text
stringlengths 101
471k
|
---|
இப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு நூலகம் நூலகம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு சேகரம் சேகரம் பேச்சு வெளியிணைப்பு வெளியிணைப்பு பேச்சு தமிழம் தமிழம் பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு நூலகத்திட்டம் நூலகத்திட்டம் பேச்சு வகுப்பறை வகுப்பறை பேச்சு தெரிவைத் தலைகீழாக்கு
வடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை
The Economic Times 1973.03.02 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
நூலகம்:706 (← இணைப்புக்கள்)
(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.
"https://www.noolaham.org/wiki/index.php/சிறப்பு:WhatLinksHere/The_Economic_Times_1973.03.02" இருந்து மீள்விக்கப்பட்டது |
{{சிறப்புமலர்| நூலக எண்=11264| ஆசிரியர்= [[:பகுப்பு:பாலேந்திரன், ஆ.|பாலேந்திரன், ஆ.]] | வகை=பாடசாலை மலர்| மொழி=தமிழ் | பதிப்பகம்= [[:பகுப்பு:பேராதனைப் பல்கலைக்கழகம்|பேராதனைப் பல்கலைக்கழகம்]] | பதிப்பு=[[:பகுப்பு:1968|1968]] | பக்கங்கள்=151| }} =={{Multi|வாசிக்க|To Read}}== * [http://noolaham.net/project/113/11264/11264.pdf இளங்கதிர் 1967-68 (105 MB)] {{P}} <!--ocr_link-->* [http://noolaham.net/project/113/11264/11264.html இளங்கதிர் 1967-68 (எழுத்துணரியாக்கம்)]<!--ocr_link--> =={{Multi| உள்ளடக்கம்|Contents}}== *சமர்ப்பணம் *அமரர் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை *இளங்கதிர் 1967 - 1968 : உலகத் தமிழ் மகாநாடு *சமர்ப்பணம் *சங்கச் செயற்குழு உறுப்பினர் *இளங்கதிர் - 1967 - 1968 - ஆசிரியர் *ஞானப்பிரகாச சுவாமிகள் - பேராசிரியர் வி. செல்வநாயகம் *கவிதைகள் **சுவைத்து முடியவில்லை - திலீபன் **இன்ப வீடு - சி. கிருஷ்ணபிள்ளை **கண்ணாடி காட்டுமா - வயிரமுத்து **வண்டும் மலரும் - வயிரமுத்து *இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளின் கனிப்பொருள் வளமும் பொருளாதார விருத்தியும் - சோமசுந்தரம் செல்வநாயகம் *யாழ்ப்பாணப் பேச்சுத் தமிழில் சொல்லும் பொருளும் - ச. தனஞ்சயராசசிங்கம் *தீபவங்ஸ நூல் - கலாநிதி க. இந்திரபால *திருநூற்றந்தாதி - கலாநிதி ஆ. வேலுப்பிள்ளை *காதலும் கட்டுபாடும் - க. கைலாசபதி *ஆங்கில அரசாங்கமும் சைவ சமயக் கல்வியும் (19 ஆம் நூற்றாண்டு)- க. அருமைநாயகம் *பூட்டோரிக்கோவின் மொழிப் பிரச்சினை - ப. சந்திரசேகரம் *நல்ல மாறுதல் - மு. வை. அரவிந்தன் *'கோல்புறூக் கமறன் சீர்திருத்தங்கள்' : ஒரு மதிப்பீடு - ச. நாகேந்திரன் *பாரதியின் நகைச்சுவை - சு. சண்முகம் *திருவாசகத்தின் உட்கிடை - சி. இராமலிங்கம் *முச்சங்கங்கள் பற்றிய உண்மை - ம. சற்குணம் *பெரியாழ்வாரின் உண்மை அனுபவம் - செல்வி புவனா குமாரசாமி *தோட்டத் தொழிலாளர் ( ஒரு பொருளாதாரக் கண்ணோட்டம் )- எம். வாமதேவன் *இலக்கியத்தின் இலக்கணம் - ஈரோடு மே. து. ரா. *அம்மையாரின் பக்தி ஊற்று - செ. சயனொளிபவன் *பாரதியின் யுகப்புரட்சி - மு. சின்னத்துரை *பொய்கையார் சொன்மாலை - நா. சுப்பிரமணிய ஐயர் *பாடல் நின்றது - ஈழத்துச் சிவானந்தன் *திராவிடர் என்னும் பெயரும் தற்கால ஆராய்ச்சியும் - சுப்பிரமணியம் தவராசா *எம்மிடையேயுள்ள எழுத்தாளர்கள் - இரா. சிவச் சந்திரன் *பள்ளி எழுச்சிப் பாட்டின் வளர்ச்சி - சு. வைகுந்தநாதன் *மட்டக்களப்புப் பேச்சுத் தமிழிலே சிதைந்த வழக்குகள் - இ. பாலசுந்தரம் *மனக்கோணல் - சரநாதன் *தமிழ்ச் சங்கத்தாரால் நடாத்தப்பட்ட சுற்றுலாக் காசிகள் *இரண்டாவது உலகத் தமிழ் மகாநாட்டின் போது நிறுவப்பட்ட சிலைகள் சில *முத்தமிழ் விழாவில் பேராசிரியர் *பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையும் இலங்கைப் பல்கலைக் கழகமும் - கலாநிதி சு. வித்தியானந்தன் *தமிழும் பிறமொழியும் - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை *அன்றும் இன்றும் - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை *எம்மிடையில் ... - நா. சுப்பிரமணியம் *இலங்கையிற் கண்ணகி வழிபாடு - பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை [[பகுப்பு:1968]] [[பகுப்பு:பேராதனைப் பல்கலைக்கழகம்]] [[பகுப்பு:பாலேந்திரன், ஆ.]] |
``உதவி செய்யுற ஒவ்வொருத்தரும் கடவுள்தான்!" - விழித்திறன் சவால் நண்பர்களின் நம்பிக்கை பயணம் | inspiring journey of two visually challenged friends who prepare for govt exams - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
READ IN APP
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
விளையாட்டு
கிரிக்கெட்
கால்பந்து
ஐ.பி.எல்
ஆன்லைன் தொடர்கள் New
My News
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
Published: 04 Nov 2021 3 PM Updated: 04 Nov 2021 3 PM
``உதவி செய்யுற ஒவ்வொருத்தரும் கடவுள்தான்!" - விழித்திறன் சவால் நண்பர்களின் நம்பிக்கை பயணம்
சு.சூர்யா கோமதிவி.சதிஷ்குமார்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
``சாமி பார்வையை குடுக்கலைனு குறை சொல்லி, முடங்கிக் கிடக்குறதை விட்டுட்டு, கை, கால் நல்லபடியா கொடுத்துருக்காரு, நல்ல குடும்பத்தைக் கொடுத்துருக்காருனு சந்தோஷப்படுறோம். இன்னும் சொல்லணும்னா இந்த உலகம்தான் எங்களுக்கு குறை இருக்குதுனு சொல்லுது. நாங்க அப்படி நினைக்கல."
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
சிக்னல் விழுவதற்குள் சென்றுவிட வேண்டும் என கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள், நிற்க நேரமில்லாமல் ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருந்த மனிதர்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சென்னை கடற்கரை சாலை... சற்று சோர்வான மனநிலையுடன் நடந்து கொண்டிருந்த என்னை, எனக்கு பின்னால் பேசியவர்களின் குரல் திசை திருப்பியது.
கடற்கரை
Also Read
``இதுக இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல; அதான் சமாதி கட்டுனேன்!" - 50 நாய்களும் தங்கசாமி ஐயாவும்
முதுகில் பை, கறுப்புக் கண்ணாடி, கையில் ஒரு ஸ்டிக்குடன் தங்களுக்குப் பார்வையில்லை எனினும், உலகத்தின் பார்வையை தங்கள் பக்கம் திசைதிருப்ப எண்ணும் இரண்டு மாற்றுத்திறனாளி நண்பர்கள். சத்தமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்த அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் மனித இனம் மீது அவ்வளவு நம்பிக்கை. நிழலாடும் உருவத்தைவைத்து என்னிடம், ``மேடம் சின்ன ஹெல்ப்... பக்கத்துல ஹோட்டல் எங்க இருக்குங்க?'' என்று கேட்டார்கள்.
அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபடியே , என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்கள் என்னை நம்ப என்னுடைய ஐடி கார்டு, விசிட்டிங் கார்டு என எதுவும் தேவைப்படவில்லை. என்னை முழுமையாய் நம்பி, தங்களின் சான்றிதழ்கள் வைத்திருந்த பையைக் கீழே வைத்தார்கள். ``பையை கையில் பிடிச்சுக்கோங்கண்ணா'' என்றேன். ``பரவாயில்ல, நீங்க என்ன தூக்கிட்டா போகப்போறீங்க?" என்று சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்கள். மனதுக்கு நெருக்கமான உரையாடல் அது.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
``என்னோட பேரு நாகேந்திரன். சொந்த ஊரு புதுக்கோட்டை . இவரு என் நண்பர் மூர்த்தி. அவருக்கு சொந்த ஊரு காரைக்குடி. ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும்போது அறிமுகமாகி, நண்பர்களானோம். எங்க படிப்பு சார்ந்து வெளியூர் போகணும்னா ரெண்டு பேரும் ஒண்ணாதான் போவோம். பிறவியிலேயே எங்க ரெண்டு பேருக்கும் பார்வை கிடையாது. அதுக்காக நாங்களோ, எங்க குடும்பமோ வருத்தப்பட்டு சோர்ந்து உட்கார்ந்திடல.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
சின்ன வயசுல, நம்மால மத்தவங்க மாதிரி இருக்க முடியலையேனு வருத்தம் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து வந்துட்டோம். எங்களைப் பொறுத்தவரை ஜாலிங்கிறது, மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட பேசி சிரிக்கிறதுதான். மனுஷனா பிறந்துட்டோம். சாமி பார்வையை குடுக்கலைனு குறை சொல்லி, முடங்கிக் கிடக்குறதை விட்டுட்டு, கை, கால் நல்லபடியா கொடுத்துருக்காரு, நல்ல குடும்பத்தைக் கொடுத்துருக்காருனு சந்தோஷப்படுறோம். இன்னும் சொல்லணும்னா இந்த உலகம்தான் எங்களுக்கு குறை இருக்குதுனு சொல்லுது. நாங்க அப்படி நினைக்கல. பார்வையில்லைன்னா என்ன... வாழ முடியும்கிற நம்பிக்கை மனசு முழுக்க இருக்கு.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல சேர்ந்தோம். எம்.ஃபில் வரை படிச்சிருக்கோம். பார்வையில்லாததால தனியார் நிறுவனங்கள்ல வேலை கிடைக்காது. அதனால் இப்போ அரசு போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம். ஆடியோ வடிவிலான புத்தகங்களைக் கேட்டு தேர்வுக்குத் தயார் ஆகுறோம். சீக்கிரம் வேலைக்குச் சேர்ந்துருவோம்னு நம்பிக்கை இருக்கு.
இப்போகூட தமிழ்வழி கல்விக்கான சான்றிதழ் வாங்கதான் சென்னை வந்தோம். சென்னை எவ்வளவு பரபரப்பா இருக்குதுனு ஹாரன் சத்தத்தை கேட்கும்போதே உணர முடியுது. ஆனாலும் எங்களோட உலகத்துல எந்தப் பரபரப்பும் இல்லை. நான் புதுக்கோட்டையிலேருந்து வந்தேன், இவரு காரைக்குடியில இருந்து வந்தாரு. காலையில இருந்து சென்னையில பயணிக்கிறோம். எத்தனையோ மனுசங்க எங்களுக்கு உதவி பண்றாங்க.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
Also Read
மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா
`கிராமம் மாதிரி சிட்டி கிடையாது, அசந்தா ஏமாத்திட்டு போயிருவாங்கனு' மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். எங்க வாழ்க்கையில் தடுமாற்றங்கள் இருந்தாலும், பெரிய அளவுல ஏமாற்றங்கள் இருந்தது இல்ல. நாங்க முழுசா மனுஷங்களை நம்புறோம். அப்படியே சில ஏமாற்றங்கள் நிகழ்ந்தாலும், ஏமாத்துனவங்களை நாங்க குறை சொல்ல முடியாது. தப்பு எங்க மேலதான்னு நினைச்சுப்போம். எங்களோட வாழ்க்கையில முகம் தெரியாத, எத்தனையோ நண்பர்கள் அன்றாடம் பயணிக்கிறாங்க. அவங்களை நம்பிதான் எங்களோட பயணம் தொடருது. இல்லைனா இவ்வளவு பெரிய சிட்டியில் தனியா பயணிக்க முடியுமா?
ஒரு இடத்துக்குப் போக நாங்க வழி கேட்கும்போது, அவங்களோட அவசரமான வேலைகளை விட்டுட்டு சிலர் எங்களுக்காக நின்னு வழி சொல்லுவாங்க. சிலர் கையைப் பிடிச்சு நாங்க கேட்ட இடத்துக்கே கூட்டிட்டுப் போவாங்க. வழி சொல்லும் நண்பர்கள் தொடங்கி, எங்களுக்காகத் தேர்வு எழுதும் நண்பர்கள் வரை சக மனுஷங்க இல்லாமல் இந்த வாழ்க்கையை எங்களால் நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்கிறதுதான் உண்மை. உங்களுக்குதான் அது ஒரு நிமிஷ உதவி. எங்களைப் பொறுத்தவரையில் மத்தவங்க எங்களுக்குச் செய்யுறது வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வு. எங்களுக்கு மத்தவங்க செஞ்ச சின்ன சின்ன உதவிகள், பிரகாசமான இடத்துக்கு அழைச்சுட்டுப் போகப்போறதா நம்பி, வாழ்க்கையைத் தொடர்ந்துகிட்டு இருக்கோம். எங்களைப் பொறுத்த வரை உதவி செய்யும் ஒவ்வொருத்தரும் கடவுள்தான்.
இந்த நிமிஷம் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கோம். வேலைக்குப் போணும், குடும்பத்தைக் காப்பாத்தணும்னு எங்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கு. அதுக்காக போராடுறோம்'' நம்பிக்கையோடு விடைபெற்றவர்களை கண்கள் நிலைகுத்தப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கண்களால் பார்ப்பது பார்வை மட்டுமே ...
மனதால் பார்ப்பதே சிந்தனை.!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
inspirational stories
aval vikatan
friends
story
Physically challeged persons
சு.சூர்யா கோமதிFollow
Senior Reporter. Writes Gender, Lifestyle, Fashion and Beauty at Vikatan for 6 years. எளிய மக்களின் வாழ்க்கையை எழுத்துக்களாக மாற்றுவதில் அதிக ஆர்வம் உண்டு.
வி.சதிஷ்குமார்
Photographer 📸 #love fashion photography |Angry Bird🐥 |Learner🃏 |Thalapathy veriyan 💥 |Madurakaaran❤🎈🎈 |
15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் இடைநீக்கம் - CBC Tamil News - Latest Sril Lanka, World, Entertainment and Business News
Home
உள்ளூர்
உலகம்
விளையாட்டு
வணிகம்
சினிமா
Local-News மிஹிந்தலை லலித் எதிரிசிங்க
15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் இடைநீக்கம்
July 03, 2021
Read
மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதி தலைவர் லலித் எதிரிசிங்க, நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
கடுமையான குற்றம் ஒன்றில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து லலித் எதிரிசிங்க, கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகரா கரியவாசம் கடிதம் ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை இணையம் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த வழக்கில் லலித் எதிரிசிங்க உட்பட இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை: மிஹிந்தலை பிரதேச சபையின் பிரதித் தலைவர் இடைநீக்கம் Reviewed by EDITOR on July 03, 2021 Rating: 5 |
திராவிட வாசிப்பு மின்னிதழின் 14 வது இதழ் இது. இம்மாத இதழை அறிவியல் சிறப்பிதழாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த இதழில் அறிவியல் சார்ந்த கட்டுரைகள், சிறுகதைகள்,கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அறிவியல் என்பது மிகப்பரந்த தளம். அதில், சிறுதுளியையே இந்த இதழ் வெளிக்கொணர்ந்து இருக்கிறது. ஆனால், அறிவியலின் தேவையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்தே இருக்கிறோம். இந்த இதழோடு நின்றுவிடாமல், இனி தொடர்ந்து அறிவியல் சார்ந்த விசயங்களை வெளியிட ஆர்வமாக உள்ளோம்.
இந்த இதழில் இன்னும் சில, அரசியல் - சமூகம் சார்ந்த கட்டுரைகளும் இருக்கிறது. அதையும் வாசித்து உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரிவிக்கவும். |
எந்திரன் போன்ற கார்ட்டூன் படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரசினியை, கபாலி என்ற படத்தில் ரஞ்சித் அறிமுகப்படுத்தியபோது, ரஞ்சித்திற்காகவே நான் படம் பார்த்தேன். பொம்மைத்தனமாக கார்ட்டூன் படங்களில் வந்து போய் கொண்டிருந்த ரசினியை, ரஞ்சித் இதில் நடிக்கவைத்துவிட்டார் என்பதற்காக, ரசினி ரசிர்கள், ரஞ்சித்தை திட்டிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது நான், இந்த ரஞ்சித் வெற்றிபெற வேண்டும் என்றே நினத்தேன்.
மனித அவலங்களை குறியீடுகளாக வெகுசன சினிமாவில் கடத்தத்தெரிந்தவன் மிக அவசியம். அதுவும், ரசினி போன்ற பெரிய ஒலிபெருக்கி வாயிலாக சொல்லப்படும் சின்ன செய்திகளும், அதிக மக்களைச் சென்றடையும். ஆம்,சினிமா வலிமையான ஒன்று.
காலா என்ற படம். அதே ரசினையை வைத்து, அதே ரஞ்சித் எடுத்தார். அதையும் ரஞ்சித்திற்காகவே பார்த்தேன். படு குப்பையான ஒன்று. தன் இலக்கை மறந்துவிட்டார் ரஞ்சித் அல்லது புதிய இலக்கை வகுத்துக்கொண்டார் என்றே எனக்குத் தோன்றியது.
"ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்"
"ரசினி இனிமேல் ரஞ்சித் படத்தில் நடிக்கக்கூடாது" என்றெல்லாம் "ரசினி காவடிகள்" கூவ ஆரம்பித்துவிட்டார்கள். இதில் குறிப்பாக அய்யர் & அய்யங்கார் சாதி வெறியர்கள், "ரசினியை ரஞ்சித் ஏமாற்றிவிட்டார்" என்று கொதித்தார்கள். அவர்களின் கவலை, ரசினி தோற்றுவிடுவாரோ என்று அல்ல. அவர்களின் intent ,"இப்படி ரசினி இவருக்கு ஒலிபெருக்கியாய் இருந்தால், எங்கே ரஞ்சித் வென்றுவிடுவாரோ?" என்ற கவலையே.
**
ரசினி காசுக்கு நடிக்கும் ஒரு நடிகர். தனக்கு காசு கொடுத்து, யார் நடிக்கக்கூப்பிட்டாலும் போகும் சந்தையில் இருப்பவர். ஒரு கதையில் நடிக்க சரி என்று ஒப்பந்தம் போட்டபிறகு, இயக்குநர் சொல்வதை நடித்துக் கொடுக்க வேண்டிய தொழிலாளி ஒரு நடிகன். படம் என்றுமே இயக்குநரின் படம்தான். மேலும் காசு கொடுத்து ஏமாற்றிவிட ரசினி ஒன்றும் சிறுபிள்ளை அல்ல. நியாயமாக கொடுக்கவேண்டிய வேண்டிய வாடகைப்பணத்தையே , "கொடுக்க முடியாது" என்று வழக்குப்போட்டு இழுத்தடிக்கும் குடும்ப பாரம்பரியம் கொண்டவர் அவர்.
கலையுலகில் ரஞ்சித்தின் வெற்றி அவசியமான தேவை, என்பது என் நிலைப்பாடாகவே இருந்தது. அதற்கு ஒரு காரணம்,அந்த பணத்தை ரஞ்சித்முதலீடு செய்த Casteless Collective போன்ற முயற்சிகள். ரஞ்சித் ரசினி என்ற பொம்மையை வைத்து சம்பாரிக்கும் பணம், இப்படியான நல்ல முதலீடுகளாக ஆவது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
**
ரஞ்சித்திற்கு திராவிட & பெரியாரிய ஒவ்வாமை உள்ளது என்பதை நான் ஆரம்பத்துலேயே கணித்துவிட்டேன். சீமான் ஒரு மக்கு என்பதை, அவரின் ஆரம்ப காலத்திலேயே கணித்து, சக பதிவர் ஒருவருடன் நீண்ட உரையாடல் நடந்தது.
சீமான் தேறுவாரா? தடம் மாறுவாரா?
http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_21.html
**
ரஞ்சித் பிற்காலத்தில் ஒரு சீமானாக மாறுவார் என்ற பயம் எனக்கு உள்ளூர இருந்தது . ரஞ்சித் மறந்தும் , 2019 பாராளுமன்ற தேர்தலில் திருமாவிற்காக வாக்கு கேட்டு ரோட்டில் இறங்கவே இல்லை. திருமாவின் வெற்றி இழுபறியாக இருந்து, அனைவருமே கவலையில் இருந்தபோது, ரஞ்சித் எதுவும் பேசவில்லை. வெற்றி அடைந்ததும், சாதி அடையாளத்தை தூக்கிக்கொண்டு தெருவிற்கு வந்து வாழ்த்துச் சொன்னார். அதே சமயம், அவர் மறந்தும் ஆ.ராசாவை வாழ்த்தவில்லை. ஏன் என்றால் ரஞ்சித்தின் திமுக திராவிட ஒவ்வாமை.
ரஞ்சித்தின் தற்போதைய பேச்சு ஒன்றைப் பார்க்க நேர்ந்தது. அவர் சீமானையும் தாண்டி, "கிருசுணசாமி 2.0" ஆக மாறிவிடுவாரோ என்ற பயம் இப்போது எனக்கு வந்துள்ளது.
"உன் கடவுளைத் தின்கிறேன்" என்கிறார். மகிழ்ச்சி கொண்டாடப்படும் புனிதத்தை, தன் உணவை வைத்து தன்னை இழிவுபடுத்தும் கூட்டத்திற்கு, "உன் கடவுளையே தின்பவன் நான்" என்கிறார். சரியானதே. ஆனால், இதுதாண்டி இவரின் மற்ற சில பேச்சுகள் இவரை வெளிப்படுத்துகிறது.
"எனக்கு பெரிய பாரம்பரியம் உள்ளது. அடிப்படையில் நான் கலைஞன். பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்." -- ரஞ்சித்
ஒரு சாதியில் ஒரு மதத்தில் ஒரு வர்ணத்தில் பிறந்ததாலேயே ( Just being born into a caste/varnam) எனக்கு சில திறமைகள் வந்தது என்று நம்புவது பார்ப்பனிசம். சனாதன வர்ணம் என்பது, பிறப்பின் அடிப்படையில் சிலவற்றை பிரித்து, தீண்டாமை ( Discrimination) பாவிக்கும் ஒன்று. Fascism,Racism, Nazisim வரிசையில் சனாதன வேத மததின் (aka Hindu) கொடை இந்த Parppanism என்ற பிறப்பின் அடிப்படை தீண்டாமை ( Discrimination)
நான் அய்யராக/அய்யங்காராக பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் சிலைகள் உள்ள கட்டிடத்தில் கருவறை பூசை செய்பவன் நான்.
நான் வன்னியராக, தேவராக (முக்குலத்தோனாக) பிறந்தேன். பிறப்பின் அடிப்படையில் நான் ஆண்ட பரம்பரை"
நான் பறையனாகப் பிறந்தேன், பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்."
இந்த மூன்றிலும் தெரிவது பார்ப்பனிச அறைகூவல்தான்.
ரஞ்சித்திற்கான கேள்வி?
பொதரவண்ணார் (புதிரை வண்ணார்) என்ற ஒரு சாதி உள்ளது. அது பறையர்களுக்கு துணி வெளுக்கும் சாதி. ஆம், அவர்கள் ஆண்ட பரம்பரைக்கோ, அய்யர் பரம்பரைக்கோ துணி வெளுப்பவர்கள் அல்ல. பொதரவண்ணார் சாதி, ஆண்ட பரம்பரை, அய்யர் பரம்பரையின் அழுக்கு பீத்துணிகளைக்கூட வெளுக்க தகுதியற்றவர்கள். ஏன்,கண்களால்கூட பார்க்க முடியாது. அவ்வளவு கீழான நிலையினராம்.
"பிறவி பறைக்கலைஞரான" ரஞ்சித் போன்றோரின் அழுக்குத் துணிகளை, வெளுத்து வெள்ளாவி வைக்கவென்றே பிறந்தவர்கள் பொதரவண்ணார்.
உங்களின் "பிறப்பின் அடிப்படையில் பறை இசைக்கிறவன் நான்" என்ற சனாதன வர்ண தியரிப்படி , பொதரவண்ணார் பிறப்பின் அடிப்படையில், உங்கள் அழுக்குத் துணிகளை வெளுக்கப் பிறந்தவர்களா என்ன?
"பிறப்பால் பறை அடிக்கும் கலைஞன்" என்று பறைய இனத்திற்கு ஆள் சேர்க்கும் ரஞ்சித்திற்கு, அதே பறையர் இனம், சக்கிலியர் இனத்தின் மீதும், பொதரை வண்ணார்களிடமும் காட்டும் தீண்டாமை தெரியுமா?
இவர் பிறப்பால் பறை கலைஞர் என்று ( Just being born into a caste/varnam) இவருக்கு ஒரு தகுதியைக் கொடுக்கிறது என்றால், சக்கிலியருக்கு just being born into a caste/varnam பீயள்ளவும், பொதரை வண்ணாருக்கு just being born into a caste/varnam பீயள்ளிய சக்கிலியருக்கும் , பறை அடிக்கும் பறையருக்கும் துணி துவைக்கும் தகுதியைக் கொடுக்கிறது என்றுதானே சொல்கிறார் இவர்?
அதாவது சனாதன வேத மதம்(aka இந்து) சொல்லும் வர்ணாசிரம தீண்டாமை அடுக்கை ஏற்றுக்கொள்கிறார் என்றுதானே பொருள்?
**
பொதரை வண்ணார்களின் வாழ்க்கையை,அவர்களுக்கு பறையர், சகிலியர் இனம் கொடுக்கும் தீண்டாமையை அருகில் இருந்து பார்த்தவன் நான்.
அய்யர்/அய்யங்கார்களுக்கு கவுண்டர், வன்னியர், பறையர், பள்ளர், பொதரவண்ணார் அனைவருமே சூத்திரர்களே. ஆனால், இவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் , பிறப்பால் நான் "இவன்" என்று கூவும்போது, இவர்களின் உள்ளிருக்கும் பார்ப்பனிசம் வெளிவருகிறது.
அய்யர்/அய்யங்கார்கள் வைசிய,சத்ரிய,சூத்திரர்களிடம் காட்டுவது பார்ப்பனிசம். வைசிய,சத்ரிய,சூத்திரர்கள் அவர்களுக்குள் ஒருவர் பிறப்பால் உயர்ந்தவர், just being born into a caste/varnam எனக்கு ஒரு தகுதியை கொடுக்கிறது என்பதும் பார்ப்பனிசமே.
"கொடிய பார்ப்பனிசம்" எது என்றால் பறையர் & சக்கிலியர்கள் தனக்கும் கீழ் ஒரு அடிமை சாதி உள்ளது என்று கடைசிக் கட்ட பொதரவண்ணார்களை மிதிப்பது.
**
ரஞ்சித் வரலாறு தெரிந்தவர் என்று இவர் என்று நினைத்து இருந்தேன். மக்கு சீமானாகி, இப்போது குப்பை கிருச்ணசாமி 2.0 ஆகிவிட்டார். நலங்கெட புழுதியில் விழுந்து பொஉரளும் வீணையாகவே நினைக்கிறேன் இவரை. வருத்தமாய் உள்ளது.
திராவிடம் = சமூகச் சமநிலை
ஆரியம் = சனாதன வர்ண discrimination.
ரஞ்சித், திராவிடம் & பெரியாரை ஏற்காதவர். அது ஏன் என்பது அவருக்கே வெளிச்சம். அவருக்கு எதிரி ஆரியமா அல்லது திராவிடமா என்று அவர் சொன்னால் நல்லது. சினிமாவில் ரசினி போன்ற மனிதர்களின் வாய்ப்பிற்கான சமரசமாக இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால், பிறப்பின் அடிப்படையில் தனக்கு ஒன்று வந்தது (just being born into a caste/varnam ) என்று சொல்வது அம்பேத்காரின் அரசியல் அல்ல. அம்பேத்கர் நிச்சயம் உங்களை ஏற்கமாட்டார்.
**
"சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்துகிறீர்களே?" என்று சீமான்/கிச்சாத்தனமான கேள்வியை வைக்கிறார் ரஞ்சித்.
ஓட்டரசியல் குறித்து எதுவும் தெரியாத தற்குறியாகவே உள்ளார் இவர். ஓட்டரசியல் கடுமையான சமரசங்களைக் கொண்டது. திராவிடம் இவருக்கு ஏன் பிடிக்கவில்லை என்று தெரியவில்லை. அப்படியான கட்சியில் இருக்கும் தலித் தலைவர்களை நினைத்துப் பார்க்கலாம் இவர். திமுக ஆ.ராசா & திமுக கூட்டணியில் இருக்கும் திருமா. இவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் அல்ல.
அம்பேத்கர் தலித்துகளுக்கு இரட்டை வாக்குரிமை கேட்டவர். அதை எதிர்த்து அழிச்சாட்டிய நாடகம் ஆடியவர் காந்தி. "காந்தி செத்தாலும் பரவாயில்லை, உங்கள் இரட்டை வாக்கு கோரிக்கையில் இருந்து பின் வாங்காதீர்கள்" என்று , அம்பேத்கருக்குச் சொன்னவர் பெரியார்.
இன்று தனித்தொகுதி மட்டுமே உள்ளது. ரஞ்சித்தின் நுனிப்புல் அரசியல், அதற்கும் வேட்டு வைத்துவிடும்போல உள்ளது. அருந்ததியினரை முன்னேறியவர்களாக ஆக்கச் சொல்லி, கிச்சா தூதரகம் முன் போராடிய கூத்தாக உள்ளது இவரின் புரிதல்.
**
சமூகத்தில் சாதி உள்ளது. அம்பேத்கர் சொன்னது போல, வர்ணம்/சாதி என்பது கண்ணுக்குத் தெரியும் சுவரல்ல இடித்து விட்டு வெற்றியைக் கொண்டாட. அது மக்களின் மூளையில் இருக்கும் அழுக்குச் சிந்தனை. அப்படியான சமூகத்தில், சாதி பார்த்துத்தான் வேட்பாளர்களை நிறுத்த வேண்டியுள்ளது.
பெரும்பான்மை அரசியல் ஒரு கொடிய சமரச விளையாட்டு. அதிகாரத்தை பெற சில விளையாட்டுகள் தேவை. Absolute தூய்மைவாதம் தேர்தல் அரசியலில் சாத்தியமில்லை.
ஆனால் யார் பேசுகிறார்கள்? ஏன்? என்ற கேள்விகள் முக்கியம்.
கனிமொழி, முத்துராமலிங்கம் சிலைக்கு மாலைபோடும் intent என்னவாக இருக்கும்?
அப்படியான கட்சியில் கூட்டணியில் இருக்கும் திருமாவின் intent என்ன?
சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்திய கலைஞரின் intent என்ன?
இதுதான் நமது கேள்வியாக இருக்கவேண்டும். சாதி பார்த்து வேட்பாளரை நிறுத்தி, பெற்ற வெற்றி & அதிகாரமே இன்று இவ்வளவு சீர்திருத்தங்களுக்கு காரணமாய் உள்ளது. பெண் சொத்துரிமை முதல், தேவதாசி ஒழிப்பு தொட்டு இன்றைய "அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம" சட்டம் வரை, சாதி பார்த்து திமுக நிறுத்திய அதே அரசியல் வெற்றியின் பயன்களே. வெறுமனே மேம்போக்காக சாதி பார்த்து நிறுத்துகிறீர்களே என்பது 'சீமான்'தனம்.
**
தம்பி ரஞ்சித், திராவிடமோ அல்லது அரசியல் அமைப்பான திமுகவோ வளரவேண்டும் என்ற நோக்கில் விமர்சிக்கவில்லை. ஏதோ ஒரு வன்மத்தில்,அடிமரத்தை வெட்ட பார்க்கிறார் கிளையில் அமர்ந்துகொண்டு. பெரியார், அவரின் தம்பிகள் அதிகாரத்தில் இருப்பதை கொண்டாடியவர். தம்பிகள் வெல்ல வேண்டும் என்று விரும்பியவர். விமர்சனங்கள் இருந்தாலும் அவரின் intent தம்பிகளின் தோல்வி அல்ல. ரஞ்சித் திருமாவிற்கு ஓட்டு கேட்டாரா என்ன? ரஞ்சித் கிருச்ணசாமியாக வளர்கிறார்.
திராவிடத்தின் சமூகச் சமநீதிக்கான பாதை is not a project with an end date. It's a process.அதிகாரம் இல்லாமல் சாத்தியமே இல்லை
தம்பி ரஞ்சித்திற்கு கேட்கும் உரிமை உள்ளது. தடியெடுத்த பாட்டன் பெரியாரும், படித்த பாட்டன் அம்பேத்காரும், அண்ணாவும், கலைஞரும் அந்த உரிமையை அவருக்கு மீட்டுக் கொடுத்துள்ளார்கள். ஆனால், உரிமை மீட்டவனையே விமர்சனம் என்ற பெயரில் அடிப்பது சரியல்ல. சேர்ந்து பயணிப்பது அவசியம். |
ஹங்கர் கேம் திரைப்படங்கள் கடந்த தசாப்தத்தில் மிகச் சிறந்த உரிமையாளர் திரைப்படங்கள் மற்றும் ஜெனிஃபர் லாரன்ஸின் இப்போது பளபளக்கும் வாழ்க்கைக்கு ஊக்கமளித்தன. நெட்ஃபிக்ஸ் இல் பசி விளையாட்டு திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் செய்கிறதா? பதில்...
1
எங்களை பற்றி
இது யதார்த்த நிகழ்ச்சிகளுக்கான சிறந்த இடம், பிரபலங்கள் மற்றும் தொலைக்காட்சி, ஸ்பாய்லர்கள் மற்றும் புதுப்பிப்புகள் பற்றிய செய்தி. |
WWE உள்ளது கூறப்படுகிறது போட்டிகளின் போது அதன் மல்யுத்த வீரர்கள் லெக் ஸ்லாப் செய்ய தடை விதித்தது. இந்த அறிக்கைகள், ஒரு நகர்வை விற்க தங்கள் தொடைகளை அறைந்த சூப்பர்ஸ்டார்களுக்கு நிறுவனம் அபராதம் விதிக்கும் என்று கூறுகிறது. WWE ஹால் ஆஃப் ஃபேமர் ஷான் மைக்கேல்ஸ் சமீபத்தில் இந்த விஷயத்தில் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மல்யுத்த வீரர்கள் பல தசாப்தங்களாக கால்களை அடித்து, நகர்வுகளை அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். ஹார்ட் பிரேக் கிட் இந்த தந்திரோபாயத்தைப் பயன்படுத்தினார், அவர் தனது கையொப்பம் சூப்பர்கிக், ஸ்வீட் சின் மியூசிக் செய்தபோது. ஆனால் இந்த நாட்களில், கால்/தொடை அறைகள் கிட்டத்தட்ட ஒவ்வொரு மல்யுத்த வீரரால் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன, மேலும் WWE தலைவர் வின்ஸ் மெக்மஹோன் கூறப்படுகிறது அது போதுமானதாக இருந்தது.
உடன் ஒரு நேர்காணலில் நியூயார்க் போஸ்ட் , ஷான் மைக்கேல்ஸ் மல்யுத்தத்தில் கால் அறைதல் பயன்படுத்துவதில் தனது நிலைப்பாட்டை வழங்கினார். அவர் முதலில் அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கியபோது கிடைத்த எதிர்வினையைத் திரும்பிப் பார்த்தார், மேலும் இன்றைய சூப்பர் ஸ்டார்களின் பாணியையும் தடகளத்தையும் தாம் பாராட்டியதாகக் கூறினார்.
'தெளிவாக, நான் திரும்பிப் பார்க்கிறேன், நான் போகிறேன்,' சரி நான் செய்தேன். நான் ஒன்றை மட்டும் செய்தேன். ' நான் எப்போதும் துணியில்தான் இருக்கிறேன். நான் எப்பொழுது ஆரம்பித்தேன் என்று எனக்கு நினைவிருக்கிறது, [காலால் அடிப்பது], மக்கள் என்னிடம் சொன்னார்கள், 'மிக வேகமாக, மிக அதிகமாக, இதுவும் கூட,' அங்கே ஒரு சமநிலை இருக்கிறது. அவை சில விஷயங்களில் சரியாக இருந்தன, அதே நேரத்தில், வணிகமும் உருவாகிறது மற்றும் மாறுகிறது. கால்பந்து ஒரே மாதிரியாக விளையாடப்படவில்லை. கூடைப்பந்து விளையாடுவதில்லை, அதனால் எனக்கு தெரியாது. நான் அந்த மாற்றங்களை ஏற்றுக்கொள்கிறேன். நடுவில் எங்கோ இருப்பதைப் போல உணர்கிறேன் மற்றும் சமநிலை மிகவும் முக்கியமானது. இன்றைய பாணியை நான் பாராட்டுகிறேன். இன்றைய கலைஞர்களின் விளையாட்டுத்திறனை நான் பாராட்டுகிறேன். அவர்கள் சரியானவர்களா? இல்லை. ஆனால் நாங்கள் இல்லை. '
நான் புதன்கிழமை காத்திருக்க முடியாது !!! @shirai_io எதிராக #டோனிஸ்டார்ம் @ஃபின் பாலோர் எதிராக @ஆடம் கோல்ப்ரோ
ஒன்று அல்ல இரண்டு அறிவிப்புகள் ?! #WeAreNXT #WWENXT https://t.co/y5CgPResdJ
- ஷான் மைக்கேல்ஸ் (@ShawnMichaels) மார்ச் 9, 2021
லெக் ஸ்லாப்களைத் தடை செய்வதன் மூலம், சில நகர்வுகள் ஒரு முறை போல் பயனுள்ளதாகவோ அல்லது ஒலியாகவோ இருக்காது. ஆனால் புதிய விதியைப் பின்பற்றாத சூப்பர் ஸ்டார்கள் வின்ஸ் மெக்மஹோனிடம் இருந்து ஒரு திட்டுதலைப் பெறுவார்கள்.
ஷான் மைக்கேல்ஸ் WWE NXT இல் தனது ஆஃப்-ஸ்கிரீன் பாத்திரத்தில்
டிஎக்ஸ் கருப்பு மற்றும் தங்க பிராண்டை இயக்குகிறது
ஷான் மைக்கேல்ஸ் ஒவ்வொரு வாரமும் WWE NXT ஐ இயக்கும் திரைக்குப் பின்னால் உள்ள ஒரு பகுதியாகும். அவரது சிறந்த நண்பர் டிரிபிள் எச் உடன், இந்த குழு கருப்பு மற்றும் தங்க பிராண்டை பல ஆண்டுகளாக மல்யுத்த வணிகத்தில் மிகச் சிறந்த நிகழ்ச்சியாக மாற்றியது. WWE NXT இன் ஒரு பகுதியாக இருப்பது அவருக்கு எவ்வளவு அர்த்தம் என்பதை மைக்கேல்ஸ் திறந்தார்.
'இது என் வாழ்க்கையின் மிகப் பெரிய பகுதி. இது எனது நோக்கம் என்று நான் உண்மையாக உணர்கிறேன். எனக்கு ஒரு அருமையான குடும்பம் இருக்கிறது, அதில் என்னை ஆதரிப்பவர் தா. நான் அதை எதற்காகவும் மாற்ற மாட்டேன்.
எப்போது வேண்டுமானாலும். எங்கும். #NXTUK சிறப்பான ஒன்று மற்றும் மோதிரத்திற்கு அதன் சொந்த பாணியையும் அணுகுமுறையையும் தருகிறது. இன்று/இன்றிரவு உங்கள் கண்களைப் பெறுங்கள் !! https://t.co/F9VO7k0Tsb
- ஷான் மைக்கேல்ஸ் (@ShawnMichaels) பிப்ரவரி 18, 2021
தி ஹார்ட் பிரேக் சந்தேகத்திற்கு இடமின்றி WWE NXT இல் அவரது பங்கு பற்றி ஆர்வமாக உள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை இரவுப் போர் என்ன நடந்தாலும், கருப்பு மற்றும் தங்க பிராண்ட் இன்னும் வலுவாக உள்ளது.
வகைகள்
விகிதங்கள்
உறவுகள்
வலைப்பதிவு
மனம்
நாசீசிஸ்டுகள்
ஆவி
உடல்
ஜஸ்ட் ஃபார் ஃபன்
மேற்கோள்கள்
Wwe
மற்ற
பாப்-கலாச்சாரம்
பிரபல பதிவுகள்
நான் ஏன் அழக்கூடாது? வரவிருக்கும் கண்ணீரை எவ்வாறு பெறுவது
வலைப்பதிவு
மேலும் படிக்க
பாடல் மற்றும் வீடியோவுடன் பில் கோல்ட்பர்க் தீம் பாடல்
Wwe
மேலும் படிக்க
WWE 2K17 பட்டியல்: அனைத்து உறுதிப்படுத்தப்பட்ட மல்யுத்த வீரர்கள் மற்றும் கதாபாத்திரங்கள்
Wwe
மேலும் படிக்க
ஸ்கார்லெட் பிசினஸ் யார்? ஏஜிடி நீதிபதிகளைக் கவர்ந்த அற்புதமான நடிப்பு/இழுக்கும் ராணியைப் பற்றிய அனைத்தும்
பாப்-கலாச்சாரம்
மேலும் படிக்க
ரா ஒளிபரப்பிய பிறகு என்ன நடந்தது?
Wwe
மேலும் படிக்க
ஒரு கிளிங்கி காதலி / காதலனின் 9 அறிகுறிகள் (+ அவர்களை எவ்வாறு கையாள்வது)
உறவுகள்
மேலும் படிக்க
'ஓய்வு பெறுவதை நான் கருத்தில் கொள்ளவில்லை'- பெய்டன் ராய்ஸ் மற்றும் பில்லி கே அவர்களின் WWE வெளியேற்றங்களில்
Wwe
மேலும் படிக்க
WWE சூப்பர்ஸ்டார்களின் 11 பயங்கரமான மரணங்கள்
Wwe
மேலும் படிக்க
AEW உடன் கையெழுத்திடுவதற்கு முன்பு WWE இலிருந்து ஸ்டிங் என்ன விரும்பினார் என்ற விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன
Wwe
மேலும் படிக்க
5 முன்னாள் WWE நட்சத்திரங்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றியமைத்தனர்
Wwe
மேலும் படிக்க
BTS இன் 8 வது ஆண்டுவிழா ஃபெஸ்டா காலவரிசை: அது என்ன, எப்படி பார்க்க வேண்டும், மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும்
பாப்-கலாச்சாரம்
மேலும் படிக்க
ஹெல் இன் எ செல் 2018: மேட்ச் ஆர்டரை முன்னறிவித்தல்
Wwe
மேலும் படிக்க
எங்களை பற்றி
கான்சியஸ் ஒருமுகப்படுத்துவதென்பது நீங்கள் வாழ்க்கை, உறவுகள், மனம், உடல் மற்றும் ஆன்மாவின் பற்றி ஆலோசனை கொடுக்கிறது. |
இந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன. |
இந்த வருஷம் 'சிஎஸ்கே' கொடுத்த தரமான 'கம்பேக்'.. "அதுக்கு பின்னாடி இவ்ளோ விஷயம் இருக்கா??.." தோனி பகிர்ந்த 'சுவாரஸ்ய' தகவல்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By Ajith | Apr 29, 2021 09:08 PM
ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்றிருந்த போட்டியில், சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றிருந்தது.
Click Here for All New Titles Releasing Directly on OTT (List Updates Daily)
கடந்த சீசனில் அதிக தடுமாற்றத்துடன் ஆடிய சிஎஸ்கே (CSK), பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல், வெளியேறியதால், அதிக விமர்சனங்களை சந்தித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இந்த சீசனில் இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே, 5 போட்டிகளில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
போன சீசனில் படு சொதப்பலாக ஆடிய சென்னை அணி, இந்த முறை மொத்தமாக உருமாறி, கோப்பையை கைப்பற்றும் நோக்கில் ஆடி வருகிறது. இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான நேற்றைய போட்டிக்குப் பின் பேசிய சென்னை கேப்டன் தோனி (Dhoni), 'எங்களது அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங் மிகவும் அற்புதமாக உள்ளது. டெல்லி பிட்ச், நாங்கள் எதிர்பார்த்ததை விட வித்தியாசமாக இருந்தது.
கடந்த சீசனுக்கும், இந்த சீசனுக்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம் என்னவெனில், கடந்த முறை அணியில் உள்ள தவறுகளைக் கண்டுபிடித்து, சரி செய்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால், இந்த முறை அதனை எளிதில் அறிந்து கொண்டு சரி செய்தோம். அது மட்டுமில்லாமல், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பான 5 - 6 மாதங்களில், யாரும் கிரிக்கெட் ஆடவேயில்லை.
எதற்கும் அனுமதி இல்லாமல், தனிமைப்படுத்தப்பட்டிருந்தோம். இப்படி ஏகப்பட்ட காரணங்கள் கடந்த சீசனில் இருந்தன. இவை தான் எங்களுக்கு சவாலாக அமைந்தது. இந்த வருடம், அணியில் இருக்கும் வீரர்கள், அதிகம் பொறுப்போடு ஆடுகிறார்கள். கடந்த 8 முதல் 10 ஆண்டுகளில், நாங்கள் அணி வீரர்களில் பெரிய மாற்றங்களை செய்வதில்லை. அதே வேளையில், அணியில் வாய்ப்பு கிடைக்காமல், பெஞ்சில் இருக்கும் வீரர்களையும் நாங்கள் பாராட்டுகிறோம்.
அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக்கூறி, நம்பிக்கை வைக்கவும் அறிவுறுத்தியுள்ளோம். அணியில் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள், எப்போதும் அதற்கு தயாராக இருக்க வேண்டும். டிரெஸ்ஸிங் ரூம் சூழ்நிலையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
அது அத்தனை எளிதான காரியம் ஒன்றுமில்லை. விளையாடாத வீரர்களுக்கும் சேர்த்து, எங்களது வெற்றிக்கான பாராட்டுக்களைத் தெரிவிப்போம். இதனால் தான் எங்களது அணி ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு வருகிறது' என தோனி தெரிவித்துள்ளார்.
Tags : #MS DHONI #CSK #IPL 2021
மற்ற செய்திகள்
VIDEO: ‘கேப்டனே இப்படி பண்ணா எப்படிங்க’!.. லட்டு மாதிரி கிடச்ச வாய்ப்பை, இப்படி மிஸ் பண்ணிட்டீங்களே..!
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க போவது யார்...? - தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் கூறுவது என்ன...?
'இதுனால தான் கடவுளை உங்க ரூபத்தில் பாக்குறோம்'... 'அதிகரித்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை'... கொஞ்சம் கூட யோசிக்காமல் அரசு மருத்துவர்கள் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!
'இந்த ஆடைக்குள் இருக்கும் வேதனை'... 'கவச உடையை கழற்றிய பின்னர் மருத்துவரின் தோற்றம்'... 'உடைந்து நொறுங்கி போன நெட்டிசன்கள்'... வைரலாகும் புகைப்படம்!
"அவர கேப்டன்னு சொல்லாதீங்க!... கொஞ்சம் கூட தகுதி இல்ல!".. சீனியர் வீரரை... நாறு நாறாக கிழித்தெறிந்த சேவாக்!.. ப்பா ஏன் இவ்வளவு கோவம்?
எந்த அணியும் செய்யாத ‘மாபெரும்’ செயல்.. திரும்பிப் பார்க்க வைத்த ராஜஸ்தான் ராயல்ஸ்.. குவியும் பாராட்டு..!
மேலும் செய்திகளுக்கு
தொடர்புடைய செய்திகள்
"ஒரு வேளை 'சிஎஸ்கே'வ விட்டு தோனி கெளம்பிட்டாருன்னா, அவங்க உடனடியா பண்ண வேண்டிய 'விஷயம்' இது தான்.." முன்னாள் வீரர் கொடுத்த 'ஐடியா'!!
‘சூப்பர்மேன் ஜட்டு இருக்கும்போது யாருக்குமே அது கிடைக்காது’.. ‘எல்லாத்தையும் அவரே திருடிறாரு’.. ஜடேஜாவை கிண்டலடித்த டூ பிளசி..!
"இப்டி எல்லாம் என்னைக்கி 'தல' பண்ணி இருக்கீங்க??.." 'தோனி' செயலால் விரக்தி அடைந்த 'தீபக் சாஹர்'.. வைரலாகும் 'வீடியோ'!!
'என்ன தகுதி வேணும்?.. எல்லா தகுதியும் அவருக்கு இருக்கு!.. சிஎஸ்கேவின் அடுத்த கேப்டனை அடையாளம் காட்டிய சேவாக்!
‘அப்படி ஆனதுக்கு முழுக்க முழுக்க நான்தான் காரணம்’!.. SRH-ஐ துரத்தும் தோல்வி.. விரக்தியில் வார்னர் சொன்ன பதில்..!
VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரொம்ப Rare தான்’.. நேத்து கொஞ்சம் பதற்றமாக காணப்பட்ட ‘தல’!
'கண்ணா... 2 லட்டு தின்ன ஆசையா'!?.. போட்ட ப்ளானை பக்காவாக முடித்த ருத்துராஜ் - டு ப்ளசிஸ்!.. அசைக்க முடியாத இடத்தில் சிஎஸ்கே!!
"அந்த மனசு தான்யா கடவுள்.." 'சிஎஸ்கே' வெற்றி பெற்றதும்.. மைதானத்தில் 'கேதார் ஜாதவ்' செய்த 'காரியம்'.. 'வைரலாகும்' வீடியோ!!
"ஜஸ்ட் ஒரு ஷாட்.. ஆனா, அந்த ஒரு 'அடி'லயே மரண பயத்த 'காட்டிட்டு போய்ட்டாரு.." 'கேதார் ஜாதவ்' செய்த 'சம்பவம்'.. மெர்சலான 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!"
தளபதி படத்தில வர சூர்யா - தேவாவுக்கு அடுத்து... நட்புக்கு புது வடிவம் கொடுத்தது ரெய்னா - ஜடேஜா தான்!.. கசிந்தது ரகசியம்!.. பிசிசிஐ மனசு மாறுமா?
‘நேத்தே எங்க பாய்ஸ் அதை சொன்னாங்க’!.. டாஸ் போடுறதுக்கு முன்னாடியே மாஸ்டர் ‘ப்ளான்’ போட்ட ‘தல’!
‘அவரை எங்களுக்கே கொடுத்திருங்க’!.. சிஎஸ்கே வீரரை கேட்கும் ராஜஸ்தான்.. மாற வாய்ப்பு இருக்கா..?
அவரு போனா என்ன...! இப்போ நாங்க புது ஆள 'சிஎஸ்கே-ல' இருந்து புடிச்சிட்டோம்...! 'வேற லெவல்' கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்...!
"'கங்குலி', 'தோனி'கிட்ட இருந்த அதே 'பவர்'.. இந்த 'பையன்'கிட்டயும் பாத்தேன்.. சீக்கிரமாவே 'கேப்டன்' ஆயிடுவாரு பாருங்க.." 'இளம்' வீரரை வேற லெவலில் பாராட்டிய 'முன்னாள்' வீரர்!!
'சிஎஸ்கே'வின் இளம் வீரர் போட்ட 'ட்வீட்'.. வரிந்துக் கட்டிக்கொண்டு 'சப்போர்ட்'க்கு வந்த 'ரசிகர்கள்'... "வேற டீம் போயிருந்தா இது எல்லாம் நடந்துருக்காதுல்ல..!"
‘இந்த வருசம் அதை பண்ண வேண்டாம்’!.. ‘இப்போ இருக்குறதே போதும்’.. ஸ்ட்ரிக்டா ‘நோ’ சொன்ன தோனி..!
"இந்த விஷயத்துல 'சிஎஸ்கே' தான்யா 'பெஸ்ட்'.. அவங்கள பாத்தாச்சும் கத்துக்கோங்க.." விளாசித் தள்ளிய 'சேவாக்'!!
"'ஃபேன்ஸ்' கிட்ட சொன்ன மாதிரியே சிறப்பா செஞ்சுட்டாரே.." 'தாஹிர்' செயலால் நெகிழ்ந்து போன 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. மீண்டும் வைரலான 'ட்வீட்'!!
ஆஹா..! 8 வருசத்துக்கு முன்னாடி ஜடேஜாவை பத்தி தோனி போட்ட ஒரு ட்வீட்.. இப்போ ‘செம’ வைரல்..!
‘இந்த நிலைமையில விளையாடுறது சாதாரண விஷயம் இல்ல’!.. இம்ரான் தாஹிர் பற்றி சிஎஸ்கே போட்ட உருக்கமான பதிவு..!
மேலும் செய்திகளுக்கு
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni lists the factors behind the success of csk in ipl 2021 | Sports News. |
'இத' தாண்டி 'கொரோனா' எப்படி வருதுன்னு...' 'ரெண்டுல ஒண்ணு பார்த்திடலாம்...' 'கார்ல இருந்து மீட்டிங் வரைக்கும்...' - அரசு அதிகாரியின் தற்காப்பு ப்ளான்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்
By Issac | Apr 15, 2021 09:28 PM
கொரோனாவின் இரண்டாவது அலை தமிழகத்தில் தலைதூக்க ஆரம்பித்ததில் இருத்ததில் இருந்து எந்தப்பக்கம் பார்த்தாலும் கொரோனாவின் விழிப்புணர்வு பிரசாரமாக இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த 2019ல் கொரோனா வைரஸ் பரவிய போது பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கையும், விழிப்புணர்வுகள் பல நடத்தியும், கொரோனாவின் அச்சம் காரணமாகவும் மக்கள் உஷாராக இருந்தனர்.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் குறித்தான அச்சம் மக்களிடம் குறைந்துள்ளதால் கொரோனா பரவலின் இரண்டாவது அலை வெகு தீவிரமாக பரவி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் உயர் அதிகாரியான தலைமை ஆணையர் ஒருவர் தன்னை கொரோனாவிலிருந்து தற்காத்து கொள்வதற்காக கையில் கொத்தாக வேப்பிலையினை வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியினை மூடியபடி கலந்து கொண்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் அந்த அதிகாரி மாஸ்க் போட்டிருந்தாலும், கூடுதல் பாதுகாப்பிற்காக வேப்பிலை கொத்தை வைத்திருப்பதாகவும், யாராவது அவரிடம் பேசவந்தாலும் சரி, இவர் பேசினாலும் சரி முகத்தில் வேப்பிலையினை வைத்து கொண்டே கேட்டு கொண்டு பேசியதாக கூறுகின்றனர்.
அதுமட்டுமில்லாமல் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில், கூட்ட அரங்கம் என பல இடங்களில் வேப்பிலை தோரணமாக கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது
Click Here for All New Titles Releasing Directly on OTT (List Updates Daily)
Tags : #CORONAVIRUS #MISTLETOE
மற்ற செய்திகள்
VIDEO: எப்பா...! ‘விட்டா பந்துக்கு மேல பறந்துபோய் பிடிப்பாரு போல’.. மிரளவைத்த கேட்ச்..!
ஏன் தோத்தீங்கனு இப்போ புரியுதா?... ஜெயிக்க வேண்டிய மேட்ச்யா!.. சன்ரைசர்ஸ் 'இத' பண்ணலனா ரொம்ப கஷ்டம்!.. உட்ராதீங்க யப்போவ்!!
'அசந்து தூங்கிய கணவன்...' 'மனைவி எடுத்த ஃபோட்டோ...' எல்லாத்துக்கும் தேங்க்ஸ்...' - வைரல் ஃபோட்டோவின் வியக்க வைக்கும் பின்னணி...!
‘சந்தேகமே வேண்டாம்’!.. ‘இனி அவருக்கு ப்ளேயிங் 11-ல இடம் கிடைக்குறது கஷ்டம்தான்’.. இளம்வீரரை கடுமையாக சாடிய முன்னாள் வீரர்கள்..!
யாரோ என் 'முயல' திருடிட்டாங்க...! கண்டுபிடிச்சு தர்றவங்களுக்கு 'வாவ்' பரிசு...! - இது மட்டும் திருடருக்கு தெரிஞ்சுன்னா அவரே திருப்பி கொடுத்திடுவாரு...!
"'திறமை' மட்டும் இருந்தா போதாது... இதையும் மனசுல வெச்சு ஆள எடுங்க.." 'இந்திய' வீரரின் ட்வீட்டால் 'பரபரப்பு'.. "2 'மேட்ச்' முடியுறதுக்குள்ள 'Start' பண்ணிட்டாங்களே!!"
மேலும் செய்திகளுக்கு
தொடர்புடைய செய்திகள்
'கொரோனா கையை மீறி சென்று விட்டது'... 'உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு தகவல்'... அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
‘எந்த அறிகுறியும் இல்லாம கொரோனா பரவிட்டு இருக்கு’!.. ‘அதனால இந்த அறிகுறி எல்லாம் தென்பட்டா உடனே ஹாஸ்பிட்டல் போங்க’.. சென்னை மாநகராட்சி ஆணையர் ‘முக்கிய’ தகவல்..!
ரொம்ப சிம்பிள்...! 'எடுக்க வேண்டியது ஒரே ஒரு போட்டோ...' உங்களுக்கு 'அது' இருக்கா இல்லையான்னு... 'அடுத்த செகண்டே தெரிஞ்சிடும்...' - எப்படிங்க இது சாத்தியம்...?
‘1 மணிநேரத்துக்குள் 45 ஆம்புலன்ஸ்’!.. கொரோனா நோயாளிகளுடன் மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நின்ற வண்டிகள்.. மிரண்டு போன மாநிலம்..!
'Tika Utsav': Vijaya Group of Hospitals conducts vaccination drive at State Bank of India Zonal Office, Chennai!
'மக்களே உஷார்'...'எல்லாம் நம்ம கையில தான் இருக்கு'... 'இல்ல, அந்த கசப்பு மருந்தை கொடுத்துதான் ஆகணும்'... தமிழக அரசு எச்சரிக்கை!
‘ஷூட்டிங் நடத்தலாம், கிரிக்கெட் விளையாடலாம், ஆனா இதை மட்டும் பண்ணக்கூடாதா..?’.. அனில் அம்பானியின் ‘மகன்’ பரபரப்பு கருத்து..!
BREAKING: 'தியேட்டர்களில் 100% இருக்கைகள் அனுமதி இல்லை...' 'இன்னும் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்த தமிழக அரசு...' - முழு விவரங்கள்...!
உலகமே கொரோனாவால் நடுங்கிட்டு இருக்கும்போது திடீரென ‘வட கொரியா’ வெளியிட்ட அறிக்கை.. ஆச்சரியத்தில் உலக நாடுகள்..!
‘அதிகரிக்கும் கொரோனா பரவல் எதிரொலி’!.. ‘இந்தியாவில் இருந்து எங்க நாட்டுக்கு வர அனுமதி இல்லை’.. அதிரடியாக அறிவித்த நாடு..!
RCB பேன்ஸ்-க்கு மேலும் ஒரு 'sad' நியூஸ்...! 'அந்த 2 டீம்-க்கும் பிரச்சனை தான்...' ப்ளான் பண்ண மாதிரி மேட்ச் நடக்குமா...? - கலக்கத்தில் ரசிகர்கள்...!
‘வேகமாக பரவும் கொரோனா 2-வது அலை’!.. ‘அடுத்த 4 வாரம் மிகவும் நெருக்கடியானதாக இருக்கும்’.. மத்திய சுகாதாரத்துறை ‘முக்கிய’ தகவல்..!
'போற போக்க பார்த்தா... வட்டிக்கு வாங்கி தான் ஐபிஎல் நடத்தணும் போலயே'!.. இது சரிபட்டு வராது!.. ஐபிஎல் நல்லா நடக்கணும்னா... மொதல்ல 'இத' பண்ணுங்க!!
என்னது தங்க மூக்குத்தி இலவசமா...! 'ஆமாங்க அது பெண்களுக்கு...' 'ஆண்களுக்கு இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு...' - என்ன மேட்டர் தெரியுமா...?
எலெக்ஷன் முடிஞ்சதுக்கு அப்புறம் தமிழகத்தில் முழு ஊரடங்கா...? - விளக்கம் அளித்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்...!
‘வேற வழியே இல்ல’!.. நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. மகாராஷ்டிரா முதல்வர் ‘அதிரடி’ அறிவிப்பு..!
‘இன்னும் 5 நாள்தான் இருக்கு, அதுக்குள்ள RCB-க்கு வந்த சிக்கல்’!.. தீவிர ஆலோசனையில் கேப்டன் கோலி..!
'யாரு கண்ணு பட்டுச்சோ... சென்னை அணிக்கு அடி மேல அடி விழுது!.. ரசிகர்களை கலக்கமடையச் செய்த சம்பவம்'!.. 'போன வருஷமே நிறைய இழுந்துட்டோம்'!
'நான் உங்கள பயமுறுத்தல'... 'ஊரடங்கு இல்லைன்னுசொல்ல முடியாது, ஆனா'... உத்தவ் தாக்கரே வைத்திருக்கும் ட்விஸ்ட்!
‘கவனமாக இருங்க’!.. ‘நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்’.. சச்சின் டெண்டுல்கர் திடீர் அறிவிப்பு..!
மேலும் செய்திகளுக்கு
ABOUT THIS PAGE
This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Commissioner covers his mouth nose mistletoe protect corona | Tamil Nadu News. |
முதல் திருமுறை / First Thirumurai - திரு அருட்பா, திருவருட்பா , Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை |
சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான ஆர்ப்பாட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள், வட மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பங்கேற்றிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முஸ்லிம்களின் பகுதிகளில் நடத்தப்பட்ட படுகொலைகளை, அழிப்புகளை, பொருளாதாரத் தாக்குதல்களை கண்டிப்பதாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முஸ்லிம்களுடைய பொருளாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக வட மாகாண சபையின் உறுப்பினர் அஸ்மின் அயூப் கூறியுள்ளார்.
பொறுமை என்ற ஆயுதத்துடன், அகிம்சை வழியிலும், அமைதிப் பேரணிகள் மூலமாக பேராட்டத்தை மேற்கொள்வதாக வட மாகாண சபையின் உறுப்பினர் மொஹமட் நிபாஹீர் கூறினார்.
தமக்கு நடந்த அநியாயங்களை சர்வதேசத்திடம் சொல்வதற்கு, முஸ்லிம் சகோதரர்களும் முன்வர வேண்டுமென வட மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிங்கம் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு தீர்வையும், தமிழ் – முஸ்லிம்கள் இணைந்த ஒரு சுயாட்சியைப் பெற்றுக் கொள்ள முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணையும் பட்சத்தில் தமது பிரச்சினைகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்ல முடியும் என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.
முஸ்லிம் அரசியல் தலமைத்துவம், அதன் சந்தர்ப்பவாத செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், அப்பாவி முஸ்லிம் சகோதரர்கள் பாதிக்கப்படுகின்றமையை வன்மையாகக் கண்டிப்பதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முஸ்லிம் மக்களுக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கு முஸ்லிம் தலைவர்கள் செயற்படுவார்களா? என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிக்கின்றது.
இதேவேளை, வவுனியாவில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றுக்கு பொலிஸாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டது.
சிறுபான்மை மக்களுக்கு எதிராக செயற்பாடுகளுக்கு எதிராக, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
குறித்த இடத்திற்கு வருகைத் தந்த பொலிஸார், ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிக்கை விடுத்த போதிலும், பொலிஸாரின் கோரிக்கைக்கு இடமளிக்காது ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதையடுத்து, பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் வாய்த்தரக்கம் ஏற்பட்ட நிலையில், அங்கு அமைதியின்மை நிலவியுள்ளது.
இதனையடுத்து, வவுனியா நகரில் அதிகளவிலான பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுப்படுத்தப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்பு பிரிவினரும் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். |
இது கணிணி யுகம். அச்சு யுகத்தில் எல்லா இதழ்களிலும் எழுதிப் புகழ் பெற்றவர்களாக இருந்தவர்கள் கூட , கணிணி யுகத்தில் காணாமல் போய்விடுகிறார்கள். ஏனெனில் 'தொழில்நுட்ப மாற்றத்தால்' கணிணியிலும் கையிலுள்ள செல்பேசியிலும் 'மட்டும்தான்' - 'படிப்பது' என்ற மனநிலைக்கு இன்றைய இளைஞர்கள் வந்துவிட்டதே காரணம்.
கணிணியிலோ செல்போனிலோ படிக்கக் கிடைக்கவில்லையானால் அந்த எழுத்துக்களை அவர்கள் புறக்கணித்துவிடுகிறார்களே தவிர, புத்தகங்களைத் தேடிப்போய் படிக்கின்ற அனாவசிய வேலைகளையெல்லாம் வைத்துக் கொள்வதில்லை.
இது ஒரு பக்கம்.
அடுத்து இதழ்கள், புத்தகங்கள் என்றே தம் வாழ்நாளைக் கழித்து ஓய்வு பெற்றவர்கள்கூட தங்கள் பிள்ளைகள் இருக்கும் வெளிநாடுகளில் உட்கார்ந்துகொண்டு 'தமிழ் இதழ்களும், தமிழ் புத்தகங்களும் இந்த நாடுகளில் கிடைப்பதில்லையே என்ன செய்யலாம்?' என்று கைகளைப் பிசைந்துகொண்டு வெறுமனே உட்கார்ந்து விடுகிறார்கள்.
இவர்களின் கேள்வி என்னை நோக்கிப் பல இடங்களில் வீசப்பட்டிருக்கிறது.
"நீங்கள் இப்போதெல்லாம் எழுதுவதில்லையா?"
என்னதான் நான் கணிணியில், வலைப்பூவில்,
டுவிட்டரில் எழுதினாலும் அவை குறிப்பிட்டவர்களுக்குதான் சென்று சேருகின்றன.
இதனால் நாம் எழுதுவதையெல்லாம் நூலாகக் கொண்டு வந்துவிடலாமே என்ற எண்ணத்தில்தான் அமேசானிலிருக்கும் கிண்டிலில் எழுத ஆரம்பித்தேன்.
கேள்வி கேட்டவர்கள் உட்பட எல்லாரும் அங்கே சென்று படித்துக் கொள்ளலாம்.
அமேசான் கிண்டிலில் சமீபத்தில் நான் மூன்று நூல்களைப் பதிவேற்றியிருக்கிறேன்.
1) 'கங்கையெல்லாம் கோலமிட்டு...........................' இந்தியாவில் பெண்கள் பரவலாக வேலைக்குப் போக ஆரம்பித்த காலகட்டத்தில் எழுதப் பட்ட நாவல் இது. யதார்த்த குடும்பங்களின் வாழ்நிலையை, வேலைக்குப் போகிற பெண்களின் நிலைமையையும் பேசுகின்ற நாவல். எழுத்தாளர் சுஜாதா முன்னுரை எழுதியிருக்கிறார்.
2) 'லிலிபுட் மனிதர்கள்' ................................................நீங்கள் அதிகம் சந்தித்திருக்காத களங்கள். பிறவியிலேயே சித்திரக்குள்ளர்காகப் பிறந்துவிட்டவர்களைப் பற்றிய நாவல். சர்க்கஸ் வாழ்க்கையும் இந்த நாவலில் விவரிக்கப்படுகிறது. ஒருமுறை படித்துவிட்டால் இந்த நாவலில் வரும் பாருக்குட்டியை ஆயுசுக்கும் மறக்க முடியாது.
3) 'திரை இசையும் சில பிரபலங்களும் ......................' விஸ்வநாதன், ராமமூர்த்தி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று சகலரையும் பேசும் கட்டுரைகள் அடங்கிய நூல் இது. இதன் சில பாகங்களை வலைப்பூவில் எழுதியபோதே அவை மிகுந்த பேசுபொருளாகியிருக்கின்றன. சிலரைப் பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே பேச மறுக்கும் பல விஷயங்களையும் நான் இதில் பேசியிருக்கிறேன். பல சாதனைகள் செய்து விட்டுப் போயிருக்கும் நம் முன்னோர்களை நாம் அவமானப் படுத்தலாமா என்பதுதான் இந்த நூலில் நான் அடிநாதமாக எழுப்பியிருக்கும் கேள்வி.
கணிணியில் எழுதத் துவங்கிவிட்டேன். நான் ஏற்கெனவே பிரபல பத்திரிகைகளில் எழுதிய புகழ் பெற்ற நாவல்கள், சிறுகதைகள் மட்டுமின்றி இப்போது முழு மூச்சாக ஈடுபட்டிருக்கும் 'ஆரோக்கிய வாழ்வு' பற்றிய நூல்களையும் இந்தப் பட்டியலில் கொண்டுவர விருப்பம்.
Posted by Amudhavan at 10:47 PM 5 comments
Labels: அமேசான் , கணிணி யுகம் , புத்தகங்கள்
Sunday, May 12, 2019
போய் வாருங்கள் தோப்பில் சார்………………………………………!
‘தோப்பில் முகமது மீரான் மரணம்’- என்ற செய்தியைப் பார்த்ததும் முதலில் நண்பர் பிரபாகருக்குத்தான் தொலைபேசி செய்தேன். ஏனெனில் பெங்களூர் ராமமூர்த்தி நகரில் அவர் வசித்து வருகிறார். அவருடைய மனைவியின் சகோதரியார் வீட்டில் சாஃப்ட் வேரில் பணிபுரியும் நண்பர் மிர்ஸாத் என்பவர் வாடகைக்கு வந்திருக்கிறார் என்று சொன்னார்.
அது நண்பர் பிரபாகரின் வீட்டிற்குப் பக்கத்து வீடு. மிர்ஸாத் வந்திருக்கிறார் என்பதில் விசேஷமாக எந்தச் செய்தியும் இல்லைதான். ஆனால் அவர் அடுத்துச் சொன்ன செய்தியில் விசேஷம் இருந்தது. “உங்களுக்கு எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் தெரியுமா? அவருடைய மகனாம் இவர். அவரை நீங்கள் படித்திருக்கிறீர்களா?” என்றார்.
தோப்பில் முகமது மீரானை நான் நிறையப் படித்திருக்கிறேன். குறிப்பாக முகமதியர்களின் தமிழக கடலோர வாழ்க்கையின் ஆழத்தினை மிக அருமையாகச் சொல்லியிருப்பவர் தோப்பில். அவருடைய மலையாளம் கலந்து மணக்கும் தமிழ் எழுத்துக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னமும் சொல்ல வேண்டுமெனில் முகமதியர்களின் வாழ்க்கையை நிறையப்பேர் படம் பிடித்திருக்கிறார்கள். ஆனால் தோப்பிலின் எழுத்துக்களில் இருந்த ஆழம் மற்ற எழுத்துக்களில் இல்லை. அதனால்தான் தோப்பிலுக்கு சாகித்ய அகாதமியிலிருந்து அத்தனை விருதுகளும் கிடைத்திருக்கின்றன. தமிழக அரசு விருது, தமிழ்நாடு முற்போக்கு சங்க எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, லில்லி தெய்வ சிகாமணி விருது, அமுதன் அடிகள் இலக்கிய விருது என்று எண்ணற்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
அவர் கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டினம் என்னும் கடலோர கிராமத்தில் பிறந்தவராதலால் கடலோர கிராமங்களை மிக யதார்த்தமாய் அவரது கதைகளில் வார்த்திருக்கிறார்.. ஆகவே அத்தனைப் பெரிய எழுத்தாளரைச் சென்று சந்திக்கும் பேற்றினைப் பெற்றிருக்கிறோம் என்ற எண்ணத்தில் “அவரும் வந்திருக்கிறாரா?” என்று கேட்டதற்கு “இல்லை. அவர் வரவில்லை. ஆனால் வருவாராம். தற்சமயம் மிர்ஸாதும் அவரது குடும்பமும் மட்டும்தான் வந்திருக்கிறார்கள்” என்றார்.
“சரி, அவருடைய அப்பா வந்தால் சொல்லுங்கள். நான் வந்து பார்க்கிறேன்” என்று சொல்லியிருந்தேன்.
சில மாதங்கள் சென்றன. திடீரென்று ஒரு நாள் “தோப்பில் வந்திருக்கிறார். அப்பா வந்திருப்பதாக மிர்ஸாத் உங்களிடம் சொல்லச் சொன்னார்” என்றார். சென்று பார்ப்பதற்காக இரண்டொரு நாட்கள் குறித்தேன். ஏனோ அவை அத்தனையும் சரியாக அமையவில்லை.
திடீரென்று ஒருநாள் மிர்ஸாத் போன் பண்ணினார். “அப்பாவும் நானும் உங்கள் வீட்டிற்கு வருகிறோம். இன்றைக்கு சாயந்திரம் வரட்டுமா?” என்று கேட்டார்.
வரச்சொன்னேன்.
சரியாக ஏழு மணி அளவில் மிர்ஸாதுடன் டூ வீலரில் வந்து இறங்கினார் தோப்பில்.
பளீரென்ற முகம். செக்கச் சிவந்த நிறம். ஆனால் சராசரியை விடவும் சற்றே குள்ளம்………………….
வந்து உட்கார்ந்தவர் ஏதோ பல காலம் நட்பிலிருந்தவர்போல பேச ஆரம்பித்துவிட்டார். இத்தனைப் புகழ் பெற்ற பெரிய மனிதரிடம் கொஞ்சம் கூட அலட்டல் இல்லை. அத்தனை எழுதியிருக்கிறோமே, சாகித்ய அகாதமியெல்லாம் வாங்கியிருக்கிறோமே என்ற கர்வமெல்லாம் இல்லை. சர்வ சாதாரண மனிதரைப் போல களங்கமில்லாமல் பழகினார் தோப்பில்.
அவரது எழுத்துக்கள், அவர் எழுதிய சூழ்நிலைகள், அவர் பெற்ற விருதுகள் பற்றியெல்லாம் பேச ஆரம்பித்தபோது அவர் என்னைப் பற்றியும், என்னுடைய குடும்பம் பற்றியும், நான் எழுத ஆரம்பித்த காலம் பற்றியும், எழுத்தாளர் சாவி பற்றியும் தெரிந்து கொள்வதில்தான் மிகவும் ஆர்வம் காட்டினார்.
நான் எழுத்தாளர் அகிலன் அவர்களுடன் நெருங்கிப் பழகியவன். அகிலனுடைய சித்தரப்பாவை நாவலுக்காக ஞானபீடம் பெற்றபோது அவருடைய மகன் கண்ணனுடன் நானும் டெல்லி சென்றிருந்தேன். அந்த விஷயங்களையெல்லாம் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டவரிடம் நான் ஒரு விஷயம் சொன்னேன். “முகம் மட்டும்தான் வேறு. மற்றபடி உங்களுடைய தோற்றம், நடவடிக்கை, பேசுகின்ற பாணி எல்லாமே அகிலன்தான். நீங்கள் அகிலனை மிக அதிகமாக நினைவு படுத்துகிறீர்கள்” என்றேன்.
“நானும் அகிலன் ஐயாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால் நீங்கள் சொன்ன கோணத்தில் பார்த்ததில்லை” என்று சிரித்தார்.
சிப்ஸையும் மிக்சரையும் தவிர்த்துவிட்டு காப்பி மட்டுமே பருகினார். “நான் நாளைக்கு ஊருக்குக் கிளம்புகிறேன். என்னைப் பார்க்க நீங்கள் வருகிறேன் என்று சொன்னீர்களாம். அதில் ஒரு தடவை என்னால்தான் முடியாமல் போய்விட்டது. நாளை மறுநாள் நான் ஊருக்குக் கிளம்புகிறேன். அதனால்தான் நானே உங்களை வந்து பார்த்துவிடலாம் என்பதற்காக வந்தேன்” என்றார். அவரது பண்பு என்னை வியக்க வைத்தது.
ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, துறைமுகம், அஞ்சுவண்ணம், அனந்த சயனம் காலனி ஆகிய நூல்கள் நேரடியாக இவரது பேனாவிலிருந்து வந்தவை. மலையாளத்திலிருந்து நிறைய படைப்புக்களை மொழி பெயர்த்திருக்கிறார். பல பல்கலைக் கழகங்களிலும், கல்லூரிகளிலும் பாட நூல்களாக வைத்திருக்கிறார்கள். அத்தனைச் சிறப்புகளைக் கொண்டவர் இத்தனை எளிமையாக நடந்துகொண்டது வியப்பாக இருந்தது.
அதன்பிறகு ஒருமுறை கன்னியாகுமரி செல்ல நேர்ந்தது. அப்போது பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த திரு கோ. தாமோதரனும் நானும் கன்னியாகுமரி சென்றிருந்தோம். அங்கிருந்த காப்பிக்காடு என்ற இடத்தில் தொல்காப்பியம் தந்த தொல்காப்பியருக்கு சிலை எடுக்கவும் மணிமண்டபம் கட்டவும் சில தமிழறிஞர்கள் சேர்ந்து ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். (உண்மையில் இந்தக் காரியத்தைத் தமிழ்நாடு அரசுதான் செய்திருக்க வேண்டும்.) அந்த நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தபோது அப்படியே தோப்பில் முகமது மீரானைச் சென்று சந்தித்துவிட்டு வரலாமா என்று யோசித்தேன். ஏனெனில் காப்பிக்காட்டைத் தொடர்ந்துதான் தேங்காய்ப் பட்டினம் இருந்தது. அங்கிருந்த ஒரு தமிழறிஞரிடம் விசாரித்ததற்கு “உண்மைதான். ஆனால் தோப்பில் இப்போது அங்கே இல்லை. அவர் நாகர் கோவிலிலோ திருநெல்வேலியிலோ மகன் வீட்டிலோ மகள் வீட்டிலோ தங்கியிருப்பதாக அறிகிறேன்” என்றார்.
அதன்பிறகு மிர்ஸாதிடமும் சரியான தொடர்பு இல்லாமல் போய்விட்டது. மிர்ஸாதும் அரபு நாடுகளில் வேலை பார்த்துக்கொண்டு பெங்களூரைக் காலி பண்ணிக்கொண்டு சென்றுவிட்டார். அவரைப் போலவே பண்புள்ளம் கொண்ட மிர்ஸாதின் நண்பர் சித்தார்த்துடனும் எப்போதாவதுதான் தொடர்பு கொள்ள முடிந்தது.
இப்போது தோப்பிலின் மறைவை ஒட்டித்தான் மிர்ஸாதைத் தொடர்பு கொண்டேன். தமது அப்பாவின் பண்பு நலன்களில் கொஞ்சமும் குறைந்தவர் இல்லை மிர்ஸாத். மிக மிக அருமையான மனிதர்.
தற்சமயம் அவரது மூத்த மகன் வீட்டில் நெல்லையில் உள்ள வீரபாகு நகரில் வசித்துவந்தார் தோப்பில் என்ற செய்தியை அறிய முடிகிறது. அவர் இறந்த செய்தி கேட்டவுடன் வைகோ உடனடியாக வீட்டிற்கு வந்தார் என்ற தகவலையும் வைகோவும் தோப்பிலும் முப்பது நாற்பது வருட நண்பர்கள் என்றும் சொன்னார் மிர்ஸாத். ஸ்டாலின் கனிமொழி தொடங்கி அத்தனைப் பெரிய தலைவர்களும் தோப்பில் மீரான் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்கள். எல்லாப் பத்திரிகைகளும் மிக விரிவான செய்தி வெளியிட்டிருந்தார்கள். ‘தமிழ் இந்து’ ஞாயிறன்று ஒரு முழுப்பக்கத்தையே தோப்பிலுக்கு ஒதுக்கியிருந்தது.
எத்தனைப் பெரிய அஞ்சலிகளுக்கும் உரியவர்தான் தோப்பில் முகமது மீரான்.
Posted by Amudhavan at 10:01 PM 2 comments
Labels: தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து , முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி.
Wednesday, March 21, 2018
போய்வாருங்கள் நடராஜன்சார்............!
ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்குமத்தின் ஆசிரியர் ‘பராசக்தி’ என்று வரும். பராசக்தி என்பது முரசொலி மாறனின் புனைப்பெயர். முரசொலி மாறன் முரசொலி ஆசிரியராக இருந்தபடியே எம்பியாகவும், கலைஞருக்கு மனசாட்சியாகவும் இருந்தபடியால் துணை ஆசிரியராக இருந்த பாவைசந்திரன்தான் குங்குமம் பத்திரிகைப் பூராவையும் கவனித்துவந்தார்.
இந்த நிலையில் ஏதோ ஒரு பிரச்சினை காரணமாக பாவைசந்திரன் குங்குமத்தைவிட்டு வெளியேறும் நிலைமை வந்தது. அது பாவைசந்திரனுக்கு ஒரு சோதனையான காலம். அப்போதுதான் இளம் மனைவியை வேறு பறிகொடுத்திருந்தார். அந்த சமயம்பார்த்து வேலையும் பறிபோய்விட்டதால் கையறுநிலை. என்ன செய்வாரோ என்றிருந்த நிலைமையில் ம.நடராஜன் கைகொடுக்கிறார் என்ற தகவல் வந்தது.
அதாவது ‘புதிய பார்வை’ என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து அதற்குத் துணை ஆசிரியராக பாவையை நியமிக்கிறார் என்பது செய்தி.
அந்தச் செய்தி உறுதியானதும் பாவை செய்த முதல்வேலை பெங்களூர் வந்து சுஜாதாவைச் சந்தித்து புதிய பார்வையில் ஒரு தொடர்கதை எழுதுவதற்கான உத்திரவாதத்தைப் பெற்றுப்போனது. ‘சின்னக்குயிலி’ என்ற தொடர்கதையை புதிய பார்வையில் எழுதினார் சுஜாதா. அப்போது சுஜாதா சொல்லியது ஞாபகம் இருக்கிறது. “பாவை கொஞ்சம் வித்தியாசம் பண்ணுவோம். வழக்கமாக ஜெயராஜைப் படம் போடச் சொல்வீர்கள். இந்தக் கதைக்கு ஷ்யாமைப் படம் போடச் சொல்லுங்கள். ஷ்யாம் படத்துடன் கதை வருவது வித்தியாசமாக இருக்கும்”
ஷ்யாம் படத்துடன் வந்த முதல் தொடர்கதை இதுதான் எனலாம்.
இது நடைபெற்று சில காலம் சென்றபின்னர் பாவைசந்திரன் மறுபடியும் பெங்களூர் வந்தார்.
இந்தச் சமயம் புதிய பார்வையின் ஒரு இதழை ‘பெங்களூர் மலர்’ என்று கொண்டுவரப்போவதாகவும் அதற்காக தகவல்கள் திரட்டிப்போக வந்திருப்பதாகவும் சொன்னார்.
பாவைசந்திரன், அ.குமார், நான் மூவருமாக ஒரு மூன்றுநான்கு நாட்கள் பெங்களூரின் பல பகுதிகளுக்கும் சென்று நிறைய தகவல்கள், பேட்டிகள் எனச் செய்தோம். குழந்தை இயேசு ஆலயம், வாணிகணபதி பேட்டி, அப்போது விளையாட்டுச் சாம்பியனாக இருந்த அஸ்வினி பேட்டி என்று நிறைய செய்தோம்.
பாவை இன்னொரு அஸ்திரத்தையும் வைத்திருந்தார்.
அது கர்நாடகத்தின் அப்போதைய முதல்வராக இருந்த வீரப்ப மொய்லியின் பேட்டி.
அதாவது கர்நாடக முதல்வரை சுஜாதா பேட்டி காண்பது என்பது திட்டம். ‘எனக்கு அரசியல் கேள்விகள் எல்லாம் வராதுய்யா’ என்று சுஜாதா சற்றே பின்வாங்க, கடைசியில் நானும் சுஜாதாவும் பேட்டி காண்பது என்பதாக முடிவாகி அந்தப் பேட்டி வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
பெங்களூர் வேலைகள் அனைத்தும் நினைத்தபடி முடிந்துவிட, உடனிருந்து உதவி செய்த எனக்கும் அ.குமாருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று பாவை நினைத்திருக்கக்கூடும். பாவைசந்திரன் வழக்கமாக பெங்களூருக்கு வந்தால் ஒரு நண்பரின் வீட்டில் தங்குவார். அவர் புகைப்படக் கலைஞர் யோகாவின் உறவினர். அவருக்கு பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் ஒரு பெரிய நகைக்கடை இருந்தது. மாலை எல்லா வேலைகளும் முடிந்தபின்னர் காரை அந்த நகைக்கடைக்கு விடச்சொன்னார் பாவைசந்திரன்.
அங்கே போனதும் கேட்லாக்கை எடுத்து என்னிடம் நீட்டி “இதில் எந்த டிசைன் என்பதை செலக்ட் செய்யுங்க” என்றார். இதே போன்று அ.குமாரிடமும் நடந்தது. நாங்கள் செலக்ட் செய்து கொடுப்பதற்கு இடையில் சென்னைக்கு போன்போட்டு திரு நடராஜனிடம் அனுமதி வாங்கிக்கொண்டார். பாவையின் இந்தச் செய்கை எனக்குப் புதுமையாக இருந்தது. பத்திரிகை ஒன்றிற்காக பணியாற்றினால் தங்கநகை வாங்கித் தருவார்களா?
நான் தயங்கியபோது பாவைசந்திரன் சொன்னார். “நடராஜன்சார் அனுமதியுடன்தான் தர்றேன் வாங்கிக்கங்க”
அதன்பிறகு சென்னைக்குப் போனதும் ‘பெங்களூரில் செய்த உதவிகளுக்காக நன்றி தெரிவித்து’ நடராஜனின் கையெழுத்திட்டு ஒரு நன்றிக் கடிதம் வந்தது. பச்சை மசியில் கையெழுத்திட்டிருந்தார் நடராஜன். குறிப்பிட்ட அந்த இதழ் வெளிவந்த பின்னர் நல்ல தொகைக்கான செக் ஒன்றும் அனுப்பிவைத்திருந்தார்கள்.
இது ஒரு புறமிருக்க ஜெயலலிதாவுக்கும் அவருக்குமான துவந்த யுத்தம் பற்றிய செய்திகள் புலனாய்வுப் பத்திரிகைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருந்தன.
ஒரு நாள் நடராஜன் திடீரென்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்தி பத்திரிகையில் வந்திருந்தது. என்ன செய்வது என்ற குழப்பம் ஒருபுறமிருக்க வருத்தம் தெரிவித்து அவருக்கு ஒரு கடிதம் எழுதி வைப்போம் என்று தோன்ற ஒரு கடிதத்தை எழுதி அனுப்பினேன்.
ஒரு பதினைந்து நாட்கள் சென்றிருக்கும். சிறையின் ஏகப்பட்ட முத்திரைகள் குத்தப்பட்டு ஒரு பதில் கடிதம் வந்திருந்தது. ‘தங்களின் கடிதம் பார்த்தேன். உங்களைப் போன்ற நண்பர்களின் அன்பும் ஆதரவும் இருப்பதனால் சிறையின் தொல்லைகள் எதுவும் தெரியாமல் நாட்களைக் கழிக்கமுடிகிறது. நிறையப் படிக்கிறேன். விரைவில் சந்திப்போம்’ என்பது போன்ற வரிகளில் எழுதியிருந்தார்.
அதைவிட ஆச்சரியம், கடிதம் பளபளவென்று அச்சிடப்பட்ட ஆர்ட் தாளில் முகப்பில் ஏதோ ஒரு இயற்கைப் படம்போட்ட வெளிநாட்டுக் கார்டாக அமைந்திருந்ததுதான்.
இதற்கிடையில் குமுதம் பால்யூ ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தார்.
நடராஜன் சசிகலா பற்றிய பேச்சு வந்தபோது நடராஜனைப் பற்றி மிகப்பெருமையாகப் பேசினார் பால்யூ. ‘அந்தப் பெண்ணும் சாதாரணமில்லை. ரொம்பவும் நல்ல குணம். வீட்டிற்குப் போனால் காப்பியும் சிற்றுண்டியும் கொடுத்துவிட்டு கர்ட்டனில் தன்னைப் பாதி மறைத்துக்கொண்டுதான் நின்று பேசும். அப்படிப்பட்ட பெண் இன்றைக்கு கமிஷனர், டிஜிபி இவங்களையெல்லாம் வீட்டிற்கே அழைத்து உத்தரவு போடுவதாக எல்லாம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக இருக்கிறது’ என்று சசிகலாவைப் பற்றிய தமது ஆச்சரியங்களைப் பகிர்ந்து கொண்டார்.
புதிய பார்வை பற்றிய பேச்சு வந்தது. அப்போதுதான் அந்த விஷயத்தைச் சொன்னார் பால்யூ. ‘புதிய பார்வை ஆரம்பித்து பாவையை நியமித்தது பெரிய விஷயமில்லை. கூடவே ‘தமிழரசி’ என்றொரு பத்திரிகை ஆரம்பித்து அதில் விக்கிரமனை ஆசிரியராகப் போட்டிருக்கிறார் பாருங்கள் அதுதான் பெரிய விஷயம். இதற்குப் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கிறது. நடராஜனுக்கும் சசிகலாவுக்கும் திருமணம் முடிந்து அவர்கள் திடீரென்று சென்னை வந்தபோது உடனடியாக அவர்களுக்கு வீடு கிடைக்கவில்லை. சில நாட்கள் தங்கியிருக்க தம்முடைய அமுதசுரபி அலுவலகத்திலேயே இடம் கொடுத்துத் தங்க வைத்தார் விக்கிரமன். புதிய பார்வை ஆரம்பிக்கும்போதே கூடவே தமிழரசி என்றொரு பத்திரிகையையும் ஆரம்பிக்கிறார். நேரே விக்கிரமனிடம்போய் தமிழரசியின் ஆசிரியராக வருமாறு கேட்கிறார் நடராஜன்.
மறுக்கிறார் விக்கிரமன். “நான் பல வருடங்களாக அமுதசுரபி ஆசிரியராக இருந்துவருகிறேன். உலகிலேயே இத்தனை வருடங்களுக்கு யாரும் ஒரே பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்ததில்லை. அதனால் இதனை விட்டுவிட்டு நான் வரமாட்டேன்” என்கிறார்.
“உங்களை யார் அமுதசுரபியை விட்டுவிட்டு வரச்சொன்னது?” என்கிறார் நடராஜன். “நீங்கள் பாட்டுக்கு அமுதசுரபியில் ஆசிரியராகத் தொடருங்கள். கூடவே தமிழரசியிலும் ஆசிரியராக இருங்கள். அமுதசுரபி மாதப் பத்திரிகைதானே? தமிழரசி வேலையை முடித்துவிட்டு ஒரு பத்து நாட்களுக்கு அமுதசுரபிக்கு வேலைப் பார்த்தால் ஆயிற்று. உங்களின் ஒரே பிரச்சினை அமுதசுரபி நிர்வாகத்தார் என்ன சொல்லுவார்கள் என்பதுதானே? விடுங்கள்.... நான் அவர்களிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ளச் சொல்லுகிறேன்.”
அன்றைய நிலையில் நடராஜன் கூப்பிட்டுப் பேசினால் யார் மாட்டேன் என்று சொல்லப்போகிறார்கள்?
அமுதசுரபி நிர்வாகமும் ஒப்புக்கொள்கிறது. விக்கிரமனும் ஒப்புக்கொள்கிறார். புதியபார்வை, தமிழரசி இரு பத்திரிகைகள் என்று முடிவாகிறது.
டிடிகே சாலையில் பூஜை போடப்பட்டு இரு பத்திரிகைகளும் ஆரம்பிக்கப்படுகின்றன.
இப்போதுதான் அந்த டுவிஸ்ட்.
பூஜை போட்டு முடிந்தவுடன் புத்தம்புதிய காரின் சாவி ஒன்றை விக்கிரமனுக்குப் பரிசளிக்கிறார் நடராஜன்.
இன்றைக்குக் கார் என்பது சகஜமாகிவிட்ட ஒன்று. மாதத்தவணை முறையில் நல்ல கம்பெனியில் வேலைப் பார்க்கும் யார் வேண்டுமானாலும் கார் வாங்கிவிடலாம். இன்றைய முக்கால்வாசிக் கார்கள் மாதத் தவணைக் கார்கள்தாம்.
அன்றைய நிலைமை அது இல்லை.
கார் என்பதே அதிசயம் என்றிருந்த காலகட்டத்தில் ஆரம்பத்தில் தமக்குச் செய்த உதவியை மறவாமல் மனதில் வைத்துக்கொண்டிருந்து தமக்கு ஒரு பெரிய வாழ்வு வந்தவுடன் நன்றிக்கடனை திருப்பிச் செலுத்திய மனித நேயப் பண்பு அது.
என்னுடைய மனதிற்குள் நடராஜன் நாற்காலி போட்டு உட்கார்ந்த நேரம் அதுதான்.
புதியபார்வை சரி; அது என்ன ‘தமிழரசி?’
இந்தக் கேள்வியை அவரிடம் யாரோ கேட்டிருக்கிறார்கள்.
“உண்மையான ‘தமிழரசி’ சசிதானே? அடுத்து ஆளப்போவது சசிதான். அதனால்தான் தமிழரசின்னு பேரு வச்சி பத்திரிகை ஆரம்பிச்சிருக்கேன்” – என்றாராம் நடராஜன்.
“ஜெயலலிதாவின் கோபத்திற்கு இந்தக் கமெண்டும் காரணமாக இருந்திருக்கலாம்”- என்று சொல்லிச் சிரித்தார் பால்யூ.
இதன்பிறகு ஒருநாள்.... சென்னை போயிருந்தபோது புதியபார்வை அலுவலகத்தில் பாவைசந்திரன் அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன்.
“பாவை” என்று இரைந்து கூப்பிட்டபடியே யாரோ கதவைத் திறந்தார்கள்.
நடராஜன் நின்று கொண்டிருந்தார்.
அறையில் இன்னொருவராக நான் இருப்பதைப் பார்த்ததும் “ஓ.. சாரி.. பாவை அப்புறமாக ஒரு ஐந்துநிமிஷம் என்னுடைய கேபின் வந்துட்டுப் போங்க” என்று சொல்லிக் கதவை மூடிக்கொண்டார்.
“இருங்க.. இப்பவே போய்ப் பேசிட்டு வந்துர்றேன்” என்று சொல்லி எழுந்துபோன பாவை, ஒரு பத்து நிமிடம் கழித்துத் திரும்பி வந்தார்.
“நீங்க வந்திருக்கீங்கன்னு சொன்னேன். அப்படியா? போகும்போது வந்து பார்த்துட்டுப் போகச்சொல்லுங்கன்னு சொன்னாரு. போய்ப் பார்த்திருங்க” என்றார்.
“இல்லை பாவை. நான் ஒரு மணிக்கு இங்கிருந்து கிளம்பியாகணும். ஒன்றரை மணிக்கு ஓரிடத்தில் மதிய சாப்பாட்டுக்கு எனக்காக காத்திருப்பாங்க. இங்கே போனால் நேரமாகிடும். நான் இன்னொரு நாளைக்கு வந்து நடராஜன்சாரைப் பார்க்கிறேன்” என்றேன்.
நான் சொன்னதில் பாவைக்கு அவ்வளவு உடன்பாடில்லைஎன்பதை அவரது முகம் காட்டிற்று. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே போனின் இண்டர்காம் ஒலித்தது. அந்த முனையில் நடராஜன்தான் பேசினார்.
அதாவது, அன்றைக்கு மதிய உணவிற்காக எத்தனைப் பேருக்கு உணவு அனுப்பிவைக்க வேண்டுமென்று சசிகலா வினவியதாகவும் தற்சமயம் மூன்றுபேர் இருப்பதால் எதற்கும் இருக்கட்டும் என இன்னும் இரண்டுபேருக்கு எக்ஸ்ட்ராவாக- அதாவது ஐந்து பேருக்குத் தாம் சொல்லிவிட்டதாகவும் இன்றைக்கு ஸீஃபுட்தான் அனுப்புகிறார்கள்’ என்றும் சொல்லிப் போனை வைத்தார்.
“அவரு மதிய உணவுக்கும் சொல்லிட்டாராம். இருந்து சாப்பிட்டுட்டுப் போயிருங்க” என்றார் பாவை.
‘போயஸ் கார்டனிலிருந்து அனுப்பப்படும் உணவை ருசி பார்க்கும் ஆர்வம்’ ஒரு புறம் இருந்தது என்றாலும் ஏற்கெனவே ஒப்பந்தமான ஒன்றைக் கேன்சல் செய்தல் ஆகாது என்பதால் அன்றைய தினத்தில் அவர்களுடன் மதிய உணவு அருந்த முடியவில்லை என்றுகூறி -
விடைபெற்றேன்.
இங்கே கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் அன்றைக்கு முதல்வராயிருந்தவர் ஜெயலலிதா.
நடராஜனுக்கும் போயஸ்கார்டனுக்கும் ஒட்டுமில்லை உறவுமில்லை என்று எல்லாப் பத்திரிகைகளும் அறைகூவிக் கொண்டிருந்த காலம் அது.
ஆனால் மதிய உணவு போயஸ்கார்டனிலிருந்துதான் போகிறது.
மக்களுடன் சரியான கண்ணாமூச்சிதான் ஆடிக்கொண்டிருந்திருக்கிறார் ஜெயலலிதா.
ஆயிற்றா?
இதற்குப் பின்னர் பாவை சந்திரன் புதிய தலைமுறையிலிருந்து ‘நமது எம்ஜிஆரு’க்குப் போய், பின்னர் அங்கிருந்து தினமணிக்கும் போய்விட்டார்.
நாம் நடராஜனுக்கு வருவோம்.
பேராசிரியர் ராமமூர்த்தி பெங்களூரில் டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியின் முதல்வர். இவர் தமது மூத்த மகள் வில்வினிக்கு சென்னையின் பெரிய ஹோட்டல் ஒன்றில் திருமணம் வைத்திருந்தார். அந்தத் திருமணத்தில் கலந்துகொள்வதற்காக மணமேடையின்
படிக்கட்டுக்களில் ஏறிக்கொண்டிருந்தபோது இறங்கிக் கொண்டிருந்தவர் நடராஜன்.
படிக்கட்டில் வைத்துக் கைகுலுக்கிப் பேசியபோது “போங்க. போய் மணமக்களை ப்ளெஸ் பண்ணிட்டு வந்துருங்க. நான் கீழே காத்திருக்கேன்” என்று சொல்லி இறங்கிப் போனார்.
மேடையின் எதிரில் எனக்காக நின்றுகொண்டிருந்தார்.
மேடையில் மணமக்களை வாழ்த்திவிட்டு புகைப்படம் எடுத்து இறங்குவதற்குள் நடிகர் சிவகுமார், அறிவுமதி, இலக்கியச் சுடர் ராமலிங்கம் என்று மேடையில் முக்கியஸ்தர்கள் குவிந்துவிட்டதால் உடனடியாக இறங்குவதற்குத் தாமதம் ஆகிவிட்டது.
மேடைக்குக் கீழே நின்றுகொண்டிருந்த நடராஜன் அவரைச் சுற்றிக் கூட்டம் கூடியவுடன் அவர்களுடன் பேசிக்கொண்டே மெல்ல நடக்க ஆரம்பித்துவிட்டார்.
ஆக அப்போதும் பேசுவதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
அடுத்து பெங்களூரில் அந்த வாய்ப்பு வந்தது. முள்ளிவாய்க்காலில் அவர் நினைவுச் சின்னம் எழுப்பி அது திறக்கப்படுவதற்குச் சிறிது நாட்கள் இருந்தபோது முள்ளிவாய்க்காலுக்காக நிதி திரட்டும் பொருட்டு பெங்களூரில் ம.நடராஜன் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடைபெற்றது. அழைப்பு வரவே நானும் போயிருந்தேன்.
பேசுபவர்கள் பட்டியலில் என்னுடைய பெயர் இல்லாவிட்டாலும் ‘ஓரிரு வார்த்தைகள் பேசுவார்’ என்று சொல்லி என்னை அழைத்தார்கள். மேடையில் இருப்பவர்களை விளித்து நான் பேசியபோது நான் சொன்ன ஒரு வாக்கியத்திற்கு கூட்டம் படபடவென்று கைத்தட்டிற்று.
மேடையில் பக்கத்திலிருந்தவரிடம் சுவாரஸ்யமாய்ப் பேசிக்கொண்டிருந்த நடராஜன் நான் என்ன பேசினேன் என்று அடுத்த பக்கத்திலிருந்தவரைக் கேட்டார்.
நான் சொன்னது இதுதான்; “மற்ற விஷயங்களுக்குப் போவதற்கு முன்னர் ம.நடராஜனிடம் எனக்கொரு கேள்வி இருக்கிறது. நான் முதன் முதல் பார்த்த அன்றையிலிருந்து இன்றுவரைக்கும் ஒரே மாதிரியான தோற்றத்துடன் இருக்கிறீர்களே...நடராஜன்சார் உங்கள் இளமையின் ரகசியம் என்ன?”
ஒரு புன்சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தார் நடராஜன்.
நிகழ்ச்சி முடிவடைந்ததும் “நாம நேரா ஓட்டல் சாளுக்யாவிற்குப் போய்விடுவோம். பழ.நெடுமாறன், நடராஜன் இருவருமே அங்கேதான் தங்கியிருக்காங்க. இரண்டுபேரையும் கொண்டு விட்டுட்டு பேசிக்கொண்டிருந்துவிட்டுப் போவோம்” என்று சொன்னார் பேராசிரியர் ராமமூர்த்தி.
சாளுக்யாவுக்குச் சென்று ரிசப்ஷனிலேயே அமர்ந்து சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இங்கே இடைமறிப்பு வேறொரு வடிவில் வந்தது.
கார் டிரைவர் வந்து பின்புறம் நின்றார். “சார் உங்களைக் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிட்டு பிறகு வந்து புரொபசரை அவர் வீட்டில் விட்டுவிட்டுப் பிறகு நான் வீட்டிற்குப் போகவேண்டும். இப்போதே மணி பதினொன்றரை ஆகிவிட்டது. உங்க வீட்டிற்குப் போவதற்கே நள்ளிரவு பன்னிரண்டு ஆகிவிடும். கொஞ்சம் இப்போதே வந்தீர்களென்றால் சௌகரியமாயிருக்கும்” என்று கன்னடத்தில் சொன்னார்.
டிரைவர் சொல்வதன் நியாயம் கருதி அப்போதே நடராஜனிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டுவிட்டேன்.
சில நாட்களுக்கு முன்பு சசிகலா பரோலில் வந்து தமது கணவருடன் ஐந்து நாட்கள் தங்கியிருந்து திரும்பவும் பெங்களூர் திரும்பியிருந்த சில நாட்கள் கழித்து பேராசிரியர் ராமமூர்த்தி வீட்டிற்கு வந்திருந்தார். அவர் நடராஜனுடன் மிகவும் நெருக்கம் என்பது எனக்குத் தெரியும். நான் சொன்னேன். “சார் நடராஜன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார் என்று பத்திரிகையில் செய்தி வந்திருக்கு. ஒரு நாள் சென்னை போய் அவரைப் பார்த்துவிட்டுத் திரும்பிறலாமே”
ராமமூர்த்தி சொன்னார். “இல்லை அமுதவன், நான் சமீபத்தில் சென்னைக்குப் போயிருந்தேன். நடராஜனைப் போய்ப் பார்த்துவரலாமென்று வீட்டிற்குப் போனேன். வெளியாள் யாரையும் பார்க்கக் கூடாது நோய்த் தொற்று ஏற்பட்டுவிடும் என்று டாக்டர்களின் கடுமையான கண்டிஷன். அதனால் அவரைப் பார்க்க யாரையும் அனுமதிப்பதில்லை. டாக்டர்கள் அனுமதி அளிக்கும்வரை இதுதான் நிலைமை. பெயர் எழுதிவைத்துவிட்டுப் போங்கள் என்றார்கள். ஸ்பீடி ரிக்கவரி எழுதிவிட்டு வந்துவிட்டேன். கண்டிஷன் தளர்ந்தவுடன் நாங்களே போன் செய்து கூப்பிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். நிச்சயம் கூப்பிடுவார்கள். அப்போது நாம் இருவரும் போகலாம்” என்று சொன்னார்.
ராமமூர்த்தியிடமிருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். அதற்குள் எல்லாம் முடிந்துவிட்டது. நடராஜன் கிளம்பிவிட்டார்.
போய்வாருங்கள் நடராஜன்சார்!
Posted by Amudhavan at 6:11 AM 13 comments
Labels: சசிகலா , தமிழரசி , புதியபார்வை , ம.நடராஜன் , ஜெயலலிதா
Monday, February 26, 2018
ஸ்ரீதேவி நினைவுகள்.........
கர்நாடக மாநிலம் சிக்மகளூருக்கு அது இரண்டாவது பயணம். முதலில் பாரதப் பிரதமராயிருந்த இந்திரா காந்தி சிக்மகளூரு இடைத்தேர்தலில் நின்றபோது குமுதம் பத்திரிகைக்காக பால்யூவுடன் போயிருந்தேன். இப்போது இரண்டாவது முறையாக சிக்மகளூர். இந்தமுறை சிவகுமார் நடித்த ‘கவிக்குயில்’ படம் சிக்மகளூருவில் வெளிப்புறப் படப்பிடிப்பும், பாடல் காட்சிகளும் படமாக்கப்படவேண்டும் என்பதற்காகப் போகவேண்டியிருந்தது. சிக்மகளூருவுக்கு சிவகுமாருடன் பயணம்.
அது டிசம்பரிலிருந்து பிப்ரவரிக்குள் இருக்கும் மாதமாக இருந்திருக்க வேண்டும். காரணம் மிகவும் கடுமையான குளிரும் பனியும் சேர்ந்த காலமாக இருந்தது. தவிர சிக்மகளூர் என்பது மலை வாசஸ்தலம் கொண்ட இடம்.
விடியற்காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுப்பிவிட்டுவிடுவார் சிவகுமார். எம்மாதிரி குளிர் பனி இருந்தாலும் அந்த நேரத்தில் எழுந்துகொண்டால்தான் காலையில் சரியான சமயத்திற்குக் கிளம்ப வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்.
அவரும் அதற்கேற்றமாதிரி எழுந்து குளித்து முடித்து யோகாவெல்லாம் செய்து முடித்துவிட்டு மேக்கப் போட உட்கார்ந்துவிடுவார். அன்றைக்கும் அப்படித்தான் யோகா செய்துமுடித்து ஷேவிங் செய்ய உட்கார்ந்தபோது அறைக்கதவு தட்டப்பட்டது.
போய்க் கதவைத் திறந்தால் சிரித்துக்கொண்டே நின்றிருந்தவர் ஸ்ரீதேவி.
“குட்மார்னிங்.... சிவாசார் எழுந்துட்டாங்களா?’ என்றார்.
“எழுந்துட்டேம்மா. வா......ஷேவிங் செய்துட்டிருக்கேன்”.... என்றார் சிவகுமார்.
அறைக்குள் வந்தவர் தாமே ஒரு நாற்காலியை இழுத்துப்போட்டு அமர்ந்துகொண்டார்.
அவ்வளவு காலையில் அடுத்தவர் அறைக்கு வந்துவிட்டு அந்தச் சூழலை எப்படிச் சமாளிப்பது என்ற சங்கடம் ஸ்ரீதேவிக்கு இருந்திருக்க வேண்டும். “சார்... உங்களுக்கு டிஸ்டர்ப்டா இருக்கோ? இத்தனைக் காலையில் வந்துட்டேனே....நீங்கள்ளாம் இன்னமும் ரெடியாகிட்டு இருக்கீங்களே?” என்றார்.
‘அதெல்லாம் பரவாயில்லை. உட்கார். நாங்களென்ன ஆம்பிளைங்கதானே? ஒரு சங்கடமும் இல்லை. ராத்திரி நல்லா தூங்கினாயா?”
“தூக்கமெல்லாம் நல்லா வந்தது சார். ரூமுல அம்மாவோட ரொம்பவும் போரடிச்சது. தவிர நான் குளிச்சு முடிச்சுட்டேன். மேக்கப்பும் போட்டு ரெடியாயிட்டேன். அம்மா ரெடியாகணும். குளிக்கப்போயிட்டாங்க. ரூம் போரடிக்குது. அதான் அம்மாட்ட சொல்லிட்டு இங்க வந்துட்டேன். இங்க உங்களோட இருந்தாலாவது நீங்க பேசறதைக் கேட்டுட்டிருக்கலாம். ஏதாவது அட்வைஸ் செய்தீங்கன்னாலும் நல்லாருக்கும். அதான் வந்துட்டேன்” என்றார்.
“சரி சேது... தேவிக்கும் சேர்த்து இங்கேயே டிபன் கொண்டுவர ஏற்பாடு பண்ணிடு” என்று அங்கிருந்த சிவகுமாரின் மேக்கப் மேனிடம் சொல்வதற்குள் முந்திக்கொண்டு சொன்னார் ஸ்ரீதேவி. “சார் எனக்கும் சேர்த்து இந்த ரூமுக்கே டிபனை அனுப்பிருங்கன்னு நான் ஏற்கெனவே யூனிட்டிடம் சொல்லிட்டுத்தான் வந்திருக்கேன். அதனால் எனக்கும் சேர்த்து இங்கேயே டிபனும் வந்துரும்” என்று சிரித்தார் ஸ்ரீதேவி.
“ஓ...பக்கா பிளானோடதான் வந்திருக்கியோ?” என்று கேட்டுச் சிரித்த சிவகுமார் பொதுவாகப் பல விஷயங்களையும் பேசிக்கொண்டிருந்தார்.
அது ஸ்ரீதேவி கதாநாயகியாக உருவாகிக்கொண்டிருந்த சமயம். பாலச்சந்தரின் படத்தின் மூலம் பயங்கரமான புகழ் வெளிச்சம் அப்போதே கிடைத்திருந்தது. கவிக்குயில் என்பது ஸ்ரீதேவி கதாநாயகியாக ஒப்பந்தமான மூன்றாவதோ நான்காவதோ படம். (இயக்குநர்களான தேவராஜ் மோகன் இருவரும் உச்சத்தில் இருந்த நேரம் அது. அன்னக்கிளிக்கு அடுத்து ஏறக்குறைய முப்பது படங்களுக்கான ஒப்பந்தம் அவர்களைத் தேடி வந்திருந்தது. ‘ரொம்பவும் பார்த்துப் பார்த்துத்தான் ஒப்புக்கொள்வோம்’ என்ற அதிகபட்ச நம்பிக்கையிலேயே மார்க்கெட்டை கோட்டை விட்டவர்கள் என்றுதான் சொல்லவேண்டும். அன்னக்கிளி படம் ஹிட்டானதால் பறவைகள் பெயரைப் படத்திற்குத் தலைப்பாக வைத்துவிட்டு அழகியல் கலந்த சென்டிமெண்ட்டை அங்கங்கே தூவி இரண்டொரு பாடல்களை ‘தேவராஜ் ரசனைக்கு’ப் பிடித்தமாதிரி தந்துவிட்டாலேயே படம் சூப்பர் ஹிட்டடித்துவிடும் என்பது இயக்குநர் தேவராஜின் அசாத்திய நம்பிக்கை. அதனாலேயே அன்னக்கிளிக்கடுத்து கவிக்குயில் சிட்டுக்குருவி என்கிற மாதிரியே படங்களை எடுத்துக்கொண்டிருந்தார்.) சரி, நாம் கவிக்குயில் பற்றிப் பேசுவோம்.
வெளிப்புறப் படப்பிடிப்புகள் பற்றி, அங்கே சந்திக்க வேண்டிய பிரச்சினைகள் பற்றி, காலையில் எழுந்து தயாராவது பற்றி நிறைய சொல்லிக்கொண்டிருந்தார் சிவகுமார். அத்தனையையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டார் ஸ்ரீதேவி.
டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். “சார் கீழே போங்க. அம்மா ரெடியாயிருப்பாங்க. நான் அவங்களைப் போய்க் கூட்டிவந்துர்றேன்” என்று அவருடைய அறைக்குப் போனார் ஸ்ரீதேவி.
நாங்கள் கீழே வர இயக்குநர்கள் தேவராஜ் மோகன் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆர்.என்.கே.பிரசாத் ஆகியோர் கிளம்பிய கார் புறப்பட்டுக்கொண்டிருந்தது. யூனிட் வாகனத்தில் ஓடிச்சென்று சிவகுமாரின் மேக்கப் மேன் சேது ஏறிக்கொண்டார்.
எங்களுக்கான அம்பாசிடர் கார் தயாராக இருந்தது.
இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். இப்போது போகப்போவது ஸ்ரீதேவியுடனான இரண்டாவது கார்ப்பயணம். நேற்றைக்கே முதல் பயணம் முடிந்துவிட்டது. நேற்று பெங்களூரிலிருந்து வந்து இறங்கி பகல் சாப்பாடு முடிந்தவுடன் அறைக்கு வந்த இயக்குநர் தேவராஜ் “சிவா இன்றைக்கு மதியம்போய் ஒரு அரை நாள் ஷூட்டிங் முடிச்சிருவோமா? ஸ்ரீதேவிக்கான பாட்டு லொக்கேஷன் ஒண்ணு பார்த்து வச்சிருக்கேன். நீயும் இரண்டொரு ஷாட்ல வரணும். கிளைமேட் நல்லாருக்கு. பாதிப் பாடல் முடிச்சிட்டு வந்துருவோமா?” என்று கேட்டார்.
வெளிப்புறப் படப்பிடிப்பு போகும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் எவ்வளவு விரைவாக படப்பிடிப்பு முடிகிறதோ அவ்வளவு விரைவாக முடித்துவிட எண்ணுவார்கள். அதனால் எந்த நேரம் கூப்பிட்டாலும் உடனடியாகப் போய் முடித்துவிட்டு வர ஆர்வமாக இருப்பார்கள். சிவகுமார் ‘டெடிகேட்டட்’ ரகம். அதனால் உடனடியாய் தயாராக இருந்தார்.
“தேவிகிட்ட சொல்லியாச்சா? அந்தப் பொண்ணு ரெடியா?” என்றார்.
“ஓ, சொல்லிட்டேன். பத்து நிமிஷத்துல தயாராயிர்றேன் சார்னு சொல்லிருச்சி. தயாராயிருக்கும். தேவியைக் கூப்பிட்டுட்டு நீங்க வந்துருங்க. நான் முன்னாடி போறேன்” என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பி விட்டார்.
இயக்குநர் கிளம்பிச் சென்றவுடன் நாங்களும் கிளம்பத் தயாரானோம். கீழே அம்பாசிடர் காரும் ஸ்ரீதேவியும் அவர் அம்மாவும் இருந்தார்கள்.
இங்கேதான் ஒரு சின்னப் பிரச்சினை.
பட யூனிட் மொத்தமும் போய்விட்டிருந்தது. இன்னமும் புறப்பட வேண்டியவர்கள் கதாநாயகனும் கதாநாயகியும்தான். அவர்கள் இருவரும் இதோ தயாராக நிற்கிறார்கள்.
சிவகுமாரும் மேக்கப்மேன் சேதுவும் ஒரு பக்கம். அந்தப் பக்கம் ஸ்ரீதேவியும் அவரது தாயாரும். இவர்கள் நான்கு பேர். இப்போது நானும் என்னுடைய புகைப்பட நண்பர் கிருஷ்ணமூர்த்தியும்.
இருப்பது ஒரே ஒரு கார்தான்.
நாங்களே ஆறுபேர். டிரைவரைச் சேர்த்து ஏழுபேர் ஆகிறது. என்ன செய்யலாம்?
நான் சிவகுமாரிடம் சொன்னேன். “சார் நீங்க கிளம்புங்க. நாங்க ரூம்ல இருக்கோம். இல்லைன்னா ஊரைச் சுத்திப்பார்த்துகிட்டு இருக்கோம். நீங்க ஷூட்டிங் முடிச்சு வந்துருங்க”
சிவகுமார் இன்னொரு யோசனை சொன்னார். “சேதுவும் கிருஷ்ணமூர்த்தியும் முன்பக்கம் டிரைவரோட உட்கார்ந்துக்கட்டும். நாம பின்னாடி நாலுபேர் அட்ஜஸ்ட் செய்துகிட்டுப் போயிருவோம்”
இந்த இடத்தில்தான் நிறையக் கதாநாயகிகள் ‘எனக்குத் தனியாகக் கார் வேண்டும். அட்ஜஸ்டெல்லாம் பண்ணமாட்டேன்” என்றெல்லாம் கேட்டு அடம் பிடிப்பார்கள். இதுபற்றிய நிறையக் கதைகள் திரைஉலகில் உள்ளன.
ஆனால் ஸ்ரீதேவியுடைய அம்மா சொன்னார்கள் பாருங்கள் ஒரு பாயிண்ட்..... எல்லாரும் அப்படியே அசந்து போனோம்.
சிவகுமாரைப் பார்த்து அவர் சொன்னார். “உங்களுக்கு ஒரு கவலையும் வேணாம். எனக்குக் கொஞ்சுண்டு இடம் கொடுத்தால் போதும். நான் உட்கார்ந்துக்குவேன். பாப்பா (ஸ்ரீதேவி) என் மடியிலதான் உட்கார்ந்துக்கும். அதுக்கு தனி சீட்டெல்லாம் கேட்காது.”
பின்னர் அதே போல்தான் எங்கள் பயணம் அமைந்தது.
இறுக்கி அடித்துக்கொண்டு நாங்கள் அமர்ந்துவர அதேபோல ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக்கொண்டுதான் ஸ்ரீதேவியும் அவரது அம்மாவும் பயணித்தார்கள்.
மறுநாள் விஷயமும் இதேபோல்தான்.
ஸ்ரீதேவி அவரது அம்மாவின் மடியில் அமர்ந்துதான் பயணித்தார்.
முதல்நாள் ஒரு பாடல்......’குயிலே கவிக்குயிலே யார்வரவைத் தேடுகிறாய்... மனசுக்குள் ஆசை வைத்த மன்னன் வந்தானா?’ என்ற பாடலை சுற்றிலும் மலைகள் இருக்கும் ஒரு ரம்மியமான இடத்தில் படமெடுத்தார்கள். சிவகுமாரையும் சேர்த்து எடுத்த காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டுவிட்டன என்று நினைக்கிறேன். முழங்கால் தெரியும் பாவாடை தாவணியுடன் ஸ்ரீதேவியை அங்கேயும் இங்கேயும் ஓடவிட்டு ‘இளமை சதிராடும் தோட்டம் காலம் கனியானதே’ என்ற அடியை முழுக்க முழுக்க அன்றைக்குப் படமாக்கினார்கள்.
மறுநாள் சிவகுமார் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டே பாடும் பாடல். ஸ்ரீதேவி ஓடிவருவதுபோல் காட்சி. பாலமுரளி கிருஷ்ணா பாடியிருக்கும் ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ என்ற பாடலின் படப்பிடிப்பு அந்தப் பகுதியில் நடைபெற்றது. பாலமுரளி பாடியிருக்கும் பாடல் என்ற விவரமும், ரீதி கௌளை ராகத்தில் அமைந்திருக்கும் பாடல் என்ற தகவலும் அங்கே கசியவிடப் பட்டிருந்தன. பாதிப் படப்பிடிப்பு முடிந்ததும் ஸ்ரீதேவியை அனுப்பி ராதை வேடம் அணிந்துகொண்டு வரச்சொன்னார் இயக்குநர். அந்த வேடத்தில் அதே பாடலுக்காக நான்கைந்து காட்சிகள் படமாக்கப்பட்டன.
ஏறக்குறைய இந்த நாட்களில்தான் எனக்கு நடிகர் கமலஹாசனின் அறிமுகமும் ஏற்பட்டிருந்தது. பெங்களூர் மோதி மஹால் ஓட்டலில் முதன்முதலாக கமலைச் சந்தித்தேன். குடிசை படத்தின் இயக்குநர் ஜெயபாரதி தினமணி கதிரில் துணை ஆசிரியராக இருந்தார். பரீட்சார்த்த முறையில் தமிழில் படம் எடுக்கவேண்டும் அதுவும் முதல் படமாக குடிசை படத்தை எடுக்கவேண்டுமென்று அவருக்குத் தீராத ஆசை. அதற்காக என்னென்னவோ வழிகளில் முயன்றார். முதலாவதாக ஒரு குழுவை ஏற்படுத்தினார். அதில் மனோபாலா, ராபர்ட் ராஜசேகரன், பாலகுமாரன், மாலன் தொடங்கி நான்வரை இருந்தோம்.
படமெடுப்பதற்காக செய்ய வேண்டிய முயற்சிகளை பெங்களூரிலிருந்து செய்வது என்பது என்னுடைய பொறுப்பாக இருந்தது.
அப்போது இந்த முயற்சிக்குக் கைகொடுக்கும் விதமாக கமலும் இணைந்திருந்தார்.
பெங்களூர் வரும் கமலைச் சந்தித்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லியிருந்தார் ஜெயபாரதி. கமலிடமும் என்னைப் பற்றிச் சொல்லி அனுப்பியிருந்தார்.
மோதி மகாலில் கமலைச் சந்தித்து நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
என்னைப் போன்ற இளம் எழுத்தாளர்களைச் சந்திப்பதிலும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்வதிலும் கமல் பேரார்வத்துடன் இருந்த நேரம் அது.
நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தபோது கே.பாலச்சந்தரின் மூன்று முடிச்சு படத்தில் நடிப்பது குறித்தும் பேசினார் கமல். ரஜினியுடன் சேர்ந்து அவர் நடிக்கும் படத்தின் கதையைத் தமக்குத் தெரிந்த முறையில் சொன்னார். அந்தப் படப்பிடிப்பிற்காகத்தான் வந்திருப்பதாகவும் சிவசமுத்திரத்தில் ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னைப்’ பாடலின் படப்பிடிப்பு நடைபெறப்போவதாகவும் சொன்னார்.(கடைசியில் அந்தப் பாடல் ‘தொட்டத ஆலமரா’ என்றழைக்கப்படும் பெரிய ஆலமரம் பகுதியில்தான் படமாகியது)
இங்கே இந்தத் தகவல் எதற்கு எனில், கண்ணதாசன் எழுதி எம்எஸ்வி இசையமைத்திருந்த அந்தப் பாடலை மிக அழகாகப் பாடிக்காட்டினார் கமல்.
அதாவது, ‘ஆடிவெள்ளித் தேடிஉன்னை நான்அடைந்த நேரம்- கோடி இன்பம் நாடிவந்தேன் காவிரியின் ஓரம்’ என்பது கண்ணதாசனின் பாடல்.
அதனை ‘தேவி உன்னைத் தேடிவந்து நான் அடைந்த நேரம்’ என்பதுபோல் தொடங்கி இங்கே பகிர்ந்துகொள்ள முடியாத அளவு வார்த்தைகளில் விரசம் வடித்து அதே மெட்டில் கமல் எழுதிய பாடலைச் சொன்னார்.
அந்தப் பாடலை ஸ்ரீதேவியிடம் பாடிக்காட்டியதாகவும் ஸ்ரீதேவி அந்தப் பாடலைக் கேட்டு எத்தனைச் சிரித்தார் என்பதையும் சொன்னார்.
கமல் மூலம் கிடைத்த ஸ்ரீதேவியின் அறிமுகம் இது. (கமலிடம் இம்மாதிரியான சேட்டைகள் நிறைய இருந்தன. பிரபலமான பாடல்களில் வேறுவரிகளைப் போட்டு சக நண்பர்களிடமும் பத்திரிகையாளர்களிடமும் பாடிக்காட்டுவார் கமல். அவரிடம் இருக்கும் பல்வேறு திறமைகளில் இதுவும் ஒன்றாக கிளை பரப்பி ‘கமல் பெரிய புத்திசாலிப்பா’ என்ற பேச்சுப் பரவ அவருடைய இம்மாதிரியான செய்கையும் அந்த நாட்களில் சிறப்பான ஒன்றாக இருந்தது.)
அதன்பிறகு ஸ்ரீதேவியை நினைவு படுத்தியவர் பாரதிராஜா.
சுஹாசினியை வைத்து ‘கொத்த ஜீவிதலு’ என்ற தெலுங்குப் படத்தை இயக்கிக் கொண்டிருந்தார் பாரதி ராஜா. புதிய வார்ப்புகளின் தெலுங்குத் தழுவல் இது. இதற்காக சிவசமுத்திரம் பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்றது. நடிகர் மனோபாலா அப்போது பாரதிராஜாவிடம் அசிஸ்டெண்டாக இருந்தார். அவர் அழைப்பில் சிவசமுத்திரம் சென்றிருந்தேன். தங்கியிருந்த கெஸ்ட் ஹவுசிலிருந்து படப்பிடிப்புத் தளத்திற்குச் செல்லும் வழியில் அங்கங்கே காரை நிறுத்திவிடுவார் பாரதிராஜா.
அந்தப் பகுதியில்தான் பதினாறு வயதினிலே படத்தின் படப்பிடிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
அந்த நினைவுகளின் சுவடுகளை அவரால் மறக்க முடியவில்லை. ‘இங்க பாருங்க..... இங்கிருந்துதான் ஸ்ரீதேவி நடந்து வருவா.... இதோ இந்த இடத்துலதான் ஸ்ரீதேவியின் குடிசை இருந்தது. இதான் கமல் நடந்துவரும் ஒற்றையடிப் பாதை. இங்கிருந்துதான் ஸ்ரீதேவி பாடலைத் துவங்குவா’..... என்று அந்தக் காலத்திற்கே மயிலுவுடன் நடந்து சென்று நினைவு கூர்வார் பாரதிராஜா. இது ஸ்ரீதேவியைப் பற்றிய மூன்றாவது நினைவு.
அடுத்ததாக ஸ்ரீதேவியை நினைவு படுத்தும் விதமாக வேறொரு தகவல் சொல்லப்பட்டது.
அது காதல் மன்னன் பாலுமகேந்திரா பற்றிய கதை.
அதாவது, ஊட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பின்போது பாலுமகேந்திரா நடிகை ஸ்ரீதேவியைத் தமது வலையில் வீழ்த்திவிடுவதற்குப் பெரிதும் முயன்றிருக்கிறார். அதற்கென அவர் கையெலெடுத்தது காமிராவை. படப்பிடிப்பின்போதும் சரி, படப்பிடிப்பு முடிந்துவிட்டபிறகும் சரி ஊட்டியில் பல இடங்களில் பல வெளிச்சங்களில், பல பின்னணிகளில், மலர்களுக்கிடையில், மரக்கிளைகளுக்கிடையில் என்று வைத்து அவர் பாட்டுக்கு தினசரி படங்களாக எடுத்துத் தள்ளிக்கொண்டே இருப்பாராம். மற்றவர்களை படப்பிடிப்பு முடிந்ததாகச் சொல்லி அறைகளுக்கு அனுப்பிவைத்துவிட்டு ஸ்ரீதேவியையும் இன்னும் சிலரையும் மட்டும் வைத்துக்கொண்டு இதனைச் செய்வாராம். “சார் போதும் விட்ருங்க சார்” என்று ஸ்ரீதேவி கதறும்வரை இது நடைபெறுமாம்.
ஒரு தேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒரு அழகிய பெண்ணைத் தாம் கருதும் கோணங்களில் எல்லாம் புகைப்படம் எடுப்பதில் என்ன தவறு? இது அழகியல் உணர்வல்லவா.....? என்று கேட்கத் தோன்றும்.
உண்மைதான்.
ஆனால், விஷயம் இதற்கு மேலேதான் இருக்கிறது. அப்படி எடுத்த புகைப்படங்களில் சிறந்த சிலவற்றைத் தேர்ந்தெடுத்து அதனைப் பெரிதாக்கிப் புகைப்படமாகப் போட்டு அதனை பிரேம் செய்துகொண்டு வரவேண்டும் என்று தயாரிப்பு சம்பந்தப்பட்டவர்களை நெருக்குவாராம். அதுவும் அன்றைக்கு இரவே வரவேண்டுமாம்.
கூடவே ஒரு பெரிய பூச்செண்டையும் வாங்கி வரச் சொல்வாராம்.
மறுநாள் படப்பிடிப்பிற்குப் பங்கம் வந்துவிடக்கூடாது என்று பயப்படும் தயாரிப்புத் தரப்பு இயக்குநர் சொல்வதைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றும்.
எப்படி?
இன்றைய காலகட்டம் வேறு.
மூன்றாம் பிறை எடுக்கப்பட்ட காலகட்டம் வேறு அல்லவா?
அன்றைய தினத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அப்போதே பிரிண்ட் போடும் அளவிற்குத் தொழில் நுட்பவசதிகள் ஊட்டியில் கிடையாது. அதனால் அந்த இரவிலேயே அல்லது மாலையிலேயே புறப்பட்டு கோயம்புத்தூருக்கு வரவேண்டும். குறிப்பிட்ட ஸ்டுடியோவில் வந்து பிரிண்ட் போட்டு பிரேமும் பண்ணிக்கொள்ள வேண்டும். அதற்குள் எங்கோ சென்று பொக்கே வாங்கிக்கொள்ள வேண்டும்.
அனைத்தையும் கொண்டுவந்து இயக்குநரிடம் தந்தால் அவர் காதல் ரசம் சொட்டச் சொட்ட வசனவரிகள் எழுதி அந்த நள்ளிரவு நேரத்திலேயே நடிகை ஸ்ரீதேவியை எழுப்பி அதனைப் பரிசாக வழங்குவாராம்.
இந்த ஒரு செய்கையிலேயே அந்தப் பெண் மயங்கிவிடுவார் என்று காமிராக் கவிஞர் எதிர்பார்த்திருக்க ஸ்ரீதேவியோ இதனை ஒரு டார்ச்சராகத்தான் நினைத்தார் என்பதுதான் பரிதாபம்.
படம் அழகியலுக்காகவும் ஸ்ரீதேவியின் சிறப்பான நடிப்பிற்காகவும் பெரிதாகப் பேசப்பட்டது. வசூல் ரீதியிலும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்து நடைபெற்றதுதான் சோகத்திலும் சோகம்.
சிறந்த நடிப்பிற்கான கதாநாயகி விருதுக்கு ஸ்ரீதேவி மத்திய அரசாங்கத்தினால் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் கசிந்தன.
மிகச்சிறப்பான நடிப்பிற்கு மூன்றாம் பிறை நிச்சயம் பரிசு பெறும் என்று எல்லா தரப்பினராலும் நம்பப்பட்டு, எழுதப்பட்டு, பேசப்பட்ட ஒரு விஷயம் அது.
இரண்டொரு நாட்கள் கழித்து முடிவுகள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டபோது அந்த அதிர்ச்சி காத்திருந்தது.
சிறந்த நடிப்பிற்கான பரிசு மூன்றாம் பிறை படத்திலிருந்துதான் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் ஸ்ரீதேவிக்கு அல்ல மாறாக கமலஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான பரிசு என
அறிவிக்கப்பட்டது.
கமலஹாசனை நிருபர்கள் இதுபற்றிக் கேட்டபோது “எனக்கு சிறந்த நடிகருக்கான பரிசுதான் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர சிறந்த நடிகைக்கான பரிசு வழங்கப்படவில்லையே. ஆக, சிறந்த நடிகைக்கான பரிசை ஸ்ரீதேவியிடமிருந்து நான் எப்படித் தட்டிப் பறிக்க முடியும்?” என்று சமத்காரமாக பதிலளித்தார்.
இதுபற்றிப் பிறகு ஒரு பத்திரிகையாளர் இப்படிச் சொன்னார். “இம்மாதிரியான அட்ஜஸ்ட்மெண்டுகள் எல்லாம் டெல்லியைப் பொறுத்தவரை சாதாரணம்தான். ஏன் ஒரு சமயம் சிந்துபைரவி படத்திலிருந்து சிறந்த நடிகருக்கான விருதுக்கு சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த விஷயம் கேள்விப்பட்ட ஒரு முக்கியஸ்தர் உடனடியாக டெல்லிக்குப் போனார். சிந்துபைரவிக்கு ஒரு விருது என்றால் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட வேண்டுமே தவிர சிவகுமாருக்கு அல்ல என்று லாபி செய்தார். பின்னர் அது சுஹாசினிக்குத்தான் வழங்கப்பட்டது. இந்த விஷயம் சிவகுமாருக்கே தெரியுமா என்பது தெரியவில்லை” என்றார் அந்தப் பத்திரிகையாள நண்பர்.
மூன்றாம் பிறை படத்திற்காகத் தமக்கு விருது இல்லை என்ற ஏமாற்றம் ஸ்ரீதேவியிடத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்று சொல்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். “ஸ்ரீதேவியின் முகத்தில் ஒரு நிரந்தர சோகம் இருந்தது. இதனை நீங்கள் பல ஆண்டுகளாகவே பார்க்கலாம். அவர் திருமணமாகி பம்பாய்க்குப் புறப்படுவதற்கு முன்பேயே இந்த சோகம் இருந்தது.அதன் காரணம் ஒன்று அல்ல. நிறைய காரணங்கள் இருக்கலாம்” என்பது அவரை அறிந்தவர்களின் கூற்று.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.
ஸ்ரீதேவி பல விஷயங்களில் அதிர்ஷ்டம் வாய்ந்தவர். ஒரு கதாநாயகிக்கு எந்த அளவு புகழும் பெயரும் கிடைக்கவேண்டுமோ அதனைத் தாண்டி பன்மடங்கு பெயரும் புகழும் பெற்றவர் அவர்.
அதாவது 1976ம் வருடத்தை எடுத்துக்கொண்டால், தமிழ்த் திரையுலகிற்கு ஒரு பெரிய மாற்றம் அந்த ஆண்டிலிருந்து தொடங்குகிறது. உண்மையில் அதற்காக வித்திட்ட படங்களாக அன்னக்கிளியையும், ஒருதலை ராகத்தையும்தான் சொல்லவேண்டும். ஆனால் அன்னக்கிளி இளையராஜாவுக்கும், அதேபோல ஒருதலை ராகம் டி.ராஜேந்தருக்கும்தான் மிகப்பெரிய இடங்களைக் கொடுத்ததே தவிர, அதில் பணியாற்றிய மற்றவர்களுக்கெல்லாம் சாதாரண பலன்களையே தந்தது.
உதாரணத்திற்கு தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரர்களான, மிக அரிய திறன் படைத்த சாவித்திரி, பத்மினி போன்றவர்களெல்லாம் ஒன்றுமே இல்லாமல் ஆக்கப்பட்டு, அல்லது அவர்களுடைய பெயர்கள் முழுவதுமாக மறக்கடிக்கப்பட்டு ஸ்ரீதேவியின் பெயர் மட்டுமே ‘நடிகைகள்’ என்ற பட்டியலில் நிலைநிறுத்தப்பட்டது.
சிறந்த நடிகை யார்?
ஸ்ரீதேவி.
சிறந்த ஒளிப்பதிவாளர் யார்?
பாலுமகேந்திரா, பி.சி.ஸ்ரீராம்.
சிறந்த இசையமைப்பாளர் யார்?
சிறந்த இசையமைப்பாளரெல்லாம் கிடையாது. ஒரேயொரு இசையமைப்பாளர்தான். அவர் இளையராஜா. அவர்தான் இசைப்பிரம்மா, அவர்தான் இசைக்கடவுள், அவர்தான் ராகதேவன், அவர்தான் இசைஞானி
சிறந்த இயக்குநர் யார்?
சிறந்த இயக்குநர் இருவர். அவர்கள் பாரதிராஜா, மணிரத்தினம்.
பிரமாண்ட படங்களைத் தமிழில் எடுத்தவர் யார்?
சங்கர்.
-தமிழ்த்திரையுலகம் இந்த வரையறைக்குள் ‘யாராலோ’ கொண்டுவரப்பட்டுவிட்டது. அதன்பிறகு முளைத்த இணையம் இந்த வரையறையை அப்படியே ‘சுவீகரித்துக்கொண்டு’ பேசும் படக் காலத்திலிருந்து தமிழ்த்திரையுலகை இன்றுவரைக்கும் தங்கள் திறமையாலும், சாதனைகளாலும் யாரெல்லாம் வளர்த்தெடுத்து வந்தார்களோ அவர்களை எல்லாம் இரக்கமே இல்லாமல் இருட்டடிப்புச் செய்து மகிழ்ந்தது.
ஒன்றுமில்லை, உத்தம புத்திரன் படத்தில் கேஎஸ்கோபாலகிருஷ்ணன் எழுதிய ‘உன்னழகைக் கன்னியர்கள் சொன்னதினாலே’ என்ற பாடலுக்கு ஒரு இடத்தில் மல்லாக்காக அப்படியே வளைந்து தரையைத் தொடுமளவுக்குப் போவார் பத்மினி. இம்மாதிரி வில்லைப்போல் வளைவது எல்லாம் இன்றைய நடிகைகளிடம் எதிர்பார்க்கமுடியாது. அதே பத்மினி சித்தி படத்தில் ‘பெண்ணாகப் பிறந்தவற்கு’ என்ற கண்ணதாசன் பாடலில் காட்டும் முகபாவங்களும் உடல்மொழியும் வேறு ரகம்.
வஞ்சிக்கோட்டை வாலிபனில் வைஜயந்தி மாலாவுடன் ஆடும் போட்டி நடனம் ஆகட்டும், நாற்பதாவது வயதில் தில்லானா மோகனாம்பாளில் மோகனாம்பாளாக வடித்துக்காட்டியிருக்கும் பாத்திரப்படைப்புகளெல்லாம் கற்பனைக்கு எட்டாதவை.
சாவித்திரியின் ஒவ்வொரு படமும் நடிகைகளுக்கு ஒரு பாடம். நவராத்திரி, பாசமலர் போன்ற படங்களாகட்டும், பார்த்தால் பசிதீரும், கைகொடுத்த தெய்வம் போன்ற படங்களாகட்டும் சாவித்திரியின் நடிப்பிற்கு..... அந்தத் திறமைக்கெல்லாம் ஈடாக இன்னொருவரையெல்லாம் சொல்ல முடியாது.
ஆனால் இன்றைய சினிமா ரசிகனுக்கு இதெல்லாம் தேவையில்லை. அவன் நடிகையென்றால் ஸ்ரீதேவி மட்டுமே என்ற முடிவுக்கு எப்போதோ வந்துவிட்டான்.
அதேபோல தமிழ்திரை இசை என்பது எஸ்விவெங்கட்ராமன் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு, சி.ஆர்.சுப்பராமன், ஜி.ராமனாதன் ஆகியோரால் வளர்த்தெடுக்கப்பட்டு, அதன்பிறகு விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோரால் இன்றைய நிலைமைவரைக்கும் வடிவமைக்கப்பட்டு பிறகு எம்எஸ்வியால் எத்தனையோ புதுமைகள் புகுத்தப்பட்டு இன்றுவரைக்கும் வந்து நிற்கிறது.
ஆனால் இன்றைய திரைஇசை ரசிகனுக்கு இவர்களெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. அவனுக்குத் தெரிந்தது இளையராஜா, இளையராஜா, இளையராஜா மட்டுமே.
நல்லவேளை, ஏ.ஆர்.ரகுமான் வந்து இந்த ராஜா காய்ச்சலைக் கொஞ்சம் தடுத்து நிறுத்தினார். இல்லாவிட்டால் இது எங்கே போய் நின்றிருக்குமோ தெரியவில்லை.
ஜி.ராமனாதன் இசையமைத்த பாடல்களைக் கேட்டால் தெரியும்.... ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் பயணித்து மீண்டும் பழைய ராகத்துக்கே கொண்டுவந்து அந்தப் பாடலை முடிப்பார். ஐயா, குறைந்தது ஒரு இருநூறு பாடல்களிலாவது இந்த யுத்தியைக் கையாண்டிருப்பார் அவர்.
சில பாடல்களில் பயணிக்கும் ராகங்கள் நான்கைந்துகூட இருக்கும். இந்தவகைப் பாடல்களுக்கு ராகமாலிகா என்று பெயர்.
இந்த வகையிலான பாடல்களை ஒரு படத்திற்கு நான்கைந்தாவது போடுவார் ஜி.ராமனாதன். அந்தக் கால வழக்கமும் அப்படித்தான் இருந்தது.
அதையெல்லாம் ‘கவனிக்க’ இன்றைய ரசிகனுக்குத் தெரியாது.
ஏதாவது ஒரு படத்தில் ஏதோ ஒரு ராகத்தில் ஆரம்பித்து இன்னொரு ராகத்தில் இளையராஜா வந்து முடித்திருந்தாரென்றால் ஆயிற்று. தையா தக்கா என்று இவன் குதிக்கும் குதிப்புக்கு தாய்லாந்தே ஆடிப்போகணும். அந்தப் பாடலைத் தூக்கிக்கொண்டு எவரெஸ்ட் சிகரத்துக்கே போய்விடுகிறான். ‘இந்தப் பாட்டு மலயமாருதம் ராகத்தில் ஆரம்பிக்கிறது. பின்னர் அதனை அப்படியே பிலஹரிக்குக் கொண்டுபோகிறார்’ என்று இவனுக்குத் தெரிந்த புருடாவை இவன் அவிழ்க்கும்போதுதான் சிரிப்புச் சிரிப்பாக வருகிறது.
அடே மண்டூகங்களே.... இந்தச் செய்கையைத்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இருவரும் ‘தீவிரமான கர்நாடக சங்கீத மெட்டுக்கள் திரைப்படங்களுக்குத் தேவையில்லை. அவற்றின் அடிப்படை ராகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு அதிலிருந்து மெல்லிய தென்றல் தவழ்ந்துவருவதுபோல் மேலோட்டமான ராகங்களை மட்டும் தரலாம்’ என்று மாற்றியமைத்தார்கள்
– அதனால்தான் அவர்கள் ‘மெல்லிசை மன்னர்கள்’ என்று அழைக்கப்பட்டனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன? (இந்தப் பணியில் இந்தி இசையமைப்பாளர்களுக்கும் நிறைய பங்குண்டு) அந்த ‘மெல்லிசையைத்தான்’ இளையராஜாவும் ஏனைய இசையமைப்பாளர்களும் இன்றைக்கும் திரையில் போட்டு வருகின்றனர் என்ற தகவலாவது உங்களுக்குத் தெரியுமா என்ன?
ஒரு ராகத்தை ஆரம்பித்து அதனை அப்படியே வேறொரு ராகத்திற்கு மாற்றும் முயற்சிகளை பல இசையமைப்பாளர்கள் அசால்டாகச் செய்திருக்கிறார்கள்.
தில்லானா மோகனாம்பாள் படத்தில் ஒரு இசைக்கோர்வையைக் கர்நாடக சங்கீதத்தில் ஆரம்பித்து ஆங்கில் நோட்ஸில் கொண்டுவந்து முடிப்பார் கேவிஎம்.
இதெல்லாம் ‘இசையமைப்பாளரின் கடமை’ என்பதாக அவதானித்த இன்றைய இசை ரசிகன், இளையராஜா இதையே சிந்துபைரவியில் கர்நாடக இசையில் ஆரம்பித்து நாட்டுப்புற மெட்டில் கொண்டுவந்து முடித்ததை இன்னமும் இசையுலகில் எவருமே முயன்று பார்க்காத, முடியவே முடியாத அசாத்திய திறமை என்பதாக மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறான்.
தமிழ்த்தாத்தா யார்?
உ.வே.சா.
தமிழின் நீதி நூல்கள் எவை?
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், நாலடியார் மற்றும் எத்தனையோ தனிப்பாடல்கள்...
கம்பராமாயணம், ஐம்பெரும் காப்பியங்கள், சங்கப்பாடல்கள்... இந்த வரிசையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது.
இலக்கியம், இலக்கணம் குறித்தெல்லாம் சரியான பார்வைதான் இருக்கிறது.
சினிமா என்று வரும்போதுதான் எக்குத்தப்பான கருத்துக்கள் புகுந்துகொண்டு சிரமப்படுத்துகின்றன.
எப்படியோ தப்பித்தவறி சிவாஜியை மாபெரும் நடிகரென்றும், எம்ஜிஆரைத் தமிழின் முதல் சூப்பர் ஸ்டார் என்றும் கண்ணதாசனை மிகப்பெரும் பாடலாசிரியர் என்றும் ஒப்புக்கொண்டுவிட்டான். இங்கெல்லாம் வரிசை சரியாகத்தான் இருக்கிறது. வேறு விஷயங்கள் என்று வரும்போதுதான் குபீரென்று ஒரு பல்டி.
‘முந்தா நாளிலிருந்து மட்டுமே’ கணக்கைத் தொடங்க வேண்டிய ஏதோ ஒரு நிர்ப்பந்தம்.
போகட்டும்.....
இந்த வகையான புகழும் பெயரும் பணமும் செல்வாக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு நான்கைந்து பேருக்குக் கிட்டியிருக்கிறது.
அவர்களில் ஸ்ரீதேவி முதன்மையானவர்.
Posted by Amudhavan at 8:49 PM 12 comments
Labels: கமலஹாசன் , சிவகுமார். , நடிகை ஸ்ரீதேவி , பாரதிராஜா
Older Posts Home
Subscribe to: Posts ( Atom )
About Me
Amudhavan
சொந்த ஊர் திருச்சி. வசிப்பது பெங்களூரில். ஆசிரியர் சாவி மூலம் எழுத்துலகில் அறிமுகம். தமிழின் எல்லா பிரபல இதழ்களிலும் தொடர்கதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் பேட்டிகள் மற்றும் மாத நாவல்கள் என்று நிறைய எழுத்தாக்கங்கள். 'பிலிமாலயா' இதழில் திரைப்படங்களைப் பற்றி வித்தியாசமான பேட்டிகளும் கட்டுரைகளும். கல்கியில் சில வருடங்களுக்கு கர்நாடக அரசியல் கட்டுரைகள். சாவியில் எழுதிய 'கங்கையெல்லாம் கோலமிட்டு 'தொடர்கதை வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலை குறித்த இயல்பான படப்பிடிப்பு. குமுதத்தில் வெளிவந்த 'விபத்து'குறுநாவல் இலக்கிய வட்டத்தில் பெரிதாகப்பேசப்பட்டது. தற்போது எழுத்துத் துறையிலிருந்து மாற்று மருத்துவத் துறையில் ஈடுபட்டு 'ரெய்கி' சிகிச்சை அளித்து வருவதில் தொடரும் வெற்றிகள்! ரெய்கி பற்றி 'நோய் தீர்க்கும் அற்புத ரெய்கி' மற்றும், 'சர்க்கரை நோய் - பயம் வேண்டாம்',இரு நூல்களும், எழுத்தாளர் சுஜாதா பற்றிய 'என்றென்றும் சுஜாதா' (மூன்று நூல்களும் விகடன் பிரசுரம்) ஆகியன சமீபத்தில் எழுதிய நூல்கள்.
View my complete profile
Pages
Home
Popular Posts
‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!
இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப...
இளையராஜா பற்றி கங்கை அமரனின் முக்கியத் தகவல்.
கங்கை அமரன் நம்மிடையே இருக்கும் பல்கலை வித்தகர்களில் முக்கியமானவர். பல துறைகளிலும் திறமையும், கற்பனை சக்தியும், படைப்பாற்றலும் நிரம்...
நடிகர் சிவகுமாரின் மறுபக்கம்! – ஒரு எக்ஸ்ரே பார்வை!!
நடிகர் சிவகுமார் திரையுலகிற்கு வந்து இது ஐம்பதாவது வருடம். எஸ்.எஸ். ராஜேந்திரன் கதாநாயகனாக நடித்த காக்கும் கரங்கள் என்ற ...
கண்ணதாசனின் இந்தப் பாடல் தெரியுமா உங்களுக்கு?
கண்ணதாசனின் இந்தப் பாடல் எத்தனைப் பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை. ஆயிரக்கணக்கான அவருடைய பாடலைக் கேட்டிருப்பவர்கள் இந்தப் பாடலைத் தெர...
சூப்பர் சிங்கர் ஜூனியர் உணர்த்திய அதி முக்கியமான பாடம்
இலட்சக்கணக்கான மக்களால் அல்லது கோடிக்கணக்கான மக்களால் ஆர்வத்துடன் பார்க்கப்பட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் டிவியின் சூப்...
செக்ஸ் பற்றி சிவகுமார்- 18+
பல்வேறு துறைகளைப் பற்றியும் தமது கருத்துக்களைத் தெளிவாகவும் துணிவாகவும் சொல்லிவரும் நடிகர் சிவகுமார் செக்ஸ் பற்றியும் தமது கருத்துக்களைத் த...
தொலைக்காட்சி விவாதங்களின் அட்டூழியங்கள்
அவ்வப்போது மக்களின் கவனம் கவர புதிய புதிய விடயங்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். தற்போது பெரும்பாலானோரின் கவனம் கவர்ந்திருக்கும் ...
சாரு நிவேதிதா- என்றொரு காமப்பிசாசு!
சாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்க...
சிவாஜிகணேசன் யார்?
சிவாஜி உயிருடன் இருந்தபோதேயே ஒரு விஷயம் சொல்லுவார்கள். தமிழ்நாட்டின் அதிர்ஷ்டம் சிவாஜி இங்கு வந்து பிறந்தது. அது தமிழ்நாட்டின...
சூப்பர் சிங்கர் ஜூனியர் - சில சிந்தனைகள்
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிட்டத்தட்ட நிறைவு பெறும் நி...
Labels
ஜெயலலிதா ( 14 ) கலைஞர் ( 10 ) இளையராஜா ( 6 ) எம்எஸ்வி ( 5 ) சுஜாதா ( 5 ) எம்ஜிஆர் ( 4 ) சிவகுமார் ( 4 ) சிவாஜிகணேசன் ( 4 ) சூர்யா ( 4 ) அகிலன் ( 3 ) ஏ.ஆர்.ரகுமான் ( 3 ) சசிகலா ( 3 ) சிவகுமார். ( 3 ) சிவாஜி ( 3 ) ராமமூர்த்தி ( 3 ) அரசியல் ( 2 ) ஈழம் ( 2 ) கண்ணதாசன் ( 2 ) கண்ணதாசன். ( 2 ) கனிமொழி ( 2 ) கார்த்தி ( 2 ) கிரிக்கெட் ( 2 ) கே.பாலச்சந்தர் ( 2 ) சாருநிவேதிதா ( 2 ) சூப்பர் சிங்கர் ( 2 ) செம்மொழி மாநாடு ( 2 ) சோ. ( 2 ) ஜெயகாந்தன் ( 2 ) தேர்தல் ( 2 ) தொலைக்காட்சி விவாதங்கள் ( 2 ) நடிகர் சிவகுமார் ( 2 ) பதிவர்கள் ( 2 ) மாதம்பட்டி சிவகுமார் ( 2 ) ரகுமான் ( 2 ) வாலி ( 2 ) விகடன் ( 2 ) விஜய்டிவி ( 2 ) விஸ்வநாதன் ( 2 ) வெல்லும் சொல் ( 2 ) 'அண்ணாச்சி' சண்முக சுந்தரம் ( 1 ) அக்னிச்சிறகுகள் ( 1 ) அண்ணாச்சிசண்முகசுந்தரம். ( 1 ) அனுபவங்கள் ( 1 ) அன்னை தெரசா ( 1 ) அப்துல்கலாம் ( 1 ) அமேசான் ( 1 ) அரசியல் ராஜதந்திரம் ( 1 ) அர்விந்த்கெஜ்ரிவால் சிவகுமார். ( 1 ) அறம்செய விரும்பு ( 1 ) அறிவுமதி ( 1 ) ஆ. ராசா ( 1 ) ஆக்டோபஸ் ( 1 ) ஆனந்த விகடன் ( 1 ) ஆபாசம் ( 1 ) ஆம்ஆத்மி ( 1 ) ஆய்வுகள் ( 1 ) ஆர்என்கே பிரசாத். ஒளிப்பதிவாளர் கன்னடத்திரையுலகம். ( 1 ) ஆஸ்கார் ( 1 ) ஆஸ்டின் கார். ( 1 ) இடைத்தேர்தல் ( 1 ) இந்தியாடுடே ( 1 ) இந்திராகாந்தி ( 1 ) இனப்படுகொலை ( 1 ) இயக்குநர் ஸ்ரீதர். ( 1 ) இரும்புப் பெண்மணி. ( 1 ) இளைய ராஜா ( 1 ) இளைய ராஜாவா...ரகுமானா ( 1 ) இளையராஜா சிம்பனி திரையிசை. ( 1 ) இளையராஜா. ( 1 ) உடல்நலம். ( 1 ) உடல்மொழி ( 1 ) உலகக்கால்பந்து போட்டிகள் ( 1 ) எடியூரப்பா ( 1 ) எட்டுநடை ( 1 ) எம்.ஆர்.ராதா ( 1 ) எம்.ஜி.ஆர் ( 1 ) எம்ஜிஆர். ( 1 ) எழுத்தாளர்கள் ( 1 ) ஏ.ஆர்.ரகுமான். ( 1 ) ஒலிம்பிக்ஸ் ( 1 ) ஓவியங்கள் ( 1 ) கங்கை அமரன் ( 1 ) கடமை. ( 1 ) கடவுள் ( 1 ) கடிதங்கள். ( 1 ) கணிணி யுகம் ( 1 ) கணிப்புக்கள் ( 1 ) கதாநாயகி ( 1 ) கன்னடம் ( 1 ) கமலஹாசன் ( 1 ) கமல் ( 1 ) கமல்ஹாசன் ( 1 ) கம்பன் என் காதலன் ( 1 ) கராத்தே. ( 1 ) கருணாநிதி ( 1 ) கருணாநிதி. ( 1 ) கற்பு நிலை ( 1 ) கலைஅடையாளம். ( 1 ) கல்கி ( 1 ) கவிஞர் ( 1 ) காங்கிரஸ் ( 1 ) காங்கிரஸ் பிஜேபி ஜனதாதளம். ( 1 ) காதல் திருமணம் ( 1 ) காப்பி ( 1 ) காமராஜர் ( 1 ) காலச்சுவடு ( 1 ) குமுதம் ( 1 ) குழந்தைகள் ( 1 ) கேவிமகாதேவன் ( 1 ) கொளத்தூர் மணி ( 1 ) சகுனி. ( 1 ) சத்யன் ( 1 ) சத்யராஜ் ( 1 ) சாரு நிவேதிதா ( 1 ) சாவித்திரி ( 1 ) சிக்மகளூர் ( 1 ) சிறப்பிதழ் ( 1 ) சிறப்பு மலர் சங்க இலக்கியம் படைப்பிலக்கியம் ( 1 ) சிறுவயது நினைவுகள். ( 1 ) சிவகுமார் பெண்ணின்பெருமை கடவுள். ( 1 ) சுதந்திரவீரர்கள் ( 1 ) சூப்பர்சிங்கர் ( 1 ) செக்ஸ் ( 1 ) செந்தமிழ்நாடு ( 1 ) சென்னியப்பன். ( 1 ) செயிண்ட் தெரசா ( 1 ) செரினா வில்லியம்ஸ் ( 1 ) சொர்க்கம் ( 1 ) சோ ( 1 ) ஜெயகாந்தன். ( 1 ) ஜெயலலிதா. ( 1 ) ஜோசியம் ( 1 ) ஞாநி ( 1 ) ஞானபீடம் ( 1 ) டாக்டர்கள் ( 1 ) டிஎம்எஸ் ( 1 ) தடம்புரண்டரயில் ( 1 ) தந்தி டிவி ( 1 ) தந்திடிவி. ( 1 ) தனியார் நிறுவனங்கள் ( 1 ) தமிழன் பிரசன்னா ( 1 ) தமிழரசி ( 1 ) தமிழ் ( 1 ) தமிழ் மணம் போட்டி ( 1 ) தமிழ்இணையம் ( 1 ) தமிழ்இணையம். ( 1 ) தமிழ்திரை இசை இன்னிசை ஆர்க்கெஸ்ட்ரா. ( 1 ) தமிழ்நாடு ( 1 ) தமிழ்நாடு தேர்தல் ( 1 ) தமிழ்போர்னோ. ( 1 ) தமிழ்மணம் நட்சத்திர வாரம். ( 1 ) தர்மபுரி ( 1 ) தற்கால இலக்கியம் ( 1 ) தலைக்கு மேல் குழந்தை ( 1 ) தலைமைப்பண்பு ( 1 ) தாமதம் ( 1 ) தாம்பத்யம் ( 1 ) தாய்மொழி ( 1 ) தி இந்து. ( 1 ) தினத்தந்தி ( 1 ) தினமணி. ( 1 ) திமுகவின் தோல்வி ( 1 ) திருமாவளவன் ( 1 ) திரைஇசை ( 1 ) திரையுலக மார்க்கண்டேயன். ( 1 ) தீபாவளி ( 1 ) தூக்குதண்டனை ( 1 ) தூக்குதண்டனை. ( 1 ) தேநீர் ( 1 ) தொழில் புரட்சி ( 1 ) தோப்பில் முகமது மீரான். தமிழ் இந்து ( 1 ) நடிக ர் சிவகுமார் பேட்டி ( 1 ) நடிகர் கார்த்தி ( 1 ) நடிகர் சத்யன் ( 1 ) நடிகை மற்றும் பாடகி. ( 1 ) நடிகை ஸ்ரீதேவி ( 1 ) நம்பிக்கை. ( 1 ) நரகம் ( 1 ) நாகேஷ் ( 1 ) நித்தியானந்தா ( 1 ) நினைவலைகள். ( 1 ) நீல்கிரீஸ் ( 1 ) பட்டாசு ( 1 ) பட்டிமன்றம் பாரதிதாசன். ( 1 ) பதிவர்கள்சண்டை. ஈகோயுத்தம் இணையதளம் ( 1 ) பத்திரிகைகள் ( 1 ) பல்கலை வித்தகர் ( 1 ) பழைய பாடல்கள் ( 1 ) பழைய பாடல்கள். ( 1 ) பாடல்கள் ( 1 ) பாட்டுத்தழுவல் ( 1 ) பாரதி ( 1 ) பாரதிதாசன் ( 1 ) பாரதியார் ( 1 ) பாரதிராஜா ( 1 ) பாரதிராஜா. ( 1 ) பாலச்சந்திரன் ( 1 ) பாலுமகேந்திரா ( 1 ) பால்டெய்ரி ( 1 ) பிஎஸ்என்எல் ( 1 ) பின்னணி இசை ( 1 ) பிபிஸ்ரீனிவாஸ் ( 1 ) பிரதமர் நாற்காலி ( 1 ) பிரதமர் மோடி. ( 1 ) பிரபாகரன் ( 1 ) பிரபு சாலமோன் ( 1 ) பிளேபாய் ( 1 ) பிள்ளைகள் ( 1 ) புதியபார்வை ( 1 ) புது வீடு. ( 1 ) புதுமை. ( 1 ) புத்தகங்கள் ( 1 ) புத்தகத்திருவிழா ( 1 ) புனிதர் தெரசா. ( 1 ) புரட்சித்தலைவி ( 1 ) புலிக்குட்டிகள் ( 1 ) புஷ்பா தங்கதுரை ( 1 ) பெங்களூர். ( 1 ) பெங்களூர்த்தமிழ்ச்சங்கம் ( 1 ) பேக்கரி ( 1 ) போகப்பொருள். ( 1 ) போதிதர்மன் ( 1 ) போப் ஆண்டவர். ( 1 ) ம.நடராஜன் ( 1 ) மகாபாரதம் ( 1 ) மணிரத்தினம் ( 1 ) மணிவண்ணன் ( 1 ) மதர் தெரசா ( 1 ) மந்திரப் புன்னகைப் ( 1 ) மனிதாபிமானம் ( 1 ) மனோபாலா ( 1 ) மனோரமா ( 1 ) மயில்சாமி அண்ணாதுரை ( 1 ) மறக்கமுடியாத பாடல்கள் ( 1 ) மாற்று மருத்துவம் ( 1 ) மாற்றுமருத்துவம் ( 1 ) மிஷ்கின் ( 1 ) முதல்வர். ( 1 ) முத்தப்போராட்டம். ( 1 ) முரசொலி மாறன் ( 1 ) முருகதாஸ் ( 1 ) முஸ்லிம் சமூகம். சாகித்ய அகாதமி. ( 1 ) மெல்லிசை மன்னன் ( 1 ) மெல்லிசை மன்னர்கள் ( 1 ) மெல்லிசை மன்னர்கள்… ( 1 ) மைனா ( 1 ) ரங்கராஜ் பாண்டே ( 1 ) ரஜனி. ( 1 ) ரஜினி ( 1 ) ரயில் பயணம் ( 1 ) ரயில்வே ( 1 ) ராகுல் காந்தி ( 1 ) ராஜிவ்கொலைவழக்கு ( 1 ) ராம மூர்த்தி ( 1 ) ரெய்கி ( 1 ) லாஜிக் ( 1 ) லியோனி ( 1 ) லிவிங்டுகெதர் ( 1 ) லீனா மணிமேகலை ( 1 ) வசந்திதேவி ( 1 ) வன்முறை. ( 1 ) வலம்புரிஜான் ( 1 ) வவ்வால் ( 1 ) வாக்குவங்கி ( 1 ) வாஜ்பேயி ( 1 ) விகடன் பிரசுரம் ( 1 ) விஜய்டிவி. ( 1 ) விஞ்ஞானம் ( 1 ) விஞ்ஞானி ( 1 ) வித்தியாசக் கதைக்களன். ( 1 ) விபரீத ஆட்டம். ( 1 ) வியாதிகள் ( 1 ) விவாரத்து ( 1 ) விஸ்வநாதன். ( 1 ) வீடுகட்ட லோன் ( 1 ) வீரப்பன் ( 1 ) வைகோ ( 1 ) வைகோ சீமான் கருணாநிதி ( 1 ) வைரமுத்து ( 1 ) ஷோபா ( 1 ) ஸ்டாலின் ( 1 ) ஸ்டாலின். ( 1 ) ஸ்ரீவேணுகோபாலன் ( 1 ) ஹாஸ்டல் ( 1 ) |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
தொலைகாட்சி முன் அமர்ந்து வருடம் கடந்து விட்டது. உங்கள் கட்டுரை வழியே ஆல்பா தரவிறக்கினேன். தொகா ரிமோட் இயக்கும் விதமே மறந்து விட்டிருந்தது :) அது ஒரு ஜேம்ஸ் பாண்ட் டிவி .காணும் எதையும் அதன் வழியே முப்பரிமாணமாக மாற்றிக் கொண்டு பார்க்க முடியும் [சன் டிவி சீரியலைக் கூட] . தங்கை மகள் உதவியுடன் ரிமோட் இயக்கி முப்பரிமாணத்தில் ஆல்பா [துணை உரை இன்றி] படம் பார்த்தேன்.
