த பயன் கிடைக்கும்.
10 ஒருவர் விழுந்தால், அடுத்தவர் அவரைத் தூக்கி விடுவார். தனி மனிதராய் இருப்பவர் விழுந்தால், அவரது நிலைமை வருந்தத்தக்கதாகும்; ஏனெனில், அவரைத் தூக்கி விட எவருமில்லை.
11 குளிரை முன்னிட்டு இருவர் ஒன்றாய் படுத்துச் சூடு உண்டாக்கிக்கொள்ளலாம்; தனி மனிதனுக்கு எப்படிச் சூடு உண்டாகும்?
12 தனி மனிதரை வீழ்த்தக்கூடிய எதிரியை இருவரால் எதிர்த்து நிற்க முடியும். முப்புரிக் கயிறு அறுவது கடினம்.
13 வயதுசென்ற அறிவுரை கேளாத முட்டாள் அரசரைவிட, விவேகமுள்ள ஏழை இளைஞனே மேலானவன்.
14 சிறையில் கைதியாதிருந்தவர் அரியணை ஏறியதும் உண்டு; அரசுரிமையுடன் பிறந்தவர் வறியவராவதும் உண்டு.
15 ஆனால், இந்த உலகில் வாழும் மக்கள் அனைவரும் அந்த அரச பதவியை ஏற்ற இளைஞனின் சார்பில் இருந்ததைப் பார்த்தேன்.
16 அவன் ஆண்ட மக்களின் எண்ணிக்கைக்கு வரையறையே இல்லை. அவன் காலத்திற்குப்பின் வந்த மக்களோ அவனில் மனநிறைவடையவில்லை. இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-4
|
663 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
|
கடவுளுக்குக் கொடுக்கும் வாக்கைப் பற்றிய எச்சரிக்கை
1 கடவுளின் கோவிலுக்குச் செல்லும்போது விழிப்புடனிரு. மதிகேடரைப்போல பலிசெலுத்துவதை விட, உள்ளே சென்று கேட்டறிவதே மேல். ஏனெனில், அவர்கள் தாங்கள் செய்த தீவினைகளை உணர்வதில்லை.
2 கடவுள் முன்னிலையில் சிந்தித்துப் பாராமல் எதையும் பேசாதே; எண்ணிப் பாராமல் வாக்குக் கொடுக்காதே. கடவுள் விண்ணுலகில் இருக்கிறார்; நீயோ மண்ணுலகில் இருக்கிறாய்; எனவே, மிகச்சில சொற்களே சொல்.
3 கவலை மிகுமானால் கனவுகள் வரும்; சொல் மிகுமானால் மூடத்தனம் வெளியாகும்.
4 கடவுளுக்கு நீ ஏதாவதொரு வாக்குக் கொடுத்திருந்தால், அதை நிறைவேற்றுவதில் காலந்தாழ்த்தாதே. ஏனெனில், பொறுப்பின்றி நடப்போரிடம் அவர் விருப்பங்கொள்வதில்லை. என்ன வாக்குக் கொடுத்தாயோ அதைத் தவறாமல் நிறைவேற்று.
5 கொடுத்த வாக்கை நிறைவேற்றாமற் போவதைவிட, வாக்குக் கொடாமல் இருப்பதே மேல்.
6 வாய் தவறிப் பேசிப் பழிக்கு ஆளாகாதபடி பார்த்துக்கொள்; தவறுதலாய்ச் செய்துவிட்டேன் என்று வான தூதரிடம் சொல்லும்படி நடந்துகொள்ளாதே. உன் பேச்சின் பொருட்டுக் கடவுள் உன்மீது சினங்கொண்டு, நீ செய்தவற்றை அழிக்கும்படி நடந்துகொள்வானேன்?
7 கனவுகள் பல வரலாம்; செயல்களும் சொற்களும் எத்தனையோ இருக்கலாம். நீயோ கடவுளுக்கு அஞ்சி நட.
உலக வாழ்க்கை பயனற்றது
8 ஒரு மாநிலத்தில் ஏழைகள் ஒடுக்கப்படுவதையும் அவர்களுக்கு நீதி நியாயம் வழங்கப்படாதிருப்பதையும் நீ காண்பாயானால் வியப்படையாதே. ஏனெனில், அலுவலர்களுக்குமேல் அதிகாரிகள் உள்ளனர் என்றும், அவர்களுக்கும் மேலதிகாரிகள் உள்ளனர் என்றும் சொல்வார்கள்.
9 ‘பொதுநலம்’, ‘நாட்டுத் தொண்டு’ என்ற சொற்களும் உன் காதில் விழும்.
10 பண ஆசை உள்ளவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் ஆவல் தீராது; செல்வத்தின்மேல் மிகுந்த ஆசை வைப்பவர் அதனால் பயனடையாமற்போகிறார். இதுவும் வீணே.
11 சொத்து பெருகினால் அதைச் சுரண்டித் தின்போரின் எண்ணிக்கையும் பெருகும். செல்வர்களுக்குத் தங்கள் சொத்தைக் கண்ணால் பார்ப்பதைத் தவிர வேறு என்ன பயன் உண்டு?
12 வேலை செய்கிறவரிடம் போதுமான சாப்பாடு இருக்கலாம் அல்லது இல்லாதிருக்கலாம்; ஆனால், அவருக்கு நல்ல தூக்கமாவது இருக்கும். செல்வரது செல்வப் பெருக்கே அவரைத் தூங்கவிடாது.
13 உலகில் ஒரு பெருந்தீங்கை நான் கண்டேன். ஒருவர் சேமிக்கும் செல்வம் அவருக்குத் துன்பத்தையே விளைவிக்கும்.
14 ஒருவர் ஒரு நட்டம்தரும் தொழிலில் ஈடுபட்டுத் தம் செல்வத்தை இழக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை உள்ளது. ஆனால், அப்பிள்ளைக்குக் கொடுப்பதற்கோ ஒன்றுமில்லை.
15 மனிதர் தாயின் வயிற்றிலிருந்து வெற்றுடம்போடு வருகின்றனர்; வருவது போலவே இவ்வுலகை விட்டுப் போகின்றனர். அவர் தம் உழைப்பினால் ஈட்டும் பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.
16 இது கொடிய தீங்காகும். அவர் எப்படி வந்தாரோ அப்படியே மீளுகிறார்; காற்றைப் பிடிக்கப் பாடுபடுகிறார்.
17 அவர் அடையும் பயன் என்ன? வாழ்நாள் முழுவதும் இருள், கவலை, பிணி, எரிச்சல், துன்பம்.
18 ஆகையால், நான் இந்த முடிவுக்கு வந்தேன்; தமக்குக் கடவுள் வரையறுத்திருக்கும் குறுகிய வாழ்நாளில் மனிதர் உண்டு குடித்து, உலகில் நம் உழைப்பின் பயனைத் துய்ப்பதே நலம்; அதுவே தகுந்ததுமாகும்.
19 கடவுள் ஒருவருக்குப் பெருஞ்செல்வமும் நல்வாழ்வும் கொடுத்து, அவற்றை அவர் துய்த்து மகிழும் வாய்ப்பையும் அளிப்பாரானால், அவர் நன்றியோடு தம் உழைப்பின் பயனை நுகர்ந்து இன்புறலாம். அது அவருக்குக் கடவுள் அருளும் நன்கொடை.
20 தம் வாழ்நாள் குறுகியதாயிருப்பதைப்பற்றி அவர் கவலைப்படமாட்டார். ஏனெனில் கடவுள் அவர் உள்ளத்தை மகிழ்ச்சியோடிருக்கச் செய்கிறார்.
5:4 திபா 66:13-14.
5:15 யோபு 1:21; திபா 49:17; 1 திமொ 6:7.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-5
|
664 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
|
1 உலகில் மனிதரைக் கவலையில் ஆழ்த்திக்கொண்டிருக்கும் ஒரு தீங்கைக் கண்டேன்.
2 கடவுள் ஒருவருக்குச் செல்வத்தையும் நல்வாழ்வையும் மேன்மையையும் கொடுக்கிறார். ஆம், அவர் விரும்புவதெல்லாம் அவருக்குக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றைத் துய்க்கவோ கடவுள் அவருக்கு வாய்ப்பளிப்பதில்லை. அடுத்தவர் ஒருவர் அவற்றைத் துய்த்து மகிழ்கிறார். இங்கே பயனின்மையும் கடுந்துயரமும் காணப்படுகின்றன.
3 ஒருவருக்கு நூறு பிள்ளைகள் இருக்கலாம். அவர் நீண்ட ஆயுளுடனும் வாழலாம். அவர் நெடுங்காலம் உயிரோடிருந்தும், தமக்குள்ள செல்வத்தால் இன்பம் அடையாமலும், இறந்தபின் அடக்கம் செய்யப்படாமலும் மறைவாரானால், அவரைவிடக் கருச்சிதைந்த பிண்டமே மேல் என்கிறேன்.
4 அப்பிண்டம் தோன்றுவதால் பயனில்லை. அது இருளில் மறைகிறது; அதன் பெயரை இருள் மூடிவிடும்.
5 அது கதிரவனைக் கண்டதுமில்லை; எதையும் அறிந்ததுமில்லை. ஆனால் அதன் நிலை அவருடையதை விட மேலானது.
6 வாழ்கையில் இன்பம் துய்க்காமல் இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர் கூட அதைவிட மேலானவர் இல்லை. ஏனெனில், இருவரும் ஒரே இடத்திற்கு செல்கின்றனர் அல்லவா?
7 வயிற்றுக்காகவே ஒருவர் வேலை செய்கிறார்; ஆனால், அவருக்குப் போதுமான உணவு கிடைப்பதில்லை.
8 இப்படியிருக்க, மதிகேடரைவிட ஞானமுள்ளவர் எவ்வகையில் மேலானவர்? அல்லது ஏழை ஒருவருக்கு மனிதர்முன் திறமையுடன் நடந்துகொள்ளத் தெரிந்திருந்தும், அதனால் அவருக்குப் பயனென்ன?
9 இல்லாத ஒன்றை அடைய விரும்பி அலைந்து திரிவதை விட உள்ளதே போதும் என்ற மனநிறைவோடியிருப்பதே மேல். ஆனால், இதுவும் வீணே; காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்.
10 இப்பொழுது நடக்கும் ஒவ்வொன்றும் நெடுங்காலத்திற்கு முன்பே முடிவு செய்யப்பட்டதாகும். மனிதர் யாரென்று நமக்குத் தெரியும். தம்மைவிட வலிமை வாய்ந்தவருடன் வாதாட அவரால் இயலாது.
11 பேச்சு நீள நீள, அதன் பயன் குறைந்து கொண்டே போகும். அதனால் மனிதர் அடையும் நன்மை என்ன?
12 மனிதருடைய வாழ்நாள் குறுகியது; பயனற்றது; நிழலைப்போல மறைவது. அதில் தமக்கு நலமானது எது என்பதை யாரால் அறியக் கூடும்? தம் மறைவிற்குப் பிறகு உலகில் என்ன நடக்கும் என்பதை யாரால் தெரிந்து கொள்ள இயலும்?
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-6
|
665 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
|
வாழ்க்கையைப் பற்றிய எண்ணங்கள்
1 விலையுயர்ந்த நறுமணத் தைலத்தை
விட நற்புகழே மேல்.
பிறந்த நாளைவிட
இறக்கும் நாளே சிறந்தது.
2 விருந்து நடக்கும் வீட்டிற்குச்
செல்வதைவிடத்
துக்க வீட்டிற்குச் செல்வதே நல்லது.
ஏனெனில், அனைவருக்கும்
இதுவே முடிவு என்பதை உயிருடன்
இருப்போர் அங்கே உணர்ந்துகொள்வர்.
3 சிரிப்பைவிடத் துயரமே நல்லது.
துயரத்தால் முகத்தில்
வருத்தம் தோன்றலாம்; ஆனால்,
அது உள்ளத்தைப் பண்படுத்தும்.
4 ஞானமுள்ளவரின் உள்ளத்தில்
துக்க வீட்டின் நினைவே இருக்கும்;
மூடரின் உள்ளத்திலோ
சிற்றின்ப வீட்டின் நினைவே இருக்கும்.
5 மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும்
ஞானி இடித்துரைப்பதைக்
கேட்பதே நன்று.
6 மூடரின் சிரிப்பு, பானையின்கீழ்
எரியும் முட்செடி படபடவென்று
வெடிப்பதைப் போன்றது;
அதனால் பயன் ஒன்றுமில்லை.
7 இடுக்கண் ஞானியையும்
பைத்தியக்காரனாக்கும்.
கைக்கூலி உள்ளத்தைக் கறைப்படுத்தும்.
8 ஒன்றின் தொடக்கமல்ல,
அதன் முடிவே கவனிக்கத் தக்கது;
உள்ளத்தில் பெருமைகொள்வதைவிடப்
பொறுமையோடு இருப்பதே மேல்.
9 உள்ளத்தில் வன்மத்திற்கு
இடங் கொடாதே;
மூடரின் நெஞ்சமே
வன்மத்திற்கு உறைவிடம்.
10 “இக்காலத்தைவிட முற்காலம்
நற்காலமாயிருந்ததேன்?”
என்று கேட்காதே; இது
அறிவுடையோர் கேட்கும் கேள்வியல்ல.
11 மரபுரிமைச் சொத்தோடு
ஞானம் சேர்ந்திருத்தல் வேண்டும்;
இதுவே உலகில் வாழும்
மக்களுக்கு நல்லது.
12 பணம் நிழல் தருவதுபோல
ஞானமும் நிழல் தரும்;
ஞானம் உள்ளவருக்கு
அதனால் வாழ்வு கிடைக்கும்;
அறிவினால் கிடைக்கும் பயன் இதுவே.
13 கடவுளின் செயலைச் சிந்தித்துப்பார்.
அவர் கோணலாக்கினதை
நேராக்க யாரால் இயலும்?
14 வாழ்க்கை இன்பமாய் இருக்கும்போது மகிழ்ச்சியோடிரு; துன்பம் வரும்போது நீ நினைவில் கொள்ள வேண்டியது: ‘அடுத்து என்ன நடக்கும் என்பதை நீ தெரிந்துகொள்ளா வண்ணம் கடவுள், இன்பத்தையும் துன்பத்தையும் மாறி மாறி வரவிடுகிறார்’.
15 என் பயனற்ற வாழ்க்கையில் நான் எல்லாவற்றையும் பார்த்து விட்டேன். நேர்மையானவர் நேர்மையுள்ளவராய் இருந்தும் மாண்டழிகிறார். தீயவரோ தீமை செய்கிறவராய் இருந்தும் நெடுங்காலம் வாழ்கிறார்.
16 நேர்மையாய் நடப்பதிலும் ஞானத்தைப் பெறுவதிலும் வெறி கொண்டவராய் இராதீர். அந்த வெறியால் உம்மையே அழித்துக் கொள்வானேன்?
17 தீமை செய்வதிலும் மூடராயிருப்பதிலும் வெறி கொண்டவராய் இராதீர். காலம் வருமுன் நீவிர் ஏன் சாகவேண்டும்?
18 ஒன்றைப் பற்றிக்கொண்டிருக்கும்போது, அதற்கு மாறானதைக் கைவிட்டுவிடாதீர். நீவிர் கடவுளுக்கு அஞ்சி நடப்பீரானால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்.
19 ஒரு நகருக்குப் பத்து ஆட்சியாளர் தரும் வலிமையைவிட, ஞானமுள்ளவருக்கு ஞானம் மிகுதியான வலிமை தரும்.
20 குற்றமே செய்யாமல் நல்லதையே செய்யும் நேர்மையானவர் உலகில் இல்லை.
21 பிறர் கூறுவதையெல்லாம் காதுகொடுத்துக் கேட்காதீர். அவ்வாறு செய்தால் உம் வேலைக்காரர் உம்மை இகழ்ந்ததையும் நீவிர் கேட்க நேரிடும்.
22 நீவிர் எத்தனைமுறை பிறரை இகழ்ந்தீர் என்பது உமக்கே நன்றாய்த் தெரியும்.
23 இவற்றையெல்லாம் என் ஞானத்தால் சீர்தூக்கிப் பார்த்தேன். நான் ஞானியாகிவிடுவேன் என்று நினைத்தேன்.
24 ஆனால், என்னால் இயலாமற் போயிற்று. ஞானம் நெடுந் தொலையில் உள்ளது; மிக மிக ஆழமானது. அதை யாரால் கண்டுபிடிக்க முடியும்?
25 நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். ஞானத்தையும் காரண காரியத்தையும் பற்றிய விவரத்தை ஆராய்ந்து காண்பதில் சிந்தனையைச் செலுத்தினேன். கொடியவராயிருத்தல் மூடத்தனம் என்பதையும் மதிகேடரைப்போலச் செயல்புரிதல் அறிவுகெட்ட நடத்தை என்பதையும் தெரிந்துகொண்டேன்.
26 சாவைவிடக் கசப்பானதொன்றைக் கண்டேன். அதுதான் பெண். அவள் உனக்குக் காட்டும் அன்பு ஒரு கண்ணியைப் போல அல்லது ஒரு வலையைப் போல உன்னைச் சிக்க வைக்கும்; உன்னைச் சுற்றிப் பிடிக்கும். அவளின் கைகள் சங்கிலியைப்போல உன்னை இறுக்கும். கடவுளுக்கு உகந்தவனே அவளிடமிருந்து தப்புவான். பாவியோ அவளின் கையில் அகப்படுவான்.
27 “ஆம், நான் ஒன்றன்பின் ஒன்றாய் ஆராய்ந்து இதைக் கண்டுபிடித்தேன்” என்கிறார் சபை உரையாளர். வேறு ஆராய்ச்சிகளும் செய்தேன்; அவற்றால் மிகுந்த பயன் அடையவில்லை.
28 ஆனால் ஒன்று தெரிந்தது. மனிதன் எனத் தக்கவன் ஆயிரத்தில் ஒருவனே என்று கண்டேன். பெண் எனத் தக்கவள் யாரையுமே நான் கண்டதில்லை.
29 நான் தெரிந்துகொண்டதெல்லாம் இதுவே. கடவுள் மனிதரை நேர்மையுள்ளவராகவே படைத்தார். ஆனால் வாழ்க்கைச் சிக்கல்கள் அனைத்தும் மனிதர் தேடிக்கொண்டவையே.
7:1 நீமொ 22:1.
7:9 யாக் 1:19.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-7
|
666 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
|
1 ஞானமுள்ளவருக்கு யார் நிகர்?
உலகில் காண்பவற்றின்
உட்பொருளை வேறு யாரால்
அறிய இயலும்?
ஞானம் ஒருவன் முகத்தை
ஒளிமயமாக்கும்;
அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.
அரசனுக்கு அடங்கி நட
2 கடவுளின் பெயரால் நீ ஆணையிட்டுக் கூறியபடி அரசனுக்கு அடங்கி நட. அரசன் தான் விரும்புகிறபடியெல்லாம் செய்பவன்.
3 எனவே, அவன் முன்னிலையிலிருந்து பதற்றப்பட்டுப் போய்விடாதே. அவனை எதிர்த்துக் கிளர்ச்சி செய்யாதே.
4 மன்னன் சொல்லுக்கு மறுசொல் இல்லை. எனவே, “ஏன் இப்படிச் செய்கிறீர்?” என்று அவனை யார் கேட்க முடியும்?
5 அவனது கட்டளைக்குக் கீழ்ப்படியும்வரை உனக்குத் தீங்கு வராது. அவன் சொல்வதைச் செய்வதற்குரிய காலத்தையும் வழியையும் ஞானமுள்ளவன் அறிவான்.
6 ஒவ்வொரு செயலுக்கும் ஒரு காலமுண்டு; செய்யவேண்டிய முறையும் உண்டு. ஆனால் அவல நிலையிலுள்ள மனிதனால் என்ன செய்யமுடியும்?
7 ஏனெனில், வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாது. அது எப்படி நடக்கும் என்று அவனுக்குச் சொல்வாருமில்லை. காற்றை அடக்க எவனாலும் இயலாது.
8 அதுபோல, தன் சாவு நாளைத் தள்ளிப்போடவும் எவனாலும் இயலாது. சாவெனும் போரினின்று நம்மால் விலகமுடியாது; பணம் கொடுத்தும் தப்ப முடியாது.
நல்லாரும் பொல்லாரும்
9 உலகில் செய்யப்படும் செயல்கள் அனைத்தையும்பற்றிச் சிந்தனை செய்தபோது, இவற்றையெல்லாம் கண்டேன். ஒருவன்மேல் ஒருவன் அதிகாரம் செலுத்துவதால் துன்பம் விளைகிறது
10 பொல்லார் மாண்டபின் அடக்கம் செய்யப்படுகின்றனர். அடக்கம் செய்தவர்கள் கல்லறைத் தோட்டத்திலிருந்து வீடு திரும்பி அந்தப் பொல்லார் தீச்செயல் புரிந்த ஊரிலேயே அவர்களைப் பாராட்டிப் பேசுகிறார்கள். எல்லாம் வீணான செயலே.
11 மக்கள் தீமை செய்யத் துணிவதேன்? தீமை செய்வோருக்கு விரைவிலேயே தண்டனை அளிக்காததுதான் இதற்குக் காரணம்.
12 பாவி நூறு முறை தீமைசெய்து நெடுங் காலம் வாழ்ந்தாலும், கடவுளுக்கு அஞ்சி நடப்பவர்களே நலமுடன் வாழ்வார்கள் என்பதை நான் அறிவேன். ஏனெனில், அவர்கள் அவருக்கு அஞ்சி நடக்கிறார்கள். ஆனால்,
13 தீயவர்கள் நலமுடன் வாழமாட்டார்கள்; நிழல் நீள்வதுபோல அவர்களது வாழ்நாள் நீளாது. ஏனெனில், அவர்கள் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை.
14 வேறொரு பொருத்தமற்ற காரியமும் உலகத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் பொல்லாருக்குரிய தண்டனை நல்லாருக்குக் கிடைக்கிறது. நல்லாருக்குரிய பயன் பொல்லாருக்குக் கிடைக்கிறது. இது பொருத்தமற்றது என்கிறேன்.
15 எனவே, மனிதர் களிப்புடனிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். உண்பதும் குடிப்பதும் களிப்பதுமேயன்றி, மனிதருக்கு உலகில் நலமானது வேறெதுவுமில்லை. உலகில் கடவுள் அவருக்கு அருளும் வாழ்நாளில் அவரது உழைப்புக்குக் கிடைக்கும் நிலையான பயன் இதுவே.
16-17 நான் ஞானத்தை அடையவும் உலகில் நடப்பதை அறியவும் முயன்றபோது இதைக் கண்டதில்லை; ஒருவர் அல்லும் பகலும் கண் விழித்திருந்து பார்த்தாலும், கடவுளின் செயலை அவரால் புரிந்துகொள்ள இயலாது.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-8
|
667 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 9 – திருவிவிலியம்
|
1 இவையனைத்தையும் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தேன். நல்லாரும் ஞானமுள்ளவர்களும் செய்வதெல்லாம், அவர்கள் அன்புகொள்வதும் பகைப்பதும்கூட, கடவுளின் கையிலேதான் இருக்கிறது. இனி வரப்போவது என்ன என்பது யாருக்கும் தெரியாது.
2 விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் எல்லாம் நேரிடும். நேர்மையானவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும், நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும், மாசற்றவர்களுக்கும் மாசுள்ளவர்களுக்கும், பலி செலுத்துகிறவர்களுக்கும் பலி செலுத்தாதவர்களுக்கும் விதித்துள்ளபடிதான் நேரிடும் பொல்லார்க்கு நேரிடும் விதிப்படியே நல்லார்க்கும் நேரிடும். நேர்ந்து கொள்ளத் தயங்குகிறவருக்கு நேரிடும் விதிப்படியே நேர்ந்து கொள்ளுகிறவருக்கும் நேரிடும்.
3 விதித்துள்ளபடிதான் எல்லாருக்கும் நேரிடும். இதுவே உலகில் நடக்கிற அனைத்திலும் காணப்படுகிற தீமை. மேலும், மக்கள் உள்ளங்களில் தீமை நிறைந்திருக்கிறது. அவர்கள் உயிரோடிருக்கும் வரையில் அவர்கள் மனத்தில் மூடத்தனம் இருக்கிறது. திடீரென்று அவர்கள் இறந்து போகிறார்கள்.
4 ஆயினும், ஒருவன் உயிரோடிருக்கும் வரையில் நம்பிக்கைக்கு இடமுண்டு. செத்துப்போன சிங்கத்தைவிட உயிருள்ள நாயே மேல்.
5 ஆம், உயிருள்ளோர் தாம் இறப்பது திண்ணம் என்பதையாவது அறிவர்; ஆனால், இறந்தோரோ எதையும் அறியார். அவர்களுக்கு இனிமேல் பயன் எதுவும் கிடையாது; அவர்கள் அறவே மறக்கப்படுவார்கள்.
6 அவர்களுக்கு அன்பு, பகைமை, பொறாமை எதுவும் இல்லை. இப்பரந்த உலகில் நடக்கும் எதிலும் அவர்கள் பங்கெடுக்கப்போவதில்லை.
7 ஆகவே, நீ நன்றாய்ச் சாப்பிடு; களிப்புடனிரு; திராட்சை இரசம் அருந்தி மகிழ்ச்சியுடனிரு; தயங்காதே. இவை கடவுளுக்கு உடன்பாடு.
8 எப்போதும் நல்லாடை உடுத்து. தலையில் நறுமணத் தைலம் தடவிக்கொள்.
9 இவ்வுலக வாழ்க்கை வீணெனினும், உனக்குக் கிடைத்துள்ள வாழ்நாள் முழுதும் நீ உன் அன்பு மனைவியோடு இன்புற்றிரு. ஏனெனில், உன் வாழ்நாளில் உலகில் நீ படும்பாட்டிற்கு ஈடாகக் கிடைப்பது இதுவே.
10 நீ செய்ய நினைக்கும் செயல் எதுவோ அதைச் செய்; அதையும் உனக்கு ஆற்றல் இருக்கும்போதே செய். ஏனெனில், நீ நெருங்கிக் கொண்டிருக்கும் பாதாளத்தில் எவரும் செயல் புரிவதுமில்லை; சிந்தனை செய்வதுமில்லை; அறிவு பெறுவதுமில்லை; அங்கே ஞானமுமில்லை.