உடனடியாக நினைவில் எழுந்த படம் கெவின் காஸ்னர் இயக்கி நடித்த டான்சிங் வித் ஒல்வ்ஸ் படம். செவ்விந்தியக் குடி கொஞ்சம் கொஞ்சமாக கெவினுடன் இணங்குவதை, ஓநாய் ஒன்று கெவினுடன் கொஞ்சம் கொஞ்சமாக நட்பாவதை குறியீடாக்கி காட்சிப் படுத்தப் பட்டிருக்கும். இரண்டாவது படம் ஒல்ப் டோடம். ஜியாங் ரோங் நாவலை மையமாகக் கொண்டு உருவான படம். அதில் ஒரு ஓநாயை டொமெஸ்டிக்கேட் செய்ய முயன்று, அதற்கு இணங்காமல் இறுதிவரை அந்த ஓநாய் போராடி சாகும் காட்சி ஒன்று உண்டு .
இந்த இரண்டு படங்களின் ஊடே இந்த ஆல்பா படத்தை பொருத்தி யோசிக்கையில், ஓநாய்க் கூட்டத்தில் ஏதோ ஒரு தலைமை ஓநாய், பாவம் பயலுக, நம்ம நிழல்ல வாழ வேண்டிய பயலுக என முடிவெடுத்து, அதுவே முன் வந்து டொமெஸ்டிக்கேட் ஆகி மானுடனுடன் இணைந்து கொண்டு விட்டதோ என நகைச்சுவையாக தோன்றியது.
லக்சாஸ் குகையில் கண்டெடுத்த தொல்லெச்சங்களில், இளைஞனை விட சற்றே வயது குறைந்த பாலகன் மற்றும் ஒருஓநாயின் எலும்புகள் சில கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. மானுடக் குடியுடன் இணைந்த நாய்களின் முதல் ஐயமற்ற எச்சம் சிரியாவில் கிடைத்திருக்கிறது. அதன் காலம் இன்றிலிருந்து பத்தாயிரம் வருடம் முன்பு. சில ஆய்வுகள் இன்றிலிருந்து இருபதாயிரம் வருடங்கள் முன்பு ஐரோப்பிய நிலத்தில் ஓநாய் மனிதனுடன் இணங்கியது. பனியுக முடிவில் இன்றிலிருந்து பத்தாயிரம் வருடம் முன்பு மத்திய ஆசியா பகுதியில் ஓநாயில் இருந்தது கிளைத்த நாய்கள் மனிதனுடன் இணங்கியது. நாய்களில் நிகழ்ந்த இந்த இரண்டு பண்படுதலுக்குப் பிறகே நாய்களை மனிதகுலம் வேட்டைக்கும் காவலுக்கும் பழக்கத் துவங்கியது என்கிறது.
இந்தத் திரைப்படம் இருபதாயிரம் வருடம் முன்பு ஓநாயும் மனிதனும் கொண்ட முதல் தொடர்பை உணர்சிகரமான சித்திரமாக உருவாக்கிக் காட்டுகிறது. கெடா வேட்டையாடும் சமத்து சற்றே குறைந்தவன் என்பது அவன் தாயின் கவலை. அந்த சமத்து இன்றி அவன் ஆபத்தில் சிக்கிக் கொள்கிறான். ஓநாய் கூட்டத்தால் தாக்கப் படுகிறான்.கூட்டத்தில் ஓநாய் ஒன்றை காயமாக்குகிறான். தன்னைப் போலவே காயம்பட்டு, கூட்டத்தினின்றும் தனிமைப்பட்டுக் கிடக்கும் ஓநாயைக் காப்பாற்றுகிறான். அங்கே துவங்கும் அனைத்தும் என்னை அப்படியே உணர்சிகரமாக சுழற்றி அடித்து விட்டது. உங்கள் வசனம் ஒன்றைப் போல, சிவாஜி படம் பார்த்தல்ல சிவாஜி எனும் பெயரைக் கேட்டாலே அழுது விடும் அளவு ஆள் நான்.என்னவாகி இருப்பேன் என யூகித்துக் கொள்ளுங்கள்.
அவன் உடன் இணைந்து அவனால் இயலாமை கொண்ட இடங்களில் ஜஸ்ட் லைக் தட் வேட்டையாடி உணவைக் கொண்டு வந்து அவனுக்கு அளிப்பது, அவன் தனக்கிடும் பெயரை அது தனது பெயர் என அறிந்துகொள்வது என உடல்மொழி பாவனைகள் வழியே [ கணிப்பொறி வரைகலையே எனினும்] சிறப்பாகவே நடித்திருக்கிறது ஆல்பா.
படம் அளித்த உணர்வு நிலைகளில் முக்கியமானது க்ளைமாக்ஸ் வழியே நான் அடைந்தது. ஆல்பா குட்டி போடும் போதே அட அது பொண்ணா என மனதில் தோன்றியது. அதில் அனைத்தும் தலைகீழ் ஆனது. நான் எப்படி படம் நெடுக அவனை ஆண் என நினைத்திருந்தேன் என தெரியவில்லை. [என் இயல்பால் உள்ளே நானொரு ஆணாதிக்கப் பன்றியாக இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்] அவள் பெண் என அறிய வருகையில், ஒரு தீவிர சிறுகதை போல அனைத்தும் முதலில் இருந்தது வேறு உணர்வுகள் கொண்டு தொடங்கியது. குறிப்பாக கெடா ஆற்றுக்குள் சிக்கித் தவிக்க,அந்த ஆற்றின் பனிக் கண்ணாடித் தளத்தின் மேல் பதறியபடி, கெடாவை தொடரும் ஆல்பாவின் சித்திரம்.
இறுதிக் காட்சியில் உதய சூரியன் ஒளியின் பொன்னிற வட்டத்தில் ஆல்பா குட்டியின் நிழல்வெட்டுத் தோற்றம் மழலைக் கூவல் எழுப்பும் தருணம் ஏதோ வானத்து தேவர் கூட்டம் மொத்தமும் வாழுங்கடா போய் என இருவரையும் ஆசிர்வாதம் அளித்தது போன்றதொரு பரவசம்.
உரை இன்றி உரையாடலை கவனிக்கக் கிடைத்தது இனிய அனுபவம். கொஞ்சம் முயன்றால் கற்றுக் கொண்டு பேசிவிடலாம் என்பது போல உணர்வு எழுந்தது. உலகின் எந்த நிலத்திலும் செல்லுபடி ஆகும் மொழி. இப்படித் தன்னியல்பாக உருவான, எழுத்து லிபி அற்ற, பேச்சில் மட்டுமே நீடிக்கும் சில மொழிகள் [முப்பது எண்ணிக்கை வரை] சில தீவுகளில் உண்டு என இணையம் சொல்கிறது. சீனாவில் பெண்கள் மட்டுமே அறிந்து, பெண்களுக்குள் மட்டுமே புழங்கிய இப்படி ஒரு மொழி இருந்தது ஆவணப்படுத்தப் பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் நீங்கள் சொல்வது போல, அ ய என அழைக்கப்படும் அப்பா குறித்த சொல் பிற எவரையும் விட எனக்கு அணுக்கமானது.காரணம் எனது அம்மா வழியில் கொட்டைப்பாக்கன் வகையறாவில் இப்போதும் அப்பாவை அய்யா என்றுதான் அழைப்பார்கள். சித்தப்பா பெரியப்பா எனில் சின்னைய்யா பெரியய்யா. என் தலைமுறையுடன் அது முடிவுக்கு வருகிறது. கூட்டுக் குடும்பம் முடிய, நகர வாழ்வின் அடுத்த தலைமுறைக்கு இன்று டாடிதான்.அப்பா கூட இல்லை. அம்மாவின் தாத்தா இறுதி சடங்கில், அவரது ஏழு பெண்மக்களும் சூழ நின்று அய்யா அய்யா என விளித்து அழுததை சுற்றத்தோர் தெருவோர் விநோதமாக பார்த்ததை நான் பார்த்து நின்றிருக்கிறேன். அய்யாவழி, அய்யனார் என எங்கோ இனி குடும்பத்துக்கு வெளியே மட்டுமே கேட்கப் போகிற ஒரு ஒரு சொல். இருபதாயிரம் வருடத்தைக் கடந்தது வந்த ஒரு சொல். அய்யா.
அம்மாவைக் கூட்டி அவன் அப்பாவை எப்படிக் கூப்பிடுகிறான் பாருங்கள் என்று காட்டினேன். கூர்ந்தது கேட்டவர்கள் ”நம்ம தாய்வழி மக்க” ளா இருக்குமோ என்றார்கள் குறும்பு சிரிப்புடன். சரிதான் ஆதித்தமிழன் பேசிய மொழி தமிழ். ஆதித் தமிழன் ஒரு நாடார். அதிலும் குறிப்பாக கொட்டப்பாக்கன் வகையறா. இந்த வருட குல தெய்வ கோவில் கொடைக்கு இந்தப் படத்தை திரையிட்டு ஒரு எழுச்சிப் பேருரை ஆற்றிவிட வேண்டியதுதான். :)
கடலூர் சீனு
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
முந்தைய கட்டுரைஇடதுசாரிகள் -கடிதம்
அடுத்த கட்டுரைநினைவுகளைத் தொடுத்தெழுதும் வரலாறு – யுவன் சந்திரசேகரின் சிறுகதைகள்
jeyamohan
தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும்
சொற்கள்- கடிதம்
சந்திக்காதவர்கள்,சந்தித்தவர்கள்…
அருண்மொழி உரை, கடிதம்
இந்திய இலக்கிய வரைபடம்-கடிதம்
கேரள தலித்துக்கள் – கடிதங்கள்
ஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்
அத்தர் – கடிதம்
இளம் முகங்கள், கடிதம்
இலங்கை முகாம்கள், கடிதம்
அருண்மொழி, கடிதம்
கோவை சொல்முகம் கூட்டத்தில் செந்தில்
ஒரு கோவை வாசகர்
வெண்முரசு இசை வெளியீடு
வெண்முரசு நூல்கள் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பகம்
முந்தைய பதிவுகள் சில
ஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு
‘வெய்யோன்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன்
‘வெண்முரசு’–நூல் இருபத்திஐந்து–கல்பொருசிறுநுரை–82
பனிமனிதன்
யா தேவி! - கடிதங்கள்-13
உடையாள்-7
தெளிவத்தை ஜோசப்- சுப்பையா கமலதாசன் (பொகவந்தலாவை)
வற்கீஸின் அம்மா:மேலும் கடிதங்கள்
நோயும் அடைக்கலமும் -கடிதங்கள்
'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-76
முந்தைய பதிவுகள்
முந்தைய பதிவுகள் Select Month December 2021 (38) November 2021 (163) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (162) March 2021 (203) February 2021 (149) January 2021 (142) December 2020 (145) November 2020 (123) October 2020 (141) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (157) December 2019 (151) November 2019 (118) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (128) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (89) May 2016 (88) April 2016 (145) March 2016 (128) February 2016 (112) January 2016 (131) December 2015 (127) November 2015 (114) October 2015 (122) September 2015 (107) August 2015 (102) July 2015 (115) June 2015 (110) May 2015 (87) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (121) October 2014 (122) September 2014 (122) August 2014 (94) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (84) February 2013 (54) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (60) July 2012 (65) June 2012 (72) May 2012 (62) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (79) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (64) April 2011 (81) March 2011 (100) February 2011 (109) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (43) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (74) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (68) October 2009 (80) September 2009 (72) August 2009 (69) July 2009 (54) June 2009 (74) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (64) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (32) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) March 2007 (1) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (5) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1)
வெண்முரசு விவாதங்கள்
பதிவுகளின் டைரி
December 2021
M
T
W
T
F
S
S
« Nov
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
கட்டுரை வகைகள்
கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை
விவாத இணையதளங்கள்
வெண்முரசு விவாதங்கள்
விஷ்ணுபுரம்
கொற்றவை
பின் தொடரும் நிழலின் குரல்
பனிமனிதன்
காடு
ஏழாம் உலகம்
அறம்
வெள்ளையானை
குருநித்யா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சொல்புதிது குழுமம்
Subscribe in Email
Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email
RSS Feeds
Subscribe in a reader
தொடர்புக்கு
இணையதள நிர்வாகி : [email protected]
ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]
பதிவுகளை உடனடியாக பெற
© 2005 - 2021 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். |
இரு கேள்விகள். இரண்டுமே பெண்களிடமிருந்து. அதுவும் இளையதலைமுறைப் பெண்கள். அவர்களுக்குத்தான் இந்தவகையான சந்தேகங்கள் வருகின்றன
அ. இப்போதெல்லாம் ஏன் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிகிறீர்கள்? அதை என் ’ஸ்டேண்டேர்ட்’ ஆடையாக ஆக்கிக் கொள்கிறீர்களா? அது நன்றாக இருக்கிறது என்பது வேறுவிஷயம்…
முதலில் சொல்லவேண்டியது, அந்த ஆடைகளை நான் வாங்கவில்லை. நூற்பு சிவகுருநாதன் மற்றும் நண்பர்கள் எனக்குப் பரிசளித்தவை அவை. அணிவதற்கு வசதியானவை. வேட்டியை அணியும்போது கொஞ்சம் அன்னியமாக இருக்கும். ஆனால் வேட்டி கட்டி கொஞ்சம் பழகிவிட்டால் இந்தியத் தட்பவெப்பத்திற்கு பிற ஆடைகள் அசௌகரியமானவை என்று தோன்றும். அவை காலைக் கவ்விக்கொண்டிருப்பது போலவே இருக்கும்.
நம் ஆடைகளை எப்படி தெரிவுசெய்கிறோம்? யோசித்துப்பாருங்கள். திருநங்கையர் ஆணாக பிறக்கிறார்கள். தங்கள் உடலிலும் உள்ளத்திலும் மாறுதல்களை உணர்ந்ததுமே பெண்ணுடை அணிய ஆரம்பிக்கிறார்கள். அவமதிப்புகள், குடும்ப உறவுகளை இழப்பது என மொத்த வாழ்க்கையே மாறிவிடுகிறது. வேலை கிடைக்காது. பிச்சை எடுக்கவேண்டும். ஆணுடை அணிந்து ரகசியமாக இருந்துகொண்டால் எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடிவதில்லை. உள்ளே மாறிவிட்ட பின் ஒருவர் வெளியே மாறாமலிருக்க முடியாது. வெளியே இன்னொரு ஆடையை அணிவது வேடம் போட்டுக்கொண்டு, எடையைச் சுமந்துகொண்டு அலைவதுபோல தோன்றும்.
நமக்கு அகத்தே எவ்வளவு வயதோ அந்த ஆடையை தேர்வுசெய்கிறோம். சிலர் அறுபது வயதில் தலைச்சாயம் அடித்து இளமையான ஆடைகள் அணிகிறார்கள் என்றால் அவர்கள் அதையே உள்ளூர உணர்கிறார்கள் என்று பொருள். அதில் பிழை ஏதும் இல்லை. என் சிக்கல் என்னவென்றால் நான் எங்கும் ஒரே வயதை உணர்வதில்லை. ஒரு மலையேற்றத்தில், ஒரு சினிமா வேலையில் இளமையாகவே உணர்கிறேன். ஒரு திருமணவிருந்தில், சில மேடைகளில், சில சந்திப்புகளில் முதியவராக உணர்கிறேன். ஆடை அதற்கேற்ப மாறுகிறது.
இன்னொன்றையும் கவனித்தேன். எவராக இருந்தாலும் அரசுசார் வேலையில் இருந்தால் அறுபது வயதில் ‘முதிய’ மனநிலை வந்துவிடுகிறது. அது அதிகாரபூர்வ ஓய்வுபெறும் வயது. நாம் பதினைந்தாண்டுகளுக்கு முன்னரே பணியிலிருந்து விலகினாலும்கூட மானசீகமாக அரசு வேலையில்தான் இருக்கிறோம். ஒரு கடை வைத்திருப்பவருக்கு இப்படி தோன்றாது என நினைக்கிறேன். நான் வேலையை விட்டபின்னரும் அரசுவிடுமுறையும் ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து ‘லாங் ஹாலிடே’ வருமென்றால் மகிழ்ச்சி அடைவதுண்டு. இதேபோலத்தான். இது நான் பிஎஸ்என்எல்லில் இருந்திருந்தால் ஓய்வுபெறும் வயது. 2022 ஏப்ரல் 22 அன்று.
ஜெ
ஆ. சிலர் இணையதளங்களில் மிகமிகக் கடுமையாக உங்களைத் தாக்குகிறார்கள். ஒருமையில் வாடபோடா என்று பேசுவது, கெட்டவார்த்தைகள் சொல்வது. இதெல்லாம் வாசிக்கையில் தமிழில் எழுதுவதனாலேயே ஓர் எழுத்தாளர் இதைக் கேட்டுத்தான் ஆகவேண்டுமா என்ற எண்ணம் வருகிறது. தமிழில் வேறெந்த எழுத்தாளரையும் இப்படி வசைபாடுவதில்லை.
எதிர்வினையாற்ற வேண்டும் என்று தோன்றினாலும் அவர்கள் ஏங்குவதே அப்படி சில எதிர்வினைகள் வந்து கவனிக்க மாட்டோமா என்பதற்காகத்தான் என்றும் தோன்றுகிறது. இவர்களை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அப்படி வசைபாடுபவர்களில் ஒருவர் அவ்வாறு மிகக்கேவலமாக வசைபாடுவதற்குச் சொன்ன காரணம் நான் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பது. எழுத்தாளர்களை மதிக்கவேண்டும் என்ற கொள்கையால் கெட்டவார்த்தை சொல்கிறார்கள் என்றால் அதில் ஒரு முரண்பாடு இருந்தாலும் உயர்ந்த கொள்கைதானே?
கொள்கை, இலக்கியம் என பல காரணங்கள் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலும் அது அவர்களின் மனச்சிக்கல். அப்படி ஒரு கசப்புநிலையிலேயே ஒருவர் இருந்து கொண்டிருக்கிறார் என்றால் அது பெரிய நரகம். அனுதாபம்தான் உள்ளது, மெய்யாகவே.
சிலர் தொழில்முறையாக வசைபாடுபவர்கள். அவ்வாறு வசைபாடியபின் அதேபோல என்மேல் காழ்ப்போ பொறாமையோ கொண்டவர்களிடமிருந்து பணம் கேட்டுப்பெற்றுக் கொள்கிறார்கள். அது ஒரு வாழ்வாதாரம். அதுவும் அனுதாபத்திற்குரியதே.
அவர்கள்மேல் பரிவுதான், வேறெந்த உணர்வும் இல்லை. நான் அப்படிச் சொல்லிக் கேட்கும்போது ஒரு அரசியல்நாகரீகம் கருதிப் பொய்யாகச் சொல்கிறேன் என்று தோன்றும். நீங்கள் உங்களால் மகத்தானது என நம்பப்படும் ஒரு பணியைச் செய்துவிட்டீர்கள் என்றால் மெய்யாகவே அந்த மனநிலை வந்துவிடும். அது நம்மை ஏராளமான சிறுமைகளில் இருந்து விடுவிக்கும். மானுடவாழ்க்கையின் மிகப்பெரிய விடுதலை அதுதான்.
ஜெ
Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
Print
முந்தைய கட்டுரைமுதற்காதலின் தளிர்வலை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெயல், தடைகள்
jeyamohan
தொடர்புடைய கட்டுரைகள்ஆசிரியரிடமிருந்து மேலும்
எழுதுவதை பயில்தல்
சிவபூசையின் பொறுப்பும் வழியும்
தத்துவத்தின் பயன்மதிப்பு
சந்திக்காதவர்கள்,சந்தித்தவர்கள்…
மலையாளப் பாடல்களில் சம்ஸ்கிருதம்
ஞானி, தத்துவஞானி, தத்துவவாதி எனும் சொற்கள்
புறப்பாடு, கடிதம்
பழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்
கடிதங்கள்
தியானமும் உள்ளமும்- கடிதம்
மரபு, உரை- ஒரு கடிதமும் பதிலும்
நாம் சுதந்திரமானவர்களா?
வெண்முரசு இசை வெளியீடு
வெண்முரசு நூல்கள் வாங்க
விஷ்ணுபுரம் பதிப்பகம்
முந்தைய பதிவுகள் சில
யானை டாக்டர் - கடிதங்கள்
மொழியாக்கம்,கடிதம்
பௌத்த காவியங்கள், செயலூக்கம்- கடிதங்கள்
கதைகள்- கடிதங்கள்
சாய்வுநாற்காலி
'வெண்முரசு' - நூல் எட்டு - 'காண்டீபம்' - 15
குகைகளின் வழியே - 6
கடிதங்கள்
காடு- கடிதம்
கனவுத்தமிழகம்
முந்தைய பதிவுகள்
முந்தைய பதிவுகள் Select Month December 2021 (38) November 2021 (163) October 2021 (166) September 2021 (169) August 2021 (170) July 2021 (165) June 2021 (175) May 2021 (171) April 2021 (162) March 2021 (203) February 2021 (149) January 2021 (142) December 2020 (145) November 2020 (123) October 2020 (141) September 2020 (142) August 2020 (155) July 2020 (161) June 2020 (151) May 2020 (166) April 2020 (175) March 2020 (141) February 2020 (123) January 2020 (157) December 2019 (151) November 2019 (118) October 2019 (135) September 2019 (129) August 2019 (143) July 2019 (136) June 2019 (134) May 2019 (145) April 2019 (141) March 2019 (125) February 2019 (132) January 2019 (155) December 2018 (144) November 2018 (148) October 2018 (137) September 2018 (118) August 2018 (121) July 2018 (146) June 2018 (144) May 2018 (139) April 2018 (135) March 2018 (75) February 2018 (123) January 2018 (148) December 2017 (128) November 2017 (120) October 2017 (110) September 2017 (108) August 2017 (129) July 2017 (132) June 2017 (144) May 2017 (121) April 2017 (128) March 2017 (134) February 2017 (114) January 2017 (123) December 2016 (139) November 2016 (122) October 2016 (104) September 2016 (92) August 2016 (106) July 2016 (104) June 2016 (89) May 2016 (88) April 2016 (145) March 2016 (128) February 2016 (112) January 2016 (131) December 2015 (127) November 2015 (114) October 2015 (122) September 2015 (107) August 2015 (102) July 2015 (115) June 2015 (110) May 2015 (87) April 2015 (142) March 2015 (120) February 2015 (93) January 2015 (137) December 2014 (119) November 2014 (121) October 2014 (122) September 2014 (122) August 2014 (94) July 2014 (104) June 2014 (93) May 2014 (88) April 2014 (83) March 2014 (78) February 2014 (69) January 2014 (80) December 2013 (77) November 2013 (92) October 2013 (106) September 2013 (69) August 2013 (105) July 2013 (91) June 2013 (73) May 2013 (62) April 2013 (63) March 2013 (84) February 2013 (54) January 2013 (78) December 2012 (74) November 2012 (77) October 2012 (73) September 2012 (67) August 2012 (60) July 2012 (65) June 2012 (72) May 2012 (62) April 2012 (54) March 2012 (59) February 2012 (58) January 2012 (66) December 2011 (76) November 2011 (52) October 2011 (79) September 2011 (72) August 2011 (104) July 2011 (81) June 2011 (71) May 2011 (64) April 2011 (81) March 2011 (100) February 2011 (109) January 2011 (75) December 2010 (76) November 2010 (79) October 2010 (73) September 2010 (70) August 2010 (43) July 2010 (36) June 2010 (24) May 2010 (19) April 2010 (45) March 2010 (74) February 2010 (61) January 2010 (77) December 2009 (88) November 2009 (68) October 2009 (80) September 2009 (72) August 2009 (69) July 2009 (54) June 2009 (74) May 2009 (60) April 2009 (52) March 2009 (74) February 2009 (63) January 2009 (64) December 2008 (55) November 2008 (41) October 2008 (51) September 2008 (42) August 2008 (43) July 2008 (41) June 2008 (37) May 2008 (30) April 2008 (34) March 2008 (32) February 2008 (50) January 2008 (18) December 2007 (8) October 2007 (3) August 2007 (4) July 2007 (3) May 2007 (11) April 2007 (2) March 2007 (1) February 2007 (6) January 2007 (4) November 2006 (1) July 2006 (1) May 2006 (5) April 2006 (1) February 2006 (3) January 2006 (1) November 2005 (1) May 2005 (2) January 2005 (2) December 2004 (5) June 2004 (1) May 2004 (5) April 2004 (2) March 2004 (49) February 2004 (1) November 2003 (1) May 2003 (5) April 2003 (1) March 2003 (1) January 2003 (1) December 2002 (2) October 2002 (1) August 2002 (2) May 2002 (1) April 2002 (8) April 2001 (3) March 2001 (1) February 2001 (1) December 2000 (1) July 2000 (1) December 1999 (2) May 1990 (1)
வெண்முரசு விவாதங்கள்
பதிவுகளின் டைரி
December 2021
M
T
W
T
F
S
S
« Nov
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
கட்டுரை வகைகள்
கட்டுரை வகைகள் Select Category Featured ஆன்மீகம் கீதை தத்துவம் மதம் ஆளுமை அசோகமித்திரன் அஞ்சலி ஆற்றூர் ரவிவர்மா காந்தி கி.ராஜநாராயணன் கோவை ஞானி சுந்தர ராமசாமி தேவதேவன் நாஞ்சில் நாடன் இலக்கியம் அறிமுகம் இலக்கிய அமைப்புகள் இலக்கிய நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடு எழுத்து கவிதை நாடகம் நாவல் நூலறிமுகம் நூல் புனைவிலக்கியம் புனைவு மதிப்பீடு மதிப்புரை முன்னுரை மொழியாக்கம் வாசிப்பு விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் உரை ஒலிப்பதிவு கட்டுரை அனுபவம் அரசியல் அறிவியல் இசை இணையம் இயற்கை உணவு உரையாடல் ஊடகம் ஓவியம் கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி குழுமவிவாதம் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தமிழகம் தளம் திரைப்படம் தொல்லியல் நீதி பண்பாடு பதிப்பகம் புத்தக கண்காட்சி பொருளியல் மகாபாரதம் மரபு மருத்துவம் மொழி வரலாறு வாழ்த்து விளக்கம் விவாதம் வேளாண்மை காணொளிகள் நகைச்சுவை நேர்காணல் நேர்காணல் மற்றும் பேட்டிகள் படைப்புகள் குறுநாவல் சிறுகதை பயணம் நிகழ்வுகள் பிற அறிவிப்பு அழைப்பிதழ் நூல் வெளியீட்டு விழா கலந்துரையாடல் நிகழ்ச்சி புகைப்படம் பிறர் படைப்புகள் நூல் மதிப்புரை பொது மொழிபெயர்ப்புகள் வாசகர்கள் எதிர்வினை கடிதம் கேள்வி பதில் வாசகர் கடிதம் வாசகர் மதிப்புரை விருது குமரகுருபரன் விருது விழா விஷ்ணுபுரம் விருது ஆவணப்படம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் கல்பொருசிறுநுரை களிற்றியானை நிரை காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் முதலாவிண் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெண்முரசு – ஒலிவடிவம் வெண்முரசு – வாசகர் கடிதம் வெண்முரசு – வாசகர் மதிப்புரை வெண்முரசு ஆவணப்படம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை
விவாத இணையதளங்கள்
வெண்முரசு விவாதங்கள்
விஷ்ணுபுரம்
கொற்றவை
பின் தொடரும் நிழலின் குரல்
பனிமனிதன்
காடு
ஏழாம் உலகம்
அறம்
வெள்ளையானை
குருநித்யா
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்
சொல்புதிது குழுமம்
Subscribe in Email
Subscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email
RSS Feeds
Subscribe in a reader
தொடர்புக்கு
இணையதள நிர்வாகி : [email protected]
ஆசிரியரை தொடர்பு கொள்ள: [email protected]
பதிவுகளை உடனடியாக பெற
© 2005 - 2021 Writer Jayamohan Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author. © 2005 - 2021 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும். |
மருத்துவர் சட்வா சாக்யா அவர்கள் 2016 அக்டோபர் 22-ஆம் நாளன்று வெளிவந்த விடுதலை நாளேட்டின் தலையங்கம் ஒன்றினைக் குறித்து மறுப்புக் கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். கீற்று இணைய இதழில் "பௌத்தம் குறித்த 'விடுதலை' இதழின் கட்டுரைக்கு மறுப்பு" என்ற தலைப்பில் அக்கட்டுரை வெளிவந்துள்ளது.
இதில் "குழப்பமான பொருள்படும்படி" எழுதப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கும் விடுதலை (அக்-22) தலையங்கம், 'அக்டோபர் 16 அன்று மருத்துவர் சட்வா சாக்யா உள்ளிட்ட 46 மருத்துவர்கள் இந்து மதத்திற்கு முழுக்குப் போட்டு பௌத்த மதத்தைத் தழுவியதை' வரவேற்று எழுதப்பட்ட ஒன்றாகும்.
மிக நீண்ட மறுப்பை எழுதியிருக்கும் மருத்துவர் அவர்கள், அத் தலையங்கத்தினை முழுமையாக வெளியிட்டிருந்தாலோ, அல்லது அதற்கான இணைப்பை முழுமையாகத் தந்திருந்தாலோ நாம் இப்போது இதற்கொரு விளக்கத்தை எழுத வேண்டியிருந்திருக்காது.
இன்னும் சொல்லப் போனால் மருத்துவர் தனது மறுப்பில் குறிப்பிட்டிருக்கும் முதல் 15 புள்ளிகளுக்கான (points) தேவையும் இருந்திருக்காது. அவற்றோடு முழுக்க உடன்பாடு நமக்கு உண்டு. எனவே மற்றவற்றைப் பேசும் முன் அத் தலையங்கத்தினை அப்படியே இங்கு தருவது அனைவரின் புரிதலுக்கும் உதவும் என்று கருதுகிறேன்.
பவுத்த மார்க்கம் தழுவினர் 47 டாக்டர்கள்
மகாராஷ்டிர மாநிலத்தின் நாகபுரியில் 1956ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி, 60 ஆண்டுகளுக்கு முன்பு, அண்ணல் அம்பேத்கர் இந்து மதத்திலிருந்து புத்த மார்க்கத் துக்கு 6 இலட்சம் பேருடன் சென்றார்.
இதை நினைவுகூரும் வகையில், கடந்த 16ஆம் தேதி சென்னையில் 47 மருத்துவர்கள் பவுத்த மதத்துக்கு மாறி இருக்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த பிரபல புற்றுநோய் மருத்துவர் ஜி.கோவிந்தராஜ், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் எம்.வி. தம்பையா, மயக்கவியல் நிபுணர் மருத்துவர் ஜானகிராமன் உள்ளிட்ட 47 பேர் பவுத்த மார்க்கத்தில் இணைந்துள்ளனர்
இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மக்கள் மருத்துவக் குழுவைச் சேர்ந்த ஆனந்து கூறியதாவது:
“நாங்கள் அம்பேத்கரின் கொள்கைகளைப் பின்பற்று கின்றோம். அவருடைய கோட்பாடுகளை மதிப்பதன் மூலம், ஏற்றுக்கொள்வதன் மூலம் பவுத்த மார்க்கத்துக்கு மாறுகின்றோம். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் புஷ்ய மித்திர சுங்கன் என்ற மன்னன், ஆரியர்களின் சதுர்வருணக் கோட்பாட்டை, சதுர்வருண முறையை இந்தியாவில் ஏற்படுத்தினான். அப்போது பவுத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவரின் சதுர்வருண முறையை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனவே, ஏற்றுக்கொள்ளாதவர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்தனர். அவர்களின் வழிவந்தவர்கள்தான் இப்போது தலித்துகள் என்று அழைக்கப்படுகின்றனர். இதை வரலாற்றுப் பூர்வமாக அம்பேத்கர் நிரூபித்துள்ளார்.
இதன் காரணமாகத்தான், இப்போது தலித்துகள் பவுத்த மதத்துக்கு மாறுகின்றனர். நாங்கள் வரலாற்று ரீதியாக பவுத்தத்தைச் சேர்ந்தவர்கள்தான். அம்பேத்கர் இதனை தாய்மதம் திரும்புதல் என்று கூறுகிறார். எனவே நாங்கள் மதம் மாறவில்லை. தாய் மதத்துக்குத் திரும்புகின்றோம்.
ஒரு கோவிலின் அர்ச்சகராகவோ ஆகும் உரிமை இந்து மதத்தில் தலித்துகளுக்கு இல்லை. ஆனால், எங்களுடைய தாய் மதமான பவுத்தத்தில் எல்லா உரிமைகளும் உள்ளன. இந்து மதத்தில் இருந்து தீண்டாமை அனுபவிப்பதில் இருந்து விடுபட வேண்டும் என்று நினைக்கின்றோம்.
தலித்துகள் மீது அனைத்துவிதமான தீண்டாமைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. நவீன தீண்டாமை, பொருளா தாரத் தீண்டாமை இன்னும் இருக்கின்றன. கிராமப்புறங்களில் மருத்துவராகப் பணிபுரியும்போது, தங்குவதற்கு வீடு கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். தலித்துகள்மீது கடைபிடிக்கும் தீண்டாமை எங்கள்மீதும் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. இதனால்தான் நாங்கள் தாய் மதத்துக்குத் திரும்பினோம்‘’ என்று குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர்கள் 47 பேர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டு விட்டு புத்த மார்க்கம் தழுவியது குறிப்பிடத்தக்கதாகும் - அவர்கள் பாமரர்கள் அல்ல.
இந்து மதத்தில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. கோவில் கருவறைக்குள் செல்லுவதற்கு இங்கு ஜாதி தடையாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அரசமைப்புச் சட்டத்தில்கூட தீண்டாமை ஒழிக்கப்படு கிறது என்று (சட்டப் பிரிவு 17) சொல்லப்படுகிறதே தவிர, தீண்டாமைக்கு மூலகாரணமான ஜாதியை ஒழிக்க வழி செய்யப்படவில்லை. மதப் பாதுகாப்புப் பிரிவின்கீழ் சமூகத்தில் ஜாதி பாதுகாக்கப்பட்டுள்ளது. மனித சமூகத்தில் ஜாதி என்பது அருவருப்பானது, அநாகரிகமானது.
பூரி ஜெகந்நாதர் கோவிலுக்குள் மவுண்ட்பேட்டனை அனுமதித்தார்கள் (அவர் கிறிஸ்தவர்). இந்துவாக இருந்தாலும் அண்ணல் அம்பேத்கர் அனுமதிக்கப்பட வில்லை - இதுதான் இந்த அர்த்தமுள்ள(?) இந்து மதம்!
கருவறைக்குள் அனுமதிக்கப்படாதது குறித்து புத்த மார்க்கம் மாறிய மருத்துவர்கள் கூறுவது மிகவும் முக்கியமானது.
இதுகுறித்துத் தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் - தொடர்ந்து திராவிடர் கழகத்தால் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியும் உச்சநீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டது. இப்பொழுது உச்ச நீதிமன்றம் சாதகமாக தீர்ப்புக் கூறியும்கூட மாநில அரசு பாராமுகமாக இருக்கிறது.
இந்த நேரத்தில் பவுத்தம் மாறிய மருத்துவர்கள் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். 1956 அக்டோபர் 14 ஆம் தேதியன்று நாக்பூரில் அண்ணல் அம்பேத்கர் 6 லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களோடு பவுத்தம் தழுவியபோது எடுத்துக்கொண்ட அந்த 22 உறுதி மொழிகளும் முக்கிய மானவை.
இன்னொன்று அம்பேத்கர் கூறிய புத்த மார்க்கம் வேறு - இப்பொழுதுள்ள புத்த மதம் வேறு; மார்க்கம் மதமானதால் அதிலும் ஏராளமான மூடநம்பிக்கைகள் குடியேற்றப்பட்டு விட்டன. இலங்கையில் புத்தம் வெறியாகி புத்தர் சிலையைத் தமிழர்களின் குருதியால் குளிப்பாட்டுகிறார்கள்.
மார்க்கத்துக்கும், மதத்துக்கும் உள்ள வேறுபாட்டை உணரவேண்டும் என்று மதம் மாறிய மருத்துவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.
- விடுதலை தலையங்கம் (26.10.2016)
அவ்வளவு தான். இதில் அநேகமாக கடைசி இரண்டு பத்திகளைத் தவிர, மற்றவற்றில் தோழர்களுக்குக் கருத்து மாறுபாடிருக்காது என்று கருதுகிறேன். அண்ணல் அம்பேத்கர் ஏற்றுக் கொண்ட 22 உறுதிமொழிகளையும் வலியுறுத்துவதிலும் தோழர்களுக்கு மாற்றுக் கருத்தில்லை என்பதையும் நாம் அறிவோம். ஏனெனில் அவை தான் அம்பேத்கரின் மதமாற்றச் சிந்தனையின் உயிர்நாடி. அம்பேத்கர் மதம் மாறும் சிந்தனைக்கு வந்த காலத்திலேயே (1930-களின் பிற்பகுதியில்) "தனித்து மதம் மாறாதீர்கள், பெரும் மக்கள்திரளுடன் செல்லுங்கள்" என்று அக்கறையோடு ஊக்குவித்தவர் பெரியார். அதே அக்கறையும் ஊக்கமும் இப்போதும் உண்டு. அதனால் பவுத்தத்திற்குத் திரும்புதல் குறித்து எந்த விமர்சனமும் நமக்குக் கிடையாது.
கடைசி இரண்டு பத்திகள் சொல்வதென்ன?
"அம்பேத்கர் கூறிய புத்த மார்க்கம் வேறு - இப்பொழுதுள்ள புத்த மதம் வேறு; மார்க்கம் மதமானதால் அதிலும் ஏராளமான மூடநம்பிக்கைகள் குடியேற்றப்பட்டு விட்டன. இலங்கையில் புத்தம் வெறியாகி புத்தர் சிலையைத் தமிழர்களின் குருதியால் குளிப்பாட்டுகிறார்கள்." என்பதேயாகும்.
அம்பேத்கர் வலியுறுத்திய நவயானாவும், இன்றைக்கு உலகின் பிற பகுதிகளிலும், இந்தியாவின் பெரும் மடங்களிலும் பின்பற்றப்படுவதும் ஒன்று தானா என்ற கேள்வி தோழர்களுக்குரியது.
புத்த 'மதத்தி'ல் இருக்கும் மூடநம்பிக்கைகள் இலங்கை, மியான்மார் போன்ற நாடுகளில் எப்படி விரவியிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவதும் அது குறித்து எச்சரிக்கை தருவதும் அவசியமான கடமை என்று நாம் கருதுகிறோம். கவனமாகப் போகும் தோழர்கள் எனினும், 'பார்த்து கவனமாகப் போ' என்று சொல்வதில் தவறுமில்லை; அது அவர்களைக் குறைத்து மதிப்பிடுவதுமில்லை. நம் அக்கறையின் விழைவு!
இலங்கையில் எழுந்தது இனப்பிரச்சினையா? மதப் பிரச்சினையா? என்பதற்கெல்லாம் பக்கம் பக்கமாக எழுதியும், பேசியும் விளக்கம் தந்துள்ளோம். அங்கே நடக்கும் கொடுமைகளை முதலில் மனிதப் பிரச்சினையாகவும், அடுத்து ஆதரவுக் குரலற்று செத்து மடிந்த எம் தமிழ்ச் சொந்தங்களின் தொப்புள் கொடி என்ற உணர்வோடும் தான் திராவிடர்கழகம் பார்க்கிறது. இவையெல்லாம் பழங்காலத்திலிருந்து தரப்படும் விளக்கங்கள். ஆனால், அங்கு கொடுமை புரிந்த சிங்கள இன வெறிக்கு தூபமிட்டு வளர்த்த பௌத்தபிக்குகளைக் குறித்துச் சொல்லாமலிருக்க முடியுமா? அவர்களுக்கு மதத்தின் அடிப்படையில் கிடைத்திருக்கும் பின்புலத்தில் இன அழிப்பில் அவர்கள் ஏற்ற பங்கினைக் குறித்து சிந்திக்காமலிருக்க முடியுமா? என்பதையும் தோழர்களின் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.
இலங்கையில் அதை இந்துமதப் பிரச்சினையாகக் காட்டி, பிணத்தின் மீது மதவெறியூட்ட முயலும் இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை, திராவிடர் கழகம் வீதிதோறும் கிழித்துத் தொங்கவிட்ட செய்திகளை, பேச்சுகளை, மக்களுக்கு விழிப்புணர்வூட்டிய முழக்கங்களை மருத்துவர் அவர்களே அறிவார் என்று நம்புகிறோம்.
இந்தியாவில் பௌத்தத்தை இந்து மதத்துடன் இணைக்கும் அயோக்கியத் தனத்துக்கும், புத்தரை விஷ்ணுவின் அவதாரங்களுள் ஒன்றாகக் குறிப்பிட்டுப் பேசிய அத்வானியின் புரட்டுக்கும் எத்தகைய கடும் மறுப்பை திராவிடர்கழகமும் விடுதலையும் தெரிவித்தன என்பதையும், இன்றைக்கும் புத்தரை அவதாரமாக்கும் அயோக்கியத்தனத்தை பட்டி தொட்டிகள் தோறும் போட்டுடைத்துக் கொண்டிருக்கும் திராவிடர் கழகப் பேச்சாளர்களின் உரையினையும் நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.
மேலும், இதற்கு, அதற்கு என்று எழுப்பப்பட்டிருக்கும் சில கேள்விகளுக்கு வரிக்கு வரி விளக்கம் சொல்வதோ, மறுப்பு சொல்வதோ இங்கு தேவையற்றது.
ஏனெனில் மத நம்பிக்கை ஒழிய வேண்டுமா, ஜாதி ஒழிய வேண்டுமா என்றால் முதலில் ஜாதி ஒழிய வேண்டும்; மத நம்பிக்கை குறித்தெல்லாம் பிறகு பேசிக் கொள்ளலாம் என்பதுதான் பெரியாரியல். நாத்திகமா? ஆத்திகமா? போன்ற கேள்விகளெல்லாம் 'இங்கு' தேவையற்றவை. அதை விடுதலையும் எழுப்பவில்லை. அது குறித்து விவாதிக்கவும் நான் வரவில்லை.
ஏனெனில், நாம் இப்போதும் எப்போதும், ஜாதி-வர்ணக் கொடுமைகளை வலியுறுத்தும் இந்து மதத்திற்கெதிராக, இந்துத்துவாவிற்கு எதிராக அணி திரளும் தோழர்களுடன் நிற்கிறோம். இந்தப் பிரச்சினைகள் முடிந்த பின், மதங்களின் தேவை குறித்து மதம் வேண்டுவோருடனும், பிற மதத்தவருடனும் இணைந்தோ, தனித்தோ தோழர்கள் விவாதிக்க வந்தால், அதைப் பிறகொரு காலத்தில் வைத்துக் கொள்வோம். ரத்தம் குடிக்க அலையும் ஓநாய்கள் உற்றுநோக்கியபடி இருக்கின்றன என்ற கவலை எங்களுக்கு உண்டு.
உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்.. ஆன மட்டும் ஒடுக்கப்பட்டோரை இந்து மதத்திலிருந்து வெளியே எடுங்கள். ஜாதியைப் பாதுகாக்கும் இந்து வர்ணாசிரமச் சிந்தனைகளைப் போட்டு உடைத்து நொறுக்குங்கள். அப்போதும் அந்த கடைசி இரண்டு பத்திகளைச் சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பு எங்களுக்கிருக்கும்.
நம்மைப் பிரிப்பவற்றை விலக்குவோம்; நம்மை இணைப்பவற்றை விரிவாக்குவோம்.
ஜாதி ஒழிக்கும் பணியில் ஒன்றிணைவோம்.
வேண்டுகோள் குறிப்பு: விடுதலைக்கு மறுப்பாக எழுத தேவையிருந்திருக்காது என்று நான் குறிப்பிட்டிருக்கும் முதல் 15 புள்ளிகளையும், தனியே ஒரு கட்டுரையாக்கி வெளியிட்டால், பவுத்த மார்க்கம் தழுவ வேண்டியதன் வரலாற்றுக் காரணத்தை உணர்த்துவதாக அமையும். புரிதலுக்கு நன்றி!
Tweet
Whatsapp
முந்தைய
அடுத்த
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன. |
வணக்கம். விடுமுறைகள் நிறைந்ததொரு மாதம் நிறைவை நோக்கி நகர, புத்தாண்டும், தைத்திருநாளும், குடியரசு தினமுமே ஏக்கப் பெருமூச்சுகளை வரவழைக்கும் நினைவுகளாய் மட்டுமே தங்கியுள்ளன ! And அதே கதை தான் - நடந்து முடிந்துள்ள சென்னைப் புத்தக விழாவிற்குமே !! வாசிப்பின் ஜீவன் இன்னமும் அணைந்திடவில்லை என்பதை அழுந்தப் பதிவு செய்திடும் அந்த ஜனத்திரளை எண்ணி நெடும் பெருமூச்சே வெளிப்படுகிறது ! நானங்கு இருந்தது என்னவோ ஒன்றரை நாட்களுக்கு மாத்திரமே என்றாலும், அந்தப் பரபரப்பை இன்று வரைக்கும் உணர்ந்திட முடிகிறது ! Back to the grind ; மீண்டும் பணிகள். பொறுப்புகள் என்று சக்கரம் சுழலத் துவங்கிவிட்டிருந்தாலுமே, புத்தக விழா சார்ந்த எண்ணங்கள் நிழலாடுவது மட்டுப்படவில்லை இன்னமுமே !! And சமீபத்து வழக்கப்படி புத்தக விழாவின் விற்பனைகள் ; சொதப்பல்கள் ; ,மிதங்கள் ; உச்சங்கள் என்று சகலத்தையும் கணக்கெடுத்து ஒப்படைத்தனர் நம்மவர்கள் ! அதை பார்க்கும் போது புலப்பட்ட சுவாரஸ்யத் தகவல்களை உங்களோடு பகிர்ந்திடத் தோன்றியது ! So இந்த ஞாயிறின் அலசல் - சென்னை 2018-ன் விற்பனைகள் பற்றியே !
Of course - 200+ தலைப்புகளை நமது ஸ்டாலில் முதன்முறையாகப் பார்க்க நேரிடும் ஒரு புது வரவுக்குள் ஓடக்கூடிய பரபரப்பையும், அந்நேரத்தில் தோன்றிடக் கூடிய impulsive buying பாணியையும் ரசனைகளின் வெளிப்பாடாய்ப் பார்த்திட முடியாது தான் ! அட்டைப்படமோ ; தலைப்போ ; முதல் புரட்டலில் ஈர்க்கும் ஏதோவொரு விஷயமோ ; விலையோ ; தயாரிப்புத் தரமோ ; நோஸ்டால்ஜியாவோ அவர்களது கொள்முதல்களுக்குக் க்ரியாவூக்கிகளாய் இருந்திடக்கூடும் தான் ! So தொடரும் 'ரமணா' பாணிப் புள்ளிவிபரங்களை ஒரு ஒட்டு மொத்த statement ஆக நான் வெளிப்படுத்த முனைந்திடவில்லை ! மாறாக - ஒரு மேலோட்டமான பார்வையாக மாத்திரமே ! Here goes :
புத்தக விழாவின் TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! அந்த செம cute பாக்கெட் சைசின் பங்கு தான் இதன் பின்னணி என்று எனக்குப் பட்டாலும் - தானைத் தலைவரின் diehard fans நிச்சயமாய் மாற்றுக கருத்துக்கள் கொண்டிருப்பது உறுதி ! எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss !!
இரண்டாமிட நாயகர் முதல் பெயரை "லூயி" என்றும் இரண்டாம் பெயரை "கிராண்டேல்" என்றும் கொண்டிருக்கும் ஆசாமி ! Oh yes - எண்ணிக்கையில் slot # 2 பிடித்து நிற்பது சமீப மறுபதிப்பான "மர்மத் தீவில் மாயாவி" தான் ! இதழ் புராதனத்திலானது என்றாலும், மறுபதிப்பாய் இது வெளியானது வெகு சமீபத்தில் என்ற விதத்தில் இதுவொரு recent இதழே என்பதாலோ என்னவோ, மக்கள் வாஞ்சையோடு வாங்கியுள்ளனர் ! இந்த இதழின் ராப்பருமே விற்பனைக்கு உதவிய முக்கிய விஷயம் என்று சொல்லத் தோன்றுகிறது ! தொடர்ந்த இடங்களில் வந்திருப்பது "நாச அலைகள்" & "பாம்புத் தீவு" ! மாயாவியின் விற்பனை ஒரு மைல் தொலைவில் எனில், ஜானி நீரர் மூன்றாமிடத்திலும் ; லாரன்ஸார் & டேவிடர் இறுதியிடத்திலும் உள்ளனர் - மறுபதிப்புத் தரவரிசையில் ! ""தங்கவிரல் மர்மம் " & "தலை கேட்ட தங்கப் புதையல் " அவரவரது தொடர்களுள் அதிக விற்பனை கண்டுள்ள இதழ்கள் !!
இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த 'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! நிறைய முறைகள் இந்த அலசல்களுக்குள் புகுந்து வெளியேறி இருக்கோம் என்பதால் - இன்னுமொரு repeat தேவையில்லை தானே ? "மாமு....நீ கிராபிக் நாவலை போட்டுக்கோ ; விண்வெளிக்கு ராக்கெட் விட்டுக்கோ ; சிக்கின குதிரைப் பையன்களையும் அழைச்சுக்கோ - ஆனால் கில்லி நாங்க தான் !!" என்று இந்த நொடியில் மும்மூர்த்திகள் என் திசையில் பழிப்புக் காட்டுவது போலொரு பீலிங்கைத் தவிர்க்க இயலவில்லை ! கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே மறுபதிப்புகள் மெதுநடை தான் போட்டு வந்து கொண்டிருக்க - ஒரு மாதிரியாய் அந்த மோகம் மட்டுப்பட்டுவிட்டதாய்த் தான் நினைத்திருந்தேன் ! ஆனால் இந்தப் புத்தக விழாவில் தென்பட்டிருக்கும் வேகத்தை என்னவென்று classify செய்திடவோ - தெரியவில்லை ! அதற்காக 2015-ன் தொடக்கத்தில் அலையடித்த அதே விறுவிறுப்பு இப்போது மறுபிரவேசம் செய்துள்ளது என்றெல்லாம் சொல்ல மாட்டேன் ; "நயாகராவில் மாயாவி" வெளியான அந்த ஜனவரியில் இருந்ததோ முற்றிலுமாய் வேறொரு லெவெலிலான அதகள உத்வேகம் !! Nowhere close to that - but still beating the others !!
மறுபதிப்புகளின் மீதான லயிப்புக்குப் பின்னே அடுத்த "கவனக் கோரர்" நமது இரவுக் கழுகாரே !! கணிசமான இவரது titles நம்மிடம் சேர்ந்து விட்டபடியால் - "TEX" என்று தேடி வருவோருக்கு நல்லதொரு சாய்ஸ் சாத்தியமாகிறது ! And இம்முறை முதலிடத்தில் நிற்பது "இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்" தான் !! கடந்த 2 ஆண்டுகளாய் விடாப்பிடியாய் முத்லிடத்தைத் தக்க வைத்திருந்த "நில்..கவனி..சுடு" இம்முறை காலி என்பதால் கையிருப்பில் கடைசி 25 பிக்குகளும் சென்னையில் தீர்ந்தே விட்டன ! And சென்னையில் 'டாடா - பை-பை' சொன்ன இன்னொரு TEX இதழானது "டிராகன் நகரம்" தான் ! இது SUPER 6 limited edition என்பதால் அச்சிடப்பட்டதே சொற்பப் பிரதிகள் ; and இதனில் "போட்டோ போட்டோம் ; கோட்டை விட்டோம்" என்று ஏதேதோ ரவுசுகள் அரங்கேறியதன் புண்ணியத்தில் அப்போதே online-ல் நிறைய விற்றுத் தீர்ந்திருந்தது ! எஞ்சியிருந்தவை புத்தக விழாவில் காலி !! And TEX ஷாப்பிங்கில் எப்போதும் போல "நிலவொளியில் நரபலி" அடித்து ஆடியிருந்தது என்பது கொசுறுச் சேதி !!
As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed by "ஒற்றைக்கைப் பகாசுரன்" !!
இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு !
ஆச்சர்யங்கள் ஓய்ந்த பாடில்லை - இம்முறையோ நம்பரையே பெயராகக் கொண்ட மனுஷனின் புண்ணியத்தில் ! புத்தக விழாக்களில் "இரத்தப் படலம்" பெரும்பாலும் நமக்கு "சோகப் படலங்களாக" மட்டுமே இருந்து வந்துள்ளன ! ஆனால் இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!! We are there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம் !!
அடுத்ததாய்ப் பார்வையில் தட்டுப்படுவோர் சிக் பில் & ப்ளூ கோட்ஸ் & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது என்பதில் நிச்சயம் நம்மில் யாருக்கும் வியப்பிராதென்று நினைக்கிறேன் ! Has done decent !!
அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?
And நம்பினால் நம்புங்கள் ; இந்தாண்டின் பட்டியலில் உயரே நிற்பன - நமது கிராபிக் நாவல்களுமே !! அதிலும் குறிப்பாக ஜெரெமியா & "என் சித்தம் சாத்தானுக்கே சொந்தம்" have been toppers !! நன்றிகள் ஓராயிரம் "குமுதம்" அரசு சார் !! உங்களின் 2 இதழ்களுக்குமான reviews நிச்சயம் இந்த விற்பனையின் பின்னணியில் உள்ளன !! But எல்லாவற்றையும் விட செம சேதியொன்று காத்துள்ளது guys : "நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!! Oh yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! சந்தா E சொற்ப பிரிண்ட்ரன் கொண்டதே & இது ரூ.250 விலையிலான இதழ் என்பதால் வழக்கத்தையும் விடக் குறைச்சலாகவே அச்சிட்டோம் !! But இங்கும் சரி, உங்களது whatsapp க்ரூப்களிலும் சரி - இந்த இதழ் சார்ந்த அலசல்கள் கொணர்ந்துள்ள curiosity காரணமாய் ஆன்லைனில் நல்ல விற்பனை !! So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது !! என்ன கொடுமை இது தலீவரே ?!!
"உச்சமும் இல்லை ; உச்சா போகும் ரகத்திலும் இல்லை" - என்பதே அடுத்த கண்ணோட்டத்தின் subjects !! கீழ்க்கண்ட நாயகர்கள் - இடுப்பில் துணியை இறுக்கமாய் இழுத்துப் பிடித்துக் கொள்ளும் சமயோசிதம் கொண்டிருப்பதால் - we are glad for it !!
தோர்கல்
கேப்டன் பிரின்ஸ்
ரின்டின் கேன்
ரிப்போர்ட்டர் ஜானி
தோர்கல் இப்போது தான் டாப்கியரைத் தொட்டிடும் தருணம் எனும் பொழுது - நிச்சயமாய் அடுத்த ஆண்டில் விற்பனை இதை விட தேவலாமென்றிருக்கும் என்ற நம்பிக்கை நிறையவே உள்ளது ! இந்தாண்டைப் பொறுத்தவரை just about ok !! அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ் & ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் !
தொடர்வோர் ஒரு பெரும் பட்டியலை உருவாக்கும் அவசியத்தை ஏற்படுத்துவது தான் கவலையளிக்கும் சமாச்சாரம் ! "உன் குத்தமா ? என் குத்தமா ? யாரை நான் சொல்ல ?" என்று பாடிக் கொண்டே போடுகிறேன் இந்த லிஸ்டை !! அதனிலுள்ள சில பெயர்களை வாசிக்கும் போது ஆச்சர்யத்தில் புருவங்கள் உயரலாம் ; but இம்முறை இதுவே விற்பனைக் காற்று வீசியுள்ள திசை :
லார்கோ வின்ச்
வெய்ன் ஷெல்டன்
CID ராபின்
கமான்சே
ஜில் ஜோர்டன்
கர்னல் க்ளிப்ட
மதியில்லா மந்திரி
SMURFS
இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை - நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் ! ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!
சரி, "ஒரு சுமாரான விற்பனைப் பட்டியல்" என்று லிஸ்டைப் போட்ட கையோடு கிளம்பலாம் என்று பார்த்தால் - "இன்னொரு பட்டியல் போட்டுட்டுப் போப்பா ஆந்தைக்கண்ணா !!" என்ற உரத்த குரல் கேட்கிறது !! திரும்பிப் பார்த்தால் நிற்கும் அணியானது மெய்யாகவே மூக்கில் குத்தும் ரௌத்திரத்தோடு காத்திருப்பது புரிகிறது ! வெளியே சொல்லச் சங்கடம் தரக்கூடிய விற்பனை கண்டுள்ள ஆல்பங்களின் நாயக / நாயகியர் இவர்கள் எல்லாமே :
பவுன்சர்
மேஜிக் விண்ட்
டைலன் டாக்
டயபாலிக்
மாடஸ்டி
ப்ருனோ பிரேசில்
சாகச வீரர் ரோஜர்
நிச்சயமாய் நமது ரசனை அளவுகோல்களின் முழுமையான பிரதிபலிப்புகளும் இவையல்ல தான் & இந்தத் தொடர்களின் வீரியம் மீதான விமர்சனமும் இது அல்லவே !! மேஜிக் விண்ட் ; டைலன் டாக் ; மாடஸ்டி ; ரோஜர் என personal ஆக எனக்குப் பிடித்த நாயக / நாயகியர் மேற்படிப் பட்டியலுக்குள்சிக்கியிருப்பதில் எனக்கு வருத்தமே ! But இது முழுக்க முழுக்க விற்பனை சொல்லும் கதைகள் மாத்திரமே !! So no offence meant !!
மற்ற one -shot கதைகள் ; நாயகர்கள் பற்றி நான் அதிகம் மெனெக்கெடப் போவதில்லை - simply becos அவற்றிலிருந்து நாம் அறிந்து கொள்ளக் கூடிய சமாச்சாரங்கள் சொற்பமே என்பதால் !!
So ஒரு 12 நாள் திருவிழாவின் இறுதியில் விற்பனைக் கணக்குகள் ; செலவினங்கள் ; ஒட்டு மொத்த அனுபவங்கள் என்று அசை போட்டு வருகிறோம். ஒற்றை ஸ்டால் தான் என்றாலும், இம்முறை 4 பணியாளர்களைக் கொண்டு செயல்படுவது என்று தீர்மானித்திருந்தோம் ! செலவுகள் அதன் பலனாய் எகிறினாலும், பல நடைமுறைச் சிக்கல்களை அது தவிர்த்துள்ளதென்பதில் சந்தோஷமே !! But ஒரு புரியாப் புதிர் இன்றளவும் தொடர்கிறது !! 2015 -ல் இப்போதிருப்பதில் சரி பாதி titles மட்டுமே இருந்த வேளைதனில் சாத்தியமான அதே விற்பனைத் தொகையினைத் தான் 200 + titles கொண்டிருக்கும் இப்போதும் ஈட்டிட முடிகிறது !! "இவ்ளோ தாண்டா உனக்கான கோட்டா ; அதுக்குள்ளாற வண்டியை ஓட்டிக்கோ" என்று பெரும் தேவன் மணிடோ நிர்ணயம் செய்துவிட்டாரோ என்ற சந்தேகம் ஒவ்வொரு வருடமும் தலைதூக்குகிறது ! சென்னையில் மட்டும்தான் என்றில்லாது - ஈரோட்டில் ; கோவையில் ; மதுரையில் என சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது ! Thanks guys & thanks to all those who dropped in !! And a SPECIAL THANKS to BAPASI too !!!
"ஒவ்வொரு தினமும் ஒரு புது அனுபவமே" என்பதற்கு இந்தப் 12 நாட்களை விடவும் பெரியதொரு சான்று இருந்திட முடியாது !! இந்தப் பர பரப்பை ; உற்சாகங்களை மீண்டும் உணர்ந்திடும் வரம் கோரி கை கூப்பிட மட்டுமே தோன்றுகிறது இந்த நொடிதனில் !! மீண்டும் சந்திப்போம் folks !! Happy Sunday !!
p.s : அந்த கர்னல் க்ளிப்டன் CAPTION போட்டியின் வெற்றியாளரை அறிவிக்க மறந்து விட்டேன் போன வாரம் ! ஞாயிறு (இன்று) பகலில் நிச்சயம் அறிவிப்புண்டு !
சுட்டி லக்கி - புது ஆல்பம் !
at 1/28/2018 12:38:00 am
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
349 comments:
Prashenna R Madhu 28 January 2018 at 00:39:00 GMT+5:30
வணக்கம்!
ReplyDelete
Replies
Reply
Palanivel arumugam 28 January 2018 at 00:42:00 GMT+5:30
அதிகாலை வணக்கம்
ReplyDelete
Replies
Reply
Sathish 28 January 2018 at 00:44:00 GMT+5:30
Good morning to all
ReplyDelete
Replies
Reply
Palanivel arumugam 28 January 2018 at 00:45:00 GMT+5:30
தேதிய மட்டும் சொல்லுங்க சார் நான் ரெடி proof reading க்கு
ReplyDelete
Replies
Prashenna R Madhu 28 January 2018 at 00:51:00 GMT+5:30
அது!
Delete
Replies
Reply
Reply
செந்தில் சத்யா 28 January 2018 at 00:48:00 GMT+5:30
வணக்கம் ஆசிரியர் & நண்பர்களே
ReplyDelete
Replies
Reply
Sivakumar siva 28 January 2018 at 00:49:00 GMT+5:30
Hai
ReplyDelete
Replies
Reply
Selvam 28 January 2018 at 00:49:00 GMT+5:30
Vanakkam
ReplyDelete
Replies
Reply
Prashenna R Madhu 28 January 2018 at 00:50:00 GMT+5:30
402! !!! We made it!
ReplyDelete
Replies
Reply
SURESH CHAND H 28 January 2018 at 00:53:00 GMT+5:30
Hi I am 7 th .hello to all
ReplyDelete
Replies
Reply
SURESH CHAND H 28 January 2018 at 00:53:00 GMT+5:30
XIII -----402 OHHHHHHHHHHHHH
ReplyDelete
Replies
Reply
Sathish 28 January 2018 at 00:59:00 GMT+5:30
February மாத இதழ்கள் எப்போது எதிர் பார்க்கலாம் எடி sir
ReplyDelete
Replies
Reply
Sivakumar siva 28 January 2018 at 00:59:00 GMT+5:30
Hai
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 28 January 2018 at 03:42:00 GMT+5:30
சிவா @ நமது காமிக்ஸ் பற்றி உங்கள் விமர்சனங்களை அவ்வப்போது எழுதலாமே?
Delete
Replies
Reply
Reply
Erode VIJAY 28 January 2018 at 01:03:00 GMT+5:30
பதிவப் படிச்ச சந்தோசத்தோட இப்பத் தூங்கப்போறேன்... இன்னும் சித்தநேரம்தான்.. விடிஞ்சுடும், அப்புறம் வர்றேன்...
ReplyDelete
Replies
Reply
Podiyan 28 January 2018 at 01:36:00 GMT+5:30
//சகல புத்தக விழாக்களிலுமே ஒரு குறிப்பிட்ட வசூல் வட்டத்துக்குள்ளேயே நாம் சவாரி செய்ய நேரிடுகிறது ! But இதுதான் பதிப்புலக நிதரிசனம் எனும் பொழுது, அரைப் பெடல் அடித்துக் கொண்டே வண்டியை ஓட்டும் கலையைக் கற்றுக் கொண்டே வருகிறோம் ! // சென்னை புத்தக விழா பற்றி 'விகடகவி' இதழில் எழுதியிருந்தார்கள். பெரிய பதிப்பகங்களே புத்தகங்களை பிரின்ட் ஆன் டிமாண்ட் அடிப்படையில் 100 பிரதிகளே இப்போது அச்சிட்டு புத்தக விழாக்களுக்கு எடுத்துவருவதாகவும். அவற்றில் 10 புத்தகங்களை ராயல்ட்டிக்குப் பதிலாக எழுத்தாளர்களுக்கு கொடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள்.
ReplyDelete
Replies
Reply
சின்னமனூர் சரவணன் 28 January 2018 at 01:41:00 GMT+5:30
Good morning friends and editor sir.
ReplyDelete
Replies
Reply
சின்னமனூர் சரவணன் 28 January 2018 at 01:44:00 GMT+5:30
wow.....great news ...x111 ready to 2018 august. thx friends.
ReplyDelete
Replies
Reply
Giri 28 January 2018 at 01:46:00 GMT+5:30
2018 மட்டுமல்ல 2028 ஆம் ஆண்டு புக் fairலும் எங்க தல ஸ்பைடர் தான் டாப் ஹீரோ....Life time Hero.
ReplyDelete
Replies
Reply
Thiruchelvam Prapananth 28 January 2018 at 02:16:00 GMT+5:30
14th
ReplyDelete
Replies
Reply
senthilwest2000@ Karumandabam Senthil 28 January 2018 at 02:54:00 GMT+5:30
கள நிலவரமே நிதர்சனம் !
ReplyDelete
Replies
Reply
Texkit 28 January 2018 at 02:59:00 GMT+5:30
16th
ReplyDelete
Replies
Reply
ஹசன் 28 January 2018 at 03:24:00 GMT+5:30
அப்ப நான் 17வது வாசகன்....
சரி வாசிச்சிட்டு வருவோம்
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 03:33:00 GMT+5:30
அருமையான அலசல். விற்பனை கடந்த வருடம்/2015 உள்ள அதே உயரத்தை தான் நாம் அடைந்துள்ளோம் என்பது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. அதேநேரத்தில் நமது சென்னை நமது காமிக்ஸ் வண்டிக்கு கொஞ்சம் பெட்ரோல் கொடுத்து தொடர்ந்து ஒட உத்வேகத்தை தந்துள்ளது.
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 03:35:00 GMT+5:30
பிப்ரவரி இதழ்களின் அட்டைப்படம் மற்றும் டீசர்களை கண்களில் காட்டலாமே சார்.
இந்த பதிவில் படங்கள் எதுவும் இணைக்கப்படவில்லை.
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 03:39:00 GMT+5:30
கிராப்பிக் நாவல்களின் விற்பனையை பார்க்கும் போது நமது அலசல்களும் "பாஸிட்டிவ்வான" விமர்சனங்கள் எல்லா கதைகளுக்கும் தேவை. நண்பர்கள் இதனை மனதில் கொண்டு தொடர்ந்து தங்கள் விமர்சனங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை இங்கு பதிவிடல் அவசியம். ப்ளீஸ்.
ReplyDelete
Replies
Paranitharan.k 28 January 2018 at 06:32:00 GMT+5:30
This comment has been removed by the author.
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 06:51:00 GMT+5:30
நானும் தான் பரணிதரன். இந்த மாத கிராப்பிக் நாவல் பற்றி இன்னும் எழுத வில்லை.பாதி படிக்கும் முன்னே தூக்கம் வந்துவிட்டது.:-)
பொறுமையாக ஒரு நாள் இரவில் ஒரே மூச்சில் படிக்க முடிவு செய்து இருக்கிறேன்.
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 03:44:00 GMT+5:30
சத்யா தம்பி எங்கே இருக்கிறீங்க? இங்கே வந்து கொஞ்சம் தலையைக் காட்டினால் சந்தோஷப்படுவேன்.
ReplyDelete
Replies
ரின் டின் கேன் 28 January 2018 at 03:53:00 GMT+5:30
போன வருடம் போல் தலையிலேயே சூப்ப கொட்டுற ஐடியா எதாவது உண்டா
Delete
Replies
Reply
Sathiya 28 January 2018 at 06:28:00 GMT+5:30
@Parani from Bangalore:
வணக்கம் பரணி நண்பரே🙏🙏🙏
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 06:47:00 GMT+5:30
சூப்பர் சத்யா. நன்றி.
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 03:50:00 GMT+5:30
வெட்டுக்கிளி வீரையன் @ எப்படி இருக்கிறீர்கள். பெங்களூர் குடியேற்றம் நல்லபடியாக நடந்து இருக்கும் என நம்புகிறேன். கன்னடம் பேச ஆரம்பித்து விட்டீர்களா?
ReplyDelete
Replies
VETTUKILI VEERAIYAN 28 January 2018 at 12:03:00 GMT+5:30
இனிய நண்பர் பரணி..என்ன மாதிரியான அன்புள்ளம் இது?அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பர் ..ஆனால் அன்பிற்கு நேரம் காலமே இல்லையா?நடுநிசி மூன்று மணி .அருப்புக்கோட்டை தை மாச குளிரையே தங்க முடியாமல் நடுங்கிக்கொண்டு இருக்கிறேன் .பெங்களூர் குளிரில் இந்நேரம் என் நினைவு எப்படி வந்தது ?நண்பர் சத்யா பற்றியும் நினைவு..நாடி நரம்பெல்லாம் காமிக்ஸ் காதல் ததும்பிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல உள்ளத்தில் இருந்து மட்டுமே இப்படிப்பட்ட கரிசனங்கள் உதிக்கும் .அனைத்து யோகங்களும் பெற்று நல் வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன் .செல் நம்பர் ப்ளீஸ் ...
Delete
Replies
Reply
j 28 January 2018 at 15:27:00 GMT+5:30
மாத்தாடு மாத்தாடு மல்லிகே...
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 23:13:00 GMT+5:30
9900515000 உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கூப்பிடுங்கள் பேசுவோம்..
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 23:18:00 GMT+5:30
@ PfB
உங்க மொபைல் நம்பர்ல பாதிக்குப் பாதி சைபரைக் கொடுத்து உங்களை யாரோ நல்லா ஏமாத்திட்டாங்களோன்னு தோனறது! :D
Delete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:37:00 GMT+5:30
///
உங்க மொபைல் நம்பர்ல பாதிக்குப் பாதி சைபரைக் கொடுத்து உங்களை யாரோ நல்லா ஏமாத்திட்டாங்களோன்னு தோனறது! :D///
ஆடித்தள்ளுபடியில வாங்கியிருப்பாரோ!!
அஞ்சி நம்பர் வாங்கினா அஞ்சி நம்பர் இலவசம்னு சொல்லியிருப்பாங்க, நம்ம பரணியும் அடடேன்னு வாங்கியிருப்பாரு..!
அஞ்சி நம்பராச்சும் இருக்கே ..!!;)
Delete
Replies
Reply
Reply
ஹசன் 28 January 2018 at 03:58:00 GMT+5:30
CBF வழக்கம் போல் உங்களுக்கு ஒரு பெரிய Energy tonic-ஐ கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன்.
அதிலும் குறிப்பாக XIII முன்பதிவு & மும்மூர்த்திகள் விற்பனை நீங்களே எதிர்பாராததாகவே இருந்திருக்கும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள் சார்.
ஆனாலும் அந்த ...
"நிஜங்களின் நிசப்தம்"
என்ன கொடுமை தலைவரே ???
ReplyDelete
Replies
Paranitharan.k 28 January 2018 at 06:28:00 GMT+5:30
விதி செய்த சதியா ..
இல்லை கணேஷ் சார் செய்த சதியா...
என்னமோ போடா மாதவா...:-(
Delete
Replies
Reply
Reply
Maran mani 28 January 2018 at 05:10:00 GMT+5:30
இனிய விடிய காலை வணக்கம்!!@@
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 January 2018 at 05:41:00 GMT+5:30
27
ReplyDelete
Replies
Reply
Arivarasu @ Ravi 28 January 2018 at 05:57:00 GMT+5:30
// எது எப்படியோ - சின்னதொரு மார்ஜினில் மாயாவியாருக்கு டேக்கா கொடுத்து விட்டு முதலிடம் பிடிக்கிறார் நமது லயனின் big boss//
வாவ்,சூப்பர், அப்படின்னா பாட்டில் பூதம் மாதிரியான இதழ்களை தாராளமாக மறுபதிப்பு செய்யலாம்,ஹைய்யா.
ReplyDelete
Replies
Paranitharan.k 28 January 2018 at 06:26:00 GMT+5:30
அப்படியே திகில் தொடரில் வெளிவந்த " விண்வெளி பிசாசு" ம்...!
Delete
Replies
Reply
Padmalochan karthikeyan 28 January 2018 at 07:08:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:16:00 GMT+5:30
இதை நான் தலைகீழாக நின்று வரவேற்கிறேன். அடுத்த வருடம் இந்த கதைகளை சந்தாவில் இணைத்து விடுங்கள்.
அப்படியே யார் அந்த மினி ஸ்பைடர் ப்ளீஸ்.
Delete
Replies
Reply
[email protected] 28 January 2018 at 07:40:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
செந்தில் சத்யா 28 January 2018 at 08:46:00 GMT+5:30
+111111111111111
Delete
Replies
Reply
Reply
Unknown 28 January 2018 at 06:10:00 GMT+5:30
500+pages in pocket size will also attract people.i think.
ReplyDelete
Replies
Reply
Rummi XIII 28 January 2018 at 06:23:00 GMT+5:30
Very surprise datas
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 06:24:00 GMT+5:30
ஜனவரி இதழான "விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller
*******
So ஒரு செம dark கி.நா. தான் புது ரெக்கார்டை உருவாக்கும் அதிசயமும் கண்முன்னே நிகழ்கிறது...
**"*"***
இது யாருடைய சதியாக இருக்கும் என அலசி ஆராய அந்த மூம்மூர்த்திகளையே களம் இறக்க வேண்டும் போல...:)
ReplyDelete
Replies
Reply
Padmalochan karthikeyan 28 January 2018 at 06:24:00 GMT+5:30
Spider? First?!! .....why wonder?....I am laughing , laughing, laughing...Dylan Dog....ha ha ha....!. But I can understand how the poor sale of these series affected you as a publisher sir. I'm just happy about Spider's leading.
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 06:25:00 GMT+5:30
அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 06:34:00 GMT+5:30
சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது
********
மனமார்ந்த பாராட்டுகள் நண்பர்களே..
ReplyDelete
Replies
செந்தில் சத்யா 28 January 2018 at 08:49:00 GMT+5:30
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Delete
Replies
Reply
Reply
Paranitharan.k 28 January 2018 at 06:36:00 GMT+5:30
சார்..,தேதி 28 ஆகி விட்டது ...வெளிவரும் இதழ்களை பற்றி எந்த சேதியும் காணவில்லையே ..:-(
ReplyDelete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 07:17:00 GMT+5:30
இஸ்பைடரின் 'விசித்திரச் சவால்' தான் விற்பனையில் நம்பர்-1 ஆக இருக்கப்போகிறது என்று புத்தகத்திருவிழாவுக்கு முன்பே ஆரூடம் சொல்லிய அந்த நண்பர் யார் என்பதை மறந்துவிட்டேன்! மிகச் சரியான கணிப்பு!! வாழ்த்துகள்!!
லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி!!! ( இதைப் பற்றிய ஒரு அலசல் அவசியமாகிறது!)
'நிஜங்களின் நிசப்தம்' காலியாகிவிட்டது ஒரு இன்ப அதிர்ச்சி!! 22 நாட்களில் விற்றுத் தீர்ந்து வரலாறு படைத்துள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!! இதை 'குப்பை', 'பூட்ட கேஸ்' என்றெல்லாம் வெளியே விமர்ச்சித்தாலும், இன்ச் பை இன்ச் படித்து ரசித்த நம் FB நண்பர்களுக்கு நன்றி!
ReplyDelete
Replies
Paranitharan.k 28 January 2018 at 07:36:00 GMT+5:30
இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-)
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:39:00 GMT+5:30
// லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி!!! //
இரண்டுமே ப்ளே பாய் ரக கதாநாயகர்கள். எனக்கு இவர்களின் கதை பிடித்தாலும் இவர்கள் கதையில் பெண்களுடன் அடிக்கும் கூத்துக்கள் முகம் சுழிக்க செய்கிறது.
Delete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 07:39:00 GMT+5:30
லார்கோ, ஷெல்டன் - விற்பனையில் சோபிக்காதது நிஜமான அதிர்ச்சி
#####
இந்த அதிரடி நாயகர்களின் தலைப்பு குறைவாகவும் இருப்பதும் காரணமாக இருக்கலாம் செயலரே..:-(
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 07:47:00 GMT+5:30
///இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-)///
ஹா ஹா ஹா! சரியான வார்த்தைகள் தலீவரே!
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 08:05:00 GMT+5:30
// இன்ச் பை இன்ச் " விமர்சித்த " என்ற வரியே சரியாக இருக்கும் என நினைக்கிறேன் ..:-) //
இது ஒரு வகையில் நன்மைக்கே. இல்லை என்றால் இது தெரியாமல் சில நண்பர்கள் இந்த புத்தகத்தை வாங்கி மன வருத்தத்தை கொடுத்து இருக்கலாம்.
Delete
Replies
Reply
j 28 January 2018 at 14:19:00 GMT+5:30
அதன் வித்தியாசமான சைஸ் ,
அமைப்பு கவர்ந்திழுத்திருப்பது உண்மை.
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:18:00 GMT+5:30
மாடஸ்டி வெங்கடேசன் @ எங்க இருக்கீங்க! இங்கே வந்து உங்கள் தலையைக்காட்டி செல்லவும்.
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 28 January 2018 at 07:26:00 GMT+5:30
மாடஸ்டி சிறுவயதில் ஒரு வேலித்தடுப்பை தாண்டி தப்பிப்பது போல் ஒரு கதை அதன் பெயர் தெரியவில்லை.
அந்த கதையை ஆசிரியர் அவர்கள் அடுத்த வருடம் மறுபதிப்பாக கொடுத்தால் நன்றாக இருக்கும். இல்லை அது மிகவும் சிறிய கதை என்றால் இந்த வருடம் சந்தாதாரர்களுக்கு சஸ்பென்ஸ் இதழாக் கொடுக்கலாம்.
Delete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 07:34:00 GMT+5:30
அது " மாடஸ்தியின் கதை " என்ற தலைப்பிலியே மர்ம எதிரி என்ற இதழில் வந்த கதை என்று நினைக்கறேன்.
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:45:00 GMT+5:30
நன்றி பரணிதரன். ஏன்னா ஒரு ஞாபகசக்தி.
Delete
Replies
Reply
செந்தில் சத்யா 28 January 2018 at 08:57:00 GMT+5:30
மாடஸ்டியின் பழி வாங்கும் புயல்
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:29:00 GMT+5:30
// சென்னை கணேஷ் ; செந்தில் சத்யா ; பூனையார் ; மாயாவியார் போன்ற நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது //
நன்றி நண்பர்களே.
அதே போல் இனிவரும் புத்தகத் திருவிழாக்களில் நண்பர்கள் அனைவரும் தங்களால் முடிந்த அளவு களப்பணி செய்து உதவ வேண்டுகிறேன்.
ReplyDelete
Replies
செந்தில் சத்யா 28 January 2018 at 08:49:00 GMT+5:30
👍👍👍👍👍👍👍👍
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 January 2018 at 20:37:00 GMT+5:30
👏👏👏
Delete
Replies
Reply
Reply
Parani from Thoothukudi 28 January 2018 at 07:35:00 GMT+5:30
இந்த வாரம் "அலசும் நேரமிது...!" அப்படி என்றால் அடுத்த வாரம் "காயப்போடும் நேரமிது...!"
:-)
ReplyDelete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 07:38:00 GMT+5:30
'பெளன்சர்' விற்பனையில் கடைசி இடத்தில் இருப்பது ஆச்சரியமான தகவல் இல்லை என்றாலும் கூட, CBFல் சிலரது தேர்வு இதுவாக இருந்தபோது நாம் வலியச் சென்று "சார்.. இது வன்மேற்கின் நிஜமுகத்தைக் காட்டும் அருமையான கதை தான்... ஆனால் இதில் அடல்ட்ஒன்லி சமாச்சாரங்களும் ஆங்காங்கே தலைகாட்டும், பர்ரால்லியா?" என்று கேட்டபோது நிறையப்பேர் அதைத் திரும்ப வைத்துவிட்டனர்! (எடிட்டரே கூட இதைச் செய்ததை ஸ்டாலில் பார்க்க முடிந்தது). சில சிறுவர்கள் இதைப் புரட்டிப்பார்க்க முயற்சித்தபோது 'இது உனக்கானது இல்லைடா கண்ணா' நாம் பதறியடித்து பிடுங்க வேண்டியிருந்தது!
அதீத வன்முறையோ, ஆபாசங்களோ என்றுமே நம் காமிக்ஸுக்கு செட் ஆகாது என்று நாம் அவ்வப்போது போர் கொடி தூக்குவது இம்மாதிரியான காரணங்களால்தான்!
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 28 January 2018 at 07:44:00 GMT+5:30
அதீத ஆபாசங்களோ என்றுமே நம் காமிக்ஸுக்கு செட் ஆகாது.
அதுவும் கடந்த வருடம் வந்த லேடி s கதையில் வில்லன் ஆபாசப் படம் பார்ப்பது போல் உள்ள படத்தில் எழுதிய வசனங்கள் அருவருக்கத்தக்கவை. இவைகளை இனி தவிர்க்க வேண்டும். இல்லை என்றால் லேடிS புத்தகத் திருவிழாவில் புறக்கணிக்கப்படலாம்.
Delete
Replies
Reply
MITHUNAN 28 January 2018 at 10:54:00 GMT+5:30
நண்பரே பரணி
லேடி S ல் கதை போக்கில் நாம் அதை கண்டு கொள்வதில்லை!
நாம் அதை குறிப்பிட்டுச் சொல்லும்போது அது பூதகரமாக தோற்றமளிக்கத் தொடங்கிவிடும்!
உண்மையில் அது என்னவென்று கூட
எனக்கு நியாபகம் இல்லை!
கடந்து செல்ல வேண்டிய விசயங்களை அடையாளப் படுத்திக் காட்டுவதினால் அது எதிா்மறை விளைவுகளையே உண்டாக்கக் கூடும்!
ஒன்றை அடையாளப் படுத்துவதினால் அது கூடுதல் கவனம் பெறுமே ஒழிய புறக்கணிக்கப் படாது என்பது என் எண்ணம்!
எல்லோா் வீட்டிலும் டிவி உள்ளது. அதில் வரும் சந்தானம் காமெடியையே குடும்பத்தோடு ரசிக்க பழகிவிட்டோம்!
அதனால் இது ஒரு பொிய விசயம் இல்லை என்பது என் எண்ணம்!
Delete
Replies
Reply
j 28 January 2018 at 14:24:00 GMT+5:30
அத ஊதி ஊதி பெருசாக்கிடக்கூடாது.
எங்கப்பன் குதுருக்குள்ள இல்லங்குற மாதிரி நாமளே .......
Delete
Replies
Reply
Reply
Erode VIJAY 28 January 2018 at 07:44:00 GMT+5:30
நண்பர்கள் சிலர் இங்கே பதியும் பின்னூட்டங்கள் மெயில் சப்ஸ்கிரிப்ஸனில் மற்றவர்களுக்கு வந்துவிடுகிறது. ஆனால் இங்கே தளத்தில் பதிவாவதில்லை! என்னமாதிரியான பிரச்சினையோ தெரியவில்லையே... விசயம் தெரிந்த நண்பர்கள் தீர்வு சொல்லலாமே?!!
ReplyDelete
Replies
Reply
கோபி S செந்தில்குமார் 28 January 2018 at 07:45:00 GMT+5:30
வணக்கம் நண்பர்களே
ReplyDelete
Replies
Reply
PrabakarT 28 January 2018 at 07:51:00 GMT+5:30
காலை வணக்கம் சார் & நண்பர்களே 🙏🏼
ReplyDelete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 07:52:00 GMT+5:30
////நண்பர்களின் எதிர்பாரா உதவிகள் கிட்டுவது - மல்லாக்க விழுந்து முழங்காலைச் சிராய்த்துக் கொள்ளும் ஆபத்திலிருந்து நம்மைக் காப்பாற்றிடுகிறது ! ////
அ..ஆனால் எடிட்டர் சார்... மல்லாக்க விழுந்தால் முழங்காலில் எப்படி சிராய்ப்பு ஏற்படும்னேன்? 'குப்புற' என்பதுதானே சரி? ( ஹைய்யா! இரத்தப்படலம் புரூஃப் ரீடிங் பணிக்கு எடிட்டர் வச்ச டெஸ்ட்டுல நான் பாஸாகிட்டேன்!!) :P
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 28 January 2018 at 08:07:00 GMT+5:30
விஜய் @ அது ஜோக்கு. ஆராயக்கூடாது. சிரிக்க மட்டும் தான் செய்யனும்.
Delete
Replies
Reply
MITHUNAN 28 January 2018 at 10:31:00 GMT+5:30
குப்புர - குல்லாக்க - குழங்கால் ன்னு போட்டா நல்லா இருக்காதுல்ல!
அதனாலே
மல்லாக்க முழங்கால்னு போட்டிருப்பாா்னு நெனைக்கறேன்
Delete
Replies
Reply
Reply
Anonymous 28 January 2018 at 08:17:00 GMT+5:30
காலை வணக்கம்.
ஆசிரியரே நண்பர்களே.
புத்தக விழாவில் அதிகம் விற்பனையான
கதைகள் வாசகரின் கையில் கொடுத்து
பரிந்துரை செய்யப்பட்டது.ஈ வி
இஸ்பைடர் பற்றி முன்கூட்டியே கணித்து
1000-புத்தகங்களை கேட்டது அடியேன்.
இரத்த படலம் டாப் கியர் எடுத்தது பற்றி
மகிழ்ச்சி. ப்ரூஃப் ரீடிங் பணிகளை
பற்றி முன்கூட்டி தெரிவிக்க வேண்டுகிறேன்.
ReplyDelete
Replies
Erode VIJAY 28 January 2018 at 09:21:00 GMT+5:30
////.ஈ வி
இஸ்பைடர் பற்றி முன்கூட்டியே கணித்து
1000-புத்தகங்களை கேட்டது அடியேன்.////
'விற்பனைப் புயல்'மட்டுமல்ல - நீங்கள் ஒரு 'ஆரூட அனகோண்டா'ன்னும் நிரூபிச்சுட்டீங்க ஜி! :)
Delete
Replies
Reply
Prashenna R Madhu 28 January 2018 at 09:42:00 GMT+5:30
😜
Delete
Replies
Reply
Reply
PrabakarT 28 January 2018 at 08:25:00 GMT+5:30
// புத்தக விழாவின் TOPSELLER-லிருந்து ஆரம்பிப்பது நலமென்பேன் & அந்த மெடலைத் தாங்கிக் கொள்ளும் நெஞ்சானது யாருடையது என்பதைக் கேட்டால் சில பல 'பணால்'கள் நேரிடலாம் ஆங்காங்கே !! அது வேறு யாருமில்லீங்கோ - தலைகீழ் சிரசாசன SMS புகழ் இஸ்பய்டர் சாரே ! அவரது ஜனவரி இதழான "விசித்திரச் சவால்" தான் இந்தப் புத்தக விழாவினில் நமது bestseller !! //
சார்இந்த இதழ் தனி இதழாக வந்ததில்லை (தீபாவளி மலராக வந்திருந்தது)
ஆகையால் நிறைய நண்பர்களிடம் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு சார் 🙏🏼
அதனாலும் இருக்கலாமோ 🤔😇
ReplyDelete
Replies
செந்தில் சத்யா 28 January 2018 at 08:53:00 GMT+5:30
உண்மை சிபி ஜி குண்டு புத்தகங்களில் இருந்து வரும் கதைகளுக்கு தனி மவுசுன்டு அதுவுமில்லாமல் பாக்கேட் சைஸ். ஹார்ட் பவுண்ட் என்பதால் விற்பனை பட்டையை கிளப்புகிறது
Delete
Replies
Reply
Reply
PrabakarT 28 January 2018 at 08:27:00 GMT+5:30
// இந்த "எழுபதுகளின் பிள்ளைகளை" இன்றைக்கும் முன்னணியில் நிற்கச் செய்யும் இந்த 'நோஸ்டால்ஜியா'வை எண்ணி வியாக்காது இருக்க இயலவில்லை ! //
Old is Goldன்னு பெரியவங்க சும்மாவா சொல்லியிருக்காங்க சார்
.
ReplyDelete
Replies
Reply
T K AHMED BASHA 28 January 2018 at 08:28:00 GMT+5:30
Present Sir
ReplyDelete
Replies
Reply
Madhiyilamandhiri 28 January 2018 at 08:34:00 GMT+5:30
Spider....எப்போதுமே டாப் தான்......விண்வெளி பிசாசு.....பாக்கெட் சைஸ்....ப்ளீஷ்்.....
ReplyDelete
Replies
செந்தில் சத்யா 28 January 2018 at 08:54:00 GMT+5:30
தானைத் தலைவன் எப்பவுமே கிங் தான்
Delete
Replies
Reply
Reply
PrabakarT 28 January 2018 at 08:54:00 GMT+5:30
// இந்தப் புத்தக விழாவின் நிஜமான surprise என்று சொல்வதாயின் - அது நமது உடைந்த மூக்காரின் ஆல்பங்களின் விற்பனையில் தென்பட்டிருக்கும் ஒரு சுறுசுறுப்பு !! கடைசி 3 ஆண்டுகளாய் டைகரும் சரி ; கமான்சேவும் சரி, ஊர் ஊராய்ப் புத்தகவிழாக்களின் பெயரைச் சொல்லி சுற்றுப் பயணம் அடித்துவிட்டு பத்திரமாய் நமது கிட்டங்கிக்கே திரும்பிடும் வித்தைக்காரர்களாகவே இருந்து வந்தனர் ! ஆனால் இம்முறையோ - "இரத்தக் கோட்டை" தந்த boost-ன் காரணமாகவோ , என்னவோ - கேப்டன் டைகரின் விற்பனை has not been bad at all !! வழக்கம் போல "தங்கக் கல்லறை"-க்கு நல்ல வரவேற்பு //
இந்த ஒரு காரணம் போதுமே சார்
அடுத்து எப்போ தங்க தலைவனின் அடுத்த புத்தகம் வரப்போகுதுன்னு டைகர் அபிமானிகள் ஆரம்பித்து விடுவார்களே 🤔
ReplyDelete
Replies
Reply
PrabakarT 28 January 2018 at 08:58:00 GMT+5:30
// இம்முறை நண்பர் கணேஷ், கன்னத்தில் மருவை ஒட்டிக்கொண்டு வந்து மொத்தமாய் வாங்கி யாருக்கேனும் விநியோகம் செய்தாரா என்று தெரியவில்லை ; கொண்டு சென்ற XIII-ன் இதழ்களில் பெரிதாயொரு மிச்சம் இருக்கவில்லை ! And மொத்தம் 12 முன்பதிவுகள் சென்னையில் நடந்துள்ளதையும் சேர்த்தால் தற்போதைய "இரத்தப் படலம்" முன்பதிவு நம்பர் : 402 !!! We are there guys !!! கதைகளின் (வண்ண) டிஜிட்டல் கோப்புகள் வந்துவிட்டன ; மாதாந்திரப் பணிகளுக்கு இடைஞ்சலின்றி வேலைகளை முடுக்கி விட வேண்டியது மட்டுமே பாக்கி !! அநேகமாய் ஏப்ரல் இறுதியில் வாசக proof reading டீமுக்கு வேலையிருக்கும் !! தயாராகிக் கொள்ளுங்கள் - சிகப்புப் பேனா சகிதம் !! //
வாவ் அருமை சார்
சார் அப்படியே சிங்கிள் புக்கு வேண்டுபவர்களுக்கு தர வாய்ப்பு இருக்கிறதுங்களா சார் _/|\_
.
ReplyDelete
Replies
Reply
PrabakarT 28 January 2018 at 09:01:00 GMT+5:30
// அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! //
நிறைய முறை
நிறைய நண்பர்கள் சொல்லியிருக்கிறாங்க சார்
மார்ட்டினுக்கு கூடுதலாக இடம் ஒதுக்க சொல்லி
இனியாவது பார்த்து ஏதாச்சும் போட்டு கொடுங்கசார் _/|\_
.
ReplyDelete
Replies
Arivarasu @ Ravi 28 January 2018 at 10:15:00 GMT+5:30
மார்ட்டின்,ரிப்போட்டர் ஜானி பேரவை சார்பாக
+11111111111
Delete
Replies
Reply
Reply
Paranitharan.k 28 January 2018 at 09:11:00 GMT+5:30
அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 January 2018 at 09:14:00 GMT+5:30
,சார் அலசல்கள் அருமை....இப பிழை திருத்த என்னையும் சேத்துக்கோங்க... லார்கோ சரியான விளம்பரமில்லையோ.
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 28 January 2018 at 09:25:00 GMT+5:30
அதிலும் நி.நி.காலின்னு நினைக்கிறப்ப ரொம்ப பயந்து வருது சார்..:-)
ReplyDelete
Replies
Arivarasu @ Ravi 28 January 2018 at 10:14:00 GMT+5:30
என்ன தலைவரே மனசுக்குள்ள பேசறேன்னு நினைச்சிகிட்டு இங்கே திரும்ப,திரும்ப பேசறிங்களா?
ரொம்ப எக்கோ அடிக்குதே.
Delete
Replies
Reply
Reply
Arivarasu @ Ravi 28 January 2018 at 10:17:00 GMT+5:30
// மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை !//
அருமையான தகவல், 2019 ல் மார்ட்டினுக்கு ரெண்டு ஸ்லாட் பார்சல்.
ReplyDelete
Replies
Reply
Arivarasu @ Ravi 28 January 2018 at 10:23:00 GMT+5:30
லார்கோ,ஷெல்டன்,ஸ்மர்ப்ஸ், மதியில்லா மந்திரி போன்றவை விற்பனையில் சுணக்கம் என்பது வருத்தமாக உள்ளது,இதற்கான விடை என்ன? இவைகள் வாசிக்க சுவாரஸ்யமான களங்களை கொண்டவையே,எனினும் விற்பனையில் சுணக்கமும்,கிட்டங்கியில் தேங்கும் அபாயமும் இருப்பின்
சற்றே இடைவெளி வேண்டுமானால் விட்டுப் பார்க்கலாம்.
ReplyDelete
Replies
Reply
Arivarasu @ Ravi 28 January 2018 at 10:25:00 GMT+5:30
// நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!!//
மிக மகிழ்ச்சியான செய்தி,இங்கே வந்த பாஸிட்டிவ் விமர்சனங்களும்,அளவான பதிப்பும் காரணமாக இருக்கலாம்.
ReplyDelete
Replies
Reply
Raghavan 28 January 2018 at 11:05:00 GMT+5:30
Dear Editor,
Similar levels of sales as to two years ago can be due to two things:
a) You need publicity beyond this blog to reach out people - see below my take on Ponniyin Selvan publicity (Nila comics).
b) At Book fairs, people have the need to divide their budget - no one comes specifically for comics shopping - very few impulsive spenders - hence if on an average they visit 5 stalls to pick up books - the average spend on comics stall remains the same.
This year people also got diverted to PONNIYIN SELVAN comics. As pathetic as the quality of that book was, it carried superior publicity and marketing - at least with respect to the Arena. What plans can we implement in this regard?
Note: My last 3 comments at the blog had been removed - they did reach my friends in e-mails though.
ReplyDelete
Replies
Vijayan 28 January 2018 at 15:03:00 GMT+5:30
Raghavan : //Note: My last 3 comments at the blog had been removed - they did reach my friends in e-mails though. //
Huh ?? அதெப்படி சார் ? நான் blog பின்னூட்டங்களை இப்போதைக்குள் கைவைக்கவே இல்லையே ?? சொல்லப் போனால் ஒரு மாதத்துக்கும் மேலிருக்கும் நான் இங்கு பதில் போட முனைந்தே !!
And in any case - காலி பண்ண அவசியம் ஏற்படுத்தும் பின்னூட்டங்களாகவும் உங்களது இருக்கப் போவதில்லையே ?
இதே போல் தான் திருப்பூர் ப்ளூபெர்ரி & ஈ.வி. கூட ஏதோ சமீபத்தில் சொன்னது நினைவிற்கு வருகிறது !!! இது போன்ற glitches நேரக்கூடியதன் காரணங்கள் பற்றி யாருக்கேனும் எதுவும் தெரியுமா guys ? Any help would be appreciated !
Delete
Replies
Reply
j 28 January 2018 at 15:08:00 GMT+5:30
I also had experienced some kickbacks but left it rather than to, too worried....
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 15:25:00 GMT+5:30
Raghavan : Publicity நிச்சயம் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை சார் ; ஆனால் end of the day - வாசகர்களை நேரில் சென்றடையும் விற்பனை முயற்சிகள் நீங்கலாக இதர எல்லா மார்க்கங்களிலும் "கடன்" ; "நிலுவைச் சேதாரம்" என்ற அரக்கர்கள் வழிமறித்து நிற்கிறார்கள் !! கடைகள் வழியாகவே வாசகர்களை எட்டிப்பிடிக்க வேண்டியதொரு சூழலில் 2 இடர்கள் குறுக்கிடுகின்றன !
முதலாவது அவர்கள் கோரும் 40 % கமிஷன் !! நார்மலான bookstore பாணியில் நம்மிடமும் இந்தத் தொகையை விற்பனையாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் ! ஆனால் நமது விலைகளோ தம்மாத்துண்டு மார்ஜினோடு மட்டுமே நிர்ணயிக்கப்படுபவை எனும் பொழுது அந்த கமிஷனுக்கு இசைவு சொல்ல சாத்தியப்படுவதில்லை !
இரண்டாவது கடன் !! Of course இன்றைய சூழலில் ரொக்க வியாபாரம் என்பதெல்லாம் நம் போன்ற குட்டி பதிப்பகங்களுக்கு கனவாக மட்டுமே இருக்க முடியும் ! So கடன் தந்திட நாங்களும் தயாரே - முறையானதொரு அவகாசத்துக்குப் பின்பாய் bill to bill முடித்துவிட ஏஜெண்ட்கள் சம்மதிக்கும் பட்சங்களில் ! பத்துக்கு ஏழு பேர் நிறுத்தி வைக்கும் தொகைகள் - கிட்டத்தட்ட 6 முதல் 8 மாதத்து பில் தொகைகளை எனும் பொழுது வெறுத்தே போய் விடுகிறது ! இதனில் ஒட்டு மொத்தமாய் கோவிந்தா போட்டுச் சென்று விடும் நபர்களின் சித்திரவதைகள் இன்னொரு பக்கம் ! சேலம் & ஈரோடு நீங்கலாக தமிழகப் பெருநகரங்களுள் ஆண்டுக்கொரு ஏஜெண்டிடமாவது "மொத்தமாய் காலி" என்ற மொட்டையை நாம் வாங்காத ஊரே கிடையாது ! தற்சமயம் நாம் விற்பனை செய்து வரும் முகவர்கள் நம் சிரமங்கள் புரிந்து நாணயமாய் செயல்படுவோர் மாத்திரமே ! மூன்றோ, நாங்கோ மாதத்து நிலுவைகள் அவர்களிடம் தங்கியிருப்பினும் -
வசூலுக்குச் செல்லும் தருணங்களில் தேதியிட்ட செக்குகளாகவாவது தந்து உதவிடுகின்றனர் !!
வட்டத்தைப் பெரிதாக்க எங்களுக்கும் கொள்ளை ஆசை தான் சார் ; கடந்த 15 நாட்களாக ஒரு அட்டகாசமான complete book list அடங்கிய முழுவண்ண கேட்லாக்கை தயாரித்து கிட்டத்தட்ட 800 புத்தகக் கடைகளுக்கு அனுப்பியுள்ளோம் தமிழகமெங்கிலும் ! நம்பினால் நம்புங்கள் - வெறும் நூறு ரூபாய்க்கு கூட இன்று வரைக்கும் அதன் தொடர்ச்சியாய் வியாபாரம் நிகழ்ந்த பாட்டைக் காணோம் !! "வேணும்னா கடனுக்குத் தூக்கி விடு ; விற்ற பிறகு, வசதிப்படும் போது பணம் தர்றோம் ! இது சரிப்படாதா - நடையைக் கட்டு !" என்பதே இன்றைய மார்க்கெட் நிலவரம் சார் !
எல்லாத் துறைகளிலும் இன்றைக்கு சிரமங்கள் மேலோங்கியே நிற்கின்றன ; "அத்தியாவசியம் அல்ல" என்ற பட்டியலுக்குள் அடைபடக்கூடிய சமாச்சாரங்களுக்கோ அந்தச் சிரமப் பட்டியல் extra large !! அவ்வளவே !!
Delete
Replies
Reply
Padmalochan karthikeyan 28 January 2018 at 20:53:00 GMT+5:30
Unscrupulous agents...how do other publishers manage such problem sir ? ...and I how do they sell their books at bookshops & newsstand? I thought there would be no problem in selling our books at newsstand because we are now regular in publishing but so sad to hear this sir......
Delete
Replies
Reply
Reply
Gopaplakrishnan T 28 January 2018 at 11:09:00 GMT+5:30
One of the possible reasons for the successful sale of the black and white reprints is its price and more content reading.
ReplyDelete
Replies
Raghavan 28 January 2018 at 11:31:00 GMT+5:30
Absolutely .. Nilavoliyil Narabali and the REPEAT books are too catchy to ignore at the price tag of INR 50 :-) In 2018, even if it is INR 60, a book fair rebate will net it for INR 54.
Delete
Replies
Reply
j 28 January 2018 at 14:44:00 GMT+5:30
Moreover my dear sirs
That golden days of newspaper print repeats, isn't ?
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 14:56:00 GMT+5:30
Gopalakrishnan Thiagarajan : அதனால் தான் மறுபதிப்புகளின் விலையில் கைவைக்கவே தயங்குகிறோம் சார் !
Delete
Replies
Reply
j 28 January 2018 at 15:04:00 GMT+5:30
வச்சுறாதீங்க
வர்ற வயசுப் பார்ட்டிங்க , பழைய நெனப்புடா பேராண்டீன்னு கை வைக்கிறத கெடுத்திடக்கூடாதில்ல...
Delete
Replies
Reply
Reply
Anonymous 28 January 2018 at 12:31:00 GMT+5:30
ஆசிரியர் விஜயன் சாருக்கு
அன்பு கலந்த வணக்கங்கள்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு
பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு
பலருடைய வற்புறுத்தலுக்கு பிறகு
தாங்கள் இரத்தபடலம் வண்ண
மறுபதிப்பை வெளியிட முன்வந்தற்க்கு
என் நன்றிகள்.முன்பதிவுகள் நீங்கள்
எதிர்பார்த்த எண்ணிக்கையான 400ஐ
எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி.
தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை
இப்படி ஒரு படைப்பு வந்ததில்லை
வரப்போவதும் இல்லை.எங்கள்
மனக்குறையெல்லாம் விடுபட்ட
13புலன்விசாரணை பற்றி தாங்கள்
அறிவிப்பு ஏதும் சொல்லாததே.
புலன் விசாரணை புத்தகத்தை
முன்பதிவு செய்தவர்களுக்கு
முடிந்தால் இலவசமாக அளிக்க
வேண்டுகிறேன்.அல்லது சிறப்பாக
தற்போது வெளிவந்த A4 சைஸ் சிக்பில்
ஹார்டு பவுண்டு இதழ் போல் 200/-
விலையில் 800 இதழ்கள் மட்டும்
பிரிண்ட் செய்து விற்பனை செய்தாலும்
நல்லது. அல்லது முதல் 400 முன்பதிவு
செய்த வாசகர்களுக்கு மட்டும் சலுகை
விலையாக 100/- பிறகு புக் செய்யும்
வாசகர்களுக்கு200/-விலையிலும்
கொடுக்கலாம். புலன் விசாரணை புத்தகம்
இன்றி 13ன் சகாப்தம் முழுமையடையாது.
இது தாங்களும் அறிந்ததே.என்னுடைய
என் நண்பர்களுடைய வேண்டுகோள் இது.
எனது கோரிக்கையை வேண்டுகோளை
அனுப்புகிறேன்.பிளாக்கில் உங்கள்
அறிவிப்புக்காக காத்திருக்கும்
என்றும் உங்கள் அன்பன் நண்பன்
காமிக்ஸ் காதலன்
GANESH.KV. CHENNAI.
மீண்டும் ஒரு நினைவூட்டல்.
இரத்த படலம் வெளிவரும்போதே
புலன்விசாரணை வெளியிட்டால்
கதையும் முழுமை பெறும்.விற்பனையும்
சிறக்கும்.தாங்கள் கூறியபடி இலவசமாக
கொடுத்தாலும் சிறப்பு. அல்லது G S T
COURIER & PAPER கட்டண உயர்வுகளால்
நான் கூறியபடி 100 /- OR 200 /- விலையில்
வெளியிட்டாலும் நன்று.தயவு செய்து
E B F ல் சிறப்பு வெளியீடாக புலன்விசாரணை
புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொடர்ச்சியாக
13 ன்SPINOFF கதைகளை 2019 ல்
வெளியிட்டால் வெற்றி உறுதி.
நன்றி.
13 ன் காதலர்கள் ஆர்வலர்கள் எனது
வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து
ஒருமித்த குரல் கொடுக்குமாறு
வேண்டுகிறேன்.
ReplyDelete
Replies
Reply
Anonymous 28 January 2018 at 12:32:00 GMT+5:30
ஆசிரியர் விஜயன் சாருக்கு
அன்பு கலந்த வணக்கங்கள்.
நீண்ட போராட்டத்திற்கு பிறகு
பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு
பலருடைய வற்புறுத்தலுக்கு பிறகு
தாங்கள் இரத்தபடலம் வண்ண
மறுபதிப்பை வெளியிட முன்வந்தற்க்கு
என் நன்றிகள்.முன்பதிவுகள் நீங்கள்
எதிர்பார்த்த எண்ணிக்கையான 400ஐ
எட்டிப்பிடித்தது மகிழ்ச்சி.
தமிழ் காமிக்ஸ் வரலாற்றில் இதுவரை
இப்படி ஒரு படைப்பு வந்ததில்லை
வரப்போவதும் இல்லை.எங்கள்
மனக்குறையெல்லாம் விடுபட்ட
13புலன்விசாரணை பற்றி தாங்கள்
அறிவிப்பு ஏதும் சொல்லாததே.
புலன் விசாரணை புத்தகத்தை
முன்பதிவு செய்தவர்களுக்கு
முடிந்தால் இலவசமாக அளிக்க
வேண்டுகிறேன்.அல்லது சிறப்பாக
தற்போது வெளிவந்த A4 சைஸ் சிக்பில்
ஹார்டு பவுண்டு இதழ் போல் 200/-
விலையில் 800 இதழ்கள் மட்டும்
பிரிண்ட் செய்து விற்பனை செய்தாலும்
நல்லது. அல்லது முதல் 400 முன்பதிவு
செய்த வாசகர்களுக்கு மட்டும் சலுகை
விலையாக 100/- பிறகு புக் செய்யும்
வாசகர்களுக்கு200/-விலையிலும்
கொடுக்கலாம். புலன் விசாரணை புத்தகம்
இன்றி 13ன் சகாப்தம் முழுமையடையாது.
இது தாங்களும் அறிந்ததே.என்னுடைய
என் நண்பர்களுடைய வேண்டுகோள் இது.
எனது கோரிக்கையை வேண்டுகோளை
அனுப்புகிறேன்.பிளாக்கில் உங்கள்
அறிவிப்புக்காக காத்திருக்கும்
என்றும் உங்கள் அன்பன் நண்பன்
காமிக்ஸ் காதலன்
GANESH.KV. CHENNAI.
மீண்டும் ஒரு நினைவூட்டல்.
இரத்த படலம் வெளிவரும்போதே
புலன்விசாரணை வெளியிட்டால்
கதையும் முழுமை பெறும்.விற்பனையும்
சிறக்கும்.தாங்கள் கூறியபடி இலவசமாக
கொடுத்தாலும் சிறப்பு. அல்லது G S T
COURIER & PAPER கட்டண உயர்வுகளால்
நான் கூறியபடி 100 /- OR 200 /- விலையில்
வெளியிட்டாலும் நன்று.தயவு செய்து
E B F ல் சிறப்பு வெளியீடாக புலன்விசாரணை
புத்தகத்தை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.தொடர்ச்சியாக
13 ன்SPINOFF கதைகளை 2019 ல்
வெளியிட்டால் வெற்றி உறுதி.
நன்றி.
13 ன் காதலர்கள் ஆர்வலர்கள் எனது
வேண்டுகோளுக்கு ஆதரவு தெரிவித்து
ஒருமித்த குரல் கொடுக்குமாறு
வேண்டுகிறேன்.
ReplyDelete
Replies
MITHUNAN 28 January 2018 at 12:49:00 GMT+5:30
+111111
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 12:50:00 GMT+5:30
@ KVG ji
புலன்விசாரணை பகுதி - மொழிபெயர்ப்புப் பணியில் முழியைப் பிதுக்கிவிடும். ஒரு முழுநீள ஆங்கில நாவலை மொழிபெயர்ப்பதற்குச் சமம்!
தனிப்பட்ட முறையில் புலன்விசாரணைப் பகுதியை தமிழில் படித்துவிட எனக்கும் ஆசைதான்... ஆனால் வண்ணமயமான இ.ப இதழுடன் சேர்ந்து வெளியாகிடும்பட்சத்தில் - பத்தி பத்தியான எழுத்துக்களைக் கொண்ட இந்தப் புலன்விசாரணைப் பகுதி நண்பர்கள் பலராலும் ஏதாவது ஒரு மூலையில் முடக்கப்பட்டுவிடும் அபாயமிருக்கிறது. மாதக்கணக்கில் செய்த மொழிபெயர்ப்புப் பணியும், தயாரிப்புப் பணியும் வீணாகிவிடுமோ என்ற கவலை எழுகிறது!
இரத்தப்படலமே ஒரு ஃபுல் மீல்ஸ் மாதிரியானதுதானே... கூட பரோட்டா எதற்கு?
தகுந்த இடைவெளிவிட்டு அடுத்தவருடம் வெளியாகிடும்பட்சத்தில் புலன்விசாரணைக்குக் கூடுதல் வரவேற்புக் கிடைக்கும் என்பது என் தாழ்மையான கருத்து!
இ.ப வெறியர்கள் மன்னிக்க! :)
Delete
Replies
Reply
Prashenna R Madhu 28 January 2018 at 13:07:00 GMT+5:30
👍🏼🙏🏾👌 மிகமிக முக்கியமான மற்றும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட வேண்டுகோள் அண்ணா. நன்றி!
XIII மற்றும் XIII Mystery தொடர்பில் தற்போதைய வாசகர்களுக்குடையிலுள்ள தெளிவற்ற நிலை மற்றும் XIII முதலாம் பாகம் வெளிவந்த காலம் முதல் தற்போதைய பாகங்களின் வருகைக்காக எடுத்துக்கொண்ட நீண்ட இடைவெளி (20 வருடங்கள்) என்பவற்றால் ஏற்பட்ட ஒரு pseudo disconnection மற்றும் original கதையில் 13ம் பாகத்தை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சடுதியான பாகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு(14-18) போன்றன ஒருவித generation gap ஐ ஒத்த ஒரு நிகழ்வை ஏற்படுத்தி புதிய வாசகர்கள் மத்தியில் ஆர்வத்தில் ஒரு பின்னடைவை தோற்றுவித்தன.
ஆனால் இன்றும் அதற்குரிய demand இல் குறைவில்லை என்பதை 400+ Booking எடுத்துக்காட்டுகிறது.
முதலாம் இரண்டாம் seasonsஐ இணைக்கும் 13ம் பாகம் ( புலன்விசாரணை) பல வருட எதிர்பார்ப்பு.
அதை இந்த colour combined edition உடன் இணைத்து வெளியிட்டாலோ அன்றி தனியாக இவ்வெளியீட்டுடன் வெளியிட்டாலோ அன்றி வேறொரு காலத்தில் வெளியிடுவதென்பது சாத்தியமற்றது மட்டுமன்றி பிரயோசனமுமற்றதாகிவிடும். இவை அனைத்தும் வெளியிட்டு முடித்தால் அதன்பின் நிச்சயமாக XIII Mystery கதைகளின் எஞ்சிய 9 கதைகள் விற்பனையில் சக்கைபோடுபோடும் என்பது மட்டுமன்றி வாசகர்களின் ஆர்வத்தையும் தூண்டிவிடும்.
இனி வர இருக்கும் XIII இன் 25ம்பாகம் (season 4) இற்கு இவை அனைத்தும் நிச்சயமாக ஒரு ஸ்திரமான அத்திவாரத்தை இடும் சாத்தியம் அதிகம்.
Delete
Replies
Reply
Anonymous 28 January 2018 at 13:30:00 GMT+5:30
தவறான கருத்து ஈ வி.
13 உடன் புலன்விசாரணை வெளிவருவதே
நன்று.13வரும்போது கூடவே 800 புலன்
விசாரணையும் வந்தால் அல்லது அதிகம்
வந்தாலும் இதுவரை XIIIவாங்கியுள்ள
புதிதாய் புக் செய்துள்ள மேலும்
வாங்கப்போகும் வாசகருக்கு முழுமையான
கதையை படித்த அனுபவமும் இதற்குமுன்
வந்த இனி வரப்போகும் SPINOFF கதைகள்
சிறப்பாக விற்பனையாகும் என்பதில்
மாற்று கருத்து இருக்கப்போவதில்லை.
Delete
Replies
Reply
செந்தில் சத்யா 28 January 2018 at 13:54:00 GMT+5:30
கணேஷ் சார் உங்களுடைய கருத்தே என் கருத்தும் + 111111111111111
Delete
Replies
Reply
j 28 January 2018 at 14:40:00 GMT+5:30
எல்லாம் இருக்கு பெட்டியில
இலை கறி கடைய சட்டியில்ல
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 14:51:00 GMT+5:30
@ ALL : முன்பதிவு இலக்கை எட்டிய நொடியிலேயே எல்லா சிக்கல்களையும் கடந்து விட்டோம் ; இனி 6 வழிச் சாலையில் சறுக்கிக் கொண்டு வண்டியை விட வேண்டியது மட்டுமே பாக்கி என்பது போலான உங்கள் எதிர்பார்ப்புகள் - எங்கள் மீதான உங்கள் நம்பிக்கைகளின் அடையாளங்களாக இருக்கலாம் !! அதன் பொருட்டு எங்களது நன்றிகள் folks !! ஆனால் நானுமே அதே தைரியத்தில் திரிந்தால் அதைவிடப் பெரிய தவறு வேறெதுவும் இருக்க முடியாது !
ஒற்றை ஒற்றை அடிகளாய் எடுத்து வைக்க வேண்டிய முயற்சி இது நண்பர்களே ; உணர்ச்சிப்பெருக்கில் எதையாவது செய்வதாய் தட தட வென்று வாக்குக் கொடுத்து விட்டு, அப்புறமாய் விழி பிதுங்கும் விளையாட்டுக்கு இது தருணமல்ல !
848 பக்கங்களைத் தயாரித்து, மூன்று தனித் தனி ராப்பர்களை உருவாக்கி, ஒட்டுமொத்தத்தையும் அச்சிட்டு, மூன்று hardcover இதழ்களை பைண்டிங்கும் செய்து, குளறுபடிகளின்றி உங்களிடம் ஒப்படைப்பதே பிராணன் போகும் பணியாக இருக்கப் போவது நிச்சயம் ! எனது 100 % கவனமும் அங்கில்லாது போயின் சொதப்பிட ஒரு நூறு வாய்ப்புகள் பிரகாசமாய் உள்ளன !
பற்றாக்குறைக்கு - அதே மாதத்தில் TEX - Dynamite ஸ்பெஷல் எனும் அதிரடியும் காத்துள்ளது, மாமூலான இதழ்களோடும் !
So first things first ! விருந்தை ஒழுங்காய் சமைப்பதே இந்த நொடியில் எனது அவாவும், ஆதங்கமும் !!! அந்தப் பொறுப்பை எனக்கு முழுத் திருப்தி தரும் விதமாய் நிறைவேற்றும் வரையிலும், பஜ்ஜி-சொஜ்ஜிகள் மீதோ ; ஜிகர்தண்டாக்கள் மீதோ கவனத்தை ஓட விடுவது முறையாகாது !! பயணமோ ஒரு சிரமமான சிகரத்தை நோக்கி எனும் பொழுது - ஒருமித்த கவனமே இந்த வேளையின் முதல் தேவையன்றோ ?
So புலனாய்வு ; spin-offs சார்ந்த விவாதங்கள், யூகங்கள் இப்போதைக்கு வேண்டாமே - ப்ளீஸ் ?
Delete
Replies
Reply
j 28 January 2018 at 15:00:00 GMT+5:30
அதத்தான நானுஞ் சொன்னேஞ்சாமி...
Delete
Replies
Reply
Kalanithi from Erode 28 January 2018 at 15:10:00 GMT+5:30
எடிட்டர் சார் .. நீங்கள் ஒவொன்றாக வெளி இடுவீர்கள் என்ற நம்பிக்கை எப்பொழுதும் எங்களுக்கு உண்டு 👍...
ஆதலால் உங்கள் முடிவே இப்பொழுது எங்கள் முடுவு... காமிக்ஸ் காதலர்கள் இந்த முடிவை யர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில்...
Delete
Replies
Reply
Palanivel arumugam 28 January 2018 at 23:25:00 GMT+5:30
மொழிபெயர்ப்புப் பணியில் முழியைப் பிதுக்கிவிடும். ஒரு முழுநீள ஆங்கில நாவலை மொழிபெயர்ப்பதற்குச் சமம்!
ஒரு பிரபல பிரெஞ்சு நாவலின் காமிக்ஸை மொழிபெயர்த்து படித்து முடித்து விற்று தீர்க்கும் அளவுக்கு ரசணையில் மூத்த நாம் இதனை ஏற்றுக்கொள்ள தயங்குவது ஏன் நட்பே
மேலும் நாவல் போல் நாவல்போல்எஎனக்கூறுவதைத்தவிறுங்கள் நண்பரே
Delete
Replies
Reply
Palanivel arumugam 28 January 2018 at 23:31:00 GMT+5:30
ஒருவேலை மொழிபெயற்த்து கொடுத்தால் நீங்கள் படித்துவிட்டு கருத்து கூருங்கள் நண்பரே இனி கேட்பதற்க்கு ஏதுமில்லை எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வழிவிடுங்கள் நண்பர்களே
Delete
Replies
Reply
Reply
MITHUNAN 28 January 2018 at 12:59:00 GMT+5:30
////As usual - டெக்சின் வாலைப் பிடித்துக் கொண்டே அடுத்தயிடத்தில் நிற்பது நமது லக்கி லூக் ! அந்த மனுஷனுக்கும் டெக்ஸைப் போலவே ஆண்கள் / பெண்கள் ; சிறார் / பெரியோர் என அனைத்துத் தரப்போடும் ஒருவித chemistry நிலவுவது கண்கூடு !! இம்முறை முதலிடம் "ஒரு பட்டாப் போட்டி" இதழுக்கே ; followed by "ஒற்றைக்கைப் பகாசுரன்" !! ////
ஜாலி ஜம்பா் : அதானே பாத்தேன்! எங்கடா நம்மால காணோமேன்னு!
ReplyDelete
Replies
MITHUNAN 28 January 2018 at 13:03:00 GMT+5:30
எடிட்டா் சாா்,
நம்ம வீட்டு பொடியன் சுட்டி லக்கிலூக் புதுபுக் வந்திருச்சா ? வந்திருச்சா? ஒன்னரை வருசமா கேட்டுக்கிட்டே இருக்கான் சாா்!
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 14:25:00 GMT+5:30
Mithun Chakravarthi : ஒன்றரை மாதங்களுக்கு முன்பாய் இந்தத் தொடரின் லேட்டஸ்ட் ஆல்பம் வந்திருக்கு சார் ; அதன் ராப்பரை மேலே, பதிவின் இறுதியில் இணைத்துள்ளேன் !
இதற்கு முன்பான ஆல்பங்கள் ஒற்றைப் பக்க gags களின் தொகுப்புகளாக மட்டுமே இருந்து வந்ததால் அவற்றின் மீது அவ்வளவாய் நாம் ஆர்வம் காட்டிடவில்லை ! இப்போது வந்திருப்பது முழுநீளக் கதையே என்பதால் - கேட்டுள்ளோம் இதன் பக்கங்களை ! மொழிபெயர்த்துப் பார்த்த பின்னே ஓ.கே. என்று தோன்றினால் திட்டமிடுவோம் 2019 க்கு !
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 14:35:00 GMT+5:30
ஹா ஹா ஹா! கிட்லக்கியின் அந்த அட்டைப்படமே பயங்கர காமெடியா இருக்கு! பின்புறத்தில் அம்பு குத்திய நிலையில் கிட்லக்கியை விரலால் சுரண்டிக் கூப்பிடும் அந்த கரடியின் முகபாவத்தைக் கவனியுங்களேன்! ஹா ஹா ஹா! செம்ம! :))))
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 14:53:00 GMT+5:30
இந்த ஆல்பத்தில் நம்மாளின் சின்ன வயசு 'டாவு' பற்றியும் கதையோட்டம் உண்டாம் !!
Delete
Replies
Reply
j 28 January 2018 at 14:58:00 GMT+5:30
அடங்கொக்காமக்கா
அந்த வயசலயே டாவா
பார்றா.........
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 22:24:00 GMT+5:30
/////அடங்கொக்காமக்கா
அந்த வயசலயே டாவா
பார்றா....////
j ji... அதைவிடவும் இக்ளியூண்டு வயசிலேயே டாவடிச்சவங்களும் கூட இங்கே உண்டு! ஹிஹி! ;)
Delete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 22:43:00 GMT+5:30
அஞ்சாப்பு .....ருக்கு ...நெல்லிக்கா......காக்காக்கடி...
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 22:53:00 GMT+5:30
@ KOK
என்னாவொரு ஞாபக சக்தி!!!
உங்களை மாதிரியே ருக்குவுக்கும் ( பேரச் சொல்லும்போதே 'குக்கூ' கூவறாப்ல இல்ல?) ஞாபக சக்தியிருந்தா நல்லா இருக்கும்! ;)
Delete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:28:00 GMT+5:30
ருக்கு - குக்கூ
அடடா அடடா .. ..!!
ஆனா குருநாயரே ... இப்போ ருக்கு ரோஜா படத்துல ருக்குமணி ருக்குமணி அக்கம்பக்கம் என்னசத்தம்னு பாடுற பாட்டிக ரேஞ்சுக்கு இருக்குமே .. (உங்க க்ளாஸ்மேட் அப்படிங்கறச்சே ..) ;-)
Delete
Replies
Reply
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 January 2018 at 13:47:00 GMT+5:30
ஸ்பைடரோட விண்வெளிப்பிசாசு , கொலைப்படை பிரம்மாண்டமாய் வரும்நாாளை எதிர் பார்த்து...
ReplyDelete
Replies
Reply
Kalanithi from Erode 28 January 2018 at 15:10:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
j 28 January 2018 at 15:21:00 GMT+5:30
எடிட்டர் சாரே....
இப்ப சாயங்காலமயிடிச்சி.....
4.30 லிருந்து 6 , ராகு காலம்
அதனால கிளிப்டன போட்டு உடைங்க....
ReplyDelete
Replies
Reply
Arivarasu @ Ravi 28 January 2018 at 17:40:00 GMT+5:30
பிப்ரவரி இதழ்கள்?
ReplyDelete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 19:33:00 GMT+5:30
@ ALL : மீசைக்காரக் கர்னல் கேப்ஷன் போட்டியில் சான்ஸே இல்லாது பரிசை தட்டிச் செல்வது நண்பர் வித்யா தான் !! கீழ்கண்ட நாலுக்குள் எதை வேண்டுமானாலும் வெற்றி பெற்ற caption ஆக எடுத்துக் கொள்வோமே :
----------------------------------------------------------------------------------
M. Vidya10 January 2018 at 21:47:00 GMT+5:30
கேப்சன்1:
A.(நாம வச்ச ஆளு இவள கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா...)
B.(நாம வச்ச ஆளு இவன கண்டிப்பா காலி பண்ணிருவான்...ஹையா....)
கேப்சன்2:-
A.நம்ம மேரேஜ் முடிஞ்சத கொண்டாட என்ன பிலிம்க்கு போகலாம் டார்லிங்...
B."என்னை நோக்கி பாயும் தோட்டா!"
கேப்சன்3:
A.போட்டோ ஷீட்னு தானே சொன்னானுங்க...ஒருவேள நாமதான் தப்பா புரிஞ்சுகிட்டமோ?
B.ஆமா..மா..ம்..
கேப்சன்4:-
B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...
A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..
------------------------------------------------------------------------------
Congrats !! LMS குண்டு புக் பரிசு உங்களுக்கே நண்பரே !!
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 January 2018 at 20:32:00 GMT+5:30
வாழ்த்துகள் நண்பரே...
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 20:59:00 GMT+5:30
வாழ்த்துகள் வைத்யா!!பட்டையைக் கிளப்பிவிட்டீர்கள்! குறிப்பாக அந்தக் கடைசி கேப்ஷன் - செம்ம! :))))
நல்ல நகைச்சுவை உணர்வு உங்களுக்கு! தொடர்ந்து கலக்குங்கள்!!
Delete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 22:41:00 GMT+5:30
///B.உங்களதான் சுட எய்ம் பண்றாங்க டியர்...
A.மூளை கெட்டவனுங்க...தற்கொலையை கொலையா மாத்தி என்னத்த சாதிக்க போறானுங்களோ..///
ஹாஹாஹா!!!
வாழ்த்துகள் சார். 👏👏👏
Delete
Replies
Reply
Saravanan R 29 January 2018 at 07:40:00 GMT+5:30
வாழ்த்துக்கள் பாஸ்!
கடைசி caption சான்சே இல்ல! கலக்கிடீங்க போங்க :-)
Delete
Replies
Reply
Reply
Prabhu 28 January 2018 at 20:21:00 GMT+5:30
அச்சச்சோ... டிராகன் நகரம் புக் முடிந்து விட்டதா? நான் இன்னும் வாங்கலியே.. நிஜங்கள் நிசப்தமும் முடிஞ்சு போச்சா அதுக்குள்ளேயா !!!???!!!
போச்சு ரெண்டும் எனக்கு இன்னும் கிடைக்கலே..
XIII இன்னும் புக் பண்ணவில்லை. இது கடைகளிலும் கிடைக்குமா அல்லது சந்தாதார்களுக்கு மட்டும் தானா? தயவு செய்து யாரவது சொல்லவும்.
என்னோட தல ஸ்பைடரின் "விசித்திரச் சவால்" பட்டைய கிளப்பியதில் சந்தோசம் தான் என்றாலும் அந்த சிறிய சைஸ் படிப்பதிற்கு கஷ்டமாக இருந்தது உண்மை. ரெகுலர் சைஸ் தான் பெஸ்ட்.
புது கதைகள்:
1 சிக் பில் கிளாசிக் - அட்டகாசம்.. இந்த ரெண்டு கதைகளும் நான் முதல் முறையாக படிக்கிறேன். விண்ணில் ஒரு எலி அட்டகாசம். 3 கதைகளும் அட்டகாசம்
பழைய கதைகள்:
1 சாகச வீரன் பிரின்ஸ் - இரண்டு சிறு கதைகளின் தொகுப்பு. இந்த கதைகளை லயன் 32 ஆண்டு மலரில் மறுபதிப்பு செய்யப்பட்டது.
2 விசித்திர போட்டி - ரிப்போர்ட்டர் ஜானியின் துப்பறியும் கதை. 5 விளையாட்டு வீரர்களை கண்டு பிடிக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆளையும் நெருங்குமுன் அவர்கள் மாயமாக மறைந்து விடுகிறார்கள். இதற்கு யார் சூத்ரதாரி என்று கண்டு பிடிப்பதே கதை.
ReplyDelete
Replies
Reply
Padmanaban.R 28 January 2018 at 21:09:00 GMT+5:30
என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்..ரதப்படலாம் கலர் எடிஷனுடன் 13 புலன்விசாரணை book இணைப்பாக வரும் என்று பதிவில் படித்ததாக ஞாபகம்.
ReplyDelete
Replies
Vijayan 28 January 2018 at 21:15:00 GMT+5:30
Padmanaban Ramadurai : இல்லை சார் ; இறுதி செய்யப்பட இரத்தப் படல விளம்பரங்கள் சகலத்தையும் பாருங்களேன் - "புலனாய்வு" பற்றி எவ்விதக் குறிப்பும் இராது ! ஆறு பாகங்கள் வீதம் 3 ஆல்பங்கள் என்றே இருக்கும் !
Delete
Replies
Reply
Reply
Vijayan 28 January 2018 at 21:33:00 GMT+5:30
@ ALL : நண்பர்களே, ஏனென்று தெரியவில்லை ; ஆனால் உங்களது பல பின்னூட்டங்கள் SPAM -ல் கிடக்கின்றன !! இப்போது தான் கவனித்தேன் !! Settings களை துளியும் நோண்டாதுமே இது எவ்விதமென்று புரியவில்லை !!
So உங்கள் பின்னூட்டங்கள் பிரசுரமாகாது போயின் - எனக்கொரு மெயிலைத் தட்டி விடுங்களேன் ப்ளீஸ் ! இந்தக் குளறுபடியைச் சரி செய்ய நானும் முயற்சிக்கிறேன் !
SPAM-ல் கிடந்த சில பல பின்னூட்டங்கள் :
Raghavan :
அதாகப்பட்டது .. எடிட்டர் சொன்னது போல புத்தக கண்காட்சியில் 1. Tex 2. நால்வரணி - அதிலும் மாயாவி மாமா தான் முதலில் - ஸ்பைடர் காருவுக்கும் மவுசு அதிகம் - இன்னொரு பக்கம் லக்கி லுக் விற்கிறது. மாக்ஸிமம் சேல்ஸ் என்றால் இவைதான். மற்றதெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றும் தான். அடுத்தாண்டு முதல் சந்தா A மற்றும் C யை லிமிடெட் எடிஷன் ஆக்கிவிட்டு B மற்றும் D அதிக எண்ணிக்கை கொண்டுதான் கண்காட்சியை எதிர்நோக்குதல் நலம். நுழையும் போதே இரும்புக்கை மாயாவி இருக்கா என்று கேட்டு அத்தனையும் அள்ளிக்கொள்பவர் அதிகம். ஒரு பக்கம் tex அடுக்கடுக்காக அள்ளிச்செல்வோர் உண்டு. மற்ற நாயகர்கள் மிதமோ மீதம். இன்று ஓரிருமணி நேரங்கள் நண்பர்களை சந்திக்க முடிந்தது மகிழ்வு! ஆங் .. அப்புறம் சாந்த ஒசத்த இன்னொரு வழி : ஒரு வருட சந்தா காட்டினால் நமது புதிய கலரிங் புக் இலவசமா குடுக்கலாம் .. சூப்பர்லே ?! (ஹி ஹி .. அதாங்க நிஜங்களின் நிசப்தம் ;-) )
----------------------------------------------------------------------------------
Prabhu :
நான் போன வருடம், கோடிசியாவில் நடந்த கோவை புத்தக விழாவிற்கு வந்து இருந்தேன், ஆனால் விஜயன் சார் வரவில்லை. லயனின் come back அப்புறம் நான் புத்தகம் பிரசுரித்த மாதமே படித்த முதல் கதை விசித்திர சவால் தான். ஏக் தம்மில் படித்து முடித்தேன். இந்த கதை நான் படிப்பது இது தான் முதல் முறை. அட்டகாசமான வழக்கமான ஸ்பைடர் கதை. எனக்கு பிடிக்காதது அந்த பாக்கெட் சைஸ். தயவு செய்து வழக்கமாக வெளியிடும் பெரிய சைஸிலேயே வெளியிடுங்கள். இது படிக்க கஷ்டமாக இருந்தது. சித்திரங்கள் நன்றாக இருந்தும், சிறியதாக இருந்ததினால், ரசிக்க முடியவில்லை. புதியது: 1 விசித்திர சவால் - ஸ்பைடரின் அட்டகாசமான சாகசம் 2 கடல் குதிரையின் முத்திரை - பழைய கதை, அதே டெக்ஸ் டெம்ப்ளட். சொல்லும்படியாக ஒன்றும் இல்லை. பழையது: 1 ஒரு நாணய போராட்டம் - ஸ்க்ரூஜின் டக் மற்றும் டொனால்ட் டக் பட்டாளம் ஒரு அதிர்ஷ்ட நாணயத்தை மேஜிக்கா சூன்யக்காரியிடமிருந்து காப்பாற்ற போராடும் கதை. மிகவும் ரசித்தேன். இது கூடவே, பரட்டை தலை ராஜா, குண்டன் பில்லி, விச்சு கிச்சு, ஜோக்கர் மற்றும் பல கதைகள் 2 பயங்கர பலம் - அண்ணாத்தே லக்கி லூக்கின் கதை. ஒரு மரம் வெட்டும் ஆள்
----------------------------------------------------------------------------------
அய்யம்பாளையம் வெங்கடேஸ்வரன் : நேற்று புத்தகக் காட்சியில் நமது ஸ்டாலில் மிகக் குறைந்த நேரமே செலவிட முடிந்தது. நாட்கணக்கில் செலவிட்ட நண்பர்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. நேற்றைய நிகழ்வில் ஆசிரிருடன், இராதகிருஷ்ணன் அண்ணாச்சி, ஈரோடு விஜய், மாயாவி ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி!
----------------------------------------------------------------------------------
diabolik akkil : Ratings of this month 1)தோர்கல் 10/10 super ☺ 1)டெக்ஸ் 9/10 fantasti��3)சிரிப்பு பட்டாளம்8.5 good not super good�� 4)ஸ்பைடர் 10/10 best entertainer superb dynamic ரெப்ரின்ட்
----------------------------------------------------------------------------------
ReplyDelete
Replies
Vijayan 28 January 2018 at 21:33:00 GMT+5:30
இன்னமும் கூட - SPAM -லிருந்து :
தோர்கல் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.... படைப்பின் அசாத்தியமான உயரம் என்று கூட இதை கூறலாம். இந்த மாத புத்தகங்களில் முதலில் படிக்க எடுத்தது தோர்கலையே... தினமும் இரவு கொஞ்சம் கொஞ்சமாக படிக்கலாம் என நினைத்து ஆரம்பித்தது ... இரண்டு நாட்களில் முழுவதும் படித்து முடித்து விட்டே கீழே வைத்தேன் ... தோர்கல் – வந்த புதிதில் பிடிக்காது என்பது ஆச்சரியமில்லை, இப்பொழுது பிடிக்கவில்லை என யாரவது கூறினால்தான் ஆச்சரியம் இதை போலவே அனைத்து வருடங்களும் நான்கு அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட (குண்டு) புத்தகமாக தோர்கல் வெளி வர வேண்டும் என்பது எனது ஆசை. திருப்பூர் ப்ளுபெர்ரி (எ) நாகராஜன்
----------------------------------------------------------------------------------
rajasimman soma : என்ன சொல்ல ..?எப்படி புரிந்து கொள்வது.?இது வரை காணாத ஒரு அற்புத சித்திரக் குவியல் ..கதை? டமால் டுமீலை எதிர்பார்த்தாலோ,காமெடியை எதிர்பார்த்தாலோ,ஹாரர் போன்ற அமானுஷ்யங்களை எதிர்பார்த்தாலோ நிச்சயம் ஏமாற்றம்தான் .முழுக்க முழுக்க மனித உணர்வுகள்.. கூட இருப்பவர்களை பலி கொடுத்தேனும் தான் மட்டும் வாழ வேண்டும் என்கிற சூழ்நிலை அந்த சூழ்நிலைக்கு தள்ளப் படுவதுமே மனிதர்களாலேதான் யுத்தம் என்ற பெயரில்..பிறவியில் இருந்தே துரதிர்ஷ்டம் தொடந்து வரும் ப்ரொடெக் ..இயற்கையின் காதலன் யுத்தக்கைதிகளின் முகாமில் நாயோடு நாயாக சித்திரவதை பட்டு சொந்த கிராமத்திற்கு திரும்பிய பிறகும் சோதனைகள் ஏமாற்றங்கள்..பிற பெண்களைக் காப்பாற்ற முனைந்து தானும் அவலத்திற்கு ஆளாகி அதனால் வாய் பேசாது பாடல் ஒன்றேதுணையென வாழும் அவன் .அன்பு மனைவி.சேற்றில் முளைத்த செந்தாமரையாக குழந்தை.வயதானாலும் அன்பு குறையாத பாட்டி அனாமதேய ஆன்டெரர் பயமும் அவ நம்பிக்கையுமாய் கிராமத்துஜனங்கள் இயற்கையின் பேரழகு நிஜங்களின்நிசப்தம் நெடுநாட்கள் நெஞ்சில் நிலைத்திருக்கும் !
---------------------------------------------------------------------------
Delete
Replies
Reply
Erode VIJAY 28 January 2018 at 23:35:00 GMT+5:30
அடடா!! இம்புட்டு அழகான பின்னூட்டங்களை SPAMல் போட்டு வைக்க அந்த கூகுளுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ!!
Delete
Replies
Reply
Reply
Partheeban 28 January 2018 at 21:36:00 GMT+5:30
மதிப்பிட்ட ஆசிரியருக்கும் மதிப்பு தந்த நண்பர்களுக்கும் நன்றிகள்....
ReplyDelete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 22:47:00 GMT+5:30
///நிஜங்களின் நிசப்தம்" சென்னை விற்பனையில் உச்சங்களோடு போட்டி போடும் இதழ் மட்டுமல்ல ; வெளியான அதே மாதத்திற்குள் விற்றுத் தீர்ந்த முதல் இதழும் கூட !!! Oh yes - ஜனவரி 1-ல் ரிலீஸ் ஆன இந்த இதழ் ஜனவரி 22-ல் காலி !! ///
நல்ல தகவல் ..!
குறைந்த எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு இருந்தாலுமேகூட., 22 நாட்களில் காலியானது மெய்யாலுமே சர்ப்ரைஸ்தான். . கிநா ஹேப்பி அண்ணாச்சி ..! ;)
ReplyDelete
Replies
Reply
mayavi.siva 28 January 2018 at 22:57:00 GMT+5:30
@ திரு விஜயன்
சங்கடமான கேள்வியை முன்வைப்பதற்கு முன்கூட்டிய மன்னிப்புகள்..!(இதை கேட்க மொத்த பசங்களும் பம்முறாங்க,வேதாளரை நெஞ்சில் சுமக்கும் நான் பம்மமுடியுமா.!)
சரியாக ஒரு வருடம் முன்பு...
ஐனவரி 22, 2017 அன்று...
18...6..3..1...XIII.!
அப்படிங்கிற பதிவுல நீங்களாவே (கவனிக்க நீங்களாகவே) கொடுத்த ஒரு வாக்கு என்னோட SPAM-ல் கிடக்கின்றன ஸார்.
அது....
/////
Of course - முன்பதிவில் "600 " எனும் அந்த மந்திர இலக்கை எட்டிப் பிடித்தலும் இந்த முயற்சியின் முதுகெலும்பே என்பதை மறந்திடலாகாது !! நூறு, இருநூற்று என்ற எண்ணிக்கையிலேயே முன்பதிவுகள் தடுமாற்றம் காணில் - நிச்சயமாய் எல்லா மகாசிந்தனைகளுமே புலிக்கேசி வடிவேலின் கனவுகளாகிப் போய் விடுமென்ற எச்சரிக்கைப் பலகையும் சாலையோரத்தில் திடமாய் நிற்பதை நினைவூட்டுகிறேன் ! நல்லதே நடக்குமென்ற நம்பிக்கையோடு வலது காலை முன்வைப்போமே ?
And மறக்கும் முன்பாக - அந்தப் "புலன்விசாரணைப் பாகம்" - முன்பதிவுகளுக்கொரு பரிசாய் உண்டென்பதையும் சொல்லி விடுகிறேனே ?!Bye all! See you around!/////
இதுக்கு ஏதும் பரிகாரம் உண்டா ஸார்..?????
பின்னால் சில கோரஸ் வாய்ஸ்:
1.வரலாறும் வாக்கும் முக்கியம் அல்லவா அமைச்சரே...அவுக்...
2.என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா...
3.ஆஹா இலக்கை தொட்டதும் முருங்கை மரம் நியாபகம் வரலாமா...???
4.என்னப்பா இது மறதிக்காரன் கதைக்கு வந்த சோதனை...!?!?!?
5.செம...செம...பத்த வெச்சிட்டியே பரட்ட...ஹா..ஹா...
பின் குறிப்பு: மேற்கொண்ட கமெண்ட் தளம் சுறுசுறுப்புக்கு என பாசிட்டிவா எடுத்துகங்க.!
ReplyDelete
Replies
Erode VIJAY 28 January 2018 at 23:10:00 GMT+5:30
மாயாவி அவர்களே...
இந்தப் பதிவுக்கு பிறகு வேறொரு பதிவில் 'புலன் விசாரணை' பற்றிய நடைமுறைச் சிக்கல்களை காரணம் சொல்லி எடிட்டர் அப்போதே தன் வாக்குறுதியை வாபஸ் வாங்கிக்கொண்ட ஞாபகம் இருக்கிறதே... அதுவும் உங்க SPAMல் எங்காவது கிடக்கிறதான்னு பாருங்களேன்! :)
Delete
Replies
Reply
mayavi.siva 28 January 2018 at 23:38:00 GMT+5:30
@ இத்தாலியாரே
வாக்கு தான் எங்கள் செக்ஷன்.!
வாபஸ், மழுப்பல் எல்லாம் உங்கள் செக்ஷன்.!ஹீ..ஹீ...
44 பக்கம் ஒரு சிரமம் என்பதெல்லாம் லயன் காமிக்ஸ் எடிட்டருக்கு ஒரு விஷயமேயல்ல.!
வாக்கு தவறும் அரசாங்கத்தின் கையில் சிக்கி சின்னபின்னமாகி, காமிக்ஸ் கரையில் ஒதுங்கினால் இங்கியுமாகிறது சரிப்படாதுன்னு உங்க எதிரணி தலைவர்கிட்ட எடுத்து சொல்லுறது தான் அழகு.!
அம்புட்னுதான் சொல்ல முடியும்.!!
டிராகன் நகரம் வாக்கு கால்வாசி பேரில் பியூசை பிடிங்கிடிச்சி...XIII-க்கு தொடர்ந்தா...
ஆண்டாள்,தமிழ்தாய் வாழ்த்துன்னு இப்ப போற டிரெண்ட் பாத்து எதிரணி தலைவர் அடம் பிடிச்சா...
என்னத்த சொல்ல...
கமல் சொன்ன வழிதான்!
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 23:41:00 GMT+5:30
mayavi.siva : உங்கள் பின்னூட்டத்திலேயே உங்கள் கேள்விக்கான பதில் உள்ளது சார் !
Delete
Replies
Reply
Vijayan 28 January 2018 at 23:46:00 GMT+5:30
mayavi.siva : And இன்னொரு விஷயமும் கூட : "புலனாய்வு " 44 பக்கச் சமாச்சாரம் அல்ல சார் ; முழுசாய் 110 பக்கங்கள் கொண்டதொரு ஆக்கம் !!
இதனை மொழிபெயர்ப்பது மெகா சிரமம் # 1 எனில் - இதற்கென ஆகும் பட்ஜெட் - இடர் # 2 !!
ஒரு 112 பக்க இதழை இலவச இணைப்பாய் வழங்கும் cushion இங்கு ஏது சார் ?
Delete
Replies
Reply
mayavi.siva 29 January 2018 at 00:03:00 GMT+5:30
This comment has been removed by the author.
Delete
Replies
Reply
mayavi.siva 29 January 2018 at 00:10:00 GMT+5:30
@ திரு விஜயன்
கடந்த ஈரோடு புத்த திருவிழாவில் நண்பர் ராட்ஜா தங்களுக்கு பரிசாக கொடுத்த the XIII Mystery lnquiry கிற பாதிசித்திரங்கள்+பாதி விரிவுரை கலந்த 47 பக்கத்தில் அடங்கும் அடக்கவிலை 52/-அளவிலான ஒரு கையேடுத்தான் எதிர்ப்பார்கிறார்கள்.
அந்த புத்தக டிஜிட்டல் பைல் உங்களுக்கு மெயில் அனுப்பியுள்ளேன்.நீங்கள் குறிப்பிடுவதும்,நாங்கள் குறிப்பிடுவதும் வேற என்ற விளக்கம் ப்ளிஸ்.!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 00:17:00 GMT+5:30
mayavi.siva : தவறான புரிதல் சார் ! ஒரிஜினலான "புலனாய்வு" 110 பக்கங்கள் கொண்டதொரு சமாச்சாரம் ! பின்னாளில் வெளியானது ஒரு commercial edition மாதிரி !!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 00:18:00 GMT+5:30
இங்கே சென்று பாருங்களேன் ஒரிஜினலின் சில கோப்புகளை : https://imgur.com/a/mLOF2
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 00:40:00 GMT+5:30
mayavi.siva : "முன்பதிவு இலக்கைத் தொட்ட பிற்பாடு பேச்சு மாறுகிறேன்" என்பதான குற்றச்சாட்டினை வாசிக்கும் போது சங்கடம் மட்டுமே மேலோங்குகிறது ! "இரத்தப் படலம்" இறுதி செய்யப்பட்டு - சகலமும் அறிவிக்கப்பட்ட பதிவையும், அதைத் தொடர்ந்து நாம் செய்து வரும் விளம்பரங்களையும் படித்த பின்னேயும் சிக்கல் உங்களது புரிதலிலா ? அல்லது என்னிடமா ? என்று தீர்மானிக்கலாமே ப்ளீஸ் ?
அப்புறம் நீங்கள் அனுப்பியுள்ள கோப்புகளை ஒருமுறை பொறுமையைத் திறந்து பார்த்திடலாமே - அதனில் இருப்பதுமே 99 பக்கங்கள் !! And இது தான் ஒரிஜினல் "புலனாய்வு" இதழும் கூட ; Scan செய்துள்ள போது படங்கள் உள்ள ரெட்டைப் பக்கங்களை ஒற்றையாக்கி compress செய்துள்ளதால் 99 பக்கங்கள் என்று காட்டுகிறது உங்களுக்கு ! ஒரிஜினலாக இதனை வெளியிடும் பட்சம் இதன் நீளம் 110 பக்கங்களாகவே வரும் !
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 00:41:00 GMT+5:30
///பின் குறிப்பு: மேற்கொண்ட கமெண்ட் தளம் சுறுசுறுப்புக்கு என பாசிட்டிவா எடுத்துகங்க.!///
ஞாபகப் படுத்தினேன் அவ்ளோதான்!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 00:54:00 GMT+5:30
mayavi.siva :
-------------------------------------------------------------------------
https://lion-muthucomics.blogspot.in/2017/08/
//கனவுகளுக்கொரு ரம்யமான பழக்கம் உண்டு - ஒன்று நிறைவேறியான பின்னே அதனைத் தொடர்வதோ, ஒரு படி மெகா சைசில் இருப்பது வாடிக்கை என்ற விதத்தில் ! And அது மீண்டுமொருமுறை நிஜமாகியுள்ளது - "இரத்தப் படலம்" ஒரு முழுவண்ணத் தொகுப்பு என்ற ரூபத்தில் ! சிலபல ஆண்டுகளாகவே இந்தக் கோரிக்கையினை நண்பர்கள் முன்வைத்து வருவதும், "பார்ப்போமே !" என்று நான்தட்டிக் கழித்து வந்ததிலும் இரகசியமேது ? இம்முறை அதற்கான தருணம் மெய்யாகவே புலர்ந்திருப்பதாய் நினைக்கத் தோன்றுகிறது - நண்பர்களின் வேகத்தைப் பார்க்கும் பொழுது ! And so - இதோ அதற்கான முறையான அறிவிப்பு !
வெறும் 800 பிரதிகளே விற்பனை இலக்கென்ற நிர்ணயத்தோடு 848 முழுவண்ணப் பக்கங்களோடு - 3 தொகுப்புகள் இணைந்ததொரு பிரத்யேக slipcase-ல் இதனைத் திட்டமிட்டுள்ளோம் !
ஒற்றை இதழாய் - இரண்டேகால் கிலோ எடையோடு இந்த இதழைத் தயாரிப்பதில் ஒரு பிரம்மாண்டம் நிச்சயம் இருக்கும் தான் ; ஆனால் தயாரிப்பில் ; சேகரிப்பில் ; வாசிப்பில் ஏகமாய் நடைமுறை சிக்கல்கள் கொண்ட அந்த முயற்சியை விடவும், இந்த 3 தொகுப்பென்ற பாணி நிரம்ப சுலபமென்பதில் சந்தேகங்கள் கிடையாது !
இந்தத் தொகுப்பின் விலை ரூ.2200 ; slipcase ; கூரியர் / ஏர்மெயில் கட்டணங்கள் தனி !
இது முன்பதிவின் விலை மாத்திரமே ; கடைகளில் / புத்தக விழாக்களில் வாங்கிடுவதாக இருப்பின், விலை கூடுதலாய் இருக்கும் !
தற்சமயம் ரூ.1200 முன்பதிவுக்கென அனுப்பினால் போதுமானது. பாக்கித் தொகையினை 31/01/2018-க்கு முன்பாய் அனுப்பிடல் வேண்டும்.
குறைந்த பட்சம் 400 முன்பதிவுகள் அத்தியாவசியம் - இந்த முயற்சி நனவாகிட ! So நமது நண்பர் XIII-ன் விதியை தமிழில் நிர்ணயிக்கப் போகும் பொறுப்பு உங்களிடமே இனி !
ஜனவரிக்குள் முன்பதிவுகள் ; அடுத்த ஈரோட்டு விழாவினில் இதழ் ரிலீஸ் என்பதே இலட்சியம் ! Maybe ; just maybe - 'தட தடவென' முன்பதிவுகள் கிட்டிடும் பட்சத்தில் ஏப்ரல் 2018-ல் இதனை அழகு பார்க்கும் சாத்தியங்களும் இருக்கலாம் !
பாகங்கள் 1 - 18 அதே ஒரிஜினல் மொழிபெயர்ப்போடு வெளிவந்திடும் ! Proofreading பணியினில் நமக்கு ஒரு கூட்டு முயற்சி ரொம்பவே அவசியம் என்பதால் - இதற்கு உதவிட உங்களை பெரிதும் எதிர்பார்த்திருப்போம் guys !!
"இரத்தக் கோட்டை" பாணியிலேயே - ஓவியர் வான்சின் ஒரிஜினல் அட்டைப்பட டிசைன்கள் மட்டுமே 3 ஆல்பங்களுக்குமே அட்டைப்படங்களாக அமைக்கப்படும்.
Plus - XIII சார்ந்த செய்திகள் தவிர்த்து இங்கே வேறெந்த விஷயங்களுக்கும் இடமிராது ! Will be a total dedication to XIII !
முன்பதிவு செய்திடும் முதல் 200 நண்பர்களுக்கு "Codename மின்னல்" என்றதொரு பேட்ஜ் + wristband உண்டு !
நண்பர்களின் உதவியோடு இந்த முயற்சிக்கென ஒரு பிரத்யேக FB பக்கமொன்றை உருவாக்கிட எண்ணியுள்ளேன் ! ரெகுலராக XIII சார்ந்த செய்திகள் ; நினைவுகள் ; என இதனில் சுவாரஸ்யத்தைத் தொடர முனைவோம் !
நாளைய தினமே ஆன்லைன் லிஸ்டிங்கும் செய்து விடுவோம் என்பதால் புக்கிங்கள் சுலபமாகிடக் கூடும் ! //
----------------------------------------------------------------------
இது தானே இறுதியாய் நாம் செய்த அறிவிப்பு ?!
அந்த பிரத்யேக FACEBOOK பக்கமொன்றை நிறுவுவதாக வாக்குத் தந்ததைத் தவிர்த்து வேறு எதனில் நான் பேச்சு மாறுவதாய்த் தோன்றுகிறது நண்பரே ? வாக்கு கொடுத்திருப்பின், என் சொட்டைத் தலையை அடகு வைத்தாவது அதனை நிறைவேற்றிடுவேனே !!
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 00:55:00 GMT+5:30
சாா்,
உங்கள் நிலையை விளக்கினால் ஏற்றுக் கொள்ள பெரும்பாலானோா் தயாராகவே இருக்கிறோம்!
எங்களுக்கு சாப்பாடே போதுமானது!
ஜிகா்தண்டா தூத் எல்லாம் தேவையில்லை!
சும்மா கேட்டுப் பாப்போம்னு கேட்டோம் இல்லைனா விட்ருவோம் சாா்!
என்னைப் பொருத்தவரை இப்பதினெட்டு பாக கதையே அசாத்திய சாதனை தான் என்பேன்!
ஒருபக்க லெட்டரை மொழி மாற்றம் செய்யவே தகிடு தத்தம் போடவேண்டியுள்ளதை நினைக்கும் போது உங்களது பணியின் சுமையை நான் பலமுறை உணா்ந்துள்ளேன்!
போகிறபோக்கில் படித்து சொல்வது வேறு! மொழிமாற்றம் என்பது வேறு என்பதை அனைவரும் உணா்ந்தே இருப்பாா்கள்!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 00:58:00 GMT+5:30
//.ஆஹா இலக்கை தொட்டதும் முருங்கை மரம் நியாபகம் வரலாமா...???//
Phew.... !!
Delete
Replies
Reply
Erode VIJAY 29 January 2018 at 00:59:00 GMT+5:30
மிதுன் +1
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 01:05:00 GMT+5:30
மியா.....வ்!
பூனை ஏந்திருச்சிருச்சு!
எல்லாரும் ஓடுங்க......!
சாாி தூங்குங்......க!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 01:11:00 GMT+5:30
வயதில் மூத்த கருணையானந்தம் அவர்களிடம் பரீட்சை பேப்பர் போன்ற இந்தப் பக்கங்களை ஒப்படைத்து எழுதச் சொல்வதென்பது அவரைச் சங்கடப்படுத்துவது போலாகும் என்பதால் நானே இதனுள் புகுந்திடல் அவசியமாகிடும் ! வேறு யாரிடமாவது பணியை ஒப்படைத்து விட்டு, ஏனோ -தானோவென்று மொழிமாற்றம் செய்து வைத்து, அதன் பொருட்டு வருத்தங்களை சம்பாதிக்க நேரிட்டால் அந்நேரம் விழும் குட்டுக்கள் இதைவிடவும் ஜாஸ்தியாக இருக்குமென்பதும் புரியாதில்லை !
So திருப்தியாக இதழின் பிரதானப் பணிகளைப் பூர்த்தி செய்து முடிக்கும் வரையிலுமாவது கவனத்தைச் சிதற விடவேண்டாமே என்ற முன்ஜாக்கிரதையில் பிழையென்னவென்று புரியவில்லையே ?!
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 01:25:00 GMT+5:30
////பரீட்சை பேப்பர் போன்ற இந்தப் பக்கங்களை ஒப்படைத்து எழுதச் சொல்வதென்பது////
வேண்டாங்க சாா்!
////திருப்தியாக இதழின் பிரதானப் பணிகளைப் பூர்த்தி செய்து முடிக்கும் வரையிலுமாவது கவனத்தைச் சிதற விடவேண்டாமே////
சூப்பா்ங்க சாா்!!
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 January 2018 at 04:53:00 GMT+5:30
மாயாவியாரே...நிச்சயமாக ஆசிரியர் மேல் நீங்கள் கொண்ட அன்பை அனைவரும் அறிவோம் . உங்ககிட்ட நண்பர்கள் கேட்க வாய்ப்பிருந்தும் , பரரவால்லை என விட்டு விட்ட கேள்விகள்தான் . முுதலில் யாரயாவது திருப்திபடுத்த ...இிங்க பார் நான் பாராட்டவும் , செய்வேன் ....அவசியம்னா குட்டவும் செய்வேன்கிற ஹீரரோஃபோபியா . அதற்்கு சில நண்பர்கள் நம்மிடம் கேட்கும் சில கேள்விகள் வினையூக்கிகள் . ஆசிரியர் வாக்கு தந்தது விலையை குறிப்பிடாமல் . அன்றய கால கட்டத்தில் . நிச்சயமாக ஆசிரியர் விிலையை மேலும் உயர்த்த விரும்பாததாலேதான் அந்த கட் . அந்த காலத்ல gstஇல்லயோ என்னவோ ! அப்புறம் நிச்சயமா ஆசிரியர் மொழி பெயர்க்க நேரம் இருக்கலாம்தான்...ஆனா அதே மாதமே டெக்சு 700ங்ற கூடுதல் பளு . இந்த டெக்ச அடுத்த வருடம் விடலாமேன்னு கேக்க ஆசைதான் எனக்கும் . ஆனா வெகு ஜனம் பின்னிருவாங்களே . ஆனா ஆசிரியர் புலன் விசாரனய தலய அடமானம் வச்சாவது வெளிவிடுவது அ்வசியம் அதே இதழுடன் விலை கூட்டியோ...தனியாயோ அதே நேரத்தில்...போட்டோதான் கல்யாண நேரத்தில் ஆன குளருபடின்னு அதவிட சிறப்்பா தந்தாரே . உங்க ஆசப்படியே சமாளிஃபிகேசன் ...அறுநூறு முன்பதிவதான் சுருக்கி நானாறாக்கிட்டாரே...சுருங்கியது புத்தக எண்ணிிக்கை மட்டுமல்ல நண்பரே , காணாமல் போன புலன்விிசாரணையும்தான்் . விலையை இறுதி செய்தபின் ஆசிரியர் பேச்சு மாறலை அல்லவா...☺
Delete
Replies
Reply
Senthil Vinayagam Subbiah 29 January 2018 at 10:11:00 GMT+5:30
Dear Editor/Mayavi, this is just my suggestion regarding XIII.
1. No doubt இந்த புத்தகம் ஒரு பெரிய ஹிட். தயவுசெய்து இந்த 3 புத்தகங்களுடன் 'புலன் விசாரணை' புத்தகத்தையும் சேர்த்தே வெளியிடலாம்.
2. இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
3. மேலும் கண்டிப்பாக இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தை யாரும் தனியாக வாங்கப்போவதில்லை. எனவே SLIP CASE உள்ளேயே இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தையும் வைக்குமாறு செய்துவிட்டால் நன்றாக இருக்கும்.
4. எடிட்டர் சொல்வதுபோல் EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம் (இதற்கு நண்பர்களின் ஆதரவும் தேவை).
Delete
Replies
Reply
Senthil Vinayagam Subbiah 29 January 2018 at 10:21:00 GMT+5:30
XIII collector editionற்காக இத்தனை வருடம் காத்திருந்து விட்டாயிற்று. புலன் விசாரணைக்கு சில மாதங்கள் காத்திருக்கவும் தயார்.
Kindly request Editor to look into our wish.
Delete
Replies
Reply
Podiyan 29 January 2018 at 10:37:00 GMT+5:30
//அப்புறம் நீங்கள் அனுப்பியுள்ள கோப்புகளை ஒருமுறை பொறுமையைத் திறந்து பார்த்திடலாமே - அதனில் இருப்பதுமே 99 பக்கங்கள் !! And இது தான் ஒரிஜினல் "புலனாய்வு" இதழும் கூட ; Scan செய்துள்ள போது படங்கள் உள்ள ரெட்டைப் பக்கங்களை ஒற்றையாக்கி compress செய்துள்ளதால் 99 பக்கங்கள் என்று காட்டுகிறது உங்களுக்கு ! ஒரிஜினலாக இதனை வெளியிடும் பட்சம் இதன் நீளம் 110 பக்கங்களாகவே வரும் !// விளக்கத்துக்கு நன்றி சார். நண்பர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைப் பார்த்ததும் குழப்பம்தான் ஏற்பட்டது. ஆனால், பொறுமையாக ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். 'கலகம் நன்மையும் தரும்!' 'பல விடயங்கள்' புரிந்தன இங்கே!!!
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 11:08:00 GMT+5:30
Podiyan : //நண்பர்களின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டைப் பார்த்ததும் குழப்பம்தான் ஏற்பட்டது. ஆனால், பொறுமையாக ஆசிரியர் என்ன சொல்கிறார் எனப் பார்ப்போம் என்று காத்திருந்தேன். //
பொறுமைக்கு நன்றிகள் சார் !