11 உலகில் வேறொன்றையும் கண்டேன்; ஓட்டப் பந்தயத்தில் விரைவாக ஓடுபவரே வெற்றி பெறுவார் என்பதில்லை. வலிமை வாய்ந்தவரே போரில் வெற்றி அடைவார் என்பதில்லை. ஞானமுள்ளவருக்கு வேலை கிடைக்கும் என்பதில்லை. அறிவுள்ளவரே செல்வம் சேர்ப்பார் என்பதில்லை. திறமையுடையவரே பதவியில் உயர்வார் என்பதில்லை. எவருக்கும் வேளையும் வாய்ப்பும் செம்மையாய் அமையவேண்டும்.
12 தமக்குத் துன்பவேளை எப்போது வருமென்று ஒருவருக்குத் தெரியாது. வலையில் அகப்படும் மீன்களைப்போலவும் கண்ணியில் சிக்கும் பறவைகளைப் போலவும் அவர் சிக்கிக்கொள்வார். எதிர்பாராத வகையில் அவருக்குக் கேடு காலம் வரும்.
ஞானத்தைப் பற்றிய சிந்தனைகள்
13 நான் கண்ட வேறொன்றும் உண்டு; இவ்வுலகில் ஞானம் எவ்வாறு மதிக்கப்படுகிறது என்பதை அது நன்கு எடுத்துக்காட்டுகிறது.
14 சிறிய நகர் ஒன்று இருந்தது. அதில் இருந்த மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. வலிமை வாய்ந்த மன்னன் ஒருவன் அதன்மேல் படையெடுத்து வந்தான்; அதை முற்றுகையிட்டுத் தாக்கினான்.
15 அந்நகரில் ஞானமுள்ளவன் ஒருவன் இருந்தான். ஆனால் அவன் ஓர் ஏழை. அவன் தன் ஞானத்தால் நகரைக் காப்பாற்றியிருக்கக்கூடும். ஆயினும், அவனைப் பற்றி எவரும் நினைக்கவில்லை.
16 வலிமையைவிட ஞானமே சிறந்தது என்பதே என் கருத்து. அந்த ஏழையின் ஞானம் புறக்கணிக்கப்பட்டது; அவன் சொல்லை எவரும் கவனிக்கவில்லை.
17 மூடர்கள் கூட்டத்தில் அதன் தலைவன்
முழக்கம் செய்வதைக் கேட்பதைவிட,
ஞானமுள்ளவர் அடக்கமுடன்
கூறுவதைக் கேட்பதே நன்று.
18 போர்க் கருவிகளைவிட
ஞானமே சிறந்தது.
ஆனால் ஒரே ஒரு தவறு
நன்மைகள் பலவற்றைக் கெடுத்துவிடும்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-9
|
668 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 10 – திருவிவிலியம்
|
மதிகேட்டைப் பற்றிய சில குறிப்புகள்
1 கலத்திலிருக்கும் நறுமணத் தைலம்
முழுவதையும் செத்த ஈக்கள் முடை
நாற்றம் வீசும்படி செய்துவிடும்.
அதுபோல சிறிய மதிகேடும்
மேன்மையான ஞானத்தைக்
கெடுத்து விடும்.
2 தக்கன செய்வதையே
ஞானியரின் உள்ளம் நாடும்;
தகாதன செய்வதையே
மூடரின் உள்ளம் நாடும்.
3 மூடர் தெருவில் நடந்தாலே போதும்;
அவரது மடமை வெளியாகிவிடும்.
தாம் மூடர் என்பதை அவரே
அனைவருக்கும் காட்டிடுவார்.
4 மேலதிகாரி உன்னைச் சினந்து
கொண்டால், வேலையை விட்டு விடாதே.
நீ அடக்கமாயிருந்தால்,
பெருங்குற்றமும் மன்னிக்கப்படலாம்.
5 உலகில் நான் கண்ட தீமை ஒன்று உண்டு. அது உயர் அலுவலரின் தவற்றால் விளைவது.
6 மூடர்களுக்கு உயர்ந்த பதவி அளிக்கப்படுகிறது; செல்வர்கள் தாழ்ந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.
7 அடிமைகள் குதிரைமீதேறிச் செல்வதையும், உயர்குடிப் பிறந்தோர் அடிமைகளைப்போலத் தரையில் நடந்து செல்வதையும் நான் கண்டிருக்கிறேன்.
8 குழியை வெட்டுவார் அதில்
தாமே வீழ்வார்.
கன்னமிடுவோரைக்
கட்டு விரியன் கடிக்கும்.
9 கற்களை வெட்டி எடுப்பவர்
கற்களால் காயமடைவார்.
மரத்தை வெட்டுபவர்
காயத்திற்கு ஆளாவார்.
10 மழுங்கிய கோடரியைத் தீட்டாமல்
பயன்படுத்தினால் வேலைசெய்வது
மிகக் கடினமாயிருக்கும்.
ஞானமே வெற்றிக்கு வழிகோலும்.
11 பாம்பை மயக்குமுன் அது கடித்து விட்டால்
அதை மயக்கும் வித்தை
தெரிந்திருந்தும் பயனில்லை.
12 ஞானியரின் வாய்மொழி அவருக்குப்
பெருமை தேடித்தரும்.
மூடரோ தம் வாயால் கெடுவார்.
13 அவரது பேச்சு மடமையில் தொடங்கும்;
முழு பைத்தியத்தில் போய் முடியும்.
14 மூடர் வளவளவென்று பேச்சை வளர்ப்பார்;
என்ன பேசப்போகின்றார் என்பது
எவருக்கும் தெரியாது.
அதற்குப்பின் என்ன நடக்கும் என்பதை
எவராலும் சொல்ல இயலாது.
15 மூடர் அளவுமீறி உழைத்துத்
தளர்ந்து போவார்.
ஊருக்குத் திரும்பிப்போகவும்
வகை அறியார்.
16 சிறு பிள்ளையை அரசனாகவும்
விடிய விடிய விருந்துண்டு களிப்பவர்களைத்
தலைவர்களாகவும் கொண்ட நாடே!
நீ கெட்டழிவாய்.
17 உயர்குடிப் பிறந்தவனை அரசனாகவும்
உரிய நேரத்தில் உண்பவர்களை,
குடித்துவெறிக்காது தன்னடக்கத்தோடு
இருப்பவர்களைத் தலைவர்களாகவும்
கொண்ட நாடே! நீ நீடு வாழ்வாய்.
18 சோம்பேறியின் வீட்டுக்கூரை ஒழுகும்;
பழுதுபார்க்காதவரின் வீடு
இடிந்து விழும்.
19 விருந்து மனிதருக்கு மகிழ்ச்சிதரும்;
திராட்சை மது வாழ்க்கையில்
களிப்புத்தரும்;
பணம் இருந்தால் தான்
எல்லாம் கிடைக்கும்.
20 தனிமைமயிலுங்கூட அரசனை இகழாதே;
படுக்கையறையிலுங்கூடச்
செல்வர்களை இகழ்ந்து பேசாதே.
வானத்துப் பறவைகள் நீ கூறியதை
எடுத்துச்செல்லும்;
பறந்து சென்று நீ சொன்னதைத்
திரும்பச் சொல்லும்.
10:8 திபா 7:15; நீமொ 26:7.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-10
|
669 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 11 – திருவிவிலியம்
|
ஞானமுள்ளவரின் செயல்கள்
1 உன் பணத்தை வைத்துத் துணிந்து
கடல் வாணிபம் செய்;
ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும்.
2 உன் பணத்தைப் பிரித்து ஏழெட்டு
இடங்களில் முதலாக வை.
ஏனெனில், எங்கு, எவ்வகையான
இடர் நேருமென்பதை
நீ அறிய இயலாது.
3 வானத்தில் கார்முகில் திரண்டு வருமாயின்,
ஞாலத்தில் மழை பெய்யும்.
மரம் வடக்கு நோக்கி விழுந்தாலும்
தெற்கு நோக்கி விழுந்தாலும்
விழுந்த இடத்திலேதான் கிடக்கும்.
4 காற்று தக்கவாறு இல்லையென்று
காத்துக்கொண்டே இருப்போர்,
விதை விதைப்பதில்லை;
வானிலை தக்கபடி இல்லை என்று
சொல்லிக்கொண்டே இருப்போர்
அறுவடை செய்வதில்லை.
5 காற்றின் போக்கையோ, கருவுற்ற பெண்ணின் வயிற்றில் உயிர் வளரும் வகையையோ நீ அறிய இயலாது; அவ்வாறே, அனைத்தையும் செய்கிற கடவுளின் செயல்களையும் உன்னால் அறியமுடியாது.
6 காலையில் விதையைத் தெளி; மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம்.
7 ஒளி மகிழ்ச்சியூட்டும்; கதிரவனைக் கண்டு கண்கள் களிக்கும்.
8 மனிதன் எத்தணை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவன் தன் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் இருக்கட்டும். இருள் சூழ்ந்த நாள்கள் பல இருக்கும் என்பதையும் அவன் மறக்கலாகாது. அதற்குப்பின் வருவதெல்லாம் வீணே.
இளையோருக்கு அறிவுரை
9 இளையோரே! இளமைப் பருவம் மகிழ்ச்சியோடிருப்பதற்கே. இளமையின் நாள்களில் உள்ளக் களிப்புடனிருங்கள். மனம் விரும்புவதைச் செய்யுங்கள்; கண்களின் நாட்டத்தை நிறைவேற்றுங்கள். ஆனால், நீங்கள் செய்கிற ஒவ்வொரு செயலுக்கும் உரிய தீர்ப்பைக் கடவுள் வழங்குவார் என்பதை மறவாதீர்கள்.
10 மனக் கவலையை ஒழியுங்கள். உடலுக்கு ஊறு வராதபடி காத்துக் கொள்ளுங்கள்; குழந்தைப் பருவமும் இளமையும் மறையக் கூடியவையே.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-11
|
670 |
சபை உரையாளர்
|
சபை உரையாளர் அதிகாரம் – 12 – திருவிவிலியம்
|
1 ஆகையால், உன்னைப் படைத்தவரை உன் இளமைப் பருவத்தில் மறவாதே. “வாழ்க்கை எனக்கு இன்பம் தரவில்லையே” என்று நீ சொல்லக்கூடிய துயர நாள்களும் ஆண்டுகளும் வருமுன் அவரை உள்ளத்திலே நினை.
2 அதாவது, கதிரவன், பகலொளி, நிலா, விண்மீன்கள் ஆகியவை உனக்கு மங்கலாய்த் தெரியுமுன்னும், மழைக்குப்பின் மேகங்கள் இருண்டு வருவதுபோலத் தோன்றுமுன்னும்,
3 வீட்டுக்காவலர்⒜ நடுக்கங்கொள்ள, வலியோர்⒝ தளர்வுறுமுன்னும், அரைப்போர்⒞ மிகச் சிலராகித் தம் வேலையை நிறுத்திக்கொள்ள, பலகணி வழியாகப் பார்ப்போர்⒟ ஒளி இழந்துபோகுமுன்னும்,
4 தெருச்சந்தடி கேளாவண்ணம் கதவுகள்⒠ அடைத்துக்கொள்ள, சிட்டுக்குருவியின் கீச்சொலியும் உறக்கத்தைக் கலைக்க, இன்னிசைக் கருவி இசைக்கும் மகளிர்⒡ அனைவரும் ஓய்ந்துபோகுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
5 மேட்டைக் கண்டு அச்சங்கொண்டு தெருவில் நடப்பதை நினைத்துத் திகில் கொள்ளுமுன்னும், வாதுமை மரம் பூப்பூக்குமுன்னும்⒢, வெட்டுக்கிளியைப்போல நடை தட்டுத்தடுமாற, ஆசையெல்லாம் அற்றுப்போகுமுன்னும், உற்றார் வீதியில் அழுது புலம்ப நீ முடிவற்ற ஓய்வுக்குச் செல்லுமுன்னும், உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை;
6 வெள்ளிக் கயிறு அறுந்து, பொன் விளக்கு கீழே விழுந்து உடைவதற்கு முன்னும், குளத்தருகில் குடம் உடைந்து நொறுங்க, கிணற்றருகில் உருளை உடைந்து விழுமுன்னும்,
7 மண்ணினின்று வந்த உடல் மண்ணுக்கே திரும்புமுன்னும், கடவுள் தந்த உயிர் அவரிடமே திரும்பு முன்னும் உன்னைப் படைத்தவரை உள்ளத்தில் நினை.
8 வீண், முற்றிலும் வீண் என்கிறார் சபை உரையாளர்; எல்லாமே வீண்.
தொகுப்புரை
9 சபை உரையாளர் ஞானமுள்ளவராயிருந்ததோடு தாம் அறிந்தவற்றைத் தொகுத்துத் தந்தார்.
10 சபை உரையாளர் இனிய நடையில் எழுத முயன்றுள்ளார். உண்மையை ஒளிவு மறைவில்லாமல் எழுதிவைத்திருக்கிறார்.
11 ஞானமுற்றவர்களின் சொற்கள் ஆயரின் கோல்போல் வழிநடத்தும். தொகுத்து வைத்த முதுமொழிகள் பசுமரத்தாணிபோல உள்ளத்தில் பதியும். அவை ஒரே ஆயரால் அளிக்கப்பட்டவை.
12 பிள்ளாய்! மேலும் ஓர் எச்சரிக்கை; நூல்கள் பல எழுதுவதால் பயன் ஒன்றுமில்லை. மிகுதியான படிப்பு உடலுக்கு இளைப்பு.{ப்ப்}
13 இவையனைத்திற்கும் முடிவுரையாக ஒன்று கூறுகிறேன்; கடவுளுக்கு அஞ்சி நட; அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படி. இதற்காகவே மனிதர் படைக்கப்பட்டனர்.
14 நாம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், மறைவான செயலுக்குங்கூட, அது நல்லதோ தீயதோ எதுவாயினும், அனைத்திற்கும் கடவுளே தீர்ப்பு வழங்குவார்.
12:3-7 இப்பகுதி மனிதர் முதுமைப் பருவம் எய்தி, அவரது உடல் தளர்வுறுவதைக் குறிப்பதாக்க் கொள்ளப்படுகிறது: ⒜கைகள், ⒝கால்கள், ⒞பற்கள், ⒟கண்கள், ⒠காதுகள், ⒡குரல்வளை நரம்புகள், ⒢தலைமுடி.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-ecclesiastes-12
|
671 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 1 – திருவிவிலியம்
|
1 சாலமோனின் தலைசிறந்த பாடல்
சாலமோனின் தலைசிறந்த பாடல்
பாடல் 1: தலைவி கூற்று
2 தம் வாயின் முத்தங்களால்
அவர் என்னை முத்தமிடுக!
ஆம், உமது காதல் திராட்சை ரசத்தினும் இனிது!
3 உமது பரிமளத்தின் நறுமணம்
இனிமையானது;
உமது பெயரோ பரிமள மணத்தினும்
மிகுதியாய்ப் பரவியுள்ளது;
எனவே, இளம் பெண்கள் உம்மேல்
அன்பு கொள்கின்றனர்.
4 உம்மோடு என்னைக்
கூட்டிச் செல்லும், ஓடிடுவோம்;
அரசர் என்னைத் தம் அறைக்குள்
அழைத்துச் செல்லட்டும்!
களிகூர்வோம், உம்மில் அக்களிப்போம்;
திராட்சை இரசத்தினும் மேலாய்
உம் காதலைக் கருதிடுவோம்;
திராட்சை இரசத்தினும்
உமது அன்பைப் போற்றிடுவோம்!
பாடல் 2: தலைவி கூற்று
5 எருசலேம் மங்கையரே,
கறுப்பாய் இருப்பினும்,
நான் எழில்மிக்கவளே!
கேதாரின் கூடாரங்களைப் போலுள்ளேன்;
சாலமோனின் எழில்திரைகளுக்கு
இணையாவேன்.
6 கறுப்பாய் இருக்கின்றேன் நான் என
என்னையே உற்றுப் பார்க்க வேண்டா!
கதிரவன் காய்ந்தான்;
நான் கறுப்பானேன்;
என் தமையர் என்மேல்
சினம் கொண்டனர்;
திராட்சைத் தோட்டத்திற்கு
என்னைக் காவல் வைத்தனர்;
என் தோட்டத்தையோ
நான் காத்தேன் அல்லேன்!
பாடல் 3: தலைவன்-தலைவி உரையாடல்
7 என் நெஞ்சத்தின் அன்புக்குரியவரே!
எங்கே நீர் ஆடு மேய்ப்பீர்?
எங்கே நண்பகலில்
மந்தையை இளைப்பாற விடுவீர்?
எனக்குச் சொல்வீர்!
இல்லையேல்,
உம் தோழர்களின் மந்தைகட்கருகில்
வழி தவறியவள் போல்
நான் திரிய நேரிடும்!
8 பெண்களுக்குள் பேரழகியே,
உனக்குத் தெரியாதெனில்,
மந்தையின் கால்சுவடுகளில்
நீ தொடர்ந்து போ;
இடையர்களின் கூடாரங்களுக்கு
அருகினிலே உன்னுடைய
ஆட்டுக்குட்டிகளை மேய்த்திடு!
பாடல் 4: தலைவன்-தலைவி உரையாடல்
9 என் அன்பே, பார்வோன்
தேர்ப்படை நடுவே உலவும்
பெண்புரவிக்கு உன்னை ஒப்பிடுவேன்.
10 உன் கன்னங்கள் குழையணிகளாலும்
உன் கழுத்து மணிச்சரங்களாலும்
எழில் பெறுகின்றன.
11 பொன்வளையல்கள்
உனக்குச் செய்திடுவோம்;
வெள்ளி வளையங்கள்
அவற்றில் கோத்திடுவோம்.
12 என் அரசர் தம் மஞ்சத்தில்
இருக்கையிலே, என் நரந்தம்
நறுமணம் பரப்புகின்றது.
13 என் காதலர்
வெள்ளைப்போள முடிப்பென
என் மார்பகத்தில் தங்கிடுவார்.
14 என் காதலர் எனக்கு
மருதோன்றி மலர்க்கொத்து!
எங்கேதித் தோட்டங்களில் உள்ள
மருதோன்றி!
பாடல் 5: தலைவன்-தலைவி உரையாடல்
15 என்னே உன் அழகு! என் அன்பே,
என்னே உன் அழகு!
உன் கண்கள் வெண்புறாக்கள்!
16 என்னே உம் அழகு என் காதலரே!
எத்துணைக் கவர்ச்சி!
ஆம், நமது படுக்கை பைந்தளிர்!
17 நம் வீட்டின் விட்டங்கள்
கேதுரு மரங்கள்;
நம்முடைய மச்சுகள்
தேவதாரு கிளைகள்.
1:1 1 அர 4:32.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-1
|
672 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 2 – திருவிவிலியம்
|
பாடல் 6: தலைவன்-தலைவி உரையாடல்
1 சாரோன் சமவெளியில் உள்ள காட்டு
மலர் நான்; பள்ளத்தாக்குகளில் காணும்
லீலிமலர்.
2 முட்புதர் நடுவில் இருக்கும்
லீலிமலர்போல், மங்கையருள்
இருக்கிறாள் என் அன்புடையாள்.
3 காட்டு மரங்களிடை நிற்கும்
கிச்சிலி போல்,
காளையருள் இலங்குகின்றார்
என் காதலர்தாம்.
அவரது நிழலிலே அமர்வதில்
இன்புறுவேன்;
அவர் கனி என் நாவுக்கு இனிமை தரும்.
பாடல் 7: தலைவி கூற்று
4 திராட்சை இரசம் வைக்கும்
அறைக்குள்ளே
என்னை அவர் அழைத்துச் சென்றார்;
அவர் என் மேல் செலுத்திய
நோக்கில் காதல் இருந்தது!
5 திராட்சை அடைகள் கொடுத்து
என்னை வலிமைப்படுத்துங்கள்;
கிச்சிலிப்பழங்களால்
எனக்கு ஊக்கமூட்டுங்கள்.
காதல் நோயால்
தான் மிகவும் நலிந்து போனேன்.
6 இடக்கையால் அவர் என் தலையைத்
தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர் என்னைத்
தழுவிக் கொள்வார்.
7 எருசலேம் மங்கையரே!
கலைமான்கள்மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்;
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை
அதைத் தட்டி எழுப்பாதீர்.
பாடல் 8: தலைவி கூற்று
8 என் காதலர் குரல் கேட்கின்றது;
இதோ, அவர் வந்துவிட்டார்;
மலைகள்மேல் தாவி வருகின்றார்;
குன்றுகளைத் தாண்டி வருகின்றார்.
9 என் காதலர் கலைமானுக்கு அல்லது
மரைமான் குட்டிக்கு ஒப்பானவர்.
இதோ, எம் மதிற்சுவர்க்குப்
பின்னால் நிற்கின்றார்;
பலகணி வழியாய்ப் பார்க்கின்றார்;
பின்னல் தட்டி வழியாய்
நோக்குகின்றார்.
10 என் காதலர் என்னிடம் கூறுகின்றார்:
“விரைந்தெழு, என் அன்பே! என் அழகே! விரைந்து வா.
11 இதோ, கார்காலம் கடந்துவிட்டது;
மழையும் பெய்து ஓய்ந்துவிட்டது.
12 நிலத்தில் மலர்கள் தோன்றுகின்றன;
பாடி மகிழும் பருவம் வந்துற்றது;
காட்டுப் புறா கூவும் குரலதுவோ
நாட்டினில் நமக்குக் கேட்கின்றது;
13 அத்திப் பழங்கள் கனிந்துவிட்டன;
திராட்சை மலர்கள் மணம் தருகின்றன;
விரைந்தெழு, என் அன்பே!
என் அழகே! விரைந்து வா.”
பாடல் 9: தலைவன் கூற்று
14 பாறைப் பிளவுகளில் இருப்பவளே,
குன்றின் வெடிப்புகளில் இருக்கும்
என் வெண்புறாவே!
காட்டிடு எனக்கு உன் முகத்தை;
எழுப்பிடு நான் கேட்க உன் குரலை.
உன் குரல் இனிது! உன் முகம் எழிலே!
பாடல் 10: தலைவி கூற்று
15 பிடியுங்கள் எமக்காக நரிகளை;
குள்ளநரிகளைப் பிடியுங்கள்;
அவை திராட்சைத் தோட்டங்களை
அழிக்கின்றன;
எம் திராட்சைத் தோட்டங்களோ
பூத்துள்ளன.
பாடல் 11: தலைவி கூற்று
16 என் காதலர் எனக்குரியர்;
நானும் அவருக்குரியள்;
லீலிகள் நடுவில் அவர் மேய்கின்றார்.
17 பொழுது புலர்வதற்குள்,
நிழல்கள் மறைவதற்குள், திரும்பிடுக,
என் காதலரே! மலைமுகட்டுக்
கலைமான்போன்று அல்லது
மரைமான் குட்டிபோன்று திரும்பிடுக!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-2
|
673 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 3 – திருவிவிலியம்
|
பாடல் 12: தலைவி கூற்று
1 இரவு நேரம் படுக்கையில் இருந்தேன்;
என் உயிர்க்குயிரான அன்பரைத்
தேடினேன்; தேடியும்
அவரை நான் கண்டேன் அல்லேன்!
2 “எழுந்திடுவேன்; நகரத்தில்
சுற்றிவருவேன்;
தெருக்களிலும் நாற்சந்திகளிலும் சுற்றி
என் உயிர்க்குயிரான அன்பரைத் தேடுவேன்”
தேடினேன்; தேடியும் அவரைக்
கண்டேன் அல்லேன்!
3 ஆனால் என்னைக் கண்டனர்
சாமக்காவலர்;
நகரைச் சுற்றி வந்தவர்கள் அவர்கள்.
“என் உயிர்க்குயிரான அன்பரை
நீங்களேனும் கண்டீர்களோ?” என்றேன்.
4 அவர்களைவிட்டுச்
சற்று அப்பால் சென்றதுமே
கண்டேன் என் உயிர்க்குயிரான
அன்பர்தமை.
அவரைச் சிக்கெனப் பிடித்தேன்;
விடவே இல்லை;
என் தாய்வீட்டுக்கு
அவரைக் கூட்டி வந்தேன்;
என்னைக் கருத்தாங்கியவளின்
அறைக்குள் அழைத்து வந்தேன்.
5 எருசலேம் மங்கையரே,
கலைமான்கள் மேல் ஆணை!
வயல்வெளி மரைகள்மேல் ஆணை!
உங்களுக்கு நான் கூறுகிறேன்;
காதலைத் தட்டி எழுப்பாதீர்;
தானே விரும்பும்வரை
அதைத் தட்டி எழுப்பாதீர்.
பாடல் 13: கண்டோர் கூற்று
6 என்ன அது?
பாலைவெளியிலிருந்து
புகைத்தூண்போல்,
எழுந்துவருகிறதே!
வெள்ளைப்போளம் மணக்க,
சாம்பிராணி புகைய,
வணிகர் கொணர்
பல்வகைப் பொடிகள் யாவும்
மணங்கமழ வருகிறதே!
என்ன அது?
7 அதுதான் சாலமோனின் பஞ்சணை!
இஸ்ரயேலின் வளமையுள்ள
வீரர்களுள் அறுபதுபேர்
அதனைச் சூழ்ந்துள்ளனர்.
8 அனைவரும் வாளேந்திய வீரர்!
அவர்கள் போர்புரிவதில் வல்லவர்கள்!
இராக்காலத் தாக்குதல்களைத்
தடுக்கத் தம் இடைகளில்
வாள் கொண்டுள்ளவர்கள்!
9 மன்னர் தமக்கொரு பல்லக்கு செய்தார்;
சாலமோன் லெபனோனின்
மரத்தால் செய்தார்.
10 அதன் தூண்களை
வெள்ளியால் இழைத்தார்;
மேற்கவிகை பொன்;
இருக்கை செம்பட்டு;
உட்புறம் மெல்லிய தோல்மெத்தை;
எருசலேம் மங்கையரே, வாருங்கள்!
11 சீயோன் மங்கையரே, பாருங்கள்!
மன்னர் சாலமோனையும்
அவர் அன்னை அவருக்கு அணிவித்த
மணிமுடியையும் காணுங்கள்!
அவரது திருமண நாளினிலே,
அவருள்ளம் மகிழ்ந்த நாளினிலே,
அவருக்கு அணிவித்த முடியதுவே!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-3
|
674 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 4 – திருவிவிலியம்
|
பாடல் 14: தலைவன் கூற்று
1 என்னே உன் அழகு! “என் அன்பே,
என்னே உன் அழகு!
முகத்திரைக்குப் பின்னுள்ள
உன் கண்கள் வெண்புறாக்கள்!
கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது
உன் கூந்தல்.
2 உன் பற்களோ மயிர் கத்தரிப்பதற்கெனக்
குளித்துக் கரையேறும்
பெண் ஆடுகளின் மந்தை போல்வன;
அவையாவும் இரட்டைக் குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
3 செம்பட்டு இழைபோன்றன
உன்னிதழ்கள்;
உன் வாய் எழில் மிக்கது;
முகத்திரையின் பின்னிருக்கும்
உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
4 தாவீதின் கொத்தளம்போல்
அமைந்துள்ளது உன் கழுத்து;
வரிவரியாய் ஆயிரம் கேடயங்கள்
ஆங்கே தொங்குகின்றன;
அவையெலாம்
வீரர்தம் படைக்கலன்களே.
5 உன் முலைகள் இரண்டும்
லீலிகள் நடுவில் மேயும்
இருமான் குட்டிகளை ஒக்கும்;
கலைமானின் இரட்டைக்
குட்டிகளைக் ஒக்கும்.
6 பொழுது புலர்வதற்குள்
, நிழல்கள் மறைவதற்குள்,
வெள்ளைப்போள மலையினுக்கு
விரைந்திடுவேன்;
சாம்பிராணிக் குன்றுக்குச்
சென்றிடுவேன்;
7 என் அன்பே
, நீ முழுவதும் அழகே!
மறுவோ உன்னில் சிறிதும் இலதே!
பாடல் 15: தலைவன் கூற்று
8 லெபனோனிலிருந்து வந்திடு மணமகளே;
லெபலோனிலிருந்து வந்திடு புறப்படு;
அமானா மலையுச்சியினின்று —
செனீர் மற்றும் எர்மோன்
மலையுச்சியினின்று —
சிங்கங்களின் குகைளினின்று —
புலிகளின் குன்றுகளினின்று
இறங்கிவா!
9 என் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டாய்;
என் தங்காய், மணமகளே,
உன் விழிவீச்சு ஒன்றினாலே,
உன் ஆரத்தின் முத்து ஒன்றினாலே,
என் உள்ளத்தைக்
கொள்ளை கொண்டாய்.
10 உன் காதல் எத்துணை நேர்த்தியானது;
என் தங்காய், மணமகளே,
உன் காதல்
திராட்சை இரசத்தினும் இனிது!
உனது பரிமளத்தின் நறுமணமோ
எவ்வகைத் தைலத்தின்
நறுமணத்தினும் சிறந்தது.
11 மணமகளே, உன் இதழ்கள்
அமிழ்தம் பொழிகின்றன;
உன் நாவின்கீழ்த்
தேனும் பாலும் சுரக்கின்றன;
உன் ஆடைகளின் நறுமணம்
லெபனோனின் நறுமணத்திற்கு
இணையானது.
பாடல் 16: தலைவன்-தலைவி உரையாடல்
12 பூட்டியுள்ள தோட்டம் நீ;
என் தங்காய், மணமகளே
பூட்டியுள்ள தோட்டம் நீ;
முத்திரையிட்ட கிணறு நீ!
13 மாதுளைச் சோலையாய்த்
தளிர்த்துள்ளாய்;
ஆங்கே தித்திக்கும் கனிகள் உண்டு;
மருதோன்றியும் நரந்தமும் உண்டு.
14 நரந்தம், மஞ்சள், வசம்பு, இலவங்கம்
எல்லாவகை நறுமண மரங்களும்,
வெள்ளைப்போளமும் அகிலும்,
லைசிறந்த நறுமணப் பொருள்கள் யாவுமுண்டு.
15 நீ தோட்டங்களின் நீரூற்று;
வற்றாது நீர்சுரக்கும் கிணறு;
லெபலோனினின்று வரும் நீரோடை!
16 வாடையே, எழு! தென்றலே, வா!
என் தோட்டத்தின் மேல் வீசு!
அதன் நறுமணம் பரவட்டும்!
உன் காதலர்
தம் தோட்டத்திற்கு வரட்டும்!
அதன் தித்திக்கும் கனிகளை
உண்ணட்டும்!
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-4
|
675 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 5 – திருவிவிலியம்
|
1 என் தோட்டத்திற்கு நான்
வந்துள்ளேன்;
என் தங்காய், மணமகளே,
என் வெள்ளைப்போளத்தையும்
நறுமணப் பொருளையும்
சேகரிக்கின்றேன்;
என் தேனையும் தேனடைகளையும்
உண்கின்றேன்;
என் திராட்சை இரசத்தையும்
பாலையும் பருகுகின்றேன்;
தோழர்களே, உண்ணுங்கள்;
அன்பர்களே, போதையேறப் பருகுங்கள்.
பாடல் 17: தலைவி கூற்று
2 நான் உறங்கினேன்;
என் நெஞ்சமோ விழித்திருந்தது;
இதோ, என் காதலர்
கதவைத் தட்டுகின்றார்;
“கதவைத் திற, என் தங்காய்,
என் அன்பே, என் வெண்புறாவே,
நிறை அழகே,
என் தலை பனியால் நனைந்துள்ளது;
என் தலைமயிர்ச் சுருள்
இரவுத் தூறலால் ஈரமானது.
3 “என் ஆடையைக் களைந்து விட்டேன்;
மீண்டும் அதனை நான்
உடுத்த வேண்டுமோ?
என் கால்களைக் கழுவியுள்ளேன்;
மீண்டும் அவற்றை அழுக்குப்படுத்தவோ?”
4 என் காதலர் கதவுத் துளை வழியாகக்
கையைவிட்டார்;
என் நெஞ்சம் அவருக்காகத் துள்ளிற்று.
5 எழுந்தேன் நான்,
காதலர்க்குக் கதவு திறக்க;
என் கையில்
வெள்ளைப்போளம் வடிந்தது;
என் விரல்களில்
வெள்ளைப்போளம் சிந்திற்று;
தாழ்ப்பாள் பிடிகளில் சிதறிற்று.
6 கதவைத் திறந்தேன் நான்
என் காதலர்க்கு;
அந்தோ! என் காதலர் காணவில்லை,
போய்விட்டார்; என் நெஞ்சம்
அவர் குரலைத் தொடர்ந்து போனது;
அவரைத் தேடினேன்;
அவரைக் கண்டேன் அல்லேன்;
அவரை அழைத்தேன்; பதிலே இல்லை!
7 ஆனால் என்னைக் கண்டனர்
சாமக் காவலர்;
அவர்கள் என்னை அடித்தனர்;
காயப்படுதினர்;
என் மேலாடையைப்
பறித்துக் கொண்டனர்;
கோட்டைச் சுவரின்
காவலர்கள் அவர்கள்!
8 எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுச் சொல்கிறேன்;
என் காதலரைக் காண்பீர்களாயின்
அவரிடம் என்ன சொல்வீர்கள்?
“காதல் நோயுற்றேன் நான்”
எனச் சொல்லுங்கள்.
9 “பெண்களுக்குள் பேரழகியே,
மற்றக் காதலரினும் உன் காதலர்
எவ்வகையில் சிறந்தவர்?
இவ்வாறு எங்களிடம்
ஆணையிட்டுக் கூறுகின்றாயே;
மற்றக் காதலரினும் உன்காதலர்
எவ்வகையில் சிறந்தவர்?”
10 “என் காதலர் ஒளிமிகு சிவந்த மேனியர்;
பல்லாயிரம் பேர்களிலும்
தனித்துத் தோன்றுவார்!
11 அவரது தலை பசும்பொன்;
தலை முடி சுருள் சுருளாய் உள்ளது;
காகம்போல் கருமை மிக்கது.
12 அவர் கண்கள்
வெண்புறாக்கள் போன்றவை;
பாலில் குளித்து,
நீரோடைகளின் அருகில்
கரையோரங்களில் தங்கும்
வெண்புறாக்கள் அவை.
13 அவர் கன்னங்கள் நறுமண
நாற்றங்கால்கள் போல்வன;
நறுமணம் ஆங்கே கமழ்கின்றது;
அவருடைய இதழ்கள் லீலிமலர்கள்;
அவற்றினின்று வெள்ளைப்போளம்
சொட்டுச்சொட்டாய் வடிகின்றது.
14 அவருடைய கைகள்
உருண்ட பொன் தண்டுகள்; அவற்றில்
மாணிக்கக் கற்கள் பதிந்துள்ளன;
அவரது வயிறு
யானைத் தந்தத்தின் வேலைப்பாடு;
அதில் நீலமணிகள்
பொதியப் பெற்றுள்ளன.
15 அவருடைய கால்கள்
பளிங்குத் தூண்கள்;
தங்கத் தளத்திலே
அவை பொருந்தியுள்ளன;
அவரது தோற்றம்
லெபனோனுக்கு இணையானது;
கேதுரு மரங்கள்போல் தலைசிறந்தது.
16 அவரது வாய் இணையற்ற இனிமை;
அவர் முழுமையும் பேருவகையே;
எருசலேம் மங்கைய
இவரே என் நண்பர்.”
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-5
|
676 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 6 – திருவிவிலியம்
|
1 “பெண்களுக்குள் பேரழகியே,
உன் காதலர் எங்கே போனார்?
உன் காதலர் எப்பக்கம் திரும்பினார்?
உன்னோடு நாங்களும்
அவரைத் தேடுவோம்.”
2 “என் காதலர் தம் தோட்டத்திற்கும்
நறுமண நாற்றங்கால்களுக்கும்
போனார்;
தோட்டங்களில் மேய்க்கவும்
லீலி மலர்களைக் கொய்யவும்
சென்றுள்ளார்”.
3 நான் என் காதலர்க்குரியள்;
என் காதலர் எனக்குரியர்;
லீலிகள் நடுவில் அவர் மேய்க்கின்றார்.
பாடல் 18: தலைவன் கூற்று
4 என் அன்பே.நீ திரட்சாவைப்போல்
அழகுள்ளவள்;
எருசலேமைப்போல் எழில் நிறைந்தவள்;
போரணிபோல் வியப்பார்வம்
ஊட்டுகின்றாய்!
5 என்னிடமிருந்து உன் கண்களைத்
திருப்பிக்கொள்;
அவை என்னை மயக்குகின்றன;
கிலயாதிலிருந்து இறங்கிவரும்
வெள்ளாட்டு மந்தை போன்றது
உன் கூந்தல்.
6 உன் பற்களோ, குளித்துக்கரையேறும்
பெண் ஆடுகளின் மந்தைபோல்வன;
அவையாவும் இரட்டைக்குட்டி போட்டவை;
அவற்றுள் ஒன்றேனும் மலடு இல்லை.
7 முகத்திரையின் பின்னிருக்கும்
உன் கன்னங்கள்
பிளந்த மாதுளம் பழத்திற்கு நிகரானவை.
பாடல் 19: தலைவன் கூற்று
8 அரசியர் அறுபது பேர்;
வைப்பாட்டியர் எண்பது பேர்;
இளம்பெண்கள் எண்ணிறந்தவர்.
9 என் வெண்புறா,
அழகின் வடிவம் அவள் ஒருத்தியே!
அவள் தாய்க்கும் அவள் ஒருத்தியே;
அவளைப் பெற்றவளுக்கு
அவள் அருமையானவள்;
மங்கையர் அவளைக் கண்டனர்;
வாழ்த்தினர்;
அரசியரும் வைப்பாட்டியரும்
அவளைப் புகழ்ந்தனர்;
10 “யாரிவள்!
வைகறைபோல் தோற்றம்;
திங்களைப் போல் அழகு;
ஞாயிறுபோல் ஒளி;
போரணிபோல் வியப்பார்வம்;
யாரிவள்!”
பாடல் 20: தலைவன் கூற்று
11 வாதுமைச் சோலைக்குள் சென்றேன்;
பள்ளத்தாக்கில் துளிர்த்தவற்றைப்
பார்க்கப் போனேன்;
திராட்சை பூத்துவிட்டதா என்றும்
மாதுளைகள் மலர்ந்தனவா என்றும்
காணச் சென்றேன்.
12 என்னவென்றே
எனக்குத் தெரியவில்லை!
மகிழ்ச்சியில் மயங்கினேன்;
இளவரசனுடன் தேரில் செல்வது போல்
நான் உணர்ந்தேன்.
பாடல் 21: கண்டோர் கூற்று: உரையாடல்
13 திரும்பி வா! திரும்பி வா!
சூலாமியளே!
திரும்பி வா! திரும்பி வா!
நாங்கள் உன்னைப் பார்க்க வேண்டும்!
இரண்டு பாசறைகள் நடுவில்
ஆடுபவளைப்போல் சூலாமியளை
நீங்கள் ஏன் நோக்க வேண்டும்?
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-6
|
677 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 7 – திருவிவிலியம்
|
1 அரசிள மகளே!
காலணி அணிந்த உன் மெல்லடிகள்
எத்துணை அழகு!
உன் தொடைகளின் வளைவுகள்
அணிகலனுக்கு இணை!
கைதேர்ந்த கலைஞனின் வேலைப்பாடு!
2 உன் கொப்பூழ்
வட்டவடிவக் கலம்;
அதில் மதுக் கலவைக்குக்
குறைவே இல்லை;
உன் வயிறு
கோதுமை மணியின் குவியல்;
லீலிகள் அதை வேலியிட்டுள்ளன.
3 உன் முலைகள் இரண்டும்
இரு மான் குட்டிகள் போன்றவை;
கலைமானின்
இரட்டைக் குட்டிகள் போன்றவை.
4 உன் கழுத்து தந்தத்தாலான
கொத்தளம் போன்றது;
உன் கண்கள்
எஸ்போனின் குளங்கள் போன்றவை;
பத்ரபீம் வாயிலருகே உள்ள
குளங்கள் போன்றவை;
உம் மூக்கு
லெபனோனின் கோபுரத்திற்கு இணை;
தமஸ்கு நகர் நோக்கியுள்ள
கோபுரத்திற்கு இணை.
5 உன் தலை கர்மேல் மலைபோல்
நிமிர்ந்துள்ளது;
உன் கூந்தல் செம்பட்டுப் போன்றது;
அதன் சுருள்களுள்
அரசனும் சிறைப்படுவான்.
பாடல் 22: தலைவன் கூற்று
6 அன்பே! இன்பத்தின் மகளே!
நீ எத்துணை அழகு!
எத்துணைக் கவர்ச்சி!
7 இந்த உன் வளர்த்தி
பேரீச்சைக்கு நிகராகும்;
உன் முலைகள் இரண்டும்
அதன் குலைகளாகும்.
8 ஆம், பேரீச்சையின்மேல்
நான் ஏறுவேன்;
அதன் பழக்குலைகளைப்
பற்றிடுவேன்” என்றேன்;
உன் முலைகள்
திராட்சைக் குலைகள்போல் ஆகுக!
உன் மூச்சு
கிச்சிலிபோல் மணம் கமழ்க!
9 இதழ்களுக்கும் பற்களுக்கும் மேலே
மென்மையுடன் இறங்கும்
இனிமைமிகு
திராட்சை இரசம் போன்றவை
உன் முத்தங்கள்!
பாடல் 23: தலைவி கூற்று
10 நான் என் காதலர்க்குரியள்;
அவர் நாட்டம் என்மேலே!
11 என் காதலரே, வாரும்;
வயல்வெளிக்குப் போவோம்;
மருதோன்றிகள் நடுவில்
இரவைக் கழிப்போம்.
12 வைகறையில் திராட்சைத்
தோட்டத்திற்குப் போவோம்;
திராட்சைக் கொடிகள் துளிர்த்தனவா,
அதிலிருக்கும் மொட்டுகள் விரிந்தனவா,
மாதுளை மரங்கள் மலர்ந்தனவா
என்று பார்ப்போம்.
அங்கே உம்மேல்
என் காதலைப் பொழிவேன்.
13 காதற்கனிகளின் மணம் கமழுகின்றது;
இனியது அனைத்தும்
நம் கதவருகில் உளது;
புதிதாய்ப் பறித்தனவும்
பலநாள் காத்தனவுமான பழங்களை
என் காதலரே,
உமக்கென்றே நான் சேர்த்து வைத்தேன்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-7
|
678 |
இனிமைமிகு பாடல்
|
இனிமைமிகு பாடல் அதிகாரம் – 8 – திருவிவிலியம்
|
பாடல் 24: தலைவி கூற்று
1 நீர் என் உடன்பிறப்பாக
இருக்கக் கூடாதா!
என் அன்னையிடம் பால் குடித்தவராய்
இருக்கலாகாதா!
தெருவில் கண்டாலும்
நான் உம்மை முத்தமிடுவேனே!
அப்போது எவருமே
என்னை இகழமாட்டார்.
2 உம்மை என் தாய் வீட்டுக்குக்
கூட்டி வருவேன்;
எனக்குக் கற்றுத் தந்தவளின்
மனைக்குள் கொணர்ந்திடுவேன்;
மணமூட்டிய திராட்சை இரசத்தை
உமக்குக் குடிக்கக் கொடுப்பேன்;
என் மாதுளம் பழச்சாற்றைப்
பருகத் தருவேன்.
3 இடக்கையால் அவர்
என் தலையைத் தாங்கிக் கொள்வார்;
வலக்கையால் அவர்
என்னைத் தழுவிக் கொள்வார்.
4 எருசலேம் மங்கையரே,
ஆணையிட்டுக் கேட்கின்றேன்;
காதலை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
தானே விரும்பும்வரை
அதை ஏன் தட்டி எழுப்புகின்றீர்?
5 “யார் இவள்!
பாலைவெளியினின்று
எழுந்து வருபவள்;
தன் காதலர்மேல் சாய்ந்து கொண்டு
வருபவள் யார் இவள்?”
பாடல் 25: தலைவி கூற்று
5 கிச்சிலி மரத்தடியில்
நான் உம்மை எழுப்பினேன்;
அங்கேதான் உம்தாய்
பேறுகால வேதனையுற்றாள்.
அங்கேதான் உம்மைப் பெற்றவள்
பேறுகால வேதனையுற்றாள்.
6 உம் நெஞ்சத்தில் இலச்சினைபோல்
என்னைப் பொறித்திடுக;
இலச்சினைப்போல்
உம் கையில் பதித்திடுக;
ஆம், அன்பு சாவைப்போல்
வலிமைமிக்கது;
அன்பு வெறி
பாதாளம்போல் பொறாதது;
அதன் பொறி,
எரிக்கும் நெருப்புப் பொறி;
அதன் கொழுந்து
பொசுக்கும் தீக்கொழுந்து.
7 பெருங்கடலும்
அன்பை அணைக்க முடியாது;
வெள்ளப்பெருக்கும்
அதை மூழ்கடிக்க இயலாது;
அன்புக்காக ஒருவன்
தன் வீட்டுச் செல்வங்களை எல்லாம்
வாரியிறைக்கலாம்;
ஆயினும், அவன்
ஏளனம் செய்யப்படுவது உறுதி.
பாடல் 26: தமையர்-தலைவி உரையாடல்
8 நம்முடைய தங்கை சிறியவள்;
அவளுக்கு முலைகள்
முகிழ்க்கவில்லை;
அவளைப் பெண்பேச வரும்நாளில்
நம் தங்கைக்காக என் செய்வோம்?
9 அவள் ஒரு மதிலானால்
அதன்மேல்
வெள்ளியரண்
கட்டிடுவோம்;
அவள் ஒரு கதவானால்
அதனை கேதுருப் பலகையால்
மூடிடுவோம்.
10 நான் மதில்தான்;
என் முலைகள்
அதன் கோபுரங்கள் போல்வன;
அவர்தம் பார்வையில்
நான் நல்வாழ்வு தருபவள் ஆவேன்.
பாடல் 27: தலைவன் கூற்று
11 பாகால்-ஆமோன் என்னுமிடத்தில்
சாலமோனுக்கு இருந்தது
ஒரு திராட்சைத் தோட்டம்,
திராட்சைத் தோட்டத்தை
அவர் காவலரிடம் ஒப்படைத்தார்;
அதன் கனிகளுக்காக எவரும்
ஆயிரம் வெள்ளிக் காசுகூடத் தருவார்.
12 எனக்குரிய திராட்சைத் தோட்டம்
என்முன்னே உளது;
சாலமோனே,
அந்த ஆயிரம் வெள்ளிக்காசு
உம்மிடமே இருக்கட்டும்;
இருநூறு காசும்
பழங்களைக் காப்போர்க்கே சேரட்டும்.
பாடல் 28: தலைவன்-தலைவி உரையாடல்
13 “தோட்டங்களில் வாழ்பவளே!
தோழர் கூர்ந்து கேட்கின்றனர்;
உன் குரலை
யான் கேட்கலாகாதோ!”
14 “என் காதலரே!
விரைந்து ஓடிடுக;
கலைமான் அல்லது
மரைமான் குட்டிபோல
நறுமணம் நிறைந்த மலைகளுக்கு
விரைந்திடுக!”
|
https://bible.catholicgallery.org/tamil/etb-song-of-songs-8
|
679 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 1 – திருவிவிலியம்
|
1 உசியா, யோத்தாம், ஆகாசு, எசேக்கியா என்போர் யூதா நாட்டின் அரசர்களாய் இருந்த காலத்தில் யூதா, எருசலேம் என்பவற்றைக் குறித்து ஆமோட்சின் மகன் எசாயா கண்ட காட்சி:
கடவுள் தம் மக்களைக் கண்டித்தல்
2 விண்வெளியே கேள்;
மண்ணுலகே செவிகொடு:
ஆண்டவர் திருவாய்
மலர்ந்தருளுகின்றார்;
பிள்ளைகளைப் பேணி வளர்த்தேன்;
அவர்களோ எனக்கெதிராகக்
கிளர்ந்தெழுந்தார்கள்.
3 காளை தன் உடைமையாளனை
அறிந்து கொள்கின்றது;
கழுதை தன் தலைவன் தனக்குத்
தீனி போடும் இடத்தைத்
தெரிந்து கொள்கின்றது;
ஆனால் இஸ்ரயேலோ
என்னை அறிந்து கொள்ளவில்லை;
என் மக்களோ
என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
4 ஐயோ, பாவம் நிறைந்த மக்களினம் இது;
அநீதி செய்வோரின் கூட்டம் இது;
தீச்செயல் புரிவோரின் வழிமரபு இது;
கேடுகெட்ட மக்கள் இவர்கள்;
ஆண்டவரைப் புறக்கணித்து விட்டார்கள்;
இஸ்ரயேலின் தூயவரை
அவமதித்துவிட்டார்கள்;
அவருக்கு அன்னியராய் ஆகிவிட்டார்கள்.
5 நீங்கள் ஏன் தொடர்ந்து
வன்முறையில் ஈடுபடுகிறீர்கள்?
என் கையால் பட்ட அடி போதாதா?
உங்கள் தலையெல்லாம் வடுக்கள்;
இதயமெல்லாம் தளர்ச்சி.
6 உள்ளங்கால் முதல் உச்சந்தலை வரை
உங்கள் உடலில் நலமே இல்லை;
ஆனால் காயங்கள், கன்றிப்போன வடுக்கள்,
சீழ்வடியும் புண்களே நிறைந்துள்ளன;
அங்கே சீழ் பிதுக்கப்படவில்லை,
கட்டு போடப்படவில்லை,
எண்ணெய் பூசிப் புண் ஆற்றப்படவுமில்லை.
7 உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது;
உங்கள் நகரங்கள் நெருப்புக்கு இரையாயின;
வேற்று நாட்டினர் உங்கள் கண்ணெதிரே
உங்கள் நாட்டை விழுங்குகிறார்கள்;
வேற்று நாட்டினரால் வீழ்த்தப்பட்ட
உங்கள் நாடு பாழடைந்து கிடக்கிறது.
8 மகள் சீயோன்
திராட்சைத் தோட்டத்துக்
குடில் போன்றும்
வெள்ளரித் தோட்டத்துக்
குடிசை போன்றும்
முற்றுகையிடப்பட்ட நகரம் போன்றும்
கைவிடப்பட்டாள்.
9 படைகளின் ஆண்டவர்
நம்மில் சிலரையேனும்
எஞ்சியிருக்கச் செய்யாவிடில்
சோதோமைப்போல் நாம் ஆகியிருப்போம்.
கொமோராவுக்கு ஒத்தவர்களாயிருப்போம்.
வெளிவேடக்காரருக்கு எதிராக
10 எருசலேமே,
உன்னை ஆளுகிறவர்களும்
உன் மக்களும்,
சோதோம் கொமோராவைப்
போன்றவர்களாயிருக்கின்றனர்;
நம் ஆண்டவரின்
அறிவுரையைக் கேளுங்கள்;
அவர்தம் கட்டளைக்குச் செவிசாயுங்கள்.
11 “எண்ணற்ற உங்கள் பலிகள்
எனக்கு எதற்கு?”
என்கிறார் ஆண்டவர்.
ஆட்டுக் கிடாய்களின் எரி பலிகளும்,
கொழுத்த விலங்குகளின் கொழுப்பும்
எனக்குப் போதுமென்றாகிவிட்டன;
காளைகள், ஆட்டுக் குட்டிகள்,
வெள்ளாட்டுக் கிடாய்கள்
இவற்றின் இரத்தத்திலும்
எனக்கு நாட்டமில்லை.
12 நீங்கள் என்னை வழிபட
என் திருமுன் வரும்போது,
இவற்றையெல்லாம் கொண்டு வந்து
என் கோவில் முற்றத்தை
மிதிக்க வேண்டுமென்று கேட்டது யார்?
13 இனி, காணிக்கைகளை
வீணாகக் கொண்டுவர வேண்டாம்;
நீங்கள் காட்டும் தூபம்
எனக்கு அருவருப்பையே தருகின்றது;
நீங்கள் ஒழுங்கீனமாகக் கொண்டாடும்
அமாவாசை, ஓய்வுநாள்
வழிபாட்டுக் கூட்டங்களை
நான் சகிக்க மாட்டேன்.