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 11:13:00 GMT+5:30
Senthil Vinayagam : //இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை. //
Nopes...நடைமுறையில் இதனில் உள்ள சிக்கல்கள் ஒரு நூறு சார்...!
'மேற்கொண்டு ரூ.150 ஐ..அனுப்புங்கள்..ரூ.200 -ஐ அனுப்புங்கள்' என்று 400 + வாசகர்களுக்கும் தகவல் அனுப்பி , அவர்களது இசைவை பெறுவது ; அப்புறமாய் அந்தந்தச் சிறு தொகைகளை track செய்து அவரவர் வரவுகளில் ஏற்றுவது என்பதெல்லாம் பெண்டு கழற்றும் வேலை ! தவிர, "எனக்கு அந்த புக்கே வேண்டாம் !" என்று சொல்வோரும் இருந்திட வாய்ப்புகள் உண்டென்பதால் - அதற்கென ஒரு தனி பட்டியலை ஏற்படுத்திட வேண்டி வரும் . End of the day - இதழ்கள் அனுப்பும் வேளையில் ஏதேனும் சிறு குளறுபடி ஏற்பட்டாலும் கூட நம்மைத் துவைத்துத் தொங்கப் போட்டும் விடுவார்கள் ! So நடைமுறை சாத்தியங்களையும் இங்கே கணக்கிலிட வேண்டும்.
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 11:15:00 GMT+5:30
Senthil Vinayagam : //EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம்//
இதற்கு நிச்சயம் பெரியளவிற்கு ஆதரவு இராதென்றே தோன்றுகிறது எனக்கு !
Delete
Replies
Reply
Vijayan 29 January 2018 at 11:22:00 GMT+5:30
@ ALL : இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை புரிந்திட "புலனாய்வு" கோரும் நண்பர்கள் கொஞ்சமும் பொறுமை காட்டிடவில்லையே என்பதில் தான் வருத்தமே !
இந்தச் சிக்கலுக்கும் ஒரு சுலப விடையுள்ளது ; அதனை முன்மொழிய எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை தந்திடும் பொறுமை யாருக்கேனும் இருந்திருப்பின் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் !
Delete
Replies
Reply
mayavi.siva 29 January 2018 at 11:45:00 GMT+5:30
@ திரு விஜயன்
///இது தானே இறுதியாய் நாம் செய்த அறிவிப்பு ?!
அந்த பிரத்யேக FACEBOOK பக்கமொன்றை நிறுவுவதாக வாக்குத் தந்ததைத் தவிர்த்து வேறு எதனில் நான் பேச்சு மாறுவதாய்த் தோன்றுகிறது நண்பரே ? வாக்கு கொடுத்திருப்பின், என் சொட்டைத் தலையை அடகு வைத்தாவது அதனை நிறைவேற்றிடுவேனே !!////
நாணயத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பாருங்கள் என்பது சரியானது அல்ல.XIII என கடந்த வருடம் தாங்கள் பதிவிட்டது இரண்டு. அவற்றில் ஒரு பக்கத்தை மாத்திரமே.அதன் மறுபக்கம் பார்க்க...இங்கே'கிளிக்'
வலது காலை தயக்கத்துடன் முதலில் எடுத்துவைத்து விட்டு, இடதுகால் ஆழ ஊன்றியதும்....வலதுகால் தயங்கி தயங்கி தானே முன் வந்தது, அது எப்படி முக்கியமாகும் என்பது....சில வாரமாக தொடர்ந்து மீடியாவில் வரும் விவாதத்தில் கூட குறைவே..!
எட்டு வருடங்கள் முன்பு தாங்கள் செய்த விளம்பரம் பார்க்க...இங்கே'கிளிக்'
நாணயத்தின் மறுபக்கத்தை படிக்க...இங்கே'கிளிக்'
ஆத்திர அவசரத்தில் 44 பக்கங்கள் என கூறவில்லை,நீங்கள் எதை மறந்திர்கள் என்பதை பற்றியும்.... இந்த 'புலன் விசாரணை'யின் பின்னணியில் உள்ள அவசரதன்மை என்ன என்பதுபற்றிய விரிவான அலசல் பதிவிட டைம் ப்ளிஸ்...!
அப்புறம்...
முறையாக,ஒரு சரியான வேண்டுகோளை முன்வைத்ததற்கு... கலகம்,குற்றசாட்டு என திசை திருப்பும் உங்கள் வரவேற்ப்பு ரசிக்கும்படியாக இல்லை ஸார்.! :(((( உங்கள் தளம்,உங்கள் வசதிக்கு விழும் கமெண்ட்டுகளை வரவேற்று கொள்ளலாம். ஆனால் நீங்கள் சொல்லும் வாக்கு வரிகள் பல நெஞ்சங்களில் கல்வெட்டுகளாக மாறிவிடுகின்றன என்பதே நிதர்சனம்.! "அதற்கு நான் என்ன செய்ய..???" என தாங்கள் கைவிரிக்கும் உரிமை தங்களிடம் இல்லை என்பது மற்றுமொரு நிதர்சனம்.
அது எப்படி...???
டைம் ப்ளிஸ்...
Delete
Replies
Reply
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 22:58:00 GMT+5:30
///இந்த லிஸ்டில் இம்முறை லார்கோ தான் surprise package என்பேன் ! ரொம்பவே மித விற்பனை இந்தாண்டு ! And ஏனோ தெரியவில்லை - நமது நீல பொடியர்களுமே இம்முறை விற்பனையில் கோட்டை விட்டுள்ளனர் !! மற்றவர்கள் வழக்கத்தை விட ஒரு மாற்று குறைவாய் இந்தாண்டினில் ! ஒண்ணுமே புரியலே...உலகத்திலே.....!///
லார்கோ, ஷெல்டன் விற்பனையில் சோபிக்காதது ஆச்சயர்யமே ..!
ஸ்மர்ஃப்ஸில் பெரும்பான்மையினரின் பிரச்சினை அந்த பொடிபாஷையாக இருக்கக்கூடுமோ?
பொடிதல் இல்லாமல் நார்மலான பாஷையில் இருந்தால் ஒருவேளை இன்னும் கொஞ்சம் அதிக வாசகர்களை கவர்ந்திருக்கலாமோ என்றொரு சிறு சம்சயம் ..!
ஆனால், பொடிபாஷை இல்லாத ரெகுலர் மொழிக்கு பியோ ஒத்துக்கொள்வார்களா என்பதும் சந்தேகமே ..??!!
ReplyDelete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:08:00 GMT+5:30
///அதே கதை தான் கேப்டன் பிரின்ஸ் & ரின்டின் கேன் விஷயத்திலும் !! "மோசமில்லை ; நிச்சயம் மோசமில்லை" என்ற தீர்ப்பு எழுதலாம் ! ///
தோர்கல்.. நல்லபடி முன்னேறி வருகிறார் ..வருவார்.!
பெர்னார்டு பிரின்ஸை பொறுத்தவரை மறுபதிப்புகள் மட்டுமே என்பதால் ஓரிரு வருடங்களில் கழுகு கரை ஒதுங்கிவிடும்.;
ரின்டின்கேன் தப்பிப்பிழைப்பது மகிழ்ச்சியான தகவல் ..!
And ரிப்போர்ட்டர் ஜானி .., திகிலில் வந்த நிறைய ஜானி க்ளாசிக்ஸ் மறுபதிப்புக்காக காத்திருக்கின்றன.. அத்தோடு புதியபாணியும் வெய்ட்டிங்கில் இருக்கையில் ... ஜானியும் விற்பனையில் ஓகே ரகம் என்று கேள்விப்படும்போது உள்ளம் குதூகலிக்கிறது ..!!
ReplyDelete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:15:00 GMT+5:30
///அழகான விற்பனையில் இரு மாறுபட்ட நாயகர்களும் இடம்பிடிக்கின்றார் - "ஜேசன் பிரைஸ்" & "மர்ம மனிதன் மார்ட்டின்" ரூபத்தில் ! நானே நேரில் பார்த்தேன் - மார்டினின் கதைகளுக்கொரு niche வாசக அணி இருப்பதை ! And ஜேசன் ப்ரைஸ் மூன்று பாகங்களுமே சுவாரஸ்யமான விற்பனை கண்டது !! அதே போலவே LADY S ஆல்பங்களும் நிறைவாக விற்பனை கண்டுள்ளன ! அந்த மதிமுகம் செய்யும் வேலையோ ?///
ஜேசன் ப்ரைஸ் மாதிரியான கதைகளை வண்ணத்தில் நிறைய முயற்ச்சிக்கலாம் சார்.!
ம.ம. மார்ட்டின் ஒரு ஸ்லாட் கூடுதலாக கொடுக்கலாம்தான். .(மாடஸ்டி பெரியமனசு பண்ணி வழிவிட்டா ;;)
லேடி S ... ஆஹா ..!
ReplyDelete
Replies
Vijayan 28 January 2018 at 23:39:00 GMT+5:30
//ஜேசன் ப்ரைஸ் மாதிரியான கதைகளை வண்ணத்தில் நிறைய முயற்ச்சிக்கலாம் சார்.!//
சந்தா F & F !
Delete
Replies
Reply
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:23:00 GMT+5:30
/// சிக் பில் & ப்ளூ கோட்ஸ் & சுட்டிப்புயல் பென்னி !! இந்த மூன்று கார்ட்டூன் பிரதிநிதிகளுமே - ஓசையின்றி முத்திரை பதித்துள்ளது புரிகிறது - நம்பர்களை அலசிடும் போது ! அதிலும் பென்னி அடித்துள்ளது சிக்ஸர்கள் மட்டுமே - கொண்டு சென்ற 2 அல்பங்களுமே சுத்தமாய்த் தீர்ந்து போன வகையில் ! And "சிக் பில் ஸ்பெஷல்" - ஸ்பெஷலான கவனத்தை ஈர்த்துள்ளது ///
ப்ளூகோட்ஸ் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியான சேதி.!
பென்னி .. வாவ். .. சூப்பர்.!
சிக்பில் - கிட்ஆர்டின் டாக்புல்லுக்கு ரசிகர்களுக்கா பஞ்சம் .. போடு தகிடதகிட தகிட தகிட தாஆஆஆ ..!!
ReplyDelete
Replies
Vijayan 28 January 2018 at 23:38:00 GMT+5:30
But ஆரஞ்சு மீசைக்காரரும், நீலப் பொடியர்களும் இம்முறை பராக்கு மட்டுமே பார்த்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர் !! Sad !!
Delete
Replies
Reply
KiD ஆர்டின் KannaN 28 January 2018 at 23:49:00 GMT+5:30
தொடக்கத்தில் இருந்தே ஸ்மர்ஃப்ஸ்க்கு ரசிகர் பட்டாளம் பெரிதாக இருந்ததில்லை என்பதால் விற்பனை சுணக்கத்தை புரிந்துகொள்ள முடிகிறது சார்.! ஆனால் க்ளிப்டனும் விற்னையில் பின்னடைவை சந்தித்திருப்பது கவலைய்ளிக்கும் சங்கதியே சார்.!
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 00:29:00 GMT+5:30
ஸ்டால் சின்னது! புத்தகம் நெறைய! தொிவு செய்யும் வாய்ப்பு பொிதாய் இருக்கும்போது இதெல்லாம் சகஜம் தான்!
அதுக்காக நாம "Les Schtroumpfs" படிக்கரத நிறுத்த முடியுமா என்ன??
Delete
Replies
Reply
MITHUNAN 29 January 2018 at 00:35:00 GMT+5:30
கிட் ஆா்ட்டின் கண்ணன் : 3 ஆப்பிள் உயரமே உள்ள நீலப் பொடியா்கள் ஆதாலால் எதாவது டேபிள் சந்துல சிக்கி கண்ணுக்கு தொியாம போயிருக்கலாம்ல!
Delete
Replies
Reply
Reply
MITHUNAN 29 January 2018 at 00:09:00 GMT+5:30
Sir waiting for Kid Lucky!
ஆயிரம் கதைகள் இருந்தாலும் லக்கிலாக் கதைகளில் கிடைக்கும் மன நிறைவே அலாதியானது!
விற்பனையில் சக்கைபோடு போட்ட "ஒரு பட்டா போட்டி"யை மீண்டும் படிக்கும்போது படுக்கையை சுற்றி லக்கியின் கதைகளை பரப்பி வைத்து அதன் மேலேயே கிடந்துறங்க வேண்டும் என்ற பால்ய நினைவுகளை தவிா்க்கவே முடிவதில்லை??
இக்கதையையும், "ஒரு ஜென்டில் மேனின் கதையையும்" குறைந்தது 100 முறைக்கு மேலே படித்திருப்பேன் இப்போதும் அலுக்காத ரசனையை என்னவென்று சொல்வது!
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 29 January 2018 at 07:15:00 GMT+5:30
// இக்கதையையும், "ஒரு ஜென்டில் மேனின் கதையையும்" குறைந்தது 100 முறைக்கு மேலே படித்திருப்பேன் இப்போதும் அலுக்காத ரசனையை என்னவென்று சொல்வது!//
உங்கள் லக்கி லூக் காதலுக்கு ஒரு மிகப்பெரிய பூங்கொத்து.
Delete
Replies
Reply
Reply
Unknown 29 January 2018 at 08:55:00 GMT+5:30
கேப்சன் போட்டியில் வெற்றி பெற்ற வித்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...புத்தகத்திருவிழா வெற்றி பெற்றமைக்கும் வாழ்த்துக்கள் ..ஸ்மர்ப்ஸ் சில பேருக்குப் பிடிக்காமல் போனதில் ஆச்சர்யமே...குட்டி மனிதர்களின் சுட்டித்தனங்களை ரசிப்பதற்கு ஒரு தனி ரசனை தேவையோ ?பார்ப்போம் அடுத்த தடவை ....சிக்பில் ,லக்கிலூக் வெற்றி எதிர்பார்த்ததே ..மாடஸ்டி ?
ReplyDelete
Replies
Reply
Senthil Vinayagam Subbiah 29 January 2018 at 10:31:00 GMT+5:30
Dear Editor/Mayavi, this is just my suggestion regarding XIII.
1. No doubt இந்த புத்தகம் ஒரு பெரிய ஹிட். தயவுசெய்து இந்த 3 புத்தகங்களுடன் 'புலன் விசாரணை' புத்தகத்தையும் சேர்த்தே வெளியிடலாம்.
2. இதற்காக கூடுதல் பணம் அனுப்பவேண்டியிருந்தாலும் அதை கொடுப்பதற்கு நாங்கள் தயார். இலவசம் என்ற பேச்சிற்கே இடமில்லை.
3. மேலும் கண்டிப்பாக இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தை யாரும் தனியாக வாங்கப்போவதில்லை. எனவே SLIP CASE உள்ளேயே இந்த 'புலன் விசாரணை' புத்தகத்தையும் வைக்குமாறு செய்துவிட்டால் நன்றாக இருக்கும்.
4. எடிட்டர் சொல்வதுபோல் EBFல் TEX 70ம் வரவுள்ளதால் XIII வேலைப்பளு அதிகமாக இருக்கும். எனவே EBFல் TEX 70 மட்டும் வெளியிட்டுவிட்டு, XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்பதை 'தீபாவளி' வெளியீடாக வைக்கலாம் (இதற்கு நண்பர்களின் ஆதரவும் தேவை).
5. XIII collector editionற்காக இத்தனை வருடம் காத்திருந்து விட்டாயிற்று. புலன் விசாரணைக்கு சில மாதங்கள் காத்திருக்கவும் தயார்.
Kindly request Editor to look into our wish.
ReplyDelete
Replies
Vijayan 29 January 2018 at 11:25:00 GMT+5:30
@ ALL : இந்த விஷயத்தில் எனது நிலைப்பாட்டை புரிந்திட "புலனாய்வு" கோரும் நண்பர்கள் கொஞ்சமும் பொறுமை காட்டிடவில்லையே என்பதில் தான் வருத்தமே!
இந்தச் சிக்கலுக்கும் ஒரு சுலப விடையுள்ளது ; அதனை முன்மொழிய எனக்குத் தேவைப்படும் அவகாசத்தை தந்திடும் பொறுமை யாருக்கேனும் இருந்திருப்பின் நிச்சயம் மகிழ்ந்திருப்பேன் !
Delete
Replies
Reply
Senthil Vinayagam Subbiah 29 January 2018 at 11:35:00 GMT+5:30
Dear Editor,
XIII collector edition + SLIP CASEல் புலன் விசாரணையும் இருந்தால் தான் அழகு & சிறப்பு. எனக்குத்தெரிந்து சில மாதங்கள் காத்திருக்க நமது நண்பர்கள் தயார். கூடுதல் பணம் செலுத்தவும் நமது நண்பர்கள் தயார்.
மேலும் இந்த சிக்கலுக்கான சுலப விடைக்கு காத்திருக்கவும் நண்பர்கள் தயார்.
வேலைப்பளுவினால் தாமதமாக வந்தாலும், தயவுசெய்து XIII collector edition + புலன் விசாரணை with SLIP CASE என்று வெளியிடவும்.
Thanks in advance - Senthil.
Delete
Replies
Reply
Reply
Paranitharan.k 29 January 2018 at 11:09:00 GMT+5:30
ஓ...ரெண்டு மூணு பதிவா கமெண்ட் எல்லாம் இங்கே வராம பக்கத்து வீட்டுல போய் ஒழிஞ்சுட்டு இருந்துருக்கு ..அதான் இந்த பய லோடுமோரை பாக்க முடியலை போல...:-)
ஆனா நாகுஜீ ஒரு மாசத்துக்கு முன்னாடியே என் கமெண்ட காணாம போகது .,காணமாபோகுதுன்னு புலம்பிட்டு இருந்தாரு...:-)
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 29 January 2018 at 11:43:00 GMT+5:30
இப்பொழுது இரத்தபடலம் முன்பதிவு வெற்றி அடையும் நேரத்தில் சிலபல யோசனைகள்...வாக்குறுதிகள் ..,உண்மைகள் ,என கலந்து கட்டி வரும் நேரத்தில் எனது நிலைப்பாடு என்னவென்று சொல்வதற்கு முன் எனது அனுபவத்தை பகிர நினைக்கிறேன்.
இரத்தபடலம் ஆரம்ப பாகங்கள் திகில் ..,லயன் இதழில் தொடராக வந்த பொழுது வரிசைகிரகமாக அல்லாமல் விட்டு விட்டு படித்தாலும் அவ்வளவு சுவையுடன் ..விறுவிறுப்புடன் நகர்ந்து சென்றது மட்டுமல்ல அடுத்த பாகம் எப்பொழுது வரும் என ஏங்க வைத்ததும் உண்டு .பின் சில பல வருடங்களுக்கு பின் ஒட்டுமொத்தமாக ஒன்று முதல் பதினெட்டு பாகங்கள் வரை மொத்தமாக ,ஒரே தொகுப்பாக வெளிவந்ததும் அதன் அளவையும் பருமனையும் பார்த்து அசராதவர்களே கிடையாது.அதன் பின் அந்த தொகுப்பை முழுவதுமாக படித்த பின்னர் ஏற்பட்ட மன உணர்வை நினைவுபடுத்தி பாருங்கள் .நாமும் அந்த மறதி நாயகனாகவே மாறி இருப்போம்.அதன் க்ளைமேக்ஸ் பக்கங்களையும் ,அந்த பக்கத்தின் கடைசிவரிகளையும் படித்து முடித்தவுடன் நெஞ்சில் ஓர் இனம் புரியா சோகமும்,மகிழ்வும் ஒரு சேர ஏற்படும்.எனக்கோ மனதில் மட்டுமல்ல கண்களில் கூட மாற்றத்தை ஏற்படுத்திய அந்த முடிவுரை பகுதி அதன் ஒரிஜினல் மொழியில் தெரிந்து படித்தால் கூட ஏற்படுமா என்றால் சந்தேகமே...
பிறகு மீண்டும் பல வருடங்களுக்கு பிறகு இரத்தபடலம் தொடர்ச்சி..ஸ்பின் ஆப் ..கதாபாத்திரங்களின் வரலாறு என்ற அறிவிப்பும்..வரவும் ..விற்பனையும் நாம் அறிந்த ஒன்றே..அந்த இதழ்கள் விற்பனையில் சாதித்தனவா..வெற்றியா ..தோல்வியா என்பதற்குள் நான் புக விரும்ப வில்லை.
ஆனால் நண்பர்களுக்கு ஒரே ஒரு வினா...உங்கள் மனதை தொட்டு சொல்லுங்கள்.இரத்தபடலம் பதினெட்டு முடிவுரைக்கு பிறகு அதன்பின் வந்த இதழ்கள் பழைய பாகங்கள் ஏற்படுத்திய உணர்வினை ஏற்படுத்தியதா..உணர்வை கூட விடுங்கள் பழைய அந்த திருப்தியை அளித்ததா என்றால் என்னை பொறுத்தவரை இல்லை என்பதே..
இரத்தபடலம் மகா வெற்றி இதழ் என்பது ஒன்று முதல் பதினெட்டு வரை உள்ள தொகுப்புமட்டுமே..அதன் வரை மட்டுமே எனக்கு இரத்தபடலம் முழு நிறைவான இதழ்.அதன்பின் வந்த எந்த இரத்தபடல சம்பந்தபட்ட இதழ்களும் அதற்கு கொஞ்சம் கூட ஈடு செய்யவி்ல்லை என்பதே உண்மை.இன்னும் உண்மையை சொன்னால் முன்னரின் பாகங்களில் உள்ள தெளிவை ஏற்படுத்தியதை விட குழப்பத்தை விளைவிப்பது தான் அதிகம் என்பது தான் எனது கருத்து.
எனவே இப்பொழுது வரும் வண்ண தொகுப்பு முதலில் வந்த கறுப்பு வெள்ளை பாகங்களுடன் வந்தது போலவே வந்தால் தான் டிஜிட்டல் பாட்ஷா போல வெற்றி அடையும்.இல்லையேல் பில்லா2 ரீமேக்போல் ஏமாற்றமே அளிக்கும்.
ReplyDelete
Replies
Paranitharan.k 29 January 2018 at 11:49:00 GMT+5:30
மன்னிக்க வெற்றி அடையும் என்ற வரிகளுக்கு பதிலாக " பழைய திருப்தியை அளிக்கும் "என்று படிக்குமாறு வேண்டிகொள்கிறேன்.
Delete
Replies
Reply
Reply
Senthil Vinayagam Subbiah 29 January 2018 at 11:46:00 GMT+5:30
Dear Editor,
மணப்பெண்ணிற்கு என்னதான் beauty parlour போய் மேக்கப் போட்டாலும், நெற்றியில் ஒரு போட்டு வைத்தால்தான் மணப்பெண்ணிற்கு அழகு.
XIII collector editionல் 'புலன் விசாரணை'தான் அந்த பொட்டு என்பது நமது நண்பர்களின் கருத்து.
ReplyDelete
Replies
Paranitharan.k 29 January 2018 at 11:50:00 GMT+5:30
:+)
Delete
Replies
Reply
Reply
சேலம் Tex விஜயராகவன் 29 January 2018 at 11:52:00 GMT+5:30
மாயாசார்@
///டிராகன் நகரம் வாக்கு கால்வாசி பேரில் பியூசை பிடிங்கிடிச்சி...XIII-க்கு தொடர்ந்தா...//.......
மிகத் தவறான புரிதல். ட்ராகன் நகர ஏமாற்றம் வருத்தம் தந்த்தென்னவோ உண்மைதான். ஆனால்,
பியூசை பிடிங்கிடிச்சி..என்ற அளவுக்கெலாம் நிச்சயமாக இல்லை.
உங்கள் குற்றச்சாட்டில் சற்றும் உண்மையில்லை மாயாசார். வருத்தத்தில் சில நண்பர்கள் இருந்தார்கள் என்பதே நிதர்சனம். பிறகு பிரின்ஸ் ஸ்பெசலில் வெளிவந்த அசத்தலனா போட்டோக்கள் அந்த வருத்தத்தையும் துடைத்து எறிந்துவிட்டது என உறுதியாக சொல்லலாம்.
நண்பர்கள் அவரவர் சூழலின் காரணமாக இங்கே பங்கு பெறுவது குறைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி....
நானும் கூட கொஞ்சம் ஓவர் ரியாக்ட் செய்துவிட்டேனோ என பலமுறை யோசித்து உள்ளேன். சொதப்பல் போதும் என்ற ரீதியில், பிரின்ஸ் ஸ்பெசலில் போட்டோ போட வேணாம்னு நான் கேட்டுக்கொண்டேன். அதற்கு பின்பும் கூட அட்டகாசமான தரத்தில் போட்டோவை தந்து வாயடைக்கச் செய்துவிட்டார். அப்போது பிடிங்கப்பட்டது பியூஸ் அல்ல; எந்த விசயத்திற்கும் ஓவர் ரியாக்ட் தேவையில்லை என்ற எண்ணமே.
வேறுபல பணி நெருக்கடி காரணமாகவே இங்கே கவனம் செலுத்த இயலவில்லை. அதளபாதாளத்தில் உள்ள வியாபாரத்தில் முழுக்கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.
அநாமதேய நண்பரின் புண்ணியத்தில் (இருக்கும் சூழலில் இம்முறை சந்தா செலுத்த இயலாமல் போயிருக்க கூடும்...!!!) இதுவரை வெளிவந்த இதழ்களில் கூட கவனம் செலுத்த நேரம் அமையவில்லை.
ReplyDelete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Total Pageviews
Comics Lovers
ஆன்லைனில் வாங்கிட :
FACEBOOK BULLETIN BOARD
Lion-Muthu Comics
Promote Your Page Too
Contact Form
Name
Email *
Message *
Feedjit
Click below to buy CINEBOOK English Comics Online from us !
CLICK IMAGE FOR BOOKSELLERS LISTS
Featured post
ஒரு அட்டவணைத் திருவிழா !!
OUR WEBSITE
Click on the logo to go to official website
About Me
Vijayan
View my complete profile
Blog Archive
► 2021 (114)
► December (1)
► November (6)
► October (17)
► September (7)
► August (9)
► July (8)
► June (11)
► May (25)
► April (8)
► March (9)
► February (7)
► January (6)
► 2020 (102)
► December (6)
► November (6)
► October (6)
► September (6)
► August (9)
► July (8)
► June (11)
► May (9)
► April (12)
► March (12)
► February (8)
► January (9)
► 2019 (77)
► December (6)
► November (5)
► October (12)
► September (6)
► August (7)
► July (5)
► June (5)
► May (9)
► April (4)
► March (5)
► February (5)
► January (8)
▼ 2018 (83)
► December (4)
► November (5)
► October (6)
► September (10)
► August (7)
► July (8)
► June (6)
► May (6)
► April (7)
► March (11)
► February (6)
▼ January (7)
ஹலோ ரின்டின் கேன்...!
ஷெல்டன் !
அலசும் நேரமிது...!
சென்னையில் ஒரு சனிக்கிழமை !
பொங்கலோ பொங்கல் !!
பழசும்..புதுசும்...!
வணக்கம் 2018 !!!
► 2017 (89)
► December (5)
► November (5)
► October (11)
► September (8)
► August (9)
► July (10)
► June (7)
► May (5)
► April (7)
► March (7)
► February (7)
► January (8)
► 2016 (83)
► December (6)
► November (5)
► October (6)
► September (6)
► August (10)
► July (8)
► June (9)
► May (8)
► April (5)
► March (6)
► February (7)
► January (7)
► 2015 (69)
► December (5)
► November (7)
► October (6)
► September (7)
► August (6)
► July (4)
► June (5)
► May (5)
► April (7)
► March (6)
► February (4)
► January (7)
► 2014 (66)
► December (4)
► November (7)
► October (4)
► September (8)
► August (6)
► July (6)
► June (4)
► May (4)
► April (8)
► March (4)
► February (5)
► January (6)
► 2013 (58)
► December (4)
► November (4)
► October (7)
► September (5)
► August (5)
► July (5)
► June (4)
► May (5)
► April (4)
► March (5)
► February (5)
► January (5)
► 2012 (66)
► December (5)
► November (4)
► October (3)
► September (4)
► August (5)
► July (3)
► June (5)
► May (4)
► April (9)
► March (8)
► February (7)
► January (9)
► 2011 (5)
► December (5)
News 7
நண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...
கடைசி க்வாட்டர் '21...!
நண்பர்களே, வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! (" கடைசிக் க்வாட்டர்" ...
சின்னச் சின்ன ஆசைகள் !!
நண்பர்களே, வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! &quo... |
மூன்றெழுத்து நாயகன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்ன் வாழ்க்கை வரலாறு – மீன்பாண்டியன் – Buy Tamil book online – Noolulagam |
23/10/2021 9:12 AM 23/10/2021 9:12 AM தெய்வத்தமிழ் குழுLeave a Comment on நாமத்தின் மகிமை! கோவிந்த நாமத்தின் பெருமை!
கோவிந்த” என்கிற நாமம் ரொம்பவும் விசேஷமானது. ஈச்வர நாமாக்களுக்குள் ‘ஹர’ என்பதற்கும், விஷ்ணுவின் நாமாக்களுக்குள் ‘கோவிந்த’ என்பதற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு.
ஸத்ஸங்கத்துக்காக, ஸத்விஷயத்துக்காகப் பல பேர் கூடினாலும், மநுஷ்ய ஸ்வபாவத்தில், கொஞ்ச நேரம் போனதும் கூட்டத்தில் பலர் பல விஷயங்களைச் சளசளவென்று பேச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் பேச்சை நிறுத்தி பகவானிடம் மனஸைத் திருப்புவதற்கு என்ன செய்கிறோம்? யாராவது ஒருத்தர் “நம: பார்வதீ பதயே” என்கிறார்.
உடனே, பேசிக்கொண்டிருந்த எல்லாரும் “ஹர ஹர மஹா தேவ” என்கிறார்கள். அதற்கப்புறம் ஒரு பஜனையோ உபந்யாஸமோ ஆரம்பிக்கிறது. இப்படிப் பல பேருடைய மனஸை ஈச்வரனிடம் லகான் போட்ட மாதிரி இழுக்கிற சக்தி ஹரநாமத்துக்கு இருக்கிறது! அரன் நாமமே சூழ்க, வையகமும் துயர் தீர்கவே என்று ஞானஸம்பந்தக் குழந்தை வாழ்த்திய விசேஷத்திலிலேயே இப்படி ஹரன் நாமத்துக்கு சிறப்பு ஏற்பட்டிருக்கிறது!
“நம: பார்வதீ பதயே” மாதிரியே இன்னொன்றும் ஒரு கூட்டத்தின் மனஸை பகவத் பரமாகத் திருப்பி விடுவதற்காக கோஷிக்கப்படுகிறது. அதுதான் “ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்” என்பது. இப்படி ஒருத்தர் சொன்னவுடன் கூட்டம் முழுவதும் “கோவிந்தா கோவிந்தா” என்கிறது. “பஜகோவிந்தம்” என்று நம்முடைய ஆசார்யாள் குழந்தையாயிருந்தபோதே சொன்னதன் மஹிமை!
“அண்ணாமலைக்கு அரோஹரா” என்று லக்ஷோபலக்ஷம் பக்தர்கள் சேர்ந்தபொழுது கோஷிக்கிறோம். காவடி எடுக்கிறபோது ஸுப்ரமண்ய ஸ்வாமிக்கும் ’அரோஹரா’ போடுகிறோம், அர நாமமே சூழ்கிறது, இப்படியே நித்ய உத்ஸவமாக இருக்கிற திருப்பதியில் லக்ஷோபலக்ஷம் ஜனங்களும் ‘கோவிந்தா’ போட்டுக்கொண்டே தான் மலையேறுகிறார்கள்.
இரண்டு தெய்வக் குழந்தைகளின் வாக் விசேஷம்!*
ஹர நாமத்தைவிடக்கூட கோவிந்த நாமாவுக்கு ஜாஸ்தி விசேஷம் தோன்றுகிறது. ஒருத்தர் ‘பார்வதீ பதி’யைச் சொன்ன பிறகுதான் மற்றவர்கள் ‘ஹர ஹர’ என்கிறார்கள், ஆனாலும் கோவிந்த நாம விஷயமாகவோ, முதலில் சொல்கிற ஒருத்தரும் ‘ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்’ என்று இந்தப் பெயரையேதான் கோஷிக்கிறார், மற்றவர்களும் அதே நாமாவைத் திருப்புகிறார்கள்.
இன்னொன்று கூட : தீவிர வைஷ்ணவர்கள் ஹர நாமாவை கோஷிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை, ஆனால் கோவிந்த நாமாவை ஸகலருமே சொல்வார்கள், அதனால்தான் போலிருக்கிறது இதற்கு மட்டும் ‘ஸர்வத்ர’ என்று, அதாவது எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் என்று அடைமொழி கொடுத்திருக்கிறது. ‘ஸர்வத்ர கோவிந்த நாம ஸங்கீர்த்தனம்’ அதனால், என்னை யாராவது ஹிந்து மதத்தில் ரொம்ப ரொம்ப விசேஷமான நாமா எது என்று கேட்டால் ‘கோவிந்தா’ தான் என்று சொல்வேன்.
ஸர்வலோக சக்ரவர்த்தியாக இருக்கப்பட்ட பகவான் பரம கருணையோடு பரம எளிமையோடு வந்து மாடு மேய்த்து, கோபர்களையும் (ஆயர்களையும்) கோபிகளையும் அத்யந்த ப்ரேமையோடு அநுக்ரஹித்த அவஸரத்திலேயே அவருக்கு கோவிந்த நாமா எற்பட்டது. இந்த நாமா ஏற்பட்ட வ்ருத்தாந்தத்தை பாகவதம் சொல்கிறது, “உத்த்ருதநக” ச்லோகத்தில் refer செய்த வ்ருத்தாந்தம்.
‘தான் மழை பெய்வதால்தானே லோகம் உயிர் வாழ்கிறது?’ என்ற கர்வம் இந்த்ரனுக்கு ஏற்பட்டது. அப்போது க்ருஷ்ணன் கோகுலத்தில் குழந்தையாக இருந்த ஸமயம். அவர் இந்த்ரனுக்கு புத்தி கற்பிக்க எண்ணினார், அதனால் கோபர்களிடம்,
அவர்கள் வழக்கமாகச் செய்யும் இந்த்ர பூஜையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக கோவர்த்தன கிரிக்குப் பூஜை பண்ணச் சொன்னார், அதே போலச் செய்தவுடன் இந்த்ரனுக்கு ஒரே ஆத்திரமாக வந்தது. அந்த ஆத்திரத்திலே கோகுலத்தையே அடித்துக்கொண்டு போய் விடுகிறாற்போல் பெரிய மழையைக் கொட்ட ஆரம்பித்துவிட்டான்,
அந்த ஸமயத்தில் தான் பகவான் கிரிதர கோபாலனாக கோவர்த்தன மலையைத் தூக்கி, மழையைத்தடுத்து, தீன ஜனங்களையும் பசு முதலான ப்ராணிகளையம் ரக்ஷித்தார், பிறகு தேவேந்த்ரனே மழை பெய்ய முடியாமல் களைத்துப் போய் அவரிடம் வந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, ஸகல உயிர்களையும் (‘கோ’ என்பது பசுவை மட்டும் குறிக்காமல் எல்லா ஜீவராசிகளையும் குறிப்பதாகும் – பசு என்பதும் எல்லாப் ப்ராணியையும் குறிப்பது போல, இப்படி எல்லா உயிர்களையும்) ரக்ஷிப்பவர் அவர்தான் என்று அர்த்தம் தொனிக்கும்படியாக “கோவிந்த” என்று அவருக்குப் பட்டம் சூட்டி அபிஷேகமும் பண்ணிவைத்தான்.
அதனால் இந்த கட்டத்திற்கு கோவிந்த பட்டாபிஷேகம் என்றே பெயர். ‘கோ’க்களுக்கு ‘இந்த்ரன்’ கோவிந்தன், ‘விந்த’ என்றால் ஒன்றைத் தேடி, நாடிப்போய் அடைவது. பசுக்கள் இப்படி க்ருஷ்ணனிடமே உயிராயிருந்து அவரைத் தேடி அடைந்ததால் கோவிந்தன், ‘கோ’ என்பது பசுவை மட்டுமில்லாமல் பூமி, ஆகாசம், வாக்கு, இந்த்ரியங்கள் ஆகியவற்றையும் குறிப்பது, இவையெல்லலாம் தேடிப் போய் அடையும் லக்ஷ்யமான பரமாத்மா அவர் என்பதையும் கோவிந்த நாமம் தெரிவிக்கிறது.
Share this:
Tweet
More
Print
Share on Tumblr
Telegram
WhatsApp
Email
Related
Post navigation
வடக்கே காசி.. தெற்கே தென்காசி… நடுவே சிவகாசி! இவரும் காசி விஸ்வநாதர்தான்!
திருமாங்கல்ய காணிக்கையை விரும்பாத ‘குழந்தை’..!
தொடர்புடைய கட்டுரைகள்:
வீட்டிற்கு ஏற்பட்ட தடைகள்.. விலகிய அதிசயம்! ஆச்சார்யாள் மகிமை!
20/07/2021 8:15 AM தெய்வத்தமிழ் குழு
தீராத வயிற்று வலி! பெண்மணி கூறிய சிறந்த வழி!
02/06/2021 9:00 AM தெய்வத்தமிழ் குழு
விபத்திலிருந்து தப்பித்த பக்தர்! ஆச்சார்யாள் மகிமை!
25/06/2021 8:14 AM தெய்வத்தமிழ் குழு
Leave a Reply Cancel reply
Recent Posts
நாம் நாமாக இருப்பதே நலம்!
தீய எண்ணம்: ஆச்சார்யாள் அருளுரை!
பக்தருக்கு இதம் தரும் பாகவதம்!
திருப்புகழ் கதைகள்: கம்சனின் கதை!
துன்பத்தில் பொறுமை: ஆச்சார்யாள் அருளுரை!
அண்மைய கட்டுரைகள் :
நாம் நாமாக இருப்பதே நலம்! 08/12/2021 9:05 AM
தீய எண்ணம்: ஆச்சார்யாள் அருளுரை! 08/12/2021 8:39 AM
பக்தருக்கு இதம் தரும் பாகவதம்! 07/12/2021 9:08 AM
திருப்புகழ் கதைகள்: கம்சனின் கதை! 07/12/2021 8:50 AM
துன்பத்தில் பொறுமை: ஆச்சார்யாள் அருளுரை! 07/12/2021 8:35 AM
Copyright 2021. All rights reserved. deivatamil.com Edited by Senkottai Sriram, for SSS Media, Chennai, TN, IN |
நமது கல்வி நியூஸ் (Kalvinews.in) வலைத்தளத்தில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தேவையான தினசரி கல்விச்செய்திகள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள், அரசாணைகள் போன்றவற்றை தினசரி பகிர்ந்து வருகிறோம்.. படித்து பயனடையுங்கள், உங்களின் நண்பர்களுக்கும் பகிருங்கள் அவர்களும் பயனடையட்டும்
Class 11 | வகுப்பு 11 | கணக்குப்பதிவியல் | முதன்மை பதிவேடுகள் | அலகு 3 | பகுதி 3 | KalviTv
[11 ஆம் வகுப்பு ACCOUNTANCY] – கல்வித்தொலைக்கட்சி நிகழ்ச்சி பாடங்கள் - 11th Standard -Accountancy - kalvi TV / kalvitholaikatchi Videos ( All Videos updated)
கல்வித்தொலைக்காட்சி வீடியோ பார்த்தால் 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறலாம் என்று பள்ளிக்கல்வித் துறை தற்போது அறிவித்துள்ளது.. எனவே இதுவரை கல்வித்தொலைகாட்சியில் ஒலிபரப்பு செய்யப்பட்ட வீடியோக்கள் அனைத்து வீடியோக்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. கீழே உள்ள இந்த வீடியோக்களில் உள்ளதை படித்தாலே போதும், நீங்கள் [11 ஆம் வகுப்பு ] பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும். இந்த பயனுள்ள வீடியோக்களை அனைத்து மாணவர்களும் பயன்பெறும் வகையில் உங்களின் Whatsapp குழுக்களில் பகிருங்கள்...... |
Technology | News4 Tamil : Tamil News | Online Tamil News Live | Tamil News Live | News in Tamil | No.1 Online News Portal in Tamil | No.1 Online News Website | Best Online News Website in Tamil | Best Online News Portal in Tamil | Best Online News Website in India | Best Online News Portal in India | Latest News | Breaking News | Flash News | Headlines | Neutral News Channel in Tamil | Top Tamil News | Tamil Nadu News | India News | Fast News | Trending News Today | Viral News Today | Local News | District News | National News | World News | International News | Sports News | Science and Technolgy News | Daily News | Chennai News | Tamil Nadu Newspaper Online | Cinema News | Tamil Cinema Hot News | Latest Tamil Cinema News | Latest Kollywood Cinema News | Tamil Movie News | Tamil Movie Reviews | Tamil Movie Trailer Updates | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள் | செய்தி தமிழ் | தற்போதைய செய்திகள் | உடனடி செய்திகள் | உண்மை செய்திகள் | நடுநிலை செய்திகள் | பரபரப்பான செய்திகள் | புதிய செய்திகள் | ஆன்லைன் செய்திகள் | மாவட்ட செய்திகள் | மாநில செய்திகள் | தமிழக செய்திகள் | தேசிய செய்திகள் | இந்திய செய்திகள் | உலக செய்திகள் | இன்றைய செய்திகள் | தலைப்பு செய்திகள் | விளையாட்டு செய்திகள் | தொழில்நுட்ப செய்திகள் | விவசாய செய்திகள் | வணிக செய்திகள் | ஆன்மீக செய்திகள் | ஜோதிட செய்திகள் | இன்றைய ராசிபலன்கள் | உள்ளூர் செய்திகள் | பொழுதுபோக்கு செய்திகள் | சினிமா செய்திகள் | மாற்றத்திற்கான செய்திகள் | தரமான தமிழ் செய்திகள் | நேர்மையான தமிழ் செய்திகள் | டிரெண்டிங் தமிழ் செய்திகள் | High Quality Tamil News Online | Trending Tamil News Online | Online Flash News in Tamil
முகப்பு
அரசியல்
மாவட்டம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வணிகம்
பொழுதுபோக்கு
சினிமா
விளையாட்டு
லைப் ஸ்டைல்
உடல்நலம்
ஆன்மிகம்
No Result
View All Result
முகப்பு
அரசியல்
மாவட்டம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வணிகம்
பொழுதுபோக்கு
சினிமா
விளையாட்டு
லைப் ஸ்டைல்
உடல்நலம்
ஆன்மிகம்
No Result
View All Result
No Result
View All Result
National
பெரிய இழப்புகளுக்கு தள்ளப்படும் வங்கிகள்! போன் பே ஜிபே உபயோகிக்க தடையா?
December 4, 2021
25
Technology
Oppo A16K ஸ்மார்ட்போன் விலை மற்றும் முழு விவரம் இங்கே.
November 8, 2021
9
Technology
இன்று முதல் வாட்ஸ்அப் இயங்காது.!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!
November 1, 2021
25
Technology
நாளை முதல் வாட்ஸ்அப் இயங்காது.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!!
October 31, 2021
40
Home Category Technology
Technology
அந்த மாதிரி விஷயங்களை கூகுளில் தேடினால் அவ்வளவு தான்!! எச்சரிக்கும் கூகுள் நிறுவனம்!!
by Jayachithra
October 25, 2021
0
50
நாம் பெரும்பாலும் ஆன்லைன் தேவைகளுக்கு கூகிளை மட்டுமே சார்ந்துள்ளோம். ஆனால் அதில் இருக்கும் வலை தளங்கள் மற்றும் செயலிகள் அனைத்தும் கூகிளில் உருவாக்கப்பட்டது அல்ல. கீழ்காணும் உபயோகத்திற்கு...
நவம்பர் 1 முதல் வாட்ஸ்அப் சேவை நிறுத்தம்.!! வெளியான அதிர்ச்சித் தகவல்.!!
by Vijay
October 23, 2021
0
10
வாட்ஸ்அப் நிறுவனம் குறிப்பிட்டமாடல் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கு வாட்ஸ்அப் சேவையை நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது. அன்றாட வாழ்க்கையில் பொதுமக்கள் தற்போது செல் போன்களை பயன்படுத்துவது வழக்கமாகியுள்ளது. அதேபோல், வாட்ஸ்அப்,...
வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க!
by Rupa
October 20, 2021
0
10
வாட்ஸ் அப்பில் டெலிட் ஆன மெசேஜ் படிக்கணுமா? இதோ இத ஃபாலோ பண்ணுங்க! தற்போது மக்கள் சமூக வலைத்தளத்தில் அதிக ஈடுபாடக உள்ளனர். உதவி செய்வது முதல்...
உங்கள் போனில் இருந்து தகவல்களை திருடுவது இந்த ஆப்கள் தான்.? உடனே டெலிட் செய்யுங்கள்.!!
by Vijay
October 15, 2021
0
21
ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த மூன்று ஆபத்தான செயலிகளை நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் செல்போன்களில் இருந்து நிறைய பர்சனல் தகவல்கள்...
SBI வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்!
by Rupa
October 13, 2021
0
10
SBI வங்கியின் தங்க டெபாசிட்! இதில் இவ்வளவு பயன்களா? மக்களே இன்றே விரைந்திடுங்கள்! தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் டெபாசிட் என்ற ஒன்றையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம்...
அடக்கமான விலையில் அசத்தலான மோட்டோ E40 ஸ்மார்ட்போன் அறிமுகம் :
by Shobika
October 12, 2021
0
12
மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் மோட்டோ E40 ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, 90...
இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை
by Anand
October 10, 2021
0
32
இனிமேல் இந்த மெசேஜ் வந்தால் ஜாக்கிரதை! வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் விடுத்த எச்சரிக்கை தமிழகத்தில் ரிமோர்ட் ஆக்சஸ் ஆப் மூலம் மோசடி கும்பல் வங்கி கணக்கில் உள்ள பணத்தை...
1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
by Rupa
October 9, 2021
0
19
1.5 பில்லியன் ஃபேஸ்புக் தரவுகள் ஹேக்கர்கள் கையில்! வெளிவந்த அதிர்ச்சி தகவல்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் தொழில்நுட்பம் அதிகளவு முன்னேறி வருகிறது.அவ்வாறு முன்னேறி வரும் நேரத்தில் அதிக...
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன?
by Anand
October 4, 2021
0
28
வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் சேவை நிறுத்தம்! காரணமென்ன? வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிராம் இன்று மாலை முதல் இயங்கவில்லை. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் மற்றும்...
வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது.!!
by Vijay
October 5, 2021
0
20
உலகம் முழுவதும் வாட்ஸ்அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியுள்ளது தற்போது உலகம் முழுவதும் வாட்ஸ் அப், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டகிரம் செயலிகளின் சேவை...
Page 1 of 30 1 2 … 30 Next
Categories
Beauty Tips
Business
Cinema
Crime
District News
Editorial
Education
Health Tips
Job
Life Style
National
News
Opinion
Politics
Religion
Sports
State
Technology
Uncategorized
World
Browse by Tag
ADMK BJP Chennai China Cinema Congress corona corona update Corona Virus Covid-19 Covid19 Cricket Daily prediction Daily Rasipalan District News DMK Dr Ramadoss Edappadi Palanisamy EPS Health tips India Kerala MK Stalin Modi Murder National News News4 Tamil News4Tamil OPS PMK Police Salem Sasikala Sports Stalin Tamil Nadu Tamilnadu World அதிமுக இந்தியா கொரோனா கொரோனா சிகிச்சை கொரோனா பரவல் திமுக பாமக
About Us
News4 Tamil
No.1 Best Online News Channel
News4 Tamil provides latest updates from State,National,World,Political,Cinema,Sports,Business and Technical areas
Recent News
சுமார் 21 கோடி ருபாய்க்கு ஏலம் போன போர்வாள்! வரலாற்று சிறப்புமிக்க இந்த மாவீரருடையது! December 8, 2021
பெட்ரோலே மதுவாக மாறிய விபரீதம்! உச்சகட்ட போதையில் உயிரை இழந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்! December 8, 2021
இனி இந்த தேதியில் தான் மின் கட்டணம் செலுத்த வேண்டும்! மின் வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! December 8, 2021
Categories
Beauty Tips
Business
Cinema
Crime
District News
Editorial
Education
Health Tips
Job
Life Style
National
News
Opinion
Politics
Religion
Sports
State
Technology
Uncategorized
World
You Tube
© 2018 News4 Tamil-No.1 Best Online Tamil News Channel in the World.
We are providing latest updates from State,National,World,Political,Sports,Cinema,Business and Technology areas.
No Result
View All Result
முகப்பு
அரசியல்
மாவட்டம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வணிகம்
பொழுதுபோக்கு
சினிமா
விளையாட்டு
லைப் ஸ்டைல்
உடல்நலம்
ஆன்மிகம்
Copyright © 2021 News4 Tamil - No.1 Best Online Tamil News Website in the World. All rights reserved. | Contact us |
"நீங்கள் உண்மையைச் சொல்லுங்கள் , பிறகு நீங்கள் சொன்னதை நினைவில் கொள்ள வேண்டியதில்லை." இது அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற சபாநாயகராகிய சாம் ரேபெர்னிடம் மேற்கோள் காட்டிய வரியாகும். இந்த பதிவில் தேவனுடைய ஞானம் நமக்கு கற்பிக்க முயற்சிப்பது என்னவென்றால் உத்தமமாய் இருங்கள். பிறகு, உங்கள் இரகசியங்களை யாராவது கண்டுபிடிக்கும்போது , நீங்கள் தேவபக்தியாய் வாழ்ந்தீர்கள் என்பதை அறிந்து பாதுகாப்பாக உணரலாம். அதே , மாறுப்பாடான மற்றும் கபடமுள்ள நபராயிருந்தால் அவரை கண்டுபிடிப்பார்களோ என்று தொடர்ந்து கவலைப்பட வேண்டியிருக்கும் . கோணலும் மாறுபாடான பாதைகளில் பாதுகாப்போ, உத்தரவாதமோ இல்லை, நாம் சிக்கிப் கண்டுப்பிடிக்கப்படுவது நிச்சயம். தீமையான இரகசியங்கள் ஒரு இருண்ட அறைக்குள் முணுமுணுக்கப்பட்டாலும் அல்லது வெளிப்படையாக கூறபட்டாலும , ஆண்டவருக்காய் வாழ்கிறவர்கள் பத்திரமாய் இருக்கிறார்கள், அவர்களை குறித்து உரத்தசத்தமாய் கூறின காரியங்கள் தேவனால் சொல்லப்பட்டது "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே ! "
Thoughts on Today's Verse...
"Tell the truth the first time and then you won't have to remember what you said." That's a quote attributed to the famous Speaker of the House (U.S.A. House of Representatives) Sam Rayburn. That's basically what God's wisdom is trying to teach us in this passage. Be a person of integrity. Then, when someone finds out your secrets, you can feel secure knowing that you have lived for godliness. However, a perverse and deceitful person has to constantly worry that someone will find him out. There is no security or assurance in crooked paths, only the certainty of getting tripped up and caught. When the secrets of evil that have been whispered in dark places get shouted from the rooftops, those who have lived for the Lord can be secure, knowing that what gets shouted about them is said with the voice of God: "Well done, good and faithful servant!"
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , நான் இரகசியமாகவும் நேர்மையற்றவனாகவும் இருந்த நேரங்களுக்காக அடியேனை மன்னியும். என்னை கபடத்திலிருந்து பரிசுத்தமாக்கும். எது உண்மையோ , எது சரியானதோ அதை மட்டுமே பேச எனக்கு உதவுச்செய்யும் . என்னுடைய மறைமுகமான தீய காரியங்களை உம்முடைய பரிசுத்த கிருபையினால், மாசில்லாத தன்மையோடு பொதுவிலும், தனிப்பட்ட வாழ்விலும் இருக்கும் படி மறுரூபமாக்கும். இயேசுவின் நாமத்தினாலே வேண்டிக்கொள்ளுகிறேன், ஆமென்.
My Prayer...
Please forgive me, dear God, for those times that I have been secretive and dishonest. Purify me of deceit. Help me speak only what is true and appropriate. Transform my evil secrets, through your holy grace, into a holy character that is the same both in public and private. In Jesus' name I pray. Amen.
இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.
Today's Verse Illustrated
Pin It
கருத்து
பதிவுசெய்
RSS
இதைப்பற்றி
ஒவ்வொரு மாதமும் தற்பொழுது 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேர்ஸ் ஆப் தி டே வை படித்து பயன் பெறுகிறார்கள்.
மொழிப்பெயர்ப்பு
English
中文
Deutsch
Español
Français
한국어
Русский
Português
ภาษาไทย
اللغة العربية
اُردو
हिन्दी
தமிழ்
తెలుగు
فارسی
ஹார்ட்லைட் , இன்க். வேர்ஸ் ஆப் தி டே.காம் (verseoftheday.Com) என்ற இணயதளம் ஹார்ட்லைட் இன்க் யின் ஒரு பகுதியாகும். |
புகழ்பெற்ற brand இலிருந்து வாகனங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் ikman முதன்மையான தேர்வுகளில் ஒன்றாகும். பெரும்பாலான இலங்கையர் அவர்கள் தேடும் brand இனை கண்டறிவதற்கு முந்தைய தெரிவாக ikman.lk ஐ விரும்புகின்றார்கள். இந்த online தளத்தில் பரந்த அளவிலான brands உள்ளது. நீங்கள் தேடும் brand ஐ தொந்தரவுகள் இல்லாமல் கண்டுபிடிப்பது சிரமமற்றமது. விலை, படங்கள், நிபந்தனைகள் மற்றும் பிற அத்தியவசிய விபரங்களை ஆராய்ந்து சரிபார்ப்பதன் மூலம் உங்கள் விருப்பத்தை தெரிவு செய்யலாம். ikman பல்வேறு brand களிலிருந்து வாங்குவதற்கும் வாகனங்களை விற்பதற்குமுள்ள மிகப் பெரிய சந்தைப்படுத்தல் marketplace| இடமாகும். நீங்கள் ஒரு பொருளுக்கு முடிவு காண்பதற்கு முன்பு, விற்பனையாளர்களுடன் ஒப்பந்தத்தைப் பற்றி கலந்துரையாடவும்.
இலங்கை இல் சிறந்த விலையில் Toyota
உங்களுக்கு ikman இல் தேடுவதற்கு Toyota கசுதந்திரம் உள்ளது. அவை வெவ்வேறான விலை நிர்நயங்களை கொண்டுள்ளன. மேலும் நீங்கள் அதிக அல்லது குறைந்த விலையைத் தேர்ந்தெடுக்கலாம், இத்தனால் உங்கள் பணத்தொகைக்கு ஏற்றவாறு விளம்பரங்களைப் பெற்றுத்தரும். நீங்கள் வெவ்வேறு இடங்களில் காணலாம் இது உங்கள் வேலையை இலகுபடுத்தும்.
Transmission, Body Type, Price and Mileage மூலம் Toyota
விளம்பரங்களை பார்த்தவுடன், நீங்கள் விரும்பும் தீர்மானிக்கலாம், brand ஐ தீர்மானித்த பிறகு உங்கள் பணத்தொகைக்கு பொருத்தமானதா என்பதை கவனிக்க வேண்டும். உங்களுக்கு அதிக பணத்தொகை கிடைத்திருந்தால், புதிய வாகனங்களை பரிசீலிக்கலாம். ஆனால் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் குறைந்த பணத்தொகையில் வேலை செய்யக்கூடும். உங்கள் கனவு வாகனத்தை கண்டறிவதற்கு உடல் வகை, பரிமாற்றம், எரிபொருள் வகை மற்றும் செல்லும் தூரம் என்பன பிற காரணிகளாகும். |
நாம் ஒரே ஒரு முறைதான் சந்தித்திருக்கிறோம். எந்திரன் பட வெளியீடு சமயத்தில் ரஜினியின் பிம்பம் பற்றிய ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் நாம் பங்கேற்றோம். எதிரெதிர் அணியில் இருந்தோம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீங்கள் எந்திரன் படத்தில் பங்கேற்றவர். நான் எப்போதும் விமர்சகன்.
பின்னர் அண்மையில் என் சிநேகிதி பத்மாவும் நீங்களும் பங்கேற்ற ஒரு சமூக மேம்பாட்டு நிகழ்ச்சியில், இளம் மாணவிகளுக்கு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ஏற்படும் விதத்தில் நீங்கள் பேசியதாக அவர் எனக்குச் சொன்னார். சிறு வயதில் தந்தையால் கைவிடப்பட்டபோதும் தாயின் உறுதியான மனமும் கடும் உழைப்பும் உங்களை வாழ்க்கையில் முன்னேறச் செய்ததைப் பற்றி நீங்கள் பேசி அந்தச் சிறுமிகளுக்கு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடுவதற்கான உத்வேகத்தை அளித்ததை அறிய. மகிழ்ச்சியாக இருந்தது. பொதுவாக சினிமா பிரபலங்கள் தங்கள் இளமைக் காலக் கசப்புகளை பேசுவதோ ஒப்புக் கொள்வதோ அவற்றிலிருந்து கற்றுக் கொண்டதைப் பகிர்வதோ அரிது.
அதன்பின் இணைய உலகில் டிவிட்டர் தளத்தில் உங்களுக்கும் உங்கள் அம்மாவுக்கும் எதிராக பாலியல் அவதூறுகளை செய்வதாக சிலரைக் குற்றம் சாட்டி நீங்கள் காவல் துறையில் புகார் செய்ததால் இருவர் கைதான செய்திகளைப் பார்த்ததும், இது தொடர்பான டிவிட்டுகளைத் தேடிப் படித்தேன். எல்லாம் கிடைக்கவில்லை. கிடைத்த வரை படித்தேன்.
முதலில் உங்கள் ட்விட்டுகளைப் பற்றிப் பேசிவிடுவோம். இட ஒதுக்கீட்டுக்கு எதிரான உங்கள் குமுறல் அதில் முக்கியமானது. தாழ்ந்த மனிதர் என்று யாரும் இல்லை. உங்கள் சம்மதம் இல்லாமல் உங்களை யாரும் தாழ்த்தப்பட்டவர்களாக வைத்திருக்கமுடியாது என்று நீங்கள் சொல்வது மிகச் சரி. அப்படி யாரேனும் தாழ்த்தி வைக்க முயன்றால், அடங்க மறு, அத்துமீறு, போராடு என்றுதான் இன்று தலித் தலைவர்களும் சொல்கிறார்கள். இதைத்தான் அம்பேத்கரும் சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்தில் சொன்னார். ஆனால் அவர் அதைச் சொல்வதற்கு முன்னால் நிலைமை அப்படி இருக்கவில்லை என்பதை நீங்கள் அறியவேண்டும். தலித்துகளின் சம்மதம் இல்லாமலேதான் அவர்கள் தாழ்த்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.
உங்கள் அறிக்கையில் உங்கள் கொள்ளுப் பாட்டனார்கள் தமிழறிஞர்கள் மு.ராகவைய்யங்காரையும் ரா.ராகவைய்யாங்காரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். இருவரும் தமிழர் வரலாற்றில் மறக்கக் கூடாத மாமேதைகள் என்று நண்பர் ஆய்வாளர் பொ.வேலுசாமி நெகிழ்ச்சியுடன் சொல்கிறார். எனவே வரலாறு முக்கியம் என்று உங்களுக்குத் தெரிந்திருப்பதால்தான் உங்களுடைய தமிழ்ப் பாரம்பரியத்தை வரலாற்றிலிருந்து தூசு தட்டி எடுத்துச் சொல்கிறீர்கள். வரலாறு முக்கியம். மிக மிக முக்கியம். ஆனால் முழு வரலாறும் முக்கியம். அதில் ஏதோ ஒரு பகுதி மட்டும் அல்ல.
ராகவைய்யங்கார்களின் சம கால மேதைதான் கணித அறிஞர் ராமானுஜம். மூவருமே உங்கள் டிவிட்டர் பாஷையில் ‘ஹையங்கார்கள்’தான். ராமானுஜத்தை, அன்றைய உங்கள் ஜாதி வைதீகர்கள் ஜாதிப்பிரஷ்டம் செய்தார்கள். பாரதியாவது கலகக்காரன். வைதீகர்களுக்குப் பிடிக்காததில் வியப்பில்லை. ஆனால் ராமானுஜம் அவர்களை எதிர்க்காமல், தன் கணக்கிலேயே மூழ்கிக் கிடந்தவர். அவரை விலக்கக் காரணம், ‘சாஸ்திர விரோதமாக’ அவர் கடல் கடந்து போய் வந்ததுதான். அவர் செத்தபோது சம்பிரதாயமான இறுதிச் சடங்குகளைச் செய்ய மறுத்தார்கள். அன்றைய ஹிந்து இதழ் ஆசிரியரின் முயற்சியால் ஒருவர் சடங்கு செய்ய முன்வந்தார். மொத்தமாகவே ஆறேழு பேர்தான் சுடுகாடு வரை சென்றார்கள்.
சொந்த ஜாதிக்காரனையே கடல் கடந்த குற்றத்துக்காக இப்படி நடத்திய வைதீகர்கள் அன்று தங்கள் பார்வையில் கீழ் ஜாதி என்று கருதப்பட்டவர்களை எப்படி நடத்தியிருப்பார்கள் என்று யோசியுங்கள். அந்த வரலாற்றையும் நீங்கள் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். ராகவைய்யங்கார்கள் ஏட்டுச் சுவடிகளைப் படித்து ரசித்து தமிழமுதில் இன்புற்றிருந்த வேளையில், இருளாண்டிகளும் அஞ்சலைகளும் என்ன நிலையில் இருந்தார்கள் என்பதும் வரலாற்றில் இருக்கிறது. உங்கள் நண்பர் ‘ஈ’ இயக்குநர் ராஜமௌலி டிவிட்டில் தவறாகச் சொல்வது போல அந்த நிலை தொழிலால் வந்ததல்ல. பிறப்பால் சுமத்தப்பட்டதுதான். அவர்கள் தாழ்த்தப்பட்டவர்களாக நடத்தப்படுவதற்கு அவர்களுடைய சம்மதத்தை யாரும் கேட்டது இல்லை. எதிர்த்தவர்களுக்கு சாணிப்பால் அபிஷேகமும் கசையடி அர்ச்சனையும்தான் கிடைத்தன. அந்த வரலாறுகளைத் தேடிப் பிடித்துப் படித்தால்தான், அந்த இடைவெளியை நிரப்பவே இன்றிருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது உங்களுக்குப் புரியமுடியும்.
‘மறவர் சீமைப் பொண்ணு நான்’ என்று பெருமைப்படுகிறீர்கள். உங்கள் கொள்ளுப் பாட்டனார் காலத்தில் அந்த மறவரெல்லாம் குற்றப் பரம்பரையினர் என்று அரசாங்கத்தால் முத்திரை குத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட வரலாற்றையும் சேர்த்துப் படித்தால்தான், ஏன் இன்று மறவருக்கும் இட ஒதுக்கீடு தேவைப்படுகிறது என்பது புரியும்.
ட்விட்டரில், பேஸ்புக்கில் எல்லாம் எவரும் தங்களுக்கு ஆழமாக நேரடியாக தெரிந்திராத இட ஒதுக்கீடு போன்ற விஷயங்களைப் பற்றி டைனிங் டேபிளில் போகிற போக்கில் கமெண்ட் அடிப்பது போல எழுதும் பொறுப்பற்ற சுதந்திரம் இருப்பதே பிரச்சினை. இந்த விஷயங்களில் உங்களுக்கோ பிறருக்கோ அக்கறை இருப்பதை நான் நிச்சயம் வரவேற்கிறேன். 99.9 மதிப்பெண் வாங்கிய பிராமணப் பெண்ணுக்கு சீட் கிடைக்காத பிரச்சினைக்கும் தீர்வு தேவைதான். ஆனால் தீர்வைத் தடுப்பது இட ஒதுக்கீடு அல்ல என்பது புரிய, நீங்கள் நிறைய படிக்க வேண்டும். பல மொழிகளைப் படித்துத் தேர்ந்துள்ள உங்களால் இது முடியாதது அல்ல. தேவைப்படுவது நிஜமான தேடலும் ஜாதிகளுக்கு அப்பால் எல்லா சக மனிதர்கள் மீதான அன்பும் அக்கறையும்தான்.
இனி உங்கள் புகாரால் கைதாகியும் கைதை எதிர்நோக்கியும் இருக்கும் சக ட்விட்டர்களின் நடத்தையைப் பார்ப்போம். அதில் ஒருவரை நான் நேரடியாகவே அறிவேன். நான் நடத்தும் கேணி இலக்கிய கூட்டங்களுக்குத் தொடர்ந்து வருபவர். ஓராண்டாக சிறப்பாக வெளிவரும் தமிழின் அருமையான ஒரு சிற்றிதழுக்குப் பங்காற்றுபவர். உங்களுடன் சண்டையிட்ட ட்விட்டர்கள் பலர் இட ஒதுக்கீடு, மீனவர் நலன் இவற்றில் எல்லாம் அக்கறையும் உணர்ச்சிப் பூர்வமான ஈடுபாடும் உடையவர்கள். உங்களுடைய சில கருத்துகள் அவர்களுக்கு எரிச்சலாகத்தான் இருக்கும்.
ஆனால் அதற்காக பாலியல் சார்ந்த அவதூறுகளை கேலிகளை அவர்களில் யார் எழுதுவதையும் யாருக்கு எதிராக எழுதுவதையும் நான் நிச்சயம் ஏற்கவில்லை. கடுமையாகக் கண்டிக்கிறேன். நீங்களோ வேறு யாரோ இட ஒதுக்கீடு பற்றியோ, தாழ்த்தப்பட்டவர்கள் பற்றியோ, மீனவர் கொலைகள் பற்றியோ புரிந்தோ புரியாமலோ எவ்வளவு அபத்தமாகப் பேசினாலும், அவையெல்லாம் எப்படி அபத்தம் என்றுதான் புரிய வைக்க முயற்சிக்கலாம். அதற்கான பொறுமை இல்லாவிட்டால் உங்களை அலட்சியம் செய்துவிட்டுப் போகலாம். ஆனால் ஒருபோதும் யார் மீதும் பாலியல் வக்கிர அவதூறுகள், கேலிகள் செய்வது நிச்சயம் தவறு.
இங்கே நான் கவலையும் கவனமும் கொள்ள விரும்பும் இரண்டு பிரச்சினைகள் இருக்கின்றன. இவற்றை நிச்சயம் சட்டத்தால் தீர்க்கமுடியாது. .
அறிவுக் கூர்மையும் திறமையும் கடும் உழைப்பும் தன்னம்பிக்கையும் உடைய உங்களைப் போன்ற பலர் இதே சமூகத்தில் வாழும் கோடிக்கணக்கான சாதாரண மக்களின் பிரச்சினைகளை, அவற்றின் வேர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் உழைப்பே இல்லாமல் ஒரு முழு வாழ்க்கையை இன்றைய சமூகத்தில் வாழ்ந்து முடித்துவிட முடியும். புகழும் செல்வாக்கும் தரும் வசதியில் அந்தப் பிரச்சினைகளைப் பற்றி குழப்பமான மேம்போக்கான கருத்துகளைச் சொல்லவும் முடியும். ராகவைய்யங்கார் முத்தொள்ளாயிரத்தைப் பதிப்பிக்கும்போது ஒரு பாட்டில் தனக்கு ஒரு விஷயம் இன்னும் ஆழமாகத் தெரியவில்லை என்றால் எவ்வளவு தயங்கியிருப்பார், எவ்வளவு தேடியிருப்பார்.. தேடிப் பிடித்து படிக்காமல் அவசரப்பட்டு முடிவைச் சொல்லியிருந்தால் அவரை ஆய்வுலகம் கொண்டாடியிருக்குமா ?
மறுபக்கம் இந்த பிரச்சினைகளில் உணர்வுப் பூர்வமான ஈடுபாட்டுடன் , அவற்றிற்குத் தீர்வு வரவேண்டுமென்ற ஆர்வமும் கொண்டு பல்வேறு சமூக சித்தாந்தங்களில் ஓரளவு பரிச்சயமும் உடைய மிகச் சிலராக இன்று ஒரு புதிய தலைமுறை துடிப்புடன் உருவாகி வந்துள்ளது. சோகம் என்னவென்றால், அதில் சிலர், கூடவே பாலியல் வக்கிர மனசும் உடைய டாக்டர் ஜெக்கில் அண்ட் மிஸ்டர் ஹைடாக விளங்குகிறார்கள்.. உங்களை பகடி செய்த ட்விட்டர்களின் விரல்கள் கம்ப்யூட்டர் பட்டன்களில் பாலியல் வக்கிரத்தை தட்டும்போது, அவர்கள் படித்த பெரியாரோ, அம்பேத்கரோ, மார்க்சோ, சேகுவேராவோ ஏன் அவர்களுடைய தலைக்குள்ளிருந்து ஒரு எதிர்த் தட்டு தட்டமுடியாமல் போகிறது என்பதே என் இன்னொரு கவலை.
இன்றைய மீடியா சூழல்தான் காரணம். நீங்களும் சரி, உங்கள் டிவிட்டர் எதிரிகளும் சரி, ட்விட்டரில் எழுதிய பல வரிகளை ஒரு போதும் அச்சுப் பத்திரிகைகளில் எழுதமுடியாது. பத்திரிகை ஆசிரியர் தடுத்துவிடுவார். இணையம் தரும் சுதந்திரம் கட்டற்றது. ஆனால் அதைப் பயன்படுத்துவோருக்கு சுய கட்டுப்பாடும் பொறுப்பும் சொல்வதில் தெளிவும் தேவை. அது இல்லாத இருபிரிவினரிடையே நடக்கும் சண்டைதான் இந்த விவகாரம். இதனால் இணைய சுதந்திரத்துக்கே ஆபத்து.
உலக மகா அரசியல் சித்தாந்தங்களுடனெல்லாம் பரிச்சயம் கொண்டவர்களுக்கு, அடிமனதில் பெண் மீதான பாலியல் வக்கிரம் மட்டும் ஏன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டே இருக்கிறது ? மீடியாதான் காரணம். எத்தனை அறிவார்ந்த நூல்களைப் படித்தாலும் கேட்டாலும், சினிமாவும் டி.வியும் காமப் பிசாசுகளை உசுப்பி விடும் வேலையையே பெரும்பாலும் செய்து கொண்டிருக்கின்றன. அதனால்தான் மற்றபடி நல்லவர்களாக தெரிபவர்கள் கூட இணைய முகமூடி மாட்டியதும் நிர்வாணக் குத்தாட்டம் ஆடுகிறார்கள். அவர்கள் தலைக்குள், நீங்கள் பணி புரியும் வணிக சினிமா துறை விதைத்த காமவித்துகள், குத்தும் கூரிய முட்களோடு தழைத்துக் கொண்டே இருக்கின்றன.
நீங்கள் ஆபாசப் பாடல்களைப் பாடியிருப்பதால்,உங்களுக்கு எதிராக ஆபாசமாக எழுதினால் என்ன தப்பு என்ற அராஜகமான வாதத்தை நிச்சயம் நான் ஏற்க மாட்டேன். ஆனால் அறிவுக்கூர்மை, மொழிப் புலமை எவ்வளவு இருந்தாலும், என்ன பாடுகிறோம் என்பதை முடிவு செய்யும் தேர்வைக் கறாராக செய்யாமல் வாய்ப்பு, பணம், புகழ் என்ற அளவுகோல்களை மட்டுமே பயன்படுத்தி நீங்கள் பாடிக் கொண்டிருக்கும் சினிமா பாடல்களின் விளைவுகள் என்ன என்ற கேள்வியை நீங்கள் புறக்கணிக்க முடியாது.
“ஐந்தடி வளர்ந்த ஆட்டுச்செடி நான். என்னை மேய்ந்துவிடு மொத்தம்” என்று ஒரு பெண் பாடுவது ஆண் மனதில் என்ன உணர்ச்சியை எழுப்பும் ? ‘உன்னுள்ளே நுழைஞ்சதாரோ, பையக் குழைஞ்சதாரோ ?’ என்ற வரிகளை எழுதியவருக்கு பெரும் பணமும் சமூக அந்தஸ்தும் தரும் இதே சமூகம், அந்த வரிகளின் அர்த்தத்தை ஒருவர் ட்விட்டரில் எழுதினால் கழுத்தில் கை வைத்து சைபர் கிரைமுக்கு அல்லவா தள்ளிக் கொண்டு போகும் ? ‘தினம் ஆடை சண்டையிலே முதலில் தோற்பவள்‘ என்று தன்னைப் பற்றி பாடும் பாத்திரம் அதே பாட்டில் ‘நீ இடம் சுட்டிப் பொருள் விளக்கு’ என்று சொல்லும்போது எந்த இடத்தை, என்ன பொருளைச் சொல்கிறாள் என்ற சூட்சுமம் ஆபாசமாக எழுதும் ட்விட்டர்களுக்குத் தானே அல்வாவாக இனிக்கும். அது ராகவைய்யங்கார்கள் படித்த தமிழ் இலக்கணத்திற்கு அப்பாற்பட்டதல்லவா?
இந்தப் பாடல்களைக் கேட்டு வளரக் கூடிய ஒரு சிறுவன், நாளை க்வாண்ட்டம் பிசிக்ஸ் படித்து ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியானாலும் அவன் அடிமனதில் பதிந்துவிட்ட பாலியல் வக்கிரம், வேறொரு சின்மயியுடன் சண்டை வரும்போது வெளிப்படத்தான் செய்யும். ‘பாடுவது என் தொழில். கொடுப்பதைப் பாடுகிறேன் ‘ என்று வாதாட இடமில்லை. அந்தப் பாட்டு, அதைக் கேட்கும் மனங்களை இழிவான மனநிலைக்கு அழைத்துப் போனால், அதற்கான பொறுப்பில் உங்கள் பங்கும் இருக்கிறது. ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவரை யாரும் தாழ்த்தப்பட்டவராக்கிவிடமுடியாது என்பது போலவே, உங்கள் சம்மதமில்லாமல் யாரும் உங்களை இழிவான பாடலகளைப் பாட வைத்துவிடமுடியாது. அப்படிப் பாட மறுத்ததால் வாய்ப்புகளை இழந்த உன்னிகிருஷ்ணன் ஒன்றும் நலிவுற்று ஓய்வூதியம் வாங்கவேண்டிய நிலைக்குப் போய்விடவில்லை.
சமூகத்தில் நாம் ஒவ்வொருவரும் மறைமுகமாகவோ நேரடியாகவோ இன்னொருவர் வாழ்க்கையோடு சம்பந்தப் பட்டிருக்கிறோம். அந்தப் பொறுப்பை நாம் உதறிவிடமுடியாது. உங்கள் மீது பாலியல் அவதூறுகளை வீசுபவர்களின் மன வக்கிரங்கள், காலம் காலமாக நம் ஊடகங்களால் விதைக்கப்பட்டவை. அதற்காக நியாயமாகவே பதறும் நீங்கள், அறிந்தோ அறியாமலோ அதே விஷ விதைகளை தூவிக் கொண்டிருக்கிறீர்கள். அவை விருட்சங்களாகும்போது உங்கள் மகளை அழைத்துக் கொண்டு நீங்கள் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கும் நிலை வரலாம். அல்லது உங்கள் மகன் மீது வேறொரு தாய் புகார் கொண்டு வரலாம்.
இந்தப் பிரச்சினைகளை நாம் சட்டத்தால் மட்டும் திருத்திவிடமுடியாது. ஒருவரோடொருவர் விவாதிப்பதன் மூலம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அடுத்த பாட்டைப் பாடும் முன்பு வரிகளின் அர்த்தத்தை யோசியுங்கள். அவற்றுக்கு என்ன மாதிரி காட்சி அமைக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று யோசியுங்கள். அது உங்களுக்கு உடன்பாடானதுதானா என்று யோசியுங்கள். அடுத்த ட்விட்டை எழுதும் முன்பு அந்த விஷயம் பற்றிய உங்கள் புரிதல் முழுமையானதுதானா என்று யோசியுங்கள். இல்லையென்றால் முதலில் புரிந்துகொண்டு அப்புறம் விமர்சியுங்கள். நீங்கள் மட்டுமல்ல, உங்களையும் இன்னும் பலரையும் கீழ்த்தரமாக பகடி செய்த பதிவர்களும் கூட, தாங்கள் படித்த பெரியாரும் மார்க்சும் அம்பேத்கரும் ஏன் தங்கள் மூளைக்குள் பதிந்தார்களே ஒழிய மனங்களில் படியவில்லை என்பதை யோசிக்கவேண்டும் என்றே வேண்டுகிறேன். நாம் எல்லாரும் வெறும் செராக்ஸ் மெஷின்களல்ல.
உலகின் மிகச் சிறந்த நீதிமன்றம் நம் மனசாட்சிதான். அதையே உங்களுக்கும் சரவணகுமாருக்கும் ராஜனுக்கும் இன்னபிறருக்கும் பரிந்துரைக்கிறேன். இந்த மோசமான சூழலிலிருந்து நீங்கள் அனைவரும் மீண்டு வர வாழ்த்துகிறேன்.
அன்புடன் ஞாநி
கல்கி 3-11-2012
Posted by கொற்றவை at 5:25 AM 5 comments:
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: chinmayi, gnani, இணைய ஆபாசம், கொற்றவை, சாதி, சின்மயி
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)
About Me
கொற்றவை
உங்களுக்கான என்னைக் கொன்று விடுவதற்காக நான் எடுக்கும் ஆயுதம் அறிவு. தேடுதலின் மூலம் கிடைக்கும் அறிவு. உண்மை பற்றிய தேடுதல் அது. அந்த உண்மை எல்லாருக்குமான உண்மையாய் இருப்பதே விடுதலைக்கான வழி. குறிப்பாக பெண் விடுதலைக்கான வழியாக நான் கருதுகிறேன். அவ்விடுதலையை நோக்கிய என் சுயமான எழுத்துக்கள் சாவின் உதடுகள் எனும் வலைப்பக்கத்திலும், தேடலில் கற்றவையை கருவனம் எனும் இந்த வலைப்பதிவிலும் ..........
View my complete profile
Blog Archive
► 2018 (1)
► December (1)
► 2016 (1)
► December (1)
▼ 2012 (1)
▼ November (1)
சின்மயிக்கு ஞானியின் திறந்த மடல்
► 2011 (6)
► September (1)
► July (1)
► May (1)
► March (1)
► February (1)
► January (1)
► 2010 (9)
► December (1)
► November (3)
► October (2)
► September (3)
Labels
kotravai (4)
ஆணாதிக்கம் (1)
ஒளவை (1)
கொற்றவை (6)
தமிழ் அகராதியில் பெண் (1)
பத்தினி (1)
பெண்ணியம் (3)
Search This Blog
Followers
மற்ற வலைப்பதிவுகள்
சாவின் உதடுகள்
Rape Victim புகைப்படத்தை வைத்து தான் இங்கு நீதி கிடைக்குமா? கூருணர்வு வேண்டாமா? - Rape Victim / பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகும் நபர்களின் புகைப்படத்தை வெளியிடாதீர்கள் என்று சொன்னால் ஒருவரது பதில்: //பாதிக்கப்பட்ட பெண்களே வெளிய வந்து, ...
3 weeks ago
மகள் நேயா
வேட்டுவம் நூறு- நூல் விமர்சனம்- வசுமித்ர - *பாட்டுக்களின் தாய்**,**நமது விதை முழுவதின் தாய்**,* *ஆரம்பத்தில் நம்மைப் பெற்றெடுத்தாள். * *அவள் எல்லா இன மனிதர்களின், * *எல்லாக் குலங்களின் தாய... |
வாலி 100, நெல்லை ஜெயந்தா, வாலி பதிப்பகம், சென்னை, பக். 212, விலை 130ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-211-8.html தலைமுறைகளைக் கடந்தும் ஜெயித்த திரையுலக ஜாம்பவான் வாலி பற்றிய 100 சுவையான செய்திகளின் தொகுப்பு. இவை செய்திகளல்ல. ஒவ்வொன்றும் ஒரு பதிவு. அடுத்த தலைமுறையினருக்கு வாலி பற்றிய ஒரு பாடம். வாலியின் துணிவு, நன்றி உணர்வு, நட்பு, நகைச்சுவை, எளிமை, ஈகோ இல்லாத மனம், யாருக்கும் தலைவணங்கா மாண்பு, தீராத தேடல், அவரது பட்டறிவு என்ற வாலியைச் சுற்றி […]
Read more
சினிமா, தொகுப்பு, தொழில் ஆ. சண்முகவேலாயுதன், குமுதம், சீனப்பொருட்கள் இறக்குமதியும் இந்திய சிறுதொழில்களும், திருக்குறள் பதிப்பகம், நெல்லை ஜெயந்தா, வாலி 100, வாலி பதிப்பகம் |
Sammanthurai Divisional Secretariat is situated in Ampara district of Eastern Province, Sri Lanka. This Village was a main trade center for the south Eastern and Kandy merchants in the early history. It was the border of the Batticaloa region.
Arabs and Eastern trades arrived the south eastern region for their business purposes earlier then the Porthugees and Hollands.There so many evidence about their invasion. In the early, Indu- Muslim traders called “Sammakatharar”, arrived by the Baticaloa lake from the bay of the Bangal. They camped there and used the region as their main trade route and they export and import their goods.
The direct translation of the word for goods is in tamil “Samaan” and port is Thurai ‘the region which used for their tade purposes “Sammanthurai” . Later It was named as Sammnathurai and called Granary of east. It was famous for paddy cultivation and produced a type of rice called “samba”. This name was another reason for the village. It was called “sammanthurai”those days. When the time changed the name was fixed as sammanthurai.
Sammanthurai Divisional Secretariat division is situated in Ampara district of the Eastern Province, Sri Lanka. It is one of The DS Divisions out of 20 divisions in Ampara district and it contains a large extend of land with the huge population.
The early Sammanthurai was 248.37 sq km extent of land and divided in to 83 GN Divisions. Irakkamam village Which was Under the Sammanthurai DS Division upgraded as Separate Divisional Secretarial including 6 villages later Navithanvali area was upgraded as Separate Divisional Secretariat including 4 villages with 20 GN Divisions.
After that the remaining area is contained 123.02 sq km extent of land and it included 23 villages with 51 GN Divisions. The latitude of the Village is 7’20’ north the longitude is between 80” – 45”. The average temperature is 27’C to 30’C for the year. And it has a continuous rain falls between 1500 mm to 2225mm for the year.
Sammanthurai is a situated in the eastern part of Indian ocean of Sri Lanka and locates. and west of the coastal village. The low level of the ground is 09 m hight from the sea level and it increases up to 27 m height. And the village consist a flat land, Mullurian mixed ground and rock hills about 50m height in several places there.
NO Ethnicity Population
01 Muslims 61,885
02 Hindus 8,394
03 Others 1,001
Total 71,280
வரலாறு…சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். புவியியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்தில் அமைந்துள்ள சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றாக கணிக்கப்படுகின்றது. இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்கிறார்கள்.
அரேபியர்கள் இலங்கையில் வர்த்தகர்களாக அறிமுகமாவதற்கு முன்னர் ஆதம் மலையை (Adams Peak) தரிசிக்க வருகின்ற யாத்திரிகர்களாகவே அறியப்பட்டனர். அப்படி வந்தவர்கள் இங்குள்ள வாசனைத்திரவியங்களுக்கு வெளிநாடுகளில் நல்ல கிராக்கி உள்ளதை அறிந்தனர். அதனால் பின்னாட்களில் அவர்களின் வருகை வர்த்தக நோக்கத்தைக் கொண்டதாக அமைந்தது. அரேபியர் மத்தியதரைக்கடல் மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கூடாகச் செய்து வந்த வர்த்தகமும் அவர்களுக்குப் பரிச்சயமான வர்த்தகப் பாதைகளும் இந்தியாவினதும், இலங்கையினதும் அறிமுகத்தைக் கொடுத்தன. அவர்கள் காற்று வீசும் காலத்திற்கேற்ப வங்காள விரிகுடாவினூடாக இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்தனர். (அரேபியரின் முதல் பிரவேசம் இலங்கையின் எப்பகுதியில் இடம் பெற்றது என்பதில் வரலாற்று ஆசிரியளுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவுகிறது.) இவர்கள் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் காலங்களில் கட்டுமரக் கப்பல்கள் (பாய்க்கப்பல்), ‘சம்பன்’ எனப்படும் ஒருவகை வள்ளம், சிறிய படகுகள் ஆகியவை மூலம் வங்காள வரிகுடாவின் ஊடாகப் பயணித்து இலங்கையின் கிழக்குக் கரையை அடைந்து, மட்டக்களப்பிலிருந்து தென்கிழக்கின் சம்மாந்துறை வரையும் இயற்கையாக விரிந்து சென்ற வாவியினூடாகச் சென்று வாவியின் தென்திசையில் அமைந்திருந்த சம்பன்துறையில் தரைதட்டி, அங்கு வள்ளங்களைக் கட்டிவிட்டு தரைமார்க்கமாகச் சென்று ஆதம் மலையைத் தரிசித்தனர்.
அரேபியரும் பாரசீகரும் துலுக்கர்களும் பட்டாணியர்களும் தென்கிழக்கில் மட்டக்களப்பு வாவி அல்லது ஆற்றின் உதவிகொண்டு வந்திருக்கின்றனர் என்பதற்கு 12 ம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டிருக்கும் அல்-இத்ரீசி, அல்-பூர்பானி, அபூசெய்யது என்னும் புகழ் பெற்ற அரேபிய புவியியலாளர்களின் குறிப்புக்கள் சான்றுகளாக உள்ளன. அண்மைக்காலம் வரை தென்கிழக்கு மட்டக்களப்பு என்றே அழைக்கப்பட்டு வந்தது.
அரேபியக் கடலோடியான சிந்துபாத் இலங்கை பற்றிக் குறிப்பிடுகையில் “இலங்கையில் நான் தரையிறங்கிய போது ஒருவர் வயலுக்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அவர் என்னுடன் அரபு மொழியில் மிகச் சரளமாக உரையாடினார். இங்கு வாழ்ந்த மக்கள் மஃபார் என்று அழைக்கப்பட்டனர்.” இந்தச் அரபிமெரழிச் சொல்லுக்கு தோணித்துறை என்பது பொருளாகும். இந்த மஃபார் என்ற சொல்லே திரிபடைந்து மட்டக்களப்பு என்றும் திரிபடைந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் தென்கிழக்கிலுள்ள சம்மாந்துறைச் சார்ந்துள்ள களப்பகுதியையே நீண்ட காலமாக குறித்து வந்திருக்கிறது. சம்மாந்துறைக்கு அண்மித்த மட்டக்களப்பு போர்த்துக்கேயர் காலத்துக்கு முன்பிருந்தே மிகப் பிரசித்தி பெற்ற கப்பல் கட்டும் இடமாகவும், வர்த்தகத் துறைமுகமாகவும் இருந்து வந்துள்ளது. போர்த்துக்கேயர் 1628 ம் ஆண்டு புளியந்தீவில் தமது கோட்டையைக் கட்டியதன் பின்பே, மட்டக்களப்பு என்னும் பெயர்ப்பதம் சம்மாந்துறைக்கு இருபது மைல் தூரம் வடக்கே இருந்த பிரதேசத்தைக் குறிப்பதாக மாறியது.
மட்டக்களப்பு வாவியின் தென்கோடிக்கப்பால் உள்ள பகுதியே ஒல்லாந்தர் காலம் வரைக்கும் மட்டக்களப்பு என்னும் பெயரால் அழைக்கப்பட்டதென்றும், ஒல்லாந்தர் தமது கப்பற் பிரயாண வசதிக்கேற்றதாக வாவியின் வடக்கேயுள்ள கடல் வாயினைத் தெரிந்து, அவ்விடத்திலிருந்த புளியந்தீவிலே கோட்டையினை அமைத்த பின்னரே மட்டக்களப்பென்ற பெயர் வாவியின் வடபகுதிக்கும் சென்றதென்று அறிகிறோம். இலங்கையின் சிறப்பைக் கேள்வியுற்று வடஇந்தியாவிலிருந்து திரண்டு வந்த முற்குகர் கூட்டத்தினர், ஈழத்தின் கிழக்குக் கடல் வழியாக வந்து உப்புநீர் ஏரியொன்றின் ஊடாக நாட்டினுள் புகுந்து தமது ஓடங்களைச் செலுத்தினர் என்றும், தெற்கு நோக்கி நீண்ட தூரம் சென்ற அவரகளது ஓடங்கள் தரைதட்டியதும் அவ்வேரியின் எல்லைக்குத் தாம் வந்து விட்டதை அறிந்து அப்பகுதிக்கு மட்டக்களப்பு (களப்புமட்டம் – வாவியின் எல்லை) என்று பெயரிட்டனர் என்றும் வழங்குகின்ற கேள்விச் செய்தி இக் கருத்தையே வலியுறுத்துவதாகும்.
15 ஆம் நூற்றாண்டு வரையும் வாவியின் தென்பகுதியே மட்டக்களப்பு எனப் பெயர் பெற்றிருந்த வரலாற்றை வீரமுனைச் செப்பேடு, சீர்பாதர்வரன்முறைக் கல்வெட்டு, கண்ணகி வழக்குரை காதை என்பன குறித்துள்ளன.
மட்டக்களப்பின் துறையாக சம்மாந்துறையே விளங்கியது. சம்மாந்துறை என்ற பெயர் ‘ஹம்பன்’ என்னும் சுமேரிய மொழிச் சொல்லின் திரிபாகும். அதன் பொருள் ‘கப்பல் கட்டுமிடம்’ என்பதாகும்.
இலங்கையில் இப்போதும் சம்மன்காரர்கள் என்று அழைக்கப்படும் மக்கள் இருக்கின்றனர். இவர்களை சிங்களவர்கள் ‘ஹம்பாங்காரயா’ என்று அழைக்கின்றனர். ஹம்பாந்தோட்டை என்னும் ஊரும், சம்மாந்துறை என்னும் ஊரும் இலங்கையின் தென்பகுதியில் நிலரீதியாகத் தொடர்புபட்டிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. கொழும்பில் ஆதியில் முஸ்லிம்கள் வாழ்ந்த இடம் சம்மான்கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. அங்கு அமைந்திருக்கும் அழகிய பள்ளிவாசல் ‘சம்மான்கோட்டைப் பள்ளி’ என்றும் அழைக்கப்படுகிறது.
காசியப்ப மன்னன் இலங்கையின் வடக்கில் வல்லிபுரம், கிழக்கில் சம்மாந்துறை, மேற்கில் களனி போள்ற இடங்களில் இருந்த துறைமுகங்களைத் தனது அதிகாரத்தின் கீழ் வைத்திருந்தான் என அறியமுடிகிறது. சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகத் திகழ்ந்தது என சேர் எமெர்சன் டெனன்ட் குறிப்பிட்டிருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கதாக உள்ளது. இன்றும் கூட சம்மாந்துறையில் இரண்டு கிராமசேவகர் பிரிவுகள் மட்டக்களப்புத் தரவை-01, மட்டக்களப்புத் தரவை-02 என்று அழைக்கப்படுகின்றமை இதற்குச் சிறந்த ஆதாரமாகும். சம்மாந்துறை பிரதேச செயலகம், பொலிஸ் நிலையம், தபால் நிலையம், மாவட்ட வைத்தியசாலை ஆகியன மட்டக்களப்புத் தரவையிலேதான் அமைந்துள்ளன. மட்டக்களப்புத் தரவை, முக்குவர் வட்டை ஆகிய பிரதேசங்களைத் தாண்டி சம்மாந்துறையின் அல்லை களப்புப் பகுதியை நோக்கிச் செல்லும் போது அங்கு சேறடர்ந்த களப்பகுதி காணப்படுகிறது. இது மட்டக்களப்பு வாவியுடன் இணையும் பகுதியாகவும் உள்ளது. அல்லை சதுப்பு நிலப்பகுதியும் அதனை அண்டிய சேவகப்பற்று வயற்காணிகளும் முன்னர் நிலப்பரப்பாகவே இருந்தன. பின்னர் காலப்போக்கில் வண்டல் மணலால் மூடப்பட்டுள்ளன. இந்த வயற்காணிகளில் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது தற்போதும் வழமையாகக் காணப்படுகிறது. இன்று சம்மாந்துறை தூர்ந்துபோன, கைவிடப்பட்ட துறைமுகமாக இருப்பதற்கு அந்நிய ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணமாகும். அத்துடன் இது நேரடியாகக் கடலுடன் சேராத களப்புசார் துறையாகக் காணப்பட்டதையும் குறிப்பிடலாம். முதியோர்களின் வாய்வழித் தகவல்களின்படி, சம்மாந்துறையையும் காரைதீவையும் ஒரு காலத்தில் களப்பில் சேரும் நீர் பிரித்திருந்ததாகவும், மாவடிப்பள்ளி வரையிலும் தரைவழித் தொடர்பு இருந்ததாகவும், அதற்கப்பால் காரைதீவை அடைய ஓடங்களைப் பயன்படுத்தியதாகவும் அறிய முடிகிறது.
சம்மாந்துறை கப்பல் கட்டும் துறைமுகமாகவும், பழுதுபார்க்கும் இடமாவும் விளங்கியதனால், ஆதம் மலையைத் தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பிச் செல்ல தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றை எதிர்பார்த்து சம்மாந்துறையை அண்மித்த பகுதிகளில் அல்லது இறங்குதுறையாகவும், பொருள்களைப் பாதுகாத்து வைக்கும் விளங்கிய கிட்டங்கி, பட்டினமாகத் திகழ்ந்த மண்டூர் ஆகிய இடங்களில் தங்கியிருந்தனர் எனத் தெரிய வருகிறது.
குடி வரலாறு …
1940 களில் சம்மாந்தறையில் 16 குடிகள் காணப்பட்டன. பிற்காலத்தில் சம்மாந்துறையில் 33க்கு மேற்பட்ட குடிகள் காணப்பட்டிருந்தாலும் தற்போது 31 குடிகளே வழக்கில் உள்ளன. |
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.
இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை [email protected] என்ற EmailIDக்கு அனுப்பவும்)
Terms and Conditions
இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.
This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website. |
"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.
இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை [email protected] என்ற EmailIDக்கு அனுப்பவும்)
Terms and Conditions
இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.
This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website. |
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் களமிறக்கப்படவுள்ள வேட்பாளர்களை மூன்று கட்சிகள் அறிவித்துள்ளன.
வரும் மார்ச் 2ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தொகுதி இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக உள்ளூரைச் சேர்ந்த அய்மான் ஸைனாலி களமிறக்கப்படவுள்ளார். பிபிபிஎம் கட்சியை பிரதிநிதித்து அவர் இத்தேர்தலில் களமிறங்கவுள்ளார்.
அதேபோன்று தேசிய முன்னணி வேட்பாளராக அம்னோவின் அடிமட்ட உறுப்பினர் ஸக்காரியா ஹனாஃபி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான், தேசிய முன்னணியை தவிர்த்து பிஎஸ்எம் கட்சி சார்பில் அதன் இளைஞர் பிரிவைச் சேர்ந்த நிக் அஸிஸ் அஃபிக் களமிறக்கப்படவுள்ளார்.
By myBhaaratham - February 15, 2019
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
No comments:
Post a Comment
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
'இயற்கையை காப்போம் இனியதோர் உலகை படைப்போம்' - சிறப்பு கட்டுரை
பினாங்கு - இயற்கை என்பது இயல்பாக இருப்பது என்பது பொருள் கொண்டதாகும் . இயல்பாகவே தோன்றி மறையும் பொருட்கள் அவற்றின் இயக்கம் , அவை இயங...
மரணத்திலும் பிரியாத தம்பதியர்
பூச்சோங்- மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சிலாங்கூர்,பூச்சோங்கைச் ச...
சோழன் ஆட்சியை இழந்ததைப்போல, மஇகாவை இழந்து விடாதீர்கள்!!!
சேரன், சோழன், பாண்டியன் ஆட்சிகளை இழந்து 500 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இங்கு வந்து 200 ஆண்டுகளாகக் கட்டமைத்த வாழ்க்கையைத்தான் இன்றும... |
Traffic Ramasamy attacked for asking Lawyers to Return to work: Public interest writ petition filed by social activists
‘Self Immolations for Tamil Eelam: Congress is Responsible’ – Pazha Nedumaran on 14 dead
Bihar raw deal: Tit for tat: Cong seals deal with JMM in Jharkhand: Shibu Soren to fight both LS and assembly polls
Reporters Woes in covering the upcoming India Elections 2009: Media Pass from EC
CPI(M) Election Manifeto released
Blogroll
.:: LIFE ::.
::: TAMIL PC TIMES BLOG :::
Aishwarya
அலசல்
ஆபிதீன் பக்கங்கள்
இசை
இனிஆரம்பம்…
இன்று – Today
இரு கண்கள் போதாது…
உரக்கச் சொல்வேன்
உலக நிகழ்வுகள்
எழுத்தாயுதம்
ஒன்றுமில்லை
ஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .
கசாகூளம்
கடுகு.காம் – Kadugu.Com
கதம்ப மாலை
கதிரவன்
கவிதைச் சாலை
கார்க்கியின் பார்வையில்
கீதாபாலராஜன்
குளவிகள்
கூத்தரங்கம்
கூமுட்டை என்னா சொல்றாருன்னா…..
கேள்வி
கை.அறிவழகன்
கோவை குரல்
சகுரா
சந்தோஷ் பக்கங்கள்
சாரல்
சாரல் – TAMIL NEWS BLOG
சித்ரன்
சிறுதுளி
சிறுமழை
சுட்டிப் பையன்
சூப்பர் டூப்பர்
செந்தமிழ்ச்சோலை
செப்புப்பட்டயம்
செம்ம மொக்கை
செய்வதை திருத்தச் செய்
டிமாக்ஸ்
தமிழில் பங்குவணிகம்
தமிழோவியம்
தமிழ் பதிப்புலகம்
தமி்ழ் உலகம்
தர்மாவின் வலைப்பக்கம்
தாளிக்கும் ஓசை
தீஸ்மாஸ் டி செல்வா
தேசிய முற்போக்கு திராவிடர் கழகம்
நடைவழிக் குறிப்புகள்
நதியலை
நான்
நான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே
நிறம் – COLOUR ::: உதய தாரகை
நெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .
பா.க.ச.
பாமரன்
பிரகிலுப்தம்
பிறழ்வு
புதிய தமிழ்ப் பட தரவிறக்கம்
மனம் போன போக்கில்
மரவண்டின் ரீங்காரம்
மைய நீரோட்டம்
மொக்கைப் பெட்டகம்
யு.எஸ்.தமிழன்
லிங்க்கர் | Linkr
வடக்கு மாசி வீதி
வாய்கொழுப்பு
விழியன் பக்கம்
வே.மதிமாறன்
ஸ்ரீ ராமதாஸ்
BitterScotch
Carthickeyan’s இல்லம்
Chitraiselvam’s Weblog
Dr.Rudhran\’s blog
Driving in Chennai
E-Tamil Blogspot
Flyswatting….
Friendly Fire
Gilli.IN
Glimpses of Chennai
Koneswaram’s Weblog
Lost in Media
Maami’s Weblog
My Dreams
My Writings
News Digests in Yahoo 360
No Gun Only Fun
Not Just News
Peter Ratnadurai\’s Weblog
Prakash’s Chronicle 2.0
Script(s)
Share N Scribble
Siva’s Chronicle
Snap Judgment
Sorgenkind
Tamil Music and Movie Videos
The Instant Me
TPK Post
Vivek’s Weblog
காப்பகம்
ஏப்ரல் 2009 (10)
மார்ச் 2009 (17)
ஜனவரி 2009 (2)
திசெம்பர் 2008 (1)
நவம்பர் 2008 (8)
ஒக்ரோபர் 2008 (23)
செப்ரெம்பர் 2008 (26)
ஓகஸ்ட் 2008 (17)
ஜூலை 2008 (24)
ஜூன் 2008 (38)
மே 2008 (44)
ஏப்ரல் 2008 (22)
மார்ச் 2008 (45)
பிப்ரவரி 2008 (42)
ஜனவரி 2008 (77)
திசெம்பர் 2007 (75)
நவம்பர் 2007 (101)
ஒக்ரோபர் 2007 (68)
செப்ரெம்பர் 2007 (40)
ஓகஸ்ட் 2007 (60)
ஜூலை 2007 (79)
ஜூன் 2007 (92)
மே 2007 (117)
ஏப்ரல் 2007 (49)
மார்ச் 2007 (92)
பிப்ரவரி 2007 (141)
ஜனவரி 2007 (187)
திசெம்பர் 2006 (85)
நவம்பர் 2006 (141)
ஒக்ரோபர் 2006 (141)
செப்ரெம்பர் 2006 (145)
ஓகஸ்ட் 2006 (95)
ஜூலை 2006 (16)
ஜனவரி 2006 (1)
E-Tamil Marks
Top Posts
Vai Mu Kothai Nayagi - Notable Women series in Kumudham: Thiruvengimalai Sarvanan
Dinamalar 'Andhumani' Ramesh vs Dinakaran & Sun TV Uma - Saga, Sexual Harassment
Pasumpon Muthuramalinga Thevar - Biosketch, History
Director Vittalacharya: Jeganmohini - Tamil Movie History
Ven Kushtam? Disorder Awareness - Melanin deficiency
'Selvi' actress Devi Priya Marriage - Allegations & dispelling the arguments
Mooligai Corner: Herbs & Naturotherapy - Parpadagam
Actor, Politician 'Nizhalgal' Chandrasekar - Biosketch
Tamil New Year: Thai Pongal or Chithirai First Day? - S Ramachandran
Tamil Actor Kamalahassan: Life story, Biography, Movie History - Dinathanthi
அண்மைய பின்னூட்டங்கள்
The Witchy Angel: Top Bloggers… இல் Best 3D Printer
Pillaimaar: Ira Manikandan இல் sankaran
The Witchy Angel: Top Bloggers… இல் 918kiss hack
Thatstamil.com – Sun TV… இல் Www.Hamcar.Org
Thatstamil.com – Sun TV… இல் Http://Hnhp.Cnrs.Fr
Thatstamil.com – Sun TV… இல் Www.Biancanevehotelr…
Thatstamil.com – Sun TV… இல் https://Gdrjc2A.Math…
Thatstamil.com – Sun TV… இல் Backlink analysis to…
Thatstamil.com – Sun TV… இல் Paint brushes
Thatstamil.com – Sun TV… இல் bandarq online terpe…
Thatstamil.com – Sun TV… இல் poker 24 jam
Thatstamil.com – Sun TV… இல் Www.topfind.de
Thatstamil.com – Sun TV… இல் How to build a bitco…
Thatstamil.com – Sun TV… இல் fx시티
Thatstamil.com – Sun TV… இல் Thạch Cao Minh Châu
பக்கங்கள்
About
Links – Tamil Blogs & Font Typing Help
Not able to view the Tamil Pages?
Top Clicks
bsubra.files.wordpress.co…
tamilgossips.blogspot.com…
bsubra.files.wordpress.co…
bsubra.wordpress.com
திசெம்பர் 2021
தி
செ
பு
விய
வெ
ச
ஞா
1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
« ஏப்
Latest from Tamil Blogs
ஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.
Blog Stats
2,966,282 hits
மேல்
பதிவு செய்
உள்நுளை
Entries feed
கருத்துகள் ஊட்டம்
WordPress.com
Archive for the ‘Taj mahal’ Category
Mayavathi’s corruption supported by TR Balu with Congress Blessings – Presidential Elections
Posted by Snapjudge மேல் ஜூன் 11, 2007
அரசியல் பேரமா, அதிகார துஷ்பிரயோகமா?
மத்தியில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை என்கிற நிலைமை 1989-ல் எழுந்தது முதல் அரசியல் என்பது தினசரிப் பேரங்களுக்கு உட்பட்ட வியாபாரமாகிவிட்டது என்பதுதான் யதார்த்த நிலைமை. அமைச்சர் பதவியைப் பெறுவது முதல் எந்தவொரு விஷயத்திலும் எனக்கு இவ்வளவு, உனக்கு இவ்வளவு என்கிற வகையில்தான் ஆட்சியில் அமரும் கூட்டணிக் கட்சிகள் செயல்படுகின்றன என்பது ஊரறிந்த உண்மை.
உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறி இருப்பது இந்த வியாபார நாடகத்தில் மற்றுமொரு காட்சி. முதல்வர் மாயாவதியின் மீது வழக்குத் தொடர மத்தியப் புலனாய்வுத் துறைக்கு மாநில ஆளுநர் ராஜேஸ்வர் அனுமதி மறுத்திருப்பது வேடிக்கையாக இருந்தாலும், அது ஒரு வாடிக்கையான விஷயம்தான் என்றுதான் கொள்ள வேண்டும். குடியரசுத் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரிக்க மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தரப்பட்டிருக்கும் விலைதான் இது என்பது பள்ளிக் குழந்தைக்குக்கூடத் தெரியும்.
இந்தியாவின் புராதன சரித்திரச் சின்னங்களாகக் கருதப்படும் இடங்களைப் பாதுகாக்க 1958-ல் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம், புராதனச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைச் சுற்றிலுமுள்ள நூறு மீட்டர் தூரத்திற்கு எந்தவித கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அந்த சரித்திரச் சின்னங்கள் சிதைந்து விடாமல் இருக்கவும், அதன் அழகு கெட்டுவிடாமல் இருக்கவும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது. இந்தச் சட்டத்தை முறையாக அமல் நடத்தும் பொறுப்பு இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்திடமும் (Archeaological Survey of India), மத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகத்திடமும் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான் அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன் உத்தரப்பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி, தாஜ் கலாசார வணிகவளாகம் (Taj Heritage Corridor்) என்கிற பெயரில் தாஜ்மஹாலைச் சுற்றியும் ஆக்ரா கோட்டையைச் சுற்றியும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் வணிக வளாகம் அமைத்து மாநில அரசின் வருவாயை அதிகரிக்கும் திட்டம் ஒன்றைத் தீட்டினார். சுமார் 175 கோடி ரூபாய் முதலீட்டில் நிறைவேற்றப்பட இருந்த இந்த வணிக வளாகத்துக்கு, அன்றைய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு அனுமதியும் வழங்கினார் என்பதுதான் குறிப்பிடத்தக்க விஷயம்.
மத்திய அரசு தனது பங்குக்கு முதல் தவணையாக சுமார் 17 கோடி ரூபாயை இந்த வணிக வளாகத் திட்டத்திற்கு வழங்கியது. அதுவும் எப்படி? முறையாக எந்தவிதத் திட்ட வரைமுறைகளும் மத்திய அரசுக்கு அனுப்பப்படாமல், சுற்றுச்சூழல் அமைச்சரகமும் எந்தவொரு சோதனைகளையும் நடத்தாமல், மாயாவதியின் நிர்பந்தத்தின் பேரில் பணம் தரப்பட்டு, வேலையும் தொடங்கியது. தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் எச்சரிக்கைகள் சட்டை செய்யப்படவில்லை.
இந்த நிலையில் விஷயம் உச்ச நீதிமன்றத்தை அடைந்தது. தாஜ்மஹாலின் அழகைக் கெடுக்கும் வண்ணம் அந்த நினைவுச் சின்னத்தைச் சுற்றி வணிக வளாகம் எழுப்பப்படுகிறது என்று சுற்றுச்சூழல் பாதுகாவலர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட, இந்தத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது நடந்திருக்கிறதா என்று உச்ச நீதிமன்றம் மத்திய ஊழல் தடுப்புக் கமிஷனை விசாரிக்க, அதன் விளைவாகத்தான் இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த வழக்கை மூடி மறைக்க மத்தியப் புலனாய்வுத் துறை 2005-ல் முயன்றும் அது முடியாமல் போய்விட்டது. இப்போது, மாயாவதியின் மீதும், அவரது அன்றைய அமைச்சரவை சகா நஜீமுதீன் சித்திக் மீதும் எத்தகைய குற்றமும் தனக்குத் தென்படவில்லை என்று கூறி, இந்த விசாரணையை மேலும் தொடரவோ, வழக்குப் போடவோ மத்தியப் புலனாய்வுத் துறைக்கு அனுமதி வழங்க ஆளுநர் ராஜேஸ்வர் மறுத்திருக்கிறார்.
முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சிக்கு ஆளுநர் துணை போயிருக்கிறார். ஆளுங்கட்சியின் குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளரை ஆதரிக்க சோனியா காந்திக்கும், உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதிக்கும் இடையே நடைபெற்றிருக்கும் இந்தப் பேரத்தில் களங்கப்பட்டிருப்பது ஆளுநரின் மரியாதை.
அதிகார துஷ்பிரயோகம் என்று வரும்போது அது ஆளுநராக இருந்தால் என்ன ஆட்சியாளர்களாக இருந்தால் என்ன? அரசியல் பேரத்தில் இதுவும் ஒரு பரிணாமம் என்று கருதி நம்மை நாமே தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை!
———————————————————————————————-
கட்சித் தொண்டர்கள் வழங்கிய பணத்தில் சேர்ந்தது எனது ரூ. 52 கோடி சொத்து: உ.பி. முதல்வர் மாயாவதி
லக்னெü, ஜூன் 28: தன்பேரில் உள்ள ரூ. 52 கோடி சொத்து பகுஜன் சமாஜ் கட்சித்தொண்டர்கள் நன்கொடையாக அனுப்பிய பணத்தில் சேர்க்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி.
தனக்கு ரூ. 52 கோடி சொத்து இருப்பதாக மாநில சட்ட மேலவை உறுப்பினர் பதவி தேர்தலுக்கான வேட்பு மனுவில் அளித்த தகவலில் முதல்வர் மாயாவதி கூறியது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் இந்த விளக்கத்தை தந்துள்ளார் மாயாவதி.
நிருபர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது: இதற்கு முன்னர் தொண்டர்கள் நன்கொடையை கட்சிக்கு அனுப்பினார்கள். இப்போது என்னிடம் பணம் இல்லை என்று கருதி எனக்கு நேரடியாக அனுப்புகிறார்கள். அந்த பணத்தை முதலீடு செய்யலாம். அல்லது தில்லியில் பங்களா கூட கட்டலாம். அந்த அளவுக்கு எனக்கு அவர்கள் சுதந்திரம் தந்துள்ளனர்.
நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. வரி அனைத்தையும் கட்டி வருகிறேன். எல்லா விவரமும் வருமான வரிக்கணக்கில் உள்ளன. வருமான வரி விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள நான் அப்பீல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் ஆதாரம் இல்லாதது.
முலாயம் அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை: முலாயம் சிங் தலைமையிலான முந்தைய அரசில் நடந்த தானிய விநியோக ஊழல் பற்றி விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. 28 மாவட்டங்களில் இந்த ஊழல் நடந்துள்ளது. இதை சிறப்பு விசாரணைக் குழு ஆராயும். இந்த முறைகேடு பற்றி 3 மாதங்களில் அந்த குழு அறிக்கை தாக்கல் செய்யும்.
ஊழலில் போக்குவரத்து காண்ட்ராக்டர்களுக்கு தொடர்பு இருந்ததா? வேறு மாநிலங்களுக்கு உணவு தானியங்கள் திருப்பிவிடப்பட்டதா? என்பது குறித்தும் விசாரணைக் குழு ஆராயும்.
அமைச்சர் மிஸ்ரா விலகுகிறார்: மாநில அமைச்சரும் கட்சியின் பொதுச்செயலருமான எஸ்.சி.மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறார். 2009-ல் மக்களவைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில் நாடு முழுவதிலும் உள்ள உயர் சாதியினரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஈர்க்கும் பணியில் மிஸ்ரா ஈடுபடுவார்.
அமைச்சர் பதவியில் அவருக்கு நாட்டம் இல்லவே இல்லை. நான் அவரை கட்டாயப்படுத்தி அமைச்சர் பதவி வழங்கினேன். இன்னும் சில மாதங்கள் மட்டுமே அவர் அமைச்சர் பதவியில் இருப்பார். ஆரம்பத்தில் அவரிடம் இருந்து சட்ட ஆலோசனைகள் உள்பட பலதரப்பட்ட ஆலோசனைகள் எனக்கு தேவைப்படுகிறது.
மிஸ்ரா குடும்பத்தாருக்கு நான் எந்த சலுகையும் காட்டவில்லை. இது பற்றி பத்திரிகைகள் தவறான தகவல்களை வெளியிடுகின்றன.
கஷ்டமான கால கட்டத்தில் எனக்கு உதவியுள்ளார் மிஸ்ரா. அவரது சகோதரிக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் பதவியும், மைத்துனருக்கு மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியும் அளித்ததில் தவறில்லை. அவர்களின் தியாகத்துக்கு நான் தந்த வெகுமதி அது.
மிஸ்ரா எனக்கு எதிரான வழக்குகளில் ஆஜரானபோது, அவரது தந்தை நோய்வாய்ப்பட்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக இருந்து இருவரும் அவரை கவனித்துக் கொண்டதால் எனக்கு எதிரான வழக்கில் மிஸ்ரா ஆஜராக முடிந்தது. அதற்கு வெகுமதியாக அந்த இருவருக்கும் பதவி அளித்தேன். இதில் தவறு இல்லை.
மேலும் பதவி நியமனம் என்பது எனக்கு உள்ள சிறப்புரிமை. இதில் எனக்கு ஆணையிட பத்திரிகைகளுக்கு என்ன உரிமை உள்ளது என்றார் மாயாவதி.
Posted in abuse, Alagiri, Alakiri, Alliance, APJ, Archeaological Survey of India, ASI, Azagiri, Azakiri, Azhagiri, Baalu, Balu, Bribery, Bribes, Business, CBI, Coalition, Cong (I), Cong(I), Congress, Congress (I), Congress Party, Congress(I), Corruption, DMK, Environment, Governor, Interrogation, Investigation, Kalam, kickbacks, Law, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, nexus, Order, Party, Pollution, Power, President, support, Taj Heritage Corridor, Taj mahal, Tajmahal, TR Balu, UP, Uttar Pradesh, UttarPradesh | Leave a Comment »
Mayawati takes Uttar Pradesh – Biosketch
Posted by Snapjudge மேல் மே 11, 2007
உ.பி.யில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி: பள்ளி ஆசிரியையாக பணி புரிந்தவர்
லக்னெü, மே 12: இந்தியாவின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் நான்காவது முறையாக முதல்வராகிறார் மாயாவதி (51).
இவர் பகுஜன் சமாஜ் கட்சியை (பிஎஸ்பி) நிறுவிய கான்சி ராமின் நிழலில் வளர்ந்தவர். அவரிடம் இருந்து அரசியல் பாடம் கற்றவர். எதிரிகளின் கூட்டணியை தனி ஆளாக நின்று சமாளித்தவர்.
உ.பி. சட்டப் பேரவைக்கு நடந்து முடிந்த தேர்தலில் பிராமண வகுப்பைச் சேர்ந்த 94 பேருக்கு வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு தந்தார். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார்.
முந்தைய மூன்று முறையும் கூட்டணி ஆட்சியை நடத்திய மாயாவதி, தற்போது அசுர பலம் பெற்று கூட்டணி தயவு தேவை இல்லை என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்.
தில்லியில் தபால்-தந்தி துறை ஊழியரின் மகளாக பிறந்த மாயாவதி, உ.பி.யின் முதல்வராக 1995-ல் அரியணை ஏறினார். அப்போது அவரால் 4 மாதமே பதவியில் நீடிக்க முடிந்தது. சமாஜவாதி கட்சியின் முலாயம் சிங்குடனான கூட்டணி திடுமென முடிந்ததே அதற்கு காரணம்.
பின்னர் இரண்டாவது முறையாக 1997-ல் முதல்வரானார். இம்முறை 6 மாதங்களுக்குத் தாக்குப்பிடித்தார். அப்போது பாஜகவுடன் “விரும்பத்தகாத’ ஒப்பந்த அடிப்படையில் ஆட்சி பொறுப்பேற்றார். ஒப்பந்தம் முறிவுக்கு வந்ததால் மாநிலத்தில் அரசியல் குழப்பமே மிஞ்சியது.
ஊழல் வழக்கில் சிக்கியதால் ராஜிநாமா
மூன்றாவது முறையாக 2002-ல் முதல்வரானார். பாஜகவின் ஆதரவுடன் 18 மாதங்கள் ஆட்சி செய்தார். இருப்பினும் தாஜ் வணிக வளாக ஊழல் வழக்கில் சிக்கி உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளானதை அடுத்து 2003-ல் தனது பதவியை ராஜிநாமா செய்ய வேண்டிய நிர்பந்தம் மாயாவதிக்கு ஏற்பட்டது.
மாயாவதிக்கு 6 சகோதரர்கள், 2 சகோதரிகள் உள்ளனர். பள்ளி பருவத்திலேயே பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டார். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு சிறு வயது முதலே இருந்தது.
தில்லியில் 1977 முதல் 1984வரை பல்வேறு அரசு பள்ளிகளில் ஆசிரியையாக பணியாற்றியுள்ளார். அப்போதே பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஊழியர் கூட்டமைப்பின் செயல்பாடுகளிலும் தன்னை இணைத்துக்கொண்டார்.
1984 முதல் தீவிர அரசியல்
1984-ம் ஆண்டு தனது ஆசிரியைப் பணியை விட்டுவிட்டு முழு நேர அரசியலில் இறங்கினார். கான்சி ராம் தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, 1984 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றார். அதன்பிறகு நடைபெற்ற 2 இடைத் தேர்தல்களிலும் தோற்றார்.
இருப்பினும் மனம் தளராமல் 1988-ல் மூன்றாவது முறையாக பிஜ்னூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மக்களவைக்குள் நுழைந்தார். 1994-ல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக உரக்க குரல் கொடுத்தார்.
கல்லூரி நாள்களில் மேல்சாதி மாணவர்கள் அவரை ஏளனமாக நடத்தியதாக கூறப்படுகிறது. இதனாலேயே அவருக்கு தாழ்த்தப்பட்டவர்கள், பலவீனப் பிரிவினருக்காக போராட வேண்டும் என்ற வேகம் பிறந்ததாம். தில்லி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாயாவதி, சட்டப்படிப்பையும், பின்னர் மீரட் பல்கலைக்கழகத்தில் பி.எட். படிப்பையும் முடித்தார்.
———————————————————————-
வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கியத்துவம் – ஊழல், குற்றம், அச்சம் அடியோடு ஒழிக்கப்படும்: மாயாவதி
லக்னெü, மே 12: உத்தரப் பிரதேசத்தில் ஊழல், கிரிமினல்கள் அடியோடு ஒழிக்கப்படும் என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்தார்.
தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ள மாயாவதி, லக்னெüவில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் அச்சமின்றி வாழவும், ஊழல், குற்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்காத வகையில் புதிய அரசு ஆட்சி புரியம். அதேசமயம் மாநிலத்தின் வளர்ச்சிப் பணிகளுக்கு போர்க்கால அடிப்படையில் முன்னுரிமைத் தரப்படும். இத்தேர்தலில் உயர்சாதியினரும், முஸ்லிம்களும் பகுஜன் சமாஜுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இம்முறை முஸ்லிம்கள் அதிக அளவில் எங்களுக்கு வாக்களித்துள்ளனர்.
சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மக்கள் பகுஜன் சமாஜுக்கு வாக்களித்துள்ளனர். மாஃபியா, தீவிரவாத மற்றும் காட்டு ராஜாக்களின் ஆதிக்கம் இத்தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளன. ஜனநாயகத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வீண்போகவில்லை. தேர்தல் ஆணையம் சுதந்திரமான நேர்மையான தேர்தலை நடத்தியுள்ளது என்றார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து விசாரணை
உ.பி.யில் சமாஜவாதி ஆட்சியில் இருந்தபோது நடந்த அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்தும் விசாரணை நடத்த உத்தரவிடப்படும் என்று மாயாவதி தெரிவித்தார்.
இது அரசியல் ஆக்கப்படமாட்டாது; எதிரிகள் மீதான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையும் அல்ல. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளையே நாங்கள் நிறைவேற்ற உள்ளோம். வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்த ஆசாம் கான், தனது அலுவலகத்தில் இருந்த அனைத்து ஆவணங்களையும் அழித்துவிட்டதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்றார். முலாயம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “ஏற்கெனவே அவர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இறந்தபோனவரை மீண்டும் கொல்லமுடியாது. மக்கள் அவருக்கு தண்டனை வழங்கிவிட்டனர்’ என்றார்.
———————————————————————————-
உத்தரப் பிரதேச முதல்வரானார் மாயாவதி: 50 உறுப்பினர்களுடன் அமைச்சரவை பதவிஏற்பு
லக்னௌ, மே 14: உத்தரப் பிரதேச முதல்வராக மாயாவதி (51) பதவி ஏற்றுக்கொண்டார்.
அவருடன் 50 உறுப்பினர்கள் கொண்ட மிகப் பெரிய அமைச்சரவையும் பதவி ஏற்றது.
உ.பி. முதல்வராக நான்காவது முறையாக பதவி ஏற்றுள்ள மாயாவதி, இம்மாநிலத்தின் 40-வது முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. பதவி ஏற்பு விழா, ஆளுநர் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் மிகவும் எளிமையாக நடைபெற்றது. மாயாவதி உள்பட அமைச்சரவை உறுப்பினர்களுக்கு ஆளுநர் டி.வி. ராஜேஸ்வர் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.
முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான முலாயம் சிங் யாதவ், மாநில காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் உள்ளிட்ட அக் கட்சித் தலைவர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
பதவி ஏற்பு முடிந்ததும் மாயாவதி தனது பெற்றோரை ஆளுநருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
பகுஜன் சமாஜ் கட்சிக்கு பிராமணர்களின் ஆதரவைப் பெற்றுத்தர முக்கிய காரணமாக இருந்த அக் கட்சியின் பொதுச் செயலர் சதீஷ் சந்திர மிஸ்ர மட்டும் பதவி ஏற்பு நிகழ்ச்சியின்போது மேடையில் மாயாவதியுடன் அமர்ந்திருந்தார்.
பகுஜன் சமாஜ் தேசிய செயலர் சித்திக், மாநிலத் தலைவர் லால்ஜி வர்மா, மூத்த தலைவர்கள் சுவாமி பிரசாத் மெüர்யா, முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆகியோருக்கும் அமைச்சரவையில் இடம் தரப்பட்டுள்ளது.
நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலம் பெற்று, 14 ஆண்டுகளுக்குப் பின் கூட்டணி கட்சிகளின் தயவை நாடாத தனி ஒரு கட்சியின் ஆட்சியை ஏற்படுத்தியுள்ளார் மாயாவதி.
தேர்தலில் மேல்சாதியினருக்கும் வாய்ப்பளித்து வெற்றிக்கொடி நாட்டிய மாயாவதி, அமைச்சரவையில் மேல்சாதியினர் பலருக்கும் இடம் அளித்துள்ளார்.
7 பிராமணர்கள், 6 தாக்கூர்கள், 5 முஸ்லிம்கள், யாதவ குலத்தைச் சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் இடமளித்துள்ளார்.
50 பேர் கொண்ட மிகப்பெரிய அமைச்சரவையில் 19 பேர் கேபினட் அந்தஸ்துடையவர்கள்; 21 இணை அமைச்சர்களுக்கு தனிப்பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது; 9 பேர் இணை அமைச்சர்கள்.
மாநிலத்தின் 40-வது முதல்வர்
1993-ல் உ.பி. முதல்வராக மாயாவதி பொறுப்பேற்ற போது இந்தியாவின் முதல் தலித் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார். நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உ.பி.யில் முதல்வர் பதவி ஏற்கும் 40-வது முதல்வர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்துள்ளது.
என்.டி. திவாரிக்கு இணையாக..
உ.பி.யில் காங்கிரஸ் தலைவர் என்.டி. திவாரி 4 முறை முதல்வர் பதவியை வகித்துள்ளார். அவருக்கு இணையாக மாயாவதியும் 4-வது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்றுள்ளார்.
தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் மாயாவதி, இன்னும் 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவை உறுப்பினராகவோ மேல்சபை உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பகுஜன் சமாஜ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக சனிக்கிழமை ஒருமனதாக மாயாவதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அவரை ஆட்சி அமைக்க அழைத்தார் ஆளுநர்.
403 உறுப்பினர்களைக் கொண்ட உ.பி. சட்டப்பேரவையில், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 206 இடங்கள் கிடைத்துள்ளன.
———————————————————————————————————
ஆட்டம் போட்டவர்கள் கொட்டம் அடங்கியது
லக்னோ:உ.பி.,யில் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்ட அதிகாரிகளின் கொட்டம் அடக்கப்பட்டது.
முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பந்தாடினார் மாயாவதி. மேலும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையிலுள்ள உயர் வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு சலுகை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
உ.பி., முதல்வராக நேற்று பதவியேற்ற உடன் மாயாவதி, நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உ.பி., சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், முலாயம் சிங் தலைமையிலான அரசு எடுத்த நிர்வாக முடிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும்.
இதில், ஜாகர் பல்கலைக் கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து அளித்தது,
அரிசி மற்றும் பருப்பு வகைகளை ஏற்றுமதி செய்ய உத்தரவு பிறப்பித்தது,
ஷாபி கிராமத்துக்கு (முலாயமின் சொந்த கிராமம்) ரூ.10 கோடி ஒதுக்கியது ஆகிய நிர்வாக முடிவுகள் உட்பட பல முடிவுகள் ரத்து செய்யப்படும்.
மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கும். கிரிமினல்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்படுகிறது.
முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்ட துப்பாக்கி லைசென்சுகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்படுகிறது.
எனது அரசு, அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கவில்லை. மாநிலத்தின் நலனே அனைத்திலும் முதன்மையானது.
சமாஜ்வாடி பொதுச்செயலர் அமர் சிங் தலைமையிலான உ.பி., மேம்பாட்டு கவுன்சில் கலைக்கப்படுகிறது.
அம்பேத்கர் பூங்காவை முறையாக பராமரிக்காத இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்.
உயர் வகுப்பினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.
இவ்வாறு முதல்வர் மாயாவதி கூறினார்.உ.பி., மேம்பாட்டு கவுன்சில் மூலம் தான் நடிகர் அமிதாப் பச்சன், மாநிலத்தின் விளம்பர மாடலாக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும், பல கலாசார நிகழ்ச்சிகள் பல கோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்டிருந்தன. தற்போது, இதற்கு மூடு விழா காணப்பட்டுள்ளது.
இந்த கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து அமர் சிங் நேற்று முன்தினமே ராஜினாமா செய்து விட்டார். பதவியேற்ற முதல் நாளே பல ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றி முதல்வர் மாயாவதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முலாயம் சிங்கின் நண்பரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் தாத்ரி மின் திட்டம் தொடருவது குறித்து முதல்வர் மாயாவதி எதிர்ப்பாக எதுவும் கூறவில்லை. “இப்போது தான் பதவியேற்றுள்ளேன். இது குறித்து பதிலளிக்க இப்போது முடியாது’ என்று கூறி விட்டார்.
அதுபோல, ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்ற கேள்விக்கு நேரடியாக பதிலளிக்க மறுத்து விட்டார். “இப்போது தான் முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளேன். இந்த விஷயத்தில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. முடிவு எடுக்கப்பட்ட பின், உங்களிடம்(நிருபர்கள்) கண்டிப்பாக கூறுவேன்’ என்று மாயாவதி தெரிவித்து விட்டார்.
நிருபர்களுக்கு பேட்டி அளித்து முடித்த உடன், உ.பி.,யில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வந்த 100க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் பி.பி.எஸ்., அதிகாரிகளை அதிரடியாக இடம் மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இவர்கள் முலாயம் சிங் ஆட்சியில் ஆட்டம் போட்டவர் கள் என்று பகுஜன் சமாஜ் கட்சி தரப் பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தவிர கேபினட் செயலர் என்ற புதிய பதவியையும் மாயாவதி உருவாக்கியுள்ளார்.
எம்.எல்.ஏ., தாராளம்:
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய எம்.எல்.ஏ., சுபாஷ் பாண்டே. இவர், தனது எம்.எல்.ஏ., பதவிக்கான சம்பளம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தையும் பதவிக்காலம் முடியும் வரை புற்றுநோய் மற்றும் பிற கொடிய நோய்களால் பாதிக்கப்படும் மக்களுக்காக அளிக்க முன்வந்துள்ளார். “தேர்தலில் வெற்றி பெற்றால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன் என்று கடவுளிடம் உறுதி கூறியிருந்தேன். அதன்படி இப்போது அறிவிப்பு செய்துள்ளேன்’ என்று சுபாஷ் பாண்டே கூறினார்.
————————————————————————————————–
மாயாவதிக்கு சாதனை, காங்கிரஸýக்கு சோதனை
நீரஜா செüத்ரி:
தமிழில்- ஜி.கணபதி
மாயாவதி பிறரது ஆதரவு இன்றித் தனித்து நின்றே வெற்றி பெற்றுள்ளார். இது இந்தியா முழுவதும் உள்ள தலித்துகளை உற்சாகமூட்டித் தட்டி எழுப்பப் போகிறது.
சமூகத்தில் நசுக்கப்பட்ட தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி, இந்தியாவிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தைக் கட்டி ஆளப்போகிறார்.
இது அரசியல் அம்சங்களையும் சமூக உறவையும் மாற்றப் போகிறது. மாயாவதிக்குக் கிடைத்த வெற்றி இந்திய அரசியல் இனி என்ன வடிவத்தை எடுக்கும் என்பதை நிர்ணயிக்கக் கூடியது.
தலித்துகள், பிராமணர்களை உள்ளடக்கி மாயாவதி அமைத்த வெற்றிக் கூட்டணியில் முஸ்லிம்களும் மிகவும் பிற்பட்ட வகுப்பினரும் இணைந்தனர். இத்தகைய கூட்டணி புதிது அல்ல. 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் இருந்துள்ளது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக நிருபர்களிடம் பேசும்போது, தனக்கு உறுதுணையாக இருந்த
சதீஷ் சந்திர மிஸ்ர (பிராமணர்),
நசீமுதீன் சித்திக்கி (முஸ்லிம்),
பாபு சிங் குஷ்வஹா (மிகவும் பிற்பட்ட வகுப்பு) ஆகியோருக்குத் திறந்த மனதுடன் வெளிப்படையாக நன்றி தெரிவித்தன்மூலம் இது பல வண்ணக் கூட்டணி என்பதை மாயாவதியே ஒப்புக்கொண்டுள்ளார். பேட்டியின்போது அவர்களைத் தனக்குப் பக்கத்திலும் அமரச் செய்திருந்தார்.
கடந்த காலங்களில் காங்கிரஸ் வசம் பிராமணர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். ஆனால் சாதி கண்ணோட்ட அடிப்படையில் அது அமையவில்லை.
அயோத்தி இயக்கம் உச்சகட்டத்தில் இருந்தபோது தம் பக்கமாக பிராமணர்கள் கவர்ந்திழுக்கப்பட்டிருந்தபோதிலும் உயர்சாதி உணர்வை வெளிப்படையாகத் தட்டி எழுப்பி ஆதாயம் தேட பாஜக முயற்சி செய்யவில்லை.
ஆனால் இப்போதுதான் பிராமணர்கள் வகுப்பு அடிப்படையில் வெளிப்படையாக ஈர்க்கப்பட்டுள்ளனர். பிராமணர்கள் மாநாட்டை, மாவட்ட நிலையில் நடத்திய மாயாவதி லக்னெüவில் மாபெரும் மாநாடு ஒன்றையும் நடத்தினார்.
இப்போதைய முக்கிய கேள்வி இதுதான். பாஜகதான் பிராமணர்களின் புகலிடமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த உயர் சாதியினர், மாயாவதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனரே? இது ஏன் என்பதே.
பாஜகவை விட்டு விலகி உயர்சாதியினர் நீண்ட தொலைவு சென்று விட்டனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இல்லையெனில் பாஜகவின் 2002 தேர்தல் வெற்றி முடிவுடன் ஒப்பிடுகையில் தற்போதைக்கு அதன் வெற்றிக் கணக்கு பாதியாகக் குறைந்திருக்காதே.
சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று மேல்சாதியினர் விரும்பினர். மேலும் அந்தக் கட்சிக்கு மாற்றாக மாயாவதியைக் கருதினர். உயர்சாதியினரை அலறவைத்த குண்டர்கள் ராஜ்ஜியம், பாதுகாப்பின்மை போன்ற பிரச்சினைகளை நன்கு புரிந்துவைத்திருந்தார் மாயாவதி.
ஆரம்பம் முதலே முலாயம், அமர்சிங் ஆகியோரைக் கடுமையாகச் சாடி வந்தார் மாயாவதி. ஆனால், பாஜகவோ சமாஜவாதி மீது மெத்தனம் காட்டியது. இதை பாஜக தலைவர்களே ஒப்புக்கொண்டுள்ளனர்.
2003-ல் முலாயம்சிங் தலைமையில் ஆட்சி அமைய உதவியது, பகுஜன் சமாஜ கட்சி இரண்டாக உடைந்தபோது அதை அப்போதைய சட்டப்பேரவைத் தலைவரான கேசரிநாத் திரிபாதி (பாஜக) அங்கீகரித்தது ஆகியவை உயர்சாதியினர் மத்தியில் சந்தேகம் எழ வைத்தது. உள்ளுக்குள் சமாஜவாதி கட்சியுடன் பாஜக ரகசிய உறவை வைத்துக்கொண்டதோ என்ற கண்ணோட்டம் ஏற்படச் செய்தது. தாங்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் பலவீனப்படுத்தப்படுவதாகவும் அநீதி இழைக்கப்படுவதாகவும் பிராமணர்கள் வேதனைப்பட ஆரம்பித்தனர்.
தலித்துகள், ஜாட் வகுப்பினர், யாதவர், குர்மிஸ் ஆகிய எல்லா வகுப்பினருக்குமே அரசியல் புகலிடம் உள்ளது. சமாஜவாதியின் அமர்சிங், வெளிப்படையாகவே, தாக்குர் வகுப்பினர் நலனுக்காகப் பாடுபட்டார். ஆனால் பிராமணர்கள் பற்றி யாரும் வாய் திறந்ததில்லை. அதைத் தமக்கு ஆதரவாகப் பயன்படுத்திய மாயாவதி “சர்வஜன சமாஜ்’ பற்றிப் பேச ஆரம்பித்தார்.
இந்நிலையில், பிராமணர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற தலைவராக சதீஷ் சந்திர மிஸ்ர உயர்ந்தார்.
வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் சிறந்த பிராமணத் தலைவராகக் கருதப்பட்ட வாஜபேயியையும் மிஞ்சினார் மிஸ்ர.
மாயாவதியுடனான அவரது நெருக்கம், செல்வாக்கு ஆகியவற்றால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவாவது மாநிலத்தை ஆட்சி செய்ய வழி கிடைத்துள்ளது என்ற எண்ணம் பிராமணர்கள் மத்தியில் ஏற்பட்டது.
தாக்குர் இனத்தைச் சார்ந்த ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கும் பாஜகவைவிட விரும்பப்பட்டவரானார் மாயாவதி. லோத் இனத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முதல்வர் வேட்பாளராக நிறுத்தியது பாஜக.
2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு சாதி அடிப்படையில் அரசியல் சமூகம் மண்டல் மயமாகி உள்ளதை முழுமையாகப் பிரதிபலிக்கிறது. பிராமணர்களும் வைசியர்களும் சிறந்த வியூகத்துடன் வாக்களித்துள்ளனர்.
சில வழியில் வகுப்புவாத கண்ணோட்டத்துக்கு சாதி நோக்கம் வலிமை சேர்த்துள்ளது என்று கூறலாம். முஸ்லிம் விரோத பிரசார சி.டி. அல்லது அப்சல் குரு விவகாரம் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கலக்கி ஆதாயம் பெற முயன்றது பாஜக. ஆனால் பலன் இல்லை. என்றாலும் ஹிந்து மத உணர்வைத் தூண்டுவதன் மூலம் பலன் கிடைக்காது என்ற முடிவுக்கு வருவது சரியானதல்ல.
இந்த ஆண்டு பிற்பகுதி வாக்கில் குஜராத்தில் நடக்கவுள்ள தேர்தலில் இது தெரிந்துவிடும்.
மாயாவதியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது மக்கள் நாடித்துடிப்பை அறிந்து சமூக சக்திகளை ஒன்றிணைத்து அவர் வகுத்த கூட்டணி.
வெற்றி பெற்றாக வேண்டும் என்ற மனோதிடமும் அவரிடம் ஓங்கிக் காணப்பட்டது. 3 ஆண்டுகளுக்கு முன்பே பிரசாரத்தைத் தொடக்கிய அவர் நன்கு திட்டமிட்டு தொகுதி, தொகுதியாகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
இத்தகைய நடவடிக்கைகளில் பாஜகவும் காங்கிரஸýம் தேர்தலுக்கு 6 வாரங்களுக்கு முன்புதான் இறங்கின. மேலும் வேட்பாளர்கள் தேர்வைப் பிறரைவிட முன்கூட்டியே முடித்துவிட்டார் மாயாவதி.
பாரம்பரியமாகத் தமக்கு ஆதரவு தந்து வந்தவர்களின் மன கண்ணோட்டம் பற்றித் தப்புக்கணக்கு போட்டது பாஜக. தனக்கு ஆதரவாக ஹிந்துக்களை அணி திரள வைக்கவும் அது தவறிவிட்டது. கணிசமான முஸ்லிம்கள் முலாயம் நோக்கி அலறி அடித்து ஓடும் வகையிலும் செயல்பட்டது. இவை, முலாயமின் வேகமான வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த உதவியுள்ளன.
மாயாவதி பெற்றுள்ள வெற்றி இதர மாநிலங்களில் குறிப்பாக, 2008ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தில்லி ஆகிய மாநிலங்களில் தீவிர தொடர்விளைவை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையானது.
தில்லியில் பகுஜன் சமாஜ கட்சி வேர் விட்டுள்ளது. அங்கு அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அதன் செயல்பாடு சிறப்பாக அமைந்ததே காங்கிரஸ் தோல்வியடைய முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
ஜூலையில் நடக்கவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது வேட்பாளரை மாயாவதி ஆதரவுடன் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது. என்றாலும் மாயாவதியின் வளர்ச்சி நாட்டின் பழமையான கட்சியான காங்கிரஸýக்கு தொல்லை தரக்கூடியதுதான்.
———————————————————————————————-
.மாயாவதி வெற்றியின் பின்னணியில் மூன்று முகங்கள்!
உ.பி., சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பெற்ற பிரமாண்டமான வெற்றிக்கு மூன்று பேர் முக்கிய தளபதிகளாகச் இருந்துள்ளனர். இவர்களின் உதவியுடன் பிராமணர்கள், வைசியர்கள் செயல்பட்டதால் கருத்துக் கணிப்புகளை முறியடித்து மாயாவதி வெற்றியை அள்ளிக் குவித்து விட்டார்.
எஸ்.சி.மிஸ்ரா: உ.பி.,யில் சீனியர் வக்கீலாக இருப்பவர் எஸ்.சி.மிஸ்ரா. பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவர். இவருக்கு அரசியல் அனுபவம் சிறிதும் கிடையாது. முன்பு 1976ல் எச்.என்.பகுகுணாவிடம் தேர்தல் மேலாளராக சிறிது காலம் பணியாற்றியுள்ளார். உ.பியில் பகுகுணா செல்வாக்கு மிகுந்த காங்கிரஸ் தலைவர். பின் நீண்ட இடைவெளக்குப் பின் 2004ல் மாயாவதி முதல்வர் பதவியை துறந்த போது, அவரது கட்சியுடன் தன்னை இணைத்து கொண்டார் மிஸ்ரா.
இது குறித்து மிஸ்ராவிடம் கேட்ட போது “தாஜ்மகால் வழக்கில் மாயாவதியை பா.ஜ., மிரட்ட தொடங்கியது. ஆனால், அதற்கு மாயாவதி அடிபணியவில்லை. அவரது போராட்ட குணம் எனக்கு பிடித்து விட்டது. எனவே தீவிர அரசியலில் இறங்கிவிட்டேன்’ என்றார்.
இந்த தேர்தலில் பிராமணர்களின் ஓட்டுகளை கட்சிக்கு பெற்று தரும் பணி மிஸ்ராவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான களப்பணியை 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பேரணி ஒன்றை நடத்தி மிஸ்ரா முதலில் துவக்கினார். “பா.ஜ., “கமண்டல’த்தை விட்டு விட்டு “மண்டல்’ பிரச்னையை கையில் எடுத்து விட்டது. எனவே மாற்று கட்சியை பிராமணர்கள் தேட தொடங்கினர். அவர்களின் எண்ணத்தை நான் பூர்த்தி செய்தேன்’ என்று மிஸ்ரா இப்போது கூறுகிறார்.
அந்த ஆண்டில் மட்டும் பிராமணர்கள் பங்கேற்ற 21 பேரணிகளை நடத்தினார். இது தவிர ஒவ்வொரு தொகுதியிலும், பிராமணர்கள் மற்றும் ஆதிதிராவிட மக்கள் அடங்கிய கமிட்டியையும் உருவாக்கினார். அவரது செயல்பாட்டை அப்போது பலரும் கிண்டல் அடித்தனர். ஆனால், இறுதியில் மிஸ்ரா வெற்றி பெற்று காட்டி விட்டார். இதற்கு பரிசாக மிஸ்ராவை அட்வகேட் ஜெனரலாக, மாயாவதி நியமிக்க உள்ளார்.
“பிராமணரான என்னை இப்பதவிக்கு தேர்ந்தெடுத்தது ஏன்?’ என்று மிஸ்ராவே வினோதமாகக் கேட்கிறார். அதற்கு மாயாவதி பதிலாக “நான் ஜாதியை பார்த்து பதவியை தருவதில்லை. தகுதியை பார்த்து தான் தருகிறேன்’ என்று கூறி விட்டார்.
நசீம்முதீன் சித்திக்: மாயாவதியின் தீவிர விசுவாசி நசீம்முதீன் சித்திக். அரசியல் உலகை தவிர வெளியுலக தொடர்பே இவருக்கு இல்லை. பத்திரிகையாளர்களை பார்த்தால் ஓடி விடுவார். ஒரு வார்த்தை கூட பேச மாட்டார்.இந்த தகுதிகளின் காரணமாகவே மாயாவதியின் நம்பிக்கைக்கு உரியவராக விளங்குகிறார். சித்திக்.
“பேகன்ஜி'(மாயாவதி) சொல்வதை மட்டுமே செய்வார். மாயாவதி 1980ம் ஆண்டுகளில் முதல் முறையாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது, அவருக்கு அறிமுகமானவர் சித்திக். மாயாவதியை பாதுகாக்கும் பொறுப்பு அப்போது அவருக்கு வழங்கப்பட்டது. அது முதல் மாயாவதியின் நிழல் போலவே இருந்து வருகிறார்.
இந்த தேர்தலில் முஸ்லிம்களை கட்சிக்கு பெற்று தரும் பொறுப்பு சித்திக்கிடம் வழங்கப்பட்டது. இதற்காக கட்சியின் முஸ்லிம் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார். முஸ்லிம் உலாமாக்களை சந்தித்து பேசி, அவர்களின் ஆதரவை பெறும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது போன்ற பெரிய பணியை சித்திக் ஏற்பது இதுவே முதல் முறை. இருப்பினும், அதை சிறப்பாகவே செய்தார். முஸ்லிம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சிறு சிறு கூட்டங்கள் நடத்தி ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக செயல்பட்டார். இந்த முயற்சி இறுதியில் அவருக்கு மட்டும் அல்ல, மாயாவதிக்கு வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.
சுதீர் கோயல்: உ.பி.,யில் உயர் ஜாதி வகுப்பை சேர்ந்த தலைவர் சுதீர் கோயல். ஜெய்பிரகாஷ் நாராயணனின் இயக்கத்தில் முதலில் தொடர்பு கொண்டவர் . பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்த, முதல் உயர் ஜாதி வகுப்பு தலைவர் என்ற பெருமைக்கு உரியவர். கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் மற்றும் தலைவர் மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவர்.
டில்லி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தேர்தலில் கட்சியின் செய்தி தொடர்பாளராக சுதீர் கோயல் பணியாற்றினார். பத்திரிகையாளர்களுடன் நெருங்கிப் பழகி, பிற கட்சிகளின் தகவல்களை அறிவது இவரது பணி. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியின் தகவல்களை சிறிது கூட கசிய மாட்டார். அந்த அளவுக்கு உஷார் பேர்வழி சுதீர் கோயல். இது தவிர உ.பி.,யில் ஓரளவுக்கு பெரும்பான்மையாக உள்ள வைஸ்ய சமுதாயத்தினருடன் நெருங்கி பழகும் படி சுதீர் கோயல் கேட்டுக் கொள்ளப்பட்டார்.
இந்த சமுதாயத்தினரில் ஒரு பகுதியினர் சமாஜ்வாடி கட்சிக்கும், மற்றொரு பகுதியினர் பாரதிய ஜனதாவுக்கும் ஆதரவு அளித்து வந்தனர். மாநிலம் முழுவதும் இதே நிலை தான் காணப்பட்டது. மாநிலம் முழுவதும் சுதீர் கோயல் பயணம் செய்து வைஸ்ய சமுதாயத்தினரின் ஆதரவை பகுஜன் சமாஜ் கட்சியின் பக்கம் திருப்பினார்.
குறிப்பாக அலகாபாத் மாவட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பெற்ற வெற்றிக்கு வைஸ்ய சமுதாயத்தினர் அளித்த ஆதரவே காரணம் . “மாயாவதி மட்டுமே தங்களை பாதுகாக்க முடியும் என்ற எண்ணம் வைஸ்ய சமுதாயத்தினரிடம் ஏற்பட்டு விட்டது’ என்று இதற்கு சுதீர் கோயல் விளக்கம் அளித்துள்ளார். இதற்காக கோயலை கேபினட் அமைச்சராக்கியுள்ளார் மாயாவதி.
———————————————————————————————–
“மனுவாதி-மாயாவாதி’ உடன்பாடு!
எஸ். குருமூர்த்தி
“”பத்திரிகைகளை அந்த அம்மா மதிப்பதே இல்லை” என்று நிருபர்கள் புலம்புகின்றனர். உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் தனியொரு கட்சியாகவே பெரும்பான்மையைப் பெற்றுவிட்ட பிறகும் அதே நிலைதான்!
பேட்டி தருமாறு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்கள் விடுத்த அழைப்புகளை ஏற்று பதில்கூட தரவில்லை பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி. அந்த நிறுவனங்கள் தன்னைப் பேட்டி காண அழைப்பு விடுக்காதா என்று ஏங்கும் அரசியல் தலைவர்கள் எத்தனையோ பேர்; ஆனால், மாயாவதி அப்படியல்ல.
“”தேர்தல் அறிக்கை என்று எதையுமே அந்த அம்மா வெளியிடவில்லையே” என்பது சிலரின் அங்கலாய்ப்பு! தேர்தல் களத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், வாக்காளர்களில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏதாவதொரு வாக்குறுதியை அள்ளி வழங்கிக் கொண்டிருந்தன. ஆனால் தன்னைத் தலைவியாக ஏற்றுக்கொண்ட ஏழை மக்களுக்கு, 2 வேளை சாப்பாடு, வறுமைக் கோட்டிலிருந்து விடுபட உற்ற வழி என்ற குறைந்தபட்ச அத்தியாவசியத் தேவைகள் இருந்தபோதிலும் மாயாவதி எந்தவித இலவச அறிவிப்பையும் வெளியிடவில்லை.
“”ஆட்சிக்கு வந்தால், இலவசமாக வண்ணத் தொலைக்காட்சி பெட்டி, புடவை, வேஷ்டி, இலவச கேஸ் ஸ்டவ், கடன் தள்ளுபடி” என்று எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இந்த எல்லாச் சலுகைகளும் தேவைப்படும் நிலையில் உள்ளவர்கள்தான் அவருடைய ஆதரவாளர்கள்.
மற்றவர்கள் இலவசங்களை அறிவித்து ஆசை காட்டினாலும் அந்தப் பக்கம் போக விரும்பாத அளவுக்கு அவர்கள் ஏன் அவருக்குப் பின்னே நின்றார்கள்?
இதற்கான விடை, பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி.) வரலாற்றில் இருக்கிறது. மாயாவதியின் அரசியல் குருவான கான்ஷிராம், சமூகப் படிநிலையில் 5-வது, 6-வது இடத்தில் இருந்த சூத்திரர்களையும் தீண்டத் தகாதவர்களையும் கொண்டு கட்சியை நிறுவினார். தங்களையும் ஏறெடுத்துப் பார்க்க வேண்டும், அங்கீகரிக்க வேண்டும் என்ற அவர்களுடைய ஏக்கம் நூற்றாண்டுகள் பழமைவாய்ந்தது. அவர்களுடைய அந்த ஏக்கமே தன்னுடைய கட்சியின் ஆன்மாவாகத் திகழ்வதை கான்ஷிராம் உறுதி செய்தார். பகுஜன் சமாஜத்தின் ஆன்மாவை இலவச டி.வி.க்கள் மூலமோ, புடவைகள் மூலமோ பிற கட்சிகளால் வாங்கிவிட முடியாது.
அது அவர்களுக்கு வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல; சமூகத்தின் படிநிலையில் முதல் 3 இடங்களில் உள்ள பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோருக்கு எதிரான வெளிப்படையான, வலிமை மிகுந்த ஆயுதமாகும். இந்த 3 சாதியினரையும் மாயாவதி வெளிப்படையாகவே “”மனுவாதிகள்” என்று சாடி வந்தார்.
“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்பதுதான் பி.எஸ்.பி.யின் போர் முழக்கமாகவே இருந்தது. சாதிய அமைப்பு முறையையே ஒழித்துக் கட்டுவேன் என்று கான்ஷிராம் சபதம் செய்தார். கடைசியில், ஒரு பிரிவு சாதிக்கு எதிராக மற்றொரு பிரிவு சாதியினரைக் கொண்டு வலுவான அரசியல் கட்சியை உருவாக்கிவிட்டார்.
சாதிகளை ஒழிக்கப் புறப்பட்ட எல்லா சீர்திருத்த இயக்கங்களுமே இப்படித்தான் கடைசியில் சாதிய அடையாளங்களுடன் முடிந்துள்ளன.
“”கீழ்ச் சாதியினர் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தங்களை வலுப்படுத்திக் கொண்டு மேல்நோக்கி முன்னேறுவதற்கு சாதி என்பது ஜனநாயகத்தில் ஒரு தடையல்ல, ஒரு வாகனம்” என்று அவர் முதலில் உணர்ந்தார். ஜனநாயகம் இல்லாத சமூகங்களில்தான் சாதிய அடையாளம், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தது.
இப்படித்தான் கோபத்திலும் வெறுப்பிலும் பகுஜன் சமாஜ் கட்சி பிறந்தது. அது வளர்ந்தபோது அதன் கோபமும் வளர்ந்தது. வெகுவிரைவிலேயே பகுஜன் சமாஜ் அபார வெற்றி கண்டு, அதன் ஆதரவு சக்திகளிடையே அபார செல்வாக்குப் பெற்றது. ஆனால் பெரும்பான்மை என்ற இலக்கைத் தொட அதற்கு ஒரு பாலம் தேவைப்பட்டது. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற, வெளியில் யாரிடமிருந்து ஆதரவு கிடைக்கும் என்று அது பார்த்தது.
“”லட்சியத்தை நிறைவேற்றப் பேயுடனும் கூட்டு சேர்ந்தாக வேண்டும்” என்பதுதான் ஜனநாயகத்தின் பாலபாடம். பகுஜன் சமாஜ் விஷயத்தில், இதுநாள்வரை அது பேயாகக் கருதிய, தனது எதிரியான “”மனுவாதிகளோடு” கூட்டு சேர வேண்டியது அவசியம் என்று உணரப்பட்டது. இது காரியசாத்தியமில்லாத விஷயமாகவே கருதப்பட்டது. ஆனால் மாயாவதி இதை வெகு எளிதாகச் செய்து முடித்துவிட்டார்.
“”மனு”வாதிகளுக்கும் “”மாயா”வாதிகளுக்கும் உள்ள பொதுவான வேராக ஹிந்து மதம் திகழ்வதை அவர் வலியுறுத்தினார். மேல்சாதியினருக்குக் கடவுளைப் பற்றிய சிந்தனை, பேச்சு எல்லாம் “”போதை தரும் விஷயம்” என்ற பலவீனத்தை அவர் புரிந்துகொண்டார்.
“”பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் வெறும் யானை அல்ல, கணேசப் பெருமான்தான்” என்று ஒரே போடாகப் போட்டார். இணைப்புக்கு ஒரு கடவுள் போதவில்லை, எனவே பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன் (சிவன்) என்ற மூவரையும் உடன் சேர்த்துக் கொண்டார்.
“”அவர்களைச் செருப்பால் அடியுங்கள்” என்று ஒரு காலத்தில் சொன்னதால் மனுவாதிகளுக்கு ஏற்பட்ட மனப்புண்ணுக்கு ஒரே ஒரு செயல்மூலம் மருந்து போட்டுவிட்டார். மனுவாதிகளுக்கும், மாயாவாதிகளுக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட கடவுளர்கள், மத்தியஸ்தர்களாக இருந்தனர்.
மாயாவதியின் இச்செயல் பிராமணர்களை முதலில் திருப்திப்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தில் 14% வாக்குவங்கியான பிராமணர்களை முதலில் வசப்படுத்தியது மாயாவதியின் மிகப் பெரிய வெற்றி.
உத்தரப் பிரதேசத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் “”பிராமண மகாசபை” கூட்டங்களை நடத்தி, ஹிந்துக் கடவுளர்கள் மீது தங்களுக்கிருக்கும் மரியாதையை அவர் வெளிப்படுத்தினார். இப்படித்தான் மனுவாதி-மாயாவாதி (பிராமணர், தலித்) கூட்டணி உருவானது.
பிராமணர்களுக்கு 80 தொகுதிகளையும் பிற மேல்சாதியினருக்குக் கணிசமான தொகுதிகளையும் கூட்டணியில் ஒதுக்கியிருப்பதை ஒவ்வொரு தேர்தல் பிரசாரக் கூட்டத்திலும் மறக்காமல் அவர் கூறினார். இப்படியெல்லாம் கூறவோ, செயல்படவோ காங்கிரஸ், பாரதீய ஜனதா போன்ற கட்சிகளால் கனவிலும் முடியாது. மாயாவதியால் மட்டுமே அப்படிச் செய்யவும் முடியும், அதை பகிரங்கமாகச் சொல்லவும் முடியும்.
இப்படித்தான் பகுஜன் சமாஜின் முக்கிய எதிரிகளாகத் திகழ்ந்த மனுவாதிகள், அவர்களுடைய கூட்டாளிகளானார்கள். தீவிர எதிர்ப்பாளராக இருந்த மாயாவதியை அரவணைக்கும் தலைவராக ஜனநாயகம்தான் மாற்றியது.
உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை இது கட்சிகளின் கூட்டணி இல்லை, சாதிகளின் கூட்டணி. “”குறைந்தபட்ச பொது செயல்திட்டம்” (சி.எம்.பி.) அல்ல, கடவுளர்கள்தான் இங்கு இணைப்புப் பாலமாகச் செயல்பட்டுள்ளனர். மனுவாதிகளும் மாயாவாதிகளும் செய்துகொண்ட தொகுதி உடன்பாடு அரசியல்ரீதியாக லாபகரமான பலன்களைத் தந்தது.
நீதி: உத்தரப்பிரதேசத்தில் மனுவாதி-மாயாவாதிகள் இடையிலான கூட்டணி ஜனநாயகத்தால் உருவானது, கடவுளர்களால் இணைக்கப்பட்டது. அது கடைசியில் மகத்தான வெற்றியையும் பெற்றுவிட்டது. மனுவாதிகளைத் தீவிரமாக எதிர்த்துவந்த பகுஜன் சமாஜ், மிதவாத கட்சியாக மாறிவிட்டது; இனி அது எந்தக் காலத்திலும், பழையபடி “”அனல் கக்கும்” மனுவாதிகள் எதிர்ப்பாளராக மாறவே முடியாது.
———————————————————————————————
கங்கா தீரமும் காவிரி ஓரமும்…
செ.கு. தமிழரசன்
இந்தியாவின் ஒட்டுமொத்தப் பார்வையும் இன்று உத்தரப் பிரதேசத்தை நோக்கியே திரும்பியுள்ளது.
இழுபறி அமைச்சரவைதான் ஏற்படும், குதிரை பேரம் நடக்கும், விரைவில் மறுதேர்தலும் வரலாம் என்ற ஐயப்பாடுகளுக்கு எல்லாம் சற்றும் இடம்தராமல், கணிப்புகளையெல்லாம் பொய்யாக்கிவிட்டு, மக்கள் திரளின் மகத்தான ஆதரவுடன், பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் பெரும்பான்மை பலத்துடன், ஒரு கட்சி ஆட்சியை நிறுவியுள்ளார் தலித் சமூகத் தலைவி மாயாவதி. இது ஒரு பாராட்டத்தக்க செயல்பாடுதான், சந்தேகமில்லை.
இந்த அளவிற்கு அனைத்து அரசியல் சக்திகளையும், திறனிழக்கச் செய்யக் காரணம் மாயாவதி கையாண்ட தேர்தல் சாதுர்யம்தான் என்று எல்லா ஊடகங்களும் அடையாளப்படுத்துகின்றன. எனவே அவர் அப்படி என்னதான் புதிய வழிமுறையைத் தேர்தல் வியூகமாக வகுத்தார் என்று பார்த்தாக வேண்டும். ஏனெனில் இன்று மாயாவதியின் வெற்றியை மற்ற மாநிலத் தேர்தலுக்கும் முன்னுதாரணமாக்கும் போக்கு வலுக்கிறது.
பாபா சாகேப் அம்பேத்கரின் கொள்கை வழியில், சமூகரீதியாக ஒடுக்கப்பட்டிருக்கும் தலித் மக்களும், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி நிற்கும் பிற்படுத்தப்பட்ட மக்களும் ஒருங்கிணைந்தால், நமது ஆட்சியை நிலைநாட்ட முடியும் என்ற கான்ஷிராமின் சித்தாந்தம், உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரையில் ஓரளவு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனால் அவரது “பகுஜன் சமாஜ் கட்சி’ ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்தது.
கான்ஷிராமின் அரசியல் பார்வையின் அடிப்படையிலேயே முந்தைய தேர்தல் கூட்டணிகள் அமைந்தன. 1993 தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி கண்ட மாயாவதி 1996-ல் காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்தார். பின்னர் பாஜகவுடன் கூட்டணி ஆட்சியையும் அரங்கேற்றிப் பார்த்தார்.
ஆனால் ஒவ்வொரு முறையும், பகுஜன் சமாஜ் கட்சியைச் சார்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் தனக்கும், கட்சிக்கும் நம்பிக்கைத் துரோகமிழைத்துவிட்டு, எதிர் அணிக்குத் தாவி தங்களது சாதிய சுயரூபத்தை வெளிப்படுத்தினார்கள். தனது முதுகில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு எம்.எல்.ஏ.க்கள் குத்திய வலியை அவரால் மறக்க முடியவில்லை. தலித் – பிற்பட்டோர் ஒற்றுமை என்பது, ஆட்சித்தலைமைத் தேர்வின்போது, நல்ல குதிரைபேர வியாபாரத்திற்கே வழிவகுக்கிறது என்ற அப்பட்டமான உண்மை வெட்ட வெளிச்சமாகியது.
எனவே, இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து விட்டு மாற்றுவழியைத் தேட வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளானார் மாயாவதி. பார்ப்பன, க்ஷத்ரிய, பனியாக்களை செருப்பால் அடிக்க வேண்டுமென்ற அவரது முழக்கம், ஆட்சி அதிகாரப் பகிர்வின்போது, தன்னிடமே செய்முறை விளக்கப் பயிற்சி பெறுவதை உணர்ந்தார். இனி பிற்படுத்தப்பட்டவரை நம்பிப் பயனில்லை என்ற முடிவிற்கே வந்துவிட்டார்.
இதுவரை மேல்மட்ட வர்க்கத்தை மட்டந்தட்ட வேண்டிய எதிரிகளாகவே பாவித்த மாயாவதியின் போக்கில், ஒரு மாறுதல் தோன்றியது. அவர்களையும் அரவணைக்கும் எண்ணம் உதயமாயிற்று.
இதற்கேற்றபடி, பிராமணர், வைசியர், தாக்கூர் ஆகிய இந்து இனச் சமூகங்கள் பெரிதாக நம்பிக் கொண்டிருந்த பாரதீய ஜனதா கட்சியோ, மத்தியில் வலுவிழந்து, மாநிலத்தில் மரியாதையிழந்து, அவ்வப்போது இந்துத்துவா, ராமர் கோயில் என்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தது.
காங்கிரஸ் கட்சியோ, காந்தியின் காலத்திலிருந்து தனது வாக்குவங்கியாக வைத்திருந்த இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஓட்டுகளை பெரும்பாலும் இழந்து கட்சியும் கரைந்துவிட்டிருந்தது.