14 உங்கள் அமாவாசை, திருவிழாக்
கூட்டங்களையும்,
என் உள்ளம் வெறுக்கின்றது;
அவை என் மேல் விழுந்த சுமையாயின;
அவற்றைச் சுமந்து சோர்ந்து போனேன்.
15 என்னை நோக்கி உங்கள் கைகளை
நீங்கள் உயர்த்தும் போது,
பாரா முகத்தினனாய் நான் இருப்பேன்;
நீங்கள் தொடர்ந்து மன்றாடினாலும்
நான் செவிகொடுப்பதில்லை;
உங்கள் கைகளோ
இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன.
16 உங்களைக் கழுவித்
தூய்மைப்படுத்துங்கள்;
உங்கள் தீச்செயலை
என் திருமுன்னிருந்து அகற்றுங்கள்;
தீமை செய்தலை விட்டொழியுங்கள்;
17 நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்;
நீதியை நாடித் தேடுங்கள்;
ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்;
திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்;
கைம் பெண்ணுக்காக வழக்காடுங்கள்.
18 “வாருங்கள், இப்பொழுது
நாம் வழக்காடுவோம்”
என்கிறார் ஆண்டவர்;
“உங்கள் பாவங்கள்
கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன;
எனினும் உறைந்த பனிபோல
அவை வெண்மையாகும்.
இரத்த நிறமாய்
அவை சிவந்திருக்கின்றன;
எனினும் பஞ்சைப்போல்
அவை வெண்மையாகும்.
19 மனமுவந்து நீங்கள்
எனக்கு இணங்கி நடந்தால்;
நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்.
20 மாறாக, இணங்க மறுத்து
எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால்,
திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்;
ஏனெனில் ஆண்டவர்தாமே
இதைக் கூறினார்.
அநீதி நிறைந்த எருசலேம்
21 உண்மையாய் இருந்த நகரம்,
எப்படி விலைமகள் போல் ஆயிற்று!
முன்பு அந்நகரில்
நேர்மை நிறைந்திருந்தது;
நீதி குடி கொண்டிருந்தது;
இப்பொழுதோ,
கொலைபாதகர் மலிந்துள்ளனர்.
22 உன் வெள்ளி களிம்பேறிற்று;
உன் மதுபானம் நீர்க்கலப்பாயிற்று.
23 உன் தலைவர்கள்
வன்முறையில் ஈடுபடுகின்றனர்;
திருடருக்குத் தோழராய் இருக்கின்றனர்;
கையூட்டு வாங்குவதற்கு
ஒவ்வொருவனும் ஏங்குகின்றான்.
திக்கற்றோருக்கு அவர்கள்
நீதி வழங்குவதில்லை;
கைம்பெண்ணின் வழக்குகளைத்
தீர்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை.
24 ஆதலால், படைகளின் ஆண்டவரும்
இஸ்ரயேலின் வல்லவருமாகிய
ஆண்டவர் கூறுவது இதுவே:
என் எதிரிகளைப் பழிவாங்குவேன்;
என் பகைவர்மேலுள்ள சீற்றத்தைத்
தீர்த்துக்கொள்வேன்.
25 உனக்கு நேராக
என் கைகளை நீட்டுவேன்;
உன்னை நன்றாகப் புடமிட்டு
உன் களிம்பை நீக்குவேன்;
உன்னிடமுள்ள உலோகக் கலவை
அனைத்தையும் நீக்குவேன்.
26 முன்னாளில் இருந்தது போலவே
உன் நீதிபதிகளைத்
திருப்பிக் கொணர்வேன்;
தொடக்க காலத்தில் இருந்தது போலவே
உன் ஆலோசகர்களை
மீண்டும் தருவேன்;
அப்பொழுது எருசலேம்
‘நீதியின் நகர்’
எனப் பெயர் பெறும்;
‘உண்மையின் உறைவிடம்’ எனவும்
அழைக்கப்படும்.
27 நீதி சீயோனை மீட்கும்;
நேர்மை மனமாற்றம் அடைவோரை
விடுவிக்கும்.
28 ஆனால் வன்முறையாளரும் பாவிகளும்
ஒருங்கே அழிந்தொழிவர்;
ஆண்டவரைப் புறக்கணித்தவர்கள்
அனைவரும் இல்லாதொழிவர்;
29 நீங்கள் நாடி வழிபட்ட
தேவதாரு மரங்களை முன்னிட்டு
மானக்கேடு அடைவீர்கள்;
நீங்கள் தெரிந்து கொண்ட
சோலைகளை முன்னிட்டு
நாணுவீர்கள்;
30 ஏனெனில் நீங்கள் இலையுதிர்ந்த
தேவதாரு மரத்தைப்போல் ஆவீர்கள்;
நீரின்றி வாடிப்போகும்
சோலையைப் போலவும் இருப்பீர்கள்;
31 வலிமை மிக்கவன்
சணற் கூளம் போலாவான்;
அவனுடைய கைவேலைப்பாடும்
தீப்பொறியாகும்;
அவை இரண்டும் ஒருங்கே எரிந்து போகும்;
நெருப்புத் தணலை அணைப்பார்
எவரும் இரார்.
1:1 2 அர 15:1-7; 15:32-16:20; 18:1-20:21; 2 குறி 26:1-32:33.
1:11-14 ஆமோ 5:21-22.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-1
|
680 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 2 – திருவிவிலியம்
|
முடிவில்லா அமைதி
(மீக் 4:1-3)
1 யூதாவையும் எருசலேமையும் குறித்து
ஆமோட்சியின் மகன் எசாயா கண்ட
காட்சி:
2 இறுதி நாள்களில் ஆண்டவரின்
கோவில் அமைந்துள்ள மலை
எல்லா மலைகளுக்குள்ளும்
உயர்ந்ததாய் நிலை நிறுத்தப்படும்;
எல்லாக் குன்றுகளுக்குள்ளும்
மேலாய் உயர்த்தப்படும்;
மக்களினங்கள் அதைநோக்கிச்
சாரை சாரையாய் வருவார்கள்.
3 வேற்றினத்தார் பலர்
அங்கு வந்து சேர்ந்து
‘புறப்படுங்கள்
ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்;
யாக்கோபின் கடவுளின்
கோவிலுக்குப் போவோம்.
அவர் தம் வழிகளை
நமக்குக் கற்பிப்பார்;
நாமும் அவர் நெறிகளில்
நடப்போம்’ என்பார்கள்.
ஏனெனில், சீயோனிலிருந்தே
திருச்சட்டம் வெளிவரும்;
எருசலேமிலிருந்தே
ஆண்டவரின் திருவாக்கு புறப்படும்.
4 அவர் வேற்றினத்தாரிடையே உள்ள
வழக்குகளைத் தீர்த்து வைப்பார்;
பல இன மக்களுக்கும் தீர்ப்பளிப்பார்;
அவர்கள் தங்கள் வாள்களைக்
கலப்பைக் கொழுக்களாகவும்
தங்கள் ஈட்டிகளைக்
கருக்கரிவாள்களாகவும்
அடித்துக் கொள்வார்கள்,
ஓர் இனத்திற்கு எதிராக
மற்றோர் இனம் வாள் எடுக்காது;
அவர்கள் இனி ஒருபோதும்
போர்ப்பயிற்சி பெற மாட்டார்கள்.
செருக்குற்றோரின் அழிவு
5 யாக்கோபின் குடும்பத்தாரே, வாருங்கள்
நாம் ஆண்டவரின் ஒளியில் நடப்போம்;
6 யாக்கோபின் குடும்பத்தாராகிய
உம்முடைய மக்களை
நீர் கைவிட்டு விட்டீர்;
ஏனெனில் கீழை நாட்டுப் போதனை
அவர்களிடையே மிகுந்துள்ளது.
பெலிஸ்தியரைப் போல அவர்கள்
நிமித்தம் பார்க்கின்றார்கள்;
வேற்று நாட்டினருடன்
கூட்டுச் சேர்கின்றார்கள்.
7 அவர்கள் நாடு வெள்ளி,
பொன்னால் நிறைந்துள்ளது;
அவர்கள் கருவூலத்திற்கு
அளவே இல்லை;
அவர்கள் நாடு
குதிரைகளால் நிறைந்துள்ளது;
அவர்கள் தேர்ப்படைகள்
எண்ணிக்கையில் அடங்கா.
8 அவர்கள் நாட்டில்
சிலைகள் மலிந்துள்ளன;
தங்கள் கைவேலைப்பாட்டினால்
செய்தவற்றை வணங்குகின்றனர்;
தங்கள் விரல்கள்
உருவாக்கியவற்றின் முன் பணிகின்றனர்.
9 இவற்றால் மானிடர் தாழ்நிலை அடைவர்;
மக்கள் சிறுமை அடைவார்கள்;
ஆண்டவரே! அவர்களுக்கு
மன்னிப்பு அருளாதீர்;
10 கற்பாறைக்குள் நுழைந்து கொள்ளுங்கள்;
மண்ணில் பதுங்கி
மறைந்து கொள்ளுங்கள்;
ஆண்டவரின் அச்சம் தரும்
திருமுன்னின்றும் அவரது
உயர் மாட்சியினின்றும் அகலுங்கள்;
11 செருக்குமிகு பார்வையுடையோர்
தாழ்த்தப்படுவர்;
ஆணவமிக்கோர் அவமானமடைவர்;
ஆண்டவர் ஒருவரே
அந்நாளில் மாட்சியுறுவார்.
12 படைகளின் ஆண்டவருக்குரிய
நாள் ஒன்று இருக்கின்றது;
அன்று, இறுமாப்பும் செருக்கும் உடைய
அனைவரும் தாழ்வுறுவர்;
உயர்த்தப்பட்டவை, உயர்ந்து நிற்பவை
அனைத்தும் நலிவடையும்.
13 அன்று, லெபனோனில் ஓங்கி வளர்ந்த
கேதுரு மரங்கள் யாவும் அழிக்கப்படும்
பாசானில் உள்ள அனைத்துக்
கருவாலி மரங்களும் அழிக்கப்படும்.
14 வானளாவிய மலைகள்,
உயர்ந்த குன்றுகள்
அனைத்தும் தரைமட்டமாக்கப்படும்.
15 உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் யாவும்
தகர்த்தெறியப்படும்;
வலிமைமிக்க மதிற்சுவர்கள் அனைத்தும்
தவிடு பொடியாக்கப்படும்.
16 தர்சீசின் மரக்கலங்கள் யாவும்
அழகிய வேலைப்பாடுகள்
அனைத்தும் அமிழ்த்தப்படும்.
17 மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்;
அவர்தம் செருக்கு அகற்றப்படும்;
ஆண்டவர் ஒருவர் மட்டுமே அந்நாளில்
உன்னதமானவராயிருப்பார்;
18 சிலைகள் அனைத்தும்
ஒருங்கே ஒழிக்கப்படும்.
19 ஆண்டவர் உலகை நடுநடுங்கச் செய்ய
வரும்போது,
அவரது அச்சம்தரும் திருமுன்னின்றும்,
அவரது சீர்மிகு மாட்சியினின்றும்
மறைந்திட மனிதர்
குன்றின் குகைகளில்
புகுந்து கொள்வர்;
மண்ணின் குழிகளில்
மறைந்து கொள்வர்.
20 அந்நாளில் மக்களினத்தார்
தாம் வழிபடுவதற்கு உருவாக்கிய
வெள்ளிச் சிலைகளையும்,
பொற்பதுமைகளையும்,
அகழ் எலிகளுக்கும்,
வெளவால்களுக்கும் எறிந்து விடுவர்.
21 ஆண்டவர் உலகை
நடுநடுங்கச் செய்ய வரும்போது,
அவரது அச்சம் தரும் திருமுன்னின்றும்,
அவரது சீர்மிகு மாட்சியினின்றும்
மறைந்திட அவர்கள்
பாறைகளின் வெடிப்புகளில்
பதுங்கிக் கொள்வர்;
குன்றுகளின் பிளவுகளில்
ஒளிந்து கொள்வர்.
22 நிலையற்ற மனிதர்மேல்
நம்பிக்கை வைக்காதீர்;
அவர்களின் உயிர் நிலையற்றது;
ஒருபொருட்டாகக் கருதப்படுவதற்கு
அவர்களின் தகுதி என்ன?
2:4 யோவே 3:10.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-2
|
681 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 3 – திருவிவிலியம்
|
எருசலேமில் குழப்பம்
1 படைகளின் ஆண்டவரான நம் தலைவர்,
எருசலேமின் ஊன்றுகோலை
ஒடித்து விடுவார்;
யூதாவின் நலத்தை நலியச் செய்வார்;
ஊன்றுகோலாகிய உணவையும்
நலமாகிய நீரையும் அகற்றிவிடுவார்.
2 வலிமைமிகு வீரன்,
போர்க்களம் செல்லும் போர்வீரன்,
தீர்ப்பு வழங்கும் நீதிபதி,
இறைவாக்கு உரைக்கும் இறைவாக்கினன்,
குறி சொல்லும் நிமித்திகன்,
அறிவு முதிர்ந்த முதியோன்
இவர்கள் அனைவரையும் அழித்து விடுவார்.
3 ஐம்பதின்மர் தலைவன்,
உயர்பதவி வகிக்கும் சான்றோன்,
அறிவுரை வழங்குபவன்,
திறன் வாய்ந்த மந்திரவாதி,
மாயவித்தை புரிவதில் நிபுணன்
ஆகிய அனைவரையும் அகற்றி விடுவார்.
4 சிறுவர்களை
மக்கள் தலைவர்களாய் மாற்றுவார்;
பச்சிளங் குழந்தைகள் அவர்கள் மேல்
அரசாட்சி செலுத்துவார்கள்.
5 மக்கள் ஒருவரை ஒருவர் ஒடுக்குவர்;
எல்லோரும் தமக்கு அடுத்திருப்பவரைத்
துன்புறுத்துவர்;
இளைஞர் முதியோரை அவமதிப்பர்;
கீழ்மக்கள்
மாண்பு மிக்கவரைப் புறக்கணிப்பர்.
6 தன் தந்தையின் இல்லத்தில் வாழும்
தமையனின் கையைத் தொட்டு
ஒருவன், “நீ ஒருவனாவது
ஆடை உடுத்தியுள்ளாய்;
நீ எங்கள் பெருந்தலைவன் ஆவாயாக;
பாழடைந்து கிடக்கும் இந்த நாடு
உன் கைக்குள் வருவதாக” என்பான்.
7 அந்நாளில் அவன், “நான் காயத்திற்குக்
கட்டுப்போடுகிறவன் அல்லன்;
இல்லத்தில் உடுத்துவதற்கு உடையோ,
உண்பதற்கு உணவோ ஒன்றுமில்லை;
மக்களின் தலைவனாய் என்னை
நீங்கள் ஏற்படுத்தவும் வேண்டாம்”
எனச் சொல்லி மறுத்துவிடுவான்.
8 எருசலேம் நிலைகுலைந்து
தடுமாற்றம் அடைந்து விட்டது;
யூதா வீழ்ச்சி அடைந்து விட்டது;
ஏனெனில்,
அவர்களுடைய சொல்லும், செயலும்
ஆண்டவரின் திருவுளத்திற்கு
எதிராய் உள்ளன;
மாட்சிமைமிகு அவர்தம் கண்களுக்குச்
சினமூட்டின.
9 அவர்களின் ஓரவஞ்சனை அவர்களுக்கு
எதிராய்ச் சான்றுகூறுகின்றது;
அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல்
சோதோம் மக்களைப்போல்
பறைசாற்றுகிறார்கள்.
ஐயோ! அவர்கள் உயிருக்குக் கேடு;
ஏனெனில், தங்களுக்குத் தாங்களே
தீமையை வருவித்துக்கொண்டார்கள்.
10 ஆனால், மாசற்றோர்
நலம் பெறுவர் என நவிலுங்கள்;
அவர் தம் நற்செயல்களின்
கனியை உண்பது உறுதி.
11 தீச்செயல் புரிவோர்க்கு ஐயோ கேடு!
தீமை அவர்களைச் சூழ்ந்து கொள்ளும்;
அவர்களின் கைகள் செய்த
தீவினைகள் அனைத்தும்
அவர்கள் மேலேயே விழும்.
12 என் மக்களே, சிறுவர்
உங்களை ஒடுக்குகின்றார்கள்;
பெண்கள் உங்கள்மேல்
ஆட்சி செலுத்துகின்றார்கள்;
என் மக்களே, உங்கள் தலைவர்கள்
உங்களைத் தவறாக
வழி நடத்துகின்றார்கள்;
உங்களை ஆள்பவர்கள்
நீங்கள் நடக்கவேண்டிய
நெறிமுறைகளைக் குழப்புகின்றார்கள்.
13 ஆண்டவர் வழக்காடுவதற்கு
ஆயத்தமாகிறார்;
மக்களினங்களுக்குத் தீர்ப்பு வழங்க
எழுந்து நிற்கிறார்.
14 தம் மக்களின் முதியோரையும்
தலைவர்களையும்
தம் நீதித் தீர்ப்புமுன் நிறுத்துகிறார்;
இந்தத் திராட்சைத் தோட்டத்தைத்
தின்றழித்தவர்கள் நீங்கள்;
எளியவர்களைக் கொள்ளையிட்ட
பொருள்கள் உங்கள் இல்லங்களில்
நிறைந்துள்ளன;
15 என் மக்களை நீங்கள்
நசுக்குவதன் பொருள் என்ன?
எளியோரின் முகத்தை
உருக்குலைப்பதன் பொருள் என்ன?”
என்கிறார் என் தலைவராகிய
படைகளின் ஆண்டவர்.
எருசலேம் பெண்களுக்கு எச்சரிக்கை
16 மேலும் ஆண்டவர் கூறியது இதுவே:
“சீயோன் மகளிர் செருக்குக்
கொண்டுள்ளார்கள்;
தங்கள் கழுத்தை வளைக்காது
நிமிர்ந்து நடக்கின்றார்கள்;
தம் கண்களால் காந்தக் கணை
தொடுக்கின்றார்கள்;
தங்கள் கால்களிலுள்ள சிலம்பு
ஒலிக்கும்படி ஒய்யார நடை நடந்து
உலவித் திரிகிறார்கள்.
17 ஆதலால், ஆண்டவர்
சீயோன் மகளிரின் உச்சந்தலைகளில்
புண்ணை வருவிப்பார்;
வழுக்கைத் தலையர்களாய்
அவர்களை ஆக்குவார்;
ஆண்டவர் அவர்களின்
மானத்தைக் குலைப்பார்.
18 அந்நாளில் அவர்களுடைய அணிகலன்களாகிய கால்சிலம்புகள், சுட்டிகள், பிறைவடிவமான அணிகலன்கள்,
19 ஆரங்கள், கழுத்துப் பொற்சங்கிலிகள், கழுத்துத் துண்டுகள்,
20 கை வளையல்கள், தலை அணிகலன்கள், கூந்தல் கட்டும் பட்டு நாடாக்கள், அரைக்கச்சைகள், நறு மணச் சிமிழ்கள்,
21 காதணிகள், மோதிரங்கள், மூக்கணிகள்,
22 வேலைப்பாடுள்ள அழகிய ஆடைகள், மேலாடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23 கண்ணாடிகள், மெல்லிய சட்டைகள், குல்லாக்கள், முக்காடுகள் ஆகியவற்றை ஆண்டவர் களைந்துவிடுவார்.
24 நறுமணத்திற்குப் பதிலாக
அவர்கள்மேல் துர்நாற்றம் வீசும்;
கச்சைக்குப் பதிலாகக்
கயிற்றைக் கட்டிக்கொள்வார்கள்;
வாரிமுடித்த கூந்தலுக்குப் பதிலாக
அவர்கள் வழுக்கைத் தலை
கொண்டிருப்பார்கள்;
ஆடம்பர உடைகளுக்குப் பதிலாக
அவர்கள் சாக்குடை உடுத்துவார்கள்.
அழகிய உடல்கொண்ட அவர்கள்
மானக்கேடு அடைவார்கள்.
25 உங்கள் ஆண்கள்
வாளுக்கு இரையாவார்கள்;
வலிமை மிக்க உங்கள் வீரர்கள்
போரில் மடிவார்கள்.
26 சீயோன் வாயில்கள் புலம்பி அழும்;
அவள் எல்லாம் இழந்தவளாய்த்
தரையில் உட்காருவாள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-3
|
682 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 4 – திருவிவிலியம்
|
1 அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு
பெண்கள் பிடித்துக்கொண்டு,
‟நாங்கள் எங்கள் சொந்த உணவை
உண்டு வாழ்வோம்;
எங்கள் சொந்த ஆடைகளை
உடுத்திக்கொள்வோம்;
உமது பெயரை மட்டும்
எங்களுக்கு வழங்கி எங்கள்
இழிவை நீக்குவீராக” என்பார்கள்.
எருசலேமின் மறுவாழ்வு
2 அந்நாளில் ஆண்டவரால்
துளிர்க்கும் தளிர்,
அழகும் மேன்மையும்
வாய்ந்ததாய் இருக்கும்;
நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,
இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்
பெருமையும் மேன்மையுமாய் அமையும்.
3 அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,
எருசலேமில் தப்பி வாழ்வோரும்
‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;
உயிர் பிழைப்பதற்கென்று
எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்
‛புனிதர்’ எனப்படுவர்.
4 என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்
கழுவித் தூய்மைப்படுத்துவார்;
நீதியின்படி தீர்ப்பிடும்
அவரது தன்மையாலும்
நெருப்புத்தணலையொத்த
அவரது ஆற்றலாலும்
எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி
அதனைத் தூய்மைப்படுத்துவார்.
5 சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும்.
6 அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.
4:5 விப 13:21; 24:16.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-4
|
683 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 5 – திருவிவிலியம்
|
திராட்சைத் தோட்டம்பற்றிய கவிதை
1 என் நண்பரைக்குறித்துக் கவி பாடுவேன்; என் அன்பரின் திராட்சைத் தோட்டத்தைப் பற்றிக் காதல் பாட்டொன்று பாடுவேன்; செழுமை மிக்கதொரு குன்றின்மேல் என் நண்பருக்குத் திராட்சைத் தோட்டம் ஒன்றிருந்தது.
2 அவர் அதை நன்றாகக், கொத்திக்கிளறிக்
கற்களைக் களைந்தெடுத்தார்;
நல்ல இனத் திராட்சைச் செடிகளை
அதில் நட்டுவைத்தார்;
அவற்றைக் காக்கும் பொருட்டுக்
கோபுரம் ஒன்றைக் கட்டி வைத்தார்;
திராட்சைப் பழம் பிழிய
ஆலை ஒன்றை அமைத்தார்;
நல்ல திராட்சைக் குலைகள் கிட்டுமென
எதிர்பார்த்து காத்திருந்தார்;
மாறாக, காட்டு பழங்களையே
அது தந்தது.
3 இப்பொழுது என் நண்பர் சொல்கிறார்;
எருசலேமில் குடியிருப்போரே,
யூதாவில் வாழும் மனிதரே,
எனக்கும் என் திராட்சைத்
தோட்டத்திற்கும் இடையே
நீதி வழங்குங்கள்.
4 என் திராட்சைத் தோட்டத்திற்குச்
செய்யாது நான் விட்டு விட்டதும்
இனிச் செய்யக் கூடியதும் ஏதும் உண்டோ?
நற்கனிகளைத் தரும் என்று
நான் காத்திருக்க,
காட்டுப் பழங்களை அது தந்ததென்ன?
5 என் திராட்சைத் தோட்டத்திற்குச்
செய்யப் போவதை உங்களுக்கு
நான் அறிவிக்கிறேன், கேளுங்கள்;
“நானே அதன் வேலியைப்
பிடுங்கி எறிவேன்; அது தீக்கிரையாகும்;
அதன் சுற்றுச் சுவரைத்
தகர்த்தெறிவேன்; அது மிதியுண்டு போகும்.
6 நான் அதைப் பாழாக்கி விடுவேன்;
அதன் கிளைகள் நறுக்கப்படுவதில்லை;
களையை அகற்ற
மண் கொத்தப்படுவதுமில்லை;
நெருஞ்சியும், முட்புதர்களுமே
அதில் முளைக்கும்;
அதன்மீது மழை பொழியாதிருக்க
மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்.”
7 படைகளின் ஆண்டவரது
திராட்சைத் தோட்டம்
இஸ்ரயேல் குடும்பத்தாரே;
அவர் ஆர்வத்துடன் நட்ட கன்று
யூதா மக்களே;
நீதி விளையுமென்று எதிர்நோக்கியிருந்தார்;
ஆனால் விளைந்ததோ இரத்தப்பழி;
நேர்மை தழைக்கும் என்று காத்திருந்தார்;
ஆனால் தழைத்ததோ முறைப்பாடு.
மக்களின் தீச்செயலும் தண்டனைத் தீர்ப்பும்
8 வீட்டோடு வீடு சேர்ப்பவர்களே,
வயலோடு வயல்
இணைத்துக் கொள்பவர்களே,
உங்களுக்கு ஐயோ கேடு!
பிறருக்கு இடமில்லாது நீங்கள்மட்டும்
தனித்து நாட்டில் வாழ்வீர்களோ?
9 என் காது கேட்கப் படைகளின் ஆண்டவர்
ஆணையிட்டுக் கூறியது இதுவே:
“மெய்யாகவே பல இல்லங்கள்
பாழடைந்து போகும்:
அழகுவாய்ந்த பெரிய மாளிகைகள்
தங்குவதற்கு ஆள் இல்லாமற் போகும்.
10 ஏனெனில் பத்து ஏக்கர்
திராட்சைத் தோட்டம்
ஒரு குடம் இரசம்தான் கொடுக்கும்;
பத்துக் கலம் விதை விதைத்தால்,
ஒரு கலமே விளையும்.
11 விடியற் காலையிலேயே விழித்தெழுந்து,
போதை தரும் மதுவை நாடி அலைந்து,
இரவுவரை குடித்துப்
பொழுதைப் போக்குகிறவர்களுக்கோ
ஐயோ, கேடு!