ஆகவே மேல்தட்டு வர்க்கமான பிராமண, வைசிய, தாக்கூர் சாதியினர் எங்கே போவது, யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு இயல்பாகவே வந்துவிட்டனர். இந்தச் சூழ்நிலையில் மாயாவதியின் மனமாறுதல் அவர்களை பகுஜன் சமாஜ் கட்சியை நெருங்கச் செய்தது.
மாயாவதியும் பிற்படுத்தப்பட்ட மாயையிலிருந்து விடுபட்டு முற்படுத்தப்பட்டவர்களை ஆதரிக்க முன்வந்தார்; வரவேற்று 83 பேரை வேட்பாளர்களாக்கினார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் பயன்களை, யாதவ் மற்றும் குர்மி சாதியினர் மட்டுமே அனுபவிப்பதைப் பார்த்துப் பொருமும் ஏனைய பிற்படுத்தப்பட்ட பிரிவினரும் மாயாவதியின் பின்னால் அணிவகுக்க முற்பட்டனர்.
ஆக, பகுஜன் சமாஜ் கட்சிக்குரிய வாக்கு வங்கியான தலித் மக்கள், புதுவிருந்தாளியான மேல்தட்டு வர்க்கம், இதோடு இஸ்லாமிய சமூகம் மற்றும் யாதவ், குர்மி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ஆகிய புதிய ஐக்கியம் தேர்தலில் பதியமிட்டது. நல்லாட்சி அமைகிறதோ இல்லையோ, ஒரு ஸ்திரமான ஆட்சி, அதாவது ஐந்தாண்டுகளுக்கு அறுதிப் பெரும்பான்மையோடு நடைபெறும் ஆட்சி அமைய வேண்டும். அதற்கான ஒரு கட்சியைத் தேர்ந்தெடுத்தே தீர வேண்டுமென்ற உறுதியான எண்ணம் மக்களிடையே பரவிக் கிடந்தது. அதற்கு கண்முன் நிற்கும் சாட்சியாக “பகுஜன் சமாஜ் கட்சி’ காட்சியளித்தது. மக்கள் வாக்களித்தனர். மாயாவதி வெற்றி பெற்றார்.
அண்ணல் அம்பேத்கரின் பெயரை உச்சரித்தபடியே ஒரு கட்சி, தன் ஆட்சியை நிறுவியுள்ளது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியதுதான். ஆனால் இது நிலைத்து நீடிக்குமா?
மாயாவதியின் வெற்றியைக் கண்டு மற்ற மாநிலத்திலுள்ள அம்பேத்கரிய இயக்கவாதிகளுக்கு ஒரு புத்துணர்ச்சியும் எழுச்சியும் ஏற்படுவது இயல்புதான். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில், உத்தரப் பிரதேசத் தேர்தல் பரிசோதனை எடுபடுமா?
இங்கு “”தாழ்த்தப்பட்டோர் – பிற்படுத்தப்பட்டோர்” ஐக்கியம் என்ற சிந்தனை உருவாக்கம் பெற்று ஒரு நூற்றாண்டுக்கு மேலாகிறது. அந்த அடிப்படையில்தான் இங்கு 40 ஆண்டுகாலமாக ஆட்சியே நடைபெறுகிறது. ஆனால் என்ன ஒரு வேறுபாடு என்றால், தாழ்த்தப்பட்டோரும் முதல்வராக வந்ததில்லை. பிற்படுத்தப்பட்டோரிலும், பெரும்பான்மைச் சமூகங்களைச் சார்ந்த எவரும் முதல்வராக வந்ததில்லை. தமிழகத்தில் பெரும்பாலான சாதிகள் (70 சதவீதம்) பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதால், முற்பட்ட மக்கள் பலம் மிகவும் குறைவு. எனவே, உ.பி. பாணியில் தமிழ்நாட்டில் ஆதி திராவிடர் – அந்தணர் ஐக்கியம் எந்த மாற்றத்திற்கும் வித்திட்டு விடாது. ஏமாற்றத்திற்கே இலக்காகும்.
மேலும், மாயாவதியின் “வெற்றிசூட்சுமம்’ ஏதோ அவரால் மட்டுமே கண்டுபிடித்து கையாளப்பட்டது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு மாயை என்பதை முதலில் புரிந்துகொண்டாக வேண்டும்.
அகில இந்திய அளவில், காந்திதான் இந்து – முஸ்லிம் – ஹரிஜன் முக்கூட்டு ஒற்றுமையை வலியுறுத்தி அதற்கான வழியமைத்தவர். இந்தத் தளத்தில்தான் காங்கிரஸ் கட்சி நீண்டகாலமாகத் தேர்தலைச் சந்தித்து இந்தியா முழுமையையும் தன் ஆட்சிக்குள் வைத்திருந்தது. ஆக, காந்தியின் இந்து – முஸ்லிம் – ஹரிஜன ஐக்கியம், தலித் தலைவியான மாயாவதியால் மீண்டும் நிலைநாட்டப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும்.
ஆனால் இதற்கு மாயாவதி கொடுத்துள்ள விலை அதிகம் என்பதைக் காலம் விரைவில் உணர்த்தும். அதற்கான அடையாளங்கள் இப்போதே தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டன.
அண்ணல் அம்பேத்கரின் கொள்கைவழியில் தோன்றியதாகத் தென்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி, இன்று அதே அண்ணலின் எதிர்நிலையான இந்துத்துவாவை தூக்கிச் சுமக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, உருவாக்கப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி, இனி எல்லா இனமக்களுக்குமான சர்வஜன சமாஜ் கட்சியாகச் செயல்படும் என்று பொய் வேடம் புனைய வேண்டிய நிலைக்கு மாயாவதி ஆளாகியுள்ளார். முதல்வராகப் பதவியேற்றவுடன் புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றுத் தந்த சமூகரீதியான இடஒதுக்கீட்டைப் புறந்தள்ளி, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிராமணர்களுக்கும் இடஒதுக்கீடு என்று மாயாவதி அறிவித்ததன் மூலம், சமூகநீதியையே வஞ்சித்துவிட்டார்.
மேலும் ஒரு முக்கியமான செய்தி என்னவென்றால் மாயாவதியின் 206 எம்.எல்.ஏக்களில் ஒரு தலித் எம்.எல்.ஏ.கூட பொதுத்தொகுதியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதுதான் தலித் – பிராமண ஐக்கியத்தின் லட்சணம். இத்தகைய நிலையில், இங்கு தமிழ்நாட்டில் மாயாவதியின் சூத்திரத்தை அமல்படுத்த முயற்சிக்கலாமா என்று சிந்திப்பதே ஆரோக்கியமானதல்ல என்றே தோன்றுகிறது.
மாயாவதியின் வெற்றி மகத்தானதுதான். அது, உத்தரப் பிரதேசத்தைப் பொருத்தவரை. அதைத் தமிழ்நாட்டிலும் பொருத்திப் பார்க்க நினைத்தால் எதையோ பார்த்து எதுவோ சூடுபோட்ட கதையும், எதையோ பார்த்து எதுவோ ஆடவந்த கதையும்தான் அரங்கேறும்.
(கட்டுரையாளர்: இந்திய குடியரசுக் கட்சியின் தேசியப் பொதுச் செயலர், அதன் தமிழ் மாநிலத் தலைவர்.)
—————————————————————————————
உ.பி. முதல்வர் மாயாவதிக்கு ரூ.52 கோடி சொத்து
லக்னெü, ஜூன் 26: உத்தரப்பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.52 கோடி என தெரியவந்துள்ளது.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட மாயாவதி தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் அவர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளார்.
ரூ.12.88 கோடியை பல்வேறு நிதி நிறுவனங்கள், வங்கியல்லாத நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ரூ.51 லட்சம் மதிப்புள்ள வைர நகைகள், ரூ.52.27 லட்சம் ரொக்கம், ரூ.15 லட்சம் விலை மதிப்பு உள்ள ஓவியங்கள் ஆகியவை தன்னிடம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதுதில்லியில் தனக்கு சொந்தமாக 3 வணிக வளாகங்கள், 2 வீடுகள் உள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.37.82 கோடி என்றும் தனக்கு சொந்தமாக விவசாய நிலங்களும் வாகனங்களும் இல்லை என்றும் அவர் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.
—————————————————————————————
உ.பி.யில் இடைத்தேர்தல்: மாயாவதி வேட்புமனு தாக்கல்
லக்னெü, ஜூன் 26: உத்தரபிரதேச மாநிலத்தில் காலியாக உள்ள 2 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியிடங்களுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
இதில் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்காக அந்த மாநில முதலமைச்சர் மாயாவதி திங்கள்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார்.
பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் பி.ஆர்.வர்மா, சமாஜவாடி கட்சி உறுப்பினர் விக்ரமாதித்ய பாண்டே ஆகிய இருவரும் மரணமடைந்தனர்.
இதையடுத்து வர்மாவின் தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாயாவதி தாக்கல் செய்தார். அவரது மனுவை 10 சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்மொழிந்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற ஜூன்28-ந் தேதி கடைசி நாளாகும்.
மாயாவதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அண்மையில் நடைபெற்ற உத்தரபிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
—————————————————————————————
Kumudam Reporter – Solai
08.07.07
இனி, மையத்திலும் மாநிலங்களிலும் கூட்டணி ஆட்சிதான். இந்திய அரசியல் இப்படி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது என்று அரசியல் விற்பன்னர்கள் அறிவித்தார்கள். ஆனால், இருபது ஆண்டுகளுக்கு மேலாக, கூட்டணி ஆட்சி கண்ட உத்தரப்பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சி தனித்து ஆட்சி அமைத்திருக்கிறது. எப்படி?
அந்த மாநிலத்தில் மீண்டும் கூட்டணி ஆட்சிதான் என்று அனைத்து அரசியல் ஆரூடக்காரர்களும் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைப்பதில் மாயம் செய்த மாயாவதி, தனிப் பெரும்பான்மை பெற்று, தனித்து ஆட்சி அமைத்திருக்கிறார். என்ன காரணம்?
நாடு விடுதலை பெற்றாலும் தலித் மக்களுக்கு விடுதலை இல்லை. அரசியல் சட்டம் வழங்கும் உரிமைகளெல்லாம் அவர்கள் வீட்டு வாசலை எட்டிப் பார்த்ததில்லை. எனவே, அந்தச் சமுதாயத்தின் எழுச்சிக்காக அண்ணல் அம்பேத்கர் பாடுபட்டார். அதன் வழியில் தலித் மக்களுக்காக கன்ஷிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கினார். அந்தக் கட்சியில் அவருக்கு அடுத்த தலைவராக மாயாவதி உயர்ந்தார். டெல்லி மின் வாரியத்தில் லைன் மேனாகப் பணி செய்த ஒரு தலித்தின் புதல்விதான் அவர்.
தமிழகத்தில் எப்படி பிராமண சமுதாயத்தை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டதோ, அதே போல் உத்தரப்பிரதேசத்துப் பிராமண சமுதாயத்தையும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்வா அமைப்புகளையும் எதிர்த்துத் தொடங்கப்பட்டதுதான் பகுஜன் சமாஜ் கட்சி.
உத்தரப்பிரதேச வாக்காளர்களில் பிராமணர்களும் இதர முற்படுத்தப்பட்ட வகுப்பினர்களும் 30 சதவிகிதம் பேர் இருக்கின்றனர். எனவே, இவர்களைப் பகைத்துக்கொண்டு இவர்களுக்கு எதிராக அரசியல் நடத்தினால் ஆட்சி என்பது கனவாகத்தான் இருக்கும் என்பது மாயாவதியின் கணிப்பு.
எனவே, அந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கையைப் பெறுவதில் மாயாவதி நாட்டம் கொண்டார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளராக சதீஷ் சந்திர மிஸ்ரா என்ற பிராமணரை மாயாவதி நியமித்தார். அவர் சட்டமேதை. உத்தரப்பிரதேச அரசின் அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவர்தான் இன்றைக்கு மாயாவதிக்கு அரசியல் வழிகாட்டி.
ஒரு காலத்தில் உத்தரப்பிரதேச அரசியல், அலகாபாத் நேரு பவனத்தில் தவழ்ந்து கொண்டிருந்தது. பிராமணர்களே காங்கிரஸ் முதல்வர்களாக வந்தனர். இஸ்லாமிய மக்களும் தலித் மக்களும் காங்கிரஸ் அரசுகளின் காவலர்களாக இருந்தனர்.
இப்போது பிராமண சமுதாய மக்களும் இஸ்லாமிய மக்களும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் அரணாக மாறியிருக்கின்றனர். இவைதான் மாயாவதி செய்த மாயம்.
‘தலித் மக்களுக்கான கட்சி பகுஜன்’ என்றால் மாயாவதிக்கே கோபம் கொப்புளிக்கிறது. ‘சர்வ சமூகத்தினருக்கான கட்சி என்று சொல்லுங்கள்’ என்கிறார்.
தலித் மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் என்ன தனி ஒதுக்கீடு? முற்படுத்தப்பட்ட சமுதாயங்களில் பொருளாதார ரீதியாக தலித்துகளை விடப் பின்தங்கியவர்கள் இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட மக்களை விட, முற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் அழுந்திக் கிடக்கின்றவர்கள் இருக்கிறார்கள் என்று அவர் கண்டுபிடித்திருக்கிறார். அந்த வாதம் முற்படுத்தப்பட்ட சமுதாய மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, அடிப்படைக் கோட்பாடுகளிலிருந்து எந்த அளவிற்கு மாயாவதி இறங்கிப் போக முடியுமோ, அந்த அளவிற்கு இறங்கி வந்து அதிகார அரசியலில் வெற்றி பெற்றிருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு சக்தியாக இருந்தது. அடுத்து பி.ஜே.பி. ஒரு சக்தியாக உருவானது. அந்தக் கட்சி அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த பின்னர், அந்த வலிமையைப் பெற்றது. அதனைத் தடுக்க மையத்தில் இருந்த காங்கிரஸ் அரசு தவறியது. எனவே, இஸ்லாமிய மக்கள் காங்கிரஸ் உறவைக் கத்தரித்துக் கொண்டது மட்டுமல்ல; கடுங்கோபமும் கொண்டனர். அதனை, இன்னொரு சக்தியாக எழுந்த முலாயமின் சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது.
காங்கிரஸ் மீது இஸ்லாமிய மக்கள் கோபம் கொண்டது போல தலித் மக்களும் ஆவேசம் கொள்ளவே செய்தனர். தங்கள் சமுதாயத்தை வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக் கொள்ளும் அந்தக் கட்சி தங்களைக் கரம் கொடுத்துத் தூக்கி விடவில்லை என்று அவர்களுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்படுத்த பிரதமர் வி.பி.சிங் முன்வந்தார். அந்த அறிக்கையை ஆதிக்க சமூகங்கள் மீது தாக்குதல் தொடுக்கும் ஆயுதமாக சமாஜ்வாதி கட்சி பயன்படுத்திக் கொண்டது. அதே சமயத்தில், பகுஜன் சமாஜ் கட்சியும் எழுச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து காங்கிரஸைப் போல் பி.ஜே.பி.யும் பெரிய சரிவைச் சந்தித்தது. ஒருமுறை தனியாகவும் இருமுறை கூட்டணியாகவும், அரசு கண்ட பி.ஜே.பி., பிற்படுத்தப்பட்ட மக்களைத் திருப்தி செய்வதிலேயே கவனம் செலுத்தியது. ஆகவே, முப்பது சதவிகிதமாக இருக்கும் முற்படுத்தப்பட்ட சமூகம் அதனை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று விட்டது. அவர்கள் இன்றைக்கு மாயாவதியை நம்புகிறார்கள்.
அதே சமயத்தில், இதற்கு முன் பிருந்த முலாயம் சிங் ஆட்சி ஊழலின் உறைவிடம் என்று முத்திரை பெற்றுவிட்டது. அந்தக் கட்சியை அரியணைக்கு அழைத்துச் சென்ற பிற்படுத்தப்பட்ட மக்கள் விழி பிதுங்கி நின்றனர். மாநில அரசே முலாயம் சிங் குடும்பத்தின் மொத்தக் குத்தகையானது.
இந்தச் சூழலில், தலித் அரசியலைப் பரண் மீது வைத்து விட்டு, ஜாதி வாரியாக மாயாவதி மாநாடுகளை நடத்தினார். மாவட்டம் தோறும் பிராமணர் மாநாடு, வைசியர் மாநாடு என்று ஆரம்பித்து அனைத்து ஜாதியினருக்கும் மாநாடு நடத்தினார்.
முற்படுத்தப்பட்ட சமுதாயம் (30 சதவிகிதம்), தலித் சமுதாயம் (21 சதவிகிதம்), இஸ்லாமிய சமுதாயம் (17 சதவிகிதம்) என்று எழுதப்படாத அணி உருவானது. சட்டமன்றத் தேர்தலில் தொகுதிகளையும் இதே அளவில் பிரித்து அளித்தார்.
வெற்றிக்குப் பின்னர் அவர் வெளியிட்ட அமைச்சர்களின் பட்டியலைப் பாருங்கள். விகிதாச்சாரப்படி அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இடம் பெற்றிருக்கிறார்கள். பி.ஜே.பி. ஆட்சியில் கூட இவ்வளவு பேர் இடம் பெற்றதில்லை. அதே சமயத்தில், தலித் சமுதாயத்தைத் திருப்திப்படுத்த 19 பேர் அமைச்சர்களாகி இருக்கிறார்கள். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த 11 பேரும் இஸ்லாமியர்கள் ஐவரும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.
இப்படி தேர்தல் வெற்றிக்கு ஜாதிகளின் சங்கமத்தைப் பயன்படுத்திக் கொண்ட மாயாவதி, ஜாதிகளுக்குமேல் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாமா? வீழ்ந்து வந்த சமூக ஆதிக்க சக்திகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்று சொல்லலாமா? இப்படி மாயாவதியின் வெற்றி ரகசியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் வெற்றிக்குப் பின்னர், மாயாவதி முதன்முதலாக நிருபர்களைச் சந்தித்தார். ‘பிராமணர்களில் ஏழைகள் இருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்’ என்றார் பி.ஜே.பி.கூடத் துணிந்து இப்படிக் கேட்டதில்லை. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அவர் மயானத்திற்கு அனுப்பி விட்டார். உறங்கிய உண்மைகளைத் தட்டி எழுப்பிவிட்டதாகக் கூறுகிறார்.
‘டி.வி. சுந்தரம் அய்யங்கார் பிறப்பால் முற்படுத்தப்பட்டவர்தான். அவர்களது பிள்ளைகள் செல்வச் செழிப்பு மிக்கவர்கள்தான். ஆனால், அவர்கள் வீட்டில் காரோட்டும் சங்கர அய்யர் எப்படி? பிறப்பால் முற்பட்டவர்தான். பொருளாதார வசதியில்…? தலித்துகளின் நிலைதான் அவரது நிலையும்’ என்கிறார் மாயாவதி.
இத்தகைய வாதங்கள் அரசியலில் பெரும்புயலைக் கிளப்பியிருக்கின்றன. கசப்பான உண்மைகளைக் கூறுகிறார் என்பதா? பகுஜன் சமாஜ் கட்சி முற்போக்கு சமுதாயங்களின் முரசமாகிவிட்டது என்று சொல்வதா?
எதிர்கால அரசியல் ஜாதிக் கூட்டணிகளுக்குத்தான் என்று சொல்வதா? அடுத்து மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த மாநிலங்களில் பகுஜன் சமாஜ் கட்சிக்குப் பெரும் செல்வாக்கு இல்லைதான். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் அமைத்த ஜாதிக் கூட்டணியை அமைக்க மாயாவதி முயற்சிப்பார். ஏனெனில், அவருடைய இலட்சியம் மாநில முதல்வர் என்பதல்ல; நாட்டின் பிரதமராக வேண்டும் என்பதுதான்!
——————————————————————————————-
உத்தரபிரதேசம் முழுவதும் மாயாவதி சிலைகள்: கன்சிராம் விருப்பம் நிறைவேறுகிறது
லக்னோ, ஆக. 6-
உத்தரபிரதேசத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற் கொண்டுள்ளார். கன்சிராமின் கொள்கை கள், திட்டங்கள் அனைத் தையும் நிறைவேற்ற முதல்- மந்திரி மாயாவதி ஏராள மான திட்டங்களை அறிவித் துள்ளார்.
கன்சிராம் பற்றி ஆய்வு செய்து கட்டுரை எழுதும் மாணவ-மாணவிகளுக்கு நிதி உதவி அளிக்கப்படுகிறது. “கன்சிராம் மாணவர் சுவா பிமான் விருது” என்ற பெயரில் ரூ.2.5 லட்சம் பரிசு வழங் கப்படும் என்று மாயாவதி கூறி உள்ளார்.
கன்சிராம் பெயரில் மிகப் பெரிய மருத்துவம் மற்றும் வீட்டு வசதி திட்டத்தையும் மாயாவதி அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட மிகப் பெரிய மருத்துவமனை கட்டப்படும். அங்கு 40 சதவீத ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
வீட்டு வசதி திட்டங்கள் “கன்சிராம் நகர்” என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு அனைத்து சாதி யினருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.
4 ஆண்டுகளுக்கு முன்பு, மரணம் அடைவதற்கு முன்பு ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய கன்சிராம், உத்தரபிரதேசம் முழுவதும் என் சிலை அருகில் மாயாவதியின் சிலைகளும் நிறுவப்பட வேண்டும்” என்று கூறி இருந்தார். அவரது இந்த ஆசையை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேசம் முழுவதும் உள்ள ஆயிரக் கணக்கான கன்சிராம் சிலை கள் அருகில் மாயாவதி சிலைகள் வைக்க மந்திரி சபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதற்கு கோடிக் கணக்கில் பணம் செலவிடப்பட உள்ளது. லக்னோவில் கன்சிராம் நினைவிடத்தில் மாயாவதி சிலை நிறுவப்படும்.
—————————————————————————————————————————–
“சோனியாவை விட நானே பெரிய தலைவர்’
புதுதில்லி, ஜன.16: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விட நான்தான் பெரிய தலைவர் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச முதல்வருமான மாயாவதி கூறியுள்ளார்.
ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த நான் பிரதமர் பதவியை அடைய ஆசைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
“எனது போராட்டமும் பகுஜன் சமாஜ் கட்சியின் பயணமும்’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சுயசரிதையில் இதுபற்றி கூறியுள்ளார். சுமார் 1000 பக்கங்கள் உள்ள இப்புத்தகத்தை தனது 52 வது பிறந்த நாளை முன்னிட்டு தில்லியில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டார். ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.1100.
ஒவ்வொரு ஆண்டும் ஒரு புத்தகம் எழுதி தனது பிறந்த நாளன்று கட்சித் தொண்டர்களுக்காக வெளியிடுவேன் என்றார் அவர்.
சோனியா காந்தியின் பெயரைக் குறிப்பிடாமல், அவரை விட நான் உயர்ந்த தலைவர் என்று மாயாவதி தனது புத்தகத்தில் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2006-ம் ஆண்டிலிருந்து சமீபத்தில் நடந்த உத்தரப்பிரதேசத் தேர்தல் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு சோதனைக் காலம் ஆகும். மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் உத்தரப் பிரதேசத்தில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய ஆதரவு தருவதாக 2003 ல் பா.ஜ.க. உறுதி அளித்தது. அப்போது பொதுத்தேர்தலை முன் கூட்டியே நடத்த பா.ஜ.க. திட்டமிட்டது. உத்தரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளில் 60 தொகுதிகளை பா.ஜ.க. கேட்டது. இதுதான் எனக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய சதியின் ஆரம்பம் என்று தனது புத்தகத்தில் மாயாவதி கூறியுள்ளார்.
அரசியல் மற்றும் சமூகப் பொறுப்புகளை ஏற்று நடத்தும் பல பெண்கள் நம் நாட்டில் உள்ளனர். ஆனால் நான் மட்டுமே ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்து, அந்த சமுதாயத்தின் சுயமரியாதை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறேன். ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் பதவிக்கு வந்து, மக்களுக்கு சமூக மாற்றத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் தர வேண்டும் என்பது என் நோக்கமாகும்.
நியூஸ்வீக் பத்திரிகை வெளியிட்ட, பெரிய பொறுப்பில் உள்ள உலகின் முக்கிய 8 பெண்கள் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு இத்தகைய கெüரவம் கிடைப்பது மிகவும் அரிது. எனக்கு எதிரான சதியை அச்சமின்றி எதிர்கொண்டது, நானும் என் இயக்கமும் வளர உதவியது.
நாம் வாக்களிக்க மற்றவர்கள் ஆட்சி செய்யும் முறை, இனிமேல் நடக்காது. நாம் நாடாளுமன்றத்தைத் தேர்தல் மூலம் கைப்பற்றி நாமே ஆட்சி செய்ய வேண்டும் என்று சாதாரண மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அம்பேத்கரின் சிலை, நாடாளுமன்றத்தை நோக்கி கையைக் காட்டுகிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் மேல்ஜாதியில் ஏழைகளாக இருப்போர், கிளர்ந்தெழுந்து, வாக்குப் பெட்டிகள் மூலமாக ஆட்சியைப் பிடித்து, தங்களது அடிமைத் தனத்தை உடைத்து, தங்கள் சொந்த முயற்சியால் தங்களை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே அம்பேத்கர் சிலை நமக்கு உணர்த்தும் பாடம் ஆகும்.
காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும், தற்போதுள்ள சமூக நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று விரும்பும் கட்சிகள் ஆகும். அக்கட்சிகளின் கோட்டையாகத் திகழ்ந்த உத்தரப்பிரதேசத்தில் அரசியல் நிலையை மாற்ற நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்று தனது சுயசரிதையில் மாயாவதி கூறியுள்ளார்.
———————————————————————————————————————————————————
உத்தரபிரதேச மாநிலத்தை 3 ஆக பிரிக்க ஆதரவு
பிறந்தநாள் விழாவில் முதல்-மந்திரி மாயாவதி அறிவிப்பு
புதுடெல்லி, ஜன.17-
உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயாவதியின் 52-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர், உத்தரபிரதேச மாநிலத்தை 3 மாநிலங்களாக மத்திய அரசு பிரித்தால் ஆதரவு அளிக்க தயார் என்று அறிவித்தார்.
பிரமாண்ட கேக்
உத்தரபிரதேச முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதியின் 52-வது பிறந்தநாள் விழா, லக்னோவில் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. முதல்-மந்திரியாக மீண்டும் பதவி ஏற்ற பிறகு நடைபெறும் முதல் பிறந்தநாள் விழா என்பதால் ஏராளமான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. லக்னோ நகரமே, அவரது கட்சி கொடியின் நிறமான நீல வண்ணம் பூசியது போல இருந்தது.
நகரம் முழுவதும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. பிறந்தநாளை முன்னிட்டு தயாரிக்கப்பட்டு இருந்த பிரமாண்டமான `கேக்’கை மாயாவதி வெட்டினார். அவருடைய தந்தை, குடும்பத்தினர், கட்சியின் மூத்த தலைவர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உட்பட மாநில அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
அனல் மின்திட்டம்
பிறந்த நாளுக்காக பல்வேறு திட்டங்களையும் மாயாவதி தொடங்கி வைத்தார். குறிப்பாக, சர்ச்சைக்குரிய ரூ.40 ஆயிரம் கோடி மதிப்பிலான நொய்டா-பாலியா விரைவு நெடுஞ்சாலை திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார். மேலும் வறட்சியால் பாதிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு ரூ.1,600 கோடி மதிப்பிலான நிவாரண திட்டங்களை அறிவித்தார்.
இது தவிர, வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் மக்களுக்கு இலவச சுகாதார காப்பீடு, மாநில அரசு ஊழியர்களுக்கான பயிற்சி மையம் ஆகியவற்றையும் அவர் அறிவித்தார். மேலும் லலித்பூர் என்ற இடத்தில் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அனல் மின்நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் விமர்சனம்
இதற்கிடையே, மாயாவதி பிறந்தநாளுக்காக செய்யப்படும் பிரமாண்டமான செலவு குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. இது குறித்து மாயாவதி கூறியதாவது:-
இது தலித் சமுதாயத்துக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் செய்துவரும் அவதூறு பிரசாரம் ஆகும். பிறந்தநாளுக்கு அரசு பணம் எதையும் செலவழிக்கவில்லை. பிறந்தநாள் `கேக்’ கூட பணம் கொடுத்து வாங்கியதுதான். பொதுத்துறை மற்றும் மின்சார துறைக்கு கட்சியில் இருந்து பணம் செலுத்தப்பட்டுள்ளது.
3 மாநிலங்கள்
உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்ட போதிலும், இன்னமும் உத்தரபிரதேசம்தான் பெரிய மாநிலமாக இருந்து வருகிறது. எனவே, இதை பூர்வாஞ்சல், பண்டல்கண்ட், ஹரித் பிரதேசம் என 3 மாநிலங்களாக பிரிப்பதற்கு பகுஜன்சமாஜ் கட்சி ஆதரவு அளிக்கும்.
சிறிய மாநிலங்களை உருவாக்குவதற்கு மத்திய அரசு சம்மதித்தால், இது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம். எனவே, இந்த விவகாரத்தில் முடிவு காண்பது, மத்திய அரசு கையில்தான் உள்ளது.
இவ்வாறு மாயாவதி கூறினார்.
மத்திய அரசு ஆதரவு
ஆனால், உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் பொறுப்பாளரும், கட்சியின் தேசிய பொதுச் செயலாளருமான திக் விஜய்சிங் கூறுகையில், `உத்தர பிரதேசத்தை சிறிய மாநிலங்களாக பிரிப்பது தொடர்பாக முதலில் மாநில அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றட்டும்’ என்று தெரிவித்தார்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கு பிறகு மாயாவதி, டெல்லி சென்றார். அங்கு மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்து கேட்டபோது, `தற்போது, எனக்கு அதிக அலுவல்கள் இருக்கின்றன. எனவே, இது குறித்து முடிவு எடுப்பதற்காக கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கட்சித்தலைவர்கள் விரைவில் கூட்டுவார்கள்’ என்று பதிலளித்தார்.
இதற்கிடையே, மாயாவதி மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சட்டப்படியான நடவடிக்கைகள் தொடரும் என்று மத்திய நேரடி வரித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இந்த வழக்கு குறித்து பதிலளித்த மாயாவதி, `கட்சியினர் கொடுத்த பணம்தான் என்னிடம் உள்ளது’ என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Posted in abuse, Action, Aiswarya, Allahabad, Alliance, Allocations, Amar Singh, Amarsingh, Ambani, Amitab, Amitabh, Anil, Assembly, Assets, Ayodhya, Ayodya, Bachan, Bahuguna, Bahujan Samaj Party, Biosketch, BJP, Brahmin, Brahmins, Bribes, BSP, Caste, Casteism, CM, Congress, Constituency, Corrupt, Corruption, Creamy, Creamy Layer, Dalit, Delhi, Disproportionate, Economic, Election, Elections, Faces, Free, Goel, Govt, Gujarat, Guru, Gurumoorthy, Gurumurthy, Health, Healthcare, Hindu, Hinduism, Hindutva, Homes, Hospitals, Hosuing, IAS, IPS, Islam, Jaiprakash, Jaiprakash Narain, Jats, JP, Kanshi, Kanshi ram, Kanshiraam, Kanshiram, Kansi ram, Kansiraam, Kansiram, kickbacks, Kurmis, Land, Lucknow, Mandal, Manifesto, Manu, Mayavathi, Mayavathy, Mayawathi, Mayawathy, MBC, medical, Medicine, Mishra, Misra, Moslem, Mulayam, Muslim, Naseemuddin, Naseemudhin, Nasimuddin, Nasimudhin, New Delhi, OBC, Op-Ed, people, Plan, Planning, Poll, Polls, Power, PRO, promises, Property, Rajnath, Rajnath Singh, Ramjenmabhoomi, Ramjenmabhumi, Ramjenmaboomi, Ramjenmabumi, Reliance, Religion, Reservation, Reservations, Reserved, Rowdy, Rule, Sathish Chandra Mirs, SathishChandra Miras, SC Mishra, Siddik, Siddiq, Sidhik, Sidhiq, Slum, SP, Statue, Students, Study, Sudhir, Sudir, Taj, Taj mahal, Thakur, Thakurs, UP, Uttar Pradesh, Vaisya, Vajpayee, Vajpayi, Varanasi, Yadavs | 2 Comments »
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Privacy & Cookies: This site uses cookies. By continuing to use this website, you agree to their use. |
You found this company profile listed on Global Catalog, so we’re confident buyers WILL find your business, too. All you need to do is sign up!
You will be seen for FREE by thousands of active buyers from across the globe, searching Global Catalog every day for companies just like yours.
Sign up
It's FREE and always will be.
முதன்மை பக்கம்
மொழியை தேர்ந்தெடு:
ஆஃப்ரிகான்ஸ் அல்பெனியன் அரபு அஸேரி ஆர்மேனியன் வங்காளம் பைலோருஷ்ன் பல்கேரியன் காடலான் எளிய சீன சீனம் (மரபுவழி) குரோஷியன் செக் டேனிஷ் டச்சு ஆங்கிலம் எஸ்டோனியன் ஃபிலிபினோ பின்னிஷ் பிரெஞ்சு ஜியோர்ஜியன் ஜெர்மன் கிரேக்கம் ஹுப்ரு இந்தி ஹங்கேரியன் ஐஸ்லென்டிக் இந்தோனேஷியன் ஐரிஷ் இத்தாலியன் ஜப்பானீஸ் கொரியன் லேட்வியன் லிதுவேனியன் மாஸிடோனியன் மலாய் மால்டிஸ் நார்வே பொக்மால் பர்ஸியன் போலிஷ் போர்ச்சுக்கீஸ் ரோமேனியன் ரஷியன் செர்பியன் ஸ்லோவாக் ஸ்லோவேனியன் ஸ்பானிஷ் சுவாஹிலி ஸ்வீடிஷ் தமிழ் தெலுங்கு தாய் டர்கிஷ் உக்ரைனியன் உருது வியட்நாமிஸ்
தேர்ந்தெடுமூடவும்
Premium provider of interior and exterior carpentry services in Guelph Ontario. We can build and repair any type of deck and fence that exists. If you are looking for an experienced carpenter to handle any trim or cabinetry work we also have you covered. |
சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. கரோனா தளர்வுகளுக்குப் பின்பு, மீண்டும் சுற்றுலாத் தலங்களில் பார்வையாளர்களை அனுமதித்துவிட்ட நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் குமரிமாவட்டத்தில் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்திலேயே, அதிக அளவில் சுற்றுலாத் தலங்கள் கொண்ட மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு முக்கடலும் சங்கமிக்கும் குமரிமுனையில் விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை, சுசீந்திரத்தில் மும்மூர்த்திகளும் ஒருசேர காட்சிதரும் அற்புத தாணுமாலயன் ஆலயம், பத்மநாபபுரம் அரண்மனை, சிதறால் மலைக்கோவில், உதயகிரிக்கோட்டை, மாத்தூர் தொட்டில்பாலம், காளிகேசம் சூழியல் சுற்றுலா தலம், லெமூரியா, சொத்தவிளை, சங்குத்துறை, முட்டம் கடற்கரைகள் என ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. பரப்பளவில் மிகவும் சிறிய மாவட்டமான கன்னியாகுமரியில், இவற்றையெல்லாம் சேர்த்து ஒரேநாளில் ரசிப்பதுபோல் சுற்றுலாப் பேருந்து இயக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர் சுற்றுலாப் பிரியர்கள்.
ஆர்.எஸ்.ராஜன்
இதுகுறித்து காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநிலப் பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் காமதேனு இணையதளத்திடம் கூறும்போது, ”கன்னியாகுமரி சர்வதேச அளவில் பிரசித்திபெற்ற சுற்றுலா தலம். இதனால் இங்கே ஆண்டு முழுவதுமே சீசன் இருக்கும். இதேபோல் குமரி மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் உள்ளன. ஒவ்வொன்றின் பின்னாலும் நம் பாரம்பரியமும், பெருமையும் உள்ளது. உதாரணமாக மாத்தூர் தொட்டில்பாலம், இருபகுதிகளுக்கு இடையே தண்ணீர் கொண்டு செல்ல ‘அப்பச்சி’ என குமரி மக்களால் அன்பாக அழைக்கப்படும் காமராஜரால் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய சாதனை. தக்கலை பக்கத்தில் இருக்கும் உதயகிரி கோட்டையில் இன்று பல்லுயிர் பூங்கா இருக்கிறது. அதே கோட்டைக்குள்தான் டிலனாயின் கல்லறையும் இருக்கிறது. இந்த டிலனாய், திருவிதாங்கூர் சமஸ்தானத்தை கடல்வழியே படையெடுத்துப் பிடிக்கவந்த வெளிநாட்டுக்காரர். இவர் வருவதைப் பார்த்துவிட்டு நம் மண்ணின் மைந்தர்கள் மாட்டு வண்டியில் இரு பனை மரங்களை வெட்டிப்போட்டு அவர் வருகைக்காகக் காத்து நின்றனர். கடல்மார்க்கமாக வந்த டிலனாய்க்கு மாட்டு வண்டியிலிருந்த பனைமரங்கள் பீரங்கிபோல் தெரிய, அவரே சரணடைந்துவிட்டார். எந்த திருவிதாங்கூர் அரசை எதிர்த்துப் படையெடுத்து வந்தாரோ, அதே திருவிதாங்கூரின் படைவீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் வேலையை டிலனாய்க்குக் கொடுத்தார்கள். அவரது கல்லறையும் உதயகிரி கோட்டையில் இருக்கிறது. இது எவ்வளவு பெருமையான ஆவணம்! இந்த வரலாறு சுற்றுலாப் பிரியர்கள் இங்கே படையெடுக்கும்போதே அதிகம்பேரைச் சென்றடையும்.
இதேபோல் திற்பரப்பு அருவியை குமரியின் குற்றாலம் என்பார்கள். சிதறால் மலைக்கோயிலில் சமணர்கால குடைவரைகள் இருக்கின்றன. இந்தச் சிறப்புகள் எல்லாம் குமரிமாவட்ட மக்களுக்குள் சுருங்கிப் போவதை ஏற்றுக்கொள்ள முடியுமா? குமரி மாவட்டத்துக்கு வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வருபவர்கள் கன்னியாகுமரியை மட்டுமே பார்த்துவிட்டுச் சென்றுவிடும் சூழல்தான் இருக்கிறது. வெகுசிலரே மாவட்டத்தின் பிற சுற்றுலா தலங்கள் பற்றிய புரிதலோடு உள்ளனர். இந்தச் சுற்றுலா தலங்களும், அதன் பின்னே இருக்கும் அரிய வரலாறுகளும் அனைவருக்கும் தெரிய வேண்டும். அதற்காக கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கி மாவட்டச் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும்.
கன்னியாகுமரியில் சூரிய உதயத்தில் இருந்து புறப்படும் இந்தப் பேருந்தை, மீண்டும் அதே கன்னியாகுமரியில் சூரியன் மறையும் காட்சியை பார்ப்பதோடு நிறைவு செய்யலாம். இதற்கு மொத்தமாக ஒருநாளுக்கு இவ்வளவு என கட்டணம் நிர்ணயிக்கலாம். கரோனா 2-ம் அலைக்குப் பின்பு அனைத்துத் தொழில்களும் மிகமோசமான சரிவைச் சந்தித்துள்ளன. இப்படியான சூழலில் அரசு சுற்றுலாத் துறை வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும். இப்படி ஒரு பேருந்து இயக்கப்படும்போது, குமரி மாவட்ட மக்களும் குறைவான செலவில் குடும்பத்தோடு பொழுதைக் கழிப்பதோடு, மொத்த மாவட்டத்தையும் ஒரேநாளில் சுற்றிப்பார்த்த நிறைவும் கிடைக்கும். வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் இங்கெல்லாம் பயணிக்க இது வாய்ப்பாக அமையும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் மாஞ்சோலையை ரசிக்க, வனத் துறையோடு சேர்ந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அம்பாசமுத்திரத்தில் இருந்து இந்தப் பேருந்துகள் கிளம்புகின்றன. இதேபோல் குமரிமாவட்டத்திலும் சுற்றுலா பேருந்து இயக்கப்பட வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து நாகர்கோவில் அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ”கடந்த நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்னால் குமரியில் கோடை விடுமுறையின்போது மாவட்டச் சுற்றுலாப் பேருந்துகள் இயக்கினோம். கோடை விடுமுறைக்குப் பின் போதிய வருவாய் ஈட்டாததால் அவை நின்றுவிட்டன. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தப் பேருந்து இயக்கப்படவில்லை. சுற்றுலாப் பேருந்து இயக்குவது குறித்து மாவட்ட நிர்வாகமோ அல்லது சுற்றுலா வளர்ச்சித் துறையோதான் கொள்கை முடிவு எடுக்கமுடியும். அப்படி அவர்கள் கோரும்பட்சத்தில் நாங்கள் பேருந்தை இயக்கமுடியும்” என்றார். |
விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ருத்ர தாண்டவம் எனும் திரைப்படம் கடந்த வெள்ளியன்று ( 01/10/2021) திரைக்கு வந்தது. சமூக வலைத்தளங்களில் ஒரு சாரார் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும், பொதுப்படையாக பார்க்கையில் ஊடகங்களில் மற்றும் சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களே இப்படத்திற்கு அதிகம் காணப்படுகின்றது.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ருத்ர தாண்டவம் படத்தைப் பார்த்துவிட்டு அவரது டிவிட்டர் பக்கத்தில் இப்படத்தை பாராட்டியதாக கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் அப்படத்தில்,
“இன்று அருமை தம்பி மோகன்ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ர தாண்டவம் திரைப்படம் பார்த்தேன். பிண அரசியல் பிழைப்பு நடத்தி வந்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களையும், போலி மதவாத கும்பல்களையும் சாட்டையும் சுழற்றி அடித்துள்ளார். இது படமல்ல பாடம்”
என்று முதல்வர் டிவீட் செய்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Facebook Link
Facebook Link
Facebook Link
Also Read: பெண்களுக்காக 9969777888 எனும் உதவி எண்ணை தமிழக காவல்துறை அறிவித்துள்ளதா?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
விசிக தலைவர் திருமாவளவன் குறித்து முதல்வர் டிவீட் செய்ததாக வைரலாகும் அந்த புகைப்படத்தை காணும்போதே அது போலியானதுதான் என்பதை நம்மால் உணர முடிகின்றது. ஏனெனில் அப்படத்தில் தகாத வார்த்தை ஒன்று பயன்படுத்தப் பட்டிருந்தது. இருப்பினும் இதை பலர் உண்மை நம்பி பகிர்ந்து வருவதால் இதை முறையாக ஆய்வு செய்து தெளிவுப்படுத்த விரும்பினோம்.
வைராலும் படத்தில் இருந்த டிவீட்டானது கடந்த வியாழனன்று (செப்டம்பர் 30) இரவு 10 : 44 -க்கு முதல்வர் தரப்பிலிருந்து பதிவிட்டதாக உள்ளது. ஆகவே முதல்வரின் அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செப்டம்பர் 30 அன்று இவ்வாறு ஒரு டிவீட் பதிவிடப்பட்டுள்ளதா என்பதை தேடினோம்.
அதில் அன்றைய தினத்தில் இவ்வாறு ஒரு டிவீட்டை முதல்வர் பதிவிட்டதாக எந்த ஒரு ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை.
ஸ்டாலின் அவர்கள் செப்டம்பர் 30 ஆம் தேதி அரசு தரப்பு சுற்றுப்பயணமாக தருமபுரியில் இருந்துள்ளார். அங்கு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முடிவுற்ற கட்டிடங்கங்களை திறந்து வைத்துள்ளார், ஓகேனக்கல் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டுள்ளார், வத்தல்மலை பழங்குடியின மக்களைச் சந்தித்துள்ளார்.
இதுக்குறித்த பதிவுகள் மட்டுமே செப்டம்பர் 30 தேதி ஸ்டாலின் அவர்களின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. இதை தவிர்த்து வேறு எந்த ஒரு பதிவும் அன்றைய தினத்தில் பதிவிடப்படவில்லை.
இதனை தொடர்ந்து திமுக தகவல் மற்றும் செய்தித் தொடபுத் துறை பொறுப்பாளரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் டிவீட் குறித்து கேட்டோம். அதற்கு அவர்கள்,
“இது பொய்யானது, போலியாக உருவாக்கப்பட்டுள்ளது.”
என்று விளக்கமளித்தனர்.
ருத்ரதாண்டவம் திரைப்படம் அக்டோபர் 1 ஆம் தேதியே வெளிவந்துள்ளது. ஆனால் அதற்கு ஒரு நாளுக்கு முன்பே, அதுவும் அரசு பயணமாக தர்மபுரியில் நாள் முழுவதும் பிசியாக இருந்த முதல்வர், அத்திரைப்படத்தை கண்டு பாராட்டி டிவீட் செய்துள்ளார் என்பது நம்பும்படியாக இல்லை.
ஒருவேளை முதல்வருக்காக தர்மபுரியில் ஏதேனும் சிறப்பு காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு முதல்வர் சினிமா பார்த்திருந்தால், அது நிச்சயமாக செய்தி பொருளாக மாறி இருக்கும். ஆனால் இவ்வாறு ஒரு செய்தி எந்த ஊடகத்திலும் இதுவரை வரவில்லை.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கும்போது திருமாவளவன் குறித்து முதல்வர் டிவீட் செய்ததாக சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் முற்றிலும் போலியானது என்பது உறுதியாகின்றது.
Also Read: எச்.ராஜா எனக்கு தந்தை போன்றவர் என்று சீமான் கூறியதாக வதந்தி!
Conclusion
விசிக தலைவர் திருமாவளவனை பிண அரசியல் நடத்துபவர் என்று முதல்வர் ஸ்டாலின் டிவீட் செய்ததாக பரவும் புகைப்படம் முற்றிலும் போலியானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
DMK IT Wing Secretary Testimonial:-
M.K.Stalin’s Tweets on that day, Sep 30
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
About the author Related Posts
பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
வீட்டிற்குள் மீன் வந்ததாக பரவும் பழைய வீடியோ!
மழைநீரில் முதலை வந்ததாக வதந்தி
Tags
dmk
m.k.stalin
thirumavalavan
vck
Viral
TN CM M.K.Stalin
rudarathandavam
imposter
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
Facebook
Twitter
WhatsApp
Linkedin
Previous articleடாடா குழுமம் 150வது ஆண்டு விழாவிற்காக கார் பரிசளிப்பதாக பரவும் வதந்தி!
Next articleWeekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
Ramkumar Kaliamurthy
A post-graduate in Mass Communication, Ram has an experience of 8 years in the field of Media. He has worked for radio, television, e-commerce. Appalled by the spread of fake news and disinformation, he found it both challenging and satisfying to bring out the truth and nullify the effects of fake news in society.
RELATED ARTICLES
Fact Check
பாஜகவோடு அதிமுகவை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அன்வர் ராஜா நீக்கம்; வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
Ramkumar Kaliamurthy
Fact Check
புதிய வகை கொரோனா பரவலால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் காலவரையின்றி மூடல் என்றாரா அன்பில் மகேஷ்?
Vijayalakshmi Balasubramaniyan
Fact Check
‘டாஸ்மாக் கடைகளை மூடுவோம் என்று கொடுத்த வாக்குறுதி பொய்யானது’ என்று கனிமொழி கூறியதாக வதந்தி
Ramkumar Kaliamurthy
LEAVE A REPLY Cancel reply
Comment:
Please enter your comment!
Name:*
Please enter your name here
Email:*
You have entered an incorrect email address!
Please enter your email address here
Website:
Save my name, email, and website in this browser for the next time I comment.
Most Popular
கீழடியில் நடராஜர் சிலை கிடைத்ததா ? உண்மை என்ன .
ரசிகர்களை கடிந்து கொண்டாரா ரஜினிகாந்த்?
திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயர் திருடப்பட்டதா?
ஒய் வி சுப்பா ரெட்டியின் முழுப்பெயர் யெஹோவா வின்சென்ட் சுப்பா ரெட்டியா ? உண்மை என்ன ?
Weekly Wrap: இந்த வாரம் பரவிய பொய் செய்திகள்
தமிழக முதல்வர் ஸ்டாலினை தகாத வார்த்தையில் பேசனாரா டாக்டர் கிருஷ்ணசாமி?| வைரலாகும் நியூஸ்கார்ட் உண்மையானதா?
கமல்ஹாசனை முட்டாள் என்றாரா பழ.கருப்பையா?
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களா இவை?
ABOUT US
Newschecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check. |
பகுதியின் சுருக்கம்: மிதிலைக்குப் புறப்பட்ட முனிவர்கள்; செவ்வந்தி வேளையில் சோணையாற்றங் கரையில் தங்கியது ...
நோக்கம் நிறைவேறி மகிழ்ச்சியடைந்தவர்களும், வீரர்களுமான ராமனும், லக்ஷ்மணனும் அவ்விரவில் அந்தராத்மாவில் இன்புற்றவர்களாக அங்கே வசித்தனர்.(1) அவ்விரவு பகலாகி விடியலில் காலைக் கிரியைகளைச் செய்த அவ்விருவரும் ரிஷிகளுடன் இருந்த விஷ்வாமித்ரரை நோக்கிச் சென்றனர்.(2) மதுரபாஷையுடன் {இன்மொழியுடன்} கூடிய அவர்கள், பாவகனை {அக்னியைப்} போல ஜொலித்துக் கொண்டிருந்த அந்த முனிசிரேஷ்டரை {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரரை} வணங்கி, மதிப்புமிக்க இந்த உயர்ந்த வாக்கியத்தைப் பேசினார்கள்:(3) "ஓ! முனிஷார்தூலரே {முனிவர்களில் புலியே}, கிங்கரர்களான {பணியாட்களான} நாங்கள் இதோ வந்திருக்கிறோம். முனிசிரேஷ்டரே {முனிவர்களில் சிறந்தவரே}, நாங்கள் நிறைவேற்ற வேண்டிய உமது ஆணைகள் என்னென்ன?" {என்று ராமனும், லக்ஷ்மணனும் விஷ்வாமித்ரரிடம் கேட்டனர்}.(4)
அவர்களால் இந்த வாக்கியம் சொல்லப்பட்டபோது, மஹாரிஷிகள் அனைவரும், விஷ்வாமித்ரரைத் தங்கள் முன்னிட்டுக் கொண்டு, ராமனிடம் இந்த வசனத்தைச் சொன்னார்கள்:(5) "நரசிரேஷ்டா {மனிதர்களில் சிறந்தவனே} மிதிலையில் பரம தர்மிஷ்டனான ஜனகனின் யஜ்ஞம் {அறம் செழிக்கும் ஜனகனின் வேள்வி} ஒன்று நடைபெற இருக்கிறது. நாங்கள் அனைவரும் அங்கே செல்கிறோம்.(6) நரஷார்தூலா {மனிதர்களில் புலியே}, நீயும் எங்களுடன் வரலாம். அங்கே அற்புதமான தனுரத்தினமொன்று {ரத்தினம் போன்ற வில்லொன்று} இருக்கிறது. அதை நீ காண வேண்டும்.(7) நரசிரேஷ்டா, போரில் கற்பனைக்கெட்டாத பலங்கொண்டதும், கோரமானதும், பரம பிரகாசம் கொண்டதுமான அந்த வில், பூர்வத்தில் ஒரு ஸதஸ்ஸில் {வேள்வியில்}[1] தைவதைகளால் {தேவர்களால்}[2] கொடுக்கப்பட்டதாகும்.(8) அதை உயர்த்தி நாண்பொருத்த தேவர்களும், கந்தர்வர்களும், அசுரர்களும், ராக்ஷசர்களும் சக்தர்களல்ல என்றால் மனுஷர்கள் எம்மாத்திரம்?(9) அந்த தனுசின் {வில்லின்} வீரியத்தை விசாரித்து ஆர்வங்காட்டிய ராஜபுத்திரர்கள், மஹாபலவான்கள், மஹீக்ஷிதர்கள் {மன்னர்கள்} ஆகியோரால் அதற்கு நாண்பொருத்த முடியவில்லை.(10) நரஷார்தூலா, காகுத்ஸ்தா {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலே ராமா}, மிதிலையின் மஹாத்மாவுடைய அந்த தனுசையும் {ஜனகனின் வில்லையும்}, பரம அற்புதமான அந்த யஜ்ஞத்தையும் அங்கே {வந்தால்} நீ காணலாம்.(11) நரஷார்தூலா, நல்ல நாபத்தைக் கொண்ட {மத்தியப் பகுதியான நல்ல கைப்பிடியைக் கொண்ட} அந்த உத்தம தனுசானது {வில்லானது} மைதிலேயனால் {மிதிலையின் மன்னனான தேவராதனால்} தைவதைகள் அனைவரிடமும் யஜ்ஞப் பழமாக {வேள்வியின் பலனாக} வேண்டப்பட்டது[3].(12) இராகவா, வேள்விக்கொடையாகப் பெறப்பட்டு, அந்த நிருபதியின் {மன்னனான ஜனகனின்} வீட்டில் {தனுர் உத்ஸவத்தில் [ஆயுத பூஜையில்], சந்தனம் முதலிய} விதவிதமான நறுமணப் பொருட்களுடனும், அகிற்புகையின் தூமகந்தத்துடனும் அது வழிபடப்படுகிறது" {என்றனர்}.(13)
[1] நரசிம்மாசாரியார் பதிப்பின் அடிக்குறிப்பில், "முன்பு சிவன் இந்த வில்லைக் கொண்டு தக்ஷப்ரஜாபதியின் யாகத்தை அழித்தனன். தேவர்கள் சிவனை மனந்தெளியச் செய்து அந்த வில்லைப் பெற்றனர். தேவராதனென்னும் பெயர் கொண்டு முன்புள்ள ஒரு ஜநகமஹாராஜன் யஜ்ஞத்தினால் தேவர்களைக் களிக்கச் செய்து அத்தேவர்களிடமிருந்து அவ்வில்லைப் பெற்றனன். ஆகையால் சிவபிரானுடைய அவ்வில்லானது வம்சக்ரமமாக ஜநகமஹாராஜனிடத்தில் இருக்கின்றதென்று கருத்து" என்றிருக்கிறது.
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு ஸகல தேவர்களும் கூடி வந்து சிவபெருமான்தானே கொடுத்ததாக மஹேச்வரதீர்த்தவ்யாக்யநம்" என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ப்ரீத꞉ ச பகவானீசஸ் த்ரிஸூலீ நீல லோஹித꞉ ப்ரததௌ சத்ரு நாசார்தம் ஜநகாயாத்புதம் தனு꞉" என்று கூர்மபுராணத்திலும், "சாபம் ஸ்ஹம்போ꞉ தயாத் தத்தம்" என்று பத்மபுராணத்திலும் உள்ள வாக்கியங்கள், "ஜனகனின் {தேவராதனின்} யஜ்ஞத்தில் நிறைவடைந்தவனும், திரிசூலபாணியும், நீலகண்டனுமானவன் {சிவன்}, பகைவரை அழிக்கும் அற்புத வில்லை அவனுக்குக் கொடுத்தான்" என்று பிரமாணமாக இருக்கின்றன" என்றிருக்கிறது.
அவர்கள் இவ்வாறு சொன்னதும் அந்த முனிவரர் {முனிவர்களில் சிறந்த விசுவாமித்ரர்}, அந்த ரிஷி சங்கத்துடனும் {அந்த ரிஷிகளின் கூட்டத்துடனும்}, அந்தக் காகுத்ஸ்தர்களுடனும்[4] அங்குள்ள வனதேவதைகளிடம் விடைபெற்றுக் கொண்டு பயணத்தைத் தொடங்கும் வகையில்:(14) "நீங்கள் அருளப்பட்டிருப்பீராக {உங்களுக்கு மங்கலம் உண்டாகட்டும்}. நான் சித்திபெற்றதால் {என் வேள்வி நிறைவடைந்ததால்} இந்த ஆசிரமத்திலிருந்து {சித்தாசிரமத்திலிருந்து} ஜாஹ்னவியின் உத்தரதீரத்தில் {கங்கையின் வடகரையில்} உள்ள இமய மலையுச்சியை நோக்கிச் செல்லப் போகிறேன்" {என்று வனதேவதைகளிடம் சொன்னார்}.(15)
[4] 13ம் சுலோகம் வரை ராமனிடம், "மிதிலைக்கு வருகிறாயா?" என்று முனிவர்கள் கேட்கின்றனர். 14ம் சுலோகத்தில் ராமலக்ஷ்மணர்களுடன் விசுவாமித்ரர் புறப்படுகிறார் என்று சொல்லப்படுகிறது. இடையில் இராமனும், லக்ஷ்மணனும் "நாங்களுக்கும் மிதிலைக்கு வருகிறோம்" என்று உடன்பட்டிருக்க வேண்டும்.
முனிஷார்தூலரும், தபோதனருமான {தவத்தையே செல்வமாகக் கொண்டவருமான} கௌசிகர் {குசிகனின் வழித்தோன்றலான விசுவாமித்ரர்}, அதன்பிறகு வட திசையை நோக்கிப் பயணம் மேற்கொண்டார்[5].(16) இவ்வாறு புறப்பட்ட அந்த முனிவரைத் தொடர்ந்து நூறு வண்டிகளில் பிரம்மவாதிகளும் பிரயாணம் செய்தனர்.(17) சித்தாசிரமவாசிகளான மிருக கணங்களும், பக்ஷி கணங்களும் {விலங்குகளும், பறவைகளும்} மஹாத்மாவும், தபோதனருமான விஷ்வாமித்ரரைப் பின்தொடர்ந்து சென்றன. ஆனால் அந்த ரிஷி அந்த விலங்குகளையும், பறவைகளையும் திரும்பிச் செல்லச் செய்தார்.(18,19அ) அந்த முனிகணங்கள் அவ்வழியில் அதிக தூரம் சென்றதும் திவாகரன் {சூரியன்} மறையும் நேரத்தில் சோணையின் {சோணை ஆற்றங்} கரையில் வாசம் செய்தனர் {முகாம் அமைத்தனர்}[6].(19ஆ,20அ)
[5] மிதிலைக்குச் செல்பவர்கள் சித்தாசிரமத்தில் இருந்து வடக்குத் திசை நோக்கிச் செல்கிறார்கள் என்றால், சித்தாசிரமம் நிச்சயம் மிதிலைக்குத் தெற்கேதான் அமைந்திருக்க வேண்டும். எனில் 30ம் சர்க்கத்தின் 3ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்ட கூற்றுக்கு இது வலுசேர்ப்பதாகவே உள்ளது. அதே போல 29ம் சர்க்கத்தின் 9ம் அடிக்குறிப்பில் சொல்லப்பட்ட திபெத்தின் சம்பாலாவாக இஃது இருக்க முடியாது என்றும் தெரிகிறது.
[6] சித்தாசிரமத்திற்கும் மிதிலைக்கும் இடையில் இந்த சோணை ஆறு {அல்லது சோணே / சோணா ஆறு} இருந்தது.
அளவற்ற ஒளி பொருந்தி அவர்கள் தினகரன் {சூரியன்} அஸ்தமிக்கும்போது ஸ்நானம் செய்து {நீராடி, மாலை சந்தியா வேளையில் அக்னிஹோத்ரம் செய்ய} ஹுதாசனனை {அக்னியை} மூட்டி விஷ்வாமித்ரரை முன்னிட்டுக் கொண்டு அமர்ந்தனர்.(20ஆ,21அ) சௌமித்ரியும் {லக்ஷ்மணனும்}, ராமனும் அந்த முனிவர்களைப் பூஜித்து, மதிநிறைந்த விஷ்வாமித்ரரின் முன் அமர்ந்தனர்.(21ஆ,22அ) அப்போது மஹாதேஜஸ்வியான ராமன், தபோதனரும், முனிஷார்தூலருமான விஷ்வாமித்ரரை நோக்கி குதூகலம் மேலிட {பின்வருமாறு} கேட்டான்:(22ஆ,23அ) "பகவானே, அழகுடனும், செழித்து விளங்கும் வனத்துடனும் கூடிய இந்தத் தேசம் என்ன {யாருடையது}? இதைக் கேட்க விரும்புகிறேன். பத்ரமாக இருப்பீராக {உமக்கு மங்கலம் உண்டாகட்டும்}. இதை உள்ளபடியே சொல்வீராக" {என்று விசுவாமித்ரரிடம் ராமன் கேட்டான்}.(23ஆ,24அ)
நல்விரதம் கொண்ட அந்த மஹாதபஸ்வி {விசுவாமித்ரர்}, ராமனின் சொற்களில் ஊக்கமடைந்து, அந்தத் தேசத்தைக் குறித்த அனைத்தையும் ரிஷிகளின் மத்தியில் சொல்லத் தொடங்கினார்.(24ஆ,இ)
பாலகாண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள் : 24
Previous | Sanskrit | English | Next
By S. Arul Selva Perarasan at August 24, 2021
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
Labels: இராமன், பாலகாண்டம், விஷ்வாமித்ரர்
Location: Tiruvottiyur, Chennai, Tamil Nadu, India
Newer Post Older Post Home
Labels
அக்னி அம்சுமான் அம்பரீசன் அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இலக்ஷ்மணன் உமை கங்கை கசியபர் கபிலர் காதி கிருத்திகை குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சாந்தை சிவன் சீதை சுக்ரீவன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுனசேபன் சூளி தசரதன் தாடகை திதி திரிசங்கு திலீபன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மருத்துக்கள் மாரீசன் மோஹினி ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வஸு வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விஷ்ணு விஷ்வாமித்ரர் ஜனகன் ஜஹ்னு ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்
தேடுக
முழுமஹாபாரதம் முன்பதிவு
முன் பதிவு செய்ய
படத்தைச் சொடுக்கவும்
Click the picture to book your copy
இராமாயணம் குறித்து
♦ எழுத்தாளர் ஜெயமோகன்
♦ எழுத்தாளர் பா.ராகவன்
Blog Archive
Blog Archive December (2) November (28) October (26) September (28) August (44) July (22)
Followers
Total Pageviews
படங்களின் மூலம்
Contact Form
Name
Email *
Message *
Report Abuse
About Me
S. Arul Selva Perarasan
View my complete profile
காப்புரிமை
© 2021, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும். |
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
துரை வைகோவுக்கு இந்தப் பதவியை கொடுத்தே ஆகணும்... வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கும் மதிமுகவினர்.! | Durai will be giving this post to Vaiko... The dignitaries who will give crisis to Vaiko..!
Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Live TV
Languages
Live TV
Politics
Coronavirus
Tamil Nadu
Cinema
Video
Gallery
India
World
Sports
Life Style
Business
Crime
Technology
live TV
Tamil News
politics
துரை வைகோவுக்கு இந்தப் பதவியை கொடுத்தே ஆகணும்... வைகோவுக்கு நெருக்கடி கொடுக்கும் மதிமுகவினர்.!
மதிமுகவில் வைகோ மகன் துரை வைகோவுக்கு பொருளாளர் அல்லது துணைப் பொதுசெயலாளர் பதவியை வழங்க வேண்டும் என்று மதிமுகவினர் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
Asianet Tamil
Kovilpatti, First Published Oct 16, 2021, 9:24 PM IST
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ மதிமுகவில் பொறுப்புக்கு கொண்டு வருவதற்கான பணிகளை அக்கட்சியில் செய்துவருகிறார்கள். ஆனால், வைகோவுக்கு தன் மகன் அரசியலுக்கு வருவதற்கு விரும்பவில்லை என்று தெரித்திருக்கிறார். அண்மையில் செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், “கடந்த 56 ஆண்டுகாலப் பொது வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டுவிட்டேன். 28 ஆண்டுகளாகக் காரில் பயணம், நடைபயணம், ஐந்தரை ஆண்டுகள் சிறை வாழ்க்கை என என் வாழ்க்கையை ஓரளவு அழித்துக்கொண்டேன். என்னுடைய நிலை என் மகனுக்கு வர வேண்டாம்.
அதனால், அவர் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை. அரசியலுக்கு வர நான் அவரை (துரை வைகோ) ஊக்குவிக்கவில்லை. சில குடும்பங்களில் வாரிசுகளை அரசியலில் புகுத்துகின்றனர். சிலர் அவர்களைக் கொண்டுவர வேண்டும் என்று திட்டமிட்டு வேலை செய்கிறார்கள். துரை வராமல் தடுக்க எவ்வளவோ முயற்சித்துவிட்டேன். தற்போது அதையும் மீறி காரியங்கள் நடக்கின்றன.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் துரை வைகோவுக்கு, கட்சியின் துணை பொதுச்செயலாளர் அல்லது பொருளாளர் பதவி வழங்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். கோவில்பட்டியில் மதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. வைகோவுக்கு அழுத்தம் தரும் வகையில் மதிமுகவினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளனர்.
Last Updated Oct 16, 2021, 9:24 PM IST
MDMK
Vaiko
Durai vaiko
Cadres
Kovilpatti
Follow Us:
Download App:
RELATED STORIES
7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத தமிழ் பள்ளிக்கூடம் - நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு ..
"இதோட நிறுத்திக்கோ.. இல்ல தாங்கமாட்டா..." - அன்புமணியை வம்புக்கு இழுத்த திருப்பூர் எம்.பி. கே.சுப்பராயன்
அதிமுக கூட்டத்தில் நடந்தது என்ன? சி.வி.சண்முகம் அடிக்க பாய்ந்தாரா? அன்வர் ராஜா சொல்லும் விளக்கம்..!
எடப்பாடியார் மாவட்டத்திலேயே இப்படியோரு சம்பவமா? எரிமலையாய் வெடிக்கும் ஓ.பன்னீர்செல்வம்..!
டாஸ்மாக் செல்வோருக்கு செம ஆப்பு... அமைச்சர் மா.சு., வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!
Top Stories
7 ஆண்டுகளாக மின்சார வசதி இல்லாத தமிழ் பள்ளிக்கூடம் - நடவடிக்கை எடுக்குமா கர்நாடக அரசு ..
IND vs NZ டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரர்!அறிமுக டெஸ்ட்டில் வரலாற்று சாதனை படைத்த Shreyas Iyer
Valimai Update: அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்.... வருகிறது ‘வலிமை’ படத்தின் வேற மாறி அப்டேட்
Alya Manasa | சீரியலிலுமா? ; ஆல்யாவுக்காக ராஜா ராணி குழு எடுத்த முக்கிய முடிவு!!
IND vs NZ அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய Shreyas Iyer..! டீ பிரேக்கிற்கு முன் பிரேக் கொடுத்த சௌதி |
கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு பக்க வரிசைப்படுத்தல் | மறுப்பு
பதிப்புரிமை © 2012-2021 | கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு |
Place + in front of a word which must be found and - in front of a word which must not be found. Put a list of words separated by | into brackets if only one of the words must be found. Use * as a wildcard for partial matches.
Search for all terms or use query as entered
Search for any terms
Search for author:
Use * as a wildcard for partial matches.
Search options
Search in forums:
Select the forum or forums you wish to search in. Subforums are searched automatically if you do not disable “search subforums“ below.
Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் Payment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]Members Corner ஆன்லைன் வேலைகள் எங்கள் வங்கி விவரம் தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs] ஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய ஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்கSpecial Corner உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி. உதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு |
உண்மைக்கு புறம்பான செய்திகளையும் கட்டுகதைகளையும் பெண்கள் மீதான பாலியல்ரீதியான தாக்குதல்களையும் ,நல்லொழுக்கம் உள்ள புலபெயர் தமிழ் தேசிவாதிகள் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் இவ் இணையத்தளம் அண்மைய காலங்களில் செயல்பட்டு வந்தனை பலரும் அறிவார்கள் . |
Motorbikes நம்பமுடியாத அளவிற்கு வசதியானவை, ஆனால் ஒன்றை வாங்குவது இல்லை. இதனால்தான் ikman உங்கள் மீட்புக்கு வருகிறார். மோட்டார் சைக்கிள் வாங்குவதை நாங்கள் இலகுபடுத்துகிறோம் ikman இல் , Motorbikes களின் பட்டியல்களின் மிகப்பெரிய தொகுப்பு உள்ளது. க்கும் மேற்பட்ட விளம்பரங்கள் உள்ளன. நீங்கள் ஒரு குறிப்பிட்ட Brand இல் ஆர்வமாக இருந்தால், தேடல் முடிவுகளைச் செம்மைப்படுத்த அதைத் தேர்ந்தெடுக்கலாம். வாங்குவது மட்டுமல்லாமல், ikman இல் bike களை விற்பனை செய்வதையும் நீங்கள் கருத்தி்கொள்ளலாம். உங்கள் முடிவைப் பொருட்படுத்தாமல், நாங்கள் எப்போதும் உங்களுக்கு சேவையில் இருப்போம். எங்கள் சேவையைப் பற்றிய சிறந்த பகுதி என்னவென்றால், உங்களை எளிதாக்குவதற்காக விலை, நிபந்தனை (condtion), பதிவுசெய்த திகது, Model மற்றும் Brandகள் போன்ற பிரிவுகளில் விளம்பரங்களை நாங்கள் வகைப்படுத்தியுள்ளோம்.
இலங்கை இல் சிறந்த விலையில் மோட்டார்களை வாங்குவதற்கு
சிறந்த Brandகள் மற்றும் சிறந்த Model களை ikman இல் மோட்டார் தேடுங்கள். இலங்கையின் மிகப்பெரிய சந்தையாகும், ikman தனது வாடிக்கையாளர்களுக்கு Motorbikes களுக்கான சிறந்த சலுகைகளை வழங்க எப்போதும் தயாராக உள்ளது. எங்களால் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் சிபாரிசு செய்யப்பட்ட விற்பனையாளர்க் உங்களுக்கு அற்புதமான சேவைகளை வழங்குவார்கள்.
மோட்டார்களை எளிதாக ikman.lk இல் விற்கவும்
Ikman ஒரு விற்பனையாளருக்கு சிறந்த தளங்களில் ஒன்றாகும். இது ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, எனவே உங்கள் விளம்பரம் 2 நிமிடத்தில் ஒரு பெரிய கூட்டத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது. இருப்பினும், தெளிவான படம், நியாயமான விலை மற்றும் துல்லியமான மற்றும் நியாயமான விளக்கத்தை அமைப்பதை உறுதிசெய்க.
Bike Type, விலை மற்றும் Mileage மோட்டார் ஐ தேர்ந்தெடுக்கவும்
தெரிவுகளை தேடுவதன் மூலம் உங்களுக்கான சிறந்த Motorbike களை எளிதாகக் காணலாம். விலை, மைலேஜ் மற்றும் பல காரணிகள் உங்கள் தேடலை இலகுவாக்கும். |
வணக்கம். ஜெட் விமானம் ஏறி கண்டங்களைக் கடக்கும் கோமான்களும், குதிரைகளில் ஏறி அரிசோனா மாகாணத்தைக் குறுக்கும் நெடுக்குமாய் அளக்கும் கோமாளிகளும் ஒரே வாரத்தில் நம் நினைவுப் பெட்டகத்தினுள் புதைந்து போக - what next ? என்ற கேள்வியோடு காத்திருக்கிறோம் ! "காலம் தான் எத்தனை வேகமாய்க் குதி போட்டுச் செல்கிறது !!' என்ற தேய்ந்து போன டயலாக்கை எடுத்து விடாமல் - ஜூலையில் நமக்குக் காத்திருக்கும் காமிக்ஸ் விருந்துகள் பக்கமாய் பார்வைகளை ஓடச் செய்வோமே என்று நினைத்தேன் ! (ஜூன் மாதமே இன்னும் புலராத நிலையில் - ஜூலையைப் பற்றிய preview என்பது எனக்கே கொஞ்சம் ஓவராகத் தான் தெரிகிறது - ஆனால் கால்களில் நாமே சக்கரங்களைக் கட்டிக் கொண்டான பின்னே மெதுநடை போடுவது சுலபம் அல்ல தானே ?!) ஜூலையில் நமக்குக் காத்துள்ள இதழ்கள் நான்கு ! அதன் முக்கால் பங்கை "குதிரை பையன்கள்" ஆக்ரமித்துக் கொள்கின்றனர் - வெவ்வேறு பாணிகளில் ! நமக்கு நன்றாகவே பரிச்சயமான ஆக்ஷன் பாணியைக் கையில் எடுத்துக் கொள்பவர் டெக்ஸ் வில்லர் - "காவல் கழுகு" வாயிலாக ! புது அறிமுகமான மேஜிக் விண்ட் தலைகாட்டும் "ஆத்மாக்கள் அடங்குவதில்லை" கதையும் ஆக்ஷன் தான் எனினும், இது சற்றே மாறுபட்ட ரகம் ! கொஞ்சம் அமானுஷ்யம் ; கொஞ்சம் மாந்த்ரீகம் ; கொஞ்சம் செவ்விந்திய நம்பிக்கைகள் என்ற கலவையில் வரும் ஒரு வித்தியாசப் படைப்பு இது ! மூன்றாம் கௌபாய் - நமது ஒல்லியார் லக்கி - "பூம்-பூம் படலம்" மறுபதிப்பு மூலமாக ! ஜூலையின் இதழ் # 4 தான் இந்தக் கூட்டணியின் highlight ஆக இருக்கப் போகிறதென ஒரு பட்சி என் காதில் சொல்வதை உணர முடிகின்றது ! So நமது preview படலங்களை சன்ஷைன் கிராபிக் நாவலின் இதழ் # 3 - விரியனின் விரோதியிலிருந்து தொடங்குவது தான் சுவாரஸ்யமாய் இருக்குமென்று தோன்றுவதால் here goes :
நிஜத்தைச் சொல்வதானால் - இந்த XIII தொடரின் spin-off கதைகளின் மீது எனக்கொரு பெரிய அபிப்ராயம் இருந்ததில்லை ! இரத்தப் படலம் தொடரையே ஜவ்வு மிட்டாயாய் இழுக்கிறார்களே என்ற ஆதங்கம் எனக்கு பாகம் 14 முதற்கொண்டே தோன்றிய நிலையில் - அதன் உப கதாப்பாத்திரங்களைக் கொண்டு தனிப்பட்டதொரு கதை வரிசையா ? - ஆளை விடுங்க சாமி ! என்பது தான் எனது initial reaction ! ஆனால் இரத்தப் படலம் தொடர் மறுபடியும் துவங்கியான பின்னே, புதியதொரு ஓவியர் - கதாசிரியர் கூட்டணியில் கதைக்களம் தம் கட்டிப் புறப்பட்டிருக்கும் சூழலில் - கடந்தாண்டு நம் படைப்பாளிகளின் பாரிஸ் அலுவலகத்தில் நான் அமர்ந்திருந்த போது தான் "XIII மர்மம்" தொடரின் - "பில்லி ஸ்டாக்டன் " என்ற ஆல்பம் தயாராகி அதன் முதல் பிரதிகளை அவர்கள் பார்வையிடுவதைக் காண முடிந்தது ! ஏதேனும் பேச வேண்டுமே என்ற ரீதியில் "இந்த spin -off கதைகளுக்கான வரவேற்பு எவ்விதம் உள்ளது ?" என்று கேட்டு வைத்தேன் ! லேசான புன்முறுவலோடு - "XIII -கென உள்ள ரசிகர் படை இதனை பெரியதொரு வெற்றி கொள்ளச் செய்துள்ளது !" என்று சொன்னார்கள். அதிலும், சமீபமாய் (2012-ல் ) வெளியாகி இருந்த ஸ்டீவ் ரோலாண்ட் (காலனின் கைக்கூலி) ஆல்பம் பெரிய 'ஹிட்' என்று கேள்விப்பட்ட போது என் மண்டைக்குள்ளே சக்கரங்கள் சுழலத் தொடங்கின் ! இத்தொடரின் பிரதான ஆசாமிகளான ஸ்டீவ் ரோலாண்ட் + மங்கூஸ் தலை காட்டும் அல்பம்களின் மாதிரிகளை வாங்கிக் கொண்டு புறப்பட்டேன் ! ஊருக்குத் திரும்பியதும், இரண்டையுமே மொழிபெயர்க்கச் செய்து மேலோட்டமாய்ப் படிக்கத் தொடங்கிய போது தான் இவற்றின் வலிமை கொஞ்சம் கொஞ்சமாய் எனக்குள் sink in ஆகத் தொடங்கியது ! ஊருக்குத் திரும்பிய ஜோரில் "காலனின் கைக்கூலி" இதழ் முதலில் வெளி வருவதாய் விளம்பரமும் செய்திருந்தோம் ; but கதைகள் இரண்டையும் படிக்க முடிந்த போது தான் மங்கூசின் படலத்திலிருந்து துவக்கம் காண்பது தான் சரியாக இருக்குமென்பது புரிந்தது ! So விரியனின் விரோதி நம் திட்டமிடல்களுக்குள் அடியெடுத்து வைத்தது இவ்விதமாய்த் தான் ! இதோ இதழின் அட்டைப்படம் - ஒரிஜினலின் சிற்சிறு முன்னேற்றங்களோடு !
நடந்து முடிந்த சம்பவங்களைப் பின்னோக்கிப் பார்க்கும் முயற்சிகள் தான் கதை பாணியே என்பதால் முக்காலே மூன்று வீசம் flashback mode-ல் தான் உள்ளது ! மங்கூசின் பால்ய நாட்கள் ; அவனொரு கொலைகாரனாய் உருப்பெற்ற விதம் ; உலக யுத்தத்தின் முடிவைத் தொடர்ந்து 1950 -களில் உலகெங்கும் நிலவிய ஒரு வித இறுக்கம் ; அமெரிக்க ஜனாதிபதியைக் கொலை செய்ய சதி தீட்டப்பட்ட பின்னணி ; அதில் மங்கூசின் பங்கு என்று வெகு கோர்வையாய்க் கதையின் framework அமைக்கப்பட்டுள்ளது ! இவை அனைத்துமே மங்கூசின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளதால் சுவாரஸ்யம் இன்னமும் தூக்கலாய் இருப்பதை சீக்கிரமே நீங்களும் உணரப் போகிறீர்கள் ! சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! இரவின் நிசப்தத்தில் நியூயார்க் ரயில் நிலையத்தில் அரங்கேறும் கொலை ; பனி படர்ந்த பெர்லினின் வீதிகளில் மிளிரும் ஒரு மௌன பதைபதைப்பு என்று சிலாகிக்க ஏக விஷயங்களை ஓவியர் படைத்துள்ளார் ! வில்லியம் வான்சின் நுணுக்கங்களை நாம் எதிர்பார்க்காமல் திறந்த மனதோடு இதனுள் நுழைந்தால் நிச்சயம் எவ்வித நெருடல்களும் தோன்ற வாய்ப்பிராது ! பாருங்களேன் ஒற்றை பக்கத்தின் சின்னதொரு teaser !
இந்த இதழைத் தொடர்ந்து ஸ்டீவ் ரோலாண்டின் பார்வையிலான "காலனின் கைக்கூலி" வெளியாகும் போது - இரத்தப் படலத்தின் பின்னணி பற்றிப் புதியதொரு பரிமாணம் நமக்குக் கிடைக்கப் போவது உறுதி ! So இடியப்பம் தொடர்கிறது - புதியதொரு மணம் கமள !! Watch out guys !!
கடந்த (மினி) பதிவினில் நமக்கு காமிக்ஸ் மீதான மோகம் சற்றே குன்றி விட்டதோ ? என்பதானதொரு சிறு கேள்வியினை நான் எழுப்பி இருந்ததற்கு இங்கும், மின்னஞ்சல்களிலும் விளக்கமாய் நிறைய பதிவிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். ஆனால் எனது இந்த வினவல் - இங்கு நம் தளத்தில் சமீபமாய்க் குன்றி வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை மாத்திரமே மனதில் கொண்டு பின்னப்பட்ட ஒரு திடீர் கேள்வியல்ல ! மாமூலான பதிவுகளில் ; தொடரும் அதன் அரட்டைகளில் பங்கேற்கும் நண்பர்களது எண்ணிக்கை குறைந்து இருப்பின் அது எனக்குப் பெரியதொரு சங்கதியாகக் தெரிந்திருக்காது ; ஆனால் சமீப மாதங்களாகவே இதழ்கள் வெளியான பின்பு அதன் பொருட்டு அரங்கேறும் விமர்சனங்கள் ; விவாதங்கள் சிறிது சிறிதாய் ஈனஸ்வரத்தினுள் பயணிப்பதாய் தோன்றி வந்தது தான் சிக்கலே !அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது மாறி வரும் நாட்களின் தன்மையை பற்றி சிந்திக்காமல் இருக்க முடியவில்லை ! '90-களின் நடுவாக்கில் நமது லயன் & முத்துவில் வெளியான கதைகளின் பெரும்பான்மையை இன்று புரட்டிப் பார்த்தால் அவற்றுள் நிறைய 'செம சுமார்' ரகக் கதைகள் இருப்பது அப்பட்டமாய்த் தெரிகிறது. ஆனால் தட்டுத் தடுமாறி நாம் இதழ்களை வெளியிட்டு வந்த அன்றைய நாட்களில் - அந்த "சுமார்" சரக்கு கூட செம ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டவைகளாய் இருந்து வந்ததும், இன்றும் அவற்றைச் சேகரிக்க நண்பர்கள் முனைவதையும் நினைவு கூர்ந்த போது தான் "வாத்து பிரியாணி" சிந்தனை எனக்குள் முளைக்கத் தொடங்கியது ! ஆலையில்லா ஊரில் இலுப்பைப்பூக்களும் 'நச்' என்று இனிக்க ; இன்று சற்றே விசாலமான ஸ்வீட் ஸ்டாலில் நிற்கும் ஒரு தருணம் கிட்டியுள்ள போது நமக்கொரு மெல்லிய திகட்டல் நேர்ந்திருக்குமோ என்ற ரீதியிலான சிறு சந்தேகம் தான் எனது கேள்வியின் பின்னணி ! காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' என்று அவரவர் பாணியில் பதிவிட்டிருப்பது தொடரும் நம் பயணத்துக்கு ஒரு உற்சாக பூஸ்ட் !
Moving on, நமது லயனின் 30-வது ஆண்டுமலர் வேளையில் வழக்கம் போலவே பின்னே திரும்பிப் பார்க்கும் "டாப் இதழ்கள் " விளையாட்டில்லாமல் போகலாமா ? என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. சாவகாசமாய் நமது 230 இதழ்களின் பெயர் பட்டியலையும் எடுத்து வாசித்த போது அவற்றிலிருந்து எனது TOP 6 இதழ்களைத் தேர்வு செய்ய முனைந்தேன் ! நிறைய குழப்பமிருக்கும் ; எதைத் தேர்வு செய்வது ? என்ற திணறல் தலையிடும் என்று எதிர்பார்த்து அமர்ந்த எனக்கு ஒரு சந்தோஷ ஆச்சர்யம் - வெகு சுலபமாய் எனது favorite 6 இதழ்களைத் தேர்வு செய்ய முடிந்தது ! 'இது தான் முதல் இடம் ; இரண்டாம் இடம் !' என்றெல்லாம் வரிசைக்கிரமமாய் அவற்றை arrange செய்ய முனையாமல் அந்த 6 பெயர்களை வெறுமனே ஒரு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டேன் ! LMS வெளிவருவதற்கு முன்பாக இடைப்பட்ட நாட்களின் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு இதழைப் பற்றி எழுதலாமென்று நினைத்தேன் ! ஏற்கனவே அவ்வப்போது எனது choices பற்றி நான் எழுதியுள்ள போதிலும், ரசனை சார்ந்த விஷயங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுவது இயல்பே என்ற சால்ஜாப்பு என் கைவசம் இருப்பதால் - இவை எனது current choices என்று எடுத்துக் கொள்ளுங்களேன் ?! LMS இதழில் கூட இந்த TOP 6 இதழ்களுக்கென சில பக்கங்கள் ஒதுக்கவிருக்கிறேன் என்பதால் - உங்களது தேர்வுகள் ; உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? உங்களது all time favorite Top 6 இதழ்களைப் பட்டியலிடலாமே ? எனது பட்டியலின் முதல் இடத்தில் (தரவரிசையில் அல்ல!!) இருக்கும் இதழ் - இதோ இங்கே இளித்து நிற்கும் ஒரு ஆசாமியின் சாகசமே ! அது பற்றி - அடுத்த பதிவில் ! துவக்கம் மங்கூஸ் எனும் கூர்மண்டையனோடு என்றால் - ஸ்பைடர் எனும் இன்னுமொரு கூர்மண்டையனோடு இந்தப் பதிவுக்கு இப்போதைக்கொரு நிறைவைத் தருகிறேன் ! Catch you later folks ! Bye for now !
September 1984 release !
P.S: வாசக நண்பர் மகேஷ் கண்ணன் தன் இல்லத்துக் குட்டீஸ்களை படம் பிடித்து அனுப்பியுள்ளார் ! ஓரத்தில் இருக்கும் மஞ்சள் சட்டை மாவீரர் புரட்டும் பக்கத்தைப் பாருங்களேன் - கிரீன் மேனர் !! :-)
at 5/28/2014 02:28:00 pm
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
321 comments:
ratna 28 May 2014 at 14:47:00 GMT+5:30
wow
super post
ReplyDelete
Replies
Reply
discoverboo 28 May 2014 at 14:50:00 GMT+5:30
என்ன 20 நிமிஷமா கமெண்ட் எதுவும் இல்லையா! நான் தான் 1st ஆ!
ReplyDelete
Replies
Reply
discoverboo 28 May 2014 at 14:51:00 GMT+5:30
இல்லை! இல்லை! எனக்கு 2-வது இடம்!
ReplyDelete
Replies
Reply
Dasu bala 28 May 2014 at 15:05:00 GMT+5:30
லார்கோ & சிக் பில் கதைகள் அருமை.
ReplyDelete
Replies
Reply
Dasu bala 28 May 2014 at 15:16:00 GMT+5:30
//சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது'//
Comics காதல் & தேடல் என்றும் ஓயாது
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:57:00 GMT+5:30
காமிக்ஸ் வேறு காதல் வேறு அல்லவே !
Delete
Replies
Reply
R.Anbu 28 May 2014 at 19:38:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Reply
P.Karthikeyan 28 May 2014 at 15:25:00 GMT+5:30
டியர் சார்,
ஆவலைத்தூண்டும் அருமையான பதிவு!
XIII mystery ஒரிஜினல் புத்தகத்தை ஒரு நண்பர் வீட்டில் பார்த்திருக்கிறேன். மொழி புரியாவிட்டாலும் (ஆங்கிலத்தில் அல்ல) நன்றாகவே இருக்கும் என்று தோன்றுகிறது!
இந்த ஆண்டு இதுவரை வெளிவந்த இதழ்களில் இன்னும் நான்கு புத்தகங்கள் படிக்கவேண்டியுள்ளது. இதில் இந்த மாத இதழ்களும் அடக்கம்! இதற்கு காரணம், நேரமின்மையே தவிர, காமிக்ஸ் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது என்பதல்ல சார்!
பி.கு. : சூப்பர் சிக்ஸ் சந்தா இன்று ஆன்லைன் டிரான்ஸ்பர் மூலம் தங்கள் அக்கவுண்டுக்கு செலுத்தியிருக்கிறேன்!
ReplyDelete
Replies
Reply
R.Anbu 28 May 2014 at 15:29:00 GMT+5:30
அட அதுக்குள்ள புது பதிவா நம்பவே முடியல
ReplyDelete
Replies
Reply
R.Anbu 28 May 2014 at 15:32:00 GMT+5:30
என்ன ஒரு ஆச்சர்யம் இரு தினங்களுக்கு முன தான் எத்தனுக்கு எத்தனை திரும்ப படித்தேன்
ReplyDelete
Replies
Reply
திருப்பூர் புளுபெர்ரி (எ) திருப்பூர் நாகராஜன் 28 May 2014 at 15:41:00 GMT+5:30
//காமிக்ஸ் வாசிப்புக்கென நாம் ஒதுக்கிடும் அவகாசங்கள் இன்றைய பணிச் சூழல்களோடும் ; குடும்பத்துக்குச் செலவிட அவசியமாகும் நேரங்களோடும் போட்டியிட வேண்டியுள்ள யதார்த்தத்தை நிச்சயமாய் நான் மறந்திருக்கவில்லை ! But அதனையும் மீறி - இலை நிறையப் பதார்த்தங்களைப் பார்க்கும் போது நேரும் துவக்க உற்சாகமும், போகப் போக நேரும் திகட்டலும் நம் கதையினில் நிஜமாகிடக் கூடாதே ! என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு மட்டுமே எனது அந்தக் கேள்வி ! ஆனால் ஒருமித்த குரலில் நண்பர்கள் அனைவரும் அதனை மறுத்திருப்பது சந்தோஷமளிக்கிறது ! 'சலிப்புக்கு காமிக்ஸ் அகராதியில் இடமே கிடையாது' //
ஆதலினால் அதகளம் செய்வோம் ஈரோடு புத்தக திருவிழாவில் :)
ReplyDelete
Replies
Reply
Senthilmadesh 28 May 2014 at 15:44:00 GMT+5:30
அன்பு எடிட்டர்
என் காமிக்ஸ்! என் உரிமை! என்பது பற்றிய எங்களது குரல் உங்களை எட்டியது பற்றி மகிழ்ச்சி
போன பதிவின் இறுக்கத்தை குறைத்ததற்கு நன்றி
ReplyDelete
Replies
Reply
[email protected] 28 May 2014 at 15:49:00 GMT+5:30
i am 8th
ReplyDelete
Replies
Reply
D.Kanagasundaram 28 May 2014 at 15:52:00 GMT+5:30
மங்கூஸ் அறிமுகமே அசத்துகிறதே... டாப் 6 -ல் வரும் கதைகள் மறுபதிப்பாக வர வாய்ப்பு இருகிறதா எடிட்டர் சார்?
ReplyDelete
Replies
கரூர் சரவணன் 2 June 2014 at 07:58:00 GMT+5:30
தயவு செய்து ஒன்றாகவே வெளிவிட வேண்டும்.
Delete
Replies
Reply
Reply
T K AHMED BASHA 28 May 2014 at 15:56:00 GMT+5:30
Present sir
ReplyDelete
Replies
Reply
Palanivel arumugam 28 May 2014 at 16:00:00 GMT+5:30
hai sir welcome xiii...!
ReplyDelete
Replies
Reply
Palanivel arumugam 28 May 2014 at 16:01:00 GMT+5:30
erode ku 2full 1 half ticket ple...!
ReplyDelete
Replies
Reply
Kavind Jeeva 28 May 2014 at 16:06:00 GMT+5:30
superb post!!!
ReplyDelete
Replies
Reply
Srithar 28 May 2014 at 16:21:00 GMT+5:30
நமது காமிக்ஸ் இதழ்கள் Advance ஆக வருவது போல், நமது எடிட்டர் அவர்களும் பதிவுகளை Advance ஆக பதிவிடுவது... கோடை மலரும், தீபாவளி மலரும் ஒரே நேரத்தில் கைகளில் கிடைத்தது போல் உள்ளது. எத்தனை ஹீரோக்கள் இருந்தாலும் என்றும் சூப்பர் ஸ்டார் ஸ்பைடர் தான் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:56:00 GMT+5:30
=1
Delete
Replies
Reply
Reply
Rummi XIII 28 May 2014 at 16:29:00 GMT+5:30
//அதிலும் நாம் ஆவலாய் எதிர்பார்க்கும் இன்றைய டாப் ஸ்டார் லார்கோவின் இதழ் வெளியான பின்பும் ஒருவித தேக்க நிலை நிலவிய போது அந்த வெறுமை highlight ஆகித் தோற்றமளித்தது ! 'இன்னும் இந்த இதழைப் படிக்க அவகாசம் கிடைக்கவில்லை ! ; புரட்டி பார்க்க மட்டுமே நேரம் கிட்டி இருந்தது " என்ற ரீதியில் நண்பர்கள் அவ்வப்போது frank ஆக நேரில் சந்திக்கும் போதும், பின்னூட்டங்களிலும் சொல்லிடும் போது //
மிகப் பெரிய ஒரு விருந்து ஆகஸ்டில் காத்து கொண்டிருப்பதால் சிற்றுண்டிகளினால் வயிற்றை நிரப்பிக்கொள்ளாத ஒரு கட்டுப்பாடாக இருக்குமோ??
மங்கூஸ் நிச்சயம் ஆர்வம் கிளப்பும் ஒரு கதையாக இருக்கும் என்று பட்சி கூவுகிறது...
அதே சமயம் ஒவ்வொருவரின் கோணத்திலும் பார்க்கும் போது xiii ன் கடந்த காலம் இன்னும் குழப்பமாக இருக்குமோ என்று ஒரு பீதியும் கவ்வுகிறது....!!!
ReplyDelete
Replies
Reply
Rummi XIII 28 May 2014 at 16:35:00 GMT+5:30
TOP 6 கதைகளை பற்றி ஒன்றும் சொல்ல தெரியவில்லை...
காரணங்கள் 1. என்னிடம் பழைய புத்தகங்கள் ஏதுமில்லை...
2. படித்த கதைகளில் எது லயன் , எது முத்து என்ற குழப்பம் வேறு...
3. நான் தீவிர டைகர் ரசிகன்...!!
ReplyDelete
Replies
Reply
Rummi XIII 28 May 2014 at 16:40:00 GMT+5:30
ஜூலையில் படிக்க ஏதாவது புத்தகங்கள் உண்டா சார்???
இல்லை ஜூலையில் COMICS FASTING ?????
ReplyDelete
Replies
V Karthikeyan 28 May 2014 at 20:30:00 GMT+5:30
I think in July, we will get August books and August will be cleared off for the Great LMS
Delete
Replies
Reply
Reply
Erode VIJAY 28 May 2014 at 16:42:00 GMT+5:30
'விரியனின் விரோதி' எதிர்பார்ப்புகளை எகிறச் செய்கிறது. அட்டைப்படம் நன்று. குறிப்பாக, பின்னட்டையில் சிதறிக் கிடக்கும் அந்த ரத்தத்துளிகள் உண்மையானது போன்றே வசீகரிக்கின்றன. நேரில் பார்க்கும்போது முன்னட்டை இன்னும் நன்றாகக் காட்சியளிக்கக்கூடும்.
லார்கோ விமர்சனம் எண்ணிக்கையில் குறைவாய் இருப்பதற்கான காரணமாய் நான் கருதுவது:
* கனமான கதைக்களம் என்பதால் தொடர்ந்து படித்து முடிக்க சற்றே நிதானமான ஒரு ஓய்வுப் பொழுது தேவைப் படுகிறது.
* 'தொடர்' என்பதால் முந்தைய பாகங்களை நினைவுகூற அவசியப்படுமோ என்ற ஐயம் படிக்கும் முன்பே ஏற்படுகிறது. அந்த நினைப்பே புத்தகத்தைப் பிரிக்க சற்று தாமதப்படுத்துகிறது.
* 'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி!
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:55:00 GMT+5:30
//'தொடர்' என்பதால் முந்தைய பாகங்களை நினைவுகூற அவசியப்படுமோ என்ற ஐயம் படிக்கும் முன்பே ஏற்படுகிறது. அந்த நினைப்பே புத்தகத்தைப் பிரிக்க சற்று தாமதப்படுத்துகிறது.//
அதெல்லாம் மறந்து விட்டு தாராளமாக படிக்கலாம் ! ரசிக்க ஏராளம் உண்டு நண்பரே !
Delete
Replies
Reply
V Karthikeyan 28 May 2014 at 20:31:00 GMT+5:30
@Erode Vijay
// * 'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி! //
Fact! Fact! Fact!
Delete
Replies
Reply
Thamira 31 May 2014 at 12:46:00 GMT+5:30
'அதான் எல்லாத்தையும் சென்ஸார் பண்ணீட்டிங்களே, அப்புறமா படிச்சா கெடக்குது' என்ற நினைப்பும் கொஞ்சம் ஹிஹி!//
:-))))))))))))))))))
Delete
Replies
Reply
Reply
senthilwest2000@ Karumandabam Senthil 28 May 2014 at 16:52:00 GMT+5:30
மங்கூஸ் பற்றிய அறிமுக பக்கம் பரபரப்பை கிளப்புகிறது ! அவன் முகத்தில் தெரியும் innocence எப்படி ஒரு கொலைகாரனை மாறினான் என்பதே ஆவலை தூண்டும் விடயம்தான் !
ReplyDelete
Replies
Reply
R.Anbu 28 May 2014 at 18:25:00 GMT+5:30
top6 என்பது மிக குறைவு சார் வேண்டுமானால் டாப் 60 x2 என வைத்துக் கொள்ளலாம்
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:49:00 GMT+5:30
++++++++++60*2
Delete
Replies
Reply
Reply
Sridharanrckz 28 May 2014 at 18:40:00 GMT+5:30
Dear sir,i am very happy for ur post.because xiii mystery.l like very much please continue steve rolland,colonel amose,irina,little jones another one doubt who is billy staoctan idnt pls explain.pls dnt change lms list.yesterday i read nil ksvani sudu veryy exclent i enjoy eavh and every frsm by fram athirady nayagan tex,bravefull thairianathan karson,ilam puyal kit and maveeran tiger jack very good job.lam very enjoy.today night once again i read this.pls sir separate track laid- tex.thank u
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:49:00 GMT+5:30
சார், அருமையான மீண்டுமொரு அற்புதமான பதிவு !
கூர் மண்டயர்கள் என்றாலே உற்ச்சாகத்திர்க்கு பஞ்சமில்லை போலும் அன்று போலவே இன்றும் தொடரும் எண்ணங்கள் ! மங்கூசின் இந்த ஒரு பக்க கதை என்றோ ஒரு முறை நான் ரசித்த பாலகுமாரனின் , " குற்றம் என்பது மார்கழி மாதத்தின் முதல் சொம்பு தண்ணீர் போல , முதல் முறைதான் நடுங்க வைக்கும் , பின்னர் பழகி விடும் " எனும் வரிகள் நினைவில் வந்து போனது . அற்புதமான வரிகள் கட்டம் முழுதும் நிறைந்திருப்பதே பதிமூன்று என்பதனையும் தாண்டி ரசிக்க வைக்கிறது ! காத்திருக்கிறேன் ஆவலுடன் , இந்த ஒரு பக்க ரசிப்புடன் அடுத்த மாத டாப் வெளியீட்டுக்காக . அட்டை படம் இரண்டுமே அருமை ! அதிலும் நமது வண்ணச்சேர்க்கை இன்னும் தூக்கல் ! பின்னட்டையில் காயாமல் வடியும் ரத்தம் திகில் உணர்வை தருகிறது ! நான் பெரிதும் எதிர்பார்த்த காலனின் கைக்கூலியை விட விரும்பி எதிர் பார்க்கிறேன் ; உங்களது ஒரு பக்க வரிகளை ,அந்த 1950 பின்னணிகளில் எனும் உங்கள் பீடிகை வரிகளை படித்த பின் . மங்கூஸ் தன் பார்வையில் கூறப் போவது என்ன எனும் ஆவல் மனதில் தாளம் போடுகிறது , மீண்டும் ஒரு அற்புத பயணம் /உணர்வு தயார் என்று !
சார் டாப் சிக்ஸ் என்று கூறுவது உங்களுக்கே அதிகமாய் படவில்லையா ! அற்புதமான கதைகள் ஐம்பதுக்கு மேல் இருக்குமே ! விரைவில் வரிசை படுத்துகிறேன் !
பணி சுமை காரணமாயும் , திருமணத்திற்க்காக ஒரு நாள் வெளியூர் சென்றதாலும் இன்றுதான் அற்புதமான லார்கோவை படித்தேன் ! எப்போதும் பேருந்து பயணத்தில் கதைகளை முடித்து விடுவேன் , ஆனால் இந்த புத்தகம் கசந்கிடுமோ என்று எடுத்து செல்லவில்லை ! இப்போதைய இதழ் சிறிது கசங்கினாலும் , அட்டை மடங்கி கொடு விழுந்தாலும் மனதும் கசங்கிடுதே ஆசிரியரே ! கொஞ்சம் வேலை இருப்பதால் இன்று இரவு எனது பார்வையில் லார்கோ குறித்து இன்று எனது எண்ணங்களை பகிர்கிறேன் !
அப்புறம் அந்த போட்டோ சொல்லும் சேதி எனக்கு மட்டும்தான் இவ்விதம் படுகிறதா ~! மஞ்சள் சட்டை வீரர் , ஏன் சார் இதெல்லாம் என கேட்பது உங்களில் யாருக்கேனும் புரிகிறதா நண்பர்களே !
இந்த கூர் மண்டையன் இளிப்பு பவள சிலை மர்மம் வெளியான போது என்னிடம் சிறு வயதில் நான் பார்க்காத இது போன்ற புத்தகங்களை தந்து என்னிடம் இருந்த கதைகளை ஆட்டை போட்டு சென்ற சீனி வாசன் என்ற ஒரு நண்பரை(?) நினைவு படுத்த தவறவில்லை !
அப்படியே பசுமையான நினைவுகள் !
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 28 May 2014 at 18:51:00 GMT+5:30
சார் ஜூனில் ஜூலை வருமன்றோ !
Delete
Replies
Reply
Reply
leom 28 May 2014 at 18:59:00 GMT+5:30
sir, I dont remember which stories i read i didn't since from my childhood. But, I love comics.
ReplyDelete
Replies
Reply
Unknown 28 May 2014 at 19:04:00 GMT+5:30
டியர் எடிட்டர்,
ரெண்டு புத்தகங்களையும் படித்து விட்டேன். பைங்கிளி படலம் நன்றாக இருந்தது. ஆனால் லார்கோ பழைய பாகங்களில் இருந்த இதில் விறுவிறுப்பு இல்லை. கிட்டத்தட்ட திருவிழாவில் காணாமல் போன குழந்தையின் நிலையில், தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியாமல் லார்கோ இருப்பது பரிதாபமாக இருக்கிறது. அதனால் தெனாவட்டு வசனங்களும் இல்லை.
நிறைய இடங்களில் எழுத்து பிழைகள் .
1) வீடிnலி என்று நிறைய இடத்தில இருக்கிறது. இதை எப்படி வாசிப்பது
2) செக்யுரிட்டி, செக்யுரிட்டி என்று கத்த வேண்டிய இடத்தில் கெய்யுரிட்டி என்று தவறாக வந்துள்ளது. இவ்வளவுக்கும் பெரிய பாண்ட் வேறு.
3) உங்கள் போன பதிவிலேயே இருந்த படத்தில்இந்த தவறை சுட்டிக் காட்டினேன். அப்போதே அச்சாகிவிட்டதா என்று தெரியவில்லை. சேரிட்டி பாரிசில் என்று சொல்வதாக இருக்கிறது ஆனால் அவர்கள் இருப்பது வெனிசில் அல்லவா?
4) பைங்கிளி படலத்தில் ஆம்பளை அம்பளை ஆகி இருக்கிறது.
அச்சு தரம் மற்றும் பிழை களைவதில் கவனம் கொள்ளுங்கள் ப்ளீஸ்.
ReplyDelete
Replies
Raghavan 28 May 2014 at 21:34:00 GMT+5:30
டியர் எடிட்டர்,
சென்ற சில பதிவுகளுக்கு முன்னர் நான் தெரிவித்த கருத்தும் இதுவே - அச்சுத்தரம் மேம்பட்டு இருப்பினும் (சென்ற வருடத்தை விட) - அச்சுப் பிழைகள் பெருகிவிட்டன. நம் மறுவரவு ஆகி இரண்டரை வருடங்கள் ஆன நிலையினில் இவ்வாறான தவறுகள் களையப்பட வேண்டும்.
முன்பு proof read செய்ய ஒரு retired பள்ளி ஆசிரியரை பணி அமர்த்த இருப்பதாய் சொன்ன ஞாபகம்.
இனி வரும் இதழ்களில் அச்சேறும் முன் ஒரு முறையும் DRAFT அச்சான பின் ஒரு முறையும் proof read செய்தல் நலம். magnum ஸ்பெஷல் இவ்வாறு வந்தால் ரசிக்காது.
பணியாளர் பற்றாக்குறை இருப்பின் இணை மற்றும் துணை ஆசிரியர்களைக் கொண்டு ஒரு review committee அமைக்கலாமே.
Comic Lover
Delete
Replies
Reply
R.Anbu 29 May 2014 at 13:11:00 GMT+5:30
//magnum ஸ்பெஷல் இவ்வாறு வந்தால் ரசிக்காது.//
+1
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 23:08:00 GMT+5:30
//3) உங்கள் போன பதிவிலேயே இருந்த படத்தில்இந்த தவறை சுட்டிக் காட்டினேன். அப்போதே அச்சாகிவிட்டதா என்று தெரியவில்லை. சேரிட்டி பாரிசில் என்று சொல்வதாக இருக்கிறது ஆனால் அவர்கள் இருப்பது வெனிசில் அல்லவா? //
நண்பரே 9ம் பக்கம் ஈஃபில் டவருக்கு கீழே ஒரு முறை சென்று விட்டு அந்த பக்கங்களை புரட்டுங்களேன் !
Delete
Replies
Reply
Vijayan 30 May 2014 at 20:19:00 GMT+5:30
Raj Muthu Kumar S : சில வேளைகளில் உள்ளங்கையில் இருக்கும் விஷயங்கள் கூட அதையே தொடர்ந்து பார்த்து வருவோர்க்குத் தெரியாமல் போவதுண்டு ! தொடரும் இந்த embarassing எழுத்துப் பிழைகள் அந்த ரகமே ! நானும் சரி ; proof reader -ம் - சரி வாசித்த பின்பும் பிழைகள் தொடர்வதை சங்கடத்தோடு பார்க்கிறேன்....முயற்சிப்போம் இதனை ஒரு தொடர்கதை ஆகிடாமல் இருக்க !
அப்புறம் ஸ்டீல் க்ளா சுட்டிக் காட்டியதை இந்நேரம் கவனித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். லார்கோவும், சாரிடியும் இணைந்திருப்பது பாரிஸ் நகரில்..! படகுச் சவாரி செய்வது செய்ன் நதியினில். இரவு ரயிலைப் பிடித்து சாரிட்டி வெனிஸ் செல்ல, கோமானோ ஜெட்டில் நியூ யார்க் திரும்புகிறார் ! லார்கோ வெனிசில் கால் பதிப்பதே முதல் அத்தியாயத்தின் கடைசிப் பக்கத்தில் !
Delete
Replies
Reply
Reply
Sridharanrckz 28 May 2014 at 19:10:00 GMT+5:30
TOP SI X ( my view)
1.pavala silai murmum.- tex
2.karson,s past color edition - tex
3.vinveli pisasu - spider
4.dragan nagaram - tex
5.thigil nagaril tex
6.minnum maranam full story.color edition.
ReplyDelete
Replies
Reply
Madhiyilamandhiri 28 May 2014 at 19:12:00 GMT+5:30
ஜூனில் ஒரு ஜூலை ............
ReplyDelete
Replies
Selvam abirami 30 May 2014 at 18:59:00 GMT+5:30
தேனில் ஒரு ஆகஸ்ட் .......
Delete
Replies
Reply
Reply
saint satan 28 May 2014 at 23:27:00 GMT+5:30
டியர் எடிட்டர்ஜீ!!!
உற்சாகமான பதிவு.விரியனின் விரோதி அட்டைப்படம் அழகாக அச்சுறுத்துகிறது.பின்னட்டை ரத்தம் வழிய....ஹி..ஹி...வெரி ஹாரிபிள் ;-)
மற்றொரு கூர் மண்டையரான ஸ்பைடரின் எத்தனுக்கு எத்தன் வெளிவந்த 1984-இல் ட்ரவ்சர் பாக்கெட்டில் அப்புத்தகத்தை வைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்தில் என்னைவிட காமிக்ஸ் வெறியனான ரவி என்ற நண்பனுடன் சேர்ந்து படித்தது நேற்று நடந்த நிகழ்வு போல் பசுமையாக நினைவிருக்கிறது. 30-ஆண்டுகள் ஓடிப்போனதே தெரியவில்லை.
நடக்காது....நீங்கள் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும் ஒரு அற்ப ஆசையில் கேட்கிறேன்.ஒரே ஒருமுறை பாக்கெட் சைஸில்,குறைந்த பட்சம் 500 பக்கங்களில் ஒரு அருமையான ஸ்பெசல் இதழ் ஒன்றை வெளியிடுங்களேன்.இந்த ஆண்டில் முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டில் கோடைமலராக வெளியிட்டால் மிக மகிழ்வேன்.
ஸ்பைடர் ,ஆர்ச்சி ,மாடஸ்டி பிளைசி,சார்லி சாயர்,சிஸ்கோ கிட் போன்றோரின் கதைகளை பாக்கெட் சைஸில் படிப்பதில் உள்ள சுகம் பெரிய சைஸில் நிச்சயம் கிடைப்பதில்லை.ஆதலால்தான் அடியேனின் இந்த பாக்கெட் சைஸ் கோரிக்கை!!!
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 08:58:00 GMT+5:30
சினாரே , எனக்கு கூட ஒரு வாரத்திற்கு முன்னர் நிலவொளியில் ஒரு நர பலி படிக்கும் போது அதன் காம்பேக்ட் சைசால் உங்கள் எண்ணம் போலவே போல தோன்றியது ! அப்போதைய கால கட்டங்களில் நமது பாக்கெட் சைஸ் மிக சிறப்பாக தோன்றும் பிற காமிக்ஸ்கள் பெரிய சைசில் வந்த போது . அதிலும் நமது இரும்பு மனிதன் ஆர்ச்சி, கொலை படை ,சதி வலை/நதிக்கரை அரக்கன் போன்றவற்றில் முதலிரண்டும் இரு வண்ணத்திலும் , மூன்றாவது இதழ் கருப்பு வெள்ளை பெரிய சைசிலும் இருந்த போது அது போல பெரிய சைஸ் எப்போது வருமென ஏங்கியதுண்டு . இப்போது பெரிய சைஸை , ஒரே வண்ணமயங்களை பார்க்கும் போதும் அந்த கால கட்டத்தில் வந்த கதைகளை எண்ணி ஏங்குகிறோம் !
இக்கரைக்கு அக்கறை கருப்பு வெள்ளை எனினும் பச்சை !
நிச்சயமாக இப்போதைய எனது மன நிலையில்
//ஒருமுறை பாக்கெட் சைஸில்,குறைந்த பட்சம் 500 பக்கங்களில் ஒரு அருமையான ஸ்பெசல் இதழ் ஒன்றை வெளியிடுங்களேன்.இந்த ஆண்டில் முடியாவிட்டாலும் அடுத்த ஆண்டில் கோடைமலராக வெளியிட்டால் மிக மகிழ்வேன்.
ஸ்பைடர் ,ஆர்ச்சி ,மாடஸ்டி பிளைசி,சார்லி சாயர்,சிஸ்கோ கிட் போன்றோரின் கதைகளை பாக்கெட் சைஸில் படிப்பதில் உள்ள சுகம் பெரிய சைஸில் நிச்சயம் கிடைப்பதில்லை.ஆதலால்தான் அடியேனின் இந்த பாக்கெட் சைஸ் கோரிக்கை!!! //
+1
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 09:05:00 GMT+5:30
இது இருந்தா அது இல்லே ...
அது இருந்தா இது இல்லே ...
Delete
Replies
Reply
Vijayan 30 May 2014 at 20:05:00 GMT+5:30
saint satan : 30 ஆண்டுகளுக்கு முன்பாக நமது டிரௌசர் பாக்கெட்களும் சின்னவை ; அவற்றினுள் நாம் நுழைக்க முயன்ற பர்ஸ்களும் கனத்தில் ரொம்பவே மெலிந்தவை ! இன்று ஜாக்கி ஜட்டியோ..பட்டாப்பட்டி டிரௌசரொ - பெரிய பாக்கெட்களும், அதற்கேற்ற பர்ஸ்களும் புழக்கத்தில் இருக்கும் போது - why go back ?
Delete
Replies
Reply
V Karthikeyan 30 May 2014 at 21:06:00 GMT+5:30
// why go back ? //
For nostalgic sake + to read during travel :)
Delete
Replies
Reply
லக்ஷ்மி நாராயணன் 31 May 2014 at 14:51:00 GMT+5:30
எப்படி வந்தது? எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனாலும் உணவருந்தும்போது கண்டிப்பாக கையில் புத்தகம் இருந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் சிறார்களில் நானும் ஒருவன்.
சாப்பிடும்போது படிப்பது தவறு, அது உணவுக்கு நாம் அவமரியாதை செய்வது போல என்றெல்லாம் சொல்லியும், மிரட்டியும் பார்த்துவிட்டார்கள். இருப்பினும் இந்த பழக்கம் மாறவில்லை.
ஸோ, இப்படி சாப்பிடும்போது படிக்க எடுக்கும் புத்தகங்களில் பெரும்பான்மையானவை நமது காமிக்ஸ் புத்தகங்களே.
ஆனால் தற்போதைய புத்தகங்களை இவ்வாறாக சாப்பிடும்போது படிக்க முடிவதில்லை (ஒரு கையில் இந்த புத்தகங்களை அவ்வளவு சுலபமாக பிடித்து படிப்பது கடினமான செயல்). ஆனால் நமது பழைய பாக்கெட் சைஸ் இதழ்களோ, அல்லது சமீபத்திய 10 ரூபாய் இதழ்களோ அப்படி அல்ல.
அவற்றை சுலபமாக ஒரு கையில் பிடித்து படிக்க முடியும்.
ஒருவேளை இதனால்தான் எனக்கு பாக்கெட் சைஸ் புத்தகங்களை பிடிக்கிறதோ என்னவோ?
நண்பர்களுக்கும் இதுதானோ? புனித சாத்தானும் என்னைப்போல சாப்பிடும்போது புத்தகம் படிக்கும் பழக்கம் கொண்டவர்போல........
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:44:00 GMT+5:30
//எப்படி வந்தது? எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. ஆனாலும் உணவருந்தும்போது கண்டிப்பாக கையில் புத்தகம் இருந்தே ஆகவேண்டும் என்று அடம்பிடிக்கும் சிறார்களில் நானும் ஒருவன். //
நானும் கூட !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:45:00 GMT+5:30
ஆனால் துவக்கம் லயனால்தான் !
Delete
Replies
Reply
Ravi 2 June 2014 at 12:34:00 GMT+5:30
+1
Delete
Replies
Reply
Arun 3 June 2014 at 14:19:00 GMT+5:30
particularly I like 10 Rupees black and white books and 'gundu' books also.
Delete
Replies
Reply
Reply
சேலம் Tex விஜயராகவன் 29 May 2014 at 00:16:00 GMT+5:30
my top 6இதழ்கள் : 1.லயன் சூப்பர் ஸ்பெசல், 2.கோடை மலர் 1987, 3.லயன் சென்சுரி ஸ்பெஷல், 4.லயன் கெளபாய் ஸ்பெஷல், 5.கோடை மலர் 1986, 6.தீபாவளி மலர் 1986.
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 09:04:00 GMT+5:30
This comment has been removed by the author.
Delete
Replies
Reply
Reply
Texkit 29 May 2014 at 03:17:00 GMT+5:30
42nd
ReplyDelete
Replies
Reply
ரவீ 29 May 2014 at 11:13:00 GMT+5:30
டியர் ஆல்,
ஒரு சைகோலாஜிகல் த்ரில்லருக்கான அனைத்து தகுதிகளும் இந்த வீரியனின் விரோதிக்கு இருப்பதாக எனக்கு படுகிறது. இது எனது அனுமானமே தவிர, இதன் தாக்கம் கதையில் எவ்வளவு தூரம் உள்ளது என்று தெரியவில்லை. அந்த நோக்கத்தில் கதாசிரியர் கதையை நகர்த்தியிருந்தால் படிப்பதற்கு இது ஒரு சுவையான விருந்தாக இருக்குமென்று சொல்லலாம். பார்பதற்கு அல்ல.
சைகோலாஜிகல் த்ரில்லருக்கான ஓவிய பாணி நிச்சயம் மாறுபட்டிருக்க வேண்டும். ஓவியத்தில் ஒரு தனித்துவமான ஓவிய நளினம் (வான்சின் ஓவியத்தில் நளினத்தை விட நுணுக்கம்/perfection dominate செய்யும்) மற்றும் வண்ணங்களில் இன்னமும் கொஞ்சம் அழுத்தம் அவசியம்.
இந்த ஓவிய பாணி ஒரு வரலாற்றை பரிமாற சிறந்த ஸ்டைல். offcourse ஒரே பக்கத்தை வைத்தும் விளம்பர ஓவியங்களை வைத்தும் இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது தான். மற்ற பக்கங்களில் ஓவியங்கள் வீரியனின் விரோதியை விட இன்னமும் வீரியமாக இருக்கலாம். கடைசியாக சென்ற மாதம் சிக்பில் புத்தகத்தில் வந்த விளம்பரத்தில் ஓவியங்களில் லைட்டிங் effect வண்ணங்கள் அருமையாக இருந்தது.
//சித்திரங்களும் ஒரு மெல்லிய வசீகரத்தைச் சுமந்து கதை முழுவதிலும் பயணமாகின்றன ! //
:-),லெட்ஸ் வெயிட் & வாட்ச்! :-)
அட்டைப்படம் அருமையாக உள்ளது. இதற்கு ஒரு மேட் பினிஷ் கொடுக்க முடியுமா சார்??
//உங்களுக்கு அவை ரசிக்கக் காரணம் என்ன என்பது பற்றி பகிர்ந்திடலாமே - ப்ளீஸ் ? //
என்னை பொருத்தவரை நமது காமிக்சை பற்றி நினைக்கும் போது முதலில் தோன்றுவது மனதில் என்று அழியாமல் நிலைபெற்றிருக்கும் ஒரு சில புத்தகங்களில் வந்த ஒரு சில ஓவியங்கள் தான்.
ஸ்பைடர், பஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு குகையில் நுழையும் போது சிறிய,சிறிய அம்புகள் எங்கும் குத்தப்பட்டிருக்கும் போன்ற ஒருகாட்சி.
லாரன்ஸ்-டேவிட்டின் கதையில் டேவிட்டை நிற்கவைத்து,கைகளை உயரத்தூக்கி, இரண்டு பெரிய இரும்பு உருண்டைகளை கொண்டு இரண்டு கைகளையும் பிணைத்து,
சிறை வைத்திருக்கும் ஒரு காட்சி.
மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் பாம்பை லாரன்ஸ் மேல் ஒரு சந்நியாசி எறிய, திறந்த வாயுடன் பாம்பு கடிக்க வரும் ஒரு காட்சி.
மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் தென்னை மரத்தை வளைத்து கயிறுகளை கொண்டு இருவரையும் பிணைத்திருக்க, கயிறின் மேல் சர்க்கரை பாகை ஊற்றி எறும்புகளை கொண்டு கடிக்க வேடும் ஒரு காட்சி.
மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் சிறைசாலையில் ஒரு கைதி மேசை மேல் எழுதிக்கொண்டிருக்கும்போது, தரையில் ஒரு கல் ஆடுவதும், அதனடியில் ஒரு புதையலுக்கான வரைபடம் இருப்பதுமான காட்சி.
நாடோடி ரெமியில் பலூனில் பறக்கும் காட்சி மற்றும், நாயுடன் தப்பி ஓடும் காட்சி.
இயந்திரப்படையில் கையெறிகுண்டை இரும்புக்கை பிடிக்கும் காட்சி.
mr.jet டில் வில்லனின் ஷூவில் ஒட்டியிருக்கும் சிறிய மணல் துகளை தனது அனலைசர் கொண்டு ஆராய்ந்து அதனில் உள்ள கலவையை கண்டறியும் ஒரு காட்சி,
தங்க நகரத்தில் ஒரு காண்டாமிருகம்(?) ஹீரோ மேல் பாய்வதை போன்ற ஒரு காட்சி
பழிவாங்கும் பாவையின் வித்தியாசமான மேட் பினிஷ் அட்டை
பவளச்சிலை மர்மத்தில் செவ்விந்தியர்களை நூற்றுக்கணக்கில் சுடும் காட்சி
ஊடு சூன்யத்தில் ஜானி அணியும் வித்தியாசமான கண்ணாடி.
பொடியன் பில்லி லுக்கியிடம் அடி வாங்கும் காட்சி.
இன்னமும் சென்று கொண்டே இருக்கிறது நண்பர்களே. :-)
ReplyDelete
Replies
ரவீ 29 May 2014 at 11:54:00 GMT+5:30
இவற்றுள் எந்த புத்தகமும் தற்போது என்னிடம் இல்லை. ஒரு சில புத்தகங்கள் மறுபதிப்பில் வந்திருந்தாலும் முதல் முறை பார்க்கும் போது அவை ஏற்படுத்திய தாக்கத்தை மறுபதிப்பு சிதைக்கவே செய்தது.
உதாரணத்துக்கு லாரன்ஸ்-டேவிட்டின் "மஞ்சள் பூ மர்மம்" நினைவுகளில் அங்கொரு காட்சியும் இங்கொரு காட்சியுமாக தங்கியிருந்தபோது அந்த கதையின் மேல் இருந்த ஒரு இனம் புரியாத ஈர்ப்பு, பிறகு மறுபதிப்பில் படிக்கும் போது முழுமையாக கரைந்து விட்டது. :-(!
சிறுவயதில் நமக்கிருந்த புரிதலில் இந்த காமிக்ஸ் என்ற FANTASY உலகத்தை உள்வாங்கியபோது நம்கேற்பட்ட மகிழ்ச்சி,படபடப்பு,திகில்,ஆச்சர்யம் போன்ற உணர்சிகளால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக ஏற்பட்ட பிம்பம் ஒரு அருங்காட்சிப்பொருள் போல மனதினுள் பொத்தி,பொத்தி வைத்து ரசிக்கப்பட வேண்டிய ஓன்று.
அந்த பிம்பத்தை புதிதாக கழுவி, பெயின்ட் பூசி அழகு பார்பதென்பது அதை சிதைப்பதை போன்றது.
Delete
Replies
Reply
Selvam abirami 29 May 2014 at 17:14:00 GMT+5:30
விஸ்கி -சுஸ்கி ! லெட் என்ற பெயர் உள்ள வில்லன் ஹீரோ சிஸ்கோ கிட் என நினைக்கிறேன் (விந்தைதான் ! வில்லன் பெயர் நன்கு ஞாபகம் உள்ளது )
புஸ்தகம் பெயர் உங்கள் நினைவுக்கு வருகிறதா ?
Delete
Replies
Reply
Vijayan 30 May 2014 at 19:47:00 GMT+5:30
விஸ்கி-சுஸ்கி : //ஸ்பைடர், பஞ்சு போன்ற வடிவமுள்ள ஒரு குகையில் நுழையும் போது சிறிய,சிறிய அம்புகள் எங்கும் குத்தப்பட்டிருக்கும் போன்ற ஒருகாட்சி.// - பாதாளப் போராட்டம் ?
//லாரன்ஸ்-டேவிட்டின் கதையில் டேவிட்டை நிற்கவைத்து,கைகளை உயரத்தூக்கி, இரண்டு பெரிய இரும்பு உருண்டைகளை கொண்டு இரண்டு கைகளையும் பிணைத்து,
சிறை வைத்திருக்கும் ஒரு காட்சி.// - காணாமல் போன கடல் ?
//மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் பாம்பை லாரன்ஸ் மேல் ஒரு சந்நியாசி எறிய, திறந்த வாயுடன் பாம்பு கடிக்க வரும் ஒரு காட்சி.// FLIGHT 731 ?
//மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் தென்னை மரத்தை வளைத்து கயிறுகளை கொண்டு இருவரையும் பிணைத்திருக்க, கயிறின் மேல் சர்க்கரை பாகை ஊற்றி எறும்புகளை கொண்டு கடிக்க வேடும் ஒரு காட்சி.// FORMULA X-13 ?
//மீண்டும் லாரன்ஸ்-டேவிட் கதையில் சிறைசாலையில் ஒரு கைதி மேசை மேல் எழுதிக்கொண்டிருக்கும்போது, தரையில் ஒரு கல் ஆடுவதும், அதனடியில் ஒரு புதையலுக்கான வரைபடம் இருப்பதுமான காட்சி.// தலை கேட்ட தங்க புதையல் ?
பசுமையான நினைவுகளைக் கொணரும் இதழ்கள் தான் அனைத்துமே !
Delete
Replies
Reply
Vijayan 30 May 2014 at 19:59:00 GMT+5:30
விஸ்கி-சுஸ்கி : //சிறுவயதில் நமக்கிருந்த புரிதலில் இந்த காமிக்ஸ் என்ற FANTASY உலகத்தை உள்வாங்கியபோது நம்கேற்பட்ட மகிழ்ச்சி,படபடப்பு,திகில்,ஆச்சர்யம் போன்ற உணர்சிகளால் ஒவ்வொருவருக்கும் தனித்துவமாக ஏற்பட்ட பிம்பம் ஒரு அருங்காட்சிப்பொருள் போல மனதினுள் பொத்தி,பொத்தி வைத்து ரசிக்கப்பட வேண்டிய ஓன்று.//
நிறைய தருணங்களில் நான் பதிவிடும் சிந்தனைகளே !
ஆனால் இது வரை அவற்றைப் படித்தேயிரா புதிய வாசக நண்பர்கள் ஒரு பக்கமும் ; படித்திருந்தாலும் - பரவாயில்லை மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணத்தின் பொருட்டு அவை மறுபதிப்பாக வரட்டுமே என நினைக்கும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் வரை இந்த மறுபதிப்பு மோகம் குறையப் போவதில்லை என்பது உறுதி !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2014 at 20:01:00 GMT+5:30
// படித்திருந்தாலும் - பரவாயில்லை மீண்டும் ஒரு பின்னோக்கிய பயணத்தின் பொருட்டு அவை மறுபதிப்பாக வரட்டுமே என நினைக்கும் நண்பர்களும் சூழ்ந்திருக்கும் வரை இந்த மறுபதிப்பு மோகம் குறையப் போவதில்லை என்பது உறுதி ! //
++++++++++++++++
Delete
Replies
Reply
Reply
discoverboo 29 May 2014 at 11:29:00 GMT+5:30
யாரிடமாவது லயன் கௌபாய் ஸ்பெஷல் உள்ளதா? இருந்தால் வாங்கிக்கொள்ள நான் ரெடி...
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 29 May 2014 at 12:03:00 GMT+5:30
ஹி ! ஹி ! எல்லாரும் கோச்சடையான் பாரத்துக் கொண்டு இருக்க. நான்பாட்ஷா. பார்த்து கொண்டு இருந்திருக்கிறேன் .refresh. செய்ய வில்லை போலும் .என்ன ஒரு அறியாமை . நன்றி திரு விஸ்கி. சுஸ்கி. விரைவில் ஜோதியில் ஐக்கியமாவேன். . நாள்
ReplyDelete
Replies
Reply
Leon 29 May 2014 at 12:37:00 GMT+5:30
TOP 6
My choices
1. Tex Willer - Marana Thoothargal (one of my favorite Tex Willer story with his usual action)
2. Iratha Padalam Complete Collection (It is a fantastic read especially with complete story without any cliffhangers)
3. Tex Willer - Maranthin Munnodi (all 3 books) - i really loved the last fight between Tex and Swift Bear in Eamanin Ellail
4. Lucky Luke - Manthil Uruthi Vendum (good and different story, only issue was it came only n 2 colors)
5. Thotta Thesam from All New Special
6. Mega Dream Special - Kattril Karintha Kootam - Captain Tiger ( it is one of the great story in Tigers's adventure.)
These are just my choices from what are the books I have.
ReplyDelete
Replies
Reply
sham1881 29 May 2014 at 13:13:00 GMT+5:30
டெக்ஸ் வில்லரின் TRAGON நகரம் மற்றும் பவள சிலை மர்மம் & பழி வாங்கும் பாவை மற்றும் லாரன்ஸ் AND டேவிட் இன் காணாமல் போன கடல் AND ஸ்பைட்ர் கடத்தல் குமிழிகள் இவைகளையும் மறு பதிப்பு செய்யவும் .
ReplyDelete
Replies
Reply
R.Anbu 29 May 2014 at 15:16:00 GMT+5:30
பழி வாங்கும் பாவை
மறு பதிப்பாக வந்துவிட்டது
காணாமல் போன கடல் AND ஸ்பைட்ர் கடத்தல் குமிழிகள் மறு பதிப்பு செய்யவும்
+1
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 29 May 2014 at 15:40:00 GMT+5:30
பின்னூட்டம் அனைத்தையும் (ஆசிரியர் பதிவு
மட்டும் அல்லாது ) ஒரு வரியும் விடாது கமா
முற்றுப்புள்ளி வரை படித்து கருத்து தேன் அமுதை நாக்கு சப்பு கொட்டி அருந்திய பின்னரே தளத்தில் பதிவிடுவது என்பது எனது
கொள்கை .(வேறு வழி ! சொந்தமாக கருத்து
சொல்ல மண்டையில் சரக்கு வேண்டுமே? )
ஆகவே தாமதம் என்று சொன்னால் அது மட்டுமே காரணம் என சொன்னால் திரு விஸ்கி சுஸ்கி அடிக்க வருவார் .
விஸ்கி -சுஸ்கி ! மீண்டும் நன்றி பல்.நீங்கள் கொடுத்த link மூலமாகவே புது பதிவுக்கு வந்தேன் .இனி கைபேசியை மட்டுமே நம்பி இராது Landline broad band ஐயும் பார்த்து கொள்வேன் . cell phone ல் புது பதிவு load ஆஆகவில்லை . இரவு கலங்கி போன தேன்னவோ நிஜம் .மீண்டும் நன்றி .
ReplyDelete
Replies
Unknown 29 May 2014 at 17:24:00 GMT+5:30
//(வேறு வழி ! சொந்தமாக கருத்து
சொல்ல மண்டையில் சரக்கு வேண்டுமே? )//
ஹி ஹி ஹி வாருமையா மரமண்டயாரே ; உமது கொண்டை உம்மை காட்டி கொடுத்து விட்டதே .
Delete
Replies
Reply
Reply
Unknown 29 May 2014 at 21:12:00 GMT+5:30
சார்,
ஜூன் 20 முதல் 29 வரை திருநெல்வேலியில் புத்தகக் கண்காட்சி நடக்க இருக்கிறது. உங்கள் வருகை உண்டா?
ReplyDelete
Replies
Vijayan 30 May 2014 at 19:35:00 GMT+5:30
Bala K : அடடா..!! இது வரை நமக்குத் தெரியாதே இந்த அட்டவணை பற்றி ?!! முடிந்த விபரங்களைச் சேகரித்து அனுப்பிடுங்களேன் - ப்ளீஸ் ?
Delete
Replies
Reply
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 22:23:00 GMT+5:30
சினாரே ,
ஏற்கனவே ஒரு நண்பர் இந்த கதை கத்தரி போடவே இயலாது எனும் படி வருந்தி எழுதி இருந்தார் . அருமையாக கையாண்டு கதைக்கு சேதம் வராமல் பார்த்து கொண்டதற்கு நன்றிகள் ! நண்பர் கர்ணனின் கண்ணோட்டம் எப்படி இருக்குமோ தெரயவில்லை . அவரது எண்ணங்களை அறிய காத்திருக்கிறேன் .
புத்தக அச்சு தரம் பிரம்மாதம் ! ஆறாம் பக்கம் மட்டும் கொஞ்சம் கலர் டல்லாய் தெரிகிறது . பிற பக்கங்கள் வண்ணத்தில் முக்கி எடுத்தது போல அருமை .
கதை வழக்கம் போல சீறி பாய்கிறது சைமன் துணை இன்றி . இதில் சைமன் இல்லாத குறையை அதாவது லார்கோவை காக்கும் பொறுப்பை பட்லர் ஏற்று கொண்டிருக்கிறார் . எனினும் சைமன் இல்லாமல் வெளி விட்டதற்கு நமது இந்திய துணை கண்டனத்தின் சார்பாய் வான் ஹெம்மேவிற்கு ஒரு கண்டன கடிதம் வரைந்திடுங்கள்.
இதில் விஞ்ச் குழுமத்தை கட்டி காத்த அடுத்த ஒரு தலை பலியாகிறார் . லார்கோவை பழி வாங்க அவர் ஏற்படுத்திய ஹெய்ன்ஸ் பாத்திரம் அருமை . அதிலும் அந்த 62ம் பக்கம் அவர் கவிதை வாசித்து ,லார்கோவின் நன்றிகளை பெற்று ,பென்னி மேல் கொண்ட காதலை /அன்பை வெளி படுத்தி நெகிழும் போது ....திடுமென அவர் கொல்ல ப் பட ஒரு கணம் துடித்து விட்டேன் . கதாசிரியரை திட்ட தொடங்கி விட்டேன் என்றால் அந்த பாத்திரம் சாவதற்கு முன்னால் உள்ள அந்த ஒரே பக்கத்தில் கையை விரித்து கவிதை சொல்லி எனது மனதை கனக்க வைத்து விட்டார் . உங்கள் வசன நடையும் அதற்க்கு கை கோர்த்து உதவின என்றால் மிகை அல்ல ! அப்போது என் மனதில் தோன்றிய அடுத்த ஆறுதல் விஷயம் நல்ல வேளை இது சைமன் அல்ல என்றே ! வான் ஹெம்மேவிற்கு சைமன் நினைவிற்கு வராதது நமது பாக்கியம் . ஆமாம் பென்னிக்கு அவரின் இறப்பு தெரியுமா ?
அழகிய பெண்ணின் அன்மைதனை உதறி காதலியை காக்க பர பரப்புடன் செல்லும் லார்கோ நச் !
ஆனால் முடிவு சேக்ஸ்பியர் எனும் ஒரு வார்த்தையால் சப்பென முடிந்து விட்டது , ஆனால் அதற்க்கு அவர் போடும் சேசிங் சைமனுடன் பைக் சவாரி போவாரே அது போல பிரம்மாதம் ! இன்னும் கொஞ்சம் நீடித்திருந்தால் அதற்க்கிணையாய் இதுவும் இன்னும் அதிகமாய் தூள் கிளப்பி இருக்கும் !
லார்கோ வழக்கம் போல லார்கோதான் . அடுத்த கதை சைமனுடன் என்பதால் இன்னும் ஏக பசியுடன் காத்திருக்கிறேன் ! விரைவில் வெளி விடுங்கள் .
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 29 May 2014 at 23:11:00 GMT+5:30
பைங்கிளி படலம் வழக்கம் போல கார்ட்டூன் கதைகளின் அச்சு தரம் பக்கம் முழுவதும் அருமை ! சில பக்கங்களில் விழுந்து சிரிக்க வைக்கிறார்கள் ஓவியங்களாலும் , வரிகளாலும் ! சிக் பில் வரிசைகளில் மீண்டுமொரு அற்புதமான கதை ! ஆனால் இவர்களுக்கு பிரியாவிடை தர போகிறோம் என்பது ......
ReplyDelete
Replies
Vijayan 30 May 2014 at 19:32:00 GMT+5:30
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் : பிரியா விடை தரும் நேரமெல்லாம் அத்தனை சீக்கிரமாய் நெருங்கவில்லை நண்பரே...எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2014 at 19:59:00 GMT+5:30
ஓகே சார் !
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 29 May 2014 at 23:41:00 GMT+5:30
எடிட்டர். சார் !
spin off -என்றதும் டிஸ்னி வெளியிட்ட
Lion king ஞாபகம் வந்தது .அதில் Timon மற்றும் pumba என்ற உதிரி பாத்திரங்கள்
ஆல்பம் மற்றும் டெலிசீரியலாக வந்து சக்கைப்போடு போட்டன .அக்கு நாம டாட்டா
என்ற அப்பாத்திரங்களின் கொள்கை உலக
பிரசித்தம் .
அது போல் நமது வெளியீடுகளில் விரைவில்
வர இருக்கும் ரின் டின் கேன் மற்றும் காலனின் கைக்கூலி மற்றும் விரியனின் விரோதி ஆகியன மூலவர்களை மிஞ்சிய மகத்துவம் உள்ளவர்களாக. இருப்பார்கள். என நம்புகிறேன் .
இருபது
ReplyDelete
Replies
கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 30 May 2014 at 07:52:00 GMT+5:30
Hakuna matata =No worries for the rest of your life
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2014 at 18:36:00 GMT+5:30
ஹக்குன்னா மட்டாட்டா !
Delete
Replies
Reply
Reply
AKK 30 May 2014 at 00:01:00 GMT+5:30
Attention guys, this is for you all golden oldies lovers, especially Mr. Steelclaw, do go to this link and you can download Mandrake, The Phantom and "THE SPIDER"
Mandrake
http://oldcomicsworld.blogspot.in/search/label/Mandrake%20Comics%20English
The Phantom
http://oldcomicsworld.blogspot.in/2014/05/updated-dead-links_13.html
The Spider
http://oldcomicsworld.blogspot.in/search/label/Fleetway%20Super%20Library
Enjoy...
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 30 May 2014 at 18:36:00 GMT+5:30
நன்றி சார் !
Delete
Replies
Reply
Reply
Selvam abirami 30 May 2014 at 00:57:00 GMT+5:30
editor sir !
favorite top 6 பற்றி சொல்ல என் போன்றோர்க்கு வாய்ப்பு இல்லை .
ஆனால் நண்பர்களும் ஜாம்பவான்களும் சொல்வதை சுவாரஸ்யமாக கவனித்து கொண்டிருக்கிறேன் .
எல்லோரும் சொல்வதை பார்த்தால் பவள சிலை மர்மம் top 6-ல் இடம் பிடிக்கும் போல்
தெரிகிறது .
positive side -ல் பார்த்தால் அவர்கள் பாவம் !
படித்ததைதான் திரும்ப படிக்க போகிறார்கள் .
நாங்கள் புதிதாக 6 கதைகள் படிக்க போகிறோம் .
ReplyDelete
Replies
Selvam abirami 30 May 2014 at 15:16:00 GMT+5:30
சார் !
பயங்கர ஏமாற்றம் ! Top 6 favorites வெறும் பட்டியல் மட்டும் தானா ?
அது மறு பதிப்பிற்கான அச்சாரம் என சந்தோஷ கனவில் மிதந்திருந்தேன்.
90% இதழ்களாவது படித்து இருந்தால்
தானே best choose செய்ய முடியும். என தப்பு கணக்கு போட்டுவிட்டேன்.
படித்ததில் பிடித்தது !! என்றால் சொற்ப புத்தகங்கள் படித்து இருந்தாலும் விட்டேனா பார் நானும்
ரேஸில் கலந்து கொள்வேன் .
ரேஸில் கடைசியாக வந்தால் என்ன ?
ரேஸில் இருக்க வேண்டியதுதானே
முக்கியம் .
Delete
Replies
Reply
Vijayan 30 May 2014 at 19:30:00 GMT+5:30
selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?
Delete
Replies
Reply
Reply
SIVAKUMAR 30 May 2014 at 01:13:00 GMT+5:30
http://vimeo.com/79251740
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 1 June 2014 at 11:25:00 GMT+5:30
இதே மாதிரி சிவகாசி ஆபீசிலும் வரஞ்சு வைக்கலாம்ல ஆசான் ?
Delete
Replies
Reply
Reply
RAMG75 30 May 2014 at 09:26:00 GMT+5:30
பின்னூட்டங்கள் குறைந்ததற்கான காரணங்கள்
- கோடை விடுமுறைக்காக பலர் வெளி ஊர் சென்றிருக்கலாம். அதனால் இன்னும் புத்தகங்களைப் படிக்காமல் இருந்திருக்கலாம்.
-அல்லது வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் வெளியூர் சென்றிருப்பதால் தற்காலிக பிரம்மச்சாரிகள் சமையல் மற்றும் வீட்டு வேலைகளில் மூழ்கியிருப்பதால் காமிக்ஸ் படிக்க நேரம் கிடைக்காமலிருக்கலாம் :-)
- 20 நாட்களுக்குள் அடுத்த அடுத்த மாத காமிக்ஸ்களை எங்களுக்கு நீங்கள் அனுப்புவதால் உங்களின் வேகத்திற்கு எங்களால் போட்டியிட முடியாமல் இருப்பது
- லார்கோ ஒரு மெகா ஹிட் என்று ஏற்கனவே முடிவாகிவிட்ட நிலையில், இனி இந்தக் கதை நன்றாக இருந்தது என்று வெளிப்படையாக சொல்ல வேண்டிய நிலையில்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருக்கலாம்
எனது டாப் 5
-------------------
- மிஸ்டர் ஜெட்
- உலகப்போரில் ஆர்ச்சி
- பழி வாங்கும் பாவை (டெக்ஸ்)
- கடத்தல் குமிழிகள்
- ட்ராகன் நகரம் (டெக்ஸ்)
ReplyDelete
Replies
Vijayan 30 May 2014 at 19:26:00 GMT+5:30
RAMG75 : அட - ஒவ்வொரு காரணமுமே நியாயமானதொன்றாகத் தான் தெரிகிறது !
மிஸ்டர் Z !! வித்தியாசமான தேர்வு தான் !
Delete
Replies
Reply
Reply
ஜாலி ஜம்ப்பர் 30 May 2014 at 12:05:00 GMT+5:30
வாத்யாரே, சலாம் வாத்யாரே...
நான் புத்சா வந்துனுக்கீறேன்.... அத்தொட்டு அல்லாருக்கும் வண்க்கம் சொல்க்கிறேன்...
இப்பக்கி அப்பீட்டு... அப்பால நான் ரிப்பீட்டு
ReplyDelete
Replies
Selvam abirami 30 May 2014 at 14:42:00 GMT+5:30
வாங்க தோஸ்த் ! வாழ்த்துக்கள் ! !
Delete
Replies
Reply
saint satan 30 May 2014 at 21:55:00 GMT+5:30
வா வாத்யாரே !!! உன்ன மேரி ஆளுங்கதான் நம்ம பேட்டைக்கு வேணும் நைனா. இப்ப ரிப்பீட்டு கொடுத்துட்டு அப்பாலிக்கா சோக்கா நீ வா தொரெ. இம்மாம் பெரிய எணையத்துல தம்மாத்துண்டு கமெண்டு போடாம நீ பாட்டுக்கு நீட்டமா வூடுகட்டி அடி நைனா. நாஸ்டா துன்ன நாழியாச்சு.வரேன் வாத்யாரே!!!
Delete
Replies
Reply
Reply
Paranitharan.k 30 May 2014 at 14:03:00 GMT+5:30
சார் ...விரைவான பதிவிற்கு நன்றி .
விரியனின் விரோதி அட்டைப்படம் கொள்ளை அழகு ...கதையில் சித்திரம் "ரத்தபடலம் " ஓவியரே வரைந்திருந்தால் இன்னும் அட்டகாசமாக இருக்கும் என்ற நினைவும் ஓரமாக வருவதை தவிர்க்க முடிய வில்லை .
லயனின் டாப் 6 பற்றிய தங்களின் கருத்தை அறிய ஆவலோடு காத்து கொண்டு இருக்கிறோம் சார் .அதே சமயம் இங்கே தாங்கள் ஒவ்வொரு பதிவாக அதனை இட்டு பின்னர் புத்தகத்திலும் அதே பதிவு வருவது புத்தகத்தில் படிக்கும் போது சிறிது சுவாரஸ்யம் குறையும் என்பது ( எனது ) கருத்து .புத்தகத்தில் முதன் முறையாக உங்கள் டாப் 6 படித்தால் மகிழ்ச்சி கூடும் .
இந்த ஜூலை மாத இதழ்கள் நான்கும் அடுத்த மாதம் கிடைக்குமா என்பதை தாங்கள் தெளிவு படுத்தினால் இன்னும் மகிழ்ச்சி கூடும் எனக்கும் ..,நண்பர்களுக்கும் ...
எனக்கு பிடித்த லயன் டாப் 6 :
1) ட்ராகன் நகரம் 2) கழுகு வேட்டை 3) பழி வாங்கும் பாவை 4) பழிக்கு பழி 5) ரத்த வெறியர்கள் 6) நில் கவனி சுடு மற்றும் பல டாப் 6 ...
ReplyDelete
Replies
Vijayan 30 May 2014 at 19:24:00 GMT+5:30
Paranitharan K : ஜூலை மாத இதழ்கள் நான்கும் - ஜூன் 30-ம் தேதி !
அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !
Delete
Replies
Reply
Reply
சேலம் Tex விஜயராகவன் 30 May 2014 at 15:16:00 GMT+5:30
தனி இதழில் என்னுடைய டாப் 6: 1.பழி வாங்கும் புயல், 2.கார்சனின் கடந்த காலம் , 3.பவள சிலை மர்மம், 4.கழுகு வேட்டை, 5.இரத்தப்படலம்-5, 6.பூம் பூம் படலம் =உலகப்போரில் ஆர்ச்சி.
ReplyDelete
Replies
Vijayan 30 May 2014 at 19:22:00 GMT+5:30
சேலம் Tex விஜயராகவன் : "டெக்ஸ்" விஜயராகவனின் டாப் 6 தேர்வில் நான்கு டெக்ஸ் ! ஆச்சர்யமில்லை தான் !
Delete
Replies
Reply
சேலம் Tex விஜயராகவன் 30 May 2014 at 22:34:00 GMT+5:30
ஹி ஹி ஹி ங் சார் . 6ம் Tex தான் நினைத்தேன் சார் , ஆனால் புள்ளைங்க பிழைத்து போகட்டும் என்று ஒரு 2சீட்டு கொடுத்துள்ளேன் சார்.
Delete
Replies
Reply
Reply
ARVIND 30 May 2014 at 18:33:00 GMT+5:30
This month Largo plot too simple
Largo looked stale for first time
Also the printing not on par with en peyar largo
Chick bill can go for retirement after this story
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 30 May 2014 at 19:07:00 GMT+5:30
குற்ற சக்ரவர்த்தி ஸ்பைடர்
சட்டத்தின் காவலன் ஸ்பைடர்
என இதழ்களின் தரம் பிரித்து ஸ்பைடர்
அபிமானிகள். யாரேனும் ஒரு பட்டியல்
தாருங்கள் .
ReplyDelete
Replies
Reply
Anonymous 30 May 2014 at 20:00:00 GMT+5:30
to whomsoever it may concern (1)
நண்பர்கள் அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். நீண்ட விடுப்பும் ; உழைப்பற்ற நாட்களும் நம் சந்தோஷத்தை இரு மடங்கு கூலியாக கேட்கின்ற காலமிது. கண் இமை மூடி கண் இமை திறக்கும் காலத்தில், ஒரு நாள் என்பது அடக்கமாகி வருகின்ற உணர்வை நித்தம் பெறும் மாயலோகமாகி விட்டது நம் பூலோகம். இதில் மாதங்களும் ; வருடங்களும் கூட சில நாட்களாய் மறைகின்றன ; நேற்றையப் பொழுது என்பதே இல்லாமல் போய்விடுமோ என்று அச்சப்படும் வகையில் நம் பூமியின் சுழற்சி வேகம் நம் புலன்களுக்குள் அடங்க மறுக்கிறது !
இதில் நாம் அறிந்து செய்யும் தவறுகள் சில மட்டுமே என்றாலும் அறியாமல் செய்யும் பிழைகள் ஏராளம். செய்வது தவறு என்று நமக்கு புரியாத வரை நாம் அனைவருமே புத்தர்கள் தாம் - நம் மனதளவில். அது போன்றதொரு நிகழ்வை தான் இந்த மாதம் எனக்கு பாடமாக கற்பித்து நாளையோடு விடைப்பெறுகிறது. அது என்னவென்று அறிய, நீங்கள் காட்டும் ஆர்வத்தைப் போலவே நானும் அதை எழுதிட இங்கு சித்தமாக இருக்கிறேன்.
அதற்கு முன் இந்த பதிவில் பதிவிட்டிற்கும் அண்ணன் arumugam s அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வணக்கம் :)
ReplyDelete
Replies
Selvam abirami 31 May 2014 at 10:12:00 GMT+5:30
தளம் எல்லோராலும் நிரம்பி வழிய வேண்டும் என்பது என் பேரவா .
கருத்து சுமைகளின் கனம் தாங்காது
தளத்தின் வேலி எல்லையை ஆசிரியர் விரிவுபடுத்த வேண்டும் என்பது என் பேராசை .
அந்த வகையில் தங்கள் மீள் வருகை
இத்தளத்தை குதூகலத்தில் ஆழ்த்தும்
என்ற நம்பிக்கையுடன் அன்புடன்
வரவேற்கிறேன் .
Delete
Replies
Reply
Anonymous 31 May 2014 at 10:37:00 GMT+5:30
to whomsoever it may concern (2)
நண்பர்களே, singathin.blogspot.in என்ற எனது சமீபத்திய வலைதளத்தில் - நமது ஆசிரியர் விஜயன் அவர்களின் படைப்பான ''சிங்கத்தின் சிறு வயதில்'' தொடரை பதிவிட்டு வந்தது உங்களில் சிலருக்காவது தெரிந்திருக்கலாம். ஆனால் ஒருவரின் எழுத்தையோ அல்லது அவரின் படைப்பையோ - அவரின் அனுமதியன்றி வலையேற்றம் செய்வதோ ; scanning செய்வதோ அல்லது scanlation செய்வதோ copyright சட்டப்படி தவறு என்று எனக்கு உணர்த்தப்பட்டதால், உடனடியாக 21 பாகங்கள் பூர்த்தியடைந்த நிலையில் அந்த வலைதளத்தை 15 நாட்களுக்கு முன்பாக டெலிட் செய்து விட்டேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
மேலும், தவறான என் செயலுக்கு மிகவும் வருந்துகிறேன். நன்றி !
அன்புடன்
மிஸ்டர் மரமண்டை
Delete
Replies
Reply
Anonymous 31 May 2014 at 11:04:00 GMT+5:30
selvam abirami :
நன்றி நண்பரே. கவலையை விடுங்கள் அடிக்கிற அடியில் தாரை தப்பட்டையைக் கூட கிழித்து விடலாம் :)
Delete
Replies
Reply
ரவீ 31 May 2014 at 13:01:00 GMT+5:30
டியர் மிஸ்டர்.மரமண்டை,
நமது ஆசிரியர் சென்ற இதழ்கள் முதல் புதிதாக புத்தகத்தில் அறிவித்துள்ள copy-right அறிவிப்புக்கு மதிப்பளித்து, உங்களது பெருமுயற்சியில் நீங்கள் ஆரம்பித்த் சிங்கத்தின் சிறு வயதில் வலைத்தளத்தில் இருந்த பதிவுகளை பதிவிறக்கம் செய்தது பெரும் பாராட்டுக்குரியது.
இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியரே சிங்கத்தின் சிறு வயதில் தொடரின் ஆரம்பம் முதல் ஒவ்வொரு பகுதியாக தளத்தில் வெளியிட்டால் உரையாடலுக்கு வசதியாக இருக்கும்.
உதாரணத்துக்கு இந்த தொடரின் சென்ற பகுதில் 1986 தீபாவளி மலருக்காக வெளியிட்ட கதைசுருக்க விளம்பரத்தில் வந்த ப்ளுரசென்ட் மையின் தன்மை தற்போது எவ்வாறு இருக்கிறது என, அதை தற்போது வைத்திருக்கும் நண்பர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கான பதில் ஆசிரியருக்கு கிடைததாவென்று தெரியவில்லை.
Delete
Replies
Reply
Reply
Prem 30 May 2014 at 20:27:00 GMT+5:30
Sir,
Please take kind attention of this note. I've already sent a note 6 months ago, but seems you may not have read it.
I'm talking about a real problem about Foreign Subscription.
1. It takes 20-25 days after you send the book, before I receive it in USA because of customs etc., Agreed We cannot do anything
2. You keep announcing new books throughout the year. Great. We should continue doing this
3. New announcements, Postal price changes quickly drain our account and subscription is close to Zero. Again out of your control
4. You stop sending new books, but until 25 days I would not know that you haven't sent books. Completely avoidable
5. After 25 days, I call your office and they say you account is low, please send money.
6. Then I send money and wait another 25 days for the book, which is 45-60 days after the book is originally sent out to subscribers.
Either send us an email when our account is lower than Rs.1000 or some other way so that we get seamless access to subscription.
I'm open to any method, but want to make sure my subscription is sent out without fail.
- Prem
ReplyDelete
Replies
Reply
MKS.RAMM 30 May 2014 at 20:36:00 GMT+5:30
Ratha padalam (due to its story) ,
Ratha Bhoomi ( Story is the hero in this issue),
Marana Mull & Mandira Mandalam ( just for Tex Willer, no need to add any reason) ,
Coach Vandiyin Kathai (Lucky Luke),
Yaar ande mini Spider & Kadathal Kumiligal.
ReplyDelete
Replies
Reply
WillerFan@RajaG 30 May 2014 at 21:49:00 GMT+5:30
எனது பேவரைட் இதழ்கள்
1. அதிரடிப்படை
2. சாத்தான் வேட்டை (டெக்ஸ்)
3. ரத்தப்படலம் (XIII)
4. கொலைகாரக்கானகம் (பிரின்ஸ்)
5. புரட்சித்தீ (லக்கி)
6. பௌர்ணமி வேட்டை (பேட்மேன்)
ReplyDelete
Replies
Reply
Raghavan 31 May 2014 at 00:53:00 GMT+5:30
எனது டாப் 5:
- கர்சனின் கடந்த காலம் - for the most complete comic by Lion
- சூப்பர் சர்க்கஸ் - for the sheer novelty of those times - the best ever worth for Two Rupees !
- மிஸ்டர் ஜெட் - for the pictures
- சிரிக்கும் மரணம் - for the translated script (of The Killing Joke)
- புரட்சி தீ
ReplyDelete
Replies
Reply
D.Kanagasundaram 31 May 2014 at 10:15:00 GMT+5:30
எனது டாப் 6:
1.மனித எரிமலை
2.எத்தனுக்கு எத்தன்
3.மரண மண்டலம்
4.பழிவாங்கும் புயல்
5.ஒரு கோச் வண்டியின் கதை
6. கார்சனின் கடந்த காலம்
ReplyDelete
Replies
Reply
Parani from Thoothukudi 31 May 2014 at 10:40:00 GMT+5:30
விஜயன் சார், லார்கோ கதை இதுவரை வந்த லார்கோ கதைகளில் வெகுசுமார், முன் அட்டையில் குறிபிட்டது போல் ஆக்சன் கதை ஒன்றும் இல்லை; லார்கோவின் ஆக்சன் எங்கு உள்ளது என தேடவேண்டி உள்ளது. எல்லா கதாபாத்திரம்களும் பேசி கொண்டே உள்ளன.. காமிக்ஸ் கதைக்கு பதில் ஏதோ நாவல் படித்த உணர்வு.
நண்பர்கள் அச்சுதரம் பற்றி கடந்த சில மாதம்களாக நண்பர்கள் கூறிவருவது போல் நாம் அவற்றை களைவது நல்லது. நமது காமெடி நாயகர்கள் கதைகளில் வண்ண கலவைகள் குறைவு என்பதால் அவைகளின் அச்சு தரம் நன்றாக உள்ளது. ஆனால் வண்ண கலவைகள் அதிகம் உள்ள லார்கோ, டைகர், மற்றும் தோர்கல் போன்ற கதைகளில் வண்ணம்கள் பல இடம்களில் சிதறி உள்ளன, உதரணமாக சில இடம்களில் கதை பாத்திரம்களின் முகம்களில் அதன் பின்னால் உள்ள (backdrop) பொருள்களின் வண்ணம் பிரதிபலிக்கின்றன. நீங்கள் இதனை களைவதற்கு முயற்சி செய்வது அறிந்ததே, நமது LMS வரும் வேளையில் இதனை உடன் சரிசெய்வது நன்று.
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 31 May 2014 at 10:44:00 GMT+5:30
இந்த அச்சு குறைபாடுகள் சற்று கவனித்து பார்த்தால் தான் தெரியும், இந்த முறைதான் இவைகளை என்னால் கவனிக்க முடிந்தது.
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:42:00 GMT+5:30
நண்பரே எந்த பக்கங்களில் , கட்டங்களில் அந்த குறைகள் உள்ளன என கூறுங்களேன் ! நானும் எனது புத்தகத்தில் அந்த குறைகள் உண்டா என்று பார்க்கிறேனே ! கீழே மரமண்டை கூறியது போல நானும் எட்டாம் பக்கத்தில் கீழ் கட்டத்தில் இரவு நீல நிறம் பக்கம் முழுதும் வியாபித்திருப்பினும் அந்த fax mcல் பச்சை ஒளி மினுக்கிடுவது தெரியும் ! அற்புதமாக சிறு சிறு நுணுக்கங்களும் ரசிக்க உண்டு !
Delete
Replies
Reply
Parani from Thoothukudi 31 May 2014 at 22:23:00 GMT+5:30
ஸ்டீல், தமிழில் சரளமாக எழுத முடியாத காரணத்தால், நான் பெங்களூர் சென்றவுடன் உங்களுக்கு இது பற்றி போன் செய்து விளக்குகிறேன்.
Delete
Replies
Reply
Reply
Anonymous 31 May 2014 at 11:52:00 GMT+5:30
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா ! [ வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (1) ]
நீல நிறம்
பச்சை நிறம்
இள ஆரஞ்சு வர்ணம்
என ஒவ்வொரு பக்கத்திலும் வியாபித்து நிற்கும் வர்ணங்கள் - ஹாலிவுட் படங்களின் Light Effects போன்று அதகளம் செய்கிறது. அதிலும் லார்கோ முகத்தில் பிரதிபலிக்கும் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன் ஒளியாகட்டும் ; கப்பலின் உள் தளத்தில் ஒளிரும் விளக்கின் ஒளி பிரதிபலிப்பாகட்டும் ; ஓவியரின் கடின உழைப்பையும், வித்தியாசமான பாணியையும் நமக்கு உணர்த்துவதாக இருக்கிறது.
ஒரு நிமிஷம், இதை அச்சுக் குறைபாடு என்று யார் சொன்னது ?
பயணக் களைப்பும் ; உடல்நல குறைவும் கூட 'வேட்டை நகரம் வெனிஸ்'ஐ ஆர்வத்துடன் படித்து முடிப்பதை தடை செய்ய முடியவில்லை என்பதே உண்மை. உண்மை இப்படி இருக்க லார்கோ கதையில் முன்பிருந்த 3 ரோசஸ் [ திடம் ; மனம் ; சுவை ] இதில் குறைவு என்று பரவலான கருத்துகள் பதிவாவது எதனால் என்று யோசித்துப் பார்த்தேன். அதற்கு பிறகு வருவோம், அதற்கு முன் ;
ஆசிரியரும் நண்பர்களும் தங்கள் பதிவில் கூறியுள்ளபடி சென்சார் விஷயம் எனக்கு உறுத்தலாக இருக்கவில்லை. அதிலும் பொம்மைக்கு உடை அணிவித்த விஷயம் என் கண்ணில் தென்படவேயில்லை என்பதும் ஆச்சரியம் தான். அதற்கு ஒரே காரணம் லார்கோ வைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும் ?
ReplyDelete
Replies
Anonymous 31 May 2014 at 16:10:00 GMT+5:30
வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (2)
நண்பர்களே, 'யாரடி நீ மோகினி' என்ற படத்தில் வரும் ஒரு பாடல் மிகவும் பிரபலமான ஒன்று. 'எங்கேயோ பார்த்த மயக்கம் எப்போதோ வாழ்ந்த' என்ற பாடலில் நம் ஹீரோ 'தனுஷ்' தன் வாயில் ஈ போவதுக் கூட தெரியாமல் நயன்தாராவை வைத்தக் கண் வாங்காமல், நாடி நரம்பு என அனைத்தும் செயலிழந்து, உணர்விழந்து, மெய்மறந்து பாடல் முழுவதும் வழிந்து கொண்டிருப்பார்.
அது போல பக்கம் 27 முதல், மிஸ்டர் ஜராமாலே 'ஏழு சகோதரிகள்' பற்றியும் காலனின் கைக்கூலியான 'கேஸ்பெ' பற்றியும் உயிரைக் கொடுத்து லார்கோ விற்கு விளக்கிக் கொண்டிருப்பார். ஆனால் நம் ஹீரோ லார்கோ வோ அழகானதொரு பெண்ணை இதற்குமுன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்பது போல் அந்த பணிப்பெண்ணிடம் பக்கம் 34 வரை தனுஷை விட மோசமாக வழிகிறார். என்ன கொடுமை லார்கோ இது ?! இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் லார்கோ கடைசியாக கூறிய வார்த்தை என்ன ? அதன் தொடர்ச்சி தான் என்ன ? எடிட் செய்யப்பட்டு விட்டதா ? என்று நம் மண்டைக்குள் குறுகுறுவென்று அல்லாடும் விடை தெரியா பல கேள்விக்கு இங்கு விடை அளிப்பவர் தான் யாரோ ?!
கதையின் வேகத்திற்கும், ஆக்ஷனுக்கும், உச்சகட்ட பரபரப்பிற்கும் ஒரு சிறு உதாரணம் கூற வேண்டுமானால் - கதையின் இறுதியில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் 'ஷேக்ஸ்பியர்' என்ற வார்த்தையை ஈமெயில் மூலம் லார்கோ தன் செகரட்டரி பென்னிக்கு டைப் செய்வதைக் கூறலாம். நண்பர்களே கொஞ்சம் நினைத்துப் பாருங்கள், SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)
Delete
Replies
Reply
Anonymous 31 May 2014 at 16:31:00 GMT+5:30
வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (3)
புத்தகப் பிரியன் :
முன்பு ஒரு முறை நண்பர் புத்தகப் பிரியன் லார்கோ கதையப் பற்றி அபிப்ராயம் தெரிவிக்கும் போது - எதிர் வரப்போகும் லார்கோ கதைகளில் நம் கலாச்சாரத்திற்கு ஒவ்வாத விஷயங்களை ஆசிரியர் எப்படி கையாளப் போகிறார் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக மார்ச் 2012 ல் பதிவிட்டிருந்தார். அவர் குறிப்பிட்ட கதையில் இதுவும் ஒன்றா என்று அறிய விரும்புகிறேன்.
அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !
Delete
Replies
Reply
Selvam abirami 31 May 2014 at 18:34:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை !
மதியில்லா மந்திரியின் பின்னூட்டங்களை பலமுறை படிக்கிறேன் அவற்றில் கொப்புளிக்கும்
நகைச்சுவை உணர்வு காரணமாக.
உங்கள் பின்னூட்டங்களையும் பலமுறை
படிக்கிறேன் .
ஆனால் காரணம் வேறு .
1. உங்கள் தமிழ் நடையின் பிரவாளம் .
சில இடங்களில் பண்டைய பொன்னி
நதியின் ஆடிப்புனல் போல் ஆரவாரம்
செய்து செல்கிறது .
பிற இடங்களில் அதே நதியின் ஐப்பசி
பிரவாகம் போல் குழைந்து செல்கிறது .
2. இனம் புரியா கவர்ச்சியும் வசீகரமும்
உள்ள. பதப்பபிரயோகங்கள்.
அதிலும் முதல் பின்னூட்டத்தின் முதல் பகுதி ....... வாரே வா!! என்னை மிகவும் கவர்ந்த லாகவமான மொழி நடை .
பின்னூட்டங்களின் கருத்தாழம் குறித்து
என்னால் கூற இயலாது .ஏனெனில் எனக்கு inking ,coloring ,printing standard இது பற்றி எல்லாம் தெரியாது .
எங்கு தமிழ் கற்றீர்கள் சார் ?
அருமை !!அருமை !!
பதப்படுத்தும்
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:29:00 GMT+5:30
இருவருமே தமிழில் விளையாடுகிறீர்கள் ! அருமை !
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:48:00 GMT+5:30
//ஆனால் நம் ஹீரோ லார்கோ வோ அழகானதொரு பெண்ணை இதற்குமுன் தன் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை என்பது போல் அந்த பணிப்பெண்ணிடம் பக்கம் 34 வரை தனுஷை விட மோசமாக வழிகிறார். என்ன கொடுமை லார்கோ இது ?! இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் லார்கோ கடைசியாக கூறிய வார்த்தை என்ன ? அதன் தொடர்ச்சி தான் என்ன ? எடிட் செய்யப்பட்டு விட்டதா ? என்று நம் மண்டைக்குள் குறுகுறுவென்று அல்லாடும் விடை தெரியா பல கேள்விக்கு இங்கு விடை அளிப்பவர் தான் யாரோ ?!//
கதாநாயகியை விட அழகாய் காட்சியளிக்கும் அந்த பெண்ணிற்கு கொஞ்சம் இன்னும் அதிக சான்ஸ் தந்திருக்கலாம் !
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 1 June 2014 at 11:10:00 GMT+5:30
>>>>>>>>>>கொப்புளிக்கும் நகைச்சுவை உணர்வு காரணமாக..........??????????
அப்பிடியே மாத்தி படிங்க...........
வாய் கொப்புளிச்சு துப்புர மாதிரி நகைச்சுவை .................ஹி ஹி
Delete
Replies
Reply
Anonymous 1 June 2014 at 19:56:00 GMT+5:30
வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (4)
பொதுவாகவே லார்கோ கதைகளில் சில விஷயங்கள் தவறாமல் இடம் பெறும். அதில் சிலவற்றை கீழே காண்போம்:
1.உள்ளுக்குள் இருக்கும் பதற்றத்தை சிறிதும் முகத்தில் காட்டாமல், மகேந்திரசிங் தோணி போல் கூலாக காட்சி தருவது.
2.கடைசி 36வது பந்தில் விளையாட வந்தாலும் டொக்கு வைத்து ஆடிவிட்டு கடைசி ஓவரில் சிக்சர் அடித்து ஜெயிப்பது.
3. மகேந்திரசிங் தோணி போலவே அதிர்ஷடத்தை நம்பி ஒவ்வொரு கதையிலும் உயிர் பிழைப்பது அல்லது சாதிப்பது.
4. வாரம் ஒரு ஹேர்ஸ்டைலில் கலக்கும் மகேந்திரசிங் தோணி யைப் போலவே வாரம் ஒரு அழகியுடன் காட்சியளிப்பது.
5.எல்லா புகழும் லார்கோ வின்ச் என்ற தனி நபருக்கே. (எல்லா வெற்றியும் தோணி என்ற கேப்டனால் தான்)
பொதுவாகவே லார்கோ கதைகளில் - லார்கோ வினச் ன் தனிப்பட்ட அதிரடி ஆக்ஷன் மிகவும் குறைவாகத் தான் இருக்கும் என்பதை வாசககர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் அவரின் புத்தி சாதூர்யத்திற்கும், தைரியத்திற்கும் ஈடு இணையிருக்காது. கதை நெடுக வரும் கதாப்பத்திரங்களின் செயல்பாடுகளும், கதைக் கருவும், திட்டங்களும், அதிரடிகளும், சூழ்சிகளும், அதன் மறைமுக சூத்திரத்திரியும் தான் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் காரணிகள். ஒவ்வொரு கதையிலும் நடந்தேறும் அனல் பறக்கும் ஆக்ஷன் என்பது - அதன் கதைக் களம் தான் என்பது அப்பட்டமான உண்மை. எனவே லார்கோ வின்ஸ்லாவ் என்ற தனி மனிதனின் இன்றைய வெற்றிக்கும் புகழின் உச்சத்திற்கும் லார்கோ வின்ச் என்ற வாரிசு உரிமை மட்டுமே முழுமுதற் காரணம் என்பதை வாசகர்கள் புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் லார்கோ வின்ச் ன் கதைகள் மாதம் 6 வந்தாலும் நமக்கு சலிப்பு என்பதே ஏற்படாது. மேலும்..
Delete
Replies
Reply
Anonymous 1 June 2014 at 20:32:00 GMT+5:30
வேட்டை நகரம் வெனிஸ் - விமர்சனம் (5)
கதையின் தொடக்கத்தில் நமக்கு அளிக்கப்படும் தகவல் சுரங்கம் மட்டுமே லார்கோ நம்மிடையே இன்று நம்பர் 1 ஆக காட்சியளிக்க காரணம். கதாசிரியரை பாராட்ட இங்கு வார்த்தைகளே இல்லை. எவ்வளவு உழைப்பு ; எவ்வளவு அர்ப்பணிப்பு; எவ்வளவு பின்னணிகள் ; சலிப்புத் தட்டாத wikipedia ; கதையோடு நம்மை ஒன்றிணைக்கும் மந்திர வசனங்கள் ; ஆணிவேர் முதல் உச்சி கிளை வரை அலசி ஆராயும் லாவகம் ; அத்தனையும் சுவாரசியம் ; என்றும் விலகிவிடாத காமிக்ஸ் வசியம் ; அடடா அனைத்தையும் எடுத்துச் சொல்ல வார்த்தைகளும், தெளிந்து தெளிவாக்கும் சிந்தனையும் எனக்கு மிகவும் குறைவாக இருப்பதே என் காமிக்ஸ் ரசனை இன்று எல்லையற்று பரந்து விரிந்து, தமிழ் காமிக்ஸில் குவிந்து கிடக்கக் காரணம் !
எனவே எனதருமை சகோதர சகோதரிகளே, லார்கோ வின்ச் கதைகளில் வரும் நீளநீளமான வசனங்களே கதையின் உயிர்நாடி ; அதன் கதைக் கருவே கதையின் அழகான உருவம் ; அதன் வீரியம் சிறிதும் குறையாமல் மொழிபெயர்க்கும் நமது ஆசிரியர் விஜயனின் திகட்டாத தமிழே அதன் அனல் பார்க்கும் ஆக்ஷன் என்பதை உங்கள் முன் சத்திய பிரமாணம் செய்வதில் பெருமை அடைகிறேன். லார்கோ கதைகளில் என்னை மெய்மறக்கச் செய்து கதையோட்டத்தில் ஒன்றிணைப்பதே கதையில் வரும் தகவல் சுரங்கங்களும் ; நீளநீளமான வசனங்களும் ; அதை சுவாரசியமாக நமக்கு படிக்கத் தரும் தமிழ் மொழிபெயர்ப்பும் தான் என்பதே உண்மை.
லார்கோ கதைகள் என்றாலே - ஞாயிறு காலை டயட் டிலிருந்து மதியம் லஞ்சிற்கு, சிக்கன் பிரியாணி வித் லெக் பீஸ் - சிக்கன் 65 போன்லெஸ் & மட்டன் சுக்கா என ஃபுல் மீல்ஸ் கட்டு கட்டுவது போன்று அது ஒரு அலாதியான சுகம் :)
முடிந்தது.
Delete
Replies
Reply
Reply
ஜாலி ஜம்ப்பர் 31 May 2014 at 13:05:00 GMT+5:30
வணக்கம் வாத்யாரே,
அல்லாராட்டம் நானும் நமக்கு புட்ச்ச மொத ஆறு புக் இன்னான்னு ரோசனை பண்ணேன்... ஆனா ஒரே பேஜாரா பூட்ச்சு வாத்யாரே
கதெல்லாம் ஞாவகத்துல கீது... ஆனா பேரெல்லாம் மண்டைக்ககுள்ள வரமாட்னுது தல...
அத்தொட்டு நான் இன்னா முடிவு பண்ணிக்கீறேன்னா நமக்கு ஞாவகத்துல இருக்கறத ஸொல்வோம்... அத்தொட்டு அது இன்னா கதைன்னு வாதயாரே ஸொல்லுட்டும்...
வாத்யார் ஸொல்ரதுக்குள்ளார யார்னா ஸொல்ட்டா அவிங்களுக்கு எஞ்சார்பா வாத்யார் பிரைஸ் தர்வார்...
இன்னாமா கன்னுங்களா சர்தானா?
மொதல்ல - தலவாங்கி கொரங்கு
ரெண்டாவது - ஒரு மொட்ட பாஸ் வில்லன், அவனுக்ககு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான் - கதைல பைனாகுலர்ல பாத்து ஆள் பேசறத கண்டுபுடிப்பான்பா...இது என்னா கதெ?
3 வது - எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?
4 வது - நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா
5வது - நம்ம சருக்கு மண்ட பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?
6வது - பிளைட் 731
ReplyDelete
Replies
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:45:00 GMT+5:30
3 பயங்கர நகரம்
Delete
Replies
Reply
ஜாலி ஜம்ப்பர் 1 June 2014 at 10:52:00 GMT+5:30
டாங்சு அண்ணாத்த...
அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?
Delete
Replies
Reply
Madhiyilamandhiri 1 June 2014 at 11:07:00 GMT+5:30
அப்ப ரண்டாதும், அஞ்சாதும் ?...........சாய்ஸ்ல உட வேண்டியது தான்
Delete
Replies
Reply
Anonymous 1 June 2014 at 20:57:00 GMT+5:30
ஜாலி ஜம்ப்பர் :
மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை என்ற ஒரே காரணத்தினால் தான் நான் இங்கு விடையளிக்க நேர்ந்தது. எனவே கிடைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அல்லது கொடுக்க நினைக்கும் பரிசு எதுவாக இருந்தாலும் அதை உங்களுக்கே அர்ப்பணிக்கிறேன். நன்றி.
1.//மொதல்ல - தலவாங்கி கொரங்கு// சரியான விடை = King Kong
2.//ரெண்டாவது - அவனுக்கு காதும் கேக்காது, வாயும் பேசாது... ஆனா பார்ட்டி படா கில்லாடி... யார்னா பேசுனா அவங்க ஒதடு அசயறத வச்சே, பார்ட்டி பலானது பேசுதுன்னு கண்டுபுட்ச்சு ஆள போட்டுறுவான்// சரியான விடை = வாலி - வில்லனாக வரும் அண்ணன் அஜித்திற்கு காதும் கேட்காது வாயும் பேசாது. ஆனால் படா கில்லாடி. அவங்க உதடு அசைவதை வைத்தே அடுத்தவர் பேசுவதை கண்டுப் பிடித்து விடுவான்.
3.//எம்மாம்பெரிய டிரக் ஒண்ண எட்த்துக்கின்னு ரெண்டு தோஸ்த்துங்க, அவிங்களோட இன்னோர் தோஸ்த்த போட்டுதள்னவன போடறதுக்கு கௌம்புவாங்க - இது என்னா கதெ?// சரியான விடை = இணைந்த கரங்கள் - ராம்கியும், அருண் பாண்டியனும் ஒருடேங்கர் லாரியில் பாகிஸ்தான் சென்று பழி வாங்குவார்கள்.
4.//நம்ம கிழவாடி கார்ரசனோட கயந்த காலம்பா// சரியான விடை = சேரனின் - ஆட்டோகிராப்
5.//நம்ம பட்லர் டெஸ்மாண்டு புத்சா ஒரு லவ் மேட்டர்ல மாட்டி, அப்பால நம்ம பாசு ரிப்பு போய் காப்பாத்திகிட்டு இட்டுன்னு வருவாரு டெஸ்மாண்ட - இது என்னா கதெ?// சரியான விடை = காதல் கோட்டை - ஒருவர் முகம் ஒருவருக்கு தெரியாமல் காதலிப்பார்கள். பார்க்காமலே காதல்.
selvam abirami : மீண்டும் ஒரு முறை மனமார்ந்த நன்றி நண்பரே !
Delete
Replies
Reply
SIV 2 June 2014 at 13:37:00 GMT+5:30
5 - காசில்லா கோடீஸ்வரன்? ?
Delete
Replies
Reply
Reply
Thamira 31 May 2014 at 14:04:00 GMT+5:30
ஊரிலிருந்து இன்றுதான் திரும்பினேன்.வெனிஸ், பைங்கிளிப் புத்தகங்களை இப்போதுதான் பார்க்கிறேன். இனிதான் படிக்கவேண்டும். அட்டைப்படங்கள் இரண்டும் இந்த தளத்தில் பார்த்த இமேஜ்களை விடவும் அருமை! குறிப்பாக இங்கு பார்க்கையில் பைங்கிளி ரொம்ப ப்ளைனாக இருப்பதாக தோன்றிற்று. அது தவறு, நேரில் வியப்பாக இருந்தது.
இந்தப் பதிவின் அப்டேட்ஸ் தொடரும் இதழ்களுக்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. அதிலும் விரியனின் விரோதி அட்டைப்படம் ஒரு கிளாசிகல் தரம் எனலாம். என் பர்சனல் ஒபீனியனில் தொடரும் ஒரு தேடல் ஜோன்ஸ் அட்டைப்படம் போன்ற மிகச்சிலவற்றுள் இந்த அட்டைக்கும் இடமுண்டு. செண்டர் செய்யப்பட்ட தலைப்பு, பொருத்தமான ஃபாண்ட். கேரக்டரின் துல்லியம், ஃபீல், பின்புல வண்ணம், வேறு கவனச்சிதறலின்மை என ஒரு முழுமையான அட்டை.
டாப் 6 சொல்லுமளவுக்கு நான் சிறுவயதில் காமிக்ஸ் வாசிக்கும் வாய்ப்பைப் பெற்றவனில்லை, ஆகவே எஸ்கேப்!!
என்னதான் சமாளிபிகேஷன்ஸ் சொன்னாலும், பின்னூட்டமிட நிறைய ஆர்வமும், நேரமும் வேண்டும். இங்கே வசதியாக சில விவாதங்களும் ஓடவேண்டும். இல்லையெனில் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. ஆகவே பின்னூட்டக்குறைவை ஒரு எதிர்மறையாக தாங்கள் எண்ணிக்கொள்ளவே வேண்டாம். வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள். எப்போதும் உடனிருப்போம்.
நேரமின்மை ஒருபுறமிருப்பினும் எனது பின்னூட்ட ஆர்வக்குறைக்கு ஒரு காரணமும் உண்டு. இதனாலெல்லாம் என் காமிக்ஸ் ஆர்வம் குறையப்போவதில்லை எனினும் ஒரு சிறு மனக்குறை.. அதுதான், அதேதான்.. இந்த 60 ரூ ஸ்டேப்ளர் பின் அடித்த இதழ்களைப் பார்த்தாலே ‘அட போங்கப்பா’ எனும் எண்ணம் தோன்றிவிடுகிறது. வியாபார நோக்கில் அந்த இதழ்களே சாஸ்வதமாகிவிடப்போகின்றன என்ற உண்மையும் ஒரு சிறு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. அதுதான் காரணம். என் பெயர் லார்கோ, மரண நகரம் மிசௌரி தடிமன்கள் மனதிலாடுகின்றன.
சரி, அதை விடுங்கள்!!
காமிக்ஸ் பற்றிய ஒரு சுவாரசியமான செய்தி கேளுங்கள்.
http://www.bbc.co.uk/tamil/india/2014/05/140530_new_amazon.shtml
ReplyDelete
Replies
King Viswa 31 May 2014 at 14:18:00 GMT+5:30
For Follow Up.....
Delete
Replies
Reply
Reply
King Viswa 31 May 2014 at 14:17:00 GMT+5:30
நண்பர் முரளிதரன் அவர்களை ஆரம்பகால வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். 2012ல் நமது கம்பேக் ஸ்பெஷல் வந்தபோது இவர்தான் புதிய தலைமுறை டீவியில் முதல் பேட்டியை வெளியிட்டவர். இவர் தற்போது பி.பி.சி. தமிழில் பணிபுரிகிறார்.
இவரது பேட்டியின் கட்டுரை எழுத்தாக்கம் ( நண்பர் லக்கி லிமட், கிருஷ்ணா வா.வெ & ஜான் சைமன் ஆகியோரது கருத்துக்களை உள்ளடக்கியது இந்த பேட்டி, ஆனால் எழுத்துருவில் இவர்களது பேட்டியின் சாரம்சம் சேர்க்கப்படவில்லை).
தமிழகத்தில் காமிக்ஸ் பிரியர்களுக்கு அடித்த யோகம்: 10 மடங்கு மலிவாக கிடைத்த காமிக்ஸ் புத்தகங்கள்
இணைய தளங்களில் பொருட்களை வாங்கினால் விலைகள் குறைவாக இருப்பது வழக்கம்தான். ஆனால், புத்தகங்களை விற்பனை செய்யும் ஒரு இணையதளம் நம்ப முடியாத, மிக மலிவான விலையில் காமிக்ஸ் புத்தகங்களை விற்பனைசெய்து, வாசகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய சம்பவம் இந்தியாவில் நடந்திருக்கிறது.
புத்தகங்களையும் பிற பொருட்களையும் விற்கும் சர்வதேச இணையதளமான அமேசான் இந்தியாவுக்கென பிரத்தியேகமான இணைய தளம் ஒன்றை நடத்திவருகிறது.
கடந்த மே 19ஆம் தேதி இரவு 9 மணியளவில் இந்த இணைய தளத்தைப் பார்த்த காமிக்ஸ் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. உலகப் புகழ் பெற்ற ஆஸ்ட்ரிக்ஸ் காமிக்ஸ் வரிசையின் ஒட்டுமொத்த புத்தகங்களும் அதாவது 34 புத்தகங்களும் வெறும் 999 ரூபாய்க்கு கிடைக்கும் என இணைய தளம் கூறியது.
ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர்.
இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்.
இணையதளத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்கள்
மே 19ஆம் தேதியன்று வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே இந்த விலை இருந்தது. பின்னர், அந்த தவறு சரிசெய்யப்பட்டது. புத்தகங்களின் விலை 9,500 ரூபாய் என இணையதளம் குறிப்பிட்டது.
ஆனால், மறுபடியும் அடுத்த நாள் அதாவது மே 20ஆம் தேதியன்றும் இரவு 9 மணிக்கு மீண்டும் 999 ரூபாயைக் குறிப்பிட்டது இணைய தளம். அப்போதும் சிலர் அந்தப் புத்தகங்களை ஆர்டர் செய்தனர். ஆனால், இந்த இரண்டு வாய்ப்புகளையுமே பெரும்பாலான காமிக்ஸ் ரசிகர்கள் தவறவிட்டுவிட்டனர். அவர்கள் இப்போது மீண்டும் அந்த இணையதளத்தையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழ்நாட்டில் 80களில் காமிக்ஸ் படிக்கும் பழக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. 90களின் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்த தமிழ் காமிக்ஸ்கள் தற்போது மீண்டும் எழுச்சி பெற்றுள்ளன.
பெரும்பாலும் ஐரோப்பிய காமிக்ஸ்கள் மொழியாக்கம் செய்யப்பட்டே தமிழில் வெளியாகின்றன. இருந்தபோதும். தமிழில் அந்த காமிக்ஸ்களைப் படிக்க ஆரம்பித்த வாசகர்கள், அதன் ஆங்கிலப் பதிப்புகளையும் தேடிச் செல்கின்றனர்.
தமிழில் வெளிவராத ஆங்கில காமிக்ஸ்களையும் தேடி வாங்குகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தேடலில்தான் அவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
ReplyDelete
Replies
Selvam abirami 31 May 2014 at 19:09:00 GMT+5:30
என்னதான் இருந்தாலும் காமிக்ஸ்
ஆர்வம் கரை புரண்டு ஓடினாலும் பலர் ஏற்கெனவே சொன்னது போல்
தாய் மொழியில் படிப்பது போல ஆத்மார்த்தமான சுகானுபவம் பிற
மொழியில் படிக்கும்போது கிடைப்பதில்லை .
Delete
Replies
Reply
கிருஷ்ணா வ வெ 1 June 2014 at 20:27:00 GMT+5:30
எதிர்பாராமல் அமேசான் கொடுத்த பரிசு.
எங்களது குரல்களை பதிவு செய்து வெளியிட்டதற்காக நன்றி திரு முரளிதரன்.
Delete
Replies
Reply
Reply
Dasu bala 31 May 2014 at 15:04:00 GMT+5:30
///பின்னூட்டமிட நிறைய ஆர்வமும், நேரமும் வேண்டும். இங்கே வசதியாக சில விவாதங்களும் ஓடவேண்டும். இல்லையெனில் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கத் தோன்றுகிறது. ஆகவே பின்னூட்டக்குறைவை ஒரு எதிர்மறையாக தாங்கள் எண்ணிக்கொள்ளவே வேண்டாம்.///
+1 This is true....
ReplyDelete
Replies
Reply
senthilwest2000@ Karumandabam Senthil 31 May 2014 at 16:39:00 GMT+5:30
எனது டாப் 6 தேர்வுகள் : சதுரங்க வெறியன் (spider), நீதிகாவலன் spider, பரலோகத்திற்கு ஒரு பாலம், தணியாத தணல் series, அதிரடி படை , கடத்தல் குமிழிகள்
ReplyDelete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 31 May 2014 at 19:51:00 GMT+5:30
ஸ்பைடரின் கதைகளே பத்துக்கு மேல் தேறும் ! என்ன செய்யலாம் !
ReplyDelete
Replies
Parani from Thoothukudi 31 May 2014 at 23:37:00 GMT+5:30
on the டூ திருச்செந்தூர்ல (பஸ்ல ஏறி 50 நிமிஷத்துல) அதுக்குள்ள என்ன திருச்செந்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் :-)
இது எல்லாம் கள்ளாட்டம் :-)
பாஸ் நம்ப ஊரு பக்கம் கொஞ்சம் கவனமா இருங்க.. பயபுள்ளைங்க ரொம்ப கோபகாரன்க..
Delete
Replies
Reply
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 4 June 2014 at 06:03:00 GMT+5:30
அன்பு மலர்கள் ....
Delete
Replies
Reply
Reply
Kavind Jeeva 31 May 2014 at 21:09:00 GMT+5:30
My top 6
#1 Maranamul -Tex
#3 sirithu kolla vendum-Bat Man
#3 Soolthnuku oru saval-marthi i.manthiri
#4 Sarthan Vettai-Tex
#5 Nizhal 1 Nijam2
#6 Irathapadalam-2013
ReplyDelete
Replies
Reply
King Viswa 31 May 2014 at 21:22:00 GMT+5:30
நிறைய நண்பர்கள் இங்கே தங்களது லயன் காமிக்ஸ் டாப் 6 இதழ்களை தெரிவிக்கிறார்கள். மிகவும் மகிழ்ச்சி.
ஆனால் அவற்றுள் பல திகில் காமிக்ஸ், மினி லயனில் வெளிவந்தவையாக இருப்பதுதான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது. உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை.
கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்.
ReplyDelete
Replies
saint satan 31 May 2014 at 21:56:00 GMT+5:30
டியர் விஸ்வா!!!
திகில்,மினி லயன்,ஜூனியர் லயன் மூன்றுமே அல்பாயிஸில் பூட்ட கேஸ் என்பதால் அந்த இதழ்களில் வெளிவந்த கதைகளையும் லயன் வகையறா பட்டியலில் சேர்ப்பதில் அடியேனால் தவறொன்றும் காணமுடியவில்லை. அந்த மூன்று இதழ்களையும் மறக்க இது ஒன்றுதான் வழி!!!
"பழைய திகில்,மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களை படிக்கும்போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.சான்ஸே இல்லை...என்ன அட்டகாசமான கதைகள்!!!"
Delete
Replies
Reply
T K AHMED BASHA 31 May 2014 at 22:03:00 GMT+5:30
//"பழைய திகில்,மினி&ஜூனியர் லயன் காமிக்ஸ்களை படிக்கும்போதெல்லாம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.சான்ஸே இல்லை...என்ன அட்டகாசமான கதைகள்!!!//
Same blood....
Delete
Replies
Reply
Reply
King Viswa 31 May 2014 at 22:12:00 GMT+5:30
//துக்கம் தொண்டையை அடைக்கிறது.//
என்ன கொடுமை இது? வி,மு.வுக்கு நடந்த சம்பவங்களுக்கு பிறகும் நீங்கள் இந்த வார்த்தை பிரவாகத்தை உபயோகப்படுத்துவது ஆச்சர்யமூட்டுகிறது.
ஒரே நிறுவனம் வெளியிட்ட, ஒரே எடிட்டர் தயாரித்த இதழ்கள் என்பதாலேயே இப்படி பேசுகிறோம். ஆனாலும் ஒவ்வொரு Brandன் தனித்துவத்தையும் நாம் மறந்துவிடக்கூடாது. அதற்க்காகத்தான் கடைசி வரியில்
”வரலாறு மிகவும் முக்கியம்” என்று குறிப்பிட்டுள்ளென்.
பெறும்பான்மையான வாசகர்கள் இதையெல்லாம் மனதில்கொண்டு ஒரு லிஸ்ட் தயாரித்து அதை எடிட்டருக்கு மேக்னம் ஸ்ப்ஷல் இத்ழுக்காக அனுப்பி, எடிட்டரும் அதை படித்து பின்னர் தனியாக ஒரு விளக்கம் கொடுக்க வேண்டாம் அல்லவா?
கொஞ்சம் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக இருந்தாலும் நீங்கள் விடமாட்டேன் என்கிறீர்களே அண்ணா?
ReplyDelete
Replies
Selvam abirami 1 June 2014 at 17:03:00 GMT+5:30
வி,மு என்றால் என்ன சார் ?
Delete
Replies
Reply
King Viswa 1 June 2014 at 19:39:00 GMT+5:30
செல்வம் அபிராமி: வி.மு = விநாயக முருகன் (எழுத்தாளர்).
இந்த மே மாதத்திய உயிர்மை இதழிலும் இவரது கதை வெளியாகி இருக்கிறது.
Delete
Replies
Reply
Selvam abirami 1 June 2014 at 23:07:00 GMT+5:30
தகவலுக்கு நன்றி சார் . ஆர்வ மிகுதியால்
தனிப்பட்ட விஷயத்தில் தலையிட்டு
இருந்தால் மன்னிக்கவும் சார்
Delete
Replies
Reply
King Viswa 1 June 2014 at 23:15:00 GMT+5:30
செல்வம் அபிராமி: முதலில் சார் என்பதை கட் செய்யுங்கள் காமிரேட்.
இதில் எங்கே தனிப்பட்ட விஷயம் இருக்கிறது என்று யோசிக்க வைத்து விட்டீர்களே?
இவர் (வி,மு) எழுதிய நாவலில் (ராஜிவ் காந்தி சாலை) இந்த ”துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்ற சொற்றொடரை பயன்படுத்த, ஒரு முன்னணி எழுத்தாளர் வி.மு.வை செமையாக கலாய்த்து விட்டார்.
அதனால்தான் இந்த ”துக்கம் தொண்டையை அடைக்கிறது” என்ற சொற்றொடரை எங்கே பார்த்தாலும் உடனடியாக கமெண்ட் இட தோணுகிறது.
Delete
Replies
Reply
Selvam abirami 1 June 2014 at 23:51:00 GMT+5:30
ok! Priyatel !!
ஒரு எளிமையான விஷயத்தை தவறாக
புரிந்து கொண்டோமே என நினைக்கையில். உண்மையாகவே
எனக்கு துக்கம் தொண்டையை. அடைக்கிறது . ஹா! ஹா!.........
Delete
Replies
Reply
Reply
Erode VIJAY 1 June 2014 at 00:26:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
Erode VIJAY 1 June 2014 at 00:35:00 GMT+5:30
எனது டாப்-6 லயன் கதைகள் :
1. இரத்தப்படலம் - 'காமிக்ஸ் உலகின் இதிகாசம்' என்றே இதை நான் நினைப்பதால்!
2. பழிவாங்கும் புயல் - செவ்விந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக அமெரிக்க ராணுவத்தையே தன் மதிநுட்பம் மிகுந்த போர் தந்திரங்களால் மண்டியிட வைத்த ஒரு அற்புதமான டெக்ஸ் வில்லர் சாகஸம் என்பதால்!
3. கார்சனின் கடந்தகாலம் - அழுத்தமான கதைக் களம் கொண்ட ஒரு மெல்லிய சோகம் இழையோடும் காவியம் என்பதால்!
4. தலைவாங்கிக் குரங்கு - கெளபாய் கதைகளின் மீது இப்போதுவரை குறையாத காதல் ஏற்படக் காரணமான, நான் படித்த முதல் கெளபாய் இதழ் என்பதால்!
5. மனித எரிமலை - காதலியின் அன்பையும், நாஜிக்களால் தொலைந்துபோன தன் வாழ்க்கையையும் வீதிகளில் தேடி அலையும் ஒரு பரிதாப ஜீவனின் (இரும்புக்கை நார்மன்) கதை என்பதால்!
6. திக்குத் தெரியாத தீவில் - ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகத் தங்கள் உயிர் பலமுறை நிஜமாகவே பணயம் வைக்கப்படுவதை அறிந்திராத 'இரட்டை வேட்டையர்களின்' பரபரப்பான சாகஸப் பயணம் என்பதால்!
ReplyDelete
Replies
Madhiyilamandhiri 1 June 2014 at 11:13:00 GMT+5:30
இனிமேல் நமக்கு கீதை ரத்தபடலம் தான் ....................
ரத்தபடலம் மீது ஆணையாக..................................நான் சொல்லுவதெல்லாம் ..............
Delete
Replies
Reply
Palanivel arumugam 3 June 2014 at 13:26:00 GMT+5:30
. இரத்தப்படலம் - 'காமிக்ஸ் உலகின் இதிகாசம்' its true sir. h r u.?
Delete
Replies
Reply
Reply
Radja 1 June 2014 at 03:35:00 GMT+5:30
லயனில் எனது டாப் 6 இதழ்கள் :
1. இரத்தப் படலம் complete collection : உலகளவில் பல மொழிகளில் வெளிவந்திருந்தாலும், தமிழில் மட்டும் தான் முழு தொகுப்பு வந்திருக்கிறது (Google ல் தேடி உறுதி செய்தாகிவிட்டது). ஏற்கனவே ஒவ்வொரு கதையும் ஒரு இடியாப்பச் சிக்கல், அதிலும் முழு தொகுப்பு எனும் போது கேட்கவே வேண்டாம். நாம் இதை படிப்பதற்கே இரண்டு மூன்று நாட்கள் ஆகும் போது, இதை தயாரிப்பதற்கு எவ்வளவு உழைப்பு தேவை பட்டிருக்கும். நினைக்கவே மிகவும் மலைப்பாக இருக்கிறது. அதற்காகவே எடிட்டர் & டீமுக்கு ஒரு ராயல் salute .
2. கார்சனின் கடந்த காலம் : அதுவரை கார்சன் என்பவர் டெக்ஸ் வில்லரின் தோழன் என்ற இமேஜ் உடன் பார்த்த வந்த நான்(ம்), இந்தக் கதையில் தான் நமது வெள்ளி முடியாரின் கடந்த காலத்தை அறிய முடிந்தது. இக்கதையில் வரும் அவரது மென்மையான காதல் மற்றும் அதனால் ஏற்படும் சம்பவங்கள் என படிப்போரை கதையுடன் மிகவும் ஒன்றச் செய்துவிட்டது.
இதுவரை இதுபோல் காதல் + action கதை வந்ததில்லை என்றே சொல்லுவேன்.
3. கோடை மலர் 86 : முதன் முறையாக வந்த நமது லயன் கதம்ப ஸ்பெஷல். அதுவரை எந்த ஒரு காமிக்ஸ் நிறுவனமும் இதுபோல் வெளியிட்டதில்லை. இந்த புத்தகத்திற்கு பல ஸ்பெஷல்கள் உண்டு.
முதன் முறையாக 5 ரூபாய்க்கு தடிமான ஒரு புத்தகம்.
முதன் முறையாக முழு வண்ணத்தில் நமது லயனில் சில பக்கங்கள் (ஈகில் மேன் கதை)
முதன் முறையாக புத்தகத்துடன் இலவச தாய விளையாட்டு.
இதுபோல் பல இதழ்கள் பிற்பாடு வந்தாலும், முதல் முறையாக இந்த ஸ்டைலில் வந்த இந்த புத்தகத்தை என்னால் மறக்க முடியாது.
4. தலை வாங்கி குரங்கு : நமது டெக்ஸ் வில்லரின் முதல் சாகசம். முதலில் கொலைகாரக் குரங்கு என்று விளம்பர படுத்தப்பட்டு பின்னர் தலைவாங்கிக் குரங்காக வெளிவந்தது. நான் காமிக்ஸ் படித்தாலே வெறுப்பாய் பார்க்கும் என் தந்தைக்கு, இந்தக் கதை எனக்கு மிகவும் பிடித்ததால் நான் அந்த தீபாவளி திருநாளில் அவருக்கு படித்துக் காட்டியது நினைவுக்கு வருகிறது.
5. லயன் சூப்பர் ஸ்பெஷல் : இந்த புத்தகத்திற்கான விளம்பரம் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. 12 சூப்பர் கதைகள், ஒரு காமடி (லக்கி லுக்) ஒரு சோகம் (XIII ) ஒரு suspense (ரிப்போர்ட்டர் ஜானி) என பல சுவைகள். அதிலும், இதில் இடம் பெற்ற பொடியன் பில்லி எனது ஆல் டைம் favorite . ஒரு முறை இந்தப் புத்தகத்தை தவற விட்டு, இரண்டாவது முறையாக பாண்டிச் சேரி காமிக்ஸ் agent மூலமாக கிடைத்தது. பொக்கிஷம்.
6. கொலைப்படை : ஸ்பைடர் கதைகளில் பெரிய சைஸ்சில் வந்த இரு வண்ண இதழ். இதில் வில்லன் பலவித உருவங்களில் ரோபோக்களை உருவாக்கி அதை ஸ்பைடர் மேல் ஏவி விடுவான். அதை ஸ்பைடர் முறியடிக்கும் விதம் விறுவிறுப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.
ReplyDelete
Replies
Reply
Sridharanrckz 1 June 2014 at 07:53:00 GMT+5:30
Top six enpathai maru pathippu ena ninithuviten.itho enathu top six 1.thalaivangi kurangu texwilleri nan muthan muthalaga nan parthathu inru enathu top hero tex matume.
2.pavala silai marmum.iraval kettu kenji koothadi padiththu saram sararamaga varum ehirigalai tex & co salaikamal potuthaluvathu spl. Hadan,hadanin kakam,malaisingam,villanin maruman kogar,kasino sil ipadi niraya solalam
3.iratthapadalam.
4.naliravu vettai- tex sol
5.koduravanathil tex
6.kanamal pona kadal -
ReplyDelete
Replies
Reply
Giri 1 June 2014 at 08:40:00 GMT+5:30
எனது டாப்-6 லயன் கதைகள் :
1. இரத்தப்படலம்
2. பழிவாங்கும் புயல்
3. கார்சனின் கடந்தகாலம்
4. ட்ராகன் நகரம்
5. தீபாவளி மலர் 1986
6. கோடை மலர் 1987
ReplyDelete
Replies
Reply
Madhiyilamandhiri 1 June 2014 at 10:37:00 GMT+5:30
நானு எல்லா காமிக்ஸ் படிக்குது ...........புடிக்குது
1.பழிவாங்கும் பொம்மை
2.கழுகுவேட்டை
3.சிறுபிள்ளை விளையாட்டு
4..ரத்தபடலம்
5 .தங்க கல்லறை
6 .சொர்கத்தின் சாவி .............எல்லாம் பாக்கெட் சைஸ்
ReplyDelete
Replies
Selvam abirami 1 June 2014 at 17:08:00 GMT+5:30
மந்திரியாரே! தங்க கல்லறை முத்து
வெளியீடு அல்லவா ?
Delete
Replies
Reply
Reply
Madhiyilamandhiri 1 June 2014 at 10:40:00 GMT+5:30
பிடிச்ச பிராணிகள்
ரிண்டின் கேன்
ஜாலி ஜம்பர்
டைனமைட்
டெவில்
ReplyDelete
Replies
Reply
Madhiyilamandhiri 1 June 2014 at 11:05:00 GMT+5:30
பிடிச்ச ACCESSORIES
ஸ்பைடர்
வலை துப்பாக்கி
வாயு துப்பாக்கி
முடக்க துப்பாக்கி
பாரிச வாயு துப்பாக்கி
தூக்க துப்பாக்கி
சிரிப்பு துப்பாக்கி
BULLET REVERSE துப்பாக்கி
ஹெலிகார்
செர்வோ பாம்
மாயாவி
விரல் துப்பாக்கி
இரும்புக்கை வில்சன்
ரம்பம்
லாரென்ஸ்
பொய் பல் பாம்
ஜானி நீரோ
கண்ணாடி அண்ட் ஸ்டெல்லா (ஹி ஹி )
ஆர்ச்சியின்
மார்பு அறை
கார்சன்
தாடி
ஜானி
புள்ளி வச்ச கோட்
மந்திரியின்
கூர் தொப்பி
மாடஸ்டி.............
ஹி ..........ஹி..........
ஹலோ ......காங்கோ பாஸ்
வில்லியின்
கத்தி
அலிபாபா
தலை பாகை
லக்கி லுக்
வாய் குச்சி.....
டெக்ஸ் வில்லேர் வேண்டும் என்றே விடப்பட்டுள்ளார்
ReplyDelete
Replies
Erode VIJAY 1 June 2014 at 15:16:00 GMT+5:30
:D
கலீபாவின் சிம்மாசனத்தை விட்டுட்டீங்களே மந்திரியாரே?! வாழ்நாள் இலட்சியத்தை மறக்கலாமா? ;)
Delete
Replies
Reply
Selvam abirami 1 June 2014 at 16:40:00 GMT+5:30
ஹா! ஹா!.....வாஸ்தவம்தான் .இதற்கு தான் எடுத்து கொடுக்க ஒரு பொடியாள்
வைத்து கொள்ள வேண்டும் .
Delete
Replies
Reply
Reply
leom 1 June 2014 at 14:15:00 GMT+5:30
expecting VIRIYANIN VIRODHI
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 1 June 2014 at 14:46:00 GMT+5:30
எனக்கு பிடித்த 6 இதழ்கள் .
1.இரத்த படலம் -பாகம் 6 .(தனி இதழாக )
2.மரண முள் (டெக்ஸ் )
3.இருளின் மைந்தர்கள் .(டெக்ஸ் )
4.சூ-மந்திரக்காளி (லக்கி லூக் )
5.பறக்கும் பரலோகம் (மாடஸ்டி )
6.கனவே கொல்லாதே .
ReplyDelete
Replies
Reply
Sridharanrckz 1 June 2014 at 14:48:00 GMT+5:30
Tex willer manjal satta,blue pant,brown shoe, capirandu pistal,thevaipattal rifile.nanbare tex vidappadavillai
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 1 June 2014 at 17:01:00 GMT+5:30
அவசரத்தில் படிப்போர் top 6 favorites என்பதை மறுபதிப்பு என நினைத்து விடுகின்றனர் (நான் மற்றும் நண்பர் ஶ்ரீதர்
ஶ்ரீதர் srithar போல .)
முக்கியமான தருணத்தில் வெளியாகும்
சிறப்பு இதழ்களில் பதிப்பிக்கப்படும்
தரவு வரிசை பட்டியல் மட்டுமே அது
என்பதை இதுவரை அறியாதவர் இதனால்
அறிக .
ReplyDelete
Replies
Reply
siva 1 June 2014 at 17:49:00 GMT+5:30
chennai stallkalil books kidaikka ethavathu yerpadu seyyalame vijayan sir? Ingu oru periya rasigar koottame ullathu thangalum arinthathuthane?!!!!
ReplyDelete
Replies
Reply
siva 1 June 2014 at 17:51:00 GMT+5:30
chennai stallkalil books kidaikka ethavathu yerpadu seyyalame vijayan sir? Ingu oru periya rasigar koottame ullathu thangalum arinthathuthane?!!!!
ReplyDelete
Replies
Reply
Anonymous 1 June 2014 at 18:18:00 GMT+5:30
ஒரு பைங்கிளிப் படலம் ( suspense thriller ) (1)
முதல் பாதியை விட இரண்டாவது பாதி மிகவும் விறுவிறுப்பாக செல்கிறது. சிக்பில் கதைகளில் இது ஒரு மாறுபட்ட பாணியிலான கதை. முதல் பக்கத்தில் தொடங்கும் suspense கடைசி பக்கத்தில் முடியும் வரை, சற்றும் நீர்த்துப் போகாமல் கதையோட்டத்தில் அழகாய் நீந்தி வருவது நாம் இதுவரை பார்க்காத ஒரு comedy thriller.
அருமையான plot ; கதையின் தொடக்கம் முதலே தெளிவானதொரு கரு கொண்டு, சிக்கலின்றி சீரான வேகத்தில் பயணிக்கும் கதை தனது இரண்டாம் பாதியில், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறது. வில்லனின் முகம் மட்டும் தான் பரிதாபகரமாக இருக்கிறதே தவிர அவனின் பழிவாங்கும் செயல்கள் அத்தனையும் கர்ண கொடூரமானவை. அதற்கான காரணமும் ; அதற்காக அவன் செலவிட்ட பணமும்; கற்பனைக்கு மிஞ்சிய திட்டங்களும் ; அதை நடைமுறை படுத்தும் தெளிவான சிந்தனையையும் வைத்துப் பார்க்கும் போது - நிச்சயமாக இது ஒரு சிக்பில் கதையே அல்ல என்று கூறும்படி அமைந்திருக்கிறது.
என்னடா இது காமெடி கதையை இந்த மரமண்டை suspense thriller என்று கூறுகிறாரே என்று நினைக்க வேண்டாம் ; suspense thriller கதையை தான் நாம் காமெடி கலாட்டாவாக படித்து முடித்து விட்டு, கதையில் தொய்வும், தேக்கமும் உள்ளதாக வருத்தப்படுகிறமோ என்று வருத்தப்படுகிறேன்.
ReplyDelete
Replies
Anonymous 1 June 2014 at 19:21:00 GMT+5:30
ஒரு பைங்கிளிப் படலம் ( suspense thriller ) (2)
கதையில் வரும் வசனங்கள் அனைத்துமே நக்கல் வகையை சார்ந்தவையாக இருக்கும் போது அதை நய்யாண்டியாக பாவித்து படித்தால் நிச்சயமாக இந்தக் கதை நமக்கு ஏமாற்றத்தையே தரும். ஒருவேளை வில்லனின் முகத்தை மட்டும் இவ்வளவு அகோரமாக அமைக்காமல் இருந்திருந்தால், இடையிடையே தடைப்படும் நம் உணர்ச்சி சிதறல்கள் காணாமல் போயிருக்கும் ; வில்லனின் அதிமேதாவித்தனமும் அளவில்லாமல் பிரகாசித்திருக்கும். அதுபோக அந்தப் ப்யூஸ் பற்றவைக்கும் வைபோகத்தில் வில்லன் அடிக்கும் கூத்தும் ; நெருப்புக்காக தீக்குச்சியைத் தேடும் காட்சிகளும் ; அதில் தென்படும் யதார்த்தமும் கதையின் highlight !
ஒரு சமயம் இங்கு இடப்பட்ட பழைய பதிவுகளில் 'சுய எள்ளல்' பற்றி அடிக்கடி படிக்க நேர்ந்தது. அந்த பதிவுகளை படிக்க நேர்ந்த யாராயிருந்தாலும் படித்த கணத்தில், தனக்கு அந்த தகுதி இல்லையே என்று மிகவும் வருத்தம் அடைந்திருப்பார்கள். ஏனெனில் சுய எள்ளல் என்பது எவருக்கும் எளிதில் எட்டாத ஒன்று ; தவறி கைவரப்பெற்றால் அவர் வலைஉலகம் தனை சுயமாக ஆளும் தகுதி படைத்தவராவார் என்றும், இன்னும் கொஞ்சம் ஆஹா ஓஹோ என்றும் புகழப்பட்டிருந்தது. நான் கூட அன்று கொஞ்சம் அசந்து தான் போனேன். சுய எள்ளல் செய்பவருக்கு பேறும் ; சுய எள்ளலை கேட்பவருக்கு பேரும் ஒருங்கே கிடைக்கச் செய்யும் அற்புதமான கலை என்று ;)
ஆனால் இந்த கதையில் டாக்புல் பேசும் வசனங்கள் பலவும் சுய எள்ளல் வகையைச் சார்ந்தது எனும் போது சுய எள்ளலின் மறு பரிமாணம் இன்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதன் உண்மையான பரிமாணத்தை குள்ளன் நமக்கு தெளிவு படுத்த தவறவேயில்லை. சபாஷ்டா குள்ளா ;)
அழகு ; நளினம் ; அதிரடி ; வீரம் ; மதிநுட்பம் ; கருணை ; பாசம் ; கடமை ; சாதுர்யம் ; வேகம் ; நன்றி ; மன்னிப்பு ; அடைக்கலம் ; பெரும் செல்வம் என அனைத்தும் ஒருங்கே நிறைந்த ஹீரோயினி தான் 'ரோக்ஸானா' . கதையை தொய்வில்லாமல் நகர்த்திச் செல்வதோடு நம் மனதிலும் இடம் பிடிக்கிறார். நம் பெருமைக்குரிய அகில உலக மெகா ஸ்டார் கேப்டன் டைகரின் குணங்கள் அத்தனையும் இந்தப் பெண்ணின் குணத்தோடு ஒத்துப்போகிறது. யார் யாரையோ நம்பி மோசம் போகும் டைகருக்கு ரோக்ஸானா தான் சரியான ஜோடியாக பரிமளிக்க முடியும் என்பது டைகர் ரசிகர்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக இருக்க முடியுமா என்பது போகப் போகத் தெரியும் என்றே தோன்றுகிறது !
முடிந்தது :)
Delete
Replies
Reply
Reply
கிருஷ்ணா வ வெ 1 June 2014 at 20:25:00 GMT+5:30
வேட்டை நகரம் வெனிஸ் மற்றும் ஒரு பைங்கிளி படலம் இரண்டும் படித்தாகிவிட்டது.
லார்கோ : வழமை போல கலக்கல்..ஒரு சில வருத்தங்கள் சில நீண்ட வசனங்கள்,எழுத்துப்பிழை,மற்றும் சில அச்சு தவறுகள்.
கிட் ஆர்டின் : ஒரு சில இடங்களில் பலமாக சிரிப்பு மூட்டுகிறார். அதுவும் ஷெரிப் மற்றும் கிட்டின் வழியல்கள் பக்கா.
ஒரு சிறு விண்ணப்பம் ஒவ்வொரு முறை நீங்கள் எழுத ஆரம்பிக்கும் போதும் நாம் அதிகமாக எழுதுகிரோம் நாங்கள் போர் என நினைப்போம் என்ற எண்ணத்தை விடுங்கள். அதை பல பதிவுகள் மற்றும் ஹாட்லயனில் எழுதிவிட்டீர்கள். அதனை முற்றிலுமாக தவிர்க்கவும்.
இருக்கும் ப்ரொஜெக்டில் ப்ளாக்குகளை ப்ளாக் செய்ததால் முன்பு போல படிக்க முடியவில்லை. சீக்கிரம் வேறு ப்ராஜெக்ட் புடிக்கணும்.
பிடித்த கதைகள்
1. டெக்ஸின் அனைத்து கதைகளும். (தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை.)
2. நான் முதன்முதலாக கடையில் வாங்கிய லயன் செஞ்சுரி ஸ்பெசல்
3. லயன் டாப் 10 ஸ்பெசல்
4. ஸ்பைடர் -பழிவாங்கும் பொம்மை,தவளை எதிரி,நீதிக்காவலன் ஸ்பைடர்,சைத்தான் விஞ்ஞானி
5. லக்கி - ஜெஸ்சி ஜேம்ஸ்,பூம் பூம் படலம்,ஒரு கோச் வண்டியின் கதை
6. மிஸ்டர் ஜெட்.(மிக மிக விருப்பமான கதை)
வீரியனின் விரோதி அட்டை படம் மிக அருமை.அடர் பச்சை நிறம் நன்றாக உள்ளது.முன்னால் இருக்கும் மங்கூஸ் மேல் இருக்கும் இரத்தம் சரியாக தெரியவில்லை அவரது உருவம் மட்டும் ஒரிஜினல் போல சற்றே மங்களாக இருந்தால் நான்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ReplyDelete
Replies
Reply
Msakrates 1 June 2014 at 21:36:00 GMT+5:30
Follow....
ReplyDelete
Replies
Reply
Texkit 1 June 2014 at 23:42:00 GMT+5:30
0.92 million reached another 0.08 million to reach million...
ReplyDelete
Replies
Reply
SIV 2 June 2014 at 12:35:00 GMT+5:30
1. பழி வாங்கும் புயல் (tex) - செவிந்தியர்களுக்கு ஆதரவாக மனித நேய உணர்வு மேலோங்க டெக்ஸ் நடத்தும் விறுவிறுப்பான போராட்டம்..
கிளாசிக் அட்டைப்படம்
2. ரத்த படலம் (1-18) (XIII)- மிகப்பெரிய எதிர்பார்ப்பு, மிக நீண்ட காத்திருப்பு என அனைத்தையும் சமாளித்திட்ட ஒரு சாதனை இதழ்.
3. பூம் பூம் படலம் (Lucky luck) - இன்று எந்த அளவு இக்கதை எனக்கு பிடிக்கும் எனத்தெரியவில்லை. ஆனால் வெளிவந்த புதிதில் பல முறை படித்திட்ட ஒரு இதழ்.
4. லயன் மெகா டிரீம் ஸ்பெஷல் - இந்த இதழ் மூலம் லயனிலும் அண்ணன் டைகர் அட்டகாசம். காற்றில் கரைந்த கூட்டம் கதையில் வரும் கழுகை வீழ்த்தி செவிந்தியர்களில் ஒருவராக டைகர் இடம் பெரும் காட்சி மனதில் நீங்கா இடம் பெற்ற காட்சிகளில் ஒன்று. (ஏறக்குறைய இதே போல் ஒரு காட்சி 'அவதார்' படத்திலும் வரும்)
5. மரணத்தின் முன்னோடி (1,2,3) (Tex)
6. லயன் சென்சுரி ஸ்பெஷல்
ReplyDelete
Replies
Reply
Paranitharan.k 2 June 2014 at 14:24:00 GMT+5:30
சார் 200 + வரிசையில் டாப் 6 என்பது உங்களுக்கே சரியாக படுகிறதா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன் .அட்லீஸ்ட் டாப் 10 என்றால் கூட பரவாயில்லை .சரி தாங்கள் வினவி விட்டதால் இதோ என் தேர்வு :
டெக்ஸ் வில்லர் டாப் 6 : (ஏற்கனவே கூறி விட்டாலும் மீண்டும் ....மன்னிக்க )
1) ட்ராகன் நகரம் 2)கழுகு வேட்டை 3) பழி வாங்கும் பாவை 4)பழிக்கு பழி 5) ரத்த வெறியர்கள் 6 ) நில் கவனி சுடு
ஸ்பைடர் டாப் 6 :
1) சைத்தான் விஞ் யானி 2) மிஸ்டர் மர்மம் 3) நீதி காவலன் ஸ்பைடர் 4) யார் அந்த மினி ஸ்பைடர் 5)மீண்டும் ஸ்பைடர் 6)பாட்டில் பூதம்
காமெடி டாப் 6 :
1)பூம் பூம் படலம் 2)கௌ பாய் எக்ஸ்பிரஸ் 3) ஒரு கோச் வண்டியின் கதை 4)பயங்கர பொடியன் ( மலரில் வந்த கதை ) 5) ஜெஸ்லி ஜேம்ஸ் 6 )தாய் இல்லாமல் டால்டன் இல்லை
மலரில் டாப் 6 :
1) ரத்த படலம் 2) கோடை மலர் -86 3) லயன் சூப்பர் ஸ்பெஷல் 4) லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் 5) லயன் கௌ பாய் ஸ்பெஷல் 6 ) லயன் கம்பேக் ஸ்பெஷல்.....
பல நாயகர் டாப் 6 :
1) மனித எரிமலை 2 ) கொலை பசி 3)சதி வலை 4) அதிரடி வீரர் ஹெர்குலஸ் 5)ஆப்பிரிக்க சதி 6) பயங்கர நகரம்
இவற்றை குலுக்கி இதிலும் டாப் 6 எவை என எனது பார்வையில்
1) ரத்த படலம்
2 )ட்ராகன் நகரம்
3 ) பழி வாங்கும் பாவை
4 ) லயன் சூப்பர் ஸ்பெஷல்
5 ) மனித எரிமலை
6 )லயன் மெகா ட்ரீம் ஸ்பெஷல் .
நன்றி ... ( இவை அனைத்தும் லயன் வெளியீடு மட்டுமே )
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 2 June 2014 at 14:45:00 GMT+5:30
நண்பர்கள்
கோடை மலர்
தீபாவளி மலர்
லயன் சூப்பர் ஸ்பெஷல்
கௌபாய் ஸ்பெஷல் .....,,,,
என பட்டியல் இடும்போது
பெரிதான ஏக்க பெருமூச்சு வருவதை
எவ்வளவு முயன்றும் தடுக்க முடியவில்லை .
ReplyDelete
Replies
Reply
ஜாலி ஜம்ப்பர் 2 June 2014 at 17:09:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை :
"மிஸ்டர் ஜாலி ஜம்பருக்கு, நீங்கள் இங்கு பதிவிட்டிற்கும் புதிர் கேள்விகளுக்கு கடந்த 30 மணி நேரமாக யாரும் சரியான விடை அளிக்கவில்லை"
அக்காங்.. தல... ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும்
கண்டுக்க தாவல... அதே இத்தொட்டு ஜாலி ஜம்பருன்ற பேர்ல நியூஒர்லியன்சுல கீற செம்பட்ட தலகாரிதா நான்னு
ஸொல்லிட்டுருந்தேன் வச்சுக்க... கண்டி இம்மாந்நேர்த்துக்கு நம்ம வாத்தியாருக்கு கூட பதில் ஸொல்ல ஒரு
கமெண்டு ஒத்த ஆள் போட்ருக்க மாடடாங்க...
அல்லாத்தையும் வுடு தல... சகஜம்... ஆனா நம்ம வாத்யாருகூட என்னிய கண்டுக்கலயே தொர...
இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலுன்னு நம்ம வாத்தியார் கூட என்னிய
பகுள்ல மடிச்சு பீடாவா போட்னுடாரே...
இதுல பிரைசு நீ வாங்கனா இன்னா, நான் வாங்னா இன்னா?
ஸெரி தல....
King Kong, வாலி, இணைந்த கரங்கள், ஆட்டோகிராப், காதல் கோட்டை - இதெல்லாம் இன்னாதிது? நக்கலு !!
இதுக்கல்லாம் உன்க்கு நாஞ்சொல்ல மாட்டேன் பதிலு... எங்க பாசு, ஜாம்பஜார் ஜக்கு - அதான்பா நம்ம வாத்தியாரு
ஸொல்வாரு கரீக்டா பதிலு.... கண்டி உனக்கு அப்ப கீது எங்கைல
ReplyDelete
Replies
Anonymous 2 June 2014 at 19:23:00 GMT+5:30
சோக ஜம்ப்பர் :
மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக பேசுவதில் நீங்கள் அந்த ஒரிஜினல் ஜாலி ஜம்பரையே மிஞ்சிட்டீங்க சார். உங்கள் ஆசை புரியுது, அதற்கான மூலக் காரணமும் தெரியுது. அதற்காக நீங்கள் சோக ஜம்பரா பதிவிடுவது மட்டுமே மனதிற்கு சங்கடமாக இருக்கிறது. கவலைப்படாதீங்க சார் உங்களுக்காக சில டிப்ஸ் கீழே ;
//ஆர சொல்லி இன்னாவுது பாரு? நானு ஒரு குத்ரையா போனதாங்காட்டி என்னிய ஒத்தரும் கண்டுக்க தாவல//
//இவந்திங்கறது கொல்லு... நாம இன்னாத்துக்கு சொல்லணம் இவனுக்கு பதிலு//
*மிஸ்டர் ஜம்பர், நீங்கள் யானை இல்லை குதிரை, விழுந்தாலும் உடனே எழுந்து விடுவீர்கள்*
*இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு*
உங்கள் பாஸ் ஜாம்பஜார் ஜக்கு வை மிகவும் கேட்டதாக கூறவும். நன்றி.
Delete
Replies
Reply
Reply
Palanivel arumugam 3 June 2014 at 13:35:00 GMT+5:30
1) ரத்த படலம்
2 ) லயன் சூப்பர் ஸ்பெஷல்
3) லயன் மெகா டிரீம் ஸ்பெஷல்
4 )கார்சனின் கடந்தகாலம்
5) திக்குத் தெரியாத தீவில்
ReplyDelete
Replies
Reply
Rummi XIII 3 June 2014 at 16:12:00 GMT+5:30
எனது TOP6
மரண மண்டலம் ( மின்னல் படையினர்)
பிணம் காத்த புதையல்
பழி வாங்கும் புயல்
பயங்கர பொடியன்
எத்தனுக்கு எத்தன்
ரத்த படலம் 10
ReplyDelete
Replies
Reply
ஜெ. சுந்தரமூர்த்தி 3 June 2014 at 18:24:00 GMT+5:30
நுங்கம்பாக்கம் லேண்ட் மார்க்கை மூடிவிட்டார்கள் , ஸ்பென்ஷர்ஸ் லேண்ட்மார்க் அழுது வடியுது ... சென்னையில் வேறு எங்கப்பா நம்ம லயன் காமிக்ஸ் கிடைக்குது?...
ReplyDelete
Replies
Reply
ஜெ. சுந்தரமூர்த்தி 3 June 2014 at 18:28:00 GMT+5:30
மிஸ்டர் மரமண்டை.......! வரும்போது நம்ம ரமேஷ்குமாரையும் கூடவே அழைச்சிகிட்டு வர வேண்டியது தானே.....?
ReplyDelete
Replies
Anonymous 3 June 2014 at 18:46:00 GMT+5:30
sundaramoorthy j :
எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை நண்பரே. Notify me மட்டும் கொடுத்து விட்டு கமெண்டுகளை மொபைலில் மட்டுமே படிக்கிறாரா என்றும் புரியவில்லை. உண்மையைக் கூற வேண்டுமானால், இங்கு என்னுடைய எல்லா கருத்தையும் மறுத்து மாற்றுக் கருத்தை பதிவு செய்பவர் அவர் மட்டும் தான். அப்படிப்பட்ட நாட்டாமையை காணாமல் நானும் சற்று தடுமாறித் தான் பதிவிடுகிறேன்.
சன்னமாய் ஒரு கேள்வி :) நீங்கள் ஏன் எப்பொழுதும் லேண்ட்மார்க்/ல் மட்டுமே வாங்குகிறீர்கள் ?!
Delete
Replies
Reply
ஜெ. சுந்தரமூர்த்தி 3 June 2014 at 18:56:00 GMT+5:30
அங்கு மட்டும் தான் கொரியர் சார்ஜ் இல்லாமல் வாங்க முடியும்
Delete
Replies
Reply
ஜெ. சுந்தரமூர்த்தி 3 June 2014 at 18:59:00 GMT+5:30
ஆமா ,.... நீங்க எப்படி சில வார்த்தைகளை bold ஆக டைப் செய்கிறீர்கள்?
Delete
Replies
Reply
Anonymous 3 June 2014 at 19:52:00 GMT+5:30
sundaramoorthy j : //ஆமா ,.... நீங்க எப்படி சில வார்த்தைகளை bold ஆக டைப் செய்கிறீர்கள்?//
இதில் வரும் useful என்ற வார்த்தைக்குப் பதிலாக எந்த வார்த்தை bold ஆக தெரிய வேண்டுமோ அந்த வார்த்தையை டைப் செய்து விடவேண்டும். கமெண்ட் Publish ஆகும்போது bold ஆக மாறிவிடும்.
//அங்கு மட்டும் தான் கொரியர் சார்ஜ் இல்லாமல் வாங்க முடியும்//
நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!
Delete
Replies
Reply
Reply
Anonymous 3 June 2014 at 19:06:00 GMT+5:30
This comment has been removed by the author.
ReplyDelete
Replies
Reply
Anonymous 3 June 2014 at 19:07:00 GMT+5:30
நில்..கவனி...சுடு ! - அதிர்வெடி சரவெடி (1)
ஆஹா.. அட்டகாசம். சமீபத்தில் இப்படி ஒரு டெக்ஸ் வில்லர் கதையை படித்ததே இல்லை. துப்பாக்கியில் இருந்து சீறிப்பாயும் தோட்டா போன்றே கதையும் நகர்கிறது. அதிர்வெடி சரவெடி போல பத்தாயிரம்வாலா சரமாய் முதல் பக்கத்தில் வெடிக்க ஆரம்பித்து இடைவிடாமல் வெடித்து 225 ம் பக்கத்தில் தீப்பொறியும் ; தூசும் ; வெடிப் புகையும் சூழ்ந்து பறந்து நம்மை சற்று அந்தரத்தில் தூக்கியெரிந்துப் போன சூறாவளியாய், புத்தகம் நம் கையை விட்டு கீழிறங்குகிறது.
(ஒரு நிமிஷம், நண்பர் sundaramoorthy j அவர்களுக்கு பதிலளித்து விட்டு மீண்டும் தொடர்கிறேன்..)
ReplyDelete
Replies
Anonymous 3 June 2014 at 21:32:00 GMT+5:30
நில்..கவனி...சுடு ! - அதிர்வெடி சரவெடி (2)
டெக்ஸ் லில்லர் கதைகளின் மிகப் பெரிய வெற்றிகளுக்கு காரணமே அக்கதைகளை நாம் படிக்கும் போது நமக்கு கிடைக்கும் அலாதியான உணர்வே. உங்களை எவ்வளவு பெரிய கவலை பீடித்திருந்தாலும் ; உங்களை எவ்வளவு பெரிய பிரச்சனைகள் சூழ்ந்திருந்தாலும் - உங்களால் மட்டும் ஒரு டெக்ஸ் வில்லர் கதையில் ஒன்ற முடிந்தால் - நீங்கள் கதை முடியும் வரை இந்த உலகத்தை மறந்தே விடுவீர்கள். மனம் மட்டுமல்ல உடலும் இலேசாகி இலேசாகி எங்கோ பறப்பது போல் உணர்ந்து இறுதியில் அரிசோனா பாலைவனத்திலும் ; மரணக் கால்வாய்களிலும் ; சுட்டெரிக்கும் மலை முகடுகளிலும் ; புழுதி புயலிலும் உங்களை நீங்களே கண்டெடுப்பீர்கள். அப்படிப்பட்ட மந்திரசக்தி கொண்டதே டெக்ஸ் வில்லர் கதைகள். அதுவும் நில்..கவனி...சுடு ! போன்று அதிரடியான கதை மட்டும் உங்களுக்கு கிடைத்து விட்டால் அந்த நாள் உங்களின் நினைவடுக்கில் பொக்கிஷமாக பாதுகாக்கப்படும்.
இந்தக் கதையில் கிட் கார்ஸன் மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறார். அவரின் செயலும் நடவடிக்கைகளும் வேகாஸையே அதிரவைப்பதாக இருக்கிறது. எதிரிக்கு எதிரி என அனைவருமே எதிரெதிரே சளைக்காமல் வலம் வந்து கண்ணாமூச்சி ஆடுகிறார்கள். என்னவொரு நெஞ்சழுத்தம் இருதரப்பினருக்கும்?! என்னை உனக்குத் தெரியும் உன்னை எனக்குத் தெரியும் என்ற நிலையிலும் விறுவிறுப்பாக நகரும் சம்பவங்கள் என கூறிக் கொண்டே போகலாம் தான். ஆனால் இது ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தின் வருகை என்பதால் இந்த விமர்சனமே அதிகமாக வாசகர்களுக்கு தெரியலாம். எனவே விமர்சனம் அவ்வளவு தான்.
ஆனால் எனக்கு ஒரே ஒரு சந்தேகம் - கடும் வெப்பத்திலும், சுட்டெரிக்கும் வெயிலிலும், புழுதி பாதையில் நீண்ட குதிரை பயணத்திலும் ஏற்படும் நாவறட்சிக்கு விஸ்கி அருந்தினால் தாகம் தணிந்து விடுமா என்ன ?! கடும் கோடையில் நீங்கள் நாவறட்சிக்கு விஸ்கி அருந்தினால் நாக்கு தொங்கித் தானே போகும் ?! பிறகு ஏன் டெக்ஸ் வில்லர் கதைகளில் வரும் அனைவரும் தாகம் தணிக்க ; நாவறட்சி தீர்க்க என விஸ்கியை அளவின்றி ஊற்றிக் கொள்கிறார்கள் ;) (பார்க்க பக்கம் - 107)
Delete
Replies
Reply
Selvam abirami 3 June 2014 at 22:56:00 GMT+5:30
நீங்கழ் ...ஹிக் !...ஷொல்வது ..ஹிக் !...
ஜரிதான் .ஹிக் !....ஆனா தோளறே!
அடிக்கிற வெயிலு ஹிக் !ஹிக் !....
அரிசோனாவில் மட்டும் தானா?
Delete
Replies
Reply
MH Mohideen 4 June 2014 at 00:08:00 GMT+5:30
நாவறட்சிக்கு தண்ணீர் பருகாமல்
விஸ்கி அடிச்சு மட்டையாகி,
அதனால் வரும் போதைத் தெளிந்தவுடன்
தலைவலிக்கு தண்ணீரை எடுத்துத்
தலையில் ஊற்றிக் கொள்ளும்
ரகத்தைச் சேர்ந்தவர்களோ...?
(உண்மையில் மது அருந்தினால் நாவறட்சி அதிகமேற்படும், போதையில் அதை உணர முடிவதில்லை. மூளைக்கு செல்லும் இரத்தவோட்டம் குறைவதால், போதை தெளிந்தப் பின் கடுமையான தலைவலி ஏற்படுவது இதனாலே...)
Delete
Replies
Reply
நவீன வள்ளுவன் 4 June 2014 at 00:56:00 GMT+5:30
ஆசானே எங்களின் சில எண்ணங்கள் 1:
1. புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்) :P
2. அது எப்புடி ஆசானே பல முறை ப்ரூப் திருத்தியும் இவ்ளோ எழுத்து பிழைகள்??? படத்துல பல இடங்களில் கலர் கலர் சுவற்றில் திட்டு திட்டாக வெள்ளை அடிப்பதற்கு செலுத்தும் கவனத்தை இதன் பாலும் திருப்பலாமே எங்கள் அன்பின் ஆசானே...
3. /எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!/ இது நமது காமிக்ஸின் தரத்தை பற்றியதோ என்ற எண்ணம் எழுகிறது ஆசானே...
4. /selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?/ இது வரை நாங்கள் எல்லாம் கரடியாக கத்தியதில் ஏதும் உபயோகம் இல்லையே ஆசானே??? இனிமேலும் சொன்னால் தான் இருக்கும் போல...
5. /அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !/ இந்த விடயம் எப்போதும் மறுபதிப்பு வகையறாவில் மட்டும் பொய்த்து போவது ஏன் ஆசானே??? புரியலையே...
6. /அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !/ ஐயோ பாஸ், அவரு சொன்னது காமிக்ஸா இருக்க போவுது!!! இப்போ வந்து இருப்பது லார்கோ நாவல் தானே... குழப்புதே... உஸ்ஸ் அதுக்குள்ள கண்ண கட்டுதுப்பா... :P
7. /SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P
8. /ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர். இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்./ அட போங்கப்பா... இதுவே எங்கள் அன்பின் ஆசானாக இருப்பின் அது கொரியர் சார்ஜ் மட்டுமே என்று சமாளித்து இருப்பார்... :P
9. /உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை. கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்./ அட போங்கப்பு... நமது சிவகாசி ஸ்பெஷல் செஞ்சுரி ஸ்பெஷல் மார்பிங் பேட் மேன் "பனி பிரபு" கதையை மறைமுகமாக தாக்குவதாக யாரேனும் எண்ணி விட போகிறார்கள்!!! அது தான் எனது டாப் கதை.... அதை ஸ்பைடர் வரிசையில் சேர்க்கணுமா இல்ல பேட் மேன் வரிசையில் சேர்த்துக்கணுமா??? ஐயோ நான் இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலே ஆசானே... உதவிக்கு வாருங்களேன் ப்ளீஸ்...
Delete
Replies
Reply
நவீன வள்ளுவன் 4 June 2014 at 00:57:00 GMT+5:30
ஆசானே எங்களின் சில எண்ணங்கள் 2:
10. லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் புக்கில் வந்த "பாட்மேன் vs பனிபிரபு" கதையினை உடனடியாக மறுபதிப்பு (கலரில், அதுவும் ஹில்டா மொத்தமும் சென்சார் செய்யப்பட்டு மட்டுமே) செய்ய போராட்ட குழுவினை இறைஞ்சி கேட்டு கொள்கிறேன்... பழைய புத்தங்களை தான் மறுபதிப்பு செய்ய தயக்கம். இதையாவது செய்வீரா ஆசானே???
11. /இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். / ஆமாம் நண்பர்களே... அதை (உதாரணம்:லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் "பாட்மேன் vs பனிபிரபு") அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்... நீங்கள் செய்வது தப்பு... திருத்தி கொள்ளுங்களேன் ப்ளீஸ்...
12. /நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!/ இந்த ஆசை வேறா??? அட போங்க பாஸ்!!! பல சந்தா கட்டுற வாசகர்களே அந்த இன்னொன்னு லைப்ரரிக்குன்னு பொய் சொல்லி தான் அந்த 10% கொரியர் கட்டண டிஸ்கௌண்ட் வாங்குறாங்க. இதுல நீங்க வேற. எத்தனை சந்தா எண்ணிக்கை இருந்தாலும் ஒரே சிங்கிள் கவரில் திணித்து அனுப்புவது தானே நமது ட்ரேட் மார்க். அதனால் கொரியர் பார்சல் எண்ணிக்கை குறையும் (கட்டணம்??? மூச்...), டெலிவரியும் துரிதமாக இருக்கும், பார்சலும் தொலையாது என்பது தானே லாஜிக்??? :P சரிதானே ஆசானே??? :P
12. ஆனால் நமது காமிக்ஸ் எழுத்து பிழை களையப்பட்டு இருப்பது நிதர்சனம். அதற்கு ஒரே ஒரு உதாரணம்: "மியாவி". நான் பார்த்த வரை அதில் எதுவுமே இல்லை :P (சிலேடை அல்ல)
13. பிரிண்டிங் தரம்??? ஆரம்பத்தில் நைட் பிரிண்டிங் தப்பு நடந்ததுன்னு சொன்னீங்க. நம்பினோம். அப்புறம் கரண்ட் இல்ல தப்பு நடந்ததுன்னு சொ.ந; ஆளுங்க தூங்கிட்டாங்கனு சொ.ந; இப்போ பிரிண்டிங் நல்லா தான் இருக்குனு சொல்லுறீங்க. நம்புவோம்... உள் அட்டை மேட்டர் முன் அட்டையில் தெரியும் பிரிண்டிங் மிக மிக அதி நவீனமாக உள்ளது ஆசானே இப்போது... நாம் இப்போது தரத்தில் பல படிகள் உயர்ந்து இருப்பது கண்கூடு...
14. இன்னும் பல +12, +18 என் அதிகமாக வெளியிடுங்கள் ஆசானே... பிரிண்டிங் தரமோ, எழுத்து பிழையோ, கதையோ, ஹீரோவோ எங்களுக்கு முக்கியம் அல்ல. மாசத்திற்கு 30 புத்தகங்கள் எவ்வளவு விலையில் வெளி வந்தாலும் எங்களின் காமிக்ஸ் தாகம், ஆர்வம் தீராது... எங்களுக்கு காமிக்ஸ் என்று ஒன்று வெளி வந்தாலே போதும் ஆசானே...
வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள் ஆசானே. எப்போதும் உடனிருப்போம் ஆசானே எங்கள் சந்தாவுடன்...
Delete
Replies
Reply
Reply
Sridharanrckz 3 June 2014 at 22:52:00 GMT+5:30
Ennakum athy doubt,wisky na varatchiyaithan yerpaduthum,analum sila vishayangalai sileydaiya solvstundu athai pola ithuvum...
ReplyDelete
Replies
Reply
நவீன வள்ளுவன் 4 June 2014 at 00:53:00 GMT+5:30
ஆசானே எங்களின் சில எண்ணங்கள்:
1. புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்) :P
2. அது எப்புடி ஆசானே பல முறை ப்ரூப் திருத்தியும் இவ்ளோ எழுத்து பிழைகள்??? படத்துல பல இடங்களில் கலர் கலர் சுவற்றில் திட்டு திட்டாக வெள்ளை அடிப்பதற்கு செலுத்தும் கவனத்தை இதன் பாலும் திருப்பலாமே எங்கள் அன்பின் ஆசானே...
3. /எதிர்பார்ப்புகளை சற்றே மட்டுப்படுத்திக் கொள்ளும் நிலை என்று வைத்துக் கொள்ளுங்களேன்...!/ இது நமது காமிக்ஸின் தரத்தை பற்றியதோ என்ற எண்ணம் எழுகிறது ஆசானே...
4. /selvam abirami : படித்ததில் பிடித்ததைப் பகிர்வதிலும் தவறில்லையே ! ஒவ்வொருவரது கண்ணோட்டங்களும் மாறிடும் எனும் போது எனக்குக் கிடைக்கும் insight உபயோகமாய் இருக்கும் அல்லவா ?/ இது வரை நாங்கள் எல்லாம் கரடியாக கத்தியதில் ஏதும் உபயோகம் இல்லையே ஆசானே??? இனிமேலும் சொன்னால் தான் இருக்கும் போல...
5. /அப்புறம் LMS -ல் வெளியாகப் போவது எனது எனது டாப் 6 தேர்வுகள் அல்ல - நண்பர்களது தேர்வுகளே ! So நான் இங்கே எழுதுவது LMS -ல் repeat ஆகாது !/ இந்த விடயம் எப்போதும் மறுபதிப்பு வகையறாவில் மட்டும் பொய்த்து போவது ஏன் ஆசானே??? புரியலையே...
6. /அப்படி இருக்கும் பட்சத்தில் கதையின் கருவிற்கும் ; கதையோட்டத்திற்கும் சற்றும் நெருடல் இல்லாமல், அன்று புத்தகப் பிரியன் குறிப்பிட்ட விஷயங்கள் அனைத்தும் எடிட்டிங் செய்யப்பட்டு உள்ளதாகவே நினைக்கிறேன். பாராட்டுகள் விஜயன் சார் !/ ஐயோ பாஸ், அவரு சொன்னது காமிக்ஸா இருக்க போவுது!!! இப்போ வந்து இருப்பது லார்கோ நாவல் தானே... குழப்புதே... உஸ்ஸ் அதுக்குள்ள கண்ண கட்டுதுப்பா... :P
7. /SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P
8. /ஒரு புத்தகமே 400 ரூபாய்க்கு மேல் விற்கும் நிலையில் 34 புத்தகங்களும் 999 ரூபாய்க்குக் கிடைப்பதில் அவர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். முகநூலில் காமிக்ஸிற்கென இருக்கும் குழுக்களின் மூலம் தகவல் பரவி, தமிழ்நாட்டில் பலர் இந்தப் புத்தகத்தை ஆர்டர் செய்தனர். இப்படி புத்தகங்களை வாங்க பணம் செலுத்திய சிலருக்கு புத்தகங்களை அனுப்பினாலும் வேறு சிலருக்கு, தவறுதலாக இவ்வளவு குறைவான விலையை இணையதளத்தில் போட்டுவிட்டதாகவும், பணத்தைத் திருப்பி தந்துவிடுவதாகவும் அமேசான் இணைய தளம் மின்னஞ்சல் அனுப்பியது. இருந்தபோதும் அவர்களுக்கும் பிறகு புத்தகத்தை அனுப்பி வைத்தது அந்த இணையதளம்./ அட போங்கப்பா... இதுவே எங்கள் அன்பின் ஆசானாக இருப்பின் அது கொரியர் சார்ஜ் மட்டுமே என்று சமாளித்து இருப்பார்... :P
9. /உதாரணமாக பேட்மேன் கதைகள் (இங்கே நமது வாசகர்கள் குறிப்பிடுபவை) அனைத்துமே திகில் காமிக்ஸில் வெளி வந்தவை. கொஞ்சம் கவனியுங்கள் தோழர்களே, ஏனென்றால் வரலாறு மிகவும் முக்கியம்./ அட போங்கப்பு... நமது சிவகாசி ஸ்பெஷல் செஞ்சுரி ஸ்பெஷல் மார்பிங் பேட் மேன் "பனி பிரபு" கதையை மறைமுகமாக தாக்குவதாக யாரேனும் எண்ணி விட போகிறார்கள்!!! அது தான் எனது டாப் கதை.... அதை ஸ்பைடர் வரிசையில் சேர்க்கணுமா இல்ல பேட் மேன் வரிசையில் சேர்த்துக்கணுமா??? ஐயோ நான் இப்போ என்ன செய்யறதுன்னே தெரியலே ஆசானே... உதவிக்கு வாருங்களேன் ப்ளீஸ்...
ReplyDelete
Replies
Reply
Rummi XIII 4 June 2014 at 00:53:00 GMT+5:30
குளிர வைக்கப்பட்ட பியர் தான் நா வறட்சிக்கு நல்லது ....!!!
ReplyDelete
Replies
Reply
நவீன வள்ளுவன் 4 June 2014 at 00:54:00 GMT+5:30
10. லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் புக்கில் வந்த "பாட்மேன் vs பனிபிரபு" கதையினை உடனடியாக மறுபதிப்பு (கலரில், அதுவும் ஹில்டா மொத்தமும் சென்சார் செய்யப்பட்டு மட்டுமே) செய்ய போராட்ட குழுவினை இறைஞ்சி கேட்டு கொள்கிறேன்... பழைய புத்தங்களை தான் மறுபதிப்பு செய்ய தயக்கம். இதையாவது செய்வீரா ஆசானே???
11. /இதை உதாரணமாக கொண்டு பிற நண்பர்களும் புதிய புத்தகங்களின் ஹாட்-லைன் மற்றும் பிற பகுதிகளை scanlation செய்து தங்களது தளங்களில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். / ஆமாம் நண்பர்களே... அதை (உதாரணம்:லயன் லயன் செஞ்சுரி ஸ்பெஷல் "பாட்மேன் vs பனிபிரபு") அவர்கள் மட்டும் தான் செய்ய வேண்டும்... நீங்கள் செய்வது தப்பு... திருத்தி கொள்ளுங்களேன் ப்ளீஸ்...
12. /நமக்கு கூரியர் சார்ஜ் இல்லாமல் கிடைத்தால் நீங்களும் சந்தாதாரர் ஆகிவிடுவீர்கள் அல்லவா ?! உங்களைப் போன்று எண்ணற்ற வாசகர்களும் சாந்தாதாரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற என் எண்ணம் சரியானதா ?!/ இந்த ஆசை வேறா??? அட போங்க பாஸ்!!! பல சந்தா கட்டுற வாசகர்களே அந்த இன்னொன்னு லைப்ரரிக்குன்னு பொய் சொல்லி தான் அந்த 10% கொரியர் கட்டண டிஸ்கௌண்ட் வாங்குறாங்க. இதுல நீங்க வேற. எத்தனை சந்தா எண்ணிக்கை இருந்தாலும் ஒரே சிங்கிள் கவரில் திணித்து அனுப்புவது தானே நமது ட்ரேட் மார்க். அதனால் கொரியர் பார்சல் எண்ணிக்கை குறையும் (கட்டணம்??? மூச்...), டெலிவரியும் துரிதமாக இருக்கும், பார்சலும் தொலையாது என்பது தானே லாஜிக்??? :P சரிதானே ஆசானே??? :P
12. ஆனால் நமது காமிக்ஸ் எழுத்து பிழை களையப்பட்டு இருப்பது நிதர்சனம். அதற்கு ஒரே ஒரு உதாரணம்: "மியாவி". நான் பார்த்த வரை அதில் எதுவுமே இல்லை :P (சிலேடை அல்ல)
13. பிரிண்டிங் தரம்??? ஆரம்பத்தில் நைட் பிரிண்டிங் தப்பு நடந்ததுன்னு சொன்னீங்க. நம்பினோம். அப்புறம் கரண்ட் இல்ல தப்பு நடந்ததுன்னு சொ.ந; ஆளுங்க தூங்கிட்டாங்கனு சொ.ந; இப்போ பிரிண்டிங் நல்லா தான் இருக்குனு சொல்லுறீங்க. நம்புவோம்... உள் அட்டை மேட்டர் முன் அட்டையில் தெரியும் பிரிண்டிங் மிக மிக அதி நவீனமாக உள்ளது ஆசானே இப்போது... நாம் இப்போது தரத்தில் பல படிகள் உயர்ந்து இருப்பது கண்கூடு...
14. இன்னும் பல +12, +18 என் அதிகமாக வெளியிடுங்கள் ஆசானே... பிரிண்டிங் தரமோ, எழுத்து பிழையோ, கதையோ, ஹீரோவோ எங்களுக்கு முக்கியம் அல்ல. மாசத்திற்கு 30 புத்தகங்கள் எவ்வளவு விலையில் வெளி வந்தாலும் எங்களின் காமிக்ஸ் தாகம், ஆர்வம் தீராது... எங்களுக்கு காமிக்ஸ் என்று ஒன்று வெளி வந்தாலே போதும் ஆசானே...
வழக்கம் போல நம் காமிக்ஸ் எழுச்சியை தொடர்ந்து முன்னெடுத்துச்செல்லுங்கள் ஆசானே. எப்போதும் உடனிருப்போம் ஆசானே எங்கள் சந்தாவுடன்...
ReplyDelete
Replies
Reply
Meeraan 4 June 2014 at 03:09:00 GMT+5:30
1. யார் அந்த மினி ஸ்பைடர்
2.பவள சிலை மர்மம்
3.ட்ராகன் னகரம்
4.கழுகு வேட்டை
5.இயந்திரப் படை
6.காணாமல் போன கடல்
ReplyDelete
Replies
Reply
Unknown 4 June 2014 at 07:55:00 GMT+5:30
(நவீன வள்ளுவன்)
புஸ்தகத்தை வெளி கடையில் வேறு எங்கும் கிடைக்க விடா வண்ணம் செய்துட்டால் நம்ம கிட்ட தானே பய புள்ளைங்க சந்தா கட்டி ஆகணும்!!! எப்புடி... (இப்போது இது ஏறத்தாழ நடைமுறையில் உள்ளது வேறு விடயம்)
இந்த சந்தேகம் எனக்கும் உண்டு.
ஆசிரியருக்கு..........
இப்படி ஒரு புக் இருக்கிறதா? என்ற நிலையில் உள்ள புத்தகங்களே நமது மாநிலத்தில் பல இடங்களில் கிடைக்கும்போது நமது புத்தகம் மட்டும் ஏன் கிடைப்பதில்லை. யாரும் பணம் ஒழுங்காக தருவதில்லை என்ற சப்பையான ஒரு காரணத்தை நீங்கள் கூறுகிறீர்கள். இதெல்லாம் நம்புறமாதிரியா இருக்கு. உங்களின் திறமையின்மையினால் ஆடிக்கு ஒரு புத்தகமும், அம்மாசைக்கு ஒரு புத்தகமும் என்று வெளிவந்த காலகட்டத்தில் வேண்டுமானால் இதுபோன்று நடந்திருக்கலாம். ஆனால் இப்போது......
மேற்கொண்டு வாசகர்கள் ஒவ்வொருவரும் ஆசிரியர் அறிவிக்கும் லோகோ போட்டி, பெயர் வைக்கும் போட்டி போன்றவற்றில் கலந்து கொள்ளாமல் இருப்பதே புத்திசாலித்தனமானது, விவேகமானது.
ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு போட்டியை கூறி வாசகர்களை ஏமாற்றும் செயலில் ஆசிரியர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் வெளியிடும் இதழில் நமது தேர்வுதான் நிலைத்திருக்க வேண்டும் என்ற அற்ப எண்ணம் உள்ள தாங்கள் அதை மற்றவர்கள் மனதை புண்படுத்தாமல் செய்துவிடலாமே? தயவு செய்து அடுத்தவர்களின் மனதை புண்படுத்தி ரசிக்கும் குருர எண்ணத்தை கைவிடுங்கள்.
ஏதாவது ஒரு போட்டியை அறிவித்து வாசகர்களை சுற்றலில் விடவேண்டியது. பின்னர் ஐஸ்கிரீம், சாக்லெட் என்று ஏதாவது ஒரு பெயரை தேர்வு செய்வது. இதெல்லாம் ஒரு பெரிய மனிதர் செய்யும் காரியமா?
ஒருசிலர் காமெடிக்காக சில பெயர்களை கூறியிருந்தாலும் பெரும்பாலான பெயர்கள் மிகவும் தரமாகதானே இருந்தது. ஒரு ஐஸ்கிரீம் நிறுவனத்தின் பெயருக்கு கொடுத்த முன்னுரிமையை நமது வாசகர்களுக்கு கொடுக்க உங்களுக்கு மனம் வரவில்லையே. உங்கள் மனசாட்சியை கேட்டு சொல்லுங்கள் கிராபிக் நாவல் லோகோ விசயத்தில் உங்கள் தேர்வு நியாயமானதுதானா என்று. இந்த பதிவை இடுவதுகூட இதை படித்து நீங்கள் திருந்துவீர்கள் என்ற எண்ணத்தில் அல்ல. நாம்தான் புத்திசாலி நாம் எதை செய்தாலும் யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்ற உங்களின் எண்ணத்தை உடைக்கத்தான்.
வாசகர்கள் விசயத்தில் உங்களின் உண்மையான நிலைப்பாடு என்னவென்றால் நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் முட்டாள்கள் என்ற ரீதியில்தான் வைத்துள்ளீர்கள்.
இன்னும் நிறைய எழுத வேண்டும் என்றுதான் நினைக்கிறேன் ஆனால் இந்த உண்மையே உங்கள் மனதை சுட்டிருக்கும் என்பதால் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.
ReplyDelete
Replies
Reply
Anonymous 4 June 2014 at 08:25:00 GMT+5:30
நவீன வள்ளுவனுக்core கடிதம் (1)
//நவீன யுக வள்ளுவருக்கு இரண்டடிகள் பயன்படுகிறதோ , இல்லையோ - இரண்டு ஐ.டி.க்கள் பிரமாதமாகவே பயன் தருகின்றன ! ஜமாயுங்கள் ! - Vijayan27 April 2014 20:56:00 GMT+5:30//
நண்பரே, இதன் அர்த்தம் என்னவாக இருக்க முடியும் என்று நீங்கள் என்றாவது யோசித்தது உண்டா ? உண்மைதான் நீங்கள் தற்போது நினைக்கும் எண்ணமே மிகச் சரியானது. ஆம் நீங்கள் யாரென்றும் ; உங்களின் உண்மையான id எதுவென்றும் - ஆசிரியருக்கு தெரிந்திருந்த காரணத்தினால் தான் இவ்வாறு பதிலளித்துள்ளார். அதே போல் உங்கள் நண்பர்களில் பலருக்கும் நீங்கள் தான் நவீன வள்ளுவன் என்பதும் தெரிந்தே தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை 2013 ஜூனில் - உங்களின் முதல் பதிவு வெளியான மூன்றாம் நாளே நீங்கள் யாரென்று அறிந்து கொண்டேன்.
தொடர்கிறது..
ReplyDelete
Replies
Reply
Unknown 4 June 2014 at 08:29:00 GMT+5:30
/SHAKESPEARE என்ற வார்த்தையை பதட்டத்தின் காரணமாகவோ அல்லது ஸ்பெல்லிங் தெரியாமலோ லார்கோ தவறாக டைப் செய்திருந்தால் கதை என்னவாயிருக்கும் ? அப்பப்பா.. நினைத்துப் பார்த்தாலே நெஞ்சமெல்லாம் பதறுகிறது :)/ உடுங்க பாஸ்... கதை தானே... இப்படி எல்லாம் டென்ஷன் ஆகறது உடம்புக்கு நல்லதல்ல... புக்குல இருக்குற ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் பார்த்தால் தான் நெஞ்சு பதறுகிறது:P
சரியான காமெடி...... ஏதையாவது சொல்லி பாராட்டு பத்திரம் வாசிக்க நினைப்பவர்களுக்கு சூடுபோட்டுள்ளீர்கள்.
ReplyDelete
Replies
Reply
Selvam abirami 4 June 2014 at 08:34:00 GMT+5:30
கடுமையான கண்டணங்கள நண்பரே !
உள்ள கருத்தை உரத்து சொல்லலாம் !
அற்ப எண்ணம் .....
குரூர எண்ணம் .....
முட்டாள்கள் .....
அடிமைகள் ......
தவறான வார்த்தைகள். அவை யாரை
நோக்கி வீசப்பட்டாலும் .
ReplyDelete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)
Total Pageviews
Comics Lovers
ஆன்லைனில் வாங்கிட :
FACEBOOK BULLETIN BOARD
Lion-Muthu Comics
Promote Your Page Too
Contact Form
Name
Email *
Message *
Feedjit
Click below to buy CINEBOOK English Comics Online from us !
CLICK IMAGE FOR BOOKSELLERS LISTS
Featured post
ஒரு அட்டவணைத் திருவிழா !!
OUR WEBSITE
Click on the logo to go to official website
About Me
Vijayan
View my complete profile
Blog Archive
► 2021 (113)
► November (6)
► October (17)
► September (7)
► August (9)
► July (8)
► June (11)
► May (25)
► April (8)
► March (9)
► February (7)
► January (6)
► 2020 (102)
► December (6)
► November (6)
► October (6)
► September (6)
► August (9)
► July (8)
► June (11)
► May (9)
► April (12)
► March (12)
► February (8)
► January (9)
► 2019 (77)
► December (6)
► November (5)
► October (12)
► September (6)
► August (7)
► July (5)
► June (5)
► May (9)
► April (4)
► March (5)
► February (5)
► January (8)
► 2018 (83)
► December (4)
► November (5)
► October (6)
► September (10)
► August (7)
► July (8)
► June (6)
► May (6)
► April (7)
► March (11)
► February (6)
► January (7)
► 2017 (89)
► December (5)
► November (5)
► October (11)
► September (8)
► August (9)
► July (10)
► June (7)
► May (5)
► April (7)
► March (7)
► February (7)
► January (8)
► 2016 (83)
► December (6)
► November (5)
► October (6)
► September (6)
► August (10)
► July (8)
► June (9)
► May (8)
► April (5)
► March (6)
► February (7)
► January (7)
► 2015 (69)
► December (5)
► November (7)
► October (6)
► September (7)
► August (6)
► July (4)
► June (5)
► May (5)
► April (7)
► March (6)
► February (4)
► January (7)
▼ 2014 (66)
► December (4)
► November (7)
► October (4)
► September (8)
► August (6)
► July (6)
► June (4)
▼ May (4)
இது கூர்மண்டையர் வாரம் !!
கோமான்களும்.... கோமாளிகளும் !
மேய்ச்சலில் ஒரு சிந்தனைக் குதிரை !
ஜூனும்...ஒரு 'ஜூம்ம்ம்ம்' வேகத்துப் பயணமும் !
► April (8)
► March (4)
► February (5)
► January (6)
► 2013 (58)
► December (4)
► November (4)
► October (7)
► September (5)
► August (5)
► July (5)
► June (4)
► May (5)
► April (4)
► March (5)
► February (5)
► January (5)
► 2012 (66)
► December (5)
► November (4)
► October (3)
► September (4)
► August (5)
► July (3)
► June (5)
► May (4)
► April (9)
► March (8)
► February (7)
► January (9)
► 2011 (5)
► December (5)
News 7
நண்பர்களே, வணக்கம். புது வருஷமும் புலர்ந்து மூன்று வாரங்களும் ஓட்டமெடுத்து விட்டாச்சு ; முன்னணியில் நிற்போருக்கு நம்பிக்கைகளோடு தடுப்பூசி...
கடைசி க்வாட்டர் '21...!
நண்பர்களே, வணக்கம். செப்டெம்பரின் முக்கால்வாசி கடந்து சென்றிருக்க, ஆண்டின் கடைசிக் க்வாட்டர் நம் முன்னே !! (" கடைசிக் க்வாட்டர்" ...
சின்னச் சின்ன ஆசைகள் !!
நண்பர்களே, வணக்கம். சான் பிரான்சிஸ்கோவுக்கும், லாஸ் ஏஞ்சலீசுக்கும் மத்தியில் ஒன்றரை நாட்களாய்த் தெறிக்கும் பயணங்களில் இங்கே ஒரே பிசி ! &quo... |
இன்னும் எவ்வளவு வருடத்துக்குத்தான் ஜெயலலிதாவையும்,கருணாநிதியையும் தமிழக முதல்வராக பார்ப்பது....ஒரு மாற்றத்துக்கு இவர்களையும் முதல்வர் ஆக்கி அவர்கள் அவர்கள் போடும் முதல் ஆணை என்னவாக இருக்கும்..லேசாக சிந்தித்து பார்த்ததன் விளைவே இது
விஜயகாந்த்: தமிழ்நாடு என்ற பெயர் சுத்த தமிழில் "டமில் நாடு "என்று மாற்றி அமைக்கப்படும்...சட்டசபையில் நாக்கு துருத்தி பேசுவதும், எம் எல் ஏக்களை அடிப்பதும் தவறில்லை என சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்...
ராமதாஸ்: தமிழ்நாடு இரண்டாக பிரிக்கப்பட்டு வன்னிய நாடு எனவும், வன்னியரல்லாத நாடு எனவும் பெயர் சூட்டப்படும்...நடிகர்,நடிகைகள் நாடு கடத்தப்படுவார்கள்...
திருமாவளவன் : ஆணின் திருமண வயது ஐம்பது என ஆணையிடுவேன்....
சீமான் : தமிழ் மொழியை தவிர பிற மொழிகள் தமிழ்நாட்டில் பேசுவதற்கும், எழுதுவதற்கும் தடை செய்யப்படும்....
சரத்குமார்: என்னை மாதிரி ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்ற அரசியல்வாதிகள் மட்டுமே முதல்வராக இருக்க முடியும் என சட்ட திருத்தம் பண்ணி ஆணையிடுவேன்.....
தங்கபாலு,இளங்கோவன் (காங்கிரஸ் வகையிராக்கள்): என்னது நான் முதல்வரா? கொஞ்ச நேரம் இருங்க அன்னை சோனியாவிடம் கேட்டு சொல்கிறேன்....
வைகோ: கன்னியாகுமரி முதல் சென்னை வரை பாதயாத்திரை செல்வது நாட்டு மக்களுக்கு கடமை ஆக்கப்படும்...மேடைபேச்சில் உணர்ச்சிவசத்தால் அழுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டு வரப்படும்
டி ராஜேந்தர்: தாடி வளர்ப்பது கட்டாயமாக்கப்படும் ....அடுக்கு மொழியில் பேசுவது எப்படி என்ற பாடத்திட்டம் பள்ளிகளில் கொண்டுவரப்படும்
ரஜினியை விடக்கூடாதுல....
ரஜினி: தமிழ் நாடு மக்கள் அனைவரும் இமயமலைக்கு சென்று பாபா ஜியை தரிசித்துவிட்டு வருவதற்கு இலவச பயண ஏற்பாடுகள் செய்து ஆணையிடுவேன்......
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்
நித்யானந்தா : தமிழ்நாட்டின் பெயர் நித்ய நாடு என மாற்றப்படும்....அனைத்து ஆசிரமங்களும் அரசுடமை ஆக்கப்படும்....தலைமை செயலகம் முதல் தாலுக்கா ஆபிஸ் வரை எங்கும் எதிலும் எனது பக்தைகளே வேலையில் இருப்பார்கள்...துணை முதல்வராக ரஞ்சிதாவும் மாதம் ஒருமுறை சுழற்சி முறையில் இதர பக்தைகளும் பதவி வகிப்பார்கள்... |
விரைவில் கைதாகிறார் மீரா மிதுன்?... 5 பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப்பதிவு... கேரளா வரை நீண்ட சர்ச்சை...! | Bigg boss fame Meera Mithun May be arrested soon
Malayalam
English
Kannada
Telugu
Tamil
Bangla
Hindi
Live TV
Languages
Live TV
Politics
Coronavirus
Tamil Nadu
Cinema
Video
Gallery
India
World
Sports
Life Style
Business
Crime
Technology
live TV
Tamil News
cinema
விரைவில் கைதாகிறார் மீரா மிதுன்?... 5 பிரிவுகளின் கீழ் அதிரடி வழக்குப்பதிவு... கேரளா வரை நீண்ட சர்ச்சை...!
First Published Sep 26, 2020, 7:09 PM IST
நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன், நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யாவை வாரிசு நடிகர்கள் என விமர்சித்து வந்ததும், அதே போல் கமல், திரிஷா போன்றோர் ஜாதி ரீதியில் தான் தற்போது வரை, தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளனர் என்றும் தரக்குறைவாக விமர்சித்தார்.
சர்ச்சைக்கு போன மீரா மிதுன் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், சூர்யா ஆகியோரை வாய்க்கு வந்தபடி தரக்குறைவாக விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார்.
அதன் உச்சபட்சமாக நடிகர் விஜய், விஜயின் மனைவி சங்கீதா, நடிகர் சூர்யா, சூர்யாவின் மனைவி ஜோதிகா இவர்களைப் பற்றி மிகவும் அருவருக்கத்தக்க வகையில் அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல காவல் நிலையங்களில் நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் புகார் கொடுத்து வந்தனர்.
அதன் பின்னர் விஜய், சூர்யாவிற்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்ட சனம் ஷெட்டி, ஷாலு ஷம்முவையும் மீரா மிதுன் விட்டு வைக்கவில்லை. அவர்களை சகட்டுமேனிக்கு விளாசினார்.
இதையடுத்து நடிகைகள் சனம் ஷெட்டியும், ஷாலு ஷம்மு இருவரும் தங்களைப் பற்றி அவதூறு பரப்புவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
தற்போது மிஸ் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ராஸ் மிடாஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர் எம்.கே.பி. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் மீரா மிதுன் தன்னைப் பற்றி அருவருக்கத் தக்க வகையில் சோசியல் மீடியாவில் பேசி வருவதாகவும் கூறினார்.
மேலும் மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மீரா மிதுன் மீது பொது இடத்தில் பிறருக்கு தொல்லை தரும் வகையில் ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் விடுத்தல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலும் தனி நபர் மீது தாக்குதல் நடத்தும் விதமாக பேசியதாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் அடிப்படையில் மீரா மிதுன் விரைவில் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Follow Us:
Download App:
RELATED STORIES
Vani Bhojan: காட்டுக்குள் தன்னந்தனியாக வாணி போஜன்! மிதமான மேக்கப் போட்டு நயன்தாராவையே ஓவர் டேக் செய்யுறாங்களே!
Vanitha : கருமம்... இதுல பிரியாணி செஞ்சிருக்கீங்க.... கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ் - கூலாக பதிலடி கொடுத்த வனிதா
Amala Paul: பிங்க் நிற சேலையில்.. முந்தானையை காற்றில் பறக்கவிட்டு கவர்ச்சி காட்டிய அமலா பால்! லேட்டஸ்ட் கிளிக்
Katrina Kaif - Vicky Kaushal: முன்னால் காதலர்கள் சல்மான் கான் - ரன்பீர் கபூரை திருமணத்திற்கு அழைக்காத கத்ரீனா?
BiggBoss Tamil 5: சுக்கு நூறாக உடைகிறதாமூவர் அணி? பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் பிரியங்கா! புரோமோ
Top Stories
Vani Bhojan: காட்டுக்குள் தன்னந்தனியாக வாணி போஜன்! மிதமான மேக்கப் போட்டு நயன்தாராவையே ஓவர் டேக் செய்யுறாங்களே!
சசிகலா பக்கம் இழுக்கப்படும் முன்னாள் அமைச்சர்கள்..? மறுப்புகளும்.. வரிசைகட்டும் ஆடியோக்களும்..
Jawad cyclone : ஜவாத் புயல் எதிரொலி… தமிழக துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!!
IND vs NZ 2வது டெஸ்ட்: Virat Kohli-க்கு தவறுதலாக அவுட் கொடுத்த தேர்டு அம்பயர்..! செம கடுப்பான கோலி
Vanitha : கருமம்... இதுல பிரியாணி செஞ்சிருக்கீங்க.... கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ் - கூலாக பதிலடி கொடுத்த வனிதா |
சிறைச்சாலையில் குற்றவாளி ஒருவருக்குத் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் நபா பகுதியில் வசித்து வந்த மன்திப் சிங் என்கிறது துருவ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பகுதியைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவரைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.
கொலைக் குற்றத்திற்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக அவர், நபா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில், மன்திப் சிங்கிற்கு தற்போது 35 வயது ஆவதால், அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவு செய்தனர். இதற்காகப் பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த பவன் தீப் கவுர் என்ற பெண்ணை, மணப்பெண்ணாகத் தேர்வு செய்தனர்.
இதனையடுத்து, மன்திப் சிங் சார்பில் பரோல் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அவர் தப்பித்துச் செல்ல திட்டமிடுவதாக போலீசார் தரப்பில் கூறி, பரோல் வழங்க கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவருக்கு பரோல் மறுக்கப்பட்டது.
இதனால், கடந்த 2016 ஆண்டு மணப்பெண் பவன் தீப் கவுர், மன்திப் சிங்கின் புகைப்படத்தை வைத்து, நூதன முறையில் திருமணம் செய்துகொண்டார். பின்னர், மன்திப் சிங்கையே கணவராக நினைத்து, பவன் தீப் கவுர் வாழத் தொடங்கினார்.
இந்நிலையில், திருமணம் தொடர்பாக மன்திப் சிங் மீண்டும் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். ஆனாலும், போலீசார் தரப்பில் மீண்டும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனால், திருமணம் செய்துகொள்ளச் சிறைச்சாலைக்குள்ளேயே அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, சிறைச்சாலையில் திருமணம் செய்துகொள்ள 6 மணி நேரம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும், திருமணம் தொடர்பான ஏற்பாடுகளைச் செய்ய, போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக நபா சிறையில் உள்ள குருத்வாராவில் திருமண ஏற்பாடுகள் விசேசமாக நடைபெற்றது. இதில், மணமக்களின் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து மன்திப் சிங் - பவன் தீப் கவுர் ஜோடிக்கு, சிறைச்சாலைக்குள்ளேயே உறவினர்கள் மத்தியில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. அப்போது, சிறையிலிருந்த போலீசார், அனைவரும் மணமக்களை வாழ்த்தினர்.
இதனிடையே, நீதிமன்றம் உத்தரவுப்படி 6 மணி நேரம் கடந்ததால், மன்திப் சிங் மணப்பெண்ணை விட்டுப் பிரிந்து, மீண்டும், சிறையில் அடைக்கப்பட்டார். மணப்பெண்ணும், பிரிய மணமில்லாமல், மணமகனைப் பிரிந்த ஏக்கத்தோடு பிரிந்து சென்றார். இந்நிகழ்வு, சிறைச்சாலையில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. |
சமூக நலன், நீதி, கூட்டாட்சி, கருத்தியல் மற்றும் நாகரிக நிகழ்ச்சி நிரல்களை மிக அமைதியாகவும், விரைவாகவும் தங்களின் சரியான பாதையில் நிறுத்திய மற்றொரு முதல்வரை இந்தியாவில் கண்டறிவது கடினம்.
DIGI TEAM 1
Lenin
Updated on : 16 November 2021, 03:42 AM
அனைத்து முதலமைச்சர்களுக்கான சமூக - பொருளாதார நிகழ்ச்சி நிரலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி உருவாக்குகிறார்? என்ற தலைப்பில் ஆய்வு செய்து “தி டைம்ஸ் ஆப் இந்தியா” ஆங்கில நாளேட்டின் “டி.பிளஸ்” எனப்படும் சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புக் கட்டுரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி சரித்திரபூர்வமான நவீன காலப்பார்வையோடு எப்படி தனது நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து, அனைத்து முதலமைச்சர்களுக்கும் முன்னு தாரணமாகத் திகழ்கிறார் என்று குறிப்பிட்டுள்ளது.
அனைத்து முதலமைச்சர்களுக்கு மான சமூக - அரசியல் நிகழ்ச்சி நிரல்களை எவ்வாறு ஸ்டாலின் ஏற்படுத்துகிறார் என்கிற தலைப்பில் மற்ற மாநிலங்களுக்கு ஸ்டாலின் போன்ற முதல்வர்கள் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டு “டைம்ஸ் ஆப் இந்தியாவின்” சிறப்பிதழில் வெளியான கட்டுரை வருமாறு:-
சமூக நலன், நீதி, கூட்டாட்சி, கருத்தியல் மற்றும் நாகரிக நிகழ்ச்சி நிரல்களை மிக அமைதியாகவும், விரைவாகவும் தங்களின் சரியான பாதையில் நிறுத்திய மற்றொரு முதல்வரை இந்தியாவில் கண்டறிவது கடினம்.
தீபாவளி நாளில் மோடியும் - மு.க.ஸ்டாலினும்!
நவம்பர் 4ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஜம்முவில் உள்ள நவ்ஷேரா வில் இருந்தார். ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடினார். அதேநாளில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் (பழங்குடியினர்) இல்லத்தில் இருந்தார். எல்லையில் ரோந்து வரும் ராணுவ வீரர்களுக்கு லட்டு ஊட்டி உற்சாகப்படுத்த மோடி முயன்ற அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு மாமல்ல புரத்தில் உள்ள கோவிலில் பிறருடன் உணவு உண்ண தடை விதிக்கப்பட்ட பெண்ணின் கவுரவத்தை மீட்டெடுக்க ஸ்டாலின் முயன்றார்.
ஆங்கிலேயர் ஆட்சியின்போது, நரிக்குறவர்கள் குற்றப் பழங்குடியினர் என்ற பிரிவின் கீழ் வைக்கப்பட்டனர். சுதந்திரத்திற்குப் பிறகு அவர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், அவர்கள் மீதான களங்கம் மறைய வில்லை.
DIGI TEAM 1
மோடியும் ஸ்டாலினும் அரசியல் செய்வதில் கைதேர்ந்தவர்கள் - ஒவ்வொரு வளைவிலும் ஒரு காட்சியை உருவாக்குகிறார்கள். அவர்கள் உருவாக்கும் கண்ணாடிகள் இழிந்த முறையில் நிராகரிக்கப்படலாம் அல்லது அவற்றின் விருப்பங்களையும் நோக்குநிலையையும் படிக்க ஒன்றாக இணைக் கப்படலாம்.
நவ்ஷேராவில்ஒரு நாள் கழித்து, மோடி கேதார்நாத்தில் சங்கராச்சார்யாவின் கறுப்பு நிறச் சிலையைத் திறந்து வைத்தார். “நாடு, சமூகம் மற்றும் மனித நேயத்திற்காக அனைத்தையும் தியாகம் செய்துள்ளார் குரு” என்று அவர் கூறினார்.
ஆன்மீகமும் மதமும் ஒரே மாதிரியான பாணியில் பார்க்கப்பட்ட ஒரு காலம் இருந்தது, ஆனால் இந்திய தத்துவம் வாழ்க்கையை “வரலாற்று ரீதியில்’’ பார்த்து “மனித நலன்” பற்றி பேசுகிறது என்று அவர் கூறினார்.
ஸ்டாலினின் யோசனை முற்றிலும் மாறுபட்டது!
மோடியின் ‘தியாகம்’ மற்றும் ‘நலன்’ பற்றிய மொழியானது நௌஷேரா முதல் கேதார்நாத் வரை ஒரு குறிப்பிட்ட வளையத் தின் குரலையும் அதன் தொடர்ச்சி யையும் கொண்டிருந்தது. அவர் ஒரு பழம் பெருமையையும், நித்தியத்தையும் ஒரு நாட்டிற்கு உருவாக்கினார். அந்த நாடு இப்போதுதான் வரலாற்றில் இருக்கிறது. உங்களுடைய பேச்சுகளில் எப்போதும் கற்பனை செய்யப்பட்ட அது உண்மையில் இருப்பதை விட பெரியதாகவும், பழமையானதாகவும் உள்ளது.
ஸ்டாலினின் மொழி இப்படிப்பட்ட கூறுகளைக் கொண்டதாக இருக்காது. அவை தற்போது உள்ள நிலைகளில் அதிகம் அமைந்துள்ளன. மேலும் அவரது நலன் பற்றிய யோசனை முற்றிலும் மாறுபட்ட சூழலைக் கொண்டுள்ளது. அது இரக்கமுள்ள நவீன நிலையாகும்.
இவ்வாறு அந்தச் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
“வெள்ள பாதிப்புகளை விரைவில் சீரமைப்போம்!”: குமரி மாவட்டத்தில் ஆய்வுசெய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
dmk
tamilnadu
திமுக
தமிழ்நாடு
திமுக அரசு
chief minister mk stalin
முதலமைச்சர் முக ஸ்டாலின்
DMK goverment
Trending
ரசாயன திரவத்தை குடித்த சிறுமியைக் காப்பாற்றிய அரசு.. குணமடைந்த சிறுமிக்கு முதல்வர் ரூ.5 லட்சம் நிதியுதவி!
இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? - மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள்!
பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை; நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு!
தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ஹெலிகாப்டர் பிடித்து வந்த மகன்.. புதுக்கோட்டையில் நெகிழ்ச்சி சம்பவம்!
Latest Stories
"வதந்திகளை நம்பாதீங்க.. ஒமைக்ரான் குறித்து அரசு வெளிப்படையாக இருக்கும்": அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி!
இட ஒதுக்கீட்டு விவரங்களை இவ்வளவு கவனமாக தவிர்ப்பது ஏன்? - மோடி அரசுக்கு சு.வெங்கடேசனின் கேள்விக்கணைகள்!
35 ஆண்டுகள் காத்திருந்து காதலியை கரம்பிடித்த முதியவர்.. நெகிழவைக்கும் காதல் கதை!
பொருளாதாரச் சூழலால் 1.53 லட்சம் பேர் தற்கொலை; நெருங்கிய நண்பர்களை வாழ வைத்து மக்களை கைவிட்ட மோடி அரசு! |
சில மாதங்களுக்கு முந்தி ஜோலார்பேட்டையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் பல ஆதித்திராவிடத் தோழர்கள் தங்கள் தப்பட்டைகளைக் கொண்டு வந்து குவித்து அவைகளுக்குத் தீ வைத்தார்களாம். தங்களுக்கிருக்கும் இழிநிலைக்குக் காரணம் தப்பட்டை அடிப்பதுதான் என்று கருதியே அவ்விதம் செய்தார்களாம். இனிமேல் தப்பட்டை அடிப்பதில்லை என்றும் உறுதி கூறினார்களாம். தஞ்சை, திருச்சி, சேலம் போன்ற வேறு பல ஜில்லாக்களிலும் இம்மாதிரியே நடந்திருக்கிறது.
இப்படிச் செய்வது சரியா தப்பா என்று என்னைக் கேட்காதீர்கள். எந்தத் தொழிலும் கேவலமானதல்ல என்பதே என் கருத்து.
தொழில் பற்றித்தான் முதன் முதல் ஜாதிகள் ஏற்பட்டன என்று சொல்கிறார்கள். இருக்கலாம். ஆனால் அந்தப் பிரிவுகூட இன்று எவ்வளவு ஆபத்தை உண்டாக்கி விட்டது பாருங்கள்! மண் பானை செய்பவனின் மகன் வக்கீலாகிறான். ஆனால் வக்கீல் வரதாச்சாரி பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள முடிகிறதா? தொழில் பற்றி ஜாதி என்றால், வக்கீல் ஜாதியிலுள்ள இரண்டு பேரும் ஒரே ஜாதி தானே?
பறை யடித்ததற்காக ‘பறையன்’ என்ற ஜாதி (பிரிவு) ஏற்பட்டதாம்! ஆனால் அவன் மகன் செல்வராஜ் போலீஸ் இன்ஸ்பெக்டராயிருக்கிறானே! இன்ஸ்பெக்டர் ஜாதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி முதலியார் வீட்டுடன் சம்பந்தம் வைத்துக் கொள்ள முடிகிறதா? தொழிற் சங்கங்கள் ஏற்பட்டால், சமத்துவம் மலரும், சமத்துவத்தினால் பொதுவுடைமை காய்க்கும் என்கிறார்களே, கம்யூனிஸ்ட் தோழர்கள்? ட்ரைவர் சங்கத்திலுள்ளவர்களெல்லாம் உண்ணல், உறவாடல், மணஞ்செய்தல் முதலியவைகளில் ஒரே ஐக்கியத்துடனிருக்கிறார்களா? ஏன் இல்லை? கார்ல் மார்க்ஸ் புத்தகத்தில் இதற்குப் பதில் காண முடியாது.
தான் ஒரு தொழில் செய்வதனால்தான் தன்னைப் பிறர் இழிவாகக் கருதுகிறார்கள் என்று கருதுபவர் சிலர் இருக்கலாம். தான் இழிவாகக் கருதும் ஒரு தொழிலை விட்டுத் தொலைப்பதை யாரும் ஆட்சேபிக்கக்கூடாது. இனித் தப்பட்டை அடிப்பதில்லை என்றால் யாரையும் வற்புறுத்தக் கூடாது. அந்தத் தொழிலை நாமே செய்யப் பழக வேண்டும். இல்லாவிட்டால் அது இல்லாமலே வாழ்க்கை நடத்த வேண்டும்.
“இனி க்ஷவரத் தொழில் செய்யமாட்டோம்,” என்று அத்தொழிலாளர்கள் முடிவு செய்துவிட்டால், அதற்காக அவர்கள் மேல் குற்றஞ் சொல்லலாமா? ‘எந்த நாட்டிலும் க்ஷவரம் செய்கிறவர்கள் இருக்கின்றனர்; அது ஒரு இழிவுத் தொழிலல்ல. ஆனால் அதற்கென ஒரு தனி ஜாதிதான் இருக்கக்கூடாது,’ என்று சொல்லிப் பார்க்க வேண்டும். அவர்கள் பிடிவாதமாயிருந்தால் நாம் எல்லோருமே க்ஷவரம் செய்து கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டியதுதானே! (இப்போது மட்டும் என்ன வாழ்கிறது?) அல்லது தாடி மீசைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்!
“இந்தப் பாழும் பஞ்சாங்கம் இருப்பதனால்தானே, எல்லோரும் என்னை இப்படி முறைத்துப் பார்க்கிறார்கள்! பலர் “ஏ! ஏமாற்றுக்காரா!” என்று அழைக்கிறார்கள்! சிலர் ஓய்! கோட்ஸே!” என்று கூப்பிடுகிறார்கள்! இந்தச் சனியன் இனி வேண்டாம். இனிமேல் நான் விறகு உடைத்தாலும் உடப்பேனே தவிர இந்த ஈனத் தொழிலைச் செய்யமாட்டேன்,” என்று சொல்லி தன் பஞ்சாங்கத்தை தப்பட்டை எரியும் அதே தீயில் போடுவதானால் நாம் எப்படித் தடுக்க முடியும்? அவனிஷ்டம் பாவம்! நாம் என்ன செய்வது? இனி நாமே நம் காரியத்தைப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். எனக்கு நானே புரோகிதன் என்று தானே திருப்திப்பட வேண்டும்?
“இனிமேல் என்னால் சமையல் செய்ய முடியாது,” என்று சமையற்கார ஜாதி (சக்தி என்று சொல்கிறீர்களே, அந்தப் ‘பெண்’ ஜாதியைத்தான் சொல்கிறேன்.) சொல்லிவிட்டால் நீங்களும் நானும் பேனாவை வைத்துவிட்டு கரண்டியைக் கையிலெடுக்க வேண்டியது
தானே!
இதெல்லாம் எதற்காகச் சொல்கிறேன், தெரியுமா?
நாளைக்குச் சில பார்ப்பனர் நம் கூட்டங்களுக்கு வரலாம்! “ஏனய்யா எங்கள் பாவத்தைக் கொட்டிக் கொள்கிறீர்கள்? கோட்ஸே இனம், கோட்ஸே இனம் என்று சும்மா, சும்மா சொல்லித் தெலைக்கிறீர்களே! இனி நாமெல்லோரும் ஒன்றுதான். இதோ பாருங்கள்! ஏமாற்றுச் சின்னங்கள்!” என்று சொல்லி பூணூல், பஞ்சாங்கம், தர்ப்பை முதலியவைகளைக் கூடை கூடையாக நம் எதிரில் கொட்டி அவர்களே அவைகளுக்குத் தீ வைக்கலாம் (தோழர்கள் தப்பட்டைகளுக்கு வைத்ததுபோல) அந்தச் சமயத்தில் அவர்களை நீங்கள் யாரும் தடை செய்யாதீர்கள் என்பதற்காகவே இதை எழுதினேன். பார்ப்பனர் எதைச் செய்தாலும் தடுப்பது என்று கருதி விடப் போகிறீர்கள்! அவர்களுடைய இழிவைக் (!!!) குறிக்கும் எதையும் எரிப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. அந்த உரிமையில் தலையிடாதீர்கள்! நீங்களாகவும் அதைச் செய்யாதீர்கள்!
என் அருமைப் பார்ப்பனத் தோழர்களே! போதுமா நான் எழுதியது? எங்கே பார்க்கலாம்! புறப்படுங்கள் தீப்பெட்டியோடு! போங்கள் திராவிடர் கழகக் கூட்டங்களுக்கு, வைத்திநாத லீலை செய்வதற்கல்ல! உங்கள் இழிவைப் போக்கிக் கொள்வதற்குத்தான்!
(குறிப்பு: குத்தூசி குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார். அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)
நன்றி: வாலாசா வல்லவன்
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன. |
தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகை சமந்தா. சமீபத்தில் வெளியான தி பேமிலி மேன் 2 சீசன் வெளியானது முதல் அப்படத்தில் சர்ச்சைக் காட்சிகள் அமைந்து குடும்பக் குழப்பத்தை உருவாக்கி தற்போது விவாகரத்தில் முடிந்துள்ளது.
நடிகர் நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து குறித்து பேசாத நிலையில் சில நாட்களுக்கு முன் பத்து வருடங்களாக நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது நான்கு வருட வாழ்க்கையை முடித்துக்கொண்டுள்ளோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில், பல திரைப் பிரபலங்களும் கருத்துக்களை கூறினர் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சை விமர்சனத்தையும் வெளியிட்டதில் நாக சைதன்யாவுக்கு விவாகரத்துக்கு வழிகாட்டியவர் பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் தான் என்று குறிப்பிட்டுள்ள கங்கனா, பெயர் குறிப்பிடாத நடிகரை பாலிவுட்டின் விவாகரத்து நிபுணர் எனப் பதிவிட்டுள்ளார்.
அமீர்கானும், நாக சைதன்யாவும் ‘லால் சிங் சட்டா’ என்கிற பாலிவுட் படத்தில் இணைந்து நடித்துள்ளனர். 2022 பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காதலர் தினத்தன்று வெளியாகலாம்
சமந்தாவின் உண்மையான மாமியார் நடிகை அமலா இல்லைநடிகை சமந்தா நாகசைதன்யா பிரிவுக்கு முக்கிய காரணங்களாக இருக்கும் தகவல்
திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றால் நாக சைதன்யா குடும்பத்துக்கு சொந்தமான, பல நூறுகோடி ரூபாய் மதிப்புள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டி மற்றும் அன்னபூர்னா ஸ்டூடியோ ஆகியவற்றில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்க வேண்டும் என்று நிபந்தனை விதித்ததுவே அவர்கள் இருவருக்குமிடையே கடும் மோதலாகியுள்ளது.
இதில் திருமணமாகி நான்காண்டுகள் அக்கினேனி குடும்பத்துக்கு வாரிசு பெற்றுக் கொடுக்க சமந்தா ஒப்புதலில்லாததால் பிரச்சனை அதோடு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க நாக சைதன்யா தடை போட, அதையும் மீறி சமந்தா நயன்தாராவுடன் சேர்ந்து 2 வது நாயகியாக நடித்து வருவதில், அமலாவின் கேரக்டரை இமிடேட் செய்யும் வளையோசை பாடலில் விஜய்சேதுபதியுடன் ஜோடியாக பேருந்தில் செல்லும் வீடியோ காட்சி வெளியானதால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டு, இறுதியில் இப்படி முடிவு எடுக்கப்பட்டதாம்.நடிகை சமந்தா பிள்ளை பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் திருமண முறிவு என்பதற்கு 200 கோடிகள் இழப்பீடு தருகிறோம் என்பது நமது நாட்டில் தான், அதே 200 கோடிகள் என்பது இரண்டு பெரியார் ஈ.வே.ரா சிலைகள் வைக்கவும் ஒரு தேவர் திருமகன் சிலை நிறுவப்படும் தொகையை விட அதிகம்.
மதுரையில் கட்டப்பட உள்ள அரசு நூலகத்தின் செலவில் பாதிக்கு 8 கோடிகள் குறைவு என்பதும்
நடிகர் ரஜினிகாந்தின் இரண்டு படத்திற்கான சம்பளம் என்பதும், நடிகர் விஜய்க்கு சரி பாதி குறை்வோடு 20 இலட்சமும் குறைவான ஒரு படத்தின் சம்பளம் என்றெல்லாம்
அறியும் போது . சமந்தாக்கள் சினிமா வாய்ப்புகளை விட அதிகம் திருமண வாய்ப்பு மூலம் கோடீஸ்வரிகளாக மாறுவதற்கு தமிழ் மக்கள் வழங்கும் சினிமா மோகம் மற்றும் இரசனை உள்ள நபர்கள் தான் அடித்தளம் அவர்களை அடுத்த திருமண மற்றும் விவாகரத்து செய்யும் திட்டம் போடக் காரணிகளாகும்.
இணைப்பைப் பெறுக
Facebook
Twitter
Pinterest
மின்னஞ்சல்
பிற ஆப்ஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக
இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்
- ஆகஸ்ட் 21, 2020
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
மேலும் படிக்கவும்
நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை
- ஆகஸ்ட் 06, 2020
தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு
மேலும் படிக்கவும்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் கலாம் நினைவாக காரைக்குடி மற்றும் வெற்றியூரில் மரம் நடும் விழா
- ஜூலை 27, 2021
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்குடி தாலுகா வெற்றியூர் கிராமம் காரைக்குடியிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், சிவகங்கையிவிலிருந்து 28 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. வெற்றியூர் ஒரு கிராமப் பஞ்சாயத்து மொத்தப் பரப்பளவு 1205.06 ஹெக்டேராகும். 1,411 மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் 417 வீடுகள் உள்ளன. சிவகங்கை சட்டசபை மற்றும் நாடாளுமன்றத் தொகுதியில் வருகிறது. மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் வரலாற்றுப் புகழ் கொண்ட அரண்மனை சிறுவயல் மற்றும் நட்டரசன்கோட்டை உள்ளிட்ட ஊர்கள் வெற்றியூருக்கருகிலுள்ளது இங்கு டாக்டர் கலாம் இலட்சிய இந்தியா மற்றும் புதுக்கோட்டை மரம் அறக்கட்டளையின் சார்பாக வெற்றியூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியின் வளாகத்தில் 101 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக , வெற்றியூர் ஊராட்சி மன்ற தலைவர் மரம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் வாழும் அசோகர் புதுக்கோட்டை. மரம் இராஜா, மதர் சிறப்புப் பள்ளி, நிர்வாக இயக்குனர் அருன் குமார் காரைக்குடி. மதர் தொண்டு நிறுவனப் பொருளாளர் பரமசிவம். உதவி தலைமை ஆசிரிய |
👤திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆறாவது முறை ஆட்சியைச் செலுத்தக் கட்டளையிட்டுள்ள தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி
-மு.க.ஸ்டாலின் அறிக்கை
👤சென்னை: முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக, காங்கிரஸ் இணைந்து தமிழக மக்களின் கனவுகளை நினைவாக்க பாடுபடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.
👤கொரோனாவை ஒழிக்க இணைந்து பாடுபடுவோம் என குறிப்பிட்டு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்றதற்காக மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தேசிய முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கும், கொரோனோ தொற்றுநோயைத் தோற்கடிப்பதற்கும் ஒன்றிணைந்து செயல்படுவோம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.
👤திமுக வெற்றி மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி ட்விட்டரில் வாழ்த்து.
👤முதலமைச்சராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினை சந்தித்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
👤திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து
👤கருணாநிதி நினைவிடம் அலங்கரிப்பு..!*
*திமுக அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்படுகிறது.
👤தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் காவல்துறை டிஜிபி திரிபாதி சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பத்தாண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கிறது மு க ஸ்டாலின் பொறுப்பேற்று முதல்முறையாக வெற்றி கண்டு தமிழகத்தின் முதல்வர் ஆகிறார். |
தொடர்பிற்குநிறுவனர் முனைவர் அண்ணாகண்ணன் 1ஆ, கட்டபொம்மன் தெரு, ஒரகடம், அம்பத்தூர், சென்னை, இந்தியா – 600053 நிர்வாக ஆசிரியர் தி .பவள சங்கரி #!37, டெலிபோன் நகர், மூலப்பாளையம் அஞ்சல், ஈரோடு – 636002 தமிழ்நாடு, இந்தியா.
வண்ணப் படங்கள்
நேர்காணல்கள்நேர்காணல்கள்
பாரதிக்குத் தெரிந்த மொழிகள்
அயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்
இயற்கையில் எழுந்த இசை
ஒலி வெளிஒலி வெளி
காணொலி
மேலும் – 2
செல்லம்
சமையல்
சிறப்பிதழ்கள்
Search for:
Home
பாராட்டா, வசவா?
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பாராட்டா, வசவா?
2 years ago நிர்மலா ராகவன்
Photo of a young boy and his father on a bicycle lane, learning to ride a bike.
நிர்மலா ராகவன்
(பழகத் தெரிய வேணும் – 5)
என் பாட்டி என்னை வசை பாடிக்கொண்டே இருப்பார். இத்தனைக்கும், நான் பெண்வழிப் பேத்தி. என் தந்தைக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பதுதான் காரணம்.
இன்றுவரை சிலர் என்னைக் கேட்கிறார்கள்: “உங்கள் பாட்டி உங்களைத் திட்டிக்கொண்டே இருப்பார்களாமே?”
நானும் இதைப்பற்றி நிறைய யோசித்திருந்ததால், உடனே பதில் கூற முடிந்தது. “திட்டினாலோ, அடித்தாலோ மட்டும்தான் ஒருவரின் திறமைகளை முழுமையாக வெளிக்கொண்டுவர முடியும் என்று அந்தத் தலைமுறையில் பலரும் நம்பினார்கள்”.
மாறாக, ஒருவர் என்ன செய்தாலும் அதைப் பொருட்படுத்தாது அலட்சியம் செய்தால், ‘எக்கேடோ கெடட்டும்,’ என்று அர்த்தம்.
என் பதின்ம வயதில், விடுமுறை நாட்களுக்கு சென்னையிலிருந்த பாட்டி வீட்டுக்கு அனுப்புவாள் அம்மா.
நான் பாட்டிக்கு ஒத்தாசையாக வேலை செய்துகொண்டே இருக்கையில், “இது ஒரு வேலையும் செய்யாதுடி. கண்ணாடி முன்னாடி ஒக்காந்து அழகு பாத்துண்டு இருக்கும்!” என்ற பழிச்சொற்கள் எழும்.
நான் குளித்துவிட்டு, கண்ணுக்கு மை, நெற்றியில் பொட்டு என்று அலங்காரம் செய்துகொண்டதுடன் சரி. அதுகூட முடியாததால், விதவையான பாட்டிக்குத் தன் இழப்பு பெரிதாகத் தோன்றியிருக்கும் என்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது.
விதவைகளுக்குச் செய்யப்பட்ட அநீதி
அந்தக் காலத்தில், விதவைகள் கணவனுடன் பூவையும் பொட்டையும் மட்டும் இழக்கவில்லை. வெள்ளைப்புடவை அணியாதவர்களின் ரவிக்கையாவது வெள்ளையாக இருக்கவேண்டும். தலையில் எண்ணை, உடம்பிற்கு சோப் — ஊகும். நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இதன் விளைவு: வியர்வையால் உடலில் அரிப்பு, முதுகெல்லாம் கொப்புளங்கள்.
வாசனைத் திரவியங்களைத் தவிர்த்தால், உடலையும் மனத்தையும் கட்டுப்பாடாக வைத்திருக்கலாம் என்று ஆணாதிக்கத்தில் குருட்டு நம்பிக்கைகொண்ட எவனோ ஆரம்பித்துவைத்த நியதி (சதி?) இது. உடலில் எப்போதும் அரிப்பும் வலியுமாக இருந்தால், எரிச்சலாக இருந்திருக்காதா! (அவர்கள் எதிர்த்துப் பேசாவிட்டால், அருகிலிருக்கும் யார்மேலாவது ஆத்திரமாக மாறும். அப்படித்தான் நான் மாட்டிக்கொண்டேன்).
பாட்டியின் முதுகைச் சீப்பால் வாரி, சீழ் பிடித்திருக்கும் கொப்புளங்களை உடைப்பது என் வேலை. ‘கொடுமை’ என்று என் கண்ணில் நீர் பெருகும். ‘வேண்டாம் பாட்டி,’ என்று கெஞ்சுவேன். பாட்டியோ, ‘என்னமா முதுகுசொரியறது! ஒரு அரிப்பில்லை,’ என்று பலரிடமும் என் ‘திறமை’பற்றிச் சொல்லிச் சொல்லி மகிழ்வார்கள்.
திருமணமாகி, நான் அயல்நாடு செல்ல ஆயத்தமானதும், “எனக்கு அஞ்சு ரூபா குடுத்து ஒனக்கு லெட்டர் எழுத வெச்சுட்டியே! ஒன்னை எனக்குப் பிடிக்கலே, போ!” என்று அழுதார்கள் பாட்டி.
பாட்டியிடமிருந்து சமையல் கற்றதால், இன்றுவரை பாரம்பரிய சமையல்தான். மலேசியாவிலிருந்து இந்தியா போன ஒருவர், நான் குடித்தனம் செய்யும் நேர்த்தியைப் பாட்டியிடம் புகழ்ந்து கூற, பாட்டி என் தாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம்: ‘நான் வளர்த்த எந்தக் குழந்தையும் சோடை போனதில்லை!’ என்று!
வசவா, செல்லமா?
எல்லாருடைய கொஞ்சலிலும் வளர்ந்தவர்கள் பிறருடைய சுடுசொற்களைத் தாங்கமாட்டார்கள். அப்போது, அன்பைக் கொட்டி, தம்மை இவ்வளவு பலகீனமாக்கிவிட்டவர்கள் மீது ஆத்திரம் எழுமாம். (அப்படிப்பட்டவர் ஒருவர் என்னிடம் தெரிவித்தது). இவர்களுக்கு குழந்தைத்தனம் மாறுவதேயில்லை.
அதற்காக, காரணமின்றித் திட்டித் தண்டிக்க வேண்டுமா?
கைம்பெண்ணாக நடித்தபோது
மலேசியாவில் ஒளிபரப்பான ஒரு தொலைகாட்சி குறும்படத்தில் எனக்கு முக்கியமான தாய் வேடம். ‘வசனம்’ என்ற தலைப்பில் என் பெயரும் இடம் பெற்றிருந்தபோதும், நான் அதிகம் பேசவில்லை.
நான் அருகிலிருந்த கோயிலுக்குச் சென்றபோது, அர்ச்சகர் என் நெற்றியை நோட்டமிட்டுவிட்டு, எனக்கு குங்குமம் கொடுக்காது அப்பால் நகர்ந்தார். பட்டையாகப் பூசியிருந்த விபூதியைக் கலைக்காமல் போயிருந்தேனே!
எனக்கு முதலில் வேடிக்கையாக இருந்தது. யோசித்துப் பார்த்தபோது, இப்படியெல்லாம் ஒடுக்கி, ஒதுக்கி வைக்கப்பட்டால், கைம்பெண்கள் நாளடைவில் எத்தனை வேதனையை அனுபவிப்பார்கள் என்று புரிந்தது. செய்யாத குற்றத்திற்கு ஏதோ குற்ற உணர்ச்சி, சிறுமை. ஆணுடன், சமூகத்தின் மதிப்பையும் இழந்துவிடுவது எத்தனை கொடுமை!
என் மனம் கனத்திருந்தது. விதவைத்தாயாக நடிக்கையில், எனக்குள் அதைக் கொண்டுவந்தேன்.
‘நீங்கள் இவ்வளவு சிறப்பாக நடிக்க எங்கு கற்றீர்கள்?’ என்று ஒருவர் பாராட்டியபோது, ‘வாழ்க்கையில்,’ என்று நினைத்துக்கொண்டேன்.
எதையும் தாங்கலாம்
எப்போதும், எல்லோரையும் வைதுகொண்டே இருந்த ஒரு தலைமை ஆசிரியை, ‘இவள் என்ன டைப்? புரிந்துகொள்ளவே முடியவில்லையே!’ என்று என்னைக் குறித்துக் கேட்க, ‘இந்த எழுத்தாளர்களையே புரிந்துகொள்ள முடியாது!’ என்று அந்த ஆசிரியை பதிலளித்தாளாம்.
நான் சிரித்துக்கொண்டேன், பாட்டி என்னைத் திட்டியதைவிடவா!
அடித்து வளர்ப்பது
தினசரியில் ஒரு சீனப்பெண் விளக்கம் கேட்டு எழுதியிருந்தாள்: என் தாய் எங்கள் இரண்டு வயது மகளைப் பார்த்துக்கொள்கிறாள். குழந்தையை பிரம்பால் அடித்தாலும் நாங்கள் கேள்வி கேட்பதில்லை. (அப்படித்தானே நாங்களும் வளர்ந்தோம்!) என் மூத்த மகன் சிறுவனாக இருந்தபோது எவ்வளவு அடித்தாலும் அழமாட்டான். ஏனெனில், ஆண்கள் அழக்கூடாது என்று சொல்லிக்கொடுத்திருக்கிறோம். ஆனால், மகளோ, இரவு முழுவதும் விசும்புகிறாள். பெண்கள் ஏன் இப்படித் தொட்டாச்சிணுங்கியாக இருக்கிறார்கள்?
அடித்தால், ‘தண்டித்து விட்டார்களே!’ என்று மனம் நோக அழுவது இயற்கை. இதில் ஆணென்ன, பெண்ணென்ன? மேலும், பிரம்பால் அடித்தால்தான் ஒரு குழந்தை நல்லவிதமாக வளரும் என்ற எண்ணமே தவறு.
அழக்கூடாது என்று சொல்லியே ஆண்களை உணர்ச்சிக் குவியலாக ஆக்கிவிடுகிறோம். கோபம், ஆத்திரம், அவுட்டுச் சிரிப்பு -– இவை மட்டும்தானா அவர்கள் வெளிக்காட்டக்கூடிய உணர்ச்சிகள்?
“பதின்ம வயதான மகன் காலையில் எழுப்பியவுடன் எழுந்திருக்காவிட்டால் அடி” (என் சக ஆசிரியை பெருமையுடன் கூறியது).
தடுக்கி விழுந்தால் கையால் ஓங்கி அடி. இப்படி ஒரு தாத்தா தன் பேத்தியை அடித்தபோது, நான் அதிர்ச்சியுடன் பார்த்தேன். அவருக்கே என்னமோபோல் ஆகி, குழந்தையைத் தூக்கிக்கொண்டார்.
உங்கள் கையில்
தகுந்த காரணமின்றி வசைச்சொற்களை வீசுவதும், அடிப்பதும் ஒரு குழந்தைக்கு குழப்பத்தைத்தான் உண்டுபண்ணுகிறது. ‘ஏனோ பெரியவர்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை!’ என்று புரியாதுபோக, அழுமூஞ்சித்தனம் வருகிறது.
குழந்தை பயங்கொள்ளியாக வளர்வதோ, மகிழ்ச்சியுடன் கற்பனைத்திறனும் சிறக்க வளர்வதோ பெரியவர்கள் கையில்தான் இருக்கிறது. ஒரு குழந்தை முகத்தில் பயமோ வருத்தமோ தெரிந்தால் அந்த வளர்ப்புமுறை தவறானது.
அவனுடைய பிடிவாதத்தையும், கோபத்தையும் நகைச்சுவையாக மாற்றினால், அவனும் விஷமத்தை மறந்து, சிரிப்பான். நான்கு வயதுவரை இப்படிக் கண்டித்தால், அவனுக்குத் தன் எல்லை புரிந்துவிடும்.
கதை
என் பேரன் எட்டுமாதக் குழந்தையாக இருந்தபோது தவழ்ந்து, மிகுந்த பிரயாசையுடன் ஒரு பூச்சியைப் பிடித்திருந்தான். அடுத்து, அவன் செய்யப்போவதைத் தடுக்க குரலை உயர்த்தினேன்.
“ஏம்மா குழந்தையை அழவிடறே?” என்று என் மகள் வருத்தத்துடன் கேட்டாள்.
“கையில ஒரு பூச்சியைப் பிடிச்சு வெச்சிருக்கு. ‘தின்னுடா’ன்னு விட்டுடட்டுமா?”
அதற்குத் தண்டனை அடிதான். பேசினால் புரியாத நிலையில், அவனுடைய இறுக மூடிய பிஞ்சுக் கையின்மேல் ஆள்காட்டி விரலால் தட்டினேன். அதுதான் அடி
பாராட்டுங்கள்
ஒரு முறை நான் ரயிலில் நீண்ட பயணம் செய்துகொண்டிருந்தபோது, “எங்கப்பா குழந்தைகள் என்ன செய்தாலும் புகழ்வார்,” என்று பொதுவாகத் தெரிவித்தான் இளைஞன் ஒருவன்.
உடன் அமர்ந்திருந்த சிலர் அவனை சிகரெட் பிடிக்கும்படி வற்புறுத்திக்கொண்டிருந்தனர். அவன் மறுத்தான். “ஒங்கப்பாகிட்ட சொல்லமாட்டோம்,” என்ற கேலிக்குரலை லட்சியம் செய்யவில்லை.
ஒருவரால் சிறு வயதிலிருந்து பாராட்டப்படும் குழந்தை ‘தவறு’ என்று அவர் சொல்லியிருக்கும் காரியத்தைச் செய்யாது. சொன்னவர் அருகில் இருந்தாலும், மறைந்துவிட்டாலும். இப்படித்தான் நல்லொழுக்கம் பழக்கமாகிறது.
பெண்களுக்கு உலகின் போக்கு புரிய
ஒருமுறை, விடுமுறை முடிந்து, வீடு திரும்பியவுடன், பொறுக்கமுடியாது, அம்மாவைக் கேட்டேன்: “பாட்டி ஏம்மா என்னை இப்படித் திட்டறா?”
“உறவுக்காரா அழ அழச் சொல்லுவா. அப்போதான் ஊர்க்காரா நம்பளைப் பாத்துச் சிரிக்கமாட்டா!” என்ற விளக்கம் வந்தது.
‘எது செய்தாலும் சரிதான்!’ என்று குடும்பத்தில் விட்டுக்கொடுக்கலாம். ஆனால், உலகமும் அப்படியே விடுமா, என்ன?
சமூகத்தில் பெண்கள் எப்படியெல்லாம் வதைபடக்கூடும், அவற்றை எப்படி எதிர்கொள்வது என்று பதின்ம வயதுப் பெண்களுக்குப் போதித்தால், பிற்காலத்தில் அதிர்ச்சி கொள்ளாது, சமயோசிதமாகச் செயல்பட முடியும்.
‘கொஞ்சகாலம்தான் அவர்கள் பெற்றோருடன் இருப்பார்கள்; புக்ககத்தில் என்ன பாடுபட நேரிடுமோ,’ என்ற பரிதவிப்புடன், பெண் குழந்தைகளுக்கு நிறைய `இடம்‘ கொடுத்து வளர்ப்பது நல்லதல்ல.
அருமையாக வளர்க்கலாம். அதே சமயம், உலகின் போக்கையும் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டுவது அவசியம். இல்லாவிட்டால், புத்தர் கதைதான்.
பதிவாசிரியரைப் பற்றி
நிர்மலா ராகவன்
எழுத்தாளர், சமூக ஆர்வலர். மலேசியா. இவருடைய அனைத்து உளவியல் கட்டுரைகளையும் மின்னூலில் வாசிக்க : http://freetamilebooks.com/ebooks/unnai-nee-arinthal/
See author's posts
Share this:
WhatsApp
Share on Tumblr
Telegram
Tweet
Print
Tags: நிர்மலா ராகவன்
Continue Reading
Previous வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-12
Next நெல்லைத் தமிழில் திருக்குறள்-118
More Stories
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பழகத் தெரிய வேணும் – 94
11 hours ago நிர்மலா ராகவன்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும்
தொடர்கள்
தமிழில் உவமக் கோட்பாடுகளும் பயன்பாடும் – 42
4 days ago admin
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பழகத் தெரிய வேணும் – 93
1 week ago நிர்மலா ராகவன்
உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க Cancel reply
Latest
Popular
Trending
இலக்கியம்
கவிதைகள்
மீள்வதா? மாள்வதா?
7 hours ago சி.ஜெயபாரதன்
பொது
2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்
11 hours ago அண்ணாகண்ணன்
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பழகத் தெரிய வேணும் – 94
11 hours ago நிர்மலா ராகவன்
செய்திகள்
பாரதி யார்? வரலாற்று நாடகம்
2 days ago admin
இலக்கியம்
கவிதைகள்
முடிவைத் தேர்வு செய்
2 days ago சி.ஜெயபாரதன்
இலக்கியம்
கவிதைகள்
தமிழின் இமயம் திருவள்ளுவர்
9 years ago கவிஞர் இரா.இரவி
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி! (11)
7 years ago editor
Featured
home-lit
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
போட்டிகளின் வெற்றியாளர்கள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (12)
7 years ago editor
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (9)
7 years ago editor
Featured
home-lit
இலக்கியம்
கவிதைகள்
நுண்கலைகள்
படக்கவிதைப் போட்டிகள்
வண்ணப் படங்கள்
படக்கவிதைப் போட்டி (5)
7 years ago editor
இலக்கியம்
கவிதைகள்
மீள்வதா? மாள்வதா?
7 hours ago சி.ஜெயபாரதன்
பொது
2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்
11 hours ago அண்ணாகண்ணன்
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பழகத் தெரிய வேணும் – 94
11 hours ago நிர்மலா ராகவன்
செய்திகள்
பாரதி யார்? வரலாற்று நாடகம்
2 days ago admin
இலக்கியம்
கவிதைகள்
முடிவைத் தேர்வு செய்
2 days ago சி.ஜெயபாரதன்
Categories
English Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன்
CoverNews Social
Facebook
Twitter
Youtube
Meta
Log in
Entries feed
Comments feed
WordPress.org
தவற விட்டவை
இலக்கியம்
கவிதைகள்
மீள்வதா? மாள்வதா?
7 hours ago சி.ஜெயபாரதன்
பொது
2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்
11 hours ago அண்ணாகண்ணன்
தொடர்கள்
பழகத் தெரிய வேணும்
பழகத் தெரிய வேணும் – 94
11 hours ago நிர்மலா ராகவன்
செய்திகள்
பாரதி யார்? வரலாற்று நாடகம்
2 days ago admin
இலக்கியம்
கவிதைகள்
முடிவைத் தேர்வு செய்
2 days ago சி.ஜெயபாரதன்
வல்லமை மின்னிதழ்
2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும் நன்கொடையாளர்களையும் பெரிதும் பாராட்டுகின்றோம்.
முக்கியமான தொடர்கள், கட்டுரைகள், படைப்புகள், தொடர்ந்து வெளிவருகின்றன. ஆய்வறிஞர் கருத்துரையுடன் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம். வாரந்தோறும் வெளியான படக்கவிதைப் போட்டியை 300ஆவது வாரத்துடன் நிறைவுசெய்துள்ளோம்.
மேலும் படிக்க https://www.vallamai.com/?p=102443
புதிய பதிவுகள்
மீள்வதா? மாள்வதா?
2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்
பழகத் தெரிய வேணும் – 94
பாரதி யார்? வரலாற்று நாடகம்
முடிவைத் தேர்வு செய்
Recent Posts
மீள்வதா? மாள்வதா?
2022 ஆண்டுப் பலன் – 12 ராசிகளுக்கும்
பழகத் தெரிய வேணும் – 94
பாரதி யார்? வரலாற்று நாடகம்
முடிவைத் தேர்வு செய்
பதிவுகளை மின்னஞ்சலில் பெற
Name
Email
Categories
English Featured home-lit அறிந்துகொள்வோம் அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் இசைக்கவியின் இதயம் இலக்கியம் ஏனைய கவிஞர்கள் ஓவியங்கள் கட்டுரைகள் கவிஞர் வாலி கவிதைகள் கவிப்பேழை கவியரசு கண்ணதாசன் காணொலி கிரேசி மொழிகள் கேள்வி-பதில் சமயம் சிறுகதைகள் செய்திகள் சேக்கிழார் பா நயம் ஜோதிடம் தலையங்கம் திருமால் திருப்புகழ் திரை தொடர்கதை தொடர்கள் நறுக்..துணுக்... நுண்கலைகள் நெல்லைத் தமிழில் திருக்குறள் நேர்காணல்கள் படக்கவிதைப் போட்டிகள் பத்திகள் பழகத் தெரிய வேணும் பொது பொது போட்டிகளின் வெற்றியாளர்கள் மரபுக் கவிதைகள் மறு பகிர்வு மின்னூல்கள் வண்ணப் படங்கள் வல்லமையாளர் விருது! வல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல் வார ராசி பலன் |
Junior Vikatan - 05 February 2020 - டெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்? | Minister R. B. Udhayakumar interview - Vikatan
Save the vikatan web app to Home Screen tap on
Add to home screen.
X
Subscribe to vikatan
Login
செய்திகள்
லேட்டஸ்ட்
இந்தியா
தமிழ்நாடு
உலகம்
வணிகம்
சுற்றுச்சூழல்
தொழில்நுட்பம்
இதழ்கள்
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
அவள் விகடன்
சக்தி விகடன்
நாணயம் விகடன்
மோட்டார் விகடன்
பசுமை விகடன்
விகடன் செலக்ட்
தீபாவளி மலர்
அவள் கிச்சன்
டெக் தமிழா
ஸ்போர்ட்ஸ் விகடன்
சுட்டி விகடன்
டாக்டர் விகடன்
அவள் மணமகள்
விகடன் தடம்
விகடன் ஆர்கைவ்ஸ்
சினிமா
தமிழ் சினிமா
இந்திய சினிமா
ஹாலிவுட் சினிமா
சினிமா விமர்சனம்
சின்னத்திரை
மெகா சீரியல்கள்
வெப் சீரிஸ்
கனமழை: அப்டேட்ஸ் New
ஆன்லைன் தொடர்கள் New
My News
ஆன்மிகம்
திருத்தலங்கள்
மகான்கள்
விழாக்கள்
ராசிபலன்
குருப்பெயர்ச்சி
சனிப்பெயர்ச்சி
ஜோதிடம்
ராசி காலண்டர்
மேலும் மெனுவில்
Search
ஜூனியர் விகடன்
அலசல்
ரூ.700 கோடி லஞ்சம்... அம்பலத்துக்கு வரும் அடுத்த ஊழல்!
விண்ணைத் தாண்டுமா வேலூர் விமானம்?
குரூப் 4-ஐ தொடர்ந்து குரூப் 2 மோசடி!
கழுகார்
மிஸ்டர் கழுகு: ‘‘கலைஞரின் பிள்ளை’’ - அழகிரியின் உரிமைக்குரல்
கழுகார் பதில்கள்
சமூகம்
மிரட்டும் கொரோனா வைரஸ் பயோ ஆயுதமா?
அபகரிக்கப்படுகிறதா வள்ளலார் சொத்து?
“ஒழுகாத வீடு வேணும்!”
ஆன்லைன் ரம்மி... அழியும் குடும்பங்கள்!
அரசியல்
‘‘நீங்க அமைச்சரா... இல்ல உங்க மகன் அமைச்சரா?’’
டெல்லியை ஜெயிக்கப்போகும் கில்லி யாரு?
டெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்?
“அவதூறு கிளப்புகிறார்கள்!”
தொடர்கள்
தங்க வேட்டை - 11 - நகைக் கொள்ளையைத் தடுக்க என்ன செய்யலாம்?
கலை
மிஸ்டர் மியாவ்
Published: 01 Feb 2020 5 AM Updated: 01 Feb 2020 5 AM
டெண்டரே விடாமல் எப்படி முறைகேடு நடக்கும்?
செ.சல்மான் பாரிஸ்
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்
Use App
ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார் பேட்டி
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற...
இன்ஸ்டால் விகடன் ஆப்
பிரீமியம் ஸ்டோரி
தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபு அதிரடியாக டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து அவர் கொடுத்த விருப்ப ஓய்வு விண்ணப்பமும் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றன!
தமிழகத்தில் செயல்படுத்தப் படவிருக்கும் `பாரத் நெட்’ உள்கட்டமைப்புக்கான 2,441 கோடி ரூபாய் டெண்டர்தான், பிரச்னைகளுக்கான ஆணிவேர். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துக் கிளம்புவதற்கு முன்பே, இதுபற்றி 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி!’ என்ற தலைப்பில் எக்ஸ்க்ளூசிவ் கவர் ஸ்டோரியை பெயர்களை மறைத்து வெளியிட்டிருந்தோம். சில தினங்களில் சந்தோஷ் பாபு வி.ஆர்.எஸ் விண்ணப்பம் கொடுக்க, விவகாரம் அரசியல் அரங்கில் பற்றியெரியத் தொடங்கிவிட்டது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர்கள் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டு ஆட்சியாளர்களுக்குக் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
சந்தோஷ் பாபு - ஸ்டாலின் - பெரியசாமி
‘முறைகேடுகளுக்கு ஒத்துழைக்காத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டம்மியாக்கப்படுகிறார்கள். சந்தோஷ் பாபு இருந்த இடத்தில், டி.ஆர்.ஓ-வாக இருந்து சமீபத்தில் ஐ.ஏ.எஸ் நிலைக்கு உயர்த்தப்பட்ட ஜூனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ரவிச்சந்திரன் எம்.டி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். 2,441 கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கியமான திட்டத்தை நிறைவேற்ற, சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரி எவரும் இல்லையா? ஆரம்பக்கட்ட நிலையிலேயே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையைத் தொடங்க வேண்டும்’ என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
‘தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஒரு முறைகேடும் நடக்கவில்லை என்று முழு பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும். நாங்கள் ஆதாரத்துடன் குற்றம்சாட்டுகிறோம். பாரத் நெட் டெண்டர் முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட தயாரா?’ என்று தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் பற்றி தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் பேசினோம்.
‘‘டெண்டர் முறைகேட்டுக்கு ஒத்துழைக்காததால்தான் சந்தோஷ் பாபு இடம் மாற்றப்பட்டாரா?”
‘‘இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை பணியிட மாறுதல் செய்வது எல்லா ஆட்சிக்காலங்களிலும் நடைபெறும் சாதாரண நிகழ்வு. இதை, பெரிய குற்றமாக ஸ்டாலின் அறிக்கைவிட்டிருப்பது ஆச்சர்யமானது. தி.மு.க ஆட்சியில் பணியிட மாறுதல் நடைபெறவில்லையா? தங்கள் குடும்பத்தினர் நடத்திய தொலைக்காட்சிக்கு உதவவில்லை என்பதால், அரசு கேபிள் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த உமாசங்கரை சஸ்பெண்ட் செய்ததை தமிழக மக்கள் அறிவார்கள். இதை அப்போதே ஜெயலலிதா கண்டித்துப் பேசினார். இதை மறந்துவிட்டு பேசுகிறார் மு.க.ஸ்டாலின்.’’
ஆர்.பி.உதயகுமார்
‘‘பாரத் நெட் டெண்டரில் முறைகேடுகள் நடக்கவேயில்லை என்று உறுதியாகக் கூற முடியுமா?’’
‘‘தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் மூலம் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கு அதிவேகமான இன்டர்நெட் வழங்கும் வகையில் இணைப்புக்கான கட்டமைப்பை ஏற்படுத்த இருக்கிறோம். மத்திய அரசின் பாரத் நெட்டுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்துக்கு டெண்டரே இன்னும் முடிவாகவில்லை. விடாத டெண்டரில் எப்படி முறைகேடு நடைபெறும்? தற்போதுதான் டெண்டர் கோரப்பட்டுள்ளது. எந்த நிறுவனத்திடமிருந்தும் ஒப்பந்தப்புள்ளியோ விலைப்புள்ளியோ இன்னும் பெறப்படாத நிலையில், இதில் ஊழல் நடந்துவிட்டது என்று கூறுவது விந்தையாக உள்ளது.’’
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
‘‘அதிகாரத்தில் இருப்பவர்களை வளைத்து ஒரு நிறுவனம் டெண்டர் பெற இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’
‘‘டெண்டரில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. டெண்டரில் கலந்துகொள்ளும் நிறுவனங் களுக்கான தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. டெண்டர் கோரும் நிறுவனங்கள், பெயர் சொன்னால் தெரியும் நிறுவனமாகவும், அனைத்துக் கட்டமைப்பு வசதிகளும்கொண்ட நிறுவனமாகவும் இருக்க வேண்டும். முக்கியமான திட்டம் என்பதால், புதிதாக வந்த நிறுவனங்கள், எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிறுவனங்களை அனுமதிக்க முடியாது. இது ஆன்லைன் டெண்டர் என்பதால், யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ஆனால் வேலையாட்கள், அனுபவம், அதற்குத் தேவையான உபகரணங்கள், இயந்திரங்கள் போன்றவை உள்ள முதல் தர நிறுவனங்கள் கோரும் டெண்டர்களைத்தான் பரிசீலிக்க முடியும்.’’
‘‘பாரத் நெட் எம்.டி-யாக சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்காமல், டி.ஆர்.ஓ-வாக இருந்து ஐ.ஏ.எஸ் ஆன ரவிச்சந்திரனை நியமித்தது ஏன் என்று ஸ்டாலின் கேட்டுள்ளாரே?’’
‘‘ஐ.ஏ.எஸ் நிலைக்கு வந்துவிட்டவர்களை ஒரு திட்டத்துக்கு நியமிக்கும்போது சீனியர், ஜூனியர் எனப் பிரித்துப் பார்ப்பது நியாயமா? எல்லாவற்றையும் சீனியர்களே பார்க்க வேண்டு மென்றால், அடுத்த கட்டத்தில் உள்ளவர்களை எப்படிப் பயன்படுத்துவது? தி.மு.க ஆட்சியில் அப்படித்தான் செய்தார்களா? இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்கள் தொலைக்காட்சி, கேபிள் தொழில் பாதிக்கப்படும் என ஸ்டாலின் அஞ்சுகிறார். அதனால்தான், ஒவ்வொரு விஷயத்துக்கும் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்.’’
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
stalin
r. b. udhaya kumar
interview
scam
tenders
minister
செ.சல்மான் பாரிஸ்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....? |
கொஞ்ச காலமாகவே யோசித்து வந்தது. இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. இலக்கியம் குறித்து திட்டமிடல்களோடு உட்காருகிற சமயம், எதாவது நிகழ்வுகள் தொந்தரவு செய்து விடுகின்றன. உன்னைப்போல் ஒருவன், நோபல் பரிசு என ஊர்சுற்ற ஆரம்பித்து விடுகிறேன். இப்போது திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்த கதியில்தான் வாழ்வும் சரி, வலையுலகமும் எனக்கு வாய்த்திருக்கிறது.
வலைப் பக்கங்களில், அடுத்தவர்களுடைய பதிவுகளை ஏழெட்டு மாதங்களாக படித்து வருகிறேன். ஒன்றிரண்டு என ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கூடி இன்று அறுபத்திரண்டு வலைப்பக்கங்களை என்னுடைய கூகிள் ரீடரில் வைத்து படித்து விடுகிறேன். இன்னும் சேர்க்க வேண்டியது இருக்கிறது. அய்யனார், கே.பாலமுருகன், ஆடுமாடு, போன்றோரது பல பதிவுகளை இன்னமும் படிக்காமல் சேமித்து வைத்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்துக்களின் மீது எனக்கு பிரமிப்பும், மோகமும் உண்டு. மெல்ல ஆற அமர படிக்க வேண்டும் என நினைத்து, அவை ஒருபக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. எப்போது கம்ப்யூட்டரைத் திறந்தாலும் ஒரு உறுத்தல் வருகிறது. அதற்குள் பலரது வலைப்பூக்கள் ரீடரில் மலர்ந்து இருக்கின்றன. அதை நோக்கி ‘கர்சர்’ விரைகின்றது. இதற்காக மற்றவர்களது பதிவுகள் படிப்பதற்கு சுலபமானவை, அடர்த்தியில்லாதவை என்று அர்த்தமாகி விடாது. எனக்கு அப்படியொரு சுபாவம். அவ்வளவுதான். இது எல்லோருக்குமே இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும். அப்படிப்பட்டவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். முதன்முதலாக இப்படி படிக்க ஆரம்பித்தது செல்வேந்திரனை. அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது. ஒரு பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டு விட்டு வேறொரு பதிவரின் பதிவுக்குச் செல்வது ஒரு பத்திரிகையை படிப்பது போல. ஒரே பதிவரின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பது ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, ஒரு நாவல் படிப்பது போல. கூடவே அந்த பதிவர் நம்மோடு தனியாக வந்துகொண்டு இருப்பார். அவரது உலகம், மொழி, நடை எல்லாம் துல்லியமாக உணர முடியும். எனக்கு இதுவும் பிடித்திருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆரம்பித்து இரண்டு மணி வரைக்கும் கூட சிலரது வலைப்பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். இருக்கிறேன்.
இந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்னும் இந்த தொடருக்கான அர்த்தம் இதுதான். எனக்குள்ள புரிதலில் ஒரு பதிவரின் எழுத்துக்களை பார்த்த விதமே இது. ஒரு கோணம். ஒரு பார்வை. அவ்வளவே.
தீவீரமான, அடர்த்தியான, முற்போக்கான எழுத்துக்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்று எந்த முன்முடிவுக்கும் போய்விட வேண்டாம். நல்ல கவிஞர்கள், நல்ல சிந்தனையாளர்களோடு ரொம்ப ரொம்ப ஜாலியான, அரட்டை அடிக்கும் பதிவர்களும் என் லிஸ்டில் இருக்கிறார்கள். பின்னூட்டங்களிலேயே பிரமாதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த சந்திக்கு கொண்டு வந்து நிறுத்தாமல் விடப்போவதில்லை.
இப்போது ஆரம்பிப்போமா. ‘அ’ன்னா....
அமித்து அம்மா எழுதிய ‘உப்பு’ என்னும் இந்தப் பதிவுதான் நான் அவர்களது வலைப்பக்கத்தில் முதன்முதலில் படித்தது என நினைக்கிறேன்.
சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
அடுத்தடுத்து தொடரும் இந்த விவரிப்புகள் ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கே உரியது. கண்ணிகளைக் கோர்க்கிற, சீட்டுகளைச் சேர்க்கிற இந்த லாவகம்தான் எழுதுகிறவர்களுக்கு முக்கியமானது. இது அமித்து அம்மாவிடம் ஏற்கனவே இருந்தது போலும். சொல்ல வருகிற விஷயங்கள் வாசகனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தொந்தரவு செய்ய வேண்டும். அதுவும் அமித்து அம்மாவுக்கு வாய்த்திருந்தது. ஆண்களின் உலகத்திற்கும், பெண்களின் உலகத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய சுவர் இருக்கிறது என்பதற்கு இந்த உப்பு ஒரு உரைகல் போல. ஆண்களின் சிந்தனையிலே இல்லாத இந்த உப்பு, பெண்களை என்ன பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது!
இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். சரளமான நடையும், மிக இயல்பான மொழியும், சட்டென்று கசிந்துருக வைக்கிற அனுபவங்களுமாய் இருந்தன. உளவையும், பத்மாவையும் படித்த யாரும் இதனை உணர்ந்திட முடியும். தொண்டை அடைத்துப் போக வைத்த பதிவுகள் அவை. மழையின் எல்லாப் பக்கங்களையும் படிக்க வேண்டும் என்னும் தாகத்தை இந்தப் பதிவுகளேத் தந்தன. முதல் துளியைத் தேடிச் சென்றேன்.
2008 ஆகஸ்டில்தான் அமித்து அம்மா வலைப்பக்கம் ஆரம்பித்து இருந்தார்கள். முதல் பதிவைப் பார்த்ததும் ஆச்சரியமும், சந்தோஷமும் என்னை ஆட்கொண்டன. அழகழகான குழந்தைகளின் படங்கள்! தவழ்ந்து கொண்டு இருந்த இந்த அழகுகள்தான் இப்போது எழுந்து நடந்துகொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றன போலும். படங்களோடு வந்த பதிவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல தயக்கத்தோடு கவிதைகளாய் சில பதிவுகள். சமூக அக்கறையோடு வந்தாலும் அவை சுமாராகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்றைத் தாண்டியே இன்னொன்று இருந்தது. இது அவசியம். வளர்ந்து, வளர்ந்து ஒருக்கட்டத்தில் இப்படி ஒரு கவிதையாகவே வெளிவருகிறது!
சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்
தொடர்ந்து, சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் சில பதிவுகள் எழுத ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் அப்பாவைப் பற்றிய அந்தப் பதிவு வருகிறது. தன்னை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு, வாய்விட்டு அழுது, அழவைத்த அமித்து அம்மாவின் எழுத்தும் வருகிறது. ‘பிராக்ரஸ் ரிப்போர்ட் வாங்க நீ வரவேண்டாம்’ என்று அப்பாவிடம் சொல்கிற குழந்தையும், தன் திருமணத்திற்கு வரமாட்டியா அப்பா என ஏங்குகிற குழந்தையும் வாசகனின் நினைவுகளில் எப்போதும் கூட வரத்தான் செய்வார்கள். இரண்டும் ஒரே குழந்தையாய் இருப்பதில்தான் வாழ்க்கை சிரித்துக் கொண்டு இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட கவிதையும், அப்பாவைப் பற்றிய பதிவும் முக்கியமானவை. ஆமாம். இந்த இடங்கள் மிக முக்கியமானவை. அமித்து அம்மாவின் எழுத்துக்களில் பக்குவமும், நிதானமும், தெளிவும் பிடிபட ஆரம்பித்த இடம் இவை. எல்லோருக்கும் இப்படி ஒரு இடம் வாய்க்கும். கிறுக்கி கிறுக்கிப் பார்த்து, சட்டென்று நாம் நினைத்த உருவம் ஒன்று வெளிப்படும். அதிலிருந்து வேறொரு இடத்திற்கு படைப்பாளி நகர ஆரம்பிக்கிற புள்ளி இது. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எழுத்துக்களில் இந்த மாற்றம் தன்னையறியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதற்குப் பிறகு அமித்து அம்மா தன்னை உணர்ந்து கொண்ட மாதிரி, தன்னம்பிக்கையோடு நிறைய சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இதோ, பொருத்தமற்ற தலைப்பு, ஒப்புக்கு அழுகை, அன்புள்ள அப்பாவிற்கு, பெட்டிக்குள் தாலி, மிளகாய் கிள்ளி சாம்பார், முதல் மூன்று பின்னூட்டங்கள், உப்பு, பத்மா, உளவு போன்ற அருமையான பதிவுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். இதில் சிலவற்றை திருத்தி எழுதினால் இன்னும் அற்புதமாக வரும் என்பது என் கருத்து.
வாசிப்பு அனுபவங்களைப் பற்றி குறையத்தான் எழுதி இருக்கிறார்கள். எழில் வரதன் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் பற்றிய இரு பதிவுகளே இருக்கின்றன. முற்போக்கு, பின்நவீனத்துவம் என எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே எழுதக் கடவட்டும். சில பிரக்ஞைகள், நமது இயல்பான ஓட்டத்தைக் குலைத்து பெரும் தயக்கங்களை கொண்டு வந்து சேர்க்கும். அறம் சார்ந்து மட்டுமே அவர்கள் யோசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். பழசை நினைத்து என்னை புதுசாக்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் குறிப்பிடுவதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? என்னைப் போன்றவர்களுக்கு மேலோட்டாமாக, அவர்கள் எழுதிய பிறவியில் குற்றங்கள் தெரியலாம். பிறவிகள் குறித்து இந்த சமூகத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கற்பிதங்கள் என்னென்ன கற்பனைகளை ஒரு நுட்பமான, பிரியமுள்ள மனுஷிக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் அந்தப் பதிவு. அதை நகைச்சுவையோடும், வலியோடும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக திருத்தி எழுதினால், பிறவியும் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போதே இந்தப் பிறவி குறித்த சந்தேகங்களை அழகாக முன்வைக்கிறார்.
என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன். அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார். எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.
அமித்து அம்மாவின் வலைப் பக்கங்களைப் படித்தால் மூன்று விஷயங்கள் தெளிவாகும். முதலாவது கிராமம் சார்ந்த ஒரு வாழ்க்கை அவர்களுடைய அழகிய கனவு போல் இருக்கிறது. இரண்டாவது தினமும் வேலைக்குச் செல்லும் எலக்டிரிக் டிரெயின், நடைபாதைக் காட்சிகள் அவர்களுடைய நனவுலகமாக இருக்கிறது. அடுத்தது, எப்போதும் கூடவே இருக்கிற சமையலறை. தனக்கான விருப்பங்களாக எதையெல்லாம் சொல்கிறார்கள், பாருங்கள்:
வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,
காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,
பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.
குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.
பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ்ஸென பொங்கும் பால்,
ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,
சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.
ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,
எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்
இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்
பெண்மனதின் உலகம் எதற்குள் உருண்டோடிக்கொண்டு இருக்கிறது! ‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள். அதுதான் அமித்து அம்மா! இத்தனையோடும்தான் இவர்கள் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மலைக்க வைக்கிறது. அமித்து அம்மாவுக்குள் வாழ்க்கையனுபவங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவைகளில் பூத்திருக்கும் அபூர்வ கணங்களைப் பிடித்து எல்லோருக்கும் வாசம் காட்ட முடிகிறது அவர்களால்.
மகளே!
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க
என அவர்கள் குழந்தையை மழையாக்கி ஆசைப்படுவதில் ஆயிரம் அர்த்தங்களும், ஏக்கங்களும் தொனிக்கின்றன. ஒரு பொறுப்புணர்வு மிக்க படைப்பாளியாய் அமித்து அம்மா நிச்சயம் வருவார்கள்.
காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது.
*
Tags
கவர்ந்த பதிவர்கள் பதிவர்வட்டம் வாசிப்பு
புதியது
பழையவை
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
மேலும் காட்டு
கருத்துரையிடுக
40 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
சென்ஷி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:44
சிறப்பான பதிவுகளைப் பற்றிய அருமையான விமர்சனம்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமயந்தி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:56
சாரதாவுக்கு மனமார்ந்த ,ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:56
அமித்து அம்மா எழுதிய எல்லாப்பதிவுமே நான் அனுபவிச்சு வாசிச்சிருக்கேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நட்புடன் ஜமால் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:57
நிறைய படிச்சிருக்கீங்க. :)
இன்னும் பலரை சந்திக்கலாம் போல...
நற்பணி செவ்வனே தொடருங்கள் ...
நாங்களும் ...
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
துளசி கோபால் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:17
அமித்து அம்மா அருமையிலும் அருமை.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அம்பிகா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:18
மிகச் சரியானத் தேர்வு. நான் சிறிது காலமாக தான் வலையுலகை வாசித்து வருகிறேன். இந்த குறுகியகாலத்திலேயே அவர்கள் எழுத்து என்னை கவர்ந்தது.\\சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும்//.நிஜம்தான்.அவர்களுக்க்கு வாழ்த்துக்கள். காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது \\காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது//
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
சந்தனமுல்லை 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:28
வாவ்...மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!! அமித்து அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்..அவர்கள் இன்னும் அதிக தூரம் கடந்து செல்ல!! அருமையான பகிர்வுக்கு தங்களுக்கொரு நன்றி!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Jackiesekar 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:39
நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் சார்.. சக பதிவர் பற்றி பெருமையாய் பேச ஒர மனது வேண்டும்...வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கு
நன்றி மாதவராஜ்சார்..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
எம்.எம்.அப்துல்லா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:51
சரியான நேரத்தில்,சரியான நபரைப் பற்றி சரியான ஒருவரால் இடப்பட்ட இடுகை :)
வாழ்த்துகள் அமித்துஅம்மா :)
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ராகவன் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:56
அன்பு மாதவராஜ்,
உங்கள் பட்டியலில் கட்டாயம், அமித்து அம்மா இருப்பார்கள் என்று நினைத்தேன், நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. எனக்கு அவர்களின் பிற பதிவுகளை விட ஏனோ மிளகாய் கிள்ளி சாம்பார் மிகவும் பிடித்தது(சாப்பாட்டு பிரியன் என்பதாலும், அம்மாபிள்ளை என்பதாலும் கூட இருக்கலாம்), அதன் நெருக்கமும், அதில் உள்ள ஒரு பொதுத் தன்மையும் அதை எல்லோராலும் உள்ளங்கையில் ஊற்றி குடிக்க முடிந்தது. என்ன ஒரு அலட்சியமான நடை, எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒய்யார வனப்புடன் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் ஜெயந்தி போல, மனசுக்குள் ஒற்றைச் சலங்கை கொலுசென குதியாட்டம் போடும் நடை. என்னுடைய பின்னூட்டதில் கூட அவர்களின் கதை சொல்லும் லட்சனங்களை சிலாகித்ததாய் ஞாபகம். மிக சரியான ஊற்றுக்கண் இந்த பதிவு, பொங்கி பெருகும் எல்லோரையும் நனைக்க எல்லோரும் செழிக்க!
அன்புடன்,
ராகவன்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மண்குதிரை 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:58
amiththu amma avarkalukku vazhththukkal
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ராமலக்ஷ்மி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:00
அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கபிலன் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:23
அருமை!
வெறுமனே அந்தப் பதிவரைப் பிடிக்கும் என சொல்லாமல், பிடித்ததற்கான காரணத்தையும் விளக்கி சொல்லி இருக்கீங்க. இது வரைக்கும் எவ்வளவோ வலையுலகத்துல கிடைச்ச அவார்டுகளை விட, இதில் பதிவருக்கு கிடைக்கும் ஊக்கமும், சந்தோஷமும், கௌரவமும் நிச்சயமாக ஸ்பெஷல் தான்.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா : )
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
செ.சரவணக்குமார் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:35
அன்பு மாதவராஜ் அண்ணா...
நற்செயல் தொடரட்டும்...
நன்றி.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தேவன் மாயம் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:49
அருமையான பதிவர்கள்!!! நல்ல விமர்சனம்!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அ.மு.செய்யது 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:34
ஹைய் !!!!!! என்னோட ஃபேவரைட் அமித்து அம்மா...!!!!!!
கிட்டத்தட்ட அமித்து அம்மாவின் எல்லா பதிவுகளையும் ஒரெழுத்து விடாமல் படிக்கும்
சராசரி வாசகனாய் இந்த பதிவு மிகவும் எனக்கு மிகவும் நெருக்கமாகிறது.
அவங்களுடைய இலக்கிய ரசனையும் வாசிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.மேலும்
மாதவராஜ் அவர்களுடைய பாராட்டுகளில் பெருமையாக உணார்கிறேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:40
நல்ல பதிவு மாதவ்.
அவருடைய வெற்றிடத்தை நோக்கிப் போகும் வீடு கவிதை அற்புதமான ஒன்று.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பித்தனின் வாக்கு 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:05
பதிவு நல்லா இருக்கு. சென்ற சிங்கை பதிவர்கள் கூட்டத்தின் போது ஒரு பதிவர்(அப்பாவி-முருகு) தங்களின் மோடி பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களைப் பற்றி வருத்தப் பட்டார். கோவியார், ஞானப்பித்தன், ஜேசப் பால்ராஜ் ஆகியோர் தங்களைப் பற்றியும் தங்களின் பதிவுலக அனுபவங்களைப் பற்றியும் கூறி, ஒரு கடுமையான பின்னூட்டம் இடும்முன் பதிவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுருத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு விசயத்தைப் பற்றி எழுத நினைத்தால் மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற கவலை இல்லாமல் எனது கருத்தை ஆனித்தரமாக கூறுபவன். ஆதாலால் நான் தங்களின் அந்த பதிவில் உங்களைப் பற்றி கடுமையான விமர்சனம் பண்ணியும் தாங்கள் பொறுமையாக பதில் உரைத்தது மிகவும் பிடித்து இருந்தது. எனது கடுமையான தனிப்பட்ட பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும். ஆனால் அதன் பிறகு நான் எனக்கு பலரின் எதிர் பதிவின் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் பின்னூட்டங்கள் இடாமல் இது அவர்களின் கருத்து என ஒதுங்கி விடுகின்றேன். கடுமையான கருத்துப் பின்னூட்டங்கள் இடுவதில்லை. விவாதமும் செய்வதில்லை. இந்த மாற்றத்தை தந்தமைக்காக நன்றி. நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். நன்றி.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நிலாரசிகன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:01
நல்ல விமர்சனம் சிறப்பான அறிமுகம்.
நன்றி அய்யா.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஹரன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:10
நல்ல ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டினீர்கள். படித்தேன்.. படிப்பேன்.
நன்றி
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Ravikumar Tirupur 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:35
தோழர்! அமித்து அம்மா பதிவுகளை இதுவரை வாசிக்க இயலாமல் போய் விட்டது. அருமையான பகிர்வுக்கு நன்றி!! இனி பதிவுகளை வாசிக்கிறேன். நன்றி!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
யாத்ரா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 3:04
அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஈரோடு கதிர் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:11
மிக விரிவான, அருமையான விமர்சனம்..
இனி அவர்களின் தளத்தையும் வாசிக்கிறேன்
நன்றி
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பின்னோக்கி 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:13
//‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள்.
இது தான் அமித்து அம்மாவை தொடர்ந்து நான் படிப்பதற்கான காரணம்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
butterfly Surya 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:22
அவரது அனுபவ பதிவுகள் மிக இயல்பாக இருக்கும்.
வாழ்த்துகள்.
மாதவராஜ் சார். நண்பன் ஜாக்கி சொன்னதையும் வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
anujanya 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:40
AA (ஆம், அவர்களை நான் அப்படித்தான் அழைப்பேன்) எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒருவர். நீங்கள் குறிப்பிட்ட "பெட்டிக்குள் தாலி" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. போலவே வேலன் குறிப்பிடும் கவிதையும்.
நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய பதிவர் அவர். வாழ்த்துகள் AA.
அனுஜன்யா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பா.ராஜாராம் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:45
அருமையான பகிர்வு மாதவன்.எவ்வளவு அழகாய்,நிறைந்த மனசோடு சக பயணியை விவரித்து செல்கிறீர்கள்.மிக சிலவே அவர் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.வாசித்தவரையில்,நீங்க உணர்கிற இதே பிரமிப்பை,சந்தோசத்தை,நிறைவை, நானும் உணர்ந்து வந்திருக்கிறேன்.யாரும் உணரலாம்.முக்கியமாய் அவரின் அமித்து அப்டேட்ஸ்..எனக்கு!
ஒரு பதிவை பிடித்து அதை சிலாகிக்க இடுகிற பின்னூட்ட மொழிகள் எப்பவும் பத்தாமலே இருந்து வருகிறது.எவ்வளவுதான் தூர படுத்தி சிலாகித்ததை பார்க்கும் போதும்,இன்னும் கொஞ்சம் சொல்லி வந்திருக்கலாமோ,என்று உணர்கிற எவ்வளவோ பதிவர்களின் எழுத்துக்களில் அமித்தம்மாவும் ஒருவர்.
நாம் சொல்லவிட்ட எல்லாவற்றையும்,நம் மனசுக்கு பிடித்த ஒருவரை பற்றி,நம் மனசுக்க பிடித்த மற்றொருவர் சித்திரம் தீட்டி தருவது ஆக சிறந்த பேரனுபவம்.
இதை,உங்களின் இந்த பதிவில் பார்க்கிறேன்.நிறைந்த சந்தோசம் மாதவன்.
வாழ்த்துக்கள் அமித்தம்மா!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:43
Hereafter, I will also start reading amit amma's writings.
Keep going Mr. Maadhavaraj.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அன்புடன் அருணா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:45
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கும்,உங்களுக்கும்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமிழ் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:18
அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமிழ் அமுதன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:06
மிக சிறந்த ஒரு பதிவரை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்...!
ஒரு அபூர்வமான எழுத்து நடையில் கலக்குபவர்..!
அமித்து அம்மாவின் பதிவுகளில்...!
பணத்தின் ருசி
கவலை தின்னி
சுயம்
ஆகிய பதிவுகளும் சிறப்பானவை...!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ரவி 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:02
அமித்து அம்மாவின் டாப் க்ளாஸான படைப்புக்கள் இன்றைய வெகுஜன ஊடக படைப்புகளைவிட டாப் க்ளாசாக சில சமயம் உணர்ந்ததுண்டு.
அவர்களை சரியான நேரத்தில் ரெககனைஸ் செய்யும் இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி !!!!
பதிவுக்கொரு பூங்கொத்து !!!!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Deepa 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:09
காலையிலேயே படித்து விட்டு அமித்து அம்மாவிடம் வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டேன்.
அற்புதமான பகிர்வு. உங்கள் பார்வையும் வெகு நுட்பமான அலசலும் அவர்களின் எழுத்துக்களுக்கு மேலும் உரமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை!
//இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். //
:-) ரொம்ப ரசித்தேன். மழை நனைப்பது போன்ற ரம்மியமான நடை அவர்களின் தனிக்கலை!
அமித்து அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; உங்களுக்கும்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ILA (a) இளா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:21
வலைச்சரத்தில் எழுதலாமே!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஜெஸ்வந்தி - Jeswanthy 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 3:05
அழகான விமர்சனம். அமித்து அம்மாவின் இயல்பான நடை எனக்கும் பிடிக்கும்
.வாழ்த்துக்கள் அமித்து அம்மா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ப்ரியமுடன் வசந்த் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 3:08
வாழ்த்துக்கள் அமித்து அம்மா
சிறந்த விமர்சனம்..
சிறந்த எழுத்தனுபவமும்,வட்டார பேச்சு வழக்கில் எழுதுவதிலும் திறமையானவர் சகோதரி..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
காமராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 8:19
யாருக்கும் அமித்தம்மாவைப் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம். வத்தல், வடாம் என்று எழுதும் பழய்ய பெண்எழுத்தாளர்கள் பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. அதையெல்லாம் பாந்தமாகத் துடைக்கிற எழுத்து அமித்து அம்மாவின் எழுத்து. அஞ்சறைப்பெட்டிகளை நடுக்கூடத்திற்கும் நடுத்தெருவுக்கும் கொண்டுவந்து பொதுவான அன்றாடங்களோடு இணைக்கிற அவரது வித்தை வியப்பானது. அதுதான் அவர்களது சிறப்பு. அவர்களையும் எனக்கு
மாதுதான் அறிமுகப்படுத்தி வைத்தான். வானம் அறிந்ததனைத்தும் வலையில் அறிவோம். வானம் அறியாதவற்றையும் கூட.
அட மறந்துவிட்டேன் வாழ்த்துக்கள் அமித்தம்மா....
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அமிர்தவர்ஷினி அம்மா 19 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:37
எதுவும் தெரியாமத்தான் எழுத ஆரம்பிச்சேன், ஒரு சராசரி வாசகியாய் இருந்திருக்கேன், நீங்கள் சொன்னால் மாதிரி ஒரு புள்ளி என்னை மாற்றி இருக்க வேண்டும்.
நீங்க எழுதுனதும், அனைவரின் பின்னூட்டங்களும் என்னை சிலிர்க்க வைத்து அழ வைத்துவிட்டது மாதவ் சார்!!
தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. ரொம்ப நன்றி சார்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 19 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:05
எனக்கும் சாரதாவின் பதிவுகள் மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு சக பதிவரை (படைப்பாளியை) மனம் திறந்து பாராட்டுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொடருங்கள் மாதவராஜ்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
"உழவன்" "Uzhavan" 19 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 3:44
கடந்த ஒரு வருட காலமாக அவரின் அனைத்து இடுகைகளையும் படித்து வியக்கும் ஒரு வாசகன் என்ற முறையில், இந்த இடுகையைக் கண்டு பெரிதாய் மகிழ்கிறேன்.
உங்களுக்கு நன்றி.. அமித்துமா அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
Goodreads
ஏற்றுகிறது…
பக்கங்கள்
Home
எழுதியவை
Subscribe
Enter your email address:
Delivered by FeedBurner
அறிமுகம்
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். |
கொஞ்ச காலமாகவே யோசித்து வந்தது. இப்போதுதான் சாத்தியமாகி இருக்கிறது. இலக்கியம் குறித்து திட்டமிடல்களோடு உட்காருகிற சமயம், எதாவது நிகழ்வுகள் தொந்தரவு செய்து விடுகின்றன. உன்னைப்போல் ஒருவன், நோபல் பரிசு என ஊர்சுற்ற ஆரம்பித்து விடுகிறேன். இப்போது திரும்பவும் வீட்டிற்கு வந்துவிட்டேன். இந்த கதியில்தான் வாழ்வும் சரி, வலையுலகமும் எனக்கு வாய்த்திருக்கிறது.
வலைப் பக்கங்களில், அடுத்தவர்களுடைய பதிவுகளை ஏழெட்டு மாதங்களாக படித்து வருகிறேன். ஒன்றிரண்டு என ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக கூடி இன்று அறுபத்திரண்டு வலைப்பக்கங்களை என்னுடைய கூகிள் ரீடரில் வைத்து படித்து விடுகிறேன். இன்னும் சேர்க்க வேண்டியது இருக்கிறது. அய்யனார், கே.பாலமுருகன், ஆடுமாடு, போன்றோரது பல பதிவுகளை இன்னமும் படிக்காமல் சேமித்து வைத்திருக்கிறேன். அவர்களுடைய எழுத்துக்களின் மீது எனக்கு பிரமிப்பும், மோகமும் உண்டு. மெல்ல ஆற அமர படிக்க வேண்டும் என நினைத்து, அவை ஒருபக்கம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றன. எப்போது கம்ப்யூட்டரைத் திறந்தாலும் ஒரு உறுத்தல் வருகிறது. அதற்குள் பலரது வலைப்பூக்கள் ரீடரில் மலர்ந்து இருக்கின்றன. அதை நோக்கி ‘கர்சர்’ விரைகின்றது. இதற்காக மற்றவர்களது பதிவுகள் படிப்பதற்கு சுலபமானவை, அடர்த்தியில்லாதவை என்று அர்த்தமாகி விடாது. எனக்கு அப்படியொரு சுபாவம். அவ்வளவுதான். இது எல்லோருக்குமே இருக்கும் என்றே நினைக்கிறேன்.
இந்தப் பதிவுகளைப் படிக்கும்போது சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும். அப்படிப்பட்டவர்களின் வலைப்பக்கங்களுக்குச் சென்று ஆரம்பத்தில் இருந்து படிக்க ஆரம்பிப்பேன். முதன்முதலாக இப்படி படிக்க ஆரம்பித்தது செல்வேந்திரனை. அது ஒரு புது அனுபவத்தைத் தந்தது. ஒரு பதிவைப் படித்து பின்னூட்டம் போட்டு விட்டு வேறொரு பதிவரின் பதிவுக்குச் செல்வது ஒரு பத்திரிகையை படிப்பது போல. ஒரே பதிவரின் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பது ஒரு சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு, ஒரு நாவல் படிப்பது போல. கூடவே அந்த பதிவர் நம்மோடு தனியாக வந்துகொண்டு இருப்பார். அவரது உலகம், மொழி, நடை எல்லாம் துல்லியமாக உணர முடியும். எனக்கு இதுவும் பிடித்திருந்தது. இரவு பத்து மணிக்கு மேல் ஆரம்பித்து இரண்டு மணி வரைக்கும் கூட சிலரது வலைப்பக்கங்களை வாசித்துக் கொண்டே இருந்திருக்கிறேன். இருக்கிறேன்.
இந்த அனுபவத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியது. ‘என்னைக் கவர்ந்த பதிவர்கள்’ என்னும் இந்த தொடருக்கான அர்த்தம் இதுதான். எனக்குள்ள புரிதலில் ஒரு பதிவரின் எழுத்துக்களை பார்த்த விதமே இது. ஒரு கோணம். ஒரு பார்வை. அவ்வளவே.
தீவீரமான, அடர்த்தியான, முற்போக்கான எழுத்துக்களைப் பற்றித்தான் எழுதப் போகிறேன் என்று எந்த முன்முடிவுக்கும் போய்விட வேண்டாம். நல்ல கவிஞர்கள், நல்ல சிந்தனையாளர்களோடு ரொம்ப ரொம்ப ஜாலியான, அரட்டை அடிக்கும் பதிவர்களும் என் லிஸ்டில் இருக்கிறார்கள். பின்னூட்டங்களிலேயே பிரமாதப்படுத்துகிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் இந்த சந்திக்கு கொண்டு வந்து நிறுத்தாமல் விடப்போவதில்லை.
இப்போது ஆரம்பிப்போமா. ‘அ’ன்னா....
அமித்து அம்மா எழுதிய ‘உப்பு’ என்னும் இந்தப் பதிவுதான் நான் அவர்களது வலைப்பக்கத்தில் முதன்முதலில் படித்தது என நினைக்கிறேன்.
சாப்பாட்டை பார்த்தாலே சட்டென்று உப்பின் ஞாபகம்தான் வருகிறது. சமையலறைக்கு போனாலுமே உப்பின் ஞாபகம்தான். எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் எப்படியாவது கூடிவிடுகிறது, இல்லையாவது குறைந்துவிடுகிறது. ஆனால் சரிக்கு சரியாய் இல்லை. கொஞ்ச நாட்களாகத்தான் இப்படியென்றாலும், இன்று எல்லோருமே டிபனை புறக்கணித்ததால் மிகவும் சங்கடப்படுத்திக்கொண்டே இருக்கிறது.
அடுத்தடுத்து தொடரும் இந்த விவரிப்புகள் ஒரு தேர்ந்த கதைசொல்லிக்கே உரியது. கண்ணிகளைக் கோர்க்கிற, சீட்டுகளைச் சேர்க்கிற இந்த லாவகம்தான் எழுதுகிறவர்களுக்கு முக்கியமானது. இது அமித்து அம்மாவிடம் ஏற்கனவே இருந்தது போலும். சொல்ல வருகிற விஷயங்கள் வாசகனுக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தொந்தரவு செய்ய வேண்டும். அதுவும் அமித்து அம்மாவுக்கு வாய்த்திருந்தது. ஆண்களின் உலகத்திற்கும், பெண்களின் உலகத்திற்கும் இடையே எவ்வளவு பெரிய சுவர் இருக்கிறது என்பதற்கு இந்த உப்பு ஒரு உரைகல் போல. ஆண்களின் சிந்தனையிலே இல்லாத இந்த உப்பு, பெண்களை என்ன பாடு படுத்திக்கொண்டு இருக்கிறது!
இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். சரளமான நடையும், மிக இயல்பான மொழியும், சட்டென்று கசிந்துருக வைக்கிற அனுபவங்களுமாய் இருந்தன. உளவையும், பத்மாவையும் படித்த யாரும் இதனை உணர்ந்திட முடியும். தொண்டை அடைத்துப் போக வைத்த பதிவுகள் அவை. மழையின் எல்லாப் பக்கங்களையும் படிக்க வேண்டும் என்னும் தாகத்தை இந்தப் பதிவுகளேத் தந்தன. முதல் துளியைத் தேடிச் சென்றேன்.
2008 ஆகஸ்டில்தான் அமித்து அம்மா வலைப்பக்கம் ஆரம்பித்து இருந்தார்கள். முதல் பதிவைப் பார்த்ததும் ஆச்சரியமும், சந்தோஷமும் என்னை ஆட்கொண்டன. அழகழகான குழந்தைகளின் படங்கள்! தவழ்ந்து கொண்டு இருந்த இந்த அழகுகள்தான் இப்போது எழுந்து நடந்துகொண்டும், ஓடிக்கொண்டும் இருக்கின்றன போலும். படங்களோடு வந்த பதிவுகளுக்குப் பிறகு மெல்ல மெல்ல தயக்கத்தோடு கவிதைகளாய் சில பதிவுகள். சமூக அக்கறையோடு வந்தாலும் அவை சுமாராகத்தான் இருக்கின்றன. ஆனால் ஒன்றைத் தாண்டியே இன்னொன்று இருந்தது. இது அவசியம். வளர்ந்து, வளர்ந்து ஒருக்கட்டத்தில் இப்படி ஒரு கவிதையாகவே வெளிவருகிறது!
சிறுகுறிப்பு வரைக
20 வரிகளுக்கு மிகாமல்
2 பக்கங்களுக்கு குறையாமல்
இவை எல்லாவற்றிலும்
எழுதிவிட முடிகிறது
வாழ்க்கையை
எழுதத்தெரியாதவனுக்கு
இன்னும் சுலபம்
ஒரு பெருமூச்செறிதல்
இயம்பிவிடும்
தொடர்ந்து, சின்னச் சின்ன உரையாடல்கள் மூலம் சில பதிவுகள் எழுத ஆரம்பிக்கிறார்கள். அப்போதுதான் அப்பாவைப் பற்றிய அந்தப் பதிவு வருகிறது. தன்னை அப்படியே வெளிப்படுத்திக் கொண்டு, வாய்விட்டு அழுது, அழவைத்த அமித்து அம்மாவின் எழுத்தும் வருகிறது. ‘பிராக்ரஸ் ரிப்போர்ட் வாங்க நீ வரவேண்டாம்’ என்று அப்பாவிடம் சொல்கிற குழந்தையும், தன் திருமணத்திற்கு வரமாட்டியா அப்பா என ஏங்குகிற குழந்தையும் வாசகனின் நினைவுகளில் எப்போதும் கூட வரத்தான் செய்வார்கள். இரண்டும் ஒரே குழந்தையாய் இருப்பதில்தான் வாழ்க்கை சிரித்துக் கொண்டு இருக்கிறது.
மேலே குறிப்பிட்ட கவிதையும், அப்பாவைப் பற்றிய பதிவும் முக்கியமானவை. ஆமாம். இந்த இடங்கள் மிக முக்கியமானவை. அமித்து அம்மாவின் எழுத்துக்களில் பக்குவமும், நிதானமும், தெளிவும் பிடிபட ஆரம்பித்த இடம் இவை. எல்லோருக்கும் இப்படி ஒரு இடம் வாய்க்கும். கிறுக்கி கிறுக்கிப் பார்த்து, சட்டென்று நாம் நினைத்த உருவம் ஒன்று வெளிப்படும். அதிலிருந்து வேறொரு இடத்திற்கு படைப்பாளி நகர ஆரம்பிக்கிற புள்ளி இது. தொடர்ந்து எழுதிக்கொண்டு இருப்பவர்களின் எழுத்துக்களில் இந்த மாற்றம் தன்னையறியாமல் நிகழ்ந்து கொண்டே இருக்கும். இதற்குப் பிறகு அமித்து அம்மா தன்னை உணர்ந்து கொண்ட மாதிரி, தன்னம்பிக்கையோடு நிறைய சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இதோ, பொருத்தமற்ற தலைப்பு, ஒப்புக்கு அழுகை, அன்புள்ள அப்பாவிற்கு, பெட்டிக்குள் தாலி, மிளகாய் கிள்ளி சாம்பார், முதல் மூன்று பின்னூட்டங்கள், உப்பு, பத்மா, உளவு போன்ற அருமையான பதிவுகளை எழுதி முடித்திருக்கிறார்கள். இதில் சிலவற்றை திருத்தி எழுதினால் இன்னும் அற்புதமாக வரும் என்பது என் கருத்து.
வாசிப்பு அனுபவங்களைப் பற்றி குறையத்தான் எழுதி இருக்கிறார்கள். எழில் வரதன் மற்றும் கண்மணி குணசேகரனின் சிறுகதைகள் பற்றிய இரு பதிவுகளே இருக்கின்றன. முற்போக்கு, பின்நவீனத்துவம் என எந்த பாதிப்பும் இல்லாமல் அவர்கள் பாட்டுக்கு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படியே எழுதக் கடவட்டும். சில பிரக்ஞைகள், நமது இயல்பான ஓட்டத்தைக் குலைத்து பெரும் தயக்கங்களை கொண்டு வந்து சேர்க்கும். அறம் சார்ந்து மட்டுமே அவர்கள் யோசிக்கிறார்கள். எழுதுகிறார்கள். பழசை நினைத்து என்னை புதுசாக்கிக் கொள்கிறேன் என்று அவர்கள் குறிப்பிடுவதற்கு வேறென்ன அர்த்தம் இருக்க முடியும்? என்னைப் போன்றவர்களுக்கு மேலோட்டாமாக, அவர்கள் எழுதிய பிறவியில் குற்றங்கள் தெரியலாம். பிறவிகள் குறித்து இந்த சமூகத்தில் மிதந்து கொண்டு இருக்கும் கற்பிதங்கள் என்னென்ன கற்பனைகளை ஒரு நுட்பமான, பிரியமுள்ள மனுஷிக்கு ஏற்படுத்துகிறது என்பதுதான் அந்தப் பதிவு. அதை நகைச்சுவையோடும், வலியோடும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கொஞ்சம் நிதானமாக திருத்தி எழுதினால், பிறவியும் மிகச்சிறந்த பதிவுகளில் ஒன்றாக இருக்கும் என்றே நினைக்கிறேன். சினிமா குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும்போதே இந்தப் பிறவி குறித்த சந்தேகங்களை அழகாக முன்வைக்கிறார்.
என்ன படம்னுலாம்னு நினைவில்லை. ஊர்ல எங்க அம்மாவோட பாத்தது. தரை (மண்) டிக்கெட், சேர்(கட்டை சேர்) டிக்கெட், என்னை சேர்ல உக்கார வெக்கலைன்னு அழுதுகிட்டே தூங்கிட்டேன். அப்புறம் எதோ ஒரு சாமி படம். இது நல்ல ஞாபகமிருக்கு. கடைசியில ராதாரவின்னு நினைக்கிறேன். அவரை சுட்டுடுவாங்க. அவர் சுடப்பட்டு உடம்பெல்லாம் ரத்தமாகி செத்துடுவார். இதைப் பாத்துட்டு அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு இன்னொரு படம் பார்க்கிறேன். அதில் அதே ராதாரவி உயிரொடு இருக்கிறார். எனக்கு அந்தப் படத்தில் மனம் செல்லவேயில்லை. எனது மனம் முழுதும் எப்படி செத்தவர் திரும்பி வந்தார்னுதான் சந்தேகம்.
அமித்து அம்மாவின் வலைப் பக்கங்களைப் படித்தால் மூன்று விஷயங்கள் தெளிவாகும். முதலாவது கிராமம் சார்ந்த ஒரு வாழ்க்கை அவர்களுடைய அழகிய கனவு போல் இருக்கிறது. இரண்டாவது தினமும் வேலைக்குச் செல்லும் எலக்டிரிக் டிரெயின், நடைபாதைக் காட்சிகள் அவர்களுடைய நனவுலகமாக இருக்கிறது. அடுத்தது, எப்போதும் கூடவே இருக்கிற சமையலறை. தனக்கான விருப்பங்களாக எதையெல்லாம் சொல்கிறார்கள், பாருங்கள்:
வெற்றுக் கைகளை சில்லிட வைக்கும் பால் பாக்கெட்,
காரைத் தரையில், கட்டை தென்னந்துடைப்பத்தால் வரும் சர்... ரக், சர்... ரக் ஓசை,
பின்னர் வளையல் ஒலியினூடே வரும் ஸலக், ஸலக் தண்ணீர் தெளிக்கும் ஓசை.
குழாயைத் திறந்தபின் ஒரு சட சட சத்தத்துக்கு பின்னர், சில்லென்று கை மேலே படும் நீர் துளிகள்.
பார்த்துக்கொண்டே இருக்கும் போதே புஸ்ஸென பொங்கும் பால்,
ஒரு சோம்பலுடன் அடிநாக்கில் தித்திப்பும் கசப்புமாய் படரும் காபி,
சின்னதும் பெரியதுமான நீர் கொப்புளங்களுடன் சல சலவென கொதிக்கும் உலை.
ஒரு நொடியும் கடத்தாது, உள்ளிருக்கும் அழுத்தத்தை சரியான இடைவெளியில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என்று வெளியேற்றும் குக்கர்,
எங்கோ பாத்திரங்கள் உருளும் ஓசை, பூக்காரர், தயிர்க்காரரின் ரைமிங்க் கத்தல்கள்
இடையிடையே சிணுங்கலுமாய், சிரிப்புமாய் ஓடிவந்து காலை கட்டிக்கொள்ளும் செல்ல மகள்
பெண்மனதின் உலகம் எதற்குள் உருண்டோடிக்கொண்டு இருக்கிறது! ‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள். அதுதான் அமித்து அம்மா! இத்தனையோடும்தான் இவர்கள் பதிவு எழுதிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது மலைக்க வைக்கிறது. அமித்து அம்மாவுக்குள் வாழ்க்கையனுபவங்கள் நிறைய நிறைய இருக்கின்றன. அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அவைகளில் பூத்திருக்கும் அபூர்வ கணங்களைப் பிடித்து எல்லோருக்கும் வாசம் காட்ட முடிகிறது அவர்களால்.
மகளே!
என் தாய்க்கு
சரியான மகளாய்
வாய்க்காது போன
நான்
உனக்காவேனும்
ஒரு
தாயாய் இருக்க
என அவர்கள் குழந்தையை மழையாக்கி ஆசைப்படுவதில் ஆயிரம் அர்த்தங்களும், ஏக்கங்களும் தொனிக்கின்றன. ஒரு பொறுப்புணர்வு மிக்க படைப்பாளியாய் அமித்து அம்மா நிச்சயம் வருவார்கள்.
காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது.
*
Tags
கவர்ந்த பதிவர்கள் பதிவர்வட்டம் வாசிப்பு
புதியது
பழையவை
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.
மேலும் காட்டு
கருத்துரையிடுக
40 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
சென்ஷி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:44
சிறப்பான பதிவுகளைப் பற்றிய அருமையான விமர்சனம்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமயந்தி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:56
சாரதாவுக்கு மனமார்ந்த ,ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:56
அமித்து அம்மா எழுதிய எல்லாப்பதிவுமே நான் அனுபவிச்சு வாசிச்சிருக்கேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நட்புடன் ஜமால் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 9:57
நிறைய படிச்சிருக்கீங்க. :)
இன்னும் பலரை சந்திக்கலாம் போல...
நற்பணி செவ்வனே தொடருங்கள் ...
நாங்களும் ...
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
துளசி கோபால் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:17
அமித்து அம்மா அருமையிலும் அருமை.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அம்பிகா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:18
மிகச் சரியானத் தேர்வு. நான் சிறிது காலமாக தான் வலையுலகை வாசித்து வருகிறேன். இந்த குறுகியகாலத்திலேயே அவர்கள் எழுத்து என்னை கவர்ந்தது.\\சிலருடைய எழுத்தும், சிந்தனையும் சட்டென்று ஒரு கணத்திலோ, ஒரு இடத்திலோ பற்றிக்கொள்ளும். நெருக்கமாய் உணர வைக்கும்//.நிஜம்தான்.அவர்களுக்க்கு வாழ்த்துக்கள். காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது \\காலம் அவர்களது எழுத்துக்களுக்கு வாசல் தெளித்து கோலம் போட்டு வைத்திருக்கிறது//
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
சந்தனமுல்லை 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:28
வாவ்...மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!! அமித்து அம்மாவிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்..அவர்கள் இன்னும் அதிக தூரம் கடந்து செல்ல!! அருமையான பகிர்வுக்கு தங்களுக்கொரு நன்றி!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Jackiesekar 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:39
நன்றாக எழுதி இருக்கின்றீர்கள் சார்.. சக பதிவர் பற்றி பெருமையாய் பேச ஒர மனது வேண்டும்...வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கு
நன்றி மாதவராஜ்சார்..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
எம்.எம்.அப்துல்லா 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:51
சரியான நேரத்தில்,சரியான நபரைப் பற்றி சரியான ஒருவரால் இடப்பட்ட இடுகை :)
வாழ்த்துகள் அமித்துஅம்மா :)
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ராகவன் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:56
அன்பு மாதவராஜ்,
உங்கள் பட்டியலில் கட்டாயம், அமித்து அம்மா இருப்பார்கள் என்று நினைத்தேன், நீங்கள் என்னை ஏமாற்றவில்லை. எனக்கு அவர்களின் பிற பதிவுகளை விட ஏனோ மிளகாய் கிள்ளி சாம்பார் மிகவும் பிடித்தது(சாப்பாட்டு பிரியன் என்பதாலும், அம்மாபிள்ளை என்பதாலும் கூட இருக்கலாம்), அதன் நெருக்கமும், அதில் உள்ள ஒரு பொதுத் தன்மையும் அதை எல்லோராலும் உள்ளங்கையில் ஊற்றி குடிக்க முடிந்தது. என்ன ஒரு அலட்சியமான நடை, எல்லோரையும் திரும்பி பார்க்க வைக்கும் ஒய்யார வனப்புடன் சித்திரை திருவிழாவிற்கு செல்லும் ஜெயந்தி போல, மனசுக்குள் ஒற்றைச் சலங்கை கொலுசென குதியாட்டம் போடும் நடை. என்னுடைய பின்னூட்டதில் கூட அவர்களின் கதை சொல்லும் லட்சனங்களை சிலாகித்ததாய் ஞாபகம். மிக சரியான ஊற்றுக்கண் இந்த பதிவு, பொங்கி பெருகும் எல்லோரையும் நனைக்க எல்லோரும் செழிக்க!
அன்புடன்,
ராகவன்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
மண்குதிரை 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:58
amiththu amma avarkalukku vazhththukkal
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ராமலக்ஷ்மி 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:00
அருமையாக விமர்சித்திருக்கிறீர்கள்!
வாழ்த்துக்கள் அமித்து அம்மா!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கபிலன் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:23
அருமை!
வெறுமனே அந்தப் பதிவரைப் பிடிக்கும் என சொல்லாமல், பிடித்ததற்கான காரணத்தையும் விளக்கி சொல்லி இருக்கீங்க. இது வரைக்கும் எவ்வளவோ வலையுலகத்துல கிடைச்ச அவார்டுகளை விட, இதில் பதிவருக்கு கிடைக்கும் ஊக்கமும், சந்தோஷமும், கௌரவமும் நிச்சயமாக ஸ்பெஷல் தான்.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா : )
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
செ.சரவணக்குமார் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:35
அன்பு மாதவராஜ் அண்ணா...
நற்செயல் தொடரட்டும்...
நன்றி.
வாழ்த்துக்கள் அமித்து அம்மா.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தேவன் மாயம் 14 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 11:49
அருமையான பதிவர்கள்!!! நல்ல விமர்சனம்!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அ.மு.செய்யது 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:34
ஹைய் !!!!!! என்னோட ஃபேவரைட் அமித்து அம்மா...!!!!!!
கிட்டத்தட்ட அமித்து அம்மாவின் எல்லா பதிவுகளையும் ஒரெழுத்து விடாமல் படிக்கும்
சராசரி வாசகனாய் இந்த பதிவு மிகவும் எனக்கு மிகவும் நெருக்கமாகிறது.
அவங்களுடைய இலக்கிய ரசனையும் வாசிப்பையும் பார்த்து வியந்திருக்கிறேன்.மேலும்
மாதவராஜ் அவர்களுடைய பாராட்டுகளில் பெருமையாக உணார்கிறேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பெயரில்லா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:40
நல்ல பதிவு மாதவ்.
அவருடைய வெற்றிடத்தை நோக்கிப் போகும் வீடு கவிதை அற்புதமான ஒன்று.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பித்தனின் வாக்கு 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 1:05
பதிவு நல்லா இருக்கு. சென்ற சிங்கை பதிவர்கள் கூட்டத்தின் போது ஒரு பதிவர்(அப்பாவி-முருகு) தங்களின் மோடி பதிவில் நான் இட்ட பின்னூட்டங்களைப் பற்றி வருத்தப் பட்டார். கோவியார், ஞானப்பித்தன், ஜேசப் பால்ராஜ் ஆகியோர் தங்களைப் பற்றியும் தங்களின் பதிவுலக அனுபவங்களைப் பற்றியும் கூறி, ஒரு கடுமையான பின்னூட்டம் இடும்முன் பதிவர்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள் என்றும் அறிவுருத்தினார்கள். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு விசயத்தைப் பற்றி எழுத நினைத்தால் மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற கவலை இல்லாமல் எனது கருத்தை ஆனித்தரமாக கூறுபவன். ஆதாலால் நான் தங்களின் அந்த பதிவில் உங்களைப் பற்றி கடுமையான விமர்சனம் பண்ணியும் தாங்கள் பொறுமையாக பதில் உரைத்தது மிகவும் பிடித்து இருந்தது. எனது கடுமையான தனிப்பட்ட பின்னூட்டங்களுக்கு மன்னிக்கவும். ஆனால் அதன் பிறகு நான் எனக்கு பலரின் எதிர் பதிவின் கருத்துக்கள் பிடிக்காவிட்டால் பின்னூட்டங்கள் இடாமல் இது அவர்களின் கருத்து என ஒதுங்கி விடுகின்றேன். கடுமையான கருத்துப் பின்னூட்டங்கள் இடுவதில்லை. விவாதமும் செய்வதில்லை. இந்த மாற்றத்தை தந்தமைக்காக நன்றி. நான் தங்களின் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகின்றேன். நன்றி.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
நிலாரசிகன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:01
நல்ல விமர்சனம் சிறப்பான அறிமுகம்.
நன்றி அய்யா.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஹரன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:10
நல்ல ஒரு படைப்பாளியை அடையாளம் காட்டினீர்கள். படித்தேன்.. படிப்பேன்.
நன்றி
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Ravikumar Tirupur 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 2:35
தோழர்! அமித்து அம்மா பதிவுகளை இதுவரை வாசிக்க இயலாமல் போய் விட்டது. அருமையான பகிர்வுக்கு நன்றி!! இனி பதிவுகளை வாசிக்கிறேன். நன்றி!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
யாத்ரா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 3:04
அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஈரோடு கதிர் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:11
மிக விரிவான, அருமையான விமர்சனம்..
இனி அவர்களின் தளத்தையும் வாசிக்கிறேன்
நன்றி
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பின்னோக்கி 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:13
//‘இதுதான் நாங்கள், இப்படித்தான் நாங்கள்’என்று வேதனையோடு ஆர்ப்பாட்டம் செய்யாமல், மிக அமைதியாக புரிய வைக்கிறார்கள்.
இது தான் அமித்து அம்மாவை தொடர்ந்து நான் படிப்பதற்கான காரணம்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
butterfly Surya 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:22
அவரது அனுபவ பதிவுகள் மிக இயல்பாக இருக்கும்.
வாழ்த்துகள்.
மாதவராஜ் சார். நண்பன் ஜாக்கி சொன்னதையும் வழி மொழிகிறேன்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
anujanya 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:40
AA (ஆம், அவர்களை நான் அப்படித்தான் அழைப்பேன்) எனக்குப் பிடித்த பதிவர்களுள் ஒருவர். நீங்கள் குறிப்பிட்ட "பெட்டிக்குள் தாலி" எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. போலவே வேலன் குறிப்பிடும் கவிதையும்.
நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய பதிவர் அவர். வாழ்த்துகள் AA.
அனுஜன்யா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
பா.ராஜாராம் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 4:45
அருமையான பகிர்வு மாதவன்.எவ்வளவு அழகாய்,நிறைந்த மனசோடு சக பயணியை விவரித்து செல்கிறீர்கள்.மிக சிலவே அவர் எழுத்துக்களை வாசித்திருக்கிறேன்.வாசித்தவரையில்,நீங்க உணர்கிற இதே பிரமிப்பை,சந்தோசத்தை,நிறைவை, நானும் உணர்ந்து வந்திருக்கிறேன்.யாரும் உணரலாம்.முக்கியமாய் அவரின் அமித்து அப்டேட்ஸ்..எனக்கு!
ஒரு பதிவை பிடித்து அதை சிலாகிக்க இடுகிற பின்னூட்ட மொழிகள் எப்பவும் பத்தாமலே இருந்து வருகிறது.எவ்வளவுதான் தூர படுத்தி சிலாகித்ததை பார்க்கும் போதும்,இன்னும் கொஞ்சம் சொல்லி வந்திருக்கலாமோ,என்று உணர்கிற எவ்வளவோ பதிவர்களின் எழுத்துக்களில் அமித்தம்மாவும் ஒருவர்.
நாம் சொல்லவிட்ட எல்லாவற்றையும்,நம் மனசுக்கு பிடித்த ஒருவரை பற்றி,நம் மனசுக்க பிடித்த மற்றொருவர் சித்திரம் தீட்டி தருவது ஆக சிறந்த பேரனுபவம்.
இதை,உங்களின் இந்த பதிவில் பார்க்கிறேன்.நிறைந்த சந்தோசம் மாதவன்.
வாழ்த்துக்கள் அமித்தம்மா!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:43
Hereafter, I will also start reading amit amma's writings.
Keep going Mr. Maadhavaraj.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அன்புடன் அருணா 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 5:45
பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் அமித்து அம்மாவுக்கும்,உங்களுக்கும்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமிழ் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 6:18
அமித்து அம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
தமிழ் அமுதன் 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 7:06
மிக சிறந்த ஒரு பதிவரை பற்றி சொல்லி இருக்கிறீர்கள்...!
ஒரு அபூர்வமான எழுத்து நடையில் கலக்குபவர்..!
அமித்து அம்மாவின் பதிவுகளில்...!
பணத்தின் ருசி
கவலை தின்னி
சுயம்
ஆகிய பதிவுகளும் சிறப்பானவை...!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ரவி 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 8:02
அமித்து அம்மாவின் டாப் க்ளாஸான படைப்புக்கள் இன்றைய வெகுஜன ஊடக படைப்புகளைவிட டாப் க்ளாசாக சில சமயம் உணர்ந்ததுண்டு.
அவர்களை சரியான நேரத்தில் ரெககனைஸ் செய்யும் இந்த பதிவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி !!!!
பதிவுக்கொரு பூங்கொத்து !!!!!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Deepa 14 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 11:09
காலையிலேயே படித்து விட்டு அமித்து அம்மாவிடம் வாழ்த்துக்களையும் தெரிவித்து விட்டேன்.
அற்புதமான பகிர்வு. உங்கள் பார்வையும் வெகு நுட்பமான அலசலும் அவர்களின் எழுத்துக்களுக்கு மேலும் உரமும் ஊக்கமும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை!
//இதற்குப் பிறகு மழை வரும்போதெல்லாம் ஓடிப்போய் நனைய ஆரம்பித்தேன். //
:-) ரொம்ப ரசித்தேன். மழை நனைப்பது போன்ற ரம்மியமான நடை அவர்களின் தனிக்கலை!
அமித்து அம்மாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்; உங்களுக்கும்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ILA (a) இளா 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 12:21
வலைச்சரத்தில் எழுதலாமே!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ஜெஸ்வந்தி - Jeswanthy 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 3:05
அழகான விமர்சனம். அமித்து அம்மாவின் இயல்பான நடை எனக்கும் பிடிக்கும்
.வாழ்த்துக்கள் அமித்து அம்மா
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
ப்ரியமுடன் வசந்த் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 3:08
வாழ்த்துக்கள் அமித்து அம்மா
சிறந்த விமர்சனம்..
சிறந்த எழுத்தனுபவமும்,வட்டார பேச்சு வழக்கில் எழுதுவதிலும் திறமையானவர் சகோதரி..
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
காமராஜ் 15 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 8:19
யாருக்கும் அமித்தம்மாவைப் பிடிக்காமல் போனால் தான் ஆச்சர்யம். வத்தல், வடாம் என்று எழுதும் பழய்ய பெண்எழுத்தாளர்கள் பற்றி எனக்கு ஒரு கருத்து உண்டு. அதையெல்லாம் பாந்தமாகத் துடைக்கிற எழுத்து அமித்து அம்மாவின் எழுத்து. அஞ்சறைப்பெட்டிகளை நடுக்கூடத்திற்கும் நடுத்தெருவுக்கும் கொண்டுவந்து பொதுவான அன்றாடங்களோடு இணைக்கிற அவரது வித்தை வியப்பானது. அதுதான் அவர்களது சிறப்பு. அவர்களையும் எனக்கு
மாதுதான் அறிமுகப்படுத்தி வைத்தான். வானம் அறிந்ததனைத்தும் வலையில் அறிவோம். வானம் அறியாதவற்றையும் கூட.
அட மறந்துவிட்டேன் வாழ்த்துக்கள் அமித்தம்மா....
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
அமிர்தவர்ஷினி அம்மா 19 அக்டோபர், 2009 அன்று முற்பகல் 10:37
எதுவும் தெரியாமத்தான் எழுத ஆரம்பிச்சேன், ஒரு சராசரி வாசகியாய் இருந்திருக்கேன், நீங்கள் சொன்னால் மாதிரி ஒரு புள்ளி என்னை மாற்றி இருக்க வேண்டும்.
நீங்க எழுதுனதும், அனைவரின் பின்னூட்டங்களும் என்னை சிலிர்க்க வைத்து அழ வைத்துவிட்டது மாதவ் சார்!!
தாமதமாகத்தான் படிக்க நேர்ந்தது. ரொம்ப நன்றி சார்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
Unknown 19 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 12:05
எனக்கும் சாரதாவின் பதிவுகள் மிகவும் பிடிக்கும். ஒரு எழுத்தாளராக இருந்து கொண்டு சக பதிவரை (படைப்பாளியை) மனம் திறந்து பாராட்டுவது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொடருங்கள் மாதவராஜ்.
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
"உழவன்" "Uzhavan" 19 அக்டோபர், 2009 அன்று பிற்பகல் 3:44
கடந்த ஒரு வருட காலமாக அவரின் அனைத்து இடுகைகளையும் படித்து வியக்கும் ஒரு வாசகன் என்ற முறையில், இந்த இடுகையைக் கண்டு பெரிதாய் மகிழ்கிறேன்.
உங்களுக்கு நன்றி.. அமித்துமா அவர்களுக்கு மீண்டும் எனது வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்கு
பதில்கள்
பதிலளி
கருத்துரையைச் சேர்
மேலும் ஏற்றுக...
Goodreads
ஏற்றுகிறது…
பக்கங்கள்
Home
எழுதியவை
Subscribe
Enter your email address:
Delivered by FeedBurner
அறிமுகம்
மாதவராஜ்
உலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள். |
புனித சாத்தானின்- நிலபிரபுத்துவ முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆணாதிக்க பழமைவாத பிற்போக்கு வலதுசாரி கார்ப்பரேட் வலைத்தளம் !!!
Friday, 6 December 2013
பழைய கதைடா பேராண்டி....!!!
இணைய உலகம் விசித்திரங்கள் ஆயிரம் கொண்டது.இல்லையெனில் ஒரு காமிக்ஸ் வலைதளத்தில் இம்மாதிரியெல்லாம் விவாதங்கள் நடைபெறுமா...?
கருத்துக்களை பரிமாறிக்கொள்வதில் உள்ள கட்டற்ற சுதந்திரத்திற்கு உதாரணமாக கீழ்க்கண்ட விவாதங்களை தாராளமாக குறிப்பிடலாம்!
அமெரிக்க சிவப்பிந்தியரில் ஆரம்பித்து,மெக்சிகோ சலவைக்காரியில் முடிந்த அந்த சுவாரஸ்ய வாத-பிரதிவாதங்கள் இதோ....!!!
அதற்கு முன் லக்கி லுக்கின் புரட்சி தீ இதழில் இடம்பெற்ற ஹாஜி அலியின் (HADJI அலி) ஒரிஜினல் புகைப்படத்தை பார்த்துவிடலாமே...!
மனைவியுடன் ஹாஜி அலி !!!
அடுத்து அதே இதழில் இடம்பெறும் பத்திரிக்கையாளர் ஹோராஸ் க்ரீலியின் (HORACE GREELEY ) ஒரிஜினல் புகைப்படம் இதோ....!!!
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக...
நினைவு தபால் கவர்...
ஹோராஸ் க்ரீலி இங்கே தான் துயில்கிறார்....!!!
Karthik Somalinga 20 January 2013 13:17:00 GMT+5:30
எனது கௌபாய் காதலுக்கு வித்திட்டது ராணி காமிக்ஸ் என்றால், அதை நீர் ஊற்றி விருட்சமாய் வளர்த்தது லயன் என்பதில் சற்றும் ஐயம் இல்லை! நண்பர் captiger மேலே சொன்னது போல - கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) அதனாலேயே அவர்களுக்காக பரிந்து பேசும் டெக்ஸ் & ப்ளூபெர்ரியை நாம் கொண்டாடுகிறோம்! தவிர, spaghetti western படங்களும் ஒரு முக்கிய காரணமே!! தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்ஷங்கர் அவர்களுக்கும் அவரை வைத்து பல கௌபாய் (unintentional காமெடி) காவியங்களை இயக்கிய இயக்குனர் திரு.M.கர்ணன் அவர்களுக்கும் இதில் சிறு பங்கு இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை! :)
நமது NBS இதழைக் காணும் ஐரோப்பிய பதிப்பகத்தாரின் First Impressions என்ன என்பதை அறிய விரும்புகிறேன்! புதிய நாயகர்களோடு திரும்ப வாழ்த்துக்கள்!
saint satan 20 January 2013 15:23:00 GMT+5:30
டியர் கார்த்திக்!!!
/// கௌபாய்களை விட, அவர்களின் எதிரிகளாக காட்டப்படும் செவ்விந்தியர்கள் மீதுதான் எனக்கும் ஈர்ப்பு அதிகம்! :) ////
இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !
புகழ்பெற்ற பத்திரிக்கையாளரும் ,new york tribune நிறுவனர்களில் ஒருவருமான ஹோராஸ் க்ரீலி (horace greeley)பின்வருமாறு கூறினார்."மேற்கு நோக்கி செல் இளைஞனே!தேசத்தோடு சேர்ந்து வளர்!"
கடவுளாலேயே கைவிடப்பட்ட ஒரு பிரதேசத்தின் வளர்ச்சியில் ஏராளமான வெள்ளையர்களின் "மண்டை தொலிகளும்"கலந்திருக்கின்றன என்பதை "அமெரிக்க கனவில்"வாழும் இந்திய இளைஞர்கள் புரிந்து கொள்ள தவறி விட்டார்கள் என்பது அடியேனின் அபிப்ராயம்.
Delete
cap tiger 20 January 2013 22:14:00 GMT+5:30
நீங்கள் சொல்வது போல இன்றைய நாகரீக ஆடம்பர அமெரிக்காவின் வளர்ச்சிக்கு காரணமானவர்கள்தான் வெள்ளையினத்தவரே , ஆனால் ஒரு மண்ணின் மைந்தர்களை அடிவேரோடு அழித்து அவர்கள் சொந்தபூமி மீது கட்டமைக்கபட்டதே இன்றைய அமெரிக்கா!
Karthik Somalinga 20 January 2013 22:59:00 GMT+5:30
அன்பின் சோமசுந்தரம்,
நான் உங்களிடம் சில சுவாரசியமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன்! :)
1. முதலில் ஜாலியாய் ஒரு கேள்வி:
நான் 'எனக்கு செவ்விந்தியர்கள் மீதான ஈர்ப்பு அதிகம்' என்று மட்டும்தானே சொல்லியிருந்தேன் - அதற்க்கான காரணங்களை சொல்லவில்லையே?! :) செவ்விந்தியர்கள் / பூர்வகுடிகள் / வெள்ளையர்கள் குறித்த நீண்டதொரு எண்ணத்தை நமது வாசக நண்பர் cap tiger-தானே பகிர்ந்திருக்கிறார்?! நியாமாக பார்த்தால் இது குறித்த உங்களின் பார்வையை நண்பர் cap tiger-இடம் அல்லவா முன்வைத்திருக்க வேண்டும்?! ;)
2. சிவப்பு, மஞ்சள் & கருப்பு - வண்ணமயமாக ஒரு கேள்வி!:
செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? தாங்கள் இப்போது சிலாகிக்கும் அமெரிக்க அசுர வளர்ச்சியின் பின்னால் பல வெள்ளை மண்டைத் தொலிகள் உரிந்துள்ளன என்று உச்சுக் கொட்டும் நீங்கள், அந்த வெள்ளையர்கள் அடிமைப்படுத்தி, உழைப்பை உறிஞ்சி நசுக்கிக் கொன்ற லட்சக்கணக்கான ஆப்பிரிக்கர்களை பற்றி என்றேனும் கவலை கொண்டதுண்டா? சீனா போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும் அடிமை முறையில் அமெரிக்காவிற்கு இழுத்துச் செல்லப்பட்டவர்கள் பல இலட்சம் - இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!
3. கடினமான ஒரு கலாச்சாரக் கேள்வி:
"அந்தமான் நிகோபார் தீவுகளில் வசிக்கும் ஜார்வா மற்றும் இதர பழங்குடியினர் இந்தியாவை சேர்ந்தவர்கள்தான் என்றாலும் கலாசாரம் / பண்பாடு என்ற பெயரில் இன்னமும் வளர்ச்சியின்றி பின்தங்கியே உள்ளனர்! அவர்களை எல்லாம் அழித்து விட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகளிலும் நாகரிகமடைந்த இந்தியர்களை குடியேற்றப் போகிறோம்" என்று நமது இந்திய அரசாங்கம் அதிரடி முடிவெடுத்தால் நீங்கள் அதை ஆதரிப்பீர்களா அல்லது எதிர்ப்பீர்களா?! இந்த கேள்விக்கு கீழ்க்கண்ட இரு வேறு பார்வைகளில் இருந்து பதிலளியுங்கள்!
3a. நாகரீகத்தில் முன்னேற்றம் கண்ட ஒரு இந்தியராக / தமிழராக!
3b. அந்த அந்தமான் பூர்வகுடி மக்களில் ஒருவராக!
4. கடைசியாக விவகாரமாய் ஒரு கேள்வி!:
இது ஒரு உதாரணத்திற்கு மட்டுமே, கோபித்துக் கொள்ளக் கூடாது! காலம் காலமாய் உங்கள் மூதாதையர் வழி வந்த சொத்தாக உங்களிடம் பத்து ஏக்கர் நிலம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்! அதன் நடுவில் நீங்கள் வழிபடும் குலதெய்வத்தின் ஒரு அழகிய கோயிலும் இருக்கிறது என்றும் வைத்துக்கொள்வோம்! உங்கள் பரம்பரைக்கென்று இருக்கும் சில சம்பிரதாயங்களை பின்பற்றி நீங்கள் உற்றோர் உறவினருடன் மகிழ்வுடன் வாழ்ந்து வரும் அந்நிலையில் திடீரென ஒரு முரட்டுக் கும்பல் உங்கள் நிலத்திற்குள் அத்துமீறி நுழைந்து, உங்கள் சம்பிரதாயங்கள் மூடத்தனமாக உள்ளன; உடனே இடத்தை காலி செய்யுங்கள்; நாங்கள் இந்த இடத்தை தரைமட்டமாக்கி தொழிற்சாலை ஒன்று நிறுவி இந்த இடத்தை முன்னேற்றப் போகிறோம் என்று துப்பாக்கி முனையில் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் மிரட்டினால் நீங்கள் அவர்களின் மண்டைத் தொலியை உரிக்க முயற்சிப்பீர்களா? இல்லை, 'அப்படியே ஆகட்டும் அய்யா' என்று மகிழ்ச்சியுடன் நடையைக் கட்டுவீர்களா?
இவற்றிற்கு நீங்கள் பதில் அளித்த பின்னர் உங்களின் செவ்விந்திய / வெள்ளையர்கள் பார்வை குறித்த என் பார்வைகளை பகிர்கிறேன்! :)
அன்புடன்,
கார்த்திக்
Erode VIJAY 21 January 2013 04:58:00 GMT+5:30
ஆஹா, சூடு பிடிச்சிருச்சு!
ஓ.... சாத்...தா...னோ...வ்....
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 09:05:00 GMT+5:30
This comment has been removed by the author.
Auditor raja 21 January 2013 10:54:00 GMT+5:30
///இது புரிந்து கொள்ளக்கூடியதே.என்றாலும் இதில் ஒரு சுவாரஸ்யமான சிக்கல் இருக்கிறது.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.
சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான கொடிய பழக்க வழக்கங்கள் நிலவினஎன்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் கொலைவெறி தாக்குதல்களை எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.இன்றைய அமெரிக்காவின் பெரும் முன்னேற்றத்துக்கு காரணம் அன்றைய குடியேற்றங்களே !///
ஒரு அந்நிய நாட்டார் சொன்ன பழமொழி தான் ஞாபகம் வருகிறது
'' பொது மேய்ச்சல் நிலத்திலிருந்து வாத்தை திருடும் திருடனை சட்டம் கடுமையாக தண்டிக்கிறது ஆனால் அந்த வாத்திடமிருந்து மேய்ச்சல் நிலத்தையே திருடும் கொள்ளைகாரனை சட்டம் போற்றி பாதுகாக்கிறது "
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 11:40:00 GMT+5:30
அந்த அந்நிய நாட்டார் எத்தனை வாத்துக்களின் மேய்ச்சல் நிலங்களை அபகரித்தாரோ !
Erode VIJAY 21 January 2013 12:17:00 GMT+5:30
ஒரு கிலோ வாத்துக்கறி என்ன விலை, ராஜா அவர்களே? :)
saint satan 21 January 2013 13:50:00 GMT+5:30
டியர் கார்த்திக்!
உங்கள் இரண்டாவது கேள்வியிலிருந்து ஆரம்பிக்கிறேன்.///செவ்விந்தியர்கள் 'கிட்டத்தட்ட' முற்றிலும் 'அழிக்கப்பட்டது' குறித்த உங்கள் கருத்து என்ன? ///
இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!
ஏதோ அடிமைமுறையை உருவாக்கியவர்களே ஐரோப்பியர்கள்தான் என்பது போல் பேசுவது தவறு.உலகம் முழுதும் பன்னெடுங்காலமாக பல்வேறு இனக்குளுக்களிலும் அடிமை முறை இருந்துள்ளது.அரபு நாடுகளில் ஆப்பிரிக்க கருப்பர்களை பொது இடங்களில் வைத்து "அடிமை சந்தை"நடத்திய வரலாறு உண்டு.அமெரிக்காவில் அடிமை முறைக்கு வெள்ளையர் மத்தியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்ததும் ,அதன் தொடர்ச்சியாக அடிமை ஒழிப்பு சட்டங்கள் உருவாக்கப்பட்டதும் நீங்கள் அறியாத ஒன்றல்லவே!!
"நேரடியான அடிமைமுறை என்பது ஆலைகளுக்கு இயந்திரம் போல முக்கியமானது.அடிமை முறை இல்லாமல் உங்களுக்கு பருத்தி (காட்டன்)கிடையாது.பருத்தி இல்லாமல் நவீன ஆலைகள் இல்லை.அடிமைமுறையே காலனிகளுக்கு மரியாதை அளிக்கிறது.காலனிகளே உலக வர்த்தகத்தை உருவாக்கியுள்ளன.உலக வர்த்தகமே பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கியுள்ளன.எனவே,அடிமை முறை என்பது மிகவும் முக்கியத்துவம் கொண்ட ஒரு பொருளாதார வகைப்பாடு ஆகும்.உலக நாடுகளிலேயே முற்போக்கான நாடான அமெரிக்கா .அடிமைமுறை இல்லையென்றால் பிற்போக்குதனத்தில் மூழ்கிவிடும்.அமெரிக்கா இல்லையென்றால் நவீன வர்த்தகமும் பண்பாடும் இல்லாமல் போய்விடும்."
மேற்கண்ட கருத்தை உரைத்தவர் மேற்குலக வெள்ளை பண்ணையாளரோ ,வெள்ளை இனவெறி கு-க்ளக்ஸ்-க்ளான் ஆசாமியோ அல்ல.கம்யூனிச முற்போக்கு(!)வாதிகளின் குலகுருவான கார்ல் மார்க்ஸ் !!!
மூன்றாவது கேள்விக்கு பதில்;பழங்குடிகளை நாம் ஏன் அழிக்கவேண்டும்?அந்த வேலையை செய்யத்தான் மாவோயிஸ்ட்கள் இருக்கிறார்களே!!
நான்காவது கேள்விக்கு பதில்;அம்மாதிரியான "நில அபகரிப்பு"கடந்த ஆட்சியில் சகஜமாக நடந்தது."அம்மா"ஆட்சியில் இல்லை.அப்படியே என் நிலம் அபகரிக்க பட்டாலும் சட்டபூர்வமாகவே போராடுவேனே தவிர மண்டைதொலி உறிப்பு போன்ற காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!
இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!
Delete
cap tiger 21 January 2013 16:26:00 GMT+5:30
//சட்டபூர்வமாகவே போராடுவேனே//! ஆஹா! அந்த சட்டங்களை அமைப்பவரே தவறுகள் செய்பவர்கள்தானே?? அதான் நம்மூர்ல சாத்தானே வேதம் ஓதுகிறது என்பார்களே, அதுமாதிரி! ஹிஹி!
//காட்டுமிராண்டிதனத்தில் இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே!!// எல்லா சுதந்திரங்களையும் கொண்டுள்ள நமக்கு, தம் தாய்நாட்டுக்காக போராடுபவர் காட்டுமிராண்டிகளாக தெரிவார்களோ??
//அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!// அந்த மாதிரி ரிசர்வ் பகுதிகள் என்னவென்றால் முள்வேலியில் குடியமர்த்தபட்ட இலங்கை தமிழர் நிலை என்பதை புரிந்துகொள்ளுங்கள். மேலும் அவர்கள் அந்த பகுதிகளில் கீழ்தரமாக நடத்தப்பட்டதற்கு , ஹாலிவுட் நடிகர் மர்லன் ப்ராண்டோ தனக்கு அளிக்கபடவிருந்த ஆஸ்கர் விருதை புறகணித்தார் என்பது வரலாறு!
cap tiger 21 January 2013 16:29:00 GMT+5:30
saint ஜி, நான் cap tiger தான், ஆனா, tsi na pah கெடையாது! :)
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 18:23:00 GMT+5:30
This comment has been removed by the author.
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 18:25:00 GMT+5:30
வெள்ளையரிடம் மேம்பட்ட ஆயுதங்கள் இருந்தன !சூட்சும உத்திகள் இருந்தன !!இவை ஏதும் இல்லாமல் ஏதும் பண்ண இயலாமல் ,ஆத்திரத்தில் ,கோவத்தில் செவிந்தியர்கள் இவ்வாறு நடந்திருக்கலாம் ! பண்பாடு தெரிந்த,கலாச்சாரம் மிக்க ,நாகரீக காட்டு மிராண்டி அமெரிக்காதான் கோபத்தில் ,சும்மா இருந்த தங்களை சீண்டி பார்த்த ஜப்பானியரை ,தோல்வி பயத்தில் ,கோபம் கண்ணை மறைக்க அணுகுண்டை தூவி கொன்று குவித்தது! இவர்கள் மட்டும் செவிந்திய குடியிருப்புகளை ஆக்கிரமிக்கலாம் !இன்று உலக காவலனாக காட்டி கொண்டு எல்லை தாண்டி, எல்லை மீறுகிறது !வல்லான் வகுத்ததே வாய்க்கால் !அமெரிக்காவில்,ஐரோப்பாவில் கொடும் தண்டனைகள் இல்லையா !ஐரோப்பிய வரலாறு தங்களுக்கு தெரியாததா !
அடிமை முறை இல்லாமலும் இவை அனைத்தும் தயாராகும் நண்பரே வயிறு பசித்தால் !
//இது முற்றிலும் தவறான தகவல்.அமெரிக்காவில் சிவப்பிந்தியர் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ரிசர்வ் பகுதிகளில் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.அமெரிக்க காங்கிரஸ்,மற்றும் செனட் சபைகளில் இவர்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டு!!//
அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !
தகுதி உள்ளன தப்பி பிழைக்கும் !எதிரியை பயமுறுத்து !இவை இயற்கை நண்பரே !!
உயிர் வாழ தங்கள் தகுதியை வளர்த்து கொள்ள செவிந்தியர்களுக்கு இயலவில்லை !அதுவே அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் !
Karthik Somalinga 21 January 2013 18:26:00 GMT+5:30
நண்பர் சோமசுந்தரம் அவர்களே :)
மேற்கோள்களுடன் கூடிய உங்களுடைய தெளிவான பதில்களுக்கு நன்றி!!! :) அமெரிக்காவில் தொடங்கி, கம்யூனிசம் மாவோயிஸம் என பயணித்து இறுதியில் அம்மா அவர்களின் ஆட்சி வரை புள்ளி விவரங்களுடன் பேசும் உங்கள் உலக மற்றும் உள்ளூர் அரசியல் ஞானம் என்னை புல்லரிக்க வைக்கிறது! பாராட்டுக்கள்! :) :)
அடிமைமுறை இந்தியா உட்பட எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறது என்ற உண்மையை நான் மறுக்கவில்லை. அடிமை முறை என்ற பிற்போக்குத்தனம் அடித்தளமாய் அமைந்திராவிடில் தற்போதைய முற்போக்கு அமெரிக்கா இல்லை என்ற உண்மையை நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள்! இதன் அடிப்படையில் பார்த்தால் ஜெர்மனி உலகப் போரின் போது நிகழ்த்திய கொடூரங்களும், ஆக்கிரமிப்புகளும், இன ஒழிப்பும் உங்கள் பார்வையில் நியாயமானவைதான் இல்லையா?! அவர்களும் தங்கள் இனத்தை முன்னேற்றத்தானே மற்ற இனங்களை அடிமைப்படுத்த எண்ணினர்?! செவ்விந்தியர்கள் போலவே யூதர்களும் ஒன்றும் ஒட்டு மொத்தமாய் அழிந்து போய் விடவில்லையே?! பல நாடுகளில் சிதறுண்டு இன்னமும் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறார்கள், இல்லையா?! நாகரிகத்தில் / தொழில்நுட்பத்தில் வெகுவாய் முன்னேற்றம் கண்டிருந்த நாஜி ஜெர்மானியர்கள் நிகழ்த்திய ஹோலோகாஸ்ட் - மண்டைத்தொலி உரிப்பதை விட ஒன்றும் கொடூரமான செயல் அல்ல, இல்லையா?!
அதே போல அமெரிக்கா அணுகுண்டு வீசி இரண்டு ஜப்பானிய நகரங்களை அழித்ததும் உங்கள் பார்வையில் காட்டுமிராண்டித்தனமான செயல் இல்லை, அல்லவா?! அந்நிகழ்வுக்கு முன்னர் ஜப்பானியர்களும் சளைத்தவர்களாக இருந்திடவில்லை என்பது வேறு விஷயம்! ஆக்கிரமிப்பு பற்றி இன்னும் எத்தனையோ உதாரணங்கள் சொல்லலாம்! அறிவியல் முன்னேற்றம் கண்ட மனிதர்கள் நவீன ஆயுதங்களின் உதவியுடன் தங்கள் பிரதேசத்தை / எல்லையை பாதுகாக்கப் போராடினால் அதற்குப் பெயர் போர்! பூர்வகுடிகள் தங்களுக்கு தெரிந்த வகையில் போராடினால் அது காட்டுமிராண்டித்தனம், இல்லையா?!
சரி விடுங்கள்!!! அடிமை முறை / இன ஒழிப்பு குறித்த உங்களின் 'யதார்த்தமான' பார்வை இதுதான் என்றால் அது பற்றி நான் மேற்கொண்டு இங்கே விவாதிக்க விரும்பவில்லை! :) இருந்தாலும் நான் உறுதி அளித்திருந்தபடி உங்கள் பார்வை குறித்த என் பார்வை இதுதான்! தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!
கடைசியாக ஒரு சிந்தனைத் துளி! செவ்விந்தியர்கள் குறித்த நமது அறிதலானது, மேலைநாட்டவர்கள் எழுதி வைத்த வரலாறு, அவர்கள் படைத்த காமிக்ஸ் மற்றும் திரைப்படங்கள் - இவற்றின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது! இந்தத் தகவல்கள் முழுமையானதாகவோ, நடுநிலைமையானதாகவோ இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை!
//இறுதியாக முதல் கேள்விக்கு அடியேனின் பதில்; cap tiger என்ற பெயரை பார்த்ததும் ,அவர் உங்கள் facebook நண்பர் ஷி-நா-பா -வாக இருப்பாரோ என்று பயந்துவிட்டேன்.ஹிஹி!
ஹாஸ்யமான உங்கள் பதிலை மிகவும் ரசித்தேன்! :) நேற்று நீங்கள் முதன் முதலாய் எனக்கு எழுதிய நீண்ட பின்னூட்டத்தைக் கண்டதும், உங்கள் வலைப்பூ நண்பர் ம-ம -தான் மீண்டும் என்னுடன் வாதம் செய்ய வந்திட்டாரோ என்று நானும் சற்று பயந்துதான் போய்விட்டேன்! ;) பிறகு உங்களின் பெயர் கண்டு அச்சம் தெளிந்தேன்! :) :)
***
@ஆடிட்டர் ராஜா: உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி - உண்மையில் மிக அருமையான பழமொழி அது!
@ஸ்டீல் க்ளா: உங்களுக்கும் மிக்க நன்றி! ஆனால் நீங்கள் இட்ட அந்த கருத்து ஏனோ காணாமல் போய் விட்டது! :)
@cap tiger: நன்றி நண்பரே! :)
@விஜய்: உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி! ;) வலைப்பூ இன்னும் தொடங்கவில்லையா?! (நாங்களும் ஊக்குவிப்போம்ல!) :D
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 18:30:00 GMT+5:30
காலம் வலிமையானவனுக்கே சொந்தம்,பிறர் யாரும் அவனை அண்டி பிழைப்பதோ,அனுசரித்து போவதோ நலம் !இல்லையெனில் காணாமல் போவாய்,இதுதான் காலம் முழுதும் நடந்து வருகிறது !அங்கங்கு தேவையான முகமூடி அணிந்து கொள்கிறோம் நம்மை நிலை நிறுத்தி கொள்ள !
Karthik Somalinga 21 January 2013 18:39:00 GMT+5:30
//அதாவது நீ நெல் கொண்டு வா,நான் உமி கொண்டு வருகிறேன் ,இடித்து ஊதி ஊதி திங்கலாம் என்பது இதுதானே !//
ஹா ஹா ஹா, சரியாக சொன்னீர்கள் ஸ்டீல் க்ளா! :)
சிவ.சரவணக்குமார் 21 January 2013 18:51:00 GMT+5:30
பெரும்பாலும் நண்பர் புனித சாத்தானோடு உடன்படும் நான் , இம்முறை கடுமையாக மாறுபடுகிறேன்......
நண்பர்களே....
உலகம் முழுக்க வெள்ளையர்கள் குடியேற்றம் என்பது பூர்வ குடிகளை அழித்தே நிகழ்ந்தது........அதிலும் ஸ்பானியர்கள் மிகக்கொடியவர்கள்......மதன் அவர்கள் எழுதிய [ மனிதனுக்குள் ஒரு மிருகம் ? ] புத்தகம் ஒன்றில் ஸ்பானிய தளபதி பிஸாரோ தன்னை வரவேற்க வந்த மாயன் மன்னர் அட்வால்பாவை எப்படி தந்திரமாக சிறைப்படுத்தி படுகொலை செய்தான் என்பதை விவரித்திருப்பார்....கல் நெஞ்சையும் கரைய வைக்கும் கொடூரம் அது.....................செய்யும் காட்டுமிராண்டித்தனங்களை வெள்ளையர்கள் செய்துவிட்டு நாகரீகத்தில் சிறந்து விளங்கிய மாயன்களை
காட்டுமிரான்டிகளாக சித்தரித்து ''அபோகலிப்டோ '' போன்ற படங்களை எடுப்பதுவெள்ளையர்களுக்கு மட்டுமே உரித்தான அயோக்கியத்தனம்.......
ஆஸ்திரேலிய பழங்குடிகளான அபாரிஜின்ஸ் இன்று கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டனர்........அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்கள் தப்பிப்பிழைத்தவர்கள்........
ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வது உண்மை என்றுவைத்துக்கொண்டால் , வெள்ளையர்கள் வராவிட்டால் நாமும் காட்டுமிரான்டிகளாக இருந்திருப்போமா என்ன?
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 21 January 2013 20:22:00 GMT+5:30
நண்பரே ,புனித சாத்தான் நம் அனைவருக்குமே நண்பரே ,மேலும் அவர் எனது நெருங்கிய நண்பர் கூட அவரது கருத்துக்களே இங்கே எதிர் .......முகம் பார்க்க வேண்டாம் ,கருத்துக்களை மட்டுமே பார்ப்போம் ,மனதில் பட்டதை தயங்காமல் முன் வையுங்கள்.......
saint satan 21 January 2013 21:37:00 GMT+5:30
டியர் கார்த்திக்,
நமது விவாதம் கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும்போலிருக்கிறது.நீங்கள் குறிப்பிட்ட ஜெர்மானியர் -யூதர் பிரச்னையை இந்த இடத்தில் நியாயமாய் நான் தான் உதாரணம் காட்டவேண்டும்.அமெரிக்காவின் பூர்வகுடிகள் சிவப்பிந்தியர்.வெள்ளையர் வந்தேறிகள் என்கிற உங்கள் வாதத்தில் சற்று நாஜிவாடை அடிக்கிறது.நாஜிகள் பாலஸ்தீனத்திலிருந்து வந்த "வந்தேறிகளான யூதர்கள்"நம்மை அதிகாரம் செய்வதா?என்று பிரச்சாரம் செய்து தங்கள் அரசியலை நடத்தினார்கள்.அதன் கொடூர விளைவே ஹோலோகாஸ்ட் .ஆனால்,யூதர்கள் ஒன்றும் தெரியாத அம்மாஞ்சிகள் அல்லவே.தற்போதய அமெரிக்க தேசத்தையும்,உலக வர்த்தக அமைப்புகளையும் ஆள்பவர்கள் பெரும்பாலும் யூதர்களே!!google ,facebook ஆகியவற்றின் பிதாமகர்கள் இவர்களே!!
ஒரு நாட்டில் பூர்வ குடிகள் மட்டுமே வாழவேண்டும்.மற்ற வந்தேறிகள் வெளியேறவேண்டும் என்றால் நமது புண்ணிய தேசத்தில் எண் பது சதவீதம் பேர் வெளியேற வேண்டியதுதான்.
அன்றாடம் நாம் பயன்படுத்தும் பல்வேறு உபகரணங்கள்,விஞ்ஞான கருவிகள்,விமானம்,ரயில்,கம்ப்யூட்டர் தொலைபேசி இன்னபிற லொட்டு லொசுக்குகளை உருவாக்கியவர்கள் அமெரிக்கர்களே.நாமோ இவற்றையெல்லாம் ஜாலியாக அனுபவித்துக்கொண்டு மனம்போனபடி அமெரிக்கர்களை வசைபாடுகிறோம்.
இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!
Delete
Karthik Somalinga 21 January 2013 22:12:00 GMT+5:30
ஜெர்மானியர்கள் அடிமைப்படுத்தியது யூதர்களை மட்டுமல்லவே?! :) சரி இந்த நாஜி வாடை, பஜ்ஜி வாடையை எல்லாம் விட்டுத் தள்ளுங்கள்! நான் இந்த விவாதத்தை வளர்க்க விரும்பவில்லை என்று முன்னரே சொல்லி விட்டேன் நண்பரே! :) மாவோயிசம், நாஸிசம், கேபிடலிசம் என வகை வகையாக பிளந்து கட்டும் நீங்கள் உங்கள் வாதங்களை, சும்மா போய்க் கொண்டிருந்த என்னை மட்டும் இழுத்து வைத்து அடுக்குவானேன்?! :) :) :) இதுதான் சாத்தானிசமோ?! ;) செவ்விந்தியர்களை பிடிக்கும் என்று சொன்னது 'சாத்தான் குற்றமா'?! ;) அப்படியே உங்கள் வாதத் திறமைகளை நண்பர் cap tiger, ஸ்டீல் க்ளா, ஆடிட்டர் ராஜா, சிவ சரவணக்குமார் போன்ற மற்ற நண்பர்களிடமும் காட்டலாமே?! :) :) :) அவர்களுக்கு இன்னமும் ஒரு பதில் கூட சொல்லவில்லையே நீங்கள்? இது பாவமில்லையா?! :D
cap tiger 21 January 2013 22:41:00 GMT+5:30
என்ன சாத்தான் ஜி?? கார்த்திக்கு மட்டும் பதிலுரைக்கிறீர்கள்? நாஜிவாடை என்றெல்லாம் வேறு! பூர்வகுடிகள், வந்தேறிகள் என்று ஆரம்பித்ததே நாந்தான். கார்த்திக் கௌபாய்களை விட செவ்விந்தியர்களே மிகவும் கவர்கிறார்கள் என்று கூறினார், மண்டைதொலி உரித்த்து எனக்கு பிடித்திருக்கு என்றெல்லாம் சொல்லவில்லை . இதிலென்ன தவறு கண்டீர்களோ? செவ்விந்தியர்களுக்கு ஆதரவாக பலபேர் இங்கு பதிலிட்டுள்ளார்கள், என்னையும் சேர்த்து.ஆனால் நாங்கள் யாருமே யுத்தமுறைகளையோ, கையாண்ட வன்முறைகளையோ சொல்லவில்லை. பொதுவாக கௌபாய் கதைகள் என்றாலே பெரும்பாலும் ராணி காமிக்ஸில் வங்கிகொள்ளைகள், சூதாட்டங்கள், கொலைகள் துப்பறிதல் என்று மேற்கத்திய உலகின் ஒரு பகுதியை மட்டுமே நமக்கு வழங்கிவந்தனர்(நான் படித்தவரையில்) ஆனால் டெக்ஸ், மற்றும் டைகர் கதைகள் லயன்/முத்து மூலமாக நமக்கு அறிமுகமான பிற்பாடே செவ்விந்தியர்கள் என்ற சமூகமும், அவர்களே அம்மண்ணின் பூர்வகுடிகள் என்பதும் தெரிய ஆரம்பித்தன. அதுலும் கூட கோசைஸ் என்ற செவ்விந்திய தலைவர் கடைசியில் தம் மக்களுக்காக துப்பாக்கியுடன் தனிமையில் இறந்துகிடப்பதாக டைகர் கதையில் வரும்( உண்மையில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கபடும் கோசைஸ் பிற்பாடு ராணுவமுற்றுகையால், வேறுவழியில்லாமல் பட்டினி கிடந்த தம் மக்களுக்காக சரணடைந்து இறுதியில் ஒரு அப்பாச்சே ரிசர்வ் முகாமில் நோய்வாய்பட்டு இறக்கிறார்) இந்தியாவின் வந்தேறிகளை இங்கே யாரும் வெளியேற சொல்லவில்லை. பூர்வகுடிகளான நாம், இன்னொரு தேசத்தின் பூர்வகுடிகளை மதிக்கவாவது செய்வோம் என்றே சொல்லி கொள்கிறேன்!
saint satan 22 January 2013 09:35:00 GMT+5:30
டியர்ஸ் கார்த்திக்,cap tiger,ஸ்டீல் க்ளா,சிவ.சரவணகுமார்,மற்றும் கணக்கரசர் அவர்களே!!!
நான் ஒன்றும் சிவப்பிந்தியருக்கு எதிரியல்ல.நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்.வெள்ளையர்கள் வந்தேறிகள் என்றால் காஸ்ட்ரோ,சே போன்றவர்களும் ஸ்பானிஸ்காரர்கள் தானே!!
அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
வெள்ளையர் அமெரிக்காவில் குடியேற்றம் அமைத்த அதே காலக்கட்டத்தில் இந்தியாவிலும் புதிய இனக்குழுக்கள் பல குடியேறின.ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றின.அவர்களும் உங்கள் பார்வையில் வந்தேறிகளோ?
ஒரு கண்ணில் வெண்ணை.மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற உங்கள் வாதத்தில் மிக பெரிய "ஓசோன்"ஓட்டை இருக்கிறது.
Delete
கிருஷ்ணா வ வெ 22 January 2013 10:04:00 GMT+5:30
சிகப்பாய் ஒரு சொப்பனத்தில் விட இந்த விவாதத்தில் ஆக்சன் அதிகமாக இருக்கும் போல் உள்ளதே...:)
cap tiger 22 January 2013 10:08:00 GMT+5:30
டியர் சாத்தான் ஜி!
பூர்விகக்குடிகள் தவிர்த்து எந்த ஒரு நாட்டிலும் புதிதாக் குடியேறியவர்கள் வந்தேறிகள்தான்.இது ஒன்றும் மனிதாபிமானமற்ற சொல் அல்ல! நீங்கள் செவ்விந்தியர்களை காட்டுமிராண்டிகள் என சொல்லிய பிறகே இங்கே விவாதம் நீள்கிறது! இரு பக்க வன்முறைகள் பற்றி பேசி கொண்டிருக்கிறோம்! தாங்கள்தான் குழம்பி கொள்கிறீர்கள்! எங்கள் கௌபாய் காமிக்ஸ் ஈர்ப்புக்கான பதில் செவ்விந்தியர்களே! இதில் எந்த தவறும் இல்லையே??
Auditor raja 22 January 2013 10:24:00 GMT+5:30
எங்கெல்லாம் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டு அழிக்கப்படுகிறஅர்களோ அங்கு மட்டுமே வந்தேறிகள் என்ற வார்த்தை வெருக்கதகுந்த சொல்லாக கருதபடுகிறது .
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 11:01:00 GMT+5:30
வியாபாரம் செய்ய வந்த வெள்ளையர்கள் இந்தியாவை ஆண்டு சுரண்டவில்லையா !செல்வ செழிப்பே,பரந்து விரிந்த வேட்டை நிலங்களே நம்மை ,செவிந்தியர்களை மேற் கொண்டு ஏதும் செய்யாமல் சந்தோசமாக வைத்திருந்தது !ஆனால் விற்பனை சந்தை ,மேய்ச்சல் நிலம் தேவை என்பதும் வறண்ட பகுதிகளுக்கு சொந்தமான அந்நியர்களை கவர காரநமாயிற்று ! அண்டை நாடுகளை வெல்ல உதவி,போர்வைகள்,உற்ச்சாக பானம் , என்று ஆரம்பித்து பின்னர் சுரண்ட ஆரம்பித்ததுடன் கொஞ்சம் கொஞ்சமாக அந்த இனத்தை மூலைக்கு கொண்டு சேர்த்ததும் ,அழித்தொழித்ததுமே காட்டு மிராண்டித்தனம் !
ஃபிடல் அவரது மக்களுக்காகத்தானே போராடுகிறார் !செவிந்தியரை பொறுத்த வரை அவர்களை ஒடுக்கிய ,அளித்தொளித்த அனைவருமே குற்றவாளிகள்தாம் !
பல கண்டு பிடிப்புகளை தந்த அவர்கள் ஆய்த வியாபாரம் ,அந்த கண்டு பிடிப்புகளின் விற்பனை சந்தை என்று இன்னும் மேலும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள் ....பசுமைப்புரட்சி என்று நம்மை ஏமாற்றி ,இரண்டாம் உலக போருக்கு பின் ஆயுத விற்பனை சரிவடைய ,அவர்களது ரசாயனங்களை விற்பனை செய்ய உரங்களை தந்து நமது நிலங்களை மலடாக்கிய செயல், பிற நாடுகளின் கண்டு பிடிப்புகளுக்கும் உரிமை கோரி அதனும் காசாக்கும் செயல் என இன்னும் உலகை அச்சுறுத்தி கொண்டிருக்கிறார்கள்......அவர்களுக்கு ஒரு அமெரிக்கா போதாது !அன்று பஞ்சத்தை போக்க பசுமை புரட்ச்சி உதவியிருக்கலாம் ஆனால் அது தேவை அல்ல என்று இன்று நிரூபிக்க பட்டு வருகிறது !
மேலும் வரலாறுகள் ஆளும் வர்கத்திற்க்காக திரிக்க படுவதும் உண்டு !நமது நாட்டிலே சிப்பாய் கழகம் என திரிக்க படவில்லையா ........
ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 11:06:00 GMT+5:30
செவிந்தியர் யாரும் கதை உருவாக்கி இருந்தால் அங்கே வெள்ளையரை காக்க ஒரு செவிந்திய தலைவர் உருவாகி இருப்பார் !
கிருஷ்ணா வ வெ 22 January 2013 11:07:00 GMT+5:30
//ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//
Valid Point.
Karthik Somalinga 22 January 2013 11:37:00 GMT+5:30
மைடியர் சாத்தான் ஜி! :)
நான் வெள்ளையர்கள் வந்தேறிகள் என்பதால் அவர்கள் அமெரிக்காவை விட்டு உடனே வெளியேற வேண்டும் என்று எங்கேயாவது டயலாக் அடித்தேனா?! :) :) :) அதே போல நான் எந்த விதமான கொச கொச 'இசமும்' இங்கே பேசவில்லை!!! ;)
நான் சொல்வதெல்லாம் இதைத்தான்:
//தங்கள் நிலத்திற்காக போராடிய செவ்விந்தியர்கள் கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என்றால் அவர்களை அத்து மீறி சுட்டு வீழ்த்திய வெள்ளையர்களும் அப்படிப்பட்டவர்களே! இன்றைய அமெரிக்க முன்னேற்றத்திற்கு அன்றைய குடியேற்றங்கள்தான் காரணம் என்றாலும் அவர்கள் இழைத்த குற்றங்களை எவரும் எளிதில் மறந்துவிடலாகாது! அன்றைய வெள்ளையர்களுக்கு இன்றைய அமெரிக்காவில் எவ்வளவு பங்கிருக்கிறதோ அதே அளவு பங்கு அவர்களால் நசுக்கப்பட்ட பூர்வகுடிகளுக்கும், அடிமைகளுக்கும் இருக்கிறது!//
நீங்கள் நடுநிலைமை தவறாதவர் என்பதால் இன்றைய அமெரிக்க முன்னேற்றத்தின் பின்னால் அன்றைய வெள்ளையர்களுக்கு மட்டும் அல்ல - நிலத்தை இழந்த செவ்விந்தியர்களுக்கும், உழைப்பைக் கொட்டிய அடிமைகளுக்கும் அதே அளவு பங்கிருக்கிறது என்பதையும் ஒத்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!
நீங்கள் சொன்னது: //நம்மில் பலர் சிவப்பிந்தியரை ஆதரிக்கும் சாக்கில் மனிதாபிமானமற்ற முறையில் வெள்ளையர்களை "வந்தேறிகள்"என வசைபாடுவதைதான் எதிர்க்கிறேன்//
மிகச் சரியான கருத்து! :) அப்படியே, வெள்ளையர்களை உயர்த்திக் காட்டும் சாக்கில் சிவப்பிந்தியர்கள் எல்லாம் நாகரிகமற்ற கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என நீங்கள் வசைபாடிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்! மேற்கத்தியர்கள் எழுதி வைத்த ஒரு தலை சார்பான வரலாற்றையும் / படைப்புகளையும் இதே வீரியத்துடன் வாதிட்டு எதிர்ப்பீர்கள் என்றும் நம்புகிறேன்! அமெரிக்க வளர்ச்சியின் பிரதிபலன்கள் செவ்விந்தியர்களை முழுதும் சென்றடைய விடாமல் ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை ஒட்டுமொத்தமாய் ஒடுக்கி வைத்துள்ள அவலத்தையும் எதிர்ப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.
//இந்தியர்கள் நன்றியுடையவர்கள்.ஹிஹி!!//
நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), அரசியல் அமைப்பு இன்னபிற லொட்டு லொசுக்குகளை இன்னமும் கட்டிக்கொண்டு அழும் இந்தியர்கள் நன்றியுடையவர்கள்தான்! மேலைநாட்டவரே என்றாலும் சொந்தமாய் நிதி திரட்டி அணை கட்ட உதவிய பென்னி குக் அவர்களுக்கு மணிமண்டபம் அமைத்துக் கொண்டாடும் தமிழர்களும் நிச்சயம் நன்றி உடையவர்கள்தான்! :)
@ஸ்டீல் க்ளா:
//ஏன் டெக்ஸ் என்ற வெள்ளயர்தாம் போராட வேண்டுமா ,அங்கும் அவர்கள்தானே ஆதிக்கம் செலுத்துகின்றனர் !//
அதாவது நமது வேதாளர் (எ) மாயாவி (எ) Phantom என்ற வெள்ளையர், ஆப்பிரிக்க பூர்வ குடிகளுக்காக தன உயிர்(களை) கொடுத்து தலைமுறை தலைமுறையாக போராடவில்லையா?! அப்படித்தான் இதுவும்! ;) 'மீசையில் மண் ஓட்டினாலும் நாங்க (மட்டும்தான்) எப்பவுமே சூப்பர் ஹீரோஸ்!' :) :) :)
Karthik Somalinga 22 January 2013 11:40:00 GMT+5:30
//ரிசர்வ் பகுதிகள் என்ற பெயரில் அவர்களை//
"கொஞ்சமாய் எஞ்சிப் பிழைத்த அவர்களை" என்று திருத்திக் கொள்ளுங்கள்! :)
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 11:41:00 GMT+5:30
அதுதான் அவர்கள் சாமர்த்தியம் நண்பரே !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 11:48:00 GMT+5:30
//நம்மைப் போன்ற பல நாடுகளை நூற்றுக்கணக்கான ஆண்டுகள் சுரண்டு சுரண்டு என சுரண்டி, முடிந்த அளவு செல்வத்தை வாரிச் சென்று விட்டு, நம்மை இப்போது மூன்றாம் உலக நாடு என்று (அதாவது ஏழை நாடு என்ற அர்த்தத்தில்) முத்திரை குத்தி அழைத்தாலும் அவர்கள் விட்டுச் சென்ற ஆங்கிலம், 230V மின்சாரம்(?!), //
Comic Lover (a) சென்னை ராகவன் 22 January 2013 13:35:00 GMT+5:30
உஸ்... யப்பா .... ஒரு ரெண்டு நாள் காணாம போனா இங்கன ஒரு இனப்போரே நடந்து விட்ட பிரமை தோன்றுகிறதே :-)
காமிக்ஸ் படிக்கலாம் வரீங்களா ? :-) :-)
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 13:40:00 GMT+5:30
காமிக்ஸ் வந்திருந்தால் இந்த அக்க/வர்க்க போரே தோன்றி இராதே !
tex kit 22 January 2013 13:54:00 GMT+5:30
saria sonnenga steel claw... comics vanthutuntha atha padikkave neram saria irukkumee.. hmm tex vara varaikkum NBS a repeat panna vendiyathu than..
Karthik Somalinga 22 January 2013 13:57:00 GMT+5:30
@ராகவன்:
எது? Cowboys Vs Native Indians காமிக்ஸா?! ;)
இப்படி ஒரு அற்புதமான ஒரு கேள்வியை கேட்டு வைத்து விட்டு ஐரோப்பா கிளம்பிச் சென்ற நம் அன்பிற்குரிய எடிட்டர், அநேகமாக டெக்ஸ் மற்றும் ப்ளூபெர்ரியின் புதிய சாகசங்களை நமக்காக வலை வீசி தேடிக்கொண்டிருப்பார் என நினைக்கிறேன்! ஊர் திரும்பியதும் தன் கேள்வியானது, இங்கே ஒரு மாபெரும் செவ்விந்திய 'இனக்கலவரம்' துவங்க மறைமுக காரணமாய் அமைந்தது கண்டு 'மனக்கலவரம்' அடையாமல் இருந்தால் சரிதான்! :)
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 14:01:00 GMT+5:30
ஹ ...ஹா... ஹா ....அதனால்தான் பிரச்சினைக்குரிய டெக்ஸ் புத்தகத்தை தாமதமாக வழங்க கூறி விட்டார் போலும் !
saint satan 22 January 2013 15:04:00 GMT+5:30
டியர் கார்த்திக்.// வெள்ளையர்களை உயர்த்திக் காட்டும் சாக்கில் சிவப்பிந்தியர்கள் எல்லாம் நாகரிகமற்ற கொலைவெறியர்கள் / காட்டுமிராண்டிகள் என நீங்கள் வசைபாடிய வார்த்தைகளை திரும்பப் பெற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்!//
சிவப்பிந்தியர்களை கொலைவெறியர்கள் என்றோ காட்டுமிராண்டிகள் என்றோ நான் எங்கும் குறிப்பிடவில்லை.!!
ஆனால் நமது நண்பர்கள் பலர் வெள்ளையர்களை கடுமையாக சாடியிருக்கிறார்கள்.எனது ஆரம்ப வரிகள் உண்மையாகிவிட்டன.!!
//.பழங்குடிகள் என்றாலே அவர்கள் நல்லவர்கள்.அப்பாவிகள்.அவர்களின் விரோதிகளான வெள்ளையர்கள் கொடுங்கோலர்கள்.கொலைகாரர்கள் என்பதுபோன்ற சித்தரிப்புகள் பெரும்பாலும் தவறானவையாகும்.//
அமெரிக்க பூமியில் முதன்முதலாக விவசாயம் செய்தவர்கள் ஐரோப்பிய குடியேறிகளே!!சிவப்பிந்தியரோ வேட்டையாடும் சமூகமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உழன்று வந்தனர்.இன்றைய அமெரிக்காவின் செல்வ செழிப்பிற்கு ஐரோப்பியரின் கடின உழைப்பே காரணம்.அமெரிக்கா எந்த நாட்டையும் காலனியாக பிடித்து அதை சுரண்டி தன்னை வளர்த்து கொள்ளவில்லை.பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே இவ்விதம் தங்களை வளர்த்து கொண்டன.எனவே "சுரண்டல்"புகார் அமெரிக்காமீது சுமத்த முடியாது.
மனித குலத்திற்கு ஏராளமான சேவைகள் செய்த அமெரிக்கர்களுக்கு நாம் மரியாதை செய்யாவிட்டாலும் ,அவதூறு பேசாமலாவது இருக்கலாமே!!!
Delete
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 15:17:00 GMT+5:30
நண்பரே அமெரிக்காவும் அடிமையாக இருந்த நாடே !வெள்ளையர்கள்தானே பிரிட்டன்,பிரான்ஸ்... இவர்கள் !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 15:35:00 GMT+5:30
பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே அமெரிக்காவை அமெரிக்கர்களை உருவாக்கின அல்லவா !
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 15:37:00 GMT+5:30
//சிவப்பிந்தியரோ வேட்டையாடும் சமூகமாகவே பல்லாயிரம் ஆண்டுகளாக பின்தங்கிய நிலையில் உழன்று வந்தனர்.//
இதற்காக அவர்களை கொன்று குவித்து நாட்டை முன்னேற்றிய இவர்களை.......
Karthik Somalinga 22 January 2013 16:04:00 GMT+5:30
டியர் சாத்தான் ஜி,
//சிவப்பிந்தியர்களை கொலைவெறியர்கள் என்றோ காட்டுமிராண்டிகள் என்றோ நான் எங்கும் குறிப்பிடவில்லை.!!//
இவை நீங்கள் சொன்னவைதான்:
1. கொடிய பழக்க வழக்கங்கள் & கொலைவெறி தாக்குதல்கள்:
//சிவப்பிந்திய மக்களிடம் கலாசாரம் என்ற பெயரில் ஏராளமான "கொடிய பழக்க வழக்கங்கள்" நிலவின என்பதையும்,அவர்களின் விஷ அம்புகளையும் மீறி பல வெள்ளை இனக்குழுக்கள் மேற்கில் குடியேற்றம் அமைக்க முயன்றபோது பெரும் "கொலைவெறி தாக்குதல்களை" எதிர்கொள்ளவேண்டி இருந்ததையும் சுலபமாக மறந்துவிடலாகாது.//
2. காட்டுமிராண்டிகள்:
//மண்டைதொலி உறிப்பு போன்ற "காட்டுமிராண்டிதனத்தில்" இறங்க அடியேன் ஒன்றும் "சிவப்பிந்தியன்"அல்லவே//
***
//அமெரிக்கா எந்த நாட்டையும் காலனியாக பிடித்து அதை சுரண்டி தன்னை வளர்த்து கொள்ளவில்லை.பிரிட்டன்,பிரான்ஸ்,ஸ்பெயின்,போர்ச்சுக்கல் போன்ற நாடுகளே இவ்விதம் தங்களை வளர்த்து கொண்டன.எனவே "சுரண்டல்"புகார் அமெரிக்காமீது சுமத்த முடியாது.//
குழப்பமான பேச்சு! அமெரிக்கா என்றோ அமெரிக்கர்கள் என்றோ சில நூறு வருடங்கள் முன்பு வரை எதுவும் இருந்ததில்லையே?! அன்றைய ஐரோப்பியர்கள் (நீங்கள் மேலே பட்டியலிட்ட நாட்டவர்களையும் சேர்த்து!) அந்தப் பிரதேசத்தை முழுவதுமாய் ஆக்கிரமித்து, கட்டமைத்ததுதானே இன்றைய அமெரிக்கா?! அவர்களின் சந்ததியினர்தானே இன்றைய அமெரிக்கர்கள்?! ஒரு வேளை பிரிட்டிஷார் இந்தியாவிலேயே தங்கி இருந்து, நம்மையும் ரிசர்வ் பகுதிகளில் ஒடுக்கி வைத்து, இந்தியாவை இன்னொரு அமெரிக்காவாக மாற்றியிருந்தால் அப்போது ஒடுக்கப்பட்டவர்களில் ஒருவராக உங்களின் கருத்து என்னவாக இருந்திருக்கும்?! அப்படியே பார்த்தாலும் - உங்கள் பாஷையில் சொல்லவேண்டுமானால் இன்றைய அமெரிக்கர்களும், யூதர்களைப் போலவே "ஒன்றும் தெரியாத அம்மாஞ்சிகள் அல்லவே?!". :)
//மனித குலத்திற்கு ஏராளமான சேவைகள் செய்த அமெரிக்கர்களுக்கு நாம் மரியாதை செய்யாவிட்டாலும் ,அவதூறு பேசாமலாவது இருக்கலாமே!!!//
நான் அப்படி எங்கும் அவதூறாக பேசவில்லை ஜி! :) :) அதற்காக அமெரிக்கர்கள் மட்டுமே சத்திய சீலர்கள் என்பது போல புகழ்ந்து தள்ளி மற்றவர்களை ஒரேடியாக தாழ்த்தாதீர்கள்!
நீங்கள் சொன்ன வார்த்தைகளை உங்களுக்கே நினைவுறுத்துகிறேன்:
//ஒரு கண்ணில் வெண்ணை.மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற உங்கள் வாதத்தில் மிக பெரிய "ஓசோன்"ஓட்டை இருக்கிறது.//
saint satan 22 January 2013 21:02:00 GMT+5:30
மை டியர் மானிடர்களே.!!!
மேற்கண்ட விவாதங்களிலிருந்து அடியேனுக்கு புலப்படும் நீதிகள் பின்வருமாறு;
1. நம்மில் (இந்தியரில்)பலருக்கு ஐரோப்பியர்கள் மீது குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்கள் மீது அதிலும் குறிப்பாக அமெரிக்க வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பும்,துவேசமும் இருக்கிறது!!.
2.ஐரோப்பிய மைய வாதத்துக்கு போட்டியாக இந்திய மையவாதம் என்ற பித்துக்குளித்தனம் சமீப காலமாக அதிகரித்துவருகிறது.இவை இரண்டையும் அடியேன் ஏற்கவில்லை.!!
3.ஜாதி,இனம்,குலம் தொடர்பான இந்தியர்களின் புராதன கோட்பாடுகள் ஐரோப்பியர்களின் ஹாமிட்டிக் கோட்பாட்டால் நசுக்கப்பட்டு மதிப்பு இழந்து விட்டது.நமது வெள்ளை இன துவேசத்திற்கு இதுவும் ஒரு காரணமோ ,என்னமோ?ஹிஹி!!
Delete
கோயம்புத்தூரிலிருந்து ஸ்டீல் க்ளா ச.பொன்ராஜ் 22 January 2013 21:42:00 GMT+5:30
உண்மை ஒன்றே !
Karthik Somalinga 22 January 2013 22:07:00 GMT+5:30
மை டியர் சாத்தான் அவர்களே!!!
எதைப் பற்றியோ வாதம் செய்ய ஆரம்பித்து, நண்பர்களிடம் இருந்து வரும் ஒவ்வொரு எதிர் வாதத்திற்கும் நேரடி பதில் சொல்லாமல் இந்த விவாதத்தை திசைதிருப்பும் முயற்சியிலேயே நீங்கள் முனைப்பாக இருப்பதாய் எனக்குத் தோன்றுகிறது!!! இதன் நடுவில் நீங்கள் அறிந்து வைத்திருக்கும் கோட்பாடுகள் அனைத்தையும் எங்கள் தலையில் வேறு கட்டப் பார்க்கிறீர்கள்! நல்லது! :)
//நமது நண்பர்கள் பலர் வெள்ளையர்களை கடுமையாக சாடியிருக்கிறார்கள்// &
//குறிப்பாக அமெரிக்க வெள்ளையர்கள் மீது கடும் வெறுப்பும்,துவேசமும் இருக்கிறது!!.//
என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றும் வெள்ளையர்களை சாடவில்லை; அமெரிக்க துவேஷமும் காட்டவில்லை! ஆனால், வெள்ளையர்கள் (ஐரோப்பியர்கள் & அவர்கள் வழி வந்த அமெரிக்கர்கள்) ஒன்றும் வன்முறை விரும்பாத அஹிம்சாவாதிகளோ, படுகொலை புரியாத புனிதர்களோ, அடக்குமுறை / அடிமைமுறை கட்டவிழ்க்காத அம்மாஞ்சிகளோ அல்ல என்பதை மட்டுமே சில பல உதாரணங்களுடன் விளக்கி உள்ளேன்!!!
மேற்கண்ட விவாதங்களிலிருந்து எனக்கு புலப்படும் நீதி ஒன்றே ஒன்றுதான்:
செவ்விந்தியர்களின் வன்முறை குறித்து எவ்வித தயக்கமும் இல்லாமல் அங்கலாய்க்கும் நீங்கள், வெள்ளையர்கள் கட்டவிழ்த்த வன்முறையைப் பற்றி ஆதாரத்துடன் பேசினால் மட்டும் அதை ஒத்துக்கொள்ள முடியாமல் தவியாய் தவிக்கிறீர்கள்! அதை வெளிக்காட்ட முடிந்திடாமல் ஐரோப்பிய மையவாதம், இந்திய பக்கவாதம், பித்துக்குளித்தனம் என்று என்னென்னவோ சொல்லிக்கொண்டே போகிறீர்கள்! :D
எங்கெங்கோ அலைபாயும் இந்த விவாதத்தை(?!) இதற்கு மேலும் தொடர்ந்திட எனக்கு துளியும் விருப்பமில்லை! இதை நான் இரண்டாவது தடவை ஆனால் உறுதியாக இறுதியாக சொல்கிறேன்! :) :)
சரி விடுங்கள் நண்பரே! :) உங்கள் ஊருக்கு நவஜோ நாயகர் வந்து சேர்ந்துவிட்டாரா?! :)
saint satan 23 January 2013 05:56:00 GMT+5:30
டியர் கார்த்திக்.!!!
அவர் வந்திருந்தால் நம்மால் இவ்வளவு "கருத்து குவியல்"களை போட்டிருக்க முடியுமா?!!ஹிஹி!!!
Delete
saint satan 23 January 2013 07:19:00 GMT+5:30
அடியேனுக்கும்,அருமை நண்பர் கார்த்திக் அவர்களுக்கும் நடைபெற்ற கருத்து விவாதத்தில் பங்கேற்று பதிவிட்ட நண்பர்கள் திருவாளர்கள்.cap tiger,ஸ்டீல் க்ளா ,சிவ.சரவணகுமார்,ஆடிட்டர் ராஜா ஆகியோருக்கு எனது "ஸ்பெஷல்" நன்றிகள்.!!
விவாதத்தில் பங்கு கொள்ளாமல் "சும்மாங்காச்சி" வந்து போன நண்பர்கள் திருவாளர்கள்,ஈரோடு விஜய்,tex kit ,வ.வே.கிருஷ்ணா,மற்றும் காமிக் லவ்வர் ராகவன் ஆகியோருக்கு எனது "சாதா"நன்றிகள்!!!
இறுதியாக ஒரு கேள்வி?.........பயந்து விடாதீர்கள்.இது காமிக் லவ்வர் ராகவனுக்கு.!!
மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக்கை சுஜாதா அவர்கள் உங்களிடமாவது சொன்னாரா?ஹிஹி!!!
Delete
Karthik Somalinga 23 January 2013 07:55:00 GMT+5:30
நண்பர் மீரான் அவர்களின் முத்தான கருத்தை விட்டு விட்டீர்களே சாத்தான் ஜி! :) அப்படியே அவருக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லி விடுங்கள்! 'சபாஷ், சரியான போட்டி' என்ற ரீதியில், வில்லத்தனமாக உசுப்பி விட்டு வேடிக்கை பார்த்த விஜய் அவர்களுக்கு சாதா நன்றி கூட சொல்ல வேண்டாம்! ;) வேண்டுமானால் சாத்தி சாத்தி நன்றி சொல்லுங்கள்! :D
//Meeraan 22 January 2013 01:20:00 GMT+05:30
சிகப்பிந்தியர்கள் கப்பல் ஏறி ஐரோப்பா போய் வெள்ளையர்களின் மண்டைத்தொலி உரித்தார்களா?! அல்லது தன் வீட்டுக்குள் வந்து அதிகாரம் செய்தவனின் மண்டைத்தொலி உரித்தார்களா?
வெள்ளையர்கள் தந்தியை கண்டுபிடிக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே புகை மூலம் செய்தி பரிமாறிகொண்ட நாகரிகம் தெரிந்தவர்கள் சிகப்பிந்தியர்கள் அல்லவா !?
வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான் என்ற கருத்தை போன்றது சிகபிந்தியர்கள் காட்டுமிராண்டிகள் என்பது.//
Erode VIJAY 23 January 2013 08:21:00 GMT+5:30
ஏன் ஏன் ஏன் கார்த்திக்?
காலையில் ஒரு நன்றி ஓசியில் கிடைச்ச சந்தோஷத்திலிருந்தேன். இப்படி அநியாயமா கெடுக்கறீங்களே?!
உசுப்பேற்றுவதும் ஒரு வகையில் உற்சாகப் படுத்துவது மாதிரிதானே! பந்தயத்தில் ஓடும் குதிரையிடம் 'கமான், கமான்' என்று சொல்வது மாதிரி! :)
Comic Lover (a) சென்னை ராகவன் 23 January 2013 10:33:00 GMT+5:30
நான் காலேஜ் முதலாண்டு படிக்கும் பொது ஒரு முறை ஸ்ரீரங்கம் பெருமாள் சேவிக்க வந்தவரை நான் தடுத்து நிறுத்தி மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் சொல்லுங்கள் என்று கேட்க அவர் சற்று தடுமாறி "இன்னும் கொஞ்சம் வயசாகட்டும் சொல்றேன்" என்றார். அதன் பிறகு நானும் மறந்து அவரும் மறந்து விட்டார் - எனக்கு சொல்ல. பிந்தைய சந்திப்புக்களில் கம்ப்யூட்டர், ஏலேக்ட்ரோனிக்ஸ், telecom போன்ற படிப்பு சம்மந்தமாகவும் அல்லது "அந்த படம் எப்படி வருது? இந்த ஹீரோ எப்படி நடிப்பார்?" என்று ஜல்லியடித்து ஜல்லியடித்து உருப்படியாக எதுவும் கேட்காமல் விட்டு விட்டேன். கொஞ்சம் லேசு பாசா career guidance கேட்டதோடு சரி.
பிறகு ஒரு முறை அரசு பதில்களிலோ எதிலோ படித்த ஞாபகம். அப்போது சிரிப்பு வரவில்லை. அவரிடம் கேட்காமல் விட்டோமே என்ற நினைவு வந்தது!
saint satan 23 January 2013 20:31:00 GMT+5:30
நன்றி ராகவன்ஜி!!!
மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரி ஜோக் தெரிந்த நண்பர்கள் தயவு கூர்ந்து சிரமம் பார்க்காமல் அடியேனின் கீழ்க்கண்ட முகவரிக்கு மெயில் செய்யவும்.
[email protected]
தயவு செய்து தமிழில் அனுப்பவும்.ஹிஹி!!!
Posted by saint satan at 08:13
Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest
12 comments:
Karthik Somalinga 6 December 2013 at 21:31
டியர் சாத்தான் ஜி,
// பழைய கதைடா பேராண்டி....!!! //
ஹா ஹா ஹா... அது ஆச்சு ஒரு வருஷம்!!! :-D
லயன் ப்ளாக் பின்னூட்டங்களை - "பெஸ்ட் ஆஃப் லயன் ப்ளாக்" என்ற பெயரில் ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டால், இந்த மண்டைத்தொலி விவாதத்திற்கும் அதில் நிச்சயம் இடம் இருக்கும்! :-) இன்று வரையிலும் தேங்காயின் மண்டைத்தொலியை (நார்) உரிக்கையில், உங்கள் முகம் தான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது! :-D விஜயின் நிலை என்னவென்று தெரியவில்லை! :-)
//சாத்தான்ஜி, இன்று எங்கள் வீட்டில் தேங்காய் சட்னி! தேங்காய் மண்டை மேல் இருக்கும் நாரை உறிக்கும் போது சம்பந்தமில்லாமல் உங்கள் ஞாபகம் வந்து தொலைக்கிறது! :) அதே போல, நேற்று சாத்துக்குடியை தொலி உறித்து நறுக்கி சாப்பிட்டபோது உங்கள் ஞாபகம் வந்ததாக நண்பர் விஜய் எனக்கு புகை சமிஞ்கை அனுப்பியிருந்தார்! :) :)//
ReplyDelete
Replies
saint satan 7 December 2013 at 08:54
டியர் கார்த்திக் !!!
எடிட்டர் ஐரோப்பா சென்றிருந்த நேரத்தில் நாமெல்லாம் ஜாலியாக (தைரியமாக)செய்த இந்த விவாதங்கள் நமது லயன் வலைதளத்தின் "புதிய" பார்வையாளர்கள் படிக்கக வசதியாக அடியேனின் வலைதளத்தில் மீள்பதிவேற்றியுருக்கிறேன்.எடிட்டர் இவற்றை படித்திருப்பாரா என்று தெரியவில்லை!!!
நல்லதையே நினைப்போம்.அவர் நிச்சயம் இதை படித்திருக்கமாட்டார்:-)
என்னாது.....பூனையார் புகை சமிஞை அனுப்பினாரா...? உஷாராக இருக்கவும்.மயக்க வாயு புகையை அனுப்பிவிட்டு நீங்கள் மயங்கியப்பின் உங்கள் காமிக்ஸ்களை "லவட்டிவிட"போகிறார் :-):-)
Delete
Replies
Reply
Reply
Raghavan 6 December 2013 at 22:08
சாத்தான் ஜி,
அந்த மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக் கெடச்சுதா? ஈ-மெயிலுக்கு யாராச்சும் அனுப்பி இருந்தால் எனக்கு forward செய்யவும் :-)
உங்கள் ஈ-மெயில் உள்டப்பியில் நீங்கள் படிக்காத (!) என் இரு மெயில்கள் உறங்குவதாய் ஸ்டீல் கிளாவின் பட்சியின் ஆவி கனவில் சொன்னது - ஹி ஹி :-D
ReplyDelete
Replies
saint satan 7 December 2013 at 09:07
டியர் ராகவன் !!!
அந்த ஜோக் தெரிந்திருந்தால் இந்த வலைத்தளத்திலேயே அச்சேற்றி இருப்பேனே.
அடியேனின் வலைத்தளம் புரட்சி தீ மாதிரி.நோ சென்ஸார் !!!(பத்திரிக்கா தர்மம் போல் இது இணைய தர்மம்:-)
மாதத்திற்கு ஒருமுறை மெயில் செக் செய்தால் இதுதான் கதி:-)
ஸ்டீல் கிளாவின் பட்சி சரி.அதென்ன பட்சியின் ஆவி...? அடியேனுக்கு பேய்,பிசாசு என்றாலே பயம்.ஹிஹி!!!
Delete
Replies
Reply
Raghavan 8 December 2013 at 05:35
அது சரி சாத்தான் ஜி - ஒண்ணு கேக்கணும்னு குறு குறுங்குது .. உங்கள் நண்பர் லயன் ப்ளாக் கமெண்டுகளை பதிவிடுவதை நிறுத்தி - காமிக்ஸ் பதிவு போட்ட அதே நாள் - நீங்க ஜெனரல் பதிவுகளை நிறுத்தி கமெண்ட்ஸ் பதிவு போட்டிருக்கீங்க .. ஹி ஹி !! - பத்த வெச்சுட்டியே பரட்டை :-) :-D
Delete
Replies
Reply
saint satan 8 December 2013 at 06:04
டியர் ராகவன் !!!
உண்மையை சொன்னால் திரு.மரமண்டை- யார் என்பதே அடியேனுக்கு தெரியாது.ஆனால்,இங்கே ஈரோடு ஸ்டாலின்,ஈரோடு விஜய் உள்ளிட்ட நண்பர்கள் அவர்களை நான் நேரில் சந்திக்கும்போது "வாங்க மரமண்டயாரே" என்றுதான் வரவேற்கிறார்கள்:-)
நான்தான் மரமண்டை என்று இங்கே பிரகடனம் செய்யாத குறைதான்:-)
உண்மையிலேயே நான் மரமண்டை தான் என்றாலும் "மரமண்டை"என்ற நாமகரணத்தில் எழுதுவது நானல்ல என்று கோத்தபயா ராஜபக்சே மீது சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மறுக்கிறார்கள்:-)
உண்மையான மரமண்டை தன்னை இன்னார் என்று வெளிப்படுத்தாத வரை அடியேனின் பேச்சை யாரும் நம்பபோவதில்லை.சர்ச்சைகளும் ஓயப்போவதில்லை:-)
Delete
Replies
Reply
Raghavan 9 December 2013 at 00:01
I believe that you are not the true Mr.M........ :-) Vidunga ji ... summaa oru damaas panna aarambichchu athu ipdi Thina thanthi paththi seithi maathiri aayidichchu :-) |
அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். |
தொழில்நுட்ப வசதிகள் வளர வளர அதன் மூலமாக மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. எங்கு பார்த்தாலும் ஆன்லைன் மோசடிதான். அதுவும் கொரோனா ஊரடங்குக்குப் பிறகு நிறையப் பேர் ஆன்லைன் பரிவர்த்தனைகளைத்தான் அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் மோசடியில் மிகவும் கவனமுடன் இருக்கும்படி ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டல் தனது வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் வகையில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். ஏர்டெல் நெட்வொர்க்கின் சுமார் 350 மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரைத் தெரிந்துகொள்ளும் கேஒய்சி முறையில்தான் இந்த மோசடிகள் அதிகமாக நடைபெறுகின்றன. இதில் உஷாராக இருக்க வேண்டும் என்று ஏர்டெல் வாடிக்கையாளர்களை அவர் வலியுறுத்தியுள்ளார்.
கேஒய்சி படிவத்தைப் புதுப்பித்துத் தருவதாகக்கூறி தங்களை ஏர்டெல் அதிகாரி என்று கூறிக் கொண்டு மோசடியாளர்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு போன் செய்து ஓடிபி நம்பர் உள்ளிட்ட விவரங்களைத் தரும்படி அவர்கள் கேட்கின்றனர். இது மோசடி என்று தெரியாத வாடிக்கையாளர்கள் தங்களது தகவல்களை வழங்கி விடுகின்றனர். கொரோனா ஊரடங்குக்குப் பிறகு இதுபோன்ற கேஒய்சி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
வெறும் 29 ரூபாய் போதும்! ரூ.4 லட்சம் சம்பாதிக்கலாம்! பெண்களுக்கான சூப்பர் திட்டம்!
மக்கள் இப்போது தங்களது மொபைல் போன்களில் அதிக நேரத்தை செலவிடத் தொடங்கியுள்ளனர். இதனால் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஏர்டெல் நெட்வொர்க் சார்பாக மட்டுமல்லாமல், வங்கி அதிகாரிகள் போல பாவனை செய்து மோசடி செய்யும் சம்பவங்களும் அதிகரித்துவிட்டன. இதனால் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்படுகிறது. இந்த விஷயத்திலும் விழிப்புடன் இருக்கும்படி எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. மோசடிகளை அடையாளம் காண முடியும்.
Google செய்திகளில் இருந்து எங்கள் செய்திகளைப் பெற, எங்களைப் பின்தொடர இங்கே கிளிக் செய்யவும்
Follow us on Google News, Click Here
Share this:
Twitter
Facebook
Like this:
Like Loading...
Tagged tech news in tamil technology news in tamil
Related Posts
கார் வாங்க ஆள் இல்லை… கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!
பணத்தை சூப்பரா சேமிப்பது எப்படி? 5 நச் டிப்ஸ்!
3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழந்த META..! வேதனையில் மார்க் ஜூக்கர்பெர்க்
கம்மி விலைக்கு வீடு வாங்கலாம்… பேங்க் நடத்தும் மெகா ஏலம்!
ரயில் டிக்கெட்: முதியோருக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா?
by Karan
Follow Us On
Post navigation
Previous post கார் வாங்கவா போறிங்க? 1 லட்சம் தள்ளுபடி.. அதிரடி சலுகைகள்!
Next post ரூ.28 லட்சம் இன்சூரன்ஸ்.. இந்த ஒரு பாலிசி போதும்!
Don't Miss
கார் வாங்க ஆள் இல்லை… கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!
பணத்தை சூப்பரா சேமிப்பது எப்படி? 5 நச் டிப்ஸ்!
3 மாதத்தில் 224 பில்லியன் டாலர் இழந்த META..! வேதனையில் மார்க் ஜூக்கர்பெர்க்
கம்மி விலைக்கு வீடு வாங்கலாம்… பேங்க் நடத்தும் மெகா ஏலம்!
ரயில் டிக்கெட்: முதியோருக்கு மீண்டும் சலுகை கிடைக்குமா?
Comment
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Save my name, email, and website in this browser for the next time I comment.
கார் வாங்க ஆள் இல்லை… கதறும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள்!
பணத்தை சூப்பரா சேமிப்பது எப்படி? 5 நச் டிப்ஸ்!
1
2
3
…
306
Next
Get in Mail
Enter your email address:
Delivered by FeedBurner
Search
Search for:
All Tags
10 mistakes on investment Artis Badminton bank cheque book bank ifsc code bank loan for womens biztamil business ideas business news canara bank children savings in pandemic children savings plan education news education news in tamil how to get school tc How To Have A Sound Financial Plan For Your Child's Future how to start a trust investment planning meatbusiness ideas Mobil Politik Process-Of-Starting-Trust-In-India right to education act RTE act school admission in RTE act school avoid to issue school tc Sepakbola siruthozhil Sport starting a NGO Sukanya Samirthi savings scheme tamil business news tamil news tamil news updates tech news in tamil technology news technology news in tamil tn govt school go xiaomi இறைச்சிப் பொருள்கள் இறைச்சிப் பொருள்கள் தொழிலுக்கான வழிமுறைகள் சுகன்யா சமிர்தி திட்டம் டிரஸ்ட் தொடங்கும் முறைகள் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் சங்கம் வாக்காளர் அடையாள அட்டை பெறுவது எப்படி |
அனைத்தும் Flashnews அப்துந் நாஸிர் அப்துர் ரஹ்மான் MISc அப்துர் ரஹ்மான் ஃபிர்தவ்ஸி அப்துல் கரீம் அப்துல் ரஹீம் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸி ஆடியோ இ.பாரூக் இ.முஹம்மது இந்த மாத பிரதிகள் எம்.எஸ். சுலைமான் கட்டுரைகள் காஞ்சி இப்ராஹீம் குர்பானி சட்டங்கள் கேள்வி பதில் சபீர் அலி சலீம் சல்மான் சி.வி. இம்ரான் சுஜா அலி சூனியம் நூல்கள் பிறருக்கு பதிலடி பிறை பெண்கள் பகுதி பைசல் மற்றவை முஹம்மது ஒலி முஹம்மது யாஸிர் யூசுஃப் நபி ரஹ்மத்துல்லாஹ் வீடியோ ஷம்சுல்லுஹா ஹஃபீஸ் ஹமீதுர் ரஹ்மான்
தூய இஸ்லாத்தை அறிந்துகொள்ள ஓர் இனிய இணையதளம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம்
முகப்பு
திருக்குர்ஆன்
தமிழ்
ஆங்கிலம்
சிங்களம்
உருது
mp3
நூல்கள்
திருக்குரான் தமிழ்
ஹதீஸ்கள்
ஸஹீஹுல் புகாரி
உணர்வு
2019
2018
2017
2016
2015
2014
2013
2012
2011
2010
2009
TNTJ ப்ப்ளிகேஷன்ஸ்
பிட் நோட்டீஸ் / துண்டு பிரசுரம்
சிறப்பு வெளியீடுகள்
ஏகத்துவம்
ஆடியோ
ஜுமுஆ உரைகள்
பொதுக்கூட்டம்
ரமலான் தொடர் உரை
எளிய மார்க்கம்
இனிய மார்க்கம்
தர்பியா
குர் ஆன் mp3
குர் ஆன் தமிழ் + அரபி
விவாதங்கள்
பெருநாள் உரை
வீடியோ
ஜுமுஆ உரைகள்
பொதுக்கூட்டம்
ரமலான் தொடர் உரை
எளிய மார்க்கம்
இனிய மார்க்கம்
விவாதங்கள்
பெருநாள் உரை
மாநாடுகள்
பொதுக்கூட்டங்கள்
செய்தியும் சிந்தனையும்
கட்டுரைகள்
சமுதாய பிரச்சினைகள்
சட்டங்கள்
பொருளாதாரம்
குடும்பவியல்
பெண்களுக்கு
நவீன பிரச்சினைகள்
மார்க்க தீர்ப்புகள்
ஒழுக்கங்கள்
ஆய்வுகள்
கேள்வி பதில்
சமுதாய பிரச்சினை
மார்க்க சட்டங்கள்
பொருளாதாரம்
குடும்பவியல்
நவீன பிரச்சினை
தொழுகை
நோன்பு
ஜகாத்
கொள்கை
ஹஜ்
ஈமான்
முஸ்லிம் அல்லாதவர்கள்
பெண்கள் பகுதி
தொழுகை
குழந்தை வளர்ப்பு
திருமணம்
குடும்பவியல்
சட்டங்கள்
ஒழுக்கங்கள்
பெண்கள் நூல்கள்
பெண்ணுரிமை
சொத்துரிமை
நவீன பிரச்சினைகள்
முகப்பு / கேள்வி பதில் / இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?
இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?
கேள்வி :
இஸ்லாம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லுகிறதா?
பதில் :
இஸ்லாம் மார்க்கம் முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லுமாறு கட்டளையிட்டுள்ளது. காஃபிர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுமாறு திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது
என்பதும் இஸ்லாத்திற்கெதிரான விமர்சனங்களில் ஒன்றாகும்.
திருக்குர்ஆனில் 2:191 வசனத்தை இதற்கு ஆதாரமாக காட்டுகின்றனர். ஜிஹாத் (புனிதப் போர்) செய்யுமாறு திருக்குர்ஆனில் உள்ள கட்டளைகளையும் எடுத்துக் காட்டி இவ்வாறு விமர்சனம் செய்கின்றனர்.
இது குறித்தும் விரிவாக நாம் விளக்க வேண்டியுள்ளது. முஸ்லிமல்லாதவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று திருக்குர்ஆன் கூறுவதாகச் சொல்வதை முதலில் பார்ப்போம்.
(களத்தில்) சந்திக்கும் போது அவர்களைக் கொல்லுங்கள்! அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்! கலகம், கொலையை விடக் கடுமையானது. மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் உங்களுடன் போருக்கு வராத வரை அங்கே அவர்களுடன் போர் செய்யாதீர்கள்! அவர்கள் உங்களுடன் போருக்கு வந்தால் அவர்களைக் கொல்லுங்கள்! (ஏக இறைவனை) மறுப்போருக்கு இதுவே தண்டனை.
இது தான் அவர்கள் சுட்டிக் காட்டும் குர்ஆன் வசனம். இரண்டாம் அத்தியாயத்தில் 191 வது வசனம் இது.
இவ்வசனத்தில் அவர்களைக் கொல்லுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. எந்த மொழியில் அவர்கள் என்று கூறப்பட்டாலும் அது யாரைக் குறிக்கிறது என்பதை முந்தைய வசனங்களில் தேடிப் பார்க்க வேண்டும். பொதுவாக முஸ்லிமல்லாத மக்களை அது குறிக்கின்றதா? குறிப்பிட்ட இனத்தவர்களைக் குறிப்பிடுகின்றதா? குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும் மக்களைக் குறிப்பிடுகின்றதா? இதற்கான விடையை இதற்கு முந்தைய வசனங்களில் தேட வேண்டும்.
இதற்கு முந்தைய வசனத்தில் கூறப்பட்டதை அப்படியே எடுத்துக் காட்டுகிறோம். இந்தக் குற்றச்சாட்டு விஷமத்தனமானது என்பதை அதிலிருந்து யாரும் புரிந்து கொள்ள முடியும்.
உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
திருக்குர்ஆன் 2:190
உங்களுடன் யாரேனும் வலிய வம்புச் சண்டைக்கு வந்தால் அவர்களுடன் போரிடுங்கள் என்று இவ்வசனத்தில் கூறிவிட்டு அவர்களைக் கொல்லுங்கள் என்று அடுத்த வசனத்தில் கூறுகிறான் இறைவன்.
அவர்களைக் கொல்லுங்கள் என்பது பொதுவாக முஸ்லிமல்லாதவர்களைக் குறிக்கவில்லை. மாறாக உங்களுக்கு எதிராகப் படைதிரட்டி வரும் அவர்களுடன் போரிடுங்கள் என்றே கூறுகிறது என்பதை இதிலிருந்து அறியலாம். முற்பகுதியை மறைத்து விட்டு பிற்பகுதியை மட்டும் சில விஷமிகள் எடுத்துக் காட்டுவதால் இத்தகைய சந்தேகம் ஏற்படுத்தப்படுகிறது.
ஒரு சமுதாயத்துடன் இன்னொரு சமுதாயம் அநியாயமாகப் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும் என்பதில் என்ன தவறு? எந்த அரசாவது தன்னுடன் போருக்கு வரக் கூடியவர்களை எதிர்த்துப் போராடாதிருக்குமா? அவ்வாறு நடக்கும் போரில் எதிரிகளைக் கொல்லாது மயிலிறகால் வருடிக் கொண்டிருக்குமா?
போர் என வந்துவிட்டால் எல்லாவிதமான தர்மங்களையும் தூக்கி எறிவது உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திருக்குர்ஆன் அவர்களுடன் போரிடுங்கள்! ஆனால் வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறுபவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் எனக் கூறிப் போர்க்களத்திலும் புதுநெறியை புகுத்துகிறது.
நியாய உணர்விருந்தால் பாராட்டியிருக்க வேண்டிய ஒரு வசனத்தை தவறாக விமர்சனம் செய்வது நியாயம் தானா? விமர்சனம் செய்பவர்கள் சிந்திக்கட்டும்.
இது போல் திருக்குர்ஆனில் 4:89, 4:90 ஆகிய வசனங்களையும் எடுத்துக்காட்டி இஸ்லாம் காஃபிர்களைக் கொல்லச் சொல்கிறது என்றும் எனக் கூறுகின்றனர்.
அவர்கள் (ஏக இறைவனை) மறுப்போராக ஆனது போல் நீங்களும் மறுப்போராக ஆகி அவர்களும் நீங்களும் (கொள்கையில்) சமமாக ஆக வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றனர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர்கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்!
உங்களுடன் உடன்படிக்கை செய்த சமுதாயத்துடன் சேர்ந்து கொண்டோரைத் தவிர. அல்லது உங்களை எதிர்த்துப் போரிடுவதையோ, தமது சமுதாயத்தை எதிர்த்துப் போரிடுவதையோ ஒப்பாமல் உங்களிடம் வந்து விட்டோரைத் தவிர. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை உங்கள் மீது அடக்கியாளச் செய்திருப்பான். அப்போது அவர்கள் உங்களை எதிர்த்துப் போரிட்டிருப்பார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.
4:89 வசனத்தில் அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதுவும் பொதுவாக முஸ்லிமல்லாதவர்களை வெட்டிக் கொல்லச் சொல்வதாகப் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. அதற்கு அடுத்த வசனமான 4:90 ல் உங்களுடன் போர் புரியாமல் உங்களிடம் சமாதானமாக நடக்க அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு எதிராகப் போர் செய்ய எந்த நியாயத்தையும் அல்லாஹ் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்ன? அவர்களை வெட்டுங்கள் என்பது போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி தாக்க வரும் எதிரிகளைக் குறித்து சொல்லப்பட்டதாகும் என அறிந்து கொள்ளலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தலைமையில் ஒரு நாடு உருவான பின் அதை அழித்தொழிக்க படை திரட்டி வந்தால் அவர்களை சந்திக்க வேண்டிய விதத்தில் சந்திப்பதை யாரேனும் குறை கூற முடியுமா?
திருக்குர்ஆனில் ஜிஹாத் பற்றிக் கூறப்படும் வசனங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைவர் என்ற முறையில் இடப்பட்ட கட்டளையாகும். என்னென்ன காரணங்களுக்காக நபிகள் நாயகம் (ஸல்) போர் செய்தனர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அந்தக் காரணங்களுக்காக நடத்தப்படும் போர்கள் ஜிஹாத் ஆகும்.
முஸ்லிமல்லாத மக்களை வெட்டிக் கொல்வது ஜிஹாத் இல்லை. இதைப் புரிந்து கொண்டால் இந்த விமர்சனமும் தவறு என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
போர்க்களத்தில் தவிர மற்ற நேரங்களில் முஸ்லிமல்லாதவர்களுடன் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்தார்கள்? எப்படி நடக்க வேண்டும் என இஸ்லாம் கூறுகிறது? இதையும் அறிந்து கொண்டால் இன்னும் தெளிவு கிடைக்கும்.
போர் வந்து விட்டால் கோழைகளாகச் சரணடையாதீர்கள்! எதிர்த்துப் போரிடுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் வெட்டிக் கொல்லுங்கள்! என்ற கட்டளையில் என்ன தவறு இருக்கிறது?
சமூகமாகவும், நல்லுறவுடனும் நடக்கக்கூடிய மாற்றார்களுடன் அதே விதமாக நடந்து கொள்ளுமாறு தான் இஸ்லாம் போதிக்கின்றது. எந்தச் சந்தர்ப்பத்திலும் வரம்பு மீறக்கூடாது என்று தான் இஸ்லாம் போதிக்கின்றது.
மாற்று மதத்தினரை வெட்டிக் கொல்லுமாறு இஸ்லாம் கூறவேயில்லை. நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசத்தில் பல மதத்தவர்களும் வாழ்ந்துள்ளனர்.
எனவே இவர்களின் இந்தக் குற்றச்சாட்டு அபாண்டமானது; அர்த்தமற்றது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சிக்காலத்தில் தலைநகரமாக இருந்த மதீனாவிலும், அவர்களின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும் யூதர்கள் வாழ்ந்தனர். கிறித்தவர்கள் வாழ்ந்தனர். முஸ்லிமல்லாத எத்தனையோ மக்கள் வாழ்ந்தனர். அவர்களெல்லாம் கண்ட இடங்களில் வெட்டிக் கொல்லப்படவில்லை.
இஸ்லாம் ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது. மனிதர்கள் வணங்கக்கூடிய கற்சிலைகளுக்கு எவ்விதமான சத்தியும் கிடையாது என்பதிலும் இஸ்லாத்திற்கு இரண்டாவது கருத்து கிடையாது. அதற்காகப் பிற மதத்தவர்களால் வழிபாடு செய்யப்படுபவர்களை ஏசலாமா என்றால் ஏசக் கூடாது என இஸ்லாம் திட்டவட்டமாக உத்தரவிடுகிறது.
அல்லாஹ்வையன்றி யாரிடம் அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ அவர்களை ஏசாதீர்கள்! அவர்கள் அறிவில்லாமல் வரம்பு மீறி அல்லாஹ்வை ஏசுவார்கள். இவ்வாறே ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களது செயலை அழகாக்கிக் காட்டினோம். பின்னர் அவர்களின் மீளுதல் அவர்களின் இறைவனிடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்.
திருக்குர்ஆன் 6:108
எங்கள் இறைவன் அல்லாஹ்வே என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.
திருக்குர்ஆன் 22:40
தான தர்மங்கள் செய்வதிலும், உதவிகள் புரிவதிலும், நீதியை நிலைநாட்டுவதிலும் முஸ்லிம் முஸ்லிமல்லாதவர் எனப் பாகுபாடு காட்டக் கூடாது எனவும் இஸ்லாம் தெளிவான கட்டளையைப் பிறப்பிக்கிறது.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும், அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.
திருக்குர்ஆன் 60:8
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
திருக்குர்ஆன் 5:8
முஸ்லிமல்லாத மக்களுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்குர்ஆன் கட்டளையிட்டதோ அதற்கேற்பவே நபிகள் நாயகம் நடந்தார்கள்.
பிற மதத்தவர்களுடன் நபிகள் நடந்து கொண்ட முறையைப் பின்வரும் செய்தியில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
யூதப் பெண்ணொருத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு நஞ்சூட்டப்பட்ட ஆட்டைக் கொண்டு வந்து கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டார்கள். அவள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அழைத்து வரப்பட்டு அவளிடம் இது பற்றி விசாரித்தார்கள். உங்களைக் கொல்லும் நோக்கத்தில் அவ்வாறு செய்தேன் என்று அவள் கூறினாள். அல்லாஹ் உனக்கு அந்தப் பொறுப்பைத் தரவில்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். இவளைக் கொன்று விடட்டுமா? என நபித்தோழர்கள் கேட்டதற்கு கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம், அஹ்மது ஆகிய நூல்களில் இந்த வரலாற்று நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.)
இஸ்லாமியச் சட்டப்படி அவளைக் கொல்ல அனுமதியிருந்தும் பாதிக்கப்பட்டவர் என்ற முறையில் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தினார்கள்.
மாற்றார்களுடன் இத்தகைய சந்தர்ப்பத்தில் நபிகள் நாயகம் (ஸல்) எப்படி நடந்துள்ளார்கள் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Go to
old.onlinetntj.com
FB Live
தவ்ஹீத் ஜமாஅத்
From Youtube
ஏகத்துவம்
ஏகத்துவம் – டிசம்பர் 2016
ஏகத்துவம் – நவம்பர் 2016
ஏகத்துவம் – அக்டோபர் 2016
ஏகத்துவம் – செப்டம்பர் 2016
ஏகத்துவம் – ஆகஸ்ட் 2016
Visitors
ஜமாத் இணையதளங்கள்
சில கிறித்தவர்களும், இந்துத்துவாவினரும், கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் இணைய தளங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் இஸ்லாம் குறித்து தவறான கருத்துக்களை விதைத்து, தரக்குறைவாக விமர்சித்து வருகின்றனர். அவர்களின் கொள்கை சரியா? இஸ்லாத்தின் கொள்கை சரியா? என்று விவாதிப்பது தான் சரியான நடைமுறையாகும். விவாதம் செய்ய முஸ்லிம்கள் முன்வராத போது தான் வெளியில் விமர்சிக்க வேண்டும். ஆனால் முஸ்லிம்கள் சார்பில் இவர்களில் யாருடனும் பகிரங்க விவாதம் நடத்த நாம் தயாராக இருக்கிறோம். இந்த அழைப்பை அவர்கள் ஏற்க வேண்டும். |
எங்கள் தயாரிப்புகள் தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, ஜப்பான், யுனைடெட் கிங்டம், நியூசிலாந்து மற்றும் பல நாடுகளில் விற்கப்படுகின்றன. முக்கிய பிராந்திய சந்தைகளுக்கு சிறப்பாக சேவை செய்வதற்காக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்க 6 பெரிய வெளிநாட்டு கிடங்குகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் உற்பத்தி மையங்களை அமைத்துள்ளோம். ஒரு பகுதியைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? நீங்கள் தேடும் பகுதிகளின் விருப்பப்பட்டியலை உருவாக்கவும், கிடைக்கும்போது நாங்கள் உங்களுக்கு அறிவிப்போம் அல்லது அவற்றை உங்களுக்காகக் கண்டுபிடிப்போம்!
இடுகை நேரம்: டிசம்பர் -24-2020
எங்கள் விளம்பரங்கள், தள்ளுபடிகள், விற்பனை மற்றும் சிறப்பு சலுகைகளுடன் புதுப்பித்த நிலையில் இருக்க எங்கள் செய்திமடலுக்கு பதிவுபெறுக |
nan appothu onpathan vakuppu padithu kondirunthen yen pakanthu veettil ulla antha pennin peyar jeevitha.aval yennai vida oru vayathu mothaval,nangal irandu kodumbamum angu vadagai vettil kudiirunthom.yenaku pothuvaga kamathail athiga edupadu undu,jeevitha megavum azagana pen.karu neela konthal.uyaram satru yenaky nigar..niram maniran.udal vagu.mega nelintha (நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) இந்த […]
Categories
Tanglish
ஆண் ஓரின சேர்கை
இன்பமான இளம் பெண்கள்
குடும்ப செக்ஸ்
குரூப் செக்ஸ் கதைகள்
சிறந்த கதைகள்
சூடு ஏத்தும் ஆண்டிகள்
செய்தி
ஜோடிகள்
லெஸ்பியன்
வாசகர் கதைகள்
வேறு
Tamil Kamaveri Thodargal
Join TK Club
Get free stories in your inbox every week. Join the TK club by entering your email address in the box below
Privacy guaranteed. We never share your info.
Scroll To Top
கதை அனுப்ப
தொடர்பு கொள்ள
செக்ஸ் கதைகள் போட்டி
Advertising
© 2002 - 2018 Tamil Kamaveri.
தமிழ் பேருந்து காம பயண கதைகள் நீண்ட காம கதைகள் நான் நிருதி மாலதி அக்கா மாமா பையனுடன் செக்ஸ் மருமகள் கள்ளத்தொடர்பு கமாகனதகள் பாத்ரூமில் ஓல் tamil thevidiya pundai kama jathai mamiyar kathai thamil kama kathikal தங்கையின் தோழியுடன் கூட்டணியா கள்ள ஓல் மாமன் மகள் காமகதை tamil thevidiya sex stories அக்கா ஓல் டா தம்பி அம்மா ஆண்டியை ஒன்றாக ஓத்தேன் koothi kaatum manaivi xossip மல்லிகை கடைகாரன் காமக்கதை tamil pee kundi moothiram kadhaigal தங்கை முலை விருந்து பேருந்து பயண அனுபவம் லெஸ்பியன் அம்மா தேண் முலை காம கார் பயண காமகதைகள் அம்மா மகன் டாய்லெட் செக்ஸ் கதை தமிழ் ennai aanmagan akiya en anni tamil kama kathai /vasargargal-stories/panithuli-48/ en Kudumpam peankali karaplipu kathi tamil அண்ணி ஓழ் padam அழகான 30 வயது ஆன்டிகள் காமகதைகள் Tamil doctor katpalippu kama kathakikal Tamil karumpundai kamakathai மஞ்சள் தேய்த்த அழகு முகம் 2 தமிழ் காமக்கதைகள் பேஸ்புக் காதலியின் ஓல் துணி துவைக்கும் அம்மா Tamil kamaveri kadai tamil arasiyal sex stories சூத்து பெருத்த கிழவிகள் செக்ஸ் வீடியோ முஸ்லிம் ராஜா காமக்கதைகள் patti koothi peran vayil.in tamil Tamisexkathai அம்மாயிடம் போய் magan காமக்கதைகள் பாவாடை sex பேருந்து இருக்கை பின்னால் இருந்து புண்டையை தடவி காம கதைகள் இளம் ஆண்கள் பெண்களை ஓக்கும் கதைகள் guy ஆண் சேர்கை காமகதைகள் Trainil amma vangiya ool kama kathaigal அண்ணி செக்ஸ் கதை நிருதி tamilkamaveri பாலும் பழமும் செக்ஸ்கதை Tamil en amma akkavai vaithu yadutha kama padam kathikal tamil maganin murattu kuththu sex story அம்மாவை ஓத்து கர்பமாக்கிய மகன் காமகதை மெத்தையில் வித்தை தமிழ் காமக்கதைகள் அம்மாவ நிக்கவச்சி ஓத்த கதை முதல் முறை ஓத்த புண்டை Amma thami kamak kathikal thamil அழுதால் அக்கா காமகதை akka malam kaama kathai மகனின் மிரட்ட காமக்கதைகள் என் மனைவியை வேறு ஒருவன் ஓத்து பீ நக்குதல் மாமியாவுடன் மஜா tamil amma kamakatai nanpanin amma repe தமிழ் செக்ஸ் நான் குத்தா தமிழ்.பெண்கல்.செஸ்.விடியே pavadaikkul okkum videos xnxx கவிதா முலையை கசக்கி பால் காம கதை அம்மா புன்னட மகன் ஜாக்கெட் மாத்தும் காம கதை xxx aunty thamil new best kamakathaykal அம்மா புன்னட மகன் Okumkathaitamil ஒத்துக்கொள்ளாத காம கதை கொழுத்த Nude பொச்சு கதை xxx நித்யா காம கதைகள் Karpam akka kamakathaikal tamil கற்பு -8 kamakthai mama kude phone pesikite yenna otha kamakadhaigal Tamil en ammavai otha enkal vellaikaran ammavummaganumothakathaikal.intamil tamil kaama kathaigal tamil kaama katgaigal புதிய அதிரடி காம கதைகள் marumagaluku kulanthai kudtha mamanar tamil latest kamakathaikal பஸ் மாணவி முலை கதை ஆண் பெண் நாக்கை முத்தமிடும் SEX VIDEO DOWNLOAD shanthi in pundaiel okum kathaigal டிடியை கதற கதற ஓத்த கதைகள் pichaikari kamakathaigal கொளுத்த சூத்து படங்கள் காமகதைகள் உரசல் தாயும் மகனும் சமையல் ரூமில் ஒத்தா புதிய கதை bathroomla thevudiya sex pundai okkum kama kadhai tamil போலீஸ் பொம்பளைக்கு பெரிய கூதி பாத்ரூம் காம கதை tamil kama kama kathai bus |
விருந்தோம்பல் மிகச் சிறந்த பண்பு. நம் நாட்டின் அடையாளம். ஆனால் அது இன்று எப்படி உருமாறி வருகிறது தெரியுமா?
வந்திருப்பவர்களுக்கு உடலுக்கு ஒத்துக்கொள்ளுமா, ஒத்துக்கொள்ளாதா அது பற்றி எல்லாம் கவலை இல்லை. டீயோ, காபியோ, குளிர்பானமோ ஏதோ ஒன்றை கொடுத்து வலுகட்டாயமாக குடிக்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.
‘வேண்டாம், இப்போதுதான் சாப்பிட்டுவிட்டு வந்தோம்’ என சொன்னாலும் விடுவதில்லை. என்னவோ அவர்களை அவமானப்படுத்திவிட்டதைப் போல நினைத்துக்கொண்டு வருந்துகிறார்கள்.
‘ஏன் தொந்திரவு செய்கிறீர்கள்?’ என கடுமையாக சொல்ல வேண்டியுள்ளது. அப்படி கடுமையாகப் பேசியபிறகு நம்மாலும் நிம்மதியாக இருக்க முடிகிறதா?
அதுபோலவே சாப்பிட அழைத்தாலும் விருந்தினர்களின் உடல்நிலைக்கு ஏற்ற உணவை சமைத்துப் போடுவதில்லை. அவர்களுக்குப் பெருமை சேர்க்கும் உணவை தயாரித்துப் போட்டு மகிழ்விப்பதில்தான் மகிழ்ச்சியடைகிறார்கள். விருந்தினராக வருபவர்களுக்கு டயாபடிக்ஸ், இரத்த அழுத்தம், இதயநோய் இப்படி எது வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் சாப்பிடக்கூடாத உணவுவகைகள் நிறைய இருக்கும்.
ஆனால் அதுகுறித்த உணர்வுகளே இல்லாமால் தேங்காயை அள்ளிப் போட்டு, எண்ணையில் காய்கறிகளைப் பொறித்தெடுத்து, பிழிந்தால் எண்ணை சொட்டும் வடை செய்து விருந்தினர்களை அசத்துவார்கள்.
‘இதெல்லாம் சாப்பிடக் கூடாது. உடலுக்கு ஒத்துக்கொள்ளாது’ என சொன்னாலும் ‘ஒருநாள் சாப்பிடுவதால் ஒன்றும் ஆகாது’ என சொல்லி வற்புறுத்துவார்கள். ‘இப்படியெல்லாம் பாசத்துடன் வற்புறுத்துகிறார்களா? அப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களா?’ என நீங்கள் நினைப்பதை என்னால் காதுகளால் கேட்க முடிகிறது. ‘இருக்கிறார்களே’, தங்கள் சிறப்பைக் காட்ட வேண்டும் என்ற நோக்கமும் இதில் அடங்கி உள்ளதால் வற்புறுத்தி விருந்தினர்களை மறைமுகமாக காயப்படுத்துகிறார்கள்.
‘எனக்கு காபி பிடிக்கும்’ என்ற ஒற்றை கருத்தை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு தங்கள் வீட்டில் இரண்டு நாட்கள் முன்பு போட்டு வைத்திருக்கும் டிகாஷனை சூடு கூட செய்யாமல் சர்க்கரை அதிகம் போட்டு பொங்குவதற்கு முன்பே அடுப்பை அணைத்த பாலில் விட்டு ‘உனக்கு காபி பிடிக்குமேன்னு போட்டேன். குடி…’ என வற்புறுத்தினால் ஆறிய காபி, பாயசம் போல தித்திக்கும் காபி வயிற்றை குமட்டிக்கொண்டு வருவதை தவிர்க்க முடியாமல் வாஷ் பேசினுக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.
காபி என்றால் புது டிகாஷன், திக்கான டிகாஷன், சூடான திக்கான பால், கொஞ்சமாக சர்க்கரை, நுரை வரும் வரை ஆற்றாமல் டவரா டம்ளரில் விட்டு வாய் பொறுக்கும் சூட்டில் உதட்டில் படாமல் நாக்கில் மட்டும் விட்டுக்கொண்டு சாப்பிட வேண்டும் எனக்கு. அந்த காபியின் கசப்பு ஒரு மணி நேரம் வரை நாக்கில் நிற்கும்.
அன்பாக கொடுப்பதை குறை சொல்லாமல் சாப்பிட வேண்டும்தான். ஆனால் உடலுக்கு ஒத்துக்கொள்கிறதா இல்லையா என்பது தெரியாமல் வற்புறுத்துவதைத்தான் தவறு என்கிறேன்.
கொரோனா காலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நெருங்கிய குடும்ப நண்பர் ஒருவர் தங்கள் பெற்றோருக்கு சதாபிஷேகம் என சொல்லி பத்திரிகை அடித்து ‘வீட்டுக்கு நேரில் வந்து கொடுக்கிறேன்’ என சொன்னார்கள். நாங்கள் ‘வாட்ஸ் அப்பில் அனுப்புங்கள் போதுமே’ என சொன்னாலும் கேட்காமல் மாஸ்க் கூட போடாமல் நேரில் வந்து கொடுத்தார்கள். மேலும் நிகழ்ச்சிக்கு முதல்நாள் வாட்ஸ் அப்பில் அழைப்பிழை அனுப்பி நினைவுபடுத்தினார்கள்.
ஆனால் நாங்கள் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. கடிதம் எழுதி அதில் செக் இணைத்து வாழ்த்துக்களைச் சொல்லி அவர்களிடம் ஆசிர்வாதம் வேண்டி கொரியரில் அனுப்பி வைத்தோம். ஆனால் நிகழ்ச்சி முடிந்து நான்கைந்து நாட்கள் ஆகியும் அவர்களிடம் இருந்து எந்த போன் அழைப்பும் இல்லை என்பதால் நாங்களே போன் செய்து வர இயலாததுக்கு காரணம் சொல்லி கொரியர் வந்ததா எனக் கேட்டறிந்தோம்.
சதாபிஷேக தம்பதிகளே வயதானவர்கள், அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தார்களாம். பெருமையாக சொல்லிக்கொண்டார்கள். கொரோனா காலத்தில் இத்தனை கூட்டம் எல்லோருக்குமே ஆபத்துத்தானே?
எல்லாம் சரி, அழைப்பிதழை வலுகட்டாயமாக வீட்டுக்கு வந்து கொடுப்பதிலும், முதல்நாள் வாட்ஸ் அப்பில் நினைவுபடுத்துவதிலும் இருக்கும் அக்கறை நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கும், தபாலில் / கொரியரில் / இமெயிலில் வாழ்த்து அனுப்பியவர்களுக்கும் நன்றி சொல்லி வாட்ஸப்பில் தகவல் அனுப்ப அவர்களுக்கு தோன்றாதது ஏன் என தெரியவில்லை.
இப்போதெல்லாம் விருந்தோம்பலின் நோக்கம் எப்படி செல்கிறது தெரியுமா?
‘பார், நான் எப்படி வாழ்கிறேன், எவ்வளவு வசதியாக இருக்கிறேன், என்னால் எப்படி சிறப்பாக செய்ய முடிகிறது’ என்ற ஒரு ஆடம்பரத்தை வெளிக்காட்ட விருந்தோம்பலை ஒரு காரணியாக பயன்படுத்துகிறார்கள்.
இதனால்தான் திருமண நிகழ்ச்சிகளில் காலை டிபனுக்கு இட்லி, தோசை, மசால் பூரி, வடை, பொங்கல், இனிப்பு வகைகள் என இலை முழுவதும் அடைத்து பரிமாறுகிறார்கள். இத்தனையையும் காலை 8 மணிக்கு சாப்பிட்டு மதியம் ஒரு மணிக்கு எத்தனை பேரால் சாப்பாட்டு சாப்பிட முடியும்? ரசம் சாதம் மட்டும் சாப்பிட்டு இலையில் மற்றதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து செல்பவர்களே அதிகம்.
காலையில் எளிமையான டிபன், மதியம் வடை பாயசத்துடன் நிறைவான விருந்து சாப்பாடு, ஒரு பழம், ஐஸ்க்ரீம், வெற்றிலை பாக்கு என எளிமையான விருந்துக்கு ஈடாகுமா?
ஆனால் இப்போதெல்லாம் விருந்தும், விருந்தோம்பலும் ஸ்டேட்டஸின் அடையாளமாகிப் போய்விட்டது. விருந்துக்கு வந்திருப்பவர்களின் ‘உடல்நிலையின் ஸ்டேட்டஸ்’ பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதில்லை.
எல்லாம் ‘ஸ்டேட்டஸ்’ மயம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி,CEO
Compcare Software
#காம்கேர்_OTP, #COMPCARE_OTP
(Visited 20 times, 1 visits today)
Next ஜம்முனு வாழ காம்கேரின் OTP-98: பிரச்சனைகளே இல்லாத பூரண வாழ்வு சாத்தியமா?
Previous ஜம்முனு வாழ காம்கேரின் OTP-96: மனமெனும் கல்லாப்பெட்டியில் வினைகளும் எதிர்வினைகளும்!
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை
அமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு!
விக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய
அண்மை பதிவுகள்
மலர்வனம் – தீபாவளி சிறப்பிதழ்: ஆயிரம் பிறை கண்டவர் போன்று… (November 2021)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1028: விரைவில் சந்திப்போம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1027: குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1026: வீட்டு சமையல் ருசிப்பது ஏன்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1025: ஆத்மாவும், அந்தராத்மாவும்! (Sanjigai108)
இதுவரை
இதுவரை Select Month November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 March 2018 February 2018 January 2018 December 2017 September 2017 August 2017 April 2017 March 2017 August 2016 October 2010 March 2000 December 1992
© COPYRIGHT Compcare K. Bhuvaneswari. ALL RIGHTS RESERVED. CEO|Software Professional|Creative Director|Animator|Publisher|Editor|Journalist|Writer |
துபாய் என்றதும் எனக்கு சிரிப்பு வந்துவிடும். காரணம் நடிகர் பார்த்திபனும், வடிவேலுவும் சேர்ந்து செய்த காமெடி சீன்தான்.