12 அவர்கள் கேளிக்கை விருந்துகளில்
கின்னரம், வீணை, தம்புரு, மதுபானம்
இவையெல்லாம் உண்டு; ஆனால்
ஆண்டவரின் செயல்களை
அவர்கள் நினைவுகூர்வதில்லை;
அவருடைய கைவினைகளை நோக்கிப் பார்ப்பதுமில்லை.
13 ஆதலால் அறியாமையால் என் மக்கள்
நாடு கடத்தப்படுகின்றார்கள்;
அவர்களில் பெருமதிப்பிற்குரியோர்
பசியால் மடிகின்றார்கள்;
பொதுமக்கள் தாகத்தால்
நாவறண்டு போகின்றார்கள்;
14 ஆதலால் பாதாளம் தன் வாயை
அளவுகடந்து பிளந்துள்ளது;
தன் பசியைப் பெருக்கியிருக்கிறது.
எருசலேமின் உயர்குடிமக்கள்,
பொதுமக்கள், திரள் கூட்டத்தார்,
அதில் களியாட்டம் புரிவோர் ஆகியோர்
ஒருங்கே அதனுள் இறங்குவார்கள்.
15 மனிதர் தலைகுனிவர்,
மானிடமைந்தர் தாழ்வுறுவர்,
இறுமாப்புக் கொண்டோரின் பார்வை
தாழ்ச்சியடையும்.
16 ஆனால் படைகளின் ஆண்டவர்
தம் நீதியால் உயர்ந்திருப்பார்;
தூயவராம் இறைவன் தம் நேர்மையால்
தம்மைத் தூயவராக வெளிப்படுத்துவார்.
17 அப்பொழுது ஆட்டுக்குட்டிகள்
தங்கள் மேய்ச்சல் நிலத்தில்
மேய்வதுபோல மேயும்,
வெள்ளாட்டுக் குட்டிகளும்
இளங்கன்றுகளும்
பாழடைந்த இடங்களில் மேயும்.
18 பொய்ம்மை என்னும் கயிறுகளால்
தீச்செயலைக் கட்டி இழுத்து,
வண்டியைக் கயிற்றால் இழுப்பது போலப்
பாவத்தையும் கட்டி இழுப்பவர்களுக்கு
ஐயோ கேடு!
19 ‘நாங்கள் பார்க்கும்படி அவர்
விரைவாய் வந்து, தம் வேலையைத்
துரிதமாய்ச் செய்யட்டும்;
நாங்கள் அறியும்படி,
இஸ்ரயேலின் தூயவர்
தம் நோக்கத்தை வெளிப்படுத்தி
அதை நிறைவேற்றட்டும்’ என்று
சொல்கிறவர்களுக்கு ஐயோ, கேடு!
20 தீமையை நன்மை என்றும்,
நன்மையைத் தீமை என்றும் சொல்லி,
இருளை ஒளியாக்கி, ஒளியை இருளாக்கி,
கசப்பை இனிப்பாக்கி,
இனிப்பைக் கசப்பாக்குகிறவர்களுக்கு
ஐயோ கேடு!
21 தங்கள் பார்வையில் ஞானிகள் என்னும்,
தங்கள் கணிப்பில்
கூர்மதி வாய்ந்தவர்கள் என்றும்
தங்களையே கருதுபவர்களுக்கு
ஐயோ கேடு!
22 திராட்சை இரசம் குடிப்பதில்
தீரர்களாகவும், மதுபானம் கலப்பதில்
திறமைசாலிகளாகவும் இருப்பவர்களுக்கு
ஐயோ கேடு!
23 அவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு,
குற்றவாளியை நேர்மையாளர் எனத்
தீர்ப்பிடுகின்றார்கள்;
குற்றமற்றவருக்கு நீதி கிடைப்பதைத்
தடை செய்கின்றார்கள்;
24 ஆதலால், நெருப்புத் தணல்
வைக்கோலை எரித்துச்
சாம்பலாக்குவது போல,
காய்ந்த புல் தீக்கிரையாக்கித்
தீய்ந்து போவது போல,
அவர்கள் ஆணிவேர் அழுகிப்போகும்;
அவர்கள் வழிமரபு
துரும்புபோல் பறந்து போகும்;
ஏனெனில் அவர்கள்,
படைகளின் ஆண்டவரது
திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்;
இஸ்ரயேலின் தூயவரது வாக்கை
வெறுத்துத் தள்ளினார்கள்.
25 ஆதலால், ஆண்டவரின் சினத் தீ
அவருடைய மக்களுக்கு எதிராகக்
கிளர்ந்தெழுந்தது,
அவர்களுக்கு எதிராக அவர்
தம் கையை நீட்டி
அவர்களை நொறுக்கினார்.
மலைகள் நடுநடுங்கின;
அவர்களுடைய சடலங்கள் நடுத்தெருவில்
நாதியற்றுக் குப்பை போல் கிடந்தன;
இவையெல்லாம் நடந்தும்
அவரது சீற்றம் தணியவில்லை.
நீட்டிய சினக்கை
இன்னும் மடங்கவில்லை.
26 அவர் தொலையிலுள்ள பிற இனத்துக்கு
ஓர் அடையாளக் கொடியைக்
காட்டியுள்ளார்;
மண்ணுலகின் எல்லைகளிலிருந்து
சீழ்க்கை ஒலியால் அதனை
அழைத்துள்ளார்,
அந்த இனம் வெகுவிரைவாய்
வந்து கொண்டிருக்கின்றது.
27 அவர்களுள் ஒருவனும்
களைப்படையவில்லை;
இடறி விழவில்லை; தூங்கவில்லை;
உறங்கவுமில்லை;
அவர்களில் யாருக்கேனும்
இடுப்புக்கச்சை அவிழ்ந்து விழவில்லை;
மிதியடிகளின் வாரேதும்
அறுந்து போகவுமில்லை.
28 அவர்களுடைய அம்புகள்
கூர்மையானவை; அவர்களுடைய
விற்கள் நாணேற்றப்பட்டுள்ளன;
அவர்களுடைய குதிரைகளின் குளம்புகள்
கருங்கற்களைப் போல்
காட்சியளிக்கின்றன;
அவர்களுடைய தேர்ச் சக்கரங்கள்
சூறாவளிக் காற்றைப்போல் சுழல்கின்றன.
29 அவர்களின் கர்ச்சனை
பெண் சிங்கத்தினுடையதை ஒத்தது;
இளஞ் சிங்கங்களைப்போல் அவர்கள்
கர்ச்சிக்கிறார்கள்;
உறுமிக்கொண்டு தங்கள் இரையைக்
கவ்விப் பிடிப்பார்கள்;
யாரும் விடுவிக்க இயலாதவாறு
இரையை எடுத்துக்கொண்டு
போய் விடுவார்கள்.
30 அந்நாளில் கடலின் பேரிரைச்சல்போல்
இஸ்ரயேலுக்கு எதிராக
இரைந்து உறுமுவார்கள்;
நாட்டை ஒருவன் பார்க்கையில்,
இருளும் துன்பமுமே காண்பான்;
மேகத்திரள் ஒளியை விழுங்கிவிட்டது.
5:1-2 மத் 21:33; மாற் 12:1; லூக் 20:9.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-5
|
684 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 6 – திருவிவிலியம்
|
எசாயாவின் அழைப்பு
1 உசியா அரசர் மறைந்த ஆண்டில், மிகவும் உயரமானதோர் அரியணையில் ஆண்டவர் அமர்ந்திருப்பதை நான் கண்டேன்; அவரது தொங்கலாடை கோவிலை நிரப்பி நின்றது.
2 அவருக்கு மேல் சேராபீன்கள் சூழ்ந்து நின்றனர்; ஒவ்வொருவருக்கும் ஆறு இறக்கைகள் இருந்தன; ஒவ்வொருவரும் இரண்டு இறக்கைகளால் தம் முகத்தை மூடிக்கொண்டனர்; இரண்டு இறக்கைகளால் தம் கால்களை மூடி மறைத்தனர்; மற்ற இரண்டால் பறந்தனர்.
3 அவர்களுள் ஒருவர் மற்றவரைப் பார்த்து:
“படைகளின் ஆண்டவர்
தூயவர், தூயவர், தூயவர்;
மண்ணுலகம் முழுவதும் அவரது
மாட்சியால் நிறைந்துள்ளது” என்று
உரத்த குரலில் கூறிக் கொண்டிருந்தார்.
4 கூறியவரின் குரல் ஒலியால்
வாயில் நிலைகளின் அடித்தளங்கள்
அசைந்தன;
கோவில் முழுவதும் புகையால் நிறைந்தது.
5 அப்பொழுது நான்: “ஐயோ, நான் அழிந்தேன். ஏனெனில் தூய்மையற்ற உதடுகளைக் கொண்ட மனிதன் நான்; தூய்மையற்ற உதடுகள் கொண்ட மக்கள் நடுவில் வாழ்பவன் நான்; படைகளின் ஆண்டவராகிய அரசரை என் கண்கள் கண்டனவே” என்றேன்.
6 அப்பொழுது சேராபீன்களுள் ஒருவர் பலி பீடத்திலிருந்து நெருப்புப் பொறி ஒன்றைக் குறட்டால் எடுத்து அதைத் தம் கையில் வைத்துக் கொண்டு என்னை நோக்கிப் பறந்து வந்தார்.
7 அதனால் என் வாயைத் தொட்டு, “இதோ, இந்நெருப்புப்பொறி உன் உதடுகளைத் தொட்டது. உன் குற்றப்பழி உன்னை விட்டு அகன்றது; உன் பாவம் மன்னிக்கப்பட்டது,” என்றார்.
8 மேலும் “யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்?” என வினவும் என் தலைவரின் குரலை நான் கேட்டேன். அதற்கு, “இதோ நானிருக்கிறேன். அடியேனை அனுப்பும்” என்றேன்.
9 அப்பொழுது அவர், “நீ இந்த மக்களை அணுகி, ‘நீங்கள் உங்கள் காதால் தொடர்ந்து கேட்டும் கருத்தில் கொள்ளாதீர்கள்; உங்கள் கண்களால் பார்த்துக் கொண்டேயிருந்தும் உணராதிருங்கள்’ என்று சொல்.
10 அவர்கள் கண்ணால் காணாமலும், காதால் கேளாமலும், உள்ளத்தால் உணராமலும், மனம் மாறிக் குணமாகாமலும் இருக்கும்படி இந்த மக்களின் இதயத்தைக் கொழுப்படையச் செய்; காதுகளை மந்தமாகச் செய்; கண்களை மூடச்செய்” என்றார்.
11 அதற்கு நான், ‘என் தலைவரே!
எத்துணை காலத்திற்கு இது
இவ்வாறிருக்கும்?” என்று வினவினேன்.
அதற்கு அவர்,
“நகரங்கள் அழிந்து
குடியிருப்பார் இல்லாதனவாகும்;
வீடுகளில் வாழ்வதற்கு மனிதர் இரார்;
நாடு முற்றிலும் பாழ்நிலமாகும்;
12 ஆண்டவர் மனிதர்களைத்
தொலை நாட்டிற்குத் துரத்தி விடுவார்;
நாட்டில் குடியிருப்பாரின்றி
வெற்றிடங்கள் பல தோன்றும்;
அதுவரைக்குமே இவ்வாறிருக்கும்.
13 பத்தில் ஒரு பங்கு மட்டும்
நாட்டில் எஞ்சியிருந்தாலும்
அதுவும் அழிக்கப்படும்;
தேவதாரு அல்லது கருவாலி மரம்
வெட்டி வீழ்த்தப்பட்டபின்
அடிமரம் எஞ்சியிருப்பதுபோல்
அது இருக்கும்.
அந்த அடிமரம்தான்
தூய வித்தாகும்,” என்றார்.
6:1 2 அர 15:7; 2 குறி 26:23.
6:3 திவெ 4:8.
6:4 திவெ 15:8.
6:9-10 மத் 13:14-15; மாற் 4:12; லூக் 8:12; யோவா 12:40; திப 28:26-27.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-6
|
685 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 7 – திருவிவிலியம்
|
ஆகாசுக்கு ஆண்டவரின் செய்தி
1 உசியாவின் பேரனும் யோதாமின் மகனுமான ஆகாசு யூதா நாட்டை ஆட்சி செய்த நாள்களில், இரட்சின் என்னும் சிரியா நாட்டு அரசனும் இரமலியாவின் மகன் பெக்கா என்னும் இஸ்ரயேல் நாட்டு அரசனும் எருசலேமுக்கு எதிராகப் போர் தொடுத்து அதை வீழ்த்த முயன்றனர். அவர்களால் அது இயலாமற் போயிற்று.
2 ‘சிரியா எப்ராயிமோடு கூட்டணி அமைத்துக் கொண்டது’ என்னும் செய்தி தாவீதின் குடும்பத்தாருக்கு அறிவிக்கப்பட்டது; உடனே பெருங்காற்றினால் காட்டு மரங்கள் அலையதிர்வுகொள்வதுபோல், ஆகாசின் உள்ளமும் அவர்நாட்டு மக்களின் உள்ளங்களும் அலைக்கழிக்கப்பட்டன.
3 அப்பொழுது ஆண்டவர் எசாயாவை நோக்கி: “நீ உன் மகன் செயார் யாசிபை உன்னுடன் அழைத்துச் சென்று ஆகாசைச் சந்திப்பாயாக. வண்ணான் வயலுக்குச் செல்லும் வழியில், மேற்குளத்துக்குப் போகும் கால்வாயின் மறுமுனையில் நீ ஆகாசைக் காண்பாய். அவனுக்கு இதைச் சொல்:
4 ‘நீ அமைதியாய் இரு; அஞ்சாதிருந்து நடப்பனவற்றை உற்றுப் பார்; இரட்சின், சிரியா நாட்டினர், இரமலியாவின் மகன் ஆகியோரின் கடும் சினத்தைக் கண்டு மனங்கலங்காதே. அவர்கள் புகைந்து கொண்டிருக்கும் இரு கொள்ளிக்கட்டைகளிலிருந்து வரும் புகை போன்றவர்கள்.
5 சிரியா எப்ராயிமோடும் இரமலியாவின் மகனோடும் உனக்கெதிராய்ச் சதித்திட்டம் தீட்டி,
6 ‘யூதாவுக்கு எதிராய் நாம் படை எடுத்துச்சென்று அதை நடுநடுங்கச் செய்வோம்; அதற்கு எதிராய்ப் போரிட்டு, அதைப்பிடித்து தயேல் என்பவனின் மகனை அதற்கு அரசனாக்குவோம்’ என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.”
7 ஆதலால் ஆண்டவர் இவ்வாறு உரைக்கிறார்:
“அவர்களது திட்டம் நிலைத்து நிற்காது,
அது ஒருபோதும் நிறைவேறாது.
8 ஏனெனில், சிரியாவின் தலைநகர் தமஸ்கு;
தமஸ்கு நகரின் தலைவன் இரட்சின்.
(இன்னும் அறுபத்தைந்து ஆண்டுகளில் எப்ராயிம் ஒரு மக்களினம் என்னும் தகுதியை இழக்கும் வண்ணம் தவிடு பொடியாக்கப்படும்)
9 எப்ராயிமின் தலைநகர் சமாரியா;
சமாரியா நகரின் தலைவன்
இரமலியாவின் மகன்.
உங்கள் நம்பிக்கையில் நிலைத்திராவிடில்
நீங்களும் நிலைத்துநிற்க மாட்டீர்கள்.”
இம்மானுவேல் அடையாளம்
10 ஆண்டவர் ஆகாசுக்கு மீண்டும் தம் திருவாக்கை அருளிச் சொல்லியது:
11 “உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு ஓர் அடையாளத்தை அருளுமாறு கேளும்; அது கீழே பாதாளத்திலோ, மேலே வானத்திலோ தோன்றுமாறு கேட்டுக்கொள்ளும்” என்றார்.
12 அதற்கு ஆகாசு, “நான் கேட்கமாட்டேன். ஆண்டவரைச் சோதிக்க மாட்டேன்” என்றார்.
13 அதற்கு எசாயா: “தாவீதின் குடும்பத்தாரே! நான்சொல்வதைக் கேளுங்கள்; மனிதரின் பொறுமையைச் சோதித்து மனம் சலிப்படையச் செய்தது போதாதோ? என் கடவுளின் பொறுமையைக்கூட சோதிக்கப் பார்க்கிறீர்களோ?
14 ஆதலால் ஆண்டவர்தாமே உங்களுக்கு ஓர் அடையாளத்தை அருள்வார். இதோ, கருவுற்றிருக்கும் அந்த இளம் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார்; அக்குழந்தைக்கு அவள் ‘இம்மானுவேல்’ என்று பெயரிடுவார்.
15 தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்கு அறியும்போது அவன் வெண்ணெயையும், தேனையும் உண்பான்.
16 அந்தக் குழந்தை தீமையைத் தவிர்த்து, நன்மையை நாடித் தேர்ந்து கொள்வதற்குமுன், உம்மை நடுநடுங்கச் செய்யும் அரசர்கள் இருவரின் நாடுகளும் பாலை நிலமாக்கப்படும்.
17 எப்ராயிம் யூதாவை விட்டுப் பிரிந்துபோன பின் இந்நாள்வரை வராத நாள்களை உம்மேலும். உம்நாட்டு மக்கள் மேலும், உம் தந்தையரின் குடும்பத்தார் அனைவர் மேலும் ஆண்டவர் வரச் செய்வார். அசீரிய அரசனையே வரவழைப்பார்.
18 அந்நாளில், எகிப்து ஆறுகளின் ஊற்று முனையிலுள்ள ஈயையும் அசீரிய நாட்டிலுள்ள தேனீயையும் ஆண்டவர் சீழ்க்கையொலி செய்து அழைப்பார்;
19 உடனே அவை அனைத்தும் கூட்டமாய் வந்து, செங்குத்து மலைப் பள்ளத்தாக்குகள், கற்பாறைக் குகைள், முட்புதர், மேய்ச்சல் நிலங்கள் அனைத்தின்மேலும் வந்திறங்கும்.
20 அந்நாளில் ஆணடவர் பேராற்றின் மறு பக்கத்திலிருந்து, அசீரிய அரசன் என்ற சவரக்கத்தியை வாடகைக்கு எடுப்பார்; அக்கத்தியினால் உங்கள் தலையிலும் காலிலும் உள்ள முடியை மழித்து விடுவார்; அது உங்கள் தாடியைக்கூட சிரைத்துப்போடும்.
21 அந்நாளில், இளம்பசு ஒன்றையும் ஆடுகள் இரண்டையும் ஒருவன் வளர்த்து வருவான்.
22 அவை மிகுதியாகப்பால் தருவதனால் அவன் வெண்ணெய் உண்பான்; நாட்டில் எஞ்சியிருக்கும் ஒவ்வொருவரும், வெண்ணெயையும் தேனையும் சாப்பிடுவர்.
23 அந்நாளில், ஆயிரம் வெள்ளிக்காசு விலைமதிப்புள்ள ஆயிரம் திராட்சைச் செடிகள் வளர்ந்த நிலம் முழுவதிலும் நெருஞ்சி முள்ளும் முட்புதரும் முளைத்திருக்கும்.
24 நாடெங்கும் நெருஞ்சி முள்ளும், முட்புதரும் நிறைந்திருப்பதால், வில்லோடும் அம்போடுமே மனிதர்கள் வருவார்கள்.
25 மண்வெட்டியால் பண்படுத்தப்பட்டு வந்த மலைகளில் நெருஞ்சி முள்ளும் முட்புதருமே இருப்பதால் அதற்கு அஞ்சி எவருமே அங்கே வரார். அவை, மாடுகள் ஓட்டிவிடப்படும் மேட்டு நிலமாகும்; ஆடுகள் நடமாடும் காடாகும்.
7:1 2 அர 16:5; 2 குறி 28:5-6.
7:14 மத் 1:23.
7:3 “செயார்யாசிபு” என்பதற்கு “எஞ்சியோர் திரும்பி வருவர்” என்பது பொருள்.
7:14 “இளம் பெண்” – கிரேக்க மொழிபெயர்ப்பிலும் மத்தேயு (1:23) எழுதிய நற்செய்தியிலும் “கன்னி” என்பது பாடம்.
7:14 “இம்மானுவேல்” – எபிரேயத்தில் “இறைவன் நம்மோடு உள்ளார்” என்பது பொருள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-7
|
686 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 8 – திருவிவிலியம்
|
எசாயாவின் மகன்
1 அதன்பின் ஆண்டவர் என்னை நோக்கி: “நீ அகன்றதோர் வரை பலகையை எடுத்து அதில் மனிதர் எழுதுவதுபோல சாதாரண எழுத்துக்களில் மகேர் சாலால் கஸ்பாசைக்குறித்து எழுது.
2 உரியா என்ற குருவும் எபரேக்கியாவின் மகன் செக்கரியாவும் எனக்கு உண்மையுள்ள சாட்சிகளாயிருக்கட்டும்” என்றார்.
3 நான் இறைவாக்கினளுடன் கூடியபொழுது அவள் கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுத்தாள். அப்பொழுது ஆண்டவர் என்னை நோக்கி, “அவனுக்கு ‘மகேர்சாலால் கஸ்பாசு’ என்று பெயரிடு.
4 ஏனெனில் இச்சிறுவன் ‘அப்பா, அம்மா’ என்று அழைக்க அறியு முன்னே, தமஸ்கின் செல்வங்களும் சமாரியாவிலுள்ள கொள்ளைப் பொருள்களும் அசீரிய அரசனால் வாரிக்கொண்டு போகப்படும்” என்றார்.
அசீரியரின் முற்றுகையை முன்னறிவித்தல்
5 மீண்டும் ஆண்டவர் என்னோடு உரையாடி,
6 “அமைதியாய் ஓடுகின்ற சீலோவா சிற்றாற்றின் நீரை வேண்டாமென்று இந்த மக்கள் மறுத்து விட்டார்கள்; இரட்சீனையும், இரமலியாவின் மகனையும் கண்டு அச்சத்தால் துவண்டு வீழ்கிறார்கள்.
7 ஆதலால், ஆண்டவர் ஆற்றலுடன் பெருக்கெடுத்தோடும் பேராற்றைப் போன்ற அசீரிய அரசனையும் அவன் மேன்மையான படைகள் அனைத்தையும் அவர்களுக்கு எதிராக அணிதிரண்டு வரச் செய்வார்; கால்வாய்கள் அனைத்தையும் அதன் வெள்ளம் நிரப்பும்; எல்லாக் கரைகள் மேலும் அது புரண்டு பாயும்;
8 எங்கும் வெள்ளக்காடாய், காட்டாறாய் ஓடும்; யூதா நாட்டுக்குள் புகுந்து அதன் கழுத்தை எட்டும்; இம்மானுவேலே, அதன் கிளைகள் உன் நாட்டின் பரப்பையெல்லாம் நிரப்பி நிற்கும்;
9 மக்களினங்களே, ஒருங்கிணையுங்கள்;
ஆயினும் நொறுக்கப்படுவீர்கள்;
தொலைநாட்டிலுள்ள அனைத்து மக்களே,
செவிகொடுங்கள்;
போருக்கென இடையைக்
கட்டிக் கொள்ளுங்கள்;
ஆயினும் கலக்கமுறுவீர்கள்.
போர்க்கோலம் கொள்ளுங்கள்;
ஆயினும் முறியடிக்கப்படுவீர்கள்.
10 ஒன்று கூடிச் சதித்திட்டம் தீட்டுங்கள்;
அதுவும் விழலுக்கு இறைத்த நீராகும்;
கூடிப்பேசி முடிவெடுங்கள்;
அதுவும் பயனற்றுப் போகும்.
ஏனெனில் கடவுள்
எங்களோடு இருக்கிறார்.
எசாயாவுக்கு எச்சரிக்கை
11 தமது வலிமையுள்ள கையை என்மேல் வைத்து ஆண்டவர் எனக்கு எச்சரிக்கை விடுத்தார். இந்த மக்களின் வழிகளை நான் பின்பற்றாதிருக்க எனக்குக்கட்டளை பிறப்பித்தார்:
12 “இந்த மக்கள் சதித்திட்டம் என்று அழைப்பதையெல்லாம் நீங்கள் சதித்திட்டம் என்று சொல்லாதீர்கள். அவர்கள் எதற்கு அஞ்சி நடுங்குகிறார்களோ, அதற்கு நீங்கள் அஞ்சவேண்டாம், நடுங்கி நிலைகுலையவும் வேண்டாம்;
13 படைகளின் ஆண்டவர் ஒருவரையே தூயவர் எனப் போற்றுங்கள்; அவருக்கே அஞ்சுங்கள்; அவர் திருமுன்னேயே நடுங்குங்கள்,
14 அவரே திருத்தூயகமாய் இருப்பார்; இஸ்ரயேலின் இரு குடும்பத்தாருக்கும், இடறு கல்லாகவும், தடுக்கிவிழச் செய்யும் கற்பாறையாகவும் இருப்பார்; எருசலேமில் குடியிருப்போருக்குப் பொறியும் கண்ணியுமாய் இருப்பார்.
15 அவர்களில் பலர் தடுமாற்றம் அடைவர்; இடறிவீழ்ந்து நொறுக்கப்படுவர்; கண்ணியில் சிக்குண்டு பிடிபடுவர்.
குறி கேட்பது பற்றி எச்சரிக்கை
16 இந்தச் சான்றுரையைப் பாதுகாப்பாய்க் கட்டிவை; என் சீடரிடையே இந்த இறைக்கூற்றை முத்திரையிட்டு வை;
17 யாக்கோபு குடும்பத்தாருக்குத் தம் முகத்தை ஆண்டவர் மறைத்துள்ளார், ஆண்டவருக்காக நான் காத்திருப்பேன்; அவர்மேல் என் நம்பிக்கையை நிலைநிற்கச் செய்வேன்.
18 படைகளின் ஆண்டவர் சீயோன் மலையில் குடி கொண்டிருக்கிறார்; நானும் அவர் எனக்களித்த குழந்தைகளும் இஸ்ரயேலில் அவருக்கு அடையாளங்களாகவும் அறிகுறிகளாகவும் இருக்கிறோம்.
19 “மாயவித்தைக்காரரையும், முணுமுணுத்து மந்திரங்களை ஓதிக் குறி சொல்வோரையும் அணுகிக் குறி கேளுங்கள் என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள். மக்கள் தம் குலதெய்வத்தை நாடிக் குறி கேளாதிருப்பார்களோ? உயிருள்ளோருக்காகச் செத்தவர்களை விசாரிப்பதல்லவா முறைமை?” என்பார்கள்.