பார்த்திபனிடம் வடிவேலு ‘நீ துபாய்ல எங்க இருந்தாய்?’ என்று கேட்கும் சீனில் பார்த்திபன் ‘நம்பர் 6, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய் மெயின் ரோடு, துபாய்’ என்று சொல்லும் காட்சியை தவிர்க்க முடிவதே இல்லை. ஆம். நேற்று கூட!
காரணம். நேற்று துபாய் பயணம்!
ஒவ்வொரு நாட்டுக்கும் ஒரு கலாச்சாரம் இருப்பதைப்போல் துபாய்க்கும் உள்ளது.
கிளம்புவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்னர் இந்தியாவில் PCR Test (கோவிட் பரிசோதனை). சென்னை விமான நிலையத்தில் மீண்டும் கோவிட் டெஸ்ட். துபாயில் இறங்கியவுடன் மீண்டும் கோவிட் டெஸ்ட்.
எல்லாம் முடிந்து சென்னையில் இருந்து துபாய் கால் டாக்ஸி சர்வீஸ் ஒன்றில் ஏற்கெனவே புக் செய்து வைத்திருந்த காருக்கு போன் செய்தேன். பெட்டிகளை ஏற்றி இறக்கி சர்வீஸ் செய்ய வந்திருந்த போர்ட்டருக்கு ஆங்கிலம் முழுதாக தெரியவில்லை. ஆங்கிலத்தை அவர் மொழியில் கலந்து ஏதோ பேசினார். நான் தமிழ் என்று தெரிந்ததும் பேசினால் கஷ்டப்பட்டுப் புரிந்துகொள்ளும் அளவுக்கான தமிழில் பேசினார். நடுவில் கரன்சி மாற்றுவதற்காக நின்றபோதும் பொறுமையாக காத்திருந்தார்.
இதற்குள் ஏற்கெனவே புக் செய்திருந்த காரும் வந்தது. கார் டிரைவர் கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை மற்றும் டையுடன் பார்ப்பதற்கே மரியாதையாக தோன்றினார். பேசும்போதும் அப்படியே. பெட்டிகளை போர்ட்டர் காரில் ஏற்றும்போது அவரும் சேர்ந்து உதவினார். போர்ட்டர் சர்வீஸ் கேபினில் ஏற்கெனவே கட்டணம் கட்டி இருந்தாலும், போர்ட்டருக்கு தனியாக டிப்ஸ் கொடுக்கலாம் என நினைத்து டிராமை (Dirham) எடுப்பதற்குள் அவர் போயே போய்விட்டார்.
கார் டிரைவர் நான் தமிழ் என தெரிந்ததும் தமிழிலேயே பேசினார். அவருடைய ஊர் ஸ்ரீலங்கா என்றும் கடந்த 15 வருட காலமாக துபாயில் வசிப்பதாகவும் கூறினார். அப்படியே துபாய் குறித்தும் சில விஷயங்களை சொல்லிக்கொண்டே கார் ஓடுவதே தெரியாத அளவுக்கு ஓட்டிக்கொண்டு வந்தார்.
கண்ணாடி வழியே துபாய் கட்டிடங்களை பார்த்து ரசித்துக்கொண்டே அவருடைய பேச்சையும் கவனித்தபடி பயணித்தேன். அமெரிக்காவில் இருப்பதைப் போலவே ஒரு உணர்வு. சாலை, கட்டிடங்கள், டிராஃபிக் எல்லாமே மிக நேர்த்தி. தூசி, குப்பை என எதுவுமே கண்களில் படவில்லை.
டிரைவர் தான் வசிக்கும் நாட்டைப் பற்றி மிக உயர்வாக சொல்லிக்கொண்டே வந்தார். உண்மையே உயர்வுதான். அதை உரக்கச் சொல்லும்போது அது மேலும் மேலும் உயர்வாகத்தானே தோன்றும்.
‘இங்கு நீங்கள் பயப்படவே வேண்டாம். தைரியமா நடமாடலாம். எல்லோரும் நல்ல மனிதர்கள். பொய், திருட்டு, ஏமாற்று இதுவெல்லாம் எதுவுமே கிடையாது. அரசின் சட்ட திட்டங்களை இங்குள்ள மக்கள் நூறு சதவிகிதம் பின்பற்றுவார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் மாஸ்க், வேக்சினேஷன், சமூக இடைவெளி என எல்லாவற்றையும் நூறு சதவிகிதம் பின்பற்றினார்கள். இப்போதும் அப்படியே. அதனால்தான் உலக அளவில் பிரமாண்டமான கண்காட்சி (Expo Dubai 2021) இந்த வருடம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு நடந்து வருகிறது. அங்கும் மக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறார்கள்.
கொரோனாவுக்கு முன் துப்பாய் எப்படி இருந்ததோ அப்படியே இப்போதும் முழுமையாக இயங்குகிறது. காரணம் மக்களின் ஒத்துழைப்பு.
மாஸ்க் போடவில்லை என்றால் 3000 டிராம் அபராதம். இந்திய மதிப்பில் 61634/- ரூபாய்.
இப்படி கடுமையான சட்ட திட்டங்கள். மக்களின் ஒத்துழைப்பு. திட்டமிட்ட பணிகள். ஏற்பாடுகள். நடவடிக்கைகள் என எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு இருக்கிறது…’
டிரைவர் சொன்னதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை. ஏற்கெனவே புக் செய்திருந்த ஹோட்டலில் பெட்டிகளை இறக்க உதவி செய்துவிட்டு ‘எங்கே செல்ல வேண்டும் என்றாலும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் செய்யுங்கள்…’ என்று சொல்லி விடைபெற்றார்.
ஒரு விஷயம் மட்டும் மீண்டும் நிரூபனமானது. எங்கெல்லாம் சட்ட திட்டங்கள் கடுமையாக இருக்கிறதோ, எங்கெல்லாம் மக்களும் சட்ட திட்டங்களை மதித்துப் பின்பற்றுகிறார்களோ அங்கெல்லாம் ஒழுங்கு, நேர்த்தி, அழகு எல்லாமே சாத்தியம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#காம்கேர்_OTP #COMPCARE_OTP #dubai
(Visited 992 times, 1 visits today)
Tags: dubai
Next ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1017: பங்கீடு செய்ய வேண்டாமே!
Previous ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1015: பயணம்!
ஸ்ரீபத்மகிருஷ் அறக்கட்டளை
அமேசானில் காம்கேர் புத்தகங்கள் வாங்குவதற்கு!
விக்கிபீடியாவில் காம்கேர் பற்றி அறிய
அண்மை பதிவுகள்
மலர்வனம் – தீபாவளி சிறப்பிதழ்: ஆயிரம் பிறை கண்டவர் போன்று… (November 2021)
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1028: விரைவில் சந்திப்போம்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1027: குழந்தைகளை தவறு செய்ய அனுமதியுங்கள்!
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1026: வீட்டு சமையல் ருசிப்பது ஏன்?
ஜம்முனு வாழ காம்கேரின் OTP- 1025: ஆத்மாவும், அந்தராத்மாவும்! (Sanjigai108)
இதுவரை
இதுவரை Select Month November 2021 October 2021 September 2021 August 2021 July 2021 June 2021 May 2021 April 2021 March 2021 February 2021 January 2021 December 2020 November 2020 October 2020 September 2020 August 2020 July 2020 June 2020 May 2020 April 2020 March 2020 February 2020 January 2020 December 2019 November 2019 October 2019 September 2019 August 2019 July 2019 June 2019 May 2019 April 2019 March 2019 February 2019 January 2019 December 2018 November 2018 October 2018 September 2018 August 2018 July 2018 March 2018 February 2018 January 2018 December 2017 September 2017 August 2017 April 2017 March 2017 August 2016 October 2010 March 2000 December 1992
© COPYRIGHT Compcare K. Bhuvaneswari. ALL RIGHTS RESERVED. CEO|Software Professional|Creative Director|Animator|Publisher|Editor|Journalist|Writer |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
மற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள்? அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை? ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்
புது கட்டளை விதியை இணை
மற்றும்
அல்லது
அல்ல
Limit results to:
சேமகம்? OISE Library Thomas Fisher Rare Book Library, University of Toronto Trinity College Archives University of St Michael's College Archives University of St. Michael's College, John M. Kelly Library, Special Collections University of Toronto Archives and Records Management Services University of Toronto Media Commons Archives University of Toronto Mississauga Library, Archives & Special Collections University of Toronto Music Library University of Toronto Scarborough Library, Archives & Special Collections Victoria University Archives Victoria University Library - Special Collections
உயர்மட்ட விவரணம்
முடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:
விவரிப்பு மட்டம் சேர்வு Collection File Fonds உருப்படி Manuscript Collection Series Sous-fonds Subseries
Digital object available ஆம் இல்லை
உதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது
உயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்
திகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக
ஆரம்பம்
முடிவு
மேற்படிவான துல்லியமான
Use these options to specify how the date range returns results. "Exact" means that the start and end dates of descriptions returned must fall entirely within the date range entered. "Overlapping" means that any description whose start or end dates touch or overlap the target date range will be returned. |
%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%b0%e0%af%88
%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d
காணொளி
செய்திகள்
நிகழ்வுகள்
புகைப்படங்கள்
விமர்சனம்
%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%b5%e0%af%88
உணவு
சுற்றுலா
நாகரிகம்
%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d
காவல் / ராணுவம்
சமுதாயம்
பெண்கள்
மருத்துவம்
விளையாட்டு
Breaking News
முகப்பு
முக்கிய செய்திகள்
சமுதாயம்
காவல் / ராணுவம்
மருத்துவம்
பெண்கள்
விளையாட்டு
அரசியல்
இந்தியா
உலகம்
தமிழ்நாடு
திரைப்படம்
செய்திகள்
புகைப்படங்கள்
காணொளி
நிகழ்வுகள்
விமர்சனம்
கல்வி
அறிவியல் / தொழில்நுட்பம்
வர்த்தகம்
வேலைவாய்ப்பு
பல்சுவை
உணவு
நாகரிகம்
சுற்றுலா
அங்காடி
சிறப்புக் கட்டுரை
Toggle navigation
Home
Anandaraj
Tag Archives
செய்திகள்திரைப்படம்
இடியட் டீமில் பெரிய இடியட் இயக்குனர் ராம்பாலாதான் – மிர்ச்சி சிவா
by G Tamil News on September 12, 2021 0
Screen Scene Media Entertainment PVT.LTD தயாரிப்பில், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள, ஹாரர் காமெடி திரைப்படம் “இடியட்”. ‘தில்லுக்கு துட்டு’ இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து, ஹாரர் காமெடி பாணியில், மீண்டும் கலக்கல் கமர்ஷியல் மசாலா திரைப்படமாக, இப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் ராம்பாலா. விரைவில் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. நடிகர் ரவி மரியா பேசியதாவது… “நான் வில்லன் சேரில் உட்கார்ந்து காமெடி செய்பவன், என்னை […]
Read More
செய்திகள்திரைப்படம்
தன் தம்பி மரணம் குறித்து ஆனந்தராஜ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
by G Tamil News on March 6, 2020 0
புதுச்சேரி திருமுடி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை. இவர் நடிகர் ஆனந்த்ராஜின் தம்பி. கோவிந்த சாலை பகுதியில் உள்ள திருமுறை நகரில் கனகசபை வசித்து வந்தார். ஏலச்சீட்டு, பைனான்ஸ் நடத்தி வந்த கனகசபை, நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து ஏலச்சீட்டு போட்டவர்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு தங்களது பணத்தை உடனடியாகத் தரவேண்டும் என்று வாதிட்டார்கள். இந்நிலையில் கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கனகசபையின் உடலுக்கு பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஏலச்சீட்டு காரணமாகவும் […]
Read More
செய்திகள்திரைப்படம்
நடிகர் ஆனந்தராஜின் தம்பி தற்கொலை
by G Tamil News on March 5, 2020 0
புதுச்சேரி கோவிந்தசாலை திருமுடிநகரை சேர்ந்தவர் கனகசபை(55). இவர் ஏலசீட்டு நடத்தி வந்தார். இந்த நிலையில் இன்று வீட்டு படுக்கை அறையில் விஷம் அருந்தி, தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தவுடன் பெரியகடை போலீசார் விரைந்து சென்று, கனகசபை உடலை கைப்பற்றி வபிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… தற்கொலை செய்து கொண்ட கனகசபை, பிரபல திரைப்பட நடிகர் ஆனந்தராஜின் தம்பி ஆவார். |
வில்லியனூர் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் இலவசமாக மது கொடுக்காத மதுக்கடையை 3 இளைஞர்கள் அடித்து நொறுக்கி உள்ளனர். புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் மதுக் கடைக்கு நேற்று இரவு மூன்று இளைஞர்கள் வந்துள்ளனர். அவர்கள்...
இந்தியா
ராஜஸ்தானில் ரூ.510 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட மதுக்கடை…!
Savitha Savitha - March 8, 2021
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் மின்னணு ஏலம் மூலம் ஒரு மதுக்கடை ரூ .510 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு உள்ளது, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் கலால் கொள்கையில் மாற்றம் கொண்டு வரப்பட்டதை அடுத்து,...
இந்தியா
சாயங்காலம் சரக்கு கடைகளை திறக்க ரிஷிகபூர் யோசனை….
Mullai Ravi - March 29, 2020
மும்பை தினமும் மாலை வேளையில் மதுக்கடைகள் திறக்கலாம் என இந்தி நடிகர் ரிஷிகபூர் கூறி உள்ளார். 21 நாள் ஊரடங்கு உத்தரவால் இந்தியா முழுக்க மதுக்கடைகளையும் அடைத்து விட்டார்கள். கொரோனாவை நினைத்து மனது ஒரு பக்கம் நடுங்கி...
தமிழ் நாடு
ஆகஸ்ட் 15 தேதி முதல் மதுக்கடைகள்.. நேரம் குறைப்பு?
tvssomu - August 8, 2016
சென்னை: வரும் ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார் 1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்கும் உத்தரவில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார் என்றும் ஒரு “செய்தி” (?!) சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்தத் “தகவலை”...
தமிழ் நாடு
இரண்டு ஆண்டுகளில் டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்! : திருமாவளவன்
tvssomu - May 26, 2016
சென்னை: “தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு அமைந்துள்ளது” என்று திருமாவளவன் கூறியுள்ளார். விடுதலை...
தமிழ் நாடு
டாஸ்மாக் கடையை மூட போராடிய பெண்கள் மீது காவல்துரை கொடூரத் தாக்குதல்
tvssomu - May 5, 2016
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என தொடர்நது போராடிவருபவர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர். இன்று அவர்கள் மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மதுக் கடைகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அதன் ஒரு... |
[ November 30, 2021 ] சுமந்திரனின் வெளிநாட்டு பயணம் தமிழருக்கு எதிரானது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். காணொளி
[ November 26, 2021 ] மாவீரர் நாள் 2021 முக்கியமானவை
[ November 23, 2021 ] மாவீரர் நாள் சிரமதானப் பணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முக்கியமானவை
[ November 19, 2021 ] சுமந்திரனின் கனடா வருகைக்கு எதிராக கண்டன போராட்டம் முக்கிய செய்திகள்
[ November 18, 2021 ] சுமந்திரன் குழு அமெரிக்க விஜயம் பற்றிய பிந்திய தவல்கள் முக்கியமானவை
Search for:
தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .
February 20, 2020 Newyork2019 அண்மைச் செய்திகள் 0
தனிநாடு வேண்டுமா என்பதை தமிழர்கள் தீர்மானிப்பார்கள், சிதைந்த சம்பந்தனும் சுமந்திரனும் தனிநாடு வேண்டாம் என்று சொல்ல உரிமையற்றவர்கள் .
சமீபத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர் மால்காம் புரூக்ஸை சந்தித்தனர். தனிநாட்டை தமிழர்கள் விரும்பவில்லை என்று இரு தமிழர்களும் அவரிடம் கூறியுள்ளனர், குறிப்பாக 13 வது திருத்தத்திற்குப் பிறகு.
இது முழுமையான பொய். தனி நாட்டிற்கான நம்பிக்கையை தமிழர்கள் ஒருபோதும் கைவிடவில்லை. 13 வது திருத்தத்திற்குப் பிறகு தான் சிங்களவர்களிடமிருந்து பிரிந்து செல்ல தமிழர்கள் ஆயுதம் ஏந்தினர்.
2009 ல் நடந்த இனப்படுகொலைக்குப் பிறகு, உலக விதிமுறை என்பது பிரிவினை. முதலில் சர்வதேச சமூகம் இனப்படுகொலையை ஒரு போர்க்குற்றம் என்று அழைப்பது வழக்கம்.
ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை சம உரிமையுடன் இணைக்கத் தவறினால், குறியீட்டு வார்த்தை போர்க்குற்றம் இனப்படுகொலையாக மாறும்.
இனப்படுகொலை என்றால், ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை நிம்மதியாக வாழ விடார்கள் . ஒடுக்குமுறையாளர்கள் ஒடுக்கப்பட்டவர்களை வெறுப்பவர்கள், ஒடுக்கப்பட்டவர்களைக் கொல்ல விரும்புபவர்கள். நாடுகள் பிரிவுவதற்கு இதுவே காரணம். இது உலகில் விதிமுறை, எடுத்துக்காட்டாக: போசீனியா, கொசோவோ, முன்னாள் யூகோலாவியா, தெற்கு சூடான் மற்றும் பல.
ஒடுக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் இறையாண்மையைக் கொடுத்து, அவர்கள் தங்களை தானே பாதுகாக்க, நாடு பிரிக்கப்படுவதற்கான காரணம்.
தனிநாடு என்பது ஊழல் நிறைந்த, முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளை அரசியலிலிருந்து அகற்றும். எந்தவொரு தனிநாடும் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலாகும்.
ஒன்றுபட்ட மற்றும் பிரிக்கப்படாத ஸ்ரீ லங்காவை சம்பந்தன் சுமந்திரன் விரும்புவதற்கான காரணம், இது சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான ஒரு பிரச்சனை என்பதை சர்வதேசத்திற்கு காத்திடுவதற்கு. வேறு விதத்தில் கூறுவதானால், தமிழர்களின் விஷயங்களில் சர்வதேசத தலையீடு தேவையில்லை என்று சம்பந்தன் சுமந்திரன் வெளிப்படையாக சொல்வதாகும் .
எந்தவொரு பிரிவினையும் ஊழல் நிறைந்த, முதுகெலும்பு இல்லாத அரசியல்வாதிகளை அகற்றும். எந்தவொரு பிரிவினையும் தற்போதைய அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலாகும்.
ஒன்றுபட்ட பிளவுபடாத இலங்கையில் வாழ தமிழர்கள் விரும்புவதாக இந்த தமிழர்கள் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினரருக்கு சொன்னார்கள். மேலும் இந்த ஊழல் நிறைந்த தமிழர்கள் 13 வது திருத்தத்திற்குப் பிறகு தமிழர்கள் தனிநாடடை கைவிட்டதாக இங்கிலாந்து எம்.பி. க்கு கூறினார்கள்.
சம்பந்தன் தனது அரசாங்க கொழும்பு -7 வீட் டை இறக்கும் வரை வைத்திருக்க சிங்களத்திடம் கெஞ்சுகிறார். அவர் எதையும், கொழும்பு -7 வீடடுக்காக கைவிட தயாராக இருக்கிறார். அவர் தமிழர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. அவர் 2009 முதல் இதைக் எமக்கு காட்டிக்கொண்டிருக்கிறார்.
சம்பந்தன் ஒரு மலிவான சக மனிதர். அவருக்கு எந்த சுய மரியாதையும் இல்லை. சிங்கள கொழும்பு -7 வீடடுக்காக இன்னும் பிச்சை எடுக்கிறார்.
தமிழர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதைக் கண்டறிய ஒரே வழி வாக்கெடுப்பு.
இந்த ஊழல் நிறைந்த, திருடர்கள் , மரியாதையற்ற மனித மோசடிகள், தமிழர்களுக்கு எதிராக எதையும் சொல்ல முடியாது.
Related Story: https://www.tamilwin.com/politics/01/238982
Previous
Obituary: Parameshwary Pararajasingam, Former Hindu Ladies’ Teacher (in Canada)
Next
ஸ்ரீதரன், லீலவதி , கலராஞ்சனி, ஜெனிவா போகாமல் வீட்டிலேயே இருக்கவும், ஜெனிவா சென்று தமிழரை விற்கவேண்டாம்
Be the first to comment
Leave a Reply Cancel reply
Your email address will not be published.
Comment
Name
Email
Website
கருத்தோவியம்
காணொளி
ஆசிரியர் தலையங்கம்
தமிழசுக்கட்சி தனது பெயரை மாற்றுகிறது
February 4, 2019 0
ITJP Reveals Fresh Info On Shavendra Silva’s Involvement In War Crimes And Gross Human Rights Violations
January 30, 2019 0
What is Federalism? சமஷ்டி என்றால் என்ன?
August 14, 2018 0
நோவா (Noah) அனுப்பிய காகம் போலானார் சம்பந்தன்.
October 11, 2017 0
ஏன் இந்த தமிழ் எம். பி க்கள் ஊமையாக இருக்கின்றார்கள்.
September 18, 2017 0
அண்மைய தலைப்புக்கள்
சுமந்திரனின் வெளிநாட்டு பயணம் தமிழருக்கு எதிரானது: தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம். November 30, 2021 |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் விவகாரம்: வீட்டுக்குள்' நடந்த விறுவிறு இழுபறி!! -ப. தெய்வீகன்(கட்டுரை) | ilakkiyainfo
Facebook Twitter Instagram
கட்டுரைகள்
தொடர் கட்டுரைகள்
கவிதைகள்
கலைகள்
வீடியோ
புகைப்பட தொகுப்பு
தொழில்நுட்பம்
வேலைவாய்ப்பு
கல்வி
Facebook Twitter Instagram
Monday, November 29
முகப்பு
இந்தியா
உலகம்
வெளிநாட்டு
சினிமா
விளையாட்டு
ஆரோக்கியம்
சுற்றுலா
வினோதம்
அரசியல்
Home»பிரதான செய்திகள்»தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் விவகாரம்: வீட்டுக்குள்’ நடந்த விறுவிறு இழுபறி!! -ப. தெய்வீகன்(கட்டுரை)
பிரதான செய்திகள்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசியப் பட்டியல் விவகாரம்: வீட்டுக்குள்’ நடந்த விறுவிறு இழுபறி!! -ப. தெய்வீகன்(கட்டுரை)
By admin August 25, 2015 No Comments6 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் ஏகபோக வெற்றியைத் தனதாக்கிக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, கடந்த ஏழு நாட்களாக இழுபறிப்பட்ட தேசியப் பட்டியல் ஊடான நாடாளுமன்ற ஆசன சிக்கல் ஒருவாறு முடிவுக்கு வந்திருக்கிறது.
பத்து, பதினொரு தேசியப் பட்டியல் ஆசனங்களை வெற்றிகொண்ட கட்சிகளே தமது உறுப்பினர்களின் பெயர்களை இறுதி செய்து, சட்டு புட்டென்று காரியத்தை முடித்துக்கொண்ட நிலையில், இரண்டே இரண்டு ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்று முடிவு செய்வதற்கு தமிழ்க் கூட்டமைப்புக்கு தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னர் ஏழு நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஆனால், இந்த இழுபறிகள் இன்னமும் முடிவடையவில்லை என்று புதிய குண்டொன்றை தூக்கி போடுகிறார்கள் கூட்டமைப்புக்கு நெருக்கமானவர்கள்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அதன் சார்பாக இம்முறை தேர்தலில் குதித்த பலர் மூத்த உறுப்பினர்கள். அவர்களில் பலர் அரசியலில் நெடுங்காலம் அனுபவம் மிக்கவர்கள்.
சிலர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள். இன்னும் பலர் கட்சிக்குப் பல காலமாக விசுவாசமாகச் செயற்பட்டவர்கள். முக்கியமாகக் கூறப்போனால், இவர்களில் பலர் பிரசார போட்டி மிக்க இம்முறை தேர்தல் களத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக கூட்டமைப்பை மக்களுக்;கு நெருக்கமாக கொண்டுசெல்வதற்கு பல்வேறு வகையில் தொழிற்பட்டவர்கள்.
இவர்கள் எல்லோரையும்விட, இம்முறை தேசியப் பட்டியல் விடயத்தில் மிகமுக்கிய தலையிடியாக அமைந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள்தான். இவர்கள்தான், கூட்டமைப்பின் இந்த காலம் தாழ்த்திய முடிவுக்குக் காரணம் என்றும் தெரியவருகிறது.
தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்கள் தேசியப் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தது போன்ற தடாலடி அறிவிப்பை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தேர்தலுக்கு முன்னர் விடுக்க விரும்பவில்லை. கூட்டமைப்பைப் பொறுத்தவரை அது யதார்த்தபூர்வ அணுகுமுறையாகவும் இருக்காது.
ஏனெனில், பெரிய கட்சிகளுக்குக் கிடைக்கப்போகும் தேசியப் பட்டியல் ஆசனங்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் அங்கு பங்கு பிரிக்கும் போட்டிகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அரிது.
ஆனால், கூட்டமைப்பைப் பொறுத்தவரை, அது தனக்கு தேசியப் பட்டியல் ஊடாக ஒரே ஓர் ஆசனம்தான் கிடைக்கும் என தேர்தலுக்கு முன் எதிர்பார்த்திருந்தது.
அந்த இடத்துக்கு யாழ். பல்கலைக்கழ பேராசிரியர் சிற்றம்பலம் அவர்களை நியமிப்பது என்ற கொள்கையளவிலான முடிவுடன் காத்திருந்தது. (ஆனால், தேர்தலின் பின்னரான முடிவுகள் இவ்வாறு குழுhயடிச் சண்டையாக மாறும் என்றும் கூட்டமைப்பு தலைமைக்கு தெரியாமலும் இல்லை)
இருப்பினும், வடக்கு – கிழக்கில் பதினான்கு ஆசனங்களை வென்று இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்த கையோடு, அதற்கான போட்டி என்பது கூட்டமைப்புக்குள் இன்னொரு தேர்தல் வைக்கவேண்டிய நிலைக்குத் தள்ளியதுபோன்ற திரிசங்கு நிலையை கூட்டமைப்பின் தலைமைக்கு ஏற்படுத்தியது.
ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை வெளியிலிருந்து எதிர்ப்புக்களைச் சந்தித்தும் சமாளித்துக்கொண்டுமிருந்த கூட்டமைப்பின் தலைமை 18ஆம் திகதிக்குப் பின்னர் ‘உள்வீட்டு’ பங்கு பிரிப்புக்கு பஞ்சாயத்து பார்க்கவேண்டிய நிலைக்கு ஆளானது.
கூட்டமைப்பின் தலைமை இந்த ஆசன பங்கீட்டில் கைக்கொள்ள வேண்டிய நியாயமான அணுகுமுறைகள் குறித்து பல்வேறு தீர்வு திட்டங்கள் முன்வைக்கப்பட்டன.
இவற்றில் பல தனிநபர் தீர்வு திட்டங்களாகவும், இன்னும்பல கூட்டமைப்பு என்று முழு கட்சி நலன் சார்ந்ததாகவும், இன்னும் சில கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளின் கோரிக்கைகளாகவும் காணப்பட்டன.
சுரேஷ் பிரேமசந்திரன்,
கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியுற்ற மூத்த உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன், அருந்தவபாலன், சிறிகாந்தா, அரியநேந்திரன், துரைரட்ணசிங்கம், விநோனோதரலிங்கம் ஆகியோரின் பெயர்களும் சந்திரகுமார் சந்திரநேருவின் பெயரும் இந்தத் தேசியப் பட்டியல் ஆசனப் பங்கீட்டில் பரிசீலிக்கப்படவேண்டும் என்று பரவலான கோரிக்கை ஒன்று முதலில் முன்வைக்கப்பட்டது.
இந்த இடத்தில், வழமைபோலவே வடக்குக்கு ஒன்று கிழக்குக்கு ஒன்று சமமாக பகிரப்படவேண்டும் என்ற பிரதேச சமத்துவத்தை வலியுறுத்திய கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள்- தலைவர் சம்பந்தனுக்கு தங்கள் தரப்பு மதியுரைஞர் வேலைகளை அவ்வப்போது நடத்திக்கொண்டிருந்தனர்.
துரைரட்ணசிங்கம்
கிழக்கைப் பொறுத்தவரை திருகோணமலையில் நடைபெற்ற எல்லா தேர்தல் பிரசாரக் கூட்டங்களுக்கும் தலைவர் சம்பந்தன் அவர்கள் தன்னுடனேயே அழைத்துக்கொண்டு திரிந்தவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் அவர்கள். திருகோணமலையில் கூட்டமைப்பு சார்பில் இளம் உறுப்பினரான யதீந்திரா இம்முறை தேர்தலில் போட்டியிட்டபோதும், சம்பந்தரின் பிரசார மேடைகளில் துரைரட்ணசிங்கம் மாத்திரமே காட்சியளித்தார்.
திருகோணமலையில் இரண்டாவது ஆசனத்தை இலக்கு வைத்து அதை துரைரட்ணசிங்கத்துக்கு பெற்றுக்கொடுப்பதற்காக தலைவர் சம்பந்தர் அவர்கள் வெளிப்படையாகவே மேற்கொண்ட இந்த பிரசாரம், தேர்தல் முடிவுகளில் அவருக்கு சாதகமாக முடிவுகளை கொடுக்காததால் –
துரைரட்ணசிங்கத்துக்கு கூட்டமைப்பின் தலைமைத்துவம் எப்படியாவது தேசியப் பட்டியலின் ஊடாக ஆசனத்தை வழங்கிவிடும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கு இருந்தது.
அத்துடன், தலைவர் சம்பந்தன் அவர்கள் தேர்தல் முடிந்த கையோடு ‘2016ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு கொழும்பிலும் வெளிநாடுகளிலும் மிகவும் மும்முராக பணியாற்றவேண்டியிருக்கும்’ என்ற காரணத்தினால் –
அவரது தொகுதியிலிருந்து தற்போது மிஞ்சியிருக்கும் ஓர் ஆசனத்தையும் பறிகொடுத்துவிடாது மக்களுக்குப் பணியாற்றுவதற்கு ஒருவர் தேவை என்ற அடிப்படையில் துரைரட்ணசிங்கம் அவர்களை உறுப்பினராக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டு, அது ஓரளவுக்கு கட்சி மட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த ஆசனப் பங்கீடு விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், கூட்டமைப்பின் தலைமையைச் சந்தித்து யோசனை கூறுகையில் –
இம்முறை தேர்தலில் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட 14 உறுப்பினர்களில் 6 உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் தெரிவாகியுள்ளதால், தேசியப் பட்டியல் ஊடான இரண்டு ஆசனங்களில் ஒன்றை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய மூன்று கட்சிகளின் பொது உடன்பாட்டின் கீழ் தெரிவுசெய்யப்படும் ஒருவருக்கு வழங்கவேண்டும் என்றும், மற்றையதை தமிழரசுக் கட்சி தான் விரும்பியவருக்கு வழங்கலாம் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த யோசனையை கொள்கையளவில் கூட்டமைப்பின் தலைமையும் ஏற்றுக்கொண்டது.
அதேவேளை, கூட்டமைப்பில் இம்முறை பெண் பிரதிநிதித்துவம் இல்லாத வெற்றிடம் குறித்து பல்வேறு தரப்பில் சிலாகிக்கப்பட்டது.
சாந்தி சிறீஸ்கந்தராஜா
வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட சாந்தி சிறீஸ்கந்தராஜா (18,081) அவர்கள் வெற்றிபெற்றதாக தேர்தலுக்கு அடுத்தநாள் முதலில் செய்திகள் வெளியானபோதும் வாக்குகளை மீள எண்ணுமாறு விடுத்த கோரிக்கையின் பின்னர் அதேதொகுதியிலிருந்து போட்டியிட்ட மருத்துவர் சிவமோகன் (18,412) அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
ஆகவே, சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களைத் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு அனுப்புவதன் மூலம் கூட்டமைப்பின் பெண் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றப்படவேண்டும் என்று தேர்தல் பெறுபேறுகள் வெளியான நாள் முதல் கூட்டமைப்பின் தலைமையிடம் தொடர் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுவந்தன.
அவ்வாறான ஒரு முடிவினை மேற்கொண்டால், வடக்கிலிருந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவர் கூட்டமைப்பின தலைமைக்கு தலையிடியாகக்கூடும் என்று கருதப்பட்டது.
ஒருவர் கூட்டமைப்பின் முன்னாள் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன், மற்றையவர் இம்முறை தேர்தலில் – இரண்டாவது தடவையாக – விளிம்புநிலை தோல்வியை சந்தித்த அருந்தவபாலன்.
இவர்கள் இருவரது ஆதரவாளர்களும் தத்தமது தலைவர்களை தேசியப் பட்டியலில் சேர்த்துக்கொள்ளவேண்டும் என்று அமைப்பு ரீதியிலான அறிக்கைகளை விடுத்ததிலிருந்து ஆலயங்களில் சிறப்பு பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளுமளவுக்கு கூட்டமைப்பின் தலைமைக்கு தொடர் அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருந்தனர்.
இவர்கள் இருவர்களுக்கும் இடையிலான தெரிவு விடயத்தில் – கூட்டமைப்பின் தலைமையைப் பொறுத்தவரை – சுரேஷ் பிரேமசந்திரனை மீண்டும் உறுப்பினராக கொண்டுவருவதில் பெரிய திருப்தியிருந்ததில்லை என்கின்றன கூட்டமைப்புக்கு நெருங்கிய வட்டாரங்கள்.
அதற்கு பல காரணங்களை அடுக்கிக்கொண்டுபோனவர்களிடம் விரிவாக பேசியதில் சில விடயங்களைத் தெளிவாக விளங்கமுடிந்தது.
மென் வலுவூடான அரசியல் உபாயத்தைத் தனது தீர்வுக்கான செல்நெறியாக வழிமொழிந்துகொண்டிருக்கும் கூட்டமைப்புக்கு சுரேஷ் பிரேமச்சந்திரனின் கடந்த கால அரசியல் நடவடிக்கைகள் கடும் அதிருப்தியைக் கொடுத்திருந்தது என்று கூறப்படுகிறது.
போர்க்குற்ற விசாரணை உட்பட பல விடயங்களில் – இவை தொடர்பில் நேரடியாக கூட்டமைப்பின் சார்பில் இயங்கிவந்த – சுமந்திரன் அவர்களுக்கு எதிரான கருத்துக்களை சுரேஷ் பிரேமசந்திரன் ஊடகங்களுக்கு வழங்கிக்கொண்டு வந்தார் போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
கூட்டமைப்பில் சுரேஷின் வகிபாகத்தைத் தமிழர்கள் தொடர்பான முடிவுகளில் செல்வாக்கு செலுத்தும் ‘வெளித்தரப்புக்கள்’கூட அதிகம் விரும்பவில்லை என்றும் கூட்டமைப்பின் தலைமை எல்லாவற்றையும் கூட்டிக்கழித்து பார்த்துவிட்டு, பிடிகொடுக்காமல் பதில் சொல்லக்கூடிய ஒரு வசனத்தின் ஊடாக சுரேஷை தேசியப் பட்டியல் போட்டியிலிருந்து வெளியேற்றிவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதாவது, யாழ். மாவட்டத்தில் போட்டியிட்ட கூட்டமைப்பின் வேட்பாளர்களில் – விருப்புவாக்கு அடிப்படையில் – ஏழாவது இடத்திலிருப்பவர் சுரேஷ் பிரேமசந்திரன் (29,906) அவருக்கு முதல் ஆறாவது இடத்திலிருப்பவர் அருந்தவபாலன் (42,925) ஆகவே, இந்த இருவரும் போட்டியிலிருக்கும்போது சுரேஷுக்கு ஆசனத்தை வழங்குவது முறையல்ல என மிக சாதுரியமாக சுரேஷ் விவகாரத்தை காய்வெட்டியது கூட்டமைப்பின் தலைமை.
சுரேஷ் விடயத்தில் புளொட் தலைவர் சித்தார்த்தன் மற்றும் டெலோவின் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தமது சாதகமான அழுத்தங்களை வழங்கியபோதும், எந்த வழியிலும் சாதகமாக விவாதிக்கமுடியாத படுதோல்வியை சுரேஷ் இம்முறை தேர்தலில் சந்தித்த காரணத்தினால், அது பலனளிக்கவில்லை என்கின்றன கூட்டமைப்பு வட்டாரங்கள்.
அப்படியானால், சாந்தி சிறிஸ்கந்தராஜாவையும் அருந்தவபாலன் அவர்களையும் வட பகுதியிலிருந்து எவ்வாறு தேசியப் பட்டியலின் ஊடாக அனுப்புவது?
சம்பந்தன் ஏற்கனவே முடிவு செய்த துரைரட்ணசிங்கத்தின் கதி என்ன?
போன்ற பிரச்சினைகள் எழுந்தபோதுதான் கூட்டமைப்பின் தலைமை சுழற்சிமுறையிலான பதவிக்காலம் என்ற தீர்வுத்திட்டத்தை கையிலெடுத்தது.
அதாவது, தேசியப் பட்டியல் ஊடான ஓர் ஆசனத்தை வடக்கின் ஊடாக சாந்தி சிறிஸ்கந்தராஜாவும் அருந்தவபாலனும் சுழற்சிமுறையில் பங்கிட்டுக்கொள்வார்கள் என்ற முடிவு ஏகமனதாக எட்டப்பட்டது.
அப்படியானால், கிழக்கில் துரைரட்ணசிங்கத்துடன் பதவியைப் பங்கிடப்போகும் நபர் யார்?
அந்த இழுபறி தொடர்ந்து நிலவுவதாகவே கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இம்முறை தேர்தலில் மட்டக்களப்பில் ஓரளவுக்கு ஆரோக்கியமாக ஆசனங்களை பெற்றுள்ள தமிழ்க் கூட்டமைப்பு- அம்பாறையில் தனி ஓர் ஆசனத்தை மாத்திரம் பெற்றிருப்பதால் தமிழர் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தும்வகையில் தேசியப் பட்டியல் ஊடாக அங்கு ஓர் ஆசனத்தை வழங்கி எதிர்கால நடவடிக்கைகளை ஸ்திரப்படுத்துவது குறித்து சிந்திப்பதாக தெரியவருகிறது.
அம்பாறையில் கடந்த தடவையும் ஓர் ஆசனம்தான் கூட்டமைப்புக்கு கிடைத்திருந்தாலும், அங்கு துணிச்சலுடன் செயற்படவல்ல டெலோ செயலாளர் நாயகம் ஹென்றி மகேந்திரனின் நடவடிக்கைகளுக்கு கௌரவம் அளிக்கும் விதத்தில் அவருக்கு அந்த சுழற்சிமுறை ஆசனத்தை வழங்குவதற்கு கூட்டமைப்பு யோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவ்வாறு வழங்கினால், அது கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சிக்கு ஆசனம் வழங்கியதாகவும் இருக்கும் என கூட்டமைப்பு தலைமை சிந்திப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்க் கூட்டமைப்பில் கடந்த ஒரு வாரமாக நடைபெறும் இந்தப் பதவி இழுபறிகளை பார்த்த பல நோக்கர்கள், இவர்கள் மக்களுக்குச் சேவை செய்வதற்காக தேர்தலில் போட்டியிட்டார்களா அல்லது பதவிகளை இலக்கு வைத்து தேர்தலில் குதித்தார்களா என்று கேள்வியெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
மொத்தத்தில், தேசியப் பட்டியலின் ஊடாக நாடாளுமன்றம் செல்லப்போகும் அனைவரும் கூட்டமைப்பின் பட்டியலில் – பச்சையாக சொல்லப்போனால் – மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள்தான்.
ஆனால், அடுத்த ஐந்து வருட பயணத்தில் தமக்கு சிக்கல் தராதவர்களை மட்டும் நாடாளுமன்றுக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்ற விடயத்தில் மிகவும் சாதுரியமாக காய்களை நகர்த்துகிறது கூட்டமைப்பின் தலைமைத்துவம்.
இப்போது கிட்டத்தட்ட, இந்தச் சிக்கல்களின் முடிவுப் புள்ளிக்கு வந்தாயிற்று. அடுத்தது என்ன?
காத்திருப்போம்… எதிர்பார்த்திருப்போம்…
Post Views: 481
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin
Related Posts
இந்தியா – இலங்கை உடன்படிக்கை ஏற்பட்டால் தாயகம் திரும்ப விரும்பும் அகதிகள் – நிபந்தனை என்ன?
November 27, 2021
உக்ரேனை இரசியா ஆக்கிரமிக்குமா?
November 26, 2021
“பிரபாகரன் தமிழ் தேசிய தலைவர்” என இலங்கை நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழ் எம்.பி – என்ன நடந்தது?
November 26, 2021
Leave A Reply Cancel Reply
Save my name, email, and website in this browser for the next time I comment.
August 2015
M
T
W
T
F
S
S
1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
31
« Jul Sep »
Advertisement
Latest News
07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
November 28, 2021
12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்
November 28, 2021
வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் – தீவிர விசாரணையில் பொலிஸார்.
November 28, 2021
நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு
November 28, 2021
பாலியல் துன்புறுத்தல்: தோழியை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த இளம் ஆண் தோழர்கள்
November 28, 2021
சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று: 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று!!!!
ஆப்கானிஸ்தானில் தாலிபனின் தேன் நிலவு முடிந்தது – இனி அதன் முன்னுள்ள சவால்கள் என்ன?
‘செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன?
முகப்பு
செய்திகள்
வீடியோ
நாட்காட்டி
Facebook 41.6K
Twitter 795
YouTube
Recent Posts
07 பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
12 வயது பாடசாலை மாணவி பாலியல் துஸ்பிரயோகம்
வடமராட்சி கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய இரண்டு சடலங்கள் – தீவிர விசாரணையில் பொலிஸார்.
நெடுந்தீவு கடற்கரையிலும் சடலம் மீட்பு
Recent Comments
Arya on “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”
arya on அரசியல் தீர்வு : மஹிந்த கருத்துக்கு சம்பந்தர் பதிலடி
david bill on “பாதுகாப்பு அமைச்சின் பொறுப்பற்ற செயல்”
Quick Links
முகப்பு
இந்தியா
உலகம்
வெளிநாட்டு
சினிமா
விளையாட்டு
ஆரோக்கியம்
சுற்றுலா
வினோதம்
அரசியல்
Quick Links
கட்டுரைகள்
தொடர் கட்டுரைகள்
கவிதைகள்
கலைகள்
வீடியோ
புகைப்பட தொகுப்பு
தொழில்நுட்பம்
வேலைவாய்ப்பு
கல்வி
Quick Links
ஆரோக்கியம்
அந்தரங்கம்
ஆன்மீகம்
சுற்றுலா
சிறப்பு செய்திகள்
வினோதம்
BRAKING NEWS
சுவிஸ் நாட்டில் தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் கொரனா தொற்று: 24 மணி நேரத்தில் 8,585 பேருக்கு கொரோனா தொற்று!!!! |
ஆசியா முழுவதும் ஒரே கரன்சி அமெரிக்கா டாலரை உலகம் முழுவதும் பயன் படுத்தி வருவதால் தான், அமெரிக்காவை அனைத்து நாடுகளும் சார்ந்திருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. டாலரின் மதிப்பு சரியும்போதுஅனைத்து நாடுகளிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுகிறது. ஆசியாவிலுள்ள ரஷ்ய, சீனா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்த� [மேலும்]
அறுபதுகோடி 2012-11-27 14:59:38
அறுபதுகோடி ஊழல் ஒழிப்பு போராட்டம் ஆகட்டும், விலைவாசி ஏற்றதை எதிர்க்கும் போராட்டம் ஆகட்டும் வேறு எந்த போராட்டம் ஆகட்டும் இந்தியாவில் தோல்வி அடைய முக்கியக்காரணம் நம்மில் ஒற்றுமை இல்லாததே. நம்மில் அனேகர் விரும்பும் கட்சி ஆட்சிக்கு வரவேண்டாமா. ஊழலை இந்தியாவைவிட்டு முற்றிலும் ஒழிக்க வேண்டாமா. விலைவாசி ஏற்றதை கட்டுப்படுத� [மேலும்]
15 வயதில் பட்டம் 2012-11-04 22:25:45
15 வயதில் பட்டம் இந்தியாவில் சுமார் 60 ஆண்டு காலத்திற்கு முன் உள்ள கல்வி நடைமுறையே இப்பொழுதும் செயலாக்கப்பட்டு வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 65 ஆண்டுகளில் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது. அந்த காலத்தில் பள்ளிக்கு சென்றவர்களே மிகவும் குறைவாக காணப்பட்டனர். இன்றைய நவீன இந்தியாவில் நாடு முழுவதும் லட்சக்கணக்கில் பள்ளிக� [மேலும்]
15 வயதில் ஓட்டுரிமை 2012-11-04 21:56:19
15 வயதில் ஓட்டுரிமை பழைய காலங்களில் இந்தியர்களிடம் படிப்பறிவு குறைவு, எனவே சிந்தித்து செயல்படும் ஆற்றலும் குறைவாகவே காணப்பட்டது. தற்பொழுதுள்ள இளைஞர்களில் படிக்காதவர்களே இல்லை என்னும் நிலை நம் நாட்டில் உருவாக்கி வருகிறது. ஆகவே மனிதனின் சிந்தனை திறனும் வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும் பருவமடையும் வயது 18 � [மேலும்]
உலக இந்தியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் 2012-10-22 11:48:11
அன்புள்ள ஊடகங்களுக்கு கீழ் குறிப்பிடும் அறிக்கையை தங்களுடைய ஊடகங்களில் செய்தியாக வெளியிட்டு உதவும் படி விக்டரி கட்சி சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். உலக இந்தியர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் உலக இந்திய நண்பர்களே வணக்கம். நம் பாரத நாட்டில் எண்ணெய் வளம் (பெட்ரோல்) ம� [மேலும்]
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 |
எது மேலே சொல்லப்பட்டதோ அது விளையாட்டாகவே சொல்லப்பட்டது. எது விளையாட்டாக சொல்லப்பட்டதோ அதுவே மேலே இருக்கிறது. விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை எவன் விளையாட்டாக எடுக்கிறானோ அவன் வீண் டென்ஷன் அடையமாட்டான். எவன் வீண் டென்ஷன் அடைகிறானோ அவன் விளையாட்டாக மேலே சொல்லப்பட்டதை விளையாட்டாக எடுக்காதவன். ஹரி ஓம் தத் ஸத்
Home
About
Links – Tamil Blogs & Font Typing Help
ஏன் கில்லி?
பரிந்துரை
Archive
Posts Tagged ‘கலந்துரையாடல்’
Writer S Ramakrishnan at Tamiloviam.com Atcharam: Archives
June 15, 2012 Snapjudge 1 comment
Thanks: http://www.tamiloviam.com/site/?cat=904
மே, ஜூன் 2006: கடந்த ஒரு மாத காலமாக ஆஸ்திரேலியாவிற்கு பயணம்
அ. வரல் ஆற்றின் திட்டுகள்
ஆ. நள் எனும் சொல்
உலகசினிமா
நாள் : 12/30/2004 11:58:58 AM
கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக உலகசினிமா என்ற புத்தகத்தின் தயாரிப்பில் முழ்கியிருந்தேன். அப்பணி தினமும் காலை 9 மணி முதல் இரவு 2 வரை தொடர்ந்து நீண்டு கொண்டிருந்தது ஆகவே இணையத்தில் எழுதுவதற்கான சாத்தியம் குறைவாகிவிட்டது.
தமிழில் முதன் முறையாக விரிவான அளவில் உலகசினிமாவை அறிமுகப்படுத்தும் புத்தகமிது. இப்புத்தகத்திற்காக சினிமாமீது ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரோடு சேர்ந்து கொண்டு நான் கடந்த மூன்றாண்டு காலமாக உலகசினிமா பற்றிய கட்டுரைகள், பேட்டிகள் போன்ற பல்வேறு மொழிபெயர்ப்பு பணிகளிலும், மற்றும் தகவல்கள் சேகரிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருந்தேன். அதனை சென்னையில் நடைபெறும் இந்த ஆண்டு புத்தக சந்தைக்குக் கொண்டுவரும் முனைப்புடன் கடந்த இரண்டு மாதமாக புத்தகத் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன்.
இப்புத்தகத்தில் சினிமாவின் வரலாறு, உலகின் நூறு சிறந்த திரைப்படங்கள், 50 முக்கிய இயக்குனர்கள் பற்றிய விபரங்கள், 50 முக்கிய திரைக்கலைஞர்களின் பேட்டி மற்றும் உலகசினிமா குறித்த 35 கட்டுரைகள். குழந்தைகளுக்கான திரைப்படங்கள், டாகுமெண்டரி படங்கள், இந்திய சினிமாவின் வரலாறு, இந்திய சினிமாவின் முக்கிய 30 இயக்குனர்கள், திரைப்பட விழாக்கள் ,விருதுகள், சினிமா சந்தித்த பிரச்சனைகள், சினிமா குறித்த சிறந்த புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் உலகமெங்கும் உள்ள திரைப்பட கல்லூரிகள், ஆய்வு நிறுவனங்கள் பற்றிய தகவல் தொகுப்புகள் மற்றும் சினிமாவின் எதிர்காலம் குறித்த கட்டுரைகள் ஆகியவை 700 புகைப்படங்களுடன் இடம் பெற்றுள்ளன.
ராயல் டெம்மி அளவில் 750 பக்கம், கெட்டி அட்டையுடன் புத்தகம் வெளியாகிறது. விலை 500 ரூபாய். வெளியிடுபவர்கள், கனவுப்பட்டறை. 111 பிளாசா சென்டர், ஜி. என். செட்டி ரோடு. சென்னை 6. தொலை பேசி. 55515992.
இதன் வெளியீட்டு விழா சென்னையில் ஜனவரி 6 மாலை 5.30 மணிக்கு பிலிம் சேம்பர் அரங்கில் நடைபெறுகிறது. அதில் புத்தகத்தை இயக்குனர் மகேந்திரன் வெளியிட ஜெயகாந்தன் பெற்றுக் கொள்கிறார். தியோடர் பாஸ்கரன், மதன். வஸந்த் பாலாஜி சக்திவேல் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
லூயி கரோலின் ஆலீஸின் அற்புத உலகம்
என்ற குழந்தைகளுக்கான புத்தகத்தையும் மொழி பெயர்த்துள்ளேன். அது 37 சித்திரங்களுடன் கனவுப்பட்டறையால் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது. விலை 50 ரூபாய்.
நாள் : 11/11/2004 7:31:16 AM
நனையாத எனது மழைநாட்கள்.
கடந்த ஒருவாரகாலமாக சென்னையில் விடாது பெய்யும் மழையின் காரணமாக வீட்டிலே அடைந்திருந்தேன். நான் மழையின் ரசிகனில்லை. என்னால் கோடையின் அதிகபட்ச அக்னிநட்சத்திர வெயிலில் கூட மதியம் பனிரெண்டு மணிக்கு சூடாக டீகுடித்தபடி நடுரோட்டில் நின்று பேசிக்கொண்டிருக்க முடியும். ஆனால் மழையில் பத்து நிமிடங்கள் கூட நிற்கமுடியாது. பயணத்தில் எதிர்படும் மழை அல்லது பின்னிரவில் யாரும் பார்க்காமல் பெய்யும் மழை இந்த இரண்டிலும் கொஞ்சம் ஈடுபாடு உண்டு. மற்றபடி மழை தொடர்ந்து பெய்யும் போது நான் ஒரு குத்துச்செடியைப் போல ஒடுங்கிப்போகத் துவங்கிவிடுகிறேன்.
மழை நாட்களில் எந்த வேலை செய்வதற்கும் பிடிக்காது. கம்ப்யூட்டரை அணைத்து விட்டேன். மின்சாரத் தடை காரணமாக வீடு அடிக்கடி இருள்வதும் ஒளிர்வதுமாக வேறு இருந்தது. மழையால் நேரம் செல்வது மிக மெதுவாகி வீடு குகையைப் போலச் சிறியதாகிவிட்டது.
ஒரு வேளை பிறந்ததிலிருந்து வெயிலின் தீராத பிரகாசத்தை மட்டுமே அனுபவித்து வந்ததால் கூட மழையின் மீது விருப்பமில்லாமல் போயிருக்ககூடும். எங்களது ஊருக்கு அருகாமையில் கொப்புசித்தம்பட்டி என்றொரு கிராமம் இருக்கிறது. அந்த ஊரின் வெயில் மிகவும் பிரசித்தமானது. சித்திரையில் அங்கு வெறும்காலோடு எவரும் நடந்து போகமுடியாது. அதை நினைத்துத் தானோ என்னவோ அக்கிராமவாசிகள் தங்களது நிலபத்திரங்களில் சாட்சியாக வெயிலையும் சேர்த்திருக்கிறார்கள். ஆச்சரியமான விபரமது.
ஊரில் எவராவது கடன் வாங்கினாலோ, நிலவிற்பனை செய்தாலோ பத்திரத்தில் உள்ளபடி தான் நடப்பதாகவும் மீறினால் சித்திரை மாதவெயிலில் பகலில் வெறும்காலோடு ஊரை பத்துமுறை சுற்றிவர சம்மதிப்பதாகவும் எழுதி கையெழுத்துப் போடுவார்கள். பத்திரசாட்சிகளில் ஒன்றாக வெயில் இடம்பெறும் நிலப்பகுதியில் பிறந்தவன் என்பதால் இயல்பாகவே வெயிலுக்குப் பழகியிருக்கிறேன்.
ஆனால் சென்னையின் இந்த மழை நாட்களைக் கடந்து செல்வதற்கு தொடர்ந்து ஒரு வாரகாலமும் புத்தகங்கள் படிப்பதும், விருப்பமான திரைப்படங்களை பார்ப்பதுமாக செலவிட முடிவு செய்தேன். அதன்படி தினமும் பரிட்சைக்குப் படிப்பது போல காலை எட்டுமணிக்குத் துவங்கி மாலை ஆறுமணிவரை புத்தகமும் கையுமாக வீட்டில் ஆங்காங்கே இடம்மாறி வாசித்துக் கொண்டிருந்தேன். இரவு எட்டுமணிக்கு துவங்கி பதினோறுமணிவரை சினிமா பார்ப்பது என என்னை நானே புதுப்பித்துக்கொள்வதற்கு இந்த மழை நாட்கள் உபயோகமாகயிருந்தன.
மழை வெறித்த நேற்று படித்து முடித்திருந்த புத்தகங்கள் மேஜையில் குவிந்து கிடப்பதை பார்த்தேன். வியப்பாகதானிருந்தது. வாசித்த புத்தகங்களில் சில திரும்பப் படித்தவை. சில வாங்கிப் படிக்காமலே வைத்திருந்தவை. குறிப்பாக இந்த வாசிப்பில் எனக்குப் பிடித்த புத்தகங்கள் நான்கு.
1) உம்பர்தோ ஈகோவின் கட்டுரைத்தொகுதியான How to travel with a salmon & other essays.
2) Natsume Soseki என்ற ஜப்பானிய எழுத்தாளரின் நாவல் I am a cat .
3) நோபல் பரிசு பெற்ற தென்னாப்பரிக்க நாவலாசிரியரான J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg.
4) தேயிலை எப்படி உலகம் முழுவதும் பரவியது என்பதைப் பற்றி Jason Goodwin எழுதிய பயணக் கட்டுரையான The Gunpowder Gardens.
இதைத்தவிர விடியல் பதிப்பகம் வெளியிட்டுள்ள லியோனார்ட் பெல்டியரின் சூரியனைத் தொடரும் காற்று என்ற சிறைவாழ்க்கை அனுபவங்களை பற்றிய புத்தகம், கங்கைப்பருந்தின் சிறகுகள் என்ற வங்காள நாவல், சங்ககால வரலாற்று ஆய்வுகள், பண்டைத் தமிழர் போர்நெறி, ஆ. இரா. வெங்கடாசலபதியின் முச்சந்தி இலக்கியம், புரிசை கண்ணப்ப தம்பிரான் பற்றிய நினைவுத் தொகுப்பு. லு¡சுன் கதைகள். சிங்கிஸ் ஐத்மேத்தாவின் ஐமீலா, மற்றும் பெரிய எழுத்து அபிமன்னன் சுந்தரிமாலை.
கடந்த வாரத்தில் பார்த்த படங்கள்
1) ஸ்பீல்பெர்க்கின் TERMINAL
2) ஐப்பானிய இயக்குனரான NAGISHA OSHIMA வின் IN THE REALM OF PASSION.
3) பிரேசில் இயக்குனரான KARIM AINOUZ இயக்கிய MADAME SATA.
4) கொரிய இயக்குனரான IM KWON TAEK இயக்கிய கான்ஸ் திரைப்படவிழாவில் சிறந்த திரைப்பட விருது பெற்ற. PAINTED FIRE.
5) சீன இயக்குனரான TIAN MING WU இயக்கி பல உலகப் படவிழாக்களில் கலந்து கொண்ட .THE KING OF MASKS.-
6) மம்முட்டி நடித்த காழ்சா என்ற மலையாளப்படம்
7) ராகேஷ் சர்மாவின் குஜராத் கலவரம் பற்றிய டாகுமெண்டரியான THE FINAL SOLUTION
( புத்தகங்களைப் போலவே என்னிடம் நு¡ற்றுக்கும் மேற்பட்ட சிறந்த திரைப்படங்களின் சேமிப்பு ஒன்றுமுள்ளது. பெரும்பாலும் நண்பர்கள் எனக்காகச் சேகரித்து தந்த டிவிடிக்கள் )
மழை வெறித்த பிறகும் மனதில் நினைவுகளாக சொட்டிக் கொண்டேயிருக்கும் இரண்டு திரைப்படங்களையும் J.M. Coetzee யின் நாவலை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
திரைப்படவிழாக்களில் ஈரானிய சினிமாக்களுக்கு இருந்த வரவேற்பும் நெகிழ்வும் தற்போது கொரிய திரைப்படங்களை நோக்கி திரும்பியிருக்கிறது. சமீபத்திய கொரியg; படங்களில் பத்திற்கும் மேலாக பார்த்திருக்கிறேன். மென்மையான காதல் கதைகளில் துவங்கி சாகசf; கதைகள் வரை தங்களுக்கென்று தனித்துவத்தை கொண்டுள்ளவையாக கொரியப்படங்கள் வளர்ந்துள்ளன. குறிப்பாக 2002ம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழாவில் விருதுபெற்ற PAINTED FIRE. திரைப்படம். சமீபத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படங்களில் ஒன்று.
பதினெட்டாம் நு¡ற்றாண்டைச் சேர்ந்த கொரிய ஒவியரான ஒவானின் நிஜ வாழ்வை விவரிக்கும் இத்திரைப்படம் ஒவியர்களின் உலகத்தையும் அதன் தேடுதலையும் துல்லியமாக சித்திரித்துள்ளது.. ஒவான் எனும் சித்திரக்காரனின் வாழ்க்கை தெருவில் பிச்சைக்காரர்களோடு வாழ்வதில் துவங்குகிறது. சாலையோரத்தில் உள்ள பிச்சைக்காரனை ஒவான் கரியால் வரைந்த சித்திரம், நகரின் முக்கிய ஒவியர் ஒருவரால் கவனிக்கபடுகிறது.அவர் ஒவானைத் தனது செலவிலே ஒவியம் கற்றுக்கொள்ள ஒரு மாஸ்டரிடம் அனுப்புகிறார். ஒவியத்தின் நுட்பங்களை கற்றுக்கொள்ள துவங்கும் போது ஒவியத்திற்கு பின்புலமாக உள்ள மெய்த்தேடல் பற்றியும், ஆழ்ந்த தத்துவ ஈடுபாடு பற்றியும் கற்றுக்கொள்கிறான்.
வாலிபவயது அவனை குடியிலும் பெண்களின் மீதான வேட்கையிலும் ஆழந்து போகச் செய்கிறது. கொரியாவின் முக்கிய ஒவியனாக வளரும் ஒவான் தனது சுபாவத்தின் காரணமாகவும் கலையின் மீதுள்ள தனது விடாத தேடுதலின் காரணமாகவும் மற்றவர்களால் கடுமையாக விமர்சிக்கபடுகிறார். ஒவியங்களுக்காக இயற்கையை ஆழ்ந்து கவனிக்க துவங்கிய ஒவான் ஒரு நேரத்தில் அதன் வியப்பில் தன்னைப் பறிகொடுத்துவிட்டு ஒவியனாக இல்லாமல் துறவியை போல தேடித்திரியத் துவங்குகிறான். அவனது புகழ் கொரியா முழுவதும் பரவுகிறது. அவனோ பானை செய்பவர்களுடன் சேர்ந்து கொண்டு மண்பானையில் சித்திரம் வரைந்து தந்தபடி யாரும் அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான். முடிவில் பனிமலையின் தொலைவில் சென்று மறைந்துவிடுகிறான். இப்போதும் அவர் துறவியாக மலைமீது வாழ்வதாக ஒரு ஜதீகம் மட்டும் நிலவி வருகிறது.
தார்கோவெஸ்கியின் ஆந்த்ரே ரூபலாவ் திரைப்படத்தை பார்த்தபோது ஏற்பட்ட அனுபவத்திற்கு இணையானது இத்திரைப்படம். தார்கோவெஸ்கியும் ருஷ்ய ஒவியரான ஆந்த்ரே ரூபலாவின் வாழ்க்கையை, மனவேதனைகளையே படமாக்கியிருப்பார். அத்திரைப்படம் ஒளியால் எழுதப்பட்ட ஒவியங்களின் தொகுப்பு போலவேயிருக்கும்.
கொரியத் திரைப்படத்திலும் காட்சிகள் ஒவியங்களை போலவே படமாக்கபட்டுள்ளன. குறிப்பாக வேனிற்காட்சிகளும், மழைக்காலத்தின் பின்னால் நிலப்பரப்பில் தோன்றும் நிறமாற்றங்களும், ஆகாசத்தில் குருவிக்கூட்டங்கள் நெருநெருவென ஆயிரக்கணக்கில் பறப்பதும் கண்களை அகலவிடாமல் நம்மை பார்த்துக் கொண்டேயிருக்க வைக்கின்றன. இந்த திரைப்படத்தில் இன்னொரு சிறப்பம்சம் அதன் இசை. கொரியாவின் பராம்பரிய காற்றுவாத்தியங்களை பெரிதும் பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த இசைக்கருவிகள் கூட நு¡ற்றாண்டு பழமையானவைகளே.
‘**
நீண்ட நாட்களுக்குப் பிறகு மலையாளத்தில் வெளிவந்துள்ள சிறந்தபடம் என்று காழ்சாவைக் கூறலாம். மம்முட்டி ஊர்ஊராகச் சென்று திரைப்படங்களை திரையிட்டு காட்டும் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார். கேரளாவில் மக்களுக்கான சினிமா இயக்கமாக ஜான் ஆபிரகாமால் துவங்கபட்ட ஒடேசா இயக்கத்தவர்கள் இது போல கிராமம் கிராமமாக சென்று பதேர்பாஞ்சாலியும் பேட்டில் ஷிப் பொடோம்கினும் என உலகின் சிறந்த படங்களை திரையிட்டு வருகிறார்கள்.
மம்முட்டியும் அது போல குட்டநாடு பகுதியின் கிராமம் ஒன்றிற்கு ருஷ்யத் திரைப்படம் ஒன்றை திரையிடுவதற்கு கொண்டு செல்கிறார். காயலில் பயணம் செய்யும் போது படகில் ஒரு சிறுவனை சந்திக்கிறார். அவன் குஜராத் பூகம்பத்தில் உயிர்தப்பி வந்தவன். அந்த சிறுவன் மம்முட்டியை பின்தொடர்ந்தே வருகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் அவனைத் தன்னோடு தன் வீட்டிற்கு கூட்டிப் போய் தன் குடும்பத்தில் ஒருவனை போல வளர்க்க துவங்குகிறார் மம்முட்டி. குடும்பமும் அவனை ஏற்றுக் கொள்கிறது.
அச்சிறுவனை தனது தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறான் உள்ளுர் அரசியல்வாதி ஒருவன். மம்முட்டி அதை மறுக்கவே சிறுவன் திரும்பவும் குஜராத்திற்கு அனுப்பபட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கபட்டு சிறுவன் குடும்பத்திலிருந்து பிரிக்கப்படுகிறான். முடிவில் சிறுவனை குஜராத்தில் உள்ள கட்ச் பகுதிக்கு மம்முட்டியே கொண்டு செல்கிறார்.
பூகம்பத்தில் இடிந்த வீடுகளும் தெருக்களும் மனதை உலுக்குகின்றன. சிறுவன் உடைந்து மண்ணோடு மண்ணாகியிருக்கும் தனது வீட்டைக் கண்டுபிடிக்கிறான். ஆனால் அவனது குடும்பமே பூகம்பத்தில் இறந்து போயிருக்கிறது. முடிவில் அகதிகள் முகாமில் சிறுவன் சேர்க்கபடுகிறான். அவனை தத்து எடுத்துக் கொள்வதாக மம்முட்டி மண்டியிட்டு கேட்டும் அரசு அதிகாரிகளால் மறுத்து துரத்தப்படுகிறார். கையறுநிலையில் வேதனையோடு சிறுவனை பிரிந்து வருவதோடு படம் முடிவடைகிறது.
சிறுகதையைப் போல மிககச்சிதமாகவும் நேர்த்தியாகவும் படமாக்கபட்டுள்ளது.எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் பகட்டான நடிப்பும் வன்முறைகூச்சல்களும் கிடையாது. நடிகர்கள் தாங்கள் ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறோம் என்பது தெரியாமல் நிஜமனிதர்களாக நடமாடுகிறார்கள். சிறுவன் படம் முழுவதும் குஜராத்திமொழியிலே பேசுகிறான். பாஷை புரியாமலும் அவனது உணர்ச்சி நம்மை கலங்கசெய்கிறது.
*** இதுபோலவே J.M. Coetzee யின் நாவல் The Master of Peterburg. ருஷ்ய எழுத்தாளரான தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்க்கையில் நடைபெற்ற சிறுசம்பவத்தை பற்றியது. அவரது வளர்ப்பு பையன் ரகசிய அரசியல் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதை அறிந்து காவல்துறை அவனைக் கைது செய்து அழைத்துப் போய்விடுகிறது. அவனை மீட்பதற்கும் தன்னைப் போலவே அவனும் சிறைவாழ்விற்குப் பலியாகிவிடக்கூடாது என்ற ஏக்கத்தோடு அவனைப்பற்றிய விபரங்களை தேடியலையவதுமாக ஒரு அப்பாவிற்கும் மகனுக்குமான வெளிப்படுத்தபடாத அன்பை முன்வைக்கிறது. கோட்ஷியின் நாவல். (தமிழில் இந்நாவல் தற்போது சா. தேவதாஸால் மொழிபெயர்க்கபட்டு வருகிறது.).
உம்பர்த்தோ ஈகோவின் கட்டுரைத் தொடரைப் படித்து முடித்தபோது இத்தனை கேலியாகவும் எளிமையாகவும் எழுத முடிகிறதே என்று வியப்பாகயிருந்தது. அத்தோடு ஈகோ தமிழ் இலக்கிய சூழலில் பின்நவீனத்துவ அறிவுஜீவியாக மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு இங்குள்ள பலரும் மிரண்டு போயிருந்தது நினைவிற்கு வந்தது. சமகால எழுத்தாளர்களில் ஈகோ மிக முக்கியமானவர். விருப்பமும் நேரமுமிருந்தால் அவரது Name of the Rose நாவலை வாசித்துப் பாருங்கள். சினிமா ரசிகராகயிருந்தால் சீன்கானரி நடித்து இந்நாவல் படமாக வெளியாகியுள்ளது. படத்தைப் பாருங்கள் பிறகு புரியும் உம்பர்தோ ஈகோ எப்படிபட்டவர் என்று.
** சற்றே நீண்ட, கலவையான கட்டுரையாகிவிட்டது. கடந்த ஒரு மாதமாகவே பயணம், புத்தகவேலை என்று இழுத்துக் கொண்டு போகிறது வாழ்க்கை. தொடர்ந்து எழுதுவதற்கு விருப்பமிருந்தும் சந்தர்ப்பங்கள் குறைவாகயிருக்கின்றன. அதை ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறேன். இனி முன்போல தொடரும் என்று நம்புகிறேன்.
**
நாள் : 10/20/2004 12:35:32 PM, எஸ் ராமகிருஷ்ணன்
காணிக்காரர்கள்
கன்யாகுமரி மாவட்டத்தின் கீரிப்பாறை மலையில் உள்ள வெள்ளாம்பி பகுதியில் வசிக்கும் காணிக்காரர்கள் மரங்களின் மீது வீடு கட்டிக்கொண்டு குடியிருந்து வரும் ஆதிவாசிகளாகும். இயற்கை குறித்து ஏரளமான கதைகளும் பாடல்களும் இந்த ஆதிகுடிகளிடம் நிரம்பியிருக்கின்றன. எரிக் மில்லர் என்ற அமெரிக்க பல்கலைகழகத்தின் ஆய்வாளர் இவர்களை பற்றி ஆய்வுசெய்து வருகிறார். அவரது ஏற்பாட்டின் பேரில் நான்கு நாட்கள் காணிக்காரர்கள் சென்னைக்கு வருகை தந்து இங்குள்ள பள்ளிமாணவர்களுக்கு தங்கள் கதைகளை, பாடல்களை விளையாட்டை அறிமுகப்படுத்தினர். அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பார்வைக்கு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அண்ணாசாலையில் உள்ள புக்பாயிண்டில் ஞாயிற்றுகிழமை நடந்த இந்த நிகழ்ச்சிக்கு பத்துக்கும் குறைவான குழந்தைகளே வந்திருந்தார்கள். மொத்தப் பார்வையாளர்களும் சேர்ந்தால் இருபத்தைந்து பேர் இருக்க கூடும். காணிக்காரர்கள் மிகுந்த ஆச்சரியத்துடன் ஹைடெக் வசதிகளுடன் உள்ள ஹாலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் வந்திருந்த காணிகளில் பலரும் சர்வசாதாரணமாக மில்லரின் லேப்டாப்பை இயக்கியதும், அவரது டிஜிட்டில் காமிராவை உபயோகித்து படமெடுத்தது. பார்வையாளர்களுக்கு மிக விநோதமாக இருந்தது. முருகன் என்ற காணிக்கார இளைஞர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
காணிகளின் கலைக்குழு என்று அழைத்துக் கொள்ளும் பத்து குடும்பங்கள் இந்த நிகழ்ச்சிக்காக வந்திருந்தார்கள். அவர்களது கதையும் பாடல்களும் மலையாளம் கலந்தே காணப்படுகின்றன. கதைகளில் பெரும்பாலும் காட்டுவிலங்குகள் பற்றியும் காட்டிலிருக்கும் அரிய மூலிகைகள் பற்றியும் அதிகம் பேசுகிறார்கள். தமிழகத்தின் மற்ற இடங்களில் குழந்தைகள் விளையாடும் சில விளையாட்டுகள் அதன் மாற்றுவடிவங்களில் இங்கே காணமுடிகிறது. குறிப்பாக குலைகுலையாம் முந்திரிக்காய் நரியே நரியே சுற்றிவா. (நரியே என்பது நிறைய என்று பொருள் என்று காணிவிளக்கி சொன்னார்) கொள்ளையடிச்சவன் எங்கயிருக்கான் கூட்டத்திலிருப்பான் கண்டுபிடி என்ற விளையாட்டு பாடல்வழியே காட்டிலிருந்து என்ன பொருட்கள் கொள்ளையடிக்கபடுகின்றன என்ற விபரத்தை காணிகள் பாடுகிறார்கள்.
அது போலவே நண்டு ஊறுது நரியுறுது என விரல்களை பிடித்துவிளையாடும் விளையாட்டில் விரல்கள் ஒவ்வொன்றையும் ஒரு மரமாக கொள்கிறார்கள். ஒரு குரங்கு மரத்தில் தாவி குதிக்கிறது என்று சொல்லி ஒவ்வொரு விரலாக தாவுகிறார்கள். பிறகு மழைவந்துவிட்டது குகைக்குள் ஒடி ஒளிந்து கொள்ளவேண்டும் என்று சொல்லியபடியே தோள்பட்டை அடியில் கக்கத்தினுள் விரலை நுழைந்து கிச்சுகிச்சு காட்டுகிறார்கள். கக்கம் தான் குகை என்று சொல்வது சுவாரஸ்யமான கற்பனையாகயிருக்கிறது.
அது போலவே நான்கு சிறுமிகள் வட்டமாக உட்கார்ந்து கொண்டு தலைவாறுவதற்கு ( ஈருளி) பேன் சீப்பு வேண்டும் என்று கேட்கிறார்கள். அந்த விளையாட்டில் சீப்பை ஒளித்து வைத்துவிட்டு சிறுமிகள் தங்கள் கால்களை ஒன்றுசேர்த்தபடியே சுழன்றுவருவது வேடிக்கையாகயிருந்தது.ஞங்கிலி பிங்கிலி என்ற நகைச்சுவை பாடல் அர்த்தம் ஏதுவுமற்ற வார்த்தைகளால் நிரம்பியிருந்தது.
சென்னை நகர குழந்தைகள் மிகுந்த நாகரீகத்துடன் வாய்விட்டு சிரிப்பதற்கு கூட கூச்சத்துடன் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். காணிகளிடம் உள்ள கற்பனைதிறனை காணும் போது வியப்பாகயிருக்கிறது. அவர்கள் இயற்கையை காட்சிபடிமமாக மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களது பாடல்கள் அதற்கு சாட்சியாகயிருக்கின்றன. பகல் என்பது ஒரு மீன் இரவு என்பது ஒரு வீரன். பகல் போய்க்கொண்டேயிருக்கிறது. இரவு நம்மை சுற்றிலும் காவல்காக்கிறது என்று அவர்களின் பாடல் ஒன்று துவங்குகிறது. நவீனகவிதையின் விதைகள் இங்குதானிருக்கின்றன.
காணிகள் ஒடுக்கமான முகத்துடனும் குள்ளமான உடல்வாகையும் கொண்டிருக்கிறார்கள். அவர்களில் அதிகம் படித்தவர் தற்போது பள்ளியிறுதியாண்டை முடித்த இருவர் மட்டுமே. காட்டுவேலைகள் செய்து வாழ்ந்து வரும் அவர்கள் மரங்களில் பரண்வீடு அமைத்து தங்கிக் கொள்கிறார்கள். தற்போது அவர்களுக்கு என தனியான பள்ளியொன்று கட்டப்பட்டிருக்கிறதாம்.
பரபரப்பும் ஆர்ப்பட்டமும் மிக்க சென்னைநகரை காணிகளில் பலரும் முதல்முறையாக கண்டிருக்கிறார்கள். நகரில் கேட்கும் கூச்சலும் இடைவிடாத பேச்சும் தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவேயில்லை. எதற்காக இப்படி கத்துகிறார்கள் என்று கேட்கிறார்கள். சென்னையில் அவர்கள் மிக ஆசையாக காலணிகளை வாங்கியதை காட்டினார்கள். கிரிக்கெட் போட்டியின் பரபரப்பிலும் புதுப்படத்திற்கு டிக்கெட் வாங்க அலை மோதும் கூட்டத்திற்கும் இடையில் காணிகளின் குரல் வெளித்தெரியாமலே போய்விட்டது.
காணிக்காரர்கள் ஒவ்வொரும் தங்கள் பையில் சிறிய கூழாங்கல் ஒன்றை வைத்திருக்கிறார்கள்.ஊர் ஞாபகம் வந்தால் அதை கையில் வைத்து உருட்டிக் கொள்வோம் என்று சிரித்தபடி சொன்னாள் ஒரு காணிக்காரப்பெண்.
மரங்களில் வீடு கட்டிவாழ்வோம் என்று மலைவாசி சொன்னதை கேட்ட சென்னை சிறுமியொருத்தி நீங்கள் எல்லாம் பறவைகளா என்று கேட்டது தான் மாநகரின் நிஜம். காணிகளை பார்க்கும் போது இயல்பாகவே சில சந்தேகம் நம்மைபற்றி வருகிறது. சென்னையில் சூரியனை ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஏறிட்டு பார்ப்பவர்கள் எவ்வளவு சதவீதமிருப்பார்கள்? காகம் குருவி தவிர வேறு பறவைகளை குழந்தைகள் கண்டிருக்கிறார்களா? கதைகளையும் பாடல்களையும் நாம் மனதிலிருந்து மெல்ல அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தை தொலைக்காட்சிக்கு தந்துவிட்டோம். குழந்தைகள் தொலைக்காட்சியில் தான் கதைகேட்டுவளர்கிறார்கள். இன்றைக்கும் ஒரு ஆய்வுப்பொருளாக மட்டும் ஆதிவாசிகள் மிஞ்சியிருப்பது தான் நமது துரதிருஷ்டம். யோசித்துப் பார்க்கும் போது புரிகிறது காணிகளிடம் நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்று..
நாள் : 10/8/2004 2:57:25 PM
உலகமயம்
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அகில இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்தேன். தேசிய அளவிலான கருத்தரங்கம் இது. உலகமயமாக்கலும் அதன் சமூக, கலாச்சார விளைவுகளும் பற்றியது இக்கருத்தரங்கம். குறிப்பாக ஒவ்வொரு மொழியிலும் உலகமயமாக்கல் அங்குள்ள இலக்கியங்களில் எப்படி பிரதிபலிக்கபட்டிருக்கின்றது என்பதைக் குறித்து விவாதிப்பதற்காக சென்னையில் நடைபெற்றது.
அஸ்ஸாமி, பஞ்சாபி, ஒரியா, மராத்தி, குஜராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, தமிழ் , ஹிந்தி மொழிகளை சேர்ந்த 35 படைப்பாளர்கள் கலந்து கொண்டார்கள். எட்டு அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நேற்று மதியம் சிறுகதை அமர்வின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டேன். இன்று காலை நடைபெற்ற சமகால இலக்கியம் பற்றிய அமர்வில் உரையாற்றினேன். கருத்தரங்கில்
* பிரபஞ்சன்,
* ஜெயகாந்தன்,
* சா.கந்தசாமி
* அசோகமித்ரன்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
உலகமயமாக்கல் பற்றி தமிழில் அதிகம் நு¡ல்கள் வெளியாகவில்லை. குறிப்பாக படைப்பிலக்கியத்தில் அது குறித்த தீவிரமான பார்வைகள் உருவாகவில்லை. நான் உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் ஏற்படுத்திவரும் மாற்றங்கள் குறித்து எனது பார்வைகளை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தமிழ் மொழி கல்வபிப்புலங்கள் மற்றும் தொடர்பு சாதனத்திலிருந்து மெல்ல விலக்கபட்டு வருவதையும் தமிழின் மரபான இலக்கியங்கள் மற்றும் அறிவுசார் துறைகள் புறக்கணிக்கபடுவதையும் பற்றி எடுத்துரைத்தேன்.
பிரபஞ்சன் ந.பிச்சமூர்த்தி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது கவிதையில் உலகமயமாக்கல் பற்றி மிக விளக்கமாகச் சொன்னார். பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து தமிழில் உலகமயமாக்கலின் விளைவுகள் பற்றிய நு¡ல்களை வெளியிட்டுவருகிறார்கள். அது போலவே பிரளயன் வீதி நாடகங்கள் நடத்தி வருகிறார். உலகமயமாக்கலின் போது உலகம் ஒரே கிராமமாகிவிடும் என்கிறார்கள். அது நிஜம். ஆனால் கிராமங்கள் உயிரோடு இருக்குமா என்பது சந்தேகத்திற்குரியது தான்.
தெலுங்கிலும் ஹிந்தியிலும் தீவிரமாக இப்பிரச்சனைகள் விவாதிக்கபட்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக வந்த எழுத்தாளர்கள் வாசித்த கட்டுரைகளில் அதை உணர்ந்து கொள்ள முடிந்தது.
ஊரான் ஊரான் தோட்டத்திலே
ஒருத்தன் போட்டான் வெள்ளரிக்காய்
காசுக்கு ரெண்டு விக்க சொல்லி
காயிதம் போட்டான் வெள்ளைக்காரன்
இந்த நாட்டுப்புறப்பாடல் உலகமயமாக்கல் என்பது காலனியாக்குவதிலிருந்து துவங்குகிறது என்பதையே காட்டுகிறது. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலுமாக நடைபெற்ற இக்கருத்தரங்கம் புதிய விவாதங்களை உருவாக்கியதோடு பரஸ்பரம் எழுத்தாளர்களுக்குள் ஒரு பகிர்ந்து கொள்ளலை உருவாக்கியது. ஹிந்தியில் சமகால தமிழ்சிறுகதை தொகுப்பு ஒன்றை தொகுக்கும் திட்டம் ஒன்றும் இங்கு முடிவு செய்யபட்டுள்ளது.
கட்டபொம்மன் காடு
சுதந்திரப்போராட்டம் பற்றிய நினைவுகள் வெறும் காகிதக்குறிப்புகளாக மட்டும் எஞ்சியிருக்கும் சமகாலத்தில் ஒரு கிராமம் சரித்திரத்தின் நிழலிலே வாழ்ந்து கொண்டிருக்கிறது. பாஞ்சாலங்குறிச்சி பிடிபட்ட பிறகு அங்கிருந்து தப்பிய கட்டபொம்மன் தலைமறைவாக வாழ்வதற்கு புதுக்கோட்டைப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு பக்கத்தில் உள்ள குமாரபட்டி என்ற ஊரின் புறவெளியில் உள்ள அடர்ந்த காட்டில் கட்டபொம்மன் ஒளிந்திருந்தாகவும், அவனை தந்திரமாக காவலர்கள் பிடித்ததாகவும் சரித்திரக்குறிப்புகள் கூறுகின்றன. நு¡ற்றாண்டுகளைக் கடந்து இன்றும் அந்தக் கிராமத்தில் கட்டபொம்மன் ஒளிந்திருந்த காடு அப்படியே பாதுகாக்கபட்டு வருகின்றது. அதை உமைங்குறை என்று மக்கள் அழைக்கிறார்கள்.
அந்த கிராமத்து மக்கள் தங்கள் ஊரில் வந்து ஒளிந்திருந்த கட்டபொம்மனைப் புதுக்கோட்டை அரசரின் ஆணையின்படி பிடித்துக் கொடுத்துவிட்டார்களே என்ற குற்றவுணர்ச்சியில் கட்டபொம்மன் ஒளிந்த காட்டை எந்த சிதைவுமின்றி தெய்வம் போல வழிபடுகிறார்கள். அக்காட்டிலிருந்து சிறு சுள்ளிஒடிப்பது கூட கிடையாது. மரங்கள் தானாக விழுந்து மக்கிக் கிடக்கின்றன. கட்டபொம்மனோடு சேர்ந்து ஒளிந்திருப்பதாகச் சொல்லப்படும் ஊமைத்துரையை அவர்கள் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
கட்டபொம்மன் ஒளிந்திருந்த காலத்தில் விருந்திற்கு அழைத்து அவன் இலையில் சாப்பாட்டை கையில் எடுத்த போது முதுகின் பின்னிருந்து மடக்கிப் பிடித்துவிட்டார்கள் என்று கர்ணபரம்பரைக் கதையொன்றும் அக்கிராமத்திலிருக்கிறது. காட்டில் து¡ர்ந்து போயிருக்கக் கூடிய சிறிய கண்மாய் ஒன்றும் காணப்படுகிறது. பெரிய வட்டப்பாறையும் அதன் அருகில் வேங்கை மரங்களுமிருக்கின்றன. மயில்கள் நிறைய தென்படுகின்றன, ஆள்உயர கள்ளி மரங்களும் காட்டுப்புளியமரங்களும் கொண்ட அந்தக் காடு இப்போதும் வெயில் நுழைய முடியாதபடி தானிருக்கிறது.
அந்த காட்டுபகுதி அக்காலத்தில் சிவகங்கை ஜமீனுக்கும் புதுக்கோட்டை சமஸ்தானத்திற்கும் எல்லையில் அமைந்திருக்கிறது. யாராவது பிடிக்கவந்தால் ஒரு பக்கமிருந்து இன்னொரு பகுதிக்கு போய்விடலாம் . அதனால் தான் அங்கே கட்டபொம்மன் ஒளிந்திருந்தாக சொல்கிறார்கள்.
காலம் எத்தனையோ விஷயங்களைக் கடந்து சென்றுவிட்டிருக்கிறது. ஆனாலும் கிராமத்து மனிதர்களின் நினைவில் இன்னமும் கட்டபொம்மனும் ஊமைத்துரையும் வாழ்கிறார்கள் என்பதற்குச் அத்தாட்சியாகயிருக்கிறது இக்கிராமம்.
பாலாஜி: 10/10/2004 , 9:13:26 AM
மருதுபாண்டியர்கள் இதே போல் அடர்ந்த காட்டில் மரத்தினால் ஆன குகைக்குள் ஒளிந்திருந்தார்களாம். அந்த மரமும், குகையும் காட்டினுள் சென்று புகைபிடித்த பாக்கியினால், தீ அபகரித்துவிட்டதாக குமரி அனந்தன் பேச கேட்டிருக்கிறேன்.
Categories: Authors Tags: Authors, உரையாடல், கலந்துரையாடல், சந்திப்பு, சிறப்பு நேர்காணல், செவ்வி, நேர்காணல், நேர்முகம், பரிமாற்றம், பேட்டி, EssRaa, Icons, Interviews, Lit, Magz, Opinions, S Ramakrishnan, Speech, Writers
Thendral Interview with Nanjil Nadan by Aravind Saminathan
June 3, 2012 Snapjudge 2 comments
‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற நாவலின் மூலம் தமிழ் இலக்கிய உலகின் கவனம் கவர்ந்த படைப்பாளி நாஞ்சில்நாடன். நாஞ்சில் நாட்டின் தனித்துவமிக்க மொழியில் சமூக அக்கறையுடன் வீரியமிக்க படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். நவீனச் சூழலில் நாம் இழந்து கொண்டிருக்கும் விழுமியங்களை, பண்பாட்டை, கலாசாரத்தை தமது காத்திரமான படைப்புகள் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருபவர்.
‘என்பிலதனை வெயில் காயும்’, ‘மாமிசப் படைப்பு’, ‘மிதவை’, ‘சதுரங்கக் குதிரை’, ‘எட்டுத்திக்கும் மதயானை’ ஆகியன இவரது நாவல்கள். ‘தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள்’, ‘வாக்குப்பொறுக்கிகள்’, ‘உப்பு’, ‘பிராந்து’, ‘பேய்க்கொட்டு’, ‘சூடிய பூ சூடற்க’ ‘கான்சாகிப்’ போன்றவை சிறுகதைத் தொகுதிகள்.
‘சூடிய பூ சூடற்க’ 2010ம் ஆண்டிற்கான சாகித்ய அகாதமி விருது பெற்றது. ‘மண்ணுளிப்பாம்பு’, ‘பச்சை நாயகி’ போன்றவை கவிதைத் தொகுதிகள்.
‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’, ‘நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று’, ‘நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’, ‘தீதும் நன்றும்’, ‘காவலன் காவான் எனின்’, ‘திகம்பரம்’ போன்றவை கட்டுரைத் தொகுப்புகள்.
இவரது கதைகள் அனைத்தையும் தொகுத்து ‘தமிழினி’ வெளியிட்டுள்ளது. தனது படைப்புகளுக்காக இலக்கியச் சிந்தனை, தமிழ் வளர்ச்சித் துறை, பம்பாய், கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்கம், திருப்பூர் தமிழ்ச் சங்கம், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் உள்ளிட்ட பல அமைப்புகளிலிருந்து பரிசுகளும் பாராட்டுகளும் பெற்றவர்.
கலைமாமணி, கண்ணதாசன் விருது போன்ற விருதுகள் பெற்றவர். இவரது படைப்புகளை ஆராய்ந்து 15க்கும் மேற்பட்டவர்கள் முனைவர், இளமுனைவர் பட்டம் பெற்றுள்ளனர். தில்லிப் பல்கலைக்கழகம், கேரளப் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார், மதுரை காமராசர், பாரதியார் உள்ளிட்ட பல பல்கலைக் கழகங்களில், கல்லூரிகளில் இவரது படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், மலையாளம் உள்ளிட்டவற்றில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அமெரிக்கப் பயணத்திற்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தவரிடம் உரையாடினோம். அதிலிருந்து….
கே: உங்கள் மனதில் இலக்கிய விதை விழுந்தது எப்போது?
ப: பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே தான். எங்கள் ஊரில் பொதுவுடைமை மற்றும் திராவிட இயக்கத்தினர் அரசியல் கூட்டம் நடத்துவார்கள். அதில் பேச்சாளர்கள் சொல்லும் பாடல் வரிகள் என்னை மிகவும் ஈர்க்கும். நூலகத்திற்குச் சென்று அவற்றைத் தேடி முழுமையாக அறிந்துகொள்வேன். பள்ளியில் நடக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக நூல்களைத் தேடிப் படிக்க ஆரம்பித்தேன். இப்படி ஏற்பட்டதுதான் இலக்கிய ஆர்வம்.
கே: உங்கள் முதல் படைப்பு பற்றிச் சொல்லுங்கள்…
ப: நான் எம்.எஸ்ஸி. முடித்து விட்டு 1972ல் வேலைக்காக மும்பை சென்றேன். நான் வேலை பார்த்த தொழிற்சாலையில் மராத்தியரும், உத்திரப் பிரதேசத்தினரும்தான் அதிகம் இருந்தனர். ஒரே ஒரு மலையாளி இருந்தார். தமிழர் யாரும் கிடையாது. ஆனால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. அதனால் மும்பை தமிழ்ச் சங்க நூலகத்துக்குப் போக ஆரம்பித்தேன். எனது கிராமம், உறவுகள் பற்றிய ஏக்கம் எப்போதும் மனதில் இருக்கும். எனது தனிமையை, ஏக்கத்தைப் போக்குவதற்காக எழுத ஆரம்பித்தேன். அப்போது பம்பாய் தமிழ்ச் சங்கத்தின் மாத இதழில் என்னை எழுதக் கேட்டுக் கொண்டார்கள். வாராந்திரக் கூட்ட அறிக்கை தயாரிப்பது போன்ற வேலைகளையும் செய்வேன். அந்தக் காலத்தில் ‘விரதம்’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி ‘தீபம்’ இதழுக்கு அனுப்பினேன். 1975 ஆகஸ்டில் அந்தச் சிறுகதை வெளியானதோடு, அந்த ஆண்டின் சிறந்த கதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இலக்கியச் சிந்தனை பரிசும் கிடைத்தது. அது தந்த நம்பிக்கையில் தொடர்ந்து எழுத ஆரம்பித்தேன்.
கே: சங்க இலக்கியங்களிலும், தேவார, திருவாசகங்களிலும், கம்பனிலும் நல்ல புலமையுடையவர் நீங்கள் என்பதை உங்கள் படைப்புகளில் காண முடிகிறது. அந்த ஆர்வம் எப்படி முகிழ்த்தது?
ப: என் அப்பாவழித் தாத்தா அந்தக் காலத்தில் வில்லுப்பாட்டுக் கலைஞர்களுக்குப் பாடல்கள், கதைகளைச் சொல்லித் தந்திருக்கிறார். ராமநாடக கீர்த்தனைப் பாடல்களை பாடுவார். குறிப்பாக பங்குனி, சித்திரை மாதங்களில் வீட்டின் படிப்பறையில் அமர்ந்து கிராம மக்களுக்கு ராமாயண, மகாபாரதக் கதைகளைச் சொல்லுவார். என் தந்தைக்குத் திருக்குறளில் ஆர்வம் உண்டு. சிறுவயதில் நான் வாசித்த நூல்களும், மும்பைத் தமிழ்ச் சங்கத்தில் பயின்ற நூல்களும், அங்கு கேட்ட சொற்பொழிவுகளும்தான் எனது பழந்தமிழ் இலக்கிய ஆர்வத்துக்குக் காரணம். மும்பை தமிழ்ச் சங்கத்தில் கி.வா.ஜ., அ.ச.ஞா., குன்றக்குடி அடிகளார், ப. நமசிவாயம், ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் எனப் பல சான்றோர்கள் வந்து பேசுவர்.
கே: பொதுவாக உங்களது பேச்சைக் கேட்கிறவர்கள், ஒரு தமிழாய்ந்த பேராசிரியரின் உரையைக் கேட்பது போல் இருந்தது என்று சொல்லியிருக்கிறார்கள். பேராசிரியர் ஆக வேண்டும் என்பது உங்கள் சிறுவயது ஆசையாக இருந்ததுண்டா?
ப: நான் பி.எஸ்ஸி. கணிதம் படித்தேன். எங்கள் மாவடத்தில் மேலே எம்.ஏ. தமிழ் படிக்கும் வாய்ப்பு மட்டுமே இருந்தது. என் பெற்றோர், கணிதம் படித்துவிட்டுத் தமிழ் படிப்பதா என்று ஒப்புக் கொள்ளவில்லை. எம்.எஸ்ஸி கணிதம் படிககத் திருவனந்தபுரத்துக்கு அனுப்பினார்கள். நல்ல பல தமிழ்ப் பேராசிரியர்களிடம் அவர்கள் அனுமதி பெற்று வகுப்பில் கலந்து கொண்டு பாடம் கேட்டிருக்கிறேன். அது எனது இந்த உரையாற்றலுக்குக் காரணமாக இருக்கலாம். நான் அடிப்படையில் ஒரு படைப்பிலக்கியவாதி. ஒரு தொழில்முறைச் சொற்பொழிவாளன் பார்வைக்கும், ஒரு படைப்பிலக்கியவாதியின் பார்வைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அந்த வேறுபாடுதான் ஒருவேளை எனது பேச்சிற்கு பேராசிரியர் தொனியைத் தருகிறதோ என்னவோ. நான் கற்றதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் என் ஆர்வமே தவிர, சொற்பொழிவாளனாக அறியப்படுவதில் எனக்கு விருப்பம் இல்லை. எழுத்துதான் என்னுடைய தலையாய பணி. முதற்பணி.
கே: குடும்ப வறுமைச் சூழல் குறித்துச் சொன்னீர்கள். இளமைப்பருவ நாட்களைப் பற்றிச் சொல்லுங்களேன்…
ப: மிகவும் சிரமமான குடும்பச் சூழல். ஒரே ஒரு ஏர்மாடுதான். 3, 4 ஏக்கர் நிலம் குத்தகைக்கு எடுத்தது – நாங்க பாட்டத்துக்கு எடுத்தது என்று சொல்லுவோம் – அதில் பயிர்செய்து, அதில் வரும் வருமானத்தைக் கொண்டு, அப்பா, அம்மா, அப்பாவின் அம்மா, அம்மாவின் அம்மா, நாங்கள் ஏழு குழந்தைகள் எல்லோரும் ஜீவிக்க வேண்டும். நான் முதல் குழந்தை. சாப்பாடே ஒரு போராட்டம்தான். அறுவடை முடிந்து நான்கு மாதம் ஆன பிறகு, அடுத்த அறுவடைக்கு ஒரு மாதம் ஆகும் என்ற நிலையில் பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கை வேகவைத்துச் சாப்பிட்டிருக்கிறோம். மரவள்ளிக் கிழங்கைப் பறிக்க நான் வடக்குமலைக்கு ஏறிச் சுமந்து வந்திருக்கிறேன். சின்னச் சின்ன கூலி வேலைகளைச் செய்திருக்கிறேன். அதே சமயம் அந்த வேலைகள் என் சுயமரியாதையை பாதிக்க அனுமதித்ததில்லை. துயரப்பட்டிருக்கிறேன்; துன்பப்பட்டிருக்கிறேன். பட்டினி கிடந்திருக்கிறேன். பசி என்றால் என்னவென்று தெரியும். ஆனாலும் என்னுடைய சுயத்தைக் காப்பாற்றிக் கொள்வதில் முனைப்பாகவே இருந்திருக்கிறேன்.
காமராஜர் பள்ளிக் கல்வியை இலவசமாக்கியதால் என்னால் எஸ்.எஸ்.எல்.சி. வரை படிக்க முடிந்தது. நான் பி.யூ.சி. படிக்கும்போது ஆண்டுக் கட்டணம் 192 ரூபாய் கட்டுவதற்காக என் தந்தை கடன் பத்திரம் எழுதிக் கொடுத்துக் கடன் வாங்கி வந்தார். கல்லூரியில் படிக்கும்போது டாக்டர் ராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவராக இருந்தார். அவர் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்காக Loan Scholarship என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். அது எனக்குக் கிடைத்தது. அந்தக் கடன் உதவித் தொகையைக் கொண்டுதான் நான் ஆறு ஆண்டுகள் எம்.எஸ்ஸி. வரை படித்தேன். அந்தத் திட்டத்தின்படி, நீங்கள் ஆசிரியர் பணிக்குப் போவதாக இருந்தால் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். வேறு பணிக்குச் சென்றால் கடனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பிச் செலுத்தியாக வேண்டும். என்னால் ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியவில்லை. தனியார் பணிதான் கிடைத்தது. மகாராஷ்டிர அரசின் ஆட்சி அதிகாரி மூலம் நான் வாங்கிய கடன் அனைத்தையும் அரசுக்குத் திருப்பிச் செலுத்தினேன். அந்த ரசீதுகளை இன்னமும் பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், பெற்றோர்கள் பட்டினியும் பசியும் கிடந்து என்னைப் படிக்க வைத்தார்கள். நானும் அந்தப் பொறுப்பை உணர்ந்து விடுமுறை நாட்களில் மண் சுமந்து, செங்கல் சுமந்து, உர மூட்டைகள் சுமந்து படித்தேன். இன்று நல்ல நிலைமையில் இருக்கிறேன். அந்த அனுபவங்களை நினைத்து எனக்கு வருத்தமில்லை. சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். அவையெல்லாம் சேர்ந்துதான் என்னை ஒரு படைப்பாளியாக்கி இருக்கின்றன.
கே: உங்கள் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’ மிக முக்கியமான ஆவணம் என்று சொல்லலாம். அதை எழுதத் தூண்டியது எது?
ப: சுந்தரராமசாமி நாகர்கோவிலில் பாம்பன்விளை என்ற இடத்தில் வருஷத்திற்கு இரண்டு முறை இலக்கிய முகாம் நடத்துவார். நான் அக்கால கட்டத்தில் சிறுகதைகள் மட்டுமே எழுதிக் கொண்டிருந்தேன். சுந்தரராமசாமி என்னிடம் “நீங்கள் வாழும் சமுதாயம் பற்றிய உங்களது 50 ஆண்டுக் கால அவதானிப்புகளையே ஒரு கட்டுரையாக எழுதி வாசிக்கலாமே” என்று சொன்னார். நானும் ஒரு இருபது பக்கத்துக்குக் கட்டுரை எழுதி வாசித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு. பின்னர் சுந்தரராமசாமியும் அவரது மகன் கண்ணனும் அதையே ஒரு நூலாக எழுதலாமே என்றனர். அதன்படி அந்தக் கட்டுரையை மேலும் விரிவாக்கி, மேலும் பல தரவுகளையும், பகுப்புகளையும் சேர்த்து நூலாக்கினேன். இப்படி உருவானதுதான் ‘நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வாழ்க்கை’. அந்த நூலில் நான் என்னுடைய நினைவில் இருந்து அந்தச் சமுதாயத்தை சின்ன வயதில் நான் எப்படிப் பார்த்தேன், இப்போது எப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன், என்ன நடந்தது, என்ன நடந்திருக்க வேண்டும் என்பதையெல்லாம் விலகி நின்று ஒரு பொதுமனிதனாகப் பார்த்து எழுதினேன். நம்முடைய மொழியில் அது மாதிரியான புத்தகங்களில் அதுதான் முதல் என்று சொல்லலாம்.
கே: உங்கள் சிறுகதைகளில் நகைச்சுவை, சமூகத்தின் மீதான தார்மீகக் கோபம் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தி அறச்சீற்றம் காட்டும் ‘கும்பமுனி’ பற்றிக் சொல்லுங்கள்…
ப: சில பிரச்சனைகளை நாம் கதையாக எழுத முடியாது. ஆனால் கதை என்ற வடிவத்தைத் தாண்டி அதைச் சொல்ல வேண்டும். அதற்காக நான் ஒரு கதாபாத்திரத்தைச் சிருஷ்டிக்கிறேன். அவர்தான் கும்பமுனி. நான் இன்னும் பல வருடங்கள் கடந்து, ஒரு கிழவனாகி, சமூக நிலைகளைக் கண்டு கோபம் கட்டுக்கடங்காமல் போகும் நிலைமையில் எப்படிச் செயல்படக்கூடும் என்று கற்பனை செய்கிறேன். அதன் விளைவுதான் ‘கும்பமுனி.’ இந்தப் பாத்திரப் படைப்பில் ஓரளவுக்கு நகுலனின் பாதிப்பு உண்டு. அவர் தோற்றம், குணம், செயல்பாடு, விட்டேத்தியான பேச்சு, புலமை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டவர்தான் கும்பமுனி. ஆனால் நான் பேசும் மொழி அவர் மொழி அல்ல. அந்தக் கதாபாத்திரத்தின் மூலமாகச் சிறுகதையாக என்னால் எழுத முடியாத, வெளிப்படையாக எழுதக்கூடாத பலவற்றை என்னால் பேச முடிகிறது. இதுவரைக்கும் கும்பமுனி கதைகள் என்று 11 கதைகள் எழுதியிருக்கிறேன். இன்னும் நிறைய எழுதலாம்தான். ஆனால் ஓராண்டாக கட்டுரை எழுதுவதிலேயே எனது நேரம் போகிறது. மீதி நேரம் தொல்லிலக்கிய வாசிப்பு, இடைவிடாத பயணம் என்று போய்க் கொண்டிருக்கிறது.
கே: படைப்பை விடுத்து அதை எழுதியவரை விமர்சிக்கும் போக்கு இப்போது அதிகரித்திருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
ப: நிச்சயமாக இது படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானது கிடையாது. இதற்கெல்லாம் குழு மனப்பான்மைதான் காரணம். ஒரு படைப்பின் மீது வைக்கப்படும் விமர்சனத்தை நேர்மையாக எதிர்கொள்ள முடியாதவர்கள், சகிப்புத்தன்மை அற்றவர்கள்தான், விமர்சித்தவர் மீது ஜாதிய முத்திரை குத்தியும் தனிப்பட்ட விரோதம் கொண்டும் தனிநபர்த் தாக்குதலில் இறங்குகிறார்கள். ஆனால் இது தமிழ் இலக்கியத்திற்குப் புதிதல்ல. க.நா.சு., வெங்கட் சாமிநாதன் மீதுகூட ஜாதி முத்திரை குத்தினார்கள். பொதுவாகத் தனது ஜாதி பற்றி எழுதும்போது எழுதுபவருக்கு ஒரு சிக்கல் இருக்கும். ‘ஜாதி வெறியர்’ என்றோ ‘சுயஜாதிச் சொறிதல்’ என்றோ முத்திரை குத்தப்படலாம். எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நான் கடுமையான ஒரு விமர்சனத்தை ஒரு கவிதை மீதோ, சிறுகதை மீதோ அல்லது ஏதேனும் படைப்பு மீதோ வைக்கும்போது ‘ஜாதி முத்திரை’ குத்துகிறார்கள். ஆனால் நான் அவற்றைப் பொருட்படுத்துவதில்லை. என்னளவில் நான் சுத்தமாக இருக்கிறேன். ஜாதியை வசவாகச் சிலர் பயன்படுத்துவதில் எனக்கு வருத்தமில்லை. ஆனால் நான் அவர்களிடம் திருப்பிக் கேட்கிறேன், “நீங்களும் குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர்தானே, உங்கள் ஜாதியைப் பற்றி அவ்வாறு சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்று. பதில் வராது. நான் அநியாயமாக ஒரு மதத்துக்கோ, இனத்துக்கோ, குழுவுக்கோ ஆதரவாக இருக்கின்றேனா என்பது பற்றித்தான் கவலைப்படுவேனே தவிர, இது போன்ற முத்திரைகளைப் பற்றிக் கவலைப்பட்டு, அதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் முடிவே இருக்காது.
கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை; சரியான படைப்புகளுக்கு வழங்கப்படுவதில்லை அல்லது மிகக் காலம் தாழ்த்தி வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகள் குறித்து உங்கள் கருத்தென்ன?
ப: இந்தக் குற்றச்சாட்டை உண்மை என்றுதான் சொல்ல வேண்டும். தற்செயலாகத்தான் நல்ல படைப்பாளிகளுக்கு விருது கிடைக்கிறது. விருது அளிக்கும் அமைப்பில் இருப்பவர்கள் யாருக்கும் நவீன இலக்கியப் பரிச்சயம் இருப்பதில்லை. அவர்கள் விருதுக்கு மூன்று புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்றால் அதை வாசித்திருப்பார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. நடுவர்களாக நியமிக்கப்படுவர்களுக்கு அந்த ஆண்டில் என்ன புத்தகங்கள் புதிதாக வந்திருக்கின்றன என்பது தெரியாது. சில கல்வித்துறையில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் நவீன எழுத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. நான் யார்மீதும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. யார் நன்றாக எழுதக் கூடியவர், யார் எழுதாதவர் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. காரணம், அவர்கள் நவீன எழுத்துக்களை வாசிப்பதில்லை. மேலும் நம் மொழியில் பல விருதுகள் பரிந்துரைகள் மூலம் வாங்கப்படுகின்றன. அரசியல் செல்வாக்கை, ஜாதி செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நடுவர்களின் வீடுகளுக்கு நடையாய் நடந்து விருது வாங்குபவர்களும் உண்டு. சமீபத்தில் ஒரு நடுவர், “எட்டுமுறை வீட்டுக்கு வந்து பார்த்துட்டுப் போனான்யா. சரி என்னதான் பண்றது. போனாப் போவுது கொடுத்துருவோமேன்னு சொல்லிக் கொடுத்திட்டோம்’ என்றார். ஒரு விருதின் முதலிடத்துக்கு நான்கு நல்ல புத்தகங்கள் வருகிறது. நான்கிற்குமே கொடுக்க முடியாது. அதில் ஒன்றுக்குக் கொடுக்கிறார்கள் என்றால் நமக்கு வழக்கில்லை. ஆனால் எந்தவிதத் தகுதியுமில்லாத, மொழியினுடைய மேன்மையையோ, சிறப்பையோ, நவீனத்துவத்தையோ வெளிப்படுத்தாத, புலப்படுத்தாத புத்தகங்களுக்கு விருதுகள் வழங்கப்படும்போதுதான் நாம் அதுபற்றி விமர்சிக்க வேண்டியதாகிறது. நம்மை அது வருத்தப்பட வைக்கிறது.
கே: விஞ்ஞான யுகம், வளர்ச்சி என்று ஒருபக்கம் சொல்கிறோம். இன்னொரு பக்கம் நம் மண்சார்ந்த பலவற்றை இழந்து வருகிறோம். இது குறித்த உங்கள் கருத்தென்ன?
ப: ஒரு படைப்பாளியால் உணர்வை எழுப்ப, கவனத்தை ஈர்க்க, முடியும். அதை வளர்த்து முன்னெடுத்துச் செல்வது ஒரு நல்ல அரசியல் தலைமையால் மட்டுமே முடியும். நமது துர்ப்பாக்கியம், இந்தியாவிலும் சரி, தமிழ் நாட்டிலும் சரி, நம்பிப் பின்னால் செல்லக்கூடிய அரசியல் தலைமை அரிதாகிவிட்டது. நம்பத் தக்கவர்களோ முதுமையடைந்து விட்டார்கள். இளைஞர்களுக்குப் சமூகப் பிரச்சனைகள் மீது பெரிதாக அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அவர்களுடைய ஆர்வம் வாழ்க்கை வசதிகளின் மீதுதான் அதிகம் இருக்கிறதே தவிர ஒரு பொதுப் பிரச்சனைக்காகத் தெருவில் இறங்கிப் போராட வேண்டும், ஒரு குரலாவது கொடுக்க வேண்டும் என்பதில் இல்லை. 1964-65ல் ஹிந்தியை எதிர்த்து நடத்திய போராட்டத்திற்குப் பின் தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடிப் போராட்டம் எதுவுமே நிகழவில்லை. போராட்டம் நடக்க வேண்டும் என்பது நமக்கு ஆசை கிடையாது. ஆனால் நாட்டில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கும்போது அதற்கு எந்த எதிர்வினையும் காட்டாது இளைஞர்கள் இருப்பது எதிர்கால சமூகத்துக்கு நல்லதல்ல. இலங்கையில் லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டபோது அதை எதிர்த்து ஒரு கருப்புக் கொடி ஊர்வலம் கூட இங்கே நடக்கவில்லை. இதைப் பார்க்கும்போது ஒரு சிக்கலுக்குள் இருக்கிறோமோ என்று தோன்றுகிறது. படைப்பாளிகளும் கலைஞர்களும் எச்சரிக்கை உணர்வைத் தட்டி எழுப்பியபடியே இருக்க வேண்டும். அதுதான் அவனது முக்கியப் பணி.
ஆனால் இதற்காக நம்பிக்கை இழக்க வேண்டிய அவசியமில்லை. இளைஞர்கள் இந்தப் பிரச்சனைகளைப் பற்றிப் புரிந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குச் சரியான தலைமை இல்லை. இதை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அரசியல் தளம் இங்கே ஆரோக்கியமானதாக இல்லை. சரியான பிரச்சனைக்காக, சரியான காரணங்களுக்காக சரியான நேரத்தில் ஒரு எதிர்ப்பைக் கொண்டு செல்ல எந்த அரசியல் கட்சிக்கும் ஆர்வம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இளைஞர்களுக்கு உணர்வு இருக்கிறது. ஆனால் அதை ஒருமுகப்படுத்துவது யார்?
கே: சமீப காலமாக பல வெளிநாடுகளுக்குப் பயணம் செய்து வருகிறீர்கள். அங்கு தமிழ் இலக்கியம் குறித்து நீஙகள் அவதானிக்கும் விஷயங்கள் என்னென்ன?
ப: நானும் ஜெயமோகனும் வேறு சில நண்பர்களும் இரண்டு வருடங்களுக்கு முன்னால் மலேசியாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு ஏழு நாட்கள் இருந்தோம். அங்குள்ள எழுத்தாளர்களைச் சந்தித்தோம். சமீபத்தில் குவைத், துபை சென்று வந்தோம். உலகம் பூராவுமே தமிழர்கள் தற்போது நவீன எழுத்துக்களில் மிகவும் ஆர்வமுடையவர்களாய் இருக்கிறார்கள். எங்கு சென்றாலும், இணையம் மற்றும் நூல்களின் வழி நம்மைப் படித்த வாசகர்களைச் சந்திக்க முடிகிறது. அவர்கள் நம்மிடம் வாசிப்பு பற்றிப் பேசுகிறார்கள். படைப்புகளில் சந்தேகம் கேட்கிறார்கள். நாம் சொல்லும் புத்தகத்தைத் தேடிப் படிக்கிறார்கள். தமிழ்நாட்டில் இருக்கும் குழு மனப்பான்மை அவர்களிடம் இல்லை. ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது.
கே: ஒரு எழுத்தாளராக உங்கள் கடமை அல்லது பணி என்று எதைச் சொல்வீர்கள்?
ப: என்னுடைய படைப்புக்கு நேர்மையானவனாக, நியாயம் உள்ளவனாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். ஒரு பிரச்சனைக்குப் பல தரப்புகள் இருக்கலாம். எல்லாத் தரப்பிலிருந்தும் அந்தப் பிரச்சனைகளைப் பார்க்கலாம். என் தரப்பிலிருந்து நான் நேர்மையாகப் பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். இரண்டாவது கலை சார்ந்த வெற்றிக்கு நான் பாடுபட வேண்டும் என நினைக்கிறேன். பசி, காதல், காமம் என்பதெல்லாம் உலகம் தோன்றிய காலம் முதல் இருந்து கொண்டே இருக்கிறது. திரும்பத் திரும்ப நாம் இவற்றை எழுதிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனாலும் வித்தியாசமான படைப்புகளை எழுதத்தான் செய்கிறோம். ஒரு படைப்பாளி எப்படிப் பார்க்கிறான், எப்படி உணர்கிறான், எப்படி மொழியைக் கையாளுகிறான், எப்படி வெளிப்படுத்துகிறான் என்பதைப் பொறுத்து அது அமைகிறது. என் எழுத்து என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். சமயங்களில் சில படைப்புகளில் கலைத்தன்மை குறைவாக இருந்தாலும் கூட, இருந்து விட்டுப் போகட்டுமே அது பேசுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் என்று நினைக்கிறேன். படைப்பு உண்மை அனுபவத்தைப் பற்றிப் பேசும்போது அதில் கலையம்சங்கள் சில குறைந்தாலும் அதை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஜாதி, மதம், இனம், கொள்கை, கோட்பாடு, தத்துவம் இவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமல் என் அனுபவங்களுக்கு நேர்மையாக இருப்பதே என் கடமை.
கே: தற்போதைய எழுத்துலகம் பற்றியும் இளம் படைப்பாளிகள் குறித்துச் சொல்லுங்கள்..
ப: நிறைய இளம் படைப்பாளிகள் எழுத வந்திருக்கிறார்கள். நாற்பது வயசு கொண்ட எழுத்தாளர்கள் என்று பார்த்தால் கீரனூர் ஜாகிர் ராஜா கதைகளும், சிறுகதைகளும் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார். அதுபோல கண்மணி குணசேகரன், சு. வேணுகோபால், எஸ். செந்தில்குமார், லக்ஷ்மி சரவணகுமார், சந்திரா, கணேசகுமாரன், குமார் அம்பாயிரம், திருச்செந்தாழை என நிறையப் பேர் நல்ல படைப்புகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் எண்ணிக்கை குறைவுதான்.
ஒரு முக்கியமான விருதுக் குழுவின் நடுவராக நான் இருந்தேன். அவர்களது ஒரே ஒரு கண்டிஷன் என்னவென்றால் விருதுக்குப் பரிந்துரை செய்யப்படும் ஆசிரியர் 35 வயதுக்குள் இருக்க வேண்டும் என்பதுதான். இப்படி 35 வயதுக்குள் என்று வைத்துப் பார்த்தால் அதிகம் எழுத்தாளர்கள் இல்லை. அதாவது நன்றாக எழுதக்கூடியவர்கள் எல்லாம் 40, 42 வயதுக்கு வந்து விட்டார்கள். நான் என்னை வைத்துப் பேச வேண்டுமென்றால் ‘தலைகீழ் விகிதங்கள்’ என்னுடைய 29, 30 வயதில் எழுதியாகி விட்டது. சுந்தர ராமசாமி புளியமரத்தின் கதையை 30 வயதில் எழுதி விட்டார். ஜெயமோகனின் ரப்பரும் 30 வயதில் வந்துவிட்டது. நான் எழுதவந்த காலத்தில் வந்த வண்ணநிலவன், வண்ணதாசன், பா. செயப்பிரகாசம், விக்கிரமாதித்யன், கலாப்ரியா, பூமணி, ராஜேந்திர சோழன் உள்ளிட்ட எல்லோருமே தங்கள் முதல் படைப்பை 25-30 வயதுக்குள் கொண்டு வந்து விட்டார்கள். இவர்கள் எல்லாம் திறமையான எழுத்தாளர்கள். புத்தங்களும் காத்திரமான புத்தகங்கள். அதை ஒப்பிட்டுப் பார்த்தால் இப்போது எழுதும் எழுத்தாளர்களின் எண்ணிக்கை, வெளியாகும் புத்தகங்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால் அப்படி வருபவர்களின் எழுத்து வீரியமாக, காத்திரமாக இருக்கிறது.
கே: பொதுவாக எழுத்தாளர்களிடையே நிலவும் ஒற்றுமையின்மை மற்றும் குழு மனப்பான்மைக்கு என்ன காரணமாக இருக்க முடியும்?
ப: இது எல்லா மொழிகளிலும் இருக்கிறது. நம் மொழிக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால் இது தனிப்பட்ட விரோதமாக ஆகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஒரு படைப்பை ஒருவர் சரியில்லை என்று விமர்சித்து விட்டால் அவரை எதிரியாக நினைக்கும் போக்கு வளர்ந்து வருகிறது. இது படைப்பில்லக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல. விமர்சனம் செய்தவரும், விமர்சனத்துக்கு உள்ளான படைப்பை எழுதியவரும் சேர்ந்து டீ குடிக்கப் போக வேண்டும். இதுதான் நல்ல மரபு. ஆனால் இது பிற மொழிகளில் இருக்கும் அளவுக்கு நம் மொழியில் இல்லை. எழுத்தாளர்களிடையே பொறாமை தவறானதில்லை, அது ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுக்கும் என்றால். ஆனால் விரோதம், புறம் பேசுதல், சொந்த வாழ்க்கை பற்றி அவதூறு பேசுதல், குழுவாக உட்கார்ந்து மதுவருந்தி விட்டு மற்றொரு படைப்பாளியை மிகவும் கேவலமாகப் பேசுதல் இவைதான் கூடாது. முரண்பட்ட கொள்கையுடைய எதிரெதிர் துருவங்களாகப் படைப்பாளிகள் இருந்தாலும், பொது இடத்தில் புன்னகையுடன் கை குலுக்கிவிட்டுச் செல்ல வேண்டும். அதுதான் ஆரோக்கியம். முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்வது அழகல்ல. பண்புமல்ல. ஆனால் அதை நோக்கித்தான் நாம் போய்க் கொண்டிருக்கிறோமோ என்ற அச்சம் எனக்கிருக்கிறது.
கே: இளம் எழுத்தாளர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: நான் சொல்ல வருவது இதுதான்: நம் மொழி மிக அற்புதமான மொழி. பல ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்களைக் கொண்ட மொழி. இந்த மொழியில் எழுதிப் பெயர் வாங்குவது அவ்வளவு லேசான காரியமல்ல. நான் சாகித்ய அகாதமி விருது வாங்கச் சென்றிருந்தபோது பிறமொழிப் படைப்பாளிகள் சிலரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் மொழியில் எழுதி, புத்தகம் கொண்டு வந்து பரிசு பெறுவது மாதிரி அல்ல நாம் தமிழில் எழுதுவது. தமிழின் மிகத் தீவிரமான சிறந்த முயற்சிகளுக்கு நடுவே நாம் போட்டி போட வேண்டி இருக்கிறது. இதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.
உரையாடல்: அரவிந்த் சுவாமிநாதன்
படங்கள்: சுல்தான்
*****
மும்பையும் நானும்
மும்பைக்கு நான் போயிருக்கவில்லை என்றால் ‘நாஞ்சில்நாடன்’ என்ற படைப்பாளி தோன்றியிருக்க மாட்டான். மும்பை மற்ற இந்திய நகரங்களை விட மிக வித்தியாசமான நகரம். மும்பைக்காரர்கள் வித்தியாசமானவர்கள். ஒரு பிரச்னை என்றால் வேறுபாடுகளை மறந்து எல்லோரும் ஒன்று சேர்வார்கள். உதவுவார்கள். தயை காட்டுவார்கள். அதை பெருமழைக் காலங்களில், விபத்துக் காலங்களில், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் காலங்களில் உணரமுடியும். மற்ற நகரங்களில் இதைப் பார்க்க முடியாது. நான் 18 வருடங்கள் மும்பையில் இருந்தேன். அங்கேதான் பாதல் சர்க்கார், அமோல் பாலேகர், ஸ்ரீராம் லாகூ ஆகியோரது நவீன நாடகங்களின் அறிமுகம் கிடைத்தது. பலமொழி நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எல்லா மொழிகளின் நவீன திரைப்படங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்ததும் கர்நாடிக், ஹிந்துஸ்தானி என எனது இசை ஈடுபாட்டை வளர்த்துக் கொள்ள முடிந்தது. மும்பை வீதிகளின் பழைய புத்தகக் கடைகளில் நல்ல புத்தகங்களை மிகக் குறைவான விலைக்கு வாங்க முடியும். என்னுடைய புத்தகச் சேகரிப்பு அப்படி உருவானதுதான். ஆங்கிலத்தில் நிறைய வாசிக்கும் வாய்ப்பு மும்பையில்தான் எனக்குக் கிடைத்தது. அதுபோல மும்பைத் தமிழ்ச் சங்கம் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அதில் புலமையுடைய மக்கள் பலர் இருந்தனர். அவர்கள் என் சந்தேகங்களுக்குப் பொறுமையாக விளக்கம் சொல்வார்கள். மிக நல்ல மனிதர்களாக இருந்தார்கள். இவையெல்லாம் நான் எழுத்தாளனாக என்னை வளர்த்துக் கொள்ள மிக உறுதுணையாக இருந்த விஷயங்கள்.
நாஞ்சில்நாடன்
*****
கட்டுரை இலக்கியம்
நான் கடந்த பத்து வருடங்களாகக் கட்டுரைகள்தான் எழுதிக் கொண்டிருக்கிறேன். நாவல் எழுதி 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதிக் கொண்டிருக்கிறேன். அந்தச் சிறுகதைகளும் கூட சில சமயங்களில் கட்டுரை வடிவில் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. ஆனால் இதிலிருந்து ஒரு படைப்பிலக்கியவாதியால் எளிதில் மீண்டு வந்துவிட முடியும். அது தானாகவே நடக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். இப்போது எனக்குத் தொல்லிலக்கியங்களில் ஆர்வம் இருக்கிறது. அவற்றைப்பற்றி எழுதுவதிலே முனைப்பாக இருக்கிறேன். அதே சமயம் நான் எழுதும் கட்டுரைகள் சமகாலப் படைப்பிலக்கியவாதிகள் பிறரால் எழுதப்பட முடியாதவை. ஒரு சிறுகதையைப் போலவே ஒரு கட்டுரையும் வாசிக்கப்பட வேண்டும். டெல்லி தமிழ்ச் சங்கத்தில் ஒரு கருத்தரங்கத்தை முடித்தபின் நடந்த கலந்துரையாடலில் டெல்லியைச் சேர்ந்த ஒரு பெரியவர், “நீங்க கட்டுரை எல்லாம் எழுதி அரசாங்கத்தையோ, மக்களையோ திருத்த முடியாது. கதை எழுதுவதுதான் உங்கள் வேலை” என்ற மாதிரி காரசாரமாகச் சொல்லிவிட்டுப் போனார். உடனே மேடை ஏறிய இருபது கல்லூரி மாணவர்கள், ‘நீங்கள் இனி கட்டுரைதான் எழுத வேண்டும். அதுதான் காத்திரமாக இருக்கிறது. சொல்ல வேண்டியதைச் சரியாகச் சொல்கிறது. காலத்தின் தேவையாக இருக்கிறது” என்று சொன்னார்கள். “கதை, நாவல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும் ஐயா. இது போன்ற கட்டுரைகளை நீங்கள் மட்டுமே எழுத முடியும்” என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். “எப்பதான் சார் உங்க அடுத்த நாவலை எழுதுவீங்க?” என்று உரிமையோடு கேட்பவர்களும் இருக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்கு எது விருப்பமாக இருக்கிறதோ அதையே செய்வேன்.
நாஞ்சில்நாடன்
*****
பதிப்புச் சூழல்-அன்றும் இன்றும்
நான் எழுதத் தொடங்கிய காலத்தில் 1200 படிகள் அச்சிடுவார்கள். அது விற்பதற்கு வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். இன்றைக்கு கணினி அச்சுக் காலத்தில் 250 படிகள்கூட அச்சிடமுடிகிறது. விற்றுத் தீர்ந்ததும் மீண்டும் 250 படிகளை அச்சிட முடிகிறது. சமீபத்தில் ஒரு நண்பர், “வெறும் ஆறே ஆறு படிகள்கூட அச்சிட முடியும். அதை நூலகம் அல்லது வேறு தேர்வுக் குழுவுக்கு அனுப்பி, ஆர்டர் வந்ததும் தேவையான பிரதிகளை அச்சிட்டுக் கொள்ளலாம்” என்றார். மற்றொன்று, எந்த ஒரு பதிப்பாளரும் படைப்பாளிகளுக்கு, எழுத்தாளர்களுக்கு புத்தகங்களுக்கான நியாயமான ராயல்டி தொகையைத் தர வேண்டும் என்ற அறவுணர்வோடு இல்லை. நீ எழுதிக் கொடுப்பதைப் போடுவதே பெரிய விஷயம் என்பது மாதிரி நடந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் ‘முதல் பதிப்புக்குத்தான் ராயல்டி கொடுத்தாகி விட்டாதே! இரண்டாவது பதிப்புக்கு என்ன திருப்பி எழுதவா செய்கிறார். அதற்கு எதற்கு ராயல்டி கொடுக்க வேண்டும்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள். பதிப்பாளர்களின் இந்த மனப்பான்மை மிகவும் வருந்தத்தக்கது.
ஆனால் புத்தக விற்பனை வளர்ச்சி அடைந்திருக்கிறது என்று சொல்வதற்கில்லை. ஒரு பதிப்பாள நண்பர் சொன்னார், ஓர் ஆண்டின் மொத்தப் புத்தக விற்பனையே 35 கோடி ரூபாய்தானாம். எட்டுக் கோடித் தமிழர்கள் வசிக்கும் மாநிலத்தில் இவ்வளவுதான் என்றால் இதில் என்ன வளர்ச்சி இருக்கிறது? ஒரு ஓட்டல் அல்லது மற்றத் தொழிலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இந்தத் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் நல்ல புத்தகங்கள் வெளிவருகின்றன. வாசகர்கள் வாசிக்கிறார்கள் என்று சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம். அவ்வளவுதான்.
நாஞ்சில்நாடன்
Categories: Authors Tags: America, Arvind, அகாடெமி, அமெரிக்க மாத இதழ், அமெரிக்கத் தமிழ் மாத இதழ், அமெரிக்கா, அரவிந்த் சாமிநாதன், உரையாடல், எழுத்தாளர், கட்டுரை, கதை, கலந்துரையாடல், சந்திப்பு, சாகித்ய அகாதெமி, சிறப்பு நேர்காணல், சுவாமிநாதன், செவ்வி, தென்றல், தென்றல் ஆன் லைன், தென்றல் ஆன் லைன். காம், தென்றல் சந்திப்பு, தென்றல் நேர்காணல், தென்றல் மாத இதழ், நாஞ்சில் நாடன், நேர்காணல், நேர்முகம், பரிமாற்றம், புனைவு, பேட்டி, Magazines, Magz, Nanjil Nadan, Swaminathan, Tamil language, Tamil Nadu, Thendral, USA
Tamil Writer S Ramakrishnan Interview in Thendral by Arvind Swaminathan: Literary Icons Series
May 13, 2012 Snapjudge 1 comment
தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளி எஸ். ராமகிருஷ்ணன். வெகுஜன வாசகர்களிடம் இலக்கியத்தைக் கொண்டு சேர்த்ததில் முக்கியமானவர். வாசகனை அப்படியே ஈர்த்துக் கொள்ளும் தனித்துவமான மொழிக்குச் சொந்தக்காரர். இலக்கியச் சிந்தனை விருது, இயல் விருது, விஸ்டம் விருது, கண்ணதாசன் விருது, நல்லி-திசையெட்டும் விருது, இலக்கியச் சுடர் விருது, தாகூர் விருது எனப் பல விருதுகள் பெற்றவர். உலக சினிமா, உலக எழுத்தாளர்கள் என உலக இலக்கியங்கள் பலவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர். இன்றும் தனது பல சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் வழியாக அப்பணியைத் தீவிரமாகச் செய்து கொண்டிருப்பவர். சமீபத்தில், ரஷ்ய கலாச்சார மையத்தில் உலக இலக்கியம் பற்றி இவர் ஆற்றியுள்ள சொற்பொழிவு தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இவருடைய நூல்கள் கல்லூரிகளிலும் பல்கலைக்கழங்களிலும் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. இவருடைய படைப்புகளைப் பற்றி ஆராய்ந்து பலர் எம்ஃபில், பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இலக்கியம், பத்திரிக்கை, சினிமா, குறும்படம், நாடகம், ஆய்வு, பயிலரங்குகள், இணையம் என்று மிகத் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவரை தென்றலுக்காகச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து…
கே: உங்களது எழுத்துக்கான விதை விழுந்தது எப்போது, எப்படி?
ப: என்னுடைய ஊர் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணறு. பூர்வீகமாக விவசாயக் குடும்பம். இருந்தாலும் இரண்டு தலைமுறைகளுக்கு முன்பாகவே கல்வியைப் பிரதானமாக எடுத்துக் கொண்ட குடும்பம். அப்பா, அம்மா இரண்டு வழியிலும் எல்லோருமே படித்தவர்கள். அப்பா கால்நடை மருத்துவர். சித்தப்பா எஞ்சினியர். அந்தச் சின்ன கிராமத்தில் எல்லா நாளிதழ்களும், பத்திரிகைகளும் எங்கள் வீட்டுக்கு வரும். வீட்டில் ஒரு நூலகமும் இருந்தது. எனக்கு இரண்டு விதமான பாதிப்புகள் இருந்தன. ஒன்று, அம்மா வழி தாத்தா மூலம் வந்தது. அவர் சைவ சித்தாந்தத்தில் மிகப்பெரிய அறிஞர். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் நல்ல புலமை உடையவர். அவர் எல்லாத் தமிழ் இலக்கியங்களையும் கற்று வைத்திருந்தார். அப்பா வழித் தாத்தா பெரியார்வழிச் சிந்தனை உடையவர். தாத்தா வீட்டுக்கே ‘பெரியார் இல்லம்’ என்றுதான் பெயர். திராவிட இயக்கத்தின் ஆரம்பகால பாதிப்பு எங்கள் குடும்பத்தில் இருந்தது. சீர்திருத்தத் திருமணங்கள், அரசியல் விவாதங்கள், பகுத்தறிவு சிந்தனைகள் வீட்டிற்குள் அறிமுகமாயின . ஆகவே என்னுடைய சிறுவயது வாழ்க்கை இந்த இரண்டு
எதிர்துருவங்களுக்குள் இருந்தது. ஆனாலும் அவர்கள் எல்லோருமே படிப்பதை, விவாதிப்பதை, பேசுவதை, எழுதுவதை நேசிப்பவர்களாக இருந்தார்கள். என்னுடைய அண்ணன், மாமா சித்தப்பா என எல்லோரும் இலக்கியம், எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். எழுத்துக்கான ஒரு களம் என் வீட்டில் இருந்தது.
எனது சித்தப்பாவுக்கு ரஷ்ய மொழி தெரியும் என்பதால் நிறைய ரஷ்ய நூல்கள், சஞ்சிகைகளை அவர் வாங்குவார். வீட்டிலும், நூலகத்திலும், நண்பர்கள் சொல்லும் நூல்களைப் படித்தும் எனது எழுத்தார்வத்தை வளர்த்துக் கொண்டேன். கல்லூரிப் பருவத்திலேயே நான் எழுத்தாளர் ஆவதென்று முடிவு செய்துவிட்டேன். ஆங்கில இலக்கியம் படித்தேன். காலிகட் யூனிவர்சிடியில் நாட்டுப்புற இலக்கியத்தில் பிஎச்.டி. செய்தேன். ஆனால் கல்வி அடிப்படைத் தகுதியாக இருந்தால் போதும். அதை வைத்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற முடிவுக்கு வந்தேன். ஒரு சாதாரண மனிதன் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்கிறானோ அப்படி எதிர்கொள்ள நினைத்தேன். அதற்காக என்னைத் தயார்ப்படுத்திக் கொண்டேன். ஐந்தாண்டுகள் இந்தியாவின் எல்லா முக்கியமான நூலகங்களுக்கும் சென்று படித்தேன். இந்தியாவைப் பற்றி முழுமையாக அறிய வேண்டும் என்ற எண்ணத்தில் நிறையப் பயணம் செய்தேன். படித்த புத்தகங்களை விட, நான் கற்றுக்கொண்ட எல்லாவற்றையும் விட, நேரடி வாழ்க்கை மிகப் பெரியது; அது கற்றுத்தரும் பாடம் மிகப்பெரிது என்பதை என் பயணங்களில் தெரிந்து கொண்டேன். ஒரு தேசாந்திரியாக என்னைக் கருதிப் பயணம் செய்துகொண்டே இருந்தேன். அந்தப் பயண அனுபவங்களும், படித்த விஷயங்களும், எனக்கு வழிகாட்டியவர்களும், நான் படித்து வியந்த உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளர்களும்தான் நான் எழுதுவதற்குக் காரணம். இப்போதும் அதே மனநிலையில் கற்றுக்கொள்வது, பயணம் செய்வது, தேடிப்போவது என்ற ஆர்வங்களுடன்தான் இருக்கிறேன். எழுத்து, பயணம் இரண்டும் மாறி மாறி நடந்துகொண்டு இருக்கிறது.
கே: உங்களது முதல் கதை குறித்து…
ப: என்னுடைய முதல் கதை ‘கபாடபுரம்’. கபாடபுரம் என்னும் அழிந்து போன நகரைப் பற்றிப் படித்தபோது எனக்குள் ஒரு கற்பனை தோன்றியது. அதைக் கதையாக எழுதினேன். அந்தப் பிரதி பின்னால் தொலைந்து போய் விட்டது. அச்சில் வெளியான என்னுடைய முதல் கதை ‘பழைய தண்டவாளம்’. கணையாழியில் வெளியானது. அந்தக் கதைக்கே எனக்கு ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு கிடைத்தது. என்னுடைய முதல் புத்தகத்துக்குச் சிறந்த புத்தகம் விருது கிடைத்தது. ஆக, நான் எழுதத் தொடங்கும் போதே அடையாளம் காணப்பட்ட ஒரு எழுத்தாளன்தான். அதற்கு முக்கியமான காரணம், நான் எழுதத் தொடங்குவதற்கு முன்னால் பத்தாண்டுக் காலம் அதற்காகத் தயார் ஆனேன். ஆங்கில இலக்கியம், உலக இலக்கியம் என நிறையப் படித்தேன். விடுமுறை நாட்களில் நிறைய நேரம் படித்துக் கொண்டேயிருப்பேன். காலை, மாலை நண்பர்களுடன் விளையாடும் நேரம் தவிர்த்து வேப்ப மரத்து அடியில் அல்லது கிணற்றுப் படிக்கட்டுகளில் அமர்ந்து படித்துக் கொண்டிருப்பது எனது இயல்பு. புத்தகங்களுடன் பயணம் செய்வது எனக்கு மிக விருப்பமானது. எனது குடும்பச் சூழலும் எனது படிப்பிற்குத் தடை சொல்லாத ஒன்றாக இருந்ததால் இது சாத்தியமானது.
கே: எழுத்தாளர் கோணங்கியுடன் சேர்ந்து நிறைய இலக்கியப் பயணங்கள் செய்திருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆம். கோணங்கி எனக்கு முன்பாக என் அண்ணனின் நண்பர். பயண விருப்பமே எங்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது, பயண ஆர்வம் உடையவர்கள் என்பதால் இணந்தே ஊர் சுற்றுவோம் ஆனால் ஒருவரையொருவர் சுமையாக நினைப்பதேயில்லை, அவரவர் விருப்பத்தின்படி பயணம் செய்வோம். ஒருவரையொருவர் கட்டுப்படுத்திக் கொள்ள மாட்டோம். ஒரே ஊரில் ஒரே இடத்தைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பார்வையும் அவருக்கு ஒரு பார்வையும் இருக்கும். அப்படிப் பயணத்திற்கான ஒரு நண்பர் கிடைப்பது அபூர்வம். கோணங்கியும் நானும் இரண்டு பறவைகள் போல. ஒரே வானத்தில் பறந்து கொண்டிருந்தாலும் எங்களின் இயல்புகள் வேறு. ஒரே மரத்தில் அந்தப் பறவைகள் அமரலாம். ஆனால் எந்தப் பறவை எப்போது பறக்கும் என்பது அதனதன் சுதந்திரம் சார்ந்தது. இப்போதும் நாங்கள் சந்திக்கிறோம். பயணம் செய்கிறோம். ஆனால் அவரவர்க்கான வழியில் செய்கிறோம். ஆனால் அந்தப் பயணங்களைப் பற்றி நான் அதிகம் எழுதியதில்லை. காரணம், அவை எழுதுவதற்கான விஷயமில்லை. வாழ்வதற்கான விஷயம்.
கே: வாசகனைக் கட்டிப்போடும் தனித்துவமான மொழி உங்களுடையது. இந்த மொழி ஆளுமை, எளிமை எப்படி வசப்பட்டது?
ப: மொழியில் எளிமை அவ்வளவு எளிதில் கைவந்து விடாது. நீங்கள் எழுதும் விஷயம் பற்றி எவ்வளவிற்குத் தெளிவாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு மொழியும் தெளிவாக, எளிமையாக இருக்கும். இதற்கு நல்ல மொழிப்பயிற்சி வேண்டும். அது ஒரு குதிரையை பழக்குவது போல. குதிரையை நீங்கள் தொடர்ந்து பழக்கிவிட்டால், அதற்கு நீங்கள் உத்தரவு போட வேண்டியதில்லை. உங்களுடைய தொடுதலே போதும். அது போலத்தான் மொழியும். நிறையப் படிக்க வேண்டும். தமிழில் சமகால இலக்கியங்களைப் போலவே செவ்வியல் இலக்கியங்களும் மிக முக்கியமானவை. நான் சங்க இலக்கியத்தில் இருந்து தனிப்பாடல்கள் வரை அவ்வளவையும் படித்திருக்கிறேன். என்னுடைய மொழிக்கு முக்கியத் தூண்டுதலாக இருந்தது நான் படித்த ரஷ்ய இலக்கியம். அதற்குப் பிறகு நான் உலக இலக்கியங்களைத் தேடிப் படித்தேன். லத்தீன் அமெரிக்க, பிரெஞ்சு, ஐரோப்பிய இலக்கியங்கள், ஆசிய இலக்கியம் என்று நிறையப் படித்தேன். இப்போதும் சமகால உலக இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். மொழியைப் பொறுத்தவரை சொல்பவரின் குரல் மிக முக்கியமான ஒன்று. அது நம்பகத்தன்மை உள்ளதாக, பொறுப்புணர்ச்சி மிக்கதாக, தன்னை முன்னிறுத்திக் கொள்ளாததாக இருக்க வேண்டும். இப்படி எனக்கென்று சில வழிகளை நான் உருவாக்கிக் கொண்டேன். வண்ணநிலவன் ஆகட்டும், புதுமைப்பித்தன், தி. ஜானகிராமன், ஜி. நாகராஜன், கு. அழகிரிசாமி, அசோகமித்திரன் ஆகட்டும்; நான் வியக்கும் இவர்கள் அனைவருமே தமக்கே உரிய தனித்துவமான ஒரு மொழியை வைத்திருக்கிறார்கள். ஜானகிராமன், புதுமைப்பித்தன் மாதிரி சில சொற்பமான எழுத்தாளர்களுக்கு மட்டுமே தனித்துவமான மொழி வசப்பட்டிருக்கிறது. அது ஆளுமையோடு சம்பந்தப்பட்டது. அவர்கள் இதற்காகவே வாழ்ந்திருக்கிறார்கள். நான் இப்போதும் கூட ஒரு கதையோ, கட்டுரையோ எழுதி முடித்து விட்டு எனக்குப் பிடித்த எழுத்தாளர்களைப் படித்துப் பார்க்கிறேன். அவர்கள் போன தூரம் அதிகம் என்றுதான் படுகிறது.
கே: வணிக எழுத்து, தீவிர எழுத்து, என்பதாக ஒரு படைப்பை அடையாளப்படுத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?
ப: நான் இந்தப் பிரிவினையை ஏற்றுக் கொள்வதில்லை. பத்திரிகையின் தரத்தை முடிவு செய்வது அதில் வெளியாகும் படைப்புகள்தாம். சிறு பத்திரிகைகளுக்கு ஒரு படைப்புச் சுதந்திரம் இருக்கிறது. எந்தத் துறை சார்ந்ததாக இருந்தாலும், எத்தனை பக்கம் உடையதாக இருந்தாலும் ஒரு படைப்பை அவற்றில் வெளியிட இயலும். ஒரு சிற்றிதழில் ‘ஏன் புத்த மதம் இந்தியாவில் அழிந்தது’ என்பதைப் படிக்க முடியும். ஆனால் வணிக இதழில் சாத்தியமல்ல. மொழி, பண்பாடு, கலை, கலாசாரம், சமூகம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்க வேண்டுமென்றால் அது சிற்றிதழ்களில் மட்டுமே சாத்தியம். வெகுஜன இதழ்கள் நாட்டு நடப்பையும், சமகாலத்தையும், கேளிக்கையையுமே அதிகம் முன்னிறுத்துகின்றன. அது வெகுஜன வாசகனுக்கானது என்றாலும் அதில் எழுத வேண்டுமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியது எழுத்தாளன். அது அவனுடைய சுதந்திரம். என்னைப் பொறுத்தவரை நான் ஒரு நோக்கத்துக்காக அதைத் தேர்வு செய்தேன். அதை நான் அடைந்து விட்டேன் என்றும் சொல்லலாம்.
சிற்றிதழ்களில் மோசமான படைப்பும் வெகுஜன இதழ்களில் நல்ல படைப்பும் வரத்தான் செய்கின்றது. வெகுஜன இதழ்களை விலக்க வேண்டியதில்லை. நான் அதிகம் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டது அதில்தான். எனது 16 வயதுவரை எந்தச் சிற்றிதழைப் படித்தேன்? விகடனும், குமுதமும், துக்ளக்கும், அம்புலிமாமாவும் படித்துத்தான் வளர்ந்தேன். பிறகு நான் என் பாதையைத் தேர்வு செய்து கொண்டபின் எனக்கு டால்ஸ்டாயும், செக்காவும், சத்யஜித் ரேயும் அறிமுகமானார்கள். அந்த வயதில் வெகுஜன இதழில் படித்த ஜெயகாந்தனும், சுஜாதாவும் இன்னமும் நினைவில் இருக்கிறார்கள். எழுத்து என்பது வெகுஜன வாசக வட்டத்தை அடைய வேண்டும் என நான் எண்ணுகிறேன். தமிழ்நாட்டின் மக்கள் தொகை ஏழு கோடி. ஒரு எழுத்தாளனின் புகழ்பெற்ற புத்தகம் 2000 பிரதி விற்றால் அதிகம். ஏழு கோடிப் பேரைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு லட்சம் பிரதிகளாவது விற்க வேண்டும். விற்கிறதா? தமிழ்நாட்டிலேயே அதிகம் விற்றது என்று பார்த்தால் பொன்னியின் செல்வனைச் சொல்லலாம். தமிழ்நாட்டில் பெஸ்ட் செல்லர்ஸே ஆயிரம், இரண்டாயிரம் தான். நாம் சின்ன வட்டத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறோம். இதில் ஏன் இத்தனை பாகுபாடு என்பதுதான் என் கேள்வி.
எனக்கு வெகுஜன இதழ், சிற்றிதழ் என்ற பேதம் இல்லை. இப்போதும் நான் எந்தச் சிற்றிதழ் படைப்பு கேட்டாலும் கொடுப்பேன். ஆனால் என் எழுத்தை வெளியிடப் போவது யார் என்பதைப் பார்ப்பேன். அதில் ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. கேட்பவர்கள் மதம் சார்ந்தவர்களாகவோ, அடிப்படை விஷயங்களில் சார்புநிலை எடுக்கிறவர்களாகவோ இருந்தால், அவர்கள் கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு இல்லையென்றால் அந்தப் பத்திரிகையில் நான் எழுதமாட்டேன்.
கே: சிற்றிதழ்களால் சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற கருத்து பரவலாக இருக்கிறதே!
ப: இல்லை. நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கிறது. என்னுடைய தலைமுறையைச் சேர்ந்த எல்லோரும் இலக்கியத்தை நோக்கி வந்ததற்குக் காரணமே சிற்றிதழ்கள்தாம். நான் உலக இலக்கியங்களை ஆங்கிலத்தின் மூலம் படித்துக் கொள்வேன். ஆங்கிலம் அறியாதவர்கள் என்ன செய்வர்? இன்றைக்குத் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களில் பலர் உலக இலக்கியங்கள் பற்றி அறிந்திருக்கிறார்கள் என்றால், காரணம் சிற்றிதழ்கள்தாம். மற்றுமொரு முக்கியமான விஷயம், தமிழ்நாட்டில் மிகவும் பேசப்பட்ட கதைகள் எதுவுமே வணிக இதழ்களில் வெளியானவை அல்ல. சிற்றிதழ்க்காரர்கள் ஒருமுனைப்புடன், கைக்காசைச் செலவு செய்து, எந்தப் பொருளாதாரப் பின்புலமும் இல்லாமல் முழுக்க முழுக்கத் தன்னார்வத்தினால் நடத்துகிறார்கள். வெகுஜன இதழ்களில் எழுத வாய்ப்புக் கிடைக்காதவர்களுக்கு சிற்றிதழ்கள் களமாக இருக்கின்றன. நானே ஒரு சிற்றிதழ் நடத்தியிருக்கிறேன். எனக்கு அதன் சுமை, கஷ்டம் என்னவென்று தெரியும். இன்றைக்குச் சிற்றிதழ்களின் வடிவம் மாறியிருக்கிறது. சிற்றிதழ்களின் பணிகளை ஓரளவுக்கு இன்று இணையம் செய்ய ஆரம்பித்து விட்டது என்றாலும் சிற்றிதழ்களுக்கான தேவை இருந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல; உலக மொழிகள் பலவற்றிலும் சிற்றிதழ்கள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. விற்பனை எண்ணிக்கை வேண்டுமானால் குறைவாக இருக்கலாமே தவிர, அவற்றுக்கான தேவை, முக்கியத்துவம் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வெகுஜன இலக்கியம், சிற்றிலக்கியம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று போட்டி இல்லை. இரண்டுமே வேறுபட்ட நீரோட்டம் கொண்டவை.
கே: குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு நீங்கள் குறிப்பிடத்தக்க அளவில் பங்காற்றி வருகிறீர்கள். முன்பிருந்த அளவுக்கு தற்போது சிறுவர் இதழ்கள் இல்லை, சிறுவர்களின் வாசிப்பார்வமும் வெகுவாகக் குறைந்திருக்கிறது. இதற்கு என்ன காரணம்? தீர்வு என்ன?
ப: முதல் காரணம் நமது கல்வி முறை. இரண்டாவது காரணம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள். நான் சிறுவனாக இருக்கும்போது நீதிபோதனை (Moral Studies) வகுப்பு இருந்தது. பள்ளியில் நூலகம் இருந்தது. அங்கே கதைகளைப் கேட்க, படிக்க வாய்ப்பு இருந்தது. எனது ஆசிரியர்கள் பல நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் அரசுப் பள்ளியில்தான் படித்தேன். ஆனால் தற்போது பிரமாண்டமான கல்விக் கூடங்கள் வந்து விட்டன. ஆனால் எங்கும் நீதிபோதனை வகுப்பு இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பள்ளிகளில் நூலகமே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை பராமரிக்கப்படாமல் மாணவர்களுக்குப் பயனற்றதாய் இருக்கிறது. ஆசிரியர்கள் பாடத்தை நடத்தினால் போதும் என்று நினைக்கிறார்கள். கல்வி தற்போது முழுக்க வணிகமாக மாறிவிட்டது. பெற்றோர்கள், தம் குழந்தைகள் நல்ல மதிப்பெண் பெற்றால் போதும்; அதற்குப் பாடப் புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் என்று நினைக்கிறார்களே தவிர குழந்தையின் அறிவு, சிந்தனை மேம்பட வேண்டும் என்று நினைப்பதில்லை.
மேலும், காட்சி ஊடகங்கள் செல்வாக்குப் பெற்ற தற்காலத்தில் சிறார்கள் படிப்பதைவிடப் பார்ப்பதையே அதிகம் விரும்புகிறார்கள். இன்றைய குழந்தைகளின் பொது அறிவும் புரிதலும் அதிகம். படித்த பெற்றோர்கள் இருக்கிறார்கள். கணினி இருக்கிறது. இணையம் இருக்கிறது. அன்றைக்கு அமெரிக்காவை நாங்கள் உலக உருண்டையில்தான் (Globe) பார்த்தோம். ஆனால் இன்றைக்கு இணையத்தின் மூலம் அமெரிக்காவை முழுமையாகப் பார்க்க முடியும். விஞ்ஞானம் வளர்ந்துள்ளது. ஆனால் அந்த அளவுக்குக் குழந்தை இலக்கியங்கள் வளரவில்லை. ஆசிரியர்கள் நல்ல விஷயங்களை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். பெற்றோர்கள் குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஆனால் இன்று கேளிக்கைக்குச் செலவழிக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்கள், குழந்தையின் அறிவு வளர்ச்சிக்குச் செலவு செய்யத் தயாராக இல்லை. ஆதரிப்பவர் இல்லாததால் சிறுவர் பத்திரிகைகள் குறைந்துவிட்டன. குழந்தைகளுக்கான எழுத்தாளர்களும் அதிகம் இல்லை. குழந்தை இலக்கியம் எப்படி வளரும்?
கே: ஆனால் ஹாரி பாட்டர் அதிகம் விற்கிறதே!
ப: உண்மை. என் வீட்டுக் குழந்தைகள்கூட ஹாரி பாட்டரை விரும்பி வாசிக்கிறார்கள். ரசிக்கிறார்கள். ஏனென்றால் அந்த மாதிரி தமிழில் எழுதுங்கள், படிக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் சிறுவயதில் காமிக்ஸ் படித்து வளர்ந்தவன். ஆனால் அந்த காமிக்ஸ் என் குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் விரும்புவது ‘மாங்கா’ மாதிரி, இன்றைக்குக் கிடைக்கும் நவீன கிராபிக்ஸ் நாவல்கள் மாதிரி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். அது மாதிரி ஏன் தமிழில் இல்லை என்று கேட்கின்றனர். இருக்கின்ற புத்தகங்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்கவில்லை. பிள்ளைகளுக்குப் பிடித்தமான புத்தகங்கள் அதிகம் வெளிவருவதில்லை. இதுதான் இன்றைய நிலை. நான் இதற்காகவே கதைப் பயிலரங்குகள் நடத்தி வருகிறேன். ஆசிரியர்களையும், மாணவர்களையும் தொடர்ந்து சந்தித்து வருகிறேன். பல ஆசிரியர்கள் டி.வி.யில் யாரோ சொன்ன கதைகளைச் சொல்கிறார்களே தவிர தாமாகக் கதை சொல்வதில்லை. கேட்பதுமில்லை. ஆக, கதை கேட்காத, கதை சொல்லாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும் என்பதற்காக நான் குழந்தைகளுக்காக பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறேன். இன்றைய சிறுவர்களின் மனநிலையை அறிந்து, அவர்களுக்கேற்ற மாதிரி எழுத வேண்டும் என்பதற்காக நான்காம் வகுப்பு படிக்கும் என் மகன் ஆகாஷுடன் இணைந்து ஏழு நூல்களை எழுதியிருக்கிறேன்.
இது தவிர பல பள்ளிகளுக்குச் சென்று அதன் ஆசிரியர்களுக்கு வகுப்பறையில் பாடத்தைத் தவிர என்னவெல்லாம் கற்றுக் கொடுக்கலாம், அதை எப்படிக் கற்றுக் கொடுக்கலாம் என்று தனியாக ஒரு பணிப்பட்டறை நடத்தி வருகிறேன். மாணவர்ளுக்குக் கதைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறேன். இந்த ஆண்டு மட்டுமே சுமார் ஆயிரம் ஆசிரியர்களைச் சந்தித்திருக்கிறேன். இந்தச் சந்திப்புகளில் எனக்குத் தெரிவது என்னவென்றால் படிக்க வைக்கப்பட வேண்டியது மாணவர்கள் அல்ல; ஆசிரியர்கள்தான் என்பது. ஆசிரியர்கள் படிப்பதில்லை; கேட்கவும் மாட்டார்கள். ஆக, குழந்தை இலக்கியம் வளர வேண்டும் என்றால் மாற்றம் முதலில் வர வேண்டியது ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் தான். இதுதவிர அரசு, பள்ளி நூலகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கம்ப்யூட்டர் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். அதோடு மாணவர்கள் கதைகள் படிக்க, இணையத்தில் கிடைக்கும் மின்-நூல்களை (E.Book) வாசிக்கச் சொல்லித் தரலாமே! இன்றைக்கு குழந்தைகள் விளையாட எத்தனையோ நவீனமான பூங்காங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றில் ஒன்றிலாவது ஒரு வாசகசாலை இருக்கிறதா? கல்வி சார்ந்த, அறிவு சார்ந்த செயல்பாடுகள் எதற்காவது இடமுண்டா? எதுவும் இல்லை. உடல் வளர்ந்தால் போதும் மனம் வளர வேண்டாம் என்று நினைத்தால் அந்தக் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கைதான் பாதிப்படையும். வளர வளர வாழ்க்கையில் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது சலிப்பும், வெறுப்பும், அச்சமுமே அவனைச் சூழும். ஆனால் புத்தகங்களும் இலக்கியங்களும் இவற்றையெல்லாம் எதிர்கொள்ளக் கற்றுத் தருகின்றன.
கே: இலக்கியவாதியான உங்களால் திரையுலகில் சுதந்திரமாகச் செயல்பட முடிகிறதா?
ப: எந்தத் துறையிலுமே நாம் முழுதும் சுதந்திரமாகச் செயல்பட முடியாது. சினிமாவும் அப்படித்தான். அது ஒரு கூட்டு முயற்சி. பலரது பங்களிப்புச் சேர்ந்துதான் ஒரு சினிமா உருவாகிறது. நான் எழுதியது நூறு சதவீதம் அப்படியே வெளிவராது. தயாரிப்புச் செலவுக்கேற்ப, நடிகர்களின் மனோநிலைக்கேற்ப, பல பொருளாதார பின்னணிக் காரணிகளுக்கேற்ப அது மாறும். சினிமாவுக்குத் தேவை ஒரு எழுத்தாளர்தான். இலக்கியவாதியாக இருப்பதன் அனுகூலம் என்னவென்றால் பல நுட்பங்களை நாம் அதில் செய்து பார்க்க முடிகிறது. ஒவ்வொரு படத்திலும் என்னுடைய இந்த முயற்சி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஆனால் நான் நினைத்ததை நூறு சதவீதம் அடைந்து விட்டேனா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்வேன். அதை நோக்கித்தான் நான் சென்று கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு படமும் ஒரு அனுபவம். சினிமா, அதன் உருவாக்கம், பின்னணி என்று நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இவ்வாறு கற்றுக் கொண்டதை வைத்து, சினிமாத் துறை சார்ந்து பின்னால் ஏதாவது செய்யும் எண்ணம் இருக்கிறது.
(ஆன்மீகம், நாத்திகம், கடவுள், இந்தியா, இன்றைய பதிப்புச்சூழல்கள், விருதுகள், இளம் படைப்பாளிகள், எழுத்தாளர்களுக்கிடையே எழும் சர்ச்சைகள், மொழிபெயர்ப்புகளின் அவசியம் இவை பற்றி அடுத்த இதழில்….)
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
எனது பயணங்கள்
பயணம் என்பது வெறும் ஊர் சுற்றுவதல்ல. அது ஒரு தேடுதல். அந்தத் தேடுதலைப் பலரும் ஓர் எல்லைக்குள் வைத்திருக்கிறார்கள். விடுமுறை நாட்களில் மட்டுமே வெளியில் சென்று மகிழ்ச்சியாக இருப்பது என்று. என் தந்தை என்னைவிட அதிகம் பயணம் செய்தவர். வீடுதான் உலகம் என நாம் நம்புகிறோம். வீட்டுக்குள் இருந்து கொண்டு உலகத்தைப் பார்க்கும்போது அது அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் நடந்து, பயணம் செய்து பார்த்தால் உலகம் இதமான ஒன்றாக இருக்கும். பயணங்களில் என்னுடைய தேடுதல், கதை எழுதுவதற்காக அல்ல. எல்லா மனித வெளிப்பாடுகளுக்குப் பின்பும் மனித மனம் எப்படி இயங்குகிறது, எப்படி அது கற்பனை செய்து கொள்கிறது, எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறது, தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்காக ஒரு மனிதன் எந்தெந்தத் துறையில் என்னவெல்லாம் செய்கிறான், அதற்குள் இலக்கியத்திற்கு என்ன இடம் இருக்கிறது – இதுதான் எனது தேடல். நான் வெறும் சிறுகதை, நாவல்கள் எழுதும் எழுத்தாளன் அல்ல. எனக்கு நிறைய கிளை வழிகள் உள்ளன. இவற்றின் வழியே எனது அடிப்படைத் தேடல் ஒன்றுதான். நம்முடைய வாழ்க்கையை, காலத்தை, முன்னோடிகளை எப்படிப் புரிந்து கொள்கிறோம், எப்படிப் பதிவு செய்கிறோம், எப்படி அடுத்து எடுத்துச் செல்லப் போகிறோம் என்பதுதான். நான் ஒரு தனிநபராக என்னை ஒருபோதும் உணருவதேயில்லை. நான் ஒரு வரலாற்றின், கலாசாரத்தின், இலக்கியப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக இருக்கிறேன். மானிட குலம் என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறேன். இப்படி எனக்கு நானேதான் ஒரு வரலாற்றுச் சின்னமாக இருக்கிறேன். ஒவ்வொரு மனிதனுமே அப்படித்தான். மூதாதையரின் வரலாறு அவனுள் இருக்கிறது. இதை ஒருவன் பிரித்துப் பார்த்து அறிந்து கொள்ள முடியாது என்பதால் மொத்தமாக இவற்றுக்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக் கொள்ளத்தான் வேண்டும். கடந்த காலத்துக்கும் சரி, எதிர்காலத்துக்கும் சரி, நிகழ்காலத்துக்கும் சரி. பிரச்சனைகளைச் சந்திப்பதற்கான பொறுப்புணர்வை ஒரு எழுத்தாளன் எடுத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் எனது எழுத்துக்களில் முதன்மைப்படுத்தி வருகிறேன்.
எஸ். ராமகிருஷ்ணன்
*****
நானும் ரஷ்ய இலக்கியமும்
நான் எளிய மொழியில் என் கருத்தைச் சொல்கிறேன். என்னுடைய முன்மாதிரிகளாக டால்ஸ்டாயையும், தஸ்தாவெஸ்கியையும், செகாவையும் எடுத்துக் கொண்டேன். அவர்கள் எப்படி எழுதுகிறார்கள் என்று பார்ப்பேன். உலகத்துக்கே ரஷ்ய இலக்கியத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு. அவர்கள்தான் முதன் முதலில் காட்சி இலக்கியங்களை எழுதியவர்கள். மனதின் நுட்பங்களை எழுதியவர்கள். ஒவ்வொரு நிமிடமும் மனம் எப்படிச் செயல்படுகிறது என்று கிட்டத்தட்ட உளவியல் பார்வையில் பார்ப்பதுபோல் மனிதனை அணுகக்கூடிய அந்த எழுத்து முறை ரஷ்யாவில்தான் வந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொன்று என்னவென்றால் ரஷ்ய இலக்கியத்தில் சொல்லப்பட்டவர்கள் எல்லாமே சாமான்ய மக்கள். குதிரை வண்டி ஓட்டுபவன், எளிய மனிதர்கள், மருத்துவமனையில் இருப்பவர்கள், நோயாளிகள் என்று சாதாரண மனிதர்களைத்தான் அது கொண்டாடுகிறதே தவிர ஜார் மன்னனையோ, வணிக முதலாளிகளையோ அது பேசுவதில்லை. ரஷ்ய இலக்கியத்திலிருந்து நான் இதை எடுத்துக் கொண்டேன். மனித மனம் எப்படியெல்லாம் இயங்குகிறது, தடுமாற்றம் கொள்கிறது, என்னென்ன அக, புற மாறுதல்களைச் சந்திக்கிறது என்பதை எழுதலாம். அவை மனிதனின் ஆதாரப் பிரச்சனைகளைத் தொடர்ந்து பேசுகின்றன. பசி, துயரம், மரணம், வெற்றி, தோல்விகள், மனிதனுக்குக் கடவுள் தேவையா, விஞ்ஞானத்தை எப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் மிக விரிவாக அவை பேசுகின்றன. இப்படி ஆதாரமான மனிதத் துறைகளை இலக்கியமே பேசுகிறது. என் எழுத்தில் ரஷ்ய இலக்கியத்தின் தாக்கம் இருக்கும். அதை ரஷ்யப் பாணி எழுத்து என்றே சொல்லலாம். எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமாகும் முன்பே செகாவும், டால்ஸ்டாயும் அறிமுகமாகி விட்டார்கள்.
எஸ். ராமகிருஷ்ணன்
கே: இலக்கியத்தின், எழுத்தாளரின் பணி எதுவென்று நினைக்கிறீர்கள்?
ப: எழுத்தாளன் புதியவற்றைப் படைப்பது ஒருபுறம் என்றாலும், நிறைய நினைவுபடுத்துவதும், கவனமூட்டுவதும், தவறவிடும்போது சுட்டிக்காட்டுவதும் அவனது முக்கியமான பணிகள் என்று கருதுகிறேன். என்னதான் அறம், நீதி போன்றவற்றைச் சொல்லும் பல நூல்கள் நமக்கு இருந்தாலும், அந்த அறக்கோட்பாடுகளை தனிநபர்கள் பின்பற்றவேயில்லை. இன்றைய சகல பிரச்சனைகளுக்கும் காரணம், நமது சுயநலமே. அது தான் இயற்கையை விட்டு நம்மை பிரித்து வைத்து இயற்கையை அழித்து விற்பனை பொருளாக்கி வைத்திருக்கிறது. ஜன்னல் இல்லாத வீடுகளில், வெளிச்சம் வராத இல்லங்களில், இயற்கையின் குரலைக் கேட்க முடியாத சூழலில் வாழ்கிறோம். இயற்கையின் ஒரு பகுதியான நாம், அதைத் துண்டித்துக் கொண்டு வாழ முற்படும்போது மன நெருக்கடிகள் உண்டாகின்றன. அதைப்பற்றிய குற்றவுணர்ச்சி கூட நமக்கில்லை. இதையே என் படைப்புகளில் சுட்டிக் காட்டுகிறேன்.
என்னுடைய சிறுவயதில் நாங்கள் தண்ணீரை விலை கொடுத்து வாங்கியதில்லை. இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறேன். ஒரு போதும் தண்ணீரை சுமந்து கொண்டு போனதே இல்லை. எல்லா இடங்களிலும் நல்ல தண்ணீர் கிடைத்தது. விலை கொடுத்து தண்ணீரை வாங்குவது பாவம் என்று கருதப்பட்டது ஆனால் இன்று? பாக்கெட்டில் பாட்டிலில் மட்டும் தான் குடிநீர் கிடைக்கிறது, இப்படி எளிமையாக கிடைத்த இயற்கையின செல்வங்களை விலைக்கு வாங்க வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது, இதற்கு நாம் காரணமில்லை என்று நினைக்கிறோம். இலக்கியத்தின் பணி இதைச் சுட்டிக் காட்டுவதாக உள்ளது. மனிதனுடைய அன்றாடப் பிரச்சனைகளை, பொருளாதாரச் சிக்கல்களை மட்டும் பேசுவது இலக்கியமல்ல. அதையும் தாண்டி அவன் பின்பற்ற வேண்டிய அறத்தை, மறந்து போன விழுமியங்களை, கவனிக்க மறந்த சுற்றுச் சூழலை, சுட்டிக் காட்டுவதும் இலக்கியத்தின் பணிதான்.
கே: இன்றைய பதிப்புச் சூழல் எப்படி இருக்கிறது?
ப: சமீபமாக புத்தகம் வாங்குபவர்கள் அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் படிப்பவர்கள் குறைவாக இருக்கிறார்கள். புத்தகமும் ஒரு வணிகச் சந்தைப் பொருளாகி விட்டது, அதனால் எது நல்ல புத்தகம் என்று தேர்வு செய்வது சிரமமானதாக இருக்கிறது. புத்தகச் சந்தை விரிவடைவதால் நிறைய முதலீட்டாளர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்டுக்கு 300 புதிய தமிழ் புத்தகங்களாவது வருகின்றன. அவற்றில் எண்பது சதவீதம் குப்பை. இன்று ஐநூறு ரூபாய் பணம் கொடுத்து புத்தகம் வாங்கத் தயாராக இருக்கிறார்கள். ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிக்கத் தயாராக இல்லை, பதிப்புத் துறையில் இன்றும முறையான எடிட்டர்கள் கிடையாது. மொழிபெயர்ப்பு நூல்களை பதிப்பிக்கும் போது உரிமை வாங்குவதில்லை. மூல எழுத்தாளர் பற்றிய குறிப்புகள் கூட கிடையாது, ராயல்டி என்று பார்த்தால் தமிழ்நாட்டில் ஒன்றிரண்டு எழுத்தாளர்களைத் தவிர பெரும்பாலோருக்கு அது கிடைப்பதே இல்லை. ராயல்டி தொகையை வைத்து வாழ்க்கை நடத்த முடியாது. ஒரு சிறுகதைத் தொகுப்பிற்கு தரப்படும் ராயல்டியை வைத்து ஒரு பேண்ட் சர்ட் கூட வாங்க முடியாது. ஏழு கோடி தமிழ் மக்கள் உள்ள தமிழ்நாட்டில் அதிகம் விற்பனையாகும் புத்தகத்தின் எண்ணிக்கை ஐந்தாயிரம்தான். அதுதான் இலக்கிய சாதனை. இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய பதிப்பு சூழல்.
கே: எழுத்தாளர்களிடையே காணப்படும் சர்ச்சைகள், சச்சரவுகளுக்கு என்ன காரணம்?
ப: விஞ்ஞானத்தில், அரசியலில், சமூகத் தளத்தில் இல்லாத சர்ச்சைகளா? எல்லாத் துறைகளிலுமே சர்ச்சைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் அது பதவி, அதிகாரம் மற்றும் பொறாமையால் உருவாகக் கூடியது. இலக்கிய சர்ச்சைகளின் நோக்கம் பெரும்பாலும் மாறுபட்ட அபிப்ராயங்கள், ரசனை வேறுபாடுகளால் உருவாகிறது. ஒருவருக்கு சார்த்த்ரை பிடிக்கிறது; மற்றவருக்கு திருக்குறளைப் பிடிக்கிறது, அந்த ரசனை மாறுபாடு இரண்டு கருத்துருவங்களை உருவாக்கிவிடுகிறது.
இன்னொரு தளம் எழுத்தாளர்கள் மற்றவர்களின் படைப்புகளை விமர்சிப்பதன் வழியே உருவாகும் சண்டை. இதுவும் அபிப்ராய பேதம்தான், மற்றபடி எழுத்தாளர்களும் சராசரி மனிதர்களே. அவர்களின் உணர்ச்சிவேகமும் கோபமும் சண்டைகளை உருவாக்கவே செய்யும். ஆனால் அது முற்றி ஒருபோதும் பகையாவதில்லை. எதிர்துருவங்களாக உள்ள எழுத்தாளர்கள் கூட எளிதாகச் சந்தித்துப் பேசிக் கொள்ளும் சூழல் இருக்கவே செய்கிறது.
பொதுவாக எழுத்தாளர்கள் எல்லோருக்குமே ஒரு ‘ஈகோ’ இருக்கும். அது மற்றவர்களிடம் காணப்படுவதை விட மேம்பட்ட ஈகோவாக இருக்கும். அதனால் எழுத்தாளர்கள் எதிலுமே உணர்ச்சி வசப்பட்டுச் சட்டென்று கருத்துச் சொல்லிவிடுவார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யாரும் வன்முறையைக் கைக்கொள்வதில்லை. வஞ்சம் தீர்ப்பதில்லை. கோபத்தில் படபடவென எழுதிவிடுகிறார்கள். அதோடு முடிந்து போய்விடுகிறது. ஆனால். பிற துறைகளில் அப்படி இல்லை. அந்தப் பகைமை ஒருவனை ஒன்றுமே இல்லாமல்கூட ஆக்கிவிடுகிறது. எழுத்துத் துறையில் அப்படி ஒருபோதும் நடப்பதில்லை.
கே: விருதுகள் தகுதியானவர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்று ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. உங்கள் கருத்து என்ன?
ப: விருதும் சர்சையும் உடன்பிறந்தவை. காரணம் எந்த ஒரு சிறந்த எழுத்தாளர் பரிசு பெறும்போதும் யாரோ ஒருவர் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படவே செய்வார். அத்தோடு விருது பெற்றவர் மட்டும்தான் நல்ல எழுத்தாளரா என்ற கோபம் உருவாகவே செய்யும். டால்ஸ்டாய்க்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை. அதற்காக அவர் என்ன சாதாரண எழுத்தாளரா?
வாசகன் எழுத்தாளனுக்கு எப்போதும் மானசீகமான விருதுகளைத் தந்து கொண்டேதானிருக்கிறான். அது ஒரு கைகுலுக்கலாகவோ, ஒரு தேநீரை வாங்கி தருவதாகவோ, ஒரு பேனா பரிசளிப்பதாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், அந்தப் பரிசு உயர்வானது.
ஒருமுறை பழனி கோவிலுக்குச் சென்றிருந்தேன். அடிவாரத்தில் இட்லிக் கடை வைத்திருக்கும் ஒரு அம்மா என்னைப் பார்த்து, “நீங்கள் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் தானே!” என்றார். “ஆமாம்” என்றேன். “என் பையன் உங்க புத்தகத்தைப் படிப்பான். இருங்க. நான் போய் அவனை வரச் சொல்றேன்” என்று கூறிவிட்டுப் போனார். அந்தப் பையன் வந்தான். அவன் கல்லூரியில் முதலாமாண்டு படிப்பவன். நான் அவனுடன் பேசிவிட்டு என் அறைக்கு வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து அந்த அம்மா ஒரு தட்டில் ஐந்து இட்லி, சட்னி கொண்டு வந்து கொடுத்து, “எங்களால இதுதான் தம்பி உங்களுக்குக் கொடுக்க முடிஞ்சது. சாப்பிடுங்க” என்று சொல்லிக் கொடுத்தார். அவர் ஏன் அதைக் கொடுக்கிறார்? அவரை எனக்கு முன்பின் தெரியாது. அவர் என்னைப் படித்தவரில்லை என்றாலும் அவர் எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். அந்த அன்பினால் அதைக் கொடுக்கிறார். இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு. இது போன்ற பரிசும் பாராட்டும் ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் போதுதான் அவன் நம்பிக்கையும் உத்வேகமும் அடைகிறான். மற்றபடி மிகப் பெரிய விருதுகளை ஒருவித கூச்சத்தோடும், சமயத்தில் அது உருவாக்கக்கூடிய பிரச்சனைகளோடும்தான் எதிர்கொள்கிறான்.
கே: ஆன்மீகம், நாத்திகம் இரண்டும் கலந்த சூழலில் இளமையில் வாழ்ந்துள்ளீர்கள். உங்களுக்குள் அவை ஏற்படுத்திய தாக்கங்கள் என்ன?
ப: இரண்டிலும் எனக்கு தேவையானதை நான் எடுத்துக் கொண்டேன். மனித வாழ்க்கையின் துயரங்கள், சிக்கல்கள் இவற்றிலிருந்து விடுபட மனிதனுக்கு உதவி செய்ய ஏதோ ஒன்று தேவையாக இருக்கிறது. அது பகுத்தறிவா மதமா என்று இரண்டு வழிகள் முன்னிருக்கின்றன. நான் இந்த இரண்டிலும் கலந்த இலக்கியம் என்ற மூன்றாவது வழியை நம்புகின்றவன். அது பகுத்தறிவையும் பேசுகிறது. புராணீகத்தையும் ஏற்றுக் கொள்கிறது. இதையேதான் இலக்கியமும் செய்கிறது; அறிவுத் துறைகளும் செய்கின்றன. மனித வாழ்க்கைக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் எழுத்தின் மிகப்பெரிய வேலை. அந்த நம்பிக்கை எந்த வடிவத்தில் வந்தாலும் அதை எழுத்து முன்மொழியத்தான் செய்யும்.
எனக்கு சடங்கு, சம்பிரதாயங்களின் மீது விருப்பம் இல்லை. அதேசமயம் வறட்டுப் பகுத்தறிவு வாதத்தையும் நான் ஏற்றுக் கொள்வதில்லை. இரண்டையும் ஆராய்ந்து பார்த்துப் புரிந்து கொள்வதையே விரும்புகிறேன்.
கே: புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் தமிழ் இலக்கிய வளர்ச்சி குறித்து…
ப: இன்றைக்குத் தமிழ் இலக்கியம் தமிழ்நாட்டில் மட்டும் எழுதப்படுவது மட்டுமல்லாமல், உலகம் முழுதுவும் எழுதப்படுகிறது. அப்படித்தான் ஆங்கில இலக்கியம் இருக்கிறது. அவர்கள் இருக்கும் இடத்தை வைத்து பிரிட்டிஷ் இலக்கியம், ஐரிஷ் இலக்கியம், அமெரிக்க இலக்கியம் என்று கூறப்படுவது போல்தான் தமிழ் இலக்கியமும். அது சிங்கப்பூரில், மலேசியாவில், கனடாவில், இலங்கையில் இருக்கிறது, அமெரிக்காவிலும் இருக்கிறது. தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் இலக்கியம் எழுதப்படுகிறது. மலேசியாவை எடுத்துக் கொண்டால் அவர்கள் தமிழர்களைப் பற்றி மட்டும் எழுதுவதில்லை. சீனர்களைப் பற்றி, மலாய் மக்களைப் பற்றி, தங்கள் வாழ்விடம், சூழல் பற்றி, பௌத்த மதம் பற்றி… இப்படி நிறைய எழுதுகிறார்கள். சிங்கப்பூரில் வாழ்பவர்கள் தமது புலம் பெயர்ந்த வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்கள். இலங்கையைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு நாடுகளில் தாம் வாழும் சூழல்களை எழுதுகிறார்கள். அதே சமயம் தன்னுடைய வேர்களைப் பற்றியும் எழுதுகிறார்கள். அமெரிக்காவில் உள்ளவர்கள் அங்குள்ள பன்னாட்டுக் கலாசாரத்தைப் பற்றி எழுதுகிறார்கள். தமிழ் அடையாளம் வேர்கள் குறித்து ஆழ்ந்து சிந்திக்கிறார்கள், இன்றைக்கு இலக்கியத்தின் திசை மாறி இருக்கிறது. அது பன்னாட்டுக் கலாசாரத்தின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி இருக்கிறது. அதற்கு தமிழ் மக்கள் பலநாடுகளிலும் புலம்பெயர்ந்து சென்று வாழ்வதே காரணம்
ஆனால் அயல்நாடுகளில் வாழ்ந்து கொண்டு தமிழில் எழுதுவது ஒரு பெரிய சவால். அதை எதிர்கொண்டு தங்களை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்பதுதான் அதன் முக்கியமான பலம்
தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவதை விடவும் அயல்நாடுகளில் தமிழ் இலக்கியம் கொண்டாடப்படுகிறது, எனது யாமம் நாவல் வெளியான உடன் கனடாவில் இருந்து ‘இயல் விருது’ கொடுக்கப்பட்டது. பின்னர்தான் அதற்குத் ‘தாகூர் விருது’ கிடைத்தது. ஆக அவர்கள் எங்கோ தொலைவில் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். உரிய கௌரவத்தை அளிக்கிறார்கள். ஆனால் அங்கிருப்பவர்களின் படைப்புக்கு தமிழ்நாட்டில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா என்று கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் தமிழ் மக்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே எது நடந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் நான் இவர்களை, இவர்களது படைப்புகளை சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறேன். அது என் கடமையும்கூட.
தமிழ் இலக்கியம் உலகு தழுவிய இலக்கியமாக மாற வேண்டும், அதற்கு உடனடித் தேவை ஆங்கில மொழிபெயர்ப்புகள், மற்றும் கல்விப்புலங்களில் தமிழ் இலக்கியம் பாடமாக அறிமுகமாவது. இரண்டையும் அயல்தேசங்களில் வசிப்பவர்கள் முன்கை எடுத்துச் செய்தால் தமிழ் இலக்கியம் உலகின் முக்கிய இலக்கியமாக கொண்டாடப்படும்.
கே: உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள், படைப்பாளிகள் குறித்து…
ப: தமிழக அளவில் பார்த்தால் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்கள் புதுமைப்பித்தனும் வண்ணநிலவனும்தான். இவர்களை நான் அடிக்கடி திரும்பப் படிக்கிறேன். கவிஞர்களில் பிரமீளையும் நகுலனையும் தேவதச்சனையும் விரும்பி படிக்கிறேன். சமகால எழுத்தாளர்களில் சந்திரா, மனோஜ், சங்கர ராம சுப்ரமணியன், லட்சுமி சரவணக்குமார், பவா. செல்லத்துரை இவர்களை விரும்பி வாசிக்கிறேன்.
உலக அளவில் எப்போதும் என்னுடைய ஆசான்களாகக் கருதுவது டால்ஸ்டாயும் தஸ்தாவெஸ்கியும்தான். இலங்கையில் கவிஞர் சேரனும், உமா வரதராஜனும், கவிஞர் அனாரும், திசேராவும், ரஷ்மியும் முக்கியமானவர்கள். மலேசியாவில் ரெ. கார்த்திகேசுவும் பாலமுருகனும், சிங்கப்பூரில் லதா, ஜெயந்தி சங்கர் இருவரையும் வாசிக்கிறேன். ஆஸ்திரேலியாவில் வாழும் நடேசன், பெர்லினில் வாழும் கருணாகரமூர்த்தி இவர்களும் விருப்பமானவர்களே. என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட் கனடாவில் வாழும் அ.முத்துலிங்கம் அவர்கள்தான்.
கே: எழுத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர் நீங்கள். இதன் சாதக, பாதகங்கள் என்ன?
ப: எழுத்தையே நம்பி வாழ்வது மிகச் சிரமமான ஒன்று. அதற்காக நிறையப் படிக்க வேண்டும். பயணம் செய்ய வேண்டும். உரிய கௌவரம் மரியாதை எதுவும் கிடைக்காது, மாதவருமானம் என்ற ஒன்று ஒரு போதும் கிடைக்காது, கூடுதலாக எழுதியதற்காக நாலு பேர் சண்டை போடுவார்கள். வசை பொழிவார்கள், அத்தனையும் சந்திக்க வேண்டும். நான் இந்த இடர்ப்பாடுகளை ஏற்றுக்கொண்டுதான் வாழ்கிறேன். முழுநேர எழுத்தாளனாக வாழமுடியும் என்று நிருபித்துக் காட்டியிருக்கிறேன். வருவாய் பிரச்சனை எப்போதுமே இருக்கிறது. அந்த நெருக்கடியில் இருந்து மீள வருடத்திற்கு ஒரு திரைப்படத்தில் வேலை செய்கிறேன். இதனால் ஆறுமாதம் நிம்மதியாக வாழமுடிகிறது. மற்றபடி புத்தகங்களில் கிடைக்கும் வருவாய் புத்தகம் வாங்கவும் பயணம் செய்யவும் போதாமல் தானிருக்கிறது
முழுநேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு அளவில்லாத சுதந்திரம். என் விருப்பத்துக்கேற்ப என்னால் வாழ முடிகிறது. என்னுடைய நேரம் என் கையில் இருக்கிறது. என் மனைவி, பிள்ளைகள், அண்ணன், குடும்பம், நண்பர்கள் என்று எல்லோரும் சேர்ந்து இந்தச் சுதந்திரத்தைத் தந்திருக்கின்றனர்.
இதன் பாதகம் என்னவென்றால் எதிர்காலத்தைப் பற்றி பயம், நிச்சயமின்மை இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அது எனக்குப் பிடித்திருக்கிறது. ஏனென்றால் உலகத்தில் மனிதனைத் தவிர எல்லா உயிர்களுமே இதே பதற்றம், போராட்டத்துடன் தானே வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
கே: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
ப: புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு, குறிப்பாக அமெரிக்காவில் வசிக்கும் தமிழர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்று உண்டு. அவர்களில் ஒவ்வொருவரும் ஒரு புத்தகத்தையாவது தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழியாக்கம் செய்ய வேண்டும். நூறு பேர் முயன்றால்கூட வருஷம் நூறு புத்தகம் ஆங்கிலத்தில் வந்துவிடும். தனிநபர்கள் செய்ய சிரமமானதாக இருந்தால் தமிழ் அமைப்புகள் ஆண்டுதோறும் பத்துப் புத்தகங்களையாவது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம், தமிழ் இலக்கியம் குறித்து ஆங்கில இதழ்களுக்கு எழுதலாம். பல்கலைக்கழகங்களில் உரையாற்றலாம். எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஆதங்கம், தமிழின் நல்ல புத்தகங்கள் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளுக்குப் போய்ச் சேரவில்லையே என்பதுதான். இதை மாற்ற உடனே ஏதாவது செய்தாக வேண்டும்.
ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்வதை ஒரு கூட்டுச் சேவையாக கருதி அதற்கென தனி இணையதளத்தை உருவாக்கலாம். பிரபலமான பதிப்பகங்களுக்கு தமிழ்ப் புத்தகங்களை வெளியிடும்படி ஆலோசனைகள், பரிந்துரைகள் செய்யலாம். ஒஹென்றி விருதுச் சிறுகதைகள் போல ஆண்டுதோறும் சிறந்த இருபது சிறுகதைகளை ஆங்கிலத்தில் ஒரு தொகை நூலாக வெளியிடலாம். யூ டியூப்பில் தமிழ் இலக்கியம் குறித்த உரைகளை பதிவேற்றம் செய்யலாம். இதைத் தமிழ் நாட்டிலும் அயல்நாட்டிலும் கூட்டாகச் செய்யும்போது மட்டும்தான் தமிழ் இலக்கியம் மேம்பாடு அடையும்.
தங்கு தடையில்லாத, தனித்துவமான சிந்தனை ஓட்டம், மேதாவிலாசம் இவற்றைக் காண்கிறோம் எஸ்.ரா.வின் பதில்களில். “தென்றலை எனக்கு நன்கு தெரியும். நியூஜெர்ஸி வாசகர் முருகானந்தம் என்னைச் சந்திக்க வரும்போதெல்லாம் தென்றல் பிரதிகளைக் கொண்டு வந்து தருவார். மதுசூதனன் என்னைப் பற்றி எழுதிய கட்டுரையையும் வாசித்திருக்கிறேன். தென்றல் அமெரிக்காவில் தீவிரமான தமிழ்ப் பணி செய்து கொண்டிருக்கிறது என்பது எனக்கு நன்கு தெரியும்” என்கிறார் மாறாத புன்சிரிப்புடன். முக்கிய சந்திப்புக்காக வெளியே செல்லும் அவசரப் பணி இருந்த போதிலும் தென்றலுக்காக நீண்ட நேரம் ஒதுக்கி பதில் தந்தமைக்கு நன்றி கூறி, கேட்ட கேள்விகளைவிட கேளாதவை அதிகம் என்ற உணர்வோடு, விடை பெறுகிறோம்.
*****
கடவுள்
எந்த சக்தி மனிதனுக்கு உதவி செய்கிறதோ, எது மனிதனின் துயரத்தைப் பங்கு போட்டுக் கொள்கிறதோ, எது மனிதனை மேம்படுத்துகிறதோ, அது எல்லாமே எழுத்துக்கும் எழுத்தாளனுக்கு உகந்ததாகத்தானே இருக்க முடியும்? அதே நேரத்தில் மதத்தின் பெயரால் நடந்த துவேஷங்கள், மனித அவலங்கள், வெறுப்பு, தீண்டாமை போன்ற விஷயங்களை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. இப்போது என் முன்னால் இருக்கும் கேள்வி, கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்பதல்ல. கடவுள் தேவைப்படுகிறாரா, இல்லையா என்பதுதான். எனக்கு கடவுள் தேவையானவராக இருக்கிறார். ஆனால் நம்பும்படியானவராக இல்லை.
நான் எல்லாக் கோயில்களுக்கும் போயிருக்கிறேன். கோவில் என்பது ஒரு கூட்டுவெளி. அங்கே இசையும் சிற்பமும் தியானமும் ஒவியங்களும் ஒன்றுகலந்திருக்கின்றன. ஆகவே அந்த வெளி தனித்துவமானது. தேடித்தேடி கோவில்களுக்குப் போய் சிற்பங்களைக் கண்டிருக்கிறேன். வழிபாடுகளை நான் கேலி செய்வதில்லை. அது ஒரு நம்பிக்கை. அதை நம்புகிற மனிதன் ஏற்றுக் கொள்கிறான். நம்ப மறுக்கின்றவன் விலகிப் போகிறான். அவ்வளவே! மக்கள் எங்கெல்லாம் கூடுகிறார்களோ அந்த இடங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அவ்வாறு கூடும் பொதுவெளி இன்று குறைந்து கொண்டே வருகிறது. அதனால் தான் டிவியை நமது அகவெளியாக மாற்றிக் கொண்டுவிட்டோம்
எனது இந்தியா
இந்த தேசத்தில் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் ஒரு முறையாவது இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வேண்டும். இந்தியா என்பது நாம் வரைபடத்தில் பார்க்கும் இந்தியா அல்ல. அது ஒரு மிகப் பெரிய நிலப்பகுதி. அதை நாம் கற்பனை செய்யவே முடியாது. அவ்வளவு மாறுபட்ட கலாசாரங்கள், நம்பிக்கைகள், நிலக்காட்சிகள் இருக்கின்றன. இந்தியப் பயணத்தில் ஒவ்வொரு எட்டுமணி நேரத்திற்குப் பின்னரும் மாறுபட்ட நிலப்பகுதியை, கலாசாரத்தை, பழக்க வழக்கங்களை, உடையை, உணவை, மொழியை நாம் சந்திக்கிறோம். வேறெங்குமே இத்தனை வகைகளைப் பார்க்க முடியாது. தமிழகத்துக்குள்ளேயே சென்னையில், செங்கல்பட்டில், காஞ்சிபுரத்தில், ஆரணியில் என்று ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு விதமாக மொழி பேசப்படுகிறது. உணவு முறையில், பழக்க வழக்கத்தில் மாற்றம் உள்ளது. இவ்வளவும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா.
இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் இந்திய நதிகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் இந்தியா எவ்வளவு வளமையானது, எவ்வளவு பாரம்பரியமிக்கது என்பது புரியும். மொத்த இந்தியாவுமே நதிகளால் ஒன்றிணைக்கப்பட்ட நாடு. நதியை ஒட்டியே நகரங்கள் இருக்கின்றன. நதியை ஒட்டியே கலைகள், கலாசார மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இந்தியாவைத் தேடும் ஒரு பயணி நதியோடு கூடச் செல்பவனாகவே இருப்பான். நதி வழி நடந்தால்தான் இதைத் தெரிந்து கொள்ள முடியும். நான் தமிழ்நாட்டில் ஓடக் கூடிய ஏழு நதிகளையும் அதன் தொடக்கம் முதல் இறுதிவரை பயணம் செய்து பார்த்திருக்கிறேன். அதன் பழைய பாதை, புதிய பாதை, என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று பார்த்திருக்கிறேன். இந்தப் பயணத்திற்குப் பின்னால் தமிழ்நாட்டைப் பற்றி நான் கொண்டிருந்த மனச்சித்திரமே மாறிவிட்டது. தமிழ்நாடு எப்போதுமே வறுமையான நாடு என்ற எண்ணமே மாறிவிட்டது.
அதுபோல இந்தியா ஒரு பின்தங்கிய நாடு என்ற எண்ணமும் மாறிவிட்டது. இது அளப்பரிய செல்வம் கொண்ட நாடு. அவை முழுமையாக அடையாளம் காணப்படவில்லை அல்லது ஓரிடத்தில் மட்டுமே குவிந்திருக்கிறது என்பதுதான் நமது பிரச்சனை. இதைப் பயணம்தான் உணர்த்துகிறது. நான் வரலாற்றை பாடப் புத்தகங்களில் படித்ததை விட அதிகம் பயணம் செய்துதான் தெரிந்து கொண்டேன். கோட்டை, கொத்தளங்கள், கல்வெட்டுக்கள் மட்டும் வரலாறில்லை. நாம் பார்க்கும் மனிதனின் மொழி, உடை, அணிகலன் என்று பலவற்றில் இருக்கிறது. இந்தியாவில் இவற்றிற்கு ஒரு நீண்ட பாரம்பரியமும் இருக்கிறது. இந்தியா இந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.
இந்தியாவின் பிரச்சனைகள்
இந்தியா எல்லாவித பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, அது தன் மரபால் பலம் பெற்றதாக இருக்கிறது. ஆனால் சமகாலப் பிரச்சனைகள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. நாம் இந்தப் பிரச்சனைகளுக்கு மட்டுமே முதன்மை அளிப்பதால் நமது மரபு என்ன, நமது பாரம்பரிய பெருமைகள் என்ன, நம் பிரச்சனைகளை அந்த மரபான வழிகளின் மூலம் எதிர்கொள்வது எப்படி என்பது பற்றியெல்லாம் அறியாமல் இருக்கிறோம். சமீபத்தில் ஒரு பத்திரிகையில் படித்தேன், உலகத்தில் உள்ள இளைஞர்களின் எண்ணிக்கையில் அதிக அளவு இந்தியால்தான் இருக்கிறார்கள் என்று. ஆனால், நாம் அந்த இளைஞர்களின் ஆற்றலை உழைப்பாக மாற்றவில்லை. இங்குள்ள கலை, மரபுகளைப் பேண முயலவில்லை. கலாசாரம், பண்பாடு, வரலாறு, நாகரிகம் என அனைத்திலும் நமக்கு வலிமையான பாரம்பரியப் பின்புலம் உள்ளது. சுயநலத்திற்காக நாம் அவற்றை அழித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியனாக இருப்பது தனித்துவமிக்கது. அதை எப்போதும் பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்
ஆனால் வரலாற்றின் கொந்தளிப்பான சூழலில் நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது மட்டும் உண்மை. இதற்குத் தீர்வு என்று பார்த்தால், அறிவுத்துறை சார்ந்த இந்தியர்கள் உலகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தங்கள் ஆற்றலை, திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் இந்தியர்கள் செய்த அறிவுத்துறை மாற்றத்தை இந்தியாவிலும் செய்ய முன்வர வேண்டும். அப்படிச செய்தால் நம்முடைய இயற்கை வளங்களைக் கொண்டே நாம் நம்முடைய தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஒரு நல்ல மாற்றம் வரும்.
Categories: Uncategorized Tags: Arvind, Authors, அமெரிக்க மாத இதழ், உரையாடல், கலந்துரையாடல், சந்திப்பு, சிறப்பு நேர்காணல், செவ்வி, தென்றலின் குரல், தென்றல், தென்றல் ஆன் லைன், தென்றல் ஆன் லைன். காம், தென்றல் சந்திப்பு, தென்றல் நேர்காணல், தென்றல் பேசுகிறது, தென்றல் பேட்டி, தென்றல் மாத இதழ், நேர்காணல், நேர்முகம், பரிமாற்றம், பேட்டி, EssRaa, Icons, Interviews, Lit, Magz, Opinions, S Ramakrishnan, Speech, Swaminathan, Thendral, Thenral, Writers
RSS feed
Google
Youdao
Xian Guo
Zhua Xia
My Yahoo!
newsgator
Bloglines
iNezha
Picks from Tamil Blogs
Eyes Wide Open: Part 2 | Hidden Brain : NPR
How to Help Students Select Digital Tools and Resources
TikTok, BookTok, and You
Poet in exile, opium, a stolen manuscript: Va Ra's biography has it all - The Federal
rob mclennan's blog: Mark Goldstein, Part Thief, Part Carpenter
“Like-Minded People Keep Coming”: How One New Jersey Town Became a Magnet for the Media Elite | Vanity Fair
Four Cool Tools for Collection Development
Tamilonline - Thendral Tamil Magazine - Short Stories - Sarpatta Paramparai
Hundreds Of Unmarked Graves Found At Another Former School For Indigenous Children : NPR
The Power of Questions | by Christine Smallwood | The New York Review of Books
Ekphrastic Poetry: When Art Kindles Literature | Notes of Oak
‹ The Best Reviewed Books of 2020: Nonfiction Book Marks
Asian American Voices in Poetry | Poetry Foundation
A Poetic Moment: Hindi poetry witnessing a huge rise in popularity - The Financial Express
Arrow by Sumita Chakraborty | Zingara Poetry Review
Poems of a Man 'Robbed of His Country': 'In Praise of Defeat' by Abdellatif Laâbi – ZYZZYVA
Tamil Playing card (Poker Tamil) on Behance
7 Engaging Short Story Collections by Indian Writers
The best short stories classic and modern
Vol. 43 No. 13 · 1 July 2021 Ten Small Raisins Erin Maglaque
Top Posts
கால் முளைத்த கதைகள் - எஸ். ராமகிஷ்ணன் - உயிர்மை பதிப்பகம்
புவியிலோரிடம் - ச.திருமலை
Writer Sujatha about Islam: Reading Quran as a Non-Muslim: Dinamani Ramzan Malar 2003
எழுத்தாளர்களுக்கு... சிறுகதை எழுதுவது எப்படி? - டிப்ஸ்
அம்மாவின் பொய்கள் - ஞானக்கூத்தன் (1971)
Writer SV Ramakrishnan: எஸ்.வி. ராமகிருஷ்ணன்
Sujatha Turns 70 - Katrathum Petrathum: Anandha Vikadan
A Muttulingam
USA Pongal Celebrations with Crazy Mohan, Pattimanram Raja, Dance Festivals: FETNA Special in Winter: American Tamil Sangam: New Jersey Thamils Association |
எந்தவொரு செலவும் இல்லாமல் எளிமையான பயிற்சிகள் மூலம் சருமத்தை அழகூட்டலாம். அந்த பயிற்சிகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
சரும அழகை பராமரிப்பதற்கு அழகு சாதன பொருட்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டியதில்லை. தினமும் சில நிமிடங்கள் ஒதுக்கினாலே போதும். எந்தவொரு செலவும் இல்லாமல் எளிமையான பயிற்சிகள் மூலம் சருமத்தை அழகூட்டலாம். அதன் ஆரோக்கியத்தையும் பேணலாம்.
நெற்றியில் ஆள்காட்டி விரலை வைத்து வட்ட வடிவில் அதனை அழுத்தி தேய்த்து பயிற்சி செய்யலாம். அவ்வாறு செய்வதன் மூலம் சருமத்தில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். நெற்றியில் ஏற்படும் சுருக்கங்களும் காணாமல் போய்விடும். இதற்காக தினமும் ஐந்து நிமிடங்கள் ஒதுக்கினாலே போதுமானது. கண்களையும் வட்ட வடிவில் சுழல விட்டு பயிற்சி செய்யலாம்.
கன்னங்கள் நன்றாக உப்பிய நிலையில் இருக்க வேண்டும் என்று சிலர் விரும்புவார்கள். வாய்க்குள் காற்றை உள்ளிழுத்து கன்னங்களை நன்றாக உப்பிய நிலையில் 30 விநாடிகள் வைத்திருக்க வேண்டும். பின்பு கொஞ்சம் கொஞ்சமாக காற்றை வெளியேற்ற வேண்டும். இவ்வாறு தினமும் 10 முறை செய்து வந்தால் கன்னம் புசுபுசுவென்று மாற தொடங்கிவிடும்.
முக தசைகளுக்கு பொலிவு சேர்ப்பதற்கு எழுத்து பயிற்சிகளும் கை கொடுக்கும். முதலில் ‘ஏ’ என்ற எழுத்தை அழுத்தம் திருத்தமாக, சத்தமாக உச்சரிக்க வேண்டும். அவ்வாறு நான்கு, ஐந்து முறை உச்சரிக்கலாம். பின்பு ஈ, யூ, ஓ போன்ற எழுத்துக்களை ஒவ்வொன்றாக உச்சரித்து பயிற்சி பெறலாம். ஓ, யூ போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும்போது நாக்கை நன்றாக உட்புறமாக மடித்து பயிற்சி மேற்கொள்ள வேண்டும். தினமும் ஒவ்வொரு எழுத்தையும் ஐந்து முறை உச்சரித்து வரலாம்.
வாய் பகுதிக்கும் பயிற்சி அளிப்பது முக தசைகளுக்கு வலுவும், பொலிவும் சேர்க்கும். வாயை எவ்வளவு திறக்க முடியுமோ அந்த அளவிற்கு நன்றாக திறந்து புன்னகைத்தவாறு இயல்பு நிலைக்கு தளர விட வேண்டும். அவ்வாறு தொடர்ந்து 10 முறை செய்து வரலாம். சோர்வாக இருக்கும் சமயங்களிலும் இந்த பயிற்சியை செய்யலாம். இது முகத்தில் வெளிப்படும் சோர்வை நீக்கி விடும். சருமமும் புத்துணர்ச்சி பெறும்.
https://www.youtube.com/watch?v=videoseries
Source link
Share on Social Media
Post navigation
chennai floods: வேளச்சேரி, பள்ளிக்கரணையில் தண்ணீர் தேங்குவது ஏன்?: விஜய் பட இயக்குநர் செம விளக்கம் – chennai rains: netizens troll chimbu deven
Dennis Lingo Men’s Casual Shirt
By kiddosmile
Related Post
விளையாட்டு
beast: Vijay: பீஸ்ட் போட்டோ வெளியிட்ட நெல்சன்: ஜூம் செய்து 2 பேரை பார்க்கும் விஜய் ரசிகர்கள் – it is 100th day of shooting: nelson dilipkumar about beast
Nov 28, 2021 kiddosmile
விளையாட்டு
Tripura Results Testimony to People’s Unwavering Trust in BJP’s Politics of Development: Amit Shah
Nov 28, 2021 kiddosmile
விளையாட்டு
travel ban: பயணத் தடை இன்றே அமல்: அரசு அதிரடி உத்தரவு! – sri lanka imposes travel ban to south africa due to omicron virus
Nov 28, 2021 kiddosmile
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
You missed
விளையாட்டு
beast: Vijay: பீஸ்ட் போட்டோ வெளியிட்ட நெல்சன்: ஜூம் செய்து 2 பேரை பார்க்கும் விஜய் ரசிகர்கள் – it is 100th day of shooting: nelson dilipkumar about beast
Nov 28, 2021 kiddosmile
விளையாட்டு
Tripura Results Testimony to People’s Unwavering Trust in BJP’s Politics of Development: Amit Shah
Nov 28, 2021 kiddosmile
விளையாட்டு
travel ban: பயணத் தடை இன்றே அமல்: அரசு அதிரடி உத்தரவு! – sri lanka imposes travel ban to south africa due to omicron virus
Nov 28, 2021 kiddosmile
விளையாட்டு
கோயில்களை ஆகமவிதிப்படி திறக்க வலியுறுத்தல்| Dinamalar
Nov 28, 2021 kiddosmile
Archives
Archives Select Month November 2021 (2514) October 2021 (3829) September 2021 (6012) August 2021 (4949) July 2021 (3548) June 2021 (3787) May 2021 (4245) April 2021 (3499) March 2021 (411) February 2021 (2912) January 2021 (3398) December 2020 (4894) November 2020 (4657) October 2020 (6233) September 2020 (10445) August 2020 (10297) |
கன்னியா போராட்டத்தின்போது தென் கயிலை ஆதீனம் தாக்கப்பட்ட சம்வத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாக மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவை இன்று வெளியிட்டுள்ள தமது கண்டன அறிக்கயில் தெரிவித்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,
கன்னியா போராட்டத்தின்போது ஆதீன சுவாமிகள் மீது சுடு நீர் வீசி தாக்குதல் நடாத்திய சம்பவமானது கடும் கண்டனத்திற்குரியது.
இந்து சமயத்திலே உயர் நிலையில் இருக்கும் எமது சுவாமி மீது நடாத்தப்பட்ட இச் சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதோடு எமது மதத்தின் தலைவர்களுகளுக்குரிய கௌரவத்தினையும் உரிய முறையில் வழங்க வேண்டும் என நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
சாத்வீகமான முறையில் கன்னியாவின் தமிழர் பூர்வீகத்தை பாதுகாக்கும் போராட்டத்தை வழி நடத்திய ஆன்மீக தலைவர்களில் ஒருவராகிய வணக்கத்துக்குரிய தென் கயிலை ஆதீனத்தின் மீது கூடு நீர் வீச்சினை மேற்கொண்டவர்கள் மீது இது வரை எந்த நடவடிக்கையுமில்லை என நாம் அறிகின்றோம்.
கன்னியா போராட்டத்தை அகிம்சை முறையில் மேற்கொண்ட மக்களை அடக்க முற்பட்டு வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்து எமது சமய தலைவர்களில் ஒருவரும் தமிழர்களின் பூர்வீக கன்னியாவை மீட்கும் போராட்டத்தின் முதன்மை வழி காட்டியுமான தென் கயிலை ஆதீன முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு இழைக்கப்பட்ட கொடுஞ் செயலுக்கு நீதி வேண்டும் என மன்னார் மாவட்ட இந்துக் குருமார் பேரவையினர் தமது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். (நி) |
“பேன்ட பீயை இடுப்பில் கட்டிக் கொண்டே இருப்பது தான் நாகரீகமா அந்த நாகரிகமே எனக்கு தேவை இல்லை” -ஏதோ ஒரு படத்தில் இடம்பேற்ற வசனம் நினைவுக்கு வருகிறது.
என்று பெண்கள் சானிடரி நாப்கின்ஸ் உபயோகப்படுத்த துவங்கினார்களோ அன்றே கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள்னு ஆரம்பித்து கர்ப்பப்பை புற்றுநோய் முதல் குழந்தை பெற்றுக் கொள்வதே அதிசய காரியம் என்ற நிலை வரை சென்றுவிட்டது இன்றைய மெத்த படித்த இளையதலைமுறை.
ஒரு காலத்தில் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் மட்டுமே உபயோப்படுத்தபட்ட சானிட்டரி நாப்கின்ஸ் இன்று இளம் பெண்களிலிருந்து வயதானவர்கள் வரை சர்வசாதாரணமாக அதன் விளைவு தெரியாமல் எல்லா நேரங்களிலும் உபயோப்படுத்தபடுத்தும் நிலைமையில் இருக்கு, தற்பொழுது அடுத்த கட்ட வளர்ச்சியாக குழந்தைகள் உபயோப்படுத்த கூடிய டையபர்ஸ்.
குழந்தைகளை வெளியில் அழைத்து செல்லும் போழுது குழந்தைகளுடைய மல ஜலம் பெற்றோர்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக உபயோகப்படுத்தப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் தற்சமயம் ரொம்ப மாடர்னா இருக்க கூடிய இளம்வயது தாய்மார்களோட சௌகரியத்திற்க்காக பகல், இரவு என எல்லா நேரங்களிலும் வீட்டில் இருக்கும் போழுதே குழந்தைகள் டையபர்ஸ் அணிந்தபடியே இருக்கும் சூழ்நிலையில் உருவாக்கப்பட்டு உள்ளது.
உடல் வெளியோற்றிய உடனடியாக அப்புறபடுத்த வேன்டிய கழிவு பொருட்களை குழந்தைகள் 2 முதல் 3 மணி நேரம் தனது உடல் உறுப்பு கூடவே ஒட்டி இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலையில் டையபர்ஸால் ஈரத்தன்மை மட்டுமே உறிஞ்சப்படுகிறது ஆனால் அதிலிருக்ககூடிய கிருமிகள் உடம்பில் பட்டு அதன் பாதிப்பு நிச்சயமாக குழந்தைக்கு ஏற்படுகிறது என்பதை இன்றைய தலைமுறை உணர்ந்து கொள்வதே கிடையாது.
கழிவுப் பொருட்களுடைய பாதிப்பு மட்டுமில்லாமல் நாப்கின்ஸ் மற்றும் டையரில் உபயோகிக்கக் கூடிய வேதிப்பொருட்கள் உடல் உறுப்புகள் வழியாக உள்ளே சென்று ஏற்படுத்தும் பாதிப்புகளையும் மறந்துவிடுகிறோம்.
குழந்தைகளுக்கு போடக்கூடிய டையபர்ஸ்ல பிதலேட்(PHTHALATE) என்ற நச்சு இரசாயனப் பொருள் உபயோகப்படுத்தப்பட்டு இருப்பதாக டாக்சிக் லிங்க் என்ற இணையதளம் தெரிவிக்கிறது. (பெண்கள் உபயோகப்படுத்தக்கூடிய சானிட்டரி நாப்கின்களிலும் இது பயன்படுத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது)
இந்த நச்சு இரசாயனப் பொருள் மனித உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியது, இது பிளாஸ்டிக் பொருட்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
டயபடீஸ், இன்சுலின் சுரப்பதில் ஏற்படும் குறைபாடுகள், #மார்பக புற்றுநோய், #உடல்_பருமன், வளர்சிதை மாற்றக் குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு, சிறு குழந்தைகளுக்கு கவனமின்மை, IQ குறைதல், ஹைப்பர் ஆக்டிவிட்டி, சமூகத்தோடு இணைந்து வாழ இயலாமை, #நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சியில் ஏற்படும் மாற்றங்கள், ஆஸ்துமா, சுவாசப் பாதை தொற்றுகள், ஆண்மை குறைவு, #விதைப்பை_புற்றுநோய் போன்ற பிரச்சனைகளால் சிறு வயதினர் முதல் பெரியவர் வரை பாதிக்கபடுகின்றனர்.
இத்தகைய ஒரு கொடிய நச்சுப் பொருளை அதாவது புற்றுநோய் காரணியை குழந்தைகளுக்கும் கொடுத்து நாமும் சுமந்து திரிகிறோம் என்பதே தவிர்க்க முடியாத உண்மை. இதுவே இன்றைய மாடர்ன் டெக்னாலஜி பெற்றோர்களின் சாதனை.
தயவுசெய்து அதி அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் சானிடரி நாப்கின் மற்றும் டையபர்ஸை தவிர்த்து நோய்களையும் தவிர்ப்போம்.
“நோயற்ற வாழ்வே சிறந்த வரம் என்பதை தெரிந்துகொள்ளுங்கள், தங்கள் குழந்தைகளுக்கு அந்த வரத்தை தந்தருளுங்கள்”.
The 9 Dangers of Using a Sanitary Pad and How to Protect Yourself
Every woman relies on sanitary pads and tampons to see her through her menses. But have you ever spared a thought to how safe these products are? Are tampons or pads healthier? Find out how they can be dangerous and get introduced to safer alternatives.
Blessed are the people who came up with the idea of sanitary napkins. Isn’t this a thought that comes to your mind every month? Sanitary napkins can see you through the heaviest of flows without making you feel uncomfortable. But are they safe? Studies have shown that they aren’t as innocuous as they seem to be!
Are Sanitary Pads Safe?
Time and again, environmentalists have stressed on the fact that used sanitary pads and tampons pose a big threat to the environment. This is mainly due to the chemicals that are present in them. If they’re harmful to the environment, how can they be good for you? Let’s take a look at the harmful ingredients used in these feminine hygiene products.
1. Dioxin
If you thought that sanitary napkins look white because the cotton used is white, think again. Cotton has a creamy shade and isn’t white. Manufacturers use a chemical called dioxin to bleach pads and make them white.
2. Pesticides
No, they’re not sprayed onto pads directly. Pesticides find their way into sanitary pads as they’re sprayed on by cultivators of cotton.
3. Artificial Perfume
Thanks to fragrant sanitary napkins, you feel fresh all through your periods. The fact is, perfume is added by manufacturers to allure buyers. Just like other chemicals, they aren’t safe.
Possible Health Hazards of Sanitary Napkins
The chemicals used in the making of sanitary napkins can enter your bloodstream and wreak havoc on your health. Here are some potential health hazards of sanitary pads
Inflammation in the pelvic region
Cancer in the ovaries
Damaged immune system
Hormonal dysfunction
Infertility
Malfunctioning of the thyroid
Vaginal allergies
Rashes
Ailments related to the endometrium
Safer Options For Your Period
1. Menstrual Cups
While sanitary pads are made of unsafe products, a menstrual cup is made of medical grade silicone, which is extremely safe. It’s inserted into the vagina and the blood is collected in the cup. Once you put it in, you can be tension-free for up to 12 hours! It’s reusable and lasts for years.
2. Organic Sanitary Napkins
Pads that are organic don’t contain any artificial chemicals and pesticides, which makes them a safer alternative. But they aren’t reusable and you still have to be careful about how you dispose them.
4. Organic Cloth Pads
As the name suggests, organic cloth pads are made of cotton, bamboo or hemp and are covered with an organic cloth. You can wash them and reuse. They can last for a year or more, depending on how well you take care of them.
source: https://parenting.firstcry.com/articles/the-9-dangers-of-using-a-sanitary-pad-and-how-to-protect-yourself/
Leave a Reply Cancel reply
Your email address will not be published. Required fields are marked *
Comment
Name *
Email *
Website
Save my name, email, and website in this browser for the next time I comment.
Math Captcha
5 + 2 =
Categories
Categories Select Category English (319) Convert to Islam (13) Education (14) Essays (85) Family (11) Hadith (8) Haj (5) History (20) India News (20) Muslim World (34) News (9) Politics (4) QnA (19) Quran (3) Ramadhan (15) Science (7) Society (16) World News (36) Multimedia (6) Audio (2) Video (4) Uncategorized (10) இஸ்லாம் (3,747) ஆய்வுக்கட்டுரைகள் (200) இமாம் கஸ்ஸாலி (ரஹ்) (9) இம்மை மறுமை (110) இஸ்லாத்தை தழுவியோர் (90) கட்டுரைகள் (1,703) குர்ஆனும் விஞ்ஞானமும் (29) குர்ஆன் (190) கேள்வி பதில் (201) சொற்பொழிவுகள் (17) ஜகாத் (44) தொழுகை (149) நூல்கள் (40) நோன்பு (135) வரலாறு (378) ஹஜ் (57) ஹதீஸ் (215) ஹஸீனா அம்மா பக்கங்கள் (19) ‘துஆ’க்கள் (43) ‘ஷிர்க்’ – இணை வைப்பு (118) கட்டுரைகள் (3,081) Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) (154) அப்துர் ரஹ்மான் உமரி (53) அரசியல் (311) உடல் நலம் (446) எச்சரிக்கை! (103) கதைகள் (63) கதையல்ல நிஜம் (108) கல்வி (84) கவிதைகள் (161) குண நலன்கள் (303) சட்டங்கள் (55) சமூக அக்கரை (675) நாட்டு நடப்பு (82) பொது (352) பொருளாதாரம் (27) விஞ்ஞானம் (104) குடும்பம் (1,522) M.A. முஹம்மது அலீ (48) ஆண்-பெண் பாலியல் (83) ஆண்கள் (73) இல்லறம் (484) குழந்தைகள் (183) செய்திகள் (1) பெண்கள் (585) பெற்றோர்-உறவினர் (65) செய்திகள் (328) இந்தியா (142) உலகம் (130) ஒரு வரி (10) கல்வி (32) தமிழ் நாடு (1) முக்கிய நிகழ்வுகள் (13)
Archives
Archives Select Month November 2021 (13) October 2021 (17) September 2021 (8) May 2021 (2) April 2021 (15) March 2021 (17) February 2021 (17) January 2021 (17) December 2020 (20) November 2020 (17) October 2020 (18) September 2020 (20) August 2020 (31) July 2020 (30) June 2020 (21) May 2020 (27) April 2020 (22) March 2020 (30) February 2020 (19) January 2020 (22) December 2019 (25) November 2019 (14) October 2019 (15) September 2019 (16) August 2019 (18) July 2019 (16) June 2019 (15) May 2019 (12) April 2019 (12) March 2019 (17) February 2019 (17) January 2019 (27) December 2018 (35) November 2018 (18) October 2018 (22) September 2018 (31) August 2018 (27) July 2018 (16) June 2018 (12) May 2018 (14) April 2018 (22) March 2018 (29) February 2018 (30) January 2018 (35) December 2017 (23) November 2017 (30) October 2017 (33) September 2017 (28) August 2017 (30) July 2017 (30) June 2017 (19) May 2017 (34) April 2017 (31) March 2017 (35) February 2017 (36) January 2017 (27) December 2016 (59) November 2016 (48) October 2016 (44) September 2016 (41) August 2016 (27) July 2016 (33) June 2016 (42) May 2016 (52) April 2016 (53) March 2016 (37) February 2016 (42) January 2016 (64) December 2015 (47) November 2015 (40) October 2015 (36) September 2015 (65) August 2015 (56) July 2015 (35) June 2015 (42) May 2015 (58) April 2015 (79) March 2015 (40) February 2015 (29) January 2015 (54) December 2014 (79) November 2014 (66) October 2014 (78) September 2014 (67) August 2014 (62) July 2014 (84) June 2014 (82) May 2014 (100) April 2014 (84) March 2014 (92) February 2014 (80) January 2014 (85) December 2013 (69) November 2013 (91) October 2013 (89) September 2013 (68) August 2013 (76) July 2013 (101) June 2013 (84) May 2013 (94) April 2013 (13) March 2013 (84) February 2013 (64) January 2013 (85) December 2012 (93) November 2012 (106) October 2012 (82) September 2012 (92) June 2012 (50) May 2012 (103) April 2012 (145) March 2012 (103) February 2012 (168) January 2012 (44) December 2011 (125) November 2011 (99) October 2011 (112) September 2011 (90) August 2011 (130) July 2011 (150) June 2011 (86) May 2011 (138) April 2011 (30) March 2011 (148) February 2011 (97) January 2011 (61) December 2010 (103) November 2010 (87) October 2010 (129) September 2010 (145) August 2010 (114) July 2010 (70) June 2010 (130) May 2010 (131) April 2010 (116) March 2010 (134) February 2010 (99) January 2010 (154) December 2009 (136) November 2009 (106) October 2009 (61) September 2009 (66) August 2009 (61) July 2009 (55) June 2009 (53) May 2009 (81) April 2009 (43) March 2009 (70) February 2009 (43) January 2009 (64) December 2008 (29) November 2008 (35) October 2008 (31) September 2008 (63) August 2008 (114)
Recent Posts
வக்பு வாரியம் முஸ்லிம்களுக்கு என்ன செய்திருக்கிறது?
ஆன்மீக வறுமையும் அதற்கான பரிகாரமும்
இமாம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களின் வாழ்வும், பணியும், செல்வாக்கும்!
விசாரணையின்றி சொர்க்கம் செல்வோர்!
கோவை மாவட்டம் R.S.புரம் சின்மயா வித்யாலயா பள்ளிக்கூட மாணவி தற்கொலை தொடர்பாக NCHRO அமைப்பு மேற்கொண்ட உண்மை கண்டறியும் குழுவின் இடைக்கால அறிக்கை |
கடாயில் எண்ணெயை காயவைத்து சீரகம், காய்ந்தமிளகாய், பூண்டு, கறிவேப்பிலை, வெங்காயத்தை வதக்கி அரைத்த மசாலாத்தூள், கனவா மீன், உப்பு சேர்த்து நன்றாக வறுத்து இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும். |
NIYAYAM on பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்
ஆசிரியர் on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
NIYAYAM on கியூபா நாட்டின் புரட்சித் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான பிடல் காஸ்ட்ரோ அவரது 90-வது வயதில் இன்று விடைபெறுகிறார், அவருக்கு எங்களின் இறுதி மரியாதை….
SDPT - புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. on புழல் முகாமில், தோழர்பத்மநாபா மற்றும் அன்னை இந்திராகாந்தி பிந்தநாள் அனுஸ்டிக்கப்பட்டது. |
கும் போது, ஒருசில மூடநம்பிக் கைகளானது மக்கள் மத்தியில் உள்ளது. அது என்னவென்றால், ஆண்களுக்கு வலது கண் துடித் தால், நல்லது நடக்கும், அதுவே பெண்களுக்கென்றால் தீமை ஏற் படும் என்றும், ஆண்களுக்கு இடது கண் துடித்தால் கெட்டது நடக்கப்போகிறது, அதுவே பெண்களுக்கானால் நல்லது நடக்கும் என்று நம்புகின்றனர். உண்மையில் இது மிகப்பெரிய முட்டாள்தனமான ஒரு மூடநம்பிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.
ஆம், நல்லது கெட்டது நடப்பதற் கும், கண்களுக்கும் எப்படி தொடர் பு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சிந்திக்காமல், குருட்டுத்தனமாக பலர் நம்பிக் கொண் டிருக்கிறார் கள். ஆனால் உண்மையில் இந்த மாதிரி கண்கள் துடிப்பதற்கு, உட லில் ஒருசில பிரச்சனைகள் உள்ள து என்பதற்கான அறிகுறியாகும். அதுமட்டுமல்லாமல், கண்கள்
துடிப் பதற்கு “மயோகிமியா” (myokymia) என்று பெயர். இத்தகைய கண் துடிப்பு அல்லது தசைச் சுருக்கம் ஏற்படுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம், தூக்க மின்மை, அதிகமாக காப்ஃபைன் உட் கொள்ளுதல் மற்றும் பல காரணங்களா கும். சிலருக்கு கண் துடிப்பான து ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் கூட இருக்கலாம். சரி, இப்போது இந்த கண் துடிப்பு ஏற்படு வதற்கான காரணங்கள் என்னவென்று பட்டிய
லிட்டுள்ளோம்.
அதைப்படித்து தெரிந்துகொண்டு, கண் கள் துடித்தால் என்ன செய்ய வேண்டு மோ, அதை செய்து கண் துடிப்பில் இருந்து விடுபடுங்கள்.
மன அழுத்தம்:
மன அழுத்தமானது அதிகம் இரு ந்தாலும் கண்கள் துடிக்க ஆரம்பி க்கும். எனவே மன அழுத்ததைக் குறைக்கும் செயல்களில் ஈடுபட் டால், அடிக்கடி கண்கள் துடிப் பதை தவிர்க்கலாம்.
தூக்கமின்மை:
மன அழுத்தம் அதிகம் இருந்தால், தூக்கமின்மை பிரச்சனையை சந்திக்க நேரிடும். இவ்வாறு சரியான தூக்கம் இல்லாவிட்டால், கண்களானது துடிக்கும்.
கண்களுக்கு சிரமம்:
கண்களுக்கு அதிகப்படியான சிரமத்தைக் கொடுத்தாலும், கண்
கள் துடிக்க ஆரம்பிக்கும். உதார ணமாக, படிக்கும் போது சரியாக தெரியாவிட்டால், அப்போது கண் களை பரிசோதித்து, அதற்கு கண் ணாடிகளை போடாமல், சிரமப் படுத்தி அப்படியே படித்து கண்க ளுக்கு சிரமம் கொடுத்தாலும், கண்கள் துடிக்கும். மேலும் நீண் ட நேரம் கம்ப்யூட்டர் அல்லது மொபைல்களை பார்த்துக் கொண்டே இருந்தால், கண்கள் களைப் படைந்துவிடும். இதனால் கண்களு க்கு அழுத்தம் ஏற்பட்டு துடிக்க
ஆரம்பிக்கும்.
ஆகவே கம்ப்யூட்டர் அல்லது மொபைல் பயன்படுத்தும் போது, சரியான கண்ணாடிக ளை அணிந்து கொண்டு பயன்படுத்தினால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
காப்ஃபைன்:
அதிகமாக காப்ஃபைன் உள்ள பொரு ட்களான காபி, டீ போன்றவற்றை அருந்தினாலும், கண்கள் துடிக்க ஆர ம்பிக்கும். எனவே இத்தகைய பொரு ட்களை அதிகம் பருகுவதை தவிர்ப் பது நல்லது.
ஆல்கஹால்:
ஆல்கஹாலை அதிகம் குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, கண் கள் துடிக்கும். ஆகவே ஆல்கஹா லை அதிகம் பருகாமல், மருந்து போன்று எடுத்துக் கொள்வது நல்லது.
கண் வறட்சி:
கண் வறட்சியினாலும், கண்கள் துடிக்க ஆரம்பிக்கும். போதிய
தண்ணீர் பருகாமல் இருப்பது, கம்ப்யூட்டர் முன் அதிக நேரம் இருப் பது, காப்ஃபைன் உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள் வது, மன அழுத்தம், சோர்வு போன்றவற் றால் கண்களானது வறட்சிய டைகிறது. ஆகவே இத்தகைய செயல்களை தவிர்த் தால், கண் வறட்சியில் இருந்து விடுபட லாம்.
ஊட்டச்சத்து குறைபாடு:
சி
ல ஆய்வுகள் உடலில் ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் கண்க ளில் உள்ள தசைகள் துடிக்க ஆரம்பிக்கும் என்று சொல்கிறது. அதிலும் மக்னீசியம் குறை பாடு இருந்தால், கண்கள் துடிக்கும் என்று கூறுகிறது. ஆகவே சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு முறைக ளை மேற்கொண்டால், கண்கள் துடிப்ப தை தவிர்க்கலாம்.
அலர்ஜி:
சிலருக்கு கண் அலர்ஜிகள் ஏற்படும். கண் அலர்ஜிகளான கண்க
ளில் அரிப்பு, வீக்கம், கண்கள் சிவப் பாகி கண்ணீர் வடிதல் போன்றவற் றின் போது, கண்களை தேய்த்தால் வெளிவரும் ஹிஸ்டமைன் கண் திசுக்களில் நுழைந்து, கண்களை துடிக்க வைக்கும். ஆகவே கண் அலர்ஜி இருந்தால், அப்போது தேய்க்காமல், கண் மருத்துவரை அணுகி, சரியான மருந்துகளை எடுத்துக் கொண்டால், கண் துடிப்பில் இருந்து விடுபடலாம்.
இது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல!
Post Views: 3,057
Share this:
Tweet
WhatsApp
Print
Share Chat
Telegram
Pocket
Share on Tumblr
instagram
Like this:
Like Loading...
Related
Posted in தெரிந்து கொள்ளுங்கள் - Learn more, மருத்துவம்
Tagged myokymia, என்ன, ஏற்படுவதற்கான, ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?, கண், கண் துடிப்பு, கண் துடிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன?, காரணங்கள், துடிப்பு, மயோகிமியா
Prevஒரு பெண்ணின் வயிற்றை கிழித்து குழந்தையை வெளியே எடுக்கும் நேரடி காட்சி – வீடியோ
Nextஉங்கள் துணை உச்ச கட்டத்திற்கு செல்வதன் அறிகுறிகளை காட்டும் அங்கங்கள்
One Comment
Anonymous
அருமையான கருத்து..
Loading...
July 24, 2015 at 7:35 pm
Reply
Leave a Reply Cancel reply
சங்கு – அரிய தகவல்
Search for:
Advertisement
Categories
Categories Select Category HMS (2) Training (1) Uncategorized (32) அதிசயங்கள் – Wonders (581) அதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும் (779) அரசியல் (164) அழகு குறிப்பு (707) ஆசிரியர் பக்கம் (292) “ஆவிகள் இல்லையடி பாப்பா!” (1) “எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே!” (1) “சென்னையில் ஒரு நாள் . . . .!” (1) “பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்” (1) தலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா? (1) நோட்டா (NOTA) ஜெயித்தால் . . . (1) பாரதி காணாத புதுமைப்பெண்கள் (1) பெயர் வைக்க பாடலாசிரியரின் அனுமதி வேண்டும் (1) ஆன்மிகம் (1,021) பகவத் கீதை (முழுத் தொகுப்பு) (3) ஆன்மீக பாடல்கள் (14) இசை (கர்நாடக இசை) (18) ராக மழை (8) இணையதள முகவரிகள் (6) இதழ்கள் (217) உரத்த சிந்தனை (183) சட்டத்தமிழ் (1) சத்தியபூமி (2) தமிழ்ப்பணி (1) புது வரவு (1) விதைவிருட்சம் (1) ஸ்ரீ முருக விஜயம் (4) இவரைப் பற்றி சில வரிகள்… (1) உங்கள் இடம் (1) உங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்! (27) உடற்பயிற்சி செய்ய (54) உடலுறவு (1) உடை உடுத்துதல் (61) உரத்த சிந்தனை மாத இதழ் (2) எந்திரவியல் (7) கடி வேண்டுமா? (10) கட்டுரைகள் (51) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (63) கணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள் (9) கணிணி தளம் (740) கதை (56) நீதிக்கதைகள் (28) கலைகள் (36) கல்வி (332) அறிவியல் ஆயிரம் (19) ஆரம்பக் கல்வி (32) தேர்வு முடிவுகள் (7) கல்வெட்டு (254) காமசூத்திரம் (134) கார்ட்டூன்கள் (21) குறுந்தகவல் (SMS) (9) கைபேசி (Cell) (411) கொஞ்சம் யோசிங்கப்பா!!! (46) கோரிக்கைகளும் – வேண்டுகோள்களும் (12) சட்டவிதிகள் (292) குற்றங்களும் (18) சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் (9) சட்டத்தில் உள்ள குறைபாடுகள் (11) சட்டம் & நீதிமன்ற செய்திகள் (63) புலனாய்வு (1) சமையல் குறிப்புகள் – Cooking Tips (489) உணவுப் பொருட்களில் உள்ள சத்துக்கள் (6) சரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள் (10) சிந்தனைகள் (429) பழமொழிகள் (2) வாழ்வியல் விதைகள் (76) சினிமா செய்திகள் (1,808) என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள் (2) சினிமா (33) சினிமா காட்சிகள் (26) படங்கள் (58) சின்னத்திரை செய்திகள் (2,166) தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் (1,916) V2V TV (13) குறும்படங்கள் (23) பொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ (28) மழலைகளுக்காக (2) மேடை நாடகங்கள் (2) சிறுகதை (21) சுனாமி- ஓரு பார்வை (5) சுற்றுலா (38) செயல்முறைகள் (66) செய்திகள் (3,455) அத்துமீறல்களும் (1) காணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு (2) கோரிக்கைகளும் (1) ஜோதிடம் (96) புத்தாண்டு இராசி பலன்கள் – 2015 (1) ராகு கேது பெயர்ச்சி 2017 (1) தங்க நகை (42) தந்தை பெரியார் (11) தனித்திறன் மேடை (3) தமிழுக்கு பெருமை சேர்த்த நூல்கள் & படைப்புக்கள் (9) தமிழ் அறிவோம் (1) தமிழ்ப்புதையல் (7) தற்காப்பு கலைகள் (5) தலையங்கம் (1) தலைவர்களின் வாழ்க்கை குறிப்பு (6) தியானம் (5) திருமண சடங்குகள் (18) திருமணத் தகவல் மையம் (12) திரை வசனங்கள் (5) திரை விமர்சனம் (26) தெரிந்து கொள்ளுங்கள் – Learn more (7,673) அலகீடு மாற்றி (Unit Converter) (2) கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் (22) கேள்விகளும் பதில்களும் (1) நாட்குறிப்பேடு (41) விடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும் (2) ஹலோ பிரதர் (64) தேர்தல் செய்திகள் (101) நகைச்சுவை (166) நமது இந்தியா (34) நினைவலைகள் (4) நேர்காணல்கள் (88) சிறப்பு நேர்காணல்கள் (1) பகுத்தறிவு (65) படம் சொல்லும் செய்தி (37) படைப்புகள் (3) மரபுக் கவிதைகள் (1) பார்வையாளர்கள் கவனத்திற்கு (26) பாலியல் மருத்துவம் – Sexual Medical (18+Years) (1,907) பிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும் (145) பிராணிகள் & பறவைகள் (288) பிற இதழ்களிலிருந்து (22) புதிர்கள் (4) புதுக்கவிதைகள் (43) புத்தகம் (4) புலன் விசாரணைகளும் (12) பொதுத்தேர்வு மாதிரிவினாத்தாள் (5) 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள் (2) மருத்துவம் (2,420) அறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்) (36) குழந்தை வளர்ப்பு (39) நேரடி காட்சி (விளக்கங்களுடன்) (39) பரிசோதனைகள் (21) முதலுதவிகள் (18) மறைக்கப்பட்ட சரித்திரங்கள் – வஞ்சிக்கப்பட்ட மாவீரர்கள் (11) மலரும் நினைவுகள் (22) மலர்களின் மகிமை (5) முதலிரவு (1) மேஜிக் காட்சிகள் (10) யோகாசனம் (19) வரலாறு படைத்தோரின் வரலாறு (23) வரலாற்று சுவடுகள் (175) வரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும் (29) வர்த்தகம் (586) வணிகம் (10) வாகனம் (175) வாக்களி (Poll) (13) வானிலை (22) வி தை (32) வி2வி (250) விண்வெளி (99) விதை2விருட்சம் (எனது) பொன்மொழிகள் (2) விளம்பர விமர்சனம் (7) விளையாட்டு செய்திகள் – Sports (104) விழிப்புணர்வு (2,621) வீடியோ (6) வீட்டு மனைகள் (72) வேலைவாய்ப்பு – சுயதொழில் (137) வேளாண்மை (97)
Recent Comments
Karan on தலைப்புச் செய்திகள்
Elakya Kayah on மச்சம் – பல அரிய தகவல்கள்
Malathy on நாட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால்…
Prabhakaran S on விபரீதத்தின் உச்சம் – மரணம் அனுப்பிய தூதுவன் கபம் – ஓரலசல்
Rithika on அன்புடன் அந்தரங்கம் – சகுந்தலா கோபிநாத் (10/12) – இக்கடிதமும், இதற்கான பதிலும் பெற்றோருக்கான எச்சரிக்கை மணி
த. பாக்கியராஜ் on புல எண் (Survey Number) என்றால் என்ன?
p praveen kumar on ரெட்டை ஜடை போடுவது எப்படி?- செய்முறை காட்சி – வீடியோ
Prasanth on பஜாஜ் டிஸ்கவரி நவீன டெக்னாலஜி பைக்
Ramesh on எண்களின் தமிழ் வடிவ ஓலிகளை எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள . . .
V2V Admin on ஆண் மற்றும் பெண்ணுக்கு உரிய உறவு முறையின் பெயர்கள்
Archives
Archives Select Month June 2021 (2) May 2021 (2) April 2021 (1) March 2021 (2) February 2021 (4) January 2021 (3) December 2020 (12) November 2020 (9) October 2020 (4) September 2020 (6) August 2020 (19) July 2020 (17) June 2020 (29) May 2020 (31) April 2020 (50) March 2020 (43) February 2020 (44) January 2020 (27) December 2019 (40) November 2019 (23) October 2019 (53) September 2019 (49) August 2019 (61) July 2019 (56) June 2019 (79) May 2019 (148) April 2019 (109) March 2019 (71) February 2019 (71) January 2019 (77) December 2018 (72) November 2018 (56) October 2018 (43) September 2018 (30) August 2018 (23) July 2018 (27) June 2018 (47) May 2018 (41) April 2018 (90) March 2018 (73) February 2018 (64) January 2018 (101) December 2017 (101) November 2017 (81) October 2017 (82) September 2017 (78) August 2017 (50) July 2017 (37) June 2017 (24) May 2017 (28) April 2017 (27) March 2017 (50) February 2017 (33) January 2017 (33) December 2016 (45) November 2016 (72) October 2016 (52) September 2016 (46) August 2016 (44) July 2016 (66) June 2016 (40) May 2016 (47) April 2016 (54) March 2016 (51) February 2016 (48) January 2016 (62) December 2015 (82) November 2015 (56) October 2015 (70) September 2015 (60) August 2015 (62) July 2015 (70) June 2015 (100) May 2015 (131) April 2015 (99) March 2015 (63) February 2015 (90) January 2015 (95) December 2014 (114) November 2014 (125) October 2014 (90) September 2014 (116) August 2014 (112) July 2014 (96) June 2014 (90) May 2014 (106) April 2014 (100) March 2014 (95) February 2014 (146) January 2014 (220) December 2013 (157) November 2013 (179) October 2013 (247) September 2013 (277) August 2013 (260) July 2013 (238) June 2013 (127) May 2013 (177) April 2013 (161) March 2013 (155) February 2013 (90) January 2013 (98) December 2012 (145) November 2012 (146) October 2012 (130) September 2012 (143) August 2012 (163) July 2012 (205) June 2012 (192) May 2012 (217) April 2012 (257) March 2012 (292) February 2012 (203) January 2012 (181) December 2011 (179) November 2011 (177) October 2011 (151) September 2011 (145) August 2011 (232) July 2011 (220) June 2011 (250) May 2011 (281) April 2011 (182) March 2011 (297) February 2011 (200) January 2011 (305) December 2010 (213) November 2010 (54) October 2010 (253) September 2010 (180) August 2010 (58) |
கொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்? – tamizhankural.com – Tamizhan Kural
Skip to content
செவ். டிசம்பர் 7th, 2021
Contact us
Tamizhan Kural
News
Business
Cinema
India
Medical
Sports
Tamil nadu
World
Medical
கொரோனா தடுப்பூசி பெற 18 – 44 வயது பயனர்களிடம் கட்டணம் வசூலிப்பது ஏன்? – tamizhankural.com
Byஜார்ஜ் மரியன்
ஜூன் 2, 2021
இந்தியாவில் 45 வயதை கடந்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசியை இலவசமாகவும் 18-44 வயதுடையவர்களுக்கு கட்டண அடிப்படையிலும் தடுப்பூசி வழங்கும் மத்திய அரசின் கொள்கை குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், நாகேஸ்வர ராவ், எஸ். ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கட்கிழமை விசாரித்தது. அதன் முழு விவரம் மற்றும் உத்தரவு செவ்வாய்க்கிழமை வெளியானது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையில் அரசு கடைப்பிடிக்கும் சில கொள்கை அல்லது திட்டம் எதேச்சதிகாரம் அல்லது பகுத்தறிவற்றதாக உள்ளது என கருத்து தெரிவித்தனர்.
மேலும், கொரோனா தடுப்பூசி கொள்கையை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறும் 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் எவ்வளவு தடுப்பூசி கையிருப்பில் இருக்கும் என்ற திட்டத்தை வகுக்குமாறும் மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணை ஜூன் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த வழக்கு விசாரணையின்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், டிசம்பர் மாத இறுதிக்குள் தகுதிவாய்ந்த அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு விடும் என்று தெரிவித்தார்.
அரசின் இந்த உறுதிமொழி, ஏற்கெனவே பல்வேறு அரசியல் தலைவர்களாலும் செயல்பாட்டாளர்களாலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. வழக்கு விசாரணையின்போது சில முக்கிய விஷயங்களை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். குறிப்பாக, மத்திய அரசு வாங்கும் தடுப்பூசிக்கு சீரான விலையும் அதே தடுப்பூசியை மாநிலங்கள் வாங்கும்போது ஒரு விலையும் நிர்ணயிக்கப்படுவது ஏன்? அந்த தடுப்பூசி மருந்துகள் இந்தியாவில் விற்கப்படும் விலை மற்றும் சர்வதேச விலையின் ஒப்பீடு தொடர்பான அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Post navigation
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் 100 வேலைக்கு சென்ற பெண் பலி: போலீஸ் விசாரணை
By ஜார்ஜ் மரியன்
Related Post
Medical
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் 100 வேலைக்கு சென்ற பெண் பலி: போலீஸ் விசாரணை
செப் 3, 2021 அஸ்வந்த் திலக்
You missed
அரசியல்
சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – முழு பின்னணி
அக் 18, 2021 அஸ்வந்த் திலக்
India
விவகாரம்: ஓபிஎஸ் மீது நடவடிக்கை பாயுமா? ஐஐடி குழு அறிக்கையால் இனி என்ன நடக்கும்?
அக் 5, 2021 அஸ்வந்த் திலக்
வர்த்தகம்
ஆனந்த் ஸ்ரீநிவாசன் பேட்டி: கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? – tamizhankural.com |
(27/10/2020) செவ்வாய்க்கிழமை காலை இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. பேராசிரியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளிவாசல் மறைமுகமாக செயற்பட்டதாகவும், அவர்கள் வெளியிட்டகருத்துக்களே படுகொலைக்கு தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பள்ளிவாசலை மூடுவதற்கு உத்தரவிட்டார்.
இந்த தடையை எதிர்த்து La Fédération musulmane de Pantin (Pantin நகர இஸ்லாமிய அமைப்பு) வழக்குதொடர்ந்தது. Seine-Saint-Denis நகர நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பள்ளிவாசலைஅடுத்த ஆறு மாதங்களுக்கு மூடுவதற்கு‘ உத்தரவிட்டுள்ளது.
குறித்த பள்ளிவாசல் சார்பாக இயங்கும் முகநூல் பக்கத்தில் குறித்த பேராசிரியர் குறித்த இழிவான தகவல்கள்காணொளியாக பகிரப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காணொளியே பயங்கரவாதியைகொலை செய்ய தூண்டியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம் மற்றும் சுதுமலை புவனேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருக்களும் சர்வதேச இந்துமத குருபீடாதிபதியுமான சிவஸ்ரீ சம்பு மஹேஸ்வரக் குருக்கள் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தார்.
அவரின் மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மீசாலை வடக்கு கொடிகாமம் பகுதியில் கொரோனாத் தொற்றுக் காரணமாக 68 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவருடைய மகள் தென்மராட்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றிய நிலையில் அவருக்கு ஏற்கனவே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. |
நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும். இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை குறிப்பு: நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள் www.aanmeegamalr.com எங்களை தொடர்பு கொள்ள [email protected] |
காட்பாடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையிடம் 2.17 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு | Dinakaran
Menu
முக்கிய செய்தி
அரசியல்
இந்தியா
தமிழகம்
குற்றம்
உலகம்
சென்னை
வர்த்தகம்
விளையாட்டு
ஆன்மிகம்
மருத்துவம்
மகளிர்
சமையல்
சினிமா
உலக தமிழர்
சுற்றுலா
ஜோதிடம்
இன்றைய ராசிபலன்
வார ராசிபலன்
மாத ராசிபலன்
மாவட்டம்
சென்னை
காஞ்சிபுரம்
திருவள்ளூர்
வேலூர்
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
சேலம்
நாமக்கல்
தருமபுரி
கிருஷ்ணகிரி
ஈரோடு
கோயம்புத்தூர்
திருப்பூர்
நீலகிரி
திருச்சி
கரூர்
பெரம்பலூர்
அரியலூர்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருவாரூர்
நாகப்பட்டினம்
மதுரை
திண்டுக்கல்
தேனி
இராமநாதபுரம்
சிவகங்கை
விருதுநகர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
கன்னியாகுமரி
புதுச்சேரி
படங்கள்
அறிவியல்
ஸ்பெஷல்
தமிழகம்
காட்பாடியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியையிடம் 2.17 கோடி மோசடி: அதிமுக பிரமுகர் உள்பட 4 பேர் மீது வழக்கு
[email protected](Editor) | Oct 22, 2021
காட்பாடி
அஇஅதிமுக
வேலூர்: வேலூர் அடுத்த காட்பாடி திருநகரைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (49). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் வேலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: வேலூர் கொணவட்டம் அரசு பள்ளி ஆசிரியை மகேஸ்வரி, அதிமுக உறுப்பினராக உள்ளார். அவரது கணவர் தர்மலிங்கம், ஓய்வுபெற்ற எஸ்ஐ. இருவரும் சேர்ந்து, கார், லாரி மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு பண உதவி செய்யும்படி கேட்டனர். நானும், மகேஸ்வரியும் 20 ஆண்டு காலம் பழக்கமானவர்கள்.
அதனால் நான் உறவினர்கள் மற்றும் வேலூர், சென்னையைச் சேர்ந்த நண்பர்களிடம் பணம் வாங்கியும், எங்களது சொத்தை விற்றும் 2 கோடியே 17 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்தேன். கடந்த ஜூன் 10ம் தேதி 2.17 கோடிக்கு மகேஸ்வரி பாண்டு எழுதி கொடுத்தார். பணத்தை திருப்பி கேட்டபோது, பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். பணம் கொடுத்த உறவினர்கள், நண்பர்கள் என்னை தொந்தரவு செய்து வருவதால் நான் மன உளைச்சலில் உள்ளேன். என்னை ஏமாற்றிய மகேஸ்வரி, அவரது கணவர் தர்மலிங்கம் மீது தக்க நடவடிக்கை எடுத்து நான் கொடுத்த மொத்த தொகை ₹2.17 கோடியை மீட்டு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். மகேஸ்வரியின் கணவர் தர்மலிங்கம் காவல் துறையில் வேலூர் மாவட்டத்திலேயே பணியாற்றியதால் எல்லா அதிகாரிகளையும் தெரியும், எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் பாரத்துக்கொள்வேன் என்கிறார்.
பணத்தை திருப்பி கேட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினர். எனவே மகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அதிமுக உறுப்பினரும், ஆசிரியையுமான மகேஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Stories:
பாடம் கற்க வேண்டும்
பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர் கைது
மக்களின் குறை கேட்பு கூட்டத்தில் அதிகாரிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் உத்தரவு
டிடிவி. தினகரனை கைது செய்ய கோரி அதிமுகவினர் சாலை மறியல்
உள்ளாட்சி தேர்தல் பணியின்போது மரணமடைந்த ஆசிரியர் குடும்பத்துக்கு நிதியுதவி
குளத்தை மூடி விவசாயம் ரூ.1 கோடி அரசு நிலம் மீட்பு
பாலாற்றில் விழுந்த பெண் மாயம்
அம்பேத்கர் நினைவு தினம் அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 3000 பேருக்கு நலத்திட்ட உதவி: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ வழங்கினார்
அடுத்தடுத்த விபத்தால் பரிதாபம் ஷேர் ஆட்டோக்கள் கவிழ்ந்து ஓட்டுனர் பரிதாப பலி
ஆவடி சிஆர்பிஎப்பில் பயிற்சி முடித்த 125 வீரர்கள் அணிவகுப்பு
ஆசிரியர்களை கண்டித்து பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம்
கொசஸ்தலை ஆற்றில் மூழ்கியவர் பலி
திருச்சானூரில் 7ம் நாள் பிரமோற்சவம் சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயார்: இன்று சர்வ பூபால வாகனம்
சொத்து குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நகராட்சி பொறியாளர் வீட்டில் ரூ.23 லட்சம், 179 சவரன் சிக்கியது: ராணிப்பேட்டையில் விஜிலென்ஸ் ரெய்டு
கடன் தொல்லையால் தஞ்சையில் சோகம் மகனை கொன்று தம்பதி தூக்கிட்டு தற்கொலை
கொரோனா கட்டுப்பாடுகள் விதித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுதாரருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்: ஐகோர்ட் கிளை உத்தரவு |
அரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்
தினம் தினம்
Back
தினம் தினம்
அறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம் நகரத்தில் நடந்தவை
வாராவாரம்
Back
வாராவாரம்
நிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்
ஆன்மிகம்
Back
ஆன்மிகம்
செய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2021 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்
போட்டோ
Back
போட்டோ
தமிழகத்தின் கண்ணாடி புகைப்பட ஆல்பம் பேசும் படம் கார்ட்டூன்ஸ் இன்றைய சிறப்பு போட்டோக்கள்! சினிமா NRI ஆல்பம்
வீடியோ
Back
வீடியோ
Live அரசியல் பொது சம்பவம் சினிமா சினிமா பிரபலங்கள் சமையல் ராணி டிரைலர் செய்திச்சுருக்கம் சிறப்பு தொகுப்புகள் ஆன்மிகம் வீடியோ செய்தி
மற்றவை
Back
மற்றவை
தமிழக சட்டசபை தேர்தல் 2021 2020 'ல் அதிகம் விமர்சிக்க பட்ட செய்திகள் சத்குருவின் ஆனந்த அலை விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் உரத்த குரல் நேதாஜி வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்
சினிமா
Back
சினிமா
செய்திகள் விமர்சனம் திரை மேதைகள்
உலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff
Advertisement
Home
ருசி
Prev Next
கேப்சிகம் பெப்பர் பிரை
பதிவு செய்த நாள்: ஏப் 29,2021 18:04
Share
தேவையான பொருட்கள்
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
மிளகு துாள் - 1 டீ ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீ ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
உப்பு - தேவைக்கு
செய்முறை
வெங்காயத்தை நறுக்கி, வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கும் போதே, தேவையான அளவு உப்பு சேர்த்தால், சுலபமாக வதங்கும்; வாசனையும் நன்றாக இருக்கும்.
அதன்பின், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கி, நறுக்கிய குடை மிளகாய் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதன் பின், மிளகு துாள் சேர்த்து, ஒரு நிமிடம் வதங்கியதும், மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடலாம். வாணலியின் சூட்டிலேயே குடை மிளகாய் நன்கு வதங்கி விடும்.
உடனடியாக தொடுகறி தேவைப்படும் போது எளிமையாக இதை செய்து விடலாம். சாம்பார் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். |
கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், கடலூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான முந்திரி தொழிற்சாலையில் எட்டு ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவந்தார். இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 19ஆம் தேதி அன்று வேலைக்குச் சென்ற கோவிந்தராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மகனுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
கோவிந்தராஜின் உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் இருப்பதாக அவரது மகனிடம் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளர் கூறியுள்ளார். சந்தேகமடைந்த கோவிந்தராஜின் மகன் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால், கொலை வழக்காகப் பதிவுசெய்யக் கோரி, காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த கொலை வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்ட நிலையில், அவர் கடந்த 11/10/2021 அன்று காலை பண்ருட்டி நீதிமன்றத்தின் நீதிபதி முன் ஆஜரானார். அவரை 14ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க பண்ருட்டி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று (13.10.2021) கடலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் திமுக எம்.பி. ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிபிசிஐடி போலீசார் தரப்பில் திமுக எம்.பியை இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி என ஓபன் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை உத்தரவாக பிறப்பிக்கப்படவில்லை. சற்றுநேரத்தில் அதற்கான உத்தரவு வரும் எனக் கூறப்படுகிறது. |
பிரபல பாடகர் கோமகனுக்கு கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். பின்பு, மேல் சிகிச்சைக்காக இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அதிக மூச்சுத்திணறல் ஏற்பட்டு இன்று (06/05/2021) அதிகாலை 01.30 மணியளவில் உயிரிழந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு சேரன் இயக்கி, நடித்த ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் இடம்பெற்ற 'ஒவ்வொரு பூக்களுமே...’ பாடலின் மூலம் உலகம் முழுக்க புகழ்பெற்றார் பாடகர் கோமகன். பரத்வாஜ் இசையில் இப்பாடலை எழுதிய பா. விஜய்க்கும், பாடகி சித்ராவுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன். மாற்றுத்திறனாளிகள் நலவாரிய உறுப்பினராகவும் பணியாற்றியுள்ள கோமகன், இசைப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார். அவருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தமிழக அரசு கலைமாமணி விருதினை வழங்கி கவுரவித்தது.
வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது..
கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.. pic.twitter.com/UrF3xebRO3
— Cheran (@directorcheran) May 6, 2021
பாடகர் மறைவுக்கு திரையுலகினரும் அவரது ரசிகர்கள் பலரும் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், பாடகர் கோமகன் மறைவு குறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ள இயக்குநர் சேரன், "வார்த்தைகள் இல்லை... மனதிலும் குரலிலும் முழுக்க தன்னம்பிக்கை கொண்ட மனிதர்... அவருடைய குழுவில் உள்ள 25 குடும்பங்களுக்கு கண்களாக விளங்கியவர்.. காலையில் எழுந்ததும் கேள்விப்பட்ட இந்த செய்தி நெஞ்சை நொறுக்கியது.. கோமகனின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.." என்று குறிப்பிட்டுள்ளார். |
ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தி, தனது மகன் முன்னா மராந்திககு 11 வயது சிறுமியை திருமணம் செய்து வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
முன்னா மராந்தியின் திருமணம் கடந்த திங்கட்கிழமை 27-ம் தேதி நடந்தது. திருமண வரவேற்பு நேற்று ( ஜூன் 29-ம் தேதி) நடைபெற்றது.
மணமகளின் பள்ளி சான்றிதழின்படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005. அதாவது அந்த சிறுமிக்கு 11 வயதே ஆகிறது. அவர் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
இதற்கிடையே மணமகன் முன்னா மீது இன்னொரு புகார் கிளம்பியிருக்கிறது. உறவுக்கார சிறுமி ஒருத்தியை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி இரண்டு வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியின் பெற்றோர் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரிதிஷ் குமார் , “சிறுமிக்கு திருமணம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இன்னொரு கொடுமை: ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாசஸ், இந்தத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தாராம். கடைசி நேரத்தில் வேறு ஏதே அவசரப்பணியால் கலந்துகொள்ள முடியாமல் போய்விட்டதாம்! |
தற்பொழுது நாட்டில் உள்ள பயணக்கட்டுப்பாடு 7ஆம் திகதி வரை இருந்த நிலையில் 14 ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது,
கோவிட் தொற்றின் தீவிரம் குறையாத காரணத்தாலும், மக்களின் பொறுப்பற்ற செயல்களாலும் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால், பயணத்தடையை நீடிக்குமாறு அரசுக்கு பலர் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்
இதன் காரணமாக அரச உயர்மட்டத்திதில் ஜூன் 21 வரை பயணத்தடையை நீடிப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்று நடை பெற்று வருவதாக தமிழன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. |
தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் 86 அகவையைக் கடந்த நிலையிலும் பல வழிகளில் தனித்தன்மையோடு செயல்படுகிறார். நிறைய சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்களைச் சந்திக்கிறார். இலட்சக்கணக்கான மக்கள் திரளும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இந்த ஊக்கமும், உழைப்பும் பொதுவாழ்வில் ஈடுபடும் யாரும் கைக்கொள்ளத்தக்கன ஆகும்.
அண்மையில் தமிழக முதல்வர் பங்கேற்ற பல பொது நிகழ்ச்சிகளில் இரண்டைப் பற்றி இங்கே சொல்லியாக வேண்டும். கடந்த 20.09.02010 அன்று நாகர்கோவிலில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதல்வர் தம் நிறைவுரையைப் பின்வருமாறு முடிக்கிறார்.
‘நான் என்றும் உங்கள் வீட்டுப்பிள்ளை 86 வயதுக்குப்பின் எப்படிப் பிள்ளையாக முடியும் என்று கேட்பீர்கள். 90 வயதானாலும், ஏன் 100 வயது வரை நான் இருக்க முடியும் என்றாலும் நான் உங்கள் வீட்டுப் பிள்ளைதான். எனக்கு நீங்கள் காட்ட வேண்டிய உதவி, நன்றிக்கடன் என்பது ‘திராவிடன்’ என்ற உணர்வை எல்லோரும் பெற்றோம் என்ற ஒலி என் காதில் கேட்க வேண்டும். அந்தப் பரிசை நீங்கள் அளிக்க வேண்டும் என்று உங்கள் கால்களைத் தொட்டுக் கேட்கிறேன். (தினமணி 21.09.2010)
அடுத்து 10.10.2010 அன்று நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாபெரும் தி.மு.கழகப் பொதுக் கூட்டத்தில், ‘தி.மு.க. என்பது அரசு தளத்துக்காக உருவாக்கப்பட்டது அல்ல. இது ஒரு சமுதாய இயக்கம். தமிழர்கள் வாழ, திராவிட இன வளர்ச்சிக்காகத் தொண்டாற்றிய தந்தை பெரியாரின் வழியில் நின்று பேரறிஞர் அண்ணாவால் தொடங்கப் பட்டதுதான் இந்தக் கழகம். (தினமணி : 11.10.2010)
இந்த இரணடு உரைகளிலும் ‘திராவிடன்’ ‘திராவிட இனம்’ என்கிற சொல்லாடல்களைக் கலைஞர் வெளிப்படுத்தியுள்ளார். தம் இயக்கத்தின் கொள்கை மூலவராகக் கலைஞர் குறிப்பிடும் தந்தை பெரியார், தமது வாழ்வின் இறுதிக் காலம் வரை தனித்தமிழ் நாட்டுக் கொள்கையைப் பற்றி நின்றவர். 1930களிலேயே ‘இந்தியா ஒரு நேஷனா? இந்தியா பல்வேறு நேஷன்களைக் கொண்ட ஒரு நேஷன்’ என்ற எண்ண அதிர்வுகளை இம்மண்ணில் பாயவிட்டவர். இது ஒரு சாதிகள் காட்சி சாலையாக, மதக்கண்காட்சி சாலையாக, பாஷைகள் கண்காட்சிச் சாலையாக, சாமிகள் காட்சிச் சாலையாக உள்ளதாக பகுத்தறிவுக் கண்கொண்டு ஊடுருவிப் பார்த்தவர்.
1938இல் மூண்டெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் இங்கே மிகப்பெரிய தமிழ்த் தேசிய மக்கள் எழுச்சியாகப் கருக்கொண்டது. சென்னைக் கடற்கரையில் வங்கக் கடலைபோல் ஆர்ப்பரித்த மக்கள் முன். தந்தை பெரியார் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என முழங்கினார். இந்த முழக்கம் வெறும் மொழி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த முழக்கம் மட்டுமன்று. தமிழ்மக்கள் தம்மை உண்மைத் தமிழரென்றும், கலப்படமற்ற தனித்ததமிழ்ச் சாதி, சுயஉந என்றும் கருதித் தம்மீது சுமத்தப்பட்டுள்ள சூத்திரன், சண்டாளன் என்று கூறும்படியான அவ்வகை அழுக்கையும் புறந்தள்ள வேண்டும் என்கிற சமூகப் பண்பாட்டு அடித்தளத்திலும் பெரியார் இம்முழக்கத்தை முன்வைத்தார்.
மேலும் தமிழ்நாட்டு விடுதலைத் தமிழனுக்குச் செல்வப்பெருக்கம் தொழில் மேம்பாடும்பெற்றுத்தரும் என்கிற பொருளாதாரக் கண்ணோட்டமும் அந்த முழக்கத்தில் கருக்கொண்டிருந்தது.
“தமிழ்நாட்டுத் தொழில் முறைகளை எடுத்துக் கொண்டோமானால் அதுவும் தமிழனுக்குப் பயன்படுவதில்லை என்பது விளங்கும். இரும்புத் தொழிலில் பம்பாய்க்காரர், பாரசீகக் காரர் உரிமை பெற்றுப் பயனடைகின்றனர். உலோகத் தொழிலையும், பம்பாய்க்காரர், ஷோலாப்பூர்க்காரர் உரிமையாக்கிப் பயனடைகிறார்கள். துணித் தொழிலைப் பம்பாய் ஆமதாபாத்காரர்கள் கைப்பற்றிப் பயனடைகிறார்கள். இந்தத் தொழில்கள் இயந்திர உதவியினால் செய்யப்படுவதையே இங்குக் குறிப்பிடுகின்றோம். அதனால் தமிழ்த் தொழிலாளிக்கு வேலையில்லை. தமிழ் முதலாளிக்கு இலாபம் இல்லை. லேவாதேவித் தொழிலை எடுத்துக் கொண்டால் அவை பெரிதும் மார்வாரி நாட்டானும், குஜராத்தி மூல்தான் நாட்டானுமே ஏகபோக உரிமையாக அவர்கள் கொண்டுபோகும் செல்வம் கொஞ்சமா? அவை எப்படிப் போகின்றன என்பதைப் பார்த்தால் தமிழ்க் கூலிகள், தொழிலாளர்கள், ஏழைகள் ஆகியவர்களின் செல்வத்தைக் கையைத்திருகிப் பிடுங்கிக் கொண்டு போவதுபோல் மார்வாரிகள் கொண்டு போகிறார்கள்”. (பெரியார் ஈ.வெ.ரா.சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு : பக் 1242)
தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையைத் தெளிவாக முன்வைத்த பெரியார் பின்னர்ச் சில காலம் ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக்கத்தை எழுப்பினார். கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் இவர்களுடன் இசுலாமியர்க்கும் தனியாக அழைப்பு விடுக்கும் பெரியார் இறுதியில் திராவிட நாட்டுப் பிரிவினையில் பார்ப்பனர்களையும் இணைத்துக் கொள்கிறார்.
‘திராவிடம் விழித்தெழுந்துவிட்டது. இனி உரிமைப் போராட்டம் விரைவில் துவக்கப்படுவது நிச்சயம். ஆகவே விரைவில் பார்ப்பனத் தோழர்கள் - ஒன்று திராவிடர்களோடு சேர்ந்துவிட வேண்டும்; அல்லது, அவர்கள் குடியேற வடநாட்டில் வசதிகள் செய்துகொள்ள வேண்டும். நாங்கள் குடியேறும்படிக் கூறவில்லை. அவர்களும் எங்களோடு என்றென்றும் ஒற்றுமைப்பட்டு வாழவேண்டும். ஆனால் மனிதர்களாக வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய உள்ளக்கிடக்கை. இதில் எந்தப் பார்ப்பனத் தோழரும் சந்தேகப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில், திராவிடன் என்றுமே விருந்தோம்பல் செய்யத் தவறியதில்லை என்பதை இவர்களுடைய ஏடே இவர்களுக்கு எடுத்துக்காட்டும்” (ஆழியூரில் 10.01.1948இல் சொற்பொழிவு விடுதலை 19.01.1948)
1944ஆம் ஆண்டு ‘திராவிடர் கழகம்’ என்ற பெயர்த் தோற்றம் உருவான போது ‘திராவிடர் கழகம்’ என்ற பெயருக்கு மாற்றாகத் ‘தமிழர் கழகம்’ என்ற பெயர் முன்மொழியப்பட்டதாயும், ஆனால் பெரியார் உள்ளிட்ட பலராலும் அது ஏற்கச் செய்யப்படவில்லை என்பதுமான கடுமையான குற்றச்சாற்றுகள் நேற்றும் இருந்தன. இன்றும் தொடர்கின்றன.
“தமிழும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் இப்படிப் பிரிந்துகிடக்கிற காரணத்தால்தான் ஒற்றுமைக்குப் பாடுபடும் நாங்கள் திராவிடநாடு என்றும், திராவிட மக்கள் என்றும், திராவிட கலாச்சாரம் என்றும் எடுத்துக்காட்டிப் புத்துணர்ச்சி ஏற்படுத்தப் பாடுபட்டு வருகிறோம். தமிழ் என்றும் தமிழர் கழகம் என்பதும் மொழிப் போராட்டத்திற்குத்தான் பயன்படுமேயொழிய இனப் போராட்டத்திற்கோ, கலாச்சாரப் போராட்டத்திற்கோ சிறிதும் பயன்படாது.” என்பதே அன்றையப் பெரியாரின் கருத்தாக இருந்தது. (விடுதலை 27.01.1950)
கன்னடர், தெலுங்கர், மலையாளிகள் ஆகியோரையும் இணைத்துக்கொண்டு திராவிடநாட்டு வெகுமக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நாட்டுப் பிரிவினை கேட்ட பெரியாருக்கு பின்னாளில் கசப்பான அனுபவங்கள் தோன்றத் தொடங்கின.
தனது 76ஆவது பிறந்த நாளையொட்டி விடுதலை ஏட்டில் 17.09.1954 அன்று பெரியார் வெளியிட்ட அறிக்கையில் அவருடைய உள்ளக் குமுறலைத் தெளிவாக உணர முடிகிறது.
“இதில் குறிப்பாகக் கூறவேண்டுமேயானால், மலையாளிகளின் தொல்லையே மாபெரும் தொல்லையாகும். அவர்கள் பெரும்பாலும் ஆரியக் கலாச்சாரத்தையும், ஆரிய மொழியையும், ஆரிய வருணாசிரம தர்மத்தையும் ஆதரிக்கிறவர்கள், ஆனதனால் வகுப்புவாரி உரிமையில் மலையாளிகளைப் பார்ப்பனரல்லாத ‘இந்துக்கள்’ என்கிற பிரிவில் பார்ப்பனர்கள் சேர்த்துக் கொண்டு, பார்ப்பனரல்லாதவருக்கு என்கிற கணக்கில் ஏராளமான மலையாளிகளுக்குக் கொடுப்பதையே - அவர்கள் தாராளமாக வந்து புகுவதையே பார்ப்பனர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அனுமதிக்கிறார்கள். அதன் காரணத்தால் ஏறக்குறைய பார்ப்பனர் இல்லாத பெரும் பதவிகளிலும் மலையாளிகளே அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். முதலில் சில உதாரணங்கள் கூறுகிறேன்.
சென்னை அரசாங்க நிர்வாகத்தின் தலைமைப் பீடாதிபதியான, சீப் செக்ரட்டரி : திரு. கே. இராமுண்ணி மேனன், சீப் எஞ்சினியர் : திரு. கே. கே. நம்பியார்
இப்படியான ஒரு நீண்ட மலையாள அதிகாரிகளின் பட்டியலாகச் செல்கிறது. அந்த அறிக்கை (விடுதலை 17.09.1954) (பெரியார் சிந்தனைகள் பக் 1467)
இவ்வாறு அறிக்கை விட்ட பெரியார், சரியாக ஓராண்டு கழித்து அதாவது 11.10.1955 அன்று விடுதலை ஏட்டில் விட்ட அறிக்கையில் பின்வருமாறு எழுதுகிறார் :
‘பொதுவாக ஆந்திரா பிரிந்ததிலிருந்தே நாட்டுப் பிரிவினையில் எனக்குக் கவலை இல்லாமற் போய்விட்டது. பிறகு கன்னடமும் மலையாளமும் (கர்நாடகாவும் கேரளாவும்) பிரிவதில் இரண்டு மூன்று காரணங்களால் இவை சீக்கிரத்தில் பிரிந்தால் தேவலாம் என்கின்ற எண்ணம் எனக்குத் தோன்றிவிட்டது. என்ன காரணம் என்றால், ஒன்று, கன்னடியனுக்கும், மலையாளிக்கும் இனப்பற்றோ, இனச் சுயமரியாதையோ, பகுத்தறிவு உணர்ச்சியோ இல்லை என்பதாகும். எப்படியெனில் அவர்களுக்கு வருணாசிரம வெறுப்புக்கிடையாது; சூத்திரன் என்பது பற்றி இழிவோ வெட்கமோ பெரும்பாலோருக்குக் கிடையாது. அவர்கள் மத மூட நம்பிக்கையில் ஊறிவிட்டவர்கள். இரண்டு, அவர்கள் இருவர்க்குமே - மத்திய ஆட்சி என்னும் வடவராட்சிக்குத் தங்கள் நாடு அடிமையாய் இருப்பது பற்றியும் சிறிதும் கவலை இல்லை. ஆகவே, இவ்விரு துறைகளிலும் நமக்கு எதிர்ப்பான எண்ணங்கொண்டவர்கள். எதிரிகள் என்றே சொல்லலாம். (பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள் பக் 1354)
55 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் உரைத்த கருத்துகள் நூற்றுக்கு நூறு அளவில் இன்றும் பொருந்தி வருகின்றன. ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்று அந்நாளில் எழுப்பப்பட்ட அரசியல் முழக்கம் இன்று வேறு வடிவந்தாங்கியுள்ளது. கன்னடன், தெலுங்கன், கேரளன், தமிழன் ஆகிய நான்குபேருமே திராவிடன் என்றால், இன்று மற்ற மூன்று திராவிடனும் சேர்ந்துகொண்டு தில்லியின் துணையோடு தமிழ் திராவிடனை நசுக்குகிறான். தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் தரமறுக்கும் செய்தியில் இன்று கன்னடன், கேரளன், ஆந்திரன் என்கிற மூன்று திராவிடனும் சேர்ந்துகொண்டு தமிழ்நாட்டுத் திராவிடனை வஞ்சிக்கிறான்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை நடைமுறைப் படுத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணை யிட்டபிறகுகூட கர்நாடகம் அந்த ஆணையை மலம் துடைக்கும் காகிதமாக மதிக்கிறது. இதே உச்சநீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை உயர்த்திக் கொள்ளலாம் என்று சொல்லியும் கூட கேரளம் அந்த ஆணையைக் கிழித்துக் குப்பைக் கூடையில் எறிகிறது. ஆந்திரா முதல்வர் இராசசேகர ரெட்டி மறைவுக்குத் தமிழ்நாட்டு அரசு ஆற்றாது அழுகிறது. அரசு சார்பில் விடுமுறை அறிவிக்கிறது. கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்திற்குத் தமிழக மக்களின் வரிப்பணத்தை வாரிக் கொடுக்கிறது. ஆனால், ஆந்திர அரசோ பாலாற்றின் குறுக்கே அணைகட்டத் தொடங்கித் தமிழ்நாட்டு மக்களின் வாழ்வைப் பாழாக்குகிறது. தட்டிக்கேட்க வேண்டிய தரங்கெட்ட தில்லி அரசோ, ஆந்திரத்து ஆற்று நீர்த் திட்டங்களுக்குக் கோடிகளை அள்ளிக் கொடுக்கிறது. இவற்றையெல்லாம் நினைக்க நினைக்கத் தமிழர்களின் நெஞ்சம் தீப்பற்றிய பஞ்சுப் பொதியாய்ப் பற்றி எரிகிறது.
தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள ‘திராவிடர்கள்’ இப்படியெல்லாம் ‘தமிழ்த்திராவிடனுக்கு’ இரண்டகம் இழைப்பார்கள் என்பதை 1957ஆம் ஆண்டிலேயே பெரியார் நுண்ணறிவோடு எடுத்துச் சொல்லியுள்ளார்.
“தமிழனுக்குப் பார்ப்பான் மாத்திரம் எஜமானன் அல்லன். மலையாளியும் எஜமானன்; அதிகாரி வட நாட்டின் முதலாளி, சர்வாதிகாரி இது தமிழ்நாட்டுக் குச்சு தந்தரமா? சுதந்தரத்தை நினைத்துக் கொண்டு எழுத எழுத ஆத்திரம் வருகிறது. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்” என்று நெஞ்சு பொறுக்காமல் 15.08.1957அன்று விடுதலை ஏட்டில் பெரியார் அறிக்கை விட்டுள்ளார். (பெரியார் சிந்தனைகள் பக் 1285)
எனவே, தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் இன்றைக்கும் தமிழர்களெல்லாம் ‘திராவிடர்’ என்ற உயர்வைப்பெற வேண்டுமென்று தமிழர்களின் கால்களைத் தொட்டுக் கேட்டுக்கொள்வதில் எந்தப் பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. அக்டோபர் 10ஆம் நாள் நடைபெற்ற அதே நாகப்பட்டினம் பொதுக்கூட்டத்தில் கலைஞர் வேறொரு கருத்தையும் கூறியுள்ளார். "மிழகம் மற்றும் இந்தியாவில் மதவாதத்தைப் பரப்பி அரசியல் செய்ய பா.ஜ.க. போன்ற பிற்போக்கு இயக்கங்களுக்கு யாரும் இடமளித்துவிடக்கூடாது; ஆதரவு அளிக்கக் கூடாது என்பதற்காகவே சோனியாவுக்குத் திமுக நேசக்கரம் நீட்டிப் பக்கத் துணையாக இருக்கிறது” (தினமணி 11.10.2010)
இன்று மதவாதக் கட்சியாகக் கலைஞர் கண்ணுக்குத் தெரியும் பா.ஜ.கட்சியுடன், அன்று தில்லியில் கூட்டணி ஆட்சி அமைத்துப் பதவி சுகம் அனுபவித்த அரசியல் சந்தர்ப்பவாதத்தைக் கண்டு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள காங்கிரசு தலைவர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில் மீண்டும் காமராசர் ஆட்சியைக் கொண்டு வரப்போவதாகக் கலைஞர் கண் முன்னாலேயே கள்குடித்த குரங்காகக் குட்டிகாரணம் போடுகிறார்கள்.
பரந்து பட்ட வெகுமக்களுக்கு பஞ்சமா பாதகம் புரியும் கட்சி, காங்கிரசுக் கட்சி என்பதைப் புரிந்து கொண்ட காரணத்தால்தான் தந்தை பெரியார் ‘காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை’ என்று 1925ஆம் ஆண்டு காங்கிரசை விட்டு வெளியேறினார். தம்முடைய கொள்கைகளுக்கு இணக்கமாகச் சில செயல்களைச் செய்ய முன் வந்த காமராசருக்கு இறுதிவரை தோள்கொடுத்து உதவினார்.
காசுமீரத்துப் பார்ப்பனக் குடும்பத்தின் வழி வந்த கயமைக் குணம்மிக்க இந்திராகாந்தி தனது பதவிக்கு நெருக்கடி வந்த காலத்தில் கலைஞரின் உதவியை நாடினார். அப்போது பெரியார் அறிவுரையையும் புறந்தள்ளிக் கலைஞர் இந்திராகாந்தியை ஆதரித்தார். காமராசரைத் தலைக்குனிய வைத்தார். அதே இந்திராகாந்தி நெருக்கடிநிலை ஆட்சிக் காலத்தில் கலைஞருக்கும், அவரது கட்சிக்கும் விளைத்த சொல்லொணாக் கொடுமைகளை வரலாறு நன்கறியும்.
உலக வல்லாதிக்கங்களுக்கும், பன்னாட்டு முற்றாளுமை நிறுவனங்களுக்கும், உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் நாட்டையே அடகு வைத்து விட்டன; இன்றைக்கு ஆளும் காங்கிரசும் நேற்றைக்கு நாடாண்ட பாரதிய சனதா கட்சியும். இவை இரண்டுமே அடியோடு ஒழித்துத் தரை மட்டமாக்கப்பட வேண்டிய பேரழிவுச் சக்திகளாகும்.
இந்தியத் துணைக் கண்டத்தில், எல்லாத் தேசிய இன மக்களும் இவ்விரு கட்சிகளாலும் தொலையாத இன்னலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். இந்தியத் தேசிய இனங்களுக்கான விடுதலை என்பதை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும். பெரியார் அண்ணா வழிவந்தவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவில் தற்போதுள்ள மூத்த அரசியல் தலைவர்கள் யாவர்க்குள்ளும் இதில் அதிகக் கடமையும் தகுதியும் இருக்கின்றன.
தந்தை பெரியார் கோரியது தனிச் சுதந்திரத் தமிழ்நாடு
‘உதைக்கும் காலுக்கு முத்தமிட்டுப் பூசை செய்கிறோம்; மலத்தை மனமார முகருகிறோம். மானமிழந் தோம், ஞ்சேந்திரியங்களின் உணர்ச்சியை இழந்தோம்; மாற்றானுக்கு அடிமையாகி வணங்குகிறோம். இதற்குத்தானா தமிழன் உயிர்வாழ வேண்டும்? எழுங்கள்! நம்மை ஏய்த்து அழுத்தி, நம் தலைமேல் கால்வைத்து ஏறி மேலே போக வடநாட்டானுக்கும், தமிழரல்லாதவனுக்கும் நாம் படிக்கல் ஆகிவிட்டோம். இனியாவது, ‘தமிழ்நாடு தமிழருக்கே!’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுகள் தோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள். நம் வீட்டுக்குள் அந்நியன் புகுந்துகொண்ட தோடல்லாது, அவன் நம் எஜமான் என்றால் - நமக்கு இதைவிட மானமற்ற தன்மை, இழிதன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்! புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னா பின்னமாக்குங்கள்! தமிழ்நாடு தமிழருக்கே! - குடிஅரசு 23.10.1938; விடுதலை 03.12.1957
மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைக்கட்சி தமிழ்த் தேசத் தன்னுரிமை கோரும் கட்சி! உண்மையான இந்தியக் கூட்டாட்சிக் கொள்கைக் காக உரமான நெஞ்சோடு போராடுகின்ற கட்சி! உழைக்கும் மக்களுக்கான விடுதலைக்கு, ஒற்றை யாட்சியாய்க் கெட்டிப் பட்டுக் கிடக்கும் தில்லியின் ஆதிக்கத்தை உடைத்து நொறுக்க வேண்டு மென்று முனைப்புக் காட்டுகின்ற கட்சி! ஒத்த கருத்துள்ள தோழமை அமைப்புகளே! களப் போராளிகளே! வாருங்கள்! செயலில் இறங்குவோம்.!
Tweet
Whatsapp
முந்தைய
அடுத்த
கீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.
கீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன. |
You will be assisted in processing your formalities and visa application to ensure you a smooth start in your career.
Minimum Qualifications
Diploma in Nursing + Experience
or
B.Sc. in Nursing
or
M.Sc. in Nursing
Language Requirements
German Language Certificate (B1/B2)
Before starting your career, we empower you with the skills required for making a permanent nursing career in Germany. To make it happen, we support you in learning the German language and obtaining a certificate.
Salary (monthly)
2200 - 3600 Euro
WhatsApp
: +44 7525218716 (தமிழ்)
: +49 16091799201 (ஜேர்மன்)
Please call us
☎️ : +94 766990050 (தமிழ்)
Share:
Read More
Monday, 20 September 2021
Seminar for A/L Commerce Students 2021
Posted on Monday, September 20, 2021AAT
உயர்தர பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு தொடர்
(✍ வணிக பிரிவு 2021/22 மாணவர்களுக்கானது)
மேலதிக விபரங்களுக்கு 0766990050 ஐ அழையுங்கள்.
⌚ நேரம்: பிற்பகல் 3:00 - 6:00 மணி
🗓 காலம்: செப்டெம்பர் 2021
A/L 2022
20/09/2021 ⇢ கணக்கீடு
21/09/2021 ⇢ வணிகக்கல்வி
22/09/2021 ⇢ பொருளியல்
A/L 2021
23/09/2021 ⇢ கணக்கீடு 1
24/09/2021 ⇢ கணக்கீடு 2
27/09/2021 ⇢ வணிகக்கல்வி 1
28/09/2021 ⇢ வணிகக்கல்வி 2
29/09/2021 ⇢ பொருளியல் 1
30/09/2021 ⇢ பொருளியல் 2
இலங்கை கணக்கீட்டு தொழிநுட்பவியலாளர் கழகத்தினால் (AAT - Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக்கருத்தரங்கு தொடர் 🎥 ZOOM செயலியின் ஊடாக நடைபெறவுள்ளது.
மேலும் உங்களுடைய 🤷 சக நண்பர்களுக்கும், ஏனைய உயர்தர வணிகப்பிரிவு 🤷 மாணவர்களுக்கும் கருத்தரங்கு தொடர்பான விபரங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்யுங்கள்.
(Registration Link) பதிவு செய்வதற்கான இணைப்பு:
https://www.facebook.com/SunBritishCollege/posts/2701243816687862
☎️ : 0766990050
Sun British College
AAT இனால் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிலையம்
Share:
Read More
Tuesday, 23 March 2021
Vacancy for Business Analyst at Hatton National Bank
Posted on Tuesday, March 23, 2021AAT, Bank, Jobs, Vacancy
Business Analyst பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் ஆவர்.
அத்துடன் 2 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் [email protected] என்னும் மின்னஞ்சலின் ஊடாக தொடர்பு கொள்ளவும் அல்லது கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
https://topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=165&ac=DEFZZZ&jc=0000824450&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Share:
Read More
Thursday, 18 March 2021
Vacancy for Co-operative officer - Class III
Posted on Thursday, March 18, 2021AAT, Vacancy
திறந்த போட்டிப் பரீட்சை - 2021
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - வட மாகாண சபை..!
வயதெல்லை:
விண்ணப்பதாரி விண்ணப்பத்தை ஏற்கும் இறுதித் திகதியன்று 18 வயதிற்கு குறையாதவராகவும், 30 வயதிற்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
பொதுவான தகைமைகள் :-
விண்ணபப் தாரி இலங்கைப் பிரஜையாக இருத்தல் வேண்டும்.
விண்ணபப் தாரி வடக்கு மாகாணத்தின் எப்பாகத்திலும் கடமையாற்றக் கூடிய சிறந்த தேகாரோக்கியமும் உள்ளவராக இருத்தல் வேண்டும் என்பதுடன் சிறந்த நன் நடத்தையும் உள்ளவராக இருத்தல் வேண்டும்.
அ) விண்ணப்பதாரி வடக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவராக இருத்தல் வேண்டும். இவ் விண்ணப்ப முடிவுத்திகதிக்கு முன்னா் உள்ள ஆறு (06) ஆண்டு காலப்பகுதியில் ஆகக் குறைந்தது மூன்று (03) ஆண்டுகளாயினும் வடக்கு மாகாணத்தில் தொடாச்சியாக வசித்திருத்தல் வேண்டும். அல்லது ஆ) விண்ணப் தாரா் அல்லது பெற்றோர் வடக்கு மாகாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருப்பதுடன் ஆகக் குறைந்தது ஐந்து (05) வருடங்கள் வடக்கு மாகாணத்தில் தொடரச்சியாக வசித்திருத்தல் வேண்டும் (நேர்முகப் பரீட்சையின் போது தமது தேருநர் இடாப்பின் உறுதிப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பிதழை சமர்ப்பித்தல் வேண்டும்)
கல்வித் தகைமைகள்
விண்ணப்பதாரி க.பொ.த (சா.த) பரீட்சையில் ஒரே அமர்வில் தமிழ், சிங்களம், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக நான்கு (04) பாடங்களில் திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
அத்துடன்
விண்ணபப் தாரி க.பொ.த (உ.த) பரீட்சையில் பொருளியல், விவசாயம், இணைந்த கணிதம், கணக்கியல், வணிக புள்ளிவிபரவியல் மற்றும் வணிகக் கல்வி ஆகிய பாடங்களில் ஒரு பாடம் உள்ளடங்கலாக மூன்று (03) பாடங்களில் (பொது வினாத்தாள் நீங்கலாக) ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும். (பழைய பாடத்திட்டமாயின் ஓரே அமர்வில் மூன்று (03) பாடங்கள் சித்தியடைந்திருத்தல் போதுமானதாகும்)
விண்ணப்ப முடிவுத் திகதி : 31.03.2021
திறந்த போட்டிப் பரீட்சை : நவம்பர் 2021
பதிவிறக்குதல்:
Vacancy Notice
Application Form
விண்ணப்ப படிவங்களை Sun British College இலும் பெற்றுக் கொள்ளலாம்.
Sun British College, No. 28, Station Road, Vavuniya. Tel: 0766990050
Share:
Read More
Saturday, 1 June 2019
Vacancies at Cargills (Ceylon) PLC
Posted on Saturday, June 01, 2019Vacancy
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனமான Cargills (Ceylon) PLC கணக்கியல் துறையில் இரு பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
Accounts Assistants
Credit Controller
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையுடையவர்கள்.
விண்ணப்ப முடிவுத் திகதி: 05/06/2019
Accounts Assistants
வயதெல்லை: 20 முதல் 28 வரை
Credit Controller
வயதெல்லை: 25 முதல் 35 வரை
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
Accounts Assistants
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=101&ac=DEFZZZ&jc=0000646437&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Credit Controller
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=102&ac=DEFZZZ&jc=0000646431&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Share:
Read More
Saturday, 4 May 2019
Vacancy for Accounts Executive at Abans Auto for Hero & TVS
Posted on Saturday, May 04, 2019Vacancy
இலங்கையில் பிரபல வாகன நிறுவனமான Abans Auto தமிழ் பேசும் தகைமை உடைய கணக்காளர் பதவிக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
கணக்கியல் துறையில் சிறந்த கற்கை நெறியாகக் கருதப்படும் AAT யில் ஏதாவது ஒரு நிலையை பூர்த்தி செய்த எமது மாணவர்கள் அப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உடையுடையவர்கள்.
(கற்கை நெறியை முழுமையாக பூர்த்தி செய்திருக்க வேண்டிய அவசியமில்லை)
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள Top Jobs இணையதளத்தின் இணைப்பைத் தொடர்ந்து உங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்.
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=12&ac=DEFZZZ&jc=0000637424&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Share:
Read More
Sunday, 31 March 2019
Vacancy for Executive & Junior Executive at Dialog Axiata
Posted on Sunday, March 31, 2019Vacancy
பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான Dialog Axiata அண்மையில் கணக்கியல் துறைக்கு இரு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
Junior Executive - Cash Operations
Executive - Group Financial Accounting and Reporting
சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யைப் பூர்த்தி செய்த மாணவர்கள் இப்பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உடையோர் ஆவர்.
இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணைய தளங்களின் இணைப்பைத் தொடர்ந்து தங்களது சுயவிபரக் கோவையை சமர்ப்பிக்கவும்
Junior Executive - Cash Operations
Junior Executive பதவிகளுக்கு Top Jobs மற்றும் Promo Jobs இணைய தளங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி: 05/04/2019
Top Jobs
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=196&ac=DEFZZZ&jc=0000629314&ec=DEFZZZ&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Promo Jobs
https://www.promo.lk/jobs/4824/junior-executive---cash-operations
Executive - Group Financial Accounting and Reporting
Executive பதவிகளுக்கு Top Jobs மற்றும் Express Jobs இணைய தளங்களின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்ப முடிவுத் திகதி: 26/04/2019
Top Jobs
http://www.topjobs.lk/employer/JobAdvertismentServlet?rid=150&ac=0000000021&jc=0000629903&ec=0000000021&pg=applicant/vacancybyfunctionalarea.jsp
Express Jobs
https://xpress.jobs/Jobs/View/46639/executive-group-financial-accounting-and-reporting-dialog-axiata-plc
Share:
Read More
Older Posts → Home
Verify Certificates
Verify Students' Certificates
Like our Facebook Page
Popular
Videos
News
Contact form
Fillout our inquiry form.
We will contact you soon.
தொடர்புப் படிவத்தைப் பூர்த்தி செய்க
Cloud Label
AAT
Bank
Jobs
pre-school
Vacancy
Video of the day
Pay Online with PayPal
- Get your Admission Now
- Pay your Course Fee
- Register for AAT Course
- Book for Mobile Phone Repairing Course
- Register for Education Faculty Courses
(Diploma, B. Ed, M. Ed)
View your cart to check out.
News Archive
November (1)
September (1)
March (2)
June (1)
May (1)
March (1)
January (1)
September (1)
August (3)
February (1)
September (1)
January (2)
November (1)
April (1)
Seminar for A/L Commerce Students 2021
உயர்தர பரீட்சைக்கான இலவச கருத்தரங்கு தொடர் (✍ வணிக பிரிவு 2021/22 மாணவர்களுக்கானது) மேலதிக விபரங்களுக்கு 0766990050 ஐ அழையுங்கள். ⌚ நேர...
Career Opportunities for Nurses in Germany
Career Opportunities for Nurses in Germany 100% FREE of cost No placement charges Please call us for more information. ☎️ : 07...
Vacancy for Co-operative officer - Class III
திறந்த போட்டிப் பரீட்சை - 2021 கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்பு - வட மாகாண சபை..! வயதெல்லை: விண்ண...
Vacancy for Business Analyst at Hatton National Bank
Business Analyst பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சிறந்த கணக்கியல் கற்கை நெறியாக கருதப்படும் AAT யை...
Coping Contents for Assignments
Plagiarism is a punitive offence of purloining a piece of work initially created by someone else and presenting it as one’s own origi...
Vacancies at Cargills (Ceylon) PLC
இலங்கையில் பிரபல தனியார் நிறுவனமான Cargills (Ceylon) PLC கணக்கியல் துறையில் இரு பதவிகளுக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக...
Vacancy for Accounts Executive at Asia Broadcasting Corporation
பிரபல ஊடக நிறுவனமான Asia Broadcasting Corporation வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இந் நிறுவனம் ஆசியாவில் பல வானொலி மற்...
Vacancy for Executive & Junior Executive at Dialog Axiata
பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான Dialog Axiata அண்மையில் கணக்கியல் துறைக்கு இரு வேலை வாய்ப்புக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. Junio...
Vacancies at Ministry of Health, Nutrition & Indigenous Medicine
இலங்கை சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் Global Fund to Fight AIDS, Tuberculosis & Malaria செ...
Vacancy for Accounts Executive at Abans Auto for Hero & TVS
இலங்கையில் பிரபல வாகன நிறுவனமான Abans Auto தமிழ் பேசும் தகைமை உடைய கணக்காளர் பதவிக்கு Top Jobs இணைய தளத்தின் மூலம் விண்ணப்பங்களைக் கோரியு...
Accreditions
Sun British College
Sun British College is one of the top ranking educational institutes providing language, vocational and professional skill trainings and degree courses. We provide language skill trainings such as IELTS (International English Language Testing System) A1 & B1, General English, French, German Deutsche for migration and professional accountancy courses such as AAT-Sri Lanka and IBSL. We conduct Mobile Phone Repairing and Maintenance course for Mobile Phone Technicians and computer courses. |
www.tamilvu.org பயன்படுத்தி, நீங்கள் உங்கள் சாதனத்தின் குக்கீகளை வைக்க முடியும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். விவரங்களுக்கு எங்கள் தனியுரிமை மற்றும் கொள்கைகள் பார்க்கவும். |
2.எம் சக்தி நிலையை எந்த நிலையில் உணர்த்தி வருகின்றோம் என்பதனை அறியவும் அனைத்து ஆத்மாக்களுக்குமே ஆசையுண்டு.
கர்நாடக மாநிலத்தில் மங்களூருக்கு அருகில் கன்னட பிராமண குடும்பத்தில் பல நாள் புத்திர பாக்கியம் இல்லாமல் தவித்து வந்த குடும்பத்தில் முதல் மகனாய் ஜெனனம் பெற்றேன்.
ஈஸ்வரமங்கலம் என்ற ஊரிலிருந்து சில கல் தொலைவில் உள்ள கிராமத்தில் பாக்குத் தோட்டங்கள் விவசாயத்தில் முக்கியத்துவம் உள்ள கிராமத்தில் அவ்வூரின் நாமம் அவ் ஊரில் உள்ள கோவிலின் நாமம் அங்குள்ள குடும்பங்களின் நாமம் எல்லாமே ஈஸ்வர நாமத்தை முதன்மை பெற்று உள்ள சிற்றூர் அது.
பல காலம் புத்திர பாக்கியம் இல்லாமல் பிறந்த ஈஸ்வரப்பட்டன் யான். யான் பிறந்து சில மாதங்களிலேயே தந்தை இறந்துவிட்டார். தாயினால் வளர்க்கப் பெற்று தாயின் ஜீவிதம் கொண்டு சிறு கல்வி அறிவும் பெற்று வளரும் பக்குவத்தில் தாயும் இறந்தார். சகோதர சகோதரிகளின் பாக்கியமும் பெறாமல் தனித்து விடப்பட்டேன்.
கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் ஈஸ்வரர் கோவிலில் அவ்வாண்டவனே அனைத்தும் என்ற நிலையில்… எண்ணம் குன்றி… ஜீவதித்திற்கு வழியறியாமல் அவ்வாண்டவனை பூஜிப்பதிலேயே எம் ஜீவன் பிரிந்தது.
எம் ஜீவன் பிரிந்த நிலையில் என் உடலை ஒரு மகான் ஏற்றுக் கொண்டார். என்னை என்பது
1.பிரிந்த என் உயிராத்மாவை அம்மகான் அவ்வுடலைச் செயல்படுத்த ஏற்றுக் கொண்ட நிலையில்
2.அந்த உடலை விட்டு நான் விட்டுப் பிரிந்த உடலில் அம் மகானினால் மீண்டும் அவ்வுடலுக்கு ஈர்க்கப் பெற்று
3.அம்மகானே எம் உயிரையும் எம் உடலையும் வழி நடத்தி…
4.எம்மை என்பது ஈஸ்வரப்பட்டர் என்ற உடலைச் செயலாக்கினார்.
பதினாறாவது வயதில் பழனிக்கு வந்தோம். வந்தோம் என்பதின் பொருள் புரிந்ததா…?
என் உடலை ஏற்ற அம்மகானின் செயல் நிலை வெளிப்படும் நிலையிலிருந்து “நான் வேறல்ல அம் மகான் வேறல்ல…” என்ற நிலையில் அம்மகானேதான் எல்லாமில் எல்லாமாய்ச் செயல் கொண்டார்.
மகான் என்பது ஒளியுடனே ஒளியாய் அனைத்திலும் கலந்துள்ள அவ்வாதவனான சூரிய மகான்தான். இவ்வுடலை ஏற்றுச் செயல் கொண்டார்.
1.இனி யான் என்று ஈஸ்வரப்பட்டரின் எம் நாமத்தை எனதாக்கிச் செப்பிட யாதுள்ளது…?
2.அவ்வாதவனுக்கே அர்ப்பணித்த உடல்…. அவ்வாதவனிடம் ஐக்கியப்பட்டுவிட்டது எம் உயிராத்மாவும்…!
மகான்களின் நிலையெல்லாம் பிற உடலை ஏற்றுத்தான் சில நிலைகளை அவர்களின் ஒளி வட்டத்திற்குள் மற்ற உயிரணுக்களையும் சேர்த்திடச் செயல் கொள்ளும்.
இப்பூமியில் இப்பூமி உயிராத்மாக்களை வளரவிட்ட காலம் தொட்டே மகான்களாய்ச் சக்தி பெற்ற பல ஆத்மாக்கள் உள்ளன.
அவ்வாத்மாக்களின் நிலைபெற்ற மகான்களெல்லாம் அவர்கள் பெற்ற சக்தியை இவ்வுலகினில் ஒவ்வொரு ரூபத்தில் இன்றளவும் வெளிபடுத்திக் கொண்டேதான் உள்ளனர்.
1.மற்ற ஜீவ ஆத்மாக்களின் மூலமாய்த்தான்
2.அவர்களின் செயல் நிலையெல்லாம் கலந்திருக்கும்.
போகர் எப்படி முருகா என்ற பிரணவ நாமத்தையும் இன்னும் இவ்வுலகினில் அங்கங்கு தனக்குகந்த நாம சக்தியைச் சுழலவிட்டே… அருளைப் பாய்ச்சி அந்த அருள் வழியில் ஈர்ப்பு நிலை கொண்ட நல்ல ஆத்மாக்களையெல்லாம்… அவ்வாத்மாக்கள் ஜீவன் கொண்டு வாழ்ந்த வாழ்க்கை நிலையிலேயே இவரின் ஒளி வட்டத்தைப் பாய்ச்சி… இவரின் ஈர்ப்புக்குள் பல ஆத்மாக்களை ஒளியாக்கிக் கலக்கச் செய்து கொள்கின்றார்.
முருகா…! என்ற அந்த நாமத்திலேயே அவரின் ஒளியைப் பாய்ச்சி ஒளியை ஈர்த்து ஒன்றைப் பலவாக்கி பலவற்றை நிறைவாக்கிக் காண்கின்றார் போகர்.
ஒவ்வொரு மகானும் இந்நிலையில்தான் அவர்களின் நல் உணர்வை நலமாகப் பரப்பிட ஒவ்வொரு நாமத்தை ஆண்டவனாய் வெளிப்படுத்தி இம் மனித ஆத்மாக்களை நல்லுணர்வாக்கினார்கள்.
1.ஒவ்வோர் உயிராத்மாவும் நல் நிலை பெற்று
2.அந்த நல்லதையே அனைவருக்கும் உணர்த்திடத் தன்னையே ஒளியாக்கி
3.அவ்வொளியையே அனைத்திலும் காணப் பல ரூபங்களைக் கல்லிலும் மண்ணிலும் வடித்து
4.இம் மனித ஆத்மாக்களின் எண்ணத்தை அவ்வொளி வட்டமுடன் நல்லுணர்வு பெற வேண்டும் என்ற நிலைப்படுத்தி வந்த நிலைதான்
5.நாம் வணங்கிக் கொண்டிருக்கும் பல ஆண்டவன்களின் நிலை…!
Share this:
WhatsApp
Telegram
Tweet
More
Email
Like this:
Like Loading...
This entry was posted in Spirituality and tagged ஈஸ்வரபட்டர் by Ahileswaran. Bookmark the permalink.
Leave a Reply Cancel reply
படைப்பாளர்கள்
Ahileswaran
சகுணம் பார்க்க வேண்டுமா…? எப்படிப் பார்க்க வேண்டும்…? ஈஸ்வரபட்டர்
ஓமுக்குள் ஓம் நாம்…! ஒ..ம் ஆக… ஓமை… நாம் வளர்க்க வேண்டும் – ஈஸ்வரபட்டர்
எங்கோ இருக்கும் துருவ நட்சத்திரத்தின் சக்தியை… நினைத்தவுடன் உங்களுக்குக் கிடைக்கும்படி செய்கின்றோம்
குறிக்கோளுடன் தான் தியானம் செய்ய வேண்டும் – ஈஸ்வரபட்டர்
கண்களை மூடி இருந்தாலும் சரி… அல்லது திறந்திருந்தாலும் சரி… நம் நினைவுகள் துருவ நட்சத்திரத்தின் பால் செல்ல வேண்டும் |
'''தெணியான்''' என்ற புனைபெயரால் அறியப்படும் '''கந்தையா நடேசன்''' (பி. [[சனவரி 6]], [[1942]]) ஈழத்தின் குறிப்பிடத்தக்க முற்போக்கு எழுத்தாளர்களில் ஒருவர். [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாணம்]], [[வல்வெட்டித்துறை]]யில் [[பொலிகண்டி]] என்ற ஊரைச் சேர்ந்தவர். |
பாஜக ஆளும் திரிபுராவில் தங்கள் கட்சித் தொண்டர்கள் மீது காவல்துறை நடத்திய அத்துமீறலைக் கண்டித்து 12க்கும் மேற்பட்ட திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச்...
AgartalaAmit ShahBiplab Kumar DebBJPDerek O’BrienDola Senhome ministerKalyan BanerjeeKhela hobMamata BanerjeeSaayoni GhoshSougata RoySukhendu Sekhar RoyTMCTrinamool CongressTripuraWest bengalஅகர்தலாகல்யாண் பானர்ஜிசயோனி கோஷ்சுகேந்து சேகர் ராய்சௌகதா ராய்டெரெக் ஓ பிரையன்டோலா சென்திரிணாமூல் காங்கிரஸ்திரிபுராபாஜகபிப்லப் குமார் தேப்
அதிகம் படிக்கப்பட்டவை
01
கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்
News Editor November 29, 2021
02
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான வரம்பை உயர்த்திய தமிழ்நாடு அரசு –...
News Editor November 29, 2021 November 29, 2021
03
‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில்...
Aravind raj November 29, 2021 November 29, 2021
இதையும் படிங்க..!
கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்
‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு
எஸ்சி, எஸ்டி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான வருமான வரம்பை உயர்த்திய தமிழ்நாடு அரசு – நன்றி தெரிவித்த திருமாவளவன்
மசூதிக்குள் கிருஷ்ணர் சிலை வைக்கப்படும் என்று இந்து மகாசபை அறிவிப்பு – மதுராவில் ஊரடங்கு அமல்
“நான் விடைபெறுகிறேன்”- இந்துத்துவாவினரின் மிரட்டலால் இனி நிகழ்ச்சி நடத்த மாட்டேன் என அறிவித்த முனாவர் ஃபரூக்கி
தமிழ்நாடு வனத்துறையினரை சிறைபிடித்த ரயில்வே அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும் – தமிழக அரசுக்கு ராமதாஸ் வேண்டுகோள் |
கோவை மாவட்டம் அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து,800-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தொழிற்பேட்டை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அன்னூரில் 4 வருவாய் கிராமங்கள், மேட்டுப்பாளையம் வட்டத்தில் 2 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் உள்ள சுமார் 1,504 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. அரசின் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக, கடந்த 1ஆம் தேதி 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரம் விவசாயத்தை நம்பியே உள்ளது என்றும், தங்களின் 70 ஆண்டு கால கனவுத்திட்டமான அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினால் வாழ்வில் ஒரு புதிய வசந்தம் வருமென நினைத்திருந்த சூழலில், விவசாயிகளின் நிலம் கையகப்படுத்துதல் என்பதற்கான முயற்சி தங்களை சோர்வடைய செய்துள்ளது. விவசாய நிலங்களை கையகப்படுத்தக்கூடாது என்ற தீர்மானம் 5 ஊராட்சிகளில் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுசென்றனர்..
மேலும், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் முதலமைச்சருக்கு அனுப்பப்பட்டதுடன், விவசாயிகள் நிலம் கையகப்படுத்த மாட்டாது என்றும், தொழிற்பேட்டை திட்டம் ரத்து என்ற சட்டப்பூர்வமான அறிவிப்பு அரசு வெளியிட தாங்கள் ஆவன செய்ய உத்தரவு வழங்க வேண்டுமென கூறி, மாவட்ட ஆட்சியரின் காலில் விழுந்து அந்த பகுதி விவசாயிகள் மனு அளித்தனர். தொடர்ந்து, நடந்த பேச்சுவார்த்தையில் வரும் 15ஆம் தேதிக்குள் அரசின் உயர் அதிகாரிகளுடன் பேசி, நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அன்னூர் பகுதியை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள், நீலகிரி தொகுதி திமுக எம்.பி. ஆ.ராசாவை நேரில் சந்தித்து இந்த பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட எம்.பி ராசா கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். வரும் 16ஆம் தேதி கோவை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளதாகவும், அப்போது, அன்னூரில் தொழிற்பேட்டை அமைக்கும் எண்ணத்தை அரசு கைவிடா விட்டால் போராட்டம் தொடரும் என்றும் விவசாயிகள் முடிவெடுத்து உள்ளனர். |
இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடித்ததினால் 9 ஆம் வகுப்பு சிறுவனின் இடது கண் பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை பச்சையம்மன் தெருவை சேர்ந்தவர் அழகு சுந்தரம். இவர் புதுகோட்டையில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு புவனேஷ்வரி(18) மற்றும் சந்தோஷ்(14) என இரு பிள்ளைகள் உள்ளனர். சந்தோஷ் மாநகராட்சி பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி சிறுவன் சந்தோஷ் பொருட்கள் வாங்க ஜாபர்கான் பேட்டை ஜான் கென்னடி தெரு வழியாக சென்றுள்ளார். அப்போது அங்கு இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து கொண்டிருந்த நேரத்தில் சிறுவன் கடந்து சென்ற போது சிதறிய கல் சிறுவனின் இடது கண்ணில் பட்டு காயம் ஏற்பட்டு வலியால் துடித்துள்ளார். அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக சிறுவன் சந்தோஷை மீட்டு எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சந்தோஷ், அவரது இடது கண் பார்வையை இழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுவனின் சகோதரி புவனேஷ்வரி தனது சகோதரர் கண் பறிபோனதற்கு காரணமான நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடட்திய போலீசார், ஜாபர்கான்பேட்டை ஜான்கென்னடி தெருவை சேர்ந்த விமலா(41) என்பவரின் இறுதி ஊர்வலத்தின் போது சண்முக வேல் என்பவர் நாட்டு வெடி வெடித்ததும், அந்த பட்டாசினால் தான் சிறுவனின் பார்வை பறிபோனது தெரியவந்தது. இதனையடுத்து நாட்டு வெடி வாங்கியதாக ஜாபர்கான்பேட்டையை சேர்ந்த குணசேகரன்(24), பட்டாசு வெடித்ததாக சண்முக வேல் மற்றும் சட்டவிரோதமாக நாட்டு வெடி விற்றதாக செல்வகுமார் ஆகிய 3 பேர் மீது வெடிபொருளை அஜாக்கிரதையாக கையாளுதல், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் செயல்படுதல், மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். |
மரு.ராஜா ஏகாம்பரம், M.B.B.S,D.CH, குழந்தைகள் நல மருத்துவர், பொள்ளாச்சி. ” அகோர பசி எதை பார்த்தாலும் சாப்பிட தோணுது , வயிறு நிறைய சாப்பிட்ட பின்னாடியும் , வயித்துல இடம் இல்லாத நேரத்துலயும் எதை பார்த்தாலும் ஏன் சாப்பிடறோம் னா , நமக்கு ஏற்படும் லெப்டின் ரெசிஸ்டன்ஸ் தான் காரணம் ,இது மாவு சத்து அதிகம்… |
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு! | அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
அல்லையூர் இணையம்|| Allaiyoor Inayam
Home
செய்திகள்
இலங்கைச் செய்திகள்
தீவகச் செய்திகள்
உலகச் செய்திகள்
சினிமா
ஆன்மீகம்
காணொளிகள்
அறப்பணிச் செய்திகள்
சிறப்புக் கட்டுரைகள்
தொடர்புகளுக்கு
அல்லைப்பிட்டியில் நடைபெற்ற-அமரர் அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்களின் இறுதியாத்திரையின் நிழற்படத் தொகுப்பு!
யாழ் தீவகம் அல்லைப்பிட்டி 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 2 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ‘பிரகாசம்’ என்று அழைக்கப்பட்ட திரு.அபிராம்பிள்ளை சிவப்பிரகாசம் அவர்கள் (08.03.2017) அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09.03.2017 வியாழக்கிழமை அன்று அல்லைப்பிட்டியில் நடைபெற்றது.
அன்னாரின் பேரன் திரு சொ.லிங்கதாசன் (டென்மார்க்) அவர்களின் வேண்டுகோளின் பேரில் அல்லையூர் இணையத்தினால் பதிவு செய்யப்பட்ட நிழற்படங்களின் தொகுப்பினை கீழே இணைத்துள்ளோம்.
அன்னார் காலஞ்சென்ற அபிராம்பிள்ளை, இக்னேஸியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி, சிவக்கொழுந்து( ‘அல்லைப்பிட்டி ஆச்சி’ ) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தெய்வானையின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செல்லத்துரை(நவ்வி , வவுனியா), காலஞ்சென்ற சாந்தா லூசியா(சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சாருமதிதேவி(யாழ்ப்பாணம்), காலஞ்சென்ற கமலாதேவி, சற்குணானந்ததேவி(அல்லைப்பிட்டி), பரிமளகாந்தன்(MSO, பிரதம தபால் அலுவலகம் யாழ்ப்பாணம்), விமலாதேவி(‘சேதா’, லண்டன், U.K) ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
காலஞ்சென்ற லிங்கேஸ்வரன், லிங்கதாசன்(சமூக நலத்துறை, ஒல்போ பல்கலைக் கழகம், டென்மார்க்), லிங்கவாசன், லிங்கேஸ்வரி, சதீஸ்வரன்(‘வெற்றிமாலை எண்டர்பிரைசஸ்’, யாழ்ப்பாணம்), சிவகாம சுந்தரி(வவுனியா) திரிபுர சுந்தரி((ஆசிரியை, இராமநாதபுரம் கிழக்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி), திரிலோகசுந்தரி(ஆசிரியை, அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம்), கோபிகா(உயிரியல் துறை, யாழ் பல்கலைக் கழகம்), நிஷானி(மருத்துவத் துறை,St George’s University of London) சமந்தா(லண்டன், U.K), நிலானி(லண்டன், U.K) ஆகியோரின் அன்புப் பேரனும்.
காலஞ்சென்ற சொர்ணலிங்கம், காலஞ்சென்ற வீரசிங்கம்(பேரின்பநாதன்), திருவேங்கட வல்லி(யாழ்ப்பாணம்), ஞானசூரியன்(லண்டன் U.K), ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தனுஷ்காந், கிருஷ்ணவி, சரண்யா, ஹாரீஸ் ராம், துஷாரா, மிதுஷாலினி, மிதுஷங்கர் ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கச்சி(அல்லைப்பிட்டி), இராசம்மா(யோகபுரம்,மல்லாவி),தங்கம்மா(விசுவமடு), நாகம்மா(மண்டைதீவு), மற்றும் கனகம்மா(மண்டைதீவு), காலஞ்சென்றவர்களான துரைசிங்கம் (மண்டைதீவு), செல்லத்துரை/சாத்திரியார்(விசுவமடு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (வியாழக்கிழமை 09.03.2017) பிற்பகல் 2:00 மணியளவில் 2 ஆம் வட்டாரம், அல்லைப்பிட்டியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக அல்லைப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் படும்.
இவ்வறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல்:
இரா.சொ.லிங்கதாசன்(பேரன்) டென்மார்க்.
தொலைபேசி : 0045-98 40 80 05
0045 – 21 91 27 52தொடர்புகளுக்கு:
சாருமதி(மகள்) : 0094- 713-462-341
சற்குணானந்ததேவி(மகள்) : 0094 – 766-212-755
பரிமளகாந்தன்(மகன்) : 0094- 718-485-198
விமலாதேவி / சேதா (மகள்) : 0094 – 772- 085- 441 (Current Number)
Tweet
Buffer
Pin It
2017-03-09
allaiyoor
Previous: தீவகம் வேலணையில் நடைபெற்ற,சர்வதேச மகளிர் தின சிறப்பு நிகழ்வு-விபரங்கள் படங்கள் இணைப்பு!
Next: அல்லைப்பிட்டி பராசக்தியில் சிறப்பாக நடைபெற்ற-நுழைவாயில் பெயர் வளைவுத் திறப்பு விழா- நிழற்படங்கள் விபரங்கள் இணைப்பு! |
வரவு-செலவுத்திட்டத்திற்கு வாக்களிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில் | importmirror.com
உங்கள் browserஇல் JavaScript ஆனது Disable செய்யப்பட்டுள்ளது.. இப்பக்கத்தை JavaScript இல்லாமல் பார்வையிட முடியாது எனவே முதலில் JavaScript - option ஐ Enable செய்யவும்
முகப்பு
General Election 2015
SPECIAL
ABOUT US
CONTACT US
எமது அறிவிப்பாளர்கள்
எமது செய்தியாளர்கள்
********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected]
Loading...
முகப்பு
இலங்கை ↯
_அம்பாறை
_திருகோணமலை
_மட்டக்களப்பு
_மேல் மாகாணம்
_மத்திய மாகாணம்
_தென்மாகாணம்
_வடக்கு மாகாணம்,
இந்தியா
உலகம்
விளையாட்டு
கட்டுரை
அறிக்கைகள்
அரசியல்
மேலும் ↯
_வாழ்த்துக்கள்
_விளம்பரம்
_நிகழ்வுகள்
_மருத்துவம்
_இலக்கியம்
_நேர்காணல்
_விநோதம்
_அவதானிப்பு
_அறிவியல்
_கவிதை
LATEST NEWS , Slider , அம்பாறை » வரவு-செலவுத்திட்டத்திற்கு வாக்களிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில்
வரவு-செலவுத்திட்டத்திற்கு வாக்களிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில்
Saturday, November 20, 2021 | 1:38:00 PM | comments .
நூருல் ஹுதா உமர்-
முஸ்லிங்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்க்க பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அதனை கடந்த காலங்களில் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தவறவிட்ட வரலாறுகள் ஏராளமாக உள்ளது. முஸ்லிம்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்க்க அதே போன்ற ஒருவாய்ப்பு இப்போது மீண்டும் முஸ்லிம் தலைமைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. 151 உறுப்பினர்களை ஆளும்தரப்பில் கொண்ட இந்த அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சில நாட்களின் பின்னர் இடம்பெறவுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட வாக்கெடுப்புக்கு அரசுக்கு சார்பாக ஆதரவளிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடு தழுவிய முஸ்லிம்களின் பிரச்சினையை ஆழமாக அரச தரப்பினருடன் பேசி இந்த வரவுசெலவு திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டுமே தவிர வெறுமனே ஆதரவளித்து சமூகத்தை சங்கடப்படுத்த கூடாது என தேசிய முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவர் எம்.ஐ.எம். வலீத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் அவர் தெரிவித்திருப்பதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்ட இந்த அரசாங்கம் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் வெற்றியடையும் வாய்ப்பே அதிகமாக உள்ளது. அதற்கு கிழக்கை சேர்ந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க உள்ளதாக அறிகிறோம். எதிர்த்து வாக்களித்து அரசாங்கத்தின் எதிர்ப்பை சம்பாதிக்க கூடாது என்று எண்ணும் இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள், கிழக்கு முஸ்லிம்களின் எல்லை நிர்ணயங்கள், கல்முனை, தோப்பூர் பிரதேச செயலக விவகாரங்கள், முகுது மஹா விகாரை சிக்கல், கரையோர மாவட்ட கோரிக்கை, மக்கள் இலகுவாக சேவையை பெறக்கூடிய ஆட்பதிவு திணைக்கள பிராந்திய காரியாலயம், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிராந்திய காரியாலயம் போன்ற முக்கிய அரச காரியாலயங்களை அம்பாறை கரையோரத்தில் அமைத்தல், மக்களுக்கு பகிர்ந்தளிக்காத வீட்டுத்திட்டங்கள் பகிர்ந்தளித்தல், முஸ்லிம்களின் மதம் சார்ந்த உரிமைகளுக்கான உத்தரவாதம், வடகிழக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற முரண்பாடுகள் போன்ற விடயங்களை அரசின் முக்கிய தலைவர்களான ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றவர்களிடம் கலந்துரையாடி உறுதியான வாக்குறுதியை பெறுவது இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது.
இவற்றை அடிப்படையாக கொண்டு உறுதியான வாக்குறுதியை பெற்ற பின்னரே இந்த அரசாங்கம், 2022 ஆம் ஆண்டுக்காக கொண்டு வந்துள்ள வரவு-செலவுத்திட்டத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். 113 வாக்குகள் மட்டுமே தேவையாக உள்ள நிலையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் உள்ள அரசை எதிர்ப்பது சமூகத்திற்கு செய்யும் தீங்காக எதிர்காலத்தில் மாறிவிட வாய்ப்புள்ளது. என்று அச்சம் வெளியிடும் அவர்கள் சமூகத்தின் பிரச்சினைகளை தீர்த்துவைக்க இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். முஸ்லிம்கள் எதிர்நோக்கும் விடயங்களில் தெளிவாக சிந்தித்து தூரநோக்குடன் செயலாற்ற இந்த காலகட்டத்தில் முன்வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..
கருத்துக்களை பதிவு செய்க.
Newer PostOlder PostHome
ஆளுமைகளைத் தேடி...01
HOT NEWS > >
அரசியல் களம் வீடியோ
வட மாகாண சபை உறுப்பினர் ஐயூப் அஸ்மின் அவர்களுடனான நேர்காணல்
UK நாபீருடனான அரசியல் களம் நிகழ்ச்சி
றிப்கான் பதியுதீன் - அரசியல் களம்
அமைச்சர் றிசாட் பதியுதீன் - அரசியல் களம்
பிரபல்யமானவை
இலக்கியம்
கருத்துகள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பதவிகளில் இருந்து ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹ்மட் ஆகிய மூவரும் இடை நிறுத்தம்!
பா ராளுமன்றத்தில் வரவு – செலவு திட்ட வாக்கெடுப்பின் போது, கட்சியின் உச்ச பீடத்தின் தீர்மானத்திற்கமைவாக செயற்படாததனால், பாராளுமன்ற உறுப்பினர்...
நபீர் பவுண்டேஷன் மற்றும் ஈ.சி.எம். நிறுவனத்தின் அனுசரணையுடன் உபவேந்தர் பேராசிரியர் றமீஸுக்கு சாய்ந்தமருதில் கௌரவம்! (முழுமையான வீடியோ)
அ ண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவ...
தரமான கற்பித்தலுக்கு உதவும் செயல்நிலை ஆய்வின் முக்கியத்துவம்.
இ ன்றைய கல்விப்புலத்தில் மாத்திரமன்றி அனைத்துத் துறைகளிலும் செயல்நிலை ஆய்வு (Action Research) முறை காணப்படுகின்றது. தொழில் ரீதியான பிரச்சின...
tweets
Tweets by @importmirror
Live Traffic Stats
importmirror media work shop
Powered by Blogger.
Home
Contact Us
About Us
Top
Copyright © 2012 ImportMirror. All Rights Reserved. SMS : +94 776144461 / +94 771276680 || Call : +94 724400033 E-mail : [email protected] || [email protected] |
அபூதல்ஹா (ரழி) அவர்கள் கபுரில் இறங்கியது குறித்த வாதத்திற்கு விளக்கம் - திங்கட்கிழமை, 11 மே 2020 00:00
Home/முகப்பு
கட்டுரைகள்
அறிவிப்புகள்
கேள்வி பதில்
ஆய்வுகள்
வீடியோ
தொடர்புக்கு
கலந்துரையாடல்
Register
Search
Mooncalender
முகப்பு
கட்டுரைகள்
அறிவிப்புகள்
செய்திகள்
ஆய்வுகள்
வீடியோ
கேள்வி பதில்
தொடர்புக்கு
Arabic
Tamil
Malayalam
hindi
Urdu
Main Home
English
தேடுக...
Subscribe via email
Subscribe via email
Subscribe via rss
Select CategoryMalayalam |_Articles |_Calendar |_News |_Audio & Video |_Question Answer |_Announcements |_IntroductionArabic |_Articles |_Calendar |_News |_Audio & Video |_Question Answer |_Announcements |_IntroductionHindi |_Articles |_Calendar |_News |_Audio & Video |_Question Answer |_Announcements |_IntroductionUrdu |_Articles |_Calendar |_News |_Audio & Video |_Question Answer |_Announcements |_Introduction
Search
or Ask a Question
Discussions
Discussions
Categories
Tags
Users
Add a reply View Replies (0)
பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம்
கட்டுரைகள்
வெள்ளிக்கிழமை, மே 01 2020, 12:00 AM
Super User
Offline
0
மற்றும் மஃரிபுதான் ஒரு நாளின் ஆரம்பம் என்ற தவறான வாதங்களுக்கு குர்ஆன் சுன்னா அடிப்படையில் விளக்கங்கள்.
பகுதி : 6E/7
வாதம்-5 : பனு ஸலமா கோத்திரத்தின் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கம் :
حدثنا أحمد بن حفص بن عبد الله السلمي ، حدثنا أبي ، حدثنا إبراهيم بن طهمان ، عن عباد بن إسحاق ، عن محمد بن مسلم الزهري ، عن ضمرة بن عبد الله بن أنيس ، عن أبيه ، قال : كنت في مجلس بني سلمة وأنا أصغرهم ، فقالوا : : من يسأل لنا رسول الله صلى الله عليه وسلم عن ليلة القدر ، وذلك صبيحة إحدى وعشرين من رمضان ؟ فخرجت فوافيت مع رسول الله صلى الله عليه وسلم صلاة المغرب ، ثم قمت بباب بيته ، فمر بي فقال : ' ' ادخل ' ' ، فدخلت فأتي بعشائه ، فرآني أكف عنه من قلته ، فلما فرغ ، قال : ' ' ناولني نعلي ' ' فقام وقمت معه ، فقال : ' ' كأن لك حاجة ' ' ، قلت : أجل ، أرسلني إليك رهط من بني سلمة ، يسألونك عن ليلة القدر ، فقال : ' ' كم الليلة ؟ ' ' فقلت : اثنتان وعشرون ، قال : ' ' هي الليلة ' ' ، ثم رجع ، فقال : ' ' أو القابلة ' ' ، يريد ليلة ثلاث وعشرين ழூ سنن أبي داود - كتاب الصلاة باب تفريع أبواب شهر رمضان - باب في ليلة القدر حديث : 1184
அப்துல்லாஹ் பின் உனைஸ் அவர்கள் அறிவித்தார்கள். நான் பனு ஸலமா கலந்தாலோசனைக் கூட்டத்தில் இருந்தேன். அவர்களை விட வயதில் சிறியவன் நான். அப்போது நபி (ஸல்) அவர்களிடத்தில் லைலத்துல் கத்ரைப் பற்றி நம்மில் கேட்பவர் யார்? என்று வினவினர். ரமழானின் 21-வது நாள் காலையில் இவ்வாறு வினவப்பட்டது. நான் அங்கிருந்து வெளியேறி நபி (ஸல்) அவர்களிடம் மஃரிபு வேளையில் சென்றடைந்து, அவர்கள் வீட்டின் வாசலுக்கு முன்னர் நின்றிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை கடந்து சென்றார்கள். அவ்வேளையில் என்னை வீட்டிற்குள் அழைத்தார்கள். எனக்காக இரவு உணவும் கொண்டு வரப்பட்டது. உணவு குறைவாக இருந்ததால் அதை உண்பதற்கு நான் தாமதிப்பதை கவனித்தார்கள். உணவு அனைத்தும் முடிந்த பின்னர் எனது செருப்பை கொண்டு வாருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர் அங்கிருந்து நபி (ஸல்) எழுந்து சென்றார்கள். நானும் அவர்களை பின் தொடர்ந்தேன். அச்சமயம் உனக்கு ஏதோ தேவை இருந்ததே அது என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வினவினார்கள். ஆம் எனது பனு ஸலமா கோத்திரம் லைலத்துல் கத்ரு பற்றிய விளக்கத்தை உங்களிடம் கேட்டு வர என்னை அனுப்பியுள்ளனர் என்று நான் பதிலளித்தேன். இது எத்தனையாவது நாள்? என்று என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். இது 22-வது நாள் என்று நான் சொன்னேன். அதற்கு இந்த நாள்தான் என்றார்கள். பின்னர் அல்லது வரக்கூடியது என்றார்கள். நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1184.
விளக்கம் :
• இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் வரிசையில் அப்பாத் பின் இஸ்ஹாக் என்பவர் இடம் பெறுகிறார் இவர் பலவீனமானவர். இமாம்களான தாரகுத்னி (ரஹ்) அவர்கள் இவரை லயிஃப் என்கிறார்கள், புஹாரி (ரஹ்) அவர்கள் மேற்படி அப்பாதை நம்பிக்கையும் மனன ஆற்றலும் கொண்ட நபர்களில் இவர் இல்லை என்கிறார்கள், அபூ அஹ்மத் பின் அதி (ரஹ்) அவர்கள் மேற்படி நபரின் ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்கிறார்கள், அபூதாவுது அவர்கள் கத்ரியா கொள்கையுடைய இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று சொல்லியுள்ளதாக பதிவு செய்துள்ளார்கள்.
• மேலும் இந்த ரிவாயத்தில் இடம்பெறும் இப்றாஹீம் பின் தஹ்மான் என்ற மற்றொரு அறிவிப்பாளரும் விமர்சனத்திற்குள்ளானவர் ஆவார்.
• இதில் இடம்பெறும் லைலத் என்ற பதத்திற்கு ஒரு முழுமையான நாள் என்று பொருள் கொள்ளாமல் இரவு என்று அர்த்தம் வைத்ததால் ஏற்பட்ட விளைவு இது.
• மாற்றுக் கருத்தினரின் வாதப்படி 'லைலத்' என்ற சொல்லுக்கு 'இரவு' என்று தவறான பொருள் கொண்டாலும் 22-வது இரவில் லைலத்துல் கத்ரை தேடிக்கொள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும். ஒற்றைப்படை இரவு இல்லாத 22-வது இரவில் லைலத்து கத்ரு வரும் என்பதுதான் மாற்றுக் கருத்தினரின் நிலைப்பாடா? இதற்கும் பதில் சொல்லட்டும்.
• நபி (ஸல்) 23-வது நாளைக் குறித்து அவர்கள் இவ்வாறு சுட்டினார்கள் என்ற சொற்றொடர்கூட நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல. மாறாக இச்செய்தியை ரிவாயத்து செய்த அறிவிப்பாளரின் கருத்தே ஆகும்.
• இதே ரிவாயத் முஃஜமுல் கபீரில் 13758-வது ஹதீஸாக இடம்பெறுகிறது. அதில் 'மதா லைலத்துல் கத்ரு' - லைலத்துல் கத்ரு எப்போது? என்ற வாசகம் இடம் பெறுகிறது. அதுபோல 'கமில் லைலத்து மினஷ் ஷஹரு' - மாதத்தில் எத்தனை நாட்கள் முடிந்துள்ளன? என்ற சொற்றொடர் இடம் பெற்றுள்ளது. மேற்படி ரிவாயத்தில் அது போன்ற வாசகங்கள் இடம்பெறவில்லை.
• ஆக இதுவும் பலவீனமான அறிவிப்புதான். பலவீனமான அறிவிப்புகள் ஒருபோதும் மார்க்க ஆதாரமாகாது.
Tweet
Subscribe via email
Responses (0)
Likes
Highest Vote
Latest
Oldest
There are no replies here yet.
Your Reply
Please login to post a reply
You will need to be logged in to be able to post a reply. Login using the form on the right or register an account if you are new here. |
It will require tango that ten minutes to website upwards a shape, matchmaking are properly string-barea€”after all, no person said quality comes 100 % free!
Pradeep Oct 17, 2021
Browsing Category
plenty-of-fish-recenze Seznamka
Asian Dating Sites reviews Asian Dating Sites username Asian Hookup Apps review asiandate Besucher asiandate canta en asiandate reviews asiandate visitors
Recent Posts
நடிகை பி ர க தி யி ன் ம க ள் யாரெ ன்று தெரி யு மா…??? அட, இ ந் த பொ ண் ணு தா னா…!!! வை ர லாகும் பு கை ப்படம் இ தோ…!!!
கிடை த் த வே லை யை செ ய் து வ று மை யி ல் ரோ ட் டோ ர த்தி ல் கு டி சை வீ ட் டி ல் வ சி த் து வ ரு ம் ந டி க ர் கி ரே ன் ம னோ க ர் . . . ! ! ! இ வ ர் வா ழ் வி ல் எ ன் ன ந ட ந் த து தெ ரி யு மா . . . ? ? ? ம ன தை உரு க் கிய சோ கப க் கங் க ள் . . . ! ! !
ச ந் தி ரமு கி ப ட த் தி ல் ந டி த் த சொ ர் ண மா இது . . . ? ? ? இ ந் த வ ய தி ல் இ ப் ப டி ஒ ரு பு கை ப் ப ட ம் . . . ! ! ! அ தை ப் பா ர் த் து அ தி ர்ச் சி யி ல் ர சி க ர் க ள் . . . ! ! !
கண் ணா ல ட்டு தி ன் ன ஆ சை யா தி ரை ப் ப ட த் தி ல் ந டி த் த பி ர ப ல ந டி க ர் ம ற் று ம் ந ட ன இ ய க் கு ன ர் தி டீ ர் ம ர ண ம் . . . ! ! ! அ தி ர் ச் சி யி ல் தி ரை யு ல க ம் . . . ! ! ! சோ க த் தி ல் த வி த் து வ ரு ம் அ வ ர து கு டு ம் ப த் தி ன ர் . . . ! ! ! க ண் ணீ ர் வி ட் டு க த றி ய ர சி க ர் க ள் . . . ! ! !
சி வாஜி ப ட த் தி ல் வ ந் த அ ங் க வை … ச ங் க வை யா இ வ ங் க . . . ? ? ? நி ஜ த் தி ல் இ ரு வ ரு ம் எ வ் வ ளவு அ ழ கா க இ ரு க் கா ங் க னு நி ங் க ளே பா ரு ங் க … ! ! ! பு கை ப் ப ட த் தை பார் த் து ஷா க் ஆ னா ர சி க ர் க ள் . . . ! ! ! |
Subsets and Splits