20 “இறைக்கூற்றையும் சான்றுரையையும் நாடித்தேடுங்கள்” என்று அவர்கள் சொல்லாததனால் அவர்களுக்கு விடிவு காலம் வராது என்பது உறுதி.
21 பெருந்துன்பத்தோடும், பசிக்கொடுமையோடும் அவர்கள் நாட்டைக் கடந்து செல்வார்கள்; பசியால் வாடி வதங்கும்போது வெறிகொண்டு தங்கள் அரசனையும், தெய்வத்தையும் வசை மொழியால் சபிப்பார்கள்; முகத்தை உயர்த்தி அண்ணார்ந்து பார்ப்பார்கள்.
22 தலையைத் தாழ்த்தித் தரையை உற்று நோக்குவார்கள்; எங்கு நோக்கினும் காரிருள், கடுந்துயர், மன வேதனைகளே புலப்படும்; காரிருள் அவர்களை ஆட்கொள்ளும்.
8:12-13 1 பேது 3:14-15.
8:14-15 1 பேது 2:8.
8:17 எபி 2:13.
8:18 எபி 2:13.
8:3 “மகேர் சாலால் கஸ்பாசு” – எபிரேயத்தில், “கொள்ளைப் பொருள் வேகமாக வருகின்றது; இரை விரைகின்றது” என்பது பொருள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-8
|
687 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 9 – திருவிவிலியம்
|
1 ஆனால் துயரமுற்றிருந்த நாட்டினருக்கு மனச்சோர்வு தோன்றாது; முற்காலத்தில் செபுலோன் நாட்டையும், நப்தலி நாட்டையும் ஆண்டவர் அவமதிப்புக்கு உட்படுத்தினார்; பிற்காலத்திலோ, பெருங்கடல் வழிப்பகுதி யோர் தானுக்கு அப்பாலுள்ள நிலப்பரப்பு, பிற இனத்தார் வாழும் கலிலேயா நாடு ஆகிய பகுதிகளுக்கு மேன்மை வரச்செய்வார்.
வரவிருக்கும் அரசர்
2 காரிருளில் நடந்துவந்த மக்கள்
பேரொளியைக் கண்டார்கள்;
சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில்
குடியிருப்போர்மேல்
சுடர் ஒளி உதித்துள்ளது.
3 ஆண்டவரே! அந்த இனத்தாரைப்
பல்கிப் பெருகச் செய்தீர்;
அவர்கள் மகிழ்ச்சியை
மிகுதிப்படுத்தினீர்;
அறுவடை நாளில் மகிழ்ச்சியுறுவது போல்
உம் திருமுன் அவர்கள்
அகமகிழ்கிறார்கள்;
கொள்ளைப் பொருளைப் பங்கிடும் போது
அக்களிப்பதுபோல் களிகூர்கிறார்கள்.
4 மிதியான் நாட்டுக்குச் செய்தது போல
அவர்களுக்குச் சுமையாக இருந்த
நுகத்தை நீர் உடைத்தெறிந்தீர்;
அவர்கள் தோளைப் புண்ணாக்கிய
தடியைத் தகர்த்துப் போட்டீர்;
அவர்களை ஒடுக்குவோரின்
கொடுங்கோலை ஓடித்தெறிந்தீர்.
5 அமளியுற்ற போர்க்களத்தில்
போர்வீரன் அணிந்திருந்த
காலணிகளும், இரத்தக் கறைபடிந்த
ஆடைகள் அனைத்தும்
நெருப்புக்கு இரையாக எரிக்கப்படும்.
6 ஏனெனில், ஒரு குழந்தை
நமக்குப் பிறந்துள்ளார்;
ஓர் ஆண்மகவு நமக்குத்
தரப்பட்டுள்ளார்;
ஆட்சிப்பொறுப்பு
அவர் தோள்மேல் இருக்கும்;
அவர் திருப்பெயரோ
‘வியத்தகு ஆலோசகர்,
வலிமைமிகு இறைவன்,
என்றுமுள தந்தை,
அமைதியின் அரசர்’
என்று அழைக்கப்படும்.
7 அவரது ஆட்சியின் உயர்வுக்கும்
அமைதி நிலவும் அவரது அரசின்
வளர்ச்சிக்கும் முடிவு இராது;
தாவீதின் அரியணையில் அமர்ந்து
தாவீதின் அரசை நிலைநாட்டுவார்;
இன்றுமுதல் என்றென்றும்
நீதியோடும் நேர்மையோடும்
ஆட்சிபுரிந்து அதை
நிலை பெயராது உறுதிப்படுத்துவார்;
படைகளின் ஆண்டவரது பேரார்வம்
இதைச் செய்து நிறைவேற்றும்.
8 யாக்கோபுக்கு எதிராக ஓர் வார்த்தையை
ஆண்டவர் அனுப்பியுள்ளார்;
அது இஸ்ரயேல்மேல் இறங்கித்
தன் செயலைச் செய்யும்.
இஸ்ரயேலுக்குத் தண்டனைத் தீர்ப்பு
9 எப்ராயிமியர், சமாரியாவின் குடிகள்
ஆகிய அனைத்து மக்களும்
இதை அறிந்து கொள்வார்கள்.
10 செருக்கினாலும் இதயத்தில் எழும்
இறுமாப்பினாலும்
அவர்கள் சொல்லுவதாவது:
“செங்கல் கட்டடம் இடிந்து வீழ்ந்தது:
எனினும், செதுக்கிய கற்களால்
நாங்கள் கட்டியெழுப்புவோம்.
காட்டத்தி மரங்கள்
வெட்டி வீழ்த்தப்பட்டன;
எனினும், அவற்றிற்குப் பதிலாகக்
கேதுரு மரங்களை வைப்போம்”.
11 ஆதலால் ஆண்டவர்
இரட்சீனின் அதிகாரிகளை
அவர்களுக்கு எதிராய்க்
கிளர்ந்தெழச் செய்தார்;
அவர்கள் பகைவரைத் தூண்டி விட்டார்.
12 கிழக்கிலிருந்து சிரியரும்,
மேற்கிலிருந்து பெலிஸ்தியரும்
வந்தார்கள்;
தங்கள் வாயை விரிவாய்த்திறந்து
இஸ்ரயேலரை விழுங்கிவிட்டார்கள்;
இவையெல்லாம் நடந்தும்,
அவரது சீற்றம் தணியவிலலை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை.
13 தங்களை நொறுக்க வைத்தவரிடம்
மக்கள் திரும்பவில்லை;
படைகளின் ஆண்டவரைத்
தேடவுமில்லை.
14 ஆதலால், ஆண்டவர் இஸ்ரயேலில்
உயர்ந்தோர்முதல் தாழ்ந்தோர்வரை
அனைவரையும்,
ஒலிவமரக்கிளையையும் நாணலையும்
ஒரேநாளில் வெட்டி வீழ்த்துவார்;
15 முதியவரும், மதிப்புமிக்கவருமே
உயர்ந்தோர்;
பொய்யைப் போதிக்கும்
இறைவாக்கினரோ தாழ்ந்தோர்.
16 இந்த மக்களை வழிநடத்தியோர்
அவர்களை நெறிபிறழச் செய்தனர்;
அவர்களால் வழிநடத்தப்பட்டவரோ
அழிந்துபோயினர்.
17 ஆதலால், அவர்களுடைய
இளைஞரைக் குறித்து
என் தலைவருக்கு மகிழ்ச்சி இல்லை;
அவர்களிடையே வாழும் திக்கற்றோர்,
கைம்பெண்கள்மேல்
இரக்கம் காட்டவில்லை;
அவர்கள் அனைவரும்
இறைப்பற்று இல்லாதவர்கள்;
தீச்செயல் புரிபவர்கள்;
எல்லாரும் மதிகேட்டையே பேசினர்;
இவையெல்லாம் நடந்தும்
அவர் சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை.
18 கொடுமை தீயைப்போல்
கொழுந்து விட்டு எரிந்தது;
அது முட்புதர்களையும்
நெருஞ்சி முள்களையும் தீய்த்துவிட்டது;
காட்டின் அடர்ந்த பகுதிகளை
அது கொளுத்திவிட்டது;
அதனால் புகைமண்டலம் சுழன்று
மேலே எழுந்தது.
19 படைகளின் ஆண்டவரது சினத்தால்
நாடு நெருப்புக்கு இரையானது;
மக்கள் நெருப்புக்கு
விறகைப் போல் ஆனார்கள்;
ஒருவரும் தம் அடுத்திருப்பாரை
விட்டு வைக்கவில்லை.
20 அவர்கள் வலப்புறம் காண்பனவற்றைப்
பிடுங்கித் தின்றும் பசி அடங்கவில்லை;
இடப்புறம் இருப்பனவற்றை
எடுத்து விழுங்கியும்
மனம் நிறைவடையவில்லை;
ஒவ்வொருவரும் தம் குழந்தையின்
சதையைக் கூடத் தின்றனர்;
21 மனாசே குடும்பத்தார்
எப்ராயிம் குடும்பத்தாரையும்
எப்ராயிம் குடும்பத்தார்
மனாசே குடும்பத்தாரையும்
கொன்று தின்றனர்;
இரு குடும்பத்தாரும் ஒன்றுசேர்ந்து
யூதாவின் மேல் பாய்ந்தனர்;
இவையெல்லாம் நடந்தும்
அவரது சீற்றம் தணியவில்லை;
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை;
9:1 மத் 4:15.
9:2 மத் 4:16; லூக் 1:79.
9:7 லூக் 1:32-33.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-9
|
688 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 10 – திருவிவிலியம்
|
1 அநீதியான சட்டங்களை
இயற்றுவோர்க்கு ஐயோ, கேடு!
மக்களை ஒடுக்குகின்ற சட்டங்களை
எழுதிவருவோருக்கு ஐயோ, கேடு!
2 அவர்கள் ஏழைகளுக்கு நீதி வழங்காமல்,
அவர்கள் உரிமையை மறுக்கின்றார்கள்;
எம் மக்களுள் எளியோரின் உரிமையை
அவர்கள் திருடுகின்றார்கள்;
கைம்பெண்களைக்
கொள்ளைப் பொருளாய் எண்ணிச்
சூறையாடுகிறார்கள்.
திக்கற்றோரை
இரையாக்கிக் கொள்கின்றார்கள்.
3 தண்டனை நாளில் என்ன செய்வீர்கள்?
தொலைநாட்டிலிருந்து
அழிவாகிய சூறைக்காற்று வரும்போது
என்ன ஆவீர்கள்?
உதவி நாடி யாரைத் தேடி ஓடுவீர்கள்?
உங்கள் செல்வங்களை
எங்கே வைத்து விட்டுச் செல்வீர்கள்?
4 கட்டுண்ட கைதிகளிடையே
தலை கவிழ்ந்து வருவீர்கள்;
இல்லையேல் வெட்டுண்டு
மடிந்தோரிடையே வீழ்வீர்கள்.
இதிலெல்லாம்
ஆண்டவரின் சீற்றம் தணியவில்லை.
ஓங்கிய அவரது சினக் கை
இன்னும் மடங்கவில்லை.
ஆண்டவரின் கருவி அசீரியா
5 அசீரிய நாடு!
சினத்தில் நான் பயன்படுத்தும்
கோல் அது;
தண்டனை வழங்க
நான் ஏந்தும் தடி அது.
6 இறைப்பற்றில்லா நாட்டினர்க்கு
அந்நாட்டை நான் அனுப்புகிறேன்;
எனக்குச் சினமூட்டின மக்களை நொறுக்க
அதற்கு ஆணை கொடுக்கிறேன்;
அம்மக்களைக் கொள்ளையிடவும்
அவர்கள் பொருள்களைச் சூறையாடவும்,
தெருவில் கிடக்கும் சேற்றைப்போல
அவர்களை மிதித்துப் போடவும்,
அதற்குக் கட்டளை தருகிறேன்.
7 அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,
அவனது உள்ளத்தில் எழும்
திட்டங்கள் வேறு;
மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்
தன் இதயத்தில் எண்ணுகிறான்;
பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த
அவன் விரும்புகிறான்.
8 அவன் இறுமாப்புடன் சொல்வதாவது:
“என் படைத்தலைவர்கள்
ஒவ்வொருவரும் ஓர் அரசர் அல்லவா?
9 கல்னேர் நகர் கர்கமிசு நகர்
போன்ற தல்லவா?
ஆமாத்து நகர் அர்ப்பாது நகருக்கு
இணையல்லவா?
சமாரியா நகர் தமஸ்கு நகரை
ஒத்ததல்லவா?
10 சிறப்பு வாய்ந்த,
சிலைவணங்கும் அரசுகள் வரை
என் கை எட்டியிருக்கின்றது;
அந்நாட்டுச் சிலைகள்
எருசலேம், சமாரியா நகர்ச் சிலைகளைவிட
எண்ணிக்கையில் மிகுதி.
11 சமாரியாவையும்
அதிலுள்ள சிலைகளையும்
அழித்துப் பாழ்படுத்தியவன் நான்;
இப்படியிருக்க, எருசலேமுக்கும்
அதன் மக்கள் வழிபடும் சிலைகளுக்கும்
அவ்வாறே செய்யமாட்டேனோ?”
12 எனவே சீயோன் மலைமேலும்
எருசலேமிலும் என் வேலைகள்
அனைத்தையும் முடித்தபின்,
ஆணவம் நிறைந்த அசீரிய அரசனின்
சிந்தனையை முன்னிட்டும்,
இறுமாப்புடன் அவன் பேசிய
பேச்சுகளை முன்னிட்டும்
“அவனை நான் தண்டிப்பேன்”
என்கிறார் என் தலைவர்.
13 ஏனெனில் அவன் இவ்வாறு சொன்னான்:
“என் கைவலிமையாலே
நான் அதைச் செய்து முடித்தேன்;
என் ஞானத்தாலும் அறிவுக் கூர்மையாலும்
அதற்குத் திட்டங்கள் தீட்டினேன்;
மக்களினங்கள் தங்களிடையே வைத்துள்ள
எல்லைகளை அகற்றினேன்;
அவர்களுடைய கருவூலங்களைச் சூறையாடினேன்;
அரியணையில் வீற்றிருந்தோரை
ஒரு காளை மிதிப்பதுபோல்
மிதித்துப்போட்டேன்.
14 குருவிக் கூட்டைக் கண்டுபிடிப்பது போல்
என் கை மக்களினங்களின்
செல்வங்களைக் கண்டு
எடுத்துக்கொண்டது;
புறக்கணித்த முட்டைகளை
ஒருவன் பொறுக்கி எடுப்பதுபோல்
நாடுகள் யாவற்றையும்
ஒருங்கே சேர்த்துக்கொண்டேன்.
எனக்கெதிராக ஒருவரும்
இறக்கை அடிக்கவில்லை.
வாய் திறக்கவில்லை,
கீச்சென்ற ஒலியெழுப்பவுமில்லை.”
15 வெட்டப் பயன்படுத்துகிறவனுக்கு
மேலாகக் கோடரி தன்னை
மேன்மை பாராட்டுவதுண்டோ?
அறுப்பவனைவிடத்
தன்னைச் சிறப்புமிக்கதாக
வாள் கருத இயலுமோ?
தன்னைத் தூக்கியவனைச் சுழற்றி வீசக்
கைத்தடியால் கூடுமோ?
மரம் அல்லாத மனிதனைத் தூக்க
மரத்தால் ஆன கோலால் இயலுமோ?
16 ஆதலால் தலைவராகிய
படைகளின் ஆண்டவர்
பாழாக்கும் கொள்ளை நோயை
அவனுடைய கொழுத்த வீரர்கள் இடையே
அனுப்புவார்; அவனது மேன்மையின்கீழ்
தீ ஒன்றை வைப்பார்;
அவர் நெருப்பு மூட்டுவார்;
அது கொழுந்துவிட்டு எரியும்.
17 இஸ்ரயேலின் ஒளியானவர்
நெருப்பாக மாறுவார்;
அதன் தூயவர்
தீக்கொழுந்தாய் உருவெடுப்பார்;
அது அவனுடைய முட்புதர்களையும்
நெருஞ்சி முள்களையும்,
ஒரே நாளில் சுட்டெரித்துச்
சாம்பலாக்கி விடும்.
18 வனப்புமிக்க அவனுடைய காடுகள்,
செழிப்புமிக்க அவனுடைய தோட்டங்கள்
யாவும் உள்ளும் புறமும் அழிக்கப்படும்;
அது நோயாளி ஒருவன்
உருக்குலைவதை ஒத்திருக்கும்.
19 அவனது காட்டில் மிகச் சில
மரங்களே எஞ்சியிருக்கும்;
ஒரு சிறுவன்கூட அவற்றை
எண்ணி எழுதிவிடலாம்.
எஞ்சியோரின் மீட்பு
20 அந்நாளில் இஸ்ரயேல் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போரும், யாக்கோபின் மக்களில் தப்பிப் பிழைத்தோரும், தங்களை அடித்து நொறுக்கிய நாட்டை இனிச் சார்ந்திருக்க மாட்டார்கள்; மாறாக, இஸ்ரயேலின் தூயவருக்கு உண்மையுள்ளவர்களாய், அவரையே சார்ந்திருப்பார்கள்.
21 யாக்கோபின் குடும்பத்தாருள் எஞ்சியிருப்போர் சிலர் வலிமை மிக்க இறைவனிடம் திரும்பி வருவர்.
22 இஸ்ரயேலே, இப்பொழுது உன் மக்கள் கடற்கரை மணலைப்போல் இருப்பினும், அவர்களுள் எஞ்சியிருப்போரே திரும்பி வருவர்; அழிவு நெருங்கி வந்தாயிற்று; அழிவு வருவது தீர்ப்பாயிற்று. பொங்கிவரும் இறைநீதி இதனால் வெளிப்படும்.
23 ஏனெனில், என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் தாம் ஆணையிட்டபடியே நாடு முழுவதிலும் அழிவைக் கொண்டு வருவார்.
அசீரியாவுக்கு ஆண்டவரின் தண்டனைத் தீர்ப்பு
24 என் தலைவராகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: “சீயோனில் வாழ்கின்ற என் மக்களே, எகிப்தியர் முன்பு செய்தது போல் அசீரியன் தடியால் உங்களை அடிக்கும் போதும் கோலை உங்களுக்கு எதிராய் ஓங்கும்போதும் நீங்கள் அஞ்சாதீர்கள்;
25 ஏனெனில் இன்னும் கொஞ்ச காலத்திற்குள் உங்கள் மேல் கொண்ட என் கடும் சினம் தணிந்துவிடும்; அப்பொழுது அசீரியர்களை அழிக்குமாறு அது திசை திரும்பும்”.
26 ஒரே பாறையருகில் முன்பு மிதியானியரை அடித்து வீழ்த்தியது போல், படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராக ஒரு சாட்டையை எடுப்பார். எகிப்தியரை அழிக்கச் செங்கடல் மீதுதமது கோலை ஓங்கினதுபோல அவர்களுக்கெதிராய்த் தம் கோலை ஓங்குவார்.
27 அந்நாளில் நீங்கள் கொழுமையடைவீர்கள்; உங்கள் தோள் மேல் அவன் வைத்த சுமை அகற்றப்படும். உங்கள் கழுத்திலுள்ள அவனது நுகத்தடி உடைத்தெறியப்படும்.
பகைவனின் படையெடுப்பு
28 பகைவன் அய்யாத்துக்கு எதிராகப்
போர் தொடுத்துள்ளான்;
அவன் மிக்ரோனைக்
கடந்து வந்துவிட்டான்;
மிக்மாசிலே தன் மூட்டை முடிச்சுகளை
வைத்திருக்கிறான்.
29 கணவாயை அவர்கள் கடந்து விட்டார்கள்;
கேபாவில் தங்கி
இரவைக் கழிக்கின்றார்கள்;
இராமா நகரின் மக்கள்
அஞ்சி நடுங்குகின்றார்கள்;
சவுலின் நகரான கிபயாவிலுள்ள மக்கள்
ஓட்டமெடுக்கின்றார்கள்.
30 பெத்தல்லிம் மக்களே, கூக்குரலிடுங்கள்;
இலாயிசா மக்களே, உற்றுக் கேளுங்கள்;
அனத்தோத்தின் மக்களே,
மறுமொழி கூறுங்கள்.
31 மத்மேனா மக்கள் ஓட்டம் பிடிக்கிறார்கள்;
கேபிமினில் வாழ்வோர்
புகலிடம் தேடி ஓடுகிறார்கள்.
32 இன்றே அப்பகைவன்
நோபு நகரில் தங்குவான்;
அங்கிருந்து மகள் சீயோனின் மலைக்கும்
எருசலேமின் குன்றிற்கும்
எதிராகக் கையை ஓங்கி அசைப்பான்.
33 நம் தலைவராகிய படைகளின் ஆண்டவர்
அச்சுறுத்தும் ஆற்றலால்,
கிளைகளை வெட்டி வீழ்த்துவார்;
உயர்ந்தவற்றின் கிளைகள்
துண்டிக்கப்படும்;
செருக்குற்றவை தாழ்த்தப்படும்;
நிமிர்ந்து நிற்பவை
தரைமட்டமாக்கப்படும்.
34 அடர்ந்த காட்டை அவர்
கோடரியால் வெட்டி வீழ்த்துவார்;
லெபனோன் தன் உயர்ந்த
மரங்களுடன் தரையிலே சாயும்.
10:5-34 எசா 14:24-27; நாகூ 1:1-3:19; செப் 2:13-15.
10:22-23 உரோ 9:27.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-10
|
689 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 11 – திருவிவிலியம்
|
நீதியுள்ள அரசரின் வருகை
1 ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து
தளிர் ஒன்று துளிர்விடும்;
அதன் வேர்களிலிருந்து கிளை ஒன்று
வளர்ந்து கனிதரும்.
2 ஆண்டவரின் ஆவி
அவர்மேல் தங்கியிருக்கும்;
ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன்,
ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய
அச்ச உணர்வு — இவற்றை
அந்த ஆவி அவருக்கு அருளும்.
3 அவரும் ஆண்டவருக்கு அஞ்சி நடப்பதில்
மகிழ்ந்திருப்பார்.
கண் கண்டதைக் கொண்டு மட்டும்
அவர் நீதி வழங்கார்;
காதால் கேட்டதைக் கொண்டு மட்டும்
அவர் தீர்ப்புச் செய்யார்;
4 நேர்மையோடு ஏழைகளுக்கு
நீதி வழங்குவார்;
நடுநிலையோடு நாட்டின்
எளியோரது வழக்கை விசாரிப்பார்;
வார்த்தை எனும் கோலினால்
கொடியவரை அடிப்பார்;
உதட்டில் எழும் மூச்சினால்
தீயோரை அழிப்பார்.
5 நேர்மை அவருக்கு அரைக்கச்சை;
உண்மை அவருக்கு இடைக்கச்சை.
6 அந்நாளில், ஒநாய்
செம்மறியாட்டுக் குட்டியோடு
தங்கியிருக்கும்;
அக்குட்டியோடு சிறுத்தைப் புலி
படுத்துக் கொள்ளும்.
கன்றும், சிங்கக்குட்டியும்,
கொழுத்த காளையும் கூடி வாழும்;
பச்சிளம் குழந்தை அவற்றை
நடத்திச் செல்லும்.
7 பசுவும் கரடியும் ஒன்றாய் மேயும்;
அவற்றின் குட்டிகள் சேர்ந்து
படுத்துக்கிடக்கும்;
சிங்கம் மாட்டைப் போல்
வைக்கோல் தின்னும்;
8 பால் குடிக்கும் குழந்தை
விரியன் பாம்பின் வளையில்
விளையாடும்;
பால்குடி மறந்த பிள்ளை
கட்டுவிரியன் வளையினுள்
தன் கையை விடும்.
9 என் திருமுலை முழுவதிலும்
தீமை செய்வார் எவருமில்லை;
கேடு விளைவிப்பார் யாருமில்லை;
ஏனெனில், கடல் தண்ணீரால்
நிறைந்திருக்கிறது போல,
மண்ணுலகம் ஆண்டவராம்
என்னைப் பற்றிய
அறிவால் நிறைந்திருக்கும்.
நாடு கடத்தப்பட்டோர் திரும்பிவரல்
10 அந்நாளில், மக்களினங்களுக்குச்
சின்னமாய் விளங்கும் ஈசாயின் வேரைப்
பிறஇனத்தார் தேடி வருவார்கள்;
அவர் இளைப்பாறும் இடம்
மாட்சி நிறைந்ததாக இருக்கும்.
11 அந்நாளில், என் தலைவர்
மீண்டும் தம் கையை நீட்டி,
அசீரியா, எகிப்து, பத்ரோசு, பாரசீகம்,
எத்தியோப்பியா, ஏலாம், சினார்,
ஆமாத்து முதலிய நாடுகளிலும்,
கடல் தீவுகளிலும் வாழும்
தம் மக்களுள் எஞ்சியிருப்போரைத்
தம் நாட்டிற்குத் திரும்பக் கொணர்வார்.
12 பிற இனத்தாருக்கென
ஒரு கொடியை ஏற்றி வைப்பார்;
இஸ்ரயேலில் நாடு கடத்தப்பட்டோரை
ஒன்று திரட்டுவார்;
யூதாவில் சிதறுண்டு போனவர்களை
உலகின் நாற்புறத்திலிருந்தும்
கூட்டிச் சேர்ப்பார்.
13 எப்ராயிமரின் பொறாமை
அவர்களை விட்டு நீங்கும்,
யூதாவைப் பகைத்தோர்
வெட்டி வீழ்த்தப்படுவர்.
எப்ராயிமர் யூதாமேல்
பொறாமை கொள்வதில்லை;
யூதாவும் எப்ராயிமரைப்
பகைப்பதில்லை.
14 அவர்கள் இருவரும் சேர்ந்து
மேற்கிலுள்ள பெலிஸ்தியரின்
தோள்மேல் பாய்வார்கள்;
கீழ்த்திசை நாட்டினரைக்
கொள்ளையடிப்பார்கள்;
ஏதோமையும் மோவாபையும்
கைப்பற்றிக் கொள்வார்கள்;
அம்மோன் மக்கள்
அவர்களுக்கு அடிபணிவார்கள்.
15 எகிப்தின் கடல் முகத்தை
ஆண்டவர் முற்றிலும் வற்றச்செய்வார்;
பேராற்றின்மேல் கையசைத்து
அனல்காற்று வீசச்செய்வார்;
கால் நனையாமல் மக்கள்
கடந்து வரும்படி அந்த ஆற்றை
ஏழு கால்வாய்களாகப் பிரிப்பார்.
16 இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து
வந்த நாளில்
பெருவழி தோன்றியது போல,
ஆண்டவரின் மக்களுள்
எஞ்சியோர் வருவதற்கு
அசீரியாவிலிருந்து
பெருவழி ஒன்று தோன்றும்.
11:1 திவெ 5:5; 22:16.
11:4 1 தெச 2:8.
11:5 எபே 6:14; 11:6-9; எசா 65:25.
11:9 அப 2:14; 11:10; உரோ 15:12.
11:15 திவெ 16:12.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-11
|
690 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 12 – திருவிவிலியம்
|
நன்றிப் பா
1 அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:
‟ஆண்வடரே, நான் உமக்கு
நன்றி சொல்வேன்;
நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;
இப்பொழுதோ,
உம் சினம் தணிந்து விட்டது;
நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
2 இறைவன் என் மீட்பர்,
அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,
நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல்,
அவரையே பாடுவேன்,
என் மீட்பும் அவரே.”
3 மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்
அகமகிழ்வோடு தண்ணீர்
முகந்து கொள்வீர்கள்.
4 அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே
அவர்செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப்
பறைசாற்றுங்கள்.
5 ஆண்டவருக்குப் புகழ்ப்பா
அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும்
செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை
அறிந்துகொள்வதாக.
6 சீயோனில் குடியிருப்போரே!
ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே
சிறந்து விளங்குகின்றார்.
12:2 விப 15:2; திபா 118:14.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-12
|
691 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 13 – திருவிவிலியம்
|
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1 ஆமோட்சின் மகன் எசாயா
பாபிலோனைக் குறித்துக் கண்ட
காட்சியில் அருளப்பட்ட திருவாக்கு:
2 வறண்ட மலை ஒன்றில்
போர்க்கொடி ஏற்றுங்கள்;
போர்வீரர்களை
உரக்கக் கூவி அழையுங்கள்;
உயர்குடி மக்கள் வாழும்
நகர வாயில்களுக்குள் நுழையும்படி,
அவர்களுக்குக் கையசைத்துச்
சைகை காட்டுங்கள்.
3 போருக்கென அர்ப்பணிக்கப்பட்டுள்ள
என் வீரர்களுக்கு,
நானே ஆணை பிறப்பித்துள்ளேன்;
நான் சினமடைந்து பிறப்பித்துள்ள
என் கட்டளையை நிறைவேற்றிட,
தங்கள் வலிமையால்
பெருமிதம் கொள்ளும்
என் வீரர்களை அழைத்துள்ளேன்.
4 மலைகளின் மேல் எழும்
பேரிரைச்சலைக் கேளுங்கள்;
அது பெருங்கூட்டமாய் வரும்
மக்களின் ஆரவாரம்;
அரசுகளின் ஆர்ப்பாட்டக்
குரலைக் கேளுங்கள்,
பிற இனத்தார் ஒருங்கே
திரண்டு விட்டனர்;
5 தொலைநாட்டிலிருந்தும்
தொடுவானத்து எல்லைகளிலிருந்தும்
அவர்கள் வருகின்றார்கள்;
ஆண்டவர் தம் கடும்சினத்தின்
போர்க் கலன்களோடு
உலகம் முழுவதையும் அழிக்க வருகின்றார்.
6 அழுது புலம்புங்கள்,
ஆண்டவரின் நாள் அண்மையில் உள்ளது;
எல்லாம் வல்லவரிடமிருந்து
அழிவு வடிவத்தில் அது வருகின்றது.
7 ஆதலால், கைகள் யாவும் தளர்ந்து விடும்;
மானிட நெஞ்சம் அனைத்தும்
உருகி நிற்கும்.
8 அவர்கள் திகிலடைவார்கள்;
துன்ப துயரங்கள்
அவர்களைக் கவ்விக்கொள்ளும்;
பேறுகாலப் பெண்ணைப்போல
வேதனையடைவார்கள்;
ஒருவர் மற்றவரைப் பார்த்துத்
திகைத்து நிற்பர்;
கோபத் தீயால் அவர்கள் முகம்
கனன்று கொண்டிருக்கும்.
9 இதோ, ஆண்டவரின் நாள் வருகின்றது,
கொடுமையும் கோபமும் கடும் சீற்றமும்
நிறைந்த நாள் அது;
மண்ணுலகைப் பாழ்நிலமாக்கும்
நாள் அது;
அதிலிருக்கும் பாவிகளை முற்றிலும்
அழித்துவிடும் நாள் அது.
10 வானத்து விண்மீன்களும்
இராசிக் கூட்டங்களும் ஒளி வீசமாட்டா;
தோன்றும்போதே கதிரவன்
இருண்டு போவான்;
வெண்ணிலாவும் தண்ணொளியைத்
தந்திடாது.
11 உலகை அதன் தீச்செயலுக்காகவும்
தீயோரை அவர்தம்
கொடுஞ் செயலுக்காகவும்
நான் தண்டிப்பேன்;
ஆணவக்காரரின் அகந்தையை அழிப்பேன்;
அச்சுறுத்துவோரின் இறுமாப்பை
அடக்குவேன்.
12 மானிடரைப் பசும் பொன்னைவிடவும்
மனிதர்களை ஓபீரின் தங்கத்தைவிடவும்
அரிதாக்குவேன்.
13 ஆதலால், வானத்தை
நடுங்கச் செய்வேன்;
மண்ணுலகம் தன் இருப்பிடத்திலிருந்து
ஆட்டங் கொடுக்கும்;
படைகளின் ஆண்டவரது கோபத்தால்
அவரது கடும்சினத்தின் நாளில்
இது நடக்கும்.
14 துரத்தப்பட்ட புள்ளிமான் போலவும்,
ஒன்று சேர்ப்பாரின்றிச்
சிதறுண்டு ஆடுகளைப் போலவும்,
எல்லாரும் தம் மக்களிடம்
திரும்பிச் செல்வர்;
எல்லாரும் தம் சொந்த நாட்டுக்குத்
தப்பியோடுவர்.
15 அகப்பட்ட ஒவ்வொருவரும்
பிடிபட்ட ஒவ்வொருவரும்
வாளால் மடிவர்.
16 அவர்கள் பச்சிளம் குழந்தைகள்
அவர்கள் கண்ணெதிரே
மோதியடிக்கப்படுவர்.
அவர்கள் வீடுகள் கொள்ளையிடப்படும்,
அவர்கள் துணைவியர்
மானபங்கப்படுத்தப்படுவர்.
17 இதோ, அவர்களுக்கு எதிராக நான்
மேதியரைக் கிளர்ந்தெழச் செய்கின்றேன்,
அவர்கள் வெள்ளியைப்
பெரிதாக எண்ணாதவர்கள்;
பொன்னை அடைவதற்கு
ஆவல் கொள்ளாதவர்கள்.
18 அவர்கள் வில்வீரர்
இளைஞரை மோதியடிப்பார்கள்,
பச்சிளங் குழந்தைகளுக்கு அவர்கள்
கருணை காட்டமாட்டார்கள்;
சிறுவர்களுக்கு அவர்கள் கண்களில்
இரக்கம் இராது.
19 அரசுகளில் சிறப்புமிகு கல்தேயரின்
மேன்மையும் பெருமையுமான பாபிலோன்
கடவுள் அழித்த சோதோம்
கொமோராவைப்போல ஆகிவிடும்.
20 இனி எவரும் அதில்
ஒருபோதும் குடியிருக்க மாட்டார்;
அதுவும் தலைமுறை தலைமுறையாகக்
குடியற்று இருக்கும்;
அரேபியர் அங்கே
கூடாரம் அமைக்கமாட்டார்;
ஆயர்கள் தம் மந்தையை அங்கே
இளைப்பாற விடுவதில்லை.
21 ஆனால், காட்டு விலங்குகள்
அங்கே படுத்துக் கிடக்கும்;
ஊளையிடும் குள்ளநரிகள்
அவர்கள் வீடுகளை நிரப்பும்;
தீக்கோழிகள் அங்கே தங்கியிருக்கும்;
வெள்ளாட்டுக் கிடாய்கள்
அங்கே துள்ளித் திரியும்.
22 அவர்கள் கோட்டைகளில்
ஓநாய்கள் அலறும்;
அரண்மனைகளில்
குள்ளநரிகள் ஊளையிடும்;
அதற்குரிய நேரம் நெருங்கிவிட்டது;
அதற்குரிய நாள்கள்
அண்மையில் உள்ளன.
13:1-14:23 எசா 47:1-15; எரே 50:1-51:64.
13:6 யோவே 1:15.
13:10 எசே 32:7; மத் 24:29; மாற் 13:24-25; லூக் 21:25; திவெ 6:12-13.
13:19 தொநூ 19:24.
13:21 எசா 34:14; செப் 2:14; திவெ 18:2.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-13
|
692 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 14 – திருவிவிலியம்
|
அடிமைத்தனத்தினின்று திரும்புதல்
1 ஆண்டவர் யாக்கோபின் மீது இரக்கம் காட்டி இஸ்ரயேலை மீண்டும் தேர்ந்து கொள்வார்; அவர்களை அவர்களுடைய நாட்டில் அமைதியுடன் வாழச் செய்வார். வேற்று நாட்ட வரும் அவர்களை நாடி வந்து யாக்கோபின் குடும்பத்தாரோடு சேர்ந்து கொள்வார்கள்.
2 மக்களினங்களை அவர்களை அழைத்து வந்து, அவர்களது சொந்த இடத்திற்கு அவர்களை இட்டுச் செல்வார்கள். அவ் வேற்றுநாட்டாரை ஆண்டவரின் நாட்டில் இஸ்ரயேல் குடும்பத்தார் அடிமைகளாகவும், அடிமைப் பெண்களாகவும் உரிமையாக்கிக் கொள்வர்; தங்களை அடிமைப் படுத்தியவர்களை அடிமையாக்குவார்கள்; அவர்களை ஒடுக்கியவர்கள் மேல் ஆட்சி செலுத்துவார்கள்.
பாபிலோனிய அரசன்மீது வசைப்பாடல்
3 ஆண்டவர் உன்மேல் சுமத்திய துயரையும் இடரையும் கடுமையான அடிமை வாழ்வையும் அகற்றி, அமைதி வாழ்வை உனக்குத் தரும் நாளில்,
4 பாபிலோன் மன்னனுக்கு எதிராக
இந்த ஏளனப் பாடலை எடுத்துக் கூறு:
“ஒடுக்கியவன் ஒழிந்தானே!
அவன் ஆணவமும் ஓய்ந்ததே!
5 தீயோரின் கோலையும்
ஆட்சியாளரின் செங்கோலையும்
ஆண்டவர் முறித்துப் போட்டார்.
6 அவர்கள் கோபத்தால் வெகுண்டு
அடிமேல் அடியாக மக்களினங்களை
அடித்து நொறுக்கினார்கள்;
பிற நாட்டினரைத் தொடர்ந்து
கொடுமைப்படுத்திக்
கடுமையாய் ஆண்டார்கள்.
7 மண்ணுலகம் முழுவதும் இளைப்பாறி
அமைதியில் மூழ்கியிருக்கின்றது;
மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து
ஆரவாரம் செய்கின்றது.
8 தேவதாரு மரங்களும்
லெபனோனின் கேதுரு மரங்களும்
உன் வீழ்ச்சியால் களிப்படைகின்றன;
‘நீ வீழ்ந்து கிடக்கும் இந்நேரமுதல்
எமை வெட்டி வீழ்த்த
எமக்கெதிராய் எழுபவர் எவருமில்லை’
எனப் பாடுகின்றன.
9 நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக்
கீழுள்ள பாதாளம்
மகிழ்ச்சியால் பரபரக்கின்றது;
உலகின் இறந்த
தலைவர்கள் அனைவரும்
உன்னை வரவேற்குமாறு
அவர்களை எழுப்புகிறது.
வேற்றினத்தாரின் அரசர்கள்
அனைவரையும்
அவர்தம் அரியணையை விட்டு
எழச் செய்கிறது.
10 அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி,
“நீயும் எங்களைப்போல்
வலுவிழந்து போனாயே!
எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!
11 உன் இறுமாப்பும்
உன் வீணைகளின் இசையொலியும்
பாதாளம்வரை தாழ்த்தப்பட்டன;
புழுக்கள் உனக்குக் கீழ்ப் படுக்கையாகும்!
பூச்சிகள் உன் போர்வையாகும்!
12 வைகறைப் புதல்வனாகிய
விடி வெள்ளியே!
வானத்திலிருந்து நீ வீழ்ந்தாயே!
மக்களினங்களை
வலிமை குன்றச் செய்தவனே,
வெட்டப்பட்டுத் தரையில் விழுந்தாயே!
13 ‘நான் விண்ணுலகிற்கு ஏறிச் செல்வேன்;
இறைவனுடைய
விண்மீன்களுக்கு மேலாக உயரத்தில்
என் அரியணையை ஏற்படுத்துவேன்;
வடபுறத்து எல்லைப்பகுதியிலுள்ள
பேரவை மலைமேல் வீற்றிருப்பேன்.
14 மேகத்திரள்மேல் ஏறி,
உன்னதற்கு ஒப்பாவேன்’ என்று
உன் உள்ளத்தில் உரைத்தாயே!
15 ஆனால் நீ பாதாளம் வரை
தாழ்த்தப்பட்டாய்;
படுகுழியின் அடிமட்டத்திற்குள்
தள்ளப்பட்டாயே!
16 உன்னைக் காண்போர்,
உற்று நோக்கிக் கூர்ந்து கவனித்து,
‘மண்ணுலகை நடுநடுங்கச் செய்தவனும்,
அரசுகளை நிலைகுலையச் செய்தவனும்,
17 பூவுலகைப் பாலைநிலமாய் ஆக்கி,
அதன் நகரங்களை அழித்தவனும்,
தன்னிடம் சிறைப்பட்டவர் வீடு திரும்ப
விடுதலை அளிக்காதிருப்பவனும்
இவன் தானோ?’ என்பர்.
18 மக்களின மன்னர்கள் அனைவரும்
அவரவர் உறைவிடங்களில்
மாட்சியுடன் படுத்திருக்கின்றனர்.
19 நீயோ, அருவருப்பான
அழுகிய இலைபோல,
உன் கல்லறையிலிருந்து
வெளியே வீசப்பட்டிருக்கிறாய்;
வாளால் வெட்டி வீழ்த்தப்பட்டு,
நாற்றமெடுத்த பிணம்போலக்
கிடக்கின்றாய்.
20 கல்லறையில் அவர்களோடு
நீ இடம் பெறமாட்டாய்;
ஏனெனில், உன் நாட்டை
நீ அழித்து விட்டாய்;
உன் மக்களைக் கொன்று போட்டாய்;
தீங்கிழைப்போரின் வழிமரபு
என்றுமே பெயரற்றுப் போகும்.
21 மூதாதையரின் தீச்செயல்களை
முன்னிட்டு
அவர்கள் புதல்வர்களுக்குக்
கொலைக் களத்தைத் தயார்ப்படுத்துங்கள்;
நாட்டை உரிமையாக்க
இனி அவர்கள் தலையெடுக்கக்கூடாது;
பூவுலகின் பரப்பை அவர்கள்
நகரங்களால் நிரப்பக்கூடாது.”
பாபிலோனுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
22 “அவர்களுக்கு எதிராக
நான் கிளர்ந்தெழுவேன்” என்கிறார்
படைகளின் ஆண்டவர்,
“பாபிலோனின் பெயரையும்
அங்கே எஞ்சியிருப்போரையும்,
வழி மரபினரையும் வழித்தோன்றல்களையும்
இல்லாதொழிப்பேன்,”
என்கிறார் ஆண்டவர்.
23 “அந்நாட்டை முள்ளம்பன்றிகளின்
இடமாக்குவேன்;
சேறும் சகதியும் நிறைந்த
நீர்நிலையாக்குவேன்;
அழிவு என்னும் துடைப்பத்தால்
முற்றிலும் துடைத்துவிடுவேன்”
என்கிறார் படைகளின் ஆண்டவர்.
24 படைகளின் ஆண்டவர்
ஆணையிட்டுக் கூறுகின்றார்:
“நான் எண்ணியவாறு யாவும் நடந்தேறும்;
நான் தீட்டிய திட்டமே நிலைத்து நிற்கும்.
25 என் நாட்டில் அசீரியனை முறியடிப்பேன்;
என் மலைகளின் மேல்
அவனை மிதித்துப் போடுவேன்;
அப்பொழுது அவனது நுகத்தடி
அவர்களைவிட்டு அகலும்;
அவன் வைத்த சுமை
அவர்கள் தோளிலிருந்து இறங்கும்.
26 மண்ணுலகம் முழுவதையும்பற்றி
நான் தீட்டிய திட்டம் இதுவே;
பிறஇனத்தார் அனைவருக்கும் எதிராக
நான் ஓங்கியுள்ள கையும் இதுவே.
27 படைகளின் ஆண்டவர்
தீட்டிய திட்டத்தைச்
சீர்குலைக்க வல்லவன் எவன்?
அவர் தம் கையை ஓங்கியிருக்க
அதை மடக்கக்கூடியவன் எவன்?”
பெலிஸ்தியருக்கு எதிராகத் தண்டனைத் தீர்ப்பு
28 ஆகாசு அரசன் இறந்த ஆண்டில்
இந்தத் திருவாக்கு அருளப்பட்டது.
29 பெலிஸ்திய நாட்டின்
அனைத்து மக்களே,
உங்களை அடித்த கோல்
முறிந்து விட்டதற்காக அக்களிக்காதீர்;
ஏனெனில் பாம்பின் வேரினின்று
கட்டுவிரியன் புறப்பட்டு வரும்;
அதன் கனியாகப்
பறவைநாகம் வெளிப்படும்.
30 ஏழைகளின் தலைப்பிள்ளைகள்
உணவு பெறுவார்கள்;
வறியவர்கள் அச்சமின்றி
இளைப்பாறுவார்கள்;
உன் வழிமரபைப்
பஞ்சத்தால் நான் மடியச் செய்வேன்,
உன்னில் எஞ்சியிருப்போரை
நான் கொன்றொழிப்பேன்.
31 வாயிலே, வீறிட்டு அழு;
நகரே, கதறியழு;
எல்லாப் பெலிஸ்திய மக்களே;
மனம் பதறுங்கள்,
ஏனெனில் வடபுறத்திலிருந்து
புகையெனப் படை வருகின்றது.
அதன் போர்வீரருள்
கோழை எவனும் இல்லை.
32 அந்த நாட்டுத் தூதருக்கு
என்ன மறுமொழி கூறப்படும்?
“சீயோனுக்கு அடித்தளமிட்டவர்
ஆண்டவர்;
அவர்தம் மக்களுள் துயருறுவோர்
அங்கேயே புகலிடம் பெறுவர் என்பதே.”
13:1-14:23 எசா 47:1-15; எரே 50:1-51:64.
14:12 திவெ 8:10; 9:1.
14:13-15 மத் 11:23; லூக் 10:15.
14:24-27 எசா 10:5-34; நாகூ 1:1-3:19; செப் 2:13-15.
14:28 2 அர 16:20; 2 குறி 28:27.
14:29-31 எரே 47:1-7; எசே 25:15-17; யோவே 3:4-8; ஆமோ 1:6-8; செப் 2:4-7; செக் 9:5-7.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-14
|
693 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 15 – திருவிவிலியம்
|
ஏதோமுக்கு வரவிருக்கும் அழிவு
1 மோவாபைப் பற்றிய திருவாக்கு:
ஒரே இரவில் ஆர் நகரம்
அழிக்கப்படுவதால்
மோவாபும் அழிக்கப்படும்.
ஒரே இரவில் கீர் நகரம் அழிக்கப்படுவதால்,
மோவாபும் அழிக்கப்படும்.
2 தீபோன் குடும்பத்தார் அழுது புலம்ப
உயர்ந்த இடங்களுக்கு
ஏறிச் செல்கின்றனர்;
நெபோ, மேதாபா நகரங்களைக் குறித்து
மோவாபு அலறி அழுகின்றது;
அவர்கள் அனைவரின் தலைகளும்
மழிக்கப்பட்டாயிற்று.
தாடிகள் அனைத்தும்
சிரைக்கப்பட்டதாயிற்று.
3 அதன் தெருக்களில் நடமாடுவோர்
சணல் ஆடை உடுத்தி இருக்கின்றனர்;
வீட்டு மாடிகளிலும்
பொது இடங்களிலும் உள்ள யாவரும்
ஓலமிட்டு அழுகின்றனர்.
விழிநீர் ததும்பிவழியத்
தேம்பித் தேம்பி அழுகின்றனர்.
4 எஸ்போன் மற்றும் எலயாலே ஊரினர்
கூக்குரலிடுகின்றனர்.
யாகசு ஊர்வரை
அவர்களின் குரல் கேட்கின்றது;
படைக்கலம் தாங்கிய மோவாபிய வீரர்கள்
கதறுகின்றார்கள்,
ஒவ்வொருவனும் மனக்கலக்கம்
அடைகிறான்.
5 மோவாபுக்காக என் நெஞ்சம்
குமுறுகின்றது;
அதன் அகதிகள் சோவாருக்கும்
எக்லத்செலிசியாவுக்கும் ஓடுகின்றனர்;
ஏனெனில் அவர்கள்
லூகித்துக்கு ஏறிப்போகும் வழியில்
அழுதுகொண்டு செல்கின்றனர்;
ஒரோனயிம் சாலையில்
அழிவின் அழுகுரலை எழுப்புகின்றனர்;
6 நிம்ரிமின் நீர்நிலைகள் தூர்ந்து போயின;
புல் உலர்ந்தது; பூண்டுகள் கருகின;
பசுமை என்பதே இல்லாமற் போயிற்று.
7 ஆதலால் தாங்கள்
மிகுதியாக ஈட்டியவற்றையும்
சேமித்து வைத்தவற்றையும்
தூக்கிக் கொண்டு அவர்கள்
அராவிம் ஆற்றைக் கடக்கின்றனர்.
8 மோவாபின் எல்லையெங்கும்
கதறியழும் குரல் எட்டுகின்றது;
அவர்களின் அவலக்குரல்
எக்லயிம் நகர்வரை கேட்கின்றது;
அவர்களின் புலம்பல்
பெயேர் ஏலிம் நகரை எட்டுகின்றது.
9 தீபோன் நீர்நிலைகள்
இரத்தத்தால் நிரம்பி வழிகின்றன;
ஆயினும் தீபோன் மேல்
இன்னும் மிகுதியான
துன்பத்தைக் கொண்டு வருவேன்;
மோவாபியருள்
தப்பிப் பிழைத்தோர்மேலும்
நாட்டில் எஞ்சியிருப்போர்மேலும்
சிங்கத்தை ஏவிவிடுவேன்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-15
|
694 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 16 – திருவிவிலியம்
|
மோவாபின் நம்பிக்கையற்ற நிலை
1 சீயோன் மகளின் மலையில்
நாட்டை ஆள்பவனுக்குச்
சேலா நகரிலிருந்து பாலைநிலம் வழியாகச்
செம்மறியாடு அனுப்புங்கள்.
2 சிறகடித்து அலையும் பறவை போலும்
கூடு இழந்த குஞ்சுபோலும்
மோவாபிய மகளிர்
அர்னோன் துறைகளில் காணப்படுவர்.
3 வாருங்கள்; அறிவுரை கூறுங்கள்;
நடுநிலையோடு நடந்துகொள்ளுங்கள்;
நண்பகலில் உங்கள் நிழலை
இரவு போலாக்கி,
விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கு
மறைத்து வையுங்கள்;
தப்பி ஓடுகிறவர்களைக்
காட்டிக் கொடுக்காதீர்கள்.
4 மோவாபிலிருந்து துரத்தப்பட்டவர்கள்
உங்களிடமே தங்கியிருக்கட்டும்;
அழிக்க வருபவனின்
பார்வையிலிருந்து தப்ப
அவர்களுக்கு அடைக்கலமாய் இருங்கள்;
ஒடுக்குபவன் ஒழிந்து போவான்;
அழிவு ஓய்ந்து போகும்;
மிதிக்கிறவர்கள்
நாட்டில் இல்லாது போவர்.
5 அப்பொழுது, ஆண்டவர் தம் பேரன்பால்
ஓர் அரியணையை அமைப்பார்;
அதன்மேல் தாவீதின் கூடாரத்தைச் சார்ந்த
ஒருவர் வீற்றிருப்பார்;
அவர் உண்மையுடன் ஆள்பவர்;
நீதியை நிலைநாட்டுபவர்;
நேர்மையானதைச் செய்ய விரைபவர்.
6 மோவாபின் இறுமாப்பைப்பற்றி
நாங்கள் கேள்வியுற்றோம்;
அவன் ஆணவம் பெரிதே;
அவன் இறுமாப்பையும் ஆணவத்தையும்
செருக்கையும் குறித்துக்
கேள்விப்பட்டோம்.
அவன் தற்புகழ்ச்சிகள் யாவும் பொய்யுரையே.
7 ஆதலால் மோவாபு அழுது புலம்பட்டும்;
மோவாபுக்காக யாவரும் கதறியழட்டும்;
கீர் அரசேத்தின்
திராட்சை அடைகளை நினைந்து,
நெஞ்சம் தளர்ந்து விம்மியழுங்கள்.
8 எஸ்போனின் வயல்வெளி நிலங்கள்
வாடுகின்றன,
மக்களினங்களின் தலைவர்களை
விழத் தள்ளிய சிபிமானின்
திராட்சைத் தோட்டத்துக் கிளைகள்
அழிந்துவிட்டன.
அவை ஒருபுறம் யாசேரைத் தொட்டன;
பாலை நிலம்வரை படர்ந்திருந்தன;
அவற்றின் தளிர்கள் செழிப்புடன் வளர்ந்து
கடல்கடந்து படர்ந்து சென்றன.
9 ஆதலால் யாசேருக்காக அழுததுபோல்
நான் சிபிமாவின்
திராட்சைத் தோட்டத்திற்காகக்
கண்ணீர் விடுகின்றேன்;
எஸ்போன்! எலயாரே! உங்களை
என் கண்ணீரால் நனைக்கின்றேன்;
ஏனெனில் உங்கள் கோடைக் கனிக்காகவும்
அறுவடைக்காகவும் எழும்
மகிழ்ச்சி ஆரவாரம் அடங்கி விட்டது.
10 வளமான வயல் நிலங்களிலிருந்து
அக்களிப்பும் மகிழ்ச்சியும் அகற்றப்பட்டன.
திராட்சைத் தோட்டங்களில்
பாடல்கள் பாடுவார் யாருமில்லை;
ஆரவாரம் எழுப்புவார் எவருமில்லை.
இரசம் எடுப்பதற்கு ஆலையில்
திராட்சைக்கனி பிழிவாருமில்லை;
பழம் பிழிவாரின் பூரிப்பும்
இல்லாதொழிந்தது;
11 ஆதலால், மோவாபுக்காக என் நெஞ்சமும்,
கீர்கேரசிற்காக என் இதயமும்
வீணையின் நரம்புபோல் துடிக்கின்றது;
12 மோவாபியர் உயரமான
தொழுகை மேடுகளில்
வழிபாடு செய்து களைத்தும்,
திருத்தலங்களுக்குச் சென்று மன்றாடியும்
அவர்களுக்கு ஒன்றும் இயலாமற் போயிற்று.
13 இதுவே கடந்த காலத்தில் மோவாபைக் குறித்து ஆண்டவர் கூறிய திருவாக்கு.
14 ஆனால், இப்பொழுது ஆண்டவர் கூறுவது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒப்ப, மூன்று ஆண்டுகளில், மோவாபு நாட்டில் திரளான மக்கள் கூட்டம் இருப்பினும், அதன் மேன்மை அழிவுறும்; ஒருசிலரே நாட்டில் எஞ்சியிருப்பர்; அவர்களும் வலிமை இழந்திருப்பர்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-16
|
695 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 17 – திருவிவிலியம்
|
சிரியா, இஸ்ரயேலுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1 தமஸ்கு நகரைப் பற்றிய திருவாக்கு:
“நகர் என்ற பெயரை தமஸ்கு
இழந்துவிடும்; அது
பாழடைந்த மண்மேடாக மாறிவிடும்.
2 அதன் அருகிலுள்ள நகரங்கள் பாழடைந்து
ஆடுமாடுகள் திரியும் இடமாகும்;
அவை அங்கே படுத்துக் கிடக்கும்;
அவற்றை அச்சுறுத்த எவருமே இரார்.
3 எப்ராயிம் நாட்டின் அரண்
தரைமட்டமாகும்;
தமஸ்கின் அரசு இல்லாதொழியும்;
இஸ்ரயேல் மக்களின்
மேன்மைக்கு நேர்ந்தது
சிரியாவில் எஞ்சியிருப்போரின்
நிலைமையாகும், என்கிறார்
படைகளின் ஆண்டவர்.
4 அந்நாளில், யாக்கோபின் மேன்மை
தாழ்வடையும்;
அவனது கொழுத்த உடல்
மெலிந்து போகும்.
5 அறுவடைசெய்வோன்
நிமிர்ந்து நிற்கும் கதிர்களைச்
சேர்த்த பின்னும்
அவனது கை அவற்றை
அறுவடை செய்தபின்னும்
சிந்திய கதிர்களைப்
பொறுக்கி எடுக்கும் பொழுதும்
இரபாயிம் பள்ளத்தாக்கு இருப்பது போல
யாக்கோபின் நிலைமை இருக்கும்.
6 ஒலிவ மரத்தை உலுக்கும்போது
அதன் உச்சிக்கிளை நுனியில்
இரண்டு மூன்று காய்களும்,
பழமிருக்கும் கிளைகளில்
நாலைந்து பழங்களும்
விடப்பட்டிருப்பதுபோல்,
அவர்களிடையேயும்
பின்னால் பறிக்கப்படுவதற்கெனச்
சிலர் விடப்பட்டிருப்பர்,” என்கிறார்
இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்.
7 அன்றுதான், மனிதர் தம்மைப் படைத்தவரை நோக்குவர்; இஸ்ரயேலின் தூயவரைக்காண அவர்கள் கண்கள் விழையும்;
8 தங்கள் கைவேலைப்பாடுகளான பலிபீடங்களை ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள்; தாங்கள் கைப்படச்செய்த அசேராக் கம்பங்களையும் மரச் சிலைகளையும் நோக்கமாட்டார்கள்.
9 இவ்வியர், எமோரியர் என்பவர்களின் நகரங்கள் இஸ்ரயேல் மக்கள் வந்தபோது பாழடைந்ததுபோல, அந்நாளில் உன் வலிமைமிகு நகர்களும் கைவிடப்பட்டுப் பாழ்வெளி ஆகி விடும்.
10 இஸ்ரயேலே, உனக்கு விடுதலை அளித்த
கடவுளை நீ மறந்துவிட்டாய்;
உன் அடைக்கலமான கற்பாறையை
நீ நினைவு கூரவில்லை;
ஆதலால், கண்ணுக்கினிய நாற்றுகளை
நீ நட்டுவைத்தாலும்,
வேற்றுத் தெய்வத்திற்கு
இளம் கன்றுகளை நாட்டினாலும்,
11 நீ அவற்றை நட்ட நாளிலேயே
பெரிதாக வளரச் செய்தாலும்,
விதைத்த காலையிலேயே
மலரச் செய்தாலும்,
துயரத்தின் நாளில்
தீராத வேதனையும் நோயுமே
உன் விளைச்சலாய் இருக்கும்.
பகைவர் தோல்வியுறல்
12 ஐயோ! மக்களினங்கள் பலவற்றின்
ஆரவாரம் கேட்கிறது;
கடல் கொந்தளிப்பதுபோல்
அவர்கள் கொந்தளிக்கிறார்கள்;
இதோ, மக்கள் கூட்டத்தின்
கர்ச்சனைக்குரல் கேட்கிறது;
வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல்
அவர்கள் முழங்குகிறார்கள்.
13 பெருவெள்ளம்போல் மக்கள் கூட்டத்தினர்
கர்ச்சிக்கிறார்கள்;
அவர்களை ஆண்டவர் அதட்டுவார்;
அவர்களும் வெகுதொலைவிற்கு
ஓடிப் போவார்கள்;
மலைகளில் காற்றின் முன் அகப்பட்ட
பதர் போன்றும்,
புயல்காற்று முன் சிக்குண்ட
புழுதி போன்றும் துரத்தப்படுவார்கள்.
14 மாலைவேளையில்,
இதோ! எங்கும் திகில்;
விடிவதற்குள் அவர்கள்
இல்லாதொழிவார்கள்;
இதுவன்றோ நம்மைக்
கொள்ளையடிப்பவர்கள் பங்கு!
இதுவன்றோ நம்மைச்
சூறையாடுவோரின் நிலைமை.
17:1-3 எரே 49:23-27; ஆமோ 1:3-5; செக் 9:1.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-17
|
696 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 18 – திருவிவிலியம்
|
சூடானுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு
1 எத்தியோப்பியாவின் ஆறுகளுக்கு
அப்பால் சிறகடித்து ஒலியெழுப்பும்
உயிரினங்கள் உடையதோர்
நாடு உள்ளது.
2 அது நாணல் படகுகளில் நீரின்மேலே
கடல் வழியாகத் தூதரை அனுப்புகிறது;
விரைவாய்ச் செல்லும் தூதர்களே,
உயர்ந்து வளர்ந்து,
பளபளப்பான தோலுடைய
இனத்தாரிடம் செல்லுங்கள்;
அருகிலும் தொலைவிலும் உள்ளோரை
அச்சுறுத்திய
மக்கள் கூட்டத்தார் அவர்கள்;
ஆற்றல் வாய்ந்தவர்கள்,
பகைவரை மிதித்து
வெற்றிகொள்பவர்கள் அந்த நாட்டினர்;
ஆறுகள் குறுக்காகப்
பாய்ந்தோடும் நாடும் அது.
3 உலகில் குடியிருக்கும் அனைத்து மக்களே,
மண்ணுலகில் வாழ்வோரே,
மலைகளின்மேல் கொடியேற்றும்போது
உற்று நோக்குங்கள்;
எக்காளம் ஊதும்போது
செவிகொடுங்கள்;
4 ஏனெனில், ஆண்டவர் என்னிடம்
இவ்வாறு சொன்னார்:
‟பகலில் அடிக்கும்
வெப்பம் குறைந்த வெயில்போலும்,
அறுவடைக்கால வெயிலால்
உண்டாகும் பனிமேகம் போன்றும்
என் இருப்பிடத்தில் அமைதியாய் இருந்து
நான் கவனித்துப் பார்ப்பேன்”
5 ஏனெனில், அறுவடைக்கு முன்
பூக்கள் பூத்துக் காய்த்து,
கனிதரும் பருவம் எய்தும்போது,
தழைகளை எதிரி
அரிவாள்களால் அறுத்தெறிவான்;
படரும் கொடிகளை
அரிந்து அகற்றிவிடுவான்.
6 அவை அனைத்தும், மலைகளில்
பிணந்தின்னும் பறவைகளுக்கும்
தரையில் வாழுகின்ற
விலங்குகளுக்கும் விடப்படும்.
பிணந்தின்னும் பறவைகள்
கோடைக் காலத்திலும்
தரை வாழும் விலங்குகள்
குளிர்காலத்திலும்
அவற்றின் மேல் தங்கியிருக்கும்.
7 உயர்ந்து வளர்ந்து பளபளப்பான தோலுடைய இனத்தாரின் நாட்டிலிருந்து அந்நேரத்தில் படைகளின் ஆண்டவருக்குக் காணிக்கைப் பொருள்கள் கொண்டு வரப்படும். அருகிலும் தொலையிலும் உள்ளோரை அச்சுறுத்திய மக்கள் கூட்டத்தார் அவர்கள். அந்நாட்டினர் ஆற்றல் வாய்ந்தோர்; பகைவர்மீது வெற்றிகொள்வோர். ஆறுகள் குறுக்காகப் பாய்ந்தோடும் அந்த நாட்டிலிருந்து படைகளின் ஆண்டவரது பெயர் தங்கியுள்ள சீயோன் மலைக்கு அக்காணிக்கைகள் கொண்டு வரப்படும்.
18:1-7 செப் 2:12.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-18
|
697 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 19 – திருவிவிலியம்
|
எகிப்தின் மேல் வரவிருக்கும் தண்டனைத் தீர்ப்பு
1 எகிப்தைக் குறித்த திருவாக்கு:
விரைவாய்ச் செல்லும்
மேகத்தின்மேல் ஏறி
ஆண்டவர் எகிப்துக்கு வருகிறார்;
எகிப்தின் சிலைகள்
அவர் திருமுன் அஞ்சி நடுங்கும்;
எகிப்தியரின் உள்மனமோ
உருக்குலையும்.
2 எகிப்தியருக்கு எதிராக எகிப்தியரையே
நான் கிளர்ந்தெழச் செய்வேன்.
அப்போது, உடன்பிறப்புக்கு எதிராக
உடன்பிறப்பும்
நண்பனுக்கு எதிராக நண்பனும்
ஒரு நகரத்தாருக்கு எதிராக
மற்றொரு நகரத்தாரும்
ஓர் அரசுக்கு எதிராக மற்றோர் அரசும்
மோதிக்கொள்வர்.
3 ஆதலால், எகிப்தியர்
தங்கள் உள்ளத்தில் ஊக்கம் இழப்பர்;
அவர்கள் திட்டங்களைக்
குழப்பி விடுவேன்;
அப்போது சிலைகள், மாய வித்தைக்காரர்,
மைவித்தைக்காரர், குறிசொல்வோர்
ஆகியோரிடம் அவர்கள் குறி கேட்பார்கள்.
4 கடினமனம் கொண்ட
அதிகாரிகளின் கைகளில்
எகிப்தியரை நான் ஒப்புவிப்பேன்.
கொடுங்கோல் மன்னன் ஒருவன்
அவர்களை ஆள்வான், என்கிறார்
தலைவராகிய படைகளின் ஆண்டவர்.
5 கடல் நீர் வற்றிப்போகும்;
பேராறு காய்ந்து வறண்டு போகும்;
6 அதன் கால்வாய்க்குள் நாற்றமெடுக்கும்;
எகிப்திலுள்ள பேராற்றின் கிளைகளில்
நீர் குறைந்து, வறண்டு போகும்;
கோரைகளும் நாணல்களும்
மக்கிப் போகும்.
7 ஆற்றின் கரைப்பகுதியும் முகத்துவாரமும்
உலர்ந்த தரையாகும்;
நைல் நதியின் அருகில் விதைத்த யாவும்
தீய்ந்து, பறந்து இல்லாது போகும்.
8 மீனவர்கள் புலம்புவர்;
பேராற்றில் தூண்டில் போடுவோர்
அனைவரும் அழுவர்;
நீரின்மேல் வலைவீசுவோர் சோர்வடைவர்.
9 மெல்லிய சணலாடை செய்வோரும்
வெண்பருத்தி நூலினால் நெய்வோரும்
வெட்கி நாணுவர்.
10 நாட்டின் தூண்களாய் இருப்போர்
நசுக்கப்படுவர்;
வேலைக்கு அமர்த்தப்படுவோர்
உள்ளம் பதறுவர்.
11 சோவானின் தலைவர்கள் மூடர்களே!
பார்வோனின் ஞானமிகு அறிவுரையாளர்
அறிவற்ற ஆலோசனை தருகின்றனர்;
‘நான் ஞானிகளின் மகன்,
பண்டைக்கால அரசர்களின்
வழி வந்தவன்’ என்று
நீங்கள் ஒவ்வொருவரும்
பார்வோனிடம் எப்படிச் சொல்லலாம்?
12 அப்படியானால் உன் ஞானிகள் எங்கே?
படைகளின் ஆண்டவர்
எகிப்துக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை
அவர்கள் அறிந்து
உனக்கு அறிவிக்கட்டும்.
13 சோவான் தலைவர்கள்
அறிவிலிகள் ஆனார்கள்;
நோபு நகரின் தலைவர்கள்
ஏமாந்து போனார்கள்;
எகிப்தின் குல முதல்வர்கள்
அதை நெறிபிறழச் செய்தார்கள்.
14 ஆண்டவர் அதனுள்
குழப்பம் உண்டாக்கும் ஆவி
புகுந்துவிடச் செய்தார்;
போதையேறியவன் வாந்தியெடுத்துத்
தள்ளாடுவதுபோல,
அவர்கள் எகிப்தை
அவன் செயல்கள் அனைத்திலும்
தள்ளாடச் செய்தார்கள்.
15 எகிப்து நாட்டின் தலையோ,
வாலோ, ஈந்தோ நாணலோ
யாரும் எதுவுமே செய்தற்கு இராது.
எகிப்து ஆண்டவரை வழிபடுதல்
16 அந்நாளில், படைகளின் ஆண்டவர் எகிப்தியருக்கு எதிராகத் தம் கையை ஓங்குவார். ஓங்கிய அவர் கைமுன் அவர்கள் பெண்டிரைப்போல் அஞ்சி நடுங்குவார்கள்.
17 யூதா எகிப்தைத் திகிலடையச் செய்யும் நாடாகும். அதன் பெயரைக் கேட்கும் யாவரும் படைகளின் ஆண்டவர் அவர்களுக்கு எதிராகத் தீட்டிய திட்டத்தை முன்னிட்டு நடுநடுங்குவர்.
18 அந்நாளில் கானானிய மொழி பேசும் ஐந்து நகர்கள் எகிப்தில் இருக்கும்; அவை படைகளின் ஆண்டவரது பெயரால் ஆணையிடும். அவற்றுள் ஒன்று ‘கதிரவன் நகரம்’ என்று அழைக்கப்படும்.
19 அந்நாளில் எகிப்திய மண்ணில் ஆண்டவருக்குப் பலிபீடம் ஒன்று இருக்கும்; அதன் எல்லைப் புறத்தில் ஆண்டவருக்கெனத் தூண் ஒள்று எழுப்பப்படும்.
20 எகிப்து நாட்டில் அது படைகளின் ஆண்டவருக்கு ஓர் அடையாளமாகவும் சான்றாகவும் இருக்கும். ஒடுக்குவோரை முன்னிட்டு ஆண்டவரிடம் அவர்கள் முறையிடுவார்கள். அவர்களுக்காக வழக்காடி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் தம் மீட்பர் ஒருவரை அவர் அனுப்புவார்.
21 அப்பொழுது, ஆண்டவர் எகிப்தியருக்குத் தம்மை வெளிப்படுத்துவார்; எகிப்தியரும் ஆண்டவரை அந்நாளில் அறிந்துகொள்வார்கள்; பலிகளாலும் எரிபலிகளாலும் ஆண்டவரை வழிபடுவார்கள்; ஆண்டவருக்குப் பொருத்தனைகள் செய்து அவற்றை நிறைவேற்றுவார்கள்.
22 ஆண்டவர் எகிப்தியரை வதைப்பார்; வதைத்துக் குணமாக்குவார்; அவர்களும் ஆண்டவரிடம் திரும்புவர்; அவரும் அவர்கள் விண்ணப்பங்களுக்குச் செவிசாய்த்து அவர்களைக் குணமாக்குவார்.
23 அந்நாளில் எகிப்திலிருந்து அசீரியாவிற்குச் செல்ல ஒரு நெடுஞ்சாலை உருவாகும். அசீரியர் எகிப்திற்கும் எகிப்தியர் அசீரியாவிற்கும் போய் வருவர்; எகிப்தியர் அசீரியரோடு சேர்ந்து வழிபாடு செலுத்துவார்கள்.
24 அந்நாளில் இஸ்ரயேல் எகிப்திற்கும் அசீரியாவிற்கும் இணையான மூன்றாம் அரசாகத் திகழ்ந்து மண்ணுலகின் நடுவில் ஆசியாக விளங்கும்.
25 படைகளின் ஆண்டவர் அவற்றிற்கு வழங்கும் ஆசி மொழி: ‘என் மக்களினமாகிய எகிப்தும், என் கைவேலைப்பாடாகிய அசீரியாவும், என் உரிமைச் சொத்தாகிய இஸ்ரயேலும் ஆசிபெறுக!’
19:1-25 எரே 46:2-26; எசே 29:1-32:32.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-19
|
698 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 20 – திருவிவிலியம்
|
இறைவாக்கினர் பிறந்த மேனியுடன் நடத்தல்
1 அசீரிய மன்னன் சார்கோன் அனுப்பிய தர்த்தான் என்ற படைத்தளபதி அஸ்தோது நகருக்கு எதிராய்ப் போரிட்டு அதைக் கைப்பற்றிய ஆண்டில்,
2 அந்நேரத்தில் ஆமோட்சின் மைந்தன் எசாயா வாயிலாய் ஆண்டவர் சொல்லியது: ‟நீ போய் உன் இடையிலிருந்து சாக்கு உடையைக் களைந்துவிடு; உன் கால்களிலிருந்து காலணிகளைக் கழற்றிவிடு.” அவரும் அவ்வாறே செய்து ஆடையின்றியும் வெறுங்காலோடும் நடமாடிக் கொண்டிருந்தார்.
3 ஆண்டவர் கூறினார்: என் ஊழியன் எசாயா ஆடையின்றியும் வெறுங்காலோடும் மூன்று ஆண்டுகள் நடமாடியது, எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் எதிரான அடையாளமும் முன்குறியும் ஆகும்.
4 அசீரிய மன்னன் எகிப்தியரைச் சிறைப்பிடித்து, எத்தியோப்பியரை நாடு கடத்துவான். அவன் எகிப்தியருக்கு மானக்கேடு உண்டாகும்படி இளைஞரையும் முதியோரையும் ஆடையின்றியும் வெறுங் காலோடும் இருப்பிடம் மூடப்படாமலும் இழுத்து வருவான்.
5 அப்பொழுது தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவை முன்னிட்டும், பெருமை கொண்டிருந்த எகிப்தை முன்னிட்டும், அவர்கள் வெட்கித் திகைப்புறுவர்.
6 அந்நாளில் இந்தக் கடற்கரை நாட்டில் குடியிருப்போர், ‟இதோ யாரிடத்தில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோமோ, அசீரிய அரசனிடமிருந்து நாம் விடுவிக்கப்பட உதவி வேண்டி யாரைத் தேடி ஓடினோமோ, அவர்களுக்கு இந்நிலை ஏற்பட்டுவிட்டதே! இனி நாம் தப்புவது எவ்வாறு?” என்பார்கள்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-20
|
699 |
எசாயா
|
எசாயா அதிகாரம் – 21 – திருவிவிலியம்
|
பாபிலோனின் வீழ்ச்சி பற்றிய காட்சி
1 கடலையடுத்த பாலைநிலம் குறித்த திருவாக்கு:
தென்னாட்டிலிருந்து
சுழல்காற்றுகள் வீசுவதுபோல்,
அச்சம்தரும் நாடான
பாலைநிலத்திலிருந்து
அழிவு வருகின்றது.
2 கொடியதொரு காட்சி
எனக்குக் காண்பிக்கப்பட்டது:
நம்பிக்கைத் துரோகி
துரோகம் செய்கின்றான்;
நாசக்காரன் நாசம் செய்கின்றான்.
‘ஏலாம் நாடே! கிளர்ந்தெழு;
மேதியாவே! முற்றுகையிடு’
அதன் பெருமூச்சுகள் அனைத்துக்கும்
முடிவு வரச் செய்வேன்.
3 ஆதலால், என் அடிவயிறு
வேதனையால் துடிக்கிறது.
பெண்ணின் பேறுகால வேதனைக்கு
ஒத்த வேதனைகள்
என்னைக் கவ்விக்கொண்டன;
கலக்கமடைந்து
செவிடன் போல் ஆனேன்;
திகைப்புற்றுக் குருடன் போல் ஆனேன்.
4 என் மனம் பேதலிக்கிறது;
திகில் என்னை ஆட்கொண்டது;
நான் நாடிய கருக்கல் வேளை
என்னை நடுக்கமுறச் செய்கிறது.
5 பந்தி தயார் செய்கிறார்கள்;
கம்பளத்தை விரிக்கிறார்கள்;
உண்கிறார்கள், குடிக்கிறார்கள்;
தலைவர்களே, எழுங்கள்;
கேடயத்திற்கு எண்ணெய் பூசுங்கள்.
6 ஏனெனில் என் தலைவர்
எனக்குக் கூறியது இதுவே:
“நீ போய்க்
காவலன் ஒருவனை நிறுத்திவை;
தான் காண்பதை அவன் அறிவிக்கட்டும்.
7 இருவர் இருவராய்க்
குதிரைப்படை வீரர்கள்
அணிவகுத்து வருவதையும்,
கழுதைகள் மேலும் ஒட்டகங்கள் மேலும்
வீரர்கள் ஏறி வருவதையும்
அவன் காணும்போது
மிகவும் கவனமாய்க் கண்காணிக்கட்டும்.”
8 அப்போது காவல்காரன் கூக்குரலிட்டான்:
“என் தலைவரே, பகல்முழுவதும்
நான் காவல் மாடத்தின்மேல்
நின்று கொண்டிருக்கின்றேன்;
இரவெல்லாம் என் பணியில்
நிறுத்தப்பட்டுள்ளேன்.
9 இதோ, ஒரு சோடிக்
குதிரைகள் பூட்டப்பட்ட தேரில்,
ஏறி ஒருவர் வருகின்றார்.
அவர் பதிலுரையாக,
‘பாபிலோன் வீழ்ந்தது,
வீழ்ச்சியடைந்து விட்டது;
அதன் தெய்வங்களின்
சிலைகள் அனைத்தையும் தரையில் மோதி
உடைக்கப்பட்டாயிற்று’ என்று கூறினார்.”
10 போரடிக்கப்பட்டுக் களத்தில்
சிதறிக் கிடக்கும் என் மக்களே,
இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின்
ஆண்டவரிடமிருந்து கேட்டவற்றை
நான் உங்களுக்கு அறிவித்துள்ளேன்.
ஏதோம் பற்றிய செய்தி
11 தூமாவைப் பற்றிய திருவாக்கு:
சேயிரிலிருந்து என்னைக் கூப்பிட்டு,
“சாமக்காவலனே,
இரவு எப்போது முடியும்?
சாமக்காவலனே,
இரவு எப்போது முடியும்?”
என்று ஒருவர் கேட்க,
12 “காலை வருகிறது, அவ்வாறே இரவும்;
கேட்பதென்றால் கேளுங்கள்,
மீண்டும் திரும்பி வாருங்கள்” என்று
சாமக்காவலன் கூறினான்.
அரேபியாவைக் குறித்த செய்தி
13 அரேபியாவைக் குறித்த திருவாக்கு:
தெதானின் வணிகப் பயணிகளே!
அரேபியாவின் பாலைநிலச் சோலைகளில்
நீங்கள் கூடாரம் அடியுங்கள்;
14 தேமா நாட்டில் குடியிருப்போரே!
தாகமுற்றோர்க்குத்
தண்ணீர் கொண்டு வாருங்கள்;
அகதிகளை
உணவுடன் சென்று சந்தியுங்கள்.
15 ஏனெனில், வாள்களுக்குத் தப்பி
அவர்கள் ஓடுகின்றார்கள்;
உருவிய வாளுக்கும்,
நாணேற்றிய வில்லுக்கும்
போரின் கடுமைக்கும் அஞ்சி
ஓடுகின்றார்கள்.
16 என் தலைவர் எனக்குக் கூறியது: கூலியாள் கணக்கிடுவதற்கு ஒத்த ஓராண்டிற்குள், கேதாரின் மேன்மை மங்கிப் போகும்.
17 கேதார் மக்களுள் வலிமை வாய்ந்த வில்வீரர்களுள் எஞ்சினோர் மிகச் சிலராகவே இருப்பர். ஏனெனில், இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரே இதைக் கூறியுள்ளார்.
|
https://bible.catholicgallery.org/tamil/etb-isaiah-21
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